01/04/2019

பற்களில் கரை படிந்துள்ளதா.. இனி கவலை எதற்கு....?


என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்...

தினகரனின் அமமுக பெறப்போகும் வாக்குகள் 1.5 கோடிகள்.. ஆதிமுக, திமுக வை அதிர வைக்கும் டிடிவி...


https://youtu.be/icOX6KBV_tA

Subscribe The Channel For More News...

தமிழ் நாட்டில் திராவிடர்கள் சாதனை...


தமிழ் நாட்டில் முன்னர் மருத்துவமனை கால்லுரிகள் அரசு நடத்திக்கொண்டு இருந்தது.. சாராய கடைகள் தனியார் நடத்தி கொண்டு இருந்தர்கள்..

திராவிடர்கள் ஆட்சிக்கு வந்ததும்... மருத்துவமனை கால்லுரிகள் தனியார் நடத்துகின்றார்கள்.. சாராய கடை அரசு நடத்துகின்றது..

சாராய கடையை நடத்தினவர்கள் இன்று கால்லுரி மருத்துவமனை
நடத்துகின்றார்கள்..

திராவிடர்கள் ஏன் இந்த திட்டம் கொண்டு வந்தார்கள் தமிழா சிந்தித்து பார்..

எந்த திட்டம் அரசு நடத்தினால்.. தமிழர்களை குடிக்கு அடிமைப்படுத்தி தமிழன் இன உணர்ப்பு மொழி உணர்வு சிதைக்க முடியும்..

தமிழா திராவிடர்கள் தமிழனை திட்டம் போட்டு சிதைத்து கொண்டு இருகின்றார்கள்..

விழித்தெழு தமிழினமே...

கலக்கத்தில் திமுக ஸ்டாலின்.. திமுக ஓட்டுகளை குறி வைத்து தாக்கும் டிடிவி தினகரன்...


https://youtu.be/s9Ex6VtOEwg

Subscribe The Channel For More News...

கோவை சிறுமி பாலியல் வன்புணர்வு கொலையில் இந்து பாரத் சேனா அமைப்பினருக்கு தொடர்பு...


கோவை துடியலூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த காவி கும்பல் மொத்தமாக கைது செய்யப்பட்டு மிகக் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்...

தெலுங்கு திமுக வும் தமிழின அழிப்பும்...


கச்சதீவை தாரை வார்த்து, நம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்தது திமுக..

இப்படி பட்ட திமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வரத்தான் வேண்டுமா?

இவரையும் இவர் கட்சியையும் விரட்டியடிக்க வேண்டியது நமது கடமையல்லவா உறவுகளே?

மூளையும் – பிரபஞ்ச சக்தியும்...


நாம் ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லையெனில், நமக்கு உற்சாகம் , சுறுசுறுப்பு எல்லாம் போய் விடுகின்றது – ஏன் ?

உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கவில்லை. நாம் தான் தினமும் 3 வேளை உணவு சாப்பிடுகின்றோமே என்று கேட்டால், மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை – இந்த உடலுக்கு பிரபஞ்ச சக்தியும் மிகவும் அவசியம் ஆகும்.

நாம் தூங்கும் போது , மூளை ஓய்வெடுத்துக் கொள்கின்றது – அப்போது அது பிரபஞ்சத்திலிருந்து ( cosmic space ) சக்தியை கிரகித்துக் கொள்கின்றது – அதனால் உடலுக்கு தேவையான சக்தியும் – சுறுசுறுப்பும், தெம்பும், உற்சாகமும் கிடைத்து விடுகின்றது.

இதை கண்டறிந்த ஞானிகளும் ரிஷிகளும், தூங்காத தூக்கம் என்ற சாதனை செய்து – அதன் மூலம் சிதாகாயத்திலிருந்து பிரபஞ்ச சக்தியைக் கிரகித்து, உடலுக்கு தேவையான சக்தியைப் பெற்று, ஊண், உறக்கம், ஓய்வு இல்லாமல் தங்கள் சாதனையில் முன்னேறி, தங்கள் லட்சியத்தை அடைந்தனர்.

ஞானிகள் தங்கள் சாதனையில், மனதை – மூளையை அமைதி – ஓய்வடையச் செய்து , இந்த சக்தியைப் பெற்றனர் என்பது உறுதி.

அதனால் நாமும், அதிக நேரம் சாதனைக்கு செலவிட்டால், உணவு, உறக்கம், தாகம், ஓய்வு இல்லாமல் வாழலாம்.

இது எப்படி இருக்கிறது என்றால் : சூரிய சக்தியை பயன்படுத்தி, மின்சக்தியை குறைப்பது போல், பிரபஞ்ச சக்தியை பயன்படுத்தி, நாம் உணவு, நீர், தூக்கம் மீதுள்ள சார்பு நிலைமையை மாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

புறத்திலுள்ள சூரியன் – ஆன்ம சூரியன் ஆகும்...

2. கோவில் கருவறை அமைப்பு..

தமிழ் நாட்டில், அனேகமாக எல்லா கோவில்களிலும், மூலஸ்தானம் – மூலவர் – ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பார்.

அதன் உண்மையான தாத்பரியம் யாதெனில்..

ஆயிரங்கால் மண்டபம் – மூளை
மூலவர் – ஆன்மா..

மூளையின் நடுவே உட்புறத்தில், ஆன்மா ஆழமாக வைக்கப்பட்டிருக்கின்றது.

3. நாம் திருவடிக் கொண்டு பயிற்சி செய்ய செய்ய, இருள் சூழ்ந்துள்ள செல்கள் எல்லாம், ஒளி மயம் ஆகி, கெட்ட குணங்கள் ஒழிந்து, மேலான குணங்களான அன்பு, கருணை, தயவு ஓங்கி வளரும் – இதனால் சத்துவ குணம் தழைத்து சாந்தம் , அமைதி , மௌனம் எல்லாம் வரும்...

தமிழகமே போராடிய திட்டம்.. 60 ஆயிரம் கோடியில் அமல்.. தமிழக முதல்வர் எடப்பாடி அறிவிப்பு...


https://youtu.be/29Jf_cJOEkc

Subscribe The Channel For More News...

இசைக்கருவி புல்லாங்குழல்...


புல்லாங்குழல் மிகவும் இனிமையான இசைக்கருவி. இது இயற்கைக் கருவி என்றும் கூறலாம்.

இதில் சுரத்தான பேதங்களைக் காட்டுவதற்கு ஆறு துளைகள் உள்ளன. எல்லாத் துவாரங்களையும் திறந்தும் பிறகு அவை ஒவ்வொன்றையும் முறையே விரலினால் மூடியும் வாசித்து வரும் போது ஏழு- இசைகளும் (ஸ, ரி, க, ம, ப, த, நி) முறையே ஆரோசையாக ஒலிக்கின்றன.

இவை ஒரு தானத்தை (ஸ்தாயியை) மட்டும் குறிப்பனவல்ல, மெலிவு, சமன், வலிவு, ஆகிய மூன்று தானத்தின் நிலைகளையும் குறிக்கின்றன.

அதாவது மூன்று தானங்களிலுள்ள அந்தந்தச் சுர ஒலிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு துவாரமும் கொடுக்கின்றது.

மாயவனாகிய கிருட்டிண பரமாத்மா இந்த புல்லாங்குழல் கருவியை இசைத்து சகல சீவன்களையும் பரவசமடையச் செய்தார் என்று நூல்கள் கூறினும், அதை வாசிப்பது எளிதன்று. அதில் சுருதி தவறுதல் இன்றி இனிமையான சுரம் பொருந்தி வருவது கடினமாகும். புல்லாங்குழலை இலக்கியமாக எடுத்துக்கொண்டு, சிலப்பதிகாரத்துள் பொதிந்துள்ள இசை முழுவதையும் நாம் நன்கு அறியலாம். புல்லாங்குழலில் ஒன்று அல்லது இரண்டு துவாரங்கள் அதிகமாகப் போட்டுக் கொள்வதுண்டு. அவை சுரங்கள் சுத்தமாய் ஒலிப்பதற்கு உதவுகின்றன என்பர்.

வீணை, பிடில் முதலிய கருவிகளில் அந்தந்த தானங்கள் வெவ்வேறு இடங்களில் பொருந்தி இருத்தல் இங்குக் குறிக்கத்தக்கது. ஒரே துவாரத்தில் ஒரே தான நிலை உள்ள இடத்தில் மூன்று தான நிலைகளும், ஒரே இடத்தில் ரி-யின் ஈரினங்களும் அதுபோல க-ஈரினங்களும், ம-ஈரினங்களும், த-ஈரினங்களும், நி-ஈரினங்களும் ஒலித்து வெளிப்படுவதே புல்லாங்குழலின் சிறப்பான இனிமைக்கு மூலகாரணம்.

மேலும் தானம் (ஸ்தாயி) என்பது வட்ட வடிவமானது என்பதைப் புல்லாங்குழல் விளக்கும். வீணை, பிடில் முதலிய கருவிகள் முதல் தானத்தின் பாதி அளவில் மூன்றாம் தானம் வருவது போலவும் காண்பிக்கும் போது, அந்த எல்லா தானங்களும் ஒரே அளவில் வட்ட வடிவமான உருவில் வருகின்றன என்பதைப் புல்லாங்குழல் எடுத்துக் கூறுகிறது...

மருத்துவ மாப்பியா உண்மைகள்...


உண்மையான தியானம்.. ஷென் கல்வி முறை...


ஒரு நாள் ஹோஃபுக்குவின் சீடர்களில் ஒருவனை வரவேற்ற ஜிஸோ, உன்னுடைய ஆசிரியர் என்னக் கற்றுக் கொடுத்தார்? என வினவினார்.

என்னுடைய ஆசிரியர் எந்த தீயவைகளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னார்.

தீயவைகளை கேட்காமல் காதை மூடிக் கொள்ளச் சொன்னார்.

தீய எண்ணங்களை மனதினில் உருவாக்கமல் பார்த்துக் கொள்ளச் சொன்னர் என்று சீடன் பதிலுரைத் தான்.

நான் உன்னுடைய கண்களை மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன் என்ற ஜிஸோ, ஆனால் நீ எதையும் பார்க்க மாட்டாய்.

உன்னுடைய காதுகளை கைகளால் மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன். ஆனால் நீ எதையும் கேட்க மாட்டாய்.

உன்னுடைய மனதின் எண்ண அலைகளை நிறுத்தச் சொல்ல மாட்டேன். ஆனால் நீ எந்த சிந்தனையையும் மனதில் ஏற்படுத்தாமல் இருப்பாய் என்றார்.

கண் காது  மூக்குகளை மூடுவதால் ஒருவரது எண்ணம் தூய்மையாகாது. எண்ணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே உண்மையான தியானம் என்றார்...

சித்தர் என்பவர்கள் யார்.?


https://youtu.be/uf4JF-imwqs

Subscribe The Channel For more News...

மறந்த சரித்திரம்... மறைத்த தந்திரம்...


சுமார் ஐயாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு...

தமிழ் மன்னர்கள் தங்களின் பராக்ரமங்களை உலகம்தோறும் விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்த்திக் கொண்டிருந்த காலம்..

மழை என்றால் என்ன?

செழுமை எப்படி இருக்கும் என்று தன வாழ்நாளிலே காணாமல் தவித்த மக்கள் கூட்டம் .. இந்தியா தவிர மற்ற நிறைய நாடுகள்ல இருந்துச்சு..

இவிங்க எல்லாத்துக்கும் இந்தியா மேல் ஒரு கண்ணு..

நம்மளுக்குன்னு ஒரு சமயம் கிடைக்கும்.. அப்போ இந்தியாவ நாம கைப்பற்றி ஆளலாம்..ன்னு தினம் தினம் கனவு கண்டுட்டே இருந்தாங்க..

அதுல ஒருத்தன்தான் இந்த சரித்திர சாகச நாயகன்-ன்னு விஜய் மாதிரி காசு கொடுத்து பட்டப் பெயர் வாங்கின ஹீரோ. அலெக்ஸாண்டர்..

எத்தனையோ வம்சங்களாக கிரேக்கர்கள் அடிபட்டு அவர்கள் இந்தியாவை பழி வாங்குவதற்காக பல வழிகளில் சிந்தித்துக் கொண்டிருந்தனர்...

அவர்களின் வம்சாவளி வந்த அலெக்ஸாண்டர் அரிஸ்டாட்டிலடம் சூளுரைத்தான்... [in the year 336 B.C.E]
நான் ஒரு நாள் இந்தியாவை என் காலடியில் கொண்டு வருவேன்...

பாவம், பயபுள்ள, கஷ்டப்பட்டு வந்து போரஸ் என்ற பஞ்சாப் மன்னர்ட்டே தர்ம அடி வாங்கி ,  இந்திய மண்ணில் விளைந்த ஒரு புண்ணிய அம்பினால் அடிவயிற்றில் தைக்கப்பட்டு, உசரு உனக்காச்சு கொசுரு எனக்காச்சு-ன்னு ஓடினான்..

ஓடுனவன் செத்தான்-ன்னும் தெரியல, பொலைசான்-ன்னும் தெரியல..

ஆனா, அதப்போயி நம்ம வரலாற்று ஆசிரியர்கள் அவனை ஒரு மாவீரனா சித்தரிச்சு பிரபலப் படுத்திட்டாங்க...

இந்தியா எவ்ளோ பெருசு-ன்னு யாருக்குமே தெரியாது..

சமீப காலத்துல (ஒரு அம்பது அறுவது வருசத்துக்கு) பாகிஸ்தான் பிரிஞ்ச மாதிரி நிறைய அண்டை நாடுகளின் தொகுப்பே இந்தியா.. (குமரிகண்டம்).

வெறும் வாயில சொன்னா நம்ப மாட்டோம்.. எனக்கு ஆதாரம் வேணும்-ன்னு நீ கேட்டீன்னா,  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..

Prof. Dinesh Agrawal
Address: 156 Aberdeen lane, State College, PA 16801 USA
Tel: (814)-234-3558 (Home), (814)-863-8034 (Office)

Who had written the post "Alexander, The Ordinary"

போனத பேசி புண்ணியமில்ல,
பொறாம புடிச்சா கண்ணியம் இல்ல..

ஆனால் மக்களே..

நம் பண்டைய மன்னர்களின் வரலாறு மறுக்கப் படுகிறது.. மறைக்கப் பட்டிருக்கிறது.

எங்கே இவனுங்களோட முன்னோர்களைப் பாத்து இவனுங்களுக்கும் வீரம் வந்துட்டா,
நாம அவ்ளோதான்-ன்னு பயந்து,
வரலாற்றை மாத்தி எழுத முடியாது, அதனால, புறக்கணிச்சுட்டாங்க..

பள்ளிப் புத்தகங்கள், ஒரு பாடத் திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு இருக்கும். அந்தப் பாடத்திட்டத்தில், ஒரு தமிழ் மன்னரைக் கூட நான் படித்ததாக ஞாபகம் இல்லை. ஏன் என்று ஆராய்ந்தால், பாடத் திட்டம் ஆங்கிலேயர்களால் வகுக்கப் பட்டது, அதை யாரும் இன்னும் மாற்ற முன்வரவில்லை..

விடிய விடிய தமிழ், தமிழ்-ன்னு கூவி என்ன புண்ணியம்... தமிழ் வரலாறு பாடப் புத்தகத்தில் இல்லையே?

ஒரு சின்ன உதாரணம்..

சோழர் கொடி பறக்காத போர்க் கப்பல் இல்லை, அவை போகாத தீவும் இல்லை...

இராசேந்திர சோழர் உலகத்தையே ஆட்டிப் படிச்சவர்.. அவருக்கு இல்லாத வீரமும் கௌரவமும், அலெக்ஸாண்டருக்கு வழங்கப் பட்டு இருக்கு.

இதுக்கு காரணம் யாரு-ன்னா, நமது பெயரும் புகழும் வாய்ந்த, பொறுப்பில்லாத, கல்வி கேள்வி இல்லாத, ஒரு தொலைநோக்கு சிந்தனை இல்லாத அரசியல்வியாதிகளே..

தஞ்சை-ல இராஜராஜ சோழர் ஒரு கோயில் கட்டாம விட்டிருந்தா, சோழர்-ன்னு ஒரு வம்சம் இருந்ததையே மறைச்சு இருப்பாங்க..

வடக்கில் ஹர்ஷவர்த்தனர் என்ற பெயரைக் கேட்டாலே கதி கலங்க வைத்த வீரர் பிறந்த புண்ணிய பூமி இது..

சத்ரபதி சிவாஜி வர்றார்-ன்னு சொன்னாலே ஒன்னுக்கு போற மன்னர்கள் ஏராளம்..

அடுத்தவன் நாட்டை கெடுக்கரதுல கை தேர்ந்த ஆங்கிலேயர்கள்.. இந்தியாவை விட்டு வெளியேறும் பொழுது, சும்மா போகல, இவனுங்க காலத்துக்கும் அடிசுகிட்டே இருக்கட்டும்-ன்னு ரெண்டு நாடா பிரிவினைய  உண்டு பணிட்டு போயிட்டானுங்க..

அப்போ அவனுங்க பத்த வச்ச கொல்லி இன்னும் கொழுந்து விட்டு எரிஞ்சுட்டு தான் இருக்கு..

அவனுங்க அன்னைக்கு போட்ட விதைதான் இன்னைக்கு வெறுப்பு-ன்னு ஒரு பெரிய மரமா வளந்து காய் காத்து, கணியல, ஆனா ஊருபட்ட குட்டி போட்டு அங்கங்கே வெடிச்சு கிட்டே இருக்கு..

நீங்களும் ஆடுங்கடா, அதை வைத்து நாங்க அரசியல் பண்ணிக்கறோம்-ன்னு சாமர்த்தியமா, ஆட்சிக்கு வர்ற எல்லா கட்சிகளுமே.. டாஸ்மாக் மாதிரி உறுதியா இருக்காங்க..

இல்ல-ன்னு சொன்னா, மத நல்லிணக்கத்துக்காக, எந்த அரசாவது,  ஏதாவது ஒரு நடவடிக்கையாவது எடுத்து இருக்குதா?

எங்கே, எந்த ஒரு பிரச்னை நடந்தாலும், அதுல கட்சிக்கு என்ன லாபம், எனக்கு என்ன லாபம், என் சின்ன வீட்டுக்கு என்ன லாபம்-ன்னு நினைக்கும் ஆட்கள் இருக்கும்வரை, இந்தியாவ, இன்னும் 2000 சுபாஸ் சந்திர போஸ் வந்தாலும் காப்பாத்த முடியாது..

என் கருத்து...

தமிழ் மற்றும் குமரிகண்டம்  சரித்திர நாயகர்களின் பராக்ரமங்கள், பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட வேண்டும்.

பொய்யான, வரலாறு பதிவுகள் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப் பட வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு மதம் சார்ந்த பிரார்த்தனை திணிக்கப் படக் கூடாது...

கட்டப் பஞ்சாயத்து ரவுடி திமுக ஒழிக...


சங்க காலத்தில் தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த மன்னர்கள் வேளிர் குலத்தைச் சேர்ந்தவர்கள்...


‘வேந்தரும் வேளிரும்’ என்று சங்க இலக்கியத்தில்  மூவேந்தர்களுக்கு இணையாக பல முறை இம் மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

சங்க காலப் போர்கள் பலவற்றில் வேளிர் இடம்பெற்றிருந்தனர் என்பதை சங்கப் பாடல்கள் சொல்லுகின்றன.

வேளிர்கள் தமிழ் நாட்டில் இருந்தவர்களா அல்லது வேறெங்கிலும் இருந்து குடியேறியவர்களா என்பது ஒரு ஆராய்ச்சிக்குரிய விஷயமாகவே இருந்தது.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தொல்காப்பியத்திலேயே நமக்கு கிடைக்கின்றன.

அகத்திய முனிவர் தமிழகம் வந்தபோது துவரையிலிருந்து பதினெண்குடி வேளிரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

இங்கு துவரை என்று குறிப்பிடப்படுவது துவாரகை நகராகும்.

மேலும் “நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் ” என்று துவாரகையை ஆண்ட  கண்ணனின் (திருமால்)  வழிவந்த அரசர்கள் இவர்கள் என்றும் தொல்காப்பியம் உரைக்கிறது.

கண்ணன் யாதவ குலத்தில் தோன்றியவன் எனவே  வேளிரும் யாதவ குலத்தவர் என்பது பல வரலாற்றாசிரியர்களின் கருத்து.

கரிகால் வளவன் வென்ற இருங்கோவேளைப் பற்றி கபிலர் என்ற புலவர்

“நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே” (புறநானுறு  201)

‘வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்திற்றோன்றி, செம்பால் அழகாகச் செய்யப்பட்ட மிகப்பெரிய கோட்டையுடைய, வெறுப்பில்லாத பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது தலைமுறையாகவந்த வேளிர்க்குள்ளே சிறந்த வேளாய் உள்ளனை‘ என்பது இதன் பொருள்.

வடநாட்டுப் புராணங்களும் யாதவர்கள் மகாபாரதப் போர் முடிந்ததும் கடல் வழியாக தென்னாட்டில் குடியேறினர் என்று கூறுகின்றன.

ஆக வேளிர் கண்ணபிரான் வழிவந்த யாதவர்கள் என்பது தெளிவு.

கடையேழு வள்ளல்களான பாரியும் ஆய்வேளும் வேளிர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது   ஒரு உபரிச்  செய்தி...

உங்களுக்கு ஐஸ்கிரீம் என்றால் ரொம்ப படிக்குமா..? அப்போ வீடியோ பாருங்க...


https://youtu.be/ISRO0qPhGsI

Subscribe The Channel For More News...

திமுக ஸ்டாலினும் தமிழின அழிப்பும்...


கடந்த 2009ல் துணை முதல்வராக இருக்கும் போது தான் ஒன்றறை லட்சம் தமிழர்களை ஈழத்தில் ராஜபக்சேக்கு ஆதரவாக காங்கிரசுடன்  சேர்ந்து கொலை செய்தவர்..

அதன்பிறகு அவரது தங்கை கனிமொழியை ராஜபக்சேவிடம் அனுப்பி அவனுக்கு வாழ்த்து தெரிவித்தவர்..

தமிழகத்தையும் தமிழனையும் அழிக்க மீத்தேன், கெயில், திட்டத்தை கொண்டு வந்தவர்...

தமிழினத்தின் பண்பாட்டை அழிக்க காங்கிரசுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டை தடை செய்தவர்...

இவருக்கு என்ன தகுதியிருக்கிறது தமிழகத்தின் முதல்வராக?

யார் வெல்கிறார்களோ இர்ரையோ ஆனால் திமுக மட்டும் இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெறவே கூடாது தமிழா...

திமுக வின் துரோகங்களை மறக்கவும் மாட்டோம்... மண்ணிக்கவும் மாட்டோம்...

திமுக வை இனி தமிழகத்தை ஆளவும் விட மாட்டோம்...

வீட்டிலே பைனாப்பில் கேக் செய்வது எப்படி..?


https://youtu.be/VSJHIIoPYDI

Subscribe The Channel For More Recipes...

வாங்கிய கடனை திருப்பி செலுத்த தவறிய பெண்ணை பலர் முன்னிலையிலையில் அவமானப்படுத்திய நிதி நிறுவன ஊழியர்கள்...


மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டதால், தாயை இழந்து தவிக்கும் இரு குழந்தைகள்...

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா லட்சுமி(வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் பிரியதர்ஷிணி என்ற பெண் குழந்தையும், ஆதீஸ்வரா என்ற 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வந்த லலிதா லட்சுமி, மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்தார்.

சுரேசுக்கு கடந்த சில நாட்களாக சரிவர வேலை கிடைக்காததால் லலிதா லட்சுமி தான் வாங்கிய கடனுக்கான கடைசி மாத நிலுவை தொகையை செலுத்துவதற்கு சில நாட்கள் தாமதம் ஆகி விட்டதாக தெரிகிறது. ஒவ்வொரு மாத நிலுவையையும் சரியான நேரத்தில் திரும்ப செலுத்தி வந்த லலிதா லட்சுமியால் குடும்ப சூழ்நிலை காரணமாக கடைசி மாத நிலுவை தொகையை செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த சிலர் லலிதா லட்சுமி வீட்டிற்கு சென்று கடன் நிலுவையை கேட்டு மிரட்டி தகாத வார்த்தைகளால் அவரை திட்டி சத்தம் போட்டு உள்ளனர். மேலும் அவரை செல்போனில் படம் எடுத்து உள்ளனர். அக்கம், பக்கத்தினர் முன்னிலையில் நிதி நிறுவனத்தினர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதையும், செல்போனில் படம் எடுத்ததையும் லலிதா லட்சுமியால் ஜீரணிக்க முடியவில்லை.

இதனால் மிகுந்த அவமானம் அடைந்த லலிதா லட்சுமி, தான் இனிமேல் ஒரு நிமிடம் கூட உயிர் வாழக்கூடாது என்று முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து வந்து தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். அதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு லலிதா லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து லலிதா லட்சுமியின் தாய் முருகேஸ்வரி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தாயை இழந்த குழந்தைகள்...

லலிதா லட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் தாயை இழந்து தவித்து வருகின்றனர். அந்த குழந்தைகளை பார்த்து உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதது காண்போரின் கண்களையும் குளமாக்கியது.

மகளிர் குழுவில் வாங்கிய கடனுக்காக அவமானப்படுத்தியதால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

கன்னட ஈ.வே. ராமசாமியும்... கன்னட கமலும்...


கன்னட கமல் மநீம கலாட்டா...


ம.பொ.சி கேட்ட தமிழ்நாடு (வரைபடம்)...


மண்மீட்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ம.பொ.சி அவர்கள் 1950 மே மாதம் வெளியிட்ட வரைபடம்...

இதில் தற்போது கர்நாடகாவில் உள்ள கோலார் பகுதியின் ஒரு துண்டும்..

தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூரில் பெரும்பகுதியும்.. நெல்லூரில் ஒரு துண்டையும்..

தற்போது கேரளாவில் உள்ள இடுக்கி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன...

விசிக திருமா வின் நாடக அரசியல் ஆரம்பம்...


தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்போம்... புதிய சாதனைகள் படைப்போம்...


காலத்தை கடந்து நிற்கும் அதிசயங்கள் . இன்றும் இது போன்ற அதிசயங்களை நாம் கட்ட இயலாது.

இவற்றை கட்டியவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு கட்டவில்லை. அவர்கள் தாய் மொழியில் கணிதம், அறிவியல் பயின்று தான் இந்த அழியாத அற்புதங்களை கட்டினர்.

ஆங்கிலம் படித்தால் தான் சாதிக்க முடியும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டனர் சிலர். மாயையில் விழுந்த மக்களும் அதை நம்பினர்.

உண்மையான சாதனைகள் அவரவர் தாய் மொழியில் படித்தால் மட்டுமே சாதிக்க முடியும் ..

அதற்கான சான்றுகள் ஏராளம்.

இன்று தாய் மொழிக் கல்வியை பயிலும் அமெரிக்கர்கள் , பிரித்தானியர்கள் , சீனர்கள் , ஜப்பானியர்கள் உலகத்தை ஆட்டுவிக்கும் அளவிற்கு அறிவியல் சாதனைகள் புரிகின்றனர்..

தமிழர்களோ அறிவுக்காக அடுத்தவரிடம் கையேந்தி நிற்கின்றோம். நாமும் நம் தாய் மொழியில் அனைத்தும் கற்போம் , கற்பிப்போம்...

தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்போம். புதிய சாதனைகள் படைப்போம்... வாழ்க தமிழ்...

வெள்ளை சக்கரையை தவிர்ப்போம்...


போலீஸ்காரர் ஒருவரின் பாலியல் தொந்தரவு காரணமாக, தற்கொலை செய்த பெண் போலீஸ்...


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சாம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முத்துவாளன் (வயது 40). அவருடைய மனைவி அமுதா (35). இவர் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த சில வாரங்களாக மாற்று பணியாக உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். அவருடைய கணவர் முத்துவாளன், ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர்களுக்கு ஜான்சி (15) என்ற மகளும், அன்பு (14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 24–ந்தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அமுதா வீட்டினுள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து பெண் போலீஸ் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது தற்கொலைக்கு குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அமுதாவிற்கு, போலீஸ்காரர் ஆறுமுகம் என்பவர் சமூக வலைதளம் வழியாக பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:–

அமுதா தற்கொலைக்கு பின்னர் அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார், கடைசியாக அவர் யார், யாரிடம் பேசினார் என்பது குறித்தும் மற்றும் அவருக்கு வந்த வாட்ஸ்–அப் தகவல்கள் குறித்தும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் தேனூரை சேர்ந்த போலீஸ்காரர் ஆறுமுகம் (35) என்பவர் அடிக்கடி அமுதாவுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. உடனே ஆறுமுகத்தை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

ஆறுமுகமும், அமுதாவும் 2010–ம் ஆண்டு போலீஸ் பணிக்கு தேர்வாகியுள்ளனர். ஒரே நேரத்தில் தேர்வான அவர்கள், மதுரை ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்தனர். அப்போது அடுத்தடுத்த வீட்டில் குடியிருந்துள்ளனர். பக்கத்து வீடு என்பதால் அமுதா, ஆறுமுகத்திடம் நட்பாக பழகி வந்துள்ளார். அதன்பின்பு ஆறுமுகம் சோழவந்தான் போலீஸ் நிலையத்திற்கும், அமுதா வாலாந்தூர் போலீஸ் நிலையத்திலும் வேலை செய்து வந்தனர்.

அதன்பின்னரும் அமுதாவுடன், ஆறுமுகம் அடிக்கடி செல்போனில் பேசுவதும், குறும்படங்கள் அனுப்புவதுமாக இருந்துள்ளார். மேலும் அமுதாவிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தெரியவருகிறது. இந்தநிலையில் கடந்த 24–ந்தேதி இரவு செல்போனில் தொடர்பு கொண்ட ஆறுமுகம், அமுதாவின் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். அதன்பின்பு 2 மணி நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட அவர், வீட்டின் முன்பு நிற்பதாக அமுதாவிடம் கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அமுதா அன்றைய தினம் இரவே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தை போலீசார் நேற்று கைது செய்து உசிலம்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலீஸ்காரர் ஆறுமுகத்திற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது...

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியீடு.. நாடு முழுவதும் குறைந்தபட்சம் ஊதியம் 18,000 ரூபாய் என்று அதிரடி...


https://youtu.be/6xZGTfsKFYY

Subscribe The Channel For More News...

ஓம் எனும் மந்திரத்தின் மகிமை...


ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேத ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்.

இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை.

அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர், தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடு தான்.

உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப் புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புத் தான் அதற்கான மாமருந்து என்று  சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் தரும் நலன்கள்...

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (wavelet transforms, time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.

ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.

மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் அவர்கள்.

அகார உகார மகாரங்கள்..

ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் செய்வதை இந்து மதம் கூறுவதையும் ஓமில் உள்ள அகார உகார மகாரங்கள் பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.

ஓம் என நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.

வாயின் பின் புறம் உதிக்கும் ‘அ’ சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது.

வாயின் நடுவில் பிறக்கும் ’உ’ மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

குவிந்த உதடுகளின் வழியே வரும் ‘ம்’ தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.

ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அனில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம்.

1999 மே மாதம் 29ம் தேதி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று அவரது தாயாருக்கு பேசும் சக்தி போய்விட்டது.

மூளையில் இரத்தம் கட்டி விட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.

அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.

இப்போதோ அவருக்கு 90 சதவிகிதம் பழைய ஆற்றல் வந்து விட்டது.

அவருக்கு ஸ்பீச் தெராபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர்டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே எனத் தெரிவித்தனர்.

இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.

மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிடல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

ஓம் பற்றிய முந்தைய ஆராய்ச்சிகள்...

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லார்ட் ராலே  மனித உடல் அமைப்பில் இசையின் தாக்கம் பற்றி ஆராய்ந்தார்.

ஆனால் இப்போது தான் மனித உடல் மீது மந்திரத்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது ஆராயப்படுகிறது.

1993ல் டெல்லஸ் எட் அல் 14 ஆண்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஓம் மந்திரத்தை உச்சரிக்க வைத்து அதன் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இதே ஆய்வுகளை 1996 வரை வெவ்வேறு குழுக்களை வைத்து மேற்கொண்டு ஆய்வின் முடிவில் குறிப்பிடத்தக்க அளவில் சுவாசம் மெதுவாக ஆவதோடு இதயத் துடிப்பு மிக மெதுவாக இருப்பதையும் கண்டறிந்தார்.

தகாஷி எடல் என்பவர் 1999ல் மேற்கொண்டஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்தார்.

இதை அடுத்து 2003ல் ஹெய்ஸ்னம் ஜினா தேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இரு பகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு ஓ என்று  ஆரம்பித்து ம் என்று முடிக்கும் போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.

இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது..

குர்ஜரின் ஆராய்ச்சி...

இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாகக் கொண்ட அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறு வருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.

அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் உடல் நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாகக் குறிக்கப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவில்..

1) ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.

2) எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.

3) ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம், உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸம் மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸம் அனாகதத்தில் (இதயம்) 341.3 ஹெர்ட்ஸம் விசுத்தாவில் (தொண்டை) 384 ஹெர்ட்ஸம் ஆஞ்ஜாவில் (மூன்றாம் கண்) 426.7 ஹெர்ட்ஸம் சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.

ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.

நமது உடலின் தன்மை, சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.

இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறு குடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.

அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டு பிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.

அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.

இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய  இன்னொருவர் அஜய் பி.தாக்கரே ஆவார்.

இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.

மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன...