10/02/2018

கதிராமங்கலம் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடிய பள்ளி சிறுவர்கள் முதற்கொண்டு அனைவர் மீதும் வழக்கு பதிவு...


அவர்கள் பள்ளி சீருடையில் இருக்கும் போது அவர்களுக்கு குடுக்க வேண்டிய மரியாதை இல்லை.. தரையில் உற்கார வைக்கப்பட்டு உள்ளனர்...

பள்ளி கல்வித்துறை இதனை கவனித்து சம்பந்த பட்ட காவலர்கள் மீது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்...

அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் ?

தங்கள் நிலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு.. இதற்கு தமிழக அரசு ஒரு காரணம்..

படிக்க வேண்டிய அழகான இந்த குழந்தைகளை போராட வைத்தது தான் இந்த அரசின் செயல்...

இராணுவ வீரன் நம் மண்ணை காக்க எல்லையில் இருக்கிறான்...

உள்ளூரில் நம் அரசு நம்மை காக்க தவறிய காரணத்தினால் இப்படி மண்ணை காக்க வேண்டும் என்றும் இயற்கை வளங்கள் பாதுகாக்க பட வேண்டும் என்று போராடிய சிறுவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் இவர்களை தூண்டிய அரசின் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் காவல் துறை ?

இதையெல்லாம் பார்த்த பிறகு தான் நான் இந்தியன்னு சொல்லிக் கொள்வதில்லை...

உலக விஞ்ஞானிகளை அதிர வைக்கும் ஆய்வு மேலைநாட்டு நேச்சர் ஆய்விதழில் வெளியீடு...


தமிழ்நாட்டில் திருவள்ளூர் அருகே ஆட்டரமாக்கம் கிராமத்தில் 3.85 லட்சம் ஆண்டுகள் பழமையான மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டுடெடுப்பு..

ஆப்பிரிக்காவிலிருந்து 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறினான் மனிதன் என்ற கூற்று உடைந்தது.

தமிழ்நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவியது மனித குலம் என்பதற்கான கோட்பாடு உருவாக வாய்ப்பு..

உலகின் பண்பட்ட மூத்தகுடி தமிழ்நாட்டில் என்றால், உலகின் மூத்த  மொழி தமிழ், உலக தாய்மொழிகளுக்கு தாய்மொழி தமிழ்.. உலகின் மூத்த இனம் தமிழினம்.

உலகே அதிர்ந்தாலும் இந்திய அரசும் தமிழக அரசும் கள்ள மவுனம்.

மூடிமறைக்குமுன் தமிழர்கள் கொண்டாடி வெளிக்கொண்டு வருவோம்...

தமிழன் போடும் பிச்சையில் வயிற்றை வளர்த்துக் கொண்டு.. தமிழகத்திற்கு எதிராக மட்டுமே செயல்படும் இந்தியா...


யார் தமிழர் என்று கேட்டவர்களுக்கு...


கல்வியும் தாழ்த்தப்பட்டதா?


1922-25 வாக்கில் (மெக்காலே கல்விமுறை புகுத்தப்பட்ட பிறகும்) அதை விடுத்து மதராஸ் (சென்னை) மாகாணத்தில் பாரம்பரியக் கல்விமுறை பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 11,575 பள்ளிகளும் 1,094 உயர் கல்வி மையங்களும் இருந்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்த மாணவர்களில் 70-80 சதவிகிதம் பேர் (இன்றைய) பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

(அதாவது இன்றைய சூழலில் OBC, MBC, SC, ST என்று குறிக்கப்படுவோர்).

அதாவது ஆங்கில ஆண்டைகளின் திராவிட அடிபொடிகள் கூறுவது போல பல நூறு ஆண்டுகளாக பார்ப்பனரே கல்வி பெறமுடிந்தது.

ஈ.வே.ரா வந்துதான் எல்லாருக்கும் கல்வி கிடைத்தது என்பது வடிகட்டிய பொய்.

அவர்கள் காட்டும் புள்ளி விபரங்கள் பிரிட்டிஷ் அரசு நடத்திய ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர் நிறைந்திருந்தது பற்றியது தான்.

ஆங்கிலேய அரசு அங்கீகரிக்காத நாட்டுப்புற பள்ளிக்கூடங்களிலும் பாரம்பரியக் கல்வி நிலையங்களிலும் கல்வி கற்க சாதி ரீதியாக எந்த தடையும் இருந்திருக்கவில்லை.

ஆங்கிலேயர் வரும் முன்பு மக்கள் முட்டாளாக இருந்திருந்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை.

ஐரோப்பாவை விடவும் இங்கே வேளாண்மையும், வானியலும், கணிதமும், கலையும், கட்டுமானங்களும் சிறப்பாக இருந்தன.

தகவல்: பிரிட்டிஷ் ஆவண ஆராய்ச்சியாளர் ராம்பால் அவர்களின் பேட்டி...

60,000 தமிழ் கல்வெட்டுகள் இருந்தாலும் "தமிழ்" என்ற பெயர் தாங்கி வரும் கல்வெட்டுகளை இதுவரை பார்த்ததில்லை...


திருக்கழுக்குன்றம் அருகே இருக்கும் "பொன் விளைந்த களத்தூர்" சிவன் கோயிலில் இந்த கல்வெட்டு உள்ளது...

பாஜக யோகியின் அதிரடி நடவடிக்கையால், தேர்வை புறக்கணித்த மாணவர்கள்...


உ.பியில் நடைபெற இருக்கும் 10, 12-ம் வகுப்பினருக்கான பொதுத் தேர்வில், காப்பி அடித்தல், தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தல், தேர்வு முடிந்த பிறகு விடைத்தாளை சட்ட விரோதமாக மாற்றுதல்  பிற விதி மீறல் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காக, தேர்வு அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முதல்வர் யோகி உத்தரவு.

இதனை எதிர்த்து மாணவர்கள் பொதுத் தேர்வை புறக்கணித்தனர்...

விசிக திருமா வின் அரசியல் வியாபார கலாட்டா...


சைனஸ் பிரச்சனையை போக்க...


பருவ காலநிலை அடிக்கடி மாறுபடுவதால், உடலில் ஜலதோஷம் திடீரென்று ஏற்படும், அவ்வாறு ஜலதோஷம் வந்தால், அது இரண்டு, மூன்று நாட்களில் போய்விடும்.

ஆனால் அது சிலருக்கு நீண்ட நாட்கள் இருந்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாத அளவு இருக்கும். இதனால் அந்த சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப்பதால், அது சைனஸாக மாறி விடுகிறது.

அதுமட்டுமல்லாமல், தலைக்கு குளித்தப்பின்னர், தலையில் இருக்கும் ஈரத்தை காய வைக்காமல் இருப்பர். இதனால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். பின் மூச்சு விடும் போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்றவை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை போக்க ஈஸியான வீட்டு மருந்து இருக்கிறது.

சைனஸ் பிரச்சனையை போக்க...

ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வர வேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலைவலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.

தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.

தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க்கோர்வை போன்றவை சரியாகும்.

குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.

கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும் முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட் போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவ வேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலைபாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்...

மராட்டிய ரஜினிக்கு மக்களின் ஆதரவு இது தான்...


கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நள்ளிரவு வரை சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கட்டுக்கட்டாக ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அள்ளிச்சென்ற சம்பவம் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது...


கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் லஞ்சம் வாங்கியதாக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கூடிய ஆட்சி மன்ற குழுவினர் பேராசிரியர் தர்மராஜை பணியிடை நீக்கம் செய்தனர்.

மேலும் பல்கலைகழகத்தின் செயல்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட நிர்வாக குழுவினை ஏற்படுத்தினர். இன்று கூடிய இந்த நிர்வாக குழு தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணனை பணியில் இருந்து விடுவித்ததுடன், அந்த பணிக்கு பல்கலைகழக புள்ளியல் துறை பேராசிரியர் சுரேஷ் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே லஞ்ச ஓழிப்புதுறை டி.எஸ்.பி தட்சிணாமூர்த்தி, டி.எஸ்.பி ராஜேஷ் ஆகியோர் இன்று மாலை 4 மணிக்கு துணைவேந்தர் கணபதியின் நேர்முக உதவியாளர் சுல்தான் பேகம், பதிவாளர் வனிதாவின் நேர்முக உதவியாளர்கள் ராஜன், சங்கர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மாலை 4 மணிக்கு துவங்கிய விசாரணை நள்ளிரவு தாண்டி இரவு ஒரு மணி வரையில் நீண்டது. 2016-ம் ஆண்டு போடப்பட்ட பணிநியமனங்கள் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகின்றது. பணிநியமனங்கள் தொடர்பான தகவல்களையும் , ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சேகரித்தனர்.

துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் சுல்தானா பேகம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர்களிடம் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். 5 துணைவேந்தர்களின் காலங்களில் பணிபுரிந்தவர் என்பதால், சுல்தானா பேகத்திடம் விசாரணை மேற்கொண்டால் பல முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை பெற முடியும் என்பதால் அவரிடமும், பதிவாளர் வனிதாவின் உதவியாளர்களிடம் விசாரணையானது நடத்தப்பட்டது.

நேற்றைய தினம் பல்கலையில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சில ஆவணங்களை பெற்று சென்ற நிலையில், இன்றும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கலைகழக அலுவலக ஊழியர்கள் பணி முடிந்து வெளியேறிய நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுக்கட்டாக ஆவணங்களை கார் மூலம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அள்ளிச்சென்றனர். இன்று (09.02.2018) துணை வேந்தரை விசாரணைக்காக போலீஸ் காவல் கோரும் மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில் கட்டுக்கட்டாக ஆவணங்களை போலீசார் அள்ளிசென்றுள்ள சம்பவத்தால் துணை வேந்தர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது...

இதை விட உங்களை யாரும் அசிங்கப் படுத்த முடியாது.. திருந்துவீர்களா?


சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள பிரதான சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது...


அதனை சரி செய்யக் கொடுத்த விண்ணப்பங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டதால், மக்கள் அந்த சாலைக்கு  "ஊழல் குழி"  என்று பெயரிட்டுள்ளனர்...

இந்த நிலை தொடர்ந்தால் இதற்கு காரணமான அதிகாரிகளின் பெயரில் வழக்கு தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது...

பாஜக வின் உலகம் சுற்றும் வாலிபன் மோடி.. மக்கள் வரிப் பணத்தில்... பாலஸ்தீன் ஓமன் வளைகுடா ஆகிய 3 நாடுகள் சுற்று பயணத்திற்கு புறப்பட்டார்...


இழப்பதற்கு ஒன்றும் இல்லை. எல்லாமே பெறுவதற்கு தான் உள்ளது, மனவளக்கலை யோகாவில்...


ஒரு அழகான கடவுள் சிலையை உருவாக்க சிற்பி அந்தப் பாறாங்கல்லில் உள்ள சிலையை தவிர்த்த மற்றப்பகுதிகளை பொறுமையாக செதுக்கி நீக்கிவிடுகிறார். நல்ல சிலை உருவாகிவிடுகிறது. அதேபோல் நம்மிடமுள்ள தேவையில்லாத, இருக்கக்கூடாத வினைப்பதிவுகளை (முன்னோர்களால் வந்தது + நாம் சேர்த்துக் கொண்டது) யோகப் பயிற்சிகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிக்கொள்கிறோம்.

முக்கியமான, ஆனால் விடுபட்டுள்ள இயற்கை கல்வியான, நமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பினை உணர்த்தும் கல்வியை யோகாவில் கற்றுக் கொள்கிறோம்.

அதன் மூலம் புதிய பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமலும், ஏற்கனவே உள்ள பதிவுகளை போக்கி கொண்டும்  அமைதி பெறுகிறோம்.

பொதுவாக நாம் நமது பிரச்சனைகளை நமக்கு வெளியே உள்ள மனிதர்கள் மற்றும் பொருள்களின் உதவியால் சரி செய்து கொள்ள முயலுகிறோம். அதில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும், அதைவிட இன்னொரு முறையான, தவத்தின் மூலம் நம்முள்ளே சென்று, நோய்களும், வேண்டாத குணங்களும் உற்பத்தி ஆவதற்கு மூலமான நம் உயிரின் தன்மையையே மாற்றிக் கொள்வதே சிறப்பு. இதன் மூலம் நிரந்தரமான மாற்றம் உடலில், மனதில், உயிரில் ஏற்படுகிறது.

இதுவே யோகாவிற்கும், மருந்து மாத்திரைகள் உட்கொண்டு நோய்களை சரி செய்து கொள்வதற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு..

மருந்து மாத்திரைகள் நம் உடல் செல்களில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி நோயை தீர்க்க முயலுகின்றன. ஆனால் அகத்தவமோ, விஞ்ஞானத்தால் ஏற்றுக்கொள்ளாத, கருவிகளுக்கு என்றும் புலப்பட முடியாத, மறைபொருளான உயிரின் தன்மையையே மாற்றி, நோயை அடியோடு நீக்குகிறது.

ஒரு மரத்தில் உருவாகும் பழத்தின் சுவையை கூட்ட, பழம் தோன்றியபிறகு அதில் சில ரசாயனங்களை செலுத்தி மாற்ற முயலுவதைவிட, அந்த மரத்தின் வேர் பகுதியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி பழத்தின் ருசியை மாற்றுவதே சிறந்த முறை.

நமது உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தின் மூலம் தீர்வு பெறுவது தற்காலிகமானதே. தவத்தின் மூலம் உயிரை தூய்மைபடுத்தி முழுமையாக நாளடைவில் நோயிலிருந்து விடுபடுவதே நிரந்தர தீர்வு. இதற்கு கால தாமதம் ஆனாலும் நிரந்தர தீர்வாக அமையும். மேலும் நம் முன்னோர்கள் வழி வந்த நோய்களுக்கு தவமே சரியான தீர்வு.

சென்ற காலத்தைப்பற்றி நினையாமல் இப்பொழுது  இருக்கும் என் உடல், மனதை மேலும் கெட்டுப் போகாமல் எப்படி காப்பாற்றிக் கொள்வது என நினைந்து செயல்படுவோம்.

எனவே நாமும் கீழ்கண்ட சங்கல்பங்களை மேற்கொள்வோம்...

1. இறைஆற்றலால் இந்த அற்புதமான உலகத்தில் பிறப்பிக்கப்பட்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் கேட்டு இந்தப்பிறவி எனக்கு கிடைக்கவில்லை.

2. பிறந்துவிட்ட காரணத்தினால் என் உயரிய ஆறாவது அறிவை புனிதமான என் உடல் மற்றும் மனதைப்பற்றி அறிந்துகொள்ளவும், எனக்கும் பிரபஞ்த்திற்கும் உள்ள பிரிக்கமுடியாத உறவினை உணர்ந்து கொள்வதற்கும் பயன்படுத்துவேன்.

3. என் உடல், உயிர், மனம் கெடக்கூடிய செயல்களை செய்வதை முடிந்தவரை தவிர்ப்பேன். என் பிறப்பு, வாழ்வு, இறப்பு இவைகளை தீர்மானிப்பது இறை ஆற்றலே என்கிற நினைவில் வாழ்வேன்.

4.என் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளான இருதயம், மூளை, சிறுநீரகங்கள், இரைப்பை, நுரையீரல்கள் இவைகளை காத்துக் கொள்வேன் என்று தவ முடிவில் சங்கல்பம் மேற்கொள்வேன்.

5. எவ்வளவு நாள் வாழ்வோம் என்பதைக் கணிப்பது கடினம். ஆனால் முடிந்த வரையில் மகிழ்ச்சியாக, இன்பமாக, அமைதியாக, நோயில்லாமல் வாழ முயற்சிப்பேன்.

6. மனிதனால், விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து செயற்கை மாற்றங்களையும் வெறுக்காமல், அளவு முறையோடு அனுபவித்து அவைகளினால் என் உடல் மனம் கெடாதவாறு வாழ்வேன்.

7. இயற்க்கை விதியை உணர்ந்து அதற்க்கு முரண்படாதவாறு என் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வேன். இயற்கை விதி என்பது “நானும் மற்ற மனிதர்கள், உயிர்கள், அசேதனப்பொருட்கள், பஞ்ச பூதங்கள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தின் உடமைகள். இவைகளை கெடுக்க எனக்கு எந்த உரிமையும் கிடையாது”. எந்த அளவிற்கு இதில் நான் முரண்பட்டு வாழ்கிறேனோ அந்த அளவிற்கு இயற்க்கை விளைவாக அளிப்பது துன்பம் மற்றும் நோயாகும்.

யாரெல்லாம் யோகப்பயிற்சிகளை தன் உடல், மனம் அதிகமாக கெடாமல் இருக்கும் போதே செய்ய தொடங்கி விட்டார்களோ, அவர்கள் எல்லாம் யோகசாலிகள், கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் சிறிது அதிக முயற்சி செய்து பழக்கப்பதிவுகளை சிரமப்பட்டு மாற்றி அமைத்துக்கொண்டு நலம் பெறமுடியும்.

எந்த விதத்தில் பார்த்தாலும் யோகப்பயிற்சிகள் நன்மையையே தரும். இப்போது சிறு வயதினராக இருந்து உடல் நலம், மன ஆற்றல் இருந்தாலும், இந்த வயதில் பயிற்சிகளை கற்றுக் கொண்டு அவைகளை இப்போது அதிகமாக பயன்படுத்தாவிட்டாலும், பிற்கால வாழ்க்கையில் தேவைப்படும் போது அதிக சிரமம் இன்றி கற்ற பயிற்சிகளை செய்து உடல் நலத்தை காத்துக் கொள்ளலாம்.

வாகனத்தை ஓட்டுவதை ஒருமுறை நன்றாக கற்றுக்கொண்டால், அது வாழ்நாள் முழுவதிலும் எப்போது வேண்டுமானாலும் உபயோகமாவது போல கற்ற யோகப் பயிற்சிகளும் பயனைத்தரும்.

நாம் மனவளக்கலை பயிற்சிகள் செய்து,  உடல், நலம், மனவளம், மற்றும் மனநிறைவு பெற்று வாழ்வோம்...

ஆன்மீக போதை வியாபாரம்...


கிராம்பின் மருத்துவ குணங்களை அறிவோம்…


கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது...

ஆளுநர் மாளிகையை இனி அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் , பேட்டரி காரில் சுற்றி காட்டப்படும் - ஆளுநர் மாளிகை அறிவிப்பு...


இணையதளத்தில் முன் பதிவு செய்யலாம்...

தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்காதீர்... தமிழக முதல்வரிடம் தோழர் பெ. மணியரசன் வலியுறுத்தல்...


தமிழ்நாடு அரசின் 9,351 பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம், வரும் 11.02.2018 அன்று நடத்தவுள்ள பொதுத் தேர்வில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு முதலமைச்சரின் இல்ல அலுவலகத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (08.02.2018) மனு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருப்பதால், முதலமைச்சரின் தனிச் செயலாளர் அவர்களிடம் இம்மனுவை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், இயக்குநர் வ. கௌதமன் ஆகியோர் நேரில் சென்று கையளித்தனர். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தோழர் சி. பிரகாசு பாரதி ஆகியோர் உடன் சென்றனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி, தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு இந்தியாவின் பிற மாநிலத்தவர் மட்டுமின்றி, நேப்பாளம், பூட்டான், பாக்கித்தான், மியான்மர் உள்ளிட்ட வெளி நாட்டவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய அறிவிப்பின் அடிப்படையிலேயே வரும் 11.02.2018 தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில், தமிழர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், இன்று (08.02.2018) பகல் அடையாறிலுள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் இல்ல அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 3 (2018) அன்று, சென்னை அண்ணா அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்ற “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – வெளி மாநிலத்தவர்க்கு அல்ல!” – சிறப்பு மாநாட்டின் தீர்மானங்களும், இந்தியாவெங்கும் அந்தந்த மாநிலங்களில் செயலில் உள்ள  மண்ணின் மக்களுக்கே வேலை அளிக்கும் சட்டங்கள், ஆணைகள், தீர்மானங்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவுச் சட்டம் ஆகியவையும் முதலமைச்சர் மனுவுடன் இணைத்து அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசே..
தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கான
தேர்வில் வெளியாரை அனுமதிக்காதே...

மதம் என்பது தனிப்பட்ட கடவுள் நம்பிக்கையை சார்ந்தது, குறிப்பிட்ட மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை சார்ந்தது அல்ல...


உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை...


உலக அதிசயப்படியலில் இடம் பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்...

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான ச,ரி,க,ம,ப,த,நி என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது.

சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது. இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.

அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.

சரி இது எதற்காக பயன்பட்டது ?

அந்தக்காலத்தில் இருந்த இசைக் கலைஞர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக் கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது.

இந்த இசைத்தூண்களை "மிடறு” என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான அலைகற்றையை உருவாக்குகின்றது.

எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.”அனிஷ் குமார்" என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள" இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.

"In situ metallography" (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது" தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள்" என தெரிய வந்தது.

" spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது" தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால்" சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது.

சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது?

நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப் போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல்.

இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை.

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த" இசைத்தூண்கள்" ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது.

நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசை தூண் போன்ற இசை தூண்கள் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை.. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது.

ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்...

மருத்துவ மாப்பியா.. சில நோய்கள் குணமாகி பல நோய்கள் வருகின்றதே சிந்தியுங்கள் மக்களே...


இந்தியாவில் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்...


இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த
பூமியாகும். அறிவியல் விளக்கத்திற்கும்
அப்பாற்ப்பட்டு இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சில நேரம் அது வெறும் ஏமாற்று வேலை தான் என்றாலும் கூட சில நேரங்களில் அது நம்மை உறைய வைக்கும் உண்மையாக இருக்கும்.

இதில் பல மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்
இந்தியாவின் இரண்டாம் பிரதம
மந்திரியான சாஸ்திரி அவர்கள் 1966
ஆம் ஆண்டில் டாஷ்கென்ட் என்ற இடத்தில் டாஷ்கென்ட் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்ட சில மணிநேரங்களில்
மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அரை நூற்றாண்டை கடந்த போதிலும்,
இன்று வரை அவர் மரணத்தில் மர்மம்
நீடிப்பதாக கருதப்படுகிறது. 2009
ஆம் ஆண்டில் அனுஜ் தர் என்ற
பத்திரிகையாளர், சாஸ்திரியின் மரணத்தைப் பற்றிய தகவல் வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதம மந்திரியிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அப்படி தெரிவித்தால் அது இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளில் பாதிப்பை உண்டாகும் என அவரின்
கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அவரின் மரணத்தின் போது, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்ற சந்தேகத்தின் பேரில் ரஷிய நாட்டு சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டார்.

அவருக்கு மாரடைப்பு என சொல்லப்பட்டாலும், அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என அவரின் குடும்பத்தார் வலியுறுத்துகின்றனர்...

காடுகளை உருவாக்குவோம்...


சங்கீதம், தாளம்...


கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளாங்கும்போது அது இசையாகின்றது (சங்கீதமாகின்றது). சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலி உருவத்தோடு வெளி வருவதாகும்..

சங்கீதம்: "கீத வாத்ய நிருத்யஞ்ச த்ரயம் ஸங்கீத முச்யதே" (சங்கீத இரத்தினாகரம்). இலக்கியத்தில் பேச்சும், எழுத்தும், விவகாரமும் இருப்பனபோலவும், கூத்தில் மெய்பாடும், கரணவகைகளும், தாளத்தின் சதி அடைவுகளும் இருப்பன போலவும், இசையாகிய சங்கீதத்தில் கீதம், வாத்தியம், நிருத்தியம் ஆகிய இம்மூன்றும் அடங்கின.

தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தற்போது எழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்."பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை,அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்."

ஏழு தாளங்கள்...

துருவ தாளம், மட்டிய தாளம், ரூபக தாளம், ஜம்பை தாளம், திரிபுடை தாளம், அட தாளம், ஏக தாளம்...

இலுமினாட்டி - நம்மை இயக்கும் மர்ம குழுமம்...


நம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்…

அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.

நம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்… பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டு விட்டோம் என…

நம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு இந்த பதிவை எழுதுகிறேன்…

முதலில் அறியப்படாத ஒரு மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுமத்தைப் பற்றி பார்ப்போம்…

இலுமினாட்டி (Illuminati)…

பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த இலுமினாட்டி ஐக்கூற வேண்டும்..

உலகின் புதிய கட்டளை (New world order) எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது.

எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல… மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும்.

20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது.

அவர்கள் தான் உலகின் கிங் மேக்கர் களாக இருகிறார்கள்..

யார் இவர்கள் -  நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன.

13 குடும்பங்கள் என்பது… ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது… இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள்.

இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப் பேணுவதில்லை…

காரணம், தமது இலுமினாட்டி தன்மைக்குரிய மரபணுக்களைப் பேணுவதற்காகத் தான். மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.

இவர்களின் நோக்கம் தான் என்ன…

சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்…

ஒரு உலகம்.. ஒரு அரசு என்பது தான் இவர்களின் நீண்டகாலத் திட்டம்.

இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்… சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும்..

இவர்களுக்கு எதிரானவர்கள்… அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்…

இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்தி வருகின்றனர்… அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

உதரணமாக -  சில வகை இசை வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்…. அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது.

மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.

முடிவில்… இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு.

அதாவது… அடிமைப்படுத்த வேண்டும் என்பது..

எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும்…

மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத் தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு…

நீக்கப்படுவார்கள் - ஒழிக்கப்படுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்களின் மிகப்பெரிய தலையிடி…
ஏஸியாப்பகுதியை சேர்ந்தவர்களும்…. இப்படியான பதிவுகளை வாசிப்பவர்களும் தான்… இவர்களின் மிகப்பெரிய தலையிடியாக இருக்கிறார்கள்..

அது ஏன் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம்...