04/01/2019

கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு நிறுத்தம்...


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜல்லிக்கட்டுக்காக போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.

விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து முழுமையான அனுமதி கிடைக்கவில்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனுமதி கிடைத்தபிறகு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.