12/03/2018

உஷாவின் மரணத்தில் காவல் ஆய்வாளர் காமராஜை நியாயவான் ரேஞ்சுக்கும், மனைவியை இழந்த கணவர் ராஜாவையே கைது செய்யும் அளவுக்கும் காவல்துறை நண்பர்கள் சிலர் கஷ்டப்படுகிறார்கள்....


காமராஜ் பக்கம் நியாயம் இருந்தால் முதல் ஆளாக அவர் பக்கம் நிற்கலாம், ஆனால் வைக்கும் வாதங்கள் தாங்க முடியாத அளவுக்கு அபத்தமாக இருக்கிறது.

நான் காவல்துறையில் கான்ஸ்டபிள் அளவுக்கு உள்ளவர்கள் சிலர் அறிவுக்கூர்மையை பார்த்து வியந்து போயிருக்கிறேன். அவ்வளவு சட்ட நுணுக்கம் உள்ளது. அப்படிப்பட்டவர்களும் காவல்துறையில் உள்ளனர்.

ஆனால் சிலர் காமராஜை காப்பாற்ற போடும் மெசேஜ்களும் சட்டப்பிரிவுகளும் அவர்கள் அறியாமையை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. என்னத்த சொல்ல...வேதனை

வேண்டுமானால் அந்த நண்பர்களுக்கு இப்படி போட்டு முடித்து விடச் சொல்லலாம். காமராஜ் அன்று அங்கே இல்லை, இல்லவே இல்லை.

உஷா வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. வீட்டில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார். அதனால் மரணம்.

3000 பேர் மறியல் செய்ததற்கு காரணம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக, என்று முடித்து விடலாம்...

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் திராவிடம்...


திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ, எங்கும் இல்லை.

இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறு, தமிழம் தமிழ்மொழி அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது.

அது, தமிழ் தவிர்த்த தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது. இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதி அத்திராவிட மொழியாசிரியர்களும், புலவர்களும் திராவிட மொழிகளுக்கும் மூல மொழியாக இருந்த ஒரு பழம் பெரும் மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால் உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல. இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று.

நன்றி: தென்மொழி 1988 நூல், வேண்டும் விடுதலை, பக்.294, 295...

தமிழா என்ன செய்ய போகிறோம்..?


நமக்கு இயற்கையாகவே இங்கு அனைத்தும் கிடைக்கிறது....


ஆனால் நாம் செயற்கையாக கொடுப்பதே சிறந்தது என அதை வாங்கி கொள்கிறோம்..

இயற்கை அற்புதமான ஒன்று.. அதை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்...

பகல் கொள்ளை கேள்விப்பட்டு இருக்கிங்களா?


உங்க குழந்தையை LKG வகுப்பில் சேர்க்கணுமா?

பெங்களூர் பள்ளியில் கட்டணம் ரொம்ப அதிகமில்லை... வெறும்  2லட்சத்தி 2ஆயிரம் மட்டுமே...

உங்கள் வசதிக்காக சில விவரங்களை மட்டும் தமிழில் தெரிவித்துள்ளோம்.

பள்ளியிலேயே டியூசன் கட்டணம் - ரூ.39,830 (பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் 79,660 மட்டுமே) என்ன கொடும சார் இது?

பள்ளி கட்டிட கட்டணம் - ரூ.42,500 என்ன இது வாடகையா?

பள்ளி கட்டிட மேம்பாட்டு கட்டணம் - ரூ.62,500 என்ன இது மீண்டும் வாடகையா? 2.0Version?

பள்ளி உதிரிபாகங்கள் சரிசெய்ய கட்டணம் - ரூ.10,000 என்னடா நடக்குது அப்படி?

LKG கிறிஸ்துமஸ் கட்டணம் - ரூ.825 கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.

கிறிஸ்துமஸ் மதிய சாப்பாடு - ரூ.300 காஞ்சு போன கேக்குக்கு.

இதெல்லாம் உங்க குழந்தையை சேர்க்கும் போது லம்ப்ப்பா உடனே கட்டணும்....

பள்ளியில் சேர்த்தபின் அவ்வப்போது குழந்தையின் டைரியில் எழுதி அனுப்புவோம், அதற்கு எந்த கேள்வியும் கேட்காமல் மூடிக்கிட்டு வந்து காசை மட்டும் கட்டிட்டு போகணும்....

இது இல்லாம சீருடை, ஹாஸ்டல், பள்ளி பேருந்து, மாணவர்கள் சுற்றுலா ஆகியவற்றிற்கு கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்படும்...

நம் வாழ்வியலுக்கே தேவையில்லாத ஒவ்வாத சில விடையங்களை திணிப்பதே வணிகம் இதே தான் வேலைக்காரன் படத்திலும் சொல்லியிருப்பார்கள்...


இனி அரசாங்கம் "தரகு நிறுவனம்" என்றே அழைக்கப்படும்.. நமது தரகு நிறுவனம் வணிகத்திற்காகனது...

மார்ச் 15-ம் தேதி மேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரை டிடிவி தினகரன் அறிவிக்க உள்ளார்...


கட்சியின் கொடியையும் அன்றைய தினம் அவர் அறிமுகப்படுத்த உள்ளார்...

மருத்துவ மாப்பியா : போலியோ சொட்டு மருந்தும் உண்மைகளும்...


மருத்துவ மாப்பியா : அனைத்து காணோளிகளையும் பார்த்துவிட்டு ஆராய்ந்த பிறகே நிதானமாக முடிவெடுங்கள்...


தடுப்பூசி பதிவுகளுக்கு, தடுப்பூசி நல்லது, அதை பற்றி தெரிந்தால் மட்டும் பதிவிடுங்கள்.. மக்களை பயமுறுத்த வேண்டாம் என கூறியவர்களுக்காக இந்த பதிவு..

நாங்கள். மக்கள் பாதுகாப்பிற்காக பதிவிடுகிறோம்..

Vaccines research further...

1. Dr. Nancy Banks - http://bit.ly/1Ip0aIm
2. Dr. Russell Blaylock
(Censored)
3. Dr. Shiv Chopra - http://bit.ly/1gdgh1sk
4. Dr. Sherri Tenpenny - http://bit.ly/1MPVbjx
5. Dr. Suzanne Humphries - http://bit.ly/17sKDbf
6. Dr. Larry Palevsky - http://bit.ly/1LLEjf6
7. Dr. Toni Bark - http://bit.ly/1CYM9RB
8.Dr. Andew Wakefield http://bit.ly/1MuyNzo
9. Dr. Meryl Nass - http://bit.ly/1DGzJsc
10. Dr. Raymond Obomsawin - http://bit.ly/1G9ZXYl
11. Dr. Ghislaine Lanctot - http://bit.ly/1MrVeUL
12. Dr. Robert Rowen - http://bit.ly/1SIELeF
13. Dr. David Ayoub - http://bit.ly/1SIELve
14. Dr. Boyd Haley PhD - http://bit.ly/1KsdVby
15. Dr. Rashid Buttar - http://bit.ly/1gWOkL6
16. Dr. Roby Mitchell - http://bit.ly/1gdgEZU
17. Dr. Ken Stoller - http://bit.ly/1MPVqLI
18. Dr. Mayer Eisenstein - http://bit.ly/1LLEqHH
19. Dr. Frank Engley, PhD - http://bit.ly/1OHbLDI
20. Dr. David Davis - http://bit.ly/1gdgJwo
21. Dr Tetyana Obukhanych - http://bit.ly/16Z7k6J
22. Dr. Harold E Buttram - http://bit.ly/1Kru6Df
23. Dr. Kelly Brogan - http://bit.ly/1D31pfQ
24. Dr. RC Tent - http://bit.ly/1MPVwmu
25. Dr. Rebecca Carley - http://bit.ly/K49F4d
26. Dr. Andrew Moulden - http://bit.ly/1fwzKJu
27. Dr. Jack Wolfson - http://bit.ly/1wtPHRA
28. Dr. Michael Elice - http://bit.ly/1KsdpKA
29. Dr. Terry Wahls - http://bit.ly/1gWOBhd
30. Dr. Stephanie Seneff - http://bit.ly/1OtWxAY
31. Dr. Paul Thomas - http://bit.ly/1DpeXPf
32. Many doctors talking at once - http://bit.ly/1MPVHOv
33. Dr. Richard Moskowitz - http://bit.ly/1OtWG7D
34. Dr. Jane Orient - http://bit.ly/1MXX7pb
35. Dr. Richard Deth - http://bit.ly/1GQDL10

36. Dr. Lucija Tomljenovic - http://bit.ly/1eqiPr5
37. Dr Chris Shaw - http://bit.ly/1IlGiBp
38. Dr. Susan McCreadie - http://bit.ly/1CqqN83
39. Dr. Mary Ann Block - http://bit.ly/1OHcyUX
40. Dr. David Brownstein - http://bit.ly/1EaHl9A
41. Dr. Jayne Donegan - http://bit.ly/1wOk4Zz
42. Dr. Troy Ross - http://bit.ly/1IlGlNH
43. Dr. Philip Incao - http://bit.ly/1ghE7sS
44. Dr. Joseph Mercola - http://bit.ly/18dE38I
45. Dr. Jeff Bradstreet - http://bit.ly/1MaX0cC
46. Dr. Robert Mendelson - http://bit.ly/1JpAEQr
47. Dr. Garth Nicolson - http://bit.ly/1OQVJsF
48. Dr. Marc Girard - http://bit.ly/1iw0smT
49. Dr. Charles Richet - http://bit.ly/1G5GG7j
50. Dr. Zac Bush - http://bit.ly/1LS19OZ
51. Dr. Lawrence Wilson - http://bit.ly/1kcdirf
52. Dr. James Howenstine - http://bit.ly/1iNyFOy
53. Dr Burton A. Waisbren, Sr., M.D. - http://bit.ly/1Nj8LRe
54. Dr. Sam Eggertsen - http://bit.ly/1Mww9XV
55. Dr. Bonnie Dunbar - http://bit.ly/1N5DXNi
56. Dr. Judy Mikovits - http://bit.ly/1QIzmHU
57. Dr. John Bergan - http://bit.ly/1KYv1yY
58. Dr. Rima E. Laibow - bit.ly/1RmW73C
59. Dr. Lee Hieb - http://bit.ly/1VElDUv
60. Dr. Daniel Kalb - http://bit.ly/22FPmxv
61. Dr. Rachel Ross - http://bit.ly/1r7Doik
62. Dr. Kathryn H Hale - http://bit.ly/2erDoW9

VACCINE INGREDIENTS:  Notice that these ingredients include toxic metals (aluminum salts), bizarre animal cells from humans, monkeys, cows, pigs and chickens, ingredients derived from GMOs, the radioactive element barium, artificial coloring chemicals, excitotoxins such as glutamate, chemical cleansing agents (Triton X-100), dangerous bacterial strains (E.coli), toxic chemicals such as glutaraldehyde, thimerosal (mercury) and much more.

No one can refute any of this because it’s admitted by the CDC itself. <<< Do you honestly believe these ingredients would not cause health problems?

அப்படி போடு அருவாள...


மருத்துவ மாப்பியா : இங்கு தவறான ஒன்று சரியென திணிக்கப்படுகிறது...


ஒரு விடயம் கட்டாயப்படுத்து படுகிறது எனில் அங்கு தவறு நடக்க அதிகம் வாய்ப்புள்ளது..

இங்கு கட்டாயம் என பெயரில் வியாபாரம் நடக்கிறது..

நமது குழந்தைகள் தான் அதில் பொருள்கள்...

மதுரையில் இன்று ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர்கள்...


சாமானிய மக்களுக்கு அபராதம் விதிக்கும் நீங்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா. இந்த படங்கள் மாட்டுதாவணி மற்றும் கோரிப்பாளையத்தில் எடுக்கப்பட்டவை.

சாமனிய மக்களாகிய நாங்கள் இனி இவர்களை நிறுத்தி அபராதம் வசூலிக்கலாமா ?

மனிதனுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்...


இதை அறிவது எளிது, ஒருவனுக்கு நோய் தாக்கப்பட்டால் அதை முடிந்த அளவு உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி எதிர்க்கும்..

முடியாத சூழ்நிலையில் தான் நாம் அனைவரும் மருத்துவமனையை நாடுகிறோம்..

நாம் சென்றதற்கான நோயின் அளவு குறையுமே தவிர, தீராது..

அடுத்த சில நாட்களில் உடலில் வேறு பிரச்சனை வரும்.. மறுபடியும் மருத்துவமனை.. புரியவில்லையா..?

வியாபாரம் நடக்கிறது.. நாம் வாடிக்கையாளர்கள்...

கேரள மாநிலம் குமுளியில் கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்த போலீசார், 5 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர்...


தமிழக-கேரள எல்லையில் குமுளியில் உள்ள உணவகத்தில் உணவருந்திய ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளனர்.

அந்த நோட்டு கள்ளநோட்டாக இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் அவரை போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர் பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் நகரை சேர்ந்த கிரீசன் என்பதும், இதேபோல் பல இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், 5 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதில் அவரது அண்ணன் சுகேசன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்...

பாஜக பினாமி கேடுகெட்ட அதிமுக அரசின் நோக்கம் பணம் மட்டுமே...


ஆத்மா...



இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஆத்மா என்பது உண்டு, அப்படிப்பட்ட ஆத்மா பிறக்கும் இடம், காலம் அனைத்தும் பூர்வ புன்னியத்தை அடிப்படையாக கொண்டது.

கடவுள் பாதி மிருகம் பாதி என்பவன் தான் மனிதன், இதில் கடவுள் என்பது ஆத்மா, மிருகம் என்பது மனிதமனம்.

நாம் ஒரு காரியத்தை செய்யும் போது கடவுள் ஆகிய ஆத்மா நமக்கு சரியான திசையை காண்பிக்கும்.

ஆனால் மனிதமனம் ஆன மிருகம் நம்மை தவறான வழியில் நம்மை இழுத்துச் செல்லும்.

அப்படி இழுத்துச் செல்லும் மனம் என்ற மிருகத்தை நம் ஆத்ம பலத்தால் கட்டுப்படுத்தி சரியான திசையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

மனம் என்ற மிருகத்தை எப்படி ஆத்மாவை வைத்து கட்டுப்படுத்த முடியும்? ஆத்ம பலத்தை எப்படி பெறுவது?

ஆத்ம பலம் பெற குருவின் துணை அல்லது அருள் வேண்டும்.

ஞானம் இரண்டு வகைப்படும் ஒன்று தெய்வீக ஞானம் மற்றொன்று பிரம்ம ஞானம் அல்லது ஆத்ம ஞானம் என்று கூறலாம்.

தெய்வீக ஞானம் நமது கர்ம வினையின் அடிப்படையில் கிடைக்கும் அதாவது நமது பூர்வ புண்ணிய கா்மா சரியாக இருந்தால் தெய்வீக ஞானம் இயற்கையிலேயே கிடைத்து விடும். அல்லது நாம் இப்பிறவியில் செய்யும் நல்லவை, தீயவையைக் கொண்டு உண்டாகும்.

தெய்வீக ஞானத்தின் அடுத்த நிலை தான் ஆத்மா ஞானம் அல்லது பிரம்ம ஞானம், ஆத்ம ஞானம் அல்லது பிரம்ம ஞானம் பெற கட்டாயம் குருவின் அருள் அல்லது துணை தேவை. குருவருள் இன்றி நாம் பிரம்ம ஞானத்தின் வாசலில் தான் நிற்க வேண்டும்.

குருவருள் எப்படி கிடைக்கும்?

நாம் குருவை தேட வேண்டாம், எப்படி நாம் கடவுளை (பரபிரம்மத்தை) தேடுகின்றோமோ அதே போல கடவுளும் தன்னுடைய குழந்தையை மீட்டு தன்னிடம் அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறது.

அப்படி அழைத்துச் செல்ல பிரம்மம் நேராக வருவதில்லை தனக்கு பதிலாக குருவை அனுப்பி வைகின்றார்கள். நமது செயலும், நமது என்னமும், நமது பூர்வ புண்ணிய கா்மாவும் சரியாக இருந்தால் குரு நம்மை தேடி வருகின்றனர்.

அப்படி வந்த அல்லது கிடைத்த குருவை சிறிதும் ஐயம் இன்றி ஆத்மார்த்தமாக நாம் ஏற்றுக் கொண்டு அவர் வழி நடந்தால் பிரம்ம ஞானம் அல்லது ஆத்ம ஞானத்தின் கதவுகள் திறக்க படும்.

அப்படி திறக்கப்பட்ட பின்பு நம் ஆத்மவானது பரமாத்மாவை (நமது உண்மையான பெற்றோர்களை) சென்று அடைகிறது.

சரியான குரு இவர் தானா என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும், என்ற கேள்வி எழுவது சகஜம் தான், நீங்கள் அதைப் பற்றிய கவலை கொள்ள வேண்டியது இல்லை பிரம்மம் (நமது உண்மையான பெற்றோர்கள்) பார்த்து கொள்ளும்.

நாம் வணங்கும் கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து குருவின் வழி சென்றால் நிச்சயம் இறவா நிலை மீண்டும் பிறவா நிலையை அடைவோம்.

தக்க சமயத்தில் உங்களுக்கு கொடுக்க வேண்டியதை உங்கள் குருவானவர் தருவார் அதை விட்டு விட்டு நம் உடலை காயகல்பம் ஆக்க வேண்டும், அப்படி செய்தால் தான் பிரம்மத்தை அடைய முடியும் என்று நினைக்க வேண்டாம்.

எது எப்போது எப்படி எங்கே நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்...

தமிழா விழித்துக்கொள்..


பாரம்பரிய விதைகளை அழிக்கும் வேலையில் இறங்கியது அரசு...


நான் பல முறை நண்பர்களிடம் பேசும் போது டான்சானியா நாட்டில் பாரம்பரிய விதை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம், அது போல இங்கு விரைவில் கொண்டு வந்து நம் பாரம்பரிய விதையை முடக்குவார்கள் என்று கூறினேன், அது இன்று வேறு வடிவில் வந்து விட்டது.

ஒரு சிலர் பாரம்பரிய விதைகளை கொண்டு விவசாயம் செய்கிறார்கள், மரபணு மாற்று விதைகளின் சிக்கல் தெரிந்த பலர் இயற்கை, பாரம்பரிய விவசாயத்திற்கு மாறுகிறார்கள். இது சமீப காலத்தில் மிகவேகமாக இளைஞர் மத்தியில் பரவி பலர் வெளிநாடு வேலைகளை விட்டுவிட்டு விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதை இப்படியே விட்டால் காலப்போக்கில் எல்லாம் இயற்கை மயமாகிவிடும், நிறுவனங்கள் எங்கு விதை விற்பது, அவனுடைய மூலாதாரத்தையே ஆட்டி பார்க்கும் செயலாக மாறிவிடும்.

அதன் பின்னணியில் உள்ள சதியே இந்த விற்பனை தடை. ஒரு விவசாயியிடம் இருந்து இன்னொருவர் விதை வாங்கி பயிர் செய்ய முடியாது. விரைவில் விதைகள் அழிந்து தற்சார்பு விவசாயம் அழியும் நிலை வரும்.

ஜல்லிக்கட்டு ஒரு வித விதை அழிப்பே
இதுவும் அதன் வகையையே சாரும்
குழந்தைகூட இனி நிறுவன உதவியோடு தான் பெற முடியும் என்ற சூழலுக்கு தள்ளப்படுவோம்...

இந்த நடிப்பெல்லாம் நாங்க எப்பவோ பார்தாச்சி எம் இனத்தை கொன்று குவித்துவிட்டு இப்ப மன்னிப்பா...


சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழிதான் : ஆராய்ச்சியாளர்கள் தகவல்...


சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழிதான் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தெரியவந்துள்ளதாக பிரபல சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் கூறிள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் உள்ள குறியீடுகள் குறித்து சுபாஷ் சந்திர போஸ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 25,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை தமிழ் எழுத்துக்கள், சிந்து சமவெளி நாகரீகத்தில் கிடைத்த எழுத்துகள் அனைத்தும் தமிழ் எழுத்துக்களே என்றார்.

தமிழகத்தில் பாறை ஓவியங்கள், குறியீடுகள், எழுத்துகள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பலர் உள்ளதாகக் கூறிய சுபாஷ் சந்திர போஸ், அவர்களை கொண்ட குழு அமைத்து கீழடி பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/10/3/2018/tamil-used-communicate-indus-valley-says-researchers

இன்னும் இந்த அரசாங்கத்தை நம்பகிறீர்களா..?


தமிழ்ப் பண்பாட்டில் இரண்டறக் கலந்த ஒன்று மஞ்சள்...


தமிழ் பெண்களின் பழக்க வழக்கங்களில் மிகவும் முக்கியமான ஒன்று முகத்திற்கு மஞ்சள் பூசுவது.

மஞ்சள் தடவிய புத்தாடை, மஞ்சள் பூசிய கயிறு, மஞ்சள் பூச்சுப் பெற்ற அரிசி, பிடித்து வைத்த மஞ்சள், சுவரில் திருநீறு போல இடப்படும் மஞ்சள்கீற்று, மஞ்சள் கரைத்த கலசநீர் எனத் தமிழ்ப் பண்பாட்டில் மஞ்சள் இரண்டறக் கலந்துள்ளது.

மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால் அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு.

மருத்துவகுணம்...

மஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது.

வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.

மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.

வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிப்பட்ட வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் பத்துப் போட்டால் குணம் உண்டாகும்.

மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் கட்டிகள் உடைந்துவிடும்.
மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்த வர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள்.

அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.

மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.
மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.

மஞ்சள் கரிப்பொடியை பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும்.

மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப் பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.

கொல்லப்படும் வைரஸ்...

மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் மகிமை...

கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது. அதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அழகு தரும் மஞ்சள்...

அ. தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.

ஆ. மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு போய்விடும்.

இ. பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதுமட்டுமின்றி இதனை வெடிப்புள்ள உதட்டில் தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கிவிடும்.

ஈ. எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலால் மாறியிருந்த சருமத்தின் நிறம் மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு சருமமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.

உ. பாதங்களில் இருக்கும் வெடிப்புக்களை போக்குவதற்கு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால் விரைவில் வெடிப்புக்கள் நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும்.

ஊ. சருமத்தில் உள்ள காயங்களை போக்கி, அழகான சருமத்தை பெறுவதற்கு, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

எ. தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும்.

ஏ. மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பும் கொடுக்கும்….

ஐ. முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் முடி வராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது.

மஞ்சள் பூசுங்க...

இனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்..

இன்றைய இளம் பெண்கள் பலருக்கும் சோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் போனதுமே காரணம்.

பண்டைய காலத்திலேயே எந்த படிப்பும் இல்லாமல் நிபுணனாக வாழ்ந்தவன் தமிழன்...

இதில் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தான் மக்கள் அதிகமாக இறப்பார்கள், இதை யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம்...


கோவை சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் மரணம்...


கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ரிஷ்வான் உயிரிழந்துள்ளார்.

சிறையில் வலிப்பு வந்து மயங்கி விழுந்த கைதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கோவை மத்திய சிறையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கைதிகளின் உயிரிழப்பு 5 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது...

தமிழகத்தின் நீரவளத்தினை காக்க களம் கண்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை கைது செய்து... மாலை விடுவித்தது...


பாஜக பினாமி கேடுகெட்ட அதிமுக  அரசை வன்மையாக கண்டிக்கிறோம்...

செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி..


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு"

உலகப்பொதுமறை என வள்ளுவப் பெருந்தகையனார் அமிழ்தினும் இனிதான தமிழ் மொழியினில் அருளிச் சென்ற 1330 குறள்களுள் முதற்குறள்.

எவ்வாறு உலக எழுத்துக்களுக்கெல்லாம் 'அ'கரம் முதலாவதாக இருக்கின்றதோ அதேப் போல் இந்த உலகத்திற்கு இறைவன் முதல்வனாக இருக்கின்றான் என்ற மாபெரும் கருத்தை எளிமையாக எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

சரி...!!! ஆனால் உண்மையிலேயே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளதா என்ற கேள்வி என்னுள் ஒருநாள் எழுந்தது. அதற்குரிய விடையினை அறிந்துக் கொள்ளப் பல மொழிகளின் எழுத்துக்களைப் பற்றித் தேடிய பொழுது அந்தக் கருத்து உண்மைதான் என அறிந்துக் கொண்டேன்.

ஆம்!!! தற்போது உலகத்தில் அதிகமாக பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், மண்டாரின் (Mandarin) பிரன்ச்சு (French) ரசிய மொழி, செர்மன், சுபாநிசு (spanish) ஆகிய மொழிகளிலும் இந்த மொழிகளுக்கு எல்லாம் மூலமான இலத்தின் (Latin) மற்றும் கிரேக்க மொழிகளிலும் கூட அகரம் ('A') என்னும் எழுத்தே முதல் எழுத்தாக உள்ளது.

உலகின் மற்றப் பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கே அகரம் முதல் எழுத்தாக இருக்கும் பொழுது, இந்திய நாட்டு மொழிகளுக்கு மட்டும் அது வேறு படவா போகின்றது. இந்திய நாட்டு மொழிகள் அனைத்திற்கும் அகரமே முதல் எழுத்தாக திகழ்கின்றது.

எனவே 'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது சரி தான். இப்பொழுது அந்த அகரத்தை தமிழ் மொழி எவ்வாறு சிறப்பிக்கின்றது என்பதினைப் பார்ப்போம்.

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாத உறவுகள் தமிழில் அகரத்தை முதன்மையாக வைத்தே அழைக்கப் பெறுகின்றன.

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அத்தை, அம்மாயி, அம்மான் முதலிய பல உறவுகள் அகரத்தால் தொடங்கப்பெறும் வார்தைகளினாலையே அழைக்கப் பெறுகின்றன.

மேலும், ஒரு மனிதன் இந்த உலகினில் வாழும் பொழுது அவன் கடைப்பிடிக்க கூடிய தன்மைகள் மற்றும் அவனைச் சூழ்ந்து இருக்கும் முக்கியமான பொருட்கள் ஆகியவனவும் அகரத்தை முதன்மையாகக் கொண்டே அழைக்கப்பட்டன.

அண்டம், அன்பு, அடக்கம், அமைதி, அன்னம், அறிவு, அழகு, அரசு போன்ற வார்த்தைகளைக் கண்டாலே நாம் அதை உணர்ந்துக் கொள்ள முடியும்.

உலகில் உள்ள வேறு எந்த மொழியாவது தன்னுடைய முதல் எழுத்தை இவ்வளவு சிறப்பித்து இருக்குமா என்பது சந்தேகமே..

உலகில் மனிதன் தோன்றுவதற்கு அம்மா அப்பா எவ்வாறு முக்கியமோ, அதேப் போல் அகரமும் தமிழுக்கு முக்கியம்.

எனவே தான் குழந்தைகளுக்கு 'அ' என்றால் 'அம்மா' என்றே நமது தமிழ் மொழி கற்பிக்கின்றது.

இவ்வாறு வாழ்க்கைக்கு இன்றியமையாத விசயங்களை ஒரு மொழியின் முதல் எழுத்தின் மூலமே பெயரிட்டு வழங்குவதும் ஒரு வகை அறிவியலே ஆகும்...

ரூபாய் நோட்டு செல்லாதுனு அறிவிச்ச மாதிரி மது தடைனு அறிவிக்க வேண்டிய தானே...


செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி...


ஒருக் கேள்வி...

உயிர் இன்றி உடல் தனித்து இயங்குமா?

என்னங்க கேள்வி இது... அது எப்படி உயிர் இல்லாம உடல் மட்டும் தனித்து இயங்கும். சின்னப் புள்ளைய கேட்டாக் கூட உயிர் இல்லாம உடல் இருக்காதுன்னு தெளிவா சொல்லிடுமே என்று நீங்கள் கூறலாம்.

உண்மையும் அதுதான். உயிர் இன்றி உடல் இயங்காது என்பது அறிவியல் உண்மை. இது பலருக்கும் தெரியும்.

ஆனால் இதே உண்மையை நமது மொழி மௌனமாய் பறைசாற்றிக் கொண்டு இருப்பதை நாம் அறிந்தும் அறியாமல் இருக்கின்றோம். நம் மொழி எவ்வாறு அந்த உண்மையைத் தன்னுள் அடிப்படையாகக் கொண்டு உள்ளது என்றுப் பார்ப்போம்.

தமிழ் எழுத்துக்கள் இரு வகைப்படும்.

௧) முதல் எழுத்துக்கள் - அ , ஆ என்று ஆரம்பிக்கும் 12 உயிர் எழுத்துக்களே முதல் எழுத்துக்கள் ஆகும்.

௨) சார்பு எழுத்துக்கள் - க், ங், என்று ஆரம்பிக்கும் 18 மெய் எழுத்துக்களே சார்பு எழுத்துக்கள் ஆகும்.

மெய் எழுத்துக்களால் தனித்து இயங்க முடியாது. அவை முதல் எழுத்துக்களான உயிர் எழுத்துக்களைச் சார்ந்தே இயங்குவன. எனவே தான் அவற்றைச் சார்பு எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.

இப்பொழுது அந்த 'மெய்' என்னும் சொல்லை நாம் சற்று கூர்ந்துப் பார்ப்போம்.

தமிழில் 'மெய்' என்னும் சொல்லுக்கு 'உடல்' என்னும் அர்த்தமும் உண்டு.

மெய் = உடல்.

எனவே, மெய் எழுத்துக்களில் 'மெய்' என்பதற்கு பதிலாக 'உடல்' என்று வைத்துப் பார்த்தோமானால், உயிரைச் சார்ந்தே உடல் இருக்கும் என்பதே தமிழ் கூறும் எழுத்துக்களின் விதி என்று நாம் அறியலாம்.

இவ்வாறு மெய் எழுத்துக்களை உயிர் எழுத்துக்களைச் சார்ந்து இருக்கும் எழுத்துக்கள் என்றும் அவை தனித்து இயங்கும் தன்மையை பெற்றவை அல்ல என்றும் தனது அடிப்படை எழுத்துப் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருக்கும் தமிழ் , அதன் மூலம் 'உயிர் இன்றி மெய் (உடம்பு) இல்லை' என்ற அறிவியல் கருத்தினை அமைதியாக உரைத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

மேலும் இந்த உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேருவதன் மூலம் நமக்கு உயிர்மெய் எழுத்துக்கள் என்னும் 216 எழுத்துக்கள் கிடைக்கின்றன.

இந்த உயிர்மெய் எழுத்துக்களை நாம் உணர்ச்சிகள் என்று வைத்துப் பார்த்தோம் என்றால் இன்னொரு உண்மை நமக்கு விளங்கும்.

உயிரும் உடலும் இணைந்து இருந்தால் தானே உணர்ச்சிகள் தோன்றும், அதேப் போல் தான் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து உணர்ச்சியான உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன. உயிரோ அல்லது மெய்யோ இல்லாது போனால் உயிர்மெய் எழுத்துக்கள் இருக்காது... அதேப்போல் உணர்ச்சியும் இருக்காது!

இதுவே நம் தமிழ் கூறும் உண்மை! அறிவியல் ஆராய்ந்துக் கூறும் ஒன்றை நம் மொழி அதன் ஆதாரமாகவே வைத்து இருக்கின்றது.

நினைக்கவே சிலிர்க்கின்றது....

மராட்டிய ரஜினி கலாட்டா...


இவருக்கு தான் காவிரி மீட்பு நாயகனேனு போஷ்ட்டர் ஒட்டுனாங்க.. கேவலமா இருக்கு.. இதெல்லாம் பார்த்தா...

தற்போது நிலவிவரும் துருப்பிடித திராவிடமும் அதிகார ஆரியக் கூட்டமும் பற்றிய செய்திகளில் சில....


கடந்த நாற்ப்பத்து ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் என்ற பெயரில் திராவிடம் என்ற இந்தியத்தின் பொய் முகக் கட்சிகளே தமிழர்களை இதுநாள் வரை ஆண்டு வருகின்றன.

இதில் தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இரண்டு கட்சிகளும் தமிழ் நாட்டு மக்களுக்கு  அழுகின்றப் பிள்ளைக்கு இரண்டு பொம்மைகளைக் காட்டி ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்  என்று சொல்வதைப் போல இரண்டில் ஒன்று மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால்  தி.மு.க.- ஆட்சியின் ஊழல்-பகல் கொள்ளை-கருப்புச்சட்டம் போன்றக் குற்றங்களை அ.தி.மு.க.-நேரடியாக விமர்சித்து மக்களுக்குத் தெரிவிக்கின்றது, தி.மு.க. -வும், அ.தி.மு.க.விற்க்கு எதிராக அதையேத் தெரிவிக்கின்றது..

இதனால் தமிழ் மக்களாகிய நாம் வாக்காளர்களாக விலைக்கு விற்க்கப்பட்டு வருகின்றோம்.

திராவிடம் என்றச் சொல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தேசிய இனங்களுக்கான ஒற்றைச்சொல் என்றுக் கூறி திராவிட மாயை யால் ஏய்த்துவரும் இந்தியத்தின் பொய்முகக் கட்சிக் கூட்டத்திற்கு
திராவிடம் என்ற சொல் சமசுகிருத மொழிச்சொல், அதன் உட்ப்பொருள்  தமிழரினம் என்பதன் உன்மை தன்மையை மறைத்து தமிழரினத்தை அடிமைச் செய்து வருகின்றது.

இந்தியத்தின் ஆரியப் பார்ப்பனியம்.
இப்படி இந்திய தேசியத்தாலும், திராவிடக் கட்சிகளினாலும் தமிழகளாகிய நாம் காலம் காலமாக நமதுச் சொந்த மண்ணைப் படிப்படியாக மதிய - மாநில, ஆட்சியாளர்களினால் இழந்து வருகின்றோம்.

ஏனிந்த நிலை ?

தமிழன் அல்லாதவர்கள் தமிழகத்தை ஆள்வதனால்த் தானே...

தமிழ்நாட்டில் காங்கிரசு என்ற கருமாதிக் கட்சியால் " பச்சைத் தமிழன்" காமராசர் முதல்வராக இருந்தகாலத்தில் தமிழகளின் நிலங்களான "காசர்கோடு" - "பீர்மேடு" - "தேவிகுளம்" போன்ற தமிழனுக்குச் சொந்தமான நிலங்களை கேரளா அரசிற்கு தாரை வார்த்தார் நமது பெருந்தலைவர் காமராசர்.

அதனால் தமிழர்களிடையே ஏற்ப்பட்ட எதிர்ப்புகளை நமது பெருமைக்குரிய  " பச்சைத் தமிழன்" தமிழனுக்கே உள்ள  ஏமாளித்தமனத்தால் வந்தாரை வாழவைத்த தமிழகம் கொடுத்தால் குறைந்துவிடமாட்டோம் என்று கூறி தமிழனின் ஏமாளித்தமனத்தால் ஏமாற்றினார்..

இந்த காங்கிரசு என்ற கருமாதிக் கட்சியால் இந்திய விடுதலைக்குப் பிறகு முதல் முறையாக தமிழனின் மேற்க்கு எல்லைகள் பரிப்போனது.

பிறகு மீண்டும் ஒரு முதல்வர் வந்தார்..

காங்கிரசுக் கட்சிக்கு-பக்த்தவச்சலம்- தமிழர்களை கொன்று நிலங்களையும், உடைமைகளையும் சூறையாடிய கன்னட- இன வெறியர்களுக்கு தமிழனின் தங்கச்சுரங்கத்தை பரிசளித்தார் மீண்டும் ஒரு வடமேற்க்கு எல்லையும் கோலார் தங்கவயலையும் இழந்தோம்.

மூன்றாவதாக வந்த முதல்வர் "ஆரிய மாயை" என்று கதைபாடி - திராவிட மாயையில் தமிழனை" அடிமைச் செய்த மிகச்சிறந்தப் பேச்சளர் பேரறிஞர் அண்ணாதுரை - என்ற தெலுங்கன். ( தன் இனத்திற்கு மறைமூகமாக நன்மை செய்தார்).

அவரின் ஆட்சி காலத்தில் ஆந்திரத் தெலுங்கர்களின் மதராசி மமதே என்ற எல்லைத்தாண்டிய பயங்கரவாதப் போராட்டத்திற்கு விடையளிக்க வக்கற்றப் பேரறிஞர் என்னும் பொறுப்பற்ற அண்ணாச் சொன்னார்.. சென்னைக்கு பதிலாக திருப்பதியை தருகின்றோம் என்று மீண்டும் ஏமாளித் தமிழனின் இலக்கணம் செத்துப் போனது.

குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கும் தமிழகத்தின் எல்லை என எத்தனை முறை சொன்னாலும் பேரறிஞர் என்ற அண்ணாவுக்குத் தெரியாதாம். அதனால் நாம் திருப்பதியைத் தராவிட்டால் அவர்கள் சென்னையை கேட்ப்பார்கள் என்றுச் சொன்னார் நமது திராவிட மாயையின் முற்ப்போக்கு முதல் தலைவன் அண்ணா.

தமிழனுக்கான நிலத்தை பரித்த இந்தியாவின் சூழ்ச்சமம் புரியாதத் தமிழனை நாடோடியாக்கக் காலம் காலமாக திட்டமிட்டு வருகின்றது ஆரியம் என்ற நாடோடி இனக் கூட்டம்..

திட்டமிடே தமிழினத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும், கொலையாட்சிச் செய்தும் தமிழனின் நிலங்களை சூழ்சியின் மூலம் கொள்ளையடித்தும் வருகின்றது தமிழனை இந்தியன் என்றுச் சொல்லிச் சொல்லி ஏமாற்றி வருகின்றது இந்திய இறையாண்மை.

தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறதென்றால் கேரளாவின் பாலக்காட்டையும் கருநாடகவின் பெங்களூருவையும் ஆந்திராவின் விசயவாடவையும் தமிழ் நாட்டின் எல்லை என்று வரையரை செய்ய வேண்டியதுத் தானே.

இந்தியத்திற்காக இறையாண்மை பேசிய தமிழகத் தலைவர்கள் இன்று தமிழ் நாட்டில் மார்வாரிகள்- வனிகதில் மின் பொருள் முதல் மென் பொருள் வரை தமிழனை கொள்முதல் செய்ய அணுமதிப்பதில்லை. இரும்பு முதல் தங்கம் வரை அனைத்து விற்பனையும் சூரையாடப்பட்டு வருகின்றது..

தமிழனின் உழைப்பும் தமிழனின் வேளைவாய்ப்பும் மராத்திய, ஒரிய, தெலுங்கு கூலிகளால் பரிக்கப்பட்டு வருகின்றது.

இனியாவது நாம் அனைவரும்  தமிழர் என்ற உணர்வோடு இருந்தால் மட்டுமே நமதுச் சொந்த வீட்டைக்கூட பாதுகாக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழினம் தற்போது விழிப்புணர்வு பெற்று வருவதால்.. தமிழகத்தை முழுவதுமாக அழிக்க திட்டமிட்டு.. அதற்காகவே மீத்தேன், அணுஉலை, சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த தயாராக இருக்கிறார்கள்..

இதனை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதை  அறிந்துணர்ந்து ஒன்றுப்பட்டு செயல்படுவோம்...

அதிமுக அரசு புடுங்குறதுக்கு மட்டும் தான் இருக்கு...


ஆதாம் என்ற தமிழன் : நோவாவின் கதை - ஒரு வரலாற்று ஆய்வு - 3...


நோவாவினை சந்திக்கும்  முன் உங்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கின்றது…

உலகம் இதற்கு முன்னர் அழிந்து இருக்கின்றதா? ஆம் என்றால் எவ்வாறு?

இந்தக் கேள்விகளுக்கு,
கிருத்துவர்கள் - ஆம் உலகம் அழிந்து இருக்கின்றது. கடவுள் வெள்ளத்தின் மூலம் இவ் உலகத்தினை அழித்தார் என்றும்

இந்துக்கள் - ஆம், கிருசுனரின் மச்ச அவதாரத்தின் போது, உலகம் வெள்ளத்தால் அழிந்தது என்றும்

தமிழ் அறிஞர்கள் - ஆம், குமரிக்கண்டம் கடற்கோள்களால் அழிந்தது என்றும் கூறுவர்.

மேலாக சுமேரிய மக்களிடத்தும், மெசொபொடாமிய மக்களிடத்தும் உலகம் வெள்ளத்தால் அழிந்தக் கதைகள் உள்ளன. அப்படி என்றால் இந்த உலகம் எத்தனை முறை அழிந்து உள்ளது?.

அதுவும் கடற்கோள்களாலேயே அத்தனை முறையும் அழிந்து இருக்கின்றதா?நம்புவதற்கு இந்தக் கருத்து ஏதாக இல்லையே!!!

மேலும் விவிலியத்தில்,

 ”இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.” - ஆதியாகமம் (9 - 11 ).

என்று இறைவன் வாக்குக் கொடுப்பதாக அமைந்து இருப்பதினால் இன்னொரு உலக அழிவு நீரினால் வந்து இருக்க வாய்ப்பில்லை.

மேலும் இந்துக் கதைகளிலும் உலகம் மச்ச அவதாரத்திற்கு பின்னர் அழிந்ததாக வரலாறு இல்லை.

இந்த கருத்துக்களை எல்லாம் வைத்துப் பார்த்தோம் என்றால் உலகம் ஒரே ஒரு முறை நீரினால் அழிக்கப்பட்டு இருக்கின்றது  என்றும் அந்த வரலாறே காலப்போக்கில் மனிதன் சென்ற இடங்களில் எல்லாம் பல்வேறுக் கதைகளாக மாறி இருக்கின்றது என்றும் புலனாகும்.

சரி… இப்பொழுது நாம் நோவாவிடம் வருவோம்..

விவிலியத்தின்படி, நோவா பாவம் செய்து பெருகி இருந்த மனிதர்களுள் உத்தமனாக இருந்தவன். எனவே இறைவன் அவனைத் தேர்ந்து எடுத்து அவனை ஒரு படகினைச் செய்ய சொல்லுகின்றார். அவர் இந்த உலகினை வெள்ளத்தினைக் கொண்டு அழிக்கப் போவதாகவும், அவ்வாறு உலகம் அழியும் போது நோவா அவன் குடும்பத்தினரையும் உலகில் உள்ள மற்ற உயிரினங்களையும் அந்தப் படகினில் ஏற்றி உயிர் பிழைக்குமாறும் சொல்லுகின்றார். அவ்வாறே நோவாவும் செய்து வெள்ளத்தில் பிழைக்கின்றான்.
மீண்டும் உலகில் அவன் வாழ்வினையும் தொடங்குகின்றான். இது தான் நோவாவின் கதை.

கதை இருக்கட்டும் நோவா உலகின் முதல் மனிதன் தமிழன் என்றுப் பறைசாட்டுவதாக சொன்னீர்களே அது என்னவாயிற்று என்று வினவுகிறீர்களா…

இதோ நம் கதைக்கு வருகின்றேன்.

நோவா என்றவன் படகுடனேயே தொடர்புக் கொண்டவனாக விவிலியத்தில் அறியப்படுகின்றான். நோவா என்றால் அனைவருக்கும் படகு தான் நினைவிற்கு வரும். இங்கு தான் நாம் ஒரு தமிழ் வார்த்தையைப் பற்றிப் பார்க்க வேண்டி வருகின்றது.

‘நாவாய்’ - தமிழில் படகிற்கு வழங்கும் பலப் பெயர்களில் இதுவும் ஒன்று. இங்கு நமக்கு ஆச்சர்யம் அழைப்பது என்னவென்றால் ‘நாவாய்’ என்றச் சொல்லுக்கும் ‘நோவா’ என்ற சொல்லுக்கும் உள்ள பொருத்தம் தான். வரலாற்று அறிஞர்களும் மொழி அறிஞர்களும் ’நாவாய்’ என்றச் சொல்லே மருவி ‘நோவா’ என்று மாறி இருக்கின்றது என்றுக் கூறுகின்றனர்.
இறைவன் ஓர் மனிதனை

‘நாவாயினைக்’ கட்டச் சொல்லுகின்றார். அந்த ’நாவாயினைக் கட்டிய மனிதனே’ காலப்போக்கில் மருவி ‘நோவாவாக’ மாறி விட்டான் என்பதே அறிஞர்களின் கருத்து.

மேலும் விவிலியத்தின்படி இறைவன் நோவாவிற்கு படகினைக் கட்ட சில அறிவுரைகள் தருகின்றார்.

“நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு” - ஆதியாகமம் ( 6 - 14)

இங்கே கொப்பேர் மரம் என்று ஒரு மரத்தினைக் குறிப்பிடுகின்றார். நீங்கள் யாராவது வேறு எங்கேயாவது ‘கொப்பேர் மரம்’ என்ற ஒன்றினை கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா?நான் கேள்விப்பட்டது இல்லை. எனவே அது கொப்பேர் மரம் தானா என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருக்கின்றது. அது ஏன் ‘காப்பெரு’ மரமாக இருக்கக் கூடாது.

‘காப்பெரு மரம்’ மொழியாக்கத்தின் போது ‘கோப்பெரு மரமாக’ மாறி இருக்கலாம் அல்லவா!!!

காப்பெரு மரமா?… அப்படி என்றால் என்ன என்றுக் கேட்கின்றீர்களா…

’காப்பெரு’ என்றால் காட்டில் உள்ள பெரிய மரம் என்று அர்த்தம். இறைவன் நோவாவை ஒரு மிகப் பெரிய கப்பலினைக் கட்டச் சொல்லுகின்றார் என்றுக் கண்டோம்.

அந்தக் கப்பலின் அளவையும் விவிலியத்தின் படி அவரே கூறி இருக்கின்றார்.

 ”நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.” - ஆதியாகமம் (6 - 15).

இந்த நீளத்தில் படகினைச் செய்ய ஒரு மரம் வேண்டும் என்றால் அது நிச்சயம் பெரிய மரமாகவே இருக்க வேண்டும். அத்தகைய பெரிய மரங்கள் காதினில் காணப்படுவதே இயற்கை. எனவே இறைவன் நோவாவினை ‘காட்டினில் உள்ள பெரிய மரத்தினைக்’ கொண்டு நாவாயினைக் கட்டு என்று சொல்லி இருக்க கூடும். அதுவே காலத்திலும் மொழியாக்கத்திலும் ‘கோப்பெரு மரம்’ என்று மருவி இருக்கக் கூடும்.நிற்க.

இது வரை நாம் நோவாவின் வரலாறு எவ்வாறு தமிழுடன் கலந்து வருகின்றது என்பதனைப் பார்த்தோம். இப்பொழுது நோவா செய்த ஒரு முக்கியமான செயலைப் பற்றிப் பார்ப்போம்.

வெள்ளம் வற்றி விட்டது. நோவாவின் கப்பலும் கரை தட்டி விட்டது. அவன் கப்பலில் ஏற்றிய உயிரினங்களோடும் அவனின் குடும்பத்தினரோடும் நோவா தரை இறங்கி விட்டான். அப்பொழுது அவனை அழியாமல் காப்பாற்றிய கடவுளுக்காக அவன் ஒருக் காரியம் செய்கின்றான். அவன் கடவுளிடம் தன நன்றியைத் தெரிவிப்பதற்காக சில மிருகங்களைப் பலி இடுகின்றான்.

“அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.” - ஆதியாகமம் (8 - 20)

நோவாவின் இந்தச் செயலின் மூலமே உலகில் பலி இட்டு இறைவனை வேண்டும் வழிப்பாட்டு முறை தோன்றியது. அது இன்றைக்கும் நம் ஊரினில் தொடர்வதனை நாம் காணலாம். இந்தப் பலி வழிப்பாட்டு முறை தான் பின்னாளில் சமணமும் பௌத்தமும் தோன்றுவதற்கு காரணம் என்றும் நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

சரி…பலி முடிந்தாயிற்று. நோவாவின் மக்களும் உலகில் பெருகுகின்றனர். பெருகி அவர்கள் உலகில் பரவ ஆரம்பிக்கின்றனர். அதைப் பற்றிய விவிலியத்தின் செய்திகள் ஆதியாகமம் 11 இல் தரப் பட்டு இருக்கின்றன…

“ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்” - 2.

இங்கேயும் மக்கள் கிழக்கில் இருந்து வந்து இருக்கின்றார்கள் என்று கூறப்படும் செய்தியை கவனியுங்கள். நாம் முன்னரே ‘கிழக்கு’ என்பது சிந்து சமவெளி நாகரீகத்தினை குறிக்கலாம் என்று கண்டு இருந்தோம். எனவே விவிலியத்தின் இந்தச் செய்தியின் படி மக்கள் கிழக்கில் இருந்து சிநேயார் என்னும் தேசத்திற்கு செல்லுகின்றனர்.

எனவே ‘கிழக்கு’ என்பது சிந்து சமவெளி நாகரீகமாக இருந்தால் இந்தச் செய்தியின் படி மக்கள் அதில் இருந்து அதற்கு மேற்கில் உள்ள சிநேயார் என்னும் தேசத்திற்கு சென்று இருக்க வேண்டும். ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு மேற்கில் ‘சிநேயார்’ என்னும் தேசம் இல்லை. ‘சுமேரியா’ என்னும் தேசமே இருந்து இருக்கின்றது. இங்கு தான் மொழி அறிஞர்களின் உதவி நமக்குத் தேவைப்படுகின்றது.

அவர்களின் கூற்றுப்படி ‘சுமேரியர்’ என்ற சொல்லே ‘சிநேயார்’ என்று திரிந்து உள்ளது. எனவே மக்கள் சிந்து சமவெளியில் இருந்து மேற்கில் உள்ள சுமேரியாவிற்கு சென்றனர் என்பது வரலாற்று உண்மையாகின்றது.
அப்படி சுமேரியாவிற்கு பயணித்த மக்கள் யார் என்பதற்கும் விவிலியத்தில் அதே ஆதியாகமத்தில் விளக்கம் இருக்கின்றது…

“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.” - 1.

“அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.” - 3.

மேலே உள்ள வாக்கியங்களில் “ நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம்” என்ற வார்த்தைகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
உலகிலேயே முதன்முதலில் செங்கல்லை சுட்டு கட்டிடங்கள் கட்டும் பழக்கம் தமிழனுக்கே உண்டு என்பது ஒரு வரலாற்று உண்மை. செங்கல்லை சுடும் பழக்கம் தமிழனால் கண்டுப் பிடிக்கப்பட்ட ஒன்று. சிந்து சமவெளி நாகரீகத்தில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் சுட்ட செங்கலினால் கட்டப்பட்டு உள்ளன என்பதும் வரலாற்று ஆய்வு உண்மை. எனவே விவிலியத்தில் குறிக்கப்பட்டு உள்ள மக்கள் தமிழர்களே என்று நாம் கருத முடிகின்றது.

மேலும் அதே விவிலியத்தில் உலகத்தில் அப்பொழுது ஒரே மொழி தான் இருந்தது என்று கூறப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் இருந்த மனிதன் தமிழன் தான் என்றால் இருந்த ஒரே மொழியும் தமிழாகத்தான் இருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.

எனவே விவிலியத்தின் படி உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்றும் நாம் அறிய முடிகின்றது.

ஒரு நிமிடம்… சிந்து சமவெளி நாகரீகம் என்கின்றீர்… அது தமிழர் நாகரீகம் என்கின்றீர். ஆனால் ஆரியரும் அதற்கு உரிமைக் கொண்டாடுகின்றார்கள். எனவே அது தமிழர் நாகரீகம் என்பதற்கு நீங்கள் எந்த விதமான சான்றுகளையோ அல்லது விளக்கங்களையோ அளிக்கவில்லை.

இரண்டாவது நீங்கள் மக்கள் தோன்றியது ‘குமரிக் கண்டத்தில்’ என்கின்றீர் ஆனால் அதைப் பற்றியே வாய் திறக்கவில்லையே. சிந்து சமவெளியினைப் பற்றியே பேசி இருக்கின்றீர். அப்படி என்றால் மக்கள் தோன்றியது குமரிக் கண்டதிலேயா அல்லது சிந்து சமவெளியிலேயா?… தெளிவாக சொல்லுங்கள் என்றுக் கேட்கின்றீர்களா…

நியாயமான கேள்விகள். சரி அப்படி என்றால் நாம் சற்று குமரிகண்டத்தையும் சிந்து சமவெளியினையும் கண்டு விட்டு வந்து விடலாம்…

சிந்து சமவெளி அதோ பரந்து விரிந்து நிற்கின்றது…

சில கூடுதல் தகவல்கள்...

‘Navy’ மற்றும் ’NAVAL’ என்ற ஆங்கிலச் சொற்களின் வேர்ச் சொல் ‘நாவாய்’ என்று நீங்கள் அறிவீர்களா?.

நாவாய் என்பதே ‘நாவி’ என்று மாறி பின்னர் ’நேவி (NAVY)’ என்று மாறி உள்ளது.

மேலும் விவிலியம் கூறும் ‘நோவாவின்’ கதையுடன் திருமாலின் ’மச்ச அவதாரக்’ கதையும் ஒத்துப்போவதை கவனத்தீரா?…இதேப் போல் இன்னும் பல விடயங்கள் விவிலியத்திற்கும் இந்துக் கதைகளுக்கும் இடையில் ஒன்றுப் போல இருக்கின்றன.

இது இப்பொழுது நமக்கு முக்கியம் அல்ல. பின்னர் பார்க்கலாம்...

மறக்காம அந்த பக்கம் சென்றால் குடித்து பாருங்கள்...


ஆதாம் என்ற தமிழன் - ஒரு வரலாற்று ஆய்வு : 2 - தொடர்ச்சி...


இன்னும் மேலாக, கடவுள் மனிதனை மண்ணில் இருந்தே படைத்தார்.

“தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி…” - ஆதியாகமம் (2 - 7)

இப்பொழுது அவன் மண்ணில் இருந்து படைக்கப்பட்டதினாலேயே அவனை மனிதன் (மண் - தன்) என்றுக் கருதவும் வாய்ப்பு இருக்கின்றது.

மேலும் அவனிடம் மனசு இருப்பதினால் அவனை மனுசன் என்றுக் கூறப்படுகின்றது என்றும் கருதலாம்.

இப்பொழுது ஆங்கிலத்தின் man என்ற வார்த்தையையும் woman என்ற வார்த்தையையும் நாம் எடுத்துக் கொள்வோம்.

மண்ணில் இருந்துப் படைக்கப் பட்டவன் என்பதினால் அவனை மண் (Man) என்றுக் கூறுகின்றார்கள் என்றும்,

மண்ணினால் செய்யப்பட்ட மனிதனின் உள்ளிருந்து உருவாக்கப்பட்டதால் பெண்ணை, உள் - மண் (மண்ணின் உள்ளிருந்து) என்ற அர்த்தம் பொருந்த woman என்றும் கூறுகின்றார்கள் என்று நாம் கருதலாம் தானே.

மண்ணும், மனசும் - எந்த மொழி என்று நமக்கு நன்றாகத் தெரியும். தமிழ் மொழியே அது…

மேலே நாம் கண்டக் கருத்துக்களின் மூலம்… அதாவது,

ஆதாம் - ஆதி மனிதன்
ஏவாள் - ஆயா
Man - மண்
Woman - உள் மண்

விவிலியம் கூறும் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்றும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

சரி… மனிதன் பிறந்து விட்டான்… தவறுகளும் செய்யத் தொடங்கி விட்டான். இறைவன் அதனைக் கண்டு மனம் உடைந்து உலகினை அழிக்க முடிவு எடுத்துவிட்டான்…

உலகினை அழிக்க வெள்ளம் தயாராக இருக்கின்றது… அதோ வெள்ளம் வரும் அறிகுறி தெரிகின்றது….

வெள்ளத்திலும் முதல் மனிதர்கள் தமிழர்கள் என்று பறைசாட்ட நோவா தன்னுடைய படகுடன் அதோ நிற்கின்றார்…

நோவாவை சந்திப்போம்… அடுத்த பதிவில்...

இன்னைக்கு கருவில இருக்குற குழந்தையை கொல்ற அளவுக்கு சமுதாயம் போய்க்கிட்டு இருக்கு...


என்னை கவர்ந்த உண்மையான எதார்த்த வசனம்...

ஆதாம் என்ற தமிழன் - ஒரு வரலாற்று ஆய்வு -1...


விவிலியம்… கிருத்துவர்களின் வேத நூல்..

இந்நூலில் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றதா? பார்ப்போம்…

விடையினைச் சுமந்துக் கொண்டு பழைய ஏற்பாடு இதோ நிற்கின்றது.

முதலில் பழைய எற்பாட்டினைப் பற்றி சிறிது அறிந்துக் கொள்வோம்.

இது கிருத்துவின் வருகைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி எடுத்து உரைப்பது.

உலகத்தின் வரலாற்றில் ஆரம்பித்து யூத இனத்தவரின் வரலாறாக செல்லும் ஒரு நூல்.

சரி இப்பொழுது நம் விசயத்துக்கு வருவோம்.

விவிலியத்தின் படி கடவுள் ஆறு ஊழிக் காலங்களில் உலகினைப் படைக்கிறார். ஆறாவது ஊழிக் காலத்தில் அவரின் சாயலிலேயே மனிதனைப் படைக்கிறார். அவனைக் கடவுள் மண்ணில் இருந்துப் படைக்கிறார்.சரி…

அந்த மனிதனை எங்கே படைக்கிறார்? என்றக் கேள்விக்கு விவிலியம் அளிக்கும் பதில்..

“ தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…” - ஆதியாகமம் (2 -8).

மனிதனை ஏதேன் தோட்டத்தில் உருவாக்கினார் சரி.

அந்தத் தோட்டம் ஏன் குறிப்பாக கிழக்கே இருந்தது என்றுக் குறிக்கப்பட்டு உள்ளது? சற்று ஆராயலாமா…

விவிலியம் என்பது பல்வேறுக் காலங்களில் பல்வேறு நபர்களால் தொகுக்கப்பட்ட ஒரு நூலே ஆகும்.

விவிலியம் தொகுக்கப்பட்ட இடம் - மத்திய ஆசியா. எனவே ‘கிழக்கு‘ என்று குறிப்பிட்டு உள்ள இடம் மத்திய ஆசியாவிற்கு கிழக்கிலே தான் இருந்து இருக்க வேண்டும்.

சரி… மத்திய ஆசியாவிற்கு கிழக்கில் உள்ள நாடுகள் என்ன என்ன?
இந்தியா, சீனம் மற்றும் சப்பான்.

இந்த மூன்று நாடுகளில் மிகவும் பழமையான நாகரீகம் கொண்ட நாடு என்ன என்பதனை நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் மனிதன் தோன்றிய இடம் தானே உலகிலேயே பழைமையான நாகரீகம் உடைய இடமாக இருந்து இருக்க வேண்டும்.

அப்படி பழமையான நாகரீகம் எதுவென்று நாம் பார்க்கையில் நமக்கு விடையாய் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது தருவது இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரீகமே ஆகும்.

அப்படி என்றால் விவிலியத்தினில் கூறப்படும் ‘கிழக்கில் உள்ள இடம்‘ சிந்து சமவெளி என்று நாம் கருத இடம் இருக்கின்றது (அதாவது அதை விட பழைய நாகரீகம் கிழக்கில் கண்டுப் பிடிக்கப் படும் வரை).

சிந்து சமவெளி நாகரீகம் தான் விவிலியம் சொல்லும் இடம் என்றால் அதில் வாழ்ந்த மனிதன் தான் முதல் மனிதனாக இருக்க வேண்டும். அப்படி என்றால் சிந்து சமவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? சிந்து சமவெளி நாகரீகம் யாருடையது?

இந்தக் கேள்விக்கான பதிலுக்கு இருவர் போட்டி இடுகின்றனர். சிந்து சமவெளி நாகரீகம் தங்களுடையது என்று அவர்கள் உரிமைக் கொண்டாடுகின்றனர்.

ஒருவர்… ஆரியர்.

இன்னொருவர்… தமிழர்.

இந்த நாகரீகத்திற்கு ஆரியர் உரிமைக் கொண்டாடினாலுமே, சான்றுகளும், எழுத்துக்களும், பல்வேறு வெளிநாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சியும் இந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றே முடிவினைத் தருகின்றது.

இதன் அடிப்படையில் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்றும் அதனால் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் நாம் கருத முடிகின்றது.

நிறுத்துங்கள்… நிறுத்துங்கள்…

சிந்துசமவெளி என்கின்றீர்கள்… தமிழர்கள் என்கின்றீர்கள்…

சான்றுகள் போதவில்லையே… இன்னும் கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள் என்கின்றீர்களா…

சரி… விவிலியத்தின்படி முதல் மனிதன் யார்?

ஆதாம் தானே..

அவனுக்கு அந்தப் பெயரினை வைத்தது யார்?

விவிலியத்தில் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை.

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாம் பெயர் இடுகின்றான் (ஏவாளுக்கும் உட்பட) ஆனால் அவனுக்கு பெயர் யார் இட்டது என்பதனைப் பற்றிய செய்தி இல்லை.

“அப்படியே ஆதாம் சகல வித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் சகலவித காட்டு மிருகங்களுக்கும் பெயரிட்டான்…” ஆதியாகமம் (2 -20).

ஆதாம் என்றப் பெயரே ஆதியாகமம் (2-19) தான் முதல் முறையாக பயன்படுத்தப் படுகின்றது.

அதற்கு முன்னால் முதல் மனிதன் ‘மனிதன்‘ என்ற சொல்லாலேயே குறிக்கப்பட்டு வந்துள்ளான்.

அவனுக்கு ஆதாம் என்றப் பெயர் எப்படி வந்தது என்றச் செய்தி விவிலியத்தில் இல்லை.

ஒரு வேளை அது தொடர்பான செய்தி  இருந்து, பின்னர் அது ஒரு சிலரால் விலக்கப்பட்டு இருக்கலாம் (விவிலியத்தின் செய்திகளை பலர் தங்களுக்கு சாதகமாக மாற்றி உள்ளனர் என்பது வரலாறு) என்றக் கருத்துக்களும் உலாவிக் கொண்டு இருக்கின்றன. எது எப்படியோ அந்தப் பெயர் எப்படி வந்தது என்று நமக்கு கூற நம் வரலாற்று அறிஞர் இருக்கின்றார். அட அவர்தாங்க… தமிழ்..

ஆதி..

இந்த வார்த்தையைக் கண்டவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகின்றது?

ஆதி என்றால் தொடக்கம்.

அப்படி என்றால் தொடக்கத்தில் இருந்த மனிதனை நீங்கள் அழைக்க வேண்டும் என்றால் எவ்வாறு அழைப்பீர்கள்?

ஆதி மனிதன் என்று அழைக்க வாய்ப்பு இருக்கின்றதா..

‘ஆதி மனிதன்‘ … ‘ஆதன்‘ என்றாகி பின்னர் மொழிப்பெயர்ப்பில் ‘ஆதாம்‘ என்றாகி இருப்பதற்கு வாய்ப்பு உண்டல்லவா?

ஆதாம் என்ற சொல்லுக்கும் ஆதிமனிதன் என்ற சொல்லுக்கும் உள்ள பொருத்தங்களை நீங்களே பார்த்து முடிவு செய்துக் கொள்ளுங்கள்…

இப்பொழுது நாம் ஏவாளைப் பற்றி பார்ப்போம்..

ஏவாளுக்குப் பெயர் இட்டவன் ஆதாம்.

“ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான். ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 ).

மேல் உள்ள வாக்கியத்தின் படி, ஏவாள் என்றால் தாய் என்றும் அல்லது பாட்டி என்றும் பொருள் தர வேண்டும்.

ஆனால் ஆங்கிலத்தில் ‘இவே (EVE)’ என்றுச் சொல்லும் சொல் இந்தப் பொருளைத் தருகின்றதா என்றால் இல்லை என்பதே பதில்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம், விவிலியம் என்பது எபிரேயத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட ஒன்றே ஆகும். எனவே இந்தச் சொல்லினை நாம் எபிரேயத்தில் காண்பதே சரியாக அமையும்.

எபிரேயத்தில் ஏவாள் ‘ஆயா‘ என்றே குறிக்கப்படுகின்றாள்.

ஆயா என்றால் பாட்டி என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இவளே பாட்டி என்பதினால் இவளை ஆயா என்றான் ஆதிமனிதன்.

‘ஆயா‘ என்றச் சொல்லே மருவி ‘ஈயா‘ என்றும் ‘இவே‘ என்றும் மாறி நிற்கின்றது.

ஆயா என்றச் சொல்லும் அதன் அர்த்தமும் எம்மொழியினைச் சேர்ந்தவை என்று கூறத் தேவை இல்லை என்றே தான் நினைக்கின்றேன். இரண்டுமே தமிழில் இன்றும் பழக்கத்தில் இருப்பதினை நாம் காண முடியும்.

எனவே, ஆதி மனிதனும் , ஆயாவும் தமிழர்களே என்பதினில் சந்தேகம் இல்லை.

- தொடரும்...

காட்டில் வாழும் அனைத்து பல்லுயிர்களையும், தாவரங்களையும் தீ வைத்து எரித்த பின் வெறும் மொட்டை மலையாக மாற்றுவது தான் இதன் வேலை...


உலகின் தோற்றம் - வரலாற்று ஆய்வு...



உலகம் எவ்வாறு தோன்றிற்று…
அதில் மனிதன் எவ்வாறு தோன்றினான்?

இந்தக் கேள்விக்கு வெவ்வேறு வண்ணம் பதில்களும் காலந்தோறும் வந்துக் கொண்டே இருக்கின்றன. ஆயினும் இது தான் விடை என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எவராலும் இன்னும் உறுதிப்பட கூறப்படவில்லை.

சரி இப்பொழுது அந்தப் பதில்களைப் பற்றிப் பார்க்கலாம்!!! பொதுவாக இந்தக் கேள்விக்குரிய பதில்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்..

உலகத்தினை கடவுள் படைத்தார். மனிதனையும் அவரே படைத்தார். - இது இறை நம்பிக்கையாளர்களின் கூற்று.

உலகம் ஒரு விபத்தினால் உருவானது. அதில் தற்செயலாய் உயிர் உருவானது. அந்த உயிரின் பரிணாம வளர்ச்சியினால் மனிதன் உருவானான். - இது அறிவியல் நம்பிக்கையாளர்களின் கருத்து.

உலகத்தினையும் மனிதனையும் கடவுள் படைத்தார்… ஆனால் மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியினால் வந்தான். பரிணாம வளர்ச்சி இறைவனின் செயல் - இது இறைவனையும் விட முடியாமல் அறிவியலையும் விட முடியாமல் இருப்பவர்களின் கருத்து. (இன்றைய காலத்தில் இந்தக் கருத்தினை உடையவர்களே அதிகமாக இருக்கின்றனர்).

சரி… இப்பொழுது உலகத்தின் தோற்றம் பற்றி பல காலமாக கூறிக் கொண்டு இருக்கும் நூல்களையும் கதைகளையும் அறிவியலையும் பற்றிப் பார்ப்போம்.

முதலில் வட நாட்டுக் கதை.

வடநாட்டுக் கதை கூறும் உலகின் தோற்றம்:

வடநாட்டுக் கதை என்பது ஆரியர்களின் கதை.

இக்கதையின் படி, சிவனும் பார்வதியும் ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்து இருந்ததினால் உலகம் தோன்றிற்று. அப்படிப்பட்ட உலகத்தினில் பிரம்மன் மனிதர்களை நான்கு விதமாய் பிரித்துப் படைத்தான்.

பிராமணர்கள் - பிரமனின் தலையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சத்திரியர்கள் - பிரமனின் நெஞ்சில் இருந்துத் தோன்றியவர்களாம்.

வைசியர்கள் - பிரமனின் தொடையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சூத்திரர்கள் - பிரமனின் பாதத்தில் இருந்துத் தோன்றியவர்களாம்.

மேலும் இந்தக் கதையின் படி இறைவனிடம் இருந்து பிறக்காதவர்களும் இருக்கின்றனர். அவர்கள் பஞ்சமர்களாம். நிற்க.

இந்தக் கதையினில் அறிவியலினை நாம் எங்காவது காண முடிகின்றதா… இல்லை ஆன்மீகத்தினையாவது காண முடிகின்றதா?

கதையினை நாம் மீண்டும் படித்துப் பார்த்தால், இல்லை என்பதே நமது பதிலாக இருக்க முடியும். அதுவும் கடவுள் தான் மனிதனைப்  படைத்தார் என்றக் கொள்கையினை இந்தக் கதையே மறுத்துக் கொண்டு இருக்கின்றது (பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் மக்களை கடவுள் படைக்கவில்லை என்றால் அவர்கள் தோன்றியது எப்படி?).

அறிவியலும் இல்லை, ஆன்மீகமும் இல்லை, வரலாற்றுச் சான்றுகளும் இல்லை… அனைத்துக்கும் மேலாக தெளிவான படைப்பின் விளக்கமும் இல்லை. எனவே இந்தக் கதை வரலாற்று உண்மை அல்ல… வெறும் கதை என்றே நாம் முடிவிற்கு வர வேண்டி இருக்கின்றது.

இப்பொழுது நாம் அறிவியல் கூறும் கூற்றினைக் காண்போம்:

உலகம், விண்வெளியில் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடி விபத்தினால் (Big Bang Theory) தற்செயலாய் தோன்றியது. முதலில் மிகவும் சூடாக இருந்த உலகம் சுழற்சியினால் குளிரக் குளிர உயிர் தோன்றும் வாய்ப்புகள் பெருகின.
அப்படி பட்ட ஒரு காலத்தில், உயிர் தோன்றுவதற்கு ஏதோ ஒரு சூழ்நிலை ஏதுவாக அமைந்ததினால் உயிர் தோன்றிற்று.

ஒரு செல் உயிரியாய்...

அந்த ஒரு செல் உயிரி காலத்தின் போக்கில் பல்வேறு உயிரினமாய் பரிணாம வளர்ச்சியினை அடைந்து இறுதியில் மனிதனாய் ஆகி உள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சி அனைத்து உயிரினங்களின் உடல்களைப் ஆராய்ந்துப் பார்த்தால்
நமக்கு புலனாகும். பாருங்கள் குரங்கின் உடம்பும் மனிதனின் உடம்பும் ஒன்றுப் போலவே அமைந்து இருக்கின்றன. எனவே மனிதன் குரங்கினில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும்.

இதுவே அறிவியலின் கூற்று… மன்னிக்கவும்… ஐரோப்பிய அறிவியலின் கூற்று..

ஐரோப்பிய அறிவியலா… இது என்ன புது கதை என்கின்றீர்களா? இந்தக் கதையையும் தான் பார்த்து விடுவோமே..

ஐரோப்பிய அறிவியல் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு உடலினை மட்டுமே ஆராய்ச்சி செய்யும் ஒன்றாக உள்ளது. உயிரினைப் பற்றிய ஆராய்ச்சி ஐரோப்பிய அறிவியலில் இல்லை.
ஐரோப்பிய அறிவியல் உலகின் பொருட்களை இரண்டு விதமாக பிரித்து உள்ளது.

உயிருள்ள பொருட்கள் - மனிதன், விலங்குகள் (Living Things ) (இங்கே அறிவியல் மனிதனை ஒரு பொருளாகப் பார்க்கும் தன்மையையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.)

உயிரற்றப் பொருட்கள் - கல், மரம் (Non - Living things )

அந்த அறிவியலில் வேறு விதமான பிரிவுகள் இல்லை. எனவே வெறும் உடலினை வைத்து மட்டுமே ஆராயும் இந்த அறிவியலினை நாம் ஏற்றுக் கொள்ளலாமா என்றக் கேள்வி வருகின்றது.

கூடவே இந்த அறிவியல் உயிரினைப் பற்றி ஆராயவில்லை என்றால் உயிரினைப் பற்றி ஆராயும் அறிவியல் இருக்கின்றதா என்றக் கேள்வியும் வருகின்றது. அந்தக் கேள்விக்கு பதில்… ஆம்! உயிரினைப் பற்றி அறிந்த அறிவியல் இருக்கின்றது. நீண்ட காலமாக நம்முடனே இருக்கும் தமிழ் அறிவியல் தான் அது.

ஐரோப்பிய அறிவியல் பொருட்களைப் உயிரின் அடிப்படையில் பிரிக்கின்றது என்றுக் கண்டோம். வேறு பிரிவுகள் அதில் கிடையாது.

ஆனால் தமிழ் உயிரினங்களையே அறிவின் வழி பிரித்து இருக்கின்றது.
ஓரறிவு உயிரினங்கள் முதல் ஆறறிவு உயிரினங்கள் வரை என்று அந்தப் பிரிவுகள் நீள்கின்றன.

மேலும் தமிழ் தன் திணை இலக்கணத்தின் மூலம் மனிதர்களுக்கு உயர்திணை (அவர்கள் மற்ற உயிர்களில் இருந்து சிறந்தவர்கள் என்ற எண்ணத்தில்) என்றச் சிறப்பினையும் கொடுத்து இருக்கின்றது.

இத்தகைய பிரிவுகளை அறியாத தொடக்க நிலையிலேயே ஐரோப்பிய அறிவியல் நிற்கின்ற காரணத்தினால் உயிரின் தோற்றம் பற்றிய ஐரோப்பிய அறிவியலின் கூற்றினை நாம் ஏற்க முடியாது.

ஐரோப்பியர்களின் அறிவியல் உலகம் தட்டையானது என்று கூறிக் கொண்டு இருந்தக் காலத்தில், உலகை கப்பலில் சுற்றிய அறிவியல் நம்முடையது. எனவே நாம் அவர்கள் கூற்றினை ஆராயாது ஏற்றுக் கொண்டால் தட்டையான உலகத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

எனவே, ஐரோப்பிய அறிவியல் உயிரினை அறியாத நிலையினாலும்,
டார்வினின் கருத்து வெறும் கருத்தே அன்றி அறிவியல் கிடையாது என்ற நிலையினாலும், குரங்கில் இருந்து எந்த ஒரு மனிதனையும் உருவாக்கிக் காட்டாமையினாலும், வெற்று இடத்தில் இருந்து உயிரினை உருவாக்கிக் காட்டாமையினாலும்,

ஐரோப்பிய அறிவியலின் உயிரின் தோற்றம் பற்றியக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வட நாட்டுக் கதையும் விளக்கம் தரவில்லை… ஐரோப்பிய அறிவியலும் தெளிவானக் கருத்தினைத் தரவில்லை.  எனவே இப்பொழுது நாம் இரு வேறு கதைகளைக் காண வேண்டி இருக்கின்றது.

ஒன்று பரிபாடல் - தமிழ் சங்க இலக்கியம்.

இரண்டு விவிலியம் (பைபிள்)

இந்த இரண்டுக் கதைகளிலும் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை இருக்கின்றது. இரண்டுமே உலகம் ஆறு ஊழிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றே கூறுகின்றன.

‘பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட’ - என்னும் பரிப்பாடல் பாட்டின் மூலம்,
கடவுள் முதலில் ஆகாயத்தினை படைத்ததாகவும், பின்னர் காற்று, செந்தீ, மழை, நிலம் ஆகியவற்றை படைத்து முடித்து பின்னர் இறுதியாக மனிதனைப் படைத்ததாகவும் அறிய வருகின்றோம்.

கிட்டத்தட்ட இதேக் கருத்து விவிலியத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது.

விவிலியத்தின்படி இறைவன் ஐந்து ஊழிக் காலத்தில் உலகினைப் படைத்து முடித்து இறுதியாக ஆறாவது ஊழிக் காலத்தில் மனிதனைப் படைத்தார்.
சிறிது நிறுத்துங்கள்…

நீங்கள் பாட்டுக்கு ஊழிக் காலங்கள் என்று சொல்லுகின்றீர்கள்… கடவுள் 6 ஊழிக் காலங்களில் அல்ல, ஆறு நாட்களில் உலகினைப் படைத்து உள்ளார்… என்கின்றீர்களா?

அப்படி என்றால் உங்கள் கவனத்திற்கு…
விவிலியம் என்பது ஒரு தொகுக்கப் பட்ட நூலே ஆகும்.

விவிலியத்தின் மூல மொழி எபிரேயம். அந்த மொழியில் இருந்தே எல்லா மொழிகளுக்கும் அது மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பில் சில கருத்துக்கள் மாறுப்பட்டு வந்து இருக்கலாம். ஆங்கிலத்தில் ஊழி என்ற சொல்லுக்கு தகுந்த வார்த்தை இல்லாதக் காரணத்தினால், ஆறு ஊழிக் காலங்கள் என்ற கால அளவு ஆறு நாட்களாக மாறிப் போய் உள்ளது. உதாரணத்திற்கு தூத்துக்குடி டுடிகொரின் (Tutikorin ) ஆக மாறியது உங்களுக்குத் தெரியுமல்லவா! அதுப் போலத் தான்!

சரி… எங்கேயோ எழுதப்பட்ட தமிழ் சங்க நூலுக்கும் விவிலியத்திற்கும் ஒற்றுமை இருக்கின்றது என்பதினைப் பார்த்தோம். ஆனால் அந்த செய்திகள் உண்மையினைச் சொல்லுகின்றனவா? விவிலியத்தில் உண்மை இருக்கின்றதா? என்பதனை ‘ஆதாம் என்ற தமிழன்’ என்ற அடுத்த பதிவில் பார்ப்போம்.

விவிலியம் அழைக்கின்றது..

பி.கு...

தமிழில் எழுதப்பட்ட பரிபாடல் கருத்துக்கும் விவிலியக் கதைக்கும் ஏன் இந்த ஒற்றுமை என்று எண்ணுகின்றீர்களா?

உலகின் முதல் மனிதன் தமிழன் என்னும் கூற்றின் படி. உலகம் முழுவதும் பரந்து சென்று பரவிய தமிழன் தன் கதைகளையும் தன்னுடன் சுமந்துச் சென்றுள்ளான். அந்தக் கதையே தமிழகத்தில் பரிபாடலாவும், எபிரேயத்தில் ஆதியாகமக் கதைகளாகவும் தொகுக்கப் பட்டு உள்ளன என்பது அறிஞர்கள் கருத்து...

களத்தில் தரகு நிறுவனத்தை கதறவிடுவோம்...


இது வெறும் செய்தி இல்லை.. காடு முழுவதும் அழிவதற்காக கொடுக்கப்பட்ட நேரம்..


இந்த நிகழ்வை அரசியலாக நாங்கள் பார்ப்பது, ஆம் இது தவறுதான்..

இதை நாம் சாதாரணமாக கடந்து சென்றால்தான் மிகப்பெரிய தவறு..

மீனவர்கள் சுட்டு கொன்றபோது நாம் அதை சாதாரணமாக கடந்து சென்றதன் விளைவுதான், நம்மில் சிலரே சாகர்மாலா திட்டத்தை ஆதரிக்கிறோம்..

ஏனெனில் அந்த திட்டம் நம்மை பாதிக்க வில்லை அல்லவா.. அதுபோல் தான் இதுவும்...

களப்போராளிகள் எங்களை தொடர்பு கொள்ளவும். எங்களாள் முடிந்த உதவியை செய்ய கடமை பட்டுள்ளோம்...


மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?


இது எந்த மதத்தவரையும் குற்றம் சொல்லவதற்காக எழுதப்படவில்லை. தமிழின் மேலுள்ள பற்றின் காரணமாக மட்டுமே எழுந்த கேள்வி...

இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன?

ஏன் இசுலாமியரும், கிருத்துவரும்  தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள்.?
(ஆனால் தமிழன் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறார்கள்).

தமிழ்ப் பெயர்களெல்லாம் இந்து மதப்பெயர்கள் அல்லவே.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அவர் குழந்தைகளுக்கு 'தென்றல்', 'அறிவு' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர்களில் எந்த மதமும் இல்லையே.

ஏன் எல்லாரும் இசுலாமியப் பெயரோ அல்லது ஆங்கிலப் பெயரோ வைக்க வேண்டும். ஏன் ஒரு நல்ல தமிழ்பெயர் சூட்டக்கூடாதா?.

ஏதேனும் காரணமிருக்கிறதா?

தேனி காட்டுத்தீக்கு மர்ம நபர்கள் தான் காரணமாம்... இப்போது புரிகிறதா.. இது திட்டமிட்ட செயல் என்று...


தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டது - அம்பேத்கர்...


நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம்...

திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச் சொல் அல்ல என்பதாகும்.

தமிழ் என்னும் சொல்லின் சமற்கிருத வடிவமே இந்தச் சொல்.

தமிழ் என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமற்கிருதத்தில் இடம் பெற்றிருந்த போது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது.

பின்னர் தமில்லா வாகி முடிவில் திராவிடா என உருத்திரிந்தது.

திராவிடா என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.

நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய விடயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை.

மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதேயாம்.

நூல்: தீண்டப்படாதவர்கள் யார்? - டாக்டர். அம்பேத்கர். தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94...

பெருமை எனும் போதை → வணிகத்தின் ஆயுதம்...


நாம் அனைவரும் ஆளுபவர்களால் இயக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தவன் தன்னை அடிமை என்று ஒத்துக்கொள்கிறான், அவன் மட்டுமே தனக்கு என்ன தேவை என்பதை தேடத் தொடங்குகிறான்…

எப்படி நாம் இயக்கப்படுகிறோம் என்று புரியாத அளவிற்கு உங்களுக்கு அதுவும் வாழ்க்கைக்கு தேவையில்லாத விசயங்களை பெருமை பேசி போதை ஏற்றுகிறார்கள், இந்த போதைகளுக்கு அடிமையாகமால் பயணிப்பவர்களுக்கு ஏளனமே மிஞ்சுகிறது..

சரி ஒவ்வொரு போதைகளை (பெருமைகளை) பார்ககலாம்..

சாதி: எல்லோரும் அறிந்ததே இந்த சாதிப்பெருமை, ஆண்ட பரம்பரை, நாங்கள்தான் இங்கு அனைத்தையும் உருவாக்கினோம் என்று பெருமை பேசினால் ஏனைய சாதி மக்களிடம் வெறுப்பைதான் சம்பாதிக்க முடியும்.. சாதி என்பது அடையாளம் அது உனது குடும்ப வரலாற்றை அறிவதற்கு உள்ள ஊடகம்… இப்படி அடித்துக் கொள்வதனால் 3 ஆம் மனிதன் உள்ளே நுழைகிறான்!

மதம்: நன்றாக பாருங்கள் இங்கே ஏறத்தாழ பாதி விடயங்கள் இந்த மதங்களைபற்றியே நடக்கின்றன… இந்த மதங்கள் மக்களை நல்வழிபடுத்த ஆரம்பித்திருந்தால் (உருவாக்கப்பட்டது தான், அதுவும் ஒவ்வொரு மத்ததிற்கு முலகாரணமாக இருந்தவர்களால் உருவாக்கப்படவில்லை) ஏன் இவ்வளவு விவாதங்கள்… விவாதப்பொருளாக இருக்கும் ஒரு விடயம் எப்படி சரியாக இருக்க முடியும்.. இந்த மாதிரி விடயங்களை பேசாத மனிதர்களே இல்லை… உன் மதம் சரியாக இருந்திருந்தால் அதை உணர்ந்திருந்தால் விவாதம் தேவையில்லை என்று கடந்து போகமுடியும்… மொத்ததில் இந்த மதங்கள் நம்மை நல்வழிபடுத்தல்ல மக்கள் அடித்துக்கொள்வதற்காக அரைகுறையாக வடிவமைக்கப்பட்ட கோட்பாடுகள்… இந்த மதங்களை உருவாக்கியவனை தேடுவதே கிடையாது!

இந்தியம்: இந்தியம் என்ற மாயை, இங்கே இந்தியா/பாரதம் என்ற அமைப்பே ஆங்கிலேயர்கள் எளிதாக ஆளுவதற்கு கட்டமைக்கப்பற்ற ஒன்று.. அது சுதந்திரத்துக்கு பிறகு வெளியிலிருந்து ஆளவேண்டும் என்பதே நோக்கம்… இந்திய ஒன்றியத்தில் நிறைய இனவழி(மொழிவழி) இருக்கின்றன அவற்றின் உரிமைகளை பரிக்காமல் கூட்டாட்சி தத்துவம் என்று ஒன்று உள்ளது அதை பெயரளவில் வைத்துவிட்டு ஒற்றை ஆட்சி அமைக்க முயல்கிறார்கள்.. இதற்காகவே ஒவ்வொரு இனத்தினை அவரவர் நிலத்திலிருந்து பிரிக்கிறார்கள் அப்போதுதான் உன் நிலத்திற்காக போராட மாட்டாய்.. இப்போது நிலத்தை விட்டு வேறு இனமக்களின் நிலத்தில் வாழும்போது உனக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது அதுதான் இந்தியம், இங்குதான் உன் முதலில் உன் அடையாளத்தை அழிக்கிறார்கள்… இதில் நிலத்தை விட்டு வராமலே இருக்கிறவனையும் பெருமை பேசி ஆட்கொள்ளுகிறார்கள்.. பெரும்பாலும் பூர்விகத்தை (இன பண்பாட்டை) இழந்தவர்களின் ஆயுதம் தேசப்பற்று..!! இதைமாதிரி மண்ணிற்கு சம்பந்தமில்லாத கோட்பாடுகள் பெருமைகளாக பேசப்படுகின்றன!

இராணுவம்: இராணுவம் என்ற கட்டமைப்பு மக்களை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது எனறு சொல்வார்கள் ஆனால் அதற்கானது அல்ல என்பது வரலாற்றில் என்னென்ன காரணத்திற்காக போர்கள் நடந்தன என்பதை அறிந்தவர்களுக்கு புரியும். இந்த இராணுவ அமைப்பு வணிக எல்லைகளை நிர்ணயிப்பது தேவையெனில் வணிக எல்லை விரிவாக்கம் .. அப்படி மக்களுக்கானது என்றால் அதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் இது எந்த நாட்டிலும் கடைபிடிப்பதில்லை அது எந்த வகையான நாடாக இருந்தாலும்… இதில் மிகப்பெரிய வணிக சந்தை… இந்திய பட்ஜெட்டில் 16% இராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிறது ஆனால் 700+ மீனவர்கள் இலங்கை இராணுவம் கொன்றிருக்கிறது அதை நிப்பாட்ட முடியவில்லை.. ஆனால் பெருமை பேசுவதற்கென்றே (தினிப்பதற்கு) மட்டும் வேலைகள் நடக்கின்றன… நமது செலவில் 6 இல் 1 பங்கு ஆனால் நமக்கு பயனில்லை என்ற விவாதங்கூட வைக்கமுடியாத அளவிற்கு நம்மை தேச விரோதிகளாக காமிக்கும் பெருமை பேசுபவர்கள்..

தமிழன்: இத்த பெருமை கடந்த நூற்றாண்டுகாலமாக கையாளப்படுகிறது இந்த மண்ணில், பெருமை பேச வைத்து ஆள்பவன் தமிழனே இல்லை, சரி இவ்வளவு பெருமை பேசுகிறார்களே என்று எப்படி தமிழன் வாழ்வியலை தேடினால் இந்த பெருமைகளாக பேசப்படுபவைகள் அனைத்துமே ஒரு காலத்தில் இங்கு இருந்த மக்களை மோசமாக வைத்திருந்ததின் சுவடுகள், அதையே இப்போது பெருமையாக பேசி அடிமைபடுத்துகிறார்கள்.. அவ்வளவுதான் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் செய்வது..

தமிழ்மொழி: இந்த மொழியை வைத்து எவ்வளவு விடயங்கள் அரங்கேறியிருக்கன, அரங்கேறி கொண்டு இருக்கின்றன.. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் 150 வருடமாகத்தான் எழுத்தறிவு அனைத்து மக்களையும் சென்றடைந்தது.. அப்ப நமக்கு கிடைத்த அத்தனை வரலாற்று ஆவணங்களும் ஒரு குறிப்பிட்ட குழுக்கள் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் அல்லது மேலடுக்கில் உள்ள மக்கள் மட்டும்.. இதை வைத்துக்கொண்டு அனைத்தை மக்களின் வாழ்வியலை விளக்கிவிட முடியுமா, முடியாது என்பதே நிதர்சனமான உண்மை… இதில் வேறு சான்ஸ்கிரிட்டிலிருந்து வந்தது தமிழ் என்றும் இல்லை தமிழிலிருந்து வந்தது சான்ஸ்கிரிட்டிலிருந்து வந்தது தமிழ் என்றும் இல்லை தமிழிலிருந்து வந்தது சான்ஸ்கிரிட் என்ற விவாதங்கள்… அதைவிட பெரிய விடயம் என்னவெனில் பாலி மொழியிலிருந்துதான் தமிழும் மற்றும் சான்ஸ்கிரிட் வந்தது என்ற பெருமைகள்… இந்த பெருமைகளால் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் ஆளுபவனுக்கு சாதகமே.. இரண்டே இரண்டு விடயங்கள் வரலாறு வென்றவனால் எழுதப்பட்டது, மேலும் அதிகமாக மதம் சம்பந்தப்பட்ட நூல்களே கடத்திவரப்பட்டிருக்கின்றன...இந்த பெருமைகளுக்கும் சாதாரண குடிகளுக்கும் எந்த சம்பந்தமில்லை இருந்தாலும் பெருமை பேச வைக்கப்பபடுகிறார்கள்

சினிமா: கலை பார்தது ரசிக்கலாம் மற்றும் கருத்துகளை பரப்புவதற்காகவே இதுகாறும் பயன்படுத்தப்பட்டது இப்போது அதுவும் அளவுக்குமீறி அதில் வரும் நாயகர்களே நம்மை காப்பாற்றுவார்கள் என்ற பிரம்மையை மக்களிடம் விதைத்து விவாதம் செய்ய வைக்கிறார்கள்… இதுவும் தமிழ்நாட்டு அரசியலில் 50 வருடத்திற்குமேல் ஆட்கொண்டுள்ளது.. இப்ப மக்களின் போராட்டங்களை பற்றி அறியாதவர்கள்கூட சினிமா புகழ் இருந்தால் போதும் கட்சி ஆரம்பித்துவிடலாம் என்கிற நம்பிக்கை.. தமிழ்நாட்டில் இப்போது அதிகமாக ஊடகங்களில் விவாதிப்படுவதே இந்த சினிமாவும் சினிமா சம்பந்தபட்ட அரசியல்களும்.. இந்த சினிமாவினால் எவ்வளவு நாட்டு புற கலைகள் அழிந்தன அழிந்து கொண்டு இலுக்கின்றன.. இந்த நாட்டுபுற கலைகள் நமது பண்பாட்டை எப்படி கடத்தி வந்தன…

விளையாட்டு (கிரிக்கெட்): இங்கு விளையாட்டு என்றாலே கிரிக்கெட் என்று மனதில் பதியவைத்துவிட்டார்கள்.. மற்ற விளையாட்டுகளை இந்த விளையாட்டு எப்படி சிதைத்தது இது ஒரு மோசமான விளையாட்டு ஆனால் சிறப்பான விளையாட்டுகளை இந்த மண்ணிலிருந்து அகற்றுகிறது.. கிரிக்கெட் பற்றி தெரியவில்லையெனில் அது அவமானம்.. தனியார் நிறுவனமாக இயங்கும் கிரிக்கெட்டை இந்திய ஒன்றியத்தின் அடையாளமாக பார்ககவைக்கப்பட்டு, அதைபற்றி பேசுவதே பெரிய பெருமையாக நினைப்பது.. கவனியுங்கள் இளைஞர்கள், அலுவலக இடைவேளை நேரங்களில் பொதுவான விவாதமாக கிரிக்கெட் இருக்கிறது..

அரசியல்: இது அனைத்தையும் இயக்க முடியுமென்ற போதை , அரசியலின் அடிப்படை த்தத்துவத்திற்கு எதிராக பயணிக்கிறது.. மக்கள் தனக்கு என்ன தேவை என்பதை உணர்த்த வேண்டும், அரசியல்வாதிகள் அவற்றை உள்வாங்கி செயல்படவேண்டும் இங்கு அப்படியாக நடக்கிறது அரசியல்வாதி விடுக்கும் அறிக்கைகளை வைத்து மக்கள் விவாதிக்கிறார்கள் நேர் எதிர் மறையாக செயல்படுகிறார்கள்.. தலைவனை விமர்சனம் செய்தவனிடம் சண்டைக்கு போவது அதில் உண்மையோ அல்லது போய்யோ அதைபற்றி கவலை இல்லை.. அரசியல் சாக்கடை என்று போகாதவனும் இருக்கிறான் தலைவனுக்காக தற்கொலை செய்கிறவனும் இருக்கிறான்.. ஆனால் மக்களுக்கான அரசியல் இல்லை.. இதில் அரசியல் கோட்பாடு, கொள்கை, தலைவர்கள் என்ற பெருமைகளே பேசப்படுகிறது நடைமுறைபடுத்துவது கிடையாது!!

வளர்ச்சி: இந்த பெருமை போதை தான் இப்போது ஆளும் வர்ககத்தின் மந்திரம்… வளர்ச்சி என்பது வளத்தை கொள்ளையடிப்பதின் வணிகச்சொல் அவ்வளவே.. பெருந்திரள் உற்பத்தி (mass production) என்பது இயற்கைக்கு எதிரானது அது மருதநில நெல் உற்பத்தியானாலும், மகிழுந்து (கார்) உற்பத்தியானாலும் சரி வளச்சுரண்டல்களே!! வளர்ச்சி என்ற பெயரில் அனைத்தும் வணிகமயமாக்குவதில் மொத்த சுதந்திரமும் பறி போகிறது என்பதை அறியாமலே பெருமை பேசுவது..

கல்வி: இது அனைத்து குடும்பங்களையும் சென்றடைந்த ஒன்று! தன் குழந்தை ஆங்கிலம் பேசினால் பெருமையென்றும், அலுவலகத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையை இந்த கல்வியினால் கிடைத்த பெருமிதம்.. படிப்பு என்கிற பெயரில் மதிப்பெண் களின் பெருமைகள் வேறு (மனப்பாடத்தினை பொருமையாம நினைப்பது)... இதில் வெளிநாடுகளில் முக்கிய நிறுவனங்களில் வேலை செய்பவரில் இவ்வளவு பேர் இங்கு படித்தவர்கள் என்பது… இங்குள்ள வளத்தை பயன்படுத்தி படித்துவிட்டு இந்த மண்ணிற்கு உழைக்கமாட்டேன் வெளிநாட்டு அடிமை வாழ்ககைக்கு புகழாரம் சூட்டுவது..

இவையில்லாமல் இன்னும் நிறைய பெருமை போதைகள் இருக்கலாம் அவற்றை நான் இன்னும் அறியவில்லை என்று கொள்ளலாம்.

இந்தப் போதைகளில் மதம், சாதி மற்றும் இராணுவ போதைகளைத்தவிர்தது அனைத்திலும் பெருமை பேசி இருந்தவனில் நானும் ஒருவன்தான், கடைசியில் நாம் எங்கு வீழ்ந்தோம் என்று தேடினால் இந்தப்பெருமைகளினால் பலன் அடைபவர்கள் வணிகத்தைச் சார்நதவர்களே..

ஆனால் இந்த வணிகத்தை எதிர்பபதில் ஒரு சிலரே அவர்களிலும் அதற்கு எதிராக வணிகத்தையே எடுப்பது மிகவும் கேள்விக்குரியானது..

இவ்வளவு காலம் இவ்வளவு விசயங்களை வைத்து நமதை திசைதிருப்பியவன் நம்மை மாதிரி எத்தனை வணிகத்தை கையில் எடுப்பவர்களை பார்ததிருப்பான்…

இதில் நாம் சார்ந்து இருக்க வேண்டியது இயற்கையையே ஆனால் அப்படி இயற்கையைபற்றி பேசினால் ஏளனம் பேசி அவர்களை அழிப்பது இல்லையெனில் வாழும் காலத்தை விட்டு விட்டு அவர் மறைந்தபிறகு அவரது பெருமைகளை பேசுவது.. சிறந்த எடுத்துக்காட்டு நம்மாழ்வார்..

நிகழ்கால அரசியல் தலைவர் நல்லக்கண்ணு ஆனால் அவரை இதுவரை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.. இன்னும் நிறையபேர் கத்திக்கொண்டும். போராடிக் கொண்டும் தான் இருக்கிறார்கள் அவர்களை நமக்கு தெரிவதேயில்லை..

இதில் அடுத்த அறிவார்ந்த கேள்வியெனில் வணிகமில்லாமல் வாழ முடியுமா என்று.

கொஞ்சம் 100 ஆண்டுகள் பின்னோக்கி போய் பாருங்கள், கிராமங்களில் எப்படி தற்சார்பாக வாழ்ந்தார்கள் என்று ஏன் இன்னமும் அதே மாதிரி கிராமங்கள் நிறைய இருக்கின்றன… சுரண்டல்கள் அப்போதும் இருந்தன ஆனாலும் தற்சார்பு நிலை இருந்தது.

நாகரீகம் வணிக அடிமைத்தனம் என்றும்
தற்சார்பை சுதந்திரம் என்றும் அறியாதவரை இங்கு எதுவும் நிகழப்போவதில்லை..

இவ்வளவு பெருமை(வணிக அடிமை) ஆகிப்போனவனை மீட்டெடுக்கலாம் என்றால் இதில் ஏதாவது ஒன்றில் மிகவும் ஊறிப்போயிருக்கிறான்..

இந்த பெருமைகளை ஒவ்வொன்றாக உடைப்பவர்களை எவ்வாறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதும் அதுவும் மக்களிடமிருந்தே.

காலம் என்னையும் முழு அடிமையாக்குமா அல்லது இந்த தற்சார்பு சிந்தனையுள்ளவர்களால் ஒன்று சேர்ந்து மீட்கப்படுமா?

தேனி காட்டுத் தீ.. செயற்கையாக உருவாக்கி இருக்கலாம்...