02/04/2018

அமானுஷ்யம் - அல்ஃபோனா (Alfonso) இத்தாலியில் வாழ்ந்த கிறிஸ்தவ மதகுரு...


22/9/1774 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த “பலஸ் தெல் கொதி” இல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தியானித்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரம் வெளியில் வந்து, அங்கிருந்த மக்களை பார்த்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றார்.

சற்று நேரத்தில் திரும்பி வந்து “போப்” சற்று முன்னர் இறந்து விட்டார் என அறிவித்தார்…

அனைவருக்கும் ஆச்சரியம், பலர் நம்பவுமில்லை…

போப் இருப்பது ரோம் நகரில், அதாவது அந்த காலப்பகுதியில் இவர்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு நாள் பயணம்..

மறு நாள்… ரோமில் இருந்து உத்தியோக பூர்வமாக போப் இறந்த தகவல் அந்த நகருக்கு வந்தது.

அனைவருக்கும் ஆச்சரியம், எப்படி இங்கிருந்தபடியே அல்ஃபோனால் அந்த தகவலை கூறமுடிந்தது?

உள் உணர்வாக இருக்கும் என முடிவெடுத்தவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிதகவல் கிடைத்தது.

போப் இறந்த போது அங்கிருந்த சூழ் நிலை பற்றிய தகவல்கள் கிடைக்கத் தொடங்கின.

அதில், போப் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அங்கு வந்த அல்ஃபோனா அவரின் அருகில் இருந்து ஜெபம்(செபம்) செய்ததாக உறுதியான தகவல்கள் கிடைத்தன..

இது எப்படி?

ஒரே நபர் ஒரே நேரத்தில் பல கிலோமீட்டர் தூர இடைவெளியில் உள்ள இருவேறுபட்ட இடங்களில் இருக்க முடியும்?

இது தான் Bilocation (இரட்டை மனை) எனப்படும் மர்மம்...

மேலே நாம் பார்த்தது வரலாற்று பதிவில் இடம்பெற்ற ஒரு சம்பவம்...

தமிழா விழித்துக்கொள...


விருதுநகர் சதுரகிரி மலையில் தீ விபத்து...


இத என்னடா பன்ன போரிங்க..?

அந்த ஊர்ல அந்த மலைய வச்சிதா பசுமையாவும், அந்த மக்களோட குடி நீர் தேவையும் நிவர்த்தி செய்து...

நீங்கள் நினைப்பதெல்லாம் கிடைக்கிறது என தம்பட்டம் அடிக்காதீர்கள், அனைத்தும் கொடுக்கப்படுகிறது...


ஒருநாள் கொடுக்கப்பட கூடியவற்றின் அளவு குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும் போது, உங்கள் தேடுதலுக்கான சிந்தனை ஆரம்பிக்கும்.. அன்று ..?

சுவிற்சர்லாந்து தமிழர்கள்...



சுவிஸ் தமிழர் இவர்களில் 90% தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள்..

பெரும்பான்மையான சுவிற்சர்லாந்து தமிழர்கள் தமிழ்த் தேசிய போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.

ஆறு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட சுவிஸ் நாட்டில் ஏறத்தாள 75 000 தமிழர்கள் வசிக்கின்றார்கள்...

காவிரி டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்...


இந்திய ஒன்றியம் ஒரு ஜனநாயக நாடு என்பதும் மாயையே...


68 ஆயிரம் கசுமீரிகளை கொன்ற இந்திய ஒன்றியம்.. சனநாயக நாடா?

குசராத்தில் 2500 இசுலாமியர்களை கொன்ற இந்திய ஒன்றியம்.. மதச்சார்பற்ற நாடா?

மக்கள் விரோத துறையே இது தேவையா...


அசோகரும் பௌத்தமும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி - 3...


வெற்றி… மாபெரும் வெற்றி..

இருந்தும் அமைதி கிட்டவில்லை அசோகருக்கு…

“சக்கரவர்த்தி தான்… உலகில் உள்ள அனைத்து வசதியும் உள்ளது தான்… ஆனால் நிம்மதி இல்லையே… கண் மூடினால் சடலங்கள் அல்லவா நினைவிற்கு வருகின்றன.. ஒன்றா இரண்டா… லட்சக்கணக்கான சடலங்கள் அல்லவா தோன்றுகின்றன… இந்தப் பாழாய்ப்போன கலிங்கத்து யுத்தத்தை நடத்தாமலேயே இருந்திருக்கலாமே!” என்று தனது அரண்மனையில் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது புத்தரைப் பற்றிய எண்ணம் வருகின்றது அசோகருக்கு.

“ஆ… புத்தர்! அவரின் கருத்துகள் தான் எத்தனை அழகானவை… ஆழமானவையும் கூட. அவற்றினை நான் ஏன் கவனிக்க மறந்தேன். எல்லா உயிர்களும் சமம், அவை அனைத்திற்கும் அன்பினை நாம் காட்டுவதே இப்பிறவியின் பயன் என்ற அந்தக் கருத்துக்களை நான் எவ்வாறு கேளாது போனேன்.

அன்பினை முற்றிலும் மறந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று விட்டேனே…!
போதும் இந்த வெறி… பணம், பதவி, சுகம் ஆகியவற்றினைத் துறந்த புத்தனின் வழி தான் இனி என் வழி…!

அமைச்சரே… அழையுங்கள் புத்தத் துறவிகளை…
கூடவே எனது அன்புப் புதல்வியையும் புதல்வனையும் சேர்த்தே அழையுங்கள்!

உலகில் அன்புத் திகழ அவர்கள் திக்கெட்டும் புத்தத்தை பரப்பட்டும்!
அசோகன் போர்வெறியன் அல்ல… அவன் மனித நேயத்தினைப் பரப்பியவன் என்றே உலகம் அவனை நினைவில் கொள்ளட்டும்” என்றவாறே அசோகர் புத்த மதத்தினை பரப்ப ஆரம்பிகின்றார்.

புத்தமும் பல்வேறு நாடுகளில் பரப்பப்படுகின்றது.

இந்தக் காலம் கி.மு 1 ஆம் நூற்றாண்டு! (இதை இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கூறுவோரும் உளர்).

அந்தக் காலத்தில் கிட்டதட்ட வட மற்றும் மத்திய இந்தியா முழுவதும் அசோகரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தமையால் புத்தம் அங்கே எளிதாக பரவியது. அந்தத் தாக்கம் தமிழகத்திலும் ஏற்ப்பட புத்தம் தமிழகத்திலும் பரவுகின்றது.

ஏற்கனவே மகாவீரரால் உருவாக்கப்பட்ட சமண சமயமும் தமிழகத்தில் அந்தக் காலக் கட்டத்தில் பரவி இருந்தது என்றச் செய்தியையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்…!

சரி அசோகர் புத்த சமயத்தினைப் பரப்பிக் கொண்டு இருக்கட்டும்… நாம் அதற்குள் சற்று சமணம் மற்றும் புத்த சமயங்களைப் பற்றி ஒரு எட்டு சென்றுப் பார்த்து விட்டு வந்து விடலாம்…!

இவ்விரண்டு மதங்களுமே நாத்திக மதங்கள்… அதாவது கடவுள் இல்லை என்று சொல்லுபவை!

கடவுள் இல்லை…!

அனைத்து உயிர்களும் சமம், மனித உயிராய் இருந்தாலும் சரி அது மிருக உயிராய் இருந்தாலும் சரி…!

நீ செய்யும் செயல்களுக்கு ஏற்ப உனக்கு அடுத்த பிறவி ஏற்படும்…!

இவை தான் அந்த இரண்டு சமயங்களின் முக்கியக் கோட்பாடுகள். நிற்க!

இப்பொழுது ஒருக் கேள்வி, ஏன் இந்தச் சமயங்கள் தோன்றின?

தெரியவில்லையா…!

சரி அப்படி என்றால் இன்னொருக் கேள்வி, பெரியார் ஏன் கடவுள் இல்லை என்று முதலில் கூற ஆரம்பித்தார்?

சாதி இல்லை…!

அப்படி இல்லாத சாதிகளை (சாதி ஏற்றத் தாழ்வுகளை) படைத்தது  இறைவன் என்றால் அந்த இறைவனும் இல்லை…!

இது தான் பெரியாரின் கூற்று.

சாதி ஏற்றத் தாழ்வுகளை பெரியார் எதிர்த்தார். அந்த ஏற்றத் தாழ்வுகள் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்றதினால் அவர் கடவுளை எதிர்த்தார்!
கடவுள் இல்லை எனக் கூற ஆரம்பித்தார்!

அதேப் போல் தான் இந்த சமயங்களும் தோன்றின!

இவை சாதிகளை எதிர்க்கவில்லை (ஏனெனில் அப்பொழுது ஏற்றத் தாழ்வுகள் இல்லை)…!

ஆனால் இவை பலி இடும் பழக்கத்தை எதிர்த்தன.

அந்தக் காலத்தில் இறைவனை வழிப்பட விலங்குகளைப் பலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. (ஏன் இன்னுமே சில கோவில்களில் இந்தப் பழக்கம் இருக்கின்றதை நம்மால் காண முடிகின்றது. அட அதாங்க ’கடா வெட்டு’).

சமணமும் பௌத்தமும் உயிர்களைக் கொல்வதை எதிர்த்தன.
அவை எல்லா உயிர்களும் சமம் என்றன.

“இல்லை… இந்த பலிகள் கடவுளுக்காக” என்றனர் மக்கள்.

“அப்படியா… அப்படியென்றால் கடவுள் என்ற ஒருவர் இல்லை… இல்லாத ஒருவருக்கு பலி எதற்கு” என்றன அந்தச் சமயங்கள்.

மக்கள் சிந்தித்தார்கள்.

“அப்படி என்றால் நான் இறந்தால் எங்கே செல்லுவேன்” என்றார்கள்.

“உன் முன் வினைப்படி நீ மீண்டும் பிறப்பாய், மனிதனாய் இல்லை மிருகமாய் இல்லை மரமாய்… ஏனெனில் அனைத்தும் ஒன்றே…” என்றன அந்த மதங்கள்.
மக்கள் அந்த மதங்களுக்கு செவி சாய்க்க ஆரம்பித்தார்கள்!

இது தான் அந்த மதங்கள் தோன்றியமைக்கு உரிய முக்கிய காரணம்.

இப்பொழுது நாம் அசோகரிடம் மீண்டும் செல்வோம்…!

அசோகரின் காலம் கிமு 1 ஆம் நூற்றாண்டு என்று நாம் கண்டோம்.

அவர் புத்தத்தை இந்தியா முழுமையும் பரப்புகின்றார் என்றும் கண்டோம்.

சரி, இப்பொழுது ஒருக் கேள்வி… (என்னய்யா கேள்வி கேள்வியா கேட்டுத் தள்ளுகின்றீர் அப்படின்னு கேட்குறீங்களா…

சரி உங்களுக்காக இந்தக் கேள்வியை தேர்ந்து எடுக்கும் முறையில் கேட்கிறேன் :))

தமிழகத்தில் ஒருக் கருத்தினைப் பரப்ப எந்த மொழியில் நாம் அதனைப் பரப்ப வேண்டும்?
அ) இந்தி
ஆ) பிரஞ்சு
இ) தமிழ்
ஈ) பஞ்சாபி
(எப்படி கடினப்பட்டு கோடிசுவரன் நிகழ்ச்சிக்கு ஒரு கேள்வியை தயார் பண்ணிட்டோம்ல)

விடை என்ன?

தமிழ் அப்படின்னு சட்டுன்னு சொல்றீங்களா…வாழ்த்துக்கள்! (எனக்குத் தெரியுமுங்க நீங்க புத்திசாலின்னு)

ஒரு நாட்டில் ஒருக் கருத்தினை பரப்ப வேண்டும் என்றால், அந்தக் கருத்தை அந்த நாட்டின் மொழியிலேயே பரப்ப வேண்டும்.

நமக்குத் தெரிந்து இருக்கும் இந்த விடயம், அசோகருக்குத் தெரியாமலா இருக்கும்.

அப்படி என்றால் ஏன் அவர் சமசுகிருதத்தில் கல்வெட்டுக்களை செதுக்கவில்லை?

சமசுகிருதம் கோடி வருடங்களுக்கு முன்னரே இருக்கின்றது… அது தான் மற்ற மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்றால்… ஏன் அசோகர் சமசுகிருதத்தை பயன்படுத்தவில்லை.

பாலி, தமிழ், அரமியம் மற்றும் கிரேக்கத்தில் காணப்படும் அசோகரின் கல்வெட்டுகள், ஏன் சமசுகிருதத்தில் இல்லை?

அது தேவமொழிங்க.. அதை மக்களுடன் பேசுவதற்கு பயன்படுத்தமாட்டார்கள். அப்படின்னு சொன்னீங்கனா?

ஏங்க திடீர்னு கிபி 2 ஆம் நூற்றாண்டுல மட்டும் சமசுகிருதத்துல கல்வெட்டுகள் கிடைக்குது. அப்ப அது தேவமொழி கிடையாதா?

உண்மையில் அசோகர் சமசுகிருதம் பயன்படுத்தவில்லை.

ஏனெனில் அப்பொழுது உலகில் சமசுகிருதம் என்ற மொழியே இல்லை! (இதைப் பற்றியும் பல தகவல்களை நாம் விரிவாக வேறு பதிவுகளில் பார்ப்போம்).

எனவே உலகில் அப்பொழுது இருந்த மற்ற மொழிகளில் புத்தத்தை அசோகர் பரப்புகிறார்.

‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று புத்தம் பரவுகின்றது. வேகமாக!

சரி கிமு ஒன்றாம் நூற்றாண்டு போதும் இப்பொழுது நாம் கிபி 9 ஆம் நூற்றாண்டுக்கு போகப் போகின்றோம்.

இடம்: தமிழகம்

சைவ வைணவச் சமயங்கள் தோன்றி இருந்தாலும் ஒருத் தெளிவின்றி இருக்கின்றன. சங்கத் தமிழ் வளர்த்த தமிழகத்திலும் சமணம் மற்றும் புத்த சமயங்கள் கடவுளை மறுத்துக் கொண்டு பரவி இருக்கின்றன.

சமண மன்னர்களும் இருக்கின்றனர்.

எனவே சமண மக்களும் இருக்கின்றனர்.

தமிழகத்திலே இந்த நிலை என்றால் இந்தியாவின் பிறப்பகுதிகளில் சமணம் மற்றும் புத்தம் மட்டுமே இருக்கின்றன.

இந்தக் காலத்தில் தான் மதுரையில் ஒரு எழுச்சி ஏற்படுகிறது.

“நமச் சிவாய வாழ்க… நாதன் தாள் வாழ்க!” என்று மாணிக்க வாசகரின் குரல் அதோ கேட்கின்றது… போய் பார்ப்போம். அடுத்த பதிவில்…

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி - 2...


முக்கியச் செய்திகள்...

இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறினார் அம்பேத்கர்…!

வடநாட்டில் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே கலவரம்…!

என்னடா முக்கியச் செய்திகள் அப்படின்னு சொல்லிட்டு அரதப் பழசான செய்தியைச் சொல்றானேன்னு பார்க்காதீங்க!

அந்த செய்திகளில் ஒரு விசயம் இருக்கின்றது…!

கடந்த பதிவில் கிருத்துவம் மற்றும் இசுலாம் ஆகிய மதங்களைத் தவிர மற்ற மதத்தினைச் சேர்ந்தவர்களை இந்துக்கள் என்று எப்படி அழைக்கத் தொடங்கினார்கள் என்றுப் பார்த்தோம்.

ஆனால் இப்பொழுது மீண்டும் முதலில் கொடுத்து இருக்கும் செய்திகளை படித்துப் பாருங்களேன்.

அந்தச் செய்திகளின்படி,
இந்து மதம் வேறு புத்த மதம் வேறு…!
இந்து மதம் வேறு சீக்கிய மதம் வேறு…!
இந்து மதம் வேறு சமண மதம் வேறு…!

அப்படி என்றால் இந்து மதம் என்றால் என்ன என்றக் கேள்வி எழுகின்றது.
அக்கேள்விக்கான விடை…

இந்து மதம் என்பது சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு மதங்களின் தொகுப்பே ஆகும்.

இந்துக்கள் என்பவர்கள் சைவம் மற்றும் வைணவம் ஆகிய மதங்களை பின்பற்றியவர்களே ஆவார்கள்!

சைவம் மற்றும் வைணவம் பற்றி அறியாத நண்பர்களுக்கு… இதோ தசாவதாரத்துல (அதாங்க கமல் படம்) இருந்து ஒருக் காட்சி…

நெப்போலியன் (பாண்டிய மன்னன்) : ஓம் நமச்சிவாய என்று சொல்லிவிடு நம்பி… உனக்கு உயிர் பிச்சை அளிக்கின்றேன். (இவரு சைவம்)

கமல் (இவரு வைணவத் துறவி) : ஓம்….. நமோ நாராயணா … (இவரு வைணவம்)

பொதுவாக சொல்ல வேண்டும் என்றால்,
சிவனை வணங்குபவர்கள் சைவர்கள்…!
திருமாலை வணங்குபவர்கள் வைணவர்கள்…!
நிற்க…!

இப்பொழுது நாம் இந்து மதம் என்றால் என்ன என்று அறிந்துக் கொண்டோம்… (ஏற்கனவே தெரிஞ்ச விசயத்த தான்யா சொல்லிருக்க.. புதுசா ஏதாவது சொல்லு அப்படின்னு சொல்றீங்களா :) … சொல்லிருவோம்)

இப்பொழுது இந்து மதம், அதாவது சைவம் மற்றும் வைணவ மதங்கள் எங்கே உருவாகியன என்பதினைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னாடி நீங்கள் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்… இந்து மதம் எங்கே ஆரம்பம் ஆகி இருக்கக்கூடும் என்று…

உங்கள் மனதில் இமயமலை (வட நாடு) என்ற எண்ணம் வந்ததா?
“ஏன் எனில் கயிலாயம், அதாங்க சிவன் இருக்குறதா சொல்றாங்களே அந்த இடம், இமயமலையில் இருக்கின்றது. சிவனின் தலையில் இருந்து படரும் கங்கையும் அங்கேத் தான் இருக்கின்றது… வேதங்கள் என்று சொல்பவைகளும் இமய மலையில் உள்ள மாமுனிகளால் தான் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்… எனவே வட இந்தியாவில் உள்ள இமயமலையில் தான் இந்த மதங்கள் தோன்றி இருக்க வேண்டும்..” என்றக் காரணங்களும் தோன்றியனவா!
நல்லது…!

ஏன் எனில் அவற்றைத் தான் நாம் படித்து இருக்கின்றோம்.
அவற்றைத் தான் நமக்கு கற்பித்தும் இருக்கின்றார்கள்!

இப்பொழுது ஒருக் கேள்வி…!
சைவம் மற்றும் வைணவ மதங்கள் வட நாட்டினில் தோற்றம் பெற்று இருந்தன என்றால்,
அம்மதங்களின் தலைமைக் கோவில்கள் வடநாட்டில் அல்லவா இருக்க வேண்டும்.
மாறாக அவ்விரு மதங்களுக்குரிய தலைமைக் கோவில்கள் ஏன் இந்தியாவில் வேறு எங்குமின்றி தமிழகத்தில் இருக்கின்றன?

சைவத்தின் தலைமைக் கோவில்  : சிதம்பரம் - தமிழகத்திலேயே இருக்கின்றது.

வைணவத்தின் தலைமைக் கோவில் : திருவரங்கம் -இதுவும் தமிழகத்திலேயே இருக்கின்றது.

தலைமைக் கோவில்கள் மட்டும் தமிழகத்தில் அமைந்ததோடு நிற்கவில்லை…!
ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!

ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோவில்கள் ஏறத்தாழ 108 இதில் 96 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!

மேலும்,சைவம் வளர்த்த நாயன்மார்கள் 63 பேர். அனைவரும் தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள்.

வைணவம் வளர்த்த
ஆழ்வார்கள் 12 பேர். அவர்கள் அனைவரும் கூட தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள் தான்.

சைவ வைணவ இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன…!

ஏங்க சமசுகிருதத்தினால் வட நாட்டினில் உருவாகியது என்று இன்று சொல்லப்படுகிற மதங்களுக்கு,
தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் இவ்வளவு சிறப்பு ஏங்க?

சமசுகிருதம் தான் கடவுளின் மொழி என்றால் நியாயப்படி இந்த மதங்கள் எல்லாம் சமசுகிருதம் பேசப்பட்ட இடத்தில சமசுகிருதத்தை பேசியவர்களால் சமசுகிருததால் தானே உருவாக்கப் பட்டு இருக்க வேண்டும்?

ஆனால் ஏன் இந்த மதங்கள் தமிழ் மண்ணில் தோன்றின?

கடவுள் இல்லை என்று சொல்லிய மதங்கள் ஆன பௌத்தமும் சமணமும் வட நாட்டினில் தோன்றிய பொழுது, கடவுள் உண்டு என்றுக் கூறிய இந்த மதங்கள் ஏன் வட நாட்டினில் தோன்றாமல் தமிழகத்தில் தோன்றி இருக்கின்றன?

பதில் கூற மாணிக்கவாசகர் ஐந்தாம் நூற்றாண்டில் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

ஆனால் அவரைப் பார்ப்பதற்கு முன் கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் அசோக சக்ரவர்த்தியையும் பௌத்த மதத்தினையும் சற்றுப் பார்ப்போம்.
பயணிப்போம்...

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி - 1...


நாத்திகவாதிகள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.”கடவுள் இல்லை! இதற்கு மாற்றுக் கருத்தே அவர்களிடம் கிடையாது.

ஆனால் ஆத்திகவாதிகள் தான் குழப்புகின்றார்கள். கடவுள் இருக்கின்றார்… ஆனால் என் கடவுள் மட்டுமே இருக்கின்றார்… அடுத்தவன் கூறும் கடவுள் வெறும் பொய், பித்தலாட்டம்! என்னும் இதேக் கருத்தைத் தான் அனைத்து மதத்தினரும் சுருதி மாறாமல் கூறுகின்றனர்.

மேலும் ஒரு சிலர் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றக் கோட்பாட்டினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

இன்னும் சிலர் இதற்கு எல்லாம் ஒருப் படி மேலே போய் ‘நான் கடவுள்’ என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.

இப்படி கடவுள் இருக்கின்றார் என்றுக் கூறும் நபர்கள் வெவ்வேறு கருத்துக்கள் கூறுவதினால் ‘கடவுள் இருக்கின்றாரா?” என்றக் கேள்வி மெய்யாகவே நம்முள் எழுகின்றது.

கடவுள் இருக்கின்றாரா?

அப்படி இருந்தால் அவர் எந்த மதத்தினைச் சார்ந்தவர்?

மனிதன் என்பவன் யார்?

அவன் படைக்கப்பட்டானா அல்லது ஒரு விபத்தினால் உருவானானா?
போன்றக் கேள்விகளுக்கு விடையினைத் தேடும் ஒரு வரலாற்றுத் தேடல் முயற்சியே இந்தப் தொடர் பதிவு!!! எனவே உங்களது விமர்சனங்களும் விவாதங்களும் வரவேற்க்கப்படுகின்றன..

உங்களுக்குத் தெரியுமா?

உலகில் உள்ள மதங்கள் யாவும் ஆசிய கண்டத்திலேயே தங்களது பிறப்பினைக் கொண்டு இருக்கின்றன. அவை கிருத்துவம், இசுலாம், சைவம், வைணவம், சமணம் மற்றும் பௌத்தம்.

இதில் சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவை நாத்திக மதங்கள். அவை கடவுள் இல்லை என்றக் கொள்கையினை உடையவை.

மற்ற சமயங்கள் முழுவதும் ஆத்திக சமயங்கள்.

இதில் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியத் தகவல் என்னவென்றால் உலகில் நாத்திக சமயங்கள் இந்தியாவினால் மட்டுமே தோன்றி இருக்கின்றன.

புத்தரால் தோற்றுவிக்கப் பட்டதும் அசோகரால் நாடு முழுக்கப் பரப்பப் பட்ட புத்த மதம், இலங்கையில் இருக்கின்றது… சீனத்தில் இருக்கின்றது… சப்பானில் இருக்கின்றது…. ஆனால் அது பிறந்த இடமான இந்தியாவில் இன்று அது பெரிய அளவில் இல்லை.

இதே நிலை தான் சமணத்திற்கும்…!

ஏன்?

இன்று இந்தியா என்றால் அது இந்து நாடு என்கின்றார்களே பெரும்பான்மையினர்…

அந்த நிலை எதனால் வந்தது?

வட நாட்டில் தோன்றிய பௌத்த மற்றும் சமண மதங்கள் தமிழகத்தில் கூட வேருன்றி இருந்த சூழ்நிலையில் எவ்வாறு தங்கள் செல்வாக்கினை இழந்தன?.

இந்து மதம் என்றால் என்ன?…இது தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்கின்றார்களே… உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலினைக் காண நாம் முதலில்
இந்து மதத்தினை சற்று வரலாற்று சம்பவங்களை வைத்துப் பார்ப்போம்.!!!

1794 …

கொல்கத்தா - பிரிட்டுசு இந்தியாவின் அன்றைய தலைநகரம்…!

தங்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவின் மக்களை அவர்களின் மதங்களுக்கு உரிய சட்டங்களை வைத்துப் பிரித்து அவர்களுக்கு சட்டங்களை இயற்ற அப்போதைய பிரிட்டுசு உச்ச நீதி மன்றத்தின் நீதிபதி சர் வில்லியம் சோன்ஸ் (sir William Jones)  முயன்றுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்னே ஒரு சோதனை.

கிருத்துவத்தை பின்பற்றுபவர்கள் கிருத்துவர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் விவிலியம்.

இசுலாம் மதத்தினை பின்பற்றுபவர்கள் இசுலாமியர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் திருக்குரான்.

ஆனால் மற்ற மக்களை என்ன செய்வது… அவர்களுக்குரிய நீதிநூல் என்ன? - இந்தக் கேள்விக்குத் தான் அவர் விடைத் தேடிக் கொண்டு இருந்தார்.
இந்த மக்களை எவ்வாறு அழைப்பது?

சரி… இந்த மக்கள் அனைவரும் சிந்து சமவெளி நாகரீகத்தில் தோன்றியவர்கள் எனவே அவர்களை சிந்து மக்கள் என்று அழைக்கலாம்… என்று அவர் ஒரு வழியாக முடிவு செய்தாலும் இன்னும் அந்த நீதி நூலுக்கு அவருக்கு விடைக் கிடைத்தப்பாடில்லை.

அந்த நிலையில் தான் சில இந்தியர்கள் (ஆரியர்கள் - இவர்களைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்) தங்கள் மதத்தின் நீதி நூல் என மனு தர்ம சாசுதிரத்தை எடுத்து அவரிடம் தருகின்றனர்.

ஆ! விடை கிடைத்தாயிற்று! என்று அவரும் பெருமூச்சினை விட்டவாறே இந்த இந்து மக்களுக்கு (சிந்து என்பதை ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாமல் இந்து என்று அவர் பெயர் இட்டு விட்டார்) உரிய நீதி நூல் மனு தர்ம சாசுதிரம் என்றுக் கூறி சட்டத்தை இயற்றி விட்டார்.

இந்த நிகழ்வுக்கு முன்னர் வரையிலும் இந்து என்ற சொல் எந்த இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ இடம் பெற்றதுக் கிடையாது.! 1794 ஆம் வருடத்தில் தான் இந்து என்றச் சொல் பிறப்பெடுக்கின்றது.

சரி… அதனால் என்ன கெட்டு போய் விட்டது” என்கின்றீர்களா… நிச்சயம் ஒன்றுமில்லை… ஆனால் வரலாறு முக்கியம் அமைச்சரே!
சரி … இப்பொழுது ஒரு கேள்வி…!

இந்து மதம் எங்கே தோன்றியது…?

வட நாட்டில்… இமாலயத்தில் என்கின்றீர்களா!

இல்லை! என்கின்றேன் நான்.

என்னுடைய கூற்றிற்கு நான் ஆதாரங்களைக் கூறும் முன் நாம் சற்று இந்து மதத்தை விரிவாகப் பார்ப்போம்!

பயணிப்போம் வரலாற்றினுள்…!

பி.கு :

மதம்… இறைவன்… ஆகிய இரண்டும் உணர்ச்சிமிகு தலைப்புகள். இதை நான் யார் மனதையும் புண்ணாக்கும் எண்ணத்திலோ அல்லது யார் நம்பிக்கையினையும் குலைக்கும் எண்ணத்திலோ எழுத வில்லை.

நான் அறிந்த கருத்துக்களை சரி பார்க்கவும்,
நான் கூறுவன உண்மையாய் இருக்கும் பட்சத்தில்,
அதை மற்ற நண்பர்களும் அறிய உதவும் வண்ணம் என்னால் முடிந்த கடமையாக இருக்கட்டுமே என்று தான் எழுதுகிறேன்.

தவறு என்று நினைத்தால் கூறுங்கள்… விவாதிப்போம்… நான் தவறென்றால் நிச்சயம் மாற்றிக் கொள்வேன்!

இந்தச் செய்திகளை நான் மா.சோ.விக்டர் அவர்கள் எழுதிய ’குமரிக்கண்டம்’ மற்றும் ’தமிழர் சமயம்’
என்ற நூல்களில் இருந்தும்,
தெய்வநாயகம் அய்யா அவர்களின் ஆராய்ச்சியில் இருந்தும் அறிந்துக் கொண்டவையே.

அந்தச்செய்திகளை என்னுடைய நடையில் என்னுடைய பார்வையினையும் சேர்த்து
தொகுத்து எழுதுவதே இந்தப் பதிவு...

திருட்டு திராவிடத்தை பற்றி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957'ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது...


தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை...

தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும்...

என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது.

தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால், அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, "வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு" என்று பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது.

அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா
பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள்.

அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது.

வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.

(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)
In what way Jinnah is not a North Indian? How is the names Jinnah and Robinson so sweet to you Sir? How is the name of poor Tilak so bitter to you Sir? I am not
able to understand.

ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன்?

திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன்?

இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா?

ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது?

அதற்கு மேல் "வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம்" என்று சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை?

வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில்
'டால்மியாபுரம்' என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா?

ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த சௌந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.

ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.

அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய்?

முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது
சொல்லலாம்.

வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த 'புரபகண்டா'' செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம்?

பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி..

நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.

'தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம்' என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, 'ஹிந்தியைப் புகுத்தாதே' என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம்.

எங்கள் அரசாட்சி அமைந்தால் 'தமிழ் மாகாணம்' என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள்.

ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய
போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

'ரோமாபுரி ராணி' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை?

எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி?

ரோமாபுரி ராணி கதை போதாது என்று 'தங்கையின் காதல்' என்று ஒரு கதை எழுதியிருக்கிறாய்.

தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.

அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியது தானே? வேறு என்ன?

இதுவா தமிழ் நாகரீகம்?

சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்..

- உரை முடிந்தது...

திமுக ஸ்டாலின் துணை முதல்வராக "நியுட்ரினோ" திட்டத்திற்கு அனுமதியளித்து ஒப்பந்தம் செய்த போது எடுத்தப்படம்...


இதற்கு பெயர் தான் நமக்கு நாமே...

இந்தியமும் திராவிடமும் தமிழகத்தை அழிக்க முன்பே திட்டம் போட்டு விட்டார்கள்...


http://www.financialexpress.com/economy/in-a-first-ever-india-set-to-auction-molybdenum-mines/888103/

http://www.thehindu.com/todays-paper/molybdenum-reserves-remain-untapped/article3234553.ece

http://ibm.nic.in/writereaddata/files/11042015111059IMYB2014Molybdenum(Advance).pdf

http://tnenvis.nic.in/Database/MineralResources_1207.aspx
http://www.infomine.com/investment/metal-prices/molybdenum-oxide/

தமிழனை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் திருட்டு திராவிட தெலுங்கர்கள்...


நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ்...

கையெழுத்து போட்டு கொடுத்தவன் திமுக...

கூட இருந்து விளக்கு பிடித்தது மதிமுக...

நவீன புத்தர்களும் நாற்பது திருடர்களும் வருகிறார்கள் சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தமிழக அரசை கண்டித்து 5-ம் தேதி தமிழக - கர்நாடக எல்லையில் முற்றுகை போராட்டம் - கன்னட அமைப்புகள் அறிவிப்பு...


கர்நாடகாவில் ரஜினி மற்றும் கமல் படங்களை இனி திரையிட விட மாட்டோம் - கன்னட அமைப்புகள்...

மக்கள் விரோத காவல்துறையை கண்டித்து ஒரு போராட்டம்...


தமிழக முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் முன்பும்... டிஜிபி மற்றும் கமிசனர் அலுவலகம் முன்பும் ஒரு போராட்டம் செய்யுங்கள்...

எங்களின் வாழ்வாதார போராட்டத்தை சிதைக்க.. கலவரத்தை உண்டாக்குவதும்..

பதவிக்காக போராட்டத்தை வன்முறையாக மாற்றி விடுவதும்...

மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டு...

காவல்துறை உங்கள்  நண்பன் என்று ஏமாற்றாதே... மக்கள் விரோத துறையே...

தமிழக காவல்துறை புகழை உலகம் முழுவதும் பரப்புங்கள்...

உமக்கு கற்ப்பிக்கப்பட்ட மாயையில் இருந்து முதலில் வெளியே வா...


கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது...


அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26...

மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?

வயது பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி ஈ.வே.ரா!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்து விட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம் (குடியரசு 03-06-1928)...

தமிழினமே நாம் விழிக்க வேண்டிய நேரம் இது...


நெதர்லாந்து தமிழர்கள்...


நெத்ர்லாந்து தமிழர் இவர்களில் 90%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள்..

நெதர்லாந்து தமிழர் பெரும்பான்மையானோர் இலங்கை 1983 கறுப்பு யூலை இனக்கலவரங்களுக்குப் பின்பு குடிபுகுந்தவர்கள். சுமார் 20 000 தமிழ் மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்கள் டச்சு மொழியைப் பேசுகின்றனர்.

1600 களில் நெதர்லாந்துக்காரர் (ஒல்லாந்தர்) தமிழீழப் பகுதிகளை காலனித்துவப் படுத்தியிருந்தார்கள்.

குறிப்பிடத்தக்க தொகையினர் இலங்கையிலேயே தங்கி, தமிழ் சிங்கள மக்களுடன் கலந்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தகக்து...

அதிமுக தமிழின துரோகி ஓபிஎஸ் சும் ஏமாற்று வேலையும்...


கன்னட தெலுங்கர் ஈ.வே. ரா வும் ஏமாற்று வேலைகளும்...


திருமணம் செய்து கொள்கின்றவர்களுக்கு போதிய வயது வேண்டும் என்று அறிவுரை கூறுகின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய திருமணத்தின் போது ஏன் கடைபிடிக்கவில்லை?

கொண்ட கொள்கைகளில் உறுதியாக நிற்பவர்.. சொல் ஒன்று, செயல் ஒன்று என்ற நிலைக்கே போகாதவர் என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி ஜம்பம் அடிக்கிறீர்களே.

அப்படியானால் போதிய வயது இல்லாத திருமணம் சுயமரியாதையற்ற திருமணம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தன்னைவிட 46 வயது குறைந்த மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்? இது தான் கொள்கைப்பிடிப்பா?

பாஜக பினாமி அதிமுக ஊழல் அடிமைகளின் சாதனை...


ஒரு உள்ளாடை வாங்க கூட நாள் கணக்குல இணையத்த பயன்படுத்தும் சமூகமே.. இதையும் கொஞ்சம் தேடு...


இப்போது புரிகிறதா... ஏன் தனி தமிழர்நாட்டை.. இந்தியமும் திராவிடமும் எதிர்க்கிறது என்று...

தனி தமிழர் நாடு பிறந்து விட்டால்... நம் தமிழர் நாடே உலகின் வல்லரசு நாடு...

தேவ இரகசியம்...


நாம் பிறக்கும் கனம் எதந்தெந்த கிரகங்களின் கதிர்கள் நம் உடலுக்கு கிடைக்கிறதோ அதற்கு நம் உடலும் மனமும் பழகி விடுகிறது.

அதன் பிறகு ஏற்படும் கிரகங்களின் சுழற்சியால் நம் உடலில் படும் கிரக கதிர்களின் ஏற்ற இறக்கத்தால் நாம் பல்வேறு சூழல்களுக்கு ஆட்படுகிறோம்.

உதாரணமாக நாம் பிறக்கும் போது நம் உடலுக்கு சந்திரனின் கதிர் படவில்லை எனில் அதாவது அமாவாசை எனில் பௌர்ணமி அன்று பரிச்சயம் இல்லாத நிலவின் கதிர்களை எதிர்கொள்ள முடியாமல் உடலும் மனமும் தள்ளாடுகிறது.

பொதுவாக அமாவாசை அன்று பிறப்பவன் பௌர்ணமியில் இறப்பான். பௌர்ணமியில் பிறந்தவன் அமாவாசையில் இறப்பான்.

காரணம் பரிச்சயம் இல்லாத கிரக கதிர்கள் உடலில் படும்போது நம் உடல் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு மனம் சஞ்சப்படுகிறது.

உணர்வுகளே எண்ணங்களை தோற்று விக்கிறது. எண்ணங்களே வாழ்வை தீர்மாணிக்கிறது என்பதை ஆராய்ந்த நான் கண்டறிந்தவன் நான்.

ஆம் நம் ஆழ்மனதில் பதிந்த விடயங்களே நம் வாழ்வை தீர்மானிக்கிறது.

நம் ஆழ்மனம் சக்தியை வைத்து..

உடல் எடையை குறைக்க, உடல் எடையை அதிகரிக்க, தியானம் கைகூட, பொருளாதாரத்தில் உயர, அன்பால் உலகை ஆள என பல்வேறு வகையில் இதை வடிவமைத்து வெற்றி கொள்ள முடியும்...

இந்தியா தமிழனை அழிக்கும் திட்டத்தை தொடங்க போகும் மாதம் ஏப்ரல்...


டென்மார்க் தமிழர்கள்...


டென்மார்க் தமிழர் இவர்களில் 99%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள்.

இங்கு ஏறத்தாழ 15,000 தமிழர் வசிக்கின்றனர்...

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்கள் வரலாறாகத்தான் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது...


தமிழர்களுக்கு இப்போது நடந்த முள்ளிவாய்க்கால் மட்டுமே தெரியும்...

இதைப் போன்றே தமிழ்நாட்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் ஏராளம், ஏராளம்.

தமிழர்களை சூறையாடிய வரலாறு மறைக்கப்பட்டு வெற்றிபெற்ற தெலுங்கர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறாக சமீபகாலம் வரை புனையப்பட்டுள்ளது.

அதற்கு உதாரணம் காவல் கோட்டம் நாவல்..

இது தமிழர்களின் வரலாறு சொல்லும் நாவல் இல்லை.

இது தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பையும் அதிகாரத்தயும் போற்றிப் புகழும் நாவல்.

எனவே வரலாறு என்பது எப்போதும் வெற்றி பெற்றவர்களின் வரலாறு என்பதை வெங்கடேசன் என்ற இந்த தெலுங்கு எழுத்தாளர் தனது காவல் கோட்டம் நாவலின் மூலம் நிரூபித்துள்ளார்.


இது முழுக்க முழுக்க தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பு வரலாறே..

இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்...

உதாரணம் : கெட்டி பொம்மலு என்ற வழிப்பறி கொள்ளைக்கார தெலுங்கனை.. கட்டப் பொம்மனாக சித்தரிக்கப்பட்டுள்ளதே.. அப்படி தான்...

கொடிய நச்சு மரங்களின் இலை/கிளைகள் தான் ஊடகமும், அரசும்...


ஆணிவேரை நசுக்குவதே நிரந்தர தீர்வு.. யோசி...

ஆவிகள் இரகசியம்...


ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்..

சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்..

இங்கு செல்லும் ஆவிகள் மறுபிறவி பிறக்கும்.

சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம்..

பல ஆண்டுகள் கடும் வேதனையை அனுபவிக்க வேண்டும்.

இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது.

திடீர் விபத்து, தற்கொலை, போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை , எங்கே இறந்தார்களோ, அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.

இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.

நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.

சுமார் 20 அடி சுற்றளவுக்குள் சுற்றும். வெளியே எங்கும் செல்ல முடியாது. உயரேயும் பறக்க முடியாது.

இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து தங்களிஷ்டப்படி ஏவல் செய்கின்றனர்.

அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு விடுதலை.

துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது. அவர்களை வணங்கக்கூடாது. அவர்களுக்கு படையல் போடக்கூடாது.

உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம்.

துர்மரணமடைந்தது வாலிப வயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும்.

வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிபவயதுப் பையனைத் துன்புறுத்தும்.

கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில் மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள் தாக்காது.

ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது. ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது.

பிரண்டைத் துவையல், தடியங்காய் (வெண்பூசணி லேகியம்), வெள்ளைப்பூண்டு லேகியம் சாப்பிட்டால் துர் ஆவிகள் தாக்குதல் இராது.

நயம்சாம்பிராணி, வலம்புரிக்காய், கோஷ்டம், விரலி மஞ்சள் ஆகியவைகளை நன்கு இடித்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் புகைபோட ஆவிகள் ஓடிவிடும்.

புகைபோட்ட பின் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

ஹாஸ்டல்கள், அரண்மனைகள், ஆஸ்பத்திரிகள், சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும்.

மாந்திரீகத் தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப்பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை, வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை.

நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்...

இந்தியாவின் ஆதிக்க சக்திகள் யார்...?


வரிசையாக அம்பலப்படுத்துவோம் தயாராக இருங்கள்...

இது பல நபர்களின் முகமூடிகளை அவிழ்க்கும் தருணம்...

சூரிய வழிபாடு / சூரிய வழிபாட்டாளர் : அறிமுகம்...


வழிபாடு என்றால் விழுந்து வணங்குதல் என்ற பொருளிளேயே நாம் எண்ணி வருகிறோம். இங்கே வழிபாடு என்பது வழிபடுதல். அதாவது ஒன்று அல்லது ஒருவரின் வழியை பின்பற்றுதல்.

சூரிய வழிபாடு - சூரிய வழிபாடு என்பது சூரியனை பின்பற்றுதல். எப்படி பின்பற்றுவது ? சூரியனில் ஒளி விழும் நிலையை கணித்து அதனை பின் தொடர்தல்.


உலக வரலாற்றை நீங்கள் உற்று நோக்கினீர்கள், எனில் பெரும் நகரங்களையும் பெரும் கட்டிடங்களையும் கட்டியவர்கள் சூரிய வழிபாட்டாளராய் இருப்பர். இதற்கு உதாரணமாக மாயன்களையும் எகிப்தையும் சோழரையும் கூறலாம்.


சோழர் என்ற சொல்லே ஆங்கிலத்தில் சோலார் (Solar) என்ற சூரியனை குறிக்கும் சொல்லாக வழங்கப்படுகிறது. சோழர்கள் தங்களை சூரிய வம்சம் என கூறிக்கொண்டனர் என்பதையும் நோக்கவும்.

எகிப்து பாரோக்களும் தங்களை சூரியனின் வாரிசுகள். சூரியனின் மகன்
கள் என்றே கூறி கொண்டனர்.


நான் உதாரணமாக கூரிய மூன்று அரசுகளும் கூம்பு வடிவ பெரும் கட்டிடங்களை கட்டியவர்கள்.. இவை பெருமேடுகள்.

மாயங்களின் பெருமேடு... மாயன் பெருமேடு..
எகிப்தியரின் பெருமேடு.. எகிப்திய பெருமேடு..
சோழரின் பெருமேடு.. சோழ பெருமேடு..


சரி, இவற்றுக்கும் சூரிய வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு ?

சூரியனின் நிலைகளை கொண்டு காலத்தை கணித்து அதனை வழிபடுவோரே சூரிய வழிபாட்டாளர்..

சூரியனின் நிலைகளை துள்ளியமாக கணிக்க உதவியது  இந்த பெருமேடுகள்.


விழுவன் குச்சி மூலம் அதன் நிழல் விழும் கோணத்தை கொண்டு நேரம் நமது முன்னோர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

Obelisk என்பதும் விழுவன் குச்சிகளே...

வத்திக்கான் விழுவன் குச்சி..
வாசிங்டன் டி சி விழுவன் குச்சி..

பெருமேடு என்பதும் அதன் நிழல் விழும் கோணத்தை கொண்டு சூரியனின் நிலைகளை  ஆண்டு அளவில் கணிக்க பயன்படுத்தபட்டதாகும்.

விரைவில் இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.


பெருமேடு நிழல் - இவ்வாறு பெருமேடுகளை கட்டி அதன் வழி சூரியனின் வழியினை கணித்து அதன் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை தொடர்வது சூரிய வழிபாடு எனவும். இவ்வாறு சூரியனை வழிபட்டோர் சூரிய வழிபாட்டினர் என்றும் அழைக்கப்பட்டனர்.

ஆண்டு கணக்கை பின்பற்றுவோர் என கூறலாம்.

எல்லா சூரிய வழிபாட்டாளர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். கடல் வழி பயணம் மேற்கொண்ட இவர்கள் இவற்றை உலகம் முழுவதும் பரப்பினர்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

நாகரீக வலையில் சிக்கும் முதல் ஆட்கள் நம் பெண்கள் தான்...


குண்டலினி...


குண்டலினியை வாசியோகம் என்றும் சொல்லுவாங்க. நமக்கு இந்த சொல் பழக்கம் இல்லை என்றாலும் இதை பற்றி நமக்கு முன்பே தெரியும்.

15 ஆண்டுகளுக்கு முன்வு பொதிகையில் ஓடிய ஒரு தொடர் சக்திமான். நிச்சயமா எல்லாரும் அந்த காலத்தில ஆர்வமா பாத்திருப்போ.


சக்திமான் தனது உடலில் உள்ள ஏழு சக்கரத்தையும் இயக்கியவுடன் அவருக்கு அரும் பெரும் சக்தி வரும். பறப்பார், ஓடுவார், தூக்குவார், மோதுவார், பார்ப்பார் , கேட்பார் ஆனால் நம்மை விட அதிக ஆற்றலோடு இவற்றை செய்வார். அதற்கு இந்த குண்டலினி சக்தி தான் காரணம்.

குண்டலினி - நமது உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கு. மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை துரியத்துகு உயர்த்துவது தான் குண்டலினி. அதாவது மூலாதாரத்தில்ல தூங்குற பாம்ப தட்டி எழுப்பி படம் எடுத்து ஆட வைக்கனும்.


33 படிநிலைகளை கடந்து உச்சத்தை அடையனும். முதுகெலும்பில் 33 இணை நரம்பு முடிச்சிகளில் ஏறி மண்டை ஓட்டில் உள்ளே புதையலை அடையனும்..

ஏதேன் தோட்டத்திலிருந்த அதே பாம்பு தான் இது. நமக்கு விழிப்புணர்வையும் ஞானத்தையும் ஆற்றலையும் கொடுக்கும். அந்த ஏதேன் தோட்டம் என்பது ஒரு உருவகம் மட்டுமே.

மூன்றாம் கண்ணை திறப்பதே இந்நிகழ்வு...