05/02/2019

பாஜக - அதிமுக - காவல்துறை அராஜகம் - மூடி மறைக்கும் திருட்டு ஊடகங்கள்...


எங்க அம்மாவைக் கண்டுபிடித்து தாருங்கள் - கதிராமங்கலத்தில் போராடும் பெண் குழந்தைகள்...

நேற்று கதிராமங்கலத்தில் நடைப்பெற்ற போராட்டத்தில் என்னுடைய அம்மாவும் கலந்துகொண்டார். முதலில் கைது செய்வதாக மிரட்டியவர்கள் கைது செய்யவில்லை எனினும் இன்னும் என் அம்மா வீட்டிற்கு வரவில்லை’ என அவரின் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் மூவருமே பெண்க்குழந்தைகள்  இதுவரை எங்கள் அம்மா எல்லா போராட்டத்திலும் கலந்துக்கொண்டவர் என் கிராமம் காக்க நானும் போராடுவேன் என போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் கலையரசி  எங்களுக்கும் பெருமையாக இருக்கும் அவர் எப்போதும் தைரியமானவர் எதற்கும் துணிந்து போராட வேண்டும் என்று சொல்லுவார் இன்று அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை  காவல்துறையும் எங்களுக்கு எவ்வித தகவல்களும் தெரிவிக்க மறுக்கின்றனர் .கேட்டாலும் சரியான தகவல் சொல்ல மறுக்கின்றனர், ஆனால் அம்மா மீது வழக்கப்பதிவு செய்துள்ளனர்  நாங்களும் எங்கள் உறவினர்களிடம்  விசாரித்து விட்டோம் ஆனால் அம்மா எங்குமே இல்லை” என்கிறார் கண்ணீருடன்.

கலையரசி என்பவர் கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பவர்  அதற்காக இவர் மீது வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.  நேற்று திடீரென ஓ.என்.ஜி.சியை சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் அதனை தடுத்து நிறுத்தச்சென்ற பேராசிரியர் ஜெயராமன், இராஜூ என்பவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் கலையரசி, ஜெயந்தி,சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர் தற்போது இவர்கள் மூவருமே காணவில்லை எந்த வித தகவல் தொடர்பும் இல்லை   நாங்கள் எங்கள் ஊருக்காகத்தான் போராடுகிறோம் ஆனால் எங்களை தேசவிரோதிகள் போல் நடத்துகின்றன அம்மா இல்லாமல் எங்களுக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை அழுகை மட்டுமே எங்களுக்கு சொந்தமானதுப்போல் ஆறுதல்  இழந்து நிற்கின்றோம்  தனியாக இருக்கின்றோம் தந்தையும் வெளிநாட்டில் உள்ளார்.

நேரம் செல்ல செல்ல உயிரோடு அம்மா இருக்கிறாரா? இல்லையா? என்ற எண்ணமே  தோன்றுகிறது. அம்மாவை தாருங்கள் என்று தான் கேட்கிறோம் அதையும் இந்த அரசு செவிசாய்க மறுக்கிறது.  ஊர்மக்கள் மட்டுமே உதவுகின்றது வேறு யாரும் வரவில்லை  என்கிறார் கலையரசியின் மகள் தேவதர்ஷினி.  நிர்க்கதியாக நிற்கின்றோம் ,இதுகுறித்து திருவிடைமருதூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராமக்கிருஷ்னனிடம் பேசியபோது நாங்களும் அவர்களை தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம் அவர்கள் மீது அத்துமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளோம் எனவே அவர்கள் காவல்த்துறைக்கு பயந்தே தலைமறைவாக இருக்கவேண்டும் அவர்களை நாங்கள் மறைத்து வைக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு எதுவும் இல்லை என்று கூறினார்

இதை நாம் அந்தக்குழந்தைகளிடம் கூறிய போது எங்களுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை கண்முன் அம்மா இல்லை என்பது மட்டுமே தெரிகின்றது என்கின்றனர் வாடிய முகத்துடன் அந்த மூன்று குழந்தைகளும்...

(கடந்த 10 நாட்களாக திருவாரூர் நாகப்பட்டினம் என பல்வேறு இடங்களில் ஹைட்ரோகார்பன் எதிராக இரவு பகலாக போராட்டம் நடத்தினார்கள்.

பின்னர் அவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தது.

பெண்கள் இன்று நேரடியாக போராட்டத்தில் இறங்கி ஒன்றினைந்து போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள். 

பல வழக்கு கைது என இன்றும் தொடர்கிறது)...

பெண் போலிஸ் மர்ம மரணத்தை மூடி மறைக்கும் சிறைத்துறை...


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், திருச்சியில் பெண் சிறை வார்டன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்திற்கு காரணத்தை மூடி மறைக்க சிறை நிர்வாகம் முயற்சிப்பதாக நமக்கு வந்த புகாரை அடுத்து விசாரித்த போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் செந்தமிழ்ச்செல்வி (24). திருச்சி காந்தி சந்தை பகுதியில் உள்ள மகளிர் சிறையில் வார்டனாகப் பணியாற்றி வரும் இவர் அருகிலுள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று 03.02.2019 மாலை வீட்டில் தனியாக இருந்தபோது திடீரெனத் தூக்கில் பிணமாகத் தொங்கினார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் கே.கே.நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் செந்தமிழ் செல்வியின் உடலை கைப்பற்றித் திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தமிழ் செல்வியின் தற்கொலை குறித்து விசாரணையில் இறங்கியபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

2017ம் ஆண்டு தேர்வானவர் செந்தமிழ் செல்வி. அதே ஆண்டு தேர்வானவர் அரியலூர் மாவட்டம் திருமாந்தூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர்கள் இரண்டு பேரும் அகில இந்திய அளவில் சிறைதுறை விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர் என்கிற முறையில் ஆரம்பித்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நட்பு அடிப்படையில் ஏற்பட்ட பழக்கம் தினமும் செல்போனில் பேசும் அளவிற்கு மாறியிருக்கிறது. செந்தமிழ் செல்வி சிறைத்துறையைச் சேர்ந்த குடியிருப்பு பகுதியான R பிளாக்கில் தங்கியிருக்கிறார். இவருடன் 3 பெண்கள் தங்கியிருக்கிறார்கள். உடன் தங்கியிருப்பவர்கள் பணி நேரத்தில் வெளியே செல்லும் நேரங்களில் வெற்றிவேல் செந்தமிழ்செல்வியின் அறைக்கு வந்து விடுவாராம்.

இந்தப் பழக்கம் எல்லைமீறிச் சென்றிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் வெற்றிவேலிடம் திருமணம் செய்யச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் வெற்றிவேலோ நீ என்ன ஜாதி, நான் என்ன ஜாதின்னு தெரியுமா! உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது. நீ என்னோட பழகின, நா உன்னோட பழகின அவ்வளவு தான். எனக்கு இந்த மாதம் 6ம் தேதி திருமணம் நடக்கப் போகிறது என்று சொல்லியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த செந்தமிழ் செல்வி வெற்றிவேலின் காலில் விழுந்து என்னை ஏமாற்றிவிடாதே! உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், எனக்கு வாழக்கை கொடு, இல்லை போலிஸ் சூபிரடென்டிடம் சொல்லி உன்மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்லுவேன் என்று கெஞ்சியிருக்கிறார்.

இதை எல்லாம் பெருசா எடுத்துக்கொள்ளாத வெற்றிவேல் என்னோட அண்ணன் கைலாசம் இதே சிறையில் விஜிலன்ஸ் அதிகாரியாக இருக்கார். நான் அவரை வச்சு எல்லாத்தையும் சரி பண்ணிக்கிறேன். நீ மோசமுன்னு சொல்ல வச்சுடுவென் என்று மிரட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் தான் செந்தமிழ்செல்வி தற்கொலை செய்திருக்கிறார் என்கிறார்கள். ஏமாற்றிய வெற்றிவேல் திருமணம் 6-ம் தேதி நடக்க இருக்கிறது என்கிறார்கள். சிறைதுறையில் உள்ளவர்கள்.

செந்தமிழ்செல்வி தற்கொலை தொடர்பாக, அவரின் மாமா ரவியிடம் பேசியபோது,  ‘செல்வியும் வெற்றிவேலும் காதலித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில்  செல்வி திருமணம் செய்துகொள்ள சொல்லி வெற்றிவேலிடம் கேட்டபோது  ஜாதியை காரணம்காட்டி தவிர்த்திருக்கிறார். இதற்கு வெற்றிவேலின் அண்ணனும் உடந்தையாக இருந்திருக்கிறார்.  இதனிடையில் வெற்றிவேல் குடும்பத்தினர் வெற்றிவேலுக்கு  வேறொரு பெண்ணுடன் பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட செல்வி மனவுளைச்சலில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வேற்றிவேலை தொடர்புகொண்டு அவரின் விளக்கத்தை பெற முயற்சித்தோம், ஆனால் அவரின் செல்ஃபோன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என வருகிறது. 

வெற்றிவேல், செந்தமிழ்செல்வி செல்போன், வாட்ச்ஆப், ஆகியவற்றை ஆய்வு செய்தால் உண்மை வெளியே வரும். இல்லை என்றால் வழக்கம் போல் குடும்பச் சுழல், மனஉளைச்சல், கடிதம் எழுதி வைத்துவிட்டார் என்று வழக்கான கதைகளைச் சொல்லி செந்தமிழ்செல்வி மரணத்தின் மர்மத்தை மண்ணோடு புதைத்து விடுவார்கள்...

பாஜக மோடியை தான் சொல்லி இருக்கார் போல...


மத்திய பாஜக அரசை கண்டித்து மேற்குவங்கத்தில் 2வது நாளாக முதலமைச்சர் மமதா பானர்ஜி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது...


இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் வீட்டில் ஆலோசனை மேற்கொண்ட பின் சிபிஐ விவகாரம் குறித்து பேசிய முதல்வர் மமதா, "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில், மோடி-ஷா கூட்டணி ஈடுபட்டுள்ளது. அராஜகத்தை பரப்ப எண்ணுகிறது மோடி அரசு; மேற்கு வங்கத்தை பாஜக சித்ரவதை செய்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார்...

குமரிக்கண்டம் தாண்டி இராவணன் ஆண்ட இலங்கை...


உண்மையில் இராவணன் ஆண்ட இலங்கை தற்போதைய இலங்கைத் தீவு கிடையாது. இதைக் கம்பரே கூறுகிறார்.

இராமாயணத்தில் சீதையைத் தேடி அனுமன் தென்திசையில் செல்கிறான்.
அகத்தியர் தமிழ்ச்சங்கம் அமைத்த பொதிகை மலையில் பொருநை (தாமிரபரணி) ஆறு ஓடுவதையும்
அதற்கடுத்து மயேந்திரமலை (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தற்போதைய மகேந்திரகிரி) இருப்பது குறிப்பிடப்படுகிறது.

கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலத்தில் இது வருகிறது..

தென்தமிழ் நாட்டு அகன்பொதியின் "திருமுனிவன் தமிழ்ச்சங்கம்..."
"பொருநையெனும் திருநதிபின்..."
"மயேந்திரமா நெடுவரையும்..."

அங்கேயிருந்து நூறு ஓசனை (யோசனை) தொலைவில் நடுக்கடலில் இலங்கை இருக்கிறது என்றும் வருகிறது.

இது கிட்கிந்தா காண்டம்,
சம்பாதிப் படலத்தில்,
"ஓசனை ஒருநூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை..."
என்றும்,

கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலத்தில்
"ஓசனை ஒன்று நூறும்...."
என்றும் வருகிறது.

யோசனை என்றால் எவ்வளவு?

பொறிஞர் கொடுமுடி சண்முகத்தின் "பழந்தமிழர் பொறியியல் நுட்பத் திறன்" என்ற புத்தகத்தில் பழந்தமிழ் அளவீடுகளுக்கான தற்போதைய அளவுகள் தரப்பட்டுள்ளன. அவை...

1 விரல் = 3.48958 cm
6 விரல் = 1 சாண் = 21cm
2 சாண் = 1 முழம் = 42 cm
2 முழம் = 1 கோல் = 84 cm
4 கோல் = 1 தண்டம் = 3.35 m
500 தண்டம் = 1 கூப்பீடு= 1.675Km
4 கூப்பீடு = 1 காதம் = 6.7 Km
4 காதம் = 1 யோசனை = 26.82 Km

எனில் 100 யோசனை என்பது 2682 கி.மீ. தொலைவு ஆகும்.

அதாவது கிட்டத்தட்ட காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி (2750 கி.மீ, வான்வழி) இருக்கும் தூரம் ஆகும்...

சாமுத்திரிகா லட்சணப்படி பெண்களுக்கான மச்சம் பலன்கள்...


https://youtu.be/35h9FdF9xVY

Subscribe the channel for more news...

இந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை. சைவம் ஒன்றே உண்டு...


சைவம் 5000  ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்து மதம் வெறும் 200 ஆண்டுகள் தான்..

தமிழர் எவரும் இந்துக்கள் இல்லை.
தமிழர் அனைவரும் சைவ மதத்தினரே...

- மதுரை ஆதீனம்...

குறிப்பு : தமிழர்கள்.. இந்துவோ.. கிருஸ்துவோ.. இஸ்லாமியரோ அல்ல... அனைத்தும் தமிழர்களை ஏமாற்றி பிழைக்க திணிக்கப்பட்டதே...

உடல் எடை குறைய...


பப்பாளி பழத்தை வெறுக்காதீங்க.. இதயத்திற்கு நல்லது...


நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. கொலம்பஸ் இதனை பழங்களின் ஏஞ்சல் என்று சொல்கிறார். ஏனெனில் இந்த பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால், அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.

மேலும் இந்த பழம் நன்கு சுவையோடு இருப்பதோடு, அதிகமான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

உடலில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்று நிறைய பேர் அதற்கான மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்.

ஆனால் அவ்வாறு மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இந்த பழத்தை தினமும் சிறிது சாப்பிட்டாலே போதுமானது.

சரி, இப்போது பப்பாளி பழத்தினை சாப்பிட்டால் என்னென்ன நன்மை உடலுக்கு கிடைக்கின்றது என்று பார்ப்போமா...

பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன. மேலம் கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகமாக இருந்தால், அவை இரத்த குழாய்களில் தங்கி, சரியான இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. இதனால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இந்த நார்ச்சத்துக்களும் இரத்ததில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துகிறது.

இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள், செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாகும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. அதிலும் பப்பாளியை சாப்பிட்டால், மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும்.

பாப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கலும் குணமாகிறது.

பப்பாளியில் உடலில் ஏற்படும் அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால், பப்பாளியை சாப்பிடுகின்றனர்.

மேலும் இந்த அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் பப்பாளியில் இருப்பதால், மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் நல்லது.

பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு, புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

மேலும் பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.

அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இந்த பழம் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது.

ஆகவே பப்பாளிப் பழத்தை தினமும் ஒரு துண்டாவது சாப்பிடுங்க...

Save சின்னத்தம்பி யானை...


ஒரு அமைப்பு நினைத்தால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியும் ஆனால் எந்த ஒரு அமைப்பும் இந்த ஒற்றை யானையை காப்பாற்றி அதன் குடும்பத்துடன் இனைய வைக்க முயற்சி செய்யாதது ஏன்?

எங்கள் முன்னோர்கள் தான் எங்கள் தெய்வங்கள், அதில் என் தாத்தா, பாட்டன், முப்பாட்டன் என அனைவரும் அடங்குவர், அவர்களுக்கு பூணுலை அணிவிக்க நீங்கள் யார்..?


இனி ஒவ்வொரு பூணலும் அவிழ்க்கப்படும்.. நாங்கள் தான் கடவுளின் வழிவந்தவர்கள் என கூறும் உங்களின் அதிகாரமும், பொய் முகமூடியும் அனைத்தும் அழிக்கப்படும்...

ஆசியாவிலேயே மிக பலமான கோட்டை....


தமிழ் நாட்டில், தமிழனின் பெருமைக்கு சான்றாக இருக்கும் ஆசியாவிலேயே மிக பலமான கோட்டை என்று புகழப்படும் செஞ்சிக்கோட்டையின் வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்?

எத்தனையோ நூறு போர்களை சந்தித்து இன்றும் கம்பீரமாக இருக்கும் தமிழ் வீரத்தின் அடையாளம் இது. தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாசி(ஜி), "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது.

பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுசா(ஷா)பாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர்வாங்கியது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று. செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர்.

அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விச(ஜ)யநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.

இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

செஞ்சிக் கோட்டை அமைப்புசெஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மகா(ஹா)ல், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது.

இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருசு(ஷ்)ணகிரி, சக்கிலிதுர்க், ராச(ஜ)கிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது.

செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராசா(ஜா) தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு. மராத்தியர்கள் சிவாசி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராச்சியத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாசி மறைந்து விட அவரது மகன் ராசா(ஜா)ராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார்.

அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார். முகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப்.

இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய சா(ஷா)ஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு. சாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராசா(ஜா)தேசிங்கும் சென்றான்.

தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராச(ஜ)புத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார்.

தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை). செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதசுவாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராசாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.

தேசிங்கு ராசன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம். செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராசன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த சிறீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம்.

தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.

போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராசனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது...

தமிழர் திருமணத்தில் பிராமணர்கள் சொல்லும் மந்திரத்தின் உண்மையான அர்த்தம் இது தான்...


https://youtu.be/jmghuuV3q6k

Subscribe the channel for more news...

தமிழ் ராக்கர்சில் எச்.டி தரத்தில் வெளியானது வந்தா ராஜாவாதான் வருவேன்.. முந்தைய படங்களை விட சூப்பர் தரம்...


சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம். ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், கேதரின் தெரசா, மேகா ஆகாஷ் மற்றும் மகத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காமெடிக்காக,"யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர்" உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் ரிலீசாகியுள்ள இந்த படத்திற்கு சிம்பு கண்ணீர்விட்டு அண்டா பால் கேட்டதால், சிம்பு ரசிகர்கள் அவரது கட் அவுட்டிற்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றி  பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள சிம்பு ரசிகர்கள் பார்த்து வரும் வேளையில், படக்குழுவினர் மற்றும் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு இப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் லீக் செய்தது.

 அதுவும் HD தரத்தில் முந்தைய படங்களை மிஞ்சும் அளவிற்கு பக்கா குவாலிட்டியில் ரிலீஸ் செய்திருப்பதால் படக்குழுவினர் உட்பட சிம்பு ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்...

எண்ணெய் பாக்கெட்டின் பின்புறம் உள்ள " ingredients " பாருங்கள்.. பாமாயில் - 80%.. சூரியகாந்தி எண்ணெய் - 20%...


ஆனால் முன்புறம் கவரில் இது சூரியகாந்தி எண்ணெய் என்று உள்ளது...

அதே போல் External use only (வெளி உபயோகத்திற்கு மட்டும்) என்று உள்ளது.

அப்படி என்றால் இது சமையல் எண்ணெய் இல்லை என்று தானே அர்த்தம்.

ஆனால் இதை சமையல் எண்ணெய் என்று விற்பனை செய்வதுதான் பெரிய கொடுமை.

பாமாயில் எனும் பெயரில் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலிய கழிவுகளும் எண்ணெயில் கலக்க இறக்குமதி செய்யப்படுவதையும் கவனத்தில் கொள்ளவும்.

மக்களும் பார்க்காமல் வாங்குறார்கள்.

அரசும் கேட்பாரற்று கிடக்கிறது.

என் மக்கள்.. கடல் மலை மேகம் தான் எங்கள் கூட்டம்...

தமிழ்நாடு அரசே, ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணை போகாதே...


கதிராமங்கலத்தில், துர்க்கை அம்மன் கோயில் அருகே உள்ள எண்ணெய்க் குழாயில் “பராமரிப்புப் பணி” பார்க்க வருவதாகச் சொல்லிக் கொண்டு, நேற்று (01.02.2019)இந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகத்தின் (ஓ.என்.ஜி.சி.) ஊர்திகளும், ஊழியர்களும் காவல்துறையினர் புடைசூழ ஊருக்குள் வந்தபோது, மக்களுக்கு பழையபடி பீதி ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளாக ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றக் கோரி ஊர் மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள். காவல்துறையின் அடக்குமுறைகளுக்கும், சிறை அடைப்புகளுக்கும் அடிக்கடி உள்ளாகி அச்சத்தில் உள்ளார்கள்.

கதிராமங்கலத்தில் எண்ணெய் – எரிவளிக் குழாய்கள் புதைக்கப்பட்டு, ஓ.என்.ஜி.சி. பயன்படுத்திய வேதிப்பொருட்களால் நிலத்தடி நீர் மாசுபட்டு, குடிநீருக்கும், பாசனத்திற்கும் தகுதியில்லாததாக மாறியிருக்கிறது. குழாய்கள் அவ்வப்போது வெடித்து தீப்பிடித்தும், வெள்ளம்போல் எண்ணெய்  வழிந்தோடியும் ஏற்கெனவே பாதிப்புகள் உண்டாகியிருக்கின்றன. இந்நிலையில், மீத்தேன் – நிலக்கரி போன்றவற்றை எடுக்க புதிய குழாய்கள் இறக்க ஓ.என்.ஜி.சி. பல இடங்களில் முயன்று வருகிறது. இதற்கு “ஐட்ரோகார்பன்” என்று மாறுவேடப் பெயர் சூட்டியிருக்கிறது.

பலவகையிலும் பாதிக்கப்பட்டுள்ள கதிராமங்கலம் மக்கள், ஊரைவிட்டு ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டுமென்றும், நிலமும் நிலத்தடி நீரும் நஞ்சாவதால் எண்ணெய் – எரிவளி எடுக்கக் கூடாதென்றும, சற்றொப்ப இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். கடந்த 2018 ஏப்ரல் மாதம், இராணுவத்தினரை அழைத்து வந்து அவர்களின் பயிற்சியின் ஒரு பகுதியாக கதிராமங்கலத்தை சுற்றிக் காட்டிப் பயிற்சி கொடுத்தது மக்களிடம் மேலும் பீதியை அதிகப்படுத்தியது. 

இந்நிலையில், நேற்று (01.02.2019) முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் வருவாய்த் துறையினரின் தகவல் ஏதுமில்லாமல், ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் காவல்துறையினரை ஊருக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டு, ஊர்திகளில் ஊழியர்களை அனுப்பியது மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியது.

அச்சமடைந்த மக்கள் ஒன்றுகூடி, உண்மை விவரங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து விவரம் அறிந்து கொள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்களை அழைத்துள்ளார்கள். இந்நிலையில் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி காவல்துறையினர் பேராசிரியர் த. செயராமன் அவர்களையும், உள்ளூர் பிரமுகர் திரு. ராஜூ அவர்களையும் கைது செய்து உண்மைக்குப் புறம்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இவர்கள் இப்பொழுது திருச்சி நடுவண் சிறையில் உள்ளார்கள்.

பேராசிரியர் செயராமன் துணைவியார் திருவாட்டி சித்ரா, கதிராமங்கலம் போராட்டக் குழுத் தலைவியர் கலையரசி, செயந்தி ஆகிய மூன்று பேரையும் வழக்கில் சேர்த்துள்ளார்கள். இந்த ஐந்து பேரும் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக இ.த.ச. 506(2) பிரிவின்கீழ் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். பிணை மறுப்புப் பிரிவுகளைப் போட்டி ருக்கிறார்கள். காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டனத்திற்குரியது! ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்கு தமிழ்நாடு காவல்துறை அடியாள் போல் செயல்படக்கூடாது!

தமிழ்நாடு முதல்வர், இச்சிக்கலில் தலையிட்டு பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோர் மீது போட்டுள்ள பொய் வழக்கை உடனடியாகக் கைவிடச் செய்ய வேண்டுமென்றும், சிறையில் உள்ளோரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றி “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” காவிரிப்படுகையை அறிவிக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்...

Oven chicken / ஒவன் சிக்கன் செய்வது எப்படி.?


https://youtu.be/OH0P3ycPmqg

Subscribe the channel for more recipes...

அலையின் தொடர்பு...


தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள். வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அது போலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்து விட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும் பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த  வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன...

திருட்டு திராவிடத்தின் இருட்டு வேலைகள்...


மதுரை அருகே தந்தையை மிதித்து கொன்ற மகன்... தீவிரமாக தேடும் காவல்துறை...


உசிலம்பட்டி அருகே குடும்பத் தகராறில் தந்தையை மிதித்து கொன்று தப்பியோடிய மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
   
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி- மலர்கொடி தம்பதியினர். கூலி தொழிலாளியான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரு மகன்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இளைய மகன் தமிழ்பாண்டி, வீடு மற்றும் தோட்டத்தில் தனது சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த தமிழ்பாண்டி தந்தை கருத்தப்பாண்டியிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார். அப்போது தந்தையை கீழே தள்ளி நெஞ்சில் ஏறி மிதித்ததில் கருத்தப்பாண்டிக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். பின்னர் கருத்தப்பாண்டியை உறவினர்கள் எழுமலை ஆரம்ப சுகாதரா நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட கருத்தப்பாண்டியை மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கருத்தப்பாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனவும் நெஞ்சில் மிதித்ததில் எலும்புகள் உடைந்து நுரையீரலில் குத்தி இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் உடற்கூறு பரிசோதனைக்காக கருத்தப்பாண்டியின் உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஏ.இராமநாதபுரம் போலீசார் தப்பி ஓடிய மகன் தமிழ்பாண்டியை தேடி வருகின்றனர். மேலும் தந்தையையே மகன் மிதித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

அலைக்கழிப்பு ஒன்றே தேடலின் ஆரம்பம்... நிராகரிப்பின் வலியே விரக்த்தியின் வார்த்தைகள்...


கத்தாழையை பத்தி தெரிஞ்ச்சிக்கலாமா?


இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம்.

குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு..

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்...

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.

தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது...

பித்தவெடிப்பு மறைய...


நாம் செலுத்திய வாக்குகளின் பிரதிபலிப்பு தான் அவர்கள் நமக்கு செய்யும் இந்த அற்புதமான திட்டங்கள்..


நமது தமிழ் தேசிய அரசியலை விதைக்காத வரை நமக்கான அனைத்து திட்டங்களும் வெற்றிடமாக தான் இருக்கும்..

இப்போது சில பக்தாஸ், திராவிடன்ஸ், தே(வே)சப்பற்று கொண்டவர்கள் தானாக முன்வந்து இந்தப்பதிவை எதிர்ப்பார்கள்..

அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

இரண்டே நாளில் வெள்ளையாக மாறுவது எப்படி / Get Fair Skin In 2 Days....


https://youtu.be/VzNMHeeQin8

Subscribe the channel for more tips...

சுதந்திரம்...


நீ எதிலிருந்து விடுபட நினைக்கிறாயோ அவற்றுடனெல்லாம் நீ மேலும் பந்தப்படுவாய்.

ஏனெனில் சுதந்திரம் என்பது எதற்கும் எதிரானதல்ல.

சுதந்திரம் என்பது எதனிடமிருந்தோ அல்லது எதற்காகவோஅல்ல.

சுதந்திரம் என்பது எதனுடனும் உடன்படுவதுமல்ல.

சுதந்திரம் என்பது கடந்து செல்வது. உடன்பாடு, எதிர்மமறை இரண்டையும் கடந்து செல்வது. சுதந்திரம் என்பது இருமைத் தன்மையிலிருந்து விடுதலை.

அங்கு உடன்பாடு எதிர்மறை எங்கிருக்கிறது.....?

எதனுடன் சம்பந்தப்படுவது....?

எதை எதிர்ப்பது........?

சம்பந்தம் புத்திசாலித் தனமானதல்ல. எதிர்ப்பும் பழையதோடு சம்பந்தப்பட்டது தான்.

ஆகவே, புரிந்துகொள்-சண்டையிடாதே.

சண்டையிடுவதன் மூலம் யாராவது ஏதாவது அடைந்திருக்கிறார்களா......?

வலியைத் தவிர-தோல்வியைத் தவிர.

ஆகவே, தப்பி ஓடாதே, பதிலாக விழித்துக்கொள்.

தப்பி ஓடுவதனால் ஒருவன் தப்பி ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

அதற்கு முடிவு இல்லை.

அறிதலே சுதந்திரம். பயமல்ல, கோபமல்ல, பகையல்ல, எதிர்ப்பல்ல.

அறிதல் மட்டுமே சுதந்திரம்...

நினைவில் இருக்கட்டும்... thermodynamics இன் 1st law இது தான்...


கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி...


கோயில் நகரமான பழனிக்கு தென்மேற்கே உள்ள பொருந்தல் என்ற கிராமத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வின்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சவஅடக்கம் செய்யும் தாழிகள்  கண்டுடெடுக்கப் பட்டுள்ளன.

இந்த அகழ்வாயினால், தமிழ் பிராமி எழுத்தின் காலம் எதுவாக இருக்கலாம்  என்பது பற்றிய ஆர்வம் தரும் சில  உண்மைகள் வெளி வந்துள்ளன. புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் முனைவர் கே.ராஜன் அவர்கள் மேற்பார்வையில் இந்த அகழாய்வு 2009, 2010 ஆம் ஆண்டு களில் மேற்கொள்ளப்பட்டது.

கண் டெடுக்கப்பட்டுள்ள இந்த சமஅடக்கம் செய்யப்பட்ட  தாழிகள் பல அரிய பொருள்களைத் தந்துள்ளன. இரண்டு கிலோ நெல் உள்ளே வைக்கப்பட்டிருந்த நான்கு கால் கொண்ட ஜாடி ஒன்றும், வா-அய்-ரா என்ற தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு மோதிர தாங்கிகள் ஆகியவை இதில் அடக்கம். அமெரிக்காவின் பிடா பகுத் தாய்வு நிறுவனத்தால் இந்த நெல் கி.மு.490 காலத்தைச் சேர்ந்தது என அக்சலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி   முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த சவஅடக்கம் செய்யப்பட்ட தாழியில் இருந்த மொத்த பொருள்களும் இந்தத் தாழி புதைக்கப்பட்டபோது ஒரே முறை யில் வைத்ததாகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து அந்த நெல்லிக் காலமும், தாழியில் காணப்பட்ட தமிழ் பிராமி எழுத் துகளின் காலமும் ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்பதை ஊகித்தறிய முடிகிறது. அந்தத் தாழியில் வைக்கப்பட்டிருந்த எலும்புகளின் சொந்தக்காரரின் பெயராக வா-அய்-ரா என்ற அந்த தமிழ் பிராமி எழுத்துகள் இருக்கக்கூடும்.

திருநெல்வேலி நகரத்துக்குக் கிழக்கே 24 கி.மீ. தொலைவில் உள்ள ஆதிச்ச நல்லூரில்  கண்டு பிடிக்கப்பட்ட பெருங் கற்காலத்தைச் சேர்ந்த  இடுகாட்டில் நெல்லும் உமியும் கண்டெடுக்கப்பட்டன.  அங்கு அகழாய்வை மேற்கொள்ள  100 ஆண்டுகள் கழித்து 2004 பிப்ரவரியில் இந்திய அகழ்வாய்வுத் துறை பரிந் துரைத்தது. அதன்பின் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வில் 157 தாழிகள் கண்டெ டுக்கப்பட்டன. எலும்புகள் வைக்கப்பட் டிருந்த பெரிய தாழிகளின் உள்ளே வைக்கப்பட்ட சிறிய மண்பானைகளில் நெல்லும் உமியும் வைக்கப்பட்டிருந்தன.

ஒரு உயரமான கம்பீரமான பெண்நின்று கொண்டிருப்பது போன்றதும், அவர் அருகில் வளர்ந்து நிற்கும் நெற்கற்றை வைக்கப்பட்டிருந்தது போன்றதுமான ஓவியம் வரையப்பட்ட மண்பாண்டத்தின் உடைந்த துண்டுகள் ஒரு பெரிய தாழியில் உள்ளே வைக்கப் பட்டிருந்தன. மற்றொரு தாழியினுள் எழுதப்பட்ட ஒரு துண்டு காணப்பட்டது. அது தமிழ் பிராமி எழுத்தின் ஒரு கூறாக இருக்கலாம் என்று பழங்கால எழுத்தாய்வாளர் ஒருவர் கூறினார். கா-ரி-அய-ர-வா(நா)-டா என்ற ஏழு எழுத்துக்கள் அதில் காணப்பட்டன. இந்த வழக்கிலும், இந்த எழுத்துகள் அந்த தாழியில் வைக்கப்பட்டிருந்த எலும்புகளின் உரிமையாளரின் பெயராக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

பொருந்தை அகழாய்வில், தாழியில் வைக்கப்பட்டு இருந்த நெல்லின் காலத்துடன் தொடர்புபடுத்தி அதில் காணப்பட்ட எழுத்துக்களின் காலத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டபோது,  அந்த எழுத்து கி.மு.490 காலத்தைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய் வில், ‘Preliminary thermo-luminescence  dating’ முறையில் தாழிகளில் காணப்பட்ட பானைகள் கி.மு. 500 காலத்தைச் சேர்ந்தது என்ற முடிவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுக் குழு வந்தது. (தி இந்து 17.2.2005) அந்தத் தாழி யில் இருந்த பொருள்களின் காலத்தை கார்பன் 14 முறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாலும், அது போன்றதொரு சோதனையின் முடிவு வெளியிடப்படவில்லை.  தமிழ் பிராமி எழுத்துகளில் இருந்த பதிவை களத்தில் உள்ள மற்ற அதிகாரம் பெற்ற கல்வியாளர்கள் பரிசீலனை செய்யாமல் விட்டிருக்கலாம் என்று கருதலாம்.

சிறிய இடுகாட்டுப் பானைகளில் காணப்பட்ட நெல் அங்கு காணப்பட்ட எழுத்துகளின் காலத்துடன் ஒரு தொடர்புடையது. எழுத்துகளின் காலம் பற்றிய ஒரு முடிவை மேற்கொள்வதற்காக நெல்லின் காலம் பற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டதற்கான சான்று ஏதுமில்லை. பொருந்தல் அகழாய் வின்போது எட்டப்பட்ட இறுதியான முடிவும், ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்பு களும்  கீழ்க்குறிப்பிடப்பட்டதை மெய்ப் பிக்கின்றன.

1. அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

2. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.

கே. ரவீந்திரன்
உதவி பொதுக் கணக்காய்வர் (ஓய்வு)
திருவனந்தபுரம்...

இராணி தேனீ...


வாழ்க்கை வாழ்வதற்கே...


உங்களின் வாழ்கையை யாரும் வாழ முடியாது...

அதேபோல உங்களை சிந்தனையும் யாரும் திருட முடியாது நீங்கள் நீங்களாக இருக்கும் வரை..

மனிதன் என்ற அடையாளத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்..

நீங்களும் இந்த இயற்கையின் மகன் மகள்களே..

யாரும் ஏற்ற தாழ்வு என்ற நிலை யாரும் இல்லை..

உங்களை வைத்து எவன் காய் நகர்த்தி விளையாடு கிரானோ அவனுக்கும் சேர்த்தே..

இயற்கையை முழுவதும் உங்களுக்கு உள் வர அனுமதி தாருங்கள்..

இந்த வாழ்க்கையை நீங்கள் ஓர் பறவையாக வாழுங்கள் எந்த ஒரு அடையாளமும் இன்றி..

வாழ்க்கை வாழ்வதற்கே
மரணமே வந்தாலும் மகிழ்ந்து இருங்கள் ஈசல் போல..

உங்களை அரவனைக்க இயற்கை மட்டுமே உள்ளது வேறு எந்த கடவுளும் கிடையாது..

எந்த கருத்தியல்களும் கிடையாது.

எவன் வந்தாலும் நீங்கள் மனிதனாக சிந்திக்க வேண்டாம் ஓர் நட்சத்திரமாக அல்லது ஓர் விலங்காக சிந்தியுங்கள்
வருபவன் வந்த வழி செல்வார்கள்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


உலகெங்கிலும் உள்ள பழங்கால கலாச்சாரங்கள் மத்தியில் பல ஒற்றுமைகள் உள்ளது என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் கலாச்சாரங்களை எவ்வாறு பண்டைய காலங்களில் ஒன்றிணைய முடியும்? என்பதை பிரதான அறிஞர்கள் கருதுகின்றனர். இது போன்ற பல கூற்றுக்கள் இருந்தபோதிலும், பல தொல்லியல் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் சிதறிய பண்டைய நினைவுச் சின்னங்களில் காணப்படுகின்றனர்.

பண்டைய மெக்சிகோவின் லா வெந்தா என்பது பழங்கால ஓல்மேக் நாகரிகம் சார்ந்த ஒரு தொல்பொருள் தளமாகும். ஆர்மேஸ்ஸில், அமெரிக்காவின் முதல் நாகரீக வளர்ச்சியில் ஒல்மேக்ஸ் ஒன்றாக இருந்தது.
லா வெந்தா'வில் உள்ள ஓல்மேக்ஸ்' சிலை அவர்கள் நாகரிகத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது.

மெக்சிக்கோவில் பறக்கும் பாம்பு என்பது குக்குல்கான் அல்லது குவெட்ஸால் கொல்ட் என்ற பழங்கால கலாச்சாரம் முழுவதும் அறியப்பட்டது. இந்த கடவுள் பரலோகத்திலிருந்து வந்து, பண்டைய கலாச்சாரங்களுக்கு பெரும் அறிவை வழங்கியவர் என்று சொல்லப்படுகிறது.

'லா வெந்தா' சிலை ஒருவிதமான 'வாகனம்' அல்லது 'நாற்காலியில்' உட்கார்ந்திருக்கும் ஒரு மனித உருவம், இயந்திர சாதனத்தை கையாளுவது போல் உள்ளது. முதலில், இது அசாதாரணமான அல்லது வித்தியாசமானதாக இருப்பினும், உலகம் முழுவதிலும் உள்ள தெய்வங்களின் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இந்த பிரதிநிதித்துவங்களை நீங்கள் காணலாம்.

நியூசிலாந்தின் வட தீவில் வாழ்ந்த தேய்கா மாவு என்ற மாவோரி மக்களின்  கடவுள் பூரங்காஹுவாவும் ஆவார்.
மாவோரி புராணத்தின் படி, கடவுள் புராங்கஹுவா அவரது புராணக் குடியான ஹவாக்கிக்கு நியூசிலாந்தில் இருந்து தனது மாயப் பறவையான 'வெள்ளி பறவை' மீது சவாரி செய்து பரலோகத்திலிருந்து பறந்து வந்து மாவோரி மக்களுக்கு அறிவை வழங்கியதாக கூறப்படுகிறது.

பண்டைய மேசோமிகிய நாட்டுப்புற புராணங்களில் கடவுள் பூரங்காஹுவிற்குக் கொண்டிருக்கும் மிருதுவான பாம்பின் சித்திரத்தை நாம் ஒப்பிட்டு பார்த்தால், நாம் ஒரு மர்மமான தொடர்பைக் காண்கிறோம்: இருவரும் ஒரே அடையாளமாக குறிப்பிடப்படுகின்றன. இந்த நாட்டுப்புற கதை வசனத்தில் அவர்..

"அறியப்படாத பூமி என் கால்களுக்கு கீழே இருக்கிறது. நான் வருகிறேன், ஒரு புதிய வானம் என்னைத் தொடுகிறது. அது எனக்கு அமைதியான இடம். இந்த கிரகங்களில் உள்ள ஆவிகள்! என் இதயத்திற்க்கு ஊட்டச்சத்தை அளிக்கிறார்கள். " என்று வருகிறது..

எகிப்தில் சித்தரிக்கப்பட்ட மற்றொரு ஒரு பண்டைய கடவுளும் பாம்புடன்;
அங்கு, இந்த எகிப்திய கடவுள் ஹபி என்று அழைக்கப்படுகிறார். அவரும் ஒரு மர்மமான பிரதிநிதித்துவங்களுடன் காணப்படுகிறார்.

"தெய்வங்களின் தந்தை" என்று குறிப்பிடப்பட்ட ஹேபி பண்டைய எகிப்திய மதத்தில் நைல் வருடாந்த வெள்ளப் பெருக்கின் கடவுள். இந்த பண்டைய எகிப்திய கடவுள் கருத்தரிமையை அடையாளப்படுத்தினார். இந்த பண்டைய எகிப்திய தேவன் வழக்கமாக நீல அல்லது பச்சை தோலை வெளிப்படுத்துவார், இது தண்ணீரில் பிரதிபலிக்கும்.

அவர் எப்படி சித்தரிக்கப்படுகிறார் என்பதை. மறுபடியும், லா வெந்தா' சிலை உள்ள மிருதுவான பாம்புக்கு ஒரு வித்தியாசமான ஒற்றுமையையும், பண்டைய மாவோரி நாட்டுப்புறத்தில் உள்ள கடவுள் பூரங்காஹுவாவுடனும் ஒற்றுமையுடன் காணலாம்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், எல்லா பண்டைய கலாச்சாரங்களும் எப்படியோ ஒரு தலைமையின் கீழ் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டிருந்தனர். என்று சொன்னால் எப்படி இருக்கும்..

உலகில் உள்ள பல பழமையான தளங்களில், அமைக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கான வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் உள்ள வினோதமான ஒற்றுமைகள் வெறும் தற்செயலானதா? அல்லது ஒரு சில புராதன வேற்றுக்கிரக பார்வையாளர்களே உலகெங்கிலும் உள்ள பண்டைய நாகரிகங்களை ஒரு குடையில் நிறுவி ஆதிக்கம் செலுத்தினார்களா...