08/01/2018

எகிப்த்தை ஆண்ட தமிழன்...


எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC). இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக் கூறிக் கொண்டார் .

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள். ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது. இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman)..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார் .

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

பாஜக சீதாராமன் கலாட்டா...


சீனா வை கண்டிக்க சொன்னால் டிவி யை கண்டிகிறாங்க...

வான்கோழி வளர்ப்பு முறைகள்...


ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சிகளுக்கு அடுத்தப்படியாக அசைவப் பிரியர்களின் உணவாக இருப்பது வான்கோழி ஆகும். இதன் சுவையும் அனைவருக்கும் பிடிக்கும். தற்போது கோழி வளர்ப்பவர்களின் அனைவரது கவனமும் வான்கோழி வளர்ப்பில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தற்போது வான்கோழி வளர்ப்பு முறையை பற்றி பார்போம்.

இடம் தேர்வு செய்யும் முறை :

வான்கோழி வளர்க்க அதிக இடவசதியோ, முதலீடோ தேவையில்லை. வான்கோழி வளர்க்க விரும்புபவர்கள் 200 முதல் 250 சதுர அடி இடத்தில் 100 வான்கோழி குஞ்சுகளை வளர்க்கலாம்.

வான்கோழி இனங்கள் :

அகன்ற மார்புடைய வெண்கல இனம், அகன்ற மார்புடைய வெள்ளை இனம்(கரி-விரட்), பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை இனம், நந்தனம் வான்கோழி ஆகிய வான்கோழி இனங்கள் ஆகும். இதில் நந்தனம் வான்கோழி இனமானது நமது பகுதிகளுக்கு வளர்க்க ஏற்றதாகும்.

வான்கோழி கொட்டகை அமைக்கும் முறை :

வான்கோழி வளர்ப்புக்கு புறக்கடையில் அதிக செலவு செய்து கொட்டகை அமைக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக பழைய டைமண்ட் லிங்க் வேலிகளை வாங்கி தடுப்பு அமைத்துக்கொள்ளலாம். வான்கோழி வளர்க்கும் போது கொட்டகைக்குள் மழை மற்றும் வெயில் பாதிக்காத அளவுக்கு மூங்கில், தென்னங்கீற்று ஆகியவற்றை கொண்டு கொட்டகை அமைக்க வேண்டும்.

கொட்டகையின் தரை பகுதியில் நான்கு அங்குல உயரத்துக்கு கடலைப்பொட்டு பரப்பிவிட வேண்டும். கடலைப்பொட்டுக்கு பதிலாக தேங்காய் நார்க்கழிவுகள், நெல் உமி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். அதன் பிறகு ஒன்றரை மாத அளவிலான கோழிக்குஞ்சுகளை வாங்கி விடலாம்.

கொட்டகையின் சுவர்ப்பகுதியில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை சுண்ணாம்புத் தூளை தூவி விட வேண்டும். அதே போல் 15 நாட்களுக்கு ஒரு முறை கடலைப்பொட்டை மாற்ற வேண்டும். பகல் வேலையில் கோழிகளை திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு செல்வதற்கு திறந்து விட வேண்டும்.

தீவனம் அளிக்கும் முறை :

வான்கோழி வளர்ப்புக்கு கடைகளில் விற்கும் தீவனங்களை வாங்கினால் கட்டுபடியாகாது. இதற்கு பதிலாக பச்சை புற்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். நம் வயல்களில் உள்ள புற்கள், கீரைகளையும் தீவனமாக கொடுக்கலாம்.

மேலும் 60 சதவீதம் புற்கள், 20 சதவீதம் தவிடு, 20 சதவீதம் முட்டைக்கோழி தீவனங்களை சரியான விகிதத்தில் கலந்து கொடுத்தால் தீவனச் செலவை அதிக அளவில் குறைக்க முடியும்.

நோய் மேலாண்மை :

வான்கோழிகளை அம்மை மற்றும் சளி போன்ற நோய்கள் தாக்கும். இதற்கு சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் தூள், கசகசா, கடுகு போன்றவற்றை தலா 2 தேக்கரண்டி, பூண்டு 5, வெங்காயம் 4 ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வாரம் ஒரு முறை தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் நோய்கள் தாக்காது.

அதன் பிறகு மாதம் ஒரு முறை 20 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து, வான்கோழியின் தலையை தவிர்த்து, உடல் முழுவதும் முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோழிகளுக்கு தோல் நோய் தாக்காது.

வான்கோழியின் மூலம் லாபம் :

வான்கோழிகளை குஞ்சுகளாக வாங்கி வளர்க்கும் போது அடுத்த ஆறு மாதத்தில் முட்டை வைக்க தொடங்கும். 100 கோழிகளுக்கு 20 சேவல்கள் வேண்டும். இதன் மூலம் தினமும் 25 முட்டைகள் வரை கிடைக்கும்.

வான்கோழிகள் 36 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் முட்டை வைக்கும். இதன் மூலம் தினமும் வருவாயாக 500 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஒரு வான்கோழியானது ஒன்றரை ஆண்டு வரை முட்டை இடும். வான்கோழிகளை தினமும் மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை செய்தால் அதிகளவில் லாபம் பெற முடியும்.

இது போன்ற விவசாயம் தகவல்களை பெற https://goo.gl/K4g5Dr என்ற லிங்கினை கிளிக் செய்து விவசாயம் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...

கல்வெட்டு உயிர் மெய் எழுத்துக்கள்...


இலுமினாட்டிகளை பற்றி நீ நம்பு, நம்பாமல் போ..


ஏதோ ஒரு ஆதிக்க சக்தி, நம்மளை துறத்தது அது மட்டும் உண்மை.
2002ல் வந்த சிம்பஸன் கார்ட்டூனில், டிரம்ப் அமெரிக்க அதிபாராவார் என்று காட்டுவார்கள்...


அது மட்டுமில்ல, அமெரிக்காவில் எந்தெந்த மகாணங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே காட்டியிருப்பார்கள்..

(சொல்லிட்டு செய்வது இலுமினாட்டிகளின் (ஆதிக்க சக்தி) ஸ்டைல்)..


அதே வழியில், ரசினியின் அரசியல் பிரவேசியத்தை பாபாவில் காட்டியிருப்பார்கள்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா கலாட்டா...


இலங்கை தமிழர்களின் நாடு...


இலங்கையின் ஆதிக்குடிகளான நாகரும் இயக்கரும் சிவ வழிபாட்டை கைக்கொண்ட தமிழர்களே என்பது தொல்பொருள் ஆய்வுகள் மூலம் வரலாற்று ஆசிரியர்களால் நிறுவப்பட்ட உண்மையாகும்...

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயும் அண்மையில் நடந்த நாவலர் மாநாட்டில் பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருந்தார்...

தமிழக ஊழல் அரசே... விவசாயிகளை ஏமாற்றி வயிற்றை வளர்க்காதே...


பிடில் / வயலின்...


இது மேல்நாட்டு இசைக்கருவி. இது தமிழ்நாட்டு மிடற்றிசைவாணருக்கு உதவி இசைக்கருவியாகக் கொண்டுவரப் பெற்று நீண்ட காலம் ஆகவில்லை. பாடுவதைப்போல் இசைக்கருவியில் வாசிக்கக் கூடும். எனினும் அது அத்துணை எளிதான காரியமன்று.

கேள்வியின் பயனாய் மிகவும் சாமான்னியமானவர் பாடிவரும் தெருப்பாட்டுகளில் அழகு விளங்குவது போல இக்கருவியில் இசைக்க இயலாது. இது மேல்நாட்டு இசைக்கருவியாயினும் இசை இயக்கம் பெறுவதில் மிகக்கடினமாயினும் ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாய் அனுசரிக்க கூடுமென்பதை உறுதியாகக் கூறலாம்.

இவ்வாறு செய்வதற்கு முதலில் இக்கருவியைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பிறகு தந்திகள் அதற்குத்தக எடுத்தல் வேண்டும். அதன்பிறகு பயிற்சிமுறைகள் எல்லாம் அனுகூலமாய் இருத்தலும், இதை இசைப்போர் பல மாதிரியான மிடற்றிசையின் ஏற்றத்தாழ்வுகளையும், பற்பல இசையமைப்புகளையும் நன்றாய் அறிந்திருக்க வேண்டும்.

அப்பொழுது தான் மிடற்றிசையிலிருந்து எழும் பாட்டை அனுசரித்து வாசிக்கக்கூடும். மிடற்றிசையைப் பிடில் கருவியில் அனுசரிக்கும் அறிவை அடைந்த ஒருவன், இலக்கண சேர்க்கைப் பெற்ற   மிடற்றிசை இவ்வாறானது என்பதைப் பிறருக்கு விளக்கிவரவும் எடுத்துக்கூறவும் முடியும். அக்காலத்தில் பாடுவோருக்கு யாழ்க்கருவியும், சாரந்தா என்ற கருவியுமே துணைக்கருவியாக இருந்தன.

பிடில் கருவியின் சுருதியின் தந்திகளைச் சுருதி செய்வதில் இரண்டு வகைகளுள்ளன. ஒன்று இந்திய முறையார் செய்வது, மற்றொன்று ஆங்கில முறையாற் செய்வது.

இந்திய முறையாற் சுருதி செய்வதில் இடமிருந்து வலமாக ‘4, 3, 2, 1’ ஆகிய தந்திகளின் முறையே மெலியுதானத்துக் குரல், அதாவது மந்தரஸ்தாயி ஸ, மெலியுத்தானத்து இளி, அதாவது மந்திரஸ்தாயி ப, சமன்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ஸ, சமந்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ப என்ற முறையில் சேர்க்கப் பெற்ற ‘ஸ-ப, ஸ-ப’ என்ற ஒலிக்கும், அதாவது மூன்றாவது தந்தியானது நாலாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும், இரண்டாவது தந்தி மூன்றாவது தந்தியின் நான்காவது சுரத்தை ஒலிப்பதாயும், முதலாவது தந்தியானது இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும் இருக்கும்.

ஆங்கில முறையாற் சுருதி கூட்டுவதில் நான்காவது தந்தியின் ஐந்தாவது சுரம் மூன்றாவது தந்தியிலும், மூன்றாவது தந்தியின்  ஐந்தாவது சுரம் இரண்டாவது தந்தியிலும், இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரம் முதல் தந்தியிலும் ஒலிப்பதாய் சுருதியில் சேர்த்துக் கொள்வர். நான்காவது தந்தி பெரும்பாலும் (G) ஜி சுரத்திலேயே அதாவது மெலிவுத்தானத்து ப- என்ற சுர ஒலியே வரப்படுவதாய் வைத்துக் கொள்ளப் பெறுவதால், ‘4-3-2-1’ என்ற தந்திகள் முறையே ‘ப-ரீ-த-கா’ தந்திகள் என்ற பெயர்களில் வழங்கி வருகின்றன...

மராட்டிய ரஜினியின் ஆன்மீக அரசியல்...


உலகத்திலேயே இவன் ஒருத்தன் மட்டும் தான் நல்லவனாம்....

நல்லவன் மட்டும் ஆண்டாள் போதும் என்று சொல்லுற ரசிக குஞ்சுகளை எதைக்கொண்டு அடிப்பது...

தமிழினமே விழித்துக்கொள்...


இங்கு கொட்டமடிக்கும் வந்தேறிய கூட்டத்திற்கு, யார் தமிழர் என்று தெரியவில்லையாம்...

தமிழா நம் இருப்பை காட்ட புறப்படு...

மறதி தமிழனின் மிகப் பெரிய வியாதி...


உலக அரசியலை புரிந்துக் கொள் தமிழா...


2018 ஆம் ஆண்டை ஊழல் ஒழிப்பு ஆண்டு - பண்ருட்டியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் இராமதாஸ் பேச்சு...


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள  தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 2018 ஆம் ஆண்டை ஊழல் ஒழிப்பு ஆண்டாக உறுதி ஏற்கும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில்,பாமக  நிறுவனர் ராமதாஸ் , மாநில தலைவர் ஜி கே .மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இப்பொதுக்குழு கூட்டத்தில்,மருத்துவர் இராமதாஸ் பேசுகையில்.... கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றிவர்... 50 ஆண்டுகால திராவிட கட்சி ஆட்சியில் ஊழல், லஞ்சம் இரண்டு மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றும், சாராயத்தை ஒழிக்க 35 வருடமாக போராடி வருவதாகவும், ஊழலை ஒழிக்க 10 ஆண்டு காலமாக போராடிக் கொண்டு வருவதாகவும், ஊழல் ஒழிப்பு ஆண்டாக 2018 ஐ அறிவித்திருப்பதாகவும்..

இன்று கடலூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தை பார்த்தவுடன் அதில் பங்கேற்ற இளைஞ்சர்கள் கூட்டத்தை பார்த்து இளைஞர் சக்திக்கு முன்னாள் எதுவும் இல்லை என்றும் எனவே இந்த ஆண்டை இளைஞ்சர்கள் எழுச்சி நாளாகவும் அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.

திராவிட கழகங்கள் இலவசங்களை கொடுத்து ஏமாற்றி வருகிறார்கள் என்றும், மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம்..

விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் இல்லை என்றும், இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், பாமக ஆட்சியில் அமருவதற்கு பாமகவினர்  அயராது பாடுபட வேண்டும் என்று  பேசினார்.

இதில் அதிமுக , திமுக-வை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாமகவில் இணைந்தனர் இதில் கடலூர்  மேற்கு, தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பாமகவினர்  கலந்து கொண்டனர்...

பிரபஞ்ச இரகசியம்...


புத்துணர்ச்சி பெற.. கவலைகள் நீங்க...

1.உங்களுக்கு நீங்களே இவ்வாறு கூறிக் கொள்ளுங்கள்..

கவலை என்பது வெறும் மனப்பழக்கம் தான்.

பிரபஞ்சத்தின் உதவியுடன் எந்தப் பழக்கத்தையும் என்னால் மாற்ற முடியும்.

2.கவலையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கவலையாளர் ஆகி விடுகிறீர்கள்..

கவலைக்கு நேரெதிரான, வலிமையான, நம்பிக்கை என்னும் பழக்கத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம் உங்களால் கவலையில் இருந்து விடுபட முடியும்.

3.உங்களால் திரட்டக் கூடிய விசுவாசத்தைக் கடைப்பிடிக்கத் துவங்குங்கள்..

விசுவாசம் என்னும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

தினமும் படுக்கையைவிட்டு எழுவதற்கு முன் முதல் வேலையாக.. நான் நம்புகிறேன் என்று உரக்க மூன்று முறை கூறுங்கள்.

4. இந்தச் சூத்திரத்தைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்..

நான் இன்றைய தினத்தையும், என் வாழ்க்கையையும், என் அன்பிற்கு உரியவர்களையும், என் வேலையையும் பிரபஞ்சத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்.

பிரபஞ்சத்தின் கைகளில் எந்தத் தீங்கும் இல்லை.

நல்லது மட்டுமே உள்ளது.

எது நிகழ்ந்தாலும் சரி,

அது இயற்கையின் விருப்பம்.

அது நல்லதாகவே இருக்கும்.

5.நேர் மறையாகப் பேசுவதற்குப் பயிற்சி செய்யுங்கள்...

இன்று மிக மோசமான நாளாக இருக்கப் போகிறது என்று கூறாதீர்கள்.

மாறாக இன்று ஓர் அற்புதமான நாளாக அமையப் போகிறது என்று சுய பிரகடனம் செய்யுங்கள்.

என்னால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது என்று கூறாதீர்கள்.

மாறாக இயற்கை சக்தியின் உதவியுடன் நான் அதைச் செய்வேன் என்று சுயபிரகடனம் செய்யுங்கள்.

6.கவலை பற்றிய உரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ளாதீர்கள்...

அனைத்து உரையாடல்களிலும் நம்பிக்கையைப் புகுத்துங்கள்.

மோசமான விஷயங்களுக்கு மாறாக உற்சாகமூட்டும் விஷயங்களைப் பற்றி பேசுவதன் மூலம் மனச்சோர்வூட்டும் சூழலை விரட்டி விட்டு, அனைவரும் நம்பிக்கை யையும் மகிழ்ச்சியையும் உணர உங்களால் உதவ முடியும்.

7. கவலையாளராக இருப்பதற்கு ஒரு காரணம்.. மனம் பய எண்ணங்களாலும், தோல்வி எண்ணங் களாலும், சோர்வூட்டும் எண்ணங்களாலும் நிரம்பி வழிவது தான்...

அதை முறிப்பதற்கு, நம்பிக்கை, மகிழ்ச்சி, புகழ், பொலிவு ஆகியவற்றைப் பற்றிய பகுதிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்து மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

அவற்றை மீண்டும் மீண்டும் கூறி வாருங்கள். அப்போது, நீங்கள் உங்கள் ஆழ் மனத்திற்குக் கொடுத்துள்ள தன்னம்பிக்கையை உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.

8.நம்பிக்கையான மக்களிடம் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

நேர்மறையான, விசுவாசத்தை உருவாக்கும் எண்ணங்களைச் சிந்திக்கும் படைப்புச் சூழல் உருவாவதற்குப் பங்களிக்கும் நண்பர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்

இது நம்பிக்கை மனப்போக்கை மீண்டும் தூண்டும்.

9. தங்கள் சொந்தக் கவலைப் பழக்கத்தை விட்டொழிக்க...

உங்களால் எத்தனை பேருக்கு உதவ முடியும் என்று பாருங்கள்.

மற்றவர்கள் தங்கள் கவலைகளில் இருந்து மீள்வதற்கு நீங்கள் அதிக  சக்தியைப் பெறுவீர்கள்.

10.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் கடவுளின் கூட்டாளியாகவும், நண்பனாகவும் வாழ்வதாகக் கற்பனை செய்யுங்கள்...

கடவுள் உண்மையிலேயே உங்களோடு நடந்து வந்தால், நீங்கள் கவலைப்படுவீர்களா? பயப்படுவீர்களா?

கடவுள் என்னோடு இருக்கிறார் என்று கூறுங்கள்.

நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன் என்று சத்தமாக சுயபிரகடனம் செய்யுங்கள்.

பிறகு அதை மாற்றி நீ இப்போது என்னோடு இருக்கிறாய் என்று கூறுங்கள். தினமும் அந்த சுய பிரகடனத்தை  மூன்று முறை கூறுங்கள்.

உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்...

நெஞ்சு வலி குணமாக...


உணவே மருந்து - எளிய இயற்கை மருத்துவம்...


1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3) பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

4) சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

5) வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

6) பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

7) சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

8) பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

9) தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்...

அரசியல்வாதிகளே பதில் சொல்லுங்கள்...


காவு வாங்க காத்திருக்கும் 1187 குழிகள்...


திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் ரோடு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழுது அடைந்து வாகன ஓட்டிகளுக்கும் ,பயணிகளுக்கும் மிக ஆபத்தான நிலையில் உள்ளது இது.

திருநெல்வேலி மேம்பாலத்தில் இருந்து தென்காசி பழைய பேருந்து நிலையம் முடிய மொத்த குழிகள் 1187.

இதில் லாரி மற்றும் பேருந்தை கவிழ்த்து விபத்தை உட்படுத்தும் குழிகள் மொத்தம் 142 உள்ளது.

நான்கு சக்கர வாகனங்கள் கார் மினிலாரிகளை கவிழ்த்து விபத்தை உட்படுத்தும் குழிகள் மொத்தம் 640.

இருசக்கர வாகனங்களை கவிழ்த்தி விபத்தினை ஏட்படுத்தும் குழிகள் மொத்தம் 405 உள்ளது.

வழக்கம் போல் மண்ணை போட்டும், தெர்மாகோல் போட்டும் மூடாமல் பெரிய விபத்தை உட்படுத்தும் முன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வழியில் ஐயப்ப பக்தரின் வாகனங்கள் ஒருநாளைக்கு 500 மேல் திருநெல்வேலில் இருந்து தென்காசி செல்கின்றன.

இருநாட்களுக்கு முன்னதாகக் கூட லாரியுடம் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

ஓர் அரசு பேருந்து ஓட்டுநரின் கடிதம்...



அறிவுகெட்ட அரசின் அமைச்சர்களை சென்றடையுமா ?

படித்து பகிர்வோம்...

ஐயா, திரு. விஜயபாஸ்கர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே..

நான் கடந்த 35வருடங்களாக போக்குவரத்து துறையில் டிரைவராக பணியாற்றி, இன்று ஓய்வு பெற்றுவிட்டேன்.
பல நாட்கள் அந்த இன்ஜின் வேலை செய்தது இன்று உடலளவில் தளர்ந்து விட்டேன்.

ஒருநாள் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. என்னை நம்பி இத்தனை மக்கள் அமர்ந்து இருக்கின்றனரே என்று மனதில் வைத்து கொண்டு, அந்த வலியை தாங்கிக் கொண்டு வண்டியை கட்டுபாட்டில் வைத்து ஓரம் கட்டினேன்.
உடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியோடு தான் என் பணியை செய்தேன்..

இதற்கு நான் உங்களிடம் எதிர்பார்த்தது,என் சம்பளத்தில் மாதா மாதம் பிடித்த பி.எப் தொகையும், விடுமுறை பணமும், ஓய்வு பணமும் தான். நான் ஓய்வு பெற்று இரண்டு வருடம் ஆகின்றது. இன்றுவரை ஒரு ரூபாய் கூட என்னால் வாங்க இயலவில்லை உங்களிடம்.

அந்த பணத்தை நம்பிதான் என் மகளுக்கு வரன் பார்த்து கொண்டிருந்தேன். பின்புதான் தெரிந்தது கடந்த ஆறு வருடமாக யாருக்கும் பணத்தை நீங்கள் திரும்ப கொடுக்கவில்லை என்று. என்னை போல் நிறைய பேர் உங்களிடம் பணத்தை பெற போராடி கொண்டிருக்கின்றனர்.

மாதா மாதம் பென்சன் வழங்க என் சம்பளத்தில் பணத்தை பிடித்தீர்கள். அதையும் மாதம் இரண்டு தவணையாக வழங்கினீர்கள். சில மாதம் முன்பு அதையும் நிறுத்தி விட்டீர்கள்.. அதன்பிறகு கோர்ட் உத்தரவின் படி மீண்டும் தவணை முறையில் பெறுகிறோம்.

முன்பு மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

இன்று அடுத்த வேளை உணவை பற்றி யோசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா.
நாங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கையெழுத்து போடும் வேலை செய்யவில்லை.. உடலை வருத்தி வேலை செய்தோம், நல்லநாள் கூட பிள்ளைகளோடு இல்லாமல்.

எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து ஓய்வு பெற்ற பின் வழங்குகின்றோம் என்று கூறிய தொகையை என்ன செய்தீர்கள்.
நீங்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் கூத்தடிக்கவும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் வழங்கவும் என் வியர்வையும், ரத்தமும் தான் உங்களுக்கு கிடைத்ததா. உங்கள் மனைவியும், பிள்ளைகளும் காரில் பவனி வர எங்கள் மனைவி, பிள்ளைகள் சாக வேண்டுமா.

தயவு செய்து அறிக்கை விடாமல் எங்கள் வாழ்க்கை பிரச்சினையை தீர்த்து வையுங்கள்...

இதை படிப்போர் ஒரு தந்தைக்கு செய்யும் உதவியாக, இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டு கொள்கின்றேன். உங்கள் தயவால் எங்கள் PF பணமாவது கிடைத்தால் உங்களுக்கு கோடி நன்றிகள்!

- Sirima

இன்னும் நாங்கள் கூறும் உலக வல்லாதிக்க வணிகர்களை நம்பாதவர்களுக்கு இந்த பதிவு...


சென்னையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி பல கோடிகள் சம்பாதிக்க செய்யும் சதி அம்பலம்...


அதற்கு உறுதுணையாக செயல்படும் பூர்விகா மோபைல்ஸ் நிறுவனத்தை எதிர்த்து அக்கடையின் முன்பு மாபெரும் அறவழிப் போராட்டம் நடத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கைது...

மராட்டிய ரஜினி கலாட்டா...


நம்மாழ்வார் எப்படி இயற்கை விவசாயம் தற்சார்பு பொருளாதாரம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி இவ்வளவு பெரிய சமூக மாற்றத்தை செய்தார்னு நினைச்சா...

ஒரு நிமிசம் தலைசுத்திருச்சு...

டென்மார்க் தமிழர்கள்...


இவர்களில் 99%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள்.

இங்கு ஏறத்தாழ 10,000 தமிழர் வசிக்கின்றனர்...