11/10/2018

ஆந்திராவில் மனைவியின் தகாத உறவால் மனம் வெறுத்துப் போன கணவர், இரண்டு குழந்தைகளை கொலை செய்து தற்கொலைக்கு முயற்சி...


ஆந்திர மாநிலம் ஜூப்பாடு பங்களா கிராமத்தை சேர்ந்தவர் தானுஜ் ராவ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சி  என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தானுஜ் ராவிற்கு 7 வயதில் மகளும், 4 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஜான்சி பாய் வேறு ஒரு ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தானுஜ் ராவ், தன் மனைவியை பல முறை கண்டித்தும், தொடர்ந்து தகாத உறவு மேற்கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தானுஜ் ராவ், தன் மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனினும். தொடர்ந்து ஒழுங்கீனமாக செயல்பட்டதால் மன வருத்தத்தில் இருந்த தானுஜ் ராவ், தன் குழந்தைகளை முதலில் கொன்று அருகே உள்ள குளத்தில் வீசி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதனையடுத்து குளத்தில் வீசப்பட்ட குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.