30/01/2019

விஸ்வரூபம் எடுக்கும் ஜாக்டோ ஜியோ போராட்டம்...


ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் காவல்துறையின் நிர்வாக பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது...

ரெண்டு வேப்பிலை கொத்து 68 ரூபா...


நாங்கள் கூறும் தற்சார்பு அரசியலும், தண்ணீரின் அரசியலும் இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...


நீங்கள் அந்த தண்ணீரின் கடைசி சொட்டுக்கு யாருக்கு..? என்று தொலைக்காட்சியில் விவாதம் நடத்துங்கள்...

கசப்பான உண்மை... உண்மையை உணரட்டும் சுதந்திரமாக வாழ்வது யாரென...


Increase Ur Hemoglobin Level At Blood...


உங்கள் இரத்தத்தில் ஹீமோகுலோபின் அதிரிக்க வேண்டுமா.?

https://youtu.be/OBjRJI9OD2Y

Subscribe the channel for more tips...

அரசு அலுவலங்களை தனியார்களுக்கு கொடுக்க... பாஜக - அதிமுக வின் கார்ப்ரேட் சதி...


அரசுத்துறை நிறுவனங்கள் மீது வெறுப்பை கட்டமைத்து, அந்த நிறுவனங்கள் மீது மக்களிடம் நம்பிக்கையின்மையை உருவாக்கி மூடி விட்டு தனியாரிடம் அரசு நிறுவனங்கள் செய்து வந்த சேவைகளை  ஒப்படைக்கும் சதி கடந்த இருபது ஆண்டுகாலமாக நடந்து வருகிறது.

தொலைத் தொடர்பில் ஆரம்பித்து இன்று பல்வேறு துறைகளில் இது வந்து நிற்கிறது. கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் இதில் முக்கியமானது. பணம் இருந்தால் மட்டுமே நல்ல கல்வியும் மருத்துவ வசதியும் கிடைக்கும் என்று தள்ளப்பட்டிருக்கிறோம்.

இந்த துறைகளில் உள்ளவர்கள் மீது குறையே இல்லையா என்றால் உள்ளது. ஆனால் குறைகளை நிவர்த்தி செய்யாமல் ஒட்டு மொத்தமாக மூடு விழா நடத்த எத்தனிக்கும் அதிகார வர்க்கத்தின் சதிக்கு ஆட்படுவது மிக ஆபத்தானது.

போராட்டத்தில் இருக்கும் ஆசிரியர் அரசு ஊழியர்கள் மேல் எடுக்கப்படும் நடவடிக்கையை ஆதரித்து கருத்து உருவாக்குவது சர்வாதிகாரதிற்கு வால் பிடிப்பதை போல அமையும்.

அரசு ஊழியர்களின் உண்மையான கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்...

பனை மர தேசம் தமிழகம்...


கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்...


வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) கடந்த கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.

வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

வெண்டையின் விசேச குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.

இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது...

இந்த தலைமுறையில் நாம் அதை மாற்றுவோம் என்ற நம்பிக்கையோடு...


ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆதரவு...


வகுப்பு புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...

உலகில் மக்களை இயற்கையிலிருந்து மாற்றிய கார்பரேட் ...


நம்பவில்லலையா.. நீங்கள் வாங்கும் பொருட்கள் பின்பகுதியில் யுனிலிவர் என போட்டிருக்கும்...

படியளந்தார் பண்டைத் தமிழர்....


படியளந்தார் பண்டைத் தமிழர்... நாம் எப்படி இருக்கிறோம்..?

நமது முதியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி மிக இயல்பாக' ஆண்டவன் படியளக்கிறான் ' என்று குறிப்பிடுவதுண்டு. கிராமங்களில் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து சற்று வசதியாக வாழ்பவர்களை 'உனக்கென்னப்பா ..முதலாளி படியளக்கிறார்......'

என்று நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு. ஆணவத் தொனியில் பேசுபவர்களைப் பார்த்து 'என்னமோ நீ படியளக்கிற மாதிரியில்ல பேசுறே..' என்று வரிந்து கட்டுவதுண்டு.

படியளப்பது என்பது என்னவென்று நமது இந்த நவீன கால இளம் வயதுத் தோழர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. 'சமைக்கவே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன் 'என்பது போன்ற 'விரைவு உணவு' (Fast Food) கலாசாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை.

கிராம் மற்றும் கிலோ கணக்குகளில் உழன்று கொண்டிருக்கின்ற இந்தக் கால இல்லத்தரசிகளுக்குக் கூட இது மறந்துபோய்க் கொண்டிருக்கின்ற விசயமாக இருக்கக் கூடும். அதனால் இந்த ' படியளப்பது' குறித்த சில விசயங்களை இங்கே பதிவு செய்து வைப்பது அவசியமாகிறது.

நெல், பயறு போன்ற தானியங்களை அளப்பதற்கு பண்டைய தமிழ் மக்கள் ஏறத்தாழ 20 வகையான அளவீடுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணு , சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு ,படி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பவை அவைகளில் முக்கியமானவைகளாக இருந்தன.

'படி' என்ற உருளை வடிவிலான அளவுக் கருவியில் நெல்லை நிரப்பினால் அதில் 14,400 நெல்மணிகள் இருந்தன. அரிசியானால் 38000 மணிகளும் பயறு ஆனால் 14,800 மும், மிளகு ஆனால் 12,800 மும் இருந்தன. இது ஒரு படி என்று அளக்கப்பட்டது.

இதற்கு அடுத்ததாக 'மரக்கால் ' என்ற அளவீட்டுக் கருவி இருந்தது. எட்டு படிகளைக் கொண்டது ஒரு மரக்கால். அதாவது ஒரு மரக்காலில் நெல்லை நிரப்பும்போது அதில் எட்டுப் படிகளில் அளக்கக் கூடிய நெல் நிரம்பும். இப்படித்தான் நமது முன்னோர்கள் தானியங்களை அளவீடு செய்து வந்தார்கள்.

இந்த பழங்கால அளவீட்டு முறை இப்போது அழிந்தொன்றும் போய் விடவில்லை. இன்றும் தென்னகக் கிராமங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றது. பண்ணையார்களின் நிலங்களில் பயிர்த்தொழில் செய்து வருகின்ற விவசாயிகள் இந்த முறையில்தான் தங்களது குத்தகையைச் செலுத்தி வருகிறார்கள்.

இங்கே இந்த ' படியளப்பது ' பற்றிய விசயத்தை பதிவு செய்வதின் நோக்கமே இனிமேல்தான் வருகிறது.

என்ன அது..?

சமீபத்தில் கிராமம் ஒன்றில் இப்படிப் படியளக்கும் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. அது ஆர்வமாக இருந்தது என்று மட்டும் சொல்வதை விட வியப்பூட்டுவதாகவும் இருந்தது என்றும் சொல்லவேண்டும். அந்த நிகழ்வை விளக்குகிறேன். கேளுங்கள்.

அந்த விவசாயி மரக்கால் கொண்டு , தான் விளைவித்த நெல்லை அளந்து கொடுத்தார். இந்த 'அளப்பு' ஒரு இசைப்பாட்டு போல சந்தத்தோடு இருந்தது என்பதுவும், எண்ணிக்கையை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் உரத்த குரலில் இருந்தது என்பதுவும் வேறு விசயங்கள். இங்கே நான் சொல்ல வருவது அதைப் பற்றியல்ல.

முதல் மரக்காலை 'ஒன்று' என்று எண்ணாமல் 'லாபம்' என்று அவர் சொன்னார். அடுத்து ரெண்டு,மூணு,நாலு,ஐந்து, ஆறு ,ஏழு..என்று எண்ணினார். எட்டாவது மரக்காலை எட்டு என்று அவர் எண்ணவில்லை. .'எட்டு மரக்கால்' என்று சொன்னார். அடுத்து 'ஒன்பது', 'பத்து' என்று தொடர்ந்து, பதினெட்டாவது மரக்கால் அளக்கும்போது 'பதினெட்டு மரக்கால்' என்று எண்ணினார்.

ஏன் ஒன்று என எண்ணாமல் லாபம் என்று சொன்னார்..?. ஏன் எட்டு என்று சொல்லாமல் எட்டு மரக்கால் என்று எண்ணினார்..?

இங்கேதான் நமது முன்னோர்கள் ஆதி காலம் முதலாகவே தம்மிடம் பன்முகச் சிந்தனையைக் கொண்டிருந்த சிறப்பை நாம் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்த வருடத்து உழைப்பின் பயனாக வந்த முதல் மரக்கால் நெல்லை 'லாபம்' என்று சுபச் சொல்லால் குறிப்பிட்டு அந்த லாபம் அடுத்த ஆண்டும் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

'எட்டு' என்ற எண் ஏனோ ராசியில்லாத எண்ணாக உலகம் முழுவதுமே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.' எட்டு குட்டிச் சுவர்' என்ற சொலவடை ஒன்று இன்றும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விசயத்தைக் கருத்தில் கொண்டுதான் தங்களின் வாழ்வாதாரமான வேளாண் வருமானத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடாதவாறு 'எட்டு' என்று மட்டும் உச்சரிக்காமல் அதோடு நெல் நிறைந்த மரக்காலையும் சேர்த்துக்கொண்டு 'எட்டு மரக்கால்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்ததாக அளந்த நெல்லை சாக்குப்பைகளில் நிரப்பிக் கட்டும் இடைவெளிகளில் நெல்லை அளப்பவர் தான் வைத்திருந்த மரக்காலை தவறிக்கூட குப்புற வைத்துவிடாமல் நிமிர்ந்த நிலையிலேயே வைத்திருப்பதில் கவனமாக இருந்ததைக் கவனிக்க நேர்ந்தது.

ஏன் அப்படி..?

ஏனெனில் கவிழ்த்து வைப்பது ' முடிந்து விட்டது' என்பதின் அடையாளமாகக் கருதப்பட்டது. படியளப்பது எப்போதுமே தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் வினைச்செயல் அது.

இறுதியாக நெல் அளந்து முடிந்தது. இப்போதும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அளந்த மரக்காலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தபோது நெல் அளந்தவர் வெறும் மரக்காலைக் கொடுக்காமல் மரக்காலில் சிறிது நெல்லை அள்ளிப்போட்டு மரக்காலைக் கொடுத்தார்.

இந்தச் செயலுக்குப் பொருளென்ன..?

நெல் அளக்கும் மரக்கால் வெறுமையாக இருக்கக் கூடாது. 'அட்சய பாத்திரத்தில் இடப்படுகின்ற ஒரு பிடிச் சோறு வளர்ந்து ஒரு ஊரின் பசியைத் தீர்ப்பது போல அந்த மரக்காலில் இடப்படுகின்ற நெல் எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அந்த மரக்கால் நெல்லை அளந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது அந்த முன்னோர்களது விருப்பம். அந்த விருப்பத்தின் விளைவே இந்தச் செயலானது

இப்படியாக கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அளந்த மரக்காலின் உரிமையாளருக்கும் கூட நன்மையே விளைய வேண்டும் என்ற நேர்மறை எண்ணங்களைத் [ Positive thinking] தம்மிடம் கொண்டு அதற்கேற்ற வகையில் தம் செயல்களை வகுத்துக்கொண்ட நம் முன்னோர்களின் அறிவுத் திறனை என்னவென்று வியப்பது..?

யாதும் ஊராக, யாவரும் கேளிராக, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர். நாம் எப்படி இருக்கிறோம்..

வீட்டிலே சிக்கன் பிரியாணி செய்யலாம் வாங்க...


https://youtu.be/mNsFgsN_sl4

Subscribe the channel for more recipes...

தற்காலிக ஆசிரியர்கள் வேண்டாம், பழைய ஆசிரியர்களையே மீண்டும் நியமிக்க வேண்டும்...


உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்...

நோய்களிலிருந்து காப்பாற்றும் க்ரீன் டீ....


க்ரீன் டீ இப்போது அனைத்து தரப்பினரும் பருகும் டீ. இந்த கிரீன் டீ மகத்துவம் பற்றிக் கூறுகிறார் சித்தவைத்திய நிபுணர் அரவிந்த் ரங்கன்.

பொதுவாகவே டீ வகைகளில் க்ரீன் டீ, ctc டீ என்று இருவகை உண்டு. ctc டீ தான் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானது. ஆனால் சீன மக்களிடையே தொன்று தொட்டு பாரம்பரியமாக தொடர்ந்து வருவது க்ரீன் டீ. அதன் மருத்துவ குணத்தால், இப்போது நம்மிடையேயும் பிரசித்தி பெற்றுவருகிறது என அவர் கூறுகிறார்.

இதோ மேலும் க்ரீன் டீ பற்றி மேலும் விளக்கிக் கூறுகிறார்.

C.T.C Tea...

(Cut turn and crush tea ஐ தான் CTC Tea என்கிறார்கள். இது பதப்படுத்தப் பட்ட டீ. இதுதான் நாம் அன்றாடம் குடித்து பழகி வரும் டீ.

க்ரீன் டீ என்றால்?

பயோகெமிக்கல் முறையில் நிழலில் உலர்த்தி பதப் படுத்தப் படும் தேயிலைதான் க்ரீன் டீ.

க்ரீன் டீக்கு எதனால் இந்த மகத்துவம்?

கேட்சின் கொலிபெனல்ஸ் (Catechin Colyphenols ) தான் க்ரீன் டீயில் பிரதான விஷயம். அதாவது பவர்புல் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் மிகச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்.

கேன்சருக்கு மிக நல்லது...

பொதுவாகவே கேன்சர் ட்ரீட்மென்ட் என்றால் ரேடியேசன் தெரபிதான் மெயின். இந்த ரேடியேசன் கதிர்வீச்சு கேன்சர் செல்களை மட்டுமின்றி கூடவே நல்ல செல்களையும் கொல்கிறது. ஆனால் இந்த க்ரீன் கேன்சர் செல்களை மட்டுமே கொல்கிறது. காரணம் இதன் கேட்சின் கொலிபெனல்ஸ் தான். என்றாலும் கேன்சருக்கான உடனடி ட்ரீட்மென்ட் ஆக மருத்துவர்கள் க்ரீன் டீயைப் பரிந்துரைப்பதில்லை. காரணம் கேன்சரின் ஆரம்ப அறிகுறியிலிருந்து நீண்ட நெடும் காலம் தொடரவேண்டிய வழிமுறை இது என்பதால்தான்.

சீன மக்களின் ஸ்லிம் ரகசியம்...

காலம் காலமாக சீன மக்கள் விரும்பி குடிக்கும் டீ இந்த க்ரீன் டீ. சீனர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். கொசுறு கொசுறாக சாப்பாட்டை அடிக்கடி சாப்பிடுபவர்கள். எனவே இவர்கள் உணவு முறையில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் சீனர்கள் தினமும் அடிக்கடி க்ரீன் டீ பருகும் பழக்கம் இருப்பதால் இந்த க்ரீன் டீ கெட்ட கொழுப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.

ரத்த நாளங்களின் அடைப்பை நீக்கும்...

பொதுவாகவே நாம் சாப்பிடும் சமோசா, பீட்சா, வடை, சிக்கன் 65 போன்ற எண்ணெய் பலகாரங்களாலும், அதிக ஸ்வீட் சாப்பிடுவதனாலும் உண்டாகும் கெட்ட கொழுப்பினால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இது மாரடைப்பு (Heart Attack) வரை கூட கொண்டு போய் விட்டுவிடும். இப்படிப்பட்ட ரத்த நாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்கு கொண்டுவரும் பணியை செய்கிறது இந்த க்ரீன் டீ.

தொடர்ந்து க்ரீன் டீ பருகி வந்தால் மூட்டு பிரச்சனைகள், ரத்தகொதிப்பு, இதய நோய்கள் போன்ற நோய்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகின்றன.

சளி, ஜுரம் வராது...

அன்றாடம் காற்றில் நிறைந்துள்ள சின்ன சின்ன தொற்றுக் கிருமிகளால் நமக்கு சளி ஜுரம் உண்டாகிறது. இந்த நோய்களைத் தோற்றுவிக்கும் கிருமிகளைக் கூடக் கொல்கிறது க்ரீன் டீ தரும் எதிர்ப்பு சக்தி.

உடல் நடுக்கம்...

சிலருக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து போவதால் உடல்நடுக்கம் இருக்கும். நல்ல செல்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் உடல் நடுக்கத்தைப் போக்குகிறது க்ரீன் டீ.

எடை குறைக்க விரும்புகிறீர்களா?

க்ரீன் டீயைப் பருகுவதால் Fat Oxddations Themnogenesis எனும் குறிப்பிட்ட சிஸ்டம் மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப் படுகிறது. எனவேதான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி க்ரீன் டீ சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சீன மக்களின் உணவுப் பழக்கப் படி அவர்கள் உடல் எடை அதிகமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஸ்லிமாக இருப்பதற்கு அவர்கள் அடிக்கடிப் பருகும் க்ரீன் டீ தான் காரணம்.

சர்க்கரை நோயாளியா நீங்கள்?

நல்ல டயட், உடற்பயிற்சி, மன அழுத்தமின்மை போன்றவற்றோடு, அன்றாடம் க்ரீன் டீ பருகி வந்தால் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். காரணம் எந்த உணவும் செரிமானத்துக்குப் பின் குளுகோஸ் ஆக மாறி ரத்தத்தில் சேராத படி க்ரீன் டீ தடுக்கிறது.

க்ரீன் டீக்கு நிகரில்லை...

என்னதான் சாப்பாட்டில் மசாலா, அஜினமோட்டோ, போன்ற ஜீரண சக்தி பொருட்களை சேர்த்திருந்தாலும் உணவுக்கு பின் க்ரீன் டீ பருகுவதற்கு நிகர் வேறெதுவும் இல்லை. ஜீரண சக்தியை அந்த அளவுக்கு தூண்டிவிடும், மேலும் உடனடியாக கெட்ட கொழுப்பையும் நீக்கும் என்று முடிக்கிறார் சித்த வைத்திய நிபுணர் அரவிந்த் ரங்கன்.

EXTRA...

1 டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். (2 - 3 நிமிடங்கள்) அடுப்பை நிறுத்தவும். 1/2 ஸ்பூன் டீத்தூள் போடவும். 3 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

அவ்வளவுதான். க்ரீன் டீ ரெடி.. குடிக்கலாம்.

குறிப்பு...

Green Tea யில் நிறம், சுவை கிடயாது. Lite green colour ல தான் இருக்கும்

அதிக நேரம் அடுப்பில் கொதிக்க வைத்தால் தான் கசக்கும். அது உடம்புக்கு கெடுதல்.

அடுப்பை off செய்து விட்டு தான் இலைகளை போட வேண்டும்.

அதிக நேரம் தண்ணீரில் போட்டு வைத்தால் தான் Dark colour ல இருக்கும். அது உடம்புக்கு கெடுதல்.

இதையே 3 முறை பயன்படுத்தலாம்.

முதல் முறை போடுவதை பெரியவங்களுக்கு (சுகர், பிரசர் இருக்குறவங்க) குடுக்கலாம். 2nd, 3rd முறை போடுவதை சுகர், பிரசர் இல்லாதவங்க குடிக்கலாம்...

தமிழா விழித்துக்கொள்...


இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தியும்..


தமிழக தமிழனின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பவும்..

தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் சென்னையில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த  நாள் 29.01.2009...

இது கொலை அல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி..


தன்னுடைய மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததை அறிந்த கணவன், மனைவியையும் மகளையும் விலைமாதர் என திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தண்டனையை குறைக்கக் கோரி அந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தன்னையும் தன் மகளையும் விலைமாதர் என கூறுவதை எந்த ஒரு இந்திய பெண்ணும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என தெரிவித்தது. அந்த வார்த்தை தான் அவரை கொலை செய்ய தூண்டியிருக்கும் என குறிப்பிட்டனர். அதனால் இதனை கொலையாக கருத முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தண்டனையையும் 10 ஆண்டுகளாக குறைத்தனர்...

உங்களை பயமுறுத்தும் நோக்கில் பதிவிடவில்லை சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே...


வைகோ வும் புகையிலை வியாபார கலாட்டாவும்...


https://youtu.be/ARhpYm_aHSA

Subscribe the channel for more videos...

இந்தி எதிர்ப்பை சமாளிக்க வாய்ப்பூட்டுச் சட்டம் போடச் சொன்ன பெரியார் (எ) கன்னட ஈ.வெ.ரா...


தென்மொழி ஏடு கண்டனம்...

1965ஆம் ஆண்டு இந்திமொழி  எதிர்ப்புப் போரில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தென்மொழி ஏடு மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியது. இதன் காரணமாக பேராயக்கட்சியின் ஒடுக்குமுறையை கடுமையாக எதிர் கொண்டது. 

அப்போது பேராயக்கட்சியின் ஒடுக்குமுறையை ஆதரித்தும், ஒடுக்குவதற்கான வழிமுறைகளை பேராயக்கட்சிக்கு (காங்கிரசு) அறிவுறுத்தியும் பெரியார் தனது விடுதலை ஏட்டில் எழுதிக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்டித்து “தென்மொழி” ஏடு பெரியாருக்கு தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வந்தது. “மொழி ஞாயிறு” தேவநேயப்பாவாணர்
அவ்வேட்டின் சிறப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் மற்றவர்களின் கருத்துகளை மதிக்கும் சிறந்த பண்பாளர் என்றும்,  அவரைப் போன்ற சனநாயகவாதி எவரும் இல்லையென்றும்  தற்போது வரையிலும் புளங்காகிதம் கொண்டு பேசிவருகின்றனர்  பெரியாரியவாதிகள் அது உண்மையல்ல, என்பதை எடுத்துரைக்கும் வகையில் “வாய்ப்பூட்டு சட்டம் ” கொண்டு வரச் சொன்ன பெரியாரை தென்மொழி ஏடு அன்றே தோலுரித்தது.

அது பின்வருமாறு...

இந்தி எதிர்ப்பு நடவடிக்கைகளைச் சமாளிக்க நாடெங்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் கொணர்தல் வேண்டும். இந்தி எதிர்ப்புப் பற்றி யாரையும் பேசவிடல் கூடாது. எல்லாச் செய்தித்தாள்களையும் தடை செய்தல் வேண்டும். -ஈ.வெ.ரா.

பதில்: கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்னும் பகுத்தறிவாளரின் (Rationalist) கூற்றா இது. இந்திக்குப் பாடை தூக்கியாக இருந்த இவரே , இந்திக்குப் பல்லக்குத் தூக்கியாக இப்பொழுது இருக்கின்றாரே என்பதால் நமக்கு வருத்தமோ, இழப்போ துளியும் இல்லை. ஆனால் கருத்துக்கும் பகுத்தறிவுக்கும் மதிப்பளிக்க வேண்டிய இவரா, கருத்துகளுக்கும், செய்தித்தாள்களுக்கும் தடை போடச் சொல்கின்றார் என்பதே நம் வியப்பிற்குரியது.

இவரின் நிலை இரங்கத்தக்கது.

கொள்கை நிலையில்  இவர்க்கு அரசியலில் தான் வீழ்ச்சி என்றிருந்தோம் இப்பொழுது அறிவிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இப்பெரியவர்க்கு ,
இனி இவர்செல்லாக்காசு,

அணைந்த தீப்பந்தம்;

சப்பிய பனங்கொட்டை ;

துப்பிய வெற்றிலைத் தாம்பூலம்;

பிழிந்த கருப்பஞ் சாறு;

வெடித்த வாணவெடி,

இனி இவரால் தமிழர்க்கு  கேடில்லை. பிறர்க்கும் பயனில்லை;
இவர் கருத்துப் பற்றி எவரும் கவலை வேண்டுவதில்லை.

(“அரசியல் பட்டடை” என்னும் தலைப்பில் “சம்மட்டி” பெயரில் தென்மொழி ஏட்டில் வெளிவந்தது. பக்கம்12, மீனம் -பங்குனி தி.பி.1996, மார்ச்1965)...

பாசிட்டிவ் எனர்ஜி...


உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன் போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.

வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவித்தும் போது உதவியவரிடம் புன்முறுவலிடம் நன்றி என சொல்வது.

சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள் தான்.

நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.

பாசிட்டிவ் எனர்ஜியின் பகையாளி தான் நெகட்டிவ் எனர்ஜி.

அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது.

ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக் கூடியது. தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி. இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது?

மனிதனின் சிந்தனை அறை தான்...

இரு சக்திகளும் ஒரே அறையில் தான் வித்தாக விழ்கிறது.

அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.

மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான். இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் பாக்கியசாலி தான். அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் ’நல்லவர்’ என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.

இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார்.

இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர்.

எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும்.

நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும்..

எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்.

கடலில் எவ்வாறு ஒவ்வொரு நாளும் நீர் தளும்பலில் உள்வாங்குதல், வெளி தள்ளுதல் ஏற்படுகிறதோ, அப்படி ஒரு நிகழ்வு போல மனிதனின் மன நிலையில் இத்தகைய ஏற்ற இறக்கங்களை சூழ்நிலைகள் நாளொரு பொழுதும் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

இயல்பிலேயே நல்ல சூழ்நிலை, குடும்பநிலை அமையாதவர்கள், சூழ்நிலையின் பாதிப்பால் வாழ்வில் தன்னம்பிக்கை இழந்து, விரக்தி நிறைந்து, பயம், கோபம் மிகுந்து. மற்றவர்களை ஏக்கத்தோடும், பொறாமையோடும் காண்பவர்களாகவும், தன்னையே தனக்குள் தாழ்த்தி கொண்டும் வாழ்வர்.

இவரிடம் எளிதில் நெகட்டிவ் எனர்ஜி வெற்றி கொள்ளும். ஆளுமை செய்யும். பாசிட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும்.

எதிர்பாராதவிதமாக தீய சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றமடையும். அடங்கிக் கிடந்த பாசிட்டிவ் எனர்ஜி துளிர்க்கும். எனினும் அது நிரந்தரமாக வளர்ந்து விடாமல் அதுநாள் வரை ஆதிக்கம் செய்த நெகட்டிவ் எனர்ஜி கண்காணிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த எனர்ஜி மாற்றம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

பலமுறை நிகழும் இத்தகைய மாற்றங்களில் அதிகமாக எந்த எனர்ஜி அவரை வழி நடத்துகிறதோ அதன் பலன்களை, பாதிப்புகளை அவரது வாழ்விலும், அவரைச் சேர்ந்தவர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும்.

உதாரணமாக பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்த ஒருவரை டிராஃபிக்கில் கெட்ட வார்த்தையால் ஒருவன் திட்டி விடுகிறான் என வைத்துக் கொள்வோம்.

திட்டியவனைத் திரும்ப மோசமான கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என தோன்றும். முடியாது.

அப்போது மனதில் நெகட்டிவ் எனர்ஜி எழும். திட்டியவன் மீது பாய வேண்டிய நெகட்டிவ் எனர்ஜி சம்மந்தமே இல்லாமல் அலுவலகத்தில் பணி செய்யும் எளிய ஊழியரின் சிறு தவறைச் சுட்டிக்காட்டி அவர் மீது பாய்ந்து விடும். அவர் என்ன செய்வார் அவருக்குச் சாதகமான இடத்தில் வெளியிடுவார். இப்படியாக இது பரவும்.

ஆக உள்வாங்கப்படும் எனர்ஜியைப் பொறுத்து சார்ந்தவர்களையும் பாதிக்கும், அல்லது பலனளிக்கும்.
மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக் கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்த சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது.
இத்தகைய பலப் பரிட்சை, அதனால் எழும் விளைவுகளால்தான் இந்த உலகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஒட்டு மொத்த மனிதகுலம் அனைத்திற்கும் முழுமையாகவும், முழுநேரமும் பாசிட்டிவ் எனர்ஜி சூழ்ந்திருக்க உத்தேசித்தே மதங்களின் உபதேசங்கள், வழி நடத்தைகள் அமைந்திருக்கின்றன. உலகில் மதங்கள் அனைத்துமே நற்சிந்தனைகள், நற்செயல்களை வழிமொழிகின்றன.

நான் எப்போதோ படித்த நிகழ்வு ஒன்றை இங்கே நினைப்படுத்துகிறேன். ’மகிழ்ச்சியை விதைப்பவர்’ என்ற பெயரில் அதைப் படித்த நினைவு.

ஒருவர் தினமும் காலையில் பத்து ரூபாய்க்கு ஒரு ரூபா நாணயங்களாக மாற்றிக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வாராம். செல்லும் போது வேண்டுமென்றே அங்கொன்றும், இங்கொன்றுமாக நாணயங்களை வேண்டுமென கிழே போட்டு வைப்பாராம். காலையில் அதைக் கண்டெடுக்கும் பிற மனிதர்கள் ’இன்று அதிஷ்ட நாள்’ என சிறு மகிழ்ச்சிக்கு உள்ளாவர் இல்லையா? அதற்காகத்தான் அப்படிச் செய்வாராம். ஏனெனில் அம்மகிழ்ச்சி அலைகள் சமூகத்திற்குத் தானே திரும்பவும் கிடைக்கும்.

அதற்காக அப்படி நடந்து கொள்வாராம் அம்மனிதர்.

சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்கு சிந்தனைத் தருகிறது. அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளி வருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது. அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது. அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

எனவே வாழும் வீட்டில், சமூகத்தில், நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரவ விடுங்கள். அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்...

சிக் சேம்பின் டூபாக்கூர் வியாபாரம்...


கொய்யா இலையும் முடி வளர்ச்சியும்...


https://youtu.be/R8_GBzgjO9g

Subscribe the channel for more tips...

மருத்துவ துறையை மற்றும் அறிவியலின் பயனை தெரிந்தால் மட்டும் தடுப்பூசியை பற்றி பதிவு போடுங்கள் என கூறுபவர்களுக்கு...


எங்களுக்கு மக்களின் மீது அன்பும், அவர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதால் தான் தடுப்பூசி முறையை எதிர்க்கிறோம்..

நீங்கள் கூறும் மருத்துவத்தை தெரிந்தவர்கள் தான் இத்தனை ஆண்டுகளாக என் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் பணத்திற்காக...

நாங்கள் மக்கள் பாதுகாப்பிற்காக மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துக்கிறோம்...

கற்ப மூலிகை வேப்பிலை...


உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி படைத்தவை தான் கற்ப மூலிகைகள்.

நரை, திரை, மூப்பு என்ற மூன்றையும் அணுகவிடாமல் தடுக்கும் குணம் கற்ப மூலிகைகளுக்கு உண்டு.

இந்த இதழில் வேப்பிலை என்னும் கற்ப மூலிகையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்திருப் போரும் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட் டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில் வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.

கீழ்கண்ட மருத்துவக் குணங்கள் வேப்பிலையில் நிறைந்துள்ளது..

1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory).

2. வீக்க உருக்கி (anti inflammatory).

3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic).

4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer).

5. மலேரியா போக்கி (Anti malarial).

6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal).

7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial).

8. வைரஸ் அகற்றி (Anti viral).

9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant).

10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous).

வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் Azadirachtia, nimbidiol, nimbidin போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன.

வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

வேப்பிலையை பயன்படுத்தும் முறை...

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

வேப்பிலையின் பொதுவான பயன்கள்...

வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்...

விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்
சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச் சாறுக்கு உண்டு.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

காளான் நோய்களான டிரைக் கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக் கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர்...

மனித இனம் எப்படி அழியும் தெரியுமா.?


உங்களை பயமுறுத்த வேண்டும் என பதிவு செய்யவில்லை நடந்து வரும் உண்மையை சொல்கிறேன்...

மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காக உடை மாற்றிய பெண்ணை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்...


புனேவில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஸ்கேன் செய்யும் இடத்துக்கு சென்ற அப்பெண்ணிடம் மருத்துவமனையின் உதவியாளர் ஒருவர் ஆடைகளை தனியறையில் மாற்றிக்கொள்ள கூறியுள்ளார்.

அந்த அறைக்கு சென்று ஆடையை மாற்றிய அந்த பெண் அறையில் ஒரு கேமரா வசதி கொண்ட செல்போன் ஒன்று ஒளித்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக தன்னுடைய கணவரிடம் அந்தப்பெண் கூறியுள்ளார். உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். செல்போனை சோதனை செய்ததில் அதில் உடை மாற்றும் சில வீடியோக்கள் இருந்துள்ளன. இதனையடுத்து செல்போனை அங்கு வைத்த  மருத்துவமனை ஊழியர் லாகுவை (25) சட்டவிதி 354ன் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்...

கால் ஆணி குணமாக....


எப்போது வரை சாதியானது தமிழ் அடையாளமாக இருக்கும்?


தமிழர்களுக்கு என்று முறையான நாடோ அரசோ இல்லை.

இருந்திருந்தால் ஆவணங்களில் 'இனம்' என்பது சேர்க்கப்பட்டு யார் எந்த இனம் என்பதற்கான சான்று இருந்திருந்திருக்கும்.

ஆனால் இன்று நம்மிடம் இனத்தின் உட்பிரிவுக்கான சான்று ஆவணம் மட்டுமே உள்ளது.

ஆக இன்று யாரெல்லாம் தமிழர் என்று அடையாளம் காண சாதி சான்று காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழர் தாய்நிலம் தமிழரின் (இராணுவக்) கட்டுப்பாட்டில் வந்தபிறகு
இனம் எது என்பதற்கான சான்று வழங்கப்படும் வரை தமிழர் சாதி அடையாளத்தை மறைக்காமல் இருப்பது அவசியமாகிறது.

நமக்கான அரசு அமைந்ததும் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு இனத்தை மட்டும் ஆவணங்களில் குறிப்பிட வேண்டும்.

மற்ற இனங்களுக்கு இனத்தின் மொத்த வரலாறே நீளமாக இல்லாத போது
தமிழரின் சாதி வரலாறு பிற இனங்களின் வரலாறை விட நீளமாயிருக்கிறது.

இது தமிழர்களின் சாதியப்பெருமைக்கு வழிவகுத்து பிரிவினை உண்டாக்கி
வந்தேறிகள் அரசியல் செய்ய வழி ஏற்பட்டுவிட்டது.

அதாவது நமது சாதி பிரச்சனைக்கு காரணம் நமது பழமையே ஆகும்.

அதனால் சாதி அடையாளத்தை விட பழமையான இன அடையாளம் புறக்கணிக்கப்பட்டு போதிய ஆய்வுகள் இல்லாமல் இன அடையாளம் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

50,000 ஆண்டுகள் பழமையான நமது இனம் அதன் பழமையை நிறுவ முடியாமல்...

சில நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையான சாதி வரலாற்றைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆக முதலில் சாதி அடையாளத்தை ஏற்றுக் கொண்டு..  சாதிய ஏற்றத் தாழ்வை ஒழிக்க வேண்டும்.

பிறகு சாதிகள் அனைத்தும் இணைந்து தமிழர்நாடு அமைக்க போராட வேண்டும்.

பிறகு இன அடையாளத்தை உறுதி செய்து சான்றளித்து விட்டு சாதிய அடையாளத்தை விட்டுவிட வேண்டும்.
இதுதான் உண்மையான சாதி ஒழிப்பு.

வருங்காலத்தில் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிடும்.தமிழினம் மொத்ததமும் ஒரு தமிழ்ச் சாதியாக மாறித்தான் தீர வேண்டும்..

முப்படை கொண்ட தமிழர் அரசு அமைந்த பிறகு...

இன்று சாதிய வரலாற்றை எவ்வளவு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோமோ
அதே அளவு தீவிரத்துடன் இன வரலாறை ஆய்வு செய்ய வேண்டும்.

சுருக்கமாக...

தமிழர் நாடு தமிழரின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு வரும் வரை சாதி அடையாளமே தமிழ் அடையாளம்...

வெங்காயத் தோலின் நன்மைகள்...


https://youtu.be/Wkjm7QL8Xzk

Subscribe the channel for more tips...

காங்கிரஸில் இணைந்த ஜெயலலிதா தோழி...


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழியும், திருவல்லிக்கேணி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர் சயீத் திருநாவுக்கரசர் முன்னிலையில் நேற்று காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் தகவல் செய்தி தொடர்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது...

தமிழக அரசின் சஸ்பெண்ட் நடவடிக்கைகளுக்கு அஞ்சி போராட்டத்தை கை விடமாட்டோம். போராட்டம் இன்றும் தொடரும் - ஜாக்டோ ஜியோ அறைகூவல்...


முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம். ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்...


தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தால் அது ஓம் வடிவில் தெரிகிறது.

அனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், கட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை ஆதி தமிழன் எப்படி நிகழ்த்தி காட்டினான் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது..

அந்த திருத்தலங்களின் பெயர்கள் இதோ...

01 திருப்பரங்குன்றம்
02 திருச்செந்தூர்
03 பழநி
04 சுவாமிமலை
05 திருத்தணி
06 சோலைமலை (பழமுதிர்ச்சோலை)
07 மருதமலை
08 வடபழனி (சென்னை)
09 வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி
10 நாகப்பட்டினம் சிக்கல்
11 திருச்சி வயலூர்
12 ஈரோடு சென்னிமலை
13 கோபி பச்சமலை
14 கரூர் வெண்ணைமலை
15 கர்நாடகா குக்கே சுப்ரமண்யா
16 கர்நாடகா கட்டி சுப்ரமண்யா
17 கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி...

ஆரியமும் திராவிடமும் ஒன்றே...


கிட்னி பிரச்சனையா.? இனி கவலை வேண்டாம்...


கிட்னி யை யாருக்கும் தானம் செய்யாதீர்கள் / கிட்னி வேலை செய்யவில்லையா.?

https://youtu.be/mMJ3oeg33to

Subscribe the channel for more tips...

புற்றுநோயிலிருந்து எய்ட்ஸ் வரை அனைத்துக்கும் தீர்வளிக்கும் ஒரு அற்புத மருந்து...


நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை. நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவு முறையால் தான்.

இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடிந்தது. இயற்கையை மதிக்காததன் விளைவு இன்று நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது.

ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது அதலைக்காய் என்னும் அற்புத மருந்து.

அதலைக்காய் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இது பாதுகாக்கிறது என்பதுதான் உண்மை.

இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியது. இதனை யாரும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் விளையத்தொடங்கும் இது தென்மாவட்ட விவசாயிகளுக்கு முதலீடே இல்லாமல் இலாபம் தரக்கூடியத்தாகும்.

இதிலுள்ள சத்துக்கள் முறையே நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் என இதில் உள்ள சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த இதை நாம் கவனிக்காமல் இருப்பது நமது அறியாமைதான்.

அதலைக்காய் பாகற்காயை போன்றே கசப்பு சுவையுள்ளது, அதனாலேயே பெரும்பலானோர் இதனை உண்பதில்லை. ஆனால் இதன் மகிமையை அறிந்தவரகள் இதனை ஒருபோதும் வெறுப்பதில்லை. இதனை சாம்பாராக வைக்க இயலாது எனவே பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம்.

சரியான பக்குவத்தில் சமைத்தால் சுவையிலும், சத்துகளிலும் இதனை மிஞ்ச வேறு காய்கறிகளே இல்லை...

அரசாணை 56 இந்த அரசாணையால் எதிர்காலத்தில் அரசுப் பணியே இருக்காது. இதற்கு எதிராக ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராடுகிறார்கள்...


மல்லிகைப் பூ வின் மருத்துவ குணங்கள் ...


மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.

மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விசயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்...