07/10/2018

தமிழர் கோவில் திருமேனி சிலைகளை கற்தூண்களை திருடி வீட்டில் புதைத்து வைத்து இருக்கும் ஆந்திரா திருடி வீ. கிரண் ராவ்...


ஆரியனும் திராரிடனும் வாய்த்திறக்க மாட்டானுக...

ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்...


தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை.

கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, குமரியில் நாளை மிக அதிககனமழை பெய்யாது...

தமிழக அரசின் வரிக் கொள்ளை...


மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்...


என் முப்பாட்டன், பாட்டன், அப்பன்,
எல்லாம் வெள்ளையனே வெளியேறு என்று..

வெள்ளையர்களை விரட்டிய காலம் போய்..

இப்போ எனது காலத்தில்..

திராவிடனே வெளியேறு என்று..

திராவிடர்களை விரட்ட வேண்டிய காலகட்டத்தில் தள்ளப்பட்டு உள்ளோம்..

தமிழகத்தை விட்டு..
திராவிடனே வெளியேறு..

அன்று..
வெள்ளையனே வெளியேறு
என்றது சரியென்றால்...

இன்று..
அந்தியனே வெளியேறு
என்பதும் சரிதானே...

வணிகப் போர்...


ஈர்க்கும் என்பது விதி...


இந்த உலகில் மனிதன் தனது அறிவை கொண்டு எவ்வளவு பெரிய விசயங்களைஎல்லாம் கண்டு பிடித்து விட்டான்.

ஆனால் அவனால் அவனை திருப்தி படுத்தி கொள்ளவோ, தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவோ, முடியவில்லை.

உதரணமாக... உலகில் எவ்வளவு வன்முறைகள் நடக்கின்றன, நாடுகள் சண்டையிட்டு கொல்கின்றன, நாடு மக்களை கொல்கிறது , ஏன் தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் பல பேர் உள்ளார்கள்.

ஏழை மேலும் ஏழை ஆகிக்கொண்டே இருகிறார்கள். வியாதிகள் மேலும் பெருகிகொண்டே இருகின்றன.

இவை எல்லாவற்றையும் சரி செய்ய முடியுமா , இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன ?

நாம் இவற்றை எல்லாம் மாற்ற முடியாது , ஆனால் நம்மால் நம்மை சரி செய்து கொண்டால் நம் ஒருவர் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை கொடுக்க முடியும்.

இதே போல் எலோரும் தம்மை சரி செய்து கொண்டால் இந்த நாட்டில் அனைவர்க்கும் எல்லாம் கிடைத்து விடும்.

பொதுவாக எல்லா மனிதனுக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு இலக்கு இருக்கும்.

உதாரனமாக.. ஒருவர் I.A.S பரிட்ஷை எழுத்து பாஸ் பண்ண வேண்டும் என்று வைத்து கொள்வோம் , எவ்வளவு பேர் அதை செய்கிறார்கள் , ஏன் செய்ய முடியவில்லை ? மனித உறவுகளுக்கு உள்ளே எவ்வளவு முரண்பாடுகள் ?

மொத்தத்தில் இந்த பதிவு தங்களது ஆளுமை திறனை வளர்த்து கொள்ள உதவியாக இருக்கும்.

இங்கே அடிக்கடி பிரபஞ்சம் என்ற வார்த்தை உபயோகபடுத்த படும் , பிரபஞ்சம் என்றால் நீங்கள் இயற்கை என்று வைத்து கொள்ளலாம் , அல்லது உங்களுக்கு பிடித்த கடவுள் என்று வைத்து கொள்ளுங்கள் , அல்லது மஹா சக்தி என்று வைத்து கொள்ளுங்கள் .

உங்களுக்கு தெரியுமா ? உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை , உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள், அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள் , நமக்கு அது தெரியவில்லை ?

அது என்ன வென்று இனி வரும் பதிவுகளில் நாம் பார்க்க போகிறோம்.

ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பது விதி. அதன் விளைவாக மனப்போக்கு அதை ஒத்த சூழல்களை கண்டிப்பாக தன்பால் ஈர்க்கும்...

பாஜக மோடியின் வங்கி ஊழல் சாதனைகள்...


ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் இதுவரை காணாத அளவுக்குத் தமிழகம் போர்க்களமாக மாறும் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்...


இதுதொடர்பாக சீமான இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் சுகாதாரமான வாழ்வினைக் கேள்விக்குறியாக்கி சுற்றுச்சூழல் மண்டலத்தைப் பாழ்படுத்திய வேதாந்தா நிறுவனத்திற்குத் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் தருகிறது.

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, ஒஎன்ஜிசி நிறுவனமும், வேதாந்தா நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இரு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், கமலாபுரம் உட்பட இரு இடங்கள் இதற்கெனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் ஆயிரத்து 794 ச.கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2 ஆயிரத்து 574 ச.கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 731 ச.கி.மீ. பரப்பில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் என எதுவும் காவிரிப்படுகையில் எடுக்க மாட்டோம் என நாடாளுமன்றத்தில் கூறிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்றைக்கு அவ்வாக்கை மீறி காவிரிப்படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித்திருப்பது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த பச்சைத்துரோகம்.

தூத்துக்குடியில் 13 உயிர்களைப் பலிகொண்டு, பல இளைஞர்களை மாற்றுத்திறனாளியாக்கி அவர்கள் வாழ்க்கையினையே இழப்பதற்குக் காரணமாக இருந்த வேதாந்தா நிறுவனத்தை அம்மக்களின் மரண ஓலமும், ரத்தவாடையும் நெஞ்சைவிட்டு அகலாது ரணமாக உறுத்திக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழகத்திற்குள் அனுமதித்திருக்கும் மோடி அரசின் நயவஞ்சகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் களப்போராட்டங்களும், கருத்தியலும் தமிழகம் முழுக்க வீரியம்பெற்றிருக்கிற நிலையில் மீண்டும் அதனை அனுமதித்திருப்பது தமிழர்களின் தன்மான உணர்வை உரசிப்பார்க்கும் அதிகாரத்திமிராகும். அதனை எதன்பொருட்டும் இனமானத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம் என அறுதியிட்டுக் கூறுகிறேன்.

உலகின் மிக நீண்ட சமவெளிப்பகுதியாக இருக்கிற காவிரிப்படுகையில் பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயம் நடைபெற்று வருவதாகத் தமிழர் இலக்கியங்களும், வரலாற்று ஆவணங்களும் தெரிவிக்கின்றன. அவையாவும் இம்மண்ணில் நிகழ்ந்தனவா என எள்ளி நகையாடும் அளவுக்குத் தற்போதைய தஞ்சைத்தரணியின் நிலை மாறியிருக்கிறது.

கர்நாடக அரசின் வறட்டுப் பிடிவாதத்தாலும், மத்தியில் ஆண்ட அரசுகளின் பாரபட்சத்தாலும் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழர்களின் வாழ்வியலோடு இயைந்திருந்த காவிரியுடான தொடர்பு துண்டிக்கப்பட்டு, விவசாயம் செய்ய நீரற்று தற்கொலை செய்து சாகிற இழிவான நிலைக்குக் காவிரிப்படுகை விவசாயிகள் ஆளாகி நிற்கிறார்கள்.

கடந்தாண்டு மட்டும் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து, தற்போது ஒட்டுமொத்த விவசாயிகளும் செய்வதறியாது தவித்து நிற்கிற நிலையில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்த அறிவிப்பானது தமிழர்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது.

தமிழர் நிலத்தைப் பாழ்படுத்தும் இந்நாசகாரத் திட்டத்தை எதன்பொருட்டும் அனுமதிக்க முடியாது. எனவே, மத்திய அரசானது தமிழர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில் தமிழர் நிலவியல் மீதான இப்போருக்கு எதிராக இதுவரை காணாத அளவிற்குப் போர்க்களமாகத் தமிழகம் மாறும்” என சீமான் எச்சரித்துள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article25133031.ece

இயற்கை...


இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்...


அதிகமாக டிவி பார்ப்பது...

டிவியின் முன்பு அதிக நேரம் இருந்தால், இதயம் பெரிதும் பாதிக்கப்படும் என்று அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு 4 மணிநேரத்திற்கு மேல் டிவியைப் பார்த்தால், பக்கவாதம் அல்லது இதயத்தில் அடைப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, விரைவில் மரணத்தையும் ஏற்படுத்தும் என்றும் கூறுகிறது.

சோடா...

அதிக வெயிலின் காரணமாக, அந்த வெயிலின் வெப்பத்தை தணிப்பதற்கு சோடாவை வாங்கி குடிப்போம். ஆனால் இவ்வாறு குடிப்பது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த சோடாவை தொடர்ந்து குடித்து வந்தால், பக்கவாதம் மற்றும் இதயத்தில் பல நோய்களை ஏற்படும்.

தூக்கம்...

ஒருவருக்கு தூக்கம் ஐந்து மணிநேரத்திற்கு குறைவாகவும், ஒன்பது மணிநேரத்திற்கு அதிகமாகவும் இருந்தால், உடலில் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். மேலும் இது கரோனரி நோயை அதிக அளவில் ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

மனஅழுத்தம்...

இன்றைய காலத்தில் அனைவருமே ஒரு சில காரணங்களால் மன அழுத்தம், மன தளர்ச்சி, மன இறுக்கம் போன்றவற்றிற்கு ஆளாகின்றோம். இத்தகையவற்றில் இருந்து வெளிவருவது என்பது எளிதானது அல்ல. ஆனால் இவ்வாறு இருந்தால், இதயம் பெரிதும் பாதிக்கப்பட்டு, அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

குறட்டை...

தற்போது குறட்டை இல்லாமல் தூங்குபவர்களை காண முடியாது. அவ்வாறு தூங்கம் போது குறட்டை விடுபவர்களுக்கு, இதயத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனெனில் தூங்கும் போது குறட்டை விடுவதால், உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ஆகவே அந்த இரத்த அழுத்தத்தால் இதயம் பாதிக்கப்படுகிறது.

உடற்பயிற்சி...

உடற்பயிற்சி இதயத்திற்கு ஆரோக்கியத்தை தான் தரும். ஆனால் அந்த உடற்பயிற்சியே அளவுக்கு அதிகமானால், இதயத்திற்கு அதிக அழத்தம் ஏற்பட்டு, மயக்கம் அல்லது சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே உடற்பயிற்சியை அளவோடு செய்தால், இதய ஆரோக்கியத்தை நீட்டிக்க முடியும்.

பற்களின் ஆரோக்கியம்...

பற்கள் ஆரோக்கியமற்று இருந்தால், சுவாசிக்கும் போது அசுத்தக் காற்றையே சுவாசிக்க முடியும். இதனால் அந்த அசுத்தக் காற்று இதயத்தில் ஒருவித அடைப்பை ஏற்படுத்தும். எப்படியென்று கேட்கிறீர்களா? ஏனெனில் ஈறுகளில் உள்ள பாக்டீரியாக்கள் இரத்த குழாய்களின் வழியே சென்று, சீரான இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

அதிக உணவு...

உடல் பருமன் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் உடல் பருமன் அடைவதற்கு அதிகமான அளவில் சர்க்கரை உள்ள உணவுகள், கலோரிகள் நிறைந்த உணவுகளை உண்பது மற்றும் உடற்பயிற்சி இல்லாதது பெரும் காரணமாகும். ஆகவே குறைவான அளவில் உணவை உண்டால், இதயத்தை ஆரோக்கியத்துடன் வைக்கலாம்.

புகைப்பிடித்தல்...

ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் பிடிப்பது என்பது, இதயம் இரு மடங்கு அதிகமாக பாதிக்கப்படுகிறது என்பதற்கு அறிகுறி. மேலும் இந்த சிகரெட் இதயத்தில் நோயை ஏற்படுத்துவதோடு, புற்றுநோய் மற்றும் பல நுரையீரல்களில் நோய்களையும் ஏற்படுத்தும். ஆகவே இவற்றை தவிர்ப்பது நல்லது...

இந்தியாவில் ராமர் கோவில் இருந்தற்கான ஆதாரமே இல்லை...


ஆரியம் கூறும் அத்தனையும் பொய்களே...

அந்த பொய்களின் தொடர்ச்சியே...
பாஜக... ஆர்.எஸ்.எஸ்...

ஊசியும் நூலும்...


தையல் வேலைக்கு மிகவும் அவசியமானது ஊசியும் நூலுமே ஆகும்.  ஊசியானது மூன்று அம்சங்களை உடையதாய் இருத்தல் வேண்டும்.  அவையாவன் ஒன்று முனை கூர்மையாய் இருக்க வேண்டும். இரண்டு, உறுதியாய் இருத்தல் வேண்டும்.  மூன்று, காது  இருத்தல் வேண்டும்.  பிறகு நூலும் நல்ல நூலாக இருத்தல் அவசியமாகும்.

மேற்சொன்ன மூன்று அம்சங்களும் நன்கு அமைந்த ஊசியின் காதில் நல்ல நூலினை நுழைத்து, இரு துண்டாக உள்ள துணிகளை நூலின் உதவியால் நன்கு இணைத்து ஒன்று படுத்த முடியும்.

ஒரு மனிதன் சாஸ்திரங்களைக் கற்று வல்லவன் ஆவதற்கு மூன்று  குணநலன்கள் வேண்டுவது அவசியம்.  அம்மூன்று குணங்களும் அவன் உள்ளதிலேயே அமைந்திருத்தல் வேண்டும்.  ஒன்று, ஞான நூல்களின் உட் பொருள்களை நன்கு சிந்தித்து அறிதற்கு மிகக் கூர்மையான அறிவு.  இரண்டு, கல்வி கற்கும் போது வேறு பயனற்ற வழிகளில் மனத்தைச் செல்ல விடாமல் நல்ல வழியில் ஒரே சிந்தனையால் குருகுலு வாசமாக இருந்து சாதிக்கவல்ல திடமான உறுதி.  மூன்று, அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோரை அணுகிக் கீழ்படிந்து, அவர் உபதேசிக்கும் அறவுரைகளையும், மிக நுட்பமான பொருள்களையும் செவியாரக் கேட்டு மனங்குளிர வாங்கி, உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.  கல்வி, கேள்வி இரண்டும் அறிவின் வளர்சிக்கு மிக அவசியமாகும்.  ஆதலால் கல்வி, கேள்விகளைக் கிரகிக்கக் கூடிய காதும் வேண்டும்.

ஆகையால், கல்வி கற்பதற்கு வேண்டிய சாதனங்கள், நல்ல ஞான நூல்கள், அவற்றைக் கற்க மிகக் கூர்மையான அறிவு, அசையாத திட வைராக்கியம், கல்வி கேள்விகளை நன்கு கிரகித்துப் பலன் அளிக்கவல்ல காது, இவையாம்.  இதற்குப் பொருத்தமான உவமை ஊசியும் நூலும்.  இது சூட்சும ஞானத்தை விளக்கக் கூடியதாகவும் உள்ளது

ஐஸ்வரியவான் கடவுள் ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஓட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிது. என்று இயேசு கூறினார் – லூக்கா 8 – 25.

ஒட்டகம் என்ற பதத்தை ஒட்டு + அகம் எனப் பிரித்துப் பொருள் கொண்டால், புறத்தில் அலையும் மனத்தை அகத்தில் ஒட்டவை என்பதாகும்.  மனத்தை அகத்தில் ஓட்ட வைக்க (ஒருமைப் படுத்த) பிராண வாயுவானது, ஊசியின் காது போன்ற சிறிய துவாரத்தின் வழியாய்ச் சென்று, சிரசின் உச்சியை அடையும்.  அகத்தில் மனத்தை ஒட்ட வைத்தவர்கள் சிரசின் உச்சி ஸ்தானம் ஆகிய கடவுள் ராஜ்யத்தில் பிரவேசிப்பது எளிது என்ற கருத்தின் அவ்வாறு கூறினார்.

“காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்று பட்டினத்தார் அருளியுள்ளார்.

அருளாளர்களின் அருள் மொழிகளைச் செவி மடுத்து உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டவர்களே வாழ்வின் பயனாகிய திருவடி ஞானத்தைப் பெறத் தகுதியுடையவர் ஆவர்.  செவி மடுக்காதவர்கள், திருவடி ஞானத்தைப் பெறார் என்பது தோன்ற வாராது காண் கடை வழிக்கே என்றார்.  உள்ளத்தில் உறுதியும் இலட்சியமும் இல்லாதவர்களைக் காதற்ற ஊசிக்கு உவமையாகக் கூறினார்.

ஊசியின் காதில் நல்ல நூல் நுழைந்து இருதுணிகளை ஒன்று படுத்தும் புறநிலையில் காணப்படுகின்ற ஊசியும் நூலும்..

அகநிலையில், ஒளிமயமான சிவத்தை உள்ளத்தில் அறிந்து, அந்த எல்லையிலேயே நின்று தியானிக்க, ஊசியின் காது போன்ற சிறிய துவாரத்தின் வழியாய் (திருக்க தவந் திறந்து ) மனம் உட்சென்று ஒடுங்க, *நாதகலை, விந்து கலை ஆகிய இரு திருவடிகளும்* ஒன்றாகி, கடைவழிக்குச் செல்லும்.  ஞான இரகசியங்களை குரு முன்பாக உணராதவர்கள் கடை வழிக்கு வாரார்கள் என்பது தோன்ற “காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே” என்றார்...

தமிழகத்தை அழிக்க மேலும் அணு உலைகள் திறக்கும் பாஜக - அதிமுக...


அஜீரண தொல்லையிலிருந்து விடுபட ஓமம்...


அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமி நீங்கிச் சுத்தமாகும். அதைப் புடைத்து அம்மியில் வைத்து அத்துடன் அதே அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு காலை மாலை இரு வேளை வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர வயிறு குணமாகும். உப்புசமும் நீங்கும்.

முருங்கை இலையை உப்புச் சேர்த்து லேசாக நசுக்கி கசக்கிப் பிழிந்து வரும் சாற்றில் இரண்டு ஸ்பூன் சாப்பிட உடனே வயிற்றுவலி நீங்கும்.

வெந்தயத்தை ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்து தயிரில் சேர்த்துச் சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம், பனை வெல்லம் 5 கிராம் இவற்றில் சுக்கைத் தோல் நீக்கிவிட்டு பின் மற்ற சரக்குகளையும் தூளாக்கி அத்துடன் பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் காலையில் சிறிதளவு உள்ளுக்கு அருந்தி வர அஜீரண சம்பந்த வயிற்றுவலி குணமாகும்.

குழந்தை வயிற்று வலியால் துடித்தால் வசம்பு சுட்ட சாம்பலுடன் சிறிது தேன் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விடுவதோடு, வசம்பு சுட்டகரியைச் சிறிது நீர்விட்டு குழைத்து வயிற்றில் கனமான பற்று போட்டுவந்தால் குணமாகும்.

வயிற்றுக் கடுப்பு அதிகமாக இருக்குமானால் தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும்.

சிறிது பெருங்காயத்தை பொரித்து நீர் மோரில் சேர்த்து அத்துடன் கறி மஞ்சள் தூளில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் வாயு சம்பந்த வயிற்றுவலி நீங்கும்.

இஞ்சிச்சாறுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, கல் உப்பைப் பொடித்துச் சேர்த்துக் குடித்தால், செரிமானக் கோளாறு சட்டென சரியாகும்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வை கழுவி ஊற்றிய அமெரிக்க ட்ரம்ப்...


தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் சூட்டியது யார்?


1959ல் தமிழ் நடிகர் சங்கம்
தொடங்கவிருந்த இயக்குனர் கே.சுப்ரமணியத்தை சந்தித்து..

அதை தென்னிந்திய நடிகர் சங்கம் என்று பெயர்மாற்றச் செய்தவர்..

மலையாளி ம.கோ.இரா (எம்.ஜி.ஆர்)..

அக்குபஞ்சர் யாரால் தோற்று விக்கப்பட்டது?


தென்கிழக்கு சீனாவில் இன்றும் முப்பது லட்சம்பேர்  பின்பற்றும் தாவோயிசம் மற்றும் அதன் கொடையான அக்குபஞ்சர் மருத்துவ முறையையும் தோற்றுவித்தது யார்?

கி.பி.200 வாக்கில் போகர் தமிழகத்தில் இருந்து சீனாவிற்கு சென்று ஒரு சீன இளைஞனின் உடலில் புகுந்து 'ஐ' என்ற மனிதனாகி 'தவ்' கொள்கையைத் தோற்று வித்தாராம்.

இந்த அறக்கொள்கையை 'யூ' பரம்பரையிடம் கையளித்துவிட்டு தமிழகத்தின் சொர்க்கமான பழனி மலைக்கு திரும்பினாராம்...

அதிமுக ஓபிஎஸ் சின் ஏமாற்று வேலைகள்...


தமிழ் நாட்டின் அசல் பிரச்சினைகள் குறித்து மக்களை சிந்திக்கவிடாமல் செய்வதில் இருக்கிறது ஆளுபவர்களின் வெற்றி...

திராவிட நாட்டிற்காக போராடியவர் அல்ல நம் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன்...


தமிழர் தனி நாட்டிற்காக..
தமிழர் தாயக மீட்பிற்காக..
தனி தமிழ் ஈழத்திற்காக போராடியவர் தான் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்..

தமிழர் வரலாற்று எதிரி ஆரிய வடுகனும் இனப்படுகொலை செய்த சிங்கள வடுகனும் திராவிடர், இவர்களால் மண்டழிந்த தமிழரும் திராவிடரா?

உலகம் தமிழர் மரபினத்தை தமிழர் என்று பதிவு செய்யாததே ஒரு சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் அரசியல் சதி, திராவிட மரபினம் என சுட்டியது அதை விட முரனான வரலாற்று திரிபு.

இப்படியிருக்க தமிழரை வேறு வழியில்லாமல் திராவிடர் என சுட்டியதை திராவிட இயங்கங்கள் திராவிட அரசியல் திரிபு வேலைகளை செய்கின்றது.

திராவிட இயங்கங்கள் 'மரபினத்தின் அடிப்படையில் திராவிடர் என ஏற்பதில்லை' என்ற கருத்தியலை கொண்டது.

அதாவது, பிராமனன் தன் வருனாசிரம கொள்கையை விட்டொழித்தால் அவனும் திராவிடன், இது இனமா?

இனத்தின் அடிப்படையில் 1,40,000 தமிழர்களை கொன்றொழித்த ராசபக்சே சிங்கள வடுகன் கூட திராவிட இனம் தான்.

திராவிடம் ஒரு சுக்குக்கும் உதவாத கருத்தியல்..

தமிழர்க்கு எதிரான இனம் (சிங்களர், கன்னடர், தெலுங்கர், மலையாளி).

தமிழரை தமிழர் என்று சொல்லாமல் திராவிடர் என்ற அடையாளத்தை திணிப்பவன் எதிரியை விட ஆபத்தானவன்..

அவன் தான் போரில் எதிரியை எதிர்கொள்கையில் நம் கையிலிருக்கும் ஆயுதத்தை பிடிங்கி எறிபவன்..

தமிழர் நம் இனம்
தமிழர் நம் போர் வாள்...

தமிழகத்தில் மீண்டும் சந்தேகத்தை ஏற்ப்படுத்தும் இலுமினாட்டீஸ் - விஜய் சர்க்கார்...


உலகின் முதல் அறிவியல் மொழி தமிழ்...


தமிழில் பேசுவதைப் பார்த்துப் பகடி செய்யும் பகடியாளர்களுக்குத் தமிழைப் பற்றி முழுமையாகத் தெரியாதது மட்டுமல்ல, அவர்களுக்குப் பொதுவாக மொழியைப் பற்றிய புரிதலும் சரியாக இல்லை ; அதனால் தான் அவர்கள் அவ்வாறு பகடி செய்கிறார்கள்.

மொழிஞாயிறு பாவாணர் ஐயாவின் கருத்துப்படி, மொழி, உலகிலிருந்து பெற்ற தரவுகளின் வழி அறிவைக் கட்டி வளர்க்கிறது ; அது உலகிற்கு அறிவைக் காட்டி நிற்கிறது ; மொழி, அதைப்  பேசுவோருடைய இனத்தைக் காட்டி நிற்கிறது; இனத்தைக் காட்டிக் காட்டியே இனத்தவர்களை ஒன்றாகக் கட்டி நிற்கிறது ; அறிவுக் கருவியாய் இலங்கும் மொழி, மாந்த மரபணுவின் கூறாய் அமைந்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடந்து செல்கிறது ; அறிவையும் இனத்தையும் ஆள்கின்ற மொழி, உலகத்தை ஆள்கின்ற பொருள் உருவாக்கத்தைத் தீர்மானிக்கிறது ; மொத்தத்தில் மாந்த வாழ்வின் அடிப்படையே மொழி தான்.

மேற்கண்ட கருத்தின் அடிப்படையில் எண்ணிப் பார்த்தால், “ மாந்த வாழ்வு அழியக்கூடாது என்றால், அந்த மாந்தர்களின் மொழி அழியக் கூடாது ; அந்த மொழி அழியக்கூடாது என்றால், அந்த மாந்தர்களின் மொழிப் பயன்பாட்டிலிருந்து அவர்களுடைய மொழிச் சொற்கள் தவிர்க்கப்படக் கூடாது ” என்பது புரிய வரும்.

இனி, தமிழுக்கு வருவோம் : மீண்டும் பாவாணர் கருத்துப்படி, உலகில் தோன்றிய மாந்தகுலம் முதன்முதலாகப் பேசிய மொழி ‘தமிழ்’ ; அது, இயற்கையிலிருந்து பிறந்த ஓர் இயற்கை மொழி ; அது சற்றொப்ப ஐம்பதாயிரம் ஆண்டு பழமையான மொழி. பாவாணர் தமிழின்  சிறப்புக்களை வரிசைப் படுத்துங்கால் கீழ்க்காணும் பதினாறு சிறப்புக்களைப் பட்டியலிடுவார் : “தொன்மை, முன்மை, இயன்மை, வியன்மை, தாய்மை, தூய்மை, இளமை, வளமை, இறைமை, மறைமை, இனிமை, தனிமை, எண்மை, ஒண்மை, அம்மை, செம்மை” ஆகியன தமிழின் சிறப்புக் கூறுகளாம்.

 ‘கா -கா ’  என்று கரைவதை ‘காக்கை ’ என்றதும் ‘கீ - கீ ’ என்று கிளத்தியதை அதாவது பேசியதைக் ‘கிளி ’ என்றும் ‘மா - மே ’ என்று  ஒலியெழுப்பியவற்றைப் பொதுப் பிரிவாக ‘மா ’ என்றதும் அவற்றுள் கருப்பாய் இருந்ததை ‘கரிமா’ என்றும் பெருவலிவும் பேரொலிப்பாடும் (கர்ச்சனை)  கொண்டதை ‘அரிமா ’ என்றும் உடம்பில் வரி தாங்கியதை ‘வரிமா ’ என்றும் பகர்ந்ததும் தமிழே என்றால் தமிழ் ஓர் இயற்கை மொழியன்றோ.

தாய் சுமந்து பிறந்த பிள்ளை வாய் திறந்து பேசும்போது அங்காந்தால் (வாய் பிளந்தால்) அகரம், ஆகாரம் (அ, ஆ) , வாய் இளித்தால் (பக்கவாட்டில் இழுத்தால்) இகரம், ஈகாரம் (இ, ஈ),  வாய் குவித்தால் உகரம், ஊகாரம் (உ,ஊ) என்றவாறு அடிப்படை ஒலிகள் பிறக்குமானால், தமிழ் ஓர் இயற்கையான முதன்மை மொழியல்லவா?

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த உலக முதன் மாந்தர்களாம் தமிழர்கள், கல்லொடு கல் தேய்த்துத் தேய்த்து பிறந்த நெருப்பை ‘தீ’ என்றனர் ; தீ தந்த ஒளியை ‘தெய் ’ என்றனர்; குமுகத்தில் அறிவொளி பாய்ச்சும் அறிவர்களைத் ‘தெய்வம்’ என்றனர். மேற்கண்ட செய்தியில்  மாந்தகுலத்தின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பான ‘நெருப்பு’ தமிழர் தம் உழைப்பில் பிறந்தது என்ற உண்மையை அறிகிறோம். ‘ஒல்’ என்று ஒலி எழுப்பியதை ‘ஓலை’ என்றும் ‘அர் ’ என்று ஒலி எழுப்பியதை ‘ அருவி ’ என்றும் அதிரொலி எழுப்பிய விலங்கினை ‘அரிமா ’ என்றும் எதிர்க்க முடியா ஒலியை எழுப்பும் தலைவனை அரசன் என்றும் நம் தமிழ் பகர்வதை எண்ணிப் பார்த்தால் எத்துணையளவிற்குத் தமிழ் கரணியம் - காரியம் சார்ந்ததும் அறிவுத் தேடல் சார்ந்ததுமான  மொழி என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த வகையில் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஒவ்வொரு அறிவுத் தேடலில் பிறந்தவை என்பதால், தமிழ் ஓர் அறிவுப் பேழை; அறிவுச் சொத்து. அப்பெரும் சொத்தை இழக்கத் துணியும் ஓர் இனம் அறிவற்ற இனமாகிவிடுமல்லவா?

எனவே, ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் ஓர் அறிவுப் பேழையே என்ற அடிப்படையில் தமிழ் ஓர் அறிவுக் களஞ்சியம். இந்தத் தமிழே ஒரு காலத்தில் கரும்பொன் (இரும்பொன் - இரும்பு), செம்பொன் (செம்பு), வெண்பொன் (வெள்ளி), மஞ்சட்பொன் (பொன் - தங்கம்), ஐம்பொன்  போன்ற பல பொன்களை (மாழைகளை - உலோகங்களை) உருக்கிப் பெருக்கியது ; இந்தத் தமிழே ஞாயிறு (தலைக் கோள்)  திங்கள் (துணைக் கோள்), செவ்வாய் (செந்நிறம் கொண்ட கோள்), அறிவன், வியாழன் (பெருங்கோள்), வெள்ளி (வெண்கோள்), காரி (கருங்கோள்) என்றவாறு கோள்களை அறிந்து வான் வெளியை அளந்தது ; இந்தத் தமிழே தென்கிழக்காசியக் கடல்கள் அனைத்தையும் அளந்து, 25-நாடுகளுக்கும் மேலானவற்றை ஆண்டது ; இந்தத் தமிழே அனைத்துலகக் கடல்கள் அனைத்தின் மீதும் மிதந்து, ஒருகாலத்தில் உலக வணிகத்தை நடத்தியது ; இந்தத் தமிழே, ஐவகை நிலம் அமைத்து ஆயிரம் வகைப் பயிர் வளர்த்து உலகிற்கு உணவீந்து உயிரூட்டியது ; இந்தத் தமிழே, ‘கற்றது கைமண் அளவு ; கல்லாதது உலகளவு ’ என்றும் ‘கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு ’ என்றும் ‘யாதும் ஊரே ;யாவரும் கேளிர் ’ என்றும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தலை ’ என்றும் ‘துய்ப்போம் எனினே தப்புந பலவே ’(மிகை நுகர்வு, உலக வளங்களை  ஒழித்துவிடும்) என்றும் உலக உறவை வளர்த்தது.இப்படிப்பட்ட அருந்தமிழை இழந்துவிடுவது என்பது, தமிழர்க்கு மட்டும் இழப்பல்ல ; இந்த முழு உலகத்திற்கும் பேரிழப்பாகவே முடியும்.

எனவே, தமிழர்கள் தமிழில் பேசும் போது தமிழ்ச் சொற்களையே பயன் படுத்துகிற முயற்சியும் பயிற்சியும் வெறுமென தமிழ் மொழியை அழிவிலிருந்து காக்கின்ற முயற்சி மட்டுமல்ல; அது ஓர் இன மீட்சி நோக்கிய முயற்சி ; ஐம்பதாயிரம் (50,000) ஆண்டுகாலமாக நம் முன்னோர்கள் உழைத்துத் தொகுத்துச் சேர்த்த  அறிவுச் சொத்தை கட்டிக் காத்திடும் முயற்சி; நம் தமிழரின மக்களின் மான வாழ்வின்  காப்பு முயற்சி; முழு உலகத்தையும் ஓர் உறவுக் குடும்பமாக ஆக்கிடும் ஓர் உயர்ந்த முயற்சி.

- அருள்நிலா.

உலகின் முதல் அறிவியல் மொழி தமிழ்.. அந்த தமிழின் மரபில் வந்தவர்கள் நாம்...

பாஜக - ஆர்.எஸ்.எஸ். சின் மருத்துவ மாப்பியா...


பறையர்களை எவ்வாறு அழைப்பது? தலித் என்று அழைக்கலாமா?


ஓ அழைக்கலாமே..

சிறைக்கம்பிகளை எண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தால் தாராளமாக அழைக்கலாம்.

1. அரசாணை நிலை எண். 198,
சமூக நலத்துறை, நாள் 21-03-1981

2. அரசு கடிதம் எண். 24024/ஆதிந-2/1998-2 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 15-03-1999

3. அரசாணை (ப) எண் 69இ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 05-04-1999

ஆகிய ஆவணங்களின் படி
"தாழ்த்தப்பட்டோர்"
"தாழ்த்தப்பட்ட மக்கள்"
"தலித்"
"தலித்துகள்"
"தலித் மக்கள்"
"தலித் சாதி"
"தலித் சமுதாயம்"

போன்ற இழிவுப் பெயர்களால்  அழைக்கவோ, உச்சரிக்கவோ, எழுத்தால் எழுதவோ, ஆவணங்களில் பதிவு செய்யவோ கூடாது என்று அரசே ஆணை பிறப்பித்துள்ளது.

ஆக தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற சொற்களை பயன்படுத்துதல் சட்டப்படி குற்றம் ஆகும்.

ஆதி திராவிடர் என்று அழைக்கலாமா?

1918 ல் திராவிட மகாஜன சபை ஆவணங்களில் பறையர், பஞ்சமர் போன்ற பெயர்களை நீக்கி 'ஆதி திராவிடர்' என்று குறிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது.

மூன்றாண்டுகள் பரப்புரையிலும் ஈடுபட்டது.

1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை 'ஆதி திராவிடர்கள்' என்று சொல்லிக்கொண்டு,
குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர்.

ஆனால் 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாணத்தில் SC/ST பிரிவினரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும்.

இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர்.

அதாவது ஆயிரத்தில் ஒருவர் கூற 'ஆதி திராவிடர்' என்று பதியவில்லை.

இது, தமிழ்நாட்டு பட்டியல் சாதியாரும் பிறமாநிலத்தாரைப் போல ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது.

ஆக ஆதிதிராவிடர் எனும் பெயர் அவர்கள் விரும்பிய ஒன்று அல்ல.
திணிக்கப்பட்ட ஒன்று.

பறையர்களை பலமுறை சாதிவெறியுடன் கேவலமாகப் பேசியுள்ள ஈ.வே.ரா இதுபற்றி என்ன கூறியுள்ளார்.

( விடுதலை- ஞாயிறு மலர் 21.8.1994
ஆசிரியர் கேள்வி- பதில் பகுதி)

கேள்வி: திராவிடநாடு திராவிடருக்கானால் ஆதி திராவிடர்களுக்கு என்ன லாபம்?

பெரியார்: லாபம் இல்லை. நட்டம் தான். ஆதி என்ற இரண்டு எழுத்துகளை வெட்டியெறிந்து விடுவோம்.

அதாவது அவர்கள் திராவிடர்களாக இருந்தால் போதுமாம். ஆதிகுடிகளாக இருக்கக்கூடாதாம்.

ஆகவே பறையர் பெருமக்களை அவர்களின் சமூகத்தைக் கொண்டு குறிக்க பறைய'ர்' என்று மரியாதையாக அழைப்பதே முறை.

அனைத்துப் பிரிவினரையும் சமூகத்தால் குறிப்பிட இங்ஙனம் அழைப்பதே சரி.

அவமானப்படுத்தும் வகையில் சாதிப் பெயரைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றமே ஆகும்...

சிலை கடத்தலும்... திராவிடமும்.. இந்தியமும்...


தமிழர்களே சிந்தியுங்கள்...


தமிழன் சாகனும் திராவிடன் ஆட்சி அதிகாரம் ஏறனும்...

1. இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்தவன் தமிழன் ஆனால் புகழ் திராவிட. கன்னட ராமசாமி நாயக்கருக்கு..

2. தமிழ்நாடு பெயருக்கு உயிர் நீத்தவர் தமிழர் சங்கரனார் ஆனால் புகழ் திராவிட அண்ணாத்துரைக்கு..

3. MBC இடஒதுக்கீட்டுக்கு உயிர் நீத்தவர்கள் வன்னிய தமிழர்கள் ஆனால் புகழ் திராவிட கருணாநிதிக்கு..

4. வரலாறு தமிழர் வரலாறு ஆனால் புகழ் திராவிடனுக்கு..

சாகத்தெரிந்த தமிழர்களுக்கு உயிர்தீயாக புகழை மட்டும் அல்ல, நீர், நில, வள ஆட்சி அதிகாரம் அனைத்தையும் மாற்றானுக்கு கொடுத்து விட்டு... அரசியல் தெரியாமல் திராவிடனிடம் அடிமையாக நிற்க்கும் தமிழன் என்று முழுவிழிப்படைவான் ?

திமுக ஸ்டாலினின் நமக்கு நாமே...


தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்...


1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பது நிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது...

பாஜக - அதிமுக வின் நியூட்ரீனோ சதிகள்...


புதனும் சுக்கிரனும்...


ஜோதிடத்தில் புதனுக்கு மட்டும் ஏன் ஆட்சி/உச்சம் மற்றும் மூலதிரிகோண வீடு அவருடைய சொந்த வீடான கன்னியாக இருக்கிறது என்கிற நண்பர்களின் சந்தேகத்தை தீர்க்கும் பதிவாகும்.

அனைத்து கிரகங்களும் சூரியனின் வீடாகிய சிம்மம் மற்றும் சந்திரனின் வீடாகிய கடகத்தை ஆரோகண மற்றும் அவரோகன ஆரம்பப் புள்ளிகளாகக் இரண்டு வீடுகளைக் கொண்டிருக்கும். அவையே அவற்றின் ஆட்சி வீடுகளாகும், தவிர எல்லாக் கிரகங்களும் உச்சமாவது வேறொரு கிரகத்தின் வீட்டிலாகும். ஆனால புதன் மட்டும் தனது சொந்த வீடான கன்னியிலே உச்சம் பெறுவார். காரணம் புதனின் உச்ச நிலைப்பாடு என்பது சுக்கிரனை மையமாக வைத்து தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும்.

(சுக்கிரனின் உச்சம் காலனுக்கு அயன ஸ்தானத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்).

ஏனெனில் புதன்/புத்தி, சுக்கிரன்/உணர்வு. இதில், புத்தியாகிய புதனும் உணர்வாகிய சுக்கிரனும் எதிர் துருவங்களாகும்.

அதாவது புத்தி செயல்படும்போது  உணர்வு வேலை செய்யாது; அதுபோல உணர்வு மேலோங்கும்போது புத்தி மட்டுப்படும். அதனாலேயே அவை எதிரெதிர் துருவங்களாயின...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஜகாரியா சிட்சின் Zecharia Sitchin  என்பவரின் "12th Plants"  என்ற தனது புத்தகத்தில் பண்டைய வேற்றுகிரக இனங்கள் சம்பந்தப்பட்ட மனித தோற்றத்திற்கான ஒரு விளக்கத்தை முன்மொழிகிறார். அனுனாக்கி என்ற வேற்றுகிரக இனம் புராதன சுமேரிய கலாச்சாரத்தை உருவாக்கியதாக சிட்சின் குறிப்பிட்டார், இவர்கள் நிப்ரூ என்று அழைக்கப்படும் நெப்டியூனுக்கு அப்பால் உள்ள கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

நிபீருவின் என்ற கிரகமானது சூரியனைச் சுற்றியுள்ள 3,600 ஆண்டு நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருப்பதாக சுமேரியன் பட்டயங்களில் உள்ளது என்று அவர் முன்மொழிகிறார்.

மேலும் தாமஸ் சி வான் ஃப்ளாண்டெர்ன் ஒரு அமெரிக்க வானியலாளர் ஆவார். அவரின் ஆராய்ச்சியின் படி, செவ்வாய் மற்றும் வியாழன் இடையே காணாமல் போன நெபிலியம் என்ற வேற்றுகிரக இனங்கள் வாழ்ந்த  ஒரு கிரகம் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு வேற்றுகிரக இனத்தினால் ஏற்பட்ட ஒரு போரில், பிளாஸ்மா வெடிப்பால் அந்த கிரகத்தின் ஆழிவு நிகழ்ந்திருக்க கூடும் என்றும், இந்த வெடிப்பிற்க்கு பிளாஸ்மா ஆயுதங்களை அந்த கிரகத்தில் பயன்படுத்தியிருக்க வேண்டும். என தனது ஆராய்ச்சி முடிவுகளை தெரிவித்தார்.

மேலும் டாக்டர் ஜோசப் பார்ரெல் அந்த ஆழிந்த கிரகத்தில் உள்ளவர்கள். புத்திசாலி மனிதர்கள் இருந்ததாக கூறினர். அவைகள் அந்த கிரகத்தின் உயர் ஈர்ப்புவிசை காரணமாக மிகப்பெரிய அளவிலும் மற்றும் கனமான எலும்புக்கூடும் உடையவர்களாக இருந்திருக்கலாம் எனவும் அவர்களின் கிரகம் அழிவிற்கு காரணமான இந்த பிளாஸ்மா ரே என்ற வடிவம் பூமியில் உள்ள அனைத்து புராதன மத புராணங்களில் உள்ள கடவுளர்களின் ஒரு இடிமின்னல் ஆயுதமாக இருந்தது.

கிரேக்க கடவுடள் ஜீயஸ், மற்றும் நெப்டியூன் கடவுள் பொசைடன், இந்து கடவுளாகிய இந்திரா,சிவன் மற்றும் பாபிலோனிய கடவுள் மித்ரா ஆகியோர் ஒவ்வொருவரும் தெய்வீக இடி மின்னலுடன் அந்த திரிசூல ஆயுதத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.

இவைகள் புராணங்களிலும் வரலாற்று மற்றும் நவீன கலாச்சாரங்களிலும் பரவலாக இடம்பெற்றுள்ளன.

என் முதல் யூகம் இந்த கிரகத்தை அழித்த வேற்றுகிரக இனங்கள் பற்றி சக்கரியா சிட்சின் படைப்பில் அவர்கள் கூறும்  12 வது கிரகத்தில் இருந்து வந்த அனுனாக்கி மூதாதையர்கள். போரின் போது அழிக்கப்பட்ட கிரகத்தில் இருந்து நெபிலியம் மற்றும் நிப்ரூ உயிரினங்கள் சில  உயிர்பிழைத்து பூமிக்கு தப்பி, இரு இனங்களின் ஒரு இனம் மங்கோலியா போன்ற வட சீனாவின் அருகிலும் பகுதிகளிலும். மற்றொரு இனம் தெற்கு மெசொப்பொத்தேமியாவின் பகுதியிலுள்ள சுமேரியாவில் வந்து இறங்கியிருக்கலாம்.

இந்த வேற்றுகிரக இனங்களின் 300 ஆண்டு போர்க்கு பிறகு பூமியில் மக்களிடம் ஒரு இனகலப்பை உருவாக்கி இருக்கலாம்.

சுமார் 450,000 ஆண்டுகளுக்கு முன்னர், அந்த உயிரினங்களின் வம்சாவளியினர் அழிக்கப்பட்ட  பன்னிரெண்டாம் கோளிலிருந்து வந்த மாபெரும் வேற்றுகிரக இனங்கள், இவர்களை பற்றி பரிசுத்த பைபிள் ஆதியாகமத்தில் விவரிக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு இடையேயான போர் முடிவடையவில்லை.பூமியில் தங்களது கலப்பினங்களுடன் போரை மறுபடியும் தொடங்கினர்.

ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஆரியர்கள் உண்மையில் நெபிலிம் வேற்று கிரகவாசிகளால் உருவாக்கப்பட்ட கலப்பினங்கள் என்று நினைக்கிறேன். சில இந்து வேத நூல்கள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகளின் படி, ஆரியர்கள் பூமியின் வட துருவத்தில் உருவானார்கள், பின்னர் இந்தியா, பெர்சியா, வட ஆபிரிக்கா மற்றும்

வியக்கத்தக்க வகையில், இந்த ஆரியர்கள் கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு கிழக்கே பயணம் செய்யவில்லை. ஏன்? ஒருவேளை சீன நிலப்பகுதி ஏற்கெனவே மாபெரும் வேற்றுகிரகவாசிகளால் காப்பாற்றப்பட்டிருக்கலாம், இதனால் ஆரியர்கள் சீனாவைக் கைப்பற்றுவது கடினம் என்பதைக் கண்டனர்.

வட சீனா மற்றும் சைபீரியா ஆரக்கிள் சமீபத்திய ஆராய்ச்சியின் படி, வேற்றுகிரக இனங்கள் தங்கள் இராணுவம் பிரமிடுகளை உருவாக்க சீன பண்டைய மக்களை அடிமைப்படுத்தியதும். சுவர் சித்திரத்தில், லெதர் கவசத்தில் அணிந்திருந்த ஒரு குழுவினர், 12 அடி உயரமுடைய, சிவப்பு ஹேர்டு, இனங்கள் அந்த அன்னிய படையெடுப்பாளர்களை எதிர்த்து போராட மக்களுக்கு உதவியது. சீன பண்டைய இதிகாசங்களில் உள்ளன.

மேலும், வடக்கு சீனா மற்றும் மங்கோலியாவின் கோபி பாலைவனம் ஆகியவை கடுமையான காற்று மாசுபாடு மற்றும் அணுசக்தி போரை எதிர்கொண்டதாகவும் சிட்சின் கூறினார். (பண்டைய இந்தியாவின் முந்தைய வரலாற்று  யுத்தம் நடந்த இரண்டு இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் இரண்டும்  அணு ஆயுத யுத்தம் தான்.) செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடையேயான பறக்கும் பாறைகள்(Asteroids).

வேற்றுகிரக கடவுளர்களின் யுத்தத்தில் அழிந்த ஒரு கிரகத்தின் எச்சங்களே..

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பண்டைய சீன 'புதையல் சக்கரம்' என்ற சீன ஆகாமா சித்திரங்கள்,

சூத்திரங்களிலிருந்து வரும்
குறுகிய விளக்கங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, வேற்று கிரகவாசிகள் தொடர்பான தகவலைப் பற்றியது இது:

1) புதையல் சுற்று (அதாவது 'விலைமதிப்பற்ற சக்கரம்') திடீரென்று முன் தோன்றியது. இந்த சக்கரம் மிகவும் பிரகாசமாக இருந்தது, அதன் மையத்தில் ஆயிரம் பேச்சாளர் கூட்டங்கள் இருந்தன. தெய்வீக வானத்தில் உள்ள உயிரினங்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட அதன்  கலையுணர்வு அற்புதமான, இது இந்த உலகத்தின் தயாரிப்பு அல்ல. இந்த விலையுயர்ந்த சக்கரம் தூய தங்கத்தால் கட்டப்பட்டது, பதினான்கு அடி (சுமார் நான்கு மீட்டர்) அளவைக் கொண்ட விட்டம் கொண்டது.

2) ஒரு தங்க சக்கரம் திடீரென்று தெய்வீக வானத்தில் தோன்றியது ...

3) அந்த நேரத்தில், சக்ரவர்த்தி (அதாவது 'தெய்வீக முனிவர்') உலகின் வழியாக (அதாவது 'நான்கு கடல்களில்') விலையுயர்ந்த பொன்னிற சக்கரம் வழியாக அலைந்து கொண்டிருந்தது ... அரண்மனைக்கு மேல் தங்கியிருந்த பொன்னான தங்க சக்கரம்.

இந்த சீனர்களின் ஆகாமா சித்திரங்கள், சூத்திரங்களிலிருந்து வரும். தங்க புதையல் சுற்றுகள் (அல்லது விலைமதிப்பற்ற தங்க சக்கரங்கள்) விவரம், நவீன யுஎஃப்ஒ நிகழ்வுகளோடு தொடர்புடைய நடத்தையை பதிவு செய்கிறது.

ஒரு ஆயிரம் பேச்சாளர்கள் என்ற சொல் வர்ணணை யுஎஃப்ஒவின் தொடர்புடைய ஒளியின் கதிர்வீச்சியைக் குறிக்கம் சொல்லாக பயன்படுத்தியாக தோன்றுகிறது,

'அதன் தெய்வீக கைவினைத்திறன் தெய்வீக வானத்திற்குள் வாழும் உயிரினங்களுடன்  தொடர்புடையதாக இருப்பதை நினைவூட்டுவதாகவும், உள்ளது.

அந்த சக்கரம் இந்த உலகத்தின் உற்பத்தியாகவும் இல்லை'. இந்த 'தெய்வீக வானம் மனிதர்கள்' வந்த சக்கரம் கூடுதல் நிலப்பரப்பு தோற்றத்தை தெரிவிக்கிறது. அதாவது 'சக்கரம் 14 அடி விட்டம் கொண்டது' என்ற எண்ணம் UFO இன் பரிமாணத்தையும் அளவையும் விவரிக்கிறது.

'சக்கரவர்த்தி' (அதாவது 'தெய்வீக முனிவர்') என்பது 'பறக்கும் பொருளில் வந்த தங்கள் கடவுள் என்ற கருத்து' என்றும் குறிக்க முடியும். இந்த பெரிய ஆட்சியாளர் ஒரு யுஎஃப்ஒ (அல்லது 'புதையல் சக்கரம்') இல் சவாரி செய்யும் அதே சமயத்தில் தனது முழு ராஜ்யத்தை பார்க்க பறக்க முடிந்தது. இது 'kingly wheel அரச சக்கரம்' என்றும் சொல்லலாம்.

நான்கு வகையான விலைமதிப்பற்ற (அல்லது 'புதையல்') சக்கரங்கள் உள்ளன. என்று வருகிறது.
தங்கம், வெள்ளி, தாமிரம் மற்றும் இரும்பு போன்ற வண்ணங்களில் வேறுபடுகின்றன, என்பதன் மூலம் இவர்களின் பறக்கும் தட்டு, நிறத்தை மாற்றுவதற்கான திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

(இது போன்று பறக்கும் தட்டு தனது வண்ணங்களை மாற்றியதாக கூறப்படும் மற்றொரு சம்பவம் சீனாவில் சமகாலத்தில் நடந்தது. அதை பற்றி மற்றொரு பதிவில் காணலாம்.)

புத்தர் சக்கர கட்டமைப்பு போன்ற ஒரு மேடையில் வட்டு மீது உட்கார்ந்து, மற்றொரு புறம் அவரது முதுகு மற்றும் தலைக்கு பின்னால், சுற்றிய ஒரு 'ஹலோ' வெளிச்சம், உள்ளதை பார்க்கும்...