09/04/2017

சென்னை ஜெமினி பாலம் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் புதைந்த அரசு பஸ் மற்றும் கார்...


சென்னை அண்ணா சாலை ஜெமினி பாலம் சர்ச் பார்க் ஸ்கூல் அருகே ரோட்டில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும் காரும் திடீர் என சாலையில் எடை தாங்க முடியாமல் ஏற்பட்ட பள்ளத்தில் புதைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதியம் 2 மணி அளவில் எண் 25 வடபழனி நோக்கி சென்று கொண்ருந்த பஸ்சும் , காரும் திடீர் என சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் புதைந்துள்ளது.

இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்கு வரத்து போலிசார் சம்ப இடத்திற்கு விரைந்துள்ளனர்.

எதை நம்பி சாலையில் செல்வது என பொதுமக்களிடையே இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது...

அண்ணா சாலை ஜெமினி பாலம் அருகே நாளை மாலை தான் போக்குவரத்து சரியாகும் என அதிகாரிகள் தகவல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.