11/10/2018

தாமிரபரணி மகாபுஷ்கரம் நிகழ்ச்சிக்கு சுவீதா சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு...


தாமிரபரணி மகாபுஷ்கரம் நிகழ்ச்சிக்கு சுவீதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு சுவீதா சிறப்பு ரயில் (82610) அக்டோபர் 14ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு மறுநாள் காலை 5 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.