18/04/2017

இன்று தமிழகத்தில் பதிவான வெயிலின் அளவு...


மதுரை அழகர்கோவில் சாலை அருகே சாராயக்கடையை அடித்து நொறுக்கிய மாணவர்கள், மிரட்டி தடுக்க வந்த பார் உரிமையாளரான கரைவேட்டிக் காரரை அடித்து விரட்டினர்...


சித்தர் போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள்...


பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான போகநாதர் பூமிக்கு மீண்டும் வருவதாக கூறியிருப்பதாகவும். எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர் தனது சந்திரரேகை நூலில் விவரித்திருக்கிறார்.

தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்.

- சந்திர ரேகை.

பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டு போவார்கள், இதனால் பெரும்பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும்.

கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில் பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும் என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.

இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

ஆனால் கோரக்கரின் இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில் நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.

இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

கோரக்கர் மட்டுமல்லாது அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள் போன்றோரும் இம்மாதிரியான் எதிர் கூறல்களை கூறியுள்ளதாகக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன...

மே 15ம் தேதி முதல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் இயங்கும்...


தமிழகத்தில் 127 அணைகள் பராமரிப்புக்கு, உலக வங்கி தந்த ரூ.750 கோடி பணம் என்னாச்சு...


தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 2012ல் அணைகள் புனரமைப்பு  திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.745 கோடி செலவில்  107 அணைகள் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த அணைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இதுவரை வடக்கு பச்சையாறு, நம்பியாறு, அடவிநயினாறு, கொடு முடியாறு, பொய்கையாறு, மோர்தானா, சித்தாமல்லி கோமுகி நதி, விடூர் உட்பட 16 அணைகளில் வேலை முடிந்ததாகவும், 42 அணைகளில் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர மின்வாரிய கட்டுபாட்டில் உள்ள 16 அணைகளில், ஒரு சில அணைகளில் மட்டுமே புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கொரு முறை அணைகள் பாதுகாப்பாக இருக்கிறதா, பலவீனமாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழு தமிழகம் முழுவதும் உள்ள 127 அணைகள் நீர் இருப்பை தேக்கி வைக்கும் அளவு குறைந்துள்ளதா?
மண் படிமங்களின் அளவு எவ்வளவு?, நீர் இருப்பை உயர்த்தலாமா?, அணைகள் பலவீனமாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தது.

இக்குழு தற்போது வரை 62 அணைகள் வரை ஆய்வு செய்துள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது...

குழுவினர் கடந்த 1 மாதத்திற்கு மேலாக ஆய்வு பணியில் ஈடுபட்டனர்..

இக்குழு கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 62 அணைகளை ஆய்வு செய்தது.

அதில், 45 அணைகளில் பராமரிப்பு பணிகள் இல்லை. கொள்ளளவு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் நடந்த அணைகளும் அடங்கும்.

பணிகளே நடக்காமல் நடந்ததாக பணம் சுருட்டிய சம்பவமும் நடந்துள்ளது. இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையாகவே உள்ளது.

இது தொடர்பாக அக்குழு தாக்கல் செய்த தனது அறிக்கையில் முழு விவரத்தையும் தெரிவித்துள்ளது என்றார்.

கொள்ளையடியுங்கள், திருடுங்கள். அது எந்த நிதியில் என்று ஒரு வரைமுறை உள்ளது. இன்று தமிழகமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது.

கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு விவசாயிகள் டெல்லியில் 35 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் இவ்வாறு செய்திகள் வந்திருப்பது, கடும் வேதனையையும், வருத்தத்தையும் தமிழக மக்கள்  இடையே ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?

தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் மே14ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை - தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு...


உள்நாட்டு போரின் போது இந்தியா எங்களுக்கு கேட்காமலே உதவி செய்தது என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.....


ஈழத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்தது காங்கிரஸ்+திமுக அரசு...

அதை வேணுமென்றே கண்டு கொள்ளாமல் இருந்தது இன்றைய ஆளும் பாஜக கட்சி...

இந்த கட்சிகளை இன்னும் ஆதரிக்கும் தமிழன் காசுக்கு விலை போயிருப்பான் அல்லது காட்டிக் கொடுக்கும் ஈனத் தமிழனாகத் தான் இருப்பான்...

2022ல் லிவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் - பாஜக மோடி...


நிர்வாணமா போராடும் விவசாயிக்கு நிவாரணம் தர வக்கு இல்ல, 2022ல வருமானம் இரட்டிப்பாம்...

சித்தராவது எப்படி - 23...


சுவாச ஒழுங்கில் சூரிய கலை சந்திர கலை...

இன்று ஒரு அன்பர் கேட்ட கேள்வியின் விளைவாக சுவாச ஒழுங்கினை பற்றி மேலும் விவரிக்க வேண்டிய அவசியமாகிறது...

சுவாசத்தோடு இருக்கின்ற நாம் அதில் செம்மையாக இருக்கும் போது அதாவது ஒழுங்காக இருக்கும் போது ஏற்படுகின்ற உயர்வுகள் முன்னேற்றங்கள் அளவிட முடியாதது..

அப்படி பட்ட உயர்வுகளை தன்னிடமே வைத்துக் கொண்டுள்ள அந்த சுவாச ஒழுங்கில் இருப்பது அவ்வளவு எளிதா என்ன?

ஆமாம் அது சற்று என்ன மிகவும் கடினமே..

அதற்கு இடையூறு செய்கின்ற தடைகளை வெல்லுவது என்பது ஒன்று சேர்ந்து வரும் மிக பெரிய பூதங்களை வெல்லுவதற்கு இணையானது..

கவர்ச்சி என்பது துளியும் இல்லாத இந்த சுவாச ஒழுங்கு மனதிற்கு புலப்படாத ஒருநிலை நோக்கி நகர்ந்து ஒரு தோன்றா நிலை என்ற அதி உன்னத நிலை நோக்கி நகர்த்தி செல்லுவதால் அந்த தெய்வநிலைக்கு இடையூராக பூத கணங்கள் என்ற எண்ண தடைகள், தடை செய்வது சகஜமே..

சரி இந்த சுவாச ஒழுங்கில் சூரியகலை சந்திர கலை என்று வெளி விடுகின்ற மூச்சும் உள்வாங்குகின்ற மூச்சுமாக பார்த்தோம்..

ஆனால் சந்திர கலை சூரிய கலை என தனித்தனியாக உணர முடிந்ததா ?

இரண்டும் ஒன்றாகவே இருக்கும் பொழுது எந்த முன்னேற்றமும் காண முடியாது..

ஆனால் தனித்தனியாக உணர வேண்டும் என்றால் வெளி விடுகின்ற சூரிய கலை முழுமையும் தோன்றா நிலையாக இருந்தால் மட்டுமே சூரிய கலை சந்திர கலை தனித் தனியாக பிரியும்..

அதற்கு ஓம் நமசிவய என்ற மந்திரத்தின் கால அளவினை பிடித்துக் கொண்டு சூரிய கலை முழுமைக்கும் தோன்றா நிலை உணரவும் அதே நிலையில் சந்திர கலையும் அந்த தோன்றா நிலைக்கு சென்று விடாமல், நம் மனதின் திறனை இழந்து விடாமல் சந்திர கலையில் உள் வாங்கும் மூச்சை நம் மனதால் பற்றி நாமே உள் வாங்க வேண்டும்..

இதில் நாம் என்பது மனதாக உள்ள நாம் தான்...

அந்த சந்திர கலையில் நம் அதி தேவையான ஒன்றை நினைக்கும் போது அந்த தேவைக்கான தடைகள், அந்த தோன்றா நிலையில் கரைந்து போகும் அதிசயம் நடக்கிறது...

தடைகள் கரைந்து நீங்கிய நிலையில் அந்த தேவை நிறைவேற்றப் படும் அதிசயமும் நடைக்கிறது...

மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால் தோன்றா நிலையினை சூரிய கலையில் பெற்ற உடன் நம் சந்திர கலை சுத்தமாக தோன்றா நிலையை பூரணமாக கவ்விக் கொண்டு அமாவாசை போன்ற சந்திரகலையும் தோன்றா நிலைக்கு சென்று மறைந்து விடுகிறது..

பயிற்சியில் தொடரும் போது, தோன்றாநிலை நீங்கிய பிறைகளாக சந்திர கலை வளர்ந்து வளர்ந்து பௌர்ணமியான முழு நிலவு ஆகிறது..

அந்த முழு மதிநிலையில் மட்டுமே நமது ஆசைகள் ஒழிந்து தேவைகள் முன் நிறுத்தப் படுகின்றன..

ஆசைகள் வேறு தேவைகள் வேறு என்பதை முன் பகுதிகளில் தெளிவாக கூறி இருக்கின்றது..

அனைத்துக்கும் ஆசைபடு என்ற கருத்தை விட்டு விட்டு அனைத்து தேவைகளையும் உணர் என்ற சத்தியத்தை பிடித்தால் பெரும் நன்மை அடையலாம்...

நோய் நீங்குதல், தரித்திரம் நீங்குதல், தன்னை சார்ந்தவர்களுக்கு உதவாத அவலநிலை, பாதகமான சூழ்நிலைகளை எதிர் கொள்ளல் போன்ற, மிக அவசியமான தேவைகள் மட்டுமே இந்த சந்திர கலை மதியான நிலையில் உதிக்கும்..

அந்த தேவைகளின் தடைகளை இந்த சூரிய கலை போக்கும் அதிசயத்தை இந்த மனம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை... இல்லவே இல்லை..

ஆனால் தேவைகள் பூர்த்தியாகும் அதிசயத்தை நீங்கள் விரைவில் உணரலாம்..

சந்திர கலையை மதி ஆக்குவதற்கு மிக சிரமமா என்ற கேள்விக்கு பதில் சராசரி மனிதனுடைய திறமையில் சற்று தீவிரமாக பயின்றால் மூன்று அல்லது நான்கு வாரத்திற்குள் இது சாத்தியமாகும்...

உங்கள் அனைத்து தேவைகளையும் நிறைவேற இந்த சுவாச ஒழுங்கு முற்றிலும் கவர்ச்சி அற்ற ஒன்று என்பது மிக முக்கியமான தடை..

மதியிலே வைக்கப் படும் தேவைகள் கண்டிப்பாக சூரிய கலையின் தோன்றா நிலையால் நிறைவேற்றப் படும் என்பது சத்தியமான உண்மை..

தெய்வத்திடம் பக்தியோகத்தில் முறையாக நிற்கும் மனிதன் முதலில் அந்த தெய்வத்திடம் தோன்றா நிலையினை உணர வேண்டும்..

தெய்வத்தின் இயல் நிலை என்ற தோன்றா நிலையை உணராமல் செய்யும் பக்தியோகம் ஒரு பலனும் அளிக்காது..

தெய்வத்திடம் முறையிட்டு பல தோல்விகளை கண்டு துவண்டு போன மனிதன் தானாக அனுபவப் படும் தோன்றா நிலை மூலமாகவும் அதன் பின் சந்திர கலையை முழு மதியாகவும் அனுபவப் படும் போது மட்டுமே தெய்வதிடமிருந்து பலன் பெறப் படுகிறது..

அந்த நிலைக்கு வர பல ஆண்டுகள் ஒடி விடும்.. அதற்கு காரணம் ஆன்ம இலாபம் துளியும் இல்லாத நிலை..

காட்டில் வாழ்ந்த கண்ணப்பருக்கு தன்னுடைய அப்பாவித்தனம் மூலம் ஏழே நாட்களில் தோன்றா நிலைக்கு சென்று அன்பு என்ற முழு மதி நிலை அடைந்ததால், இறை தரிசனம் கிடைத்தது.. அவருக்கு அப்பாவி தனம் மிகவும் உதவியது..

ஆனால் அப்பரோ தனது என்பது வயதில் கடினமான கைலாய மலையில் பயணப் பட்டு அதில் அடைந்த சோர்வில் துவண்டு தோன்றா நிலைக்கு தள்ளப்பட்டு பின் தன் ஒரே குறிகோளான இறை தரிசனம் என்ற ஒரே தேவையால், கலைகள் நிரம்பிய மனம் ஒரே தேவையான இறைதரிசனம் என்ற ஒன்றால் மதியாகி, அந்த கைலாயமே தன் சொந்த ஊரிலேயே காணும் வல்லமை பெற்றார்.. அதற்குள் அவர் காலம் எண்பதற்கு மேல் தாண்டி விட்டது..

யாம் சில சமயங்களில் சில யோக பயிற்சிகளை குறை கூறுவது ஆன்மா இலாபம் துளியும் கிடைக்காது முடிவில் தோல்வி ஒன்றையே தழுவும் படியாக தருவதை தான்..

அதில் கற்றுக் கொள்பவர்கள் மேலும் மேலும் இடர் படக் கூடாது என்ற அன்பின் காரணமாக தான்... மற்றபடி வேறு ஒன்றும் இல்லை...

தோன்றா நிலை வெளிப்படாத வெளி சுவாசம் சூரியகலை அல்ல.. அதன் பெயர் வெளி சுவாசம் மட்டுமே..

தோன்றா நிலை உடைய வெளி சுவாசம் மட்டுமே சூரிய கலை எனப்படும்...

உள் வாங்கும் சுவாசத்தில் மதி நிலை தோன்றா விட்டால் அதன் பெயர் உள் சுவாசம் என்றே கொள்ள வேண்டும்.. அது சந்திர கலைகள் நிறைந்தது..

பலவித ஆசை என்ற எண்ண ஆதிக்கங்களால் நிரப்பப்பட்டது..

ஆனால் ஒரே எண்ணமான தேவையை மட்டும் உடைய மதியான உள் சுவாசத்தை ஏக கலையான பௌர்ணமியை சந்திர கலை எனலாம்..

இப்படியாக சுவாச ஒழுங்கின் மூலம் சந்திரகலை சூரிய கலை பெற்று நம் உடல், வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து பின் சித்தராகும் உயர்ந்த குறிகோளை நோக்கி நகருவோம்...

ஓ.பி.எஸ் விளக்கம்...


இலுமினாட்டி - வங்கிகளின் உண்மை நிலை...


நீங்க யாராவது சிந்தித்திருக்கீங்களா ?
வெற்று காகிதத்திற்கு எப்படி இவ்வளவு மதிப்பு வந்தது என ?

காலம் முழுவதும் அந்த காகிதத்திற்காக அடிமை போல மானத்தை இழந்து, சுதந்திரம் இழந்து, மகிழ்ச்சியும் இழந்து எவனுக்கோ வேலை செய்து சாக வேண்டுமா..

எது விலை உயர்ந்தது உணவா அல்லது கணிணியா?

உணவு தானே. ஆனால் இங்கு அப்படி தெரியவில்லையே..

சில பேர் சொல்வார்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனால்?

அப்படியா யார் அந்த எல்லாரும். இங்கு விவசாயி தான் பட்டினி கிடந்து சாகிறான். அப்போ யாருக்காக இந்த மலுப்பல். கணிணி தயாரிப்பவனுக்கும் மதிப்பே இல்லா காகிதத்தை அவனே மதிப்பு இருப்பதாக கூறி முதலீடு என்ற பெயரில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து திண்கிறானே அவனுக்காக தானே இந்த மலுப்பல்.

ஏன் இப்படி இருக்க கூடாது கணிணியை கொடுத்து உணவு வாங்கி கொள்ளட்டும் ஓர் வேலை உணவு. உணவு யாரிடம் இருக்கிறதோ அவனே வாழ்வளிப்பவன். அவன் தயவாலயே நாம் வாழ்கிறோம். ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லையே. ஏன்?


இவ்வாறு தானே உலகம் நகர்ந்திருக்க வேண்டும். எது இதை மாற்றியது. பொய். மாயை.

நிலவுடையாரிடம் தோன்ற்றிவித்த இந்த மாயை பல பரிமாணங்களை கடந்துள்ளது. அது அரசர்களின் கைகளுக்கு மாறியது. தற்போது பெரும் செல்வந்தர்களில் கைகளில் இருக்கிறது.

இப்படி சொல்லலாம் உலக வங்கிகளின் முதலாலிகள் கைகளில் இருக்கிறது.

பணம் என்ற பொய்மை உங்களுக்கு புரியும் என நம்புகிறேன். இல்லாத மதிப்பை இருப்பதாக கூறி அனைவரையும் அதை நோக்கி ஓட வைத்து விட்டனர். அதை அவர்களே அச்சிடுவதால் நாம் அவர்களை நோக்கி ஓடுகிறோம். அவர்கள் சொல்வதை நம்புகிறோம். அவர்கள் சொல்வதையே செய்கிறோம் பொதுவாக.

இந்தியாவின் முதல் வங்கி இந்திய கிழக்கிந்தய கம்பேனியால் கொண்டு வரப்பட்டது. அதன் பெயர் Imperial Bank Of India, British. தற்பொழுது இதன் பெயர் Reserve Bank Of India..

பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. வேறு எதுவும் மாறவில்லை.

இந்த வங்கி Asian clearing Union. என்ற அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. தலைமை இடம் ஈரானில் உள்ளது.

மேலும் இந்தியாவின் ரிசர்வ் வங்கி ன் கீழ் தான் பல வங்கிகள் செயல்படுகின்றன.

அவை இந்திய தனியார் வங்கிகள் போல தோன்றும் ஆனால் ரோத்ஸ்சைல்ட் உடையது தான்.

பங்குச்சந்தை இதில் பெரும் பங்காற்றுகிறது. இதையும் இவர்களே உருவாக்கினார்கள் கட்டும் படுத்துகிறார்கள்.


முத்தூட் வங்கி அனைவரும் அறிந்ததே.  அந்த வங்கி சிறிது காலத்திற்கு முன் பெரிய அளவில் மோசடி புகார்களை சந்தித்தது இவர்களாலேயே.

வங்கிகளின் மோசடி - ஓர் வங்கி தான் வைத்திற்கும் பணத்திற்கு 16 மடங்கு லோன் வழங்கலாம். இதன் மூலம் லாபத்தை மட்டுமே வங்கிகள் ஈட்டும்.

இப்பொழுது வெறும் 5% பணம் மட்டுமே தாளாகவோ தங்கமாகவோ உள்ளது. மீதி அனைத்தும் கணிணியில் வெறும் எண்ணாக மட்டுமே உள்ளது.

நாம் அனைவரும் ஒரே நாளில் வங்கியில் போட்ட பணத்தை எடுத்தால் வங்கியால் பணத்தை வழங்க முடியாது.
புரியும் என்று நம்புகிறேன்..

நாம் அனைவரும் பணத்திற்காக ஓடுகிறோம். ஆனால் அந்த பணம் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

உண்மையில் இதற்கு மதிப்பும் இல்லை. அர்த்தமும் இல்லை.. நாம் முட்டாளாக்கப் பட்டிருக்கிறோம்...

காக்கவும் சோறும்...


நாங்க சாப்பிடறதுக்கு உங்க கிட்ட சோறு கேட்டமா, எங்களுக்கு சாப்பிடறதுக்கு ஏகப்பட்ட பொருட்கள் இந்த பூமியில இருக்கு.

மனிதன்: நீங்க எங்களோட முன்னோர்கள் அதுனால் தான் உங்களுக்கு அம்மாவாசை அன்று சோறு வச்சு படைக்கிறோம்.

காக்கா: அம்மாவாசைக்கு மட்டும் சோறு வைக்கரீங்க நாங்களும் சாப்பிடறோம் அதுக்கு அடுத்த நாள் நம்ம பையன் வீடு தானே என்ற உரிமையில மொட்டை மாடியில காய வச்ச வத்தலை எடுக்க வந்தா ஏன் விரட்டறீங்க ...

ஓ நாங்க உங்க முன்னோர்களா.. சரி சரி நீங்க இப்ப நல்லா எங்க கிட்ட மாட்டிகிடீங்க, உங்க முன்னோர்கள் சொல்றோம் நல்லா கேட்டுக்குங்க...

எவன் எவன் எல்லாம் அப்பா அம்மாக்கு சாப்பாடு போடாமா விட்டீங்களோ, முதல்ல போய் அவுங்கள கூட்டிட்டு வந்து வீட்ல வச்சு சாப்பாடு போடுங்க, செத்ததுக்கு அப்புறம் படத்துக்கு மாலை போட்டுட்டு சாப்பாடு வைத்து என்ன புண்ணியம்.

யாரெல்லாம் பெற்றோர் இறந்துட்டாங்கன்னு காக்காவாகிய எங்களுக்கு சோறு வைக்கரீங்களோ இனிமே அனாதை இல்லத்துக்கு போய் சாப்பாடு போடுங்க அப்ப தான் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும்.

வெயில் காலம் வேற ஆரமிச்சிடுச்சு எங்களுக்கு நீங்கள் சோறு வைக்க வேண்டாம் உங்க வீட்டு மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் தண்ணிர் வைத்தால் அதுவே எங்களுக்கு போதும்.

எங்கள உங்க முன்னோர்கள்னு சொல்லி இருக்கீங்க, நாங்க உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம் அப்புறம் உங்க இஷ்டம் எங்க பேச்சை கேக்காதவங்க தலையில கக்கா போயிடுவோம்...ஜாக்கிரதை...

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு டிடிவி தினகரன் வரவேற்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 23...


வியாதிகளைக் குணப்படுத்தும் ஓல்கா வோரால்..

1979 ஆம் ஆண்டு உயிர் இயற்பியல் (Biophysics) துறையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்ற பெவர்லி ரூபிக் (Beverly Rubik) என்ற ஆராய்ச்சியாளர் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு மாறியது ஒரு சுவாரசியமான கதை.

விளையாட்டுகளிலும், நடனத்திலும் கூட மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் ஒரு சமயம் மூட்டு வலியால் மிகவும் அவதிப்பட்டார். அப்போது டாக்டர் ஓல்கா வோரால் (Dr. Olga Worrall) என்ற சிகிச்சையாளர் தன் கைகளால் தொட்டே நோய்களையும், வலிகளையும் போக்க முடிந்தவர் என்று கேள்விப்பட்டு உடனே அவரை அணுகினார்.

நவீன கல்வியிலும், சிந்தனைகளிலும் வளர்ந்திருந்த ரூபிக்கிற்கு இது போன்ற சிகிச்சை முறைகளில் பெரியதொரு நம்பிக்கை இருந்திருக்க வய்ப்பில்லை என்றாலும் பலர் சொல்லக் கேட்டிருப்பதை சரிபார்க்க இதுவே வாய்ப்பு என்று அவர் கருதினார்.

 டாக்டர் ஓல்கா வோரால் அவருடைய முழங்கால் மூட்டில் கை வைத்த சில நிமிடங்களில் மூட்டு வலி மிகவும் குறைந்து போனது. இது விஞ்ஞானியான ரூபிக் அவர்களுக்கு மிக ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அவர் அறிந்திருந்த மருத்துவ முறைகளில் இது போன்ற அதிசயத்தை அவர் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்ததால் இது குறித்து விரிவாக ஆராய முற்பட்டார். தன் ஆராய்ச்சிகளுக்கு உதவ முடியுமா அன்று அவர் டாக்டர் ஓல்கா வோராலைக் கேட்க அவரும் ஒத்துக் கொண்டார்.

முன்பே பாக்டீரியாக்களை வைத்துப் பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்திருந்த பெவர்லி ரூபிக் ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளைத் தனக்கு நன்கு தெரிந்திருந்த பாக்டீரியாக்களை வைத்தே செய்து பார்க்கத் தீர்மானித்தார். பல நவீன உபகரணங்களை வைத்து நீரில் நீந்தும் பாக்டீரியாக்களைப் பல புகைப்படங்கள் ரூபிக் எடுத்து வைத்திருந்தார்.

அவற்றைத் தொடர்ச்சியாக கவனிக்கையில் அவை நீந்துவது கரடுமுரடில்லாத அமைதியான வளைவுகளாய் தெரிந்தன. சில வேதிப்பொருள்களை அவற்றுடன் சேர்த்தபோது அவை செயலிழந்து ஸ்தம்பித்துப் போவதை அவர் கவனித்தார்.

அப்படி அந்த பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்கிற வேதிப் பொருள்களைப் பெருமளவு அந்த நீரில் சேர்த்து அந்தக் கலவை உள்ள மைக்ராஸ்கோப் ஸ்லைடின் மீது டாக்டர் ஓல்கா வோராலின் கைகளைக் குவித்து வைக்கச் சொன்னார்.

பன்னிரண்டு நிமிடங்கள் கழிந்த பின் அந்த மைக்ராஸ்கோப் ஸ்லைடை சோதித்துப் பார்த்த போது அந்த பாக்டீரியாக்களில் ஐந்திலிருந்து பத்து சதவீதம் பாக்டீரியாக்கள் தங்கள் செயல்திறனை மீண்டும் பெற்றிருந்தன.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக அந்த பாக்டீரியாக்களை வைத்து ஆராய்ச்சி செய்திருந்த ரூபிக்கிற்கு இது போல் முன்பு பாக்டீரியாக்கள் மீண்டும் செயல்திறனை அப்படி மீட்க முடிந்த சம்பவங்களைக் காண முடிந்ததில்லை. ஒருவேளை மனிதக் கைகளின் இளஞ்சூட்டில் அந்த பாக்டீரியாக்கள் அந்த வேதிப்பொருள்களின் செயல்பாட்டையும் மீறி செயல் திறன் திரும்பப் பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழத் தன் கைகளையும், வேறுசிலர் கைகளையும் மைக்ராஸ்கோப் ஸ்லைடில் குவித்து ஆராய்ச்சிகள் செய்து பார்த்தார்.


ஆனால் டாக்டர் ஓல்கா வோராலின் கைகள் குவித்ததால் ஏற்பட்ட விளைவுகள் மற்றவர்கள் கைகளைக் குவித்த போது ஏற்படவில்லை.

அந்தப் பாக்டீரியாக்களை அழிக்கவல்ல, அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்க வல்ல (antibiotic) நுண்பொருள்களை அந்த பாக்டீரியாக்களுடன் சேர்த்து மீண்டும் அந்த ஆராய்ச்சிகளை ரூபிக் தொடர்ந்தார். மிக அதிகமான அளவு அந்த நுண்பொருள்களைச் சேர்த்த போது டாக்டர் வோராலின் தொடுதலால் எந்த வேறுபாடும் தெரியவில்லை.

ஆனால் குறைந்த அளவு நுண்பொருள்களைச் சேர்த்த போது, அந்த பரிசோதனைக் குழாய்களை வோரால் சிறிது நேரம் தொட்ட போது அந்த பாக்டீரியாக்கள் மீண்டும் உயிர் பெறவும் வளர்ச்சியடையவும் தொடங்கின. டாக்டர் வோராலின் கைகளுக்கும் அந்த சோதனைக் குழாயிலிருந்த பாக்டீரியாக்களுக்கும் இடையே ஏதோ நிகழ்கிறது என்பது மட்டும் ரூபிக் அவர்களுக்குத் தெரிந்தது. ஃபாரடே கூண்டு போன்ற நவீன கருவிகள் கூட கண்டு பிடிக்க முடியாத உயிர்மின்காந்த நுண்ணலைகள் (bioelectromagnetic subtle waves) உருவாகி இந்த அற்புதங்களை நிகழ்த்துகின்றன என்ற கணிப்புக்கு வந்தார்.

(சிலர் நட்டால் செடிகளும், மரங்களும் நன்றாக செழித்து வளரும் என்று ஒருசிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அப்படி ஓரிருவர் நடும் தாவரங்கள் எல்லாம் மிகச் செழிப்பாக வளர்வதைப் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அதைப் பற்றி பெரிதாக அப்போது நினைக்கத் தோன்றியதுமில்லை.

ஆனால் ரூபிக் அவர்களின் பரிசோதனைகள் பற்றிப் படிக்கையில் அவையெல்லாம் கூட சிந்திக்க வேண்டியவையாகவே தோன்றுகிறது. அந்த நபர்கள் ஆழ்மன சக்தியாளர்களாக இல்லாதிருந்தாலும் அந்தத் தாவரங்கள் வளர உதவுகின்ற ஏதாவது சக்தியை அந்த விதைகளுக்கோ, நாற்றுகளுக்கோ தர வல்லவர்களாக இருந்திருக்கலாம்)

பெவர்லி ரூபிக் அறிவியல் ரீதியாக ஆழ்மன சக்திகளுக்கு விடை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கையில் டாக்டர் ஓல்கா வோராலோ தன் சக்தியைப் பிரபஞ்ச சக்தியாகக் கூறினார். 1972ஆம் ஆண்டு இறந்த அவர் கணவர் அலெக்சாண்டர் அம்புரோஸ் வோராலும் அவர் போலவே சக்தி படைத்தவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓல்கா வோராலும் 1985ஆம் ஆண்டு இறக்கும் வரை மனிதர்களை மட்டுமல்லாமல் நோய்வாய்ப்பட்ட விலங்குகளையும், தாவரங்களையும் கூடத் தன் சக்தியால் குணப்படுத்தி வந்தார்.

1982ல் Science of Mind என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குணப்படுத்தும் ஆழ்மன சக்தியை விவரிக்கும்படி பேட்டியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னார். ஒரு பொறியியல் வல்லுனரான என் கணவர் அதை நுண்ணிய மின்னலை என்றார். இந்தியர்கள் ப்ராணன் என்று சொல்கிறார்கள். உயிர்சக்தி என்று சிலரும், ஆழ்மன சக்தி என்று சிலரும் கூறுகிறார்கள். பெயர் எதுவாக இருந்தாலும் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என் கணவர் அந்த சக்தி எல்லா மனிதர்களையும் சூழ்ந்து இருப்பதாக உறுதியாகச் சொல்வார். அந்த சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் நோய்களைக் குணப்படுத்துவது சுலபம். அந்த சக்தியில் மின்னலைகள் இருப்பதாக என் கணவர் கடைசி வரை கூறி வந்தார். நாங்கள் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கையில் தங்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்வதாகப் பல நோயாளிகள் சொன்னதைப் பார்க்கையில் அப்படி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இறைவன் இந்த உலகத்தை குறைபாடில்லாமல் படைத்திருக்கிறார். மனிதன் சரியான விதத்தில் வாழாமல் பிறழும் போது நோய் உட்பட பல தீமைகளை வரவழைத்துக் கொள்கிறான். மனிதன் மீண்டும் தன் உயர்நிலையைத் திரும்பப் பெற இந்த இயல்பான சக்தியை உபயோகித்து மீளலாம். இதை நான் இறைசக்தி என்றே நினைக்கிறேன். ஒருவரைக் குணப்படுத்த நான் முயலும் போது இறைவனின் இந்த சக்தி என் மூலமாகச் சென்று பலனளிக்கிறது என்று கூறத் தோன்றுகிறது..

மேலும் பயணிப்போம்......

2016 டிசம்பர் வரை தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன் ரூ 6139.74 கோடி மட்டுமே - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரப்பட்ட கேள்விக்கு IOB வங்கி விளக்கம்...


உயிரணுக்களின் (Cellular memory) ஊடே தொடரும் நினைவுகளும் குணங்களும்...


பொதுவாக மனிதனின் மூளையே நினைவுகளை சேர்த்துவைத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது.

ஆனால் மூளையுடன் நமது உயிரணுக்களும், நினைவுகளையும், குணங்களையும் எடுத்துச்செல்கிறது என்பது உறுப்புதானம் வழி தெரிய வந்திருக்கிறது.

இதயத்தை தானம் பெற்றவர்களிடம் காணப்பட்ட மாறுபட்ட குணநலன்கள், விருப்பங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டு உயிரணுக்கள் நினைவுகளைச் சுமக்கின்றனவா என்ற ஆராய்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது.

ஒருவரிடமிருந்து உறுப்புதானம் பெறும்பொழுது, தானம் கொடுத்தவரின் குணநலன்களின் ஒரு பகுதியும் தானம் பெற்றவருக்கு சென்றிருக்கக் கூடுமா?

வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் தானம் கொடுப்பவருடைய விபரங்கள் சட்டப்படி ஒளிவு மறைவாகவே வைக்கப்பட்டுள்ளது.

எனவே உறுப்புதானம் கொடுப்பவருடைய முழு குண நலன்களைப் பற்றிய விபரங்களைப் பெறுவது கடினமான காரியம்.

இத்தகைய சூழலில் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சியைத் தொடர்கின்றனர்..

1970-ல் கிளாரியா சில்வியா என்ற பெண்மணி, இதயம் மற்றும் நுரையீரலை 18 வயது ஆடவரிடமிருந்து தானமாகப் பெற்றார். தானம் கொடுத்த இளைஞன், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தவர். அவர் இறந்ததனால் அவரது உறுப்புக்கள் தானமாக கொடுக்கப்பட்டன.

தானம் கொடுத்தவரைப்பற்றி கிளாரியாவுக்கு எந்தவிதமான விபரமும் தெரியாது. மாற்று உறுப்பு ஆபரேஷன் முடிந்தவுடன், சிக்கன் உருண்டைகள், மது, குடமிளகாய் முதலிய உணவுகளை உட்கொள்ள தன் மனம் மிகவும் ஏங்கியதாக கூறியுள்ளார்.

ஆபரேஷனுக்கு முன் அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. திடீரென்று தன்னுடைய உணவுப் பழக்கங்களில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதை அவர் உணர்ந்துள்ளார். தன்னுடைய உணர்வுகளை A change of heart என்று ஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார்.

அறிவியலாளர்கள் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்த, உயிரணுக்களின் நினைவுகளின் தொடர்ச்சி எட்டு வயது சிறுமிக்கு நிகழந்தது.

எட்டு வயது சிறுமி, பத்துவயது சிறுமியிடமிருந்து இதயத்தைப் பெற்றாள். இதய மாற்று ஆபரேஷனுக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஒரு சிறுமியை ஒருவர் கொலை செய்வது போன்று அந்த எட்டு வயது சிறுமிக்கு கனவுகள் தொடர்ந்தன.

மனோதத்துவ நிபுணர், உயிரணுவின் நினைவுகள் பத்து வயது சிறுமியிடமிருந்து தொடர்வதால் கனவுகள் தொடர்வதாக நம்பினார்.

உண்மையில், தானமாக பெற்ற இதயத்தைத் கொடுத்த சிறுமியை, யாரோ கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.

இதயத்தைப் பெற்ற சிறுமி, கனவில் தான் கண்ட கொலைகாரனின் அடையாளங்களை காவல் துறையிடம் கூறியிருக்கிறாள். அந்த அடையாளங்களின் உதவியுடன், காவல்துறையினர் கொலைகாரனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்...

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?


பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும்..

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால் தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக் கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடை பிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டு விட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக் கூடாது என்ற விஷயத்தை கடை பிடிக்க வேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...

பிரதமர் மோடி விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்று சித்தரித்து விவசாயிகள் இன்று போராட்டம்...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 23...


மக்கள் துன்பமின்றி வாழ அவர்கள் மனதில் மரணம் என்ற அச்ச உணர்வு இன்றி வாழ வேண்டும். மரணத்தைப் பற்றிய அச்ச உணர்வு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால் மனிதன் அவைகளின் மேல் கவனம் வைக்காமல் தன் பாதையில் உள்ள துன்பங்களை கடந்து செல்ல பழக வேண்டும். அதற்கு தன்னம்பிக்கையும், தைரியமும், கடவுள் நம்பிக்கையும் முழுமையாக வேண்டும்.

வேண்டிய யாவும் கிடைக்காவிட்டாலும், தான் இப்புவியில் பயமின்றி வாழ மனிதன் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மனிதன் இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மாற்றங்களே மனிதனை சீர்படுத்தும். சீர்படுத்தும் எச்செயலுமே மனிதனுக்கு வாழ்வை தரும்.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்கதரிசன தொடரில் இன்று நாம் இங்கு அறிந்து கொள்வது 23-வது தீர்க்க தரிசனத்தை பற்றிய குறிப்புகளாகும்.

23-ம் தீர்க்க தரிசனம் இன்று எதைப்பற்றி நமக்கு தெரியப்படுத்துகிறது என தெரிந்து கொள்வோம்.


அதாவது 7¼ நாழிகைக்குள் இந்த உலகமே ஸ்தம்பித்து நிற்கும் அளவிற்கு ஒரு மகா அதிசய நிகழ்வு, இந்த பூலோகம் மட்டுமின்றி பிற லோகங்களிலும் நடக்கப் போவதாக 23-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது. இதனால் உலக மக்கள் மரண அச்சத்தை கண்டு விட்டு அதிலிருந்து மீண்டு வருவார்கள் என 23-ம் தீர்க்க தரிசனம் சில குறிப்புகளை வெளிப்படுத்துகிறது.

உலகமே ஸ்தம்பித்து நிற்கும் என்றால் என்ன? அது எப்படி நிகழக்கூடும் என்ற கேள்வி நமக்கு இங்கு எழக்கூடும். இதோ அதற்கான விளக்கத்தை 23-ம் தீர்க்க தரிசனமே எடுத்துக் கூறுகிறது.

அதாவது இந்த உலகில் சூரியன் தன் இயக்கத்தில் எப்பொழுதும் போல் இருக்கும், பிற கோள்களும் அதன் அதன் நிலையிலுருந்து மாறாமல் அப்படி இருக்கும். ஆனால் நம்முடைய அன்றாட தேவைகளான தொலைபேசி, தொலைக்காட்சி, இண்டர்நெட், வான் ஊர்திகள், தொலைதொடர்பு சாதனங்கள், சேட்டிலைட் போன்றவை 7¼ நாழிகைக்கு செயல்படாமல் ஸ்தம்பித்து போகும். அப்பொழுது மனிதனுடைய அனைத்து பணிகளும் முடங்கி போய் உலகமே ஸ்தம்பித்து நிற்கும் என்று 23-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை தருகிறது.


இச்சமயத்தில் ஆகாயத்திலிருந்து சில மர்ம வான் ஊர்திகள் திடீரென்று தோன்றி ஆங்காங்கே மக்களை அச்சுறுத்தும் என்றும், இதனால் உலக நாடுகள் ஒருமித்து இதற்கு விளக்கம் காணவும், அதனை தடுக்கவும் முயற்சி செய்வார்கள் என்று 23-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

மலேசிய நாட்டில் ஒரு மிகப்பெரிய கடல் சார்ந்த அசம்பாவிதம் நடைபெறும் என்றும், அதனால் அந்நாடு சில நாட்களுக்கு ஸ்தம்பித்து நிற்கும் என்றும் 23-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


பாரதம் ஒரு புண்ணியப்பூமி. இங்கு குருஷேத்திர போர் நடந்த கதையை உலகமே அறிந்த ஒன்றாகும். அந்த பஞ்ச பாண்டவர்கள் நடமாடிய ஒரு வனப்பகுதி திடீரென்று ஆய்வாளர்களால் கண்டறியப்படும் என்றும்,

அங்கு இதுவரை உலக மக்கள் அறிந்திடாத ஒரு வரலாற்று உண்மையை ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்வார்கள் என்றும்,

அச்சமயத்தில் இந்த இந்திய தேசத்து மண்ணில் தருமம் மீண்டும் தலைதூக்கி நிமிரும் என்றும் அன்று முதல் உலகில் இந்திய தேசம் எல்லா வளமும் பெற்று முதல் வல்லரசு நாடாக திகழ்வதற்கான சூழல் உருவாகும் என்று 23-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு அதிசய குறிப்பை நமக்கு தருகின்றது.


பனி தேசம் ஒன்றில் ஒரு வரலாற்று குறிப்பு இந்திய தேசத்தின் தொன்மையை எடுத்துக் கூறுவதாக அமையும் என்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கும், அவர்களின் வீரத்திற்கும் இது சான்றாக அமையும் என்று 23-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

மக்களை பெற்ற மகராசி என்ற நற்பெயரை இந்த உலகத்தின் விடியலுக்கு காரணமாக அமைய உள்ள  இறைவனே பெறப் போகிறார் என்று 23-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.

இந்த குறிப்பின்படி உலக மக்களை காத்து இரட்சித்திட இறைவனின் வருகை நிச்சயம் என்பதை இதன்மூலம் அறியலாம்...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

திராவிடக் கட்சிகளும் மதுவிலக்கும்...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வின் தேச பத்தர்கள்...


பருக் அப்துல்லாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு பஜ்ரங் தள் தலைவர் அறிவிப்பு...

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியான பரூக் அப்துல்லா சமீபத்தில் ஸ்ரீநகரில் வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகி உள்ளார்.

பரூக் அப்துல்லா பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் கல்வீச்சாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து அவ்வபோது சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் பரூக் அப்துல்லாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் கோவிந்த் பராஸ்கர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்ரா மாவட்ட பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் கோவிந்த் பராஸ்கர் பேசுகையில் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இந்திய பாதுகாப்புப் படையினர் உள்ளூர் மக்களால் தாக்கப்படிருப்பது ராணுவ வீரர்களை அவமதிக்கும் செயலாகும். இந்த சம்பவத்திற்கு பஜ்ரங் தள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

இந்த விஷயத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி ராணுவ வீரர்கள் மீது கற்கள் வீசிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கிறார். இது தேசத்துக்கு எதிரான செயலாகும், இதை எந்த நிலையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என கூறிஉள்ளார்.

பரிசு அறிவித்தது மட்டுமின்றி பரூக் அப்துல்லாவிற்கு எதிராக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

பரூக் அப்துல்லாவை தேச விரோதியாக அறிவிக்க வேண்டும் என கூறிஉள்ளார் கோவிந்த் பராஸ்கர்...

டெல்லியில் 36வது நாள் போராட்டத்தின் போது வெயில் கொடுமை தாங்காமல் தமிழக விவசாயி ராஜ்குமார் மயங்கி விழுந்தார்...


அரசியலில் தலைவனாவது எப்படி?


அன்று முதல் இன்று வரை அரசியலில்
தலைவனாவது எப்படி? இது தான் அந்த இரகசியம்...

நீ ஒரு தனிமனிதன்.

உனக்கு ஆளும் விருப்பம் வந்துவிட்டது.

நீ ஆள மக்கள் வேண்டும்.

குறிப்பிட்ட மக்களைத் தேர்ந்தெடு.

அவர்கள் மதம், இனம், சாதி, ஊர், வரலாறு, பண்பாடு என அனைத்தையும் அலசு.

இதில் எது அவர்களிடம் நன்கு வேறூன்றியிருக்கிறது என்று ஆராய்.

அதைக் கையிலெடு.

அவ்வுணர்வுக்கு எதிரான பிரச்சனைகள், தடைகளை எதிர்த்துப் போராடி அவ்வுணர்வை மேலும் தூண்டு.

உன் பின்னால் ஒரு கூட்டம் வரும்.
உன் வலிமை கூடும்.

அவ்வுணர்வுள்ள மக்களுக்காக ஒருவன் போராடி மடிந்திருப்பான் அவனை அறிந்துகொள்.

அவனின் வாரிசாக மாறு.

உன் மீது விமர்சனங்கள் வரும்.

கருத்தியல் ரீதியான விமர்சனங்களை உன் தலைவனின் பிம்பத்தால் உடை.

நடைமுறை எதிர்ப்புகளை உன் வலிமையால் உடை.

பாதிவாழ்நாள் கழிந்ததும் கிடைத்த நாற்காலியில் அமர்.

கடந்த காலத்தைச் சொல்லியே சுகமாக வாழு.

பணம், புகழும், இல்லமும் தளைக்க நல்லசாவு பெறு.

பத்து தலைமுறைகளுக்கு சொத்தும்.
ஐந்து தலைமுறைக்கு உன் பெயரும் எஞ்சியிருக்கும்...

தமிழின துரோகிகள்.. பார்ப்பனர்களா ? திராவிடவாதிகளா ?


பார்ப்பனர்கள் தமிழ் தேசிய கருத்தியலை விட்டு இந்திய தேசியம் மற்றும் சர்வ தேசியம் என்கின்ற நிலையை அடைந்து விட்டார்கள் அவர்கள் மீண்டும் தமிழ் தேசிய கருத்தியலை நோக்கி திரும்ப மாட்டார்கள் என்றெல்லாம் கருத்து பரப்பபடுகிறது.

தமிழ் பார்ப்பனர்கள் பிராமணர்களோடு கருத்தியலாய் ஒன்றிணைந்தார்கள் இருப்பினும் தமிழ் பார்ப்பனர்களும், பிராமணர்களும் இனத்தால், மொழியால், பண்பாட்டால் வேறுபட்டவர்கள் எனவே அவர்களுக்குள் எந்த ஒரு இரத்த கலப்பும் நடந்தேறவில்லை என்பதே உண்மை.

தமிழனின் பூர்வீக பூமி திராவிட பூமியாய் மாறிய பின் தமிழர்கள் அனைவரும் திராவிட விசம் அருந்தி திராவிடர்களின் கால்களில் தஞ்சம் அடைந்த பின் பார்ப்பானுக்கு இந்திய தேசியத்தை விட்டால் வேறு வழியேது.

சர்வதேசியம் என்பது ஏகாதிபத்திய போட்டி உச்சத்தை தொட பயணிக்கும் காலத்தில் சர்வதேசியத்தை புறந்தள்ளி இனி இந்த பூமியில் ஒரு புழு, பூச்சி கூட வாழ முடியாது.

இதில் தமிழ் பார்ப்பான் சர்வதேசியம் பற்றி சிந்திப்பது ஒன்றும் அதிசயம் அல்ல.

உலகமே சர்வ தேசியம் நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது இருப்பினும் உலகில் எந்த ஒரு தேசிய இனமும் தன் மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரத்தை பிற தேசிய இனத்தவரிடம் பறிகொடுத்துவிட்டு பயணிக்கவில்லை.

பெரும்பான்மை தேசிய இனத்தை சிறுபான்மை தேசிய இனம் ஆளும் கொடுமை தமிழகத்தை தவிர வேறு எங்கும் இல்லை.

தேசிய இன விடுதலைக்கான ஜனநாயக போராட்டத்தையும், வர்க்க போராட்டத்தையும் ஒரே நேரத்தில் நடத்திவிட முடியாது.

இனி தேசிய இன ஒடுக்குதலை கூட சர்வ தேசிய ஒத்துழைப்பின்றி போராடி வெற்றி பெற இயலாது.

இதற்கு ஈழப் போராட்டமே நமக்கு உதாரணமாய் அமைகிறது.

பல தேசியங்களை உள்ளடக்கி ஒரு நாடு என்ற வரையறைக்குள் கொண்டு வந்த ஆளும் வர்க்கம். தேசிய இனங்களுக்குள் ஒற்றுமை இன்மையையும், பகையையும் வளர்த்து கடிவாளத்தை தன் கையில் வைத்து கொள்கிறது.

எந்த முதலாளியும் தன் சுரண்டும் தளத்தில் ஒரு சதுர அடியைக் கூட இழக்க விரும்ப மாட்டான். ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு நாடு பல தேசியங்களின் கூட்டாய் இருந்தால் என்ன. தனித் தனி நாடாய் இருந்தால் என்ன. அவர்களுக்கு தேவை திறந்த வெளி சந்தை, உலக மயமாக்கல் மட்டுமே..

போலி கம்யுனிஸ்ட்டுகள் கூறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பூச்சாண்டி எல்லாம் நமக்கு இப்பொழுது தேவை இல்லாதது.

இந்தியக் கட்டமைப்பில் தமிழன் மீது ஆரிய மயமாக்களின் தாக்கமும், திராவிடக் கருத்தியலும், அதன் அரசியல் அதிகாரத்தின் தாக்கமும் நம் மண், இனம், மொழி, பண்பாடு அனைத்தையும் இழக்கச் செய்து கொண்டிருக்கிறது.

எனவே நமக்கு தேசிய இன எழுச்சி தேவைப் படுகிறது.

நம் வரலாற்றில் நம் முன்னோர்கள் அறியாமையால் செய்த தவறுகளாலும், வரலாற்று நிர்பந்தங்களாலும் சிதைந்து போன தமிழர்களை ஓர் ஒத்த கருத்தியலுக்கு கொணர்வதே நம் நோக்கம்.

உலகில் எந்த மூலையில் தமிழ் பார்ப்பனர் வாழ்ந்தாலும் நம் மொழிக்கு திராவிட வாதிகளால் தீங்கு நேரும் போதெல்லாம் எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் அவர்களாகவே உள்ளனர்.

இங்கு பார்ப்பனர் மட்டு அல்ல.. பிற்ப்படுத்தப் பட்ட சாதிகளும், தாழ்த்தப் பட்ட சாதிகளும் கூட இந்திய தேசியவாதம் பேசாமல் இல்லை. அது தவிர்க்க முடியாதது.

தமிழ் பார்ப்பனர்கள் தமிழ் தேசிய இன ஓர்மைக்குள் வந்தாலும், வராவிட்டாலும் உண்மையில் அவர்களும் தமிழர்கள் என்பதை நாம் சொல்லத் துணியாமல் இருக்க முடியாது.

தமிழ் பார்ப்பனர்களில் சிலர் தாங்கள் தமிழர்கள் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர்.

தமிழர் தென்னாட்டு பழங்குடி மக்களே என சான்று காட்டி மெய்பித்த பி.டி. சீனிவாச ஐயங்கார்.

தமிழரின் தென்னாட்டு பழங்குடி தன்மையும், தமிழனின் பெருமையையும் தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டிய சேச. ஐயங்கார்.

தமிழரே உலகின் முதல் மாந்தன், அவனே இந்திய முழுவதும் பரவி வாழ்ந்தான் என நிறுவிய வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர்.

தமிழ் மொழியும், வடமொழியும் வெவ்வேறென பகுத்துக் காட்டி தனி தமிழுக்கு வித்திட்ட பரிதிமாற் கலைஞர் என தன் பெயரையே மாற்றிக் கொண்ட சூரிய நாராயண சாஸ்த்திரியார்.

தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் பிராகிரத மொழியிலானவை என்பதால் அது வட மொழி சார்புடையது என வட மொழி சார்பாளர்கள் கூறிவந்த நிலையில் அவைகளில் பெரும்பாண்மை தமிழ் கல்வெட்டுகள் என்ற உண்மையை நிருபித்த கே.வி. சுப்பிரமனியன் ஐயர்.

பண்டைய தமிழ் நூற் சுவடிகள் பலவற்றையும் நீரில் வீசப்பட்டதும், கரையானால் அரிக்கப்பட்டதும், தீயிட்டு கொழுத்தப்பட்டு, அரைகுறையாக பொசுக்கப்பட்டு கிடந்த ஓலைச் சுவடிகளை எல்லாம் போய் ஒவ்வொன்றாக தேடி எடுத்து வந்தும், வீடு வீடாக, தெருத்தெருவாக அலைந்து அவற்றையெல்லாம் கொண்டு வந்து சேர்த்து அவற்றை ஆராய்ந்து நமக்கு அரும் பெரும் இலக்கிய செல்வங்களை நூல் வடிவில் தந்த பேராசிரியர் உ.வெ. சாமிநாத ஐயர்.

தமிழ் தேசிய ஓர்மைக்கு பள்ளு பாடிய சி.சுப்பிரமனிய பாரதியார் என தமிழ் தேசிய ஓர்மைக்கு வித்திட்டவர்கள் பார்ப்பனர்களே..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலைய நுழைவு போராட்டத்தை நடத்தி தாழ்த்தப் பட்டவர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றவர். வைத்தியநாத ஐயரே அன்றி. திராவிடவாதிகள் அல்ல..

கேரளாவில் வைக்கத்தில் ஆலைய நுழைவு போராட்டத்தில் (காங்கிரஸ் நடத்தியது) பத்தோடு பதினொன்றாக கலந்து கொண்ட ஈ.வெ.ரா. தமிழகத்தில் வைக்கம் வீரர் என புகழப்பட்டார் காரணம் கன்னட தெலுங்கர் அல்லவா..

கேரளாவில் தாழ்த்தப் பட்டவர்களுக்காக போராடியவர் தமிழகத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்காக செய்தது ஒன்று இல்லை தாழ்த்தப் பட்டவர்களை எப்படி எல்லாம் இழிவு படுத்தினார் என்பதை பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

தமிழன் எவ்வளவு பெரிய காரியம் செய்தாலும் அதை புகழ்வார் யாரும் இல்லை இரயிலே வராத தண்டவாளத்தில் தலைவைத்து சிறிது நேரம் படுத்துவிட்டு வந்த கருணாநிதியை கல்லக்குடி கொண்ட கருணாநிதி என்று புகழுவார்கள் காரணம் தெலுங்கன்.

ஈழ தமிழர் படுகொலையின் போது கடற்க்கரையில் காற்றுவாங்க போன கருணாநிதியை தான் யாரும் புகழ்ச்சி பெயர் வைக்கவில்லை.

நாம் வேண்டுமானால் ஒரு பெயர் வைப்போம்.  இலட்சம் தமிழர் உயிர் குடித்து பரலோகம் சேர காரணமாய் இருந்த கருணாநிதியை இனி துரோகி என்று அழைப்போம்.

இப்படி பார்ப்பனர்கள் தமிழ் தேசியத்தை மீட்டு விட்டால் திராவிடர்கள் தன் ஆளுமையை இழக்க வேண்டி வரும் எனக் கருதியே ஈ.வெ.ரா. பார்ப்பான் தமிழ் இன எதிரி என்று கூறினார்..

தமிழர்களும் பார்ப்பானுக்கும், பிராமணனுக்குமான வித்தியாசம் அறியாமலும் பார்ப்பனர் மீதிருந்த பொறாமையாலும் ஈ.வெ.ரா. வின் பின் அணி திரண்டு தன் சொந்த இனத்தை படு குழியில் தள்ளினர்.

கடந்த காலத்தில் நம் முன்னோர்களால் நடந்த வரலாற்றுத் தவறுகளுக்கு இன்றைய தலைமுறை எப்படி பொறுப்பாவார்கள்..

நம் மூவேந்தர்களும் மதப் பித்துக் கொண்டு, வைதீக பிராமணியத்திடம் ஏமாந்து போனதால் ஒட்டு மொத்த தமிழினமும் பிளவு பட்டு போனது.

என் பாட்டன், முப்பாட்டன் செய்த தீண்டாமை என்னும் பிழையை நீக்கி இனம் என்னும் ஒருமைபாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், வருங்காலத்தில் சாதியற்ற ஒரு தேசிய இனமாக மாற்ற முடியும்.

இதை திராவிடவாதிகள் விரும்புவதில்லை காரணம்.. திராவிடர்களுக்கு தமிழனிடம் சாதி இல்லாமல் போனால் அதிகாரம் பறிபோய் விடும்.

எனவே,  திராவிடர்களும், திராவிடவாதிகளும் தமிழ் தேசிய கருதியலை எதிர்ப்பதுடன் அது தமிழர்களிடயே செல்வாக்கு செலுத்தா வண்ணம் பல்வேறு இடையூறுகளும், தவறான பிரச்சாரங்களையும் செய்து வருகிறார்கள்.

இந்து மதம் தமிழகத்தில் பலமாக கால் ஊன்ற காரணமான திராவிடர்களும் அவர்களின் இயக்கங்களிலும், கட்சிகளிலும் குப்பை கூட்டும் நம் தமிழ் இன திராவிடவாதிகளும் நம்மை பார்த்து இந்து துவவாதிகள் என்றும் வேறு சிலர் கிறித்துவ மிசினரிகளின் ஏஜெண்டுகள் என்றும் நம்மை தூற்றுகிறார்கள்.

திராவிடவாதிகளிடம் ஒன்றை கேட்கிறேன்..

திராவிட தலைவர்களில் தமிழர்களுக்கான ஒரு நேர்மையான ஆள் ஒருவனைக் காட்டுங்கள் பார்ப்போம்.

ஈ.வெ.ரா என்பீர்கள். அவர் யோக்கியதை ஊர் அறிந்த விசயம்.

ஊருக்கு தெரியாவிட்டால் நாங்கள் கிழிப்போம்..

தமிழன் கட்டும் தாலியைக் கூட கிண்டல் பேசி கேவலமாகப் பேசி தமிழச்சிகளின் தாலியைக் கூட அறுத்து தமிழன் ஈ.வெ.ரா. வின் எடைக்கு எடை தங்கம் கொடுக்க அதையும் கூட வாங்கி சொத்து சேர்த்தவர் அல்லவா...

அச்சொத்துகளை எல்லாம் வீரமணி யாதவ் (திராவிடன்) கையில் கொடுக்க அதை வாங்கி அவர் ஆட்டம் போட தமிழர்களில் திராவிடத்தை நம்பும் எத்தனையோ குடும்பங்களை இளித்தவாயர்களாக ஆக்கிய வீரமணியை நேர்மையானவர் என்று கூறலாமா..

அல்லது தமிழர் விடுதலை பேசி தமிழ் தமிழர் இயக்கங்கண்டு ஐயா ஈ.வெ,ரா மீது மதிப்பும் பாசமும் வைத்திருந்து இறுதியில் வழுக்கி கருணாநிதியின் காலில் விழுந்த சு.வீ.யை நேர்மையானவர் என்று கூறலாமா..

அல்லது சர்க்காரியா கமிசன் முதல் 2ஜி வரை ஊழ்ல் புரிந்த, இன்னும் ஊழல் புரிய தள்ளுவண்டியில் காத்திருக்கும் கருணாநிதியை நேர்மையானவர் என்று கூறலாமா.

இந்த யோக்கியர்களை விட பார்ப்பான் எந்த வகையில் விசம் உள்ளவன் என்று இவர்கள் கூறுவார்கள்.

பொய், பித்தலாட்டம், ஏமாற்றும் அரசியல், சுரண்டுதல், ஊழல் புரிதல், சாதி வெறியை தூண்டுதல், சமய மோதலை ஊக்குவித்தல், அடிக்கடி நிறம் மாறுதல் போன்ற கேவலங்களை தவிர இவர்களிடம் தமிழர்கள் கண்ட யோக்கியதை தான் என்ன ?

இவர்களை விட தமிழுக்காகவும் தமிழ் மொழிக்காகவும், இனத்திற்காகவும் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் பாடுபட்ட தமிழ் பார்ப்பான் எந்த விதத்தில் அயோக்கியன் ?

பார்ப்பான் இல்லை என்றால் தமிழ் என்றோ அழிந்து போய் இருக்கும் அல்லது திராவிடர்கள் அழித்திருப்பார்கள்.

பார்ப்பனர் தமிழ் தேசியத்திற்க்குள் வந்தாலும், வராவிட்டாலும் பார்ப்பனர் தமிழர் என்பதை சொல்ல நாம் தயக்கம் காட்ட வேண்டியதில்லை..

வாழ்க தமிழ்.. வளர்க தமிழ் தேசியம்...

கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்தை எல்லாம் தமிழர்கள் என்று நம்பும் ஈழத்தமிழர்கள் இருக்கும் வரை...


என்ன தான் ஆயுதபலம் பெற்றாலும் திராவிட அரசியல் ஒட்டுண்ணியாக ஊடுருவி நிச்சயம் தமிழினத்தை அழித்து விடும்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 22...


ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய ஒரு முறை கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சி (ganzfeld experiment). இம்முறை ஓல்ஃப்காங்க் மெட்ஸ்கர் என்ற ஜெர்மானியரால் 1930களில் வேறொரு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. சுமார் 1970 ஆம் ஆண்டிற்கு மேல் மிகப் பிரபலமாகி பல ஆழ்மன ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் தகவலைப் பெறுபவர் ஒரு தனியறையில் தனித்து விடப்படுவார். அவர் சாய்வு நாற்காலியில் கண்களை மூடியபடி ஓய்வாக அமர்த்தப்படும் அவருடைய மூடிய கண்களின் மீது பாதியாக வெட்டப்பட்ட பிங்பாங்க் பந்துகள் வைக்கப்பட்டிருக்கும். காதுகளில் ஹெட்போன்கள் வைக்கப்பட்டு ஒரேமாதிரியான இசை தொடர்ந்து கேட்கும். முகத்தில் சிவப்பு விளக்கொளி விழும்படி வைக்கப்பட்டிருக்கும். தகவல் அனுப்புபவர் வெளியே இருந்து ஏதாவது ஒரு பொருளை மனதில் நினைத்து அந்தத் தகவலை உள்ளே உள்ளவருக்கு அனுப்புபவர்.

அரை மணி நேரம் நீளும் இந்த ஆராய்ச்சியில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பவர் தன் மனதில் தோன்றுவதை சத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அதை டேப் செய்தோ, கையால் எழுதியோ குறித்துக் கொள்வார்கள்.

ஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் டீட் ரேடின், டேரில் ஜே.பெம், சார்லஸ் ஹொனொர்டன் ஆகியோர் இந்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிமுறையில் ஆழ்மன சக்திகள் நன்றாகச் செயல்புரிகின்றன என்று தங்கள் அனுபவங்கள் மூலம் கூறினாலும் ஆராய்ச்சியாளர்கள் சூசன் ப்ளாக்மோர், ரே ஹைமன் ஆகியோர் இந்த ஆராய்ச்சிகளில் பல குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

சார்லஸ் ஹொனொர்டன் செய்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகளில் சிலவற்றில் அந்த அரை மணி நேரம் தகவல் பெறுபவர் சொல்லிக் கொண்டு வரும் வர்ணனைகள் தகவல் அனுப்புபவர் இருக்கும் சூழ்நிலைகளையும் தெளிவாக விவரிப்பதாக இருந்ததாம்.

ஆனால் உண்மையில் அந்த ஆராய்ச்சி முறையைப் பார்க்கும் போது அது ஒருவரைத் தியான மனநிலைக்கு அழைத்துச் செல்லத் துணை புரிகிறது என்றே தோன்றுகிறது. நம் கவனத்தைச் சிதற வைக்கும் புலன்களில் முக்கியமானவை கண்களும் காதுகளும் தான். அவற்றை அடைத்து, தொடர்ச்சியாக ஒரே போன்ற இசை கேட்டுக் கொண்டிருக்கையில் தியான நிலைக்கு அது உதவுகிறது. அதைத் தான் கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சியில் செய்கிறார்கள்.

ஏறத்தாழ அதே கால கட்டத்தில் (1970 களில்) தான் கலிபோர்னியாவில் உள்ள SRI என்றழைக்கப்படும் ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி நிறுவனம் (Stanford Research Institute) பல வித்தியாசமான ஆராய்ச்சிகளை இன்கோ ஸ்வான், மற்றும் பேட் ப்ரைஸ் (Pat Price) என்ற முக்கியமான ஆழ்மனசக்தி வல்லுனர்களை வைத்து நடத்தியது.


அவர்களில் ஸ்வான் பற்றி முன்பே (ஆழ்மன சக்திகள் 12ல்) சிறிது குறிப்பிட்டு இருந்தோம். புகழ்பெற்ற விஞ்ஞானியான ரஸ்ஸல் டார்க் ஒரு ஆராய்ச்சியில் ஒரு காகிதத்தில் '49\'b020'S, 70\'b014'E' என்பதை மட்டும் எழுதி ஸ்வானிடம் தந்து அவருக்கு அதைப் பார்த்ததும் கிடைக்கும் தகவல்களை எல்லாம் சொல்லச் சொன்னார். சிறிது நேரம் கண்களை மூடியிருந்த ஸ்வான் கண்களைத் திறக்காமல் தான் கண்டவைகளை சொல்ல ஆரம்பித்தார்.

எனக்கு இது ஒரு தீவு போலத் தோன்றுகிறது. நிறைய பாறைகள் உள்ளன. மிகவும் கச்சிதமாகக் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. ஒரு ரேடார் ஆண்டெனாவும், ரவுண்ட் டிஸ்கும் தெரிகிறது. வடமேற்கில் ஒரு விமானத் திட்டு தெரிகிறது..... என்று சொல்ல ஆரம்பித்தார்.

அவர் சொன்னது போலவே அந்த எண்கள் குறிக்கும் அட்சரேகை தீர்க்கரேகை உடைய, தெற்கு இந்து மகா சமுத்திரத்தில் உள்ள, கெர்க்யூலன் என்ற சிறிய பிரெஞ்சுத் தீவில் எல்லாம் சரியாக அப்படியே இருந்தன.

SRI நடத்திய ஆராய்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர் பேட் ப்ரைஸ். ஒரு போலீஸ் அதிகாரியான அவர் தன் ஆழ்மன சக்தியால் பல குற்றவாளிகளை பெரிய சிரமமில்லாது கண்டுபிடிக்கக் கூடியவராக இருந்தார். அது SRI ஆராய்ச்சியாளர்கள் கவனத்தைக் கவர்ந்தது. அவரை வைத்து அவர்கள் செய்த ஆரம்ப ஆராய்ச்சிகள் கற்பனையையும் மிஞ்சும்படி இருந்தன.

அமெரிக்க CIA அதிகாரி ரிச்சர்டு கென்னட் என்பவர் செய்த ஆராய்ச்சியில் பேட் ப்ரைஸ் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய சுரங்க முகாம் ஒன்றை மிக நுணுக்கமானத் தகவல்களுடன் விவரித்தார்.

National Security Agency (NSA)ன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மிக மிக ரகசியமான தகவல்களை ஆழ்மன ஆராய்ச்சிகளால் தர முடியும் என்று நம்ப முடியாத அரசாங்கம் அவரை ரஷிய உளவாளியாக இருக்கக்கூடும் என்று கூட சந்தேகித்தது. அவர்கள் சந்தேகத்தைப் போக்க பேட் ப்ரைஸ் ரஷிய ரகசிய தளவாடங்களையும் கண்டறிந்து சொல்வதாகக் கூறினார்.

ரஷியாவில் வட யூரல் மலைகளில் ஒன்றான நரோட்னைனா என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ரகசிய தளவாடத்தைப் பற்றியும், அங்கு அதிகமாக இருந்த பெண் ஊழியர்களைப் பற்றியும், ரேடார் டிஷ்கள் பற்றியும் விவரித்துச் சொன்னார். பின்பே அமெரிக்க அரசாங்கத்தின் சந்தேகம் நீங்கியது.

இது போல பல ராணுவ ரகசியத் தளவாடங்கள், உயர் கருவிகள் பலவற்றை நுண்ணிய விவரங்களுடன் பேட் ப்ரைஸிடம் இருந்து பெற்றார்கள். (ஸ்டாலின் காலத்தில் வாசிலிவ் என்ற ஆழ்மன சக்தியாளரை வைத்து அவர்களும் அமெரிக்க ரகசியங்களைப் பெற்றார்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் முன்பு கூறியது நினைவிருக்கலாம்).

SRI பாரடே கூண்டில் பேட் ப்ரைஸை அமர வைத்துப் பல ஆராய்ச்சிகள் நடத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக 1975 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பேட் ப்ரைஸ் இறந்து போனது ஆழ்மன ஆராய்ச்சிகளுக்குப் பெருத்த நஷ்டம் என்று CIA யின் உயர் அதிகாரிகளும், ஆழ்மன ஆராய்ச்சியாளர்களும் கருதினார்கள். அவருடைய மரணம் ரஷிய உளவாளிகளால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற வதந்தி அக்காலத்தில் நிலவியது.

அவர் மேலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால் தங்கள் அனைத்து ராணுவ ரகசியங்களும் வெளியே வந்து விடும் என்ற பயத்தில் ரஷியா அவரைக் கொல்லும் முயற்சிகளை எடுத்திருக்கக் கூடுமா என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகள், SRI நடத்திய ஆராய்ச்சிகள், மற்றும் ஃபாரடே கூண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்றவைகளையும், வெளிப்படும் அலைகளையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள். அப்போது மனிதர்களிடமிருந்து வெளிப்படும் மிக நுண்ணிய மின்காந்த அலைகளையொத்த அலைகள் பற்றி அவர்கள் அறிய நேரிட்டது.

Bioelectromagnetics என்ற விஞ்ஞானத் துறையின் கீழ் அந்த ஆழ்மன சக்தி அலைகளும் ஆராயப்பட்டன. அந்த அலைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததை நாமும் காண்போமா?

மேலும் பயணிப்போம்....

அவன நான் ஏன் பாக்கணும் ஏன் அவன் வந்து பேச மாட்டானா அதை விட அவனுக்கு என்ன புடுங்குற வேலை...


முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும் சமையலறைப் பொருட்கள்...


தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி வார இறுதியில் மட்டுமின்றி, தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகளை உடனே நீக்கலாம்.

தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில்.. இரட்டை இலையின் விலை 60 கோடி...


எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்...


பல ஆதரங்களுடன் விளக்கும் ஆய்வாளர்கள்...

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்து விட்டது.

தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத் தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.

இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = பெருமிடு என்று அழைக்கப்பட்டது. அதுவே பிரமிடு என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும். அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

Heinrich Kari Brugsh - History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்...

எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார்.

Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர்.. எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்  என்கிறார்...

ஆவிகள் உலகின் அமானுஷ்யம்...


வவுனியா நெலுக்குளத்தில் நடந்த உண்மை சம்பவம்...

1989 ல் தயாவதி என்ற பாட்டி இறந்து போனார் இரண்டு நாட்கள் அவர் உடல் வீட்டில் இருந்தது.

இரண்டாவது நாள் தகனம் செய்ய ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேவாரங்கள் பாடிக் கொண்டிருக்கும் போது  அதிசயமாக அந்த பாட்டி எழுந்து அமர்ந்து விட்டார்.

வந்தவர்கள் பீதியில் கலவரமடைந்து விட்டார்கள்.

பின்பு அவர் சொன்ன விடயங்கள் அதிர்ச்சியாய் இருந்தது.

தான் ஒரு ஒத்தையடி பாதையில் இறந்து போன தனது தாயாருடன் நடந்து போகும் போது அங்கே நிறைய கல்லுகள் குவிந்து கிடந்ததாம் அதில் நிறைய இனம் தெரியாத நபர்கள் அமர்ந்து இருந்தனராம் ஒரு பாதை முடிவில் ஒருவர் வந்து ஒரு கதவை திறந்து விட்டாராம் ஆனால் தாயை மட்டும் தான் உள்ளே அனுமதித்தாராம் நீ இப்போது வரவேண்டாம் என பாட்டியை வெளியே தள்ளி விட்டானாம்.

கீழே பாட்டி முழித்து கொண்டார்.

இந்த சம்பவம் அறிந்த எல்லோரும் இன்றும் அவரை சந்தித்து செல்கிறார்கள் இதெல்லாம் பார்க்கும் போது அடுத்த ஜென்மம் உண்மையாக இருக்கலாம்...

சேலம் உள்பட 18 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை...


தமிழகத்தில் நாளை (ஏப்-18ம் தேதி) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

இதன்காரணமாக நாளை பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  1. சென்னை
  2. திருவள்ளூர்
  3. காஞ்சிபுரம்
  4. அரியலுார்
  5. கடலூர்
  6. விழுப்புரம்
  7. கிருஷ்ணகிரி
  8. திருவண்ணாமலை
  9. கரூர்
10. திருச்சி
11. தர்மபுரி
12. வேலூர்
13. நாகை
14. புதுக்கோட்டை
15. நாமக்கல்
16. பெரம்பலூர்
17. சேலம்
18. ஈரோடு

தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்....

அதிமுக வின் 122 எம்எல்ஏ க்கள் சென்னை வருகை...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 22...


ஆகாயத்தில் ஒரு ஒளி  என்ற வருங்கால தீர்க்க தரிசனத் தொடரில் இன்று இடம் பெறுவது 22-ம் பகுதியாகும். இந்த 22-ம் தீர்க்க தரிசனம் நிகழ்கால உண்மைகளை சற்று ஆழமாக எடுத்துக் கூறுகிறது.

நிகழ்வுகளின் காலம் வந்துவிட்டது என்றும், தீர்க்க தரிசனங்களின் உண்மைத் தன்மைகள் உலக மக்கள் அறியும் நேரம் வந்துவிட்டதாக கூறுகிறது.

இன்றைய 22-ம் தீர்க்க தரிசனம் சுமேரியா நாட்டில் உருவாகும் ஒரு மர்ம நோயால் உலக நாடுகளே அச்சமடையப் போவதாக கூறுகிறது.

அங்கு மனித இனத்துக்கும், குரங்கு இனத்துக்கும் உருவாகும் ஒரு கலாச்சார இணைப்பே இதற்கு காரணமாக அமைய உள்ளதாக 22-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.

22-ம் தீர்க்க தரிசனத்தின் படி மனித மரபியல் மாற்றங்கள் கடந்த 3 ½ ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் இதற்கு மனிதனே முழுக்க காரணம் என்றும்,

இதற்கான ஆய்வுகளை மனிதன் துவங்கி பல மர்மமான நோய்களுக்கு வித்தாக அமைத்து விட்டான் என்று 22-ம் தீர்க்க தரிசனம் ஒரு அதிர்ச்சியான தகவலை தருகிறது.

மேற்கண்ட உண்மைகளை மருத்துவ ஆராய்ச்சிக் குழு கண்டறிந்து உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டும் என்று  22-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில புள்ளி விபரங்களை தருகிறது.


மனித மரபியல் மாற்றம் கடந்த 3½ வருடங்களாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட உலக அமைப்பு ஒன்று முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகும்.

இந்த மரபனு மாற்றம் உலகத்தையே அச்சுறுத்தும் மனித வைரஸ்கள் என்று 22-ம் தீர்க்க தரிசனம் கூறுகிறது.

இந்த மரபனு மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் நரமாமிசம் சாப்பிடும் மனிதர்களாக மாறக் கூடிய வாய்ப்பாக அமையக் கூடும் என்று 22-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில குறிப்புகளை தருகின்றது.

பகஸ்தா (PAGASDA ) என்ற ஒரு வார்த்தை அறிவியல் துறையில் இடம் பெற உள்ளதாகவும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்த வார்த்தை ஒரு சமுகத்தில் இடம் பெற்று இருந்ததாகும்,  இனி மக்களிடையே இந்த வார்த்தை மிகவும் பிரபலமடையும் என்று 22-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

பகஸ்தா (PAGASDA) என்பது மக்கள் அச்சப்படக்கூடிய ஒரு வார்த்தையாக இருக்கும் என்றும்,

உலக சுகாதார அமைப்பிற்கு இனி போதாத காலமாகவும், தலைவலியாகவும் இந்த வார்த்தை இருக்கும் என 22-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


நாளைய மக்கள் வர்க்கம் தங்களை மேம்படுத்திக் கொள்ள இயற்கையை மட்டுமே சார்ந்து வாழ வேண்டும் என்றும்,

அவ்வாறு இல்லாது மாறுபட்டு நடக்கும் காலத்தில் இது போன்ற ஒரு கொடுமையான சூழலை மக்கள் சமுதாயம் சந்திக்கும் என்று 22-ம் தீர்க்க தரிசனம் இங்கு எடுத்துக் கூறுகிறது.

காலத்தால் அழியாத ஒரு மாபெரும் மருத்துவ பொக்கிஷமே உலக மக்களை நோய்களிலிருந்து காத்திடும் என்றும்,

அது இந்திய தேசத்திலிருந்தே கிடைக்கப் பெறும் என்று 22-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.


மருத்துவ உலகில் இந்திய தேசம் பல புதுமைகளை படைத்து, மக்கள் சமுகத்திற்கு உதவி செய்யும் என்றும்,

இதனால் உலக வரலாற்றில் இந்தியா தனக்கென ஒரு சிறப்பான இடத்தை அடையும் என்றும்,

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஆங்கில மருத்துவம், மாற்றுமுறை மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவத்துறைகள் தமது சாதனைகளை இந்திய தேசத்தில் நிகழ்த்தி, உலக மக்களுக்கு உதவும்படி தமது கடமைகளை செய்யும் என்று 22-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

புத்துயிர் தரும் புது மூலிகை ஒன்று இந்திய தேசத்தில் கண்டறிந்து பயிரிடப்படும் என்றும்,

இந்திய தேசத்தில் கண் குருடு என்ற நிலை முற்றிலும் மாறி மக்கள் நலமுடன் வாழும் புதிய இந்தியாவை உலக நாடுகள் காணும் என்று 22-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


63 - நாயன்மார்கள் வாழ்ந்த புண்ணிய பூமி ஒன்றில் மகத்தான அற்புதம் ஒன்று நிகழ உள்ளது என்றும் இதுவே 22-ம் தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்கு முன் நிகழும் சம்பவம் என்றும்,

இது நடந்தால் 22-ம் தீர்க்க தரிசனம் மெய்பட நடக்கும் என 22-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

புரட்சி செய்ய வா தமிழா...


புரட்சிகள் என்பது இல்லாமல் - மனித
உணர்ச்சிக்கு இங்கே மதிப்பில்லை...

மனித உணர்ச்சிக்கு மதிப்பு கிடைத்ததென்றால் - அது புரட்சியால் விளைந்த விளச்சலன்றோ...

புரட்சியாளன் புதைவதில்லை - அவன்
ஒவொரு முறையும் விதைபடுவான் ..

விதைக்கும் விதையின் வளர்ச்சி - அதுவே நாளை வெடிக்கின்ற புரட்சி...

நேத்தாஜி புரட்சி விதைத்தது  அன்று
பிரபாகரன் என்று வெடித்தது இன்று...

இலுமினாட்டி இரகசியம்...


மனமும் கர்மாவும்...


உங்களுடைய ஆழ்மனம் எதை எவ்வாறு நம்பியிருக்கிறதோ அதுதான் உங்கள் கர்மாவை தீர்மானிக்கிறது.

அதாவது உங்களுடைய In Believable System எதை பாவம் என நம்பியிருக்கிறதோ அது பாவமாகவும், எதை புண்ணியம் என நம்பியிருக்கிறதோ அதை புண்ணியமாகவும் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் சராசரி மனிதனால் அந்த In Believable Systemல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அது அவ்வளவு சுலபமும் அல்ல.

இதை உணர்ந்த சித்தமார்கள் அதை எளிமையாக மாற்றி அமைத்து மனித நலனுக்காக சில இயற்கை மீறல்களையும் செய்யதான் செய்தார்கள்...

பதிவு - நண்பர்

இந்த பௌதீக உடல் அழிந்தாலும் உங்கள் ஆன்மா கர்மாவை சுமந்து சென்றே மறுபிறப்பு எடுக்கும்.

ஆக மனதின் ஊடே கர்மா செயல்படும் என்பது தெளிவாகிறது. அப்படியான மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி கர்மாவை கூட்டவோ குறைக்கவோ அல்லது முற்றிலுமாக அழிக்கவோ முடியும்.

குறிப்பு - முட்டாள்தனமாக இதில் உள்ள சூட்சமம் அறியாமல் யாரும் பாவம் செய்யலாம் என எண்ணி துன்பப்படாதீர்கள்.

அடேய் ஜெயா சமாதியை இழுத்து பூட்டுங்க டா...


ஆவிகள் உலகின் அமானுஷ்யம் - எஸ்.பி.ஆர். சங்கம்...


இங்கிலாந்து, அமெரிக்க பல்கலைக் கழகங்களின் தலை சிறந்த விஞ்ஞானிகளும் பேராசிரியர்களும் (Sir William Crooks, Dr, F.W.H.Miyers. Sir Oliver Lodge, Richardd Hodson, Edmmund Gurney, Frank Padmore, R.D. Own, Prof.Aksakof, Russel Wallace, C.N.Jones) ஒன்று சேர்ந்து சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்கள்.

இவர்களால் மனோதத்துவ ஆராய்ச்சியாளர் சங்கம் (Society for the Psychical Research) என்ற ஓர் அமைப்பு 1885 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

எஸ்.பி.ஆர் என்று பிரபல்யமாகிய இச்சங்கத்திற்கு அமெரிக்காவிலும் ஒரு கிளை இருந்தது.

மனிதன் இறந்த பின் வேறொரு நிலையில் வாழ்கிறான் என்ற அபிப்பிராயத்தை யார் தெரிவித்தாலும் அவர் கிறிஸ்தவ உலகின் பலத்த கண்டனதுக்கு ஆளாகக்கூடிய கால கட்டத்தில் இச்சங்கம் தமது ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் துணிவுடன் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது.

எஸ்.பி.ஆர். என்று பிரபலமாகிய இச்சங்கத்தினர் ஆவி உலக இடையீட்டாளர்கள் (Mediums) மூலமே தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தினார்கள்.

இந்தச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்த டாக்டர் மையர்ஸ் தான், இறந்த பின் தனது நண்பர் சேர்.ஒலிவர் லொட்ஸ் உடன் தொடர்பு கொள்வதாக வாக்களித்திருந்தார். அவ்வாறே தொடர்பு கொண்டு பயனுள்ள பல தகவல்களைக் கொடுத்தும் உதவினார்.

இறந்தவர்களுடைய ஆவிகள் இவ்வுலகில் உள்ள தங்கள் உறவினர்களுடன் மீடியம்கள் மூலம் தொடர்பு கொண்டு குடும்ப விவகாரங்கள் பற்றிய விடயங்களைக் கூறிய சந்தர்ப்பங்கள் ஏராளமாக உள்ளன.

இறக்கும் பொழுது மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஆவல் காரணமாக தங்கள் ஆசைகளை வெளிப்படுத்துவதற்கு ஆவிகள் மீடியம் களை உபயோகிப்பதுண்டு.

பிலிப்ஸ் என்ற ஒரு ஆங்கிலேயரும் அவரது மனைவியும் 25 வருடங்களுக்கும் மேலாக செய்த தீவிர ஆராய்ச்சிக்குப் பின் இறப்புக்குப்பின் வாழ்வு என்ற ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றனர்.

பல ஆண்டுகளாக ஆவிகளுடன் தொடர்புக் கொள்ளும் அனுபவங்களையும், பல நாடுகளில் ஆவிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டிருப்பவர்கள் மறு உலகத்தைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதைப் பற்றியும் பிலிப்ஸ் தம்பதியர் நூலில் விளக்கியுள்ளனர்.

அந்நூலில் அடங்கிய ஏராளமான தகவல்களில் முக்கியமானதொன்று, இலண்டனில் 19 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி.

இங்கிலாந்தில் முதன்முறையாக புகைக்கூண்டுகளின் உந்து சக்தியைக் கொண்டு பறக்கவிடப்பட்ட ஆகாய விமானம் திசைத் தப்பிப் போய் எங்கோ விழுந்து நொருங்கிவிட்டது.

அதில் சென்ற தலைமைப் பொறியியலாளரின் ஆவி.. எவ்வாறு இலண்டனில் உள்ள விமானக் கம்பெனியின் மேலதிகாரியையும் ஒரு பிரபல அரசியல்வாதியையும் மீடியம் மூலமாகத் தொடர்புக் கொண்டு விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுகளைப் பற்றித்தெரிவித்தது என்பதே அது.

இந்நூலில் கூறப்பட்ட இன்னொரு சுவராசியமான சம்பவம்.. மார்க் என்னும் ஒரு பத்திரிகை நிருபர் பற்றியது.

இவர் இலண்டனில் ஆவிகளுடன் தொடர்புக் கொள்ளும் ஒரு குழுவில் உறுப்பினராக இருந்தார். வழக்கம் போல் ஒரு இரவு, இக்குழு ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆவி, உனக்கு யுத்த முனையில் நிருபராக கடமையாற்றும்படி அழைப்பு வரும். போகாதே என்று மார்க்கை எச்சரித்தது.

யுத்த முனையில் கடமையாற்ற வேண்டும் என்ற துடிப்பும் ஆர்வமும் கொண்ட மார்க் அழைப்புக் கிடைத்தவுடன் ஆவியின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது யுத்த முனைக்குச் சென்று விட்டார்.

சில நாட்களுக்குப் பின்னர் மார்க் உறுப்பினராக இருந்த குழு, ஆவிகளுடன் தொடர்புக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆவி உலகில் இருந்து மார்க்கினுடைய ஆவி பேசியது.

இங்குள்ள எனது வழிகாட்டி நண்பரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது யுத்த முனைக்குச் சென்றேன். அங்கு கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது யாருக்கோ குறிவைத்து குண்டு ஒன்று எனது நெஞ்சில் பாய்ந்து விட்டது. மறுகணம் எனது உடலையே நான் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். பின்னர் எப்படியோ இங்கு வந்து சேர்ந்து விட்டேன் என்றது அது...