20/02/2018

ஆந்திரத்தில் 5 தமிழர் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் - பாமக அறிக்கை...

                             
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் மிதந்தது நேற்று கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும், வருத்தமும் அளிக்கிறது.

உயிரிழந்தவர்களில் இருவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உள்ளிட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா மாவட்டங்களில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவதும், என்கவுண்டர் உள்ளிட்ட முறைகளில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இத்தகைய சூழலில் தான் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் ஒண்டிமிட்டா ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் தவிர மேலும் சிலரின் உடல்கள் ஏரியில் கிடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஐவரும் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதை இதுவரை உறுதி செய்ய முடியவில்லை.

காவல்துறையினர் இவர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியிருக்கலாம்; அதில் இறந்தவர்களின் உடல்களை ஏரியில் வீசியிருக்கலாம் என்றும் மனித உரிமை அமைப்புகளின் சார்பில் குற்றம்சாட்டப்படுவதை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

அதே நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்ததுதொடர்பாக ஆந்திர காவல்துறையினர் அளித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல.

சனிக்கிழமை இரவு ஒண்டிமிட்டா பகுதியில் காவல்துறையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது செம்மரங்களை வெட்டுவதற்காக சரக்குந்தில் வந்த ஒரு கும்பலை தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் தப்பியோடியதாகவும், அவர்களில் சிலர் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆந்திர காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இதை நம்ப முடியவில்லை.

காவல்துறையினரால் துரத்தப்பட்டவர்கள் ஏரியில் குதித்து உயிரிழந்தார்கள் என வைத்துக் கொண்டால்கூட, அவர்களுடன் வந்த மற்றவர்கள் ஒருவர்கூட தப்பியிருக்க மாட்டார்களா? என்ற வினா எழுகிறது.

அதுமட்டுமின்றி, ஏரியில் பிணமாகக் கிடந்தவர்களின் உடல்களில் காயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையினர் சித்ரவதை செய்ததால் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்  என்று கூறப்படும் நிலையில், இந்த வினாக்களுக்கு ஆந்திர காவல்துறையால் பதிலளிக்க முடியவில்லை.

இறந்தவர்களின் உடலில் காயங்கள் இருப்பது உறுதியானதால், அவர்கள் செம்மரங்களை கடத்தி வந்திருக்கலாம் என்றும், அவற்றை அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் வேறு ஏதேனும் கும்பல் அவர்களை கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என்றும் புதிய காரணத்தை காவல்துறை பரப்பி வருகிறது. இது காவல்துறை மீதான ஐயத்தை அதிகப்படுத்துகிறது. தங்களின் குற்றத்தை மறைக்க புதுப்புது கதைகளை ஆந்திர காவல்துறை ஜோடிக்கிறதோ என்ற சந்தேகம் அதிகரிக்கிறது.

ஆந்திர காவல்துறை மனித உரிமைகளை முற்றிலும் மதிப்பதில்லை என்பது நாடறிந்த ஒன்றுதான். கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர காவல்துறை திருப்பதியில் கைது செய்து சேஷாச்சலம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றது. அவர்கள் அனைவரும் செம்மரம் கடத்த வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாகவும் ஜோடிக்க ஆந்திர காவல்துறை முயன்றது. இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சிதான் களமிறங்கி போராடியது. தேசிய மனித உரிமை ஆணையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி முறையிட்டு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்; கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் பெற்றுத் தந்தது. கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதிபெற்றுத்தர ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க ஆந்திர அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. தமிழக அரசும் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை.

தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களை அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, ஆந்திராவைச் சேர்ந்த செம்மரக்கடத்தல் கும்பல்கள் அழைத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு அழைத்துச் செல்லும் கடத்தல் கும்பல்களின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆந்திர காவல்துறை அப்பாவித் தொழிலாளர்களை படுகொலை செய்வது கண்டிக்கத்தக்கது. யாராக இருந்தாலும், செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது. இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்களை கொலை செய்வதை சகிக்க முடியாது.

ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தது தொடர்பான வழக்கை ஆந்திர காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு  மாற்றவேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்...

சமஸ்கிருதத்தை ஒரு மொழி என்று சொல்வதே ஒரு நகைச்சுவை...


அது  ஒரு குழுவுக்குறி. அது (தமிழர்களும் ) ஒரு குழு தமக்குள் பேசிக்கொள்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு பரிபாஷை. அது ஒரு மொழியாய் இருந்திருந்தால், அதுவும் செம்மொழியாய் இருந்திருந்தால் அது தமக்கென எழுத்து வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டிருந்திருக்கும். ஆனால் அப்படி ஒரு எழுத்து வடிவத்தை சம்ஸ்கிருதம் உண்டாக்கி கொண்டிருக்கவில்லை. பிற்காலத்தில் அந்த குழுவிடம் இருந்து சமஸ்கிருதத்த்தை பறித்துக்கொண்ட வந்தேறி ஆரிய --  வடுக திராவிட கூட்டம் சமஸ்கிருதத்துக்கு இந்தி எழுத்துக்களை பயன்படுத்திக் கொண்டது. 

இன்றுவரையில் இந்தி எழுத்துக்களால் தான் சமஸ்கிருதம் எழுதப்படுகிறது. சம்ஸ்கிருதத்துக்கு காலமோ, சம்சயமோ எதுவுமில்லை. அதிகாரத்தின் நிழலில் ஒரு தற்குறியைப் போல தன்னை வைத்துக் கொண்டது. 

தமிழுக்கு வெகு நெருக்கமாக தமிழர்களால் உருவாக்கப்பட்ட அந்த பாஷையில் பிற்பாடு சுமேரிய பெர்ஷிய ஈரானிய வார்த்தைகளை  எல்லாம் நுழைத்துக்கொண்டு குருவிக்கார பாஷை  போல மாறி விட்டது.  சமஸ்கிருதம் செத்து விட்டது. அதன் சாவுக்கு அழுத பிராமணன் ஒருவர் கூட  இல்லை. .

குருவிக்காரர்கள் இந்தியாவில் அறுபதினாயிரம் பேர் இருக்கிறார்கள். குருவிக்கார பாஷையை பேசவும் அறுபதினாயிரம் பேர் இருக்கிறார்களில். ஆனால் சமஸ்கிருதம் வெறும் பதினாறாயிரம் பேரால் மட்டுமே இப்போது பேசப்பட்டு வருகிறது அரசு தகவல்களின் படி,. அதுவும் கோவில்களில், அரசு ஆதரவு பெற்ற மடங்களில். இடங்களில். சமஸ்கிருத மொழியில் வந்த கடைசி சஞ்சிகையும் நிறுத்தப்பட்டு விட்டது.

இப்போது சம்ஸ்கிருதத்தில் ஒரு பத்திறிக்கையும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. இணையத்தில் ஆறு பத்திறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அதில் முதன்மையான பத்திறிக்கை வெறும் பன்னிரண்டு பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. 

இது தான் சம்ஸ்கிருதம்...

நீங்கள் நீருக்கும் வரிசையாக காத்திருக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை காடுகளை வளர்த்து தற்சார்பை நோக்கி திரும்புங்கள்...


தமிழர்நாட்டில் மரவீடுகள்...


தமிழர்நாட்டில் வீடுகட்ட இன்று நாம் பயன்படுத்தும் மணல், இரும்பு, சுண்ணாம்பு போன்ற புதுப்பிக்க இயலாத வளங்களை பயன்படுத்தாமல் மரங்களை வைத்து வீடுகட்டவேண்டும்.

இரும்பு போல உறுதியான மர வகைகளும், தீயில் எரியாத மர வகைகளும்..

ஆச்சா போன்ற நீரில் மூழ்கும் மர வகைகளும் கூட உண்டு.

நாம் அனைத்து கட்டுமானங்களையும் பயன்பாட்டுப் பொருட்களையும் முடிந்த வரை மரத்தாலேயே செய்யவேண்டும்.

அதாவது பொம்மை, நாற்காலி, பாத்திரங்கள், கட்டில், அலமாரி, சிலைகள், அழகுப் பொருட்கள், செருப்பு, மின்னணு சாதனங்களின் உடல்பகுதி, வாகனங்களின் உடல் பகுதி, வேலி, வீடு, கூரை, தூண், பாலம், சாலை ஓர தடுப்புகள் போன்ற அனைத்தையும் மரத்தாலேயே செய்ய முயற்சிக்க வேண்டும்.

மரப்பொடியையும் மீண்டும் பசையில் குழப்பி அழுத்தி மீண்டும் பலைகை ஆக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுவரவேண்டும்.

அதற்கு முதலில் வனப்பகுதிகளைப் பாதுகாத்து அதனைப் பெருக்கி பிறகு அதன் எல்லையை விரிவாக்கி நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அடர்த்தியான காடுகளை உருவாக்க வேண்டும்.

(இது எல்லைப்பகுதியில் செய்யப்பட வேண்டும்).

பிறகும் நாம் நாடே காடாகும் அளவு சமூகக் காடுகளை வளர்க்கவும் வேண்டும்.

வானில் இருந்து பார்க்கும் போது பச்சையாக மட்டுமே தெரியுமளவு மரங்களை வளர்க்கவேண்டும்.

மரங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக செல்லும் போது வெட்ட ஆரம்பிக்க வேண்டும்.

அதுவரை மிகவும் குறைவாகவே மரம் வெட்டுதல் நடக்க வேண்டும்...

குறிஞ்சாக்குளம் காந்தாரி...


மகாபாரதத்தில் வரும் காந்தாரி
காந்தாரா (Ghandhara) நாட்டைச் சேர்ந்தவள்.

இது காஸ்மீரை ஒட்டிய இன்றைய பாகிஸ்தானின் வடபகுதி.

இன்றைய ஆப்கானிஸ்தானின் கந்தஹார் (kandahar).

இதன் பழைய பெயர் இஸ்கந்தரியா (iskandariya).

ஈரான் நாட்டின் தென்பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி குறிஞ்ச் (kurinch) என்ற ஊரும் உள்ளது...

அதிமுக எடப்பாடியுடன் ரவுடி சுசீந்திரன்...


தாயத்து இரகசியம் - யார் முட்டாள்?


சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. 

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.

தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.

இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு.

ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை  என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில்  பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில  வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி  என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர். உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா...     

இனியாவது விழிப்போம்.

நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்...

யாரோ ஒருவாருக்கானது என ஒதுங்கி நிற்காமல் நமக்கான பிரச்சனையாக எண்ணி கைகோர்ப்போம் தமிழா...


அரசு அங்கன்வாடியில் பயிலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் குழந்தை...


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.சிவஞானம் அவர்கள் தனது இரண்டரை வயது மகள் ரித்திஷாவை விருதுநகர் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள,அரசு அங்கன்வாடி மையத்தில்  (Pre kg) சேர்ந்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சிவஞானமே தனது மகளை அழைத்து வந்து சக மாணவர்களுடன் பயில்வதற்கு விட்டு விட்டு செல்கிறார்...

இந்திய தலைநகர் தில்லியில் − தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் அதனை ஆதரித்துப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைப்பட்டிருக்கும் சிறார் மற்றும் பொதுமக்களை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியும் எழுச்சி பேரணி மேற்கொண்ட தில்லி நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்...


எப்படியாவது அடுத்த உலகப் போரை ஏற்படுத்த வேண்டும் என்றே நினைக்கின்றனர்...


திமுக ஸ்டாலினின் முதலாம் ஆண்டு வெற்றி விழா.....


ஆட்சியை கலைப்பதாய் சபதம் ஏற்று தன் சட்டையை தானே கிழித்துகொண்ட பொன்நாள்.

ஒருவருசம் ஆகுது இன்னமும் கோலம்தான் போடுறாரு . அவரது திறமைக்கு மிகச்சிறந்த உதாரணம் இதுதான்.

வெறும் 113 பேர் ஆதரவோடு ஒரு வருசமா ஆட்சி நடக்குது இதை கலைக்க ஒரு வருசமாய் எதிர்கட்சி தலைவர் நடத்தும் காமெடி சோ இது தான்...

எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என நீங்களே நினைத்தால், அடுத்த தலைமுறை இங்கு எப்படி வாழ முடியும்..?


பல சமயங்களில் கன்று போட்ட உடன் மாடு நன்றாக இருக்கும்...


கன்று போட்டு நான்கு ஐந்து நாட்கள் கழித்து மாடு படுத்துவிட்டால் எழுந்து நிற்க முடியாமல் படுத்தே இருக்கும்.

இடுப்பு பகுதி உணர்ச்சி குறைவாக இருக்கும். பால் காய்ச்சல் எனக்கருதி கால்சியம் குளுகோஸ் மருந்துகள் போட்டாலும் மாடு எழுந்து நிறகாது. ஆனால் தீவனம் தின்னும்.

இதற்கு காரணம் மாடு கன்று ஈனும் போது வழக்கத்தை விட இடுப்பு எலும்பு (hip joint) விரிவடைந்து விடுவதே.

கன்றின் எடை 25 கிலோவிற்கு மேல் இருக்கும் மாடுகளில் இந்த குறைபாடு இருக்கும்.

மேலும் சத்து குறைபாடு; இடுப்பு பகுதி நரம்பு மற்றும் இரத்தக்குழாய் கசங்குதல் மற்றும் சவ்வு பிரச்சினை அனைத்தும் இருக்கும். 

இதற்கு நான் படத்தில் காட்டியபடி மாட்டை தூக்கி நிறுத்தி கட்டி அப்படியே 3__5 நாட்களுக்கு விடவேண்டும்.

நல்ல சத்தான ராகி கஞ்சி, தட்டு , இவற்றுடன் கால்சியம் வைட்டமின் திரவ டானிக் தரலாம்.

கூடவே நாயுருவி; அகத்தி மற்றும் முருங்கை இலை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். 

மேல்பூச்சாக நான் கூறும் சிகிச்சையை செய்யுங்கள்... மாடு கண்டிப்பாக கசாப்புக்கு போகாது...

பிரண்டை இரண்டு கிலோ ; கருவேலன் மரப்பட்டை அரை கிலோ எடுத்து நன்றாக உரலில் கூழ்பதத்தில் இடித்து எடுத்துக் கொண்டு இத்துடன் அரைகிலோ ராகிமாவு ; சலித்த புற்று மண் அல்லது களிமண் அரைகிலோ இவற்றை ஐந்து லிட்டர் தண்ணீரில் கலந்து சட்டியில் வைத்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு கிண்டி கொதி நிலை வந்ததும் இறக்கி வைத்து இளம் சூட்டில் ஐந்து கோழி முட்டை வெள்ளை கருவை  ஊற்றி கலந்து இந்த மருந்து கலவையை ஆறிய பின் எடுத்து மாட்டின் இடுப்பு பகுதி கால் சப்பை மற்றும் முன் கால் சப்பைகளில் மொத்தமாக பூச வேண்டும்.

இதுபோல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை போட வேண்டும். எனது பத்தாண்டு அனுபவ ஆராய்ச்சி மருந்து இது.

கிடையாக கிடந்த மாடு கூட எழுந்து நடக்கும்.

கூட முருங்கை இலை அகத்தி உள்ளே கொடுங்கள். கண்டிப்பாக மாடு நடக்கும். இழந்த பால் திரும்பும்.

முடிந்தவரை ஷேர் செய்யுங்கள். என்னுடைய இந்த சிறிய முயற்சிக்கு படித்த விவசாயம் செய்வோர் ஆதரவு தாருங்கள். கால்நடை சிகிச்சையில் புது புரட்சி செய்வோம்...

பதிவு - காரிடிவி

திருட்டு தொழிலுக்கு செல்வதற்கு முன் குல தெய்வத்தை வணங்க வந்த திருடர்கள் ரஜினி & கமல்...


ஈழமும் தமிழகமும் ஒன்று சேர்ந்தால் இந்த உலகத்தின் உயரம் தமிழினமே...


இதை பலர் புரிந்ததனால் சேர தடுக்கின்றார்கள், பிரிக்கின்றார்கள், சேர்ந்தவர்களையும் சேருபவர்களையும் தடுக்கின்றார்கள்...

முன்பு ஒன்றாய் இருந்த தமிழினம் வருங்காலத்தில் ஒன்றுபட்டே தீரும்.

புலிக்கூட்டம் புலியோடுதான் சேரும் என்பதில் சந்தேகமில்லை.

அன்று தமிழகமும் புலிக்கொடி கொண்டு தான் வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இனி வரும் காலமும் உருவாக்கும் வரலாறும் அதையே சொல்லும்...

மராட்டியன் ரஜினி.. கன்னடன் கமல் எல்லாம் எங்க தல கால் தூசிக்கு நிகராக முடியாது, ஏனெனில் அவர் ரசிகனை கட்சி தொண்டனாக்கவில்லை. தன்மானத் தமிழன்டா...


திமுக தெலுங்கர் கருணாநிதி செய்த முக்கியமான தமிழின துரோகங்களில் இதுவும் ஒன்று...


ஈழப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன மானத்தோடும், தன்மானத்தோடும், சமூக அக்கறையோடும் வீதிக்கு வந்து போராடிய வழக்கறிஞர் பெருமக்களை ஓட ஓட அடித்து, சனநாயகத்தின் தூண்களில் ஒன்றை மற்றொரு தூணை கொண்டே ஏவிவிட்டு அடக்கநினைத்த கயவன் கருணாநிதியின் வெறியாட்ட தினம் இன்று -  19/02/2009...

ஏழை பணக்காரன் ஆக முயன்றால் விலைவாசி என அனைத்தும் உயரும் கடைசிவரை உலக பணக்காரர்கள் குடும்பம் ஏழைகளை முன்னேற விடாது...


யவத்மால் பருத்தி விவசாயிகளின் பரிதாப நிலை...


மொன்சாண்டோ நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட போல்கார்ட் III என்ற பருத்தி விதைகளை இந்தியாவில் விற்க முயன்றது.

இளஞ்சிவப்பு புல் புழுக்கள் இப்பருத்தியை தாக்காது என இந்நிறுவனம் விளம்பரம் செய்தது.

மக்களின் எதிர்ப்பு காரணமாக இவ்விதைகளை சந்தைப்படுத்துவதில்லை என்றும், 2020 ஆம் ஆண்டு போல்கார்ட் III விதைகளை விற்போம் என்றும் அறிவித்தது.

அரசு விதி முறைகளை மீறி எவ்வாறு முதல் பிடி பருத்தி விதைகளை விற்றதோ அதே முறையில் முறைகேடாக போல்கார்ட் III விதைகளையும் ஆந்திரா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 2000 ஆம் ஆண்டிலிருந்து விற்று வருகிறது.

இப்பருத்தி ஆள் உயரத்துக்கு மேல் வளர்கிறது. எப்புழுக்கள் தாக்காது என்று கூறினார்களோ அதே புழுக்கள் பருத்தி செடிகளைத் தாக்கியது.

இப்புழுக்களை கட்டுப்படுத்த தடைசெய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை கலந்து ஆள் உயர செடிகளில் தெளிக்கும் போது பூச்சி கொல்லிகளை தெளிக்கும் நபர்களே சுவாசிக்க நேரிடுகிறது.

அதன் விளைவாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் உடல் நலம் குன்றி படுக்கையில் உள்ளனர்.

மக்கள் மரணமடைந்தது மட்டுமல்லாமல் அவ்வளவு பருத்தி செடிகளும் நாசமடைந்து உள்ளன.

ஒவ்வொரு பருத்தி விவசாயியும் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் மகாராஷ்டிரா மாநிலம் பருத்தியால் ரூ.10,000 கோடி வரை இழந்துள்ளது.

பெற்ற அனுபவத்தால் இந்திய அரசு மரபணு மாற்ற விதைகளையும், அபாயகரமான பூச்சி கொல்லிகளையும் நிரந்தரமாக தடைசெய்யுமா?

விதி முறைகளை மீறி இவைகளை விற்றவர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

காபியின் ஆபத்துக்கள்...


அன்பு சக்தியும் நீங்களும்...


1. அனைத்திற்கும் ஓர் அதிர்வு அலைவரிசை உள்ளது. நீங்கள் எந்த உணர்வைக் கொண்டிருக்கிறீர்களோ , அந்த உணர்வு தான் இருக்கும் இதே அதிர்வு அலைவரிசையில் உள்ள அனைத்தையும் உங்கள் வாழ்விற்குள் கொண்டு வருகிறது.

2. வாழ்க்கை உங்களுக்குத் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்களுடன் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கிறது. அடையாளங்கள் , எண்ணங்கள் , நபர்கள், பொருட்கள் என்று நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு சூழலும் , ஒவ்வொரு நிகழ்வும் உங்களுடைய அலைவரிசையில் உள்ளன.

3. நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும் போது, மகிழ்ச்சியான மக்கள், மகிழ்ச்சியான நிகழ்வுகளால் மட்டுமே உங்கள் வாழ்விற்குள் நுழைய முடியும்.

4. வாழ்வைப் பொறுத்தவரை எந்தவொரு விபத்தும் தற்செயலாக நிகழ்வும் ஏற்படுவது கிடையாது. அனைத்தும் இணக்கமானவை உள்ளது. இது வாழ்வின் எளிமையான இயற்பியல் மற்றும் பிரபஞ்சத்தின் செயல்பாடு ஆகும்.

5. நீங்கள் நேசிக்கும் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொள்ளுங்கள். ஆடை உங்கள் அன்பின் ஆற்றலின் அடையாளாச் சின்னமாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் அடையாளாச் சின்னத்தைப் பார்க்கும் போது அல்லது கேட்கும் போதோ, அன்பின் ஆற்றல் உங்களுடன் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

6. ஒரு விஷயத்தில் ஈடுபடுவதற்கு முன் , அன்பின் ஆற்றலை உங்களுக்கு முன்னதாக அங்கு அனுப்புங்கள். உங்களுடைய நாளில் ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக நடப்பதாகக் கற்பனை செய்யுங்கள். எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கு முன்னும் உங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்குள் அன்பை உணருங்கள்.

7. ஒவ்வொரு நாளும் கேள்விகள் கேளுங்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்கும் போது , ஒரு கேள்வியைக் கொடுக்கிறீர்கள். அதற்கான விடையை நீங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.

8. உங்கள் வாழ்வில் எந்தவொரு விஷயத்திலும் உங்களுக்கு உதவுவதற்கு அன்பின் ஆற்றலை உங்கள் தனிப்பட்ட உதவியாளராகவும் , பணத்தை நிர்வாகிக்கும் மேலாளராகவும் , தனிப்பட்ட முறையில் உங்கள் உடலுக்குப் பயிற்சியளிப்பவராகவும் , உறவுகள் குறித்து ஆலோசனை வழங்கும் ஆலோசனையாளாராகவும் இருக்கும்.

9. உங்கள் மனம் ஏகப்பட்ட விபரங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், அந்தச் சிறிய விபரங்கள் உங்கள் வாழ்வை எளிமையாக்கிக் கொள்ளுங்கள் . சிறு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் . அது என்ன பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது.

10. அன்பின் ஆற்றலுக்கு நேரெதிரானது என்று எதுவும் கிடையாது. அன்பைத் தவிர வாழ்வில் வேறு எந்த சக்தியும் இல்லை. உலகில் நீங்கள் காணும் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் அன்பின் பற்றாக்குறையினால் உருவானவையே.
உற்சாகம் உங்களுடன் எப்போதும் இருக்கட்டும்...

கேள்வி கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்...


ஆனால் இங்கு அவர்கள் உருவாக்கிய தீர்வுதான் நல்ல தீர்வு என்றும் அதை நாம் அடுத்த தலைமுறைக்கும் கற்று கொடுக்கிறோம்...

ஆரியனுக்கு ஏது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது...


தேசிய மாயை திணிக்கப்பட்டது..

ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது...

ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின..

ஆனால், எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர்..

மலையாளிகளும் தெலுங்கரும் கன்னடரும் கமுக்கமான வேறு பல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்...

முட்டாள் தமிழா நீ மட்டும் தான் திராவிடப் போர்வையில் அடிமையாய் வாழ்கிறாய்...

அதிமுக ஆட்சி கலைப்பை இன்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழகம்...


தமிழன் கண்டுபிடிப்பான திருகை...


நம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டு பிடிப்பான திருகையின் அனுபவம் உண்டா உங்களுக்கு...

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.

சமாச்சாரம் இது... இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.

மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்...

அடுத்தவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து உங்களின் வாழ்வாதாரம் வளர்வதுதான் வளர்ச்சி என்றால்...


நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பது அங்கு வாழ்வாதாரத்தை இழப்பவர்களின் சடலத்தின் மீது உங்கள் குடும்பத்தோடு சாப்பிடுவது போல்...

சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய்...


சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.

ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய்.

இதைப் பற்றி நான் இங்கே பதியக் காரணம் இந்த விஷயம் மீடியாக்களால் பேசப் படவில்லை என்பதும், நமது பாடப் புத்தகங்களிலும் பெரிதாக எந்த விவரங்களும் தரப்படவில்லை என்ற ஆதங்கம் தான்.

இதை அரசாங்கம் குப்பைகளாலும் இடி பொருட்களாலும் நிரப்பி மறைத்து விட முயல்வது ஒரு தேச அவமானம்.

தொலை நோக்குப் பார்வை (அப்படின்னா) இல்லாத நமது தமிழக அரசாங்கங்கள் ஆங்கிலேயர் விட்டுப் போன ஒரே புதையலையும் மண்ணாக்கி விட்ட அநியாயம் இது.

1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து 420 km நீளத்தில் விஜயவாடாவையும் விழுப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த அதிசயம் உருவானது.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்ல இது பெரிதாக உபயோகபடுத்தபட்டு இருக்கிறது.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப் பட்ட இந்தக் கால்வாய், சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது.

மற்ற பகுதிகளில் இன்னும் பெரிதும் பாதிக்கப் படாத இந்தக் கால்வாய் 80 சதவீதம் இன்னும் உபயோக நிலையிலேயே உள்ளது.

சென்னை நகரின் குறுக்கே ஓடும் 30 km நீளமான பகுதி மட்டுமே கடும் நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி விட்டிருக்கிறது.

MRTS என்ற பறக்கும் ரயில் திட்டம் இந்தக் கால்வாயை ஒட்டியே திட்டமிடப் பட்டது.

இந்தக் கால்வாயே ஒரு MRTS என்பது யாருக்குமே புரியவில்லை என்பது பரிதாபம் தான்.

இந்த ரயில் பாதை கட்டுமானம் பெரும்பாலான இடங்களில் இந்தக் கால்வாயை சிதைத்து விட்டிருக்கிறது. சில ரயில் நிலையங்கள் பக்கிங்ஹாம் கால்வாயை நிரப்பிக் கட்டப் பட்டிருப்பது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகத்தின் எந்த மூலையிலும் காணக் கிடைக்காத ஒன்று.

2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தமிழக மற்றும் ஆந்திர அரசுகளிடம் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனாலும் பெரிதாக ஒரு முயற்சியும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

பல கோடி செலவில் சாலைகள் அமைத்து நம்மிடம் சுங்கம் வசூலிக்கும் அரசு, இது போன்ற எளிய இயற்கையான போக்குவரத்து வழிகளை ஏன் மறந்து விட்டிருக்கிறது?

இன்றைய தேதிக்கு இது போன்ற திட்டத்தை அமைக்க எத்தனை ஆயிரம் கோடிகள் தேவைப்படும் என்று யாராவது யோசித்தால் தேவலை (200% மந்திரி வரிகள் தனி).

ஒவ்வொரு முறை விமானத்தில் பறக்கும் போதும் பல இடங்களில் ஸ்கேல் வைத்துப் போட்டது போல நேராகத் தெரியும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய் நாம் எவ்வளவு அறிவில்லாமல், பொறுப்பில்லாமல் வாழ்கிறோம் என்பதை ஒரு அளவுகோல் போல நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது...

தமிழர்களுக்கு இந்தியா என்றுமே நன்மை செய்யாது...


தமிழா கார்பரேட் சதியை பார்.. நம் கயித்து கட்டில் தான்...


ஜாக்டோ ஜியோ அமைப்பு மீண்டும் போராட்டம் அறிவிப்பு , 21 ஆம் தேதி சென்னையில் மறியல் போராட்டம் என அறிவிப்பு...


அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ 21 மாத ஊதிய நிலுவையை உடன் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளது...

ஒவ்வொரு முறை நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தும் போது உங்கள் முகத்தில் கரி பூசப்படுகிறது...



இதற்கு காரணமான ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டுமா?

மார்ச் 4 வள்ளுவர் கோட்டத்தில் கூடுவோம்...

தெலுங்கு திமுக கட்சி... தமிழனாக நடிக்க முயற்சி செய்தும் வீணாகிறதே...


அரைஞாண் கயிற்றின் மருத்துவ ரகசியம்...


அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு.

எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..

உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?

நிச்சயமாக இல்லை. அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டு பிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது...

அந்த ரகசியம் என்ன வென்றால்....

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது.

ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு.

அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது.

பிறகு அக்கயிறு வெள்ளிக் கொடியாக மாறியது.

இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறு கட்டுவதும் குறைந்து விட்டது.

உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள்.

இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.

இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி, தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு.

சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.

நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...