28/02/2019

உடலுக்கு தேவை நடை பயிற்சி....


நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடைபயிற்சி தான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது நடைபயிற்சி போங்க என்பதாக தான் இருக்கும்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்க வேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ நடக்க ஆரம்பித்து நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம்.

இது ஆண்களுக்கு 92 முதல் 102 பாத அடியாகவும் பெண்களுக்கு 91 முதல் 115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால் தான் ஆண்களுக்கு இணையாக நடக்க முடியும். நடைப்பயிற்சியின் போது வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.

மூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.

சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி காலுறைகள் (shocks), செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும்...

அரசியல் கூத்தாடிகள் ஓட்டு பிச்சைக்காரர்கள்... காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் உண்மை முகம் இதுவே...


தொட்டாற்சிணுங்கி இய‌ற்கை வைத்தியம்...


தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல... உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.

தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள்.

சர்க்கரைக்கு சர்க்கரைக்கு சரியான தீர்வு...

தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். இதேபோல், தொட்டாற்சிணுங்கி இலைகளையும் இடித்துச் சூரணமாக்கி இரண்டையும் சம அளவுக்கு கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை ஒரு கரண்டி அளவு எடுத்துத் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால், சர்க்கரை நோயில் இருந்து மீள முடியும். இதே சூரணக் கலவையைத் தினமும் மூன்று வேளை ஒரு கரண்டி அளவு எடுத்து, காய்ச்சியப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களும் குணமாகும்.

சிறுநீர் சிக்கல் தீர...

சுத்தம் செய்த தொட்டாற்சிணுங்கி வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வேரை மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய இந்த நீரை கால் அவுன்சு(ஸ்) அல்லது அரை அவுன்சு வரை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நீர் அடைப்பு, கல் அடைப்பு ஆகியவை குணப்படும்.

தளர்ச்சி நீங்க... மலர்ச்சி ஓங்க...

தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து, மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். நீர் ஒரு பங்கு ஆகும் வரையிலும் நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் கசாயமாக்க வேண்டும்.

சூடு தணிந்த பின் கசாயத்தை வடிகட்டி, அரை அவுன்சு வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், தளர்ச்சி நீங்கி உடல் தேறுவதோடு சுக்கில (விந்தணு) இழப்பும் நீங்கும். இதனால்தான் தொட்டாற்சிணுங்கி வேர் 'காமவர்த்தினி’ என்றும் அழைக்கப்படுகிறது...

இந்திய விமானி நலமாக இருக்கிறார்..


தைரியம் குறையாமல் கெத்தாக பேசிய வீடியோவ பாருங்க...

https://youtu.be/kGNfwU2rfZQ

Subscribe The Channel For More News...

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்...


மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.

அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.

ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

தாய்மார்கள் பால் சுரப்பதை நிறுத்த மல்லிகைப் பூக்கள் உதவுகின்றன. நன்றாக மலர்ந்த 20 மல்லிகைப்பூக்களை பால் ஊட்டும் தாய்களின் மார்பில் வைத்துக் கட்ட வேண்டும்.தினமும் மாலையில் மூன்று நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால் பால் சுரப்பி நிற்கத் தொடங்கிவிடும்.

20 பூக்களை அரைத்து மார்பகத்தின் மீது பூசி வரவும் செய்யலாம். 

தொண்டைப்புண் அற்றுப் போவதற்கு மல்லிகைப் பூக்களை அரைத்து, புண் உள்ள பகுதியில் இரவில் பூசி வரவேண்டும். அதாவது, குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்றுவிடும்.

இதனால் குடல் புண்ணாகும். இதனால் செரிமானத் தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

வயிற்றில் புண்கள் ஏற்படும். இந்த புண்களின் வேகம் வாய்ப்பகுதியில் தாக்கி வாய்ப்புண் உண்டாகும். இவை நீங்க மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும். 

மல்லிகை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். கண்களில் சிலருக்கு சதை வளரும். இதனால் பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.

இவர்கள் மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.

மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் தடிமன், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேநீர் போல அருந்தி வந்தால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

மல்லிகை மொட்டுக்களை புண்கள், காயம்பட்ட இடங்கள், கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமாகும்.

மல்லிகை மொட்டுக்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள் குணமாகும்.

மல்லிகை கசாயத்தை அருந்தி வந்தால் கண் வீக்கம், தொண்டை கரகரப்பு, சரும நோய்கள் ஆகியன குறையும். இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வைத் தரும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ...

தேமுதிக விஜயகாந்த் மகன் பேசியது குறித்து அமமுக சிர் ஆர் சரஸ்வதி உரை...


https://youtu.be/1MhqwyjLyXI

Subscribe The Channel For More News...

பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்வோம் வாருங்கள் - பாக் பிரதமர் அழைப்பு...


நம் இருவரிடமும் இருக்கும் ஆயுதங்களை வைத்து நாம் தவறான முடிவிற்கு வந்து விடக் கூடாது, உலகில் போரை ஆரம்பித்தவர்களுக்கு அது எங்கே செல்லும் எப்போது முடியும் என்பது தெரியாது. போர் மூண்டால் ஒரு கட்டத்தில் அது எனது கட்டுப்பாட்டிலோ மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக எந்த பேச்சு வார்த்தைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் வாருங்கள் இருவரும் அமர்ந்து பேசுவோம்” என பாக் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

“All wars in world history have been miscalculated; those who started the wars did not know where it would end, “So, I want to ask India, with the weapons you and we have, can we afford miscalculation?,” “If a war takes place, it will not be in my or (Prime Minister) Narendra Modi's control. If you want any kind of talks on terrorism, we are ready. Better sense must prevail. We should sit down and talk,” Imran Khan said...

விஜயகாந்த் மகனுக்கு பதில் , டிடிவி கட்சியில் இணைந்த ரஞ்சித் செய்தியாளர்கள் சந்திப்பு...


https://youtu.be/6m1MKqSveqM

Subscribe The Channel For More News...

ஜம்முவில் இந்திய மிக் விமானம் தொழில் நுட்ப கோளாறால் விபத்து 2 விமானிகள் மரணம்...


ஆனால் விமானத்தை நாங்கள்தான் சுட்டோம் என பாகிஸ்தான் அறிவிப்பு...

ஒரு விமானியை கைது செய்து இருப்பதாகவும் தகவல்...

தலைவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் தொண்டர்கள் அதை உணர்வதிலலை...


டிடிவி யின் அமமுக கட்சியில் சேர்ந்தார் ரஞ்சித்...


மதுக்கடைக்கு எதிராக போராடும் பாமக அதிமுக வுடன் கூட்டணி சேர்வதா..?

நேரடியாக மது தயாரிக்கும் ஆலை வைத்து சப்பளை செய்பவரிடம் தானே சேர வேண்டும்...

பாஜக மோடியும்... பாகிஸ்தான் அரசியலும்...


தமிழ் வைத்தியம் பற்றி திரு.பசும்பொன் . உ . முத்துராமலிங்கத்தேவர்....


"அக்காலத்தில் வைத்தியர் ஓருவர் தெருவில் கீரை விற்கும் ஒருவனைப்பார்த்து, அவன் "கீரையோ கீரை" என்று கூறும் குரலைக் கேட்டு, பக்கத்து மனிதரிடம் "இவன் இன்னும் மூன்றே முக்கால் நாழிகைக்குள் இறந்து போவான்.

இவனைச் சீக்கிரம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்" என்று சொன்ன படியே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.

அவனும் அப்படியே இறந்தான் என்று தமிழ் வைத்தியத்தில் ஆதாரத்துடன் கூறப்படுகிறது.

ஒருவனின் குரலின் ஒலி வைத்தே அவனது உடல் நிலை சொல்லும் உயர்ந்த முறை பெற்றது தமிழ்.

இன்றைக்கு உயர்ந்த வைத்தியர்கள் என்று சொல்லுகிற வைத்தியர் (Doctor டாக்டர்) களெல்லாம் போதிக்கின்ற சுகாதாரத்தை 'ஆசாரக் கோவை" என்ற சிறுநூல் அன்றே போதித்திருக்கின்றது.

பொடி(பஸ்பம்), சுண்ணம், திராவகம், கசாயம், செந்தூரம் என்ற முறைகள் அனைத்தும் தெளிந்து தேர்ந்து அதுமட்டுமல்லாமல் உலோகங்களை மாற்றும் திறமையும் பெற்றிருந்தது தமிழ்...

பாஜக விற்கு மறக்காமல் வாக்களியுங்கள்...


தமிழால் தழைக்கிறது செளராஷ்டிரம்...


வடமொழிக்கு முன்பு நிலவிய பிராகிருத மொழிகள் ஐந்தில் ஒன்று "ஸெளரஸேனி' மொழியாகும்.

அத் தொன்மையான மொழியிலிருந்து கிளைத்த மொழியே செளராஷ்டிர மொழியாகும்.

இம்மொழிக்கு சொந்த எழுத்து இருப்பினும், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இச்சிறிய மொழியினரில் சில ஆயிரம் பேர் மட்டுமே சொந்த எழுத்தினை அறிவர். பெரும்பாலோர் பேச்சு மொழியாகவே கொண்டுள்ளனர்.

ஆனால், பொது இடங்களில் இம்மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர். தங்கள் மொழி இலக்கியங்களை தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தியே வெளியிட்டும், தங்கள் மொழி, சமூக இதழ்களில் தங்கள் மொழி எழுத்துகளுடன் தமிழ் எழுத்துகளையும் சேர்த்தே சுமார் 100 ஆண்டு காலமாக பிரசுரம் செய்தும் வருகின்றனர்.

உதாரணமாக, 1921-ஆம் ஆண்டில் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் வரலாறு, 1958-இல் செüராஷ்டிர ஸங்க்ரஹ ராமாயணம், 2013-இல் கவி வேங்கடசூரியின் ஸங்கீத ராமாயணொ - இம் மூன்றும் தமிழ் எழுத்திலேயே பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இம்மொழிக்கென வெளிவரும் "பாஷாபிமானி' எனும் மாத இதழில் தலையங்கம் செளராஷ்டிர எழுத்துடன் தமிழ் எழுத்திலும் பிரசுரமாகிறது. இம்மொழி இலக்கியங்களுக்கு தமிழில் உரை எழுதப்படுகிறது.

ஆக, செளராஷ்டிர மொழி இலக்கியங்கள் காப்பாற்றப்படுவதற்கு தமிழ் மொழி - தமிழ் எழுத்தின் உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தமிழ் மொழியால் இன்னொரு மொழியின், அதுவும் ஒரு சிறிய மொழியின் இலக்கியங்கள் காப்பாற்றப்படுகின்றன என்பது தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் சேர்க்கிறதே...

நீங்கள் உலக பிரச்சனைகளை பொருளாதார அரசியல் ரீதியாக பார்க்காத வரை, என் பதிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதி, மதமாக, பிரிவினைவாதமாக தான் தெரியும்.. அது என் தவறு இல்லை...


ஈர்ப்பு விதி...


எண்ணங்களுக்குக் காந்த சக்கி இருக்கிறது.

அவற்றிற்குக் குறிப்பிட்ட அலைவரிசைகளும் உண்டு.

எண்ணங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அவை பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படுகின்றன எண்ணங்கள் பௌதீகப் பொருட்களாக உருப்பெறும்.

விரும்பியவற்றை மூன்று எளிய படிகள் மூலமாக உருவாக்க...

1.கேளுங்கள் (ASK)
2.நம்புங்கள் (BELIEVE )
3.பெறுங்கள் ( RECEIVE)

1. கேளுங்கள் (ASK)...

உங்களுக்கு வேண்டியதைப்
பிரபஞ்சத்திடன் கேட்கும்போது, விருப்பம் குறித்த தெளிவை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.

2.நம்புங்கள் (BELIEVE)...

கேட்டது ஏற்கனவே கிடைத்துவிட்டது போல நடந்து கொள்வது, பேசுவது, மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும்.

கிடைத்துவிட்டது என்ற அலைவரிசையில் ஒளிப்பரப்பும் போது அதை பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை, நிகழ்வுகளை மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

3.பெறுங்கள் (RECEIVE )...

வேண்டும் என்று விரும்புபவற்றிற்கு, முன்னதாக நன்றி தெரிவிக்கும் செயல் ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்கையை அனுப்பும்.. வேண்டியதை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை மனத்தில் உருவாக்குவதுதான் அக்க்காட்சிப்படைப்பாகும்.

அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும் போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் சக்திமிக்க எண்ணங்களையும் உருவாக்கும்.

மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா அம்பாணிக்கு விற்பனை...


தமிழனின் அறிவியல்...


தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக் கொண்டார்கள்.

அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்..

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்று பக்கம் திறந்த வெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.

அதன் உச்சியில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது.

ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும்.

இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு.

இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்வார்கள்.

சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டே போகும்.

ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது..

ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று அர்த்தம். பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.

நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத் துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள்.

சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன.

ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை....

நீங்கள் 5, 14, 23, எண்ணில் பிறந்தவரா... தவறாமல் பாருங்க...


https://youtu.be/IUMbzdFVACE

Subscribe The channel For More News...

நன்றியுணர்வும்.. எண்ணங்களின் சக்தியும்...


ஒரு செயலை தொடர்ந்து 21 முறைக்கும் மேல் செய்தோம் என்றால் அந்த செயல் நம்முடைய பழக்கவழக்கமாக மாறி விடுகிறது.

நம்முடைய பழக்க வழக்கங்கள் இடம், பொருள் மற்றும் ஏவல் என்று எதையும் பார்க்காமல் அது தானாகவே செயல்பட ஆரம்பித்து விடும்.

நம் ஆழ்மனதில் ஒரு அற்புதமான செயலை நமது பழக்கவழக்கங்களில் (HABIT) ஒன்றாக மாற்றிவிடுகிறது. அது தான் நன்றியுணர்வு.

நன்றியுணர்வு எனும் உணர்வு நம்முள் சென்றுவிட்டால் அது நமக்கு தரும் பலன்கள் அளவிட முடியாதது.

நமது எண்ணங்கள் யாவும் நிறைவேற
வேண்டுமெனில் நம்மில் நன்றியுணர்வு அதிகமாக இருந்தாலே போதும்.

அதனால் நமக்கு ஏற்படும் பயன்கள் பல அதில் சிலவற்றை மட்டும்  கொடுத்துள்ளேன்..

நீங்கள் இன்று எத்தனை பேருக்கு நன்றி( THANK_U )சொல்லியுள்ளீர்கள். அல்லது எத்தனை பேர் உங்களுக்கு இன்று நன்றி சொல்லியுள்ளார்கள் என்பதை பொறுத்தே.. நமது எண்ணங்கள் செயலாக மாற வாய்ப்புள்ளது.

நன்றியுணர்வு அதிகம் உள்ளவர்கள் பலர் மிக பிரம்மாண்டமான சாதனைகளை செய்துள்ளார்கள்.

நாம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்ல ஒரு சிறிய முயற்சியினை ஆரம்பிப்போம்…

என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி, அவைதான் அவற்றை நோக்கி என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.

என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி, அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது.

எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி, அவைதான் என்னை வலிமையானவனாய் மாற்றுகின்றன.

எனது குறைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.

எனது பிழைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.

எனது சோர்வுக்காய் நன்றி, அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.

எனது சோதனைகளுக்காய் நன்றி, அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.

தினமும் நமக்கு 86,400 நொடிகள் பரிசாக கிடைத்துள்ளது, இதில் ஒரு நொடியை எதற்காவது நன்றி (thank you) சொல்ல செலவிடலாமே…

நன்றியுணர்வு அனைத்தையும் மாற்ற வல்லது...

தமிழகம் வளர்ச்சி என்று எம்மிடம் வாதிட வந்தாலும் எம் வாதம் இதுதான்...


இந்திய திராவிட சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழினப் போராளி தமிழரசன்...


ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக் கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?

ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்...

தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது...

ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,

கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.

அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.

ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்..

நேரடியாக மோத பயந்து கொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.

அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி...

எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலை செய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.

தமிழரசன் வந்தார்..
கொள்ளையடித்து விட்டு வாசலை நெருங்கும் போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.

மக்கள் தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரை விட்டார்.

குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.

உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.

ஆம். முல்லைப் பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன் தான்...

காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக் கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக் கொண்டவர்.

அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது மலையாளி எம்.ஜி.ஆர் ஆட்சி.

தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து..

கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது...

பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா - 3ம் உலகப் போர்...


இந்தியா பாகிஸ்தான் இணைப்பு...
புது உலக அமைப்பு...

சோழர்கால கழிப்பறை...


9ஆம் நூற்றாண்டு..

கழிப்பறையை(Toilet)  ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை.

சோழர்கள் அமைத்த தலைநகர் பொலநறுவையில் நிகரிலி சோழ வளநாட்டுப் புலைனரி  சனநாதமங்கலம் என அழைக்கப்பட்ட பழமையான கழிப்பறைகள்..

தமிழர்கள் தான் உலகத்திற்கே கலாச்சாரத்தையும் வாழ்வியல் முறையும் அறிமுகப்படுத்தியவர்கள்..

இந்த அடையாளத்தை அழிக்கத்தான் பல உலக நாடுகள் பல்வேறு வகையில் பல வேலைகளை பார்த்து வருகிறது...

இரகசியமாக தமிழகத்தில் தங்க சுரங்கம் வெட்டி எடுக்கும் கும்பல்..


https://youtu.be/QrkMkM1STu8

Subscribe the channel for more News...

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்...


பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம்,வெப்பத்தை(உஷ்ணத்தைத்) தரக்கூடியது,உணவை செரிப்பிக்கிறது, சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது, பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.

உபயோகங்கள்...

இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது.

இது வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நீரேற்றத்தையும்-சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது.

சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாதவிடாயின்போது இரத்தப்போக்கினை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.

பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்...

திமுக ஸ்டாலின் & வைகோ கலாட்டா...


செயலு: கூட்டணிக்கு நீங்க வந்தால்தான் வெற்றிபெற முடியும்...

விசய்காந்த்: படுத்தேவிட்டான் ஐயா...

தமிழின் அர்த்தம் தெரியுமா...?


நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...?

தெரிந்துக் கொள்ளுங்கள் நண்பர்களே...

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.

அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதி நிலையக்கரமாகும்.

இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியச்(ஷ்)டி பேதங்காட்டும் சீ(ஜீ)வ சித்த கலையக்கரமாம்.

பதி சிதாத்ம கலைகளுக்கா தாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும் த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை.

த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.

ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.

ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம்.

நம் பிரபஞ்சத்தைக் குறிக்கும்.

சம்பு பச(க்ஷ)த்தால் அனாதியாய் - சித்த சித்தாந்த ஆரிச(ஷ) நீதிப்படி கடவுள் அருளாணையால் கற்பிக்கப்பட்டதும், எப்பாசை(ஷை)களுக்கும் பிதுர் (தந்தை) பாசை(ஷை)யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும்,

இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்.

இவ்வாறு இராமலிங்க அடிகளார் கூறுவதைப் போல் சுருக்கமாகச் சொல்வதானால் "தமிழ் மொழியே அதி சுலபமாக சுத்த சிவானு பூதியைக் கொடுக்க வல்லது".

தமிழ் என்பதன் உண்மை விளக்கம் : தம் + இல் - அதாவது நம்மில் உள்ள இறைவனை அறிய உதவுவது.

இறைவனை எளிதில் அடைய உதவும் மொழி தமிழ்...

கத்தரிக்காய் வாங்கும் போது பார்த்து வாங்குங்கள் மக்களே...


மனமற்ற நிலை என்றால் என்ன.?


இருபத்து நான்கு மணி நேரமும் மனமற்ற நிலை பெறுவது தான் இறுதிச் சாதனை.

இப்படிச் சொல்வதால், மனதை பயன்படுத்தவே கூடாது என்பதல்ல.

மனமற்ற நிலை பற்றி எதுவும் தெரியாதவர்களே அப்படிச் சொல்வார்கள்.

அது பொய்.

மனமற்ற நிலை என்றால், மனம் உன்னைப் பயன்படுத்தக் கூடாது என்று பொருள்.

மனமற்ற நிலை என்றால், மனதை அழித்து விடுவது அல்ல. மனதை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைப்பது.

அது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் எந்த வினாடியும் மனதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உன் பணியாளாக இருக்க வேண்டும்.

நீ சும்மா இருந்தால்கூட 'கடக்கடக் கடக்கடக்' என்று போய்க் கொண்டே இருக்கும். அப்போது உன்னால் எதுவுமே செய்ய முடியாது.

பரிதாபமாக நின்று விடுவாய்.

மனமற்ற நிலை என்பது, மனதைச் சரியான இடத்தில் ஒதுக்கி நிறுத்தி வைப்பது. அது ஒரு வேலையாள் என்ற முறையில் மனம் பெரிய கருவி தான். ஆனால், எஜமானனாகி விடுவது துரதிர்ஷ்டம். அது ஆபத்தானது. உன் வாழ்வையே ஒழித்துக் கட்டிவிடும்.

மற்றவர்களோடு தொடர்பு கொள்ள நீ விரும்பும் போது மனம் ஒரு ஊடகம் மட்டுமே.

ஆனால் நீ தனித்திருக்கையில் மனம் தேவையில்லை. எப்பொழுது பயன்படுத்த வேண்டுமோ அப்பொழுது மட்டும் பயன்படுத்தினால் போதும்.

இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்.

மனம் பல மணி நேரம் மௌனமாக இருந்தால், அது புத்துணர்ச்சி பெற்று விடும்.  இளமை துடிப்புடன், படைப்பாற்றலுடன், உணர்வுகளுடன், புதுப்பிறவி எடுத்து விடும். அந்த ஓய்வில் ஏற்படுபவை இவை...

உலகின் முதல் உளவுவிமானம்...


கொங்கு மண்டலத்தில் (தெலுங்கு) கம்மா குடியேற்றம்...


ஆந்திராவில் 600 ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்த போது சந்திரிகிரி (வரைபடத்தில் 1) பகுதியில் இருந்து தமிழகத்தில் குடியேறிய கம்மவார் பற்றி தற்போது பார்ப்போம்.

(இதற்கு முன்பே டெல்லி சுல்தானிய படையெடுப்பின் போது தெலுங்கர்கள் மிகச்சிறிய அளவில் தமிழகத்திற்குள் குடியேறியுள்ளனர்)

கம்மவார் சாதி தோன்றிய வரலாறு என பல ஆன்மீக கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன. மகாலட்சுமியின் கம்மலில் இருந்து தோன்றினர் என்றவாறு, எனவே அதை விட்டு விடுவோம்..

இவர்கள் கரிசல்காட்டில் விவசாயம் செய்யும் குடிகள் ஆவர்.

இவர்கள் தமிழகத்தில் குடியேறும் போது நடந்ததாக ஒரு கதை உள்ளது.

இவர்கள் ஆந்திராவில் பஞ்சம் ஏற்பட்டபோது தமது குலதெய்வமான ரேணுகாதேவியை வணங்கினார்களாம்.

உடனே அந்த தெய்வம் கொங்கு நாட்டின் சென்னிமலை ஆண்டவனிடம் பேச்சு வார்த்தை நடத்தி செழிப்பான பகுதியான கொங்கு பகுதியில் குடியேற அருள் வழங்கியதாம்.

உடனே அவர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கொண்டம நாயுடு என்பவர் தலைமையில் கொங்கு பகுதிக்கு வந்தனராம்.

அப்போது சென்னிமலை முதல் உப்பாறு வரை அறுபது மைல் பரப்புள்ள நிலத்திற்கு உரிமையாளர் காணியாள கந்தசாமிக் கவுண்டர் எனும் பெரும் நிலக்கிழார்.

அவர் 12 கிராமங்களுக்கு அதிகாரி..

ஒரு பண்டாரம் போல மாறுவேடத்தில் சென்னிமலை நாதன் கம்மவார்களை சந்தித்து அழைத்து வந்து கந்தசாமிக் கவுண்டரிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்து விட்டாராம்.

வந்தது சென்னிமலை ஆண்டவன் என்று பரவசமடைந்த கந்தசாமி கவுண்டர் உப்பாற்றங்கரையில் மூன்று காத தூரம்வரை இருந்த பகுதியை பட்டயம் எழுதிக் கொடுத்தாராம்.

இலவசமாக வாங்காமல் கம்மவார்கள் தம்மால் முடிந்த சிறுதொகையாக நூறு வராகன் கொடுத்தனராம்.

கம்மவார்கள் அங்கே கூடாரம் அமைத்து குடியேறினர்.

இது கம்மவார் பட்டி என்று பெயர் பெற்றது.

தற்போது கம்பிளியம்பட்டி (2) என்றழைக்கப்படுகிறது.

அதன்பிறகு சூலூர் (3), கரடிவாவி (4) போன்ற இடங்களில் குடியேற்றங்களை அமைத்தனர்.

பிறகு தெலுங்கர் படையெடுப்பு தமிழகத்தின் மீது நடக்கிறது.

தெலுங்கு நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் பரவுகிறது.

கம்மா உட்பட தமிழகத் தெலுங்கர் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்குகிறது.

குமார கம்பணன் காலத்தில் மதுரை, திருச்சி ஜில்லாக்களில் பாளையங்கள் ஏற்படுத்தி தெலுங்கர் ஆளத் தொடங்கினர்.

நாயக்கர் ஆட்சி ஏற்கனவே இருந்த ஆட்சி முறையை ஒழித்து நிலத்தை பாளையங்களாகப் பிரித்து ஆண்டது.

கொங்கு முழுவதும் காகவாடி, காடையூர், மஞ்சாபுரம், சமத்தூர், ஊத்துக்குளி, நிமந்தம்பட்டி, தாரமங்கலம், புரவிபாளையம், தொப்பம்பட்டி, மரக்கூர், செவ்வூர், பழைய கோட்டை, அவ்வம்பட்டி, சமச்சுவாடி, சொதம்பட்டி, துங்காவி ஆகிய பாளையங்கள் தோன்றின.

இவற்றில் பெரும்பான்மை தெலுங்கர் வசம் இருந்த பாளையங்கள்.

தமிழகத்தின் நாயக்கர் ஆட்சி ஆந்திராவில் நிலவிய ஆட்சியை விட தெலுங்கு மக்களுக்கு அதிக வாய்ப்பும் வளங்களும் அள்ளித்தந்ததால் தெலுங்கர் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் குடியேறினர்.

கி.பி.1510 ல் கம்மவார் தமக்கென ஒரு நகரத்தை கட்டிக்கொண்டனர்.

தமது இனத்தின் மன்னனான கிருஷ்ணதேவராயர் நினைவாக கிருஷ்ணதேவராயபுரம் அல்லது ராயகிருஷ்ணபுரம் (5) என்று  பெயரிட்டனர்.

(கிருஷ்ணதேவராயர் காலம் கம்மவார் வரலாற்றில் பொற்காலமாகும்).

இது 1660 வாக்கில் பெருமழையால் ஏற்பட்ட மண்சரிவு வந்து கொட்டிய மணலால் நிறைந்து அழிந்துவிட்டது.

இந்த நகரத்தில் இருந்தோர் இடம் பெயர்ந்து பாப்பநாயக்கன் பாளையம்(6).

பீளமேடு அல்லது பூளமேடு (7).

சற்று தொலைவில் வேலூர் மாவட்டத்தில் ஆவாரம்பாளையம் (8)  எனும் ஊர்களை  அமைத்து குடியேறிக்கொண்டனர்.

1529ல் மதுரை நாயக்கராக பொறுப்பேற்ற விசுவநாத நாயக்கர் காலத்தில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி,மதுரை, ராமநாதபுரம், திருச்சி, கோவை, சேலம் ஆகிய பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது.

இவரது காலத்தில் குறிப்பிடும்படியான குடியேற்றம் நடந்துள்ளது.

கம்மவார் மட்டுமல்லாது கவரா, கம்பளத்தார், சோணியர், ஒட்டர், சக்கிலியர், தொம்பர், ஆகிய தெலுங்கு சாதிகளும் தமிழகத்தில் குடிபுகுந்தனர்.

முக்கியமாக தெலுங்கு பிராமணர்கள் கணிசமான அளவு இந்த காலகட்டத்தில் குடிவந்தனர்.

விசுவநாத நாயக்கர் காலத்தில்...

கோவிந்த நாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம், மொண்டி பாளையம், சித்தநாயக்கன் பாளையம் என்று தமது ஊர்த்தலைவர்கள் பெயரில் தெலுங்கர்கள் குடியேற்றங்களை அமைத்தனர்.

இதற்கடுத்த கம்மவர்களின் குறிப்பிடும் படியான குடியேற்றம் 1700களில் சந்திரகிரியிலிருந்தும் 400 கி.மீ வடக்கே குண்டூர் ஜில்லாவில் உள்ள ராசகொண்டலு (9) பகுதியில் இருந்து பாப்பநாயக்கன் பாளையத்திற்கு கம்மவார் பெருமளவு குடியேறியது ஆகும்.

மைசூர் படையெடுப்பு நாயக்கர் ஆட்சி மீது நடந்தது.

இதனால் கம்மா மக்கள் பலர் தென் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

மைசூர் படை மதுரைக்கு அருகே வரை வந்துவிட்டது.

திருமலை நாயக்கர் 71 வயதில் படுத்த படுக்கையாக இருந்தார்.

ஆனாலும் சேதுநாட்டை அப்போது ஆண்ட ரகுநாத சேதுபதியிடம் அவர் உதவிகேட்டு மறவர் படையை பெற்று போரை நடத்தினார்.

(மைசூர் படையை தொடங்கிய இடத்திற்கே பின்வாங்கச் செய்தார்.

தெலுங்கருக்கும் கன்னடருக்கும் நடந்த இப்போரில் இருதரப்பினரும் தோற்றவர் மூக்கை மேல் உதடுவரை அறுத்து கொடூரமாக சண்டை போட்டனர்.

பிறகு திருமலை நாயக்கர் கொங்கு பகுதியில் தெலுங்கரை மீண்டும் குடியமர்த்தி பொட்டதிக்கா பாளையம், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் கோவிலும் கட்டிக் கொடுத்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் தெற்கே விருதுநகர், திருநெல்வேலி பகுதிகளில் குடியேறிய கம்மவார் தமது உண்மையான பட்டமான நாயுடு என்பதுடன் சில இடங்களில் நாயக்கர் என்றும் பட்டத்தையும் பயன்படுத்துகின்றனர்.

மற்றபடி நாயுடு என்றாலே கம்மா சாதியினரைத் தான் குறிக்கும்)..

நாயக்கர் ஆட்சியில் மேலும் நாகமநாயக்கன் பட்டி, பாப்பநாயக்கன் பட்டி, அல்லமநாயக்கன் பட்டி, ரெட்டியப்பட்டி, இடையர் தர்மம், சேடப்பட்டி, அய்யம்பாளையம் போன்ற பல தெலுங்கு குடியேற்றங்கள் தமிழகம் முழுவதும் தோன்றின.

முதலில் அகதியாக..

பிறகு நிரந்தர குடிகளாக..

பிறகு பாளையக்காரர்களாக..

பிறகு நிலவுடைமைச் சமூகமாக..

பிறகு ஆதிக்க வர்க்கமாக என தமிழகத் தெலுங்கரின் வளர்ச்சி பிரம்மாண்டமானது..

இவர்களின் ஒட்டுமொத்த தமிழக மக்கட்தொகையில் 0.48% மட்டுமே வாழும் கம்மாக்கள் ஒவ்வொரு ஆட்சியிலும் திராவிட கட்சிகள் மூலம் (குறிப்பாக அ.தி.மு.க) குறைந்து 10 எம்.எல்.ஏ-வாவது இருக்கிறார்கள்.

இப்படியாக கம்மா சாதியினர் தமிழகம் முழுவதும் (குறிப்பாக கொங்கு பகுதியில்) கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை என்று நடத்தி மாபெரும் ஆதிக்க சக்தியாக திகழ்கிறார்கள்...

எல்லா வல்லாதிக்க சக்திகளுக்கும் எதிரான ஒரே குரல்.. தமிழ்நாடு தமிழருக்கே...


மூன்றாவது கண்...


ஒருவனது இரண்டு புருவங்கள் இடையே புரியாத கதவு ஒன்று திறக்க இருக்கிறது என்று நம்முடைய மெய்ஞானிகள் கண்டு பிடித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவில் இதை மூன்றாவது கண் என்று அழைப்பார்கள்.

சாதாரணமாக மனிதனின் இரண்டு கண்களும் வெளியில் தெரியும்.

ஆனால், இந்த மூன்றாவது கண் சரியாக இரண்டு புருவ மத்தியில் உணர்வுமயமாக அமைந்துள்ளது.

அது திறந்தால் உங்களுடைய உள் உலகம் இந்த வெளி உலகம் போல் தெளிவாக உணரப்படும்.

அப்பொழுது நீங்கள் உடலாகவும் இல்லை, மற்றும் மனமாகவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும்.

முதன்முதலில் நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பதும் புரியும்.

அதாவது உங்கள் உயிர்த் தன்மை சாட்சியாக இருக்கிறது.

இது உங்களை மனதிற்கு அப்பால், புரியாத, அதற்கு அற்புதமான அதிசயம் மிக்க உலகுக்கு அழைத்து செல்லும்.

அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை ஆனந்த மயமானது தான்.

ஆடல், பாடல் நிறைந்தது தான்.

நீங்கள் சுத்த தங்கம் போல ஆனந்த மிகுதியில் ஜொலித்து ததும்பி வழிவீர்கள்.

ஏனெனில், நீங்கள் புதையளிலேயே சிறந்த புதையலை அடைந்திருக்கிறீர்கள்.

இதைத் அறிவுக்கூர்மை படைத்தவர்கள் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...

27/02/2019

என்றும் இளமையோடு வாழ எளிய வழி...


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், வெப்பம் (உஷ்ணம்), காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

வெப்பத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை எல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்...

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் வெப்பம் (உஷ்ணம்), வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிசமாகும்...

மது ஆலை , வங்கி என அனைத்தும் மக்களை அடிமைபடுத்த கூடியதே அதை நிர்வகிப்பவனுக்கு சட்டம் கிடையாது...


தமிழர் என்ன பாவம் செய்தோம்...


இந்திய விடுதலை போரில் அதிக விலை கொடுத்தவர்கள் நாம்..

இந்திய நாட்டிலும் அதை காட்டிலும் கீழான அடிமை நிலை..

அதிகாரத்தை மீட்போம்...

பாட்டளி மக்கள் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவிப்பு...


தொண்டர்களின் கருத்துக்களை கேட்காமல் அதிமுக - உடன் கூட்டணி - ரஞ்சித் பேட்டி...

இன்று காலை சரியாக 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் சுமார் 1 டன் வெடி குண்டுகளை வீசி பாகிஸ்தானின் ஜெய்சி முகமது தீவிரவாதிகள் சுமார் 300 பேரலை கொன்று குவித்தது இந்திய விமானப்படை..


பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பலாகோட் மற்றும் முசாபாராபாத் இடங்களை துவம்சம் செய்தது இந்தியா.12 போர் விமானங்கள் பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது...

திமுக கூட்டணியில் தேமுதிக...


தமிழர்களை ஏமாற்ற திராவிடம் என்ற தெலுங்கர்கள் கூட்டணி தயார்...

https://youtu.be/JZ0QVNvaImw

Subscribe the channel for more news...

பாமக அன்புமணி ராமதாஸ்...


கடுமையான விமர்சன கேள்விகள் வரும் என்று தெரிந்தும் பத்திரிக்கையாளர்களை அழைத்து விவாதம் பண்ணிய கெத்து தமிழகத்தில் வேறு எந்தக் தலைவருக்கும் கிடையாது.

தங்களை "ஜனநாயக" வழியில் கேள்வி கேட்க "அனுமதிக்கும்" கட்சிக்கு வாக்களியுங்கள்.

முட்டாள்களுக்கு வாக்களிக்தாதீர்...

பாமக கூட்டணி குறித்து திமுக ஸ்டாலினை விலாசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி...


https://youtu.be/VmSAH3WGhdg

Subscribe the channel for more news...

பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)...


தமிழ் மொழியிலான கல்வெட்டுகள் அதிகமாக பழைய மைசூர் நாட்டின் எல்லை மாவட்டங்களான கோலார், பெங்களூரூ, மைசூரின் பகுதிகளில்,
வட-தென் பெண்ணையாறுகளின் படுக்கை பிரிவுகள் தொடங்கி தென்மேற்காக காணப்படுகின்றன.

Source: Tribes and castes of Mysore (Vol.1) by L K A Iyer...

மருத்துவ மாப்பியா...


தமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு...


ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்..

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்..

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்

விளக்கம்...

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்...

கல்வியும் கார்பரேட் வியாபாரமும்...


என்னடா இது புது புறளியால்ல இருக்கு...


தீபம் ஏத்துனா நல்லது நடக்கும்,
மெஸேஜ 15பேருக்கு பாரவர்ட் பன்னா நல்லது நடக்கும்னுட்டு ,என்னமோ அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

தேர்தல் முடியறதுக்குள்ள அக்கா  நம்மள ஒரு வழி ஆக்காம விடமாட்டாங்க போல...

50 வருசம் தானா ? ரொம்ப கம்மியா இருக்கே... பாஜக மோடி ஜி...


ஆமணக்கின் மருத்துவ பயன்கள்...


ஆமணக்கின் இலை, வேர், விதை, நெய் ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. ஆமணக்கு யூஃபோர்பியேசி என்ற ஒற்றைப் பூவிதழ் வட்டத்தையுடைய இரு விதையிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. ஏறக்குறைய இந்தியா, இலங்கை முழுவதும் பரவிக் காணப்படுகிறது. இதை, ஆமணக்கு என்றும் சிற்றாமணக்கு என்றும் கூறுவர்.

இலை...

சிற்றாமணக்கின் இலையையும், கீழா நெல்லி இலையையும் ஒரே அளவு எடுத்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து நான்காம் நாள் மூன்று அல்லது நான்கு முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைப் பொடி கொடுக்கக் காமாலை குணமாகும்.

இலைகளைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல் வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கின் இலையைச் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டினால் பால் பெருகும்.

ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கிக் கட்டிகளில் வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். வெளி மூலம், இரத்த மூலம் மற்றும் ரத்தம் கசியும் புண்களில் ஆமணக்கு இலையை அரைத்து பூசி வர இரத்தக் கசிவு மறையும். ரணம் ஆறும். சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.

வேர்...

ஆமணக்கின் வேரைக் குடிநீர் செய்து அதில் சிறிது பூநீறு சேர்த்து மூன்று அல்லது, ஐந்து நாள்களுக்குக் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் உட்கொண்டால் பக்கச்சூலை குணமாகும். வளிக் குற்றத்தைத் தன்னிலைப்படுத்தச் செய்யும் குடிநீர்களிலும், தைலங்களிலும் ஆமணக்கின் வேரைச் சேர்ப்பது வழக்கம். பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும்.

விதை...

ஆமணக்கின் விதையை மேல்தோல் நீக்கிக் காரசாரம் வைத்துத் துவையல் செய்து கழற்றிக் காயளவு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும். விதையை ஓடு நீக்கி அரைத்துக் கட்டிகளின் மேல் பற்றிட அவை பழுத்து உடையும். கன்று ஈனாத எருமைப் பாலில் ஆமணக்கின் பருப்பை இழைத்துக் கண்களில் தீட்டினால் மறுநாள் பீளை போகும். பின்னர்க் கண்கள் மிகவும் தூய்மையாக இருக்கும்.

எண்ணெய்...

ஆமணக்கின் விதையிலிருந்து நெய் இருவகையாக எடுக்கப்படும். அவை பச்சை எண்ணெய், ஊற்றினை எண்ணெய் என்பனவாகும். தினசரி காலை, மாலை இரு வேளை மூன்று மி.லி. அளவு உள்ளுக்கு கொடுக்க நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலக்கட்டு, மூட்டுவலி போன்றவை மறையும்.

குடல் இறக்கம் (hernia), வயிற்றுப் பூச்சிகள், சமிபாட்டுக் கோளாறு, போன்றவற்றிற்கும் மூன்று மில்லி எண்ணெய்யை தினசரி காலை மாலை உள்ளுக்கு கொடுக்கலாம். சிறுநீர் கோளாறுகள், எரிச்சல், சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்கலாம்.

தீராத மூட்டு வலி, மூட்டு பிடிப்பு, மூட்டு வாதம், எலும்பு தேய்வு, மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கும் 2 – 3 மி. லி. தினசரி எண்ணெய்யை உள்ளுக்கு கொடுக்கலாம். வீக்கம், உடல் வலி, போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்க நல்ல பலன் தெரியும்.

பச்சை எண்ணெய்...

ஆமணக்கு விதைகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, எந்திரத்தின் மூலமாய்ப் பருப்புகடிள அழுத்திப் பிழியும் எண்ணெய், பச்சை எண்ணெய் எனப்படும்.

ஊற்றின எண்ணெய்...

ஓர் அகன்ற பாத்திரத்தில் நான்கு பங்கு நீர் விட்டு, அதில் ஆமணக்குப் பருப்புகளை இடித்து, ஒரு பங்கு சேர்த்து, தீயில் எரிக்க நெய் கக்கி நீரின் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து, வேறு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கலந்துள்ள நீரை, அனலில் வைத்து போக்கும் முறையே ஊற்றின எண்ணெய் எனப்படும். இதில் நீருக்குப் பதிலாக, இளநீர் சேர்த்துக் காய்ச்சி எடுக்கும் எண்ணெய் குற்றமற்றதும், உடலுக்கு மிகுந்த நன்மை பயப்பதுமாகும்.

இதைக் கைக்குழந்தை, இளவயதுடையவர்கள் சூல் கொண்டவர்கள், பிள்ளை பெற்றவர், சீதக் குருதிப் பேதியால் வருந்துபவர் முதலானோர்க்கு அச்சமின்றி வயிறு கழியக் கொடுக்கலாம். தற்போது இம்முறை வழக்கொழிந்து வருகிறது.

மலக்கட்டு உள்ளவர்கள் ஆமணக்கெண்ணையை மல வாயின் உட்புறத்தில் தடவ மலம் இளகி வெளிப்படும் வயிற்று வலியினால் அவதியுறும் குழந்தைகளுக்கு அடிவயிற்றிலும், பெரியவர்களுக்கு தொப்புளைச் சுற்றிலும் ஆமணக்கெண்ணையைத் தடவி, ஒற்றடம் இட வயிற்று வலி குறைந்து, மலம் வெளிப்படும்.

உடம்பில் மேல்தோல் உராய்ந்து, எரிச்சல் ஏற்பட்டால் அவ்விடத்தில் விளக்கெண்ணையைத் தடவ எரிச்சல் நீங்கி முன்பிருந்த நிலையை அடையும். கண்கள் மருந்துகளின் வேகத்தாலும், தூசுகள் விழுவதாலும் அருகிச் சிவந்தால் ஆமணக்கெண்ணையும், தாய்ப்பாலும் சேர்த்துக் குழைத்துக் கண்ணிலிடச் சிவப்பு மாறிக் குணமாகும்.

முலைக்காம்பு புண், வெடிப்பு இவற்றிற்கு இதைத் தடவி வரலாம். முக்கூட்டு நெய்யில் இதுவும் ஒன்று. பலவகையான உள், வெளிப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் முறைகளில் ஆமணக்கெண்ணெய் சேர்க்கப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய்...

ஆமணக்கு எண்ணெய்யை 5 மி.லி. வீதம் காலையும், மாலையும் உட்கொண்டு வர வாதம், நரம்பு வலி, தசை வலி, முக வாதம் போன்றவற்றிற்கு பயன் தரும்.உள்ளுக்கு 5 மி.லி. வீதம் உட்கொள்ள சமிபாட்டுக் கோளாறுகள் சீராகும். குடல் இறக்கம் பிரச்சனை குறையும்...