20/07/2017

சிந்து வெளிநாகரீகம் தமிழர் உடையதா? சிறு கூட்டத்தாருடையதா - 3...


நகரத்தாருக்கும் சிந்துவெளி மக்களுக்கும் தொடர்பு...

நகரத்தாருக்கும், சிந்துவெளி மக்களுக்கும் தொடர்பிருக்கலாம், என, தமிழக அரசு தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனர், மா.சந்திரமூர்த்தி கூறினார்.

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், 'நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபும், பண்பாடும்' என்ற தலைப்பில், திங்கள் பொழிவு, சென்னையில் நடந்தது. இதில், தமிழக அரசு தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனர், மா.சந்திரமூர்த்தி பேசியதாவது: நகரத்தார், காஞ்சிபுரத்தில் இருந்து, சோழ நாட்டுக்கு வந்து இருக்கலாம். அவர்கள், பூம்புகாரிலிருந்து, பாண்டிய நாட்டிற்கு சென்றது குறித்து, பல கருத்துக்கள் உள்ளன. பூவந்தி சோழன், நகரத்தார் பெண்களை விரும்பியதால், கி.பி., மூன்றாம் நுாற்றாண்டிலும்; 10ம் நுாற்றாண்டில் ஏற்பட்ட சுனாமியின் போதும், பிரிவு பிரிவாக சென்றிருக்க வாய்ப்புள்ளது. நகரத்தார், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகம் செய்து செழிப்புற்றதால், அரசர்களுக்கே கடன் வழங்கியும், முடிசூட்டியும் வைத்துள்ளனர். சோழநாட்டில் இருந்து, 8,000 பேர், புதுக்கோட்டை மலைக்கு சென்றனர். அது, நகரத்தார் மலை என்றும், நார்த்தாமலை என்றும் அழைக்கப்படுகிறது. பாண்டியர்கள், வறண்ட நிலத்தை, நகரத்தாருக்கு வழங்கினர்.

ஆனால், அவர்கள் மத்தியில் நிலவிய சுனாமி பயத்தால், 10 அடி உயரத்துக்கு மேல் வீடுகளை அமைத்தனர். நீரை சேமிக்கும் வகையில், படிப்படியான ஆழத்தில் குளங்களையும், வீட்டுக்குள் மழைநீர் சேமிப்பு இடங்களையும் அமைத்தனர்.பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்கு பின், சிற்பிகள் உள்ளிட்ட கலைஞர்கள் நகரத்தாரிடம் தஞ்சம் அடைந்தனர். அவர்களால், புதிய கட்டடகலை, சிற்பக்கலை பாணி உருவானது. அது, சிந்துவெளி கலைப்பாணியை ஒத்துள்ளது. அவர்களின் உடல் அமைப்பும், சிந்துவெளி மக்களை ஒத்துள்ளது.
அவர்கள் சிந்துவெளி மக்களின் வழித்தோன்றலாக இருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

(இத்தனை நாள் எப்படியெல்லாம் ஏமாற்றி விட்டீர்களடா?  இதையெல்லம் வெளி சொன்னவுடன் தானே என்னை எதிர்த்து கூச்சலிடுகிறீர்கள்).

இதுவரை தமிழர் வரலாறுனு சொன்ன அத்தனையும் இந்த சிறுகூட்டத்தின் வரலாறு தானே?

அப்படியெனில் நீங்கள் அவர்கள் கொடுக்கும் எச்சை காசுக்கு தானே வேலை பார்க்கிறீர்கள்?

செய்தி - விருத்திரன்

தமிழர் வரலாறா? சிறு கூட்டத்தின் வரலாறா - 2...


நாகர்கள்...

சமீபகாலமாக தமிழர்கள் நாகர்கள் என்ற ஒரு சொல்லாடல் பரவி வருகிறது அல்லது பரப்பப்படுகிறது... பல ஆண்டுகளுக்கு முன்பே இந்திய சட்டத்தை இயற்றியவர் நாகர்களை பற்றி கூறியிருந்தார் ஏனெனில் அவரை கூறவைத்தார்கள்... அவரை பெருமைபடுத்துவது போல் பேசி அவர்மூலம் பெளத்த மதத்தை பழங்குடிகள் மத்தியில் திணித்தார்கள்..

இப்போது விடயத்திற்கு வருவோம்..

நாகர்கள் எங்கே வாழ்ந்தார்கள் நாகநாட்டில்..

நாகநாட்டிற்கு மற்றொரு பெயர் மணிபல்லவம்..

அந்த நாகநாட்டிற்கும் புத்தருக்கும் மிகப்பெரிய தொடர்புண்டு...

நாகர்களை பற்றி தேடினால் முடிநாகர்கள் என்போர் கடல்அழிவிற்கு பின்பு மணிபல்லவத்தில் குடியேறியதாகவும் அவர்கள் தலையில் நாகவடிவ லட்சனையை வைத்து இருந்ததாகவும் வரலாற்றில் சொல்லப்படுகிறது...

(இது அப்படியே எகிப்து அரசர்களுக்கும் பொருந்தும் அதை வேறுபதிவில் விரிவாக பார்க்கலாம்)..

மேலும் சோழநாட்டு அரசன் நெடுமுடிகிள்ளி என்பவன் புகார் நகருக்கு அடிக்கடி வந்துபோன பீலிவளை என்ற நாகர்களின் தலைவியுடன் கூடி அவளுக்கு ஒரு பிள்ளையும் பிறக்கிறது. அந்த பிள்ளையை நாகநாடான மணிபல்லவத்திலிருந்து அவர்களின் வணிகக்கூட்ட கம்பளத்துசெட்டிகப்பலில் அனுப்பி வைக்கிறாள் பீலிவளை அதுவும் அங்கே இருந்த நாகர்கள் பெளத்ததை தழுவியிருந்தனர் என்பதற்கு ஆதாரமாக புத்தவிகாரத்தை மூன்றுமுறை சுற்றி பிள்ளை அனுப்பி வைக்கிறாள் பீலிவளை.

(இப்போது இருக்கும் கோவிலை மூன்றுமுறை சுற்றுவது எங்கே இருந்துவந்தது என நோக்கவும்).

பீலிவளையின் அப்பா பெயர் வளைவண்ணண் ( சங்கு நிறத்தவன்).

தமிழர்கள் சங்கு நிறந்தவர்களா ? நமது நிலத்தின் பூர்வகுடிக்கு தோல் வெள்ளையாக இருக்க முடியுமா ?

அந்த வந்த பிள்ளையார் தெரியுமா?

தொண்டைமான்இளந்திரையன்.

ஆதாரம் உங்கள் இலக்கியத்தில் இருந்தே.

(உப்பளந் தழீஇ வுயர்மன னெடுங்கோட்டுப்

பொங்குதிரை யுலாவும் புன்னையங் கானல்

கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா

இளவேனி லிறுப்ப விறும்பூது சான்ற

 பூநாறு சோலை யாருமி லொருசிறைச்

தானே தமிய ளொருத்தி  தோன்ற

இன்ன ளர்கொ லீங்கிவ ளென்று

மன்னவ னறியான் மயக்க மெய்தாக்

கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும்

உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும்

உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்

மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும்

பயிலி தழ்க் கமலமும் பருவத் தலர்ந்த

மலர்வா யம்பின் வாசங் கமழப்

பலர்புறங் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப

ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள்

பொருவலரு பூங்கொடி போயின வந்நாள்

யாங்கொளித் தனளவ் விளங்கொடி யென்றே

வேந்தரை யட்டோன் மெல்லியற் றேர்வுழி

நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்

சலத்திற் றிரியுமோர் சாரணன் றோன்ற

மன்னவ னவனை வணங்கி முன்னின்று

என்னுயி ரணையா வீங்கொளித் தாளுளள்

அன்னா ளொருத்தியைக் கண்டிரோ வடிகள்

 சொல்லுமி னென்று தொழவவ னுரைப்பான்

கண்டிலே னாயினுங் காரிகை தன்னைப்

பண்டறி வுடையேன் பார்த்திப கேளாய்

நாகநாடு நடுக்கின் றாள் பவன்

வாகை வேலோன் வளைவணன் றேவி

வாசமயிலை வயிற்றுட் டோன்றிய

பீலிவளை யென்போள் பிறந்த வந்நாள்

இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக்

கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன்

ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது

பூங்கொடி  வாராள் புலம்ப லிதுகேள்

மணிமேகலை– 24: 27-61)

இப்போது நகரத்தார்கள் என்ற சிறுகூட்டத்தின் வரலாற்றை கேட்போமா?

( அவர்கள் கூறுயதுபடியே ஒருவரி மாற்றாமல் பதிகிறேன் கீழே)

நகரத்தார்களாகிய நாங்கள் நாகநாட்டிலிருந்து காஞ்சிக்கு வந்தோம் காஞ்சியில் இருந்து சோழநாடு வந்தோம். அங்கே இருந்து காரைக்குடி வந்தோம் (மேலும் விரிவான தகவலுக்கு இணையத்தில் நகரத்தார் வரலாறு என தேடினாலே கிடைக்கும்).

இப்போது சொல்லுங்கள் நாகர்கள் யார்?

அது எப்படி எவனோ ஒருவனின் வரலாற்றை மொத்த தமிழர் வரலாறு என வாய்கூசாமல் சொல்லமுடிகிறது...

உடனே நகரத்தார்கள் தமிழர்கள் இல்லையா என சிறுபிள்ளை தனமாக பேசக்கூடாது .எதை வைத்து தமிழர் என்பீர்கள் தமிழர் என்பதாலா ?

இலங்கைமுஸ்லிம்களுக்கு தமிழ்மட்டும் தான் தெரியும் ஆனால் ஒருகாலத்தில் அரபியில் இருந்து வந்தவர்கள் என அவர்களே சொல்கிறார்கள்.

மீதியை உங்கள் யோசனைக்கே விட்டுவிடுகிறேன்...

செய்தி - விருத்திரன்

தமிழர் வரலாறா ? சிறு கூட்டத்தின் வரலாறா - 1...


குமரிகண்டம்...

குமரிகண்டம் என்ற கருத்தியல் அனைத்து ஆய்வாளர்களாலும் பேசப்படுகிறது. குமரிகண்டத்தில் இருந்தது தமிழர்களே என அனைவரும் பேசுகிறார்கள். இலக்கியத்தில் ஆதாரம் இருக்கிறது என சொல்லுகிறார்கள்... நான் எப்போதும் நம்புவது வாழ்வியல் ஆதாரங்களை மட்டும் தான். ஏனெனில் வாழ்வியல் ஆதாரங்கள் தான் உண்மைதன்மை அதிகமாக இருக்கும். கல்வெட்டு மற்றும் நாணயத்தில் இருக்கும் மொழிகளை வைத்து பகுத்து ஆராய்ந்து பார்த்தல் என்பது இன்றைய கிருத்தவம் தமிழில் அழகாக பைபிளை வைத்து மக்களை வழிபாட்டை மாற்றுவது போல் தான்.இன்னும் இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் தமிழில் கிருத்தவ போதனைகள் இருந்தது எனவே கிருத்தவம் தமிழர் மதம் என சொன்னால் எப்படி நம்பத்தன்மை இருக்காதோ அதே போல தான் இலக்கியங்கள் கல்வெட்டுகள் நாணயங்கள்...

இப்போது விடயத்திற்கு வருவோம்... குமரிகண்டத்திற்காக வாழ்வியல் சான்று தமிழ்நாட்டில் எந்த சமூகத்திடம் இருக்கிறது என தேடுவோம்.

ஒரு குறிப்பிட்ட ஒரு சிறுகூட்டம் மட்டுமே கடல்கோளால் தாங்கள் அடைந்த துன்பத்தை இதுவரை தங்கள் வாரிசுகதையாக கடத்தி வருகிறார்கள்.

மேலும் அவர்கள் தான் இப்போதுவரை தாங்கள் கடல்கோளால் அழிந்து விடக்கூடாது என்பதற்காக மேட்டு நிலப்பகுதியில் வீட்டை கட்டியதாக சொல்கிறார்கள். அந்த வீடுகளும் தரையில் இருந்து 5 அடி உயரமாக கட்டப்பட்டுள்ளது.

உங்கள் வீடுகள் ஆதியில் எப்படி இருந்தது ?

உங்கள் வாழ்வியலில் ஏதும் சான்று இருக்கிறதா ?

இல்லையல்லவா ? அப்படியிருக்கையில் ஒரு சிறு கூட்டத்தின் வரலாறு எப்படி குமரிகண்ட தமிழர் வரலாறு ஆனது ?

காத்திருங்கள் இது வெறும் ஆரம்பம் தான்....

செய்தி - விருத்திரன்

திராவிட வேற்றின ஆட்சியில் தமிழகத்தில் நடந்த வன்கொடுமைகள்...


1920 பெருங்காமநல்லூர் படுகொலை
ஒரு பெண் உட்பட 17பேர் சுட்டுக்கொலை..

1939 மொழிப்போர் வீரர்கள் 2பேர் காவலில் வைத்திருந்து கொலை..

1948 கேரள அரசால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை..

1953 இந்தி எதிர்ப்பு தொடர்வண்டி மறியலில் காவலரால் 2 பேர் கொலை..

1954 தமிழகத்துடன் இணைய போராடிய குமரித் தமிழர்கள் 11 பேர் சுட்டுக்கொலை..

1957 கீழத்தூவல் படுகொலை 5பேர் போலீசாரால் சுட்டுக்கொலை..

1965 மொழிப்போரில் துணைராணுவத்துடன் மோதலில் 70பேர் கொலை..

1968 கீழவெண்மணி 44பேர் எரித்துக்கொலை..

1982 மொழியுரிமைக்காகப் போராடிய 18தமிழர் கன்னடரால் கொலை..

1987 இடவொதுக்கீடு போராட்டம் துணைராணுவத்தால் 21பேர் கொலை..

1989 கண்டமனூர் துப்பாக்கிச்சூடு 3குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை..

1991 காவிரி கலவரம் கன்னடரால் பலர் கொலை..

1992 வாச்சாத்தி படுகொலை 34மரணம்
18பெண்கள் வல்லுறவு..

1992 குறிஞ்சாக்குளம் படுகொலை 4பேர் வெட்டிக்கொலை..

1994 வீரப்பனார் தேடுதல் படையினரால் அத்தனை சின்னாம்பதி ஊரில் பெண்களும் வல்லுறவு..

1999 ல் மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தில் தடியடி நடத்தி 18பேரை ஆற்றில் தள்ளிக் கொன்ற தாமிரபரணி படுகொலை..

2011 பரமகுடி 7பேர் சுட்டுக்கொலை..

2015 ஆந்திர காவல்துறையால் செம்மரம் கடத்துவதாக போலி வழக்கில் 20 தமிழர்கள் படுகொலை..

ஆக வேற்றினத்தாரின் அரச வன்முறைக்கு பலியானோர் அனைத்து சாதியிலும் உண்டு...

என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வரவைக்கிறது - நடிகர் கமல் ஆவேசம்...


அமைச்சர் கேட்டுக் கொண்டபடி இவ்வரசின் காலத்தில், ஊழலால் நீங்கள் அனுபிவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் அரசுக்கு சேதி அனுப்புங்கள் - தமிழக மக்களுக்கு கமல் வேண்டுகோள்...


இலுமினாட்டி இரகசியகம்...


தஜ்ஜால்... இவனுக்கு என்ன பெரிய முக்கியத்துவம்? ஏன் இவனைக் கண்டு நாம் அஞ்ச வேண்டும்? என்ற கேள்விகள் சிலருக்கு எதார்த்தமாக ஏற்படுவது தான்...

1.உங்களையும் எங்களையும் இந்த நவீன தஜ்ஜலிஸத்தை தெரிந்து தெளிவாக விளங்கி நம்மையும், நம் குடும்பத்தையும் அதிலிருந்து காப்பாற்ற பாக்கியம் அளித்த வல்ல இறைவனை புகழ்கிறோம்.

சில சிரமங்களுக்கு மத்தியில் நமக்கு கிடைத்த இந்த அளப்பெரிய தகவல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குவதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.
                       
2:  அமெரிக்க டாலரில் பொறிக்கப்பட்டுள்ள ஒற்றைக் கண்ணுடன் கூடிய பிரமிடுகள் எதைக் குறிக்கின்றன?

3: தங்களின் வரவு செலவு திட்டங்களுக்குக் கூட உலக வங்கியில் கடன் வாங்கும் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் எதிரும் புதிருமாக நிற்பதற்கு யார் காரணம்?

4: அமெரிக்க வங்கிகளில் தீடீர் சரிவு ஏன் ஏற்பட்டது? எங்கேயோ இருந்த ஒபாமா என்பவர் அமெரிக்க அதிபராக குறுகிய காலத்தில் எப்படி ஆக முடிந்தது என்றெல்லாம் மனதிற்க்குள் கேள்விகள்?

ஆய்விற்காக மேற்கண்ட விஷயங்களோடு ஹார்ப் தொழில்நுட்பம், அந்நிய கிரக மனிதர்கள் சாத்தியமா,?                

பூமி வெப்பமடைதலின் மர்மம் என்ன?

போன்ற விஷயங்களை பற்றி நாமும் தேடிக்கொண்டிருந்தோம்.

முஸ்லிம்கள் ஆட்சிபுரியும் அரபு தீபகற்பத்திலும்கூட தஜ்ஜாலை வரவேற்கும் முகமாக யூதர்கள் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கும் பல சூழ்ச்சிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

குறிப்பாக ஃபிர்அவ்ன் எவ்வாறு தஜ்ஜாலை வரவேற்று பிரமிடுகளுக்குள் சில அமைப்புகளை ஏற்படுத்தியிருந்தானோ அதை அப்படியே நகல் எடுத்ததைபோல துபை மாநகரின் அல்-வாஃபி மால் கட்டப்பட்டுள்ளதை அறிந்து உண்மையிலேயே வேதனையுற்றோம்.

1.  சைத்தானியத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய உலகம் அமைப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் மேற்கத்திய தலைவர்கள் யார் யார்? அவர்களோடு கைகோர்த்துள்ள முஸ்லிம் பெயர்தாங்கி தலைவர்கள் யார்? அதன் பின்னனி என்ன?

2.  இன்றைய நவீன ஃபிர்அவ்ன்கள் மற்றும் தஜ்ஜாலை வரவேற்கும் முகமாக எப்படியெல்லாம் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன போன்ற தகவல்கள்.?

3.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த மனிதர்களின் அறிவையும் கட்டுப்படுத்தும் மீடியாவின் விஷமத்தனம் எப்படியெல்லாம் நடைபெறுகிறது.?

4.  சைத்தானின் நேரடி ஏஜென்டுகளான பாப்இசைகள் மற்றும் பெண்களை அரைகுறையாக ஆடவிட்டு ஆட்டிப்படைக்கும் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்களின்; பின்னனி என்ன? போன்ற பல தகவல்கள் பொதிந்துள்ளன.            

யூதர்களுடன் இலுமுனாட்டிகள் கைக்கோர்த்து, இறைவனால் சிறை பட்டு இருக்கும் தஜ்ஜால் யூதர்கள் மூலம் வெளி வருவான்  என்பது மட்டும் உண்மை.

இது உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாம் கூறிக்கொள்வது, தமிழ் மொழியில் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் இதேபோல் பகிற்வோம். காத்திருப்போம் முடிவிற்க்காக...

திருவிளையாடலில் தமிழர் அறிவியல்...


இன்றைய 21 ம் நூற்றாண்டிலும் அறிவியல், மதம், மொழி மூன்றின் வேர்களைத் தேடிச் சென்றால் அவை மூன்றும் ஒரு புள்ளியில் நிற்கும்.

அந்தப்புள்ளி தமிழ் தான். இதை ஆதாரங்களோடு நிரூபிக்க முடியும்.

இன்னும் தமிழை உலகம் சரியாகக் கண்டு கொள்ளவில்லை. தமிழனே கண்டு கொள்ளவில்லை எனும்போது யார் கண்டு கொள்வார்.

ஆனால் தமிழரின் எதிரிகள் கண்டு கொண்டு விட்டார்கள். அதனால் தான் தமிழனை எழ விடாமல் அடிக்கிறார்கள். விழித்துக் கொள்ளாமலிருக்க தூங்க வைக்கிறார்கள். தூக்கம் வரலைன்னா ஊற்றிக் கொடுக்கிறார்கள்.

உலகின் அனைத்து மதங்களின் ஊற்றுக்கண் தமிழர்களின் அறிவியல்.


தமிழன் மத நம்பிக்கைகளை, கடவுள் நம்பிக்கையை உருவாக்காதவன். அவனின் அளவுகடந்த அறிவியல், விண்ணியல் ஞானம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டது. பறிக்கப்பட்ட அறிவு அவன் மீதே மதக்கோட்பாடாய் திணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உலகின் எந்த மதமும் விதிவிலக்கல்ல.

விரைவில் ஒவ்வொன்றாய் பகிர்ந்து விவாதிப்போம். எல்லா மதங்களும் அவைகளின் கோட்பாடுகளும் விவாதத்திற்கு உட்பட்டவையே.

காரணம் மனிதனே முதன்மையானவன்.
மனிதனே இல்லையென்றால் மதங்கள் எங்கே நிற்கும்.

திருவிளையாடல்:

திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி நாகேசுக்கு அடுத்து நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஞானப்பழம்.

புராணக்கதை நம் எல்லோருக்கும் தெரியும். மூத்தவர் விநாயகர் இளையவர் முருகர் யார் முதலில் உலகம் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே ஞானப்பழம். விநாயகர் தாய், தந்தையை சுற்றிவந்து இவர்களே உலகம் என்று பேசி ஞானப்பழம் பெற்றுவிடுவார். கோபித்துக்கொண்டு முருகன் பழனிக்கு.


இது புராணக்கதை. இதில் எங்கே தமிழர்களின் அறிவியல்.

திரிசூல மூன்று சக்திகள் பிரம்ம, விஷ்ணு, சிவனில் இந்த சிவன் யார் ?

உலக உயிர் உருவாகக் காரணமாயிருக்கும் சூரியனே சிவன்.

சிவன் - சிவந்தோன். ஆங்கிலத்தில் Red Sun or Red Giant. சூரியனின் முதிர் நிலை சிவந்த நிலை. (தி.மு.க. உதயநிதி ஸ்டாலினின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே அதுதான் Red Giant.).

நாம் காணும் சூரியனின் தற்போதைய நிலை இளம்பிராயம். அதாவது நமது சூரியனின் வயது நாலரை கோடி.

இன்னும் 5 கோடி வருடங்களுக்கு பிரச்சினை இல்லை. அதன்பின் அது பெரிதாக ஆரம்பிக்கும்.

எந்தளவிற்கு என்றால் படிப்படியாக வளர்ந்து முதல் கிரகம் புதனை விழுங்கும். அதாவது பெரிதாகும் சூரியனின் வெப்பத்தில் புதன் சாம்பலாகிவிடும். பின்னர், வெள்ளி கிரகம், பூமி (நம்ம பூமிதான்), செவ்வாய், வியாழன் வரை விழுங்கப்படும், அந்த அளவிற்கு சூரியன் மிகப்பெரிய சூரியனாக, சிவப்புச்சூரியனாக (Red sun ) விரிவடையும்.

நம் சூரியன் இனிமேல்தான் Red giant ஆகணும். ஆனா ஏற்கனவே Red giant ஆன சூரியன்கள் நிறைய சுத்திக்கிட்டு இருக்குது.

அது விரைவில் வெடிக்கும் என்கிறார்கள். அவ்வாறு வெடிக்கும் போது அதன் வெளிச்சம் நன்றாக நமக்குத்தெரியும் என்கிறார்கள்.
அந்த  Red Giant டின் பெயர் Betelgeuse என்பதாகும்.


நம்ம சூரியன் 5 கோடி வருடங்களுக்குப் பின்னாடி Red Giant ஆவதற்கு முன்னாடியே இப்ப Red Giant ஆக இருக்கக்கூடிய இந்த திருவாதிரை நட்சத்திரத்தை நமது சூரியனுக்கு பதிலாக வைத்தால் அது எவ்வளவு பெரிசாக இருக்கும்?

இந்த Betelgeuse நட்சத்திரத்துக்கு தமிழர் வைத்த பெயர் திருவாதிரை. அந்த Red giant டயும் தான் பார்ப்போமே.

குறித்துக்காட்டப்பட்டுள்ளது தான் அது.

இந்த திருவாதிரைக்குக் கீழே இருக்கும் 3 நட்சத்திரங்களை வானில் பார்த்திருப்போம் கிராமங்களில் ஒலக்கைத் தடிமீன் என்பார்கள் (உலக்கை போல இதன் வரிசை இருப்பதால்). திருவாதிரை நம்ம பூமியிலிருந்து இருக்கும் தூரம் 640 ஒளி ஆண்டுகள் தூரம்.

ஒரு சிறிய விளக்கம் ஒளி ஆண்டு பற்றி.

நாம் பொதுவாக தூரங்களை கிலோமீட்டரில் அளக்கிறோம்.

(நமக்குத் தெரியும் 1 கி. மீ. - 1,000 மீட்டர்)

கடல் தூரங்களை நாட்டிகல் மைல் என்பார்கள்.

பன்னாட்டுத் தர அடிப்படையில்: 1 கடல் மைல் = 1,852 மீட்டர்கள்.

விண்வெளியில் தூரம் அதிகம் என்பதால் கிலோமீட்டரில் சொல்ல இயலாது. கோடி, கோடி, கோடி ன்னு சொல்லவேண்டி இருக்கும் என்பதால் 'ஒளி ஆண்டு' என்ற பதம் பயன்படுத்துகிறார்கள்.

ஒலி-(சப்தம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 340 மீட்டர்.

(அதாவது அரை கிலோமீட்டர் கூட இல்லை)

ஆனால் ஒளி-(வெளிச்சம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 3,00,000 கிலோமீட்டர். (3 லட்சம்).

அப்படின்னா..

1 நிமிடத்துக்கு (3,00,000 X 60)
1 மணி நேரத்தில (3,00,000 X 60 X 60)
1 நாளைக்கு (3,00,000 X 60 X 60 X 24)
1 மாதத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30)
1 வருடத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30 X 12)

இந்த பெருக்குத்தொகைதான் ஒரே ஒரு ஒளி ஆண்டு. (ஏறக்குறைய 10 லட்சம் கோடி கிலோமீட்டர்).

திருவாதிரை நட்சத்திரம் இருக்கும் தூரம் 640 ஒளி ஆண்டுகள். (பெருக்கிகொள்ளுங்கள்)
நம்ம பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் ப்ரோக்சிமா செந்தௌரி (Proxima Centauri) இதன் தொலைவு 4.24 ஒளி ஆண்டுகள்தான்.


1. பூமியிலிருந்து நிலவின் தூரம் 4 லட்சம் (3,86,640) கி. மீ. என்பதால் அதன் பிரதிபலிக்கும் ஒளி நம்மை 1 வினாடியில் அடைந்துவிடுகிறது.

2. சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் அதன் ஒளி வந்து சேர 8 நிமிடம் ஆகிறது. நாம் பார்க்கும் சூரியன் 8 நிமிடத்திற்கு முன்னாள் இருந்த சூரியன் தான்.

3. ஆனால் மிக அருகில் உள்ள நட்சத்திரமான ப்ரோக்சிமா செந்தௌரி யின் ஒளி நமக்கு வந்து சேர ஆகும் வருடங்கள் 4 வருடம், 2 மாதங்கள், 4 நாள்.

ஆக நாம் பார்ப்பது நட்சத்திரத்தை அல்ல அதிலிருந்து பல வருடங்களுக்கு முன் புறப்பட்ட ஒளியைத்தான்.

அப்ப திருவாதிரை நட்சத்திரம். ஆமாம் 640 வருடங்களுக்கு முன்னாள் புறப்பட்ட ஒளியைத்தான் பார்க்கிறோம்.

இதவிடக்கொடுமை என்னன்னா பல நட்சத்திரங்கள் செத்துப்போயாச்சு கருந்துளையாகி. ஆனா அதிலிருந்து வரும் ஒளியை இன்னும் பல நூறு, ஆயிரம் வருடங்களுக்கு பார்த்துக்கொண்டிருப்போம்.

இதையெல்லாம் நம்ம தமிழ் மூதாதையர்கள் எப்பவோ கண்டிபிடிச்சு சொன்ன விசயங்கள். ஒவ்வொரு நட்ச்சத்திரக்கூட்டத்திற்கும் பெயரே வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொன்னா அவற்றை எல்லாம் சேர்ந்து தேடுவோம்.

பின்னால் வரும் சில செய்திகளுக்கு தேவை என்பதால் சூழ்நிலை விளக்கம் கொஞ்சம் நீண்டுவிட்டது.

சிவந்த சிவன் என்பது நம்ம சூரியன் தான்.

அடுத்த  பெயர் பார்வதி. தொடர்ந்து தேடுவோம்...

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் சம்பளம் குறைவு. ஆனால் எம்எல்ஏக்கள் சம்பளம் உயர்வு...


Mla salary in other states...

Karnataka Rs.60,000
Sikkim Rs.52,000
Gujarat Rs.47,000
Kerala Rs.42,000
Rajastan Rs.40,000
Uttarakhand Rs.35,000
Odisha Rs.30,000
Meghalaya Rs.28,000
Arunachal Pradesh Rs.25,000
Assam Rs.20,000
Manipur Rs.18,500
Nagaland Rs.18,000
Tripura Rs.17,500

நீட் தேர்வு: தமிழகத்திற்கு விலக்கு கோரி 21-ம் தேதி உண்ணாநிலை போராட்டம்...


தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை மத்திய அரசும், மாநில அரசும் போட்டிப்போட்டுக் கொண்டு சிதைத்திருக்கின்றன. ஏழை மற்றும் கிராமப்புற  மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழைத்துள்ள துரோகம் சற்றும் மன்னிக்க முடியாததாகும்.

இந்தியா முழுவதும் சமச்சீரானப் பாடத்திட்டம் இல்லாத நிலையில், மருத்துவப் படிப்புக்காக நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்தியா முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தில் 12&ஆம் வகுப்பு பயில்வோரின் எண்ணிக்கை 10 லட்சம் மட்டுமே. அதேநேரத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயில்வோரின் எண்ணிக்கை 1.56 கோடி ஆகும். தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 10 லட்சம் பேர் பயின்றாலும் அவர்களில் 90% அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் தான் பயில்கின்றனர்.

ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் தான் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வும், மாணவர் சேர்க்கை முறையும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நீட் தேர்வு முழுக்க முழுக்க சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதாலும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறுவதாலும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேருவது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. மொத்தத்தில் நீட் தேர்வு என்பது ஏழை, ஊரக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாதவாறு போடப்பட்ட தடுப்பு வேலியாகும்.

கடந்த ஆண்டு தமிழக அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2318 மருத்துவ இடங்கள் நிரப்பப் பட்டன. அவற்றில் 2279 இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றினர். சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 16 இடங்களும், ஐ.சி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 3 இடங்களும், பிறப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 20 இடங்களும் கிடைத்தன. இந்த ஆண்டு ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படவுள்ள 3377 இடங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு கிடைக்கும். இது கடந்த ஆண்டை விட 200 மடங்கு அதிகமாகும். அதேநேரத்தில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கடந்த ஆண்டு பெற்ற இடங்களில் 90% இடங்களை இழப்பார்கள். இந்த அநீதியை களையும் வகையில் கொண்டு வரப்பட்ட மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கான 85 விழுக்காட்டு ஒதுக்கீட்டுக்கும் சட்டப் பாதுகாப்பு பெறாமல் மாநில அரசு துரோகம் செய்து விட்டது.

இத்தனை சிக்கலுக்கும் காரணம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு  குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற தமிழக அரசு தவறிவிட்டது தான். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளிப்பதற்கு இதை ஒரு நிபந்தனையாக முன்வைத்து சாதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி  வந்தது. ஆனால், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக தமிழக மாணவர்களின் நலன்களை மத்திய அரசிடம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு நிரந்தரமாக அடகு வைத்து விட்டது.

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் போது அதன் மீது நடவடிக்கை எடுப்பதும், எடுக்காததும் மத்திய அரசின் விருப்பம் ஆகும். ஆனால், சட்டப் பேரவையில் சட்டம் நிறைவேற்றப்படும் போது அதற்கு ஒப்புதல் அளிப்பது அல்லது நிராகரிப்பது என ஏதேனும் ஒரு வகையில் முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், சட்டம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இன்று வரை அதன் மீது முடிவெடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கும், சட்டப் பேரவைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் ஆகும். இதை எதிர்த்துக் கேள்விக் கேட்பதற்குக் கூட துணிச்சல் இல்லாமல் தமிழக அரசு மண்டியிட்டுக் கிடப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தரும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் எனது தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், பெற்றோரும், பொதுமக்களும் இந்த அறவழி உண்ணாநிலைப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்று சமூகநீதிக்காக குரல் கொடுக்க அழைக்கிறேன்...

பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடும் கொடுக்க தடை - தெலுங்கான மாநில அரசு அதிரடி உத்தரவு...


அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடும் கொடுத்து அனுப்ப தடைவிதித்து தெலுங்கான மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்க இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுத்தமான குடிநீருக்காக வாட்டர் பாட்டிலை மாணவர்கள் சுமந்து வருவதால் பள்ளியிலேயே சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யவும் தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது...

சிறிய செயற்கைகோளை உருவாக்கி சாதனை படைத்த தமிழக மாணவர் ரஷ்யாவில்...


ரஷ்ய நாட்டில் மாஸ்கோவில நடைபெற்று வரும் உலக விமான கண்காட்சியில் இந்தியாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த ரிஃபாத் மற்றும் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

ரஷ்ய வர்த்தக துறை அமைச்சகம் ரிஃபாத் குழுவினரை பாராட்டியதோடு அதிகளவில் மாணவர்கள் இத்தகைய பணியில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

உலக விமான கண்காட்சியில் தமிழக மாணவர் பங்கேற்றது இந்தியாவிற்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது...

நான் ஒரு இனவெறியன்...


என்னால் அதை முழுதும் மறுக்க முடியவில்லை..

அழிவுக்குத் தள்ளப்படும் ஓர் இனத்தின் முடிவை..
அந்த இனத்திற்கான உரிமை மறுப்பை..
அந்த இனத்தின் உயிரிழப்பை..

தடுத்து நிறுத்தத் தேவை ஓர் இனவெறியன் தான் என்றால் நான் இனவெறியனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

இன்றைய தமிழினத்தின் நிலையிலிருந்து அதை மீட்டெடுக்கும் இனவெறியர்களை மேலும் மேலும் உருவாக்கவே செய்வேன்.

நான்கே வரியில் கூறுகிறேன்.
இவ்வுலகத் தமிழரே..

நல்லவனாக இருக்கிறாயோ இல்லையோ வல்லவனாக இரு..

தமிழன் வாழ வேண்டும் இல்லையேல் எவனும் வாழக்கூடாது...

டேனியல் எனும் தமிழன்...


தமிழ் போர் புரியும் என்று 90 ஆண்டுகள் முன்பே அறிவித்த தமிழன்.

தமிழ் இந்திய ஆட்சிமொழி ஆக திரு.காயிதே மில்லத் வாக்கெடுப்பு நடத்தியது பலரும் அறிந்ததே.

அதற்கு முப்பதாண்டுகள் முன்பே தமிழுக்கு ஆட்சியதிகாரம் தரவில்லை என்றால் போர் வெடிக்கும் என்று கூறியுள்ளார் டேனியல் என்ற தமிழர்.

பிரிட்டிஷ் இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திருமூலம் சட்டமன்ற உறுப்பினராய் இருந்த, திரு. பால்.வி. டேனியல்..

27.01.1923 அன்று ஆற்றிய உரையின் முதல் ஐந்து வரிகள்,

ராஜபாஷையாக இருந்த தமிழ் நசுக்கப்பட்டு அடுப்பண்டையில் ஒளிவிடம் தேட வேண்டியதாயிற்று.

இக்கடைசி உறைவிடத்தினின்றும் தள்ளப்படுமாயின் அது தன் நியாயமான அவகாசத்துக்காக எதிர்த்து நின்று அல்ஸ்றர் போர் புரியும்.

Ulster என்பது வட அயர்லாந்தைக் குறிக்கும்.

அயர்லாந்து மக்கள் மொழி உணர்வால் கிளர்ந்தெழுந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.

இது ஐரிஷ்-தேசியம் எனப்படும்.

1919ல் அமைதிப் போராட்டமாக ஆரம்பித்து.

1921ல் ராணுவ மோதலாக உருவெடுத்தது.

இந்த போராட்டம் அயர்லாந்து பிரிட்டிஷ் பேரரசுக்கு உள்ளேயே மாநில உரிமை கிடைக்கப்பெற்றதால் தற்காலிகமாக நின்றது.

அயர்லாந்தின் வடகிழக்கில் சிறுபகுதி (1/6) விடுதலையை ஆதரிக்காமல் இங்கிலாந்துடன் இணைவதை விரும்பியது.

பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருந்த தனது சொந்த நாட்டின் வடகிழக்குப் பகுதியின் மீது போர்தொடுத்தனர் அயர்லாந்து நாட்டின் மற்ற பகுதியினர் (5/6).

இந்த போரானது 1921 முதல் 1923 வரை நடந்தது. வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இதைத்தான் டேனியல் 1923ல் உதாரணமாகக் கூறியுள்ளார்.

அதாவது கேரளாவின் தமிழ்பகுதிகளில் தமிழ் நசுக்கப்படுவதை கேரளத்தமிழர்கள் சகித்துக்கொண்டிருந்தால், தமிழகம் கேரளத்தமிழர் மீதே போர் தொடுக்கும் என்பதைத்தான் அவர் கூறியுள்ளதாக அறிய முடிகிறது.

அயர்லாந்தினரின் 'நாம் ஐரியர்' இயக்கத்தைப் பார்த்து தான் 'நாம் தமிழர்' சி.பா.ஆதித்தனாரால் உருவாக்கப்பட்டது.

அல்ஸ்றர் பகுதியை மீட்க முடியாவிட்டாலும் இங்கிலாந்திடமிருந்து பிரிந்து அயர்லாந்து தனிநாடானது.

அதன்பிறகு மிகக்குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது...

இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை...


இதே நாளில் 1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்ட வரைவு இந்தியர் என்றோ இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவேயில்லை.

இந்தியர் (indians) என்று எங்கும் வரவில்லை, இந்தியாவில் வாழும் குடிமக்கள் (citizens of india) என்று தான் குறிப்பிடுகிறது.

பழனி பாபா (அகமது அலி) என்ன சொல்கிறார் கேளுங்கள்...

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை சகோதரர்களே..

இந்திய சாசன சட்ட புத்தகத்தில் (indian constitution) இந்தியா நாடு (nation) என்ற வார்த்தையை யாராவது காண்பித்தால் 10லட்சம் ரூபாய் தருகிறேன் சகோதரர்களே..

இந்திய சாசன சட்டம் என்பது இந்தியாவிற்கு வேதம் போல,

எப்படி முஸ்லிம்களுக்கு குரானோ கிருஸ்துவர்களுக்கு பைபிலோ,
அப்படியே இந்தியாவிற்கு இந்திய சாசன சட்டம்.

அதில் எங்குமே 'இந்திய நாடு' என்று குறிப்பிடவில்லை.

'Indian union territory' (இந்திய ஒன்றிணைவு பிரதேசம்) என்று தான் சொல்கிறது...

ஊடகங்கள் விசாரிக்காமல் செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும், எந்த முறைகேடும் நடக்கவில்லை - டிடிவி தினகரன் பேட்டி...


சசிகலா சாதாரண கைதி தான், அதனால் அவர் சாதாரண உடை அணிந்து கொள்ளலாம், சிறை விதியில் உள்ளதால் தான் அனுமதி கொடுக்கப்பட்டது என அவர் பேட்டி அளித்துள்ளார்...

தமிழகம் கண்டிராத கேடுகெட்ட அடிமைகளின் அமைச்சரவை...


தேச விரோத பிரச்சாரங்களை செய்கின்றனர், வெளியே விட்டால் ஓஎன்ஜிசிக்கு பாதிப்பு ஏற்படும் கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி...


கைது செய்யப்பட்டவர்கள் ஓஎன்ஜிசிக்கு எதிராக தேச விரோத பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இவர்களின் தூண்டுதலின் பேரிலேயே குழாயை பொதுமக்கள் உடைத்தனர்.

இதனால் 6 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வெளியே விட்டால் ஓஎன்ஜிசிக்கு பாதிப்பு ஏற்படும் எனவே அவர்களை வெளியே விடக் கூடாது என ஓஎன்ஜிசி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நக்கீரனிடம் கூறியதை தொடர்ந்து நீதிபதி இவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்...

இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...


விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...

பாஜக கிரண்பேடியும் டூபாக்கூர் வேலையும்...


இவர்கள் கொள்ளை அடிப்பது போதாது என்று.. இவர்கள் கிழிக்கிற கிழிக்கு இது வேற...


உங்கள் அரசு அப்படி என்ன சாதிச்சுட்டதுனு சம்பளத்த கூட்டுறிங்க எடுபிடி சீனிச்சாமி.. தண்டம் மக்கள் வரிப்பணம்...

நான்தான் முதலில் எழுதினேன். நான் மட்டும்தான் எழுதினேன். ஒரு சட்டமன்ற உறுப்பினர் அறுபது நாள் சட்டப்பேரவைக்கு வராமல் இருந்தால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க விதிமுறைகள் இருக்கிறது...


அதனால் அறுபது நாட்களுக்கு மேலாக சட்டப்பேரவைக்கு வராத, வர இயலாத கருணாநிதியின் உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும்...

ஆனால் நேற்று தமிழக சட்டப்பேரவையில்  இந்த திமுக மாற்றுமதிமுக இருவரும் என்ன செய்து இருக்கிறார்கள். சட்டமன்றம்  வருவதற்கு கருணாநிதிக்கு விதிவிலக்கு அளிக்கக்கூறி திமுக தீர்மானம் கொண்டுவர, அதை ஆதரித்து அதிமுகவும்  வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

எத்தனை அநியாயமிது. ஸ்டாலினுக்கு எந்த அளவுக்கு புத்தி கெட்டு போய் இருந்தால், ... பதவி வெறி இருந்தால்... இப்படியொரு தீர்மானம் கொண்டு வந்திருப்பார். அதுவும் அதிமுகவின் ஆதரவோடு  கொண்டு வருகிறார் என்றால், அதிமுகவிடம்  இவர் பொறுக்கித் தின்கிறார் என்பது உண்மையாகி விடுகிறதே. சசிகலா சிறையில் சலுகை கேட்கிறார் என்று குற்றம் சாட்டுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. இவர் கேட்பது சலுகை அல்லாமல் வேறு  என்ன?

கருணாநிதி  சட்டப்பேரவைக்கு வராமல் இருப்பதற்கு விதிவிலக்கு கேட்கிறார்களே, கருணாநிதிக்கு சட்டமன்ற உறுப்பினருக்கான சம்பளம் வாங்குவதற்கு விதிவிலக்கு கேட்கிறார்களா என்றால் அது இல்லை. சம்பளம் மட்டும் வேண்டும். ஆனால் சட்டமன்றத்துக்கு வரமாட்டார். என்ன கதைடா உங்கள் கதை..

கருணாநிதி ராஜினாமா செய்து விடுவதால் அவருக்கு சம்பளம் வராமல் போய் விடாது. மாறாக கை நிறைய பென்ஷன்  வரும். சம்பளப்பணத்துக்கு நாயாய் அலையும் ஸ்டாலினை தெரியாமல்தான்  கேட்கிறேன், சாகும் வரையில் உன் அப்பா சம்பளமே வாங்கிக்கொண்டு இருந்தால், அவரது பென்சன் பணத்தை எப்போது வாங்குவது. அவர் சேது விட்டால் பென்சன் கிடைக்காதே,  அப்போது என்ன செய்வீர்கள்... நாளையே கருணாநிதி செத்து விட்டாலும்கூட, 'அவர் செத்த பின்னரும்  திருவாரூருக்கு அவர்தான் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரையில் சட்டமன்ற உறுப்பினர்'  என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொள்வீர்களா ?

கருணாநிதியை நீக்கி விட்டு,தேர்தல் நடத்தி இன்னொரு திமுக- காரனே கூட அங்கே வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகி வர  முடியும். அதை ஏன் ஸ்டாலின் தடுக்கிறார். அறிவுள்ள(!)   திமுக-காரன் எவராவது இதை  யோசிக்க வேண்டாமா ? செயல் தலைவர் என்று எப்போது தன்னை ஸ்டாலின் அறிவித்துக்கொண்டாரோ அப்போதே கருணாநிதி செயலிழந்து போனார் என்று அவரே ஒப்புக்கொண்டார் என்று தானே அர்த்தம்.

இனி என்ன இருக்கிறது ? சட்டப்பேரவைக்கு வராமல்  இருக்க விதிவிலக்கு கோரும்  தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டு, இனி எடப்பாடி, பன்னீர் செல்வம், ஸ்டாலின், ஜெயக்குமார். விஜயபாஸ்கர்   கூட சட்டப்பேரவைக்கு வராமல் சம்பளம் வாங்கிக்கொள்ளலாம். யார் கேட்கப் போகிறார்கள்.

திருவாரூர்  தொகுதி மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிணத்தைக் கட்டிக்கொண்டு மாரடிக்க வேண்டியது தான். அலலது இந்த தீர்மானத்தை எதிர்த்து திருவாரூர் மக்கள் வழக்கு தொடரவேண்டும்.

ஜெயலலிதா பிணத்தைக் கட்டிக் கொண்டு அதிமுக-காரனும் கருணாநிதி பிணத்தைக் கட்டிக் கொண்டு திமுக-காரனும் அழுகிறார்கள். இவர்களைக் கட்டிக் கொண்டு நாம் அழுதுக் கொண்டு இருக்கிறோம். தமிழ் மக்கள் தான் யோசிக்க வேண்டும். இனியாவது யோசிக்க வேண்டும். இந்த பிணங்களை அரசியலால் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையேல் நாமும் பிணமாக வேண்டியது தான்...

ஆகஸ்ட் மாதம் முதல் 70 லட்சம் இலவச செட்டப் பாக்ஸ் விநியோம் - ஏற்பாடுகள் ஆரம்பம்...


இந்திய பொருளாதாரமே தமிழ்நாட்டை நம்பிதான் இருக்கிறது...


உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத வகையில் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் வித்தியாசமான கலாச்சாரத்தையும், வழக்கத்தையும் கொண்டு இருக்கும்.

இது இந்தியாவின் சிறப்பம்சமாகவே பார்க்கப்படுகிறது....

தற்போது இந்தியா, கலாச்சாரத்தில் மட்டுமில்லை நாட்டின் வளர்ச்சியில் மாநிலத்தின் பங்கும் மிகவும் வித்தியாசமானது என்பதை உறுதி செய்துள்ளது.

ஆம் இந்தியாவின் ஜிடிபி-யில் வெறும் 3 மாநிலம் தான் அதிகளவிலான பங்கீட்டை அளிக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் சரக்கு மற்றும் சேவையின் சந்தை விலையை வைத்து காலாண்டு வாரியாவும், வருடாந்திர வாரியாகக் கணக்கிடப்பட்டும். இதுவே இந்தியாவின் வளர்ச்சி விகிதமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஜிடிபி அளவீட்டில் விவசாயத் துறை உற்பத்தி முதல் ஐடி துறை ஏற்றுமதி செய்யும் மென்பொருள் சேவை வரை அனைத்தும் அடங்கும்.

தற்போதைய நிலையில் இந்தியாவின் ஜிடிபி 2.25 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யாமல் இருந்திருந்தால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கும்.

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது.

இந்த 3 மாநிலங்களின் ஜிடிபி மதிப்பு 778 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிடிபி அளவீட்டில் இந்தியாவில் பணக்கார மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் பன்னாட்டு வர்த்தகம் முதல் மாஸ் மீடியா, ஏரோஸ்பேஸ், டெக்னாஜி, பெட்ரோலியம், பேஷன், ஆடை தயாரிப்பு, சுற்றுலாத் துறை எனப் பல வழிகளில் வருமானத்தைப் பெறுகிறது.

அனைத்திற்கும் மேலாக மொத்த இந்தியாவிலும் நிலக்கடி மின்சார உற்பத்தியில் 13 சதவீதமும், அணுமின் உற்பத்தியில் 17 சதவீதத்தையும் மகாராஷ்டிரா அளிக்கிறது. மேலும் இந்திய பங்குச்சந்தையில் 70 சதவீத பணப் பரிமாற்றங்கள் மும்பையில் செய்யப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இருப்பது நம்ம தமிழ்நாடு.

2014-15 நிதியாண்டின் படி தமிழ்நாட்டின் ஜிடிபி பங்கீடு 150 பில்லியன் டாலராக உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபியில் விவசாயத் துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

விவசாயத் துறையைத் தாண்டி தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

காக்னிசென்ட், கோவேசிஸ், வெரிசோன். ஐசாப்ட், இன்வென்சிஸ், ஸ்க்னெய்டர் எலக்டிரிக், நிஸ்ஸான் மோட்டாஸ், டிவிஎஸ், எனப் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தலைமையாகக் கொண்டு செயல்படுகிறது.

கடந்த 10 வருடத்தில் கர்நாடகா ஜிடிபியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. விவசாயம், தொழிற்துறை, சேவைத் துறை என இந்த மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மேலும் மென்பொருள் சேவையிலும், ஏற்றுமதியிலும் இந்தியாவின் முக்கிய மாநிலமாகத் திகழ்கிறது கர்நாடகா.

1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். இதே 2014இல் பெங்காளிகளின் வருடாந்திர வருமானம் 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய்.

அதேபோல் 1960இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2014இல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது.

தமிழ்நாட்டைப் போல் தென்னிந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

1960க்கும் 2014ஆம் ஆண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. 1960இல் இந்தியாவின் ஜிடிபியில் பங்களிக்கும் டாப் 3 மாநிலங்களுக்கும், கடைசி 3 மாநிலங்களுக்கும் 1.7 மடங்கும் வித்தியாசம் இருந்தது. 2014இல் இது 2 மடங்காக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் பிராந்திய அளவீடுகளில் பார்க்கும்போது தென் மாநிலங்களே முதல் இடத்தில் உள்ளது. தென்னிந்தியாவிற்குப் பின், வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்குப் பகுதிகள் இடம்பிடித்துள்ளது...