25/05/2018

இத்தாலி செய்த அல்லது திருடிய ஒரு வித்யாசமான நிகழ்வு...


குறிப்பு - 1...

இந்த பதிவுக்கு தலைப்பு வைக்க கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன்

அதாவது திருடியாவது தன மக்களை காக்க வேண்டும் என்ற இத்தாலி அரசை பாராட்டுவதா ?

அல்லது இந்திய அரசியல்வாதிகள் சிலரே கொஞ்சம் இவர்களை பார்த்து நீங்களே உங்களை செருப்பால் அடித்துக் கொள்ளுங்களேன் என்று வைக்கலாமா ?

அல்லது இத்தாலியின் கையாலாகாத தனம் என்று வைக்கலாமா என்று யோசித்தி பின்னர் மேலேயுள்ள அத்தலைப்பை வைத்துள்ளேன்..

குறிப்பு - 2...

இந்த சம்பவத்தை படித்தபின்பு இது சம்பந்தப்பட்ட இத்தாலி அரசை புகழ்வதா?

அல்லது இந்திய அரசை காறித்துப்புவதா?

அல்லது கோபம் கொப்பளிக்க அடுத்த பதிவை வாசிப்பதா என்பதை வாசிக்கும் ஒவ்வொருவர் உணர்வுக்கும் விட்டு விடுகிறேன் ...

மண்ணுடைய தன்மையை பூச்சிக் கொல்லிகள் தெளித்து அழித்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஐரோப்பா கண்டத்தில் உள்ள சில நாடுகள் உதாரணம் நீங்கள் இலண்டனின் வரலாற்றில் இதை காணலாம்..

1830 களில் இந்த சம்பவம் நடந்தது மண்ணில் உயிர் இல்லாததால் விளைச்சல்கள் இல்லாததை கண்டு இத்தாலி அரசே செய்வதறியாது தவித்து கொண்டு இருந்த நேரம்..

மண்ணின் சத்துக்களில் முக்கியமான நைட்ரஜன் சத்து சுத்தமாக இல்லை என்பதை கண்டு பிடித்தது ஆய்வுக்குழு ..

இது எப்படி மண்ணிற்கு கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்த குழு பின்னர் லண்டன் [இத்தாலி] அரசிடம் தன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது அதை வாசித்த அரசு மிரண்டு தான் போனது..

காரணம், அவர்கள் அதில் எழுதியது நம் மண்ணிற்கு நைட்ரஜன் சத்தை கொடுப்பது பிணமான மனித எலும்புகள் தான்.

ஆகவே இலண்டன் மற்றும் இத்தாலியின் விளைச்சலை விளைவிக்க மனித எலும்பு கூடுகள் தான் வேண்டும் என்றது அந்த ஆய்வு ...?

இப்பொழுது மனித எலும்பு கூட்டுக்கு எங்கே செல்வது ?

லட்சம் டன் கணக்கில் மனித எலும்புக்கு
எங்கே செல்வது ?

யோசித்த அரசு எடுத்த முடிவு தான் மனித எலும்பு கூடுகளை திருடுவது என்ற முடிவுக்கு வந்தது.

[இத்தாலிக்கு திருடுவது கைவந்த கலை தானே]

தம் அருகே உள்ள பகுதியில் எங்கெல்லாம் பெரும் போர்கள் வரலாற்றில் நடந்தேறியது அங்கே இறந்த மனிதர்களின் உடல்களை எந்த இடத்தில புதைத்தார்கள் என்ற ஆராய்ச்சியை செய்தது..

அதில் தேர்தெடுக்கப்பட்ட இடங்கள்...

நெப்போலியனுடன் போர் புரிந்த வாட்டர்லு, ஆஸ்ட்ராஸிஸ், போன்ற பிரமாண்ட போர்க்களத்தையம் லிப்ஸிக், கிரிமியா, போன்ற தீவுகளையும் சுற்றி வளைத்து மனித எலும்புகளை கொள்ளையடிக்க தொடங்கியது.

அதே போன்று சிசிலியின் பாதாள கல்லறையில் பல நூறு ஆண்டுகளாய் கிடைக்கும் எலும்புகள் என்று எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு சென்றது .

இப்படி ஒட்டுமொத்தமாக மனித எலும்புகளை அள்ளிக்கொண்டு லண்டனின் தலைநகர் இங்கிலாந்துக்கு இறக்குமதியான மனித எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

2,54,600 பவுண்டுகள்...

இதில் ஒரு கணக்கும் உள்ளது.

இவ்வளவு பவுண்ட் எலும்புகளும் அந்த அந்த மண்ணிலையே விட்டு இருந்தால் மக்கி போய் அங்குள்ள மக்கள் சுமார் 35 லட்சம் பேருக்கு உணவு தந்திருக்கும் என்கிறது வரலாறு..

இந்த 35 லட்சம் மக்களின் உணவை கொள்ளை அடித்த நாடு இத்தாலி..

அது மட்டுமல்ல இந்த 2,54,600 பவுண்டுகளும் எவ்வளவு நாளைக்கு தான் அவ்வளவு பெரிய இத்தாலி நாட்டுக்கு போதுமானதாக இருக்கும் ஆகவே இது தீர்வதற்குள் அடுத்த என்ன திட்டத்தை [திருடுவதை] செயல்படுத்தலாம் .

வேறு என்ன செய்யலாம் என்பதை ஒரு ஆய்வு அறிக்கையாக உருவாக்க ஒருவரை தேர்வு செய்தது இத்தாலி அரசு.

அவர் யார் என்பது கூட பெரிய விஷயம் இல்லை இவர் அடுத்து சொன்ன ஒரு பொருள் தான் ஆச்சர்யமானது ?

அது என்ன ? என்பதை பற்றி அடுத்த பதிவில் காண்போம்...

இதுதான் இப்போது நடந்துக்கொண்டு இருக்கிறது...


அவர்கள் அனைத்தையும் முடிவுசெய்த பிறகே நம்மிடம் பிரச்சனைகளை கொடுக்கிறார்கள்..

உணர்ச்சிவசப்படாமல் இதை கவனமாக கடந்து செல்லுங்கள்..

அதிகார வர்க்கம் காத்துக்கொண்டு இருக்கிறது, நம்மை அடையாளம் கண்டறிந்து அழிப்பதற்கு..

அடையாளமற்றவனாக மாற முயற்சி செய்யுங்கள்...

பதில் வருமா? பதிலாக வேறு ஏதாவது வருமா?



நம்மை சுற்றி நடக்கும் அரசியல்....


போராட்டம் நடக்கும் என்று முன்பே கூறியும் .. போராட்டம் முடியும் வரை ஒரு அரசியல் தலைவராகள் கூட களத்தில் இல்லையே..

எல்லாம் முடிந்த பின்பு...மக்களை சந்திப்பதிலும்... சவால் விடுவதிலும் என்ன பயன்...

எந்த  ஒரு அரசியல் பிரிவினையும் இன்றி நாம் செயல்பட வேண்டும்... அதுவே நமது முதல் வெற்றி...

நம் சந்ததியினருக்காக நாம் சிந்திப்போம்...

ஒவ்வொருவருக்கும் உடனடியாக எச்சரிக்கை செய்யுங்கள் நம் உணர்வுகளை தூண்டி அதில் குளிர்காய நினைக்கிறார்கள்...


மனித எலும்புக்கூடுகளில் இருந்து பறவையின் எச்சம் வரை...


நான் ஏற்கனவே சொன்னது போன்று செய்வதறியாது திகைத்த இத்தாலி எடுத்த முடிவு தான் மனித எலும்புகளை
கொள்ளையடிப்பது என்பது..

இதை பற்றி போன பதிவில் கூறினேன் அதன் தொடராக இதை படித்துக் கொள்ளுங்கள்..

மனித எலும்புகளை மண்ணுக்கு கொடுத்து மண்ணை உயிர்பிக்கலாம்  என்ற கருத்து சில நாட்களில் முடிந்தது..

காரணம், எவ்வளவு நாளைக்கு தான் மனித எலும்புகளை தேடி அலைவது இதற்காக வேறொரு தீர்வை தேடியது இத்தாலி அரசு இதற்காக அணுகிய நபர் பிரெஞ்சு ஆய்வாளர் அலெஸ்ஸாண்டேர் கோஹெட்..

இவர் ஆய்வு செய்து மண்ணுக்கு உயிரூட்ட அடுத்த பொருள் இது தான் என்று அறிவித்தார்..

இதை கேட்ட அரசு மண்டை குழம்பியது..

காரணம் அவர் சொன்ன பொருள் பறவையின் எச்சங்கள்...

இருப்பினும் தன் மக்களின் வாழ்க்கையில் அக்கறையுள்ள இத்தாலி அரசு பல வணிக கப்பல்களை  பல தீவுகளுக்கு அனுப்பி பறவையின் எச்சங்களை தேடி கொண்டு வர அனுப்பியது..

பெரு நாடு கேள்விப்பட்டு இருப்பீர்கள் தானே...

இந்நாட்டின் அருகே பல குட்டி தீவுகள் இருப்பதையும் அங்கே பல வருடங்களாக கடல் பறவைகள் வாழ்கின்றன என்பதையும் அறிந்து கொண்ட வணிக கப்பல்கள் அவைகளின் திசையை நோக்கி விரைந்தது.

இந்நிலையில் பெரு நாட்டின் அருகேயுள்ள குட்டி தீவில் ஒன்று தான் பாறை தீவு..

இந்த தீவில் மனித நடமாட்டமே பல ஆயிரம் வருடங்களாக இல்லை என்பதே ஒரு தனி சிறப்பு மனித நடமாட்டம் இல்லாத தீவில் பறவைகளின் இராஜ்ஜியம் தான்..

ஆகவே பல ஆயிரம் வருடங்களாக மண்ணுக்குள் புதைந்து கிடைக்கும் [புதையலான] பறவையின் எச்சங்களை தோண்டி வெட்டி எடுத்து கப்பலில் ஏற்றும் பனி தீவிரமானது..

சும்மா கிடையாது.. இதன் தீவிரத்தை அறிய ஒரு தகவலை சொல்லுகிறேன் பாருங்கள்..

உலகின் பணக்கார நாடுகள் ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 99 பிரமாண்ட வணிக கப்பல்கள் பெரு நாட்டை நோக்கி வந்ததாக வரலாறு உள்ளது எல்லாமும் பறவையின் எச்சங்களுக்காக தான்..

அப்போதே அமெரிக்கா 66 தீவுகளை கைப்பற்றி அது ஒருபக்கம் எச்சங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டது..

அதில் இன்றும் கூட ஏறக்குறைய 8 தீவுகள் அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது..

இங்கிலாந்தில் 1847 ம் ஆண்டு இறக்குமதியான பறவையின் எச்சத்தின் அளவு 2 லட்சத்தி இருவது ஆயிரம் டன்..

அவைகள் அனைத்தையும் அந்நாட்டு விவசாயிகளுக்கு வயலில் உரமாக இட கட்டாய சட்டம் பிறப்பித்தது அரசு..

அடிமை முறைகள் அக்காலத்தில் ஒழித்து இருந்த சமயமானதால் வேளைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது அதாவது பறவைகளின் எச்சங்கள் பலநூறு வருடம் ஒரே இடத்தில இருப்பதால் சின்ன சின்ன பாறைகள் போன்று அழுத்தமாக இருக்கும் உடைத்து எடுப்பது சாதாரணகாரியம் அல்லவே..

இதற்காக சீனா தேசத்தில் இருந்து தொழிலார்கள் கொண்டு வரப்பட்டு ஏறக்குறைய அடிமை போன்றே வேலை வாங்கப்பட்டார்கள்..

வேறொரு நாட்டிற்கு சொந்தமான வளங்களை வேறொரு நாட்டு தொழிளார்களை வைத்து தமது நாட்டிற்கு திருடிய கும்பல்கள் தான் இன்றைய வல்லரசுகள்..

பறவையின் எச்சங்கள் வெறும் நைட்ரைட் தரக்கூடியது மட்டுமல்லவே இதில் இன்னொரு பெரிய பிரச்சனையும் வந்தது அது என்ன தெரியுமா ?

DND என்ற வெடிபொருளுக்கும் நைட்ரேட் தேவை அப்போ இந்த பறவையின் எச்சங்கள் புதையல் தானே பணக்கார நாடுகளுக்கு..

இதன் முடிவு எங்கே போனது என்று அடுத்த பதிவில் கூறுகிறேன்..

நீங்கள் நம்புவீர்களா ? பறவையின் எச்சத்திற்காக ஒரு பெரும் போரே நிகழ்ந்தது.. அடுத்த பதிவில் கூறுகிறேன்...

பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதம் புரிந்ததா...?


இதுதான் இங்கு நடக்கிறது...


அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது..

அந்த முடிவை மாற்ற வேண்டுமெனில் நம்மில் இருந்து மாற்றம் வர வேண்டும்..

அந்த மாற்றம் ஒருமித்த கருத்துக்களால் கட்டமைக்க வேண்டும்...

நேற்றும் துப்பாக்கிச் சூடு நடந்து, ஒருவர் இறந்துள்ளார். நிலைமை சீரடையவில்லை...


தூத்துக்குடியில் உணவும், குடிநீரும் இல்லாமல் அங்கே சென்ற பத்திரிக்கையாளர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

கன்னியாக்குமரியில் உள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இணையம் இல்லாததால் க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாமலும், ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமலும் தவித்துக் கொண்டு உள்ளனர்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று நடந்த அவர் கட்சிக்காரரின் மகளின் பூப்பூ நீராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்...

அறிவை ஆயுதமாக்கு...


முள்ளங்கியின் நன்மைகள்....


நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு வெப்பம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு.

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துக்களும் (vitamin) தாது உப்புக்களும் உள்ளன.

முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

முள்ளங்கியின் நறுமணம்...

முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும்.

சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், எரியம் (phosphorus) அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளின் தடிமன் போக்கும் பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் தடிமன், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.

இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் சிறுநீர் பிரச்சினை தீரும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.

சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது.

முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது.

அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது...

தூத்துக்குடியில் அதிமுக வினர் ரவுடித்தனம்...


விலிகளை கொடுத்தவனுக்கு வலியை திருப்பி கொடுத்தால் மட்டுமே அவன் உணருவான்... அதுவரை நிறத்த மாட்டான்...

நாளை சென்னையில் என்பது..?


நிதர்சனம்.. ஆனால்

இன்று தூத்துக்குடியை நீங்கள் காப்பாற்றினால் மட்டுமே,

நாளை என்பது இல்லாமல் போகும்...

விழித்துக்கொள் தமிழினமே...


இனி ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கம் செய்யவே முடியாது - தீர்ப்பு பற்றிய பாத்திமா பாபு, துரை.நாகராஜன்...


ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பேர் தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்றனர். காவல்துறையினர் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 'ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்குத் தடை' விதித்துள்ளது.

அத்தீர்ப்பில் `தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் 2-வது யூனிட் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடைவிதிக்கிறது. ஸ்டெர்லைட் தனது விரிவாக்கத்தைப் புதிய சிப்காட்டில் தொடங்குவதால் நிச்சயம் மக்களுடைய கருத்துகளைக் கேட்க வேண்டும். சுற்றுச்சூழல் தொடர்பாக தடையில்லாச் சான்று வழங்குவது குறித்து மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் 23-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக மத்திய அரசு நான்கு மாதங்களுக்குள் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும். அதுவரை எந்தவொரு கட்டுமானப் பணிகளும் தொடரக் கூடாது. இதுகுறித்து ஜூன் 13-ம் தேதிக்குள் மத்திய அரசு பதில்மனுத்தாக்கல் செய்ய வேண்டும்" என அன்றைய தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்...

மே-22.. பாஜக - அதிமுக இனைந்து நடத்திய தமிழினப் படுகொலை....


சென்னை தான் தீர்வு என்று கூறவில்லை...


ஆனால் அந்த தீர்வுக்கான அடித்தளத்தை வலிமையாக கட்டமைக்க சென்னை போன்ற நகரத்தால் மட்டுமே முடியும் என்பது நிதர்சனம்...

தூத்துக்குடியில் அரச பயங்கிரவாதம்...


பாஜக பினாமி கிரிஜா வைத்தியநாதன்...


அனைத்துமே சுயநலமும், பேராசையும் கொண்ட மனிதனால் உருவாக்கப்பட்டதே...


தமிழகத்தின் போபால் ஸ்டெர்லைட்...


எண்பது விதமான குறைபாடுகள் இருக்கிறது உடனடியாக நிறுவனத்தை இழுத்து மூடுங்கள் என பல முறை சூழலியல் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்த போதும் மத்திய பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் அந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுவிட்டு நிறுவனத்தை தொடர்ந்து இயங்க அனுமதி அளித்தார்,

விளைவு யூனியன் கார்பைடு என்கிற அந்த நிறுவனம் வெடித்தது நச்சு வாயு ஊர் முழுக்க பரவி பல்லாயிரம் பேரை பலிகொண்டது, இதுவரை இறந்தவர்களுக்கு நீதியும் இல்லை இழப்பீடும் இல்லை, நிறுவன முதலாளி பால் ஆண்டர்சனை தன் வீட்டில் ஒரு நாள் பாதுகாப்பாக தங்க வைத்து தனி விமானத்தில் தப்ப வைத்தார் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, அரசு எப்போதும் முதலாளிகளின் பக்கம் நின்று அவர்களை பாதுகாக்கும், பல்லாயிரம் தன் சொந்த நாட்டு மக்கள் இறந்த போதும் ராஜீவ் காந்தி ஆண்டர்சனை தான் காப்பாற்ற துடித்தார்...

அதே நிலை தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் க்கும் இதுநாள் வரை பல உயிர்களை பலி எடுத்த ஸ்டெர்லைட் ஒரு நாள் படுகோரமான விபத்தை சந்தித்து பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கலாம் அந்த பேரழிவை தடுக்க இன்று இருபதுக்கும் மேற்பட்ட மண்ணின் மக்கள் தன் இன்னுயிரை தந்து களத்தில் மடிந்து போயினர் தங்களின் போராட்டத்தை கொச்சை படுத்துகிறவர்களுக்கும் சேர்த்தே அவர்கள் செத்துப் போனார்கள்,

அவர்களின் ஈகம் வீண் போகாது ஸ்டெர்லைட் ஒருநாள் மூடப்படும், அதுவரை இழந்த அந்த உயிர்களை போற்றாவிடினும் தூற்றாமலாவது இருங்கள்.....

சாகர்மாலா திட்டமும் அரசின் பயங்கிரவாதமும்...


விழித்துக்கொள் தமிழா...


தமிழன் என்ன பாவம் செய்தான் என்று தெரியல நீயெல்லாம் முதலமைச்சரான இருக்கவேண்டிய கொடுமை....


நீ சரியான ஆம்பளையா இருந்தால் தூத்துக்குடி போடா.... அப்புறம் தெரியும் யார் விஷமிகள் என்று...

ஸ்டெர்லைட் எதிராக பாம்பன் மக்களின் போராட்டம் ஆரம்பம்...


கர்நாடகத்தில் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம்...


கர்நாடகா மாநில சுவராஜ் இந்தியா கட்சி மற்றும் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் சார்பில் தர்சன் புட்டனையா தலைமையில் ஸ்டெர்லைட் படுகொலை குறித்த போராட்டம்..

நன்றி சகோதரர்களே...

ஸ்டெர்லைட் வேதாந்தா பங்குகள் வீழ்ச்சி...


ஸ்டெர்லைட் - மகிழ்ச்சி செய்தி...


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்இணைப்பைத் துண்டித்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஆலைக்கான மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆலைக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இது போராட்டக்காரர்களுக்கு முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது...

சிந்தித்து செயல்படு தமிழினமே...


ஸ்டெர்லைட்க்கு ஆதரவாக செய்திகளை வெளியிடும் மக்கள் விரோத தினத்தந்தி, தினமலர் எரிப்பு...


எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் கொங்கு மண்டலத்துக்கு சேலம் எட்டு வழிச்சாலை விமான நிலைய விரிவாக்கம் .. Gail  pipeline போன்றவற்றையும்.. 

பன்னீருக்கு ஆதயவாக இருக்கும் தெற்கு மற்றும் கிழக்கு மண்டல சமூகத்துக்கு நியூட்ரினோ மீத்தேன் போன்றவற்றையும் பரிசாக வழங்குவார்கள் எப்படி வசதி...

எனவே சாதிய ரீதியாக நீங்கள் ஆதரிக்க தொடங்கினால் அந்த கத்தி நாளைக்கு உங்கள் கழுத்துக்கு வரும்..

எனவே தூத்துக்குடி பிரச்சினை நமக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்காமல் அனைத்து தரப்பு மக்களும் களத்தில் இறங்க வேண்டும்...

அரசாங்கத்தை நம்பாதே...


போலீஸ் பிடித்துச்சென்ற 122 இளைஞர்கள் எங்கே? - அதிர்ச்சியில் தூத்துக்குடி பெற்றோர்...


தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாள்களாக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 122 இளைஞர்களைக் காணவில்லை என அவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர்...

விழித்துக்கொள் தமிழினமே...


இதில் ஒன்றைக்கூட செய்யவில்லையே அரசின் கைக்கூலிகளே...


அப்பாவி மக்களிடம் காட்டும் வீரத்தை அரசியல் அடிமைகள் மீதோ... மதவாத ஆட்சியாளர்கள் மீதோ காட்ட தைரியம் இருக்கிறதா?

பாஜக - அதிமுகவின் அரசு பயங்கிரவாதம் ஆரம்பம்....


பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்குகள்...


கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்குதான். ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டு விடாமல் இருக்கும்.

அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள்.

இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள்.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், சுவாசகாசம் (asthma) முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.

பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது.

கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கின் 100 கிராம் எடையில், புரதம் 1.2 கிராமும், தாது உப்புகள் 0.8 கிராமும், மாவுச்சத்து 18.4 கிராமும், வைட்டமின் ஏ 434 சர்வதேச அலகும், ரைபோஃபிளவின் 0.07 மி.கிராமும், கால்சியம் 50 மி.கிராமும், இரும்பு 0.6 மி.கிராமும், தயாமின் 0.06 மி.கிராமும், நிகோடினிக் 0.07மி.கிராமும் உள்ளன. கிடைக்கும் கலோரி அளவு 79 ஆகும்.

உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.

ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, தெற்கு பசிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது. இலட்சகணக்கான ஆப்பிரிக்கர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது.

இதில் உள்ள சுண்ணாம்பு சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

பஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.

‘பி’ தொகுதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது.

தென்னமெரிக்கர்கள் இதைக் கால்நடைகளுக்கும், உணவாகக் கொடுக்கின்றனர். இதனால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன...

அனைத்து மீனவ அமைப்புகளும் ஒன்றிணையுங்கள்...


நோய்களும் உணர்வுகளும்...


நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம். இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும்(சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும்(அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும்(தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள். இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள். இவை அனைத்திற்கும் ஹிப்னாடிசத்தில் தீர்வு உண்டு...

தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் நுழைந்துள்ளார்கள் என்று பாஜக பொன். ராதாகிருஷ்னன் கூறும் பொழுது புரியவில்லை...


இப்பொழுது புரிகிறது... மாவேயிஸ்டுகள் மக்களோடு மக்களாக இல்லை..

அவர்கள் அனைவரும் ஆட்சி அதிகாரங்களில் இருக்கிறார்கள்...

இறப்பு என்பது பயப்பட வேண்டிய காரியம் அல்ல...


இந்த உடலை மாற்ற கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம்.

உடலை விட்டு உயிர் பிரிந்தால் ஒரு பரிபூரண அமைதி கிடைக்கும்.

நல்ல மனிதர்களுக்கு மட்டும்.

தவறு செய்பவர்களுக்கு நரக வேதனையாய் இருக்கும்...

விரைவில் தமிழகம் முழுவதும் இதே நிலை தான்.. விழித்துக்கொள் தமிழினமே...


ஜெர்மனி To தஞ்சை...


ஜெர்மனியின் மேற்கே பிராங்கோயன் என்ற இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்கள் ஜெர்மன் மேற்கு பகுதியில் பேசிய மொழியான டச்சு என்ற மொழியை தான் பேசி வந்தனர்.

இம்மக்கள் ஜெர்மன் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து 1581 இல் இவர்களுடைய மொழியான டச்சு மொழி அரசு ஏற்படுத்தப்பட்டது.

இவர்களுக்கென்று ஹாலந்து என்ற நாடும் உருவானது...

பின்னர் மேலே குறிப்பிட்ட அரசு தான் கிழக்கிந்திய கம்பெனியின்
நிறுவனத்தார் .

அதற்கு முன்பே திருமலை நாயக்கர் ஆட்சியில் தமிழகத்தில் விவசாய பகுதியான தஞ்சை நாகை சுற்று வட்டாரத்தில் தங்களது சுரண்டல்  வியாபாரத்தை தொடங்கி விட்டனர்..

இவர்களை நமது தமிழர்கள் ஒல்லாந்தர்கள் என்று அழைத்து வந்தனர்..

இதற்கு காரணம். இவர்கள்  பூர்வீகம்  ஜெர்மன்.. டச்சு காரர்கள் என்றும் இவர்களை அழைப்பார்கள்..

அதே போன்று ஹாலந்து நாட்டவர்களாக இருப்பதால் ஹாலந்துகாரர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

ஹோலந்தை தான்  ஒல்லாந்தர் என்று தமிழர்கள் அழைத்தனர்.

ஒல்லாந்தர் தான் ஆலந்தூர் என்றானது.

இன்று இருக்க கூடிய ஆலந்தூர் மற்றும்  ஆலந்தூரார் என்பதெல்லாம் இவர்களுடைய பெயரில் இருக்ககூடிய பெயர் தான்....

எங்கே ஆரம்பித்து எங்கே முடித்துள்ளார்கள் பாருங்கள்.

Holland + ollanthar =ஆலந்தூர்...

இந்தியா மறந்த பேரழிவு...


பாரம்பர்யம் அழிப்பு நடவடிக்கை...


பாரம்பர்யம் இல்லாத திடீர் பணக்கார நாட்டில் இருந்து கொண்டு பெப்சி, kfc , மெக்டொனல்ஸ் போன்ற சத்துக்கள் இல்லாத உணவை தமிழகம் வரையில் விற்க முடிகிறது என்றால் அதன் அர்த்தம் என்ன ?

அரசியல் வாதிகள் மட்டும் இல்லை என்றால் இவர்களை போன்ற கார்ப்பரேட் கழிவுகளுக்கு இங்கு வேலையே இல்லை...

உலகிற்கே சத்தான உணவுகளை விளைவித்து வியாபாரம் பண்ணியது நாம் தான்..

நான் ஏற்கனவே கூறியது போன்று நெல்லு கம்பு கேழ்வரகு திப்பிலி கோதுமை பருப்புகள் மிளகு, போன்ற இயற்கை சத்தான உணவு பொருட்களை கடந்த பல ஆயிரம் வருடங்களுக்காக அண்டை நாடுகளுக்கும் அரபு நாடுகளுக்கும் நாம் கொடுத்து..

அவர்களிடம் சந்தனம், வாசனை திரவியம், பழங்கள் போன்றவைகளை பண்டமாற்று அடிப்படையில் வியாபாரம் செய்து தன் மக்களையும் தன் நாட்டையும் வளப்படுத்தி வந்தோம்..

இன்றும் கூட அதே பாரம்பர்ய முறை வியாபாரம் அனைவருக்குமே தெரியும்..

ஏன் நம்மவர்கள் கவனிக்கப்படாமல் கிடக்கிறார்கள் ?

இதற்க்கு பதில் அரசியல் வாதிகள் தான்.

கொடுக்க வேண்டியவனுக்கு கொடுத்தால் ஒரு பாரம்பர்ய வியாபாரத்தை கூட இல்லாமல் ஆக்க முடியும் என்பதற்கு மிகப்பெரிய உதாரண நாடு இந்தியா...

எங்கிருந்தோ வந்தவன் இங்கு கடை விரித்து வியாபாரம் செய்கிறான் [கோக் , பெப்சி, kfc ,] இங்கிருக்கிறவன் செத்து செத்து பிழைக்கிறான்...

எல்லாமும் இந்த கேடுகெட்ட இந்திய அரசியல் நாய்களால் தான்..

அவனுங்க வயிற்றையும் அவனுக குடும்பத்தார் சொகுசாக வளம் வரவும் நாம் நம் [எதிர்கால] பிள்ளைகளை
தியாகம் செய்து கொண்டு உள்ளோம்...

ஓட்டுப் போடும் போது இவனுங்க பல்லை இளித்துக் கொண்டு பணத்தை காட்டியவுடன் பையித்தியக்காரனுக்கு பாம்பு என்ற பயமா இருக்க போகிறது...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையில் காயிதே மில்லத்...


பெருமகனார் காயிதே மில்லத் 24.12.1955 அன்று மக்களவையில் ஆற்றிய உரை...

நான் ஒரு தமிழன். எனது தாய்மொழி தமிழ்.

தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை. அதே போல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை.

தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை.
அப்பகுதியில் தமிழ்மொழி பேசுபவர்களே பெரும்பான்மை.

ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது.

தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும், வந்து போகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள்.

கடந்த தேர்தலின் போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்து போகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி.
தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது.
தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள்.

எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்..

இத்தனைக்கும் அவர் அப்போது 'அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்' தலைவர்.

அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இசுலாமியர்களின் தலைவர்.
 
இதையெல்லாம் மீறி தன் இனத்திற்காகவும் மொழிக்காகவும் குரல்கொடுத்த தூய தமிழன் தான் காயிதே மில்லத் எனும் முகமது இஸ்மாயில்.

அதே போல் இந்தி தேசியமொழி என்றால் காகத்தை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டியது தானே? என்று கூறியவர் அண்ணாதுரை கிடையாது காயிதே மில்லத் அவர்கள் தான்...

பாலூட்டிகளைத் தெரியுமா?


உலகில் 4 ஆயிரம் பாலூட்டி வகைகள் உள்ளன. பாலூட்டிகளில் நிலத்தில் வாழ்பவையும் உண்டு. நீரில் வாழ்பவையும் உண்டு. பாலூட்டிகளுக்கு பொதுவான சில பண்புகள் உள்ளன.

பாலூட்டிகள் அனைத்தும் முதுகெலும்பு உயிரிகள்.

வெப்பரத்தப் பிராணிகள். பூமியில் உள்ள எந்த தட்பவெப்பத்துக்கும் ஏற்ப தங்கள் உடலை அவை தகவமைத்துக்கொள்ளும் சக்தி படைத்தவை.

பாலூட்டிகளுக்கு உடலில் ரோமம் காணப்படும்.

பாலுட்டிகள் என்ற பெயருக்குத் தகுந்தாற்போல, குட்டிகளுக்குத் தரும் பாலை தமது உடம்பிலேயே உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. அத்துடன் குட்டிகள் வளரும்போது, உயிர் வாழ்வதற்கு ஏற்ற திறன்களையும் பாலூட்டிகள் பயிற்றுவிக்கும்.

உலகின் சிறிய பாலூட்டி - பம்பிள்பீ வௌவால், ஒரு அங்குல நீளமும்,
2 கிராம் எடையும் கொண்டது.
தாய்லாந்து மற்றும் பர்மாவில் உள்ள சுண்ணாம்புக் குகைகளில் வாழ்கிறது. எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடியது.

பெரிய பாலூட்டி - நீலத்திமிங்கலம்,
உலகிலேயே பெரிய பாலூட்டி மற்றும் விலங்கினம். 110 முதல் 176 டன் எடை கொண்ட உயிரினம். 20 முதல் 30 மீட்டர் நீளமுடையது. ஒரு பேஸ்கட் பால் மைதானத்தின் அளவு பெரிய உயிரினம் நீலத்திமிங்கலம்...

நம்ப முடியாத உண்மைகள்...


பூமியின் (அ)பூர்வ கதை - 5...


பூமியின் 460 கோடி ஆண்டு வரலாற்றில் கோடி கணக்கான சம்பவங்கள் நிகழ்வுகள் நிரம்பி கிடக்கின்றன.

ஆனால் அதில் மிக முக்கியமான விரல் விட்டு என்ன கூடிய நிகழ்வில் ஒன்று பூமியின் முதல் உயிரினம் உண்டான நிகழ்வு.

பூமியில் முதல் உயிரினம் எப்படி வந்தது என்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பல கோட்பாடுகள் உண்டு. அது பூமியில் தோன்றவே இல்லை என்று சொல்லும் கோட்பாடுகளும் உண்டு. இந்த கோட்பாடு படி உயிரினங்கள் உண்டாக காரணமான அடிப்படை உயிர் துகள்கள் பூமிக்கு ஆஸ்ட்ராய்ட் கற்கள் மூலம் வந்து சேர்ந்து இங்கு பரவியது என்று சொல்கிறார்கள்.

ஏலியன்கள் வந்து நம்மை இங்கு உண்டாக்கி விட்டு விட்டு சென்றார்கள் என்ற கோட்பாடும் கூட சொல்ல படுவது  உண்டு.

பல வகை தியாரிகளில் எது உண்மை என்று யாராலும் மிக சரியாக இன்று வரை சொல்ல முடிய வில்லை என்றாலும்..

பொதுவாக இன்றைய விஞ்ஞாண உலகம் ஏற்று கொண்டுள்ள கோட்பாடை அடிப்படையாக கொண்டு நான் சொல்கிறேன்.

அந்த கோட்பாடு பெயர் Primordial soup  theory....

இந்த கோட்பாடு சொல்ல வருவது இது தான்....

முதல் உயிரி காலகட்டமான இன்றைலிருந்து 380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் வளிமண்டலத்தில் பிராணவாயு இருந்து இருக்க வில்லை. அங்கே இருந்தது எல்லாம் மீத்தேன், நீராவி, ஹைட்ரஜன்,மற்றும் அமோனியா தான்.

இந்த வாயுக்களின் கலவையில் நைட்ரஜன் மற்றும் உயிர்களுக்கு அடிபட யான கார்பன் கலந்தே இருந்தது.

இவைகளை ஒரு குறிப்பிட்ட வகையில் கலந்து வரிசைப்படுத்தி மாற்றி அமைத்து கலக்கினால் இவைகளால்
அமினோ அமிலங்களை உண்டு பண்ண முடியும். இந்த அமினோக்கள் தான் செல்களில் புரோட்டீன் என்ற ஒன்றை உற்பத்தி செய்ய கூடிய புள்ளி. அந்த புரோட்டீன் என்பது என்ன ? நாம் பார்க்கும் உயிரினங்களின் உடல்கள் இந்த புரோட்டீங்களால் ஆனது தான் அதாவது புரொட்டினால் உடலை உண்டு பண்ண முடியும்.

எனவே மேற்கண்ட கலவைகள் ஒன்று சேர்ந்து அமினோ அமிலங்கள் கொண்ட சூப் ஒன்றை உற்பத்தி செய்தது. அந்த உயிரியல் சூப் க்கு பெயர் தான் பிரிமார்டியல் சூப்  மேற்கண்ட வாயு கலவைகள் ஒன்று சேர்ந்தாலே இப்படி ஒரு சூப் உண்டாகி விடுமா அதில் அமினோ.... ஆர். என் .ஏ..மற்றும் டி. என். ஏ  கள் கிடைத்து விடுமா என்றால் அப்படி இல்லை.

அந்த சூப் கலவை மிக மிக மிக தற்செயலாக உண்டான தனி தன்மையான மிக மிக அரிதான ஒரு தற்செயல் கலவை என்கிறார்கள்.

அவைகள் மிக சரியாக கலந்து உயிரியல் சூப்பை உண்டாகியது மிக மிக தற்செயலானது என்கிறார்கள். அது உருவாக சரியான சுற்று சூழல் சரியான வளிமண்டல அழுத்தம் சரியான வெப்பம்... போன்ற சங்கதிகளை மிக சரியாக கலந்து இருக்க வேண்டும். ஆனால் இவைகள் மிக மிக தற்செயலாக உண்டான ஒன்று என்கிறார்கள்.

அப்படி நடக்க வாய்ப்பு சதவீதம் என்று பார்த்தால் பல கோடி கோடி யில் ஒன்று என்கிறார்கள்.

ஒரு உதாரணத்திற்கு ஒரு ஓவியன் வரையும் ஒரு பெண்ணின் ஓவியத்தை எடுத்து கொள்ளுங்கள் . அந்த ஓவியம் எண்பது என்ன .அது காகிதத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட அளவு வண்ணங்களை பூசுதல் அல்லவா... அதாவது காகிதத்தில் ஆங்காங்கே சில வண்ணங்கள் வைக்க பட்டுள்ளது.

ஆனால் எது எங்கே இருக்க வேண்டும் என மிக சரியான இடத்தில் வண்ணங்கள் தொட்டு வைக்க பட்டுள்ளது அல்லவா. ஒரு பேச்சுக்கு வண்ண குவலையை நீங்கள் ஒரு வெள்ளை தாளின் மேல் வீசி எறிகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் இப்போதும் கூட  வண்ணங்கள் ஆங்காங்கே பட்டு கொண்டி தான் இருக்கும் ஆனால் அதில் ஓவியம் ஏதும் இருக்காது. ஒரு பேச்சுக்கு நீங்கள் வீசிய வண்ண கலவை மிக மிக தற்செயலாக முன்பு பார்த்த பெண் ஓவியம் போன்றே அமையும் படி வண்ணங்கள் அந்த தாளில் அங்கங்கே சரியான இடத்தில் சிதர்வுற்று இருந்தால் எப்படி இருக்கும்..?

அப்படி ஒரு தற்செயலுக்கு  கிட்ட தட்ட வாய்ப்பே இல்லை எனும் அளவு மிக மிக மிக மிக குறைந்த வாய்ப்பே  உள்ளது அல்லவா அப்படி ஒரு குறைந்த வாய்ப்பில் உண்டானது தான் அந்த சூப்...

சரி சூப் ரெடி இதில் உயிரிகள் வந்து விடுமா? என்றால் இந்த உயிரியல் சூப் வெறும் உடல் மட்டும் தான் அதில் உயிர் எனும் ஆற்றல் உண்டானது அதில் மின்னல் பாய்ந்து தான் என்கிறார்கள். (அடுத்த தற்செயல்).

அப்படி மின்னலால் சக்தி ஊட்ட பட்ட சூப் தனக்குள் ப்ரோகிரியாடிக் தன்மை கொண்ட துகளாகவும் பிறகு ஒரே ஒரு செல் கொண்ட ஒரு ஒற்றை உயிரினமாக... பாக்டிரியா வாக முதல் முதலாக வடிவம் எடுத்தது.  அந்த பாக்டிரியாதான் ஒட்டு மொத்த உலக உயிரினங்களில் கொள்ளு கொள்ளு கொள்ளு தாத்தா.

உயிர் தோற்றம் பற்றிய பல்வேறு மாற்று கோட்பாடுகள் கொண்டவர்கள் கூட சில விஷயங்களில் மாற்று கருத்து இன்றி ஒன்றி போகிறார்கள். உதாரணம் முதல் உயிரினம் உண்டானது நிலத்தில் அல்ல நீரில் தான். முதல் உயிரினமாக முதல் முதலில் உண்டானது ஒரு செல் உயிரினங்களான பாக்டிரியா தான் போன்று.....

அந்த பாக்டிரியாகள் செய்த முதல் நல்ல காரியம் அவைகள் சூரிய ஆற்றலை நேருக்கு நேர் உள்ளே இழுத்து கொண்டு ஒளிச்சேர்க்கை செய்ததும் அந்த நிகழ்வில் ஆக்சிஜனை வெளியே விட்டதும் தான்.

படி படியாக ஆக்சிஜனை வளிமண்டலத்தில் பெருக்கும் வேலையை அவைகள் செய்தன.

உயிருள்ளவை உயிரற்றவை என்று பொருட்களை நாம் பிரிக்க உதவும் மிக பெரிய அளவுகோல் எது தெரியுமா... உயிருள்ளவை காண இலக்கணம் எது தெரியுமா? எதன் செல்கள் தன்னை போலவே பிரதி எடுக்கும் தன்மை வாய்ந்ததோ அப்படி பிரதி எடுக்கும் போது மூல உயிரின் தகவலை கடத்த முடிகிறதோ அவைகள் தான் உயிர்கள்.

செல் களில் உள்ள RNA செய்யும் வேலை பிரதி எடுத்தல் தான். DNA செய்யும் வேளை அந்த தகவலை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது தான்.

இதில் செல் பிரிதலில் தன்னை போலவே பிரதி எடுப்பதில் சிறு பிழை ஏற்பட்டு அடுத்த தலைமுறை கொஞ்சம் மாற்றங்களை சந்தித்து வேறு உயிரினமாக பரினமிக்க முடிவதன் பெயர் தான் ஜீன் மியூடியேஷன்.
இன்று ஒரு செல் உயிரியிலிருந்து மரம் செடி கொடி...ஊர்வன பறப்பன... பாலூட்டி... பூச்சி புழு.. குருவி டைனோசர்.. புல்.. பூண்டு.. குரங்கு மனிதன்.. மீன்.. நீ.. நான்.. என்று பல கோடி கணக்கில் வகை வகையான உயிரினங்கள் பரினமிக்க காரணம் இந்த ஜீன் மியூடியேஷன் என படும் செல் பிரிதலில் ஏற்பட்ட தவறு தான். எனவே இதை மிக சரியாக ஏற்பட்ட 'தவறு ' என்று அழைக்கலாம்.

முதன் முதலில் கடலில் உண்டான ஆக்சிஜன் உடனே தப்பி சென்று வளிமண்டலத்தில் கலந்து விட வில்லை அதற்க்கு முன் அவை ஒரு விசித்திர காரியத்தை செய்தது. இன்று நாம் கட்டும் ராட்சத கட்டிடங்கள்... ரயில்கள்.. பாலங்கள் பெரிய பெரிய தொழிற்சாலைகள் இவைகள் எல்லாம் சாத்திய படுவது அந்த விசித்திர காரியத்தால் தான். அதாவது  பாக்டிரியா உண்டாக்கின ஆக்சிஜன் கடல் நீரில் எக்க சக்கமாக கலந்திருந்த ஒரு சமாச்சாரத்தால் ஈர்க்க பட்டது அந்த சமாச்சாரம் இரும்பு.

இரும்பும் ஆக்சிஜனும் சேர்ந்தால் என்ன நடக்கும் என்று நமக்கு தெரியும் துறு பிடித்தல் . அந்த துறு பிடித்தல் நிகழ்வில் கடல் நீரில் கலந்த மொத்த இரும்பும் பூமி படுக்கையில் இரும்பாக படிய தொடங்கியது. இந்த வேதி நிகழ்வு தொடர்ந்து பல காலத்திற்கு நிகழ்ந்து பின் ஒரு கட்டத்தில் இனி துறு பிடிக்க... வேதி வினை புரிய இரும்பு இல்லை என்ற நிலைக்கு வந்த பின் தான்..... ஆக்சிஜன் முதன் முறையாக தப்பி சென்று வளிமண்டலத்தில் கலந்தது.

இந்த நிகழ்வு பூமியின் சூழலை என்றென்றைக்குமாக வெகுவாக மாற்றி அமைத்தது.

அவை மாற்றி அமைத்த நிகழ்வுகள் செய்த மாற்றங்கள் மிக பிரமிப்பானவை.. மிக விசித்திரமானவை. பூமியின் மொத்த விளையாட்டை மாற்றி அமைந்தவை இந்த ஆக்சிஜன்.

அந்த விசித்திரங்கள் அடுத்த அத்தியாயத்தில்...

- பூமி இன்னும் சுழலும்.....