26/06/2017

அதிமுக காட்டியும் கொடுக்கிறது.. கூட்டியும் கொடுக்கிறது...




பாஸ்போர்ட்டில் ஹிந்தி : ஹிட்லரின் கொள்கையை அச்சு பிசகாமல் பின் பற்றுகின்றதா மக்களை எப்பொழுதும் பதட்டமாக வைக்க பார்க்கின்றதா ?

கேட்பது வேறு யாரும் அல்ல அதிமுக வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிர் நாளிதழ் தலையங்கம்...

வேற்று மொழியினர் 60 சதவிகிதம் வசிக்கும் நாட்டில் ஹிந்தியை கட்டாயமாக்குவது நியாயமா எனவும் நமது எம்ஜிஆர் நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.

3 அணிகளும் பாஜகவிற்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் மத்திய அரசிற்கு எதிராக அதிமுகவின் நாளேடு எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

பாஜக மோடி பக்தாள் வயித்தெரிச்சல்ல சாகுங்கடா...


மல்லிகையும் மருத்துவ குணமும்...


மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள்.  காரணம்  மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும்  எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.   சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும்.  கண் எரிச்சல்,  பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய்  சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில்  தடவினால் தலைவலி நீங்கும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால்  கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

தேங்காய் எண்ணெய்    - 100 மி.லி.
உலர்ந்த மல்லிகைப்பூ   - 5 கிராம்
கறிவேப்பிலை                  -10 இலை

எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப்  பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்...

ஆரியன் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?


ஆரியன் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான் என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா..

ஆரியன் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான் என்று எழுத வேண்டியது தானே..

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க?

அடுத்து, தமிழன் என்றாலே ஆரியனும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்று சொல்லுறீங்க..

அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?

சாதிய தலைவர் அல்லது ஆரிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியது தானே..

திருட்டு திராவிடர்ஸ்...

இந்தியாவை ஆள்வது ஆரியம். அந்த ஆரியத்தை கண்ணும் கருத்துமாய் கட்டி காப்பது திராவிடம்...


இதன் அடிப்படை நோக்கம் நாயக்கர்களின் ஆட்சியை இங்கே தக்க வைப்பது தான்.

இங்கே ஒரு தமிழன் ஆளும் போது, தமிழனும் ஒன்று சேர்வான்.

காவிரியில் தண்ணீர் ஒழுங்காய் வரும்.

முல்லை பெரியாரில் மலையாளி குதர்க்கம் செய்ய மாட்டான்.

தமிழக மீனவனை சிங்களன் தொட்டு கூட பார்க்க மாட்டான்.

நம் கண் முன்னே இன்னொரு முள்ளி வாய்க்கால் நடக்காது.

திராவிட சூழ்ச்சியை புரிந்து கொள்வோம்...

மீத்தேன் எனும் மரண திட்டம்...


நம்மை விழுங்க காத்திருக்கும் மீத்தேன் திட்டம் என்ற பெரும் பூதம் பற்றி அதன் பின்னணியில் உள்ள மற்றுமொரு சதி யை பற்றி.. அதனால் விளைய போகும் மஹா ஆபத்தை பற்றி நாம் இந்த நேரத்தில் கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும்.

மீத்தேன் திட்டம் வெறும் மீத்தேன் வாயு எடுக்க தான்  என்று நீங்கள் எண்ணி இருந்தால் மன்னிக்கவும் இது வெறும் ஆரம்பம் மட்டும் தான் பின்னணி நோக்கம் இன்னும் இருக்கிறது. இந்த மீத்தேன் திட்டம் தான் இப்போது ஹைட்ரோ கார்பன் என்று கொஞ்சம் பெயர் மாற்றம் செய்ய பட்டு வந்திருக்கிறது. ஹைட்ரோ கார்பன் என்பது இதன் பொது பெயர். இதை ஆபத்து என்று பார்க்கும் முன் இது என்ன என்பதை அறிவியல் ரீதியாக கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

மீத்தேன் என்பது ஒரு கரிம சேர்மம் . அதாவது ஒரு கார்பன் அணுவும் 4 ஹைட்ரஜன் அணுவும் இணைந்த ஒன்று. (இதில் ஒரு கார்பன் அனுக்கு பதில் இரண்டு இருந்தால் அது ஈத்தேன் 3 இருந்தால் ப்ரொபென் 4 இருந்தால் பியூட்டேன்..... இப்படி எண்ணிக்கை கூட கூட பென்டென் ,ஹெக்ஸேன் என பெயர் மாறிக்கொண்டு போகும் 10 கார்பன் அணு இருந்தால் டெக்கேன் இந்த ...'அந்த யேன் இந்த யேன் 'என்று எல்லாவற்றிக்கும் பொது பெயர் தான் ஹைட்ரொ கார்பன்)..

இதில் மீத்தேன் என்பது  பொதுவாக கடல் படுக்கைகளில் ,சதுப்பு நிலங்களில், பூமியின் ஆழத்தில் என்று பல இடங்களில் கிடைக்கிறது இது ஒரு இயற்கை எரி வாயு.

சானியில் இருந்து எடுக்கிறார்களே கோபர் கேஸ் ...அது கூட மீத்தேன் தான்.

மீத்தேன் எங்காவது கசிந்தால் அதை நம்மால் கண்டு பிடிக்க முடியாது காரணம் அதற்கு சுத்தமாக மணம் கிடையாது. அப்புறம் நிறமும்.... அதனால் இதை கண்டறிய கந்தகதை கொஞ்சம் கலந்து விடுவார்கள்.

இது சுவாசிக்க விஷ தன்மை கொண்டது அல்ல (ஆக்சிஜன் குறைவான இடத்தில் சுவாசித்தால் கொஞ்சம் தலை சுற்றும்.. மயக்கம் வரும் அவ்வளவு தான்). ஆனால் இது வேறு விதமாக மனித குலத்தை பாதிக்க கூடியது குறிப்பாக கரியமில வாயு என்று சொல்ல கூடிய கார்பன்டை ஆக்ஸைடு நமது வளிமண்டலதில் என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ.. உலக வெப்பமிமாவதற்கு எவ்வளவு காரணமாக இருக்குமோ... அதை விட 5 மடங்கு அதிகமாக அந்த காரியங்களை செய்ய கூடியது மீத்தேன்.

இது ஒரு பக்கா க்ரீன் ஹவுஸ் வாயு.
எரி பொருளாக பயன்படுதப்படுவது மற்றும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவது ..(அதாவது மின் உற்பத்தி செய்யும் டர்பன்க்கு நீராவி உண்டு பண்ண...) இதான் இதன் முக்கிய பயன் பாடுகள்.

அறிவியல் போதும் இப்போ ஆபத்திற்கு வருவோம்.

சதுப்பு நிலம்.. கடல் படுக்கை.. நில கழிவுகள்....என்று மட்டும் இல்லாமல் பூமியில் ஆழத்தில் பல லட்ச கணக்கான ஆண்டுகளுக்கு முன் புதைக்க பட்ட தாவரங்கள் நிலக்கரி படுக்கைகளாக படர்ந்து இருக்கும் அந்த பாறை இடுக்கிலும்..அந்த நிலக்கரி படுக்கைகளுக்கு இடையில் மாட்டி கொண்டும் நிறைய அளவில் இருக்கிறது இந்த மீத்தேன். அதுவும் எக்க சக்க அளவில் தமிழ் நாட்டில் இருக்கிறது என்பது தான் பல வல்லூறுகளின் கண்ணை உறுத்தி விட்ட விஷயம்.

நாகை திருவாரூர் தஞ்சாவூர் (நல்ல டெல்டா விவசாய இடமா பாத்து.. ) பூமிக்கு அடியில் எக்க சக்க மாக உள்ளது இந்த மீத்தேன். அதை உறிஞ்சி எடுக்க தான் இப்போது தயாராகி விட்டார்கள் அரக்கர்கள். சரி பூமிக்கு அடியில் சும்மா சிவனேன்னு இருக்கிறதை உறிஞ்சி எடுத்துட்டு போறாங்க என்ன பிரச்னை என்று விட்டு விட முடியாது .காரணம் இதில் எல்லாமே பிரச்னை தான்....

எப்படி?

மீத்தேன் ஒளிந்திருப்பது பல ஆயிரம் மீட்டர் ஆழத்தில் அதை வெளி கொண்டுவர பூமியில் பல கிலோ மீட்டர் கணக்கில் ஆழமாக துளைகள் போட வேண்டும் . பிறகு அங்கே இருந்து பக்க வாட்டில் வெடித்து துளைத்து பிளக்க வேண்டும் அதற்கு ஹைட்ராலிக் கிராகிங் என்று சொல்ல கூடிய ஒரு வழிமுறை யை பின் பற்றுவார்கள் அதாவது ரசாயனம் கலக்க பட்ட நீரை உயர் அழுத்தத்தில் பிளவுகளில் பீச்சி வார்கள் ..அப்போது இடுக்கில் ஒளிந்துள்ள மீத்தேன் வாயு நீருடன் சேர்ந்து வெளியே வரும் பிறகு இதை பிரித்து எடுத்து கொள்வார்கள்.

அப்படி உள்ளே இருந்து உறிஞ்சி எடுப்பதற்கு முன் அதற்கு தடை யாய் உள்ள நிலதடி நீரை முதலில்  உறிஞ்சி எடுத்து விடுவார்கள்.(நிலத்தடி நீர் இருக்கும் போதே விவசாயி செத்துகிட்டு இருக்கானே அதை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் அவன் நிலைமை என்னாவது என்று நீங்கள் கேட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல)

அடுத்தததாக உள்ளே இருந்து உறிஞ்ச படும் அந்த ராசயணம் கலக்க பட்ட நீர் இருக்கே.. அது கடல் நீரை விட பயங்கர உப்பு தன்மை கொண்டது . அதை வெளியேற்ற போகும் நில பரப்பு பூராவும் விவசாயத்திற்கு பயன்படாத உப்பலங்களாக மாறும். (தமிழகத்தின் மொத்த அரிசி உற்பத்தியில் 40 சதம் நமக்கு டெல்டா பகுதியில் இருந்து தான் கிடைத்து கொண்டிருக்கிறது என்பதை நினைவு படுத்தி விடுகிறேன்).

ஒரு கிணறு ஆண்டொன்றுக்கு 20 டன் உப்பை வெளியேற்றும் இப்படி 30 கிணறுகள் மன்னார்குடி பகுதியில் மட்டும் அமைக்க உள்ளார்கள். இப்படி தொடர்ச்சியாக பூமிக்கு அடியில் குடைவது பூகம்பம் வரை வழி வகுக்கும். ஏற்கனவே நெய்வேலி யில் பூமி தோண்ட பட்டதின் விளைவு பல கிமி வரை பரவி உள்ளது என்பது நமக்கு தெரிந்த உண்மை. இந்த திட்டத்தால் 1000 ஆண்டு தாண்டி கம்பீரமாய் நிற்கும் தஞ்சை பெரிய கோவில் கூட விரிசலும் ஆட்டமும் காணும் வாய்ப்பு உள்ளது.

அப்புறம் அந்த நில தடி நீர் உறிஞ்ச பட்ட நிலத்தடி பகுதி இருக்கிறதே அதில் படி படியாக கடல் நீர் உள்ளே புகும் நிலத்தை நிரந்தர மலடாக மாற்றும்.
அப்புறம் மீத்தேன் கிணறுகளில் இருந்து சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாயு வெளியேருவது தவிர்க்க முடியாத ஒன்று என்பது விஞ்ஞாணிகளே ஒத்து கொண்ட உண்மை.

அது எங்கயோ போய் ஓசோன் இல் ஓட்டை போடுவது ஒரு பக்கம் இருக்கட்டும்... இங்கே அதை வெளியேற்றும் குழாயில் கசிவு ஏற்பட்டால் என்னாகும் தெரியுமா... நிலத்தடி நீர் எடுக்கும் இடத்தில எல்லாம் இது கலந்துவிடும் .கிட்ட தட்ட எல்லா வெப்ப நிலையிலும் வெகு எளிதாக எரிய கூடிய ஒன்று தான் இந்த மீத்தேன். (சதுப்பு நிலங்களில் இது வெளிப்பட்டு சாதாரண வெப்ப நிலையில் எரிவதை பார்த்து தான் கொள்ளி வாய் பிசாசு கதை வந்தது என்பது நினைவு இருக்கட்டும்).

அப்படி பட்ட இது சாதாரணமாக வீட்டு குழாய் இல் கூட வரும் வாய்ப்பு என்றால் ஆபத்தின் வீரியத்தை பார்த்து கொள்ளுங்கள்.

இந்தியாவின் மிக பெரிய சுரங்கம் கோலார் இல் அதிக பட்சம் 3200 மீட்டர் ஆழம் போனார்கள். ஆனால் இவர்கள் வாங்கி உள்ள அனுமதி 6000 மீட்டர் வரை குடைய..

மேலும் அனுமதி வாங்கி உள்ள பரப்பளவு லட்ச கணக்கான ஏக்கர்.
அகழ்வு செய்ய மொத்தம் இப்படி பட்ட 2000 கிணறுகள் அமைக்க போவதாக தகவல்.

வெளிநாட்டில் ஊருக்கு சம்பந்தமில்லாத இடத்தில மட்டுமே மீத்தேன் எடுக்க படுகிறது.

ஆனால் இங்கே தஞ்சை போன்ற பகுதியில் நிலமும் வீடுகளும் அருகருகே அமைந்த இடத்தில் இது  எந்த தயக்கமும் இல்லாமல் எடுக்கபடவிருக்கிறது.

மேலும், இதை கொண்டு செல்லும் குழாய்கள் வழக்கத்தை விட அதிகவேகத்தில் சேதமடையும் என்கிறார்கள் போதிய அளவில் சரியான கால இடைவெளியில் பராமரிப்பு மிக அவசியம் என்கிறார்கள் .நம்ம ஊர் அரசியல் வாதிங்க இன்னும் சாலையை பராமரிப்பதிலேயே தேர்ச்சி அடைய வில்லை. அவர்களை நம்பி இதை கொடுத்தால் எப்படி இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லி கனி.

அடுத்ததாக இது வெறும் மீத்தேன் எடுக்கும் திட்டமா என்றால் அதான் இல்லை. இதற்கு பின்னணியில் ஒளிந்திருக்கிறது முக்கிய திட்டம். மீத்தேன் எடுக்க போவது 30 ஆண்டுகளுக்கு மட்டும் தான். அதன் பின் முக்கிய நோக்கம் நிலக்கரியை வெட்டி எடுப்பது தான். அதற்கான அடியை தான் போட்டிருக்கிறது வெளிநாட்டு நிறுவனம். அவர்களுடைய அதிகார பூர்வ வலைத்தளத்தில் இதை பதிவு செய்திருக்கிறார்கள் ஆனால் இங்கே மீத்தேன் எடுத்தல் என்று மட்டும் தான் இன்னும் பேச படுகிறது.

இந்த திட்டத்தை செயல் படுத்த போகும் நிறுவனத்தின் பெயர் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) இது ஹரியானவில் பதிவு செய்ய பட்ட ஹரியானவை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒரு துபாய் கம்பெனி.

ஆனால் ஆங்காங்கே இதற்கான குழாய் பதிக்கும் வேலையை செய்யும் நிறுவனம் ஓ. என். ஜி. சி என்ற ஒன்று. என்னடா எங்கயோ கேள்வி பட்டதா இருக்கே என்று பார்த்தால் நாகை மாவட்டத்தில் நறிமணம் பெட்ரோலியம் எடுக்கும் கம்பெனிதான் தான் இது . அந்த கிரேட் ஈஸ்டன் உடன் இனைந்து உள்ளது (co operative).

தனது உடல் பாகத்தை வெட்டி கொடுத்து காசு வாங்குவதற்கு ஈடான இந்த செயலை செய்ய கையொப்பம் இட்ட .... நமது நிலம் நாசமாவதை பற்றி கவலை படாத.. வர்த்தக லாபம் பார்க்கும் அரசியல் வாதிகள் இந்த ஒப்பந்த படி எத்தனை ஆண்டுகளுக்கு அடகு வைத்திருக்கிறார்கள் என்பது தான் நான் உங்களுக்கு தர போகும் கடைசி அதிர்ச்சி. 100 ஆண்டு களுக்கு அதாவது முழுதாய் ஒரு நூற்றாண்டுக்கு மல்டி நேஷனல் துபாய் காம்பெனிக்கு தாரை வார்க்க பட்டுள்ளது நமது இயற்கை வளமும் விவசாயமும்...

கடைசியாக...

குறிஞ்சி, முல்லை, மருதல், நெய்தல், பாலை யில். நம்மிடம் இல்லாத நிலப்பரப்பு 'பாலை' அதை விரைவில் நாம் அனைவரும் பார்க்கும் நிலைமை வரும் என்ற வருத்ததோடு முடிக்கிறேன்...

அதிமுக வும் தமிழினத் துரோகமும்...


என்னை சக்குபாய் ராவ் சாக்வாட் என்று அழைப்பதில் தான் எனக்கு பெருமை - சௌந்தரியா ரசினிகாந்த்...


ரசினிகாந்த் என்கிற சிவாசி ராவ் சாக்வாட் மகள் பெருமிதம்..

ரசினியை தமிழராக ஏற்கமாட்டீர்களா என்று கேட்கும் பைத்தியங்களே பிறப்பு தான் ஒருவரின் இனத்தை முடிவு செய்யும்..

ரசினி தான் மராத்தியர் என்று பெருமை கொள்ளட்டும், வீட்டில் மராத்திய மன்னன் புகைப்படத்தை மாட்டிக்கொள்ளட்டும், ரசினியின் மகள் தன் தந்தையின் மராட்டிய பட்டப்பெயரை பெருமிதமாக கருதட்டும்..

ஆனால் தமிழர்நாட்டில் தலைமை பீடத்தை ஏற்று தமிழர்களுக்கு கொள்கை வரையரை செய்யும் உரிமையை தந்து
தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சி செய்ய
ஒரு போதும் விட மாட்டோம்...

ESP மூளையில் எப்படி செயற்படுகிறது?


மூளை தொடர்பாக பேச முனையும் போது…. இ.எஸ்.பி பற்றி கட்டாயம் பேசியே ஆக வேண்டும்… சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த ESP (Extra sensory perception) என இனங்காணப்படுகிறது.

இந்த ESP இலும் பலவகையான உட்பிரிவுகள் இருக்கின்றன…

இறந்த கால்த்தை சொல்பவர்கள்… எதிர்காலத்தை சொல்பவர்கள்… நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்… மற்றும்… பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்… (இதில் பல உட்பிரிவுகள் சக்தியின் அளவைப்பொறுத்து உண்டு)…

முதல் இரண்டு பிரிவுகளையும் (இறந்தகாலம் , எதிர்காலம்)… டைம் ஸ்லிப் எனப்படும் ஒரு தனிப்பிரிவுடனும் ஒப்பிட முடியும்… அது சம்பந்தமாக பின்னர் பார்க்கலாம்….

இப்போது… அடிப்படையில் நாம்… மூளையை தூண்ட எம்மை அறியாமல்… என்ன என்ன செய்கின்றோம் என்பதை பார்ப்போம்…

உதாரணமாக…

நாம் கணக்கு அல்லது ஏதாவது பயிற்சிகள் செய்து கொண்டிருக்கும் போது… செய்யும் முறை நினைவு வராது போனால்… பேனாவால்… நெற்றிப்பக்கத்தில் இலேசாகத் தட்டுவதுண்டு (அல்லது விரலால் ஏதோ செய்வோம்.)… அதன் பின்னர், பல வேளைகளில் செய்முறை நினைவுக்கு வந்துவிடும்…

இன்னொரு உதாரணத்துக்கு…

பாடசாலைகளில்… மாணவர் ஒருவர் விடை சொல்லத்தடுமாறும் போது, ஆசிரியர் காதைப்பிடித்து திருகுவார் (இதில் சிலர் கொலை வெறித்தனத்தையும் காட்டி விடுவார்கள்)… பின்னர் ஏதோ அரை குறையாக மாணவன் விடையை கிட்டத்தட்ட சொல்லுவான்…

இந்த இரண்டு உதாரணங்களிலுமே… நடப்பது மூளையைத்தூண்டும் செய்கைதான்…

மூளைக்குப்போகும்… இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தும் முறைதான் இது…

அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன… இதை அறியாமலே நாம் இந்த முறைகளைப் பின்பற்றி வந்திருக்கின்றோம்…

இப்போது… நான் குறிப்பிட்டது போன்று… மூளையில் மின்னதிர்வை ஏற்படுத்துகையில் புத்துணர்வு பெறும், என்ற கருத்தை நிரூபிப்பதற்கு ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளது…

சில எலிகளின்… மூளையின் குறிப்பிட்ட பகுதியில், மிகச்சிறிய ஒரு மின் தகட்டை பொருத்தி… மறுமுனையை தயார்ப்படுத்தப்பட்ட மின்கல மிதியுடன் பொருத்தினார்கள்…

எலிகள், அந்த மிதியை மிதிக்கும் போது… மூளையில் மெதுவாக மின் பாய்ச்சப்பட வேண்டும் என்பதே நோக்கம்…
பரிசோதனை எலிகள் அந்த கூண்டினுள்… பல இடங்கள் இருக்கும் போது; மறுபடியும் மறுபடியும் அந்த மிதியிலேயே அவை ஏறிக்கொண்டிருந்தன…

இதிலிருந்து, மின் பாய்ச்சப்படும் போது… உணவைக்கூட கவணிக்காது… 24 மணி நேரமும்… எலிகள் வித்தியாசமான ஒரு உணர்வை பெற்றிருக்கின்றன…

அதுதான், மீண்டும் மீண்டும் ஏறின என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஆகவே, மூளையில்… பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணர்ப்பட்டது.

விஞ்ஞான மருத்துவப்படியும்…
4 பில்லியன்ஸ் செல்கள் மூளையில் இருக்கின்றன… ஆனால், நாம் அதில் 10% ம் கூட பயண்படுத்துவதில்லை…

ஐன்ஸ்டைன் மேலதுகமாக 500 தொடக்கம் 1000 செல்களை பயண்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. ( ஐன்ஸ்டைனின் மூளையில், சாதாரண் மூளையை விட மடிப்புகள் அதிகம் என்பது தெரிந்ததே.. )

ஓ.கே… இனி நாம், ESP மனிதர்களையும் அவர்களின் செய்கைகளையும் பார்க்கப் போகின்றோம்…

வரும் பதிவுகளில்… நம்மவே, முடியாத… பல பெளதீக மீறல்களையும், அதிசயங்களையும் பார்ப்போம்...

நம் பாரம்பரிய சர்க்கரை கரும்பு வெல்லம்,பனை வெல்லம்.....


அம்மாவிற்கு இருந்த துணிச்சல் எங்களுக்கு இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்...


ஆட்சியை நடத்த வேறு வழியின்றி பாஜகவிற்கு ஒத்துப் போகின்றோம்...

அம்மா சிங்கம் போல் தனித்து நின்றார்கள்...

SBI வங்கி உட்பட பொது துறை வங்கிகளின் லாகரில் வைக்கும் பொருட்கள் தொலைந்து போனால் நாங்கள் பொறுப்பல்ல, தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள் இன்சுரன்ஸ் செய்து கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி...


அசம்பாவிதங்களை தவிர்க்க ஹோட்டல்களில் தங்குபவர்களுக்கு ஆதார் கட்டாயம், ஆதார் கார்டு இல்லாவிட்டால் தங்க அனுமதிக்கக் கூடாது - காவல் துறை உத்தரவு...


வெளிநாடுகளில் தமிழர்கள் உயர்பதவிகளில், தமிழகத்தில் வேற்றினத்தார் பதவியில் கூடாதா?


வெளிநாடுகளில் தமிழர் உயர்பதவிகளை வகிப்பதைப் பெருமையாகப் பதிவிடுகிறீர்கள்.

இங்கே தமிழரல்லாதார் பதவியிலிருப்பதை ஏன் ஏற்க முடியவில்லை?

இதற்கான பதில்...

வெளிநாடுகளில் தமிழர்கள் எத்தனை சதவீத எண்ணிக்கையில் வாழ்கின்றனரோ.. அதைவிடக் குறைவாகவே அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது.

வெளிநாடுகளில் தமிழர் கணிசமாக வாழும் பகுதிகளில். ஒன்றிரண்டு அரசு பதவிகளிலோ,அத்திபூத்தாற்போல அமைச்சராகவோ நீதிபதியாகவோ தமிழர்கள் உயர்கின்றனர்.

அதுவும் கடின உழைப்பாலும் திறமையாலும்.

தமிழரல்லாதார் இங்கே எத்தனை சதவீதம் வாழ்கின்றனரோ அதற்கேற்றாற்போல பதவிகள் அதிகாரங்கள் பெறுவது தவறில்லை.

ஆனால், இங்கே தலைமை முதற்கொண்டு அத்தனை அதிகாரங்களும் வந்தேறிகள் கையில்.

3% பார்ப்பனன் நம்மை ஆளலாமா என்று கூறிவிட்டு.. மொத்தமே 300 குடும்பங்கள் கூட தேறாத வந்தேறி சமூகங்கள் தமிழகத்தை மாறி மாறி ஆள்கின்றன.

இதில் கடல்கடந்து அகதியாய்ப் போய் திறமையால் உயரும் ஓரிரு தமிழரைப் பார்த்து பொறாமை வேறு?

வழுக்கை தலையில் முடிவளர....


வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்...

இந்தியா இலங்கைக்கு ஈழப் போரில் துணைபுரிந்தது சம்பந்தமான ஆவணங்களும் விக்கி லீக்ஸ் ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது...


இது மத்திய மற்றும் திராவிட கட்சிகளின் தமிழர்களுக்கு எதிரான இன்னொரு கூட்டு துரோகம்...


நீட் தேர்வு முடிவு அறிவிப்பு..

கேரள விலிருந்து 79.5%
தெலுங்கானா 77%
ஆந்திரா 72.93%.
கர்நாடகா 72.85%.

இந்திய மாநிலங்களில்
மருத்துவதுறையில் முதன்மை வகிக்கும் தமிழகத்தில் 41% மாணவர்களே தேர்ச்சி.

பலவழிமுறைகளிலும்
தமிழர்களுக்கு எதிரான சுரண்டல்களை நடத்துகிறது இந்தியம்.

இந்த உண்மையை மறைத்து
தி இந்து நாளிதழ் எப்படி தமிழர்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது என்று பாருங்கள்.

இந்த நீட் தேர்வை செயலலிதா அவர்கள் சாகும் வரை எதிர்த்தே வந்தார்..

இது மத்திய பாசக மற்றும் திராவிட அதிமுக மற்றும் கண்டுகொள்ளலாம் விட்ட திமுக இவர்களின் தமிழர்களுக்கு எதிரான இன்னொரு கூட்டு துரோகம்...

நம்ப முடியாத ஆதார் உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்...


நீட் தேர்ச்சி மாயையும் உண்மையும்...


தமிழ்நாட்டு மாணவர்கள் 41 சதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி... உண்மை என்ன?

நீட் தேர்ச்சி என்பது எழுதிய மொத்த மாணவர்களில் முதல் பாதி இடங்கள் பெற்றோர் என்பதே..(50 percentile)

அதாவது இந்தியாவில் நீட் எழுதிய 11 லட்சம் பேரில் முதல் 5.5 லட்சம் பேர் தேர்ச்சி என்பதாகும்.

இந்த 5.5 லட்சம் பேரில் தமிழ்நாட்டில் தேர்வெழுதிய 90 ஆயிரம் பேரில் 41 சதம், அதாவது 36 ஆயிரம் பேர் தேர்வு என பொருள்.

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்கள் 15 சதம் இந்திய ஒன்றியத்துக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள 85 சத இடங்கள் சுமார் 3000 மருத்துவ இடங்கள் தமிழ்நாடு ஒதுக்கீடு எனப்படும்.

இந்த தமிழ்நாட்டு ஒதுக்கீடு என்பது தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களுக்கு மட்டும்  என்பது அல்ல, இது தமிழ்நாட்டில் 5 வருடங்கள் படிக்கும் அனைவருக்குமானது, சிபிஎஸ்ஈ மாணவர்கள்  உள்பட..

ஆக நீட் தேர்ச்சி 36 ஆயிரம் பேர் தமிழக மாணவர்கள் என்றாலும் இதில் முதல் மூவாயிரம் பேர் யார்? அவர்களுக்கே தமிழ்நாட்டு மருத்துவ இடங்கள்..

தேர்வெழுதிய 90 ஆயிரம் பேரில் சிபிஎஸ்ஈ மாணவர்கள் 4 ஆயிரம் பேர், தமிழ்நாட்டு பாடத்திட்ட மாணவர்கள் 86 ஆயிரம் பேர்.

இதில் முதல் மூவாயிரம் இடத்தில் சிபிஎஸ்ஈ மாணவர்களே இருப்பர் என்பதே எதார்த்தம். அவர்களுக்கே தமிழ்நாட்டின் மொத்த மருத்துவ இடங்களும் கிடைக்கும்.

தமிழ்நாட்டு பாடத்திட்ட மாணவர்கள் நாமம் சாத்தப்படுவர் என்பதே இன்றைய நடைமுறை உண்மை...

கார்ப்பரேட்டுகளுக்காக உருவாக்கப்பட்ட வரித் திட்டம்...