22/10/2018

கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள கொடிய தண்டனைகள்...


அந்நியன் என்ற திரைப்படம் வருவதற்கு முன்பு வரை நம்மில் பெரும்பாலானோருக்கு கருட புராணம் என்று ஒன்றிருப்பதே தெரியாது. கருட புராணம் என்பது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும், கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது.


தாமிஸிர நரகம்...

குற்றம்: பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புதல் அல்லது அபகரிக்க நினைத்தால், பிறரது பொருளை அபகரித்தல். காதலர்களை பிரித்தல்.

தண்டனை: முள்ளாலான கட்டைகளாலும், கதைகளாலும் (பீமனின் கதைப் போன்று) அடிப்பார்கள்.


அநித்தாமிஸ்ர நரகம்...

குற்றம்: கணவனும், மனைவியும் சேர்ந்து வாழாமல், ஒருவரை இருவர் ஏமாற்றுதல். கணவன், மனைவியை வஞ்சிப்பது, மனைவி, கணவனை வஞ்சிப்பது. மனதில் ஒருவரை நினைத்துவிட்டு வேறொருவருடன் வாழ்தல்.

தண்டனை: கண்கள் செயல் இழந்து, இருள் சூழ்ந்த இடத்தில தவிக்கவிடப்படுவர்கள்.


ரௌரவ நரகம்...

குற்றம்: பிறருடைய குடும்பத்திற்கு கேடு விளைத்தல், அளிப்பது, அவர்களது பொருள்களை பறித்தல்.

தண்டனை: சூலாயுதம் கொண்டு குத்தி துன்புறுத்துதல்.


மகா ரௌரவ நரகம்...

குற்றம்: மிகவும் கொடூரமாக பிறரது குடும்பங்களை வதைத்தல், பிரிப்பது, கேடு வேலைகளில் ஈடுபடுவது.

தண்டனை: “குரு” என்ற கோரமான எம மிருகங்கள் பாவிகளை சூழ்ந்து, முட்டி மோதி பல வகைகளில் ரணகளப்படுத்தி துன்புறுத்துவது.


கும்பிபாகம்...

குற்றம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும், கொன்றும் பல விதங்களில் கொடுமை செய்தல்.

தண்டனை: எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கொப்பறையில் போடு வதைப்பது.


காலகுத்திரம்...

குற்றம்: பெரியோர்களை, பெற்றோர்களை, அடித்து அவமதித்தல், பட்டினி போடுதல்.

தண்டனை: அதே முறையில், அடி, உதை, பட்டினி என்று வதைக்கபப்டுவார்கள்.


அசிபத்திரம்...

குற்றம்: தர்ம நெறிகளை மீறுதல், அதர்ம வழியில் சென்று பாவங்கள் செய்தல்.

தண்டனை: பூதங்களால் துன்புறுத்தப்பட்டு, இனம் புரியாத ஓர் பயத்துடன் அவதிப்பட வைப்பது.


பன்றி முகம்...

குற்றம்: குற்றமற்றவர்களை தண்டித்தல், நீதிக்கு புறம்பாக அநீதிக்குத் துணை போதல்.

தண்டனை: பன்றி முகத்துடன், கூர்மையான பற்கள் உள்ள ஓர் மிருகத்தின் வாயல் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் தண்டனைப் பெறுவார்கள்.


அந்தகூபம்...

குற்றம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல்.

தண்டனை: கொடிய மிருகங்கள் கடித்து குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.


அக்னிகுண்டம்...

குற்றம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும், செல்வாக்காலும் அபகரித்து வாழ்தல், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்தல்.

தண்டனை: பாவிகள், ஓர் நீண்ட தடியில் மிருகத்தைப் போல கைகால்கள் கட்டபப்ட்ட நிலையில் எரியும் அக்னிகுன்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.


வஜ்ரகண்டகம்...

குற்றம்: சேரக்கூடாத ஆணையோ, பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடைதல்.

தண்டனை: நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளை கட்டித்தழுவ பாவிகள் நிர்பந்திக்கப்படுவார்கள்.


கிருமிபோஜனம்...

குற்றம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப் பிழைத்தல்.

தண்டனை: பிறவற்றை துளைத்து செல்லும் இயல்பினை கொண்ட கிருமிகள் மூலமாக பாவிகள், கடித்து துளையிட்டு துன்புறுத்தப்படுவார்கள்.


சான்மலி...

குற்றம்: நன்மை, தீமை, பாவம் ஆகியவற்றைப் பாராமல், உறவு முறையைக் கூடப் பாராமல் யாருடனாவது, எப்படியாவது கூடி மகிழ்தல்.

தண்டனை: முள்ளால் ஆன தடிகளாலும், முட்செடிகளாலும் எம அரக்கர்கள் துன்புறுத்துவார்கள்.


வைதரணி...

குற்றம்: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்திற்குப் புறம்பாக நடத்தல்.

தண்டனை: வைதரணி என்ற இரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் இருக்குமொரு நதியில் பாவிகளை விழவைத்து துன்புறுத்துவர்.


பூபோதம்...

குற்றம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடுதல், ஒழுக்கக்குறைவாக நடத்தல், எந்த இலட்சியமும் இன்றி வாழ்தல்.

தண்டனை: விஷமுடைய போசிகள், பிராணிகள் கொண்டு கடிக்க வைத்தல்


பிராணி ரோதம்...

குற்றம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்துதல்.

தண்டனை: கூர்மையான பாணங்களை (அம்புகள்) பாவிகள் மீது எய்து துன்புறுத்துவது.


விசஸனம்...

குற்றம்: பசுக்களைக் கொடுமை செய்தல்.

தண்டனை: எம அரக்கர்களால், சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துதல்.


லாலா பக்ஷம்...

குற்றம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி, முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுத்தல்.

தண்டனை: பாவிகளும் அதே முறையில் வதைக்கப்படுவர்கள்.


சாரமேயாதனம்...

குற்றம்: வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல், உயிர்களை வதைத்தல், விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுக் குவித்தல்.

தண்டனை: விசித்திரமானக் கொடிய மிருகங்களால் பாவிகள் வதைக்கப்படுவார்கள்.


அவிசீ...

குற்றம்: பொய்சாட்சி சொல்லுதல்.

தண்டனை: நீர்நிலைகளில், பாவிகளை தூக்கி வீசப்பட்டு, நீரில் முக்கிக் கொள்ளுதல்...

உதவி கேட்டு சென்ற பெண்ணை கர்பமாக்கிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.. வைரலாகும் ஆடியோ...

             மைக்டைசைன் vs மாமியார்...


மீன்வளத்துறை அமைச்சர் மைக்டைசைன் குமார் மாமியாருடன் MP-யின் தம்பி பாப்பா குறித்து உரையாடிய ஆடியோ....


ஏன்யா ஜெயகுமார் உன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணை கற்பழித்து கர்ப்பம் ஆக்குவியா.?

கெளுத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?


ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

புரதச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவையெனில் கெளுத்தி மீனை சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

குறிப்பாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கெளுத்தி மீனை சாப்பிடலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்..

100 கிராம் கெளுத்தி மீனில், Saturated fat 3.3 கிராம், Polyunsaturated fat 3.3 கிராம், Monounsaturated fat 6 கிராம் அடங்கியுள்ளன, மேலும், சோடியம் - 71 மிகி, பொட்டாசியம் - 340 மிகி, கார்போஹைட்ரேட்- 8 கி, விட்டமின் A, C, கால்சியம் 4 சதவீதம், விட்டமின் D - 10 சதவீதம், விட்டமின் B12 - 6 சதவீதம் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்..

6.1 கிராம் கெளுத்தி மீனில் 122 கலோரி அளவே உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இதனை சாப்பிடலாம்.

பெண்கள் ஒரு நாளைக்கு 300 முதல் 500 வரை கலோரி உணவுகள் எடுத்துக்கொள்ளலாம், அதுபோன்று ஆண்கள் ஒரு நாளைக்கு 400 முதல் 600 கலோரி எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எனவே, கலோரி குறைவாக உளள கெளுத்தி மீனை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதில், ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா 6 பேட்டி ஆசிட் உள்ளது, இந்த இரு சத்துக்களும் இதயம் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடுகளிலிருந்து காக்கிறது என அமெரிக்க இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் உள்ள புரதச்சத்து, தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல் திறனை மேம்படுத்துகிறது.

அது மட்டுமன்றி புரத்தச்சது, கார்போஹைட்ரேட் போன்றவவை உடலுக்கு நல்ல ஆற்றலை தருகின்றன.

நீங்கள் டயட்டில் இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக விட்டமி B12 தேவை, அப்படி விட்டமின் B12 நிறைந்த உணவுகள் இல்லாமல் நீங்கள் டயட்டில் இருந்தால், உங்கள் நரம்பு செயல்பாடு பாதிக்கப்படுகிறது, எனவே விட்டமின் B12 நிறைந்த கெளுத்தி மீனை சாப்பிடுங்கள்.

அனைத்து மீன்களிலும் Mercury நிறைந்துள்ளது, அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் Mercury எடுத்துக் கொண்டால் உங்கள் கருவை பாதிக்க வாய்ப்பிருக்கிறது, இந்த கெளுத்தி மீனில் குறைவான அளவிலேயே Mercury உள்ளது, எனவே இதனை சாப்பிடலாம்...

வங்கிகளும் உண்மைகளும்...


கிணற்றை காணோம் என்ற பாணியில்.. ஒரு ஆற்றையே அழித்த கொடூரம்...


நாகை யில் சின்தாறு என்ற பெயரில் ஒரு ஆறு இருந்தது.

இது காவேரி ஆறு அளவிற்கு பெரியதாக இருந்தது.

பல ஊர்களை இணைத்து அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரம் கொடுத்து ஓடிய இந்த ஆறு எப்படி அழிந்து போகும்?

ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பகுதியில் ஓடிய ஆறு தற்போது அந்த தடமே இல்லாமல்  உள்ளது..

அப்படியென்றால் வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டமிடல் என்றோ ஆரம்பித்தாகி விட்டது...

கன்னட ஈ.வே. ராமசாமி கலாட்டா...


நாவல் பழம் (நவ்வா பழம்)...


நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.

மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்...

தமிழக விஞ்ஞானி திரு. வாசுதேவன்...


குண்டலினி யின் ஏழு சக்கர நிலைகள்...


யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குண்டலினி வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.

உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றது தான்.

மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போது தான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.

மூலாதாரம் - இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. சரியாக சொல்ல வேண்டுமானால் முதுகுத்தண்டின் பின் புறமாக அமைந்துள்ளது ஆசனவாய்க்கு இரண்டு இஞ்சு மேலே என்று சொல்லலாம், இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

சுவாதிஷ்டானம் - இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

மணிப்பூரகம் - இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

அனாகதம் - இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது.

விசுக்தி - இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும்.

ஆக்ஞை (அல்லது ஆக்கினை) - இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.

சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்) - இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது.

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப் பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். வெகு சிலர் தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவதுதான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும்போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள்தான் யோகாவும் தியானமும்.

பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டு வரும்போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடைவதே மனித வாழ்வின் இலட்சியம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு.

ஆமாம், இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என்கிறீர்களா?

நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, நான் ஏன் பிறந்தேன் என்று உங்களைக் கேட்டுக் கொண்டதுண்டா? கேட்டிருந்தால் பதில் கிடைத்ததா? கிடைத்த பதில் உண்மையில் முழுமையானதா? அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும்.

ஆனால் பெரும்பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத்தான் இருக்கும். அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை. பெரும்பான்மை மக்கள் பிறந்து விட்டேன்; அதனால் வாழ்கிறேன் என்றுதான் வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வாழ்வை பரிபூரணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை.

பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால்தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை. இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால் தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரணமாக்க முடியும்.

இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண்டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்புக்கு பின்) புரியவில்லை. அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும்.

பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம். இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது.

நீங்கள் வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித் தள்ளத்தான் முடியும். இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரிபூரணமாக்கும் அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண மனிதனுக்கும் இது சாத்தியமே. தேவை முயற்சி மட்டுமே. அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும். சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே. அத்தகையதொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த்திச் செல்லும். இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, “யோகம்”. இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பலவாறாகச் சொல்கிறார்கள்.

சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகிவிட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன். நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.

உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம்.

உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம்.

உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம்.

உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.

இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூகத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம்.

இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும். அதற்குதான், “குரு” என்பவர் தேவை.

ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால்தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்...

இலங்கையில் இந்திய உளவாளி...


மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய 21 பாடங்கள்...


சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்...

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

இது நாங்க சொல்லலைங்க..
சாணக்கியர் சொல்லியிருக்கார்...

கருத்தடை உண்மைகள் - 6...


VASECTOMY...

இது ஆண்களுக்கான கருத்தடை தீர்வு.

இந்த அறுவைசிகிச்சை முறையில் விந்துப்பைக்கும் ( Vas Deferens ) சிறுநீர் வெளியேற்றும் குழாய்க்கும் ( Urethra  ) உள்ள தொடர்பு நாளங்கள் துண்டிக்கப்பட்டு கட்டப்படுகிறது.இதன் மூலம் விந்தணுக்கள் வெளியேறாது , கருவுறுதலும் நிகழாது....

இந்த Operation செய்து கொண்ட பின்னும் உறவில் ஈடுபட முடியும்....

அப்போது உருவாகும் விந்துக்கள் ( Sperm ) விந்தணுக்களாக ( Semem  ) உடலை விட்டு வெளியேறாது ,அதற்கு பதிலாக உடலிலேயே உட்கிரகிக்கப்படுகிறது.....

Side Effects...

1 . சிறிதளவு வலி ( Mild Pain )
2 . Infection Of The Surgery Site
3 . In Case Swelling ( வீக்கம் )

ஆண்களுக்கு பின்விளைவுகள் குறைவு..

கருத்தடை என்ற பெயரில் மிகப்பெரிய வணிகம் நிகழ்கிறது.

எந்த முறையிலும் 100% கருத்தடை என்பது சாத்தியமில்லை....

ஆனாலும் இரண்டு குழந்தைகள் பெற்று முடித்தவுடன் அரசு மருத்துவனையில் கருத்தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது , சலுகை பணத்தோடு.....


கருத்தடை என்பது ஆபரேஷனோடு முடிந்துவிடுவதில்லை. அதற்கு பின் தான் ஆரம்பமே...
     
புண் ஆறுவதற்கு மாத்திரைகள் , வலிநிவாரணிகள் , பின் விளைவுகளுக்கான மாத்திரைகள் என Operation க்கு பின்னும் மருந்துகளோடு வாழ்க்கை நகழ்கிறது...

அறுவை சிகிச்சை தான் தீர்வு என்றால் ஆண்கள் செய்து கொள்ளலாம்.
ஏனெனில் உங்கள் சந்ததிக்காக, தன் பிறப்புறுப்பையோ அல்லது தன் வயிற்றையோ கிழித்து உங்கள் குழந்தையை பிரசவிக்கும் பெண்ணுக்கு இந்த ஒரு வலியிலிருந்தாவது விடுதலை பெற்று தர முயலலாம்....

இயற்கை கருத்தடை முறைகள்...
                 
துளசி : ஆண்கள் தினமும் சிறிதளவு துளசி சாப்பிடுவதன் மூலம் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் , இயக்கமும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்...

துளசி சிறந்த கருத்தடை சாதனமாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது...

பப்பாளி : பெண்கள் உடலுறவு கொண்ட நாளில் இருந்து தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் பப்பாளி சாப்பிடுவதன் மூலம் கருவுருவாகாது..

இன்னும் சில வீட்டுப்பொருள்களின் மூலம் கருவுறுதலை தடுக்கலாம்..

இவற்றிலும் நம்பிக்கை இல்லை எனில்
CALENDER METHOD , அதாவது மாதவிடாய் முடிந்த முதல் பத்து நாட்களிலும் இறுதி எட்டு நாட்களிலும் உறவு வைத்து கொள்ளலாம் எந்த வித பாதுகாப்பு சாதனமும் இன்றியும் கூட.

ஏனெனில் பெண்களின் அண்டம் முதல் பத்து நாட்களில் முதிர்ச்சி அடைத்திருக்காது , இறுதி எட்டு நாட்களில் கருவுற தயாராய் இருக்காது....

வணிகத்தை விட்டொழித்து இயற்கை முறையை பின்பற்றுங்கள்..

உங்கள் மனைவியின் வலியில் பங்கெடுங்கள்...

பதிவுகள் தொடரும்...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


மன அழுத்தத்தை குறைக்கும் எளிய வழிகள்...


தற்போதைய அவசர யுகத்தில் ஒய்வு என்பதே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்..

இதனால் மன அழுத்ததால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.

வேலை என்பது மட்டுமல்லாது உணவு பழக்கவழக்க முறை, சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இத்தகைய மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும்.

எனவே மன அழுத்தத்தை எளிய முறையில் குறைக்கும் வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

தியானம்..

மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி தியானம்தான். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து எளிதாக விடுபடலாம்.

தூக்கம்..

மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே போதிய தூக்கமின்மை தான். தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது.

எனவே தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும்.

நடைபயிற்சி..

நடைபயிற்சி மேற்கொள்ளுவது என்பது ஒரு எளிய உடற் பயிற்சியாகும். நடைபயிற்சி மேற்கொள்வது நம்மை உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ளும்.

அதுமட்டுமல்லாது நடைபயிற்சியின் மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் மனதுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு பழக்கம்..

உணவுகளை நேரம் தவறி எடுத்து கொள்வது தான் பெரும்பாலான உபாதைகளுக்கு காரணம். எனவே சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.

அதுபோல் சத்தான உணவுகளாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். நாவல்பழம், சால்மன் மீன் மற்றும் பாதாம் போன்றவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

கால நிர்ணயம்..

எந்த வேலையையும் செய்வதற்கு முன்னால் கால நிர்ணயம் செய்துகொள்ளுங்கள்.

அதற்கு அந்த வேலையை முடித்தாக வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இது தேவையில்லாத மன அழுத்தத்தை தவிர்க்கும்.

அளவோடு வேலை செய்யுங்கள்..

முடியாது என சொல்ல பழகுங்கள். அளவுக்கு அதிகமான வேலையை இழுத்து போட்டு செய்வது என்பது எந்த வேலையையும் உருப்படியாக செய்யமுடியாமல் செய்து விடும்...

உடல் எடை குறைய சித்தர்களின் வைத்தியம்...


உயிர் தோழியின் தந்தையை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்.. வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா...


அமெரிக்காவை சேர்ந்தவர்கள் டெய்லர் (27) மற்றும் அமண்டா (30). இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரியும் போது நெருங்கிய தோழிகள் ஆனார்கள்.

அமண்டா மூலம் டெய்லருக்கு அவரது தந்தை கெர்ன் லெய்மன் (54) அறிமுகமானார். ஆரம்பத்தில் லெய்மனுடன்  நட்பாக பழகிய டெய்லர் பின்னர் அவரை காதலிக்க தொடங்கினார்.

தன்னை விட 27 வயது தந்தை வயதுடைய நபரை காதலித்ததால் டெய்லரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தோழி அமண்டாவும் இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அமண்டா, டெய்லர் மற்றும் லெய்மன் ஆகிய மூன்று பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி லெய்மனும், டெய்லரும் திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து டெய்லர் கூறும்போது, நான் முதல் முறை லெய்மனை பார்த்தபோதே அவர் அழகாக இருப்பதாக நினைத்தேன். எங்கள் வயது வித்தியாசம் குறித்து கவலை இல்லை. எங்களை பார்ப்பவர்கள் தந்தை - மகள் என நினைத்து விடுகின்றனர்.

இதனை பற்றி கவலை இல்லை. என் உயிர் தோழி எங்களை ஏற்று கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா கலாட்டா...


முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?


பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்...

இது எப்படி சாத்தியம் என முட்டு கொடுக்க வருபவர்களுக்கு...


நம்மை அடிமையாக்க நினைக்க அதிகார வர்க்கமும் , அரசியல்வியாதிகளும், வணிகர்களும் ஒற்றுமையாக தானே இன்றுவரை இருக்கின்றார்கள்..

முதலில் அதற்கு பதில் அளித்துவிட்டு, என் பதிவுக்கு முட்டு கொடுங்கள்...

850 விவசாயிகளின் கடனை நான் அடைக்கிறேன் - அமிதாப் பச்சன் அறிவிப்பு...


பாலிவுட் மெஹாஸ்டார் அமிதாப் பச்சன் இது தொடர்பாக கூறியிருப்பதாவது, ‘நாட்டுக்காக உயிர்நீத்த 44 வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது மிகவும் திருப்திகரமான அனுபவமாக உள்ளது. மேலும், மகாராஸ்டிராவைச் சேர்ந்த 112 ஏழ்மையான குடும்பங்களுக்கும் நாங்கள் உதவி செய்யவுள்ளோம். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இதுபோன்ற ஏழ்மையானவர்களை கண்டறிய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வலைதளபதிவில், கடன் பிரச்னையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க நாங்கள் அவர்களின் கடன்களை செலுத்த உள்ளோம். இதற்காக உத்தரப்பிரதேசத்தில் உள்ள 850 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் சார்பாக சுமார் 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தைச் செலுத்தவுள்ளோம். இது தொடர்பாக வங்கியுடன் பேசியுள்ளோம். முன்னதாக மகாராஸ்டிராவைச் சேர்ந்த 350 விவசாயிகளின் கடன்களும் செலுத்தப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளார். இவரின் செயல் சமூக வலைதளங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது...

சபரிமலை கோவில் பாரம்பரியம் கடைபிடிக்க வேண்டும். நீதி மன்றம் தலையிட கூடாது. - பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி...


மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாமக வின் முதலமைச்சர் வேட்பாளரை நான் ஏன் ஆதரிக்கிறேன்...



1) பெயர் : மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
2) வயது : 50
3) பிறந்த தேதி : 09.10.1968
4) கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ்., சென்னை மருத்துவக் கல்லூரி

12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மாணவனாகத் தேர்ச்சி.

2003 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics - LSE) மேம்பட்ட பொருளாதாரம் (Introductory macroeconomics) படித்தார்.

படிக்கும் காலத்தில் கால்பந்து (Foot Ball), தடகளம் (Athletics) உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் பதக்கம். இறகுப் பந்தாட்டம் (Badminton), டென்னிஸ் (Tennis), ஹாக்கி (Hockey), கைப்பந்து (Volley Ball), கூடைப்பந்து (Basket Ball), கிரிக்கெட் (Cricket) ஆகிய விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ளார். மேலும் நாட்டு நலப்பணித்திட்டம்(N.S.S) மற்றும் தேசிய மாணவர் படை(N.C.C) ஆகியவற்றின் தலைமை பொறுப்பிலிருந்துள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பொழுது விளையாட்டுச் செயலாளாராகப் பணியாற்றியுள்ளார்.

5) குடும்ப உறுப்பினர்கள்..

துணைவியார் : திருமதி. செளமியா அன்புமணி
மகள்கள் : திருமதி. சம்யுக்தா பிரிதிவன்
  செல்வி. சங்கமித்ரா செளமியா அன்புமணி
  செல்வி. சஞ்சுத்ரா செளமியா அன்புமணி

6) பணிகளும் பிற சேவைகளும்..

நல்லாளம் கூட்டுச் சாலை சந்திப்பு கிராமத்தில் மக்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறப்பான மருத்துவ சேவை.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக 7 ஆண்டுகள் பணியாற்றினார்.

25 லட்சம் மரக்கன்றுகளை நட்டது, 1000 ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாரியது, 50 தடுப்பணைகளைக் கட்டியது ஆகியவை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் என்ற முறையில் ஆற்றிய பணிகளில் சிலவாகும்.

சுற்றுச் சூழல் பாதிப்புக்கு எதிராகவும், மது மற்றும் புகையின் தீமைகளுக்கு எதிராகவும் எண்ணற்ற போராட்டங்கள்.

பசுமைத் தாயகம் அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ சிறப்பு ஆலோசனைத் தகுதிக்கான (Special consultative status with United Nations ECOSOC) அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.

பசுமைத் தாயகம் அமைப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் (United Nations Human Rights Council - UNHRC) உறுப்பினராக நியமிக்க வைத்தார்.

தமிழ்நாடு இறகுப் பந்தாட்ட சங்கத்தின் தலைவராக (President, Tamilnadu Badminton Association) பதவி வகித்து வருகிறார்.

7) பங்கேற்ற சர்வதேச நிகழ்ச்சிகள்..

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். 2000-ஆவது ஆண்டில் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெற்ற சுற்றுச் சூழல் மாநாட்டில் பங்கேற்பு.

2002 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற புவி உச்சி (Global Earth Summit 2002) மாநாட்டில் கலந்து கொண்டார்.

2003 ஆம் ஆண்டில் ஜப்பானின் கியோட்டா நகரில் நடைபெற்ற உலக நீர் மாநாட்டில் (World Water Conference) பங்கேற்றார்.

2012 ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற புவி உச்சி (Global Earth Summit 2012) மாநாட்டில் பங்கேற்பு.

2013 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் (UNHRC) பங்கேற்று இலங்கை அரசு மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

8) நடுவண் அமைச்சராகப் பணியாற்றியபோது படைத்த சாதனைகள்...

2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதப் வரை நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

நடுவண் அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாநாடுகளுக்குத் தலைமையேற்றும், பங்கேற்றும் உள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக 108 தேசிய அவசர ஊர்தித் திட்டத்தைத் (108 National Anbulance Service) தொடங்கினார்.

தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைத் (National Rural Health Mission) தொடங்கி அனைத்து கிராமப்புற சுகாதாரத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் பக்கவாத நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் (National Program for Control of Diabetes, Cardiovascular disease and Stroke) கொண்டு வந்தார்.

மருத்துவ நலவழி ஆராய்ச்சித் துறையை (Department of Health Research - DHR) ஏற்படுத்தினார்.

அயோடின் சத்து சேர்க்கப்பட்ட உப்பின் (Iodised Salt) பயன்பாட்டைக் கட்டாயமாக்கினார்.

பாரம்பரிய அறிவுசார் எண்ணியல் நூலகத்தை (Traditional Knowledge Digital Library) உருவாக்கினார்.

தேசியத் தொற்று நோய் கண்காணிப்பு நிறுவனத்தை (National Institute of Communicable Diseases) அமைத்தார்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை (Food Safety and Standards Authority of India) ஏற்படுத்தினார்.

தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை (National Institute of Siddha) அமைத்தார்.

சென்னையில் தேசிய முதியோர் நல மையத்தை (National Institute of Aging) அமைக்க நடவடிக்கை எடுத்தார்.

தானாக செயலிழக்கும் மருந்தேற்றுக்குழல் ஊசியை (Auto disposable syringe) அறிமுகப்படுத்தினார்.

இந்திய பொது சுகாதாரத்துறை அறக்கட்டளையை (Public Health Foundation of India) ஏற்படுத்தினார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தேசிய முக்கியத்துவம் பெற்ற சிறந்த தன்னாட்சி நிறுவனமாக (JIPMER Puducherry Act 2008) மாற்றினார். மேலும் அம்மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதன் வளர்ச்சிக்கு வழிவகை செய்தார். இதன் மூலம் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக ஜிப்மர் உருவெடுத்துள்ளது.

2006 ஆம் ஆண்டு மே மாதம் 22 முதல் 27 வரை ஒரு வாரத்திற்கு ஜெனீவாவில் 192 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்ற உலக சுகாதார அவையின் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார்.

9) புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்..

பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதித்து சட்டம் (Ban on smoking in Public places) கொண்டு வந்தார். இதன்மூலம் பொது இடங்களில் மக்கள் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் புகையின் பாதிப்பின்றி நடமாட முடிந்தது.

சிகரெட், குட்கா, பீடி உள்ளிட்ட அனைத்து புகையிலைப் பொருட்களின் உறைகளின் மீதும் அவற்றின் தீமைகளை விளக்கும் எச்சரிக்கைப் படங்களை (Pictorial warning) வெளியிடும் திட்டத்தைச் செயல்படுத்தினார்.

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் மற்றும் மது அருந்தும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகங்கள் வெளியிடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை விதித்தார்.

உணவுப் பொருட்களில் புகையிலை இருக்கக்கூடாது என்ற விதியை கொண்டு வந்தார். அதன்பயனாகவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் குட்கா மற்றும் பான்மசாலாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

தேசிய ஆல்கஹால் கொள்கையைக் (National Alcohol Policy) கொண்டு வந்தார்.

10) வென்ற விருதுகள்..

சர்வதேச விருதுகள்..

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது (Luther L. Terry Award).

உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Tobacco Control).

உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Leadership).

உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் விருது (Rotary International Polio Eradication Champion award) இந்தச் சிறப்பு விருதினை இதற்கு முன் பெற்ற முக்கிய பிரமுகர்கள் பில் கேட்ஸ், பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் கோஃபி அன்னன் போன்ற தலைவர்களாவர்.

தேசிய விருதுகள்...

சென்னை ரோட்டரி சங்கத்தின் கெளரவம் தரும் (For the sake of Honour) விருது.

இந்தியாவில் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்

11) தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள்...

தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (National Rural Health Mission - NRHM) கீழ் ரூ.15,000 கோடி மதிப்புள்ளத் திட்டங்கள்.

சென்னையில் ரூ. 100 கோடியில் மாதர்நலன், மகப்பேறு, மற்றும் தாய் சேய் நல அதி உயர் சிறப்பு மையம் (Institute of Obstetrics and Gynecology & Govt. Hospital for Women and Children).

சேலத்தில் ரூ.139 கோடியில் எய்ம்ஸ்க்கு இணையான அதி உயர் சிறப்பு மருத்துவமனை (AIIMS).

மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்ஸ்க்கு இணையான புதிய அதி உயர் சிறப்பு மருத்துவமனை (AIIMS).

சென்னையில் ரூ.250 கோடியில் இரத்த அணுக்கூறு பிரிப்பு மையம் (Plasma Fractionation Centre).

சென்னையில் ரூ.50 கோடியில் மாநகர ரத்த வங்கி (Metro Blood Bank).

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையை மண்டல புற்றுநோய் மையமாக (Regional Cancer centre) அறிவித்தது.

காஞ்சிபுரத்தில் ரூ.45 கோடியில் மண்டல புற்றுநோய் மையம் (Regional Cancer centre).

செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா (Integrated Vaccine Complex).

ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வகம் (Stem cell research centre).

தமிழக நெடுஞ்சாலைகளில் மதுரை, தாம்பரம், வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 இடங்களில் விபத்துக்காய சிகிச்சை மையங்களை (Trauma center) அமைத்தார்.

12) 2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

13) 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திராவிடக்கட்சிகள் கட்டவிழ்த்துவிட்ட பண பலத்தை மீறி, தருமபுரி தொகுதியில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

14) பொழுதுபோக்குகள்...

1. இறகுப் பந்தாட்டம் (Badminton).

2. ஸ்கூபா மூழ்கல் (SCUBA Diving).

3. நீருக்குள் நீந்துதல் (Snorkeling).

4. நன்னீர் மற்றும் ஆழ்கடல் மீன் பிடித்தல் (In-land & Deep-sea fishing).

5. மலையேற்றம் (Mount Climbing).

6. மலை பகுதிகளில் நீண்ட தூரப்பயணம் (Trekking).

7. அரை மராத்தான் (Half Marathon).

நீங்கள் ஏன் பாமக வை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்காக எனக்கு தெரிந்த தகவல் வரை பதிவிட்டுள்ளேன்...

இப்படிப்பட்ட திறமையான ஒரு முதலமைச்சர் வேட்பாளரை ஆதரிப்பது என் கடமை மட்டுமல்ல... ஒட்டு மொத்த தமிழகத்தின் கடமையாகும்...

இல்லையேல் தமிழகத்தை மொத்தமாக விற்று மொத்தமாக அழித்துவிடுவார்கள் இந்த ஊழல் திராவிடவாதிகள்...

ஆகையால் விழித்துக்கொள் தமிழினமே...

திமுக வின் சன் குழுமமும் விபச்சாரமும்...


தமிழகத்தில் இளைஞர்களை உளவியல் ரீதியாக காமத்தில் அடிமைப்படுத்தி தன் வருமானத்தை பெருக்க செய்யும் திமுக வின் நவீன விபச்சாரம்...

தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்...


எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்...

என்ற தலைப்பில், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் குவிந்து வருவதைப் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்கட்டுரையில் தோழர் பெ. மணியரசன் அளித்துள்ள செவ்வியும் வெளியாகியுள்ளது.

அக்கட்டுரையின் முக்கிய கருத்துகள் கீழே,

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே "வெளிமாநிலத்தார் குடியேற்றத்தில்" தமிழகம் முதலிடம்..

2011 இல் மக்கட்தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்'  44 லட்சம்..

தற்போது 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்' எண்ணிக்கை ஒரு கோடி தாண்டும்.

கர்நாடகா, குஜராத், மேற்குவங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் குடியேற்றம் தொடர்பாக கடுமையான சட்டம் வைத்துள்ளன.

நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகியவற்றில் வெளியார் குடியேற 'இன்னர்லைன் பெர்மிட்' எனும் மத்திய நடுவணரசு அனுமதி கட்டாயம்.

தமிழகத்தில் எந்த குடியேற்றக் கட்டுப்பாடும் இல்லை.

வடவர் குற்றச்செயல்கள் பெருகி வருகின்றன.

சென்னை பொருளாதாரம் பல ஆண்டுகளாக ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி பணக்காரர்கள் கைகளில்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை வேலைவாய்ப்பு 70% வந்தேறி வடவர்களால் ஆக்கிரமிப்பு.

சென்னை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர வேலைவாய்ப்பு 50% வடயிந்தியர் ஆக்கிரமிப்பு.

படம்: குமுதம் ரிப்போர்ட்டர் (23.10.2018)
தலைப்பு: எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள் - சிக்கலில் தமிழகத் தொழிலாளர்கள்.

இதே போல நக்கீரன் வெளியிட்ட கட்டுரையைப் படிக்க,

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள் என்று தேடுக...

மராட்டிய ரஜினி கலாட்டா...


மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளித்த சோழர்...


காண்பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சோழர் அரசாணை.

இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இட ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு வழங்குகிறது.

ஆனால் 800 ஆண்டுகளுக்கு முன்பே சோழ அரசாங்கத்தால் இது நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூரில் உள்ள "அபிராமேசுவரர் கோவில்" கல்வெட்டில் இருந்து இந்த தகவலை தெரிந்து கொள்ள முடிகிறது.

இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோவிலில் திருப்பதிகங்கள் பாடுவதற்கு 16 பார்வையற்றவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு உதவியாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் "கண் காட்டுவார்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இந்த பதினெட்டு பேருக்கும் (அக்கால வழக்கப்படி) ஊதியமாக நெல் வழங்கப்பட்டு உள்ளது...

அதிமுக இபிஎஸ் - ஓபிஎஸ் 40,000 கோடி ஊழல்...


தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு...


தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..! கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.

மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்..

கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.

அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்.

தூர்வாரும் வேலை குறைந்து விடும்.. சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது.

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள் - 16) என்கிறார் வள்ளுவர்.

அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர்.

மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது.

இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்''.
(வரி.26 - 28)

இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்" என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே''.
(புறம் - 18,28 - 30)

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார்.

இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

"அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ''.
(புறம்.118)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது.

ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும்.

இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார்.

அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார்''.
(83)

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை,

"யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்"

என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது.

இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.

பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது.

கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,
"
பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே''.
(25)

என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள்.

சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு" என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை" என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்''.
(1384 - 87)

என்கிறார். "சுருங்கை" என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும்.

அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு" என்பதாகும்.

பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு" அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை" எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது" (வரி:725 - 726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது.

அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது.

பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது...

பெருமைகொள் தமிழினமே.... வரலாற்றில் இன்று ராஜராஜ சோழன் இம்மண்ணில் பிறந்த நாள்...