25/07/2018

தெலுங்கர் வைகோ நாயூடு....


என்னை விட ஒரு தெலுங்கு இனவெறியனை நீங்கள் பார்த்திருக்க முடியாது.

ஆகவே தமிழ்நாடு வாழ் தெலுங்கர்களே, தமிழ்நாட்டை தமிழர் ஆளுவதற்கு விட்டு விடாதீர்கள். தமிழ்நாட்டை எப்போதும் போல் தெலுங்கர்கள் தான் ஆளவேண்டும்.

ராமசாமி நாயக்கர், தெலுங்க முதலியார் அண்ணா, தெலுங்கர் கருணாநிதி வழியில் அடுத்து அவரது மகன் தெலுங்கர் மு க ஸ்டாலின் தான்
ஆட்சி செய்ய வேண்டும்.

அடுத்து அவரது மகன். பேரன் என்று  தெலுங்கர்களின் வம்சாவழியிலேயே
தமிழ்நாடு ஆளப்படவேண்டும்.

என் சொந்தநலன்களை விடுத்து சொந்தக்கட்சியைத் துறந்து விட்டு, நம்பிவந்தவர்களை மறந்து விட்டு, நான் இதற்காக பாடுபட்டு வருகிறேன்.

தெலுங்கர்கள் எனக்கு காது கொடுப்பீராக.. எனக்கு உறுதுணையாக இருப்பீர்களாக...

-- தெலுங்கர் கீதம் பத்தியறிக்கை விழாவில்.. தெலுங்கன் வைகோ நாயுடு..

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...


பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்
என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு [ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது...

இயற்கையோடு இனைந்து வாழுங்கள்...


மனிதனும் மரங்களும்...


இந்த இயற்கையின் படைப்பில் மிகவும் மனிதனை ஈர்க்க கூடியது மரங்கள் மட்டுமே..

மரங்களிடம் நாம் தனியாக மரநிழல்களில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது நம்மை அறியாமல் தூக்கம் வரும்.

அது தூக்கம் அல்ல நாம் அந்த மரத்துடன் நமது மனம் இனைந்து அதை உணர்ந்து நமக்கு ஆழ்ந்த சிந்தனையில் உரக்க நிலைக்கு கொண்டு செல்லும் நம்மை மறந்து.

நமது முன்னோர்கள் (பழங்குடி மனிதர்கள்) முதலில் வாழ்ந்தது மரங்களில் மட்டுமே.

அவர்கள் மரத்திடம் பேசும் பண்புகள் கொண்டவர்களாக இருந்தனர்.

நாகரீகம் வளர்ந்து இப்போது  இயற்கையை அறியாமல் இருப்பது மனிதர்கள் மட்டுமே.

மரங்களிடம் பக்கத்தில் சென்று அதை தொட்டு பேசுங்கள் உங்கள் கவலைகள் எல்லாம் மறந்து விடும்.

மரங்களிடம் தினமும் காலை மாலையில் சற்று ஓய்வு எடுங்கள் உங்களுக்கு புத்துணர்ச்சி ஒரு வித மகிழ்ச்சி  ஏற்படும்.

இப்போது மனிதர்களின் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது உங்களுக்கே தெரியும்.

இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மரங்களிடம் நேர்மறை எண்ணங்கள் கொண்டு நீங்கள் பேசும் போது அது மிக மகிழ்ச்சியாக வளரும் அது மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் உணர்வின் மூலம் அறிவீர்கள்.

மரங்களிடம் முதலில் தனியாக அதன் அருகில்  சென்று அதன் வேர் தண்டுவடம் கிளைகள் இலைகள் உற்று நோக்கி  ரசியுங்கள் உங்கள் மனதை அது ஈர்க்கும்.

அதன் பிறகு காலில் செருப்பு இல்லாமல் அதன் மேல் கை வைத்து  அல்லது அதனை தழுவி கொண்டு தினமும் பத்து நிமிடம் அதனிடம் இனையுங்கள் உங்களுக்குள் பல மாற்றங்கள் ஏற்படும்.

மரங்களிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது.. கற்று கொள்ளுங்கள் உங்கள் வாழ்வை இயற்கை சார்ந்து பயனியுங்கள்.

மரங்கள் நமது முன்னோர்கள் வாழ்ந்த இடம்   நம்மை பாதுகாக்கும் பாசமாக முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை  தினமும் சந்தியுங்கள்.

(உங்களுக்கு பிடித்த மரங்கள்)...

சாலைக்கு பூட்டு.. அடேய் என்னங்கடா ரோடு ஃபுல்லா ஒரே பூட்டா இருக்கு...


பா.ம.க. நிர்வாகியை ஓட ஓட விரட்டி வெட்டிய கூலிப்படை...


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் ஆர்.வி.கோபால் தெரு ஒத்தவாடை பகுதியை சேர்ந்தவர் சவுந்தர் என்கிற சவுந்தரராஜன் (வயது 38). குடியாத்தம் பா.ம.க. நகர செயலாளரான, இவர் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். இன்று (23.7.18) மதியம் 12  மணியளவில் நிதி நிறுவனத்திற்கு நடந்து சென்றார்.

அப்போது ஆட்டோவில் வந்த கூலிப்படை கும்பல் 4 பேர், பா.ம.க. நிர்வாகி சவுந்தரராஜனை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். தலை, முகம், கையில் பலத்த வெட்டு விழுந்தது. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தலைதெறிக்க ஓடிய அவரை கூலிப்படை கும்பல் விடாமல் ஓட ஓட துரத்தி வெட்டியது.

 ஒரு கட்டத்தில் கூலிப்படையினரிடம் இருந்து தப்பித்த சவுந்தரராஜன், ஒரு வீட்டிற்க்குள் ஓடிச்சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். கூலிப்படை கொலைவெறியுன் கதவை உடைக்க முயன்றது. பொதுமக்கள் திரண்டு தட்டிக்கேட்க முயன்றனர். அரிவாளை காட்டி பொதுமக்களை கூலிப்படை அச்சுறுத்தியது.

 தகவலறிந்ததும், குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் கூலிப்படை தப்பிவிட்டது. இதையடுத்து வீட்டுக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சவுந்தரராஜனை போலீசார் மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். பா.ம.க. நிர்வாகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படை கும்பலை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்...

சிந்தியுங்கள்...


பெண்களுக்கு கட்டாய மது கொடுத்து.. தவறாக வழி நடத்த முயன்ற.. விடுதி காப்பாளர்...


கோவை, பீளமேட்டை அடுத்துள்ள ஹோப் காலேஜ் பகுதியில் `தர்ஷணா பெண்கள் தங்கும் விடுதி' செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் மகளிர் என இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர். பீளமேட்டைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமான இந்த விடுதியின் காப்பாளராக புனிதா என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் விடுதியில் உள்ள மாணவிகளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் புனிதா. அங்கு மாணவிகளுக்குக் கட்டாய மதுவிருந்து அளித்துள்ளார். இந்தத் தகவல் விடுதியில் உள்ள மற்ற பெண்களுக்குத் தெரியவரவே, சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்குத் தகவல் சென்றுள்ளது. இதையடுத்து, நள்ளிரவில் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர் பெற்றோர். இதை எதிர்பார்க்காத விடுதிக் காப்பாளர் புனிதா தலைமறைவாகிவிட்டார்.

விடுதியில் தங்கியுள்ள பெண்கள் கூறும்போது, `` பெரும்பாலும் போதையிலேயே இருப்பார் புனிதா. அன்னைக்கு சில மாணவிகளை மட்டும் 'ஹாஸ்டல் ஓனரின் ஸ்பெஷல் பார்ட்டி' என்றுகூறி வலுக்கட்டாயமாக ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவிகளுக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்துவிட்டு, விடுதி உரிமையாளர் ஜெகனாதனுக்கு வீடியோ கால் செய்து, ' சார்ஞ் உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க' என்றுகூறி அந்தப் பெண்களிடம் போனைக் கொடுத்துள்ளார்.

செல்போனை வாங்கிப் பார்த்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள். வீடியோ காலில் தவறான கோலத்தில் இருந்திருக்கிறார் ஜெகநாதன். இந்தச் செயலை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில மாணவிகள் கதறி அழுதுள்ளனர். ஆனாலும், அவர்களை தவறாக வழிநடத்த முயன்றிருக்கிறார் புனிதா.

அதில் ஒரு மாணவி, சக விடுதி மாணவிகளுக்குத் தெரியப்படுத்திருக்கிறார். அதன்பிறகே விவகாரம் வீதிக்கு வந்தது. எதிர்காலம் கருதி, புகார் அளிக்க மாணவிகள் முன்வராததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் புகாரைப் பெற்று வழக்கு பதிவு செய்து புனிதாவையும் ஜெகநாதனையும் தேடி வருகிறது போலீஸ்" என்றனர்...

இயற்கையும் தண்ணீரும்...


தொப்பூள் கொடி உண்மைகள்...


சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.
அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.
பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.
இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்
உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா...

இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்...

ராணி தேனி கட்டமைப்பு...


சொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு...


சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 1998ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டுக்குப் பிறகு சொத்து வரி உயர்த்தப்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் அளிக்கப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டது. இதையடுத்தே, சொத்து வரியை உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையின்படி, உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் இதுவரை சொத்து வரி 50%ல் இருந்து, இனி 100% ஆக உயர்த்தப்படும்.

மேலும், குடியிருப்புகளுக்கு 50%ம், வாடகை குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகள் அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமல் சொத்து வரி விதிக்கப்பட உள்ளது...

பழங்குடியின மாணவியின் மருத்துவக் கனவை நிறைவேற்றிய கலெக்டர்...


திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பட்டன் கோவிலூர் கிராமத்தைச் சார்ந்தவர் பழங்குடியின மாணவி சுமத்திரா. 2018-ல் நடந்த 12-ம் வகுப்பு தேர்வில் 978 மதிப்பெண்கள் பெற்றார். அவர் படித்த பள்ளியிலேயே நடத்தப்பட்ட நீட் பயிற்சியைக் கற்று அதிலும் வெற்றி அடைந்தார். இவருக்கு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஓர் ஆண்டுக்கு 6 லட்சத்துக்கு மேல் செலவாகும் எனத் தெரிந்த பின்னர், இதைக் கட்ட முடியாது. இந்த மருத்துவப் படிப்பு வேண்டாம் என கூலித்தொழிலாளியான தன் தந்தையுடன் மலைக்கிராமத்துக்கே திரும்பிவிட்டார் மாணவி சுமத்திரா.

சில நாள்களுக்குப் பிறகு, இந்தச் செய்தியை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கா.சு.கந்தசாமி, சுமத்திராவுக்கு படிக்கக் கிடைத்த கல்லூரியைத் தொடர்புகொண்டார். சுமத்திரா கல்லூரி சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கேட்டுக்கொண்டார். இன்னொருபுறம், சுமத்திரா படிப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கும் தேவையான 17 லட்சம் ரூபாயை சில அமைப்புகள் கொடுக்க முன்வந்தன. இதனால், சுமத்திராவின் கனவு நிறைவேறியிருக்கிறது. இன்று, அவர் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். ஜவ்வாது மலைப் பகுதியில் மருத்துவப் படிப்புக்குச் செல்லும் முதல் மாணவி சுமத்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள்...

மனிதனும் இயற்கையும்...


நமது முன்னோர்கள் இயற்கையை கடவுளாகவும்..
இயற்கையை கணித்தும்.. இயற்கையைஉடன் ஒட்டி  தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து  வந்தார்கள்...

அதிகமாக நிலவை கணித்து தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்..

ஆமாம்..

தன்வாழ்வில் விலங்குகள் பறவைகள் இவைகளிடம் அன்பால் ஒட்டி வாழ்ந்தார்கள்.

இரவில் நிலவை ரசித்து மனதை ஒருநிலை படுத்துவார்கள்.

இயற்கை உணவுகளை உண்டு வாழ்ந்துவந்தார்கள்.

ஆனால் இன்று..

மனிதர்கள்  இயந்திர வாழ்க்கை மற்றும்
மதம் ஜாதி அரசியல் சினிமா கிரிக்கெட் நாகரீகம் ஆகையால் இயற்கையை பிரிந்து வாழ்கின்றனர்.

மனிதர்களை வீட்டினுள் பைத்தியக்காரர்களாக மாற்றுவது ஊடங்கள் மட்டுமே.

தீர்வு...

தினமும் முடிந்த வரை ஊடங்களை தவிர்த்து நிலவை ரசியுங்கள்..

குழந்தைகளுக்கு இயற்கையை பற்றி சொல்லி தாருங்கள்..

ஆறு மலை இயற்கை மிகுந்த இடத்தில் குடும்பத்துடன் வாரம் ஒருமுறை சென்று வாருங்கள்..

வீட்டில் பறவைகள் விலங்குகள் உடன் அன்பால் இனையுங்கள்..

உறவினர்களின் வீடுகளில்  சென்று அவர்களின் பாசத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.. முடிந்தால் கூட்டு குடும்பமாக வாழுங்கள்.

ஊர் மக்களுடன் இயற்கை பற்றி கலந்துரையாடுங்கள்...

மரம் செடி கொடிகளை நேசியுங்கள்...

முடிந்தால் கிராமங்களில் வாழுங்கள

இயற்கை உணவுகளை உட்கொள்ளுங்கள்...

நீங்கள் கொடுப்பது தான் நீங்கள் பெறுவீர்கள் இது இயற்கையின் விதி..

முதலில் தாருங்கள் மறுமுறை பெற்று கொள்ளுங்கள்...

காவிரி நீரின் வருகையால் அழகு பெற்ற திருச்சி...


ஈரானை அடக்கும் பொருட்டு கடுமையான பொருளாதார தடைகளை கொடுத்தாலும் ஈரான் அடங்குவதாக தெரியவில்லை, அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கைகளை கொடுக்கின்றது ஈரான்...


அடிக்கடி அமெரிக்க கப்பல்  ஹோல்ம்ஸ் பக்கம் உளவு பார்க்க செல்வதும், ஈரான் கடற்படை அவர்களை விரட்டி அடிப்பதுமாக அடிக்கடி உரசிகொள்ளும் இடம் அது.

அமெரிக்கா ஈரானின் அணு ஆராய்ச்சிக்கு எதிராக இருந்த நிலைப்பாட்டில் இருந்து மெல்ல மாறி, ஏவுகனைக்கு வந்து நிற்கின்றது.

அணு ஆய்வில் இருந்து அமெரிக்கா ஏவுகனை தடைக்கு வந்திருப்பதை ஈரானும் புன்னகையோடு நோக்குகின்றது..

ஏவுகனை இல்லா அணுஆயுதம் பலனளிக்காது, கூடுதலாக இஸ்ரேலை ஈரானால் தாக்க முடியாது என்பதால் அமெரிக்காவின் நகர்வு இப்படி இருக்கின்றது, ஈரானோ விடுவதாக இல்லை...

கரு வளர்ச்சியின் சூட்சுமம்...


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)..

ஒரு பெண்ணின் கருப்பையின் உள்ளே கரு வளரும் நிலைகளில் என்னென்ன நிகழுகிறது என்று திருமூலர் கூறியுள்ள சில கருத்துக்களைக் காணலாம்.

ஒரு கரு உருவான உடனேயே அதில் உயிர் வந்துவிடுவதில்லை. பிராண சக்தியும், மறுபிறவி எடுக்கும் ஒரு ஆன்மாவும் அந்த கருப் பிண்டத்தின் உள்ளே நுழையும் போதுதான், அது செல்களின் குவியல் என்ற நிலையிலிருந்து உயர்ந்து உயிருள்ள ஒரு கருவாக உருவம் பெறுகிறது.

அதுவரையில் நம் உடலிலுள்ள பல
தசைகளைப் போன்றே அந்த கருவுற்ற முட்டையும் ஒரு தசை போன்றே கருதப்படும்.

பிராணன் எனும் மூச்சுக்காற்று (உயிர்க்காற்று) கருவினுள்ளே நுழைவது குறித்து கீழுள்ள திருமந்திரப் பாடல் குறிப்பிடுகிறது.

பூவின் மணத்தைப் பொருந்திய
வாயுவும் தாவி உலகில் தரிப்பத்தவாறு போல் மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி, அவிழும் குறிகொண்ட போதே..

-திருமந்திரம் பாடல் எண்-265.

தாயின் கருப்பையினுள் இருக்கும் சிறிய கருவிற்கு உயிரூட்டுகின்ற மூச்சுக் காற்றானது, குறிப்பிட்ட காலம் வரும்போது ஒரு மெல்லிய ஒலியோடு அந்த கருவின் உள்ளே புகும் என்பது இப்பாடலின் பொருளாகும்.

அவ்வாறு உள்ளே நுழைந்த காற்று அந்தக் கருவின் அனைத்துப் பகுதிகளிலும் (அனைத்து செல்களிலும் என வைத்துக் கொள்ளலாம்) பரவி நிற்கும்.

இதற்கு உவமையாக திருமூலர்
பூவின் நறுமணத்தைக் குறிப்பிடுகிறார்.

ஒரு பூ மலரும்போது அதிலிருந்து வரும் நறுமணம் காற்றோடு சேர்ந்து அந்தப் பகுதி முழுவதும் பரவி நிற்பதைப் போன்று, பிராணன் எனும் மூச்சுக்காற்றும் கருவின் உள்ளே நுழைந்து பரவி நிற்கும்.

எவ்வளவு அற்புதமான ஒரு உவமை.

இந்த மூச்சுக்காற்று சரியான வேளையில் உள்ளே நுழைந்து கருவுக்கு உயிரூட்டினால் மட்டுமே, அந்தக் கரு முறையாக வளர்ந்து ஒரு குழந்தையாக உருமாற முடியும்.

மூச்சுக்காற்று உள்ளே நுழைவதில் தாமதங்கள் அல்லது தடைகள் ஏற்பட்டாலோ அல்லது உள்ளே நுழைந்த மூச்சுக்காற்றின் இயக்கங்கள் சரிவர இல்லாது போனாலோ கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருச்சிதைவும் ஏற்படலாம்.

இதை அடுத்த பாடலில் திருமூலர்
விளக்குகின்றார்.

போகின்ற எட்டும் புகுகின்ற
பத்தெட்டும் மூழ்கின்ற முத்தனும்
ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டுடன் நாலு புரவியும் பாகன் விடாவிடின் பன்றியும் ஆமே.

-திருமந்திரம் பாடல் எண்-266.

இந்த நான்கு வரிகளில் பல அற்புதமான சூட்சும உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

ஒவ்வொரு வரியாக சற்றே விளக்கமாகக் காணலாம்.

முதல் இரண்டு வரிகளில்,

மூச்சுக்காற்று உள்ளே நுழையும் முன்னர் அந்தக் கருவினுள்ளே என்னென்ன உள்ளன என்பதைப் பட்டியலிடுகிறார்.

கருப்பையினுள்ளே இருக்கும் சிறிய உடலினுள்,

-போகின்ற எட்டு (8)
-புகுகின்ற பத்தெட்டு (10+8=18)
-ஒன்பது வாய்தல் (வாயில்கள்)
ஆகியவை உள்ளன.

இவை எவையெவை என்பதைக்
காணலாம்.

போகின்ற எட்டு

1. சுவை
2. ஒளி
3. ஊறு
4. ஓசை
5. வாசம்
6. மனம்
7. புத்தி
8. அகங்காரம்

ஆகிய அருவமாக உள்ள
எட்டையே போகின்ற எட்டு என்கிறார் திருமூலர்.

புகுகின்ற பத்தெட்டு (18)

10 வாயுக்கள் 8 விகாரங்கள்

ஆகியவற்றையே புகுகின்ற
பத்தெட்டு என்கிறார்.

பத்து வாயுக்கள்

1. பிராணன்
2. அபானன்
3. உதானன்
4. வியானன்
5. சமானன்
6. நாகன்
7. கூர்மன்
8. கிருகரன்
9. தேவதத்தன்
10. தனஞ்செயன்

எட்டு விகாரங்கள்

1. காமம்
2. குரோதம்
3. உலோபம்
4. மோகம்
5. மதம்
6. மாச்சரியம்
7. துன்பம்

ஒன்பது வாயில்கள்

1. வலது கண்
2. இடது கண்
3. வலது நாசி
4. இடது நாசி
5. வலது காது
6. இடது காது
7. வாய்
8. குதம்
9. பிறப்புறுப்பு

என உடலிலுள்ள வாசல்கள் மொத்தம் ஒன்பது.

இதையே இப்பாடலில் "ஒன்பது வாய்தலும்' என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

இரண்டாவது வரியில் வருகின்ற "மூழ்கின்ற முத்தனும்' என்னும் சொற்களும் மிகவும் அர்த்தம் உள்ளவை.

கருப்பையினுள்ளே கரு பனிநீர் எனப்படும் ஆம்ய்ண்ர்ற்ண்ஸ்ரீ எப்ன்ண்க் என்ற திரவத்தினுள்ளே மூழ்கி இருக்கும்
இல்லையா? எனவேதான் "மூழ்கின்ற' என்ற வார்த்தையை திருமூலர் உபயோகப்படுத்தியிருக்கிறார்.

"முத்தன்' என்ற சொல்லுக்கும் ஆழமான அர்த்தம் உள்ளது.

கடவுளுக்கும்கூட "முத்தன்' என்றொரு பெயருண்டு.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் முறையே பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் செய்வதாகக் குறிப்பிட்டாலும். மூவரும் ஒருவர் என்பதே உயர்நிலைத் தத்துவம்.

மூன்று குணங்களை. செயல்களை உடைய கடவுள் "முத்தன்'.

கிறிஸ்துவ மதத்திலும் "தந்தை, மகன்,
தூய ஆவி (பிதா, சுதன், பரிசுத்த
ஆவி)' என கடவுள் மூன்று நிலைகளில் இருந்தாலும், ஒரே கடவுளே என்ற கோட்பாடு கற்பிக்கப்படுகிறது.

கடவுளுக்குச் சரி; மூன்று நிலைகளில் ஒன்றாக இருப்பதால் முத்தன் எனலாம்.

கருவிலிருக்கும் குழந்தைக்கு "முத்தன்' என்ற சொல்லை திருமூலர் ஏன் பயன்படுத்துகிறார்?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று உடல்கள் உள்ளன. நாம் கண்ணால் காணக்கூடிய பருவுடலை ஸ்தூல சரீரம் என்பார்கள்.

இது தவிர சூட்சும சரீரம், காரண சரீரம் என மேலும் இரு உடல்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. இவை சக்தி நிலை உடல்கள் (Energy Bodies).

சூட்சும சரீரம், ஸ்தூல சரீரம், காரண சரீரம் ஆகிய மூன்றும் இணைந்தே மனிதன் உருவாகிறான்.

கருவிலிருக்கும் குழந்தைக்கும் இது பொருந்தும். மூன்று உடல்களால் உருவாவதால் கருவையும் திருமூலர் "முத்தன்' என்கிறார்.

இனி பாடலின் அடுத்த இரண்டு வரி களுக்கு வருவோம்.

முதல் இரண்டு வரிகளில் கருவில் என்னென்ன உள்ளன என்பதைப் பட்டியலிட்ட திருமூலர், அடுத்த இரு வரிகளில்,

"இவை அனைத்துமே ஒரு கருவில் இருந்தாலும், குண்டலினி சக்தி, பிராண சக்தி ஆகிய இரு சக்திகளை இறைவன் சரியான நேரத்தில் கருவுக்குள் செலுத்தினால் மட்டுமே, அந்தக் கரு வளர்ந்து ஒரு குழந்தையாக மாறும். அது நடைபெறாவிடில் கரு பாழாகிப் போகும்' என்கிறார்.

"நாகமும் எட்டுடன் நாலு புரவியும்' என்ற மூன்றாவது வரியை சற்றே அலசிப் பார்க்கலாம்.

குண்டலினி சக்தியையே "நாகம்' என குறிப்பிடுகிறார் திருமூலர்.

நமது உடலில் மூலாதாரச் சக்கரத்திற்கு அருகில் உறங்கிக் கிடக்கும் அற்புதமான சக்தியே குண்டலினி சக்தியாகும்.

சமஸ்கிருத மொழியில் "குண்டலா' என்றால் குவிந்து கிடப்பது அல்லது சுருண்டு கிடப்பது என்று பொருள்.

பாம்புகள் ஓய்வாக இருக்கும் போது சுருண்டே இருக்கும். எனவேதான் வடமொழி யில் பாம்புக்கு "குண்டலா' என்ற பெயரும் உண்டு. தூக்கத்தில் சுருண்டு கிடக்கும் பாம்பைப் போலவே நமது குண்டலினி சக்தி தூங்கிய
நிலையில் மூலாதாரத்தின் அருகே சுருண்டு கிடக்கிறது.

இந்திய மரபுப்படி சக்தி என்பதைப் பெண்பாலாகவும் தேவியாகவும்
உருவகப்படுத்துவர். எனவேதான் சுருண்டு கிடக்கும் சக்திக்கு குண்டலினி, குண்டலினி தேவி எனப் பெயரிட்டனர்.

எதையும் நேரடியாகக் கூறாமல் சங்கேத வார்த்தைகளால் கூறுவது சித்தர் மரபு. எனவே தான் திருமூலர் குண்டலினியைக் குறிக்க "நாகம்' என்ற சங்கேத மொழியைப்
பயன்படுத்தியுள்ளார்.

அடுத்து வரும் "எட்டுடன் நாலு புரவியும்' என்பதுவும் சங்கேத வார்த்தைகளே. நேரடி யாக அர்த்தம் கொண்டால் "12 குதிரைகள்'

என்றே அர்த்தம் வரும். ஆனால் திருமூலர் இங்கே மூச்சுக்காற்றையே புரவி என்ற சங்கேத மொழியில் கூறுகிறார்.

சாதாரண மனிதர்களுக்கு மூச்சுக்காற்று கண்டத்திற்குக் கீழே எட்டு விரற்கடை பரவி நிற்கும்.

யோகிகளுக்கு கண்டத்திற்கு மேலே நான்கு விரற்கடை பரந்து நிற்கும்.

இதையே எட்டுடன் நாலு புரவியும்
என்று சங்கேத மொழியில் கூறுகிறார்.

கடைசி வரியில் வரும் "பாகன்' என்ற சொல் கடவுளைக் குறிக்கும் (சிவனை) சங்கேதச் சொல்லாகும்.

"பாகன்' என்பதற்கு செலுத்துபவன்,
கட்டுப்படுத்துபவன் என பல அர்த்தங்கள் உண்டு.

குண்டலினி சக்தியையும் மூச்சுக்காற்றையும் கருவின் உள்ளே செலுத்து பவனாகையால் கடவுள் இங்கே "பாகன்' ஆகிறார்.

இவை இரண்டையும் பாகனாகிய கடவுள் அந்தக் கருவின் உள்ளே செலுத்தாமல் போனால் அந்தக் கரு வளர்ச்சியடையாது. வீணாகப் போய்விடும்.

ஐயன் வகுத்த திருக்குறளை சிறு அடிகளில் பெரும் உண்மைகளை விளக்கும் சிறப்பு வாய்ந்த நூலாகக் கொண்டாடுகிறோம்.

"கடுகைத் துளைத்து, ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று புகழ்வார்கள்.

திருவள்ளுவரின் திறமைக்குச் சற்றும் குறைந்ததல்ல திருமூலரின் திறமை என்பதற்கு திருமந்திரப் பாடல் சான்றாக உள்ளதல்லவா?

நான்கு வரிகளில் எத்தனை எத்தனை சூட்சுமங்கள்...

கலாச்சாரம் என்பது பழம்பஞ்சாங்கம், மேலை நாட்டு நாகரீகம் படி வாழ்வதே அறிவு என்று பரப்புவர்கள்...


நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு..

கலாச்சாரத்தைக் காப்போம்..
குடும்பங்களைக் காப்போம்..

இந்து மதத்தின் அடிப்படை தமிழர் வானியலே - 1...


திரிசூலம் - பிரம்மன், விஷ்ணு, சிவன்:
தமிழர்களின் அறிவியல் - உலக மதங்களின் மூலம். 

தொல் தமிழர்கள் கடவுளை   உருவாக்காதவர்கள். தேவைப்படாததால் சிலைகளை அந்த நம்பிக்கையை வளர்க்காதவர்கள். அவர்கள் கடலோடி மீன்பிடி தொழில் செய்தவர்கள் ஆதலால் வானியல் இயல்பிலேயே ஊறிய விசயமாக இருந்தது. அவர்களின் வானியல் அறிவு பிற்காலத்தில் பிற மதங்களால் உள்வாங்கப்பட்டு, உருமாற்றப்பட்டு, தமிழனின் தலையிலேயே மதங்களாகத் திணிக்கப்பட்டிருக்கிறது. 

அந்நிய ஆரிய (அ) பிராமண மதத்தால் தான் தமிழரின் வானியல் அறிவு, பெருமளவு திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்றாலும், பிற மதங்களும் விதி விலக்கல்ல. ஒவ்வொன்றாய் காண்போம்.

தொடக்க கால தமிழர் சமயம்  6 பிரிவுகளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என்பவையே அந்த ஆறு பிரிவுகள். இவற்றில் நன்கு அறிமுகமான பிரிவுகள் சைவமும் வைணவமும். இந்த ஆறு பிரிவுகளும் ஒன்றோடு மற்றொன்று கலக்கப்பட்டு ஒரே  மதத்திற்குள்ளாக இருக்குமாறு மாற்றப்பட்டுவிட்டது.

1. சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

2. வைணவம் - விண்ணு (அ) விஷ்ணு என்ற திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம்.

3. சாக்தம் - சக்தி அ பார்வதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

4. காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

5. கௌமாரம் - குமாரனான முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

6. சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

இவை ஆறு சமயப்பிரிவுகளும் ஒரே மதமாக்கப்பட்டு விட்டாலும் அடிப்படையில் இவை எதுவும் மத, கடவுள் நம்பிக்கை சார்ந்த விசயங்களைப் பற்றி பேசாதவை.

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை.

காரணம் இவை அனைத்தும் வானியல் கோட்பாடுகளே. விஞ்ஞான விசயங்களே.

விஞ்ஞானம் என்பதே விண் ஞானம் தானே.

உண்மைகளை எங்கே தேடிக் கண்டு பிடிக்க ?

மதஇயல் (அ) இறையியலில் தொன்மக்கதைகள் களைதல் (De-mytholization) என்ற ஒரு பிரிவு உண்டு.

அனைத்து மதங்களிலுமே இருக்கக்கூடிய புனைவுக்கதைகள், அதீத அற்புதங்கள், இயற்கையை மீறிய செயல்பாடுகள், நடைமுறை வாழ்க்கையில் காணமுடியாத ஐதீகங்கள், விசுவாசங்கள், அறிவியல் பூர்வமற்ற, அறிவுக்கொப்பாத கற்பனை செய்திகள், இவை போன்றவைகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்பதைவிட இவற்றுக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய மூல உண்மைச் செய்திகளை வெளிக்கொணர்ந்தாலே உண்மை வெளிப்பட்டு விடும். கற்பனைக் கதை அடிபட்டுப்போகும்.

அப்படி அடிப்படையாக இருக்க கூடிய உண்மைச் செய்திகளை  கொண்டே இக்கட்டுரை....

தொல் தமிழர்களின் அறிவு மிகப்பெரும் ஆச்சரியம.. தொடர்ந்து தேடுவோம்...

தூத்துக்குடி நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல - மத்திய அரசு...


செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி -2...


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு..

உலகப்பொதுமறை என வள்ளுவப் பெருந்தகையனார் அமிழ்தினும் இனிதான தமிழ் மொழியினில் அருளிச் சென்ற 1330 குறள்களுள் முதற்குறள்.

எவ்வாறு உலக எழுத்துக்களுக்கெல்லாம் 'அ'கரம் முதலாவதாக இருக்கின்றதோ அதேப் போல் இந்த உலகத்திற்கு இறைவன் முதல்வனாக இருக்கின்றான் என்ற மாபெரும் கருத்தை எளிமையாக எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

சரி... ஆனால் உண்மையிலேயே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளதா என்ற கேள்வி என்னுள் ஒருநாள் எழுந்தது. அதற்குரிய விடையினை அறிந்துக் கொள்ளப் பல மொழிகளின் எழுத்துக்களைப் பற்றித் தேடிய பொழுது அந்தக் கருத்து உண்மைதான் என அறிந்துக் கொண்டேன்.

ஆம்!!! தற்போது உலகத்தில் அதிகமாக பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், மண்டாரின் (Mandarin) பிரன்ச்சு (French) ரசிய மொழி, செர்மன், சுபாநிசு (spanish) ஆகிய மொழிகளிலும் இந்த மொழிகளுக்கு எல்லாம் மூலமான இலத்தின் (Latin) மற்றும் கிரேக்க மொழிகளிலும் கூட அகரம் ('A') என்னும் எழுத்தே முதல் எழுத்தாக உள்ளது.

உலகின் மற்றப் பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கே அகரம் முதல் எழுத்தாக இருக்கும் பொழுது, இந்திய நாட்டு மொழிகளுக்கு மட்டும் அது வேறு படவா போகின்றது. இந்திய நாட்டு மொழிகள் அனைத்திற்கும் அகரமே முதல் எழுத்தாக திகழ்கின்றது.

எனவே 'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது சரி தான். இப்பொழுது அந்த அகரத்தை தமிழ் மொழி எவ்வாறு சிறப்பிக்கின்றது என்பதினைப் பார்ப்போம்.

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாத உறவுகள் தமிழில் அகரத்தை முதன்மையாக வைத்தே அழைக்கப் பெறுகின்றன.

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அத்தை, அம்மாயி, அம்மான் முதலிய பல உறவுகள் அகரத்தால் தொடங்கப்பெறும் வார்தைகளினாலையே அழைக்கப் பெறுகின்றன.

மேலும், ஒரு மனிதன் இந்த உலகினில் வாழும் பொழுது அவன் கடைப்பிடிக்க கூடிய தன்மைகள் மற்றும் அவனைச் சூழ்ந்து இருக்கும் முக்கியமான பொருட்கள் ஆகியவனவும் அகரத்தை முதன்மையாகக் கொண்டே அழைக்கப்பட்டன.

அண்டம், அன்பு, அடக்கம், அமைதி, அன்னம், அறிவு, அழகு, அரசு போன்ற வார்த்தைகளைக் கண்டாலே நாம் அதை உணர்ந்துக் கொள்ள முடியும்.

உலகில் உள்ள வேறு எந்த மொழியாவது தன்னுடைய முதல் எழுத்தை இவ்வளவு சிறப்பித்து இருக்குமா என்பது சந்தேகமே..

உலகில் மனிதன் தோன்றுவதற்கு அம்மா அப்பா எவ்வாறு முக்கியமோ, அதேப் போல் அகரமும் தமிழுக்கு முக்கியம்.

எனவே தான் குழந்தைகளுக்கு 'அ' என்றால் 'அம்மா' என்றே நமது தமிழ் மொழி கற்பிக்கின்றது.

இவ்வாறு வாழ்க்கைக்கு இன்றியமையாத விசயங்களை ஒரு மொழியின் முதல் எழுத்தின் மூலமே பெயரிட்டு வழங்குவதும் ஒரு வகை அறிவியலே ஆகும்.

தொடர்ந்து பயணிப்போம்....

உனது அரசியல் உனது சிந்தனையில்...


ஆழ்மனத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள்...


அதைப் பயன் படுத்தி உங்களை ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...

அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி..

அண்டம் என்பது பிரபஞ்சம். பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்..

இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன. அவற்றில், ஒன்று காஸ்மிக் சக்தி.

இதைப் பயன்படுத்தி நமது நியாயமான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்த காஸ்மிக் சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் இருமுறை செய்துவர வேண்டும்.

காலையில் எழுந்து குளித்துத் தயாரானதும், இரவில் தூங்கும் முன்பாகவும் 15 நிமிடம் வரை நாம் தியானம் செய்துவர வேண்டும்.

மனக்காட்சியின் மூலம் விரும்புவதை அடைவது எப்படி?

இதுதான் ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் சுலப வழிமுறை.

இதற்கு ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலிசேசன் என்று பெயர்.

இதை தமிழில் படக்காட்சியாகக் கற்பனை செய்து பார்த்தல் எனக்கூறலாம்.

இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து நெறிப்படுத்தியவர் ஜோஸ் சில்வா என்ற ஆங்கிலேயர் ஆவார்.

இன்று இதை ஐரோப்பா. அமெரிக்கா கண்டங்களில் எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள் (workshops) நடத்திக் கொண்டே இருக்கின்றனர்.

இதனால்தான் மேலை நாட்டினர் பலகோடி ரூபாய்கள் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றனர்...

அதிமுக - டிடிவி தினகரன் கூட்டணி...


நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை.
3.காந்தம்.
4.காரம்.
5.கந்தகம்.
6.பூரம்.
7.வெள்ளை பாஷாணம்.
8.கௌரி பாஷாணம்.
9.தொட்டி பாஷாணம்.

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.

நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.

நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்று விடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.

இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார்.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்து விடும்...

பழங்கள் குறைவில்லை ஆனால் உடலின் சக்திகள் முழுதும் தீர்ந்து விட்டது...


வாழ்த்துக்கள் சகோதர்களே...

வருமையின் உச்சத்திற்கு அவர்களை கொன்று சென்று விட்டோம்...

பசித்துப் புசி என்பது சான்றோர் வாக்கு...


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். - (குறள் 942 - அதிகாரம் - 95)..

உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.

மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்த அதிகாரமாகும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”

தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள்.

பசித்துப் புசி என்பது சான்றோர் வாக்கு..

பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

பஞ்சுப் பொதியல்ல நம் வயிறு. வயிறு முட்ட சாப்பிடுவது நல்லதல்ல. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர். மீதி கால் வயிறு காற்றோட்டத்திற்கு. இப்படி இருந்தால் மட்டுமே சிறப்பு.

மூன்று வேளை கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர். வயிறு செரிமானமாகாமல் இருப்பின் அடுத்த வேளை உணவை தவிர்த்து விடலாம். அதுவும் இரவு உணவு உண்பதில் எச்சரிக்கை வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு உணவில் மாமிசத்தைத் தவிர்ப்பது நல்லது.

உலக மக்கள் இருவகை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஒன்று உயிர் வாழ்வதற்காக உண்பவர்கள். இரண்டாம் வகையினர் உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள். இந்த இரண்டாம் வகையினர் சாப்பாட்டுப் பிரியர்கள். இவர்கள் எப்போதும் எதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

தினமும் விருந்தும், கேளிக்கையுமாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே குறுக்கிக் கொள்கிறார்கள்.

உணவு உண்பதில் ஒரு வரைமுறை வேண்டும். ஒரு கட்டுப்பாடு வேண்டும். கால இடைவெளி வேண்டும்.

“ஒருவேளை உண்பான் யோகி

இருவேளை உண்பான் போகி

முப்போதும் உண்பான் ரோகி

எப்போதும் உண்பான் துரோகி”

இப்பாட்டிலிருந்து நாம் அறிவது என்ன-

எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே ஒருவன் இருப்பானேயானால் அவன் தனக்குத்தானே துரோகம் செய்து கொள்கிறான். எப்போதும் எதையாவது உண்டு கொண்டே இருந்தால் வயிறு ஒரு அரவை இயந்திரமாகிப் போகிறது. அதன்பின் அதற்கு ஓய்வில்லாமல் போகிறது. இது வயிற்றில் சுரக்க வேண்டிய சுரப்பி நீர்களை அதிகமாகவோ, குறைவாகவோ நேரம் கெட்ட நேரத்தில் சுரக்க வைக்கிறது.

இதனால் நமக்கு தேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது பல நோய்கள் உருவாக அடித்தளமாகிறது. அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது என்பதை உணர்ந்து சாப்பிடுகிறானோ அவனை எந்த நோயும் அணுகாது. மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை. இதனை நம் திருவள்ளுவர் காலத்திலேயே எடுத்துத்துரைத்திருந்தாலும் நாம் இதுவரை உணரவில்லை. இனியாவது இதனை பின்பற்றுவோமாக...

வெளிநாடுவரை பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவான் சிறப்பு நாறுகிறது...


இனியும் சிந்திப்பாயா சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமா என்று...?

கற்பூரவள்ளி மருத்துவ குணம் பற்றிய தகவல்...


கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.

இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.

கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த:

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.

அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்...

சித்தர்கள் இரகசியம்....


காடேரி மலையேறி நதிகளாடி
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே...

பொருள்:

சித்தர்களாக, ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோமரிஷி ஞானம் சொல்கிறது.

ஆசான் உரோமரிஷி:

அட்டமாசித்தி பெற்ற பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடர் என்றும் குமாரர் என்றும் கூறுவர். உரோம ரிஷிக்கு உடல் முழுவதும் மயிர் முளைத்திருந்தபடியால் ‘உரோம முனி’ என்று காரணப் பெயர் பெற்றார்.

ஒரு பிரம்மா இறந்தால் இவரது மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவரது வாழ்நாள் முடிவுக்கு வரும். உரோம முனி இறந்தால் அஷ்டகோண முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்பர்.

காலாங்கியும் போகரும் சீனாவிலிருந்து தமிழகம் வந்து சித்தர்களானது போல ரோம ரிஷியும் ரோம புரியிலிருந்து வந்த சித்தராயிருக்கலாம். உரோம ரிஷி என்ற பெயர் ரோமாபுரியுடன் தொடர்புடையது என்பர் சிலர்.

தன்னைப்பற்றி:

கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே..

பால் : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் ; ஞால : பரிசுத்த மெய்ஞஞானம் ; பதம் : பாதம்.

தியானம்:

"செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே."

போலிக்குரு:

"மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே"

தவநிலை:

"சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே"

என உரோமரிஷி ஞானம் கூறுகிறது.

இவர் சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்திய சூத்திரம், வகார சூத்திரம், உரோமரிஷி முப்பு சூத்திரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

இவர் அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயத்திற்கும் சிலேடைகளுக்கும் பஞ்சமே இல்லை.

எண்சீர் விருத்தம்:

மூலவட்ட மானகுரு பாதங் காப்பு;
முத்திக்கு வித்தான முதலே காப்பு;
மேலவட்ட மானபரப் பிரமங் காப்பு!
வேதாந்தங் கடந்துநின்ற மெய்யே காப்பு;

காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக்
கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி
ஞாலவட்டஞ் சித்தாடும் பெரியோர் பாதம்
நம்பினதா லுரோம னென்பேர் நாயன் றானே. 1

கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே
கருவதனை யறியாமல் மாண்டு போனான்
விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம்
வெறுமண்ணாய்ப் போச்சுதவன் வித்தை யெல்லாம்;
ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்
ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும்
பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்
பேரின்ப முத்திவழி பேசுவேனே. 2

பேசுவேன் இடைகலையே சந்த்ர காந்தம்;
பின்கலைதா னாதித்தனாதி யாச்சு;
நேசமதாய் நடுவிருந்த சுடர்தான் நீங்கி
நீங்காம லொன்றானா லதுதான் முத்தி;
காதலாய்ப் பார்த்தோர்க்கிங் கிதுதான் மோட்சம்;
காணாத பேர்க்கென்ன காம தேகஞ்
சோதனையாய் இடைகலையி லேற வாங்கிச்
சுழுமுனையில் கும்பித்துச் சொக்கு வீரே. 3

வாங்கியந்தப் பன்னிரண்டி னுள்ளே ரேசி
வன்னிநின்ற விடுமல்லோ சூர்யன் வாழ்க்கை?
ஓங்கியிந்த இரண்டிடமு மறிந்தோன் யோகி;
உற்றபர மடிதானே பதினாறாகும்;
தாங்கிநின்ற காலடிதான் பன்னி ரண்டு;
சார்வான பதினாறில் மௌ¢ள வாங்கி
ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி யூதி
எழுந்தபுரி யட்டமடங் கிற்றுப் பாரே. 4

பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு
பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை;
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து
நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு;

கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால்
குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா!
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்
அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே. 5

அழைப்பதுவும் நல்லபிள்ளை யானால் நன்றே!
ஆகாத சீடர்களைச் சேர்த்தல் தோடம்;
பிழைப்பதற்கு வழிசொன்னால் பார்க்க மாட்டான்
பெண்டாட்டி மனங் குளிரப் பேசு மாடு;
உழைப்பதற்குச் செனனமெடுத் தானே யல்லால்
உதவிதனக் கெவ்வளவு முண்டோ வில்லை;
இளப்பமிவன் பேச்சையடிக் கடிதா னாகு
மேதுக்குச் சொல்லுகிறோ மினிமேல் தானே. 6

மேலென்ன இருக்கையிலும் நடக்கும் போதும்
வேறுரையால் சாரங்கள் விடாம லேற்று
நாலென்ன எட்டென்ன வெல்லா மொன்று
நலமான அட்டாங்க மப்பிய சித்துக்
காலென்னப் பிராணாய முன்னே செய்யில்
கணக்காகப் பூரகங்கும் பகமே நாலு
கோலென்ன ரேசகந்தா னொன்று மூன்று
குறையாமற் சரபீங் கூட்டித் தீரே. 7

கூட்டியே பழகினபின் சரபீ சத்தில்
குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம்
காட்டுவிக்கு மல்லால்விழிக் குறியி னாலே
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரு;
மூட்டுவிக்கு மாதார மாறுந் தானே
மூலவட்டக் கணபதிநான் முகத் தோன் மாயன்
தாட்டிகமா மணிப்பூரங் கையன் வட்டந்
தணலான ருத்திரனுந் தணலு மாமே. 8

தணலாகும் விசுத்தியறு கோண வட்டஞ்
சதாசிவனார் வட்டமல்லோ குருபீ டந்தான்;
மனையான பதினியிலே குறித்துப் பார்க்க
மத்யமுதல் கரிகொண்டு தூங்குந் தூங்கும்

கனலேறிக் கொண்டிருந்தா லெல்லா முண்டு;
காற்றைவெளி விட்டக்கால் கருமந் தீதான்
புனலூறும் வழிப்பாதை யிந்த மார்க்கம்
பொல்லாத துரோகிக்குப் பொய்யா மன்றே? 9

செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே. 10

மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே. 11

சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே. 12

ஓமென்ற கெட்டபுத்தி மாணா கேளே;
உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே;
ஆமென்ற இருபத்தோ ராயி ரத்தோ
டறுநூறு சுவாசமல்லோ ஒருநா ளைக்குப்
போமென்று போனதனால் நாள்கு றைந்து
போச்சுதுபோ காவிட்டால் போவ தில்லை;
தாமொன்று நினைக்கையிலே தெய்வ மொன்று
தானினைந்த தன்மையல்லோ விதிகள் தாமே? 13

எல்லாம் சிவ மயம்.. வாழ்க வளமுடன்...

ரூ.3558 கோடி இழப்பு: உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாவிட்டால் அரசு விலக வேண்டும் - பாமக அறிக்கை...


தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தமிழக அரசு தவறியதால் கடந்த ஓராண்டில் மட்டும்  உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ.3558.21 கோடி நிதி வழங்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் இந்த நிதியை வாங்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18 ஆம் ஆண்டில் ரூ.3,340 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு 14-வது நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதில் முதற்கட்ட அடிப்படை மானியம் ரூ.1390 கோடியை மட்டுமே கடந்த ஜனவரி வரை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டுக்கான இரண்டாம் கட்ட அடிப்படை மானியம் ரூ.1390.04 கோடி, செயல்பாட்டு மானியம் ரூ.560.15 கோடி என மொத்தம் ரூ.1950.19 கோடியை கடந்த மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதன்பிறகு 4 மாதங்களாகியும் நிதி ஆணையம் பரிந்துரைத்த நிதி  வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, 2018-19 ஆம் நிதியாண்டிற்கான முதல்கட்ட அடிப்படை மானியம் ரூ.1608.02 கோடி இப்போது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த நிதியையும் வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. பலமுறை நினைவூட்டியும் இந்த மானியம் இன்று வரை வழங்கப்படவில்லை.

கடந்த நிதியாண்டின் இரண்டாம் பாதி, நடப்பு நிதியாண்டின் முதல் பாதி என ஓராண்டில் மட்டும்  உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3558.21 நிதி மறுக்கப்பட்டிருப்பதால் உள்ளாட்சிகள் மிகக்கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இன்றைய சூழலில் ரூ.3558 கோடி என்பது தமிழகத்திற்கு மிகவும் அதிகமான தொகை ஆகும். ஏற்கனவே, 14&ஆவது ஆணையத்தின் பரிந்துரைகளில், மத்திய அரசின் வரி  வருவாயில் தமிழகத்திற்கான பங்காக வழங்கப்பட வேண்டிய தொகை கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது.   அது போதாதென உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தால் ஜனநாயகத்தின் ஆணி வேராக கருதப்படும் உள்ளாட்சி அமைப்புகள் கருகி விடும் வாய்ப்புள்ளது.

உள்ளாட்சிகளுக்கான நிதி வழங்கப்படாததன் பாதிப்புகள் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிவிட்டன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த ஆண்டு பெய்த சாதாரண மழையில் சேதம் அடைந்த சாலைகள் 9 மாதங்களாகியும் இப்போது வரை சரி செய்யப்படவில்லை. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிதி நெருக்கடி காரணமாக துப்புரவுப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. கோவை மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய ரூ.60 கோடி கிடைக்காததால், அங்கு பணியாற்றிய 500 துப்புரவு பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மதுரையில் துப்புரவு பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. திருச்சி, வேலூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளும், மற்ற நகர, ஊரக உள்ளாட்சி அமைப்புகளும் மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.

தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தான் காரணம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் தான் இந்த நிதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு பலமுறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலத்திற்கான ரூ.1950.19 கோடி  பிப்ரவரி மாதம் வரை வழங்கப்படாத நிலையில், அதை உடனடியாக வழங்கும்படி அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் தமிழகத்திற்கு இனி ஒரு பைசா கூட நிதி வழங்க முடியாது அப்போதே மத்திய அரசு கூறிவிட்டது.  இப்போது மக்களவையில் இதுகுறித்த வினாவுக்கும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தோமர் இதே பதிலை கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததைக் காரணம் காட்டி இந்த நிதியை வழங்க மத்திய அரசு மறுத்ததாக செய்தி வெளியான போதே, தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, மத்திய அரசு நிதியை பெற வேண்டும் என்று கடந்த மார்ச் 23-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். அப்போதே தமிழக அரசு விழித்துக் கொண்டிருந்தால் கூட, அதற்கு பிந்தைய 4 மாதங்களில் உள்ளாட்சித்  தேர்தலை நடத்தி மத்திய அரசு நிதியை வாங்கியிருக்க முடியும். ஆனால், ஊழல் செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் பினாமி அரசு, தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததே சிக்கலுக்கு காரணமாகும்.

பினாமி அரசு செய்த பாவத்தின் சுமைகளை தமிழ்நாட்டு மக்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர்.  தமிழகத்தில் அடுத்த இரு வாரங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை நடத்த எந்தத் தடையும் இல்லை. எனவே, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, நிதியைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடத்த முடியாவிட்டால் எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். அதேநேரத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டிற்கான நிலுவைத் தொகை ரூ.1950 கோடியையாவது மத்திய அரசு உடனே ஒதுக்க  வேண்டும்...

கொடி மர தத்துவம்...


கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது.

படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும்.

எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். உள்ளமும், உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும், நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும்.

கொடி மரம்:

ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வழக்கத்தில் இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து தான் கொடிஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.அது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன.

நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன.

பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.இதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.இது கோவிலுக்கு கோவில் மாறுபடும்.

ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.

அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன.

கொடி மரம் முழுவதும் பல்வேறுஇறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும்.

சில கோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும்.மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது.

இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா?அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும்.

பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடுமீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.

இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும்.

இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள். எப்படி தெரியுமா?

கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது.

இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.

அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது. சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான்அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்யவேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது.

இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார்.

ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது.

கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.

ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடிமரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது. கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள்.

இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும். அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவே தான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்...

ஆரிய வித்து தேடி அலையும் ஹிட்லர் வாரிசுகள், அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்...


உலக வரலாற்றில் ஓர்ஆச்சரியமான இணைமுரண் உண்டு. மிகச் சிறிய இனமாக இருந்தாலும், உலகெங்கும் உள்ள அதிகார மய்யங்களில் பரவி, நுழைந்து அதன் உச்சியை எட்டி, ஆட்டிப் படைப்பவர்கள் யூதர்கள். தங்களைத் தொடர்ந்து அத்தளத்தில் இறுத்திக் கொள்ளவும் சரியான நகர்வுகளைச் செய்பவர்கள். அரசியல், அதிகாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துத் துறைகளின் மூலம் தங்கள் ஆதிக்கத்தை உலகம் முழுவதும் வைத்திருப்பவர்கள். இதே பண்பு நலன்களைக் கொண்ட மற்றோர் இனம் உண்டென்றால் அது சர்வ நிச்சயமாக இந்தியாவில் இருக்கும் ஆரிய இனம் தான்; பார்ப்பனர்கள் தான்.

இவ்விரு இனத்தினைக் கூர்ந்து நோக்குபவர்களுக்கு இவ்வுண்மை புலப்படும். சரி இது இணை, முரண் என்ன? உலகின் உயர்ந்த இனம் என் ஆரிய இனம் தான் என்று நெஞ்சு நிமிர்த்திய ஹிட்லர் தான் யூத இனத்தைப் பூண்டோடு தன் நாட்டிலிருந்தும் தான் பிடிக்கும் நாட்டிலிருந்தும் அழிக்க முனைந்தவன் என்பது தான் அந்த முரண்!

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிளம்பிய ஆரியர்கள், கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்தியா வந்தார்கள். பிறகு இந்தியப் பெருநிலமெங்கும் பரவினார்கள். இந்தியாவின் அதிகாரங்களில் மதத்தின் வாயிலாகவும், பண்பாட்டு வாயிலாகவும் ஆதிக்கத்தைச் செலுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இப்படி நாம் சொல்லத் தொடங்கினால்... சேச்சே... ஆரியர்களாம்... கணவாய்களாம்... சுத்த பேத்தல்... ஆர்யன இன்வேஷன் தியரி இஸ் எ மித்-னு ப்ரூவ் ஆயிடுச்சு தெரியுமா? என்று எதையோ தின்ற பாணியில் முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்பவர்களைப் பார்த்திருப்போம்.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை மறுக்க முடியாமல் சிலர் ஆரியர்கள் வேறு; பார்ப்பனர்கள் வேறு. இவர்கள் அந்தணர்கள். இங்கேயே வாழ்ந்தவர்கள் என்று மழுப்புபவர்களும் உண்டு. டி.என்.ஏ-விலேயே மாற்றம் இல்லை தெரியுமா? என்று அறிவியலைக் காட்ட முற்படுவோரும் உண்டு.

இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் பணி நமக்கு வேண்டாம்... பரிசுத்த ஆரியர்கள் அதைச் செய்வார்கள். அவர்களிடம் செல்வோம் வாருங்கள்!

காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி! இயற்கை எழில் சூழந்த இப்பகுதியில் வாழும் பல்வேறு பழங்குடி இன மக்களில் டார்ட்களும், அவர்களில் சிறு குழுவினரான ப்ரோக்பாக்களும் யார் என்பதை அவர்கள் வாயிலாகவே தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆறு அடிக்குக் குறையாத உயரமும், சிவந்த மேனியும், கூர்மையான முக அமைப்புகளும், நீல நிறக் கண்களும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் இவர்கள். நாங்கள் உண்மையான ஆரியர்கள். எங்களின் பூர்வீகம் கில்கித். எங்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் சிதையாமல் அழியாமல் காத்துவருகிறோம். எங்கள் மூதாதையர்கள் எங்களுக்கு அந்த உணர்வை ஊட்டியிருக்கிறார்கள். என்கிறார்கள் இம்மக்கள்.

நாங்கள் அலக்சாண்டரின் படை வீரர்கள் என்று என் தாத்தா சொல்வார். அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது, போரில் தோற்றுவிட, சிலர் இமாலயப் பகுதியிலேயே தங்கிவிட்டார்கள். அவர்களின் வாரிசுகள் தான் நாங்கள். நான் அலெக்சாண்டர் படம் பார்த்தேன். அதில் அவர்கள் அணிந்திருக்கும் போர் உடை எங்களின் பாரம்பரிய உடையை அப்படியே ஒத்திருப்பதைக் கண்டேன். என்கிறார் அவ்வினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ப்ரோக்பா மக்களிடையே மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உண்டு என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி (2006 மார்ச் 13) ஒன்று தெரிவிக்கிறது. பலதார மணம் இரு பாலருக்கும் முற்காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த நூற்றாண்டில் பெண்கள் பலரைத் திருமணம் செய்யும் பழக்கம் நிறுத்தப்பட்டு, ஆண்களுக்கு மட்டும் இப்போது பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் சார்ட் இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞரான டாஷி என்பவர்.

முன்பு யார் இருந்தாலும், அவர்களின் முன்னிலையில் மாறிமாறி முத்தம் பரிமாறிக் கொண்டிருந்ததாகவும், வரிசையில் நின்று முத்தமிட்டுச் செல்லும் பழக்கம் 1970களுக்குப் பிறகு மாற்றப்பட்டு, வெளியாட்கள் இல்லாமல் தான் இப்போது அது நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் உள்ள ஆரிய இன மக்கள் பற்றி தன்னுடைய ஆவணப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சஞ்ஜீவ் சிவன் (பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர்).

தூய ஆரியர்கள் எனப்படும் இம்மக்கள் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து பலரும் மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகளில் இருந்தும் வரும் மாணவர்கள் இவர்களின் பூர்வீகம், பண்பாடு போன்றவற்றை ஆய்வு செய்துவருகிறார்கள். அவ்வாறு வருவோரில் ஜெர்மனில் இருந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமானது. அதிலும் ஜெர்மானியப் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. அவர்களின் நோக்கம் வெறும் ஆய்வு மட்டுமல்ல என்கிறது சஞ்சீவ் சிவனின்ஆத்துங் பேபி: தி ஆர்யன் சாகா என்ற ஆவணப்படம்.

2010 கோவா திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. வெகு எளிதில் யாரும் சென்று பழகி, பதிவு செய்துவிடமுடியாத செய்திகளைத் தருகிறது இவரது ஆவணப்படம். அப்பகுதியில் உலவும் ஜெர்மானியப் பெண்களைத் தொடர்ந்து சென்றும், அவர்களின் நடவடிக்கைகளைப் படம்பிடித்தும், பின்னர் அவர்களிடம் பேசி பேட்டி வாங்கியும் பதிவு செய்துள்ளார் தனது ஆவணப்படத்தில்!

ஆரிய இனத்தூய்மை பற்றியும், மேன்மை பற்றியும் பேசி, அதற்காக பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த ஹிட்லரின் சிந்தனைகளும், இனப்பற்றும் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதையே அவை உறுதி செய்கின்றன.

ஆய்வுக்காக என்று வரும் பெரும்பாலான ஜெர்மன் பெண்களின் முக்கிய நோக்கம், தூய ஆரிய இனத்தை மீண்டும் தங்கள் நாட்டில் உருவாக்குவது. அதற்காக அவர்கள் மேற்கொண்டிருக்கும் பணி, தூய ஆரிய இனம் என்று கருதப்படும் லடாக் பகுதியில் வாழும் டார்ட் இனத்து ஆண்களுடன் பழகி, தூய ஆரிய வித்துகளைப் பெற்று, அவர்களின் மூலம் கரு உருவாக்கிக் கொண்டு செல்லுவது! இதை அந்தப் பெண்கள் பெருமையுடன் ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள்.

நான் இந்தப் பணியை மேன்மையானதாக நினைக்கிறேன். இதைச் செய்வதிலும் சொல்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் பிள்ளைக்கு நான் அவனின் தந்தை பற்றிச் சொல்வேன். அவன் மிகச் சிறந்த ஆரிய இனத்தவனாக, அறிவாளியாக வளர்வான். என்கிறார் இவ்வாறு ஆரியக் கருவைச் சுமக்க வந்திருக்கும் ஜெர்மானியப் பெண் ஒருவர். இவர்களுக்கு வித்து தானம் தந்து ஆரிய இனத்தைப் பெருக்கும் முயற்சியில் உறுதுணையாயிருக்கும் ப்ரோக்பா இனத்து ஆண்களும் அதை பெருமையோடு ஒப்புக்கொள்கிறார்கள்.

ஒரு ஜெர்மன் பெண் என்னிடம் வந்தாள். நான் அவர்களோடு தங்கினேன். மகிழ்ச்சியாக இருந்தோம். அவர்களோடு உறவு கொண்டேன். எனக்கு ஒன்றும் செலவு இல்லை. அனைத்தையும் அவ்ர்களே பார்த்துக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் பணமும், பரிசுகளும் தருவார்கள். சாக்லெட் தருவார்கள். அதை என் பிள்ளைகளுக்கு நான் கொடுப்பேன். என் குடும்பத்துக்கு இது தெரியாது. அவர்கள் ஜெர்மனியில் இருந்து வருகிறார்கள். நாங்கள் ஆரியர்கள். தூய ஆரிய இனத்தின் வித்துகளை அவர்கள் அங்கே எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். என் குழந்தைகள் வருங்காலத்தில் ஜெர்மனியில் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்ததும் தந்தையாகிய என்னை வந்து சந்தித்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறார் ஒருவர்.

5, 6 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் வந்தார்கள். அவ்ர்கள் ஆரிய இன வித்துகளைப் பெற விரும்பினார்கள். என்கிறார் மற்றொரு இளைஞர். இது ஒருவர், இருவரோடு முடியும் விசயமில்லை. இவ்வாறு ஆரிய விதைகளைப் பெற்றுக் கொண்டு செல்ல ஜெர்மானியப் பெண்கள் வருவது இப்போது மட்டும் நடைபெறுவதில்லை. பல்லாண்டுகளாக இது நடைபெற்றுவருவதாகக் கூறுகிறார் நியூ ஜெர்ஸி பல்கலைக் கழகத்தின் மானுடவியல் ஆய்வாளர் மோனா பான்.

நான் யார் என்பது அவசியமில்லாதது. இது நான் தொடங்கியதில்லை... என்னோடு முடியப்போவதுமில்லை. என்று ஆவணப்படத்தில் ஒளிமறைவில் பேட்டியளித்திருக்கும் ஜெர்மானியப் பெண் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

1979-ஆம் ஆண்டுவாக்கில் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உலவுவதைப் பார்த்துப் பிடித்த ராணுவம் அவர்களை விசாரித்தபோது இவ்வுண்மை தெரியவந்ததாகச் சொல்கிறார் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குப் பேட்டியளித்த டாஷி.

இது குறித்து மேலும் நாம் தகவல்களைத் தேடியபோது, எவரெஸ்ட் ஏறிச் சாதனை படைத்தவர்களில் ஒருவரான ஹெச்.பி.எஸ். அலுவாலியா எழுதி, 1980-ல் வெளிவந்த தனித்து வாழும் அரசாட்சி: லடாக் (Hermit Kingdom: Ladakh) நூல் இது குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறது.  இது பற்றிக் குறிப்பிடும் அலுவாலியா, ஜெர்மானியப் பெண்கள் தூய ஆரியர்களைத் தேடிவந்து கருவுற்றுச் செல்வது தொடர்ந்து நடக்கிறது. இது ஆரிய இனப் பெண்களுக்குத் தெரிகிறதோ, இல்லையோ, அவ்வினத்து ஆண்கள் இவ்வெள்ளைக்காரப் பெண்களுடன் உறவு கொள்வதை மகிழ்ச்சியாகவே நினைக்கிறார்கள். என்கிறார்.

ஜெர்மனியில் மீண்டும் துளிர்த்துவரும் ஆரிய இன மேன்மைக் கோட்பாட்டின் வெளிப்பாடாக இதை நாம் கருதலாம். ஹிட்லர் சொன்ன ஆரிய இனமும், லடாக்கில் வசிக்கும் ஆரிய இனமும் ஒன்று தானா? ஹிட்லரின் ஆரிய இனக்கோட்பாடு வெள்ளைக் காரர்கள் உருவாக்கிய போங்கு என்றெல்லாம் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். உண்மை ஆரியர்கள் இவர்களே என்றும் அவர்கள் சொல்கிறார்கள். சரி, இந்த உண்மை ஆரியர்கள் வேறு; நம்மூர் பார்ப்பனர்கள் வேறா என்னும் கேள்வி ஒன்று தொக்கி நிற்கிறதல்லவா? அதற்கும் விடை கிடைக்கிறது வேறு சிலரின் ஆய்வில். புத்த மதத்தைத் தழுவியிருக்கும் இவர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் இந்து பார்ப்பனர்களுடையதாகவே இருக்கிறது.

கோமாதா வழிபாடும், இவர்களின் தெய்வங்களும் பார்ப்பனப் பண்பாட்டை ஒத்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மஹாபாரதம் மற்றும் இந்து ஓவியங்களில் இவர்கள் குறிப்பிடப்பட்டிருக் கிறார்கள் என்றும் சொல்கிறது அத்தகவல்.

ஆடு, மாட்டு ஓட்டி வந்த ஆரியக் கூட்டம் இங்கிருந்த பெண்களுடன் கலந்து தான் இந்தோ-ஆரிய இனம் உருவானது. அதனால் தான் பஞ்சமர்களுக்கும் கீழாக பெண்களைக் கருதுகின்றன இந்து மதத் தத்துவங்கள். அதே போல, கிரேக்கர்களின் டி.என்.ஏ-வை ஒத்த டி.என்.ஏ-க்கள் வடஇந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் இருப்பதாகக் கூறும் ஆய்வும் ஆரியப் படையெடுப்பை நிறுவும் ஆதாரங்களாக வருங்காலத்தில் இருக்கும்.

ஆரிய இனத்தின் மேன்மை என்னும் கருத்தாக்கத்தில் ஸ்வஸ்திக் சின்னம் கொண்ட நாஜிக் கும்பலும், காவிக் கும்பலும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள் என்பதில் இனியும் அய்யமிருக்க முடியாது...

தமிழர் கட்சி பாமக நிறுவனர் டாக்டர் இராமதாசு ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...


வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் தமிழ் இனத்தின் தலைவன் என்று தமிழக மண்ணில் பிரகடனம் செய்த முதல் தமிழன்..

தேசம் முழுவதும் கண்டு வியந்த 7 நாள் சாலை மறியலை நடத்தி வெற்றிகண்ட தமிழன்..

பிரபாகரனை ஆதரித்து பேசுவதால் 70 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் சிறை செல்ல தயார் என்று முழங்கிய மாமனிதன்..

தமிழர்கள் மீது கை வைத்தால் 1000 லாரிகளில் பெங்களூரை நோக்கி படை எடுத்து வருவோம் என்ற ஒற்றை வார்த்தையில், கன்னட வெறியர்ளை மிரள வைத்து, பெங்களூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்த வல்லமை மிகுந்த போராளி..

தமிழினத்தின் நிகழ்கால வழிகாட்டிகளில் ஒருவர் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை...