09/04/2017

தமிழ் தேசிய அரசியல் மீதான பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சமீபத்திய நிகழ்வுகள் அசைத்துப் பார்க்கின்றன...


மது ஒழிப்பு இன விடுதலைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறியாமல் யாரும் இல்லை. பாமக தனிப்பெரும் தமிழர் இயக்கமாக இதை சாதித்ததும் யாரும் அறியாதது அல்ல.

இந்திய பிராமணீய லாபி நம்மை போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகவே இருக்க வரும்பகின்றன. திராவிட லாபிகள் அதைவிட கடுமையாக நம்மை அடிமைப்படுத்த துடிக்கின்றது.

Battery of lawyers என்கிற அளவுக்கு, அத்தனையும் பிராமண திராவிட உயர்வர்க்க லாபிகளின் 120 சக்தி வாய்ந்த வக்கீல்களின் படையே திரண்டு ஒரு புறம், மத்திய அரசு, 30 க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அரசுகள் கூட்டணியோடு.

மறுபுறம் பாமகவின் வழக்கறிஞர் பாலு அவர்கள் நம்மைப்போன்ற விடுதலை தேவைப்படும் தேசிய இன விடுதலைக்கு ஏங்கித்தவிக்கும் மொழிவாரி இனங்களின் பிரதிநிதியாக தனித்து நின்று போராடுகிறார். மரு.ஐயா இந்த கடை மூடல் எக்காரணம் கொண்டும் மாறிவிட கூடாதென கவலைப்படுகிறார்.

மரு.அன்புமணி தான் சந்திக்கும் கட்சிக்காரர்கள் அனைவரிடமும் நெடுஞ்சாலை கடையை மாற்றி ஊருக்குள் வராமல் தடுக்க எந்த எல்லைக்கும் போராடுங்கள். நான் உங்கள் பின்னால் இருக்கிறேன் என்று உத்தரவிடுகிறார்.

ஆனால் சாராயம் விற்ற சசிகலா பெற்ற பச்சை தமிழச்சி முத்திரை அன்புமணிக்கு கிடைக்கவில்லை. மலையை குடைந்து காச்கிய மலை முழுங்கியவன் எல்லாம் நற்றமிழன், ஆனால் அன்புமணி இல்லை. தாது மணலை திருடி பல்லாயிரம் கோடி வாரி சுருட்டிய வைகுண்டராஜன் பெருந்தமிழர் என்று கையை மேசையில் அடித்து ஒரு அண்ணன் சத்தியம் செய்கிறார். முதல் ஆளாக அவர் வீட்டு கல்யாண பந்தியில் நெல்லை சென்று கை நனைக்கிறார். சென்னையிலே இருக்கும் அன்புமணியை சென்று பாராட்ட கால் நகர மாட்டேன் என்கிறது.

மதுவை எங்கள் மார்க்கம் கடுமையாக எதிர்க்கிறது என்கிற இசுலாமிய இயக்கங்கள் வாயில் பெவிகால் ஊற்றி மூடிக்கொண்டன. குடியால் அழிந்து நாசமாய் போகும் தலித் சகோதரனோ, நீ தரும் நல்ல வாழ்க்கை வேண்டாம் திராவிடம் தரும் விசத்தை குடித்தேனும் பரலோகம் போவேன் என்கிறான்.

முத்தரசன், மணியரசன் எல்லோரும் ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்துக்கு டூர் போயிருக்கிறாரகள்.

நந்தினி தங்கை "நன்றி" என்று ஒரு ஒற்றை ரூபாய் போஸ்ட் கார்டு கூட அனுப்ப முடியாத வறுமையில் இருக்கிறார். மது ஒழிக்க அவ்வப்போது களமிறங்கிய மாணவச்செல்வங்கள் எல்லாம் புத்தகத்துக்குள் புதைந்துவிட்டார்கள்.

டிவியிலும் பத்திரிக்கையிலும் தமிழர் நலன் காக்க வாயாலேயே களமாடும் வாயாஜாலர்கள் எல்லாம் ஊட்டிக்கு உல்லாச பயணம் போய்விட்டர்கள்.

மதுக்கடைகளை மூடிய உம்மன் சாண்டி சேட்டனை பாராட்டிய நெட்டிசன்கள் திடீரென டவர் கட்டாகி தொடர்பு எல்லைக்கு அப்பால் போகிறார்கள்.

வள்ளுவம் பேசும் நல்லவர்கள் கூட கள்ளுண்ணாமை அதிகாரத்தை மட்டும் கிழித்து கவட்டைக்குள் ஒளித்து வைக்கிறார்கள்.

பாப் பாட்டுக்கு ரோட்டுக்கு வந்த பீப்புகள் வாயில் கரையான் புற்று கட்டிவிட்டது.

புலிகளின் மது ஒழிப்பை மெய்சிலிர்க்க சிலாகிக்கும் போராளி டேசுகள் கூட வாயை வாடகைக்கு அனுப்பி விட்டார்கள்.

இன்னும் எத்தனையோ..

ஆனால் உங்களை எல்லாம் நியாயவான்கள் என்று எண்ணிய என் பேராசையை நினைத்நு சிரிப்பதா அழுவதா?

இப்படியே நீங்கள் தொடர்ந்தால்  2 கோடி போராட்ட குணமுள்ள தமிழர்கள் உங்களுக்கு முதுகை காட்டி வெளி நடப்பு செய்வார்கள்.

அதன் பின்னர் நீங்கள் தமிழ் தேசியம்  பெயரில் ஒரு ஆணியும் புடுங்க முடியாது...

பதிவு - soorya prakash

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.