07/08/2017

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-4...


அனுபவம் மிக்க மருத்துவரே தடுமாறும் சில மருத்துவப் புதிர்களில் அனாயாசமாக எப்படி எட்கார் கேஸால் பதில் கண்டு பிடிக்க முடிகிறது? என்ற கேள்விக்கு எட்கார் கேஸ் எளிமையாகப் பதில் சொன்னார்.

"ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்."

எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாக எட்கார் கேஸ் சொன்னார். அவற்றை அவர் Akashic Records (ஆகாய ஆவணங்கள்) என்றழைத்தார். அதைப் படிக்கும் கலையைக் கற்றுக் கொண்டால் எந்த அறிவையும், தகவலையும் சுலபமாகப் பெற முடியும் என்றார். எட்கார் கேஸ் உபயோகித்த அந்த ஆகாசம் என்ற சொல்லே சம்ஸ்கிருதச் சொல். அவர் சொன்ன கருத்தும் நம் நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது. உதாரணமாக, 'ஒரு யோகியின் சுயசரிதை'யில் பரமஹம்ச யோகானந்தா தன் குரு ஸ்ரீ யுக்தேஸ்வருடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை விவரித்திருக்கிறார்.

கல்லூரியில் படிக்கையில் ஒரு கோடை விடுமுறையில் பூரி ஆஸ்ரமத்தில் உள்ள தன் குருவை சந்திக்க யோகானந்தா செல்கையில் தங்கள் தோட்டத்தில் விளைந்த ஆறு காலி·பிளவர்களை எடுத்துச் சென்றார். அவற்றை யோகானந்தாவின் அறையிலேயே வைத்திருந்து மறுநாள் சமையலுக்குத் தர யுக்தேஸ்வர் சொல்ல அவற்றைத் தன் கட்டிலுக்கு அடியில் யோகானந்தா உள்ளே தள்ளி வைத்தார். மறுநாள் அதிகாலை யுக்தேஸ்வருடன் யோகானந்தரும் மற்ற சீடர்களும் வெளியே காற்று வாங்க நடந்தனர். சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கேட்டார். "நீ ஆஸ்ரமத்தின் பின் கதவை சரியாகப் பூட்டினாயா?"

யோகானந்தர் யோசித்து விட்டு "பூட்டியதாகத் தான் நினைவு" என்றார்.

யுக்தேஸ்வர் சிரித்தபடி சொன்னார் "நீ சரியாகப் பூட்டவில்லை. அதன் தண்டனையாக நீ கொண்டு வந்திருந்த ஆறு காலி·ப்ளவர்களில் ஒன்றை இழக்கப் போகிறாய்". பிறகு அனைவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். ஆசிரமம் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்தவுடன் அனைவரையும் அங்கேயே நின்று கவனிக்கச் சொன்ன யுக்தேஸ்வர் யோகனந்தரிடம் "இப்போது உன் தண்டனையை நிறைவேற்றப் போகிறவன் வருகிறான் பார்" என்றார். எல்லோரும் தூரத்தில் நின்றபடி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நாட்டுப்புறத்தான் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவன் ஆசிரமத்தைக் கடந்து சென்றான்.

யுக்தேஸ்வர் சொன்னார். "இப்போது அவன் திரும்புவான் பார்".

அவர் சொன்னபடியே அவன் திடீரென்று திரும்பி வந்து ஆசிரமத்தின் பின் வாசற்புறம் சென்றான். அனைவரும் பரபரப்புடன் பார்த்துக் கொண்டே நின்றனர். சிறிது நேரத்தில் அவன் ஒரு காலி·ப்ளவருடன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்து தன் வழியே எதைப் பற்றியும் கவலைப்படாமல் போனான்.


யோகானந்தர் முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாத யுக்தேஸ்வர் சிரிப்பினூடே சொன்னார். "அந்த நாட்டுப்புறத்தானுக்கு காலி·ப்ளவர் அவசரமாகத் தேவைப்பட்டது. அதனால் தான் அவனுக்கு நீ கொண்டு வந்த காலி·ப்ளவர்களில் ஒன்றைத் தர நினைத்தேன்....."

யோகானந்தர் ஓடிச் சென்று தன் அறையை சோதனை செய்தார். அவருடைய தங்க மோதிரங்கள், கைக்கடிகாரம், பணம் எல்லாம் கட்டிலின் மேலே பார்வைக்குத் தெளிவாகத் தெரிந்தபடி இருக்க திருடன் குனிந்து கட்டிலிற்கு அடியில் மறைவாக இருந்த காலி·ப்ளவர்களில் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றிருப்பது தெரிந்தது.

யோகானந்தர் தன் குருவிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது "விஞ்ஞானம் ஒரு நாள் இந்த ரகசிய சக்திகளை அறியும்" என்று மட்டும் யுக்தேஸ்வர் சொன்னார்.

சில வருடங்களில் ரேடியோ என்ற அதிசயக் கருவியை இந்த உலகம் அறிய ஆரம்பித்தது. அப்போது யோகானந்தர் தன் குருவும் ஒரு மனித ரேடியோ என்று நினைத்தார். ரேடியோ எப்படி ஆயிரக்கணக்கான ஒலியலைகளுக்கு இடையில் ஒரு தனிப்பட்ட அலையை எடுத்து ஒலிபரப்ப முடிகிறதோ அதே போல் அவர் குருவாலும் எங்கிருக்கும் எந்தத் தகவலையும் படிக்க முடியும் என்று கூறினார். அதே போல் தன் குருவால் யாருக்கும் தகவலை அனுப்பவும் முடியும் என்றும் நம்பினார்.

இன்னொரு முறை ஆசிரமத்தில் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவற்றில் கலந்து கொண்டு இரவில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் திரும்பிச் சென்றனர். ஆசிரமத்தில் அனைவரும் தங்கள் பணிகளை முடித்து விட்டு உறங்கச் சென்ற போது நடுநிசியாகி விட்டது. உறங்கச் சென்ற சில நிமிடங்களில் யுக்தேஸ்வர் எழுந்ததைக் கண்ட யோகானந்தர் குருவிடம் காரணம் கேட்டார்.

"நம் நண்பர்களில் ஒரு குழு தங்கள் ரயிலைத் தவற விட்டு விட்டது. அவர்கள் திரும்பி இங்கு வரப் போகிறார்கள். பசியுடன் வரும் அவர்களுக்கு உண்ண ஏதாவது உணவு தயாரிக்க வேண்டும்"

அந்த நள்ளிரவில் அந்தக் குழுவினர் திரும்பி ஆசிரமத்திற்கு வருவார்கள் என்பதை நம்ப யோகானந்தருக்கு சிரமமாக இருந்தாலும் அவர் குருவுடன் சேர்ந்து உணவு சமைக்கக் கிளம்பினார். அவர்கள் உணவு தயாராகிய போது உண்மையிலேயே ரயிலைத் தவற விட்ட குழுவினர் அந்த அகால நேரத்தில் தொந்திரவு செய்வதற்கு வருத்தம் தெரிவித்தபடி வந்து சேர்ந்தனர். பசியுடன் வந்த அவர்களுக்கு சூடாகக் காத்திருந்த உணவையும் கண்டபின் ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை.

எட்கார் கேஸ் சொல்வதையும் யோகானந்தர் சொல்வதையும் பார்த்தால் தொலைக் காட்சியில் விருப்பப்பட்ட சேனல் பார்க்க முடிவதும் வானொலியில் விருப்பப்பட்ட ஸ்டேஷன்களைக் கேட்க முடிவதும் எவ்வளவு இயல்போ இதுவும் அவ்வளவு இயல்பே. நம் மனதை ஒரு ஏண்டனாவாக அமைத்துக் கொண்டு பிரபஞ்ச வெளியில் அலைகளாக இருக்கின்ற, நமக்குத் தேவைப்படுகின்ற தகவல்களை ஈர்த்துப் படிக்கும் வித்தையையும் கற்றுக் கொள்ள முடியும் என்கிறது பலரது அனுபவங்கள்

இது பெரிய அற்புதமாகத் தோன்றினாலும் அதீத சக்தி படைத்த அனைவருமே இதை ஆழமாக நம்பியதாகவும், இதை உபயோகித்து இருப்பதாகவும் தெரிகிறது. இன்று ரேடியோவும் தொலைக்காட்சியும் நம்மை எப்படி அதிசயிக்கச் செய்வதில்லையோ அது போல் இதுவும் ஆழ்மனக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை ஆச்சரியப்படுத்துவதில்லை. இப்படி விண்வெளியிலிருந்து தகவல்களைப் பெறும் வித்தைகளை அறிந்திருந்த வேறு சிலரின் சுவாரசியமான அனுபவங்களையும் பார்ப்போமா?

திருச்சி தத்தமங்கலத்தில் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் மண் அள்ளிய எம்எல்ஏ கணவரின் லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்...



இந்த பகுதியில் அதிமுக வின் மணச்சநல்லூர்  எம்எல்ஏ பரமேஸ்வரி கணவருக்கு சொந்தமான லாரிகளில் நள்ளிரவில் மணல் அள்ளிச் செல்வதாக புகார் வந்தது. இதை அடுத்து நேற்று நள்ளிரவில் அப்பகுதி மக்கள் கையும் களவுமாக மணல் எடுக்க வந்த லாரிகளை சிறை பிடித்தனர்...

முடிஞ்சா அடி... இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் எங்கும் நடக்கக் கூடாது, சூரையாடிய கட்டைகளுடன் மண்ணை காக்க ஊரே திரண்டதால் பரபரப்பு...


இன்று மாலை ஆறுமணி முதல் நாளைக் காலை ஆறுமணி வரை திருப்பதி பெருமாள் கோவிலின் நடை இழுத்து மூடப்படும் என்று செய்தி வந்துள்ளது...


ஏண்டா டேய், இயற்கையாக நடக்கும் சந்திர கிரகணத்தக் கூட உங்க கடவுளால தாங்க முடியாதா?

அப்பறம் என்னடா காக்கும் கடவுள்  $#*க்கும் கடவுள்ன்னு சொல்லி ஊர எமாத்துறீங்க?

பி.கு: இதே நேரத்தில் அனைத்து வட்டிக்கடைகளும் மூடப்படும். சந்தேகம் இருந்தால் உங்க ஊர் சேட்டு கடைக்கு போய்ப்பாருங்க.

இப்போது புரிந்திருக்கும் நாங்கள் சொல்லும் சந்திர சூரிய வழிபாடு உண்மை மற்றும் நமது குலதெய்வ கருப்பின் ஆற்றலை பற்றி...

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடித்தளம்...


திராவிடக் கட்சிகளுக்கு அடித்தளம் திராவிடர் கழகம்.

இது 'நீதிக் கட்சியும்' 'சுயமரியாதை இயக்கமும்' இரண்டறக் கலந்து 1944ல் உருவானது.

இவ்விரண்டில் (ஸ்வய மர்யாதா என்பதை தமிழாக்கி) 'சுயமரியாதை இயக்கம்' என்பது ஈவேரா காங்கிரசிலிருந்து ஆறாண்டுகளுக்குப் பிறகு விலகி 1925ல் தொடங்கியது.

1926ல் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து நடத்திய பிராமணரல்லாதார் மாநாடு மதுரையில் நடைபெற்றது.

இதற்கு தலைமை தாங்கியவர் தெலுங்கரான சர்.ஏ.பி.பாத்ரோ.

1927ல் இதேபோல கோவையில் பிராமணரல்லாதார் மாநாடு நடந்தது.

இதற்கு தலைமை வகித்தவர் தெலுங்கரான குமாரசாமி ரெட்டியார்.

1928ல் நடந்த முதல் சுயமரியாதைக் கூட்டத்தில் முன்னிலை வகித்தவர் தெலுங்கு பிராமணரான 'மணத்தட்டை சேதுரத்தின ஐயர்'.

1929ல் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை, கன்னடன் என்று தன்னைக் கூறிக்கொண்ட தெலுங்கர் ஈவேரா.

1930ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைமையேற்றவர் எம்.ஆர்.ஜெயகர் என்ற வடஹிந்தியர்.

1931ல் விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுக்கு சர்.ஹரி சிங் என்பவர் அழைக்கப்பட்டார். அவர் பாதிவழிவரை வந்து உடல்நலமின்றி திரும்பிவிட்டார். அதனால்  தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தலைமை தாங்கினார்.

1933ல் கோவை சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் கே.ஐயப்பன் என்ற மலையாளி.

அடித்தளமே இப்படியென்றால், ஆட்சி எப்படி என்பது இப்போது தெரிகிறதல்லவா?

கொராபோரீ ராக் ஆவி – 1959...


இந்தப்படம் ஆஸ்திரேலியாவின் கொராபோரீ என்ற இடத்தில் 1959ம் ஆண்டு ஆர்.எஸ். ப்ளேன்ஸ் என்பவரால் எடுக்கப்பட்டு இன்றளவும் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது...

பாஜக மோடி, அமித்ஷாவுக்கு வளையல் அனுப்பும் போராட்டம்...


குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவா மாநில காங்கிரஸின் மகளிர் அமைப்பு, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு வளையல் அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்...

அரசிற்கு எதிரான உழைக்கும் மக்கள் சக்தியை வீழ்த்த எந்த முதலாளித்து மயிராலும் இயலாது வரலாறு சொல்லுதுங்கோ...


தான் பிழைப்பதற்கு பிணத்தை கூட வியாபாரமாக வைத்து தொழில் செய்யும் புரோகர்கள் தான் இந்த வைகோ நாயூடு வும் திருமா வும்...



இந்த பிழைப்பு தேவையா இறந்தவர் உறவினரின் கடைசி மறியாதை இறந்தவரை சுமந்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்வது அதையும் தட்டிப்பறித்து அரசியல் செய்த அரசியல் நாடக வியாபாரிகள்...

திருட்டு திராவிடர்கள் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழர் நாட்டை ஆண்டு இந்த மண்ணையும் மக்களையும் வந்தேறிகளின் வேட்டைக்காடாக ஆக்கிவிட்டார்கள்...


மண்ணையும் வளங்களையும் ஆற்றுநீரையும் அடுத்தவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு தமிழினத்தையே இருளில் மூழ்கடித்துவிட்டனர்..

இனி என்ன செய்வது? என்று இப்போது தமிழினம் விழிபிதுங்கிக் கிடக்கிறது..

ஈழத் தமிழர்கள் 3 லட்சம் பேரைப் பலிகொடுத்தும் ஈழத்திற்கு விடிவு இல்லை..

தமிழ்நாட்டுத் தமிழராகிய நாமோ மெது நஞ்சு ஊட்டப்பட்டு முடங்கிக் கிடக்கிறோம்.

காவிரி இல்லை.
கடனாறு இல்லை.
கருப்பாநதி இல்லை.
பொருநை இல்லை.
பெரியாறு இல்லை.
பாலாறு இல்லை.

அங்கே எஞ்சிக் கிடந்த மணலும் இல்லை..

1000 மீனவர்கள் செத்தும் தீர்வு இல்லை..

கர்நாடகத்தில் இருக்கும் பெங்களூரு குடிநீர்த் திட்டமும் தமிழ்நாட்டின் ஒக்கனேக்கல் திட்டமும் ஒரு ஒப்பந்தத்தின் இரு கூறுகள். ஆனால் முன்னது நடந்தது. பின்னது முடங்கியது..

வந்தேறிகள் நாட்டை பிடித்து வைத்துக் கொண்டு வளங்களை அறுவடை செய்து அவனவன் நாட்டிற்கும் வீட்டிற்கும் சேர்க்கிறான்.

ஆனால், உனக்கு அவன் சாராயக்கடை நடத்துகிறான்..

உனக்கு சன் டிவி, கலைஞர் டிவி, செயா டிவி நடத்துகிறான்..

புளுத்த அரிசியைக் கொடுத்துவிட்டு மற்ற பொருட்களின் விலைவாசிகளை விண்ணைத் தொட வைத்திருக்கிறான்..

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பேரில் வளமான தமிழ்நிலங்களை மேலும் பல வந்தேறி நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறான்..

மழைக் காலத்திலும் மின்வெட்டு..

உன்னைச் சாதிக்குள் குறுக்கி இட ஒதுக்கீடு என்று பிச்சைக்கார அரசியலுக்குள் தள்ளுகிறான்..

மண்ணுரிமை, ஆட்சியுரிமை, நாட்டுரிமை பற்றிப் பேசாதே என்கிறான்..

இனி என்ன செய்வது?

இப்படிப் புலம்பிப் புலம்பி நொந்து நூலாவதில் பயனில்லை தமிழா..

திராவிடத்தையும் திராவிடச் சாயலில் வரும் அத்தனை இயக்கங்களையும் கட்சிகளையும் முற்றாக முழுதாகப் புறந்தள்ளுவோம்..

ஆக்கபூர்வச் செயல்களில் இறங்குவோம்..
தேவைப்படும்போது அதிரடியாவும் களம் இறங்குவோம்..

காடே பற்றி எரியும்போது மரங்கள் மட்டும்  சிரித்துக் கொண்டா இருக்கும்..

நாடே அழியும்போது தனி ஆட்களும் குடும்பங்களும் தப்பித்துவிடும் என்று கனா காணாதீர்கள்..

பம்மாதே,
பதுங்காதே,
படுக்காதே,
சோர்வுறாதே,
சோரம் போய்விடாதே..

எழு, விழி, பரப்பு.. எட்டிப்பார்..

காவிரி மீண்டும் சலசலக்கும்...
நாடு மீண்டும் கலகலக்கும்...

விசிக திருமா வும் தமிழின துரோகமும்...


மதுவிலக்கு சாத்தியம் இல்லை - நேற்று..
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்- இன்று..

திமுக - காங்கிரஸ் கூட்டணி தான் தமிழர்களை கொன்று குவித்தது..

திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடருகிறோம்..

தலித்தியம் வைத்து சாதி அரசியல் செய்வார் ஆனால் இவர் தமிழ்தேசியவாதி...

தமிழனைக் கொன்று குவித்த கூட்டணியின் கட்சிகளின் செயலாளராக செயல்படுவார் ஆனால் இவர் தமிழர்களுக்காக தான் போராடுகிறாராம்..

திராவிடத்தைப் காப்பாற்ற அதாவது தமிழனித்தை அழித்துக் கொண்டு இருப்பவர்களை காப்பாற்ற போராடுகிறார்...

இவர் தமிழ்தேசியவாதி என்றால் திராவிடத்தை எதிர்த்து தனித்து நிற்க வேண்டியது தானே..

ஏன் தனித்து நின்றால் ஒரு தொகுதிக் கூட கிடைக்காது என்ற அச்சமா?

அப்படி அச்சம் இருந்தால் தமிழர் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்கலாமே.. உண்மையான தமிழ்தேசியவாதிகள் மட்டும் தான் திராவிடத்தை எதிர்ப்பார்கள் போலிகள் அல்ல..

சொன்னதைச் செய்யும் நல்லவராம் அப்படி என்றால் காங்கிரசை எதிர்த்த இவர் காங்கிரசிடம் கூட்டு வைத்தால் என்ன தவறு என்று கேட்டவரும் இவரே...

திரைத்துறை நடிகர்கள் கூட இவரிடம் தான் நடிப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும் போல...

கீழ்வாலை பாறை ஓவியங்கள்...


கீழ்வாலை என்னும் இடத்தில் (விழுப்புரம் மாவட்டம்) விலங்கு முக மனிதஓவியங்கள் கிடைத்துள்ளன.

ஓர் ஓவியத்தில் குதிரையின் மீது ஒரு மனிதன்அமர்ந்திருக்க, அக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஒருவர் அழைத்துச்செல்வது போல அமைந்துள்ளது. இதனருகே மற்றுமோர் உருவமும் காணப்படுகிறது. இந்த மூன்று மனிதர்களது முகங்களும் விலங்கின் முகங்களாக அமைந்துள்ளன.

விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல் என்னும் வேட்டைச் சடங்குகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக் கருதலாம்.

குதிரையின் மீது மனிதன் - கீழ்வாலை..

அடுத்ததாகப் படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம்காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது முகங்களும் பறவை முகங்களாகவே காணப்படுகின்றன.

கீழ்வாலையில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம் மட்டும்பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இது அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச்சுட்டுவதாக அமைகிறது. அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோஅல்லது முன்னோரது நினைவுச் சின்னம் என்றோ கருதலாம்...

அந்த வெங்காயத்துகாவது மதிப்பு இருக்கு...


கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக இன்று நெடுவாசல் மக்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்...


அரசாங்கம் குருடாகி போனதால் நமக்கு நாமே ஆறுதல்...

எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்...


உடல் பருமனைக் குறைக்க பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஓர் பிரபலமான வழி தான் அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து குடிப்பது. எலுமிச்சையின் சாற்றில் மட்டும் தான் நன்மைகள் உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. அதன் தோலிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதன் நன்மைகள் தெரிந்தால், நீங்கள் எலுமிச்சையின் தோலை தூக்கிப் போடமாட்டீர்கள். சரி, எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெறுவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். எலுமிச்சை தண்ணீர் தயாரிக்கும் போது, அதன் சாற்றினைக் கொண்டு மட்டும் ஜூஸ் தயாரிக்காமல், முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வாருங்கள். கீழே அந்த எலுமிச்சை தண்ணீரின் செய்முறை மற்றும் அதில் உள்ள நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை - 6 தண்ணீர் - 1/2 லிட்டர் தேன் - தேவையான அளவு.

தயாரிக்கும் முறை:

முதலில் எலுமிச்சைகளை பாதியா வெட்டிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த நீரை 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, 10-15 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.  பின்பு அந்நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய டம்ளரில் அந்நீரை ஊற்றி, அத்துடன் தேன் கலந்து பருக வேண்டும்.  எஞ்சிய நீரை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, மற்ற வேளைகளில் பருகலாம்.

நோயெதிர்ப்பு சக்தி..

இந்த எலுமிச்சை நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடலின் நோயெர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

ஆற்றல்..

நீங்கள் மிகுந்த சோர்வை உணர்பவராயின், தினமும் காலையில் எழுந்ததும் இந்த எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் பருகுங்கள். இதனால் நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

செரிமானம்..

செரிமான பிரச்சனைகள் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் அதை சரிசெய்யும் மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

உடல் சுத்தமாகும்..

தினமும் காலையில் எலுமிச்சை நீரைக் குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.

PH நிலையாகும்..

முக்கியமாக எலுமிச்சை நீர் உடலின் pH அளவை நிலைப்படுத்தும்.

எடை குறையும்..

உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்களுக்கு, இது ஓர் அற்புதமான பானம். காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதற்கு பதிலாக, இந்த எலுமிச்சை நீரைப் பருகி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மனநிலை மேம்படும் நீங்கள் மன இறுக்கம் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் உங்களின் மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும்.

குறிப்பு : இந்த எலுமிச்சை நீரை மீண்டும் சூடேற்றிப் பருகலாமா என்ற சந்தேகம் எழும். நீங்கள் சூடுபடுத்த வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் மிகவும் குளிர்ச்சியான நிலையில் பருகாதீர்கள். ஒருவேளை வெதுவெதுப்பான நிலையில் வேண்டுமானால், ஒரு டம்ளரில் எலுமிச்சை நீரை ஊற்றி, சுடுநீர் நிரப்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்து, பின் பருகுங்கள்...

கத்தி வைத்திருந்து பன்னீர் செல்வத்தை தாக்க முயன்றதாக திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர் முடி திருத்தும் தொழிலாளி...


போலிசாரால் சிறை பிடிக்கப்பட்டவரின் பெயர் சோலைராஜன் (50) என்பதும் அவர் முடி திருத்தும் (சலூன்) தொழில் செய்து வருவதும் தெரியவந்துள்ளது...

அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகளை நீக்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மணு...