19/10/2017

நிலவேம்பு கசாயம் டெங்கு விற்கு மருந்து என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை...


நிலவேம்பு கசாயம் ப்ளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது அதற்கான ஆதாரங்கள் உள்ளது.

எனவே யாரும் வதந்தியை நம்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு 30 எம்எல் வீதம் 5 நாளைக்கு நில வேம்பு கசாயம் சாப்பிடலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்...

ஈழத்தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்கும் இந்துத்துவ கும்பல்கள்...


சாதியொழிந்த மதம் கடந்த ஒரு முற்போக்கான தேசத்தை தமிழருகென்று கட்டியெழுப்பவே தமிழீழ தேசியத்தலைவர் தோழர் பிரபாகரன் ஈழமண்ணில் போராடினார். அதற்காகவே அந்த மக்களை இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் சிங்களத்துடன் சேர்ந்து இனப்படுகொலை செய்தது.

தற்போது உலக அரங்கில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதிகேட்டு ஈழத்தமிழர்கள் போராடி கொண்டிருக்கும் போது அதனை தடுக்க பல்வேறு சூழ்ச்சிகள் அந்த மண்ணில் இந்தியா அமெரிக்கா மற்றும் சிங்களத்தால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

அதன்படி தான் இலங்கையில் நடந்தது ஒரு தேசிய இனப்போராடமில்லை அது மதங்களுக்கு இடையே நடந்த ஒரு மோதல் என்று இந்தியா மற்றும் சிங்களத்தின் ஆதரவுடன் அமெரிக்க ஐநா அவையில் ஒரு தீர்மானத்தை முன்வைத்தது.

அதன்படி ஈழத்தில் மதமோதல்களை உருவாக்க தமிழீழத்தில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லீம்கள் மற்றும் கிருத்துவர்களை  இந்த போராட்டத்திலிருந்து அந்நியபடுத்துவதற்காகவும் அதே நேரத்தில் மத மோதல்களை உருவாக்கவும் இந்தியாவின் ஏற்பாட்டில் இந்துத்துவா கொள்கைகளை உள்வாங்கிக்கொண்ட  சிவசேனா என்ற அமைப்பு கடந்த வருடம் அங்கு  உருவாக்கப்பட்டது.

அது தற்போது திவிரமான சிறுபாண்மையின வெறுப்பை ஈழத்தமிழர்கள் மத்தியில் பரப்பி வருகிறது. அதன்படி இதுவரை பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆரிய பண்டிகையான தீபாவளியை தமிழர்கள் கொண்டாட வேண்டுமென்றும், அதிலும் இந்து வணிகர்களிடம் மட்டுமே பொருடகள் வாங்க வேண்டுமென்றும் ஒரு பிரச்சாரத்தை அது முன்னெடுத்திருக்கிறது. இது இந்தியாவில்  இந்துத்துவாதிகள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வெறுப்பு பிரச்சாரம் தான் இதை இப்போது ஈழத்தில் பரப்ப நினைக்கிறார்கள்.

இதற்கு ஈழத்தமிழர்கள் கடுமையான எதிர்வினை ஆற்ற வேண்டும் இல்லையென்றால் நாம் போராடி அடைகாத்துக் கொண்டிருக்கும் ஈழ விடுதலை என்ற நெருப்பை இந்த இந்துத்துவ கும்பல்கள் அழித்துவிடும். எச்சரிக்கையுடன் இருப்போம். தமிழீழம் வெல்வோம்...

விழிப்புடன் இருங்கள்...


தற்போது பல இடங்களில் ஒரு பெண் (ஒரு குழுவாக இருக்கலாம் ) அவள் ஒரு LPG GAS கம்பனியின் பெயரைக் கூறுவாள் இது போலி நிறுவனம் ஆகும். அவள் அந்த நிறுவனத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பாள் மற்றும் அதிக உறுப்பினர் அட்டைகளையும் வைத்திருப்பாள்.

உங்கள் வீட்டிற்கு வந்து எரிவாயு அடுப்பு  Gas Stove Maintenance பராமரிப்பினை சோதனையிட வந்ததாகக் கூறி அவள் உங்கள் வீட்டிற்குள் நுழைய முற்படலாம்.

மேலும் ரூபாய் 200/-  (Yearly Maintenance)  வருடாந்திர அங்கத்துவப்பணம் கேட்பது போல் உங்களிடம் பேச்சுக் கொடுக்கலாம்.

அவளிடம் குளோரோஃபார்மையும் (மயக்க மருந்து) வைத்திருப்பாள் . அதன்மூலம் அவள் உங்களை மயக்கமடையச் செய்ய முயற்சிக்கலாம்.

எனவே, உங்கள் வீட்டில் அவளை அனுமதிக்க வேண்டாம்.

அவள் உங்கள் கழிவறையை பயன்படுத்த கேட்கலாம்.

மேலும் அவள் தனது குழுவை அழைத்து வீட்டின் நிலைமையை விளக்க முற்படுபவள் போல் தயாராவாள்

உள்ளே வந்து விட்டால்  அவர்கள் உங்கள் வீட்டில் , ஒவ்வொரு பகுதியையும் உடைத்து திருடுவார்கள்.

தற்போது இந்த குழு மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறது.

எச்சரிக்கை...

யார் திராவிடன்...


ஆல்பா தியானம் செய்வது எப்படி?


மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hemisphere) இருப்பதை அறிவியல் பாடத்தில் அறிந்திருப்போம். அவை வலது பக்கத்து மூளை, இடது பக்கத்து மூளை.

இடது, பக்க மூளை ஐம்புலன்களோடு தொடர்புடையது. நாம் விழித்திருக்கும் போது அல்லது உணர்வோடிருக்கும் போது ஐம்புலன்வழி வருகிற, கிடைக்கிற செய்திகளை பகுத்து, தொகுத்து, ஆய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து அந்த அனுபவங்களை பகுக்கும் போதும், தொகுக்கும் போதும் உண்டான எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.

இந்த இடது பக்கத்து மூளை விழித்துக் கொண்டிருக்கும் போது மட்டும் செயல்படுகின்றது.

இதனை நினைவு மனம் Conscious Min, Rational Mind, Objective Mind, Waking Mind, Surface Mind, Voluntary Mind, Male Min என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த இடது பக்கத்து மூளை சிந்திக்கின்ற வேலையைச் செய்கின்றது. கணக்குப் போடும் வேலையை, காரண காரியங்களை கண்டறிகின்ற வேலையைச் செய்கின்றது.

ஆனால், இந்த வலது பகத்து மூளையோ சிந்திக்கின்ற வேலையைச் செய்யாமல் இடது பக்கத்து மூளை தருகின்ற ஒட்டு மொத்த சிந்தனைகளையும், அனுபவங்களையும் அப்படியே வாங்கி அது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், நிஜமான அனுபவங்களாக இருந்தாலும், கற்பனையான அனுபவங்களாக இருந்தாலும் அவற்றைப் பதிய வைத்துக் கொள்ளுகிற நினைவு வங்கியாக (Memory Bank) கணினியின் நினைவுத்தகடு (Floppy Disk) போல செயல்படுகிறது.

நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது.

சுயமாக சிந்திபது என்கிற ஆற்றல் அற்றது போல தோன்றகின்றது. இதனை ஆழ்மனம், Sub Concious Mind, Subjective mind, Sleeping Mind, Deep Mind, Involuntary Mind, Female Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த வலது பக்க ஆழ்மனம் இடது பக்க நினைவு மனப்பகுதியால் வழி நடத்தப்பட்டு மிகப்பெருஞ்சக்தியாக, எல்லாவற்றுக்கும் தீர்வுகளை பெற்றுத்தருகிற, அற்புதங்களை ஆற்றுகிற அரேபிய கதைகளில் வருகிற அலாவுதீனின் அற்புத விளக்கு போல செயல்படுகிறது.

இந்த Sub Concious mind என்று சொல்லப்படுகிற வலது பக்க மூளையே ஆழ்மனம். இதுவே கற்பனையின் நிலைக்களன்.

இதனைப் பயன்படுத்த அறிந்து கொள்கிற போது தான் புதியன படைக்கவும் உருவாக்கவும் நம்மால் இயலுகிறது.

சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை..

1)ஆல்பா  2)பீட்டா 3)தீட்டா 4)டெல்டா
என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக சித்தர்களும், ஞானிகளும் அறிவியலார்களும் அறிந்து கூறுகிறார்கள்.

ஆல்பா நிலையில் மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec),

பீட்டா நிலையில் 13 சுற்றுகளுக்கு மேலும்,

தீட்டா நிலையில் 4 முதல் 7 சுற்றுகளுக்குள்ளும்,

டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் கீழாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.

பீட்டா நிலை என்பது விழிப்பு நிலை. உணர்ச்சிவயப்பட்ட மனம் வேகமாக இயங்கும் நிலை (Active and Agitated State).

ஆல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கமும் அற்ற தூங்காமல் தூங்கும் தியான, மோன நிலை (A Hypnotic State).

டெல்டா என்பது சமாதி நிலை.

நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐம்புலன்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து தகவல்களை ஆய்ந்தும், தொகுத்தும், பகுத்தும் கொண்டிருப்பதால் நினைவு மனம் அதிக இயக்கத்திலும் அதாவது விழிப்பு நிலையிலும் ஆழ்மனம் (Sub Conscious Mind) உறக்க நிலையிலும் இருக்கிறது.

உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனத்தை வலது பக்க மூளையை விழிப்படையச் செய்ய, நினைவு மனத்தின் (Concious Mind) செயல்பாடுகளை இயக்க நிலையை குறைக்க வேண்டும்.

நம் ஐம்புலன்களுக்கும் உள்ள உலக தொடர்புகளை துண்டித்தால் நினைவு மனத்தின் செயல் குறையும்.

கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்கமில்லாமல், தளர்வாக, வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ, இன்னும் சொல்லப் போனால் படுத்த நிலையிலோ (படுத்த நிலை உறக்கத்தை உடனே வரவழைத்து விடுவதால், உறக்கம் நினைவு மனத்தின் செயல்பாட்தை முழுவதுமாக தடை செய்து விடுவதால் இந்த நிலை பரிந்துரைக்கப் படுவதில்லை) ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும் போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது. ஆழ்மனம் விழிப்படையத் தொடங்குகிறது.

நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தால் எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும்.

ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும் போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை. எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி.

எல்லா தியான முறைகளையும் தொடங்குவதற்கு இந்த முறையைத்தான் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக அட்டாங் யோகத்தின் சமாதி நிலையை அடைய இதுவே வழி.

தியானம் என்ற சொல்லுக்கு ஏதாவது ஒன்றை எண்ணித்தியானிப்பது என்பது பொருள்.

அதாவது மனதில் சங்கல்பங்களை (முனைந்து உருவாக்கும் எண்ணத் தீர்மானங்கள் ) உருவாக்குவதும் ஒன்றையே தொடர்ந்து இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பதும் தியானம்.

ஆல்பா நிலையில் நினைவு மனத்தின் துணை கொண்டு எந்தப் பொருள் குறித்து, புதிய செய்திகள், உத்திகள் தேவையோ எந்தப் புதிய கண்டு பிடிப்புகளுக்கு விடை தேவையோ, சிக்கல்களுக்கு தீர்வு வேண்டுமோ அது குறித்து சிந்தித்தால் அந்த எண்ணங்கள் ஆழ்மனத்தில் (வலது பக்க மூளையில்) பதிந்து உடனேயோ அல்லது மற்ற சமயங்களிலோ நம்முடைய மனதில் புதிய எண்ணங்களும், கற்பனைகளும் விடைகளும், உத்திகளும் ஊற்றெடுக்கும்.

இந்த ஆல்பா நிலை தியானத்தின் போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை, காட்சிகளாக காண வேண்டும்.

மனித உடல் அழியக் கூடியது, ஆன்மா அழிவில்லாதது என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை.

எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audio & Video) நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து வைத்து வேண்டும் பொழுது அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது.

வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.

பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெறமுடியும் என்று பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள்.

எடிசன் போன்ற அறிவியல் கண்டு பிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.

ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம், நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம்.

இதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கலை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துக் தளர்வாக, ஓய்வாகக் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிற போது கைப்பிடி தளரந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும்.

அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற ஆல்பா தியான நிலை.

இந்த நிலையில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள், விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதிவிலிரந்து கிடைக்கும் செய்திகள்.

இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும் பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.

கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கற ஒருமுறை.

நேரடி சிந்தனை (Straight Thinking) கணக்குப் போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை.

இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking இல்லையென்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம்.

பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinit Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை...

சித்தர்கள் மருத்துவத்தை உலகறிய வைப்பேன்...


ஆண்களுக்கு ஏற்ற அழகு பேஸ் மாஸ்க்...


பெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதிகம். அதிலும் மார்கெட்டிங் வேலைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கவேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்துவிடும். எனவே முக அழகை புத்துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலேயே பேஸ் மாஸ்க் போடுங்களேன்.

வெள்ளரிக்காய் மாஸ்க்..

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தை இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.

தேன், முட்டை..

தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஆப்பிள் சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

தக்காளி பழ மாஸ்க்..

ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.

வேப்பிலை மாஸ்க்..

வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.

ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். வெயில் காலத்திற்கு ஏற்றது...

சித்தர்கள் வழிமுறை...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 36...


விபாசனா தியானம்..

புத்த மதத்தில் பல வித தியானங்கள் அனுசரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதசார்பற்றவையே. அதில் மிகவும் பிரபலமானது விபாசனா தியானம். இந்த தியானம் புத்தரால் நேரடியாக சீடர்களுக்கு சொல்லித் தரப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது.

புத்த மத நூல்களில் ‘பாலி’ மொழியில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த நூல்களில் இந்த தியான முறை காணப்படுகிறது. இந்த தியானம் தற்காலத்தில் உள்நோக்கு தியானம் (Insight Meditation) என்ற பெயராலும் அறியப்படுகிறது. இன்று பல நாடுகளிலும் தியான முகாம்களில் கற்றுத் தரும் இந்த தியானத்தை மிகவும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் பர்மாவைச் சேர்ந்த எஸ்.என்.கோயன்கா என்றழைக்கப்பட்ட சத்யநாராயண கோயன்காவும், சன்ம்யாய் சயடாவும்.

எஸ்.என்.கோயன்கா இந்த தியானமுறைக்கு அறிமுகப்பட்ட நிகழ்ச்சி சுவாரசியமானது. பர்மாவில் பழங்காலத்தில் குடியேறிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.என்.கோயன்கா. அவர் கிட்டத்தட்ட 25 பள்ளி, கல்லூரி, வணிக அமைப்பு, ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர், காரியதரிசி, தலைவர் பதவிகளை வகித்து வந்தவர். பகவத்கீதை சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வந்தவர். இப்படி சமூகத்தில் மிக முக்கிய நபராக இருந்து வந்த அவர் நீண்ட நாட்களாக மைக்ரைன் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்.

நவீன மருத்துவ சிகிச்சைகளால் அதைக் குணப்படுத்த முடியாமல் அவர் தவித்தபோது ஊ பா கின் என்ற பர்மியர் கற்றுக் கொடுத்து வந்த விபாசனா தியானத்திற்கு செல்லுமாறு நண்பர் ஒருவரால் அறிவுறுத்தப்பட்டார். “அவர் சொல்லித் தரும் பத்து நாட்கள் தியான முகாமிற்குச் சென்று அந்த தியானத்தை தொடர்ந்து செய்தால் அந்த தலைவலியை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ளலாம்” என்று அவர் நண்பர் சொன்னார்.

ஊ பா கின் சன்னியாசியல்ல. குடும்பஸ்தர். அரசாங்கத்தில் சிறியதொரு வேலையில் இருந்தவர். ஆனால் அவரை சென்று பார்த்தவுடனேயே அவர் ஆன்மிகத்தில் உயர் நிலை எட்டியவர் என்பதை கோயன்காவால் உணர முடிந்தது. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “என்னுடைய மைக்ரைன் தலைவலியை நீக்க தங்கள் தியான முறையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கோயன்கா சொன்னார்.

கோயன்காவின் உயர்பதவிகளால் சிறிதும் பாதிக்கப்படாத் ஊ பா கின் “தங்களுக்கு தியானத்தைக் கற்றுத் தர இயலாது” என்று சொல்லி விட்டார்.

திகைப்புடன் கோயன்கா ஏன் என்று கேட்ட போது “இந்த தியானம் நோயை மட்டும் தீர்க்கும் மருந்தல்ல. மனிதனை வருத்தும் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தரும் ஒரு வாழ்க்கை முறை. இந்தியாவில் இருந்து பெறப்பட்ட, புத்தர் பிரானால் பின்பற்றப்பட்ட இந்த சிறப்பு தியானத்தை வெறும் ஒரு குறிப்பிட்ட நோயை மட்டும் நீக்கும் நோக்கத்தோடு வருபவருக்குச் சொல்லிக் கொடுக்க நான் விரும்பவில்லை” என்று ஊ பா கின் கூறினார். விபாசனா வெறும் பயிற்சிகளை சொல்லித் தரும் தியானம் அல்ல ஒன்றும், சில ஒழுக்க விதிகள், நற்குணங்கள் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றி அத்துடன் இந்த தியானப் பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த தியானம் முழுப் பலன் தரும் என்றும் விளக்கினார் ஊ பா கின். “சில பயிற்சிகளால் தியானத்தில் சமாதி நிலை என்னும் மிக உயர்ந்த நிலையைக் கூட அடையலாம்...

ஆனால் அடிமனதைத் தூய்மைப்படுத்தாமல் இந்த தியான உயர்நிலைகளை அடைவது உறங்கும் அரக்கன் மீது அமர்ந்து அந்த உயர்நிலைகளை அடைவது போலத் தான். மேலோட்டமாகப் பார்த்தால் மனதை முழுமையாக வெற்றி கொண்டது போல் தோன்றும். அந்த அரக்கன் விழித்தெழுந்தால் எரிமலை வெடிப்பது போலத் தான். உள்ளே அகற்றாமல் வைத்திருந்த சில குணங்கள் இது வரை சேர்த்து வைத்திருந்த எல்லா முன்னேற்றத்தையும் அழித்து சேதப்படுத்தி விடும்”

(ஆன்மீகத்தில் மிகுந்த முன்னேற்றமடைந்தவர்களாக ஒரு காலத்தில் நினைக்கப்பட்டவர்கள் பற்றி இன்னொரு காலத்தில் மிகக் கேவலமான செய்திகளைக் கேட்க நேர்வது ஏன் என்பதற்கு ஊ பா கின் அன்று சொன்னது தான் பதில். எத்தனையோ சித்திகள் அடைந்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஒழுக்கம் இல்லையானால், ஒழுக்க விதிகள் பின்பற்றப்படவில்லையானால் எல்லாமே வியர்த்தமாகி விடும். பதஞ்சலியின் யோக சூத்திரங்களிலும் ஆரம்பத்தில் யமா, நியமா என்ற ஒழுக்க விதிகள் பற்றி வலியுறுத்தியதை நாம் முன்பே பார்த்தோம். இவர் சொல்வதும் அப்படியே ஒத்து வருகிறது).

அவர் கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த கோயன்கா அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு முழுமையாக அந்தத் தியானத்தில் முறைப்படி ஈடுபட சம்மதித்தார். அந்த தியானம் கற்ற பிறகு அவர் தலைவலி குணமானது மட்டுமல்லாமல் அவர் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் விபாசனா தியானத்தை பிரபலப்படுத்தி அனைவருக்கும் கற்றுத் தர ஆரம்பித்தார்.

விபாசனா தியானத்தில் ஐந்து தர்மவிதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்கண்ட உறுதிமொழிகளை விபாசனா தியானம் செய்வோர் எடுத்துக் கொள்கின்றனர்.

1. நான் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க மாட்டேன். கொல்ல மாட்டேன்.
2. நான் திருட மாட்டேன்.
3. நான் தவறான உடலுறவுகளில் ஈடுபட மாட்டேன். வாழ்க்கைத் துணையுடன் அல்லாத உடலுறவில் ஈடுபட மாட்டேன்.
4. நான் பொய் பேச மாட்டேன். தீங்கு விளைவிக்கும் பேச்சினையும் பேச மாட்டேன்.
5. நான் புத்தியை மழுங்கச்செய்யும் மது, போதை வஸ்துக்களை உட்கொள்ள மாட்டேன்.

தியானப் பயிற்சிமுகாம்களில் பங்கு பெறும் போது அந்த நாட்களில் பங்கு பெறுவோர் மேலும் மூன்று உறுதி மொழிகள் எடுத்துக் கொள்கின்றனர்.

6. நான் இருட்டிய பிறகு உணவு உட்கொள்ள மாட்டேன்.
7. நான் அலங்காரம், பகட்டு, கேளிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட மாட்டேன்.
8. நான் சொகுசான படுக்கை, இருக்கை ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன்.

மொத்தத்தில் தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவையே இங்கு வலியுறுத்தப்படுகின்றன. விபாசனா தியான முறையாக மட்டுமல்லாமல் காலப்போக்கில் வாழ்க்கை முறையாக மாற வேண்டிய ஒரு உயர்நிலையாக கருதப்பட்டது. எனவே அந்த தியானமுகாமில் பங்கு பெறும் நாட்களில் இந்த உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு பின் பற்றுவது அந்த நெறியான வாழ்க்கைக்கு அறிமுகமாகும் சந்தர்ப்பமாக அமைகிறது.

இனி விபாசனா தியானத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்.....

உலகத்திலேயே தன் கட்சியின் சின்னத்தையும், பெயரையும் முடக்கிவிட்டு கட்சிக்கு ஆண்டு விழா கொண்டாடுற ஒரே டுபாக்கூர் என்றால் அது டயர் நக்கி பன்னீர்செல்வமா தான் இருக்கும்...


ஒவ்வோரு மனிதர்களின் உடலிலும் ஒளிவட்டம் இருக்கும்...


அந்த ஒளிவட்டம் வெவ்வெறு நிறத்தில் இருக்கிறது.

ஞானிகள் – முனிவர்கள் – மகான்கள் தியானம் செய்து அந்த ஒளியை வலுப்படுத்தி சக்தியானவர்களாக மாறி விடுகிறார்கள்.

அதிகமாக மகான்களின் ஒளிவட்டம் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்கிறது யோக சாஸ்திரம்.

அத்துடன் வெள்ளை நிறத்திற்கு மற்றவர்களை அடக்கியாலும் சக்தியும் உண்டு.  அதனால்தான் அரசியலில் இருப்பவர்கள் அதிகம் வெள்ளை நிறத்தை உபயோகிக்கிறார்கள்.

கால்குலஸ் என்னும் கணித வகையும், புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்து சொன்ன ஸர் ஐசக் நியூட்டன்தான் வெள்ளை ஒளிக்குள்
ஏழு வண்ணங்கள் இருக்கிறது என்று தன் ஆராய்ச்சியில் கண்டுபடித்து உலகத்திற்கு சொன்னார்.

இவர் விஞ்ஞானத்தில் அதிபுத்திசாலி என்றாலும் இவர் வாழ்வில் வேடிக்கையான சம்பவம் பல உண்டு.

ஒருநாள் ஐசக் நியூட்டன் தன் வீட்டின் கதவில் பெரிய ஓட்டையும் அதன் பக்கத்திலேயே சிறிய ஒட்டையும் போட்டார்.

இதை கண்ட நியூட்டனின் நண்பருக்கு ஒன்றும் புரியாமல், “எதற்காக பெரிய ஒட்டையின் பக்கத்திலேயே சிறிய ஒட்டையும் போடுகிறீர்கள்.?“ என்றார்.

அதற்கு நியூட்டன், “நான் பூனை வளர்க்கிறேன். அது ஒரு இடத்தில் உட்காராமல் வெளியே செல்வதும் வருவதுமாக இருக்கிறது. அந்த பூனைக்காக இருபத்தி நான்கு மணிநேரமும் கதவை திறந்து வைத்திருக்க முடியாது இல்லையா.? அதனால்தான் அது எந்த நேரமும் வெளியே சென்று வர, கதவில் ஒட்டைகள் போட்டேன்.“ என்றார்.

அதற்கு நண்பர், “அது சரி. அதற்கு ஏன் கதவில் இரண்டு ஓட்டை போட்டீர்கள்.?“ என்றார்.

அந்த பூனையுடன் ஒரு குட்டி பூனையும் இருக்கிறது. பெரிய ஓட்டையில் பெரிய பூனையும், சின்ன ஓட்டையில் குட்டி பூனையும் சென்று வருவதற்குதான்.? என்றார் நியூட்டன்.

உன் புத்திசாலிதனத்திற்கு ஒரு அளவில்லையா…? பெரிய ஓட்டையிலேயே இரண்டு பூனைகளும் போய் வருமே. என்றார் நண்பர்.

நியூட்டனை போல் அதிமேதாவியாக இருப்பவர்களும் சில நேரத்தில் மூலை மந்தமாக வேலை செய்யும். அதனால் தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள், யானைக்கும் அடிசறுக்கும். அதிகம் சிந்தித்தால் மூலை சூடாகி குழும்பி விடும். என்று.

ஒரு பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என்றால் பதட்டத்தில் எப்படி சமாளிப்பது என்பதை மறந்து, அந்த சிறு பிரச்சனையை பூதகரமாக்கி விடுவோம். பிறகு, இதை இப்படி கையாண்டு இருக்கலாமோ ? என்று சிந்திப்போம்.

இப்படிபட்டவர்கள் நவரத்தினங்களில் ஒன்றான முத்தை அணிந்தால் நல்ல புத்தி கூர்மையை அடைவார்கள். சிறந்த யோகத்தையும் பெறுவார்கள். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் முத்துக்கு உண்டு. சமுதாயத்தில் நல்ல மதிப்பை ஏற்படுத்தும் ரத்தினம் முத்து. செல்வத்தை பெருக்கும். பண பிரச்சனை தீர்க்கும். மற்றவர்களின் உதவியை சுலபமாக பெற வைக்கும் ஆற்றலும் முத்துக்கு இருக்கிறது.

முத்தை அணியும் முன் உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி, உங்களுக்கு முத்து ரத்தினம் சாதகமாக இருக்குமா?  என்று ஆலோசனை பெற்ற பிறகு அணிந்தால் இன்னும் யோகம் ஏற்படும்.

ஜாதகம் இல்லாதவர்கள், பிறந்த தேதி இரண்டோ அல்லது தேதி – மாதம் – வருடம் கூட்டினால் இரண்டோ வந்தால் முத்தை அணியலாம்.

உதாரணத்திற்கு - 2 – 11 -29 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள் முத்தை அணியலாம். 8.4.1970 என்றால், 8 + 4 + 1 + 9 + 7 + 0 =  29 வருகிறது. இதில் 2 + 9 = 11 வரும்.  1+1=2 ஆக மொத்தம் 2.

இது உயிர் எண். இதன் ஆதிக்கம் சந்திரன். சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் முத்தை அணியலாம்...

தமிழ்நாட்டை அடிமைகளெல்லாம் ஆளுது என்றால் காரணம் இந்த மாதிரி போஸ்டர்கள் ஒட்டும் இளைஞர் அடிமைகள் தான்...



தகுதிக்கு ஏற்ற தலைமை தான் கிடைக்கும். உங்களுக்கு எல்லாம் ஈபிஎஸ் ஓபிஎஸ் தான் சரி...


1971-ல் கடலுக்குள் இருந்து கிளம்பிய யூஎப்ஓக்கள்...


1952-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலோர பகுதியில் இருக்கும் நியூ ஜெர்சியில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியாத பறக்கும் பொருள் (Unidentified flying object - UFO) ஒன்றின் தெளிவான புகைப்படம் சிக்கியது. 1940 மற்றும் 1950-களில் விசித்திரமான இந்த பறக்கும் பொருள்கள் - பறக்கும் சாசர் (Flying Saucer) அல்லது பறக்கும் டிஸ்க் (Fluying Disc) என்ற பொது பெயரில் உலா வந்தது. அவைகளை "அங்கு பார்த்தேன்", "இங்கு பார்த்தேன்" என்று கூறப்பட்டு வந்த நிலையில் தெளிவாக புகைப்படத்தில் சிக்கிய அடுத்த ஆண்டே, அதாவது 1953-ஆம் ஆண்டு அந்த விசித்திரமான பறக்கும் பொருளுக்கு யூஎப்ஓ (UFO) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டு பின் அவைகள் பூமி கிரகத்தை சேர்ந்த பொருள் அல்ல என்ற நம்பிக்கை பரவியது..

விண்ணில் தோன்றும் யூஎப்ஓக்கள் வழக்கத்திற்கு மாறாக 1971-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடலில் இருந்து கிளம்பின, மேலும் அவைகள் தெளிவான முறையில் புகைப்படங்களிலும் சிக்கின.

உலகை உலுக்கிய அந்த புகைப்படங்களை அமெரிக்காவின் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் ட்ரேபாங்க் எஸ்எஸ்என்-674 (USS Trepang SSN-674) பதிவு செய்தது.

வெளியான புகைப்படங்கள் அமெரிக்க கடற்படை படைகளுக்கும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு "நெருக்கமான சந்திப்பு" ஆர்க்டிக் பெருங்கடலின் நிகழ்ந்துள்ளது என்பதை உறுதி படுத்துகின்றன.

இந்த புகைப்படங்கள் 'டாப் சீக்ரெட் மேகசின்' (Top Secret Magazine) என்னும் இதழின் பக்கங்களில் இருந்து ஸ்கேன் செய்து பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு ஏவுகணையை உருவம் கொண்ட அந்த மர்ம பொருள் ஆனது கடலுக்குள் இருந்து வெளியே வருவதை உணர்த்துகிறது

இது பறக்கும் பொருளா..?? கடலுக்குள் நுழைகிறதா அல்லது கடலுக்குள் இருந்து வெளியேறுகிறதா என்பதை பற்றிய ஆய்வு இதன் ஒரிஜினல் புகைப்படங்களை கொண்டு அமெரிக்க ராணுவ ஆய்வகத்தில் ஆராயப்பட்டுக் கொண்டு வருகிறதாம்.

முக்கோண வடிவ யுஎப்ஒ ஒன்று பதிவானது அது கடலில் மூழ்குவதற்கு முன்னதாக பக்கவாட்டாக செல்வது போல பதிவாகியுள்ளது.

மற்றொரு யூஎப்ஓ ஆனது பாதிப்புக்கு உள்ளானது போலவும் அதில் இருந்து புகை வெளியேறுவது போலவும் பதிவாகியுள்ளது

இவை அனைத்துமே தாக்குதல் நீர்மூழ்கியின் அனலாக் கேமிராவின் (analog camera) மூலம் பதிவாக்கப்பட்டுள்ளது.

இது சார்ந்த அதிகாரப்பூர்வமான தகவலோ அல்லது பதிவாக்கபட்ட யூஏப்ஓ-க்களின் ஒரிஜினல் புகைப்படங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

தமிழகத்தின் அடுத்த விஞ்ஞானி...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


இந்தியா ஏழைகளின் தேசம் என்பதை மறந்த கார்ப்பரேட் கபோதிகளின் அடிமைகள் ஆட்சியில் ஒரு வேலை உணவுக்கு வழியின்றி வாழும் ஏழைகளின் துன்பம் அயோக்கியர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஜார்க்கண்டில் ஆதார் அட்டை இல்லாததால் ரேசன் உணவு மறுக்கப்பட்டு, ஏழை சிறுமி பட்டினியில் மரணம் அடைந்தார்.. இது மரணமில்லை மோடி அரசின் கொலை...

நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு அருமருந்து...


என்னங்க இலவசமா எந்த நோயும் வராம பாத்துக்குற வேப்பங்குச்சில விளக்க மாட்டேங்குறிங்க...


பாஜக மோடி புகழ் உலகமே நன்றாக அறிந்து வைத்துள்ளது...


பெரியார் என்கிற கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டோருக்காக போராடினாரா?


தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்களை பற்றி பெரியாரின் கண்ணோட்டம் பற்றி ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம்...

துணி விலை உயர்ந்ததுக்கு காரணம் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சதால தான்..

வேலை இல்லா திண்டாட்டத்துக்கு காரணம் பள்ளன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சதால தான்..

அரிசி விலை உயர்ந்ததுக்கு காரணம் கள்ளு குடிக்கிறவன் எல்லாம் சோறு திங்கிரதால தான்..

இந்த செய்தியை தி.மு.க .நடத்தும் முரசொலி பொங்கல் மலர் 1962 ல் வெளியிட்டு உள்ளது .

இதே செய்தியை 2-3-1962 பெரியார் அச்சகம் வெளியிடும் நாத்திகம் செய்தி தாளிலும் வெளியிடப்பட்டு உள்ளது..

தாழ்த்தப்பட்டோர் பற்றி இப்படி மிக உன்னதமான கருத்துகளை வைத்திருந்த பெரியார் என்கிற ராமசாமி நாயக்கர்  அவர்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் எங்கும் எப்போதும் நடத்தியதே இல்லை.

இது அதிர்ச்சி அளிக்க கூடிய மிகவும் கசப்பான உண்மை.

இதில் இருந்து பெரியார் என்கிற கன்னட ராமசாமி நாயக்கன்  தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் என்று கூறி வந்தது சரி தானா என்று தீர்மானிப்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்...

தமிழனை வீழ்த்தியது ஆரியன் என்னும் திருட்டு திராவிடனே (வடுகர்கள்)...


மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை.

அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?

இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?

காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்..

தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது. அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா?

எந்த ஆரிய பார்ப்ன் தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?

வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை. மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.

இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..

மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.

Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.

குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு.

என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.

சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்துகொண்டது இல்லை.

இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்.

பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது.

நாயக்கர் ஆட்சியின் கேடுகள் :

உண்மையில் தமிழர் மீதான நாயக்கரின் போர் என்பது இனப் போர் அல்ல. தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடந்த மொழிப் போர். தமிழை தூக்கி எறிந்து விட்டு, சமஸ்கிருதத்தை முன்னிறுத்த நடந்த போர்.

இந்த நாயக்கர் ஆட்சியில் தான் கோவிலில் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டு சமஸ்கிருதம் உள்ளே வந்தது.

அதுவரை இருந்த தமிழ் பிராமணர்களை(அய்யர், அய்யங்கார்) வெளியேற்றி தெலுங்கு பிராமணர்களை பணிக்கு அமர்த்தியது.

தமிழ் மக்கள் கீழ் நிலை படுத்தப்பட்டு தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம், நிலம் உடமைகளை கைப்பற்றினர்.

தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்தை இழந்து, சமஸ்கிருதம் ஆட்சி மொழியானது. பெரியார் உள்ளிட்டோர் தமிழை சாடுவதும், ஆங்கிலத்தை பேணுவதும் அவரின் முன்னோர்கள் வழி வந்த எண்ணம் தான்.

அது வரை இருந்த ஆட்சி கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு, தமிழர் நிலம் முழுவதும் 'பாளையங்களாக' பிரிக்கப்பட்டு, பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.

தமிழனை வீழ்த்தியதற்கு அடையாளமாய் ஆமையை கொல்லும் நாயக்கர் சிலை..

ஒவ்வொரு பாளையத்திலும் "இனி தமிழன் எழ கூடாது" என தெலுங்கர்கள் இராணுவத்தை ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர்.

தமக்கு உதவிய சில கைக்கூலி தமிழ் சாதிகளுக்கு வறண்ட, புழகத்துக்கு புரோஜனம் இல்லாத பாளையங்கள் சன்மானமாக வழங்கப்பட்டன.

மண்ணின் மைந்தர்களை இழித்தும் பழித்தும் பேச புது இளைக்கிய வகையான 'பள்ளு இலக்கியம்' போன்றவை உருவாக்கப்பட்டன.

'பார்த்தாலே தீட்டு, தொட்டாலே தீட்டு' என்று தமிழ் இனம் சாதி புதை சேற்றில் புதைத்து ஒழிக்கப்பட்டது.

Example: http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html

பின்பு குல்பர்கா அரசின் அரசனான வெங்காசி என்ற மராட்டிய வந்தேறியின் படை எடுப்பைத் தொடர்ந்து சோழர்களின் தலைநகராம் தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைந்தது.

இன்று வரை எம் பாட்டன் ராஜ ராஜனின் திரு உருவ சிலை கோவிலுக்கு வெளியில் கேட்பாரற்று கிடக்க முக்கிய காரணமே இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு நிர்வாகியாக விளங்கும் மராட்டியரே ஆகும்.

இதில் இருந்து யாம் தெரிந்து கொள்வது:

தமிழும், தமிழரும் ஆரியப்படை எடுப்பால் கெட்டதாக வரலாறு இல்லை. 'திராவிடராம்' கன்னடர், தெலுங்கர், மராத்தியர் ஆகியோரின் படைஎடுப்பாலே தமிழன் வீழ்ந்தான். இது மறுக்க முடியாத கசப்பான உண்மை.

தமிழக மண்ணில் எந்த காலத்துக்கும் வடுகர்களின் (கன்னடர், தெலுங்கர்) ஆதிக்கமே நீடிக்க வேண்டும் என்பதற்காக, இல்லாத ஆரிய பூச்சாண்டியை காட்டியதே திராவிடர்களின் உக்தி என்பதும் தெளிவாகிறது..

மேலும் ஆரியன் என்பவன் சமஸ்கிருதம் மொழி உடையவன் உண்மையெனில்.. தமிழில் இருந்து பிரிந்து சமஸ்கிருதம் கலப்பில் உருவான தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி மொழிக்காரர்கள் தானே ஆரியன்..

ஆரியனும் திராவிடனும் ஒன்று இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...

திராவிடன் என்கிறவன் யார்?


வெந்தயம்...


நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

அவைகள் எவையென நாம் பார்ப்போம், இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.

பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.

ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள்.

வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடல் குளிர்ச்சிக்கு...

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது.

இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது.

வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.

வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.

இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.

கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது.

வயிற்றுப் போக்கை குணமடைய செய்வதோடு, தாய்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

சர்க்கரை வியாதி குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது.

வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும்.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும்.

மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும்.

வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது.

இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்களேன், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது.

பொடுகு பிரச்சனை, அரிப்பு, குறைவதோடு முடி பளபளப்பாகவும் வைக்கிறது.

வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.

வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்...

கோயில் ஒரு அறிவியல் களஞ்சியம்...


கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..

இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள்...

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.

4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.

5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..

7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.

8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.

10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..

12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.

13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.

16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்..

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.

17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.

18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம்.

கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..

20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம்..

குழந்தைகளையும் பழக்குவோம்..

அது அறிவியல் ஆகட்டும் .. எதுவாகட்டும்..

இறை சக்தி நம்மை காக்கட்டும்... நன்றி....

தமிழ் வளர்த்த பார்ப்பனர்கள்...


பார்ப்பனர்  என்பது பிரிவு (ஜாதி) அல்ல, அது  வர்ணம், அதாவது  கல்வி  செல்வம், வீரம்  என்பவற்றில்  சிறந்து  விளங்குவோரில்  கல்வியில்  சிறந்தோர்  பார்ப்பனர்..

செல்வத்தில்  வைசியர்,
வீரத்தில்  சத்திரியர்.

இந்த  மூன்றையும்  தேடிக் கொண்டிருப்பவன்  சூத்திரன்.

இதை  அறியாத திராவிடரின்  பொய்களை  நம்பும்  தமிழர்  வள்ளுவனின்  வழித்தமிழர்  அல்ல, கலப்பினமாக  இருக்கும்.

பார்ப்பனர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள்..

ஆனால் தமிழ் வளர்த்த பார்ப்பனர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா..

சங்ககாலம்...

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்..

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்..

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. கவிமணி வே.முத்துசாமி ஐயர்...

எப்பொழுதோ அழிந்துவிட்ட டீனோசௌரஸை, 11ம் நூற்றாண்டுத் தமிழன் எப்படிக் கண்டிருக்க முடியும்?



கம்போடியா நாட்டில் அன்கோவார்ட்  (Ankor wat) என்னும் மிகப் பிரமாண்டமான சிவன் ஆலயம், ஒரு தமிழ் மன்னனால் கட்டப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

இந்தக் கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..

எகிப்தில் உள்ள பிரமிட்டுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதேயளவு முக்கியத்துவம் இதற்கும் கொடுக்கப்பட வேண்டும்..

இந்தப் பழமையான கோவிலில் நம்பவே முடியாத ஒரு அதிசயமான நிகழ்வு நடந்திருக்கிறது..

அன்கோவாட்டே ஒரு அதிசயம். அதில் இன்னுமொரு அதிசயம்.

அன்கோவாட் கோவிலின் சுவரொன்றில் ஒரு டீனோசௌரஸின் (Dinosours) படம் செதுக்கப்பட்டிருக்கிறது.

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

டீனோசௌரியாக்கள் பூமியிலிருந்து அழிந்து போய் இலட்சம் ஆண்டுகளுக்கும் மேலாகின்றன.

அவற்றின் எலும்புக்கூட்டுச் சுவடுகளை (Fossils) நவீன மனிதர்களான நாம், 19ம் நூற்றாண்டில்தான் கண்டு பிடித்தோம்..

அந்த எலும்புக்கூடுகளின் சுவடுகளை வைத்து டீனோக்களின் வடிவங்கள் இப்படி இப்படி இருக்கலாமெனத் தெரிந்து கொண்டோம்..

ஆனால் 11ம் நூற்றாண்டிலேயே 'ஸ்டெகொசௌரஸ்' (Stegosaurus) என்ற டீனோவின் உருவத்தை அன்கோவார்ட் சிவன் ஆலயத்தில் செதுக்கியுள்ளார்கள்..

இது எப்படிச் சாத்தியமாகும்?

உண்மையில் நம்பவே முடியாத அதிசயம் இது..

எப்பொழுதோ அழிந்துவிட்ட டீனோசௌரஸை, 11ம் நூற்றாண்டுத் தமிழன் எப்படிக் கண்டிருக்க முடியும்?

அதன் எலும்புச் சுவடுகளைக் கண்டிருந்தாலும், எப்படி அதன் வடிவத்தைக் கணித்திருக்க முடியும்?

கொஞ்சம் யோசியுங்க மக்களே...

வேர்க்கடலையின் பயன்...


வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான விட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன..

ஆனால், வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதை விட வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்..

ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும்..

ஏனென்றால் அதில் தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் சாப்பிடுகிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்..

வேர்க்கடலையை சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது..

கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.

எனவே புதிதான வேர்க் கடலையையே சாப்பிட வேண்டும்.

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.

இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது.

வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும்.

தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக்குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒருகைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும்..

இத்துடன் சீனி சோக்காத காபி அல்லதுடீ அருந்தவும்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது.

இதனால் உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்...

சூரியனை பார்க்க கூடாத நேரம் என்ன?


கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்..

பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி வந்தனர்..

சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன..

சூரியன் நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சுட்டெரிக்கும் சூரியனைப் பார்க்கக் கூடாது..

பொதுவாக ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும்.

நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு.

விஞ்ஞானமும் இதனை ஒப்பு கொள்கிறது.

ஆனால் காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று.

மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும் என்பது அறியப்பட்ட உண்மை...

இலுமினாட்டி கமல் கலாட்டா...


திராவிடம் : திராவிடர் என்றால் தமிழர்... தமிழர் என்றால் திராவிடர் (கருணாநிதி கூறியது)...


தமிழ் தேசியம் : அப்போது, தமிழரை தமிழர் என்றே அழைக்க வேண்டியது தானே... பிறகு எதற்கு திராவிடர் என்ற சொல் தேவைப்படுகிறது...

திராவிடம் : தமிழர் என்றால் பிராமணர் வந்து விடுவார்... திராவிடர் என்றால் வரமாட்டார்...

தமிழ் தேசியம் : தமிழர் என்றால் பிராமணர் வந்துவிடுவார் என்றால் அப்போது நீங்கள் எதிரியாக முன்னிறுத்தும் ஆரியர் என்பவர் யார்?

உங்கள் அரசியல் படி பிராமணர் தமிழரா?...ஆரியரா?...

திராவிடம் : ...?