28/07/2017

ஆடி மாதம் - அம்மன் கூழ் மகிமை தெரியுமா?


கேழ்வரகு மிகுந்த சத்துள்ள தானியம். கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. சத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள்.

பஞ்சத்தைப் போக்குவதோடு... வெப்பம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தாக்குப்பிடிக்க உதவியிருக்கிறார்கள்.

கூழுக்குக் கடித்துக்கொள்ள கொடுக்கும் சின்ன வெங்காயம் மிகப்பெரிய மருத்துவ பலன்களைக் கொண்டது.

அதேபோல் கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என்று எல்லாமும் மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள்தான்.

இப்படிச் சத்தான, நோய்களை தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும்... கஞ்சியும்.

எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்...

பணமில்லாத நாடு...


பணமில்லாமல் ஒரு நாடு இயங்க முடியுமா என்று பலரும் கேட்கின்றனர்?

முடியும். இது prepaid மற்றும் post paid க்கும் இடையேயான வேறுபாடு போன்றது தான்.

ஏன். தமிழகத்திலேயே பணமில்லாமல் 'ஆரோவில்' (Auroville) என்ற நகரம் 50,000 மக்களுடன் நலலபடியாக இயங்கி வருகிறது...

கதிராமங்கலத்தில் பெண்கள் மண் சோறு சாப்பிட்டு போராட்டம்: ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு...


விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை கைவிட்டு ஓஎன்ஜிசி வெளியேற கோரி கதிராமங்கலம் மக்கள் மண் சோறு சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலத்தில் எண்எய் குழாய் பதிப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி அய்யனார் கோயில் தோப்பில் 16 நாள்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எண்ணெய் கிணறு திட்டத்தால் விவசாயம் அழிந்து சோற்றுக்குப் பதில் மண்ணைத்தான் உண்ண வேண்டும் என்பதை கூறும் விதமாக போராட்டத்தில் களத்தில் பெண்கள் நேற்று மண் சோறு சாப்பிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ஓஎன்ஜிசி ஆய்வால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரும் செம்மண் நிறமாக மாறி உள்ளது. காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் போதிய தண்ணீரும் வருவதில்லை. மழையும் குறைந்து விட்ட நிலையில், நிலத்தடி நீரை நம்பி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓஎன்ஜிசியின் ஆய்வு பணிகள் தொடர்ந்தால் உண்பதற்கு உணவு இல்லாமல் மண்ணைதான் உண்ண வேண்டிய நிலை வரும் என்பதை உணர்த்தவே இந்த போராட்டம்.

எனவே இயற்கையை பாதிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது. இதை உணர்த்தும் வகையில் தான் மண்சோறு சாப்பிடுகிறோம் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாலையில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சந்தித்து பேசினார்.

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாக தலைவர் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...

பாஜக மோடி கலாட்டா...


சசிகலா சகோதரர் மனைவி மரணம், சிறை அதிகாரிகள் அனுமதித்தால் சசிகலா பரோலில் வருவார் - டிடிவி தினகரன்...


2 ஆயிரம் ரூபாய் அச்சிடும் பணி நிறுத்தம், 200 ரூபாய் அச்சடிக்கும் பணி தீவிரம்...


ஈழம் - தமிழகம் தொடர்பு...


நம்முன்னோரால் ஏற்படுத்தப்பட்ட திருவாதிரைக் கடன்...

காலங்காலமாக ஈழத் தமிழர்கள், சிதம்பரத்திற்கு வருவதற்காகப் பருத்தித்துறை, காங்கேயன்துறை, மாதகல் ஆகிய ஈழத்தின் வடக்குத்துறைகளில் படகேறுவார்கள்.

தமிழகத்தின் கிழக்குத்துறைகளான திருமறைக்காடு, வேதாரணியம், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய துறைகளில் வந்து இறங்குவார்கள்.

சிதம்பரம் செல்வார்கள்.

வழிபாட்டுக் கடமைகளை முடிப்பார்கள்.

எந்தத் துறைகளில் இறங்கினார்களோ, அந்தத்துறைகளில் படகில் ஏறி, எந்தத் துறைகளில்ஏறினார்களோ, அந்தத் துறைகளில் படகில் இருந்து இறங்கி எளிதாகத் தம் இடங்களுக்குச் செல்வார்கள்..

1948க்கு முன்பு இருந்தநிலை இதுதான்.

1948க்குப் பின்னர் தலைமன்னார் வழியாகத்தனுஷ்கோடி வந்து, போட்மெயில் தொடர் வண்டி ஏறி,நேரே சிதம்பரம் வந்து, வழிபட்டு, மீண்டும்அதே வழியாகத் திரும்புவார்கள்.

1948க்குப்பின்னர் ஈழத்தின் வட பகுதியில்இருந்து தமிழகத்தின் கிழக்குக் கரைகளுக்குச்சட்டத்துக்கு அமைய வர முடியாது.

1992க்குப்பின்னர் தலைமன்னார், தனுஷ்கோடி, இராமேஸ்வரம் கப்பல்சேவை நிறுத்தப்பட்டது.

முசுலிம் மக்களுக்கு மெக்கா.
கிறித்தவர்களுக்கு ஜெருசலம்.
கத்தோலிக்கருக்கு வத்திக்கான்.
புத்தர்களுக்கு புத்தகயா.
இந்துக்களுக்குத்திருக்கயிலாயம்.

இவை போன்று ஈழத்துச்சைவர்களுக்குச் சிதம்பரமே ஆண்டுதோறும் வந்து வழிபட்டுச் செல்லக் கூடியநம்பிக்கைக்கு உரிய கோயில்...

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=a6a09b2c-92fa-46c6-882c-eaa2e6418f16&CATEGORYNAME=Sachi

பிராணயாமம் - நாடி சுத்தி...


பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே.

சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.

அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும்.

இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.

நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.

இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன.

இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.

மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.

மூச்சுப் பயிற்சி...

எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.

நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.

மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்...

காஞ்சி சங்கரமடமும் உண்மையும்...


இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது காஞ்சி சங்கர மடம் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் நம்பவேண்டாம் உறவுகளே...

காஞ்சி சங்கர மடம் வெறும் 400  ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்டது தான். அதுவும் வடுக தெலுங்கர் விஜயநகர நாயக்கர் மன்னர்களின் ஆட்சியில் திட்டமிட்டு தமிழர்களை அழிக்க இங்கே உருவாக்கப்பட்டது தான் காஞ்சி சங்கர மடம். இதில் தலைமை ஏற்பவர்கள் எல்லோரும் வடுக கன்னட, வடுக தெலுங்கர்கள் தான்.

பெரியவா, நடுவா, சிறியவர் எல்லோருமே வடுக தெலுங்க, கன்னட கும்பல் தான். திண்டு கொழுப்பதும், பொறுக்கித்தனம் செய்வதும், தமிழர்களை ஏய்ப்பதும் தான் இவர்களின் வேலை. அதிலும்  காஞ்சி பெரியவா என்று சொல்லப்படும் இந்த கிழவனைச் சுற்றி இல்லாத கட்டுக்கதைகள். இவரை தெய்வம் என்றும் பரப்பிரம்மமே இவர்தான், பார்த்த மாத்திரத்தில் ஒருவரின் துன்பத்தை நிவர்த்தி செய்வார் என்றும் , நோய்நொடிகளைத் தீர்ப்பார் என்றும்  புளுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

கண் தீட்சையினாலேயே  இவர் மக்களுக்கு ஏற்படும் நோய்களை நிவர்த்தி செய்வார் என்றால், சங்கர மடம் ஏன் மருத்துவ மனைகளை நடத்திக்கொண்டு இருக்கிறது. சங்கர மடத்திலேயே வைத்து  நோய்களைத் தீர்த்து அனுப்பி விடலாமே..

இவர் ஒரு சராசரி கன்னட கிழவன்  தான். முதுமையில் நோய் வந்து, எல்லோரையும் போல செத்த சராசரி மனிதன் தான். எந்த தெய்வீகமும் இவரிடத்தில்  கிடையாது.

சங்கர மடம் தமிழர் விரோத மடம். அங்கு யாரும் செல்லாதீர்கள். உங்கள் பொன்னான அறிவை அடகு வைக்காதீர்கள்...

செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி - 4...


தமிழ் தனது முதல் எழுத்தான 'அ'கரத்தை எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதினை நாம் கண்டாயிற்று. அதேப் போல் தமிழ் தனது எழுத்துப் பிரிவுகளின் மூலம் உயிரும் உடலும் இயங்கும் விதத்தை எவ்வாறு விளக்குகின்றது என்பதனையும் நாம் கண்டாயிற்று.
 
இனி அந்த இரண்டு விடயங்களைக் கொண்டு தமிழ் எவ்வாறு உலகின் மிகச் சிறந்த உறவினை சிறப்பிக்கின்றது என்பதனைப் பார்க்கலாம்.

உலகின் மிகச் சிறந்த உறவா... சிறிதும் சந்தேகம் இன்றி எவரும் சொல்லி விடுவார்கள் 'அம்மா' என்று. அப்பேர்ப்பட்ட உறவிற்கு தமிழ் தனது முதல் எழுத்தினைக் கொடுத்து சிறப்பித்து இருக்கின்றது என்றுக் கண்டோம். ஆனால் தமிழ் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

அந்த உயர்ந்த உறவினைக் குறிக்கும் சொல்லுக்குள் உயிரையும் உடலையும் விளக்கிக் கொண்டு இருக்கும் தனது தத்துவத்தையும் அது மறைத்து வைத்து இருக்கின்றது. அதைப் பற்றி நாம் இப்பொழுது விரிவாகப் பார்ப்போம்...

'அம்மா' என்றச் சொல்லை சற்று கவனித்துப் பார்த்தால் அச்சொல்லினுள் தமிழ் மொழியின் மூன்று எழுத்துப் பிரிவுகளும் அடங்கி இருப்பது தெரிய வரும். அதே போல், உயிர் இருந்தால் தான் உடல் இயங்கும் என்றக் கருத்தை விளக்கும்படி உயிரைத் தொடர்ந்து மெய்யும், இவை இரண்டும் இருந்தால் தான் உணர்ச்சி இருக்கும் என்பதனை விளக்கும்படி உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் தொடர்ந்து உயிர் மெய் எழுத்து வந்து இருப்பதையும் நாம் காணலாம்.

அ --> உயிர் எழுத்து.
ம் --> மெய் எழுத்து. (உயிரைத் தொடர்ந்து மெய் வருகின்றது)
மா--> உயிர் மெய் எழுத்து. (உயிரையும் மெய்யையும் தொடர்ந்து உணர்ச்சி வருகின்றது).

இந்த எழுத்து அமைப்பு முறையின் மூலம், உயிரும் உடலும் ஒன்றி இருக்கும் இடத்தில தான்  எவ்வாறு உணர்ச்சிகள் இருக்க முடியுமோ அதேப் போல உயிரும் உடலும் ஒருசேர இணைந்து இருக்கும் அன்னையிடம் அன்பின் உணர்ச்சிகள் இயல்பிலேயே அமைந்து இருக்கும் என்பதனை அறிந்துக் கொள்ளலாம்.

இந்த விதி 'அப்பா', 'அண்ணா', 'அக்கா' போன்ற வாழ்வின் ஒரு சில முக்கியமான உறவுகளுக்கும் பொருந்துவதை நாம் சற்று உணர்ந்துப் பார்த்தாலே புரியும். இப்படி நமது நெருங்கிய உறவுகளைச் சிறப்பிக்கும் விதியினை வேறு எந்த மொழியிலாவது காணக் கூடுமா?....

சரி... நமது இன்றியமையாத உறவுகளை தமிழ் மொழி எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதனை நாம் பார்த்தோம். இப்பொழுது தமிழ் என்னும் சொல்லையே நமது மொழி எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதனை நாம் பார்ப்போம்.

நம் மொழியில், மெய் எழுத்துக்களை மூன்று இனமாக பிரிப்பார்கள்.

க் ச் ட் த் ப் ற் -  என்ற எழுத்துக்கள் வல்லினம் எனவும்

ங் ஞ் ண் ந் ம் ன் - என்ற எழுத்துக்கள் மெல்லினம் எனவும்

ய் ர் ல் வ் ழ் ள் - என்ற எழுத்துக்கள் இடையினம் எனவும் பிரிக்கப் பட்டு இருக்கின்றன.

இந்த மூன்று இனங்களும் நம் மொழிக்கு மிகவும் முக்கியமானவை. எனவே இந்த மூன்று இனங்களும் சேர்ந்து அமைந்து இனிதாய்... அழகாய்.. பொருள் தருமாறு, தமிழ் என்று நமது மொழி வழங்கப் பெறுகின்றது.

த --> வல்லின எழுத்து
மி --> மெல்லின எழுத்து
ழ் --> இடையின எழுத்து.

தமிழ் --->; அழகு (பொருள்)

இப்பொழுது நமக்கு ஒரு சந்தேகம் எழலாம், 'இடையினம் என்று சொல்லுகின்றோம், அப்படி என்றால் அந்த எழுத்துக்கள் ஒரு சொல்லின் இடையில் அல்லவா வர வேண்டும்... ஆனால் தமிழ் என்னும் சொல்லில், இடையினம் இறுதியில் அல்லவா வருகின்றது... இது சரியா...?'

இந்தக் கேள்விக்கு பதிலினை அறிய நாம் நம் மொழியின் இலக்கணத்தினை அறிய வேண்டும்.

நமது தமிழ் எழுத்துக்களின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் எழுத்துக்கள், வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்ற வரிசைப் படியே அமைந்து இருக்கின்றன.

இதே வரிசை தான் நன்னூலிலும் கடைபிடிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே வல்லினத்தையும் மெல்லினத்தையும் தொடர்ந்தே இடையினம் வரும் என்பது  நம் மொழியின் இலக்கணம் என்பது நமக்கு புலனாகின்றது.

எனவே தமிழ் என்ற சொல்லின் அமைப்பும் சரி தான்... அதுவும் நம் மொழியின்  சிறப்புத் தான்!!!

தமிழின் சிறப்புகளைத் தொடர்ந்து அறிவோம்....

அடுத்த வருடம் இந்த மணலையும் தோண்டி விற்று விடுவாய்ங்களே அப்ப என்ன பண்ணுவோம்...


இராசராசச் சோழன் குறித்து. பரப்பப்படும் அவதூறுகளுக்கு மறுப்பே இந்நூல்...


இராராசச் சோழர் குறித்த தமிழிய ஆய்வை முன் வைக்கிறது இச்சிறு வெளியீடு..

திராவிட அரசர்களான களப்பிரர், பல்லவர் ஆகியோரின் பிராமணியச் சார்பு பல்வேறு சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளது.

இராசராசச் சோழர் பறையர்களுக்கு இறையிலி நிலங்கள் வழங்கியமை , பிரமதேயங்களில் பிராமணர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியமை உள்ளிட்ட வரலாற்று உண்மைகள், இக்கட்டுரைகளில் கல்வெட்டுச் சான்றுகளுடன் இந்நூலாசிரியர் ம.செந்தமிழன் தொகுத்துள்ளார்...

அதிமுக அடிமைத்தனத்திற்கு ஒரு அளவே இல்லாம போச்சு...


யுரேனியம்...


யுரேனியம் என்பது ஒரு கல் பாறை , இதில் என்ன அவ்வளவு சிறப்பு என்று கேட்டால் ?

இதில் இருந்து தான் உலகத்திலேயே மிக பயங்கரமான , ஆயுதங்ளுக்கு எல்லாம் தாய் என்று அழைக்கப்படும் "அனுசக்தி" ஏவுகணைக்கு முக்கியமான ரசாயனம் எடுக்கப்படுகிறது

இந்த யுரேனியம் கல்லை வைத்து யுரேனியம்-235 என்ற ரசாயாணத்திற்கு மாற்றி அதை வைத்து ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன..

இந்த ஆயுதம் அமெரிக்காவுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைத்து நாடுகளிடமும் இருக்கிறது...

அமெரிக்காவின் தொடர்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் "கொரியா"விடம் உள்ளது | ஐ.எஸ்.ஐ.எஸ்'தீவிரவாதிகளிடம் ஒரு சிறு ஏவுகணை தயாரிக்கும் அளவிற்கு உள்ளது....

இந்த கல் உடைய மதிப்பு பல கோடிக்கும் மேல்,

இந்த கல்லை சாதாரணமாக கைகளில் தொடுவது ஆபத்தானது,

இது உடைக்கப்படும் போதே சுற்றி உள்ள இயற்கை சூழல்கள் அழியும்,

 தோல் வியாதிகள் / தோல் கேன்சர் என்று உண்டாகும் அந்த அளவுக்கு இதில் கதிர் வீச்சுகள் உள்ளன,

வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் கூட ஊனமாக பிறப்பார்கள்,

இந்த அனு ஆயுதம் முதல் முதலில் உபயோகித்த நாடு "அமெரிக்கா"

இந்த அணுஆயுதம் (Depleted Uranium) என்ற வடிவில் அமைத்து "ஆப்கான் / இராக் / சிரியா / பலஸ்தீன் என்ற நாடுகள் மேல் அதிகமாக இந்த ஆயுதம் பயன்படுத்தி இது வரை அமெரிக்கா பல ஆயிரம் கோடி மக்களை கொன்று குவித்துள்ளது

இதை தட்டி கேட்க எழுந்தாள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ஊடகங்களையும் / உலக இராணுவத்தையும் / உலக அரசியலை கைய்யில் வைத்து கொண்டு இந்த படுகொலைகளை திசை மாற்றி நல்லவர்களை தீயவர்களாகவும் / தீயவர்களை நல்லவர்களாகவும் காட்டி மக்களை முட்டாள்களாக்கி
ஒருவர்க்கு மேல் ஒருவரை வெறுப்பு வர வைத்து அந்த வெப்பத்தில் லாபம் காண்கிறது...

பாஜக சார்பாக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தே.ஜ கூட்டணி வேட்பாளர் வெங்கையா நாயுடு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளி்க்காமல் பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித்ஷா மவுனம் காப்பது ஏன்?’ என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது...


துணை ஜனாதிபதி தேர்தலில் தேஜ கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அவர் குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது...

வெங்கையா நாயுடுவின் மகளின் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்டது போன்ற கட்டண விலக்கு சலுகை, நூற்றுக்கணக்கான பிற அறக்கட்டளைகளுக்கு ஏன் வழங்கப்படவில்லை?

வெங்கையா நாயுடுவின் மகன் நிறுவனத்தில் வாங்கப்பட்ட கார்களுக்கும், பிற டீலரிடம் டெண்டர் மூலம் வாங்கப்பட்ட கார்களுக்கும் உள்ள விலை வித்தியாசம் எவ்வளவு?

ஊழல் மற்றும் முறைகேடுகளை துளியும் பொருத்துக் கொள்ள மாட்டேன், பொதுவாழ்வில் நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவை கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி கூறுகிறார்.

ஆனால், காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பா.ஜ தலைவர் அமித்ஷா திருப்தியான பதில் அளிக்க தவறிவிட்டார்.

இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய மக்கள் பதில் கேட்கிறார்கள்.

இந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, வெங்கையா நாயுடு வெளிப்படையான பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு சுர்ஜிவாலா கூறியுள்ளார்...

வடகொரியா அறிவிப்பு: அமெரிக்காவின் தடை குறித்து கவலை இல்லை...


அமெரிக்கர்கள் வடகொரியாவுக்கு வருவதற்கு அந்நாடு விதித்துள்ள தடை குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்தத் தடை குறித்து வடகொரியா கூறியபோது, ”அமெரிக்காவின் இந்தத் தடையால் வடகொரியாவின் சுற்றுலா துறைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அமெரிக்காவின் தடை குறித்து எங்களுக்கு கவலையும் இல்லை" என்று கூறியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது அந்நாட்டை உளவு பார்த்ததாகக் கூறி வடகொரிய அரசு அவரை கைது செய்தது. இந்தக் குற்றச்சாட்டில் ஒட்டோ வார்பியருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறைத் தண்டனை அனுபவித்து வந்த வார்ம்பியயரின் மூளை திசுக்களில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர் செயல்படாத நிலை ஏற்பட்டது. அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமானதைத் தொடர்ந்து வார்ம்பியர் கடந்த மாதம் வடகொரியாவிலிருந்து அமெரிக்கா அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில் வார்ம்பியர் மரண மடைந்தார். இதனைத் தொடர்ந்து வடகொரியாவுக்கு தங்கள் குடிமக்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது...

பாஜக மோடி கலாட்டா...


அரசியல் என்பது என்ன?


கொள்கை
நியாயம்
தர்மம்
ராஜதந்திரம்
சமயோசிதம்.. சேர்ந்ததே..

ஆனால்...

அரசியல் கொள்கை என்பது?
தேவையான போது தைத்து
கொள்ளும் சட்டை...

நியாயம் என்பது?
தேவையில்லாத போது
கிழித்துப் போடும் சட்டை..

தர்மம் என்பது?
பிரம்மாண்டமாய் கட்டப்படும்
தக்கை கோபுரம்..

ராஜதந்திரம் என்பது?
அதிகாரத்தில் இருப்பவரின்
அராஜகத்திற்கு மறுபெயர்...

சமயோசிதம் என்பது?
செய்த கொலையை
அடுத்தவன் மீது போடுவது...

இவை தான் அன்று முதல் இன்று வரை நடந்துக் கொண்டிருக்கும் திருட்டு அரசியல்...