02/08/2018

வரலாற்றை புரட்டிய சம்பவம் - 6...


மனுஸ்மிருதியை தீயிட்டு கொளுத்தினார் அம்பேத்கர்...

மனுஸ்மிருதியும் அம்பேத்கரும்...

மனுஸ்மிருதியை காரணம் காட்டி நீதிபதி தடையுத்தரவு செய்ததற்கு எதிர்வினையாக அம்பேத்கர் செய்தது இப்பதிவின் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.

தொடர்ந்து படியுங்கள்.

திடீர் தடை உத்தரவு செய்யப்பட்ட செய்தி அம்பேத்கருக்கு வந்துசேருகிறது.

மறுபக்கம் மகத் சத்தியாக்கிரகம் அதோடு மாநாடு நடத்தும் நிகழ்வுக்காக
அம்பேத்கரின் கட்டளை பேரில் ஊர் மக்கள் தயாராகி வருகின்றனர்.

தம் சார்ந்த மக்களை மிரட்டியும் ஊர் விட்டு ஒதுக்கிவிடுவோம் என்ற அச்சுறுத்தல் இருப்பதால் மகத் தலித் மக்கள் மாநாடு நடத்த தமக்கு சொந்தமான இடத்தை தர யோசித்த நிலையில்..

இசுலாமிய சமூகத்தின் கூட்டமைப்பு இவர்களுக்கு உதவிசெய்ய முன் வருகிறது.

ஆம் வரலாற்றில் உள்ளது அம்பேத்கர் சத்தியாக்கிரகம் மற்றும் மாநாடு நடத்த இடம் கொடுத்து உதவியது ஒரு இசுலாமியர்.

சுபேதார் காட்ஜே..

போன்ற மக்களால் பத்து நாட்களுக்கு தேவையான உணவு நீர் உட்பட பல்வேறு விஷயங்கள் வெளிஊரில் இருந்து வரவழைக்கப்பட்டது.

அம்பேத்கர் எடுத்த முடிவு மாநாடு நடத்துவதில் உறுதியாக இருந்தார்.

டிசம்பர் மாதம்  19 ம் தேதியில் இருந்து வெளியூர் மக்கள் மகதில் சாரை சாரையாக கூட ஆரம்பித்தனர்.

காவல்துறை அதிகாரிகள் ஊர் முழுவதும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர்.

மாவட்ட குற்றவியல் நடுவர் மாநாடு திடலுக்கு வந்து பிரமுகர்களை சந்தித்து சத்தியாகிரகத்தை தயவுசெய்து கைவிடுமாறு வலியுறுத்திக்கொண்டு இருந்தார்.

அம்பேத்கர் இருநூறு பிரதிநிதிகளுடன் பம்பாயில் இருந்து புறப்பட்டு மறுநாள் மகத் நகரின் ஐந்து மைல் தூரத்தில் உள்ள தாஸ்கவுன் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

இங்குதான் சத்தியாகிரகம் செய்ய இருந்த  3000 பேர் அம்பேத்கருக்காக காத்திருந்தனர்.

எல்லாம் புறப்பட தயாராக இருந்த நிலையில் ஒரு கடிதம் வருகிறது
மாவட்ட குற்றவியல் நடுவர் நயமான முறையில் சத்தியாகிரகத்தை கைவாடுங்களேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

பதிலாக அம்பேத்கர் அவருக்கு கூறுகையில் மாநாடு நடந்தே தீரும். இது சம்பந்தமாக உங்களுக்கு கருத்து கூற விரும்பினால் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் மாநாட்டில் உங்களை சிறிது நேரம் பேச அனுமதிக்கிறேன்

என்று கூறிவிட்டு புறப்பட்டார்.

வழிநெடுக வாழ்த்து கோசமும் பூக்களை வீசியும் அம்பேத்கரை வரவேற்றது மாநாட்டு பந்தல்,

வரலாற்று சிறப்புமிக்க தமது உரையை பேசினார் அம்பேத்கர் (கிட்டத்தட்ட  2 மணிநேரம் பேசிய பேச்சை இங்கு தொகுக்க முடியாது வாய்ப்பு இருந்தால் ம்றறொரு நாள் இதைப்பற்றி படிப்போம்).

அம்பேத்கர் பேசியவுடன் திரு சகஸ்திரபுத்தே என்பவர் பிராமணர்கள் இப்படி நம்மை இழிவுபடுத்த காரணம் அவர்களின் வேதம் தான் மனுஸ்மிருதியில் சூத்திரர்களை எவ்வாறெல்லாம் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ள பக்கங்களை மக்கள் மத்தியில் கூறினார்.

இப்படிப்பட்ட மனுஸ்மிருதியை நாம் தீயிட்டு கொளுத்துவதை தவிர வேறெதுவும் நல்லது இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்பேத்கர் உடன் ஏனைய தலைவர்கள்  திரு டீ வி  பரதன் உட்பட அந்த மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு மனுஸ்மிருதி தீயிட்டு கொளுத்தப்ட்டது.

நூற்றாண்டு காலமாக எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பதிலடியாக மனுவை தீயிட்டு எரிக்கிறோம்.

என்று கூறிக்கொண்டே அம்பேத்கர் தீயை பற்றவைத்தார்.

பெரியார் மட்டுமே வேதத்தை தீயிட்டு கொளுத்தினார் என்று கூறப்பட்ட நமக்கு அம்பேத்கர் தீயிட்டு எரித்ததை ஏன் கூறவில்லை.

அம்பேத்கர் இந்துத்துவாவை கடுமையாக எதிர்த்தார் என்று இதிலிருந்தே தெளிவாக தெரிகிறது.

ஆயினும் இந்துத்துவா மேடைகளில் அம்பேத்கர் படம் வைப்பது வேடிக்கையாக இருக்கிறது.

மனுவை தீயிட்டு கொளுத்திய அம்பேத்கரை இவர்கள் வைத்துருப்பது பாசத்தினால் அல்ல..

வேசத்தினால்.

களையப்படுத்துவோம் வேசத்தை.

இந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவைகள் எல்லாமும் இன்றைய மக்கள் அறியப்பட வேண்டியவை.

பேசுவோம்...

சிலுவை யுத்தங்கள் −12...


முதலாவது சிலுவைப் போர் (ஹி.491 − ௧ி.பி.1097) −2...

இப்படி போருக்கான அடிப்படை விதிமுறைகள் கூட அறியாத  இக்காட்டுமிராண்டிக் கூட்டம் கண்ணில் பட்ட அனைத்தையும் சிதைத்தது.

அன்தாகியா நகரிலிருந்து முன்னேறிய சிலுவை வீரா்கள் கி.பி.1098ம் ஆண்டு சிரியாவின் பல நகரங்களையும் கைப்பற்றினர்.வெறியோடும் வஞ்சகத்தோடும் அந்நகரினுள் நுழைந்த சிலுவை வீரா்கள் எதிர்ப்பட்ட முஸ்லிம்களையெல்லாம் கொலை செய்ததோடு வீடுகளைச் சூறையாடி தீயிட்டுக் கொளுத்தினர்.முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு விற்கப்பட்டனர். இங்கு கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு இலட்சம் எனக் குறிப்பிடப்படுகின்றது.

அதன் பின்னர் சிலுவை வீரா்களின் படை ஜெரூஸலத்தை நோக்கி நகரலாது,அப்போது அப்பகுதி பாதிமிய்ய(பாதிமிய்யர் என்பது அப்பாஸிய ஆட்சியின் கீழ் ஆட்சி செய்த முஸ்லிம் சிற்றரசாகும்)ஆட்சியின் கீழ் இருந்தது.நாற்பது நாட்கள் தொடர்ந்த கடுமையான முற்றுகையின் பின் 1099−ஆம் ஆண்டு ஜெரூஸலம் ஆக்கிரமிக்கப்பட்டது.ஒரு மாதத்திற்கும் அதிகமாக நீடித்த முற்றுகையில் தமது வழக்கமான இழி செயல்களில் சிலுவை வீரா்கள் இறங்கினர்.

நாற்பது நாட்களுக்குப் பின் அந்நகரத்தை வெற்றி கொண்ட இப்பாதகா்கள் அங்கும் கண்களில் பட்ட அனைவரையும் இரக்கமின்றி கொன்று குவித்தனர்.பாதைகளில், வீடுகளில், பள்ளிவாசல்களில் என்று எல்லா இடங்களிலும் இருந்த முஸ்லிம்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என்ற பேதமின்றி கொலை செய்தனர்.

பைதுல் முகத்தஸைக் கைப்பற்றிய சிலுவை வீரா்கள் அந்த மஸ்ஜித்துக்கு எவ்வித மதிப்பும் அளிக்கவில்லை. மிகவும் மோசமான, காட்டு மிராண்டித்தனமான முறையில் நடந்துகொண்டனர். பைதுல் முகத்தஸை அண்டியிருந்த முஸ்லிம்கள் அனைவரையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தனர்.

மேலும் பல வரலாற்றுத் தகவல்களுடன் அடுத்தப் பதிவில் தொடர்கிறேன்.

- தொடரும்.....

வேதவசனங்கள் வேற்றுகிரகவாசிகள்...


இன்று நம்முடைய அறிவியல் யுகம் முழுமூச்சாகத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு காரியத்தைக் குறித்து பைபிள்,திரு குரான் வசனங்களில் ஆராய்வோம்,

இங்கு நான் கூறுப்போகும் கருத்துகள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம், உங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கலாம்.. ஆனால் மதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதல்ல என் நோக்கம். மாறாக இனி வேத வசனங்களை ஒரு புதிய கண்ணோட்டத்தில் உங்களை பார்க்க செய்வதே என் நோக்கம்.

உலகெங்கிலும் இருக்கும் பல பண்டையக் காலத்து புராணங்களில் வேற்றுகிரகவாசிகள், ஏலியன்கள் பூமிக்கு வந்தமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அது முழுமையாக அறியப்படாமல் இலைமறைக் காயாக இருந்து வருகிறது.

பைபிள்...

எந்த ஒரு பொருளையும், பைபிளில் ஆராய்வதற்கு முன்னால், சில அடிப்படை சத்தியங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தூய ஆவியால், ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள், கடவுள் அருளியதை உரைத்ததே பைபிள்” – 2பேது 1:21.

கல்வி அறிவு இல்லாதவர்களும், விசுவாச உறுதியற்றவர்களும், சில வேளைகளில், பைபிளுக்கு “பொருள் திரித்து கூறுவது உண்டு – 2பேது 3:16.

மேலும், பைபிளில், புரிந்து கொள்வதற்கு “கடினமான” சில பகுதிகளும் உள்ளன – 2பேது 3:16.

ஆனால், பைபிளின் எந்த பகுதியும், எவரது “சொந்த விளக்கத்திற்கும்” உட்பட்டது அல்ல – 2பேது 1:20.

ஒருவர், பைபிளில் விளக்கங்கள் கூறியதை அறியும் முன், மேற்சொன்ன சில பகுதிகளை மனதிற்க்கொள்ள வேண்டும்.

" ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்" என்று சொல்லப்பட்டுள்ளது மேலும் பைபிளில் மிகவும் பழமை வாய்ந்த புத்தகமான யோபுவில் (38) பூமி உண்டாக்கப்பட்டபோது  மற்ற நட்சத்திர மண்டலத்தில் வாழந்தவர்கள் மகிழ்ந்தார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது,

தேவதூதர்கள்...

“பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம் . . . [இயேசு] மூலம்தான் படைக்கப்பட்டன.”
(கொலோசெயர் 1:13-17).

தேவதூதர்கள் திருமணம் செய்து கொள்வதோ பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதோ இல்லை. (மாற்கு 12:25).

‘உண்மைக் கடவுளின் மகன்களாக’ இருக்கிற இந்தத் தேவதூதர்கள் ஒவ்வொருவரையும் கடவுள் தனித்தனியாகப் படைத்தார்.
—யோபு 1:6, அடிக்குறிப்பு.

இந்தப் பூமி படைக்கப்படுவதற்கு ரொம்பக் காலத்திற்கு முன்பாகவே தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள். கடவுள் இந்தப் பூமியைப் படைத்தபோது, தேவதூதர்கள் “சந்தோஷ ஆரவாரம்” செய்தார்கள்.—யோபு 38:4-7.

தேவதூதர்கள் மனிதர்களைவிட
மகா பலசாலிகள், திறமைசாலிகள். (2 பேதுரு 2:11) அவர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள்; பரலோகம் என்பது விண்வெளிக்கும் அப்பாற்பட்ட ஓர் இடம், ஆவி நபர்கள் வசிக்கிற மேலான இடம்.
(1 ராஜாக்கள் 8:27; யோவான் 6:38) ஆவி சிருஷ்டிகள் பல வசனங்களில் ‘தேவதூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.—1 ராஜாக்கள் 22:21; சங்கீதம் 18:10.

நம்மைப் போலவே மற்ற நட்சதிரங்களிலும் தேவபுத்திரர்கள் இருக்கிறார்கள் அவர்கள் முற்காலத்தில் நம்முடைய பூமிக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள், இதை ஆதியாகமம் 6ம் அதிகாரம் 1 முதல் 4 வரை வாசித்துப் பாருங்கள்,

வேற்றுகிரகவாசிகள் பூமியிலுள்ள பெண்களோடு கூடினார்கள் இதனால் இராட்சர்கள் என்று சொல்லப்படுகின்ற பலவான்கள் பிறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது, இங்கே நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், தேவகுமாரர், என்று அழைப்படுவது குறித்து நாம் குழப்பமடைய வேண்டியதில்லை,

இவர் வேற்றுகிரகவாசிகள் ஒரு இனம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

அப்படியானல் இப்போதெல்லாம் தேவகுமாரர்கள் பூமிக்கு வருவதில்லையா? என்று நீங்கள் நினைக்க வேண்டாம் வருகிறார்கள், வந்துகொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் சில இனங்கள் மாம்ச கண்களுக்குத் தெரியாத படி (மறைவான பரிமாணமம்) தேவன் நம் கண்களைக் குருடாக்கி விட்டார், ஆனால் வேதம் எங்கும் தேவ குமாரர்கள் வந்து மனிதர்களுக்கு உதவியதாக சொல்லப்பட்டிருக்கிறது (மரியாளுக்கு நற்செய்தி சொன்ன கேபிரியேல்,) (பேதுருவை சிறையிலிருந்து தப்புவிக்க உதவிய ஒரு தூதன்) இன்னும் பல சம்பவங்களை நாம் சொல்லலாம். இவர்களை தேவ தூதர்கள் என்றும் அழைக்கலாம்,

தேவ தூதர்களும் நம்மைப் போலவே தேவனை மகிமைபடுத்தவும், போற்றிப்பாடவும் படைக்கப்பட்டவர்களே, இவர்கள் பலவகைக் கூட்டம் உண்டு, கேருபீன்கள், சேராபீன்கள் போன்றவை அவற்றுள் சில, இந்த தூதர் குழுக்களுக்கு சில தலைவர்கள் இருக்கிறார்கள். அவற்றுள் பிரதான தூதனாகிய மிகாவேல், செய்தி கொண்டுபோகும் காபிரியேல், ஆங்கில வேதாகமத்தில் சொல்லப்பட்ட லூசிபர் (தமிழில் அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி என்று சொல்லப்பட்டவன் ஏசாயா 14).

பொல்லாத தூதர் கூட்டம்’ என்றும், ‘பாவம் செய்த தேவதூதர்கள்’ என்றும் பைபிள் சில தேவதூதர்களைக் குறிப்பிடுகிறது.  (எபேசியர் 6:12; 2 பேதுரு 2:4)
இந்தப் பொல்லாத தேவதூதர்களில் ஒருவன் லுசிபர்.

லூசிஃபர்...

மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் வானதூதர்களை உண்டாக்கினார். அவர்கள் சர்வ வல்லமைகொண்ட கடவுளுக்கு கீழ்படிந்து நடக்கும் அவரது ஊழியர்கள். அவர்கள் கடவுளைப்போல் ஆவித்தன்மை கொண்டவர்கள். ஆனால் அவரைப்போல் தலைமைப் பண்பு கொண்டவர்கள் அல்ல. இந்த ஊழியர்களில் ஒருவன் கடவுளைப்போல் இந்த பிரபஞ்சத்தை ஆள விரும்பினான்.

அவருக்கு எதிரியாக மாறினான். எனவே கடவுள் அவனுக்குத் தந்திருந்த புனிதத்தன்மையை இழந்தான். சாத்தானாக போகும்படி கடவுளால் சபிக்கப்பட்டான். கோபம்கொண்ட சாத்தான், “ நீர் படைத்த பூமியின் மீதும் அதில் வாழும் மனிதர்கள் மீதும் நான் ஆட்சிசெலுத்துவேன்” என்று கடவுளிடம் சவால் விட்டான். ‘உன்னால் அது முடியாது’ என்று கடவுள் புன்னகை புரிந்தார்.

பூமியையும் மனிதர்களை சாத்தான் ஏன் ஆள விரும்பினான்? ஏனென்றால் கடவுளின் கைவண்ணத்தில் படைப்பின் உச்சமாக பூமியே இருந்தது.

இலுமினாட்டிகளைப் பற்றி தெரிந்த அனைவருக்கும் லூசிஃபர் என்ற வார்த்தையும் தெரிந்திருக்கும். இவன் தான் இலுமினாட்டிகளின் தலைவன், இவனைத் தான் இலுமினாட்டிகள் தங்களது கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர். இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றே நம்புகிறேன்.

ஆனால் யார் இந்த லூசிஃபர்?

ஒளியைக் கொண்டு வந்தவன்,
அவன் கொண்டு வந்த ஒளியை பெற்றுக் கொண்டவர்களை (இலுமினாட்டிகள்-ஒளியை பெற்றுக் கொண்டவர்கள்) வைத்து தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கும் ஒருவன்.,
இவன் மனித இனத்தைச் சேர்ந்தவனல்ல., மேற்கத்தியர்கள் இவனை வேற்றுகிரகவாசி என்கின்றனர்.,

உண்மை தான் இவனது இனம் வேற்றுகிரகங்களில் வசித்துக் கொண்டு தான் இருக்கிறது.,

இந்த வேற்றுகிரகவாசிகள் இனத்தின் பிடியில் தான் இந்த மனித இனமே அடிமைபடுத்தபட்டுள்ளது.

இந்த லூசிபர் என்பவனைக் குறித்து எசேக்கியேல் 28;12,13,14 ஆகிய வசனங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது, அதில் அவன் எவ்வளவு அழகானவன் என எழுதப்பட்டுள்ளது, விசித்திரமாய் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், ஞானத்தால் நிறைந்தவன், பத்மராகம், புஷ்பராகம், போன்ற ஒன்பது வகைக் கல்லும், பொன்னும் இவன் உடலை மூடிக்கொன்டிருந்தது, என சொல்லப்பட்டிருக்கிறது அப்படியானால் எவ்வளவு அழகாக இருந்திருப்பான் பாருங்கள், மேலும் சகலவிதமான இசைக்கருவிகளும் அவன் சிருஷ்டிப்பின் போதே அவன் செட்டைகளில் (சிறகுகளில்) இருந்தது என்று சொல்லபடுகிறது மேலும் அவன் த செட்டைகளை அடித்தாலே அழகான இன்னிசை பிறக்கும் என்றும் வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள்,

இப்படிப்பட்ட அழகான ஒருவன், தன்னை உருவாக்கியவருக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொள்ள‌ வேண்டும் என்று நினைத்தான், அவன் அப்படி நினைத்த மாத்திரத்திலேயே பூமியில் விழுந்து விட்டான், ஏசாயா 14ம் அதிகாரத்தை வாசித்துப்பாருங்கள், நான் வானத்துக்கு ஏறுவேன், (முதல் வாணம்), நட்சத்திரத்திற்கு மேலாக (இரண்டாம் வாணம்) வட புறங்களில் உள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதங்களில் வீற்றிருப்பேன் என்று சொல்லி நினைத்தான் (இவனும் மூன்று வானத்தை உறுதி செய்கிறான் பாருங்கள்) அப்படி அவன் நினைக்கும் போது தன்னுடைய இடத்தை விட்டு தானாகவே கீழே இருக்கும் பூமியில் விழும்படி கடவுள் அவனைத் தள்ளிவிட்டார்…

பைபிளில் கூறப்படும் வெட்டுக்கிளி வாதையோடு சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் இந்த வேற்று கிரகவாசிகள்.

அது விசுவாசத்துரோக இஸ்ரவேலுக்கு அதிக நலக்கேடை உண்டாக்குவதாக இருந்தது, ஆனால் தனிப்பட்ட யூதர்கள் மனந்திரும்பி யெகோவாவின் தயவுக்கு திரும்புவதிலும் விளைவடையும். (யோவேல் 2:6, 12-14 ).

அந்தக் காலம் வந்தபோது, யெகோவா அவருடைய ஆவியை “மாம்சமான யாவர் மேலும்” ஊற்றுவார், “யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே” அச்சம் தரும் அடையாளங்களும் திகிலூட்டும் அறிகுறிகளும் இருக்கும்.— யோவேல் 2:11,28-32 ,

அன்றைய இஸ்ரவேல் மக்கள் தங்கள் வானில் கண்ட காட்சியின் விளைவாக தான் இந்த வசனங்களை பார்க்க முடிகிறது. வானில் மிதந்து வந்த வேற்றுகிரகவாசிகள் இனம் பூமிவாசிகளை அழிக்க செயலாக இருக்கலாம்.

மாலுமி கிறிஷ்டோபர் கொலம்பஸ் கடல் பயணங்களில் எதிர் கொண்ட நிகழ்வுகளும் பைபிள் வசனங்களும்     
அவர் பெர்முடா முக்கோணம் என்ற பகுதியில் நடந்த சம்பவத்தை கூறும்போது...

“நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்” உள்ள பகுதி என்றும், தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள் என வர்ணித்துள்ளார்.

கொலம்பஸ் கூறுகிறதை பார்க்கும் போது பரிசுத்த வேதாகாம்த்தில் தேவனாகிய கர்த்தர் ஆதாம் ஏவாளை ஏதேன் என்னும் தோட்டத்தில் வைக்கிறார் ஆனால் அவர்கள் தேவனுடைய கட்டளையை மீறி பாவம் செய்தபோது அந்த தோட்டத்தை விட்டு வெளியேற்றி விட்டு அதன் பிறகு அந்த தோட்டத்தின் மையத்தில் இருக்கும் ஜீவ விருட்சத்தின் கனியை உண்டு நிரந்தரமாக உயிர் வாழக்கூடாது என்பதற்காக தோட்டத்தை பாது காக்க ( காவல் செய்வதற்கு ) ஆதியாகமம்: 3:24 " அவர் மனுஷனைத் துரத்தி விட்டு, ஜீவ விருட்சத்துக்குப் போம் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக் கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.

" இங்கே வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயம் ( அதாவது சுழன்று கொண்டிருக்கிற தீப்பிழம்பின் வெளிச்சங்கள் ) இப்போது மாலுமி கொலம்பஸ் கூறுகிறதை பாருங்கள் ; “நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்” உள்ள பகுதி என்றும், தீப்பிளம்பு கொண்ட வானம் என்றும் கூறுகிறார். இதிலிருந்து அந்த பகுதி தேவனாகிய (கட்டுப்பட்ட)கர்த்தரின் படைப்பினங்களில் ஒன்று மனித பரிணாமத்தில் வெளிப்படாமல் மறைந்து உள்ள பகுதிதான் என்ற உண்மை தெளிவாக விளங்கும் .

- தொடரும்...

கற்ப மூலிகை வேப்பிலை...


உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி படைத்தவை தான் கற்ப மூலிகைகள்.

நரை, திரை, மூப்பு என்ற மூன்றையும் அணுகவிடாமல் தடுக்கும் குணம் கற்ப மூலிகைகளுக்கு உண்டு.

இந்த இதழில் வேப்பிலை என்னும் கற்ப மூலிகையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப்படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்திருப் போரும் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட் டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில் வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. கீழ்கண்ட மருத்துவக் குணங்கள் வேப்பிலையில் நிறைந்துள்ளது.

1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory)
2. வீக்க உருக்கி (anti inflammatory)
3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic)
4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer)
5. மலேரியா போக்கி (Anti malarial)
6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal)
7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial)
8. வைரஸ் அகற்றி (Anti viral)
9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant)
10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous)

வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் Azadirachtia, nimbidiol, nimbidin போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன.

வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர்.

வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

வேப்பிலையை பயன்படுத்தும் முறை...

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

வேப்பிலையின் பொதுவான பயன்கள்...

வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்...

விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்
சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச் சாறுக்கு உண்டு.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர்...

அவர்கள் கட்டமைத்த அடித்தளத்தை நீங்கள் உணரவில்லை என்றால்...


உங்களால் இந்த அமைப்பில் இருந்து ஒருபோதும் வெளியே வர முடியாது என்பது மட்டும் உண்மை..

இந்த மண்சார்ந்து உணவுகளை தேடி செல்லுங்கள்..

அது உங்களை நல்வழிப்படுத்தும்...

நிலப் பறிப்பால் உழவர் தற்கொலை: பசுமைச் சாலைத் திட்டத்தை உடனடியாகக் கைவிடுக - பாமக அறிக்கை...


சென்னை - சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்காக நிலம், வீடு, கிணறு உள்ளிட்ட அனைத்து உடைமைகளும் பறிக்கப்படுவது உறுதியானதை அறிந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த  சேகர் என்ற விவசாயி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவண்ணாமலை மாவட்டம் மேல் வடக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சேகருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திலேயே வீடு கட்டி, கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தார். சென்னையில் இருந்து சேலத்திற்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் வழியாக 8 வழி பசுமைச் சாலை அமைப்பதற்காக சேகருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலமும், அதில் அமைந்துள்ள வீடு, கிணறு உள்ளிட்டவையும் கையகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அடுத்த சில நாட்களில் அதிகாரிகளும் சேகரின் நிலத்தை அளவீடு செய்து கற்களை நட்டு வைத்தனர். குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமான நிலமும், குடியிருப்பதற்கான வீடும் கையகப்படுத்தப்பட்டால், வாழ வழியில்லாமல் போவதுடன், குடியிருக்க வீடும் இல்லாமல் நடுத்தெருவுக்கு வர நேரிடுமே? என்று அஞ்சிய சேகர், அதிகாரிகளை சந்தித்து தமது நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். ஆனால்,  அவரது கோரிக்கையை ஏற்க எந்த அதிகாரியும் முன்வராததால் கவலையடைந்த விவசாயி சேகர் பயிர்களுக்கு தெளிப்பதற்கான பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி சேகரின் தற்கொலைக்கும், அவரது குடும்பத்தினர் எந்த ஆதரவும் இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்திருப்பதற்கும் பினாமி எடப்பாடி பழனிச்சாமி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஏற்கனவே பலமுறை கூறியதைப் போல சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலை அமைப்பதால் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் பயனடையுமே தவிர, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் ஏற்படாது. ஆனாலும், யாரோ பிறப்பித்த கட்டளைகளுக்கு பணிந்து, அப்பாவி ஏழை விவசாயிகளின்  நிலங்களை மிரட்டி, கட்டாயப்படுத்தி பறிக்க முயன்றது தான் சேகரின் தற்கொலைக்கு காரணமாகும்.

சென்னை- சேலம் இடையிலான பசுமைச்சாலை அமைக்கும் திட்டத்தால் சம்பந்தப்பட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகளுக்கு சேகரின் தற்கொலை சிறிய உதாரணம் தான்.  பசுமைச் சாலைத் திட்டத்திற்காக 7500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. அதுமட்டுமின்றி,  இதே அளவு நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஒட்டுமொத்தமாக 15,000 ஏக்கர் நிலங்களை சுமார் 10 ஆயிரம் உழவர்கள் இழப்பார்கள். அவர்கள் அனைவருக்குமே வேளாண் தொழில் மட்டும் தான் ஒரே வாழ்வாதாரம் ஆகும். அவர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்கள் கையகப்படுத்தப் பட்டால், அவர்கள் அனைவருமே விவசாயி சேகரைப் போலவே தங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள்.

பசுமைச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில மாதங்களாக கடுமையான மன உளைச்சலில் உள்ளனர். ஏதேனும் அதிசயம் நடக்கும்; அதன் மூலம்  தங்களின் நிலங்கள் காப்பாற்றப்படும் என்று அந்த விவசாயிகள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு மாறாக அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் விபரீத முடிவுகளை எடுப்பதற்கான ஆபத்துகள் உள்ளன. கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படாது என்பதும், அவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்டாலும் அது மிகக்குறுகிய காலத்தில்  கரைந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி விடும் என்பதும் உழவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

உழவுத் தொழிலை அழித்து விட்டு செயல்படுத்தப்படும் எந்த வளர்ச்சித் திட்டமும் உண்மையான வளர்ச்சிக்கு வழி வகுக்காது. விவசாயம் தான் பாதுகாக்கப்பட வேண்டிய தொழில் ஆகும். விவசாயிகள் தான் காப்பாற்றப்பட வேண்டிய உயிரினம் ஆகும். இவற்றைக் கருத்தில் கொண்டு,  சேலம் - சென்னை  பசுமைச் சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்; மாறாக, அதிக நிலம் கையகப்படுத்த தேவையில்லாத வகையில் வாணியம்பாடி - சேலம் இரு வழிச் சாலையை விரிவுபடுத்தி, பெங்களூர்- சென்னை சாலையுடன் இணைக்கும் மாற்றுத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். நிலம் பறிபோகவுள்ள அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி சேகரின்  குடும்பத்திற்கு அரசு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்...

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்... ஊடகங்கள், முற்போக்கு போராளிகள் ஓடி ஒளிந்தது எங்கே?


விழுப்புரம் மாவட்டத்தில், சாதி மறுப்புத் திருமணம் செய்த காரணத்தால், காதலன் குடும்பத்தினர் வசித்த பகுதியில் புகுந்து, காதலி தரப்பை சார்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த கொடூர நிகழ்வில் தலையிட்டு நீதி கேட்க முற்போக்காளர்களோ, பத்திரிகையாளர்களோ முன்வரவில்லை.

விழப்புரம் சாதிமறுப்பு காதலும், கலவரமும்...

இந்த சம்பவம் குறித்து கூறப்படும் தகவல்கள்...

விழப்புரம் மாவட்டம் மடப்பட்டு அருகே அரும்பட்டு கிராமத்தில் அருந்ததியர் இன இளைஞர் ஒருவர் சக பள்ளி தோழியான பறையர் இன பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் தலைமறைவாகியுள்ளர்.

இதன் தொடர்ச்சியாக, பறையர் இன இளைஞர்கள் 30 பேர் அருந்ததியர் இளைஞரது வீட்டுக்குள் புகுந்து அவரது அண்ணி தாலியை அறுத்து, குடும்பத்தினரை கொடுரமாக தாக்கி...

சக்கிலி நாயே பறையர் பொண்ணு வேணுமா ஒரு நாள் உங்களுக்கு அவகாசம் பெண்ணை அனுப்பு இல்லைன்னா குடும்பத்தை உள்ளே வைத்து கொளுத்துவேன் என மிரட்டியுள்ளனர்.

இது குறித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் விழப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாதிக்கொடுமைக்கு நீதி வேண்டும்..

இந்த கொடூர நிகழ்வில் தலையிட்டு நீதி கேட்க முற்போக்காளர்கள் முன்வருவார்களா? 

ஊடகங்கள் நேரலை விவாதங்களை நடத்துமா?

அரசியல் கட்சிகள் உண்மை அறியும் குழுக்களை அனுப்புமா?

இப்படி தான் ஏரிகளை தூர்வார வேண்டும் நகரங்களில்...


திருநங்கைகள் பற்றிய வார்த்தைக்காக மேனகா காந்தி மன்னிப்பு கேட்டார்...


மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் தடுப்பு மசோதா பற்றிய விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டார். அதற்கு எம்.பி.க்களிடையே சிரிப்பொலி எழுந்தது.

‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டதற்காக, மேனகா காந்திக்கு திருநங்கைகள் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேஜையை தட்டியபடி சிரித்த மேனகா காந்தியும், எம்.பி.க்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இந்நிலையில், மேனகா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “மற்றொருவர் என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் சிரிக்கவில்லை. திருநங்கைகள் பற்றிய அதிகாரபூர்வ சொல் எனக்கு தெரியாது. அதுவே எனக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கி விட்டது. இனிமேல், அதிகாரபூர்வ தகவல் தொடர்பில், திருநங்கையர் ‘டி.ஜி.’ என்று குறிப்பிடப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்...

இயற்கை வாழ்வியலுக்கு திரும்புங்கள்...


மனக் கோயில் வழிபாடே சித்தர்களுக்கு முதன்மையானதாகும்...


சித்தர்கள் இலக்கியம் சீர்திருத்தம் பேசினாலும் நாத்திகத்தன்மை உடையதன்று.

சித்தர்கள் இறைப்பற்று மிகவும் உடையவர்கள். தவநெறி, அட்டாங்கயோகம் முதலியவை கடினமாகத் தோன்றினாலும் அவர்கள் எடுத்துரைக்கும் நெறிசிறந்ததாகும்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறியினையும் சித்தர்கள் பின்பற்றியுள்ளனர்.

சமயப் போது நோக்கு, சாதி வேறுபாடின்மை. மூடப் பழக்க வழக்கங்களைச் சாடுதல் முதலானவை அவர் தம் பாடல்களில் காணப்பெறும் சீர்திருத்தங்களாகும்.

கோயிலாவது ஏதுடா? குளங்களாவது ஏதுடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை, இல்லை இல்லையே

-(சிவவாக்கியர், 34)

சித்தர்கள் முறையான மத சடங்குகளை மேற்கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய கிரியைகளும், மந்திரங்களும் யோக நெறியோடு நிற்பவை. மத சடங்குகளில் தேவையற்ற சடங்குகளை மட்டுமே அவர்கள் எதிர்த்தார்கள்....

’நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

-சிவவாக்கியார்.

ஓசை உள்ள கல்லைநீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்லில் பூவை நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல்லு சொல்லுமே

- சிவவாக்கியார்

சித்தர்கள் வெளியில் சென்று கோயில் வழிபாடு செய்ய விரும்புவதில்லை. புறச் சடங்குகளையும் அவர்கள் ஏற்பதில்லை.

மனக் கோயில் வழிபாடே அவர்கட்கு முதன்மையானதாகும். யோகமுறை,
மூச்சடக்கிப் பயிற்சி செய்தல் ஆகியவற்றையே முக்கியமாக கொண்டார்கள்.

மானசீக வழிபாட்டு முறை இவர்களுடையது. இவர்கள் தங்களுடைய நெறி உயர்ந்தது என்றோ, மற்றைய நெறிகள் தவிர்க்க பட வேண்டியன என்றோ கூறியதில்லை. சித்தரின் கண்கள் எல்லோரையும் சமமாகவே பாவிக்கும்.

சித்தர்கள் எல்லா மதங்களிலும் உண்டு. ஆனால் அவர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவே விளங்கினார்கள்...

ஆயுத்தமாகும் இந்திய ஒன்றியம்...


திருட்டு திராவிட கலாட்டா...


முதல்வன் என்பவர் மக்களின் சேவகன் என்பதை தாண்டி பட்டத்து ராசா என்னும் அளவிற்கு தனி மனித புகழ்பாடும் திராவிட தொண்டனால் தான் இப்படி முதல்வர் செய்ய வேண்டிய சாதாரன கடமையை கூட சாதனையை போல விளம்பரப்படுத்த முடியும்..

Bus pass தந்தார்களாம் அவர்கள் கட்டிய IT Parkஆம்...

டேய் எங்க இருந்து டா வர்றீங்க..

மொழி சிலர் சொல்வதைப் போல கருத்துப் பரிமாற்றக் கருவி மற்றுமல்ல...


தாய்மொழி தன்னம்பிக்கையின் அடையாளம், நம் வரலாற்றுப் பெட்டகம்.

அதில் பண்பாடு, இன அடையாளம் என அனைத்தும் பொதிந்து கிடக்கின்றன..

எதிரி முதலில் கை வைப்பது மொழியில் மட்டுமே..

அதை அழித்தால் போதுமானது, ஓர் இனத்தை இல்லாதாக்க...

விழித்தெழு தமிழா...

அமுதம் போன்ற கடுக்காய்...


நமது உடலில் நோய் தோன்ற, உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன் அளவில் இருந்து கூடுவதும், குறைவதுமே காரணம். உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சில எளிய வழிமுறைகளை கூறியுள்ளார்.

ஒருவருடைய உடல், மனம், ஆத்மா ஆகிய மூன்றையும், தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய்க்கு அமுதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கடுக்காய் நமது வயிற்றில் உள்ள கழிவுகளை வெளித்தள்ளி ஒவ்வொருவருடைய பிறவிப்பயனை நீட்டித்து தருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடலுக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்படவேண்டும். அறுசுவைகளில் எந்த ஒரு சுவை கூடினாலும், குறைந்தாலும் நோய் தாக்கும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் அளவு மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவு பொருட்கள் துவர்ப்புச் சுவை அற்றதாகும்.

நமது உணவில் அன்றாடம் கடுக்காயை சேர்த்து வந்தால், நமது உடலுக்கு தேவையான துவர்ப்பை பெற்றுவிடலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை நீக்கி விட்டு நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீடித்த வாழ்வைப் பெறலாம்.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கிழவனும் குமரனாக மாறுவார் என்கிறார் திருமூலர்.

தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்...

ஆதார் அட்டையின் உண்மைகள்...


அவதூறு பேச்சு: அரசு ஊழியர்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் - பாமக அறிக்கை...


அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது; அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சேலத்தில் நேற்று முன்நாள் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கூட, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாரோ ஒருவர் முதல்வரின் பேச்சை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் மிகவும் மரியாதைக்குறைவாக பேசும் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

‘‘அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்து பாருங்க. இன்று ஆரம்ப பள்ளியில் ஹெட்மாஸ்டர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? 82 ஆயிரம்  ரூபாய். ஐந்தாம் கிளாஸ் ஹெட்மாஸ்டருக்கு 82 ஆயிரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்டப்பட்டு படித்து, பத்து வருடம் கழிந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்டான். இதேபோல் ஆசிரியர்களுக்கு 160 நாள் லீவு  கிடைக்கிறது.  எட்டாம் வகுப்புவரை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, பாஸ், பெயிலே கிடையாது. அப்படியே விட்டுருவான். இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்’’ என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். மேலும் பல இடங்களில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மிகக்கடுமையாக பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அப்படிப்பட்டவர் அவருக்கும் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது; ஆனால் அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விமர்சிப்பது முறையல்ல. அரசு ஊழியர்கள் முதலமைச்சரிடம் வந்து இனாம் கேட்கவில்லை. அவர்களின் உரிமைகளை மட்டும் தான் கேட்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இப்போது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஊதியக்குழு அமைக்கப்பட்டு ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதையாவது  முறையாக வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்தில் 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க மறுப்பதும், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய மறுப்பதும் எந்த வகையில் நியாயம்? முதலமைச்சரின் கருத்துகளை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அம்சமாகும். அதனால் 8&ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தேர்ச்சி வழங்குகின்றனர். ஒருவகையில் பார்த்தால் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க  இது தேவையாகும். இதை முதலமைச்சர் விமர்சிப்பது எந்த வகையில் சரியாகும்? ஒருவேளை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சரியாக பணியாற்றவில்லை என்று முதலமைச்சர் நினைத்தால், அந்த நிலையை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். அரசு ஊழியர்கள் அவர்களின் கடமையை ஒழுங்காக செய்ய   பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தைக் கொண்டு வரலாம். ஆனால், அதை செய்ய மறுப்பது ஏன்?

மாநில அரசின் மொத்த  வரி வருமானத்தில் 61% அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு செலவு ஆவதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். அது உண்மை தான். இந்த நிலைக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அரசின் செலவுகள் அதிகரிக்கும் போது, அதற்கேற்ற வகையில் அரசின் வருமானத்தையும் மக்களை பாதிக்காத வகையில் அதிகரிக்க வேண்டும். மக்களை பாதிக்காதவாறு  அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு யோசனைகளை பா.ம.க. அரசுக்கு வழங்கியுள்ளது. அதை செய்யாதது அரசின் தவறு. இதற்காக அரசு ஊழியர்களை விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆகும் செலவை விட ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்படும் இழப்பு மிகவும் அதிகமாகும். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதை கைவிடுவதுடன், அவர்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலுவையிலுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்...

பொய்களின் உருவம் கன்னடன் கமல்...


நம் உரிமைகள் பல வழிகளில் இங்கு முடக்கப்படுகிறது எனில், சற்று நிதானமாக யோசித்து பாருங்கள்...


நம் உரிமைகள் எத்தகைய வலிமையுடையதாக இருக்கக்கூடும்..

அதனால் தான் நாம் அந்த உரிமைகளை பெற்றுவிட கூடாது என்பதற்காக நம்மை பல வழிகளில் கேள்வி கேட்காத அடிமைகளாக மாற்ற முயற்சிக்கிறார்கள்..

அந்த வலிமையை நாம் காண வேண்டாமா..?

திருவண்ணாமலை - செங்கம் விதைப் பண்ணை மூடல். தடுக்கப்பட வேண்டும்...


சிடெர்லைட் ஆலையை மூடியதாக அறிவித்த பொழுது ஆலைக்கு தொடர்பில்லாத பலர் பதறினர், குறிப்பாக தரகர் சாமியார்கள், வாடகை கட்ட வக்கில்லாத நடிகர்கள் போன்ற பெருமுதலாளிகளின் முகவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் விதைப் பண்ணையை மத்திய அரசு மூடி உள்ளது. இப்பண்ணை தொடர்ந்து இயங்க தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் வேலை இழக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் குறித்தோ, விதைப் பயண்பாடு அடைந்து வந்த உழவர்களின் இழப்பு குறித்தோ பேசவோ அறிந்து கொள்ளவோ பலருக்கு நேரமில்லை.

விதைப் பண்ணையை மூடி வெளிநாட்டு விதைகளை விற்க ஒப்பந்தம் போட்டுள்ளனர்கள் போல.

நம் நாட்டு உற்பத்தி எல்லாவற்றையும் மூடிவிட்டு வெளிநாட்டு முதலாளிகளிடம் பணத்தை வாங்கி இறக்குமதியை அனுமதிப்பது தான் நவீன இந்தியா கண்டுள்ள வளர்ச்சி.

அரசின் மீதும் அரசு வழங்க வேண்டிய சேவைத்துறைகள் மீதும் வெறுப்பை உருவாக்கி தனியாரே சிறந்தது என்ற சிந்தனையை வளர்ப்பதில் உலகம் முழுக்க பெருமுதலாளிகள் மிக கெட்டிக்காரர்கள்...

திமுக பிரியாணி கலாட்டா...


மக்களே நல்லா பாத்துக்குங்க இவன் எல்லா இடத்திலேயும் வாய் வச்சிருக்கான்...

இவனுக்கு எப்படி திமுக மாணவரணி நிர்வாக பொறுப்பு திமுக தலைமை அளித்தது...

கிஸ் மிஸ் பழம் பற்றிய தகவல் - உலர் திராட்சை...


கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் கு ணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

இதில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சியபின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடகாத்திரமாக வளரும்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டுக் காய்ச்சி 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் நிவாரணம் பெறலாம்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்...

இந்திய அளவில் டிவிட்டரில் முதல் இடத்தை பிடித்தது ஓசி பிரியாணி திமுக...


காவல்துறைக்கு ஒரு சபாஷ்...


திருச்சி, பரமக்குடி, முசிறி, தேனி, திண்டுக்கல், வேலூர், மதுரை, கரூர், இராமநாதபுரம் பகுதியை சோ்ந்த ஒரு கூட்டம் பல நாட்களாக  ஒரு நெட்வொர்க் வைத்து ஒன்று சேர்ந்து திருடி அருகே இருக்கும் வந்துள்ளார்கள்.  பின்னர் திருடிய பணத்தையும், அவர்களுக்கு அருகில் உள்ள தங்கும் விடுதியில் சந்தித்து பிரித்து செல்லும் வழக்கத்தில் இருந்துள்ளார்கள்.  இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல் துறையினர் துரிதமாக திட்டம் தீட்டி இந்த கூட்டு கொள்ளையர்களை கூண்டோடு கைது செய்துள்ளார்கள்.

இதைப்பற்றி மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் அவர்களின் தனிப்படை காவலர் சரவணகுமார் கூறுகையில். " மொத்த கூட்டத்தையும் அவர்கள் தங்கிய room duplicate key மூலமாக முன் கூட்டியே கட்டில் அடியில் படுத்து கொண்டு அனைவரும் வந்து பங்கு போட்டு கொண்டு இருக்கும் போது வெளியில் உள்ள எனது டீம் கு மிஸ்டு கால் கொடுத்து சுற்றி வளைத்து கைது செய்தேன்.  பின்னர் அங்கேயே வைத்து முறைப்படி விசாரித்த பின் அவர்கள் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். 

இந்த வழக்கில் இதுவரை 12 போ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  மேற்கொண்டு விசாரணை நடத்தினால் இன்னும் பல  உண்மைகள் வெளி வரும் என்றார்...

திமுக வின் ஓசி பிரியாணி கலாட்டா...


கடவுளைக் காண முயற்ச்சிப்பவன் பக்தன் கண்டு தெளிந்தவன் சித்தன்...


சித்தர்கள் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை நெறிகளையே எடுத்துக் கூறியுள்ளனர்.

சாத்திரக் குப்பையிலும் கோத்திரச் சண்டையிலும் ஈடுபடாமல், மக்களை நன்னெறிப்படுத்த சித்தர்களும் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி மக்களுக்கு நல்வழி காட்டியுள்ளனர்.

சித்தர்களைப்பற்றி பலரும் பலவிதமாக
கற்பிதம் செய்து கொள்கிறார்கள். சிலர் அவர்களை பரதேசி என்றும், பைத்தியக்காரர்கள் என்றும் எண்ணிக் கொள்கிறார்கள்.

அவர்களுடைய செயல் யாராலும் புரிந்து கொள்ள முடியாத புதிர் என்றும்,

சித்து விளையாடல் செய்யும் மந்திரக்காரர்கள் என்றும்,

சாஸ்திர சடங்குகளை எதிர்ப்பவர்கள் என்றும்,

பொது மக்களோடு இணைந்து வாழாதவர்கள்- சுயநலவிரும்பிகள் என்றும்..

தவறானஅர்த்தத்தை புரிந்து கொள்கிறார்கள்.

நம்மில் பலர், சித்தர்களைப் பற்றிய உண்மைகளை முழுதும் சரியாக புரிந்து
கொள்ளாததோடு - சில கருத்துகளை தவறாகவும் புரிந்து வைத்துக் கொண்டுள்ளனர்.

ஞானபாதையை பிறருக்குப் புலப்படுத்தாதவர்கள் என்றும் மூலிகை ரகசியங்களை தமக்குள்ளேயே புதைத்து கொண்டு விட்டவர்கள் என்றும் புரிந்து கொண்டுள்ளனர்.

தன்னுடைய சுய தேவைகளூக்காக கடவுளை வழிபடுகிறவன் =ஓரு சாதாரண மனிதன்.

இறை சிந்தனையோடு - கடவுளை மகிழ்விப்பதற்க்காக -  பூஜை புனஸ்காரங்கள் செய்து, தன்னை மகிழ்வித்து கொள்பவன் = ஒரு பக்தன்.

ஆனால் ஒரு சித்தனோ - சிந்தையை அடக்கி.. சதா சர்வ காலமும் சிவத்திலேயே லயித்திருப்பவன்.

இயற்கை பஞ்ச பூத செயல்பாடுகளின் ரகசியங்களை, யதார்த்தங்களை உணர்ந்து - அவற்றின் பேதா பேதங்களை கண்டறிந்து, பேதங்களை நீக்கி குணங்களை மட்டும் சாதனமாக கொண்டு இறையருளின் ஆனந்த நிலையை வசப்படுத்தி, சாவை வென்று - அவன் ஜோதியில் ஐக்கியமாயிருப்பவன்.

கடவுளைக் காண முயற்ச்சிப்பவன் பக்தன்.. கண்டு தெளிந்தவன் சித்தன்...

உடம்பையும் உயிரையும் பாரமாக
கொள்வார்கள் - பக்தர்கள்.

உயிரையே சிவனாக பாவித்து - உடம்பை போற்றுவார்கள் - சித்தர்கள்.

உடம் பார் அழியில் உயிரார் அழிவர்;
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்;
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த் தேனே (724)

உடம்பினை முன்னம் இழுக்கென றிருந்தேன்;
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்;
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே (725)

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்;
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்;
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்;
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே; (1823)...

ஒரே ஒரு பிளேட் பிரியாணி மொத்தமும் குளோஸ்...


6 பனங்கிழங்கின் விலை $ 6.50 ஆஸ்திரேலியா டாலர் = 325 ₹ இந்திய ரூபாய்...


பனையின் அருமை தெரியாது தமிழன் ₹ 5000ரூபாயிக்கு 50 ஆண்டு வளர்ந்த பனைமரத்தை விற்கிறார்கள்.. சிந்தித்துப் பாருங்கள் நாம் எங்கு வீழ்கிறோம் என்று..

கோடிப்பனை கூடிநடுவோம்...

வாழ்த்துகள் மெர்சல் குழு...


ஓசி பிரியாணி திமுக...


ஓசி பிரியாணி திமுக..


ஓசி பிரியாணி திமுக...