11/10/2018

வெண் குஷ்டம் என்ற வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான நிருபிக்கப் பட்ட வீட்டு வைத்தியம்...


உள் மருந்தாக...

காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து,
சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன்
சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும்..

நீர் அதிகமாக அருந்த வேண்டும்...

உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும்...

வெளி மருந்து (மேற் பூச்சு மருந்து)...

௧) வேப்பம் கொழுந்து
௨)கஸ்துரி மஞ்சள்
௩) நாட்டுப் பசு மோர் (வீட்டில் தயாரித்தது)

வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு
தேவையான அளவு வீட்டில் தயார் செய்த நாட்டுப் பசு மோர் மோர் விட்டு
அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து காலை பொழுது (6 முதல் 8 க்குள்) பாதிப்பு உள்ள இடங்களிலும், விருப்பம் இருந்தால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.

இது போல 90 நாட்கள் செய்தால்
வெண்புள்ளிகள் மறைந்து
இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும்.

பாதிப்புகள் அதிகமாக இருந்தால்
சற்று கால தாமதம் ஏற்படும் ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.

உள் பிரயோகம் மற்றும் வெளிபிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்..

தக்காளி, புளி, வெங்காயம், வாழைப்பழம், ஆப்பிள் பிரெட், கார்ன் புட்ஸ், வைட்டமின் “C” உள்ள பொருள்கள்,

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு,

அசைவம், வெள்ளை சர்க்கரை , ஊறுகாய், மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.

வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக பயன் படுத்தக் கூடாது..

எந்தவித side-effect வும் ஏற்ப்படுத்தாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.