01/01/2019

251 வயது வரை உலகில் வாழ்ந்த மனிதன் - நம்பினால் நம்புங்கள்...


உலகில் ஒருவர் 251 வருடங்கள் வாழ்த்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா உங்களால் ?

நம்பித்தான் ஆகவேண்டும்..

சீனாவைச் சேர்ந்த லீ “சிங் யூன்” எனப்படும் நபரே இவ்வாறு பல்லாண்டு காலம் உலகில் வாழ்ந்து காட்டியவர்.

இவரது பிறப்பு ஆண்டு தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்த போதும் இறுதியில் இவரது பதிவேட்டின் படி 1677 இல் பிறந்தார் என கண்டறியப்பட்டுள்ளது.

இவர் தனது வாழ்நாளில் மொத்தம் 23 மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் 1928 இல் இவர் இறந்துள்ளாத ஒரு தகவல் தெரிவித்த போதிலும் விக்கிபீடியா தகவலின் அடிப்படையில் இவர் 1933 ம் ஆண்டு இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தனக்கு 71 வயதாக இருக்கும் போது சீன இராணுப்படையில் இணைந்து அங்கு ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

இவரது ஆயுளின் ரகசியம் பற்றி ஆய்வு செய்த டாக்டர்கள் குறிப்பிடுகையில்...

இவர் யோகா போன்ற பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளமையால் இது சாத்தியப்பட்டுள்ளதாக..

இதுமாத்திரம் இன்றி இவர் ஆயுளை அதிகரிக்க கூடிய உடல் ஆரோக்கியத்துக்குரிய குறித்த சில மூலிகைகளையும் உட்கொண்டு வாழ்ந்ததாக குறிப்பிட்டார்கள்....

மக்களின் எதிர்ப்பை கண்டு அஞ்சி... உண்மையை வெளியிட்டது நக்கீரன்...


இயற்கைக்கு மாறுவோம்...


சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல,‍ கொசுவை ஒழிக்க.. முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம்...

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி, கொடிகளுக்கு பயன்படும்.

ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.

துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால்  தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.

சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.

பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.

ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .

ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு  ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் . இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.

அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது . முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.

இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்...

நெகிழிக்கு தடை வர வேண்டும் அதற்கு மாற்று நம் கையில் தான் ஒவ்வொருவரும் திருந்தினால் மாற்றம் நிச்சயமே...


புது ஆங்கில வருடத்திலிருந்து உறுதிமொழி ஏற்று கடைபிடிக்க தொடங்குவோம்...

என்றும் இளமையோடு வாழ எளிய வழி...


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், வெப்பம் (உஷ்ணம்), காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

வெப்பத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை எல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்...

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் வெப்பம் (உஷ்ணம்), வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே...

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிசமாகும்...

ஐ.நா சபையும் இலுமினாட்டி களும்...


அமைதிக்காக போராட கூட நம்மை விட மாட்டார்கள்...

எண்ண அலைகளின் சக்தியும் ஆழ்மன ஈடுபாடும்...


உலகில் நாம் காணும்அனைத்து பொருள்களும் அதிர்வுகள் என்கிற அலை ரூபங்களாக தான் இருக்கின்றன..

இந்த உண்மையை அணு
விஞ்ஞானிகளும் கண்டறிந்து சொல்லி
இருக்கிறார்கள். அணுவின் இயக்க தத்துவமே அது தான்.

எதை சாதிக்க விரும்புகிறோமோ
அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான இமேஜை (உருவத்தை) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்காண தீர்வு வழி முறைகள் ஆழ்மனம் பெற்றுத் தரும்..

ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் அதுவெறும் ஆசையாய் இருப்பதானால் பயன் இல்லை.

அந்த விருப்பமானது நிறைவேற்ற
முயற்சி தேவை. சரிமுயற்சி செய்கிறோம். எப்போது சாத்தியப்படும்.

விரும்பியதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் தான் முயற்சியும் சாத்திய மாகிறது.

மின்அலைகள் பரவி சென்று பொருள்களை பாதிப்படைய செய்வது போல நமது எண்ண அலைகளும் பரவி சென்று பொருள்களை பாதிக்கின்றன.

அணைத்து பொருள்களும் அலை
வடிவங்களாகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன.

நமது எண்ணங்களும் அலை வடிவில்
நம்மை சுற்றிலும் வியாப்பித்திருக்கின்றன.

வலிமையான எண்ணங்களின் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம்மால் பாதிப்பினை ஏற்படுத்த முடியும்.

ஆழ்மனதை பயன்படுத்த தெரிந்து கொண்டால் நமக்கு அரிய சேவைகள் புரிய அது எப்போதும் தயாராக
இருக்கிறது.

ஆழ்மனதை பயன் படுத்தியவர்களே உன்னதமான நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.

மனிதனின் எண்ண அலைகள்
தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை பாதிக்கும் சக்தி 'சைகோகைனோஷிஸ்' கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி போன்ற ஒரு சக்தியைநம் ஆழ் மனதில் ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.

மனப்பாடம் அழுத்தமாக இல்லாத போது காரியங்கள் நடப்பதில்லை. ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன்
தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம்.

உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது.

ஆழ் மனசக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம்.

அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட..

தனி மனிதனானாலும் சமூகமானாலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக எண்ணுகிற போது அந்த எண்ணங்களின் அடிப்படையில் காரியங்களும் நடைப் பெறத் தொடங்குகின்றன.

மனதில் அன்பு இருந்தால், அன்பு
மிக்க சமுதாயம் உருவாகும்.
எண்ணுதல் முடிதல் வேண்டும்..
நல்ல சிந்தனை வளம் பெற வேண்டும்..
வெற்றி பெற்றிட வேண்டும்..
உலகிற்கு வேதத்தை உணர்த்திட வேண்டும்.
உடல்நலம் காத்திட வேண்டும்.
சிறந்த மருத்துவம் தேர்ந்திட வேண்டும்.
அன்பும் கருணையும் வேண்டும்.
அதற்கு அறிவை அறிந்திடல் வேண்டும்.
கலைகளை கற்றிட வேண்டும்.
நல்ல நட்பினை பெற்றிட வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் பூரண
உடல்நலம், மனவளம் பெற வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும், இயற்கையை பற்றியும் தெளிந்த அறிவை பெற வேண்டும்.

பேறாற்றலான இறைநிலைப் பற்றியும், அதன் இயக்க இரகசியத்தையும் எல்லா மனிதரும் உணர வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன் கடமையை
உணர்ந்து சமுதாயத்தோடு இணங்கி உதவி செய்து வாழ வேண்டும்.

தனிமனித அமைதி, குடும்ப அமைதி மூலம் உலக அமைதி பெற வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் சித்தர்கள் வாழ்ந்து வழிகாட்டிய இறவாமை எனும் மரணமிலாப் பெருவாழ்வு வாழ வேண்டும். (வள்ளலார்).

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ..
எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம்
முறையாக இயங்குகிறதோ..
அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை...

திமுக வின் திருட்டு பகுத்தறிவு...


துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை...


விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே  வீராமூர் ஏரியில் மணல் அள்ளி கொண்டிருந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு மாட்டின் மீது குண்டு பாய்ந்தது. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பதை போலிசார் விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென  பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்...

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்...



நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத் தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது. என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்...

நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. நாடி ஓட்டப் பாதை என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்..

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.

இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்.

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.

இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்.

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்...

மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வைத்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது...

சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று இனி பார்ப்போம்...

மைக்கேல் ஜாக்சனின் கடைசி தொலைபேசி உரையாடல்...


குற்றால அருவியில் அடித்துவரப்பட்ட மலைப்பாம்பால் அலறி அடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்...


மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக குற்றால அருவிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்தில் ஊர்வனங்கள் அடித்து வரப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று குற்றாலம் அருவிகளில் ஒன்றான மெயினருவில் பெண்கள் குளிக்கும் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று நீரில் அடித்து வரப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து, 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்..

இந்திய - திராவிட அரசியல்வாதிகளுக்கு...


விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு...


நம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடல் முழுவதும் அக்குப்பிர்ஷர் புள்ளிகள் உள்ளன. வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.

அதனால் வலி குறைகிறது. உடலிலுள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்துத் தளர்த்துவதால் நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளைக் காணலாம்.

தலைவலி: நமக்குப் பிடிக்காத ஒரு வேலையைப் பிறர் நம்மைச் செய்யச் சொல்லும்போது தலை வலிக்கிறது என்று கூறித் தப்பித்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தால் தலைவலி குறைவதுபோல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்கிறோம்.

அடிக்கடி மாத்திரைகள் உட்கொள்வதால் அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படிப் போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்புப் புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலைக் குறிக்கும். கட்டை விரல் தலையைக் குறிக்கும். கட்டை விரலின் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டைக் குறிக்கும்.

படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இரண்டு புள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்துத் தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். தளர்த்தும் போது மூச்சை வெளியே விட வேண்டும். 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்து விட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால் மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு.

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல் நுனிகளில் அழுத்தம் கொடுத்துத் தளர்த்தும் போது அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும். 10 விரல்களிலும் இவ்வாறு நாள்தோறும் இரண்டு முறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாகக் குறைகிறது.

மலச்சிக்கல், செரிமானமின்மை, அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு: ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் நெருக்கமாகச் சேர்க்கும் போது புறங்கையில் ஒரு கோடு தெரியும் அந்தக் கோடு முடியும் இடத்தில் ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் Fp.H.4  என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்துத் தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது. இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுத்துத் தளர்த்த வேண்டும்.

தசையின் மேல் இல்லாமல் எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரண்டு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம். மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு ஆன்டாசிட் மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும்போது அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல் : மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலைத் தீர்க்கப் பெரிதும் உதவுகிறது. L14 என்ற புள்ளியை இரண்டு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாகத் தீர்க்கலாம்.

கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்திலுள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையைக் குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தைக் குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இரண்டு புள்ளிகளிலும், மற்றொரு கையின் இரண்டு விரல்களால், 14 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். பின் கட்டை விரலைக் கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில் 14 முறையும் சுழற்ற வேண்டும் இரண்டு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாகக் குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

உயர் இரத்த அழுத்தம் : உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை உட்கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் நாள்தோறும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது சிறிதாக மாத்திரையின் அளவைக் குறைத்து கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும்.

நம் கையில் சிறுவிரலின் நகத்திற்குக் கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது காற்று சக்தி அதிகரித்து இரத்தக் குழாய்கள் விரிவடைந்து இரத்த அழுத்தம் குறைகிறது. தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.

காதுகளிலிருந்து தலைக்குச் செல்லும் நேர்க்கோடும், மூக்கிலிருந்து தலைக்குச் செல்லும் நேர்க்கோடும் சந்திக்கும் இடத்தில்  இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுக்கும் போது படபடப்பு, மன அழுத்தம் இவை குறைவதால் இரத்த அழுத்தம் சீராகிறது. H9, GV20 இப்புள்ளிகளில், 14 முறை காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் சீரடைகிறது.

இதைத் தவிர காலில் பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறை அழுத்தம் கொடுக்கும் போது இரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறை மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால் இரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது...

எகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு கருவிகள்.. தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிப்பு...


திருப்பூர் அருகேயுள்ள இடுவாய் கிராமம், பழங்காலத்தில் இரும்பு கருவிகள் உற்பத்தி மையமாக இருந்துள்ளதை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

இங்கிருந்து, எகிப்து பிரமிடுகளுக்கு இரும்புக் கருவிகள் கொண்டு சென்றதற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன.

கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரி தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறை சார்பில், திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில், 25 ஏக்கர் பரப்பளவில், மேற்பரப்பு ஆய்வு செய்யப்பட்டது. இதில், பழங்கால வரலாற்று சான்றுகள், பொருட்கள் கிடைத்து உள்ளன. இக்கிராமத்தின் ஒரு பகுதி, 'கருமண் பள்ளம்' என, அழைக்கப்படுகிறது.

நாணயங்கள் - இங்கு இரும்பு தாதுக்கள் அதிகளவு இருந்ததும், வெட்டி எடுக்கப்பட்டதும், தெரியவந்துள்ளது.

கொல்லன் தோட்டம் என்ற பகுதியில், இரும்பு கழிவு அதிக அளவில் உள்ளது.

இரும்பைக் கொண்டு, போர் மற்றும் வேளாண் கருவிகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இங்கு கிடைத்துள்ள மண்பாண்ட சிதறல்கள், சிவப்பு வண்ண மண்கல பண்பாடு இருந்துள்ளதை காட்டுகிறது. இங்குள்ள மாரியம்மன் கோவிலை புதுப்பித்த போது, மருந்து சாத்துவதற்காக, மூலவர் சிலை அகற்றப்பட்டது. சிலையின் அடியில், பழங்கால பொற்காசுகள், நான்கு நவரத்தின கற்கள், இரு செப்பு நாணயங்கள், 16 பிரிட்டிஷ் நாணயங்கள், நவரத்தின கற்கள், யந்திர செப்பு தகடு ஆகியவை இருந்தன.

இவை, 17ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகவும், விஜய நகர பேரரசு ஆண்ட காலத்திய நாணயங்கள், 'வீரராய பொற்காசு' என, அழைக்கப்பட்டதாகவும், ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அபூர்வமானது - இதுகுறித்து, ஆய்வாளர் ரவி கூறியதாவது..

இடுவாய் நகரம், தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாட்டில் சிறந்து விளங்கியதும், மிகச்சிறந்த வணிக மையமாக திகழ்ந்ததும், ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது. கொங்கு பெருவழியில், கிளை வழி ஒன்று உள்ளதும், போக்குவரத்து அதிகம் இருந்ததால், வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க, கிணறு அமைக்கப்பட்டிருந்தது.

இது, ராணி மங்கம்மா ஆண்ட காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. குப்தர்களின் தாக்கமும் இதில் உள்ளது.

அதேபோல், 3000 ஆண்டு களுக்கு முந்தைய, சாம்பல் மேடு பகுதியும், 15 ஏக்கர் பரப்பளவில் காணப்படுவது, அபூர்வமான ஒன்று.

பழங்காலத்தில், ஆயிரக்கணக்கான மாடுகளின் சாணங்களை ஒரே இடத்தில் குவித்து, அவற்றை தீ மூட்டி, மாடுகளை அதன் மேல் நடக்கவிட்டு உள்ளனர்.

கால்நடைகளை, நோய்கள் தாக்காமல் இருக்க, இது மருத்துவ முறையாக கடைபிடிக்கப்பட்டு உள்ளது.

தற்போது, குண்டம் திருவிழா, அதன் அடிப்படையிலேயே நடக்கிறது.

இரும்பு, எக்கு கருவிகள் தயாரிப்பில், சிறந்த தொழில் நுட்பம் இங்கிருந்துள்ளது.

எகிப்து பிரமிடுகளுக்கு, இங்கிருந்து இரும்பு கொண்டு சென்றதாக, வரலாற்று தகவல் உள்ளது.

இங்கு கிடைத்துள்ள இரும்பு கசடு, இரும்பு கால பண்பாட்டை நினைவுபடுத்துகின்றது.

பொதுமக்களின் வழங்காற்று பாடலில், ஒளி நகரம் என்ற பெயர் வழக்கில் இருந்தது அறியப்படுகிறது.

உலைப்பட்டறைகளில் இருந்து வரும் ஒளி வீச்சைக்கொண்டும், இரும்பு உருக்கும் தொழில், இரவு பகலாக நடந்ததால், சம்மட்டியில் ஒலி, இடி முழக்கத்தை போல் இருந்ததால், 'இடிவாய்' என்ற பெயர் மருவி, இடுவாய் என, காரணப்பெயர் உருவாகியுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்...

ஓலா இரகசியம்...


கட்டணம் குறைவுகாக கார்ப்பரேட் பாம்பை வளர்க்க வேண்டாம்.. பின் நம்மை விழுங்கிவிடும்...

தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு...


சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே.

சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை.

சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன.

அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!

அறுபது ஆண்டு கதை :

இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி விய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையால் தாலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940).

அறுபது ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவத னாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது.

ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது'. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன் மொழி நூல்-1940) மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.

கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை. இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது.

மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.

புராணக் கதையின்படி கிருஷ்ண பரமாத்மா நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார் என புராணங்கள் கூறுகிறது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை.

எடுத்துக்காட்டாக மூன்றா வது ஆண்டின் பெயரான "சுக்கில' ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்து மூன்றாவது ஆண்டான "விரோதி' எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு "குரோதி' இதன் பொருள் பழி வாங்குபவன் என்பதாகும். முப்பத்து மூன்றாவது ஆண்டின் பெயர் "விகாரி' பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான "துன்மதி' கெட்டபுத்தி என்று பொருள்.

இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றைக் கொண்டு வந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை.

வரலாற்றில் மாபெரும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிலிக்கனி போல் தெரிகிறது.

ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன.

இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக் கொண்டு ஆதிக்க (ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அமைதியாகப் போவதுதான் நல்லது.

ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக் கொள்ளட்டும்; சமஸ்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக் கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக் கொள்ளட்டும்.

ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் "எந்தச் சூழலிலும்' எந்த வடிவத்திலும் "எந்த முறையிலும்' எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின் மீது திணிக்க வேண்டாம்! தமிழர் மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதை எவரும் மறக்கலாகாது.

இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலிலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல் நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்' என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலிலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும், 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ் புத்தாண்டு..

பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியங்களில் காணப் பெறும் சான்றுகள் சில:

1. தைஇத் திங்கள் தண்கயம் படியும் (நற்றிணை).
2. தைஇத் திங்கள் தண்ணிய தரினும் (குறுந்தொகை).
3. தைஇத் திங்கள் தண்கயம் போல் (புறநானூறு).
4. தைஇத் திங்கள் தண்கயம் போல (ஐங்குறுநூறு).
5. தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ (கலிலித்தொகை).

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை, முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் பயின்று வருகின்றன.

இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன...

MGR மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்...


இவர் ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பாமிங் செய்தவர் என்பது குறிப்பிடதக்கது...

குண்டலினி யோகம்...


விந்து, நாதம் இவைகளை ஆதாரமாகக் கொண்டே இந்த உடல் உருவாகி, வளர்ச்சி பெற்று, இயங்கிக் கொண்டு இருக்கிறது.

அதேபோல் அறிவும் உடலை ஆதாரமாகக் கொண்டு இயங்கினாலும் கருவையே மூலமாகக் கொண்டு இயங்குகிறது.

திரியை மூலமாகக் கொண்டே விளக்கு எரிவது போல் - வெளிச்சம் தோன்றுவது போல் - வித்தை ஆதாரமாகக் கொண்டே உடலியக்கம் நடைபெறுகிறது. அறிவியக்கம் நடைபெறுகிறது.

அறிவின் பிறப்பிடமாகிய கருவில் ஞாபகத்தை ஒருங்கச் செய்து அங்கேயே ஒன்றி ஒன்றிப் பழக்கம் செய்து கொள்ளும் முறையே தவம் எனப்படும்...

சம்பவக் கற்பனைகள், சம்பவ ஞாபகங்கள் என்னும் எண்ண அலைகளின் மூலம் உடலில் விளையும் உயர்தரமான காந்த சக்தி சூழ்நிலைக் கவர்ச்சியால் வீணாகிக் கொண்டே இருக்கிறது.

எண்ணங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இந்தச் சக்தி உடலில் சேகரமாகி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது.

அதைத் தாங்கும் வன்மையும் உடலுக்கு ஏற்படுகிறது. அதனால் அறிவுக்கு நட்பும், உறுதி, ஆராய்ச்சி வேகம் கூடிக் கொண்டே இருக்கும்...

கார்ப்பரேட் உண்மைகள்...


தமிழர்களை ஏமாற்றி அழிக்கும் இந்தியமும்.. திராவிடமும்...


ஒரு மாநிலத்தில் 30 %விழுக்காடு  காடுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே சொல்லப்ட்டிருந்தும் , தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது...

அதில் மேலும் கொடுமை.. மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும், கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது..

இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது..

60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு..

சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது...

மொழி இழந்தோம்..
மானம் இழந்தோம்..
அரசியல் அறிவை இழந்தோம்..
நிலம் இழந்தோம்..
காடு மலை இழந்தோம்..
இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம்..

இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாத வண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு..

இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ, அல்ல மாவட்ட போருப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும்..

அனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி..

ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அறையல்வாதிகளுக்கு வேண்டும்..

ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும்..

அனால் இப்போது உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு..

நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம்.. குறைந்த பட்சம், மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ?

சிந்தியுங்கள்...

இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள்..

இவை எல்லாம் மறந்து மானங்கெட்டு பாடுவோம் இந்தியனாய் ஜன கன மன என்று..

சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும்...

கனவு உண்மைகள்...


அழிவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு...


அழிந்து வரும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று ஒருமொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு
உண்டு. தமிழ் மொழிக்குள் ஆங்கில மொழியின் ஊடுருவல் ஆதிக்கமும்தான்.

ஒரு நாளைக்கு நீங்கள் பேசும் தமிழில் எத்தனை ஆங்கில வார்த்தைகளை தமிழோடு கலந்து பேசுகின்றீர்கள். யோசித்து பாருங்கள் அப்படி பேசுவதில் பெருமையாக நினைக்கின்றார்கள்.

இன்றைய தமிழர்கள் தமிழ் மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் காட்டுவதில்லை ஆங்கில கற்பதிலும் பேசுவதிலும் தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். பல துறைகளில் ஆங்கிலம் மொழிகளின் ஆதிக்கமாகிவிட்டது. பேச்சு வழக்கிலும் ஆங்கிலம் தமிழோடு கலந்து விட்டது இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர் இருப்பதுதான். தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா

வெட்டி பெருமைக்கு தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களை என்ன செய்யலாம்? இவர்களை பார்த்தால் எப்படி இருக்கு தெரியுமா ?

வீடு நெறைய சோறு வைத்து கொண்டு வீதியில் நின்று பிச்சை எடுப்பது போல் உள்ளது இவர்கள் பேசுற தமிழ். இவர்களுக்கு தமிழும் முழுசா தெரியாது. ஆங்கிலமும் முழுசா தெரியாது. ஒன்று ஆங்கிலத்தில் பேசு இல்லை தமிழில் பேசு இரண்டு மொழியும் முழுசா தெரியாமல் ரெண்டுகெட்டான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

எதிலையும் கலப்படம் விரும்பாத தமிழன். மொழியை மட்டும் கலப்படம் செய்து பேசுவது ஏன் ?

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால். மொழியை அழித்து விடுங்கள் அந்த இனம் தானா அழிந்து விடும் என்று சும்மாவா சொன்னார்கள், ஒரு நாளைக்கு நீங்கள் பேசுகின்ற தமிழில் எத்தனை ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசுறிங்க என்று நினைத்து பாருங்கள். ஏன் இப்படி? ஒரு பக்கம் தமிழர்களை திட்டமிட்டு அழித்து வருகிறார்கள், இதை விட கொடுமை தமிழனே தமிழை வேறு மொழியோடு கலப்படம் செய்து எம் மொழியை அழித்து வருகிறார்கள்.

இவர்கள் என்னவோ வெள்ளைக்காரன் பரம்பரை போல வெள்ளைக்காரன் முன்பு நம் நாட்டை அடிமை படுத்தி வைத்திருந்தான் இப்போது நம் நாக்கை அடிமை படுத்தி வைத்திருக்கான்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்…

தமிழன் என்று சொல்வோம்….
தலை நிமிர்ந்து நிற்போம்…..

தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை…

தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால்
பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழ் வாழும்...

வெக்கங்கெட்ட அதிமுக அரசு...


முகர்சிங் இசைக் கருவி...


முகர்சிங் (யூத யாழ்) இவ்வுலகின் தொன்மையான இசைக்கருவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

ஒரு இசைக்கலைஞன் இக்கருவியை வாசிப்பதை கி.மு 3ம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம். இக்கருவியின் மற்ற பெயர்களில் யூத மதப்பெயர் இருந்தாலும், இக்கருவிக்கும் யூத மதத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.

தமிழ்நாட்டில் கர்னாடக இசையில் மோர்சிங் முக்கிய பங்கு வகிக்கின்றது. தமிழ்நாட்டில் நடைபெறும் சங்கீதக் கச்சேரிகளில் ஓர் உன்னத இடத்தைப்  பிடித்திருந்தது "முகர்சிங்" வாத்தியம். அந்தக் காலத்தில் சில வித்துவான்கள்  தங்கள் கச்சேரிகளில் மிருதங்கத்தைப் பக்கவாத்தியமாக வைத்துக் கொள்வது போன்றே, முகர்சிங், கடம், கஞ்சிரா , கொன்னக்கோல், கெத்து  போன்ற மற்ற உப பக்கவாத்தியங்களையும் வைத்துக் கொண்டு கச்சேரி செய்வது  வழக்கமாகும்.

இதுபோன்று பக்கவாத்தியம், உப பக்கவாத்தியம் என்று எல்லா வித்துவான்களையும்  இணைத்துக் கொண்டு கச்சேரி செய்வதைப் புல்பெஞ்ச் கச்சேரி" என்று பெயர். 

சமீபகாலம் வரை சீர்காழி கோவிந்தராஜன் அவரது பாட்டுக் கச்சேரியிலும்,  குன்னக்குடி வைத்தியநாதன் அவரது வயலின் கச்சேரியிலும் முகர்சிங்கை ஒரு  பக்கவாத்தியமாக வைத்துக் கொண்டு கச்சேரி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  ஆனால் இன்று பாட்டுக் கச்சேரியிலும், வாத்தியக் கச்சேரியிலும் ஏன் தாளவாத்தியக்  கச்சேரிகளிலும் கூட இந்த முகர்சிங் இசைக்கருவி அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்பதே  உண்மை நிலையாகும்.

ஒரு சிறிய கம்பியினாலான மோர்சிங் என்ற இசைக்கருவி ஓர் அருமையான கனவாத்தியமாகும். இதனை "மூர்ச்சங்க்" என்றும் கிராமங்களில் அழைப்பதுண்டு.  இந்த இசைக்கருவியை வாயினால் பற்றிக்கொண்டு வாசிக்கப்படுவதால்  இதனை ஹிந்தி மொழி இலக்கியங்களில் (சதுர்புஜதாஸ், சிர்தாஸ் ஆகியோரின் கவிதைகளில்) "முகர்சங்க்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அகோபிலர் எழுதிய "சங்கீத பாரிஜாதம்" என்ற வடமொழி நூலிலும் இது "முகசங்க்" என்றே பெயரிடப்பட்டுள்ளது.
இதனை முகத்தின் அருகில், வாயில் வைத்து வாசிப்பதாலும், இது சங்கு போன்ற அமைப்பில், சங்கு வடிவத்தில் உள்ளதாலும் இதனை "முகச்சங்கு" என்றும், முகச்சங்கம், நுகர்சங்கு , முகர்சிங், மோர்சிங் என்றும் அழைக்கின்றனர். இதனை ஆதிகாலத்தில் மூங்கிலால் செய்துள்ளனர். மலைவாழ் மக்கள் மற்றும் கிராமியச் சிறுவர்கள் இதனை மூங்கிலால் செய்த விளையாட்டாக வாயில் வைத்து இசைத்து மகிழ்ந்துள்ளனர். சுமார் ஏழு அல்லது எட்டு சென்டிமீட்டர் நீளம் கொண்டது இச்சிறு இசைக்கருவி. இது இரும்பு எஃகினால் செய்யப்படுகின்றது.

மேலும் சிவபெருமானின் திரிசூலம் போன்ற அமைப்பில் உள்ளது. இதன் உடல் குதிரைலாடம் போன்ற வடிவம் உடையது. இதன் நடுவில் இரு புறங்களையும் விட சற்று நீளமான ஒரு நாக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனை வாசிப்பவர் மோர்சிங்கை இடது கையின் உள்ளங்கையினால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, கிடுக்கிப் போன்ற பாகத்தைப் பற்களில் கடித்துக் கொள்கின்றனர். அப்பொழுது கம்பியினாலான நாக்குப் பகுதியை வலது கையின் ஆள்காட்டி விரலினால் தட்டி மீட்டப்படும். வாசிப்பவரின் வாய் ஒலியை உண்டாக்குகின்றது. அதை வெவ்வேறு விதமாக வாயில் வைத்துக் கொள்வதாலும், வாய் மூலம் விடும் மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்துவதாலும், நுண்மையான அழகிய ஒலிகள் இதில் உண்டாக்கப்படுகின்றன.

முகர்சிங் என்ற இந்த இசைகருவி இடைக்காலத்தில் தோன்றி வளர்ந்து வருகின்றது. மேலும் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், சில வெளிநாடுகளிலும் கூட இது வாசிக்கப்பட்டு வருகின்றது. இதில் அழகிய பல தாளச் சொற்கட்டுக்களை வாசிக்கின்றனர். தாளக் கருவிகளில் வாசிக்கப்படும் அனைத்துச் சொற்களையும் இதில் இலாகவமாக வாசிக்க முடியும். மேலும் சொற்களை வாசிக்கும் அதே நேரத்தில் இது கச்சேரிகளில் சுருதியை நிலைப்படுத்தும் செயலையும்கூட செய்கின்றது. பல்வேறு வகையான சுருதிகளுக்கு ஏற்ப 5 முதல் 10 வகையான சுருதிகளில் கூட பல முகர்சிங் இசைக்கருவிகளை வாசிப்பவர் வைத்திருப்பார். சில நேரங்களில் சுருதி அளவுகளில் சிறிது மாற்றம் செய்வதற்காக அதில் மெழுகினை வைத்து சுருதியை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்வர்.  நாக்கினால் தட்டியும், உதட்டின் மூலம் காற்றினை ஊதியும் வாசிக்கும்பொழுது சில நுண்மையான இசை ஒலிகளை உண்டாக்கி முகர்சிங் கலைஞர்கள் கைதட்டினையும், பாராட்டுதலையும் பெறுவதுண்டு. இதில் வெளிப்படும் இரும்பு எஃகின் வெங்கல நாதமும், சுருதி நாதமும் கேட்பதற்கு மிகவும் இரம்யமாக இருக்கும்.

கச்சேரியில் சுருதியின் நாதத்தையும், மிருதங்கத்தின் சுருதி நாதத்தையும் இது பாடகருக்குக் கூடுதலாகக் கொடுக்கும். மிருதங்கத்தில் வாசிக்க பெறும் ஜதிகளை இதில் வாசிக்கும் போதும், மிருதங்கத்தோடு இணைந்து இதில் சொற்கட்டுகளை வாசிக்கும்போதும் கச்சேரி வெகு ஜோராகக் களைகட்டும்...

பயணத்தில் காதல்...


நான் என்ற அகந்தைகளை கழட்டி விட்டு சென்றேன்..

பயணத்தை நெடுந்தூரம் பயணித்தேன்.

நெடுந்தூரம் பயணத்தில் காதல் மட்டுமே  வருகிறது.

ஆம் ஓர் பார்வையாளன் முதல் முறையாக காதல் கொள்கிறான் எல்லா இடத்திலும், எல்லா வழிகளிலும், தன்னை மறந்து.

பயனிப்பேன் முடிவில்லா பாதையில்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


அலெக்ஸாண்டர் பெரும் வெற்றிகளை அடுத்து உருவாக்கிய நகரம் அலெக்ஸாண்ட்ரியா. இந்த நகரத்தில் இருந்த நூலகம் அந்த நேரத்தில் உலக அறிவின் முழுமையான ஒரு மெய்யியலாளர் கலைக்களஞ்சியமாக இருந்தது.

அலெக்ஸாண்டிரியாவின் நூலகம் பல அழிவு சக்திகளால் பிழைத்திருந்தாலும், மிகவும் பெரிய அழிவுக்கு காரணமாக ஜூலியஸ் சீசர் இருந்தார். கி.மு. 48 இல் தாலமிக் முற்றுகையின் போது நூலகம் விரிவான சேதம் ஏற்பட்டது.

அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் முக்கிய நோக்கம். இந்த உலகின் அனைத்து அறிவையும் தொகுக்க வேண்டும் என்பதேயாகும். துறைமுகத்திற்கு வந்த ஒவ்வொரு புதிய கப்பலிலும், அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம், பண்பாடு, வேத புத்தகங்கள் உள்பட, அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன, பின்னர் அதன் நகல்கள் மட்டுமே உரிமையாளர்களிடம் திரும்பின. இவ்வாறு செய்ததால் தான் உலகின் மிகப்பெரிய அறிவு மற்றும் கற்றல் வளங்களை கொண்டு உருவாகியது இந்த நூலகம்.

என்னப்பா! இந்த வரலாறு தெரியாதா எங்களுக்கு, இந்த துறைமுகத்திக்கு விண்கப்பல் வந்துச்சா இல்லையா? அதைப்பற்றி, நீங்கள் கேட்பது புரிகிறது. பல ஆண்டுகளாக வரலாற்று ஆவணங்களை இங்கு நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. வானத்தில் பறக்கும் தட்டுக்கள், மர்மமான ஒளிரும் விளக்குகள் மற்றும் பிற விசித்திர நிகழ்வுகள் பல நூற்றாண்டுகளாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நமது நவீன நாளையிலும் வயதிலும் நாம் கற்பனை செய்ய முடியாத நிகழ்வுகளையும், வேற்றுகிரகவாசிகள் பற்றிய   உண்மையைக் கொண்டிருந்தது அலெக்ஸாண்டிரியாவின் நூலகம்.

இந்த உண்மை, நிச்சயமாக, இனிவரும் காலங்களில் பல்வேறு வடிவங்களில் வரலாம். அலெக்ஸாண்டிரியா நூலகத்தின் முக்கியத்துவம். கடந்த காலத்தில் இருக்கும் விஷயங்களை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதை பொறுத்தது.

புளூடார்ச் (46-120 கி.மு.)...

கிரேக்க உயிரியலாளர் மற்றும் வரலாற்றாசிரியரான புளூடார்ச் ( பின்னர் ரோமானிய குடிமகனாக மாறினார்.) மூன்றாம் மிதிட்ரிடிக் போரில் (75-63 கி.மு.) ஒரு போர்க்களத்திலுள்ள ஒரு பறக்கும் தட்டு காட்சியை வரலாற்று ஆதாரத்துடன் நமக்கு வழங்குகிறார்.
இந்த ரோமன் பிரமுகர் நீண்ட காலம் வாழ்ந்தார்கள், அதனால் அவரது படைப்புகளை வேற்றுகிரக ஆய்வாளர்கள் நம்பகமான வரலாற்று ஆதாரங்களாகக் கருதுகின்றனர்.

சாட்சியம் ப்ளுடார்ச் புத்தகத்தில் "லுலுல்லஸ்" (கிரேக்கம் ΛΕΥΚΟΛΛΟΣ) இல் காணலாம்.

சான்றுகளின் படி, லுல்லுல்லுஸ் மற்றும் அவரது ரோம இராணுவம் போர்த்துக்கல்லின் அரசனான மித்ரிட்ரடிஸ் மற்றும் செர்டோரியஸால் அனுப்பப்பட்ட அவரது கூட்டாளியான மாரியோவுக்கு எதிராக போரிடுவதற்காக போர்க்களமாக அமைக்கப்பட்டனர். யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, இரண்டு இராணுவங்களுக்கும் மேலாக ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தோன்றியது.

இந்த சம்பவத்தை பின்வரும் அசல் வார்த்தைகளில்:

"அவர் (லூசுல்லஸ்) எதிரிகளை சந்தித்தபோது, மக்கள் எண்ணிக்கையால் வியப்படைந்தான், போரை தவிர்க்கவும் தாமதிக்கவும் விரும்பினான். இராணுவ வீரருடன் சேர்ந்து ஒரு இராணுவ வீரனாக மித்திர்டிடேச்டிக்கு உதவ செர்டோரியஸால் ஐபீரியாவை அனுப்பிய மாரிஸைப் போல (லுல்லல்லஸ்) அவரை சவால் செய்தார்.

மோதலை நோக்கி அணிவகுத்து செல்லும் போது, எந்தவிதமான கவனிக்க முடியாத மாற்றமும் இல்லாமல், காற்று திறந்து, ஒரு சுழற்சியைப் போன்ற ஒரு விரைவான இறங்கு பொருள் தோன்றியது. இது வடிவத்தில் ஒரு குவளை போல தோன்றியது மற்றும் நிறத்தில் ஒளிரும் மெல்லிய உலோகம் போல் தோன்றியது" என்று விவரிக்கப்பட்டது. இரண்டு படைகள், பார்வை மூலம் பயந்துவிட்டன. இது ஃபிர்டியாவில் நடந்தது, ஓட்ஸ் என்று அழைக்கப்படுவதற்கு அருகே இருந்ததாக அவர்கள் சொன்னார்கள். " இந்த விளக்கம் லூசுல்லஸின் வாழ்க்கை சரித்திரத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டது.

இந்த ரோமர்கள் வாழ்ந்த காலத்திலேயே புளூட்டார் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தார் என்பதைக் கவனிக்க வேண்டும். இருப்பினும், அலெக்ஸாண்டிரியா நூலகத்தின் ஆரம்ப எரியும் சமயத்தில் அவர் எழுதினார். அவரது ஆராய்ச்சி ஒவ்வொன்றும் புகழ்பெற்றதாக இருந்தது. முக்கியமாக, லூசுல்லஸ் அனுபவித்த இந்த வேற்றுலக வாகன நிகழ்வு பற்றி அவர் அறிந்தபின், இதுபோன்ற நிகழ்வுகளின் மற்ற ஆவணங்களும் நிறைய சேகரித்தார்.

மகா அலெக்சாண்டர்...

வேற்றுகிரக சந்திப்புகளுக்கு, அலெக்ஸாண்டிரியாவைத் தோற்றுவித்த மனிதனைவிட சிறந்த ஒரு ஆதாரம் வேறெதுவும் இல்லை. வரலாற்று சான்றுகளின்படி, அலெக்ஸாண்டர் எளிதில் இதேபோன்ற நிகழ்வுகளை அனுபவித்திருப்பதாக பதிவு செய்யப்பட்டது. புளூட்டாரின் ஆவணத்தின் படி, அலெக்சாண்டர் நவீன லெபனானில் டயர் நகரத்தை
கைப்பற்றுவதற்கு முற்றுகையிட்ட போது, வானத்தில் "பெரிய வெள்ளி கவசங்கள்" அவருக்கு உதவினதாம். அங்கு மூன்று முக்கோண வடிவங்களில் பறக்கும் தட்டுகள். டயர் சுவர்களில் ஒரு பகுதியை அகற்றி, அலெக்ஸாண்டரின் இராணுவத்தை நகரத்திற்கு அனுப்பி வைத்தது.

அலெக்சாண்டரின் மற்ற போர்க்களத்தில் இந்த கேடயங்கள் மீண்டும் காணப்பட்டன. இந்திய மன்னர்களுக்கு எதிரான போரில், அதே கேடயங்கள் அவர்கள் சண்டையிடும் நதிக்கு மேலே தோன்றியதாக அறிவிக்கப்பட்டன. அவர்கள் இரு தரப்பினருடனும் மோதிக்கொண்டனர், அலெக்ஸாண்டர் மகா யுத்தத்திற்குப் பிறகு இந்திய பிராந்தியத்தில் அழுத்தம் கொடுப்பதற்கு அவர் முடிவு செய்தார்.

இருப்பினும், ஒரு வேற்றுகிரக இருப்பு பற்றிய இந்த கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது. அலெக்ஸாண்டரை வெற்றி கொள்ள உதவின வேற்றுகிரக உயிரினங்கள் யாரென்று புளூட்டார்
கூறவில்லை. அனுபவத்தைப் பற்றி எழுதும் போது அவர் ஆதாரங்களை மேற்கோள் காட்டவில்லை, ஏனெனில் அலெக்ஸாண்டரின் எதிரிகளின் சுரண்டல்களால் எழுதப்பட்ட வரலாறுகள் அழிக்கப்பட்டன.

அலெக்ஸாண்டரின் போர்களில் வேற்றுகிரக உதவியாளர்களை விவரிக்கும் வரலாறுகள் பல உள்ளன. நேரம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இதை பற்றி விரிவாக பார்ப்போம், இந்த நிகழ்வுகள் சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரங்கள் தான். புளூட்டார் ரகசியமாக இந்த கதையை விவரிக்கும் ஆவணங்களைக் கொண்டிருந்தாலும், அவை வெளியிடப்படவில்லை. மேலும் அலெக்ஸாண்டரின் கிரியெல்லுக்கு உதவும் வேற்றுகிரகவாசிகளின் பின்னாலுள்ள உண்மையான நோக்கம் அலெக்ஸாண்டிரியாவின் நூலகத்தில் தான் காணமுடியும்.

எவ்வாறாயினும், அலெக்ஸாண்ட்ரியாவின் நூலக இருப்பு காலத்திற்குள் வரலாற்று அறிவுக்கு அடுத்தபடியாக தொடர்ந்து வைத்திருக்கும் கணக்குகள், அலெக்ஸாண்டிரியாவின் நூலகம் எரியும் போது கூடவேவேற்றுலக சடலங்கள் தீயில் அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதில் எந்தவிதமான சந்தேகம் இல்லை...

மது விற்பனை முதலிடம் சாதனை தமிழகம்...


அரியலூருக்கு மிக அருகில் தொண்டமான் துறையில் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பின் நிற்கும் ஆயிரம் ஆண்டு கடந்த சிவாலயம்...


யாராவது வருவார்களா என கிட்டத்தட்ட 10 நூற்றாண்டை கடந்து பல பொக்கிஷங்களை தன்னுள் கொண்டு நம்மை எதிர்பார்த்து காத்திருக்கும் சிவாலயம்...

பிரபஞ்ச சக்தி...


சித்தர்கள் அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவர்கள். ஆகையால் தான் தாங்கள் கண்டு அறிந்த உண்மை சாராம்சங்களையும் தத்துவ ஞானங்க ளையும் பிரபஞ்ச சக்திகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தெளிவாக கூறி வைத்தனர்.

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கை கோட்பாடு கொண்டவர்கள் தான் சித்தர்கள்.

ஆகையால்தான் அனைத் து ஜீவ ராசிகளும் ஆரோக்கிய மாக வாழ மருத்துவம் கண்டறிந்தார்கள். தாங்கள் அருளிய மருத்துவ ஏடுகளில் மனிதன் உட்பட அனை த்து உயிரினங் களுக்கும் மருந்து எழுதியுள்ளனர்.

அதிலும் மனிதனை ஆறறிவு கொண்ட ஜீவன் என்று குறிப்பிடுகின்றனர். மனிதனால் தான் வாழ்வை பகுத்தறிய முடியும் என்கின்றனர் சித்தர்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மனித இனம் நீண்ட ஆயுளும்,ஆரோக்கியமும் பெற பல வழி முறைகளை குறிப்பிட்டுள்ளனர்.

ஆரோக்கியம் என்பது மருந்து மாத்திரை களைக் கொண்டது மட்டு மல்ல.

மனம் தெளிவடைந்து, புத்தி நன்கு கூர்மையடைந்து, ஆழ்ந்த சிந்தனைகளோடு, அமைதியாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை என்கின்றனர்.

அமைதியும் ஆனந்தமும் கொண்ட வாழ்க்கை முறை ஆரோக்கியமாக அமையும்.

இந்த ஆரோக்கிய வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை சித்தர்கள் தெளிவாக வகுத்துரைத்துள்ளனர்.

அதில் தியான முறை, சரசு வாசமுறை, வாழ்க்கை நெறிமுறை போன்றவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

சரசுவாசத்தின் மூலம் தான் உடலில் ஒடுங்கியிருக்கும் சூட்சமங்களை கண்டறிய முடியும்.

இந்த சரசுவாசப் பயிற்சி பற்றி வர்ம மருத்துவத்தில் அகத்தியர் தெள்ளத் தெளிவாக குறி ப்பிட்டுள்ளார்.

இது போல் அனைத்து சித்தர்களும் அவரவர் நிலையில் விளக்கமாக கூறியுள்ளனர்.

இருப்பினும் அகத்தியர் தன்னுடைய வர்ம பரிகார முறையில் குறிப்பிடும் முறைகள் மனித உடம் பில் உள்ள நாடி நரம்புகள் உயிர் மூச்சு ஒடுங்கும் இடங்கள், நரம்பு நிதானம், மனநிலை, மனிதனை ஆட்கொள்ளும் சக்தி இவைகளைப் பற்றி மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சரசுவாசத்தினால், உயிர்நிலை ஒடுங்கும் இடங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி தெளிவு படுத்தினர்.

இவற்றில் மனிதன் அன்றாட வாழ்க்கை முறை செயல்பாடுகள், இல்லற வாழ்க்கை முறை, ஞானிகள் வாழ்க்கை முறை , தாய் சேய் நலம் முதலான வாழ்க்கை முறைகளையும், அவற்றை எவ்வாறு நெறிமுறைகளுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அகத்தியர் ஞானவெட்டி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சரநிலை சுவாசம் தெரிந்த வர்களால்தான் நரம்பியல், எலும்பியல் துறைகளையும், அபூர்வ சிகிச்சை முறைகளையும் துல்லியமாக கண்டறிந்து செயல்படுத்தும் வர்ம மருத்துவர்களாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

சரநிலை சுவாசம், நரம்பு நிதானம் இவைகளை அறிந்த பின் தான் வர்ம விளக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். அதாவது சரப்பயிற்சி,
சரநிலை சுவாசம், உச்சந்தலை சுவா சம் சித்தர்களால் கையாளப்பட்டு வந்த மாபெரும் சக்தி வாய்ந்த உன்னதமான நிலையாகும். இந்த நிலையை அறிந்தவர்கள் மிகவும் சிறப்பாக வர்ம மருத்துவத்தை கையாளுவார்கள் என்பது சித்தர் களின் கூற்று.

இதைத்தான் சித்தர்கள்
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்
பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும்
- என்றார்கள்.

வர்ம மருத்துவர்கள் பொதுவாக பிரபஞ்ச சக்தியை உணர்ந்து தான் வர்ம மருத்துவத்தைக் கையாண்டு வந்துள்ளார்கள்.

பிரபஞ்சத்திற்கும், மனித உடலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது மருத்துவ உலகம் கூறும் உண்மை.

மேலும் அகத்திய பெருமான், பிர பஞ்சத்தை அறிந்தவர்களே மனித உடலை அறிய முடியும்.

மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து அவற்றை சீராக்க முடியும் என்கிறார்.

பிரபஞ்ச சக்தி தான், மருத்துவ உலகிற்கு ஒரு மாபெரும் வழிகாட்டியாகும்.

இதனால் சித்தர்கள் பிரபஞ்ச சக்தி கொண்டு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் வழிமுறைகளை கண்டறிந்து சொன்னார்கள்...

குறிப்பு : சில வழிமுறைகளை மேலோட்டமாக தான் சொல்ல முடியும்.. அவற்றை நீங்களாக புரிந்து கொண்டு உங்களுக்கென்று ஒரு தனி வழிமுறை கண்டு பிடித்து பயிற்சி செய்து வெற்றி பெறுங்கள்... அதுவே இறுதி வரை உங்களுக்கு நிலைக்கும்... இல்லை என்றால் சொல்லிக் கொடுப்பவர் முழுமையாக சொல்லிக் கொடுத்து வழி நடத்துபவராக இருக்க வேண்டும்...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...