29/03/2019

இயற்கைக்கு மாறுவோம்...


சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல,‍ கொசுவை ஒழிக்க.. முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம்...

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி, கொடிகளுக்கு பயன்படும்.

ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.

துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால்  தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.

சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.

பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.

ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .

ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு  ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் . இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.

அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது . முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.

இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்...

பாஜக vs காங்கிரஸ் கலாட்டா...


ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள்...


தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

முதல் படம் காலம் 1000 - 1174.
இரண்டாம் படம் காலம் 1174 - 1324.

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை.

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra...

பாஜக மோடி கலாட்டா...


ஆலிவ் எண்ணெய் உடல்நல நன்மைகள்...



நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,
மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால் தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்...

ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

திரவத் தங்கம்...

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.

வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.

தோலினை மினுமினுப்பாக்கும்...

இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.

குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.

இதயநோயை தடுக்கும்...

ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்...

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயநோயை தடுக்கும்...

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (ஓய்ல்வே ஆயில்) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தினம் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்...

தீபம் ஏற்றும் முறைகளும்.. பயன்களும்...


https://youtu.be/LqBvgLiSmdU

Subscribe The Channel For More Tips...

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு...


For Every action, there is an equal and opposite reaction...

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்..

பிரபஞ்சத்தில் ஒலி, அதிர்வு இல்லாத இடமே கிடையாது. ஒலியினால் அதிர்வும், அதிர்வினால் ஒலியும் ஏற்படும் அளவிற்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது.

பழங்காலத்தில், விஞ்ஞானம் இல்லாத காலத்தில் நமது ரிஷிகள், ஞானிகள் இயற்கை நியதிகள் பற்றியும், கர்மா பற்றியும் சொல்லிவிட்டு போயிருக் கிறார்கள்.

தற்காலத்தில் விஞ்ஞானி நீயூட்டன் ஒரு கண்டுபிடிப்பை கூறியது அது கர்மா என்னும் நியதியை உறுதி செய்கிறது.

பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒரு வட்டப்பாதையில் ( Circle ) பயணிக்கின்றன. தான் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும்போது "போனது திரும்பி வருகிறது" பிரபஞ்சத்தில் ஒவ்வொரு படைப்பும் அதிர்வுகளின் ஆரம்ப புள்ளி.

ஒவ்வொரு மனிதனின் எண்ணம், சொல், செயல்களும் அதன் தன்மைக்கேற்ப அதிர்வுகளை (Action) ஏற்படுத்தும் திறன் கொண்டவை. நமக்குத் தெரியாமலே தானியங்கியாக இது நடந்து கொண்டிருக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது நடந்து கொண்டிருக்கும்.

இந்த அதிர்வுகள் தனது வட்டப் பாதையில் பல்வேறு இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு அதன் தன்மைக்கேற்ப நன்மையாகவோ, தீமையாகவோ, பலமாகவோ, பலவீனமாகவோ ஆரம்பமான இடத்துக்கு வருகின்றன. இதை எதிர் சக்தி (Reaction) என்று சொல்லலாம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நடந்து கொண்டிருக்கும்.

பொதுவாக ஒருவருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவரை அநியாயமாய் பாதிக்குமானால் அவரது வேதனைகள் கர்மாவை வலிமையாக்கி தண்டிக்கிறது.

அதேபோல் ஒரு வருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவருக்கு நன்மை செய்து அதனால் அவர் வாழ்த்தும் போது கர்மா வலிய வந்து உதவுகிறது.

நமது நினைப்பு, பேச்சு, செயல் எல்லாம் ஒரு சக்தி ( அதிர்வு ) உற்பத்தியாக காரணமாகிறது. இந்த சக்திக்கேற்ற எதிர் சக்தி புதிய வேகம், பெறும் தன்மை அடைகிறது. தனது எண்ணம், சொல், செயல் நன்மையை நோக்கும் போது நன்மை ஏற்படும்.

பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

ஒவ்வொரு செயலும் அடுத்த செயலுக்கு காரணமாகிறது. அது அப்படியே தொடர்ந்து, முதல் செயல் கடைசி செயலுக்கு காரணமாகிறது.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சங்கிலித் தொடரானது. செயலுக்கேற்ற பலன் வராமல் போகாது.

செயலின் நோக்கம், அதற்கு செலவிட்ட சக்தி அதற்கேற்ற பலனைத் தரும்.

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.

நமது சூழ்நிலையை நமது ஆழமான எண்ணங்கள் தான் தருகிறது. நமக்கு என்ன வேண்டுமோ அதே எண்ணமாய் இருக்க வேண்டும்...

இலுமினாட்டி இசுரேல் நாடும் உண்மையும்...


திமுக அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சனின் மோசடிகள்...


அதிகாரிகளின் ஆணவம்...


படம் : கோவை ஆட்சியரை சந்தித்து பாலியல் வக்கிர மிருகங்களால் கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய் மற்றும் உறவினருடன் மாதர் சங்கத்தினர் சந்திக்க சென்றனர், 10க்கு மேற்பட்ட இருக்கைகள் அவர் முன்னால் இருந்தும் குழந்தையின் தாய் உட்பட யாரையும் அமர சொல்லவில்லை என்பதைவிட, அமரவிடவில்லை...

அரசு ஊழியர்கள் மக்களின் பணத்தில் ஊதியம் வாங்குபவர்கள். ஆனால் எந்த அரசு அலுவலகத்திலும் அந்த வெகுஜன மக்கள் சென்றால் இருக்கைகள் காலியாக இருந்தாலும் அமர அனுமதிப்பது இல்லை. அந்த அரசு ஊழியர்களின் நினைப்பு தான் ஒரு குறுநில மன்னன் என்றே. அது காவல்நிலையமாக இருந்தாலும், வருவாய்த்துறை அலுவலகமாக இருந்தாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருந்தாலும் ஒரே நிலை தான்...

சக்கரை நோயை விரட்டவும்... உடல் எடையை குறைக்கவும் இந்த ஒரு பொருள் போதும்...


https://youtu.be/SkYeO2ASiiE

Subscribe The Channel for More Tips...

அடிக்கடி செக்ஸ் டார்ச்சர்.. துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி கேட்கும் ஸ்ரீரெட்டி...


வாரத்தின் ஏழு நாட்களையும் ஏதாவது ஒரு பரபரப்புக்கு உட்படுத்தி செய்திகளில் சிறப்பாக இடம்பெற்று வரும் நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த 21ம் தேதி இரவு, சென்னை வளசரவாக்கத்தில் தன்னுடைய வீட்டிற்கு வந்து பைனான்சியர் சுப்பிரமணி தாக்குதல் நடத்தியதாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்தார்.

மேலும், இந்த தாக்குதலில் தனது வீட்டில் இருந்த கண்ணாடி பொருட்கள் சேதமானதுடன், தனது ஆடையைப் பிடித்து அவர் இழுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, இரண்டு தரப்பையும் விசாரித்த போலீஸார், ஸ்ரீ ரெட்டி நாடகமாடியதாக கூறி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால், தன்னுடைய வீட்டில் இருந்த சிசிடிவி காட்சி மற்றும் பைனான்சியர் சுப்ரமணியத்துடன் பேசிய ஆடியோ ஒன்றையும்  25ம் தேத வெளியிட்டு மீண்டும் குட்டையைக் குழப்பினார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று  வந்த ஸ்ரீ ரெட்டி, தனக்கு எதிரிகள் அதிகம் இருப்பதால், துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

அப்படி லைசன்ஸ் தரப்பட்டால் அவர் ஏற்கனவே தன்னை பாலியல் தொந்தரவு செய்த  குற்றவாளிகளையும் சுடுவாரா அல்லது இனிமேல் தொந்தரவு செய்ய உள்ளவர்களுக்காக மட்டுமா என்பது தெரியவில்லை...

தமிழகத்தில் பாஜக நிலை இது தான்...


251 வயது வரை உலகில் வாழ்ந்த மனிதன் - நம்பினால் நம்புங்கள்...


உலகில் ஒருவர் 251 வருடங்கள் வாழ்த்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா உங்களால் ?

நம்பித்தான் ஆகவேண்டும்..

சீனாவைச் சேர்ந்த லீ “சிங் யூன்” எனப்படும் நபரே இவ்வாறு பல்லாண்டு காலம் உலகில் வாழ்ந்து காட்டியவர்.

இவரது பிறப்பு ஆண்டு தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்த போதும் இறுதியில் இவரது பதிவேட்டின் படி 1677 இல் பிறந்தார் என கண்டறியப்பட்டுள்ளது.

இவர் தனது வாழ்நாளில் மொத்தம் 23 மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் 1928 இல் இவர் இறந்துள்ளாத ஒரு தகவல் தெரிவித்த போதிலும் விக்கிபீடியா தகவலின் அடிப்படையில் இவர் 1933 ம் ஆண்டு இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தனக்கு 71 வயதாக இருக்கும் போது சீன இராணுப்படையில் இணைந்து அங்கு ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

இவரது ஆயுளின் ரகசியம் பற்றி ஆய்வு செய்த டாக்டர்கள் குறிப்பிடுகையில்...

இவர் யோகா போன்ற பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளமையால் இது சாத்தியப்பட்டுள்ளதாக..

இதுமாத்திரம் இன்றி இவர் ஆயுளை அதிகரிக்க கூடிய உடல் ஆரோக்கியத்துக்குரிய குறித்த சில மூலிகைகளையும் உட்கொண்டு வாழ்ந்ததாக குறிப்பிட்டார்கள்....

தினமும் காலையில் டீ, காபி குடிக்கிறவங்க இந்த வீடியோ வை தவறாம பாருங்க...


https://youtu.be/Y4qD_nQWJpU

Subscribe The Channel For More Tips...

தமிழர்களின் முப்பாட்டன் படை முகாம்...


நம் முப்பாட்டன் முருகன் படையோடு சென்று முகாமிட்டு கடல்வழி வந்த படையெடுப்பை முறியடித்த இடமே செந்தூர் ஆகும்.

யார் இந்த முருகன்?

முருகன் என்பவரின் இயற்பெயர் குமரவேல் பாண்டியன்.

இவர் தமிழ் அரசன்.

அழகாக இருந்ததால் முருகன் என்ற பெயர் பெற்றார்.

இவர் திருப்பதி முதல் கதிர்காமம் வரை படை முகாம் அமைத்து தமிழகத்தை பல்வேறு படையெடுப்புகளில் இருந்து காப்பாற்றினார்.

அந்த முகாம் இடங்கள்தான் இன்று படைவீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

உயரமான இடத்திலிருந்து போரிடுவது தான் எளிது.

சன் சூ எழுதிய போர்க்கலை உயரமான இடத்தை முதலில் கைப்பற்று என்கிறது.

ஆகவே தமிழ் பேசும் மண் முழுவதுமே குன்றுகளில் முருகனின் படை முகாம்கள் இருந்தன.

அவை கோவில்களாக மாறி இன்று குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கிறார்.

இவர் இன்றும் போர்க்கடவுளாக வணங்கப்படுகிறார்.

இவர் அறிமுகப்படுத்திய வேல் என்ற ஆயுதம் புதுமையாகவும் எளிதாகவும் இருந்தது.

பல வெற்றிகளை ஈட்டித்தந்தது.

அதன்பிறகு வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கம் போர்முழக்கம் ஆனது.

அலகு குத்துதல், காவடி தூக்குதல், மலையேறுதல், தேரிழுத்தல், உண்ணாமல் நோன்பிருத்தல் போன்றவை போர் பயிற்சி வடிவங்கள் (தீ மிதித்தலும் கூட).

குற்றால மலை குறவர்களிடம் பெண் எடுத்து திருமணம் செய்தவர்.

மயில் என்றால் மிகவும் பிடிக்கும்.
அதனால் எப்போதும் மயிலொன்றை கூடவே வைத்திருப்பார்.

இவருக்கும் இந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

5000 ஆண்டுகள் முன்பு இவர் உயிருடன் வாழ்ந்த மனிதர்.

சிவனும் இவரைப் போல உயிருடன் வாழ்ந்த மனிதர் தான்.

அவரது இயற்பெயர் ஆதிநாதன்.

சிவன் புலித்தோல் கட்டியவர்.

அதனால் அவர் நாகரீகம் தோன்றிய ஆரம்ப காலத்தைச் சேர்ந்தவர்.

முருகன் கோவணம் கட்டுபவர்.

அதனால் நூல் மூலம் ஆடை செய்ய ஆரம்பித்த நாகரீக காலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

இறந்த பிறகு தமிழ் மக்கள் வணங்கத் தொடங்கி விட்டார்கள்.

பக்தி என்ற உணர்ச்சி பின்னர் இதில் கலந்துவிட்டது.

முருகன் தமிழ்க் கடவுள்.. பொங்கல் தமிழர் பண்டிகை அதை அனைத்து தமிழரும் கொண்டாடுவது போல முருகனையும் அனைத்து தமிழரும் தமது மூதாதையராக ஏற்றுக் கொள்ள வேண்டும்...

ஸ்டாலின் கண் முன்னே செய்தியாளர்களை தூக்கி போட்டு மிதிச்ச திமுகவினர் : செய்தி...


வலிக்குதா ரிப்போடர்ட்டர்ஸ்..

மாசமானா பேமண்ட் கரெக்டா வருதுல்ல அதுனால கொஞ்சம் கூட வலிக்கல..

சனியனே என்று திட்டினால் என்ன நடக்கும் தெரியுமா.?


சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி.

இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு.

வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால், ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு.

மந்தகதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம்.

ஆனால் சனியனே என திட்டக்கூடாது...

இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி...

சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம்..

மந்தகதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு, சனீஸ்வரனின் அருள் கிடைக்கும்...

நாதக சீமான் கலாட்டா...


செம.. இப்படி தான் இருக்கனும் கட்சிக்கு உழைப்பவர்களை வெளியேத்தனும்...

சொல்வதை மட்டும் செய்யும் தலையாட்டி பொம்மைகள் மட்டும் தான் கட்சிக்கு வேணும்...

பாமக அன்புமணி ராமதாஸ் சாதனைகளை பற்றி வெளிநாடு வாழ் தமிழிச்சி சொல்வதை கேளுங்கள்...


https://youtu.be/ybUVpzVGjJY

Subscribe The Channel For More News...

குண்டலினி யோகம்...


விந்து, நாதம் இவைகளை ஆதாரமாகக் கொண்டே இந்த உடல் உருவாகி, வளர்ச்சி பெற்று, இயங்கிக் கொண்டு இருக்கிறது.

அதேபோல் அறிவும் உடலை ஆதாரமாகக் கொண்டு இயங்கினாலும் கருவையே மூலமாகக் கொண்டு இயங்குகிறது.

திரியை மூலமாகக் கொண்டே விளக்கு எரிவது போல் - வெளிச்சம் தோன்றுவது போல் - வித்தை ஆதாரமாகக் கொண்டே உடலியக்கம் நடைபெறுகிறது. அறிவியக்கம் நடைபெறுகிறது.

அறிவின் பிறப்பிடமாகிய கருவில் ஞாபகத்தை ஒருங்கச் செய்து அங்கேயே ஒன்றி ஒன்றிப் பழக்கம் செய்து கொள்ளும் முறையே தவம் எனப்படும்...

சம்பவக் கற்பனைகள், சம்பவ ஞாபகங்கள் என்னும் எண்ண அலைகளின் மூலம் உடலில் விளையும் உயர்தரமான காந்த சக்தி சூழ்நிலைக் கவர்ச்சியால் வீணாகிக் கொண்டே இருக்கிறது.

எண்ணங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இந்தச் சக்தி உடலில் சேகரமாகி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது.

அதைத் தாங்கும் வன்மையும் உடலுக்கு ஏற்படுகிறது. அதனால் அறிவுக்கு நட்பும், உறுதி, ஆராய்ச்சி வேகம் கூடிக் கொண்டே இருக்கும்...

நாதக சீமான் கலாட்டா...


இன்றே உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள்...


அழிவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு...


அழிந்து வரும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று ஒருமொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு
உண்டு. தமிழ் மொழிக்குள் ஆங்கில மொழியின் ஊடுருவல் ஆதிக்கமும்தான்.

ஒரு நாளைக்கு நீங்கள் பேசும் தமிழில் எத்தனை ஆங்கில வார்த்தைகளை தமிழோடு கலந்து பேசுகின்றீர்கள். யோசித்து பாருங்கள் அப்படி பேசுவதில் பெருமையாக நினைக்கின்றார்கள்.

இன்றைய தமிழர்கள் தமிழ் மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் காட்டுவதில்லை ஆங்கில கற்பதிலும் பேசுவதிலும் தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். பல துறைகளில் ஆங்கிலம் மொழிகளின் ஆதிக்கமாகிவிட்டது. பேச்சு வழக்கிலும் ஆங்கிலம் தமிழோடு கலந்து விட்டது இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர் இருப்பதுதான். தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா

வெட்டி பெருமைக்கு தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களை என்ன செய்யலாம்? இவர்களை பார்த்தால் எப்படி இருக்கு தெரியுமா ?

வீடு நெறைய சோறு வைத்து கொண்டு வீதியில் நின்று பிச்சை எடுப்பது போல் உள்ளது இவர்கள் பேசுற தமிழ். இவர்களுக்கு தமிழும் முழுசா தெரியாது. ஆங்கிலமும் முழுசா தெரியாது. ஒன்று ஆங்கிலத்தில் பேசு இல்லை தமிழில் பேசு இரண்டு மொழியும் முழுசா தெரியாமல் ரெண்டுகெட்டான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

எதிலையும் கலப்படம் விரும்பாத தமிழன். மொழியை மட்டும் கலப்படம் செய்து பேசுவது ஏன் ?

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால். மொழியை அழித்து விடுங்கள் அந்த இனம் தானா அழிந்து விடும் என்று சும்மாவா சொன்னார்கள், ஒரு நாளைக்கு நீங்கள் பேசுகின்ற தமிழில் எத்தனை ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசுறிங்க என்று நினைத்து பாருங்கள். ஏன் இப்படி? ஒரு பக்கம் தமிழர்களை திட்டமிட்டு அழித்து வருகிறார்கள், இதை விட கொடுமை தமிழனே தமிழை வேறு மொழியோடு கலப்படம் செய்து எம் மொழியை அழித்து வருகிறார்கள்.

இவர்கள் என்னவோ வெள்ளைக்காரன் பரம்பரை போல வெள்ளைக்காரன் முன்பு நம் நாட்டை அடிமை படுத்தி வைத்திருந்தான் இப்போது நம் நாக்கை அடிமை படுத்தி வைத்திருக்கான்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்…

தமிழன் என்று சொல்வோம்….
தலை நிமிர்ந்து நிற்போம்…..

தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை…

தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால்
பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழ் வாழும்...