04/01/2019

ஐயப்பன் கோவிலுக்குள் சென்ற பெண்கள் அந்த வழக்கில் இரண்டுமுறை கைதானவர்கள்...


சபரிமலைக்குள் இரண்டு பெண்கள் சென்று தரிசித்த விவகாரம் நாடுமுழுவதும் உள்ள பக்தர்கள் இடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையை வெளியிட்ட தனியார் செய்தி நிறுவனம்...

கேரளாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஐயப்பன் கோவிலுக்குள் சென்ற பெண்கள் பற்றிய முழுவிவரத்தை வெளியிட்டுள்ளது.

தவறான நடவடிக்கைகளில் கைதானவர்கள்...

இவர்கள் இருவரும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இதற்கு முன்பு பாலக்காட்டில் உள்ள டவுன் காவல் நிலையத்தில் இருவர் மீதும் பெண்களை தவறான முறையில் ஈடுபடுத்துதல் போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

அனைத்து வழக்குகளும் வாபஸ் :

சபரிமலைக்குள் உள்நுழைந்த இரண்டு பெண்கள் மீது உள்ள அத்தனை வழக்குகளையும் கேரள அரசு நீக்கியுள்ளது தெரியவந்துள்ளது. பெண்கள் சபரிமலைக்குள் நுழைவதற்கு பலனாக பினராயி விஜயன் இதனை செய்திருக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அமைதியாக இருந்த ஐயப்பன் ஆலயத்தை ஏன் இவ்வாறு போர்க்களமாக மாற்ற கம்யூனிஸ்டுகள் முயல்கிறார்கள் என்று தெரியவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.