01/07/2017

சந்திர வழிபாடு - சூரிய வழிபாடு வித்தியாசம்...


வழிபாடு என்பது ஏதோ கையை கூப்பி சூடம் பத்தி கொளுத்தி கும்பிடுவது அல்ல...இந்த புரிதலுடன் அடுத்தகட்டம் நோக்கி நகரவேண்டும்.

சந்திர வழிபாடு - சந்திரனின் பரிமாணங்களான வளர்பிறை /தேற்பிறை/ அம்மாவாசை/ முழுநிலவு /மேல் நோக்கு நாள் /கீழ் நோக்கு நாள்/ திதிகள் ஆகியவற்றின் மூலம் இந்த உலகில் நிகழும் மாற்றங்களையும்... தனது உடலில் நிகழும் மாற்றங்களையும் கணித்து அதற்கேற்ப தனது வாழ்க்கையை அமைத்து வாழுதல் தான் சந்திரவழிபாடு...அதாவது சந்திரனின் வழியே பயணப்படு...

இந்த உலகத்தில் கிட்ட தட்ட 70 % நீர் உள்ளது.  முழுநிலவுநாளுக்கும் மறைநிலவுநாளுக்கும் ஒருவிதமான மாற்றங்களை நிலவு அந்த நீரில் ஏற்படுத்துகிறது ( கடல் அலைகள்)

அதே போல மனித உடலிலும் 70% நீர் அதனால் அதே மாற்றங்கள் மனித உடலிலும் நிகழும்.

மேலும் நிலவில் ஏற்படும் 27 நாள் சுழற்சி ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் நடைபெறுகிறது...

இவைகள் எல்லாம் எவ்வாறு நடக்கிறது என அறிந்த பழங்குடிகள் இறந்த உடலின் நினைவலைகளை இந்த நிலவு எப்படி பாதிக்கிறது எனவும் பார்த்தனர்.

அதாவது இங்கே உடலுடன் இருக்கும் சிந்தனை சக்தி புலன்உறுப்புகளால் சிதறுவதை கண்ட பழங்குடிகள் அம்மாவாசை அன்று உடல் இல்லாத இறந்தவர்களின் நினைவலைகள் வீரியம் கொள்ளுவதை கவனித்தான்

இறந்த முன்னோர்களை தனக்கு உதவி செய்யும்மாறு குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு உடலை வலைத்து(விரதம் இருந்து சுத்தமாக இருந்து) அதில் இறக்கி உடல் இல்லாத சிந்தனை ஒருங்கே பெற்ற உயிர்களிடம் அதற்கு தேவையான இரத்ததை கொடுத்து வாக்கு வாங்கி கொண்டான்.மேலும் உடல் இல்லாத உயிர் என்பதால் கடந்த காலத்தையும் பார்த்துவர கேட்டான்.  (இவைகள் ஒரு எண்ண அலைகள் பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும்).

அதாவது அவர்களுக்கு வேண்டியதை கொடுத்து தனக்கு தேவையானதை உடன்படிக்கை செய்து கொள்ளுதல் தான் குலதெய்வ வழிபாடு எனப்படும் முன்னோர் வழிபாடு.

2) சூரிய வழிபாடு - எந்த இடத்தில் இருந்தால் சூரியனை சரியாக கணிக்க முடியுமோ எந்த இடத்தில் சூரியஉச்சத்தை மிகதுல்லியமாக அறியமுடியுமோ அங்கே இருந்த ஒரு கூட்டம் தான் இந்த உலகத்தை ஆள துடித்தது. (இராசியில் சூரியன் உச்சதில் இருப்பவனால் தான் அரசபதவிக்கு வரமுடியும்.எந்த நிலத்தில் சூரியன் உச்சத்தை அடைக்கிறதோ அதில் இருக்கிறவனுக்கு தான் உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் என  தோன்றும்).

அவ்வாறு சூரியனை நன்கு அறிந்த அந்த கூட்டம் எல்லா மக்களும் இயல்பாக சந்திரனை வெறும் கண்ணால் பார்த்து அதன் நகர்வுகளுக்கு ஏற்ப செயல்களை செய்வது போல தன்னால் செய்ய முடியவில்லை என்பதை அறிந்து அதற்கு ஒரு தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்கிறார்கள் அதாவது.

நிலையான முக்கோணவடிவ ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் நிழல்களை பார்த்து சூரியனின் நகர்வுகளை வெறும் கண்ணில் கணித்தல்.

அது தான் உலகம் முழுக்க சொல்லப்படும்..

1) எகிப்து பிரமீடுகள் ( பெருமேடுகள் என்பதன் திரிபே)
2) மாயன் பெருமேடுகள்
3) ரோம் நகரின் விழுவன் குச்சிகள்
4) இந்தியாவின் கோபுர கோவில்கள்

அதன் பிறகு சூரியனின் ஒரு தன்மையை புரிந்துகொண்ட அவர்கள் அது இறந்த உடல்விட்ட உயிர்களை கட்டுவதை உணர்ந்துகொண்டனர்.

இதை தனக்கு தேவையான போது எல்லாம் எப்படி பயண்படுத்துவது என தேடியவர்கள் பெண்களின் பூப்புகுறுதியும் இந்த சூரியனும் ஒரே தன்மை கொண்டது என்பதை அறிந்தனர்.

இந்த பூப்புகுறுதியை பயண்படுத்த ஆரம்பித்தனர் (பூப்பு + சாண்டி - பூச்சாண்டி).

(துமிய குடுக்கி - சாண்டக்குடிக்கி - இயேசுவின் இரத்தம் ஜெயம் போன்றவை இவற்றுடன் தொடர்புடையதே).

உலகம் முழுக்க கண்ணிபெண்ணுக்கு குழந்தை பிறந்ததாகவும் அது அதீத ஆற்றலுடையது என்றும் பல்வேறு கதைகள் உள்ளது.

1) இயேசு கண்ணிக்கு முதலில் பிறக்கும் குழந்தை பூப்புகுறுதி தான்.அந்த பூப்புகுறுதி சூரியனுக்கு ஒப்பானது அது இறந்த முன்னோர்அலைகளை கட்டகூடியது.இந்த அடையாளங்கள் எல்லாமே மரபுவழி கடத்த இந்த கதை பயண்படுகிறது.

(இயேசு - 12 சீடர்கள்- சூரியன் - 12 இராசிகள்).

2) முருகன் - ஒரு பெண் கற்பம் அடையாமல் பிறந்த குழந்தை. அறுகோணமுக்கோணம் சின்னம் இது தாந்திரீக அடிப்படையில் உயிர்களை கட்டப்பயண்படும். இந்த முருகனை பற்றி பாடும்போது  (இதை கட்டு அதை கட்டு என்றே கந்தசஷ்டி கவசத்தில் பாடப்படும் இதைப்பாடினால் கட்டமுடியாது ஆனால் இது சூட்சுமமாக கடத்தகூடிய வார்த்தை. இதே திருமுருகாற்றுப்படை யில் முருகுவழிபாடு மலைவாழ்மக்கள் செய்வதாகவும் அதில் சேவலை ஒருவன் வேலில் பலிகொடுத்து இரத்ததை குடித்து குறிசொல்லுவான் அந்த பூசாரியின் பெயர் வேலன் என்றும் உள்ளது இதுவே தமிழர் வழிபாடு.

இந்த சூரியவழிபாடு செய்யும் கோபுர கோவில்களில் ஒரு இறந்த முன்னோர்அ
அலையை கும்பாபிஷேகம் என்ற பெயரில் கட்டி தனக்கு சாதகமாக வேலைவாங்குவார்கள். அதனால் தான் கும்பாபிஷேகம் முடித்த கோவிலிலோ அருகில் வீட்டிலோ பலிகொடுக்க கூடாது என்பர்.

சந்திரவழிபாட்டில் ஒவ்வொருவனுக்கும் தானே தனக்கு சாதகமாக வழிபாடு செய்து கொள்ள முடியும்.

ஆனால் சூரியவழிபாட்டில் மக்களுக்கு அது தெரியாது மக்கள் இந்த சூரியவழிபாட்டு அரச குடும்பத்தின் ஆட்களை தான் கடவுள் உருவங்களாக வணங்கி கொண்டு இருப்பார்கள்.

இதை எனது பதிவுகள் பல ஆதாரங்களுடன் நிறுவியுள்ளேன். சிவன் முருகன் பிள்ளையார் என அனைத்திற்கும் பின்னால் உள்ள உருவங்கள் அரச குடுபத்தின் உருவங்களே...

ஆனால் அந்த அரசகுடும்பம் உண்மையான சூரியவழிபாடு செய்கிறது. அதாவது தமிழர்களாகிய பழங்குடிகளும் உலகப்பழங்குடிகளும் கருப்புக்கு (அதாவது இறந்த முன்னோர் அலைகளுக்கு) தேவையான பலியை கொடுத்து தனக்கு தேவையானவற்றை செய்து கொள்கிறோம்.

உலகத்தை ஆளும் மன்னர்குடும்பம் ஒருவரை கொண்று அதே இடத்தில் பூப்புகுறுதியை வைத்து கட்டி தனக்கு சாதகமாக செயல்பட வைக்கிறது.

ஆனால் நீங்களோ இரண்டையுமே செய்யாமல் முட்டாளாக அரச குடும்த்தானின் உருவங்களை உங்கள் நாட்டுபுற கதைகளுடன் சேர்த்து சொன்ன ஒரே காரணத்திற்காக அவனது சிலையை கழுவிகுடித்து அவனது காலில் விழுந்து வருகிறீர்கள்...

என்னடா கும்பாபிஷேகம் நடக்கும் போதும் பருந்து சுத்துது ஒருவர் இறந்தாலும் பருந்து சுத்துது. இரண்டுக்கும் செய்யுற சடங்கு ஒரே மாதிரி இருக்கு. என்னடா இறந்த உடலையும் மூனுமுறை சுத்திவரோம் கருவரையையும் மூனுமுறை சுத்திவரோம். ஏன் பலிகொடுக்க கூடாதுனு சொல்லுரானு எந்த கேள்வியுமே கேட்காமல் வணங்கி வரும் அடிமைகூட்டமாக மாறிபோய் விட்டாயே...

உன் குலதெய்வங்களாகிய உனது முன்னோர் உனது பலிக்காக காத்து இருக்கிறார்கள்... திரும்பு உன் பாதைக்கு... இன்னும் நான் பெருமைகளுடன் உன்டான பிழைப்புகளுக்காக தான் வாழ்வேன் என்றால் உன் அழிவை தடுக்கமுடியாது.

இந்த 13 இலுமினாட்டி என சொல்லும் வணிககூலிகளின் தலைமை இந்த அரச குடும்பம் தான் அது தனது முகத்தை காட்டும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை.

இதை எல்லாம் நீ அறிந்துகொள்ள கூடாது என்பதற்காக தான் அத்தனை மதப்பிரச்சாரங்கள்..

ஆதியில் இருந்து..

ஆசீவகம் - சமணம் - அருகம் - பெளத்தம் - சைவம் - வைணவம் என இந்த குலதெய்வ வழிபாடுக்கு எதிராக சைவகருத்தியலை பரப்ப முனைந்த அத்தனை கருத்தியலையும் உடைத்து தற்போது வரை இதை கடத்தி வந்து எங்கள் தலைமுறைக்கு சேர்த்த எங்கள் இனமுன்னோர்களுக்கு நான் அடிபணிந்து வணங்குகிறேன்.

இப்போதும் இதை திசை திருப்ப ( சிறுதெய்வம் காவல்தெய்வம் துணை தெய்வம் கோபுரகோவில் என்பது வளர்ச்சி அது இது என என்னொன்னமோ சொல்லுவான் ஏன் ஒருவன் கருப்பை ராமனின் மகன் என்றான். குலதெய்வம் பயத்தின் வெளிபாடு என்றான். சைவமே இயற்கை என்றான் எல்லாவற்றிற்குமான பதில் என்னிடம் உள்ளது அதை தனிபதிவாக இடுகிறேன்).

நீங்கள் எப்படி உங்கள் முன்னோர் காப்பாற்றி வந்து கையளித்து போன எதிரிக்கு எதிரான ஆயுதத்தை எடுக்க போகிறீர்களா?  இல்லை அரச குடும்பத்தின் உறுப்பினர் உருவங்களை கழுவிக்குடிக்க போகிறீர்களா?

தமிழர் பெருமைகள் தான் கோபுரகோவில் என்போர் தனித்து செல்லுங்கள் உங்களது முன்னோர்களே உங்களை காரிஉமிழ்வார்கள்..

நீங்கள் வீழ்வதை என் கண் பார்க்கும்...
நாங்கள் எதிரியை அடிப்பதை உங்கள் கண்கள் காணும்...

காவிரி மேலாண்மை வாரியம் ஒரு மாதத்திற்குள் அமைக்கப்படும் என அறிவித்தால், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு - பாமக நிறுவனர் ராமதாஸ் நிபந்தனை...


கோரிக்கையை ஏற்க மறுத்தால், குடியரசுத் தலைவர் தேர்தலை பாமக புறக்கணிக்கும்.

வரவேற்கப்பட வேண்டிய நல்ல முடிவு...

தாலி தமிழர்களின் பண்பாடு...


தாலி கட்டுவது தமிழ் இந்துக்களின் வழக்கம் என்று விக்கிபீடீயாவில் எழுதப்பட்டுள்ளது. இதுவே பெரும்பாலானவர்களுடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது.

ஆனால், திராவிடர்கள் அனைவரிடமும் தாலிகட்டும் வழக்கம் இருக்கிறதா?

தமிழரல்லாத திராவிட இந்துக்கள் அனைவரிடமும் இப்பழக்கம் இல்லை என்பதை நான் அறிவேன்.

உதாரணமாக, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநில திராவிடர் இந்துகள் பெரும்பாலும் ஐம்படைத்தாலி எனும் பாரம்பரியம் இல்லாதவர்கள். அதே சமயம் அவர்கள் யாருடன் வாழ நினைக்கிறார்களோ அவர்களுடன் இனைந்து வாழ்வார்கள். சரி, திராவிடர்களை விட்டுவிடுவோம்.

ஆரியர்கள் அனைவருமே தாலிகட்டும் வழக்கம் உடையவர்களா? இவர்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ளனர். ஆனால், தமிழர் கலாச்சாரத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஆரியர்கள் மட்டுமே இந்த வழக்கத்தை மதித்து பின்பற்றுகிறார்கள்.

தமிழருடைய பாரம்பரிய வழக்கத்தை திராவிடர்களுடையது என்றும் இந்து மதத்திற்கு சொந்தமானது என்றும் மாறி மாறி சொல்லிக்கொண்டிருப்பதன் நோக்கம் என்ன? (ஏற்கெனவே அறுத்தது போதாதா?)

தாலிகட்டுவது தமிழர் பண்பாடா? தருவிக்கப்பட்டதா?

திரு.ஜெயமோகன்,

"தாலம் என்றால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இலை என்றுதான் முதற் பொருள்.

ஆனால் வடமொழியில் அதற்கு வேர்ச்சொல் இல்லை.வேர்ச்சொல் இருப்பது தமிழில். ஆகவே அது இங்கிருந்துபோன சொல்.

‘தால்’ என்றால் இலை என்பதுடன் நாக்கு என்றும் பழந்தமிழ் மொழியில் பொருள் உள்ளது.

இலையை மரத்தின் நாக்குகளாகக் கண்ட ஒரு தொல்குடியின் விழியே மொழியாக ஆனதா அது?

அந்த வேர்ச்சொல்லில் இருந்து கற்பனையும் நடைமுறையும் கலந்து பல ஆயிரம் வருடங்களாக சொற்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன.இலையே உண்கலமாக ஆனதனால் தாலம் என்பது உண்கலம்  என்று பொருள் பெற்றது. பின்னர் தட்டுக்கு தாலமென்று பொருள் வந்தது. அதன்பின் தாம்பாளத்துக்கு தாலம் என்று பொருளாகியது.

மலையாளத்தில் இன்றுள்ள நடைமுறை வழக்கிலும் தாலம் என்றால் தட்டுதான். தமிழ்நாட்டில் இன்று சில பகுதிகளில் வெற்றிலைத்தட்டு தாலம் என்று சொல்லப்படுகிறது.

எப்போதோ ஒரு கட்டத்தில் பூமியின் மாபெரும் வட்டவிரிவுக்கும் தாலம் என்றே பொருள் வந்தது.

இலைபோல் அகன்ற யானையின் காதுக்கும் தாலம் என்றுபெயர்.

பின்னர் குறிப்பாக பனையோலைக்கு தாலம் என்றபெயர் புழங்கலாயிற்று. தாலகி என்றால் பனையிலிருந்து வடிக்கும் கள். தாலத்திலிருந்து வந்ததே தாலி. மணமகன் மணமகள் கழுத்தில் கட்டும் தாலி என்பது ஒரு பனையோலைச் சுருள்தான். இளம்பனையின் ஓலை நறுக்கில் காப்பு மந்திரத்தை எழுதி  அதில் சுண்ணமும் மஞ்சளும் கலந்து பூசி இறுக்கமாகச் சுருட்டி மஞ்சள் நூலால் இறுகச் சுற்றிக்கட்டி மஞ்சள்சரடில் கோர்த்து கட்டுவார்கள். ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னர் வரைகூட அந்த தாலி குமரிமாவட்டத்தில் புழக்கத்தில் இருந்து நான் கண்டிருக்கிறேன்."

(திரு.ஜெயமோகன், http://www.jeyamohan.in/514#.VSFHVtKUdJA)

பண்டையகாலத்தில், தாலிப்பனையின் ஓலைகளை சுருட்டி, நூலினால் கட்டி, கழுத்தில் அணியும் வழக்கம் இருந்தது. இதனால் கழுத்தில் அணியப்படும் அணிகலனுக்கு தாலி என்று பெயர் வந்தது.

சங்க காலத்திற்கு முன்னரே, திருமணமாகத ஆண்பிள்ளைகள், தாம் வேட்டையாடிய புலியின் கோரைப்பற்கள் இரண்டையும் கோர்த்து தாலியாக அணிந்திருந்தனர்.! அதை தாம் ஏற்றுக்கொள்ளும் பெண்சாதியின் கழுத்தில் அணிவித்து கௌரவித்தனர்.! தனது கணவன் ஒரு புலிக்கு நிகரான வீரன் என்கிற பெருமையுடன் அதை பெண்சாதியினர் அணிந்திருந்தனர்.! (புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண்களும் அதே சங்ககாலத்தை சேர்ந்தவர்களே.!)

அதற்கு மஞ்கள் பூசியணியும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது என்பதற்கு சான்றாக, அல்லூர் நன்முல்லையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் 67 இருக்கிறது.

மகளிர் அணிந்திருந்த தாலியானது வேப்பம்பழம் போன்ற அழகுடன் இருந்ததாகவும், அது புதுநாண் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

குறுந்தொகை 386ல் வெள்ளிவீதியார், தாலி அணிந்த பெண்களை வாலிழைமகளிர் என்று குறிப்பிடுகிறார். மாங்களியம், மங்கலியம், மங்கலவணி போன்ற தூய தமிழ்ச்சொற்களால் தாலியானது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றளவும், அதே புலிப்பல் சின்னமானது பொன்னினால் செய்விக்கப்பட்டு அணிவிக்கப்படுகிறது..

இத்தகைய வீரவரலாறு உலகில் தமிழினத்தை தவிர வேறெந்த இனத்திற்கு இருக்க முடியும்?

அப்படிப்பட்ட தமிழர் வரலாற்றை அழித்து திராவிட தாசி கலாசாரத்தை திணிப்பதற்காகவே வந்தேறி திராவிடர்கள் தாலி அறுப்பு நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் செய்துக் கொண்டிருக்கிறார்கள்..

தமிழா விழித்தெழு...

அசோகர் - வரலாற்றின் கரும்புள்ளி - மறைக்கப் பட்ட உண்மைகள்...


வரலாறு  என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் சரியானதுமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.

அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா?

அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும்?

சிறிது ஞாபகப்படுத்துங்களேன்.

அசோகர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கலிங்கப் போர் தான். இந்தியாவின் மிகச்சிறந்த, பெரிய பேரரசர். பிறகு அவர் தனது தமையனை போரில் வென்று பட்டம் சூட்டிக் கொண்டார், கலிங்கப் போருக்குப் பிறகு அவர் போரினை துறந்து புத்த மதத்தைத் தழுவி அற வழியில் சென்றுவிட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது.

பிறகு அவர் மக்களுக்கு பயன்பட சாலைகள் அமைத்தார், இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது,

ஆனால் அசோகருக்கென்று ஒரு கரிய சரித்திரம் உள்ளது. அது திட்டமிட்டே அனைத்து சரித்திர புத்தகங்களிலும், வரலாற்றிலிருந்தும் மறைக்கப் பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது இந்திய அரசும் மற்றும் புத்த அமைப்புக்களும்..

அது  என்னவெனில் பேரரசர் அசோகர் பார்ப்பதற்கு மிகவும் அவ லட்சனமாகவும், கரிய நிறமாகவும் அழகற்றவராகவும் இருந்தார்,


ஒருமுறை அவர்  அந்தப்புரத்திற்கு சென்றபோது அவரை மற்ற பெண்கள் அனைவரும் கேலி செய்துவிட்டனர், அதனால் அவர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட  பெண்களை கழுவில் ஏற்றி கொடுமை செய்து கொன்று விட்டார்.

அவர் ஒரு ஆண் மகனாக இருந்திருந்தால் தனது ஆண்மையை அந்த பெண்களிடம் அவர் நிரூபித்திருக்க வேண்டும், அதனை விட்டு அவர் தனது அதிகாரத்தினால் அனைவரையும் கொடுமை செய்து கொலை செய்வது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?

மேலும் அவர் எப்படி அரியணை ஏறினார் என்பதை அனைத்து நூல்களும் தனது தமையனுடன் போரிட்டுவென்றார் என்றே கூறுகிறது.

ஆனால் அவர் தனது சகோதரர்கள் 99 பேரை வஞ்சகமான முறையில் கொன்றே அவர் ஆட்சி பீடத்தில் ஏறினார்.  ஏனோ தெரியவில்லை அவர்  திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை.

மேலும்  இவன் தனது அரண்மனையில் அந்தப்புரத்துடன் ஒரு சித்தரவதைக் கூடாரத்தைம் நிறுவி எதிர்ப்போரை சித்தரவதை செய்து கொன்றுல்லான்.

அரச பதவி ரத்த சொந்தம் அறியாது என்று கூறுவார்கள்" இதற்க்கு எடுத்துக் காட்டாக அனைவரும் ஔரங்கசீப்பை மட்டுமே கூறுகின்றனர். ஏனெனில் அவர் தனது நான்கு சகோதரர்களை கொன்றிப்பார். ஆனால் தனது 99  சகோதரர்களைக் கொன்ற இந்த அசோகனை எங்கே, எதில் சேர்ப்பது?

வரலாறு எப்போதுமே உண்மையை கூற மறுக்கிறது, அது எழுதுபவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் விருப்பம், இனம், மொழி ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு அரசர்களின் வரலாறும் எழுதப்படுகிறது என்பது மிகவும் வேதனை தரும் செய்தி.

அதிலும்  நியாயம், தர்மமே இல்லாத அரசனின் படைப்பில் இருக்கும் சக்கரத்தை தர்ம சக்கரமாக கூறி, இந்திய தேசியக் கொடியில் போட்டிருப்பது மிகப் பெரியக் கேவலமாகவும் உள்ளது..

அதை தான் இந்தியன் என்று நெஞ்சில் குத்திக் கொண்டு திரிகிறார்கள்...

இந்தியத்தையும் திராவிடத்தையும் விட்டொழி தமிழா...


திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ்...

கையெழுத்திட்டு அனுமதி தந்தது திமுக..

செயல்படுத்தியது மத்திய பாஜக..

வேடிக்கை பார்த்து துணை போவது அதிமுக..

போராடுவது தமிழர் கட்சி பாமக... இன்னும் சில தமிழர் அமைப்புக்கள்...

பாஜக மோடியும் டிஜிட்டல் இந்தியாவின் வரியும்...


டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவி காலம் நீட்டிப்பு...


டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகின்றது..

புதிய டிஜிபி நியமிக்கப்படுவாரா அல்லது தற்போதைய டிஜிபி பதவி காலம் நீட்டிக்கப்படுமா  என எதிர் பார்க்கப்பட்ட நிலையியல் டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதிவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது...

தமிழ் இனையப் போராளிகளின் வெற்றி...


பேய்களை உணர முடிவது எப்படி..?


அறிவியல் விளக்கம்..

பேய்கள் சார்ந்த ஆராய்ச்சியில் அனுதினமும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு கொண்டே தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

ஆவிகள் பற்றி 1840 மற்றும் 1850-களில் கண்டுப்பிடிக்கப்படாத உண்மைகள் இப்போது கண்டுபிடிக்கப்பட காரணம் தொழில்நுட்ப உதவியால் தான் என்பதை யாரும் எளிதில் மறுத்துவிட இயலாது..

அப்படியாக 45% மக்கள், பேய் மற்றும் ஆவிகளை நம்புகின்றனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு..

ஆனால், பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தான் என்பது தான் நிஜமாம்..

அறிவியல் விளக்கங்கள் :

பேய்களையும், ஆவிகளையும் நாம் பார்ப்பது, உணர்வது, எதிர் கொள்ளுவது ஆகியவைகளுக்கு நிஜமான காரணங்களாக சில அறிவியல் விளக்கங்களை தருகிறது ஒரு ஆய்வு..

மேலும் அந்த ஆய்வு, பேய்கள் சார்ந்த விந்தைகளுக்கான தெளிவான 10 அறிவியல் காரணங்களையும் வழங்கியுள்ளது..

காரணம் 01 : திடீரென்று நம் கண்களுக்கு தோன்றி மறையும் நிழல் உருவங்கள் போன்ற நிகழ்வுகள் நடக்க காரணம், நம் மூளையின் ஒரு வகையான மின்சார தூண்டல் தானாம் (Electric Stimulation Of The Brain)..

காரணம் 02 : ஆவிகளுடன் நடத்தப்படும் உரையாடல்களின் போது நமக்கு கிடைக்கும் பதில்களுக்கு காரணம் பேய்களோ ஆவிகளோ இல்லை - இடியோமோட்டார் எஃபெக்ட் (Ideomotor Effect) தான் காரணம்..

விளைவு : தன்னை அறியாத நிலையில் ஏற்படும் உடல் அசைவுகள் சார்ந்த விளைவுகளை தான் இடியோமோட்டார் எஃபெக்ட் என்பர்..

காரணம் : ஆவிகளுடன் தொடர்பு கொள்ள பெரிதளவில் பயன்படுத்தப்படும் ஓவ்ஜா போர்ட்டில் (Ouija board) நம் கைகள் தானாக நகர்வதற்கும் அசைவதற்கும் காரணம் இந்த விளைவு தானாம்..

காரணம் 03 : தானாக ஒரு பொருள் அசைகிறது என்றால் அதற்கு காரணம் ஏதோ ஒரு ஆவியின் சக்தி என்று நினைத்து விடாதீர்கள், அதற்கு காரணம் - இன்ஃப்ரா சவுண்ட் (Infrasound)..

சப்தம் : அதாவது மனித காதுகளால் 20-20,000 ஹெர்ட்ஸ் (Hertz) வரையிலான சப்தங்களை மட்டும் தான் கேட்க முடியும். அதற்கு கீழ் இருக்கும் ஒலிகளை நம்மால் கேட்க முடியாது..

அதிர்வு : அதாவது 20 ஹெர்ட்ஸ் கீழ்  ஒலியை நம்மால் கேட்க முடியாது, ஆனால் அதை அதிர்வுகளாய் உணர முடியும், அப்படியான அதிர்வுகளால் தான், சில பொருட்கள் தானாக அசைய காரணமாகும்..

அதிகம் ஏற்படும் : பொதுவாக புயல் பலமான காற்று, வானிலை மாற்றம் போன்றவைகளால் இன்ஃப்ரா சவுண்ட் அதிர்வுகள் அதிகம் ஏற்படுமாம்..

காரணம் 04 : உங்களுக்கு வரும் ஆவிகள், பேய்கள் சார்ந்த ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் கனவுகளுக்கு காரணம் - ஆட்டோமட்டிஸம் (Automatism)..

மறந்த நிலை : அதாவது அதீதமான தன்னை மறந்த நிலையில் கற்பனைகளும், எண்ணங்களும் வேறொரு வழியாக நம்மில் நுழையும் விளைவு தான் ஆட்டோமட்டிஸம் எனப்படும்..

காரணம் 5 : குறிப்பிட்ட அறையின் இடம் மட்டும் குளிர்ச்சியாக இருக்க காரணம், அங்கு ஏதோ ஆத்மா இருக்கிறது, பேய் வல்லுநர்கள் சொல்லும் 'கோல்ட் ஸ்பாட்' (Cold spot) என்று நினைக்க வேண்டாம் அது - டிராஃப்ட் (Draft) ஆகும்..

அறை : அதாவது, அடைத்தே கிடக்கும் அறைக்குள் இருக்கும் ஒவ்வொரு பொருள்களுக்கும் தனிப்பட்ட உஷ்ணநிலை இருக்கும். ஏதாவது சிறு வழியாக சில்லென்ற காற்று நுழையும் போது சக உஷ்ண நிலையோடு இணையாத குறிப்பிட்ட அந்த இடம் மட்டும் குளிர்ச்சியாய் தோன்றுமாம்..

மீதி 5 காரணங்களை அடுத்த பகுதியில் காண்போம் .....

தனி மனிதனாக நின்றவன் மைக்கேல் ஜாக்சன் மக்களை விழிப்படையச் செய்ய முயன்றவன்...


தமிழினத்தை பலி கொடுத்து வாழும் தமிழக பாஜக தலைவர்கள்...


திருமதி வானதி Vanathi Srinivasan மற்றும் திரு சு.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் இருவர் சார்பிலும் தனித்தனியே எனக்கு Legal Notice அனுப்பியுள்ளீர்கள்.
அதை பெற்றுக் கொண்டேன்...

கடந்த 2003 ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள்.வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம்.

அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன்.

அது மட்டுமல்ல மைலாபூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.

யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும் ? என்றும் எனக்கு தெரியவில்லை.

இந்நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு மாண்புமிகு பாரத பிரதமராக மோடிஜி அவர்களது அரசு பதவியேற்ற பின்பு ,

உங்கள் தேர்தல் affidavit படி நீங்கள் காட்டியுள்ள சொத்துக்களை பார்த்த போது நான் உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன்.

இது ஒரு புறம் இருக்க உங்கள் சகோதரர் திரு சிவகுமார் கந்தசாமி அவர்களை டைரக்டர் ஆக கொண்ட Zylog Systems Europe Ltd ன் சகோதர நிறுவனமான Zylog Systems India Ltd ( இது என்ன Europe புதுக்கதை என்கிறீர்களா ? ) நிறுவனத்திற்கு எதிராக Union Bank of India கொடுத்த புகாரின் பேரில் CBI அந்நிறுவனம் மீது FIR பதிந்துள்ளது. அனைவரும் அறியும் வண்ணம் நாளிதழில் செய்தியும் வந்தது.

எனக்கும் சில நபர்கள் மூலம் FIR உள்ளிட்ட ஆவண நகல்கள் கிடைத்தது. உங்கள் இருவரின் நோட்டீஸ்களிலும் குறிப்பிடப்பட்ட அந்த மே மாத பதிவுகளில் அந்த ஆவணங்கள் அடிப்படையிலேயே எனது (Face Book) முக நூலில் போட்டிருந்தேன்.

என்னிடம் ஏற்கனவே இருந்த ஆதாரங்களுடன் அதிர்ச்சி அளிக்கத்தக்க மேலும் பல ஆதாரங்கள் கிடைத்ததால் 145 பக்கங்கள் கொண்ட மொத்த ஆதாரங்கள், புகைப்படங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு நமது தேசிய தலைவர் திரு அமித்ஷா ஜி, பிரதமர் அலுவலகம், மாண்புமிகு உள்துறை அமைச்சர், மேலும் பல அதி முக்கிய துறைகள் சார்ந்த அமைச்சகம் மற்றும் அதிகாரிகளிடம் நேரில் அளிக்கப்பட்டது.

நமது தேசிய தலைவர் அந்த ஆதாரங்களை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாமல் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் ,

அகில இந்தியத் தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தாங்கள் Legal Notice ல் குறிப்பிட்டபடி அதற்கு பின் வலைத்தளத்தில் அகில இந்திய தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பதிவிடுவதை நிறுத்தி வைத்தோம்.

இந்நிலையில் தங்களின் வக்கில் நோட்டீஸ் கிடைத்தது. தாங்கள் என் மீது வழக்கு தொடர்ந்தால் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமையிடம் அனுமதி பெற்று அந்த ஆவணங்களை மாண்புமிகு நீதி மன்றத்தில் சமர்பிக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதை தங்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை தங்கள் மின் அஞ்சலுக்கும் அனுப்புகிறேன்.
vanathibjp@gmail.com

திருச்செந்தூரில் நான் நடத்திய பாஜக ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் (திருமதி.வானதி) கலந்து கொண்ட புகைப்படம்.

அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்
Balasubramania Adityan

பேய்கள் பற்றிய பல உண்மைகள் -பயபடாதிங்க...


மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பலபேர். எனவே பயப்படாமல், ஜாலியாக பேய்களை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிஞ்சிக்கலாமா?

பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்களாம்.

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்குமாம். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர (sense) முடியாது.

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

பேய்களால் சும்ம இருக்க முடியாது. எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.

பேய்கள் எப்போதுமே தாங்கள் இறந்துவிட்டதாக நினைப்பது இல்லை. எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.

பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்புகொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறுவகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்துவிட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்குமாம்.

பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.

அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விடயம்.

பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்ற சினிமாவில் காண்பிக்க படுபவை கூடுமானவரை கற்பனையே.

கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

பேய்களுக்கு உதவிசெய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய் ப்பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக்கொடுத்தும் இருக்கின்றனவாம்.

இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டாம்.

பேய்கள் இடம்பெயரும்பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் உண்மை என்றாலும் பயப்பட தேவையில்லை. இவை பேய்களை பற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்காக எழுதவில்லை. பேய் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பொழுதுபோக்காக படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

யார் தியாகி... வாஜ்பாய் யா.?


தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்...


வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

தமிழர்கள் மலைநாடு என்று அன்போடு அழைக்கப்படும் மலேசியா நாட்டின் தொடர்பு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது என்றும். அறியபட்ட சரித்திர குறிப்புக்களின் வழி இந்தியர்களின் தொடர்பு 5000 ஆண்டுகள் முற்பட்டது எனவும், இராமாயாண மகாபாரதம் நடைப்பெற்ற காலத்தில் தென் கிழக்கு ஆசியா, (ஜா)வா, மலாயா ஆகியவை இந்தியாவோடு இனைந்த பகுதி என்று அறிகிறோம்.

தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது. நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது. உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது

பாரதம் நடைப்பெற்றக் காலத்தில் மலேசியாவுக்கு “பார்த்தன் திக்கு” விஜயம் செய்துள்ளார். பாண்டவர்களின் சிறந்த பார்த்தன் திக்கு யெளவன தீபத்தையும் (ஜாவா) சு(ஸ்)வர்ண தீபத்தையும் (மலேசியா) கண்டு வெற்றிக் கொடி நாட்டியதாய் பாரதம் கூறுகிறது.

பாண்டவர் தலைவர் தருமபுத்திரர் இராச(ஜ) சூய யாகமொன்றை இந்திரப்பிரச(ஸ்)தத்தில் ( இந்தியா) நடத்தினார். இந்த வைபவத்திற்கு பல நாட்டின் மன்னருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அன்றைய மலேசியா மன்னர்களும் கலந்து கொண்டனர். சகாதேவன் அன்றைய மலேசியாவின் பகுதிகளுக்கு கண்காணிப்பாளனாக இருந்து அடிக்கடி வங்க வாயிலாக வந்து சென்றுள்ளார். பாண்டவர்கள் யாவாத்தீவில் ஒரு காலத்தில் நாட்டாண்மைக் கொண்டார்கள் என வியாச முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

கி.மு 274-232 அசோக சக்கரவத்தி பவுத்த சமயப் போதகர்களை பொன்னாடு என்று போற்றப்பட்ட சுவர்ண பூமிக்கு அனுப்பி வைத்தார். சு(ஸ்)வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். அந்த காலத்தில் மலேசியாவில் தங்கம் அதிகம் கிடைத்த காரணத்தால் பொன்னாடு என்று அழைக்கப்பட்டன. கி.மு 200ல் மலேசியாவை “இந்திர பாரத பூரா” என்று அழைக்கப்பட்டது. இந்திர என்றால் தங்கம் ,பாரத் என்றால் நாடாகும்

தமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று கூறப்படும் பழமைமிக்க ஒரு நாடு மலேசியாவில் இன்று கெடா என்று அழைக்கப்படும் மாநிலம் ஆகும்.கடா அல்லது கயிடா என்பது யானைகளை கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்று கூறப்படுகிறது. ஆனால் கெடா என்ற வார்த்தை அந்த அர்த்தத்தில் உருவான ஒரு பொருளாக இருக்காது என்பது சிலரின் வாதம்.

பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கெடாவை கடாரம் அல்லது கழகம் என்று கூறுகின்றது. கடாரம் என்பதின் பொருள் என்னவென்றால் அகன்ற பாணை அல்லது கருமை நிறம் என்று சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. அரபியரும் பார்சிகாரர்களும் வட மலேசிய தீபகற்பத்தை கிலா, கலா அல்லது குவலா என்று அழைத்ததுண்டு.

3000 ஆண்டுக்குமுன், இந்திய வேந்தர்கள் கடல் கடந்து கடாரம் வந்த பொழுது அங்கே தவளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனவாம் அதனால் தான் கடாரத்தை “காத்தா” என்று அழைத்தனர். காத்தா என்றால் மலாய் மொழியில் தவளை என்று பொருள். மலாய்க் காரர்களின் வாய் மொழி கதைகளில் சொல்லப்படும் சில காதல் புனைவு கதைகளிலும் வரலாற்று தகவல்ளிலும் லங்காசுக என்ற ஒரு பண்டைய அரசாங்கம் கெடாவில் இருந்ததகவும் அதன் பண்டைய எச்சங்கள் இன்னும் இருபதாகவும் கூறுகின்றனார்.

பண்டைய இந்திய நாட்டு வியபாரிகள் கெடாவை காத்தாரை என்று அழைத்தாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடாரம் அல்லது கெடா அன்றைய இந்திய வியபாரிகளுக்கு மலை நாட்டின் அடையாள மார்க்கமாகவும் இளைப்பாறி தனது கடற்பயணத்தை கிழக்கு ஆசியாவுக்கு தொடரும் தளமாகவும் விளங்கி உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் லங்காசுக என்ற அரசாங்கதின் மைய இடமாகவும் லெம்ப பூஜாங் என்று சொல்லபடுகின்ற பழைய வரலாற்று சின்னம் இந்தியர்களின் கலச்சார படை எடுப்புக்கும் நாகரிக அடையாள சின்னமாக திகழ்கிறது.

தமிழர்கள் கி.பி முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தலைச்சிறந்த மாலுமிகளாகவும் படைவீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் திகழ்ந்தார்கள். வர்த்தக சம்மந்தமாக இந்திய தமிழ் மாலுமிகள் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்தவர்கள், நாளாடைவில் இங்கு குடியிருபுக்களையும் அரச அமைப்பையும் எற்படுத்தி சமயம் கலைக் விவசாயம் பண்பாட்டுக் கூறுகளையும் எழுப்பி இருக்கின்றார்கள். காடுகளிலும் குகைகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு விவசாயத்தையும் நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் நம் தமிழர்கள்...

மறக்கப்படுமோ மானவீரம்?


மானம் என்பது உயிர்களின் உணர்வோடு கலந்த ஓர் உயிர்த்துடிப்பாகும்..

பூனை மிகவும் சாதுவான விலங்கு. ஆனால் அதனையே ஓர் அறையுள் பூட்டிவைத்து அடித்துப்பாருங்கள். தன் முன்னங்கால் நகங்களை விரித்து கொடும்புலியைவிட வேகமாகப் சீறிப்பாய்ந்து கடித்துக் குதறும். அதுவும் மானமே.

இப்படி உலக இயற்கையிடமிருந்து மனிதன் முதலில் கற்றபாடம் தற்காப்பு.

தற்காப்பால் எழுந்ததே தன்மானம். அதனை மனித வரலாற்றின் அடிச்சுவட்டை நுணுகி ஆராய்ந்து பார்ப்போர் அறிவர்.

மொழியும் இனமும் தோன்றமுன் மனிதன் தன்னந் தனியாக நின்ற போது ஏனைய கொடிய விலங்குகளிடமிருந்தும் இயற்கையின் சீற்றத்தில் இருந்தும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உதவியது அவனது தன்மானம் கொடுத்த நெஞ்சத்துணிவே. தன்மானம் கொடுத்த நெஞ்சத் துணிவுடன் சேர்ந்த வேகத்தையே வீரம் என்கின்றோம். அந்த வீரம் மட்டும் மனிதனுக்கு இல்லாது இருந்தால் இன்றும் மனிதன் விலங்காகவே வாழ்ந்திருப்பான். காட்டுவாழ் விலங்கினத்திடமிருந்து மனிதனை மனிதனாக இனங்காட்டிய மனித செயற்பாடுகளுள் முக்கிய பங்குவகிப்பது தன்மான வீரமே.

அதனால் பண்டைத்தமிழர் வீரத்தைப் போற்றினர். தமிழரின் வீரம் என்னும் அந்த நெஞ்சக்கனலை ஊட்டி வளர்த்தோர் தாய்மாரே. அதனாலேயே வீர சுதந்திரம் வேண்டி நின்ற பாரதியாராலும் ‘வீரம் சேர்ப்பது தாய்முலைப்பாலடா’ என்று பாடமுடிந்தது. எந்த உயிரும் தாய்மையின் செழுமையின் சிலிர்ப்போடு தான் பெற்றதை எதிரிகளிடம் இருந்து காக்க வீறு கொண்டு எதிர்த்து போராடும். அது இயற்கையின் நியதி. அந்தத் தனிப்பண்பில் சிறிதும் குறைந்தவர்களாக தமிழ்ப்பெண்கள் இருக்கவில்லை என்பதை பண்டைய இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், நடுகற்களும் இன்றும் சான்றுபகர்கின்றன. தமிழ்ப் பெண்களில் வீரைகள் இருந்ததை மணிமேகலை சொல்கிறது. பல மாவீரம் மிக்க மறக்குல வீரைகளை புறநாநூறு காட்டுகிறது.

குழந்தை இறந்தாலும், தசைப்பிண்டமாய்ப் பிறந்தாலும் அவற்றின் மார்பில் வாளால் கீறி வீரத்தழும்பு ஏற்படுத்திய பின்னரே அவற்றைச் நம்முன்னோர்கள் புதைத்தார்கள் என்பதற்கு
“குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்”
என்று சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை எழுதிய சங்க இலக்கியப் பாடலே சாட்சி.

தன்னலம் பொதுனலனாக மாறும் போது தன்மானம் இனமானமாக மாறுகிறது. தம் இனமானம் காப்பதற்காக இறந்தோரை இரண்டாயிர வருடங்களுக்கு முன்பிருன்ந்தே தமிழர் வணங்கினர் என்று சொல்வதைவிட அவர்களை விடச்சிறந்த கடவுளும் இல்லை என்று நம்பினர் என்பதை புறநானூறு சொல்கிறது. இனமானத்துடன் பகைவரின் படைகளின் முன்னின்று எதிர்த்துவராது விலக்கிப் பாதுகாத்து, தாமும் இறந்து நடுகல்லானோரின் நடுகல்லைத் தொழுவதன்றி, நெல் சொரிந்து வழிபடும் கடவுள் வேறு கிடையாது என்பதை
“கல்லே பரவினல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”
என்று மாங்குடிமருதனார் என்னும் புலவர் சொல்வதால் அறியலாம்.

புறநாநூற்று மறக்குல வீரர்களை விடச்சிறந்த மாவீரர்களை மாவீரைகளை கடந்த முப்பது வருடத்தில் நமது ஈழம் கண்டது. மா என்றால் மரணம் என்ற கருத்தையும் தரும். மரணத்தை மகிழ்வோடு எதிர்கொள்ளும் வீரமே மாவீரமாகும். எமது மாவீரர்கள் யாருக்காக, எதற்காக, வன்னிமண்ணில் சாவே வா! உன்னை சாப்பிடுகின்றேன் என நின்றார்கள்? எதை நினைந்து தம் ஆசைகளை, பாசங்களைத் துறந்து களம் புகுந்தார்கள்? தம் இன்னுயிரை கொத்துக் குண்டுகளுக்கும் இரசாயனக் குண்டுகளுக்கும் ஏன் கொட்டிக் கொடுத்தார்கள்?

தன் இனம் வாழ, தன் தாய்மொழி நின்று நிலைக்க, வருங்கால ஈழத்தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ தம்மையே ஈந்த அந்தச் செம்மல்களை நாம் மாறப்போமா? ஒன்றா! இரண்டா! எத்தனை ஆயிரம் மாவீரர் தம் ஆருயிரைக் ஈழத்து விடியலுக்கு வித்திட்டுச் சென்றிருக்கிறார்கள். சுந்திரம் வேண்டும் மனிதராய், தமிழராய் அவற்றை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமா?

ஆசை, பாசங்களைத் துறத்தல் தவம் என்றால், தன்நலம் கருதாது பிறர் நலனுக்காக தம் இன்னுயிரத் துறந்து மாவீரர் ஆனோர் மா-தவத்தோர் அல்லவா? தவம் செய்பவர்களில் யாரை உலகம் வணங்கும் என்பதை
“தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்உயிர் எல்லாம் தொழும்”
என திருவள்ளுவர் தவம் என்னும் அதிகாரத்தில் காட்டுகிறார். ஆதலால் மாதவத்தோர் ஆன மாவீரரின் மாவீரம் மறக்கப்படுமோ? இழிநிலை வந்தபோது வாழாத மானமுடையோரின் புகழின் சிறப்பை இவ்வுலகே கைதொழுது வாழ்த்தும் என்று திருவள்ளுவரே கூறுகிறார்.

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு - 970

தமிழராகிய நாமும் உலகுடன் சேர்ந்து மானவீரரை விளகேற்றித் தொழுது ஏத்துவோம்...

பாஜக மோடியும் மாட்டு வியாபார அரசியலும்...


தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்...


சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே
இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப
இதன் பொருளைப் பாருங்கள்!

விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே...

இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும்...


தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது...

இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர்

"இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார்.

அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர்.

அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாஜியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தென்னிந்திய இ.தே. ரா. (இ.தே. ரா. - இந்திய தேசிய ராணுவம்) வீரர்களை கைது செய்ய நேர்ந்தது. அப்போது நேதாஜி ஜெனரல் திலானை அழைத்து கூறினார் -- " இவர்கள் மிக சிறந்த வீரர்கள். இவர்கள் கடுமையுடன் இறுதிவரை போராடுவார்கள். இவர்கள் தாவறான புரட்சி செய்வதற்கு காரணம் இவர்கள் தலைவரின் தவறான போக்குத்தான். அதனால் நீ இவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்து" என்றாராம்.

பின் ஒருநாள் தலைவரான திலான் கூறுகிறார். " தமிழ் வீரர்களுக்கு நான் தலைவராக இருந்தது என் பெரும் பேறு இ.தே. ரா. த்தின் இதயமும் ஆத்த்மாவும் தமிழர்கள்தான்"

இ.தே. ரா.த்தில் தலைவராக இருந்த மற்றொரு வீரர் ஜெனரல் கியானி கூறுகிறார். " தமிழர்கள் மிக சிறந்த வீரர்கள், இறுதிவரை போரிட்டார்கள். எதிரியிடம் பிடிப்பட்டபோதும் இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்ததே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
நேதாஜியின் இ.தே. ரா. கண்டு எரிச்சல் அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில் ரேடியோவில் கூறினார் " மலேயா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜி மூலையில் கட்டியாக உள்ளது" என்றார்.
அதற்க்கு பதில் அளித்த நேதாஜி "
இந்த தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் "
என்று கூறினார்.

1945 இல் மார்ச் மாதம் நேதாஜி படையில் ஒற்றர்களாக இருந்த நான்கு தமிழ் வீரர்கள் தூக்கிலிடபட்டனர். இந்தியா விடுதலைப் பெற்ற பின்னரும் இவர்களைப் பற்றி நாம் அறியாது விந்தையிலும் விந்தை. ஒரு தமிழனாக பிறந்ததால்தான் ராமுத்தேவர், இராமசாமி ஒன்றியார் போன்றோர்கள் புகழ் அறியப்படவில்லை.

தலைசிறந்த படைத்தலைவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேதாஜி 46 பேர்களைத் தேர்ந்தெடுத்து ஜப்பான் டோக்கியோவிற்கு ராணுவ பயிற்சி பெற்று திரும்ப அனுப்பினார். அதில் கூட 16 பேர்கள் தமிழர்கள். ஒரு ஈழத்தமிழர் உட்பட.
இ.தே. ரா. சேர ஆர்வம் கொண்டு ஒரே நேரத்தில் 2500 ௦பேர் அணிதிரண்டனர். உடல் வலிமை இல்லாதவர்களும் கூட தங்களை இணைத்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். 14 வயது சிறார்களும் 16 வயது என்று பொய் கூறி கொண்டு இ.தே. ரா.வில் இணைந்தனர்.

ஒருவர் தன்னிடம் இருந்த 200 பசுக்களை நன்கொடையாக இ.தே. ரா.க்கு நேதாஜியிடம் கொடுத்துள்ளார். கிழிந்த சேலையுடன் வந்த மூதாட்டி ஒருவள் தன்னிடம் இருந்த மூன்று டாலரை கொடுத்துள்ளார். அதை கண்ணீர் மல்க நேதாஜி பெற்று கொண்டார்.

நேதாஜியை சுற்றி பலர் தமிழர்கள் இருந்தனர். அவருடைய சமையல்க்காரர் பெயர் காளி. நேதாஜியின் இறுதி கடிதத்தை எழுதியவர் திவி என்ற தமிழர். நேதாஜி சிங்கபூருக்கு வந்த போது அவரை வரவேற்றவர் சிதம்பரம் ஒரு தமிழர்.

ஜெர்மனியில் தமிழ் வானொலி நடத்தியவர் திரு நாயுடு. அவர் அக்காலத்தில் பிரான்சில் உள்ள பாரிசில் உணவு விடுதி ஒன்றை நடத்திய பெரிய வியாபாரி.

நேதாஜியின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு விடுதியை மூடிவிட்டு ஜெர்மனியை அடைந்து தமிழ் நிகழ்சிகளை நடத்தினார். குண்டு மழை பொழிந்தபோதும் கூட தொடர்ந்து தமிழ் நிகழ்சிகள் நடத்தினார். நாலரை ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்தான் நிகழ்ச்சி நடக்கவில்லையாம்.

மலேயாவிலும் நேதாஜிக்கு அதரவாக யுவபாரதம், சுதந்திர இந்துஸ்தான் போன்ற தமிழ் இதழ்கள் வெளிவந்தன.

ராணி ஜான்சி படையின் தலைவியாக கேப்டன் இலட்சுமி இருந்தார். இந்த படையில் கேப்டன் ஜானகி தேவர் பெரும்பங்கு ஆற்றினார். இவர் இந்தியாவில் பிறக்காதவர், இந்தியாவை பார்க்காதவர். எனினும் வீரத்தமிழ் இன உணர்வோடு போராடினார்கள்.

விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை கத்தரித்து விட்டு ராணுவ பயிற்சிக்கு பின் பர்மா போர் முனைக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் செவிலியர்களாக பணிபுரிய மறுத்து தூப்பாக்கி ஏந்தி ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள். அத்தனை வீரம் மிகுந்த தாய் வழி வந்தவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மார்பில் குடித்த பால் இன்னும் நம் மரபணுக்களில் கலந்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் ---- நேதாஜி...

தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்போம் . புதிய சாதனைகள் படைப்போம்...


காலத்தை கடந்து நிற்கும் அதிசயங்கள் . இன்றும் இது போன்ற அதிசயங்களை நாம் கட்ட இயலாது. இவற்றை கட்டியவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு கட்டவில்லை. அவர்கள் தாய் மொழியில் கணிதம், அறிவியல் பயின்று தான் இந்த அழியாத அற்புதங்களை கட்டினர். ஆங்கிலம் படித்தால் தான் சாதிக்க முடியும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டனர் சிலர். மாயையில் விழுந்த மக்களும் அதை நம்பினர். உண்மையான சாதனைகள் அவரவர் தாய் மொழியில் படித்தால் மட்டுமே சாதிக்க முடியும் . அதற்கான சான்றுகள் ஏராளம்.

 இன்று தாய் மொழிக் கல்வியை பயிலும் அமெரிக்கர்கள் , பிரித்தானியர்கள் , சீனர்கள் , ஜப்பானியர்கள் உலகத்தை ஆட்டுவிக்கும் அளவிற்கு அறிவியல் சாதனைகள் புரிகின்றனர். தமிழர்களோ அறிவுக்காக அடுத்தவரிடம் கையேந்தி நிற்கின்றோம். நாமும் நம் தாய் மொழியில் அனைத்தும் கற்போம் , கற்பிப்போம்.

தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்போம் . புதிய சாதனைகள் படைப்போம்.
வாழ்க தமிழ்...

கிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 4...


௧) மற்ற விளையாட்டுகளைப் போல் கிரிக்கெட் விளையாட்டில் உடல்கள் அதிக அளவில் தொட்டுக் கொள்ள வேண்டிய தேவை கிரிக்கெட்டில் கிடையாது.

கால்பந்து, கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் வீரர்களின் உடல்கள் அடிக்கடி மோத வேண்டிய சூழ்நிலைகள் நேரும்.

ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் அத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நிகழாது. பந்தைப் பிடித்தால் போதும்... பந்தை அடித்தால் போதும். தீண்டாமைக் கொள்கையை போற்றி வளர்த்த பார்ப்பனர்கள் இதனாலையே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் செலுத்தினர் என்று நாம் கூறினால் அதனை மறுக்க முடியுமா?

௨) சோம்பேறிகளின் விளையாட்டாக அறியப்பட்ட கிரிக்கெட்டில் உடல் உழைப்பும் கம்மி என்பதாலேயே பார்ப்பனர்கள் அந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தனர் என்றும் அதனால் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களாக அறியப்பட்டவர்களின் பீல்டிங் முறையும் (பந்தை தடுக்கும் முறையும்) ஓட்டம் எடுக்கும் முறையும் (ரன்னிங் பெத்வீன் தி விக்கெட்ஸ்) யுவராஜ் சிங், முஹம்மத் கைப் போன்ற வீரர்கள் வரும் வரை வெகு சுமாராகவே இருந்து இருக்கின்றது என்பதனை மறுக்க முடியுமா?

௩) மற்றவர்களை வேலை வாங்கியே பழகிய காரணத்தினால் தான் பெரும்பான்மையான நேரம் எதிரணியின் வீரர் அடித்த பந்தினைத் துரத்திச் செல்லாமல் மற்றவர்களுக்கு கை காட்டிவிட்டு நின்ற இடத்தில் நிற்பதும், அதிகமாக ஓட்டங்களை ஓடி எடுக்காமலும், ஓடும் பொழுது தமது ஆட்டத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் தன்மையும் (அடுத்தவரை ஆட்டம் இழக்க செய்தாலும் பரவாஇல்லை தான் பாதுகாப்பாக நிற்க வேண்டும்) வீரர்களின் மத்தியில் இருந்து இருக்கின்றது என்ற கூற்றினையும் மறுக்க முடியுமா?

மேலே நாம் இட்டுள்ள கேள்விகள் வேடிக்கையாக தெரிந்தாலும் அவற்றுள் உண்மை இருக்கின்றது என்பதனை சற்றே சிந்தித்துப் பார்ப்போர் அறிந்துக் கொள்வர். நிற்க.

இப்பொழுது நாம் கிரிக்கெட் எவ்வாறு நமது தேசத்தில் இன்று அது இருக்கும் உயரத்தினை அடைந்தது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது...

ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இன்று இருக்கும் இதே அளவு செல்வாக்கு இருந்ததா என்றுத் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பள்ளியில் உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் எவரும் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது கிடையாது. அவர்களைப் பொறுத்த வரை அது சோம்பேறிகளின் விளையாட்டு.

மேலும் அக்காலத்தில் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு தான் மிகவும் சிறப்பான ஒன்றாக விளங்கிக் கொண்டு இருந்தது. 1928 ஆம் ஆண்டில் தொடங்கி 1956 ஆம் ஆண்டு வரை தான் கலந்துக் கொண்ட அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கத்தினை வாங்கிக் குவித்தது இந்திய ஹாக்கி அணி. உலகைப் பொறுத்தவரை ஹாக்கி என்றால் இந்தியா... இந்தியா என்றால் ஹாக்கி. தொடர்ச்சியாக மொத்தம் 6 ஒலிம்பிக் தங்கங்கள். ஹாக்கி இந்தியாவின் தேச விளையாட்டானது. இன்றுவரை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அதிகமான பதக்கங்களை வாங்கித் தந்துள்ள விளையாட்டும் அது தான். ஹாக்கி மூலமாக நமக்கு கிட்டிய கடைசி தங்கப் பதக்கம் 1980 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிட்டியது.

அதற்கு பின்னர் ஹாக்கி விளையாட்டிற்கு இந்தியாவில் இறங்கு முகம் தான். காரணம் எது வேண்டும் என்றாலும் இருக்கலாம்... அரசாங்கத்தின் கவனக்குறைவு, அரசியல் காரணங்கள்... எதுவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் என்னுடைய கவனம் ஏனோ 1983 ஆம் ஆண்டில் கிரிக்கெட் அணி பெற்ற உலகக் கோப்பை வெற்றியின் மீதே செல்கின்றது. அது சரியானதாகவும் இருக்கலாம் அல்லது தவறான ஒன்றாகவும் இருக்கலாம்.... இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே எண்ணுகின்றேன்.

பிசிசிஐ இன் சார்பாக விளையாடி வந்த கிரிக்கெட் அணிக்கு 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை எந்த ஒரு மாபெரும் வெற்றியும் கிட்டியதில்லை என்பதே வரலாறு. ஆனால் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு மாபெரும் மாற்றம் கிரிக்கெட் விளையாட்டிற்கு நேர்ந்து தான் இருக்கின்றது. காரணம் உலக கோப்பையை அந்த அணி வென்று விட்டது. போதாதா?

பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாட்டில் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கம் இல்லாத விளையாட்டான ஹாக்கியே அனைத்து வெற்றிகளையும் பெற்றுக் கொண்டு இருந்த பொழுது முதல் முறையாக பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு மாபெரும் வெற்றியினைப் பெற்று இருக்கின்றது. இது ஒன்று போதாதா கொண்டாடுவதற்கு.

பார்ப்பன‌ர்கள் அதிகம் உள்ள அணியான பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணியை தலையில் தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்தன பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள்... அவை பத்திரிக்கை ஊடகங்களாக இருக்கட்டும் அல்லது காட்சி ஊடகங்களாக இருக்கட்டும்... பிரச்சனை இல்லை...

"இந்திய அணி வென்று விட்டது... உலகை இந்தியா வென்று விட்டது... நாம் உலகில் சிறந்தவர்கள்... கொண்டாடுங்கள்" என்றே அவை கிரிக்கெட்டின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தன.

அதாவது பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு பெற்ற வெற்றியினை பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் பெரிதுபடுத்த ஆரம்பிக்கின்றன... இன்றும் பெரிதுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

காலங்களில் நாம் தெளிவாகக் கண்டோம் என்றால் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பன‌ர்களாலோ அல்லது பார்ப்பன‌ர்களைச் சார்ந்தவர்களாலோ கைப்பற்றப்பட்டே இருக்கின்றன என்பது நமக்குப் புலனாகும். அந்த ஊடகங்களின் வலிமையை வைத்தே இன்றும் அவர்கள் பல காரியங்களைச் செய்துக் கொண்டே இருக்கின்றனர். சரி இருக்கட்டும்.

1983 ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்கின்றது. பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு அணி வென்றதால் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தி மக்களின் மத்தியில் கொண்டு செல்கின்றனர். அங்கே ஆரம்பிக்கின்றது வேலை. கிரிக்கெட் அனைத்து ஊடகங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. மற்ற விளையாட்டுக்கள் பின்னால் தள்ளப்படுகின்றன. விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான் என்ற அளவுக்கு கிரிக்கெட்டும் சரி கிரிக்கெட் வீரர்களும் சரி மக்களுக்கு ஊடகங்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

உதாரணமாக, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியை பாடமாகவே வைத்து இருக்கின்றனர் என்பதனை நாம் அறிவோம். அதாவது தொடர்ந்து ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தினை வென்ற ஹாக்கி அணியைப் பற்றியோ அல்லது அந்த வரலாற்றினைப் பற்றியோ ஒருவன் அறிந்து கொள்ளவில்லை என்றால் யாதொரும் பிழையும் இல்லை. ஆனால் தனியார் நிறுவனமான பிசிசிஐ வென்ற கிரிக்கெட் போட்டியினைப் பற்றி அவன் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட் ஒன்று தான் விளையாட்டு என்று அவன் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே...!

இது தான் அரசியல். இக்காலத்தில் தான் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி ஒரு தேச அடையாளமாக மக்களின் மத்தியில் புகுத்தப்பட்டது. எந்த ஊடகத்தினை எடுத்தாலும் கிரிக்கெட்... கிரிக்கெட் ...மேலும் கிரிக்கெட்...!

ஊடகங்கள் என்பன ஒரு மாபெரும் சக்தியினை உடையவை... மக்களின் மத்தியில் ஒரு கருத்தினை பரப்பவும் அவர்களால் முடியும்; ஒரு கருத்தினை அழிக்கவும் அவர்களால் முடியும். அவற்றின் வலு அப்பேர்ப்பட்டது. அத்தகைய ஊடகங்களின் துணை இன்றி மற்ற விளையாட்டுகள் மக்களின் மத்தியில் இருந்து சிறிது சிறிதாக விடைபெற கிரிக்கெட் தனது இருப்பை வலு பெற செய்து கொண்டது. வேறு விளையாட்டுக்கள் இந்தியாவில் இருக்கலாம்... பிழையில்லை...

ஆனால் அவை கிரிக்கெட் அளவிற்கு வளரக் கூடாது. அவ்வளவே. இதில் ஊடகங்கள் தெளிவாக இருந்தன... இருக்கின்றன. நிற்க.

இவ்வாறே மற்ற விளையாட்டுகளைப் பின் தள்ளி ஊடகங்களின் துணையோடு பார்ப்பன‌ர்களின் கையில் உள்ள விளையாட்டான கிரிக்கெட் தனியாரின் வசம் இருந்தும் தேச விளையாட்டாக கருதப் பெறும் அளவிற்கு புகழ் பெறுகின்றது. பார்ப்பன‌ர்களைத் தாங்கிப் பிடிக்கும் அரசும் மற்ற விளையாட்டினை வளர்க்காமல் கிரிக்கெட்டுக்கே பல்லவி பாடிக் கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் இன்றைக்கு இந்தியாவின் விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்றே வழங்கப்பெறும் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரையும் குறிக்கும் ஒரு அணியாக இந்த கிரிக்கெட் அணி திகழ வேண்டுமானால் அதில் இன்று இருக்கும் இட ஒதுக்கீட்டு நிலை (70% இடங்களை பார்ப்பன‌ர்களே பிடித்து இருக்கும்) மாறி மக்கள் அனைவரையும் சமமாக திறமையின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கும் இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும் தானே. அவ்வாறு கொண்டு வரப்படாவிடில் பிசிசிஐ என்பதன் அர்த்தத்தை பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட் (Brahmins Control Cricket in India) என்றே நாம் வைத்துக் கொள்ளலாம் தானே.

சில கேள்விகளும் பதில்களும்:

௧) பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றது என்ற ஒரே காரணத்தினாலேயே இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டினை இந்தளவு ஆதரிக்கின்றது என்று நீங்கள் கூறுகின்றீர்கள்? ஏன் அதனை வீரர்களின் திறமையை அரசாங்கம் ஆதரிக்கின்றது என்று நாம் கருதக் கூடாது. ஏன் வீணாக சாதியினை இங்கே கொண்டு வர வேண்டும்?

திறமையினை அரசாங்கம் ஆதரிக்கின்றது என்றால் அனைத்து வகையான விளையாட்டுகளிலும் உள்ள வீரர்களின் திறமைகளையும் அது ஆதரித்து இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து இருந்தால்

1.       தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற சாந்தி இன்று செங்கல் சூளையில் பணி செய்து கொண்டு இருக்க மாட்டார்

2.       தனக்கு பதக்கத்தினைப் பெற்றுத் தந்த வில்லினை தேசிய வில் வித்தை வீராங்கனையான நிஷா ராணி தத்தா விற்று இருக்க மாட்டார்

3.       கபடி உலகக் கோப்பையை வென்ற இந்தியக் கபடி வீரர்கள் வரவேற்க ஆட்கள் யாரும் இன்றி தானியங்கியில் தமது சொந்த செலவினில் சென்று இருக்க மாட்டார்கள்.

இன்னும் பல உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம். சற்று கவனித்துப் பார்த்தோம் என்றால் மேலே நாம் கண்டவர்கள் யாரும் பார்ப்பன‌ர்கள் அல்லர்.

இந்நிலையில் பார்ப்பன‌ர்கள் கையில் உள்ள விளையாட்டும் சரி விளையாட்டு வீரர்களும் சரி செல்வ செழிப்போடு இருக்கும் பொழுது பார்ப்பன‌ர்கள் அல்லாதோர் விளையாடும் விளையாட்டுக்களும் சரி, அந்த வீரர்களும் சரி கவனிப்பாரின்றி இருக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் கூறுவீர்.

௨) என்ன காரணமா...அரசாங்கம் தான் காரணம்? அரசாங்கம் கவனிக்காததற்கு பார்ப்பன‌ர்களைக் குறை கூறுவது எங்கனம் நியாயம்?

அரசாங்கம் காரணம் என்றால் அரசாங்கத்தினை நடத்துபவர்கள் தான் காரணம். இன்று வரைக்கும் மத்தியில் ஆட்சியில் இருந்து இருக்கும் ஆட்சிகள் அனைத்தும் பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து இருக்கின்றன. அது காங்கிரஸ் ஆக இருக்கட்டும் அல்லது பாஜக-வாக இருக்கட்டும்... அனைத்தும் பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

சமீபத்தில் ராகுல் காந்தியும் 'நான் ஒரு பார்ப்பன‌ன்' என்று கூறிய செய்தியும் இங்கே கவனிக்கத்தக்கது.

மேலும் இடதுசாரிக் கட்சியான பொதுவுடமைக் கட்சியாகட்டும் அதன் தலைமையிலும் பார்ப்பன‌ர்களே வீற்று இருக்கின்றனர். இந்நிலையில் அரசாங்கம் தான் மற்ற விளையாட்டுக்கள் வளராது இருக்க காரணம் என்று நாம் கூறினோம் என்றால் அக்குற்றச்சாட்டுகளும் பார்ப்பன‌ர்களையே சென்று அடையும்.

௩) அப்படி என்றால் அரசாங்கம் பார்ப்பன‌ர்களை மட்டுமே கவனிக்கின்றது என்று கூறுகின்றீர்களா?

குறிப்பாக அவர்களையும் மற்ற உயர் சாதியினரையுமே கவனிக்கின்றது என்றுக் கூறுகின்றோம். சான்றாக சதுரங்க விளையாட்டு வீரர் ஆனந்த ஒரு பார்ப்பன‌ர் என்று நாம் அறிவோம். சமீபத்தில் அவர் வென்ற பட்டத்திற்காக தமிழக அரசு அவருக்கு இரண்டு கோடி உருபாய் பரிசுத் தொகையை அளித்துள்ளது. இரண்டு கோடி என்பது சாதாரணத் தொகை அன்று. இத்தகைய ஒரு தொகையினை வேறு சாதியினைச் சார்ந்த வீரருக்கு செயலலிதா வழங்கி இருப்பாரா என்பதும் கேள்விக்குறியே.

௪) விசுவநாதன் ஆனந்த அவர்களால் தமிழகம் உலகப் புகழ் அடைந்து உள்ளது. அவரை பரிசுத் தொகை வழங்கி பெருமைப் படுத்துவதனை தவறு என்று கூறுகின்றீர்களா?

பரிசுத் தொகை வழங்குவது என்பது தவறான ஒன்று அல்ல. ஆனால் எவ்வளவு தொகை வழங்குகின்றோம், எப்பொழுது வழங்குகின்றோம், எவருக்கு வழங்குகின்றோம் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது அல்லவா. ஏற்கனவே அந்த உலகப் போட்டியில் வென்றதற்காக ஆனந்துக்கு கிடைத்த பரிசுத் தொகை கிட்டத்தட்ட ஆறரைக் கோடி. அந்நிலையில் அவருக்கு மேலும் இரு கோடியினை (மின்சாரம் வாங்குவதற்காக காசில்லாது தவித்துக் கொண்டு இருக்கும் வேளையிலும்) வழங்குவது சரியான ஒன்றா?

மேலும் அது தமிழக அரசின் தனிப்பட்ட செல்வமும் அன்று. அது மக்களின் வரிப்பணம்.

உண்மையிலேயே விசுவநாதன் ஆனந்தை சிறப்பிக்க தமிழக அரசினை எண்ணி இருந்தால் அந்த இரண்டு கோடியினைக் கொண்டு ஆனந்தின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி தமிழகத்தில் உள்ள சிறார்களுக்கு சதுரங்க விளையாட்டினை செம்மையாக பயிற்றிவிக்கும் பணியினைச் செய்து இருக்கலாம். அவ்வாறு மேலும் பல திறமையான வீரர்களை உருவாக்கி இருக்கலாம் தானே. அதனை விடுத்து ஏற்கனவே செல்வம் கொழிக்கும் ஒருவருக்கு கூடுதலாக ஒரு மிகப் பெரியத் தொகையினைத் தருவது என்பது சரியான செயலாக அமையாது.

ஆனந்த் மட்டும்தான் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கிறாரா?

கேரம் விளையாட்டில் தொடர்ந்து உலகப் பட்டங்களைப் பெற்று வரும் இளவழகிக்குக் கிடைத்த பரிசுப் பணம் எவ்வளவு தெரியுமா?

பத்து லட்சம் மட்டுமே. அதுவும், தமிழக அரசு தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதாக அவர் பல பேட்டிகள் கொடுத்தபின்பே, வேறு வழியின்றி அந்தப் பரிசுத் தொகையும் அவருக்குக் கிடைத்தது. காரணம், வியாசர்பாடியைச் சேர்ந்த தலித் ஒருவருக்கு மகளாகப் பிறந்ததுதான் அவர் செய்த குற்றம்.

(http://www.tehelka.com/story_main39.asp?filename=cr030508late_breakfast.asp)

௫) ஆதிக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு இருக்கின்றது என்றுக் கூறுகின்றீர்களே ஆனால் இசுலாமிய வீரர்களும் அந்த அணியில் விளையாடி வருகின்றனரே?

சிலருக்கு சில முகமூடிகள் தேவைப் படுகின்றது. இந்தியாவுக்கு தான் ஒரு மத சார்பற்ற நாடு என்ற முகமூடி தேவைப்படுகின்றது. அதே முகமூடி பிசிசிஐக்கும் தேவைப்படுகின்றது. எனவே தான் இசுலாமிய வீரர்களையும் பிசிசிஐ தேர்ந்து எடுக்கின்றது. என்று இந்தியா தனது முகமூடியினைக் களைகின்றதோ அன்று பிசிசிஐயும் தனது முகமூடியினைக் கலைத்து விடும்.

தொடர்புடைய சுட்டிகள்:

http://www.outlookindia.com/article.aspx?218913
http://www.thatscricket.com/news/2009/07/15/being-dalit-is-a-crime-in-indian-cricket.html
https://groups.google.com/forum/#!msg/ethiricom/x7cJtDdNxHQ/CpdCYwtPGOEJ
http://www.governancenow.com/views/columns/medals-and-meddlers

பி.கு:

மேலே கூறிய விடயங்கள் அனைத்தும் சில இணையங்களின் மூலமும் சில நண்பர்களின் தொடர்புகள் மூலமும் பெறப்பட்ட தகவல்களை மையமாக வைத்தே எழுதப்பட்டவை. இதனில் மாற்றுக் கருத்துக்களை எவரேனும் கூற விரும்பினால் தாராளமாகக் கூறலாம்...

கிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 3...


௧) இன்றைய கிரிக்கெட் அணியில் விளையாடும் பதினோரு பேரில் பாதிக்கு மேற்பட்ட இடத்தினை பிடித்து இருப்பவர்கள் பார்ப்பன‌ர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?.

அதாவது இந்திய தேசத்து மக்கள் தொகையில் வெறும் நான்கு சதவீதம் இருக்கும் பார்ப்பன‌ர்கள் கிரிக்கெட் அணியில் 60 சதவீத இடத்தினை பிடித்து இருக்கின்றனர். இந்நிலை இன்று தான் என்று இல்லை கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றை பார்த்தாலே நமக்கு புரிந்து விடும்...

இந்நிலை ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தியாவில் இருந்து வந்துக் கொண்டு இருக்கின்றது என்று. உதாரணத்துக்கு சில பார்ப்பன‌ கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் :

ரவி சாஸ்த்ரி
சுனில் கவாஸ்கர்
சச்சின் டெண்டுல்கர்
ராகுல் டிராவிட்
சௌரவ் கங்குலி
ஜவகல் ஸ்ரீநாத்
வெங்கடேஷ் பிரசாத்
அணில் கும்ப்ளே
V.V.S. லட்சுமணன்
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
சுனில் ஜோஷி
மனோஜ் பிரபாகர்
அஜீத் அகர்கர்
ரோஹித் ஷர்மா
இஷாந்த் ஷர்மா
சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த்
ரவீந்திர அஷ்வின்
சடகோபன் ரமேஷ்
நிலேஷ் குல்கர்னி
L. சிவராம கிருஷ்ணன்
வேங்கர்சர்கார்

இன்னும் இந்தப் பெயர்களின் வரிசை நீண்டு கொண்டே போகும். காரணம் பிசிசிஐ-காக விளையாடிய மக்களுள் பெரும்பான்மையானோர் பார்ப்பன‌ர்களே. இதில் நாம் ஆச்சர்யப்பட வேண்டிய விடயம் ஒன்றும் இல்லை. பிசிசிஐயே பார்ப்பன‌ர்களின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் தானே. ஒரு பார்ப்பன‌ நிறுவனம் பார்ப்பன‌ர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது ஆச்சரியப்படத் தக்க விடயம் அல்ல தானே.

௨) பார்ப்பன‌ர்களுக்கு அடுத்தப்படியாக கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருப்பதில் மற்ற உயர் சாதியினரே முன்னிலையில் இருக்கின்றனர்.

உதாரணத்துக்கு ஜட் இனத்தினைச் சார்ந்தவர்களும் ராஜ்புட் இனத்தினைச் சார்ந்தவர்களும் பெரும்பாலும் இன்று இந்தியாவில் திகழும் சாதியக் கட்டமைப்பில் பார்ப்பன‌ர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். அவர்களே கிரிக்கெட் அணியில் பார்ப்பன‌ர்களுக்கு அடுத்தப்படியாக இடம் பெற்று உள்ளனர். உதாரணம்:

அஜய் ஜடேஜா
விரேந்தர் செஹ்வாக்
கௌதம் கம்பீர்
விராட் கொஹ்லி
M.S. டோனி
யுவராஜ் சிங்
ஹர்பஜன் சிங்
கபில்தேவ்
மேலும் பலர்....!

௩) அதுவும் குறிப்பாக தமிழகத்தினை நாம் இப்பொழுது எடுத்துக் கொள்வோம். தமிழகத்தில் கிரிக்கெட் விளையாடாத கிராமங்கள் கிடையாது... ஏன் தெருக்களே கிடையாது என்றே நாம் இன்றுச் சொல்லலாம். அப்படி ஒரு செல்வாக்கு மக்களின் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கின்றது.

ஆனால் தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை சற்று பார்த்தோம் என்றால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன‌ர்களாகவே இருக்கின்றனர். உதாரணம்...

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
சடகோபன் ரமேஷ்
W.V. இராமன்
L. சிவராம கிருஷ்ணன்
ஹேமங் பதானி
லக்ஷ்மிபதி பாலாஜி
ரவீந்திர அஷ்வின்
S.பத்ரிநாத்
முரளி கார்த்திக்
தினேஷ் கார்த்திக்
அபினவ் முகுந்த்
முரளி விஜய்
இன்னும் பலர்.... இவர்கள் அனைவருமே பார்ப்பன‌ர்கள்.

ஏன் தமிழகத்தில் நன்றாக கிரிக்கெட் விளையாடக் கூடிய ஒரு பிற்படுத்தப்பட்ட வீரனோ அல்லது தாழ்த்தப்பட்ட இனத்தினைச் சார்ந்த வீரனோ இவர்களுக்கு கிட்டவில்லையா என்ன? என்று கேள்வியோடு தமிழகத்தின் பிசிசிஐ தேர்வுக் குழுவைப் பார்த்தால் தேர்வுக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் பார்ப்பன‌ர்கள் என்றே நமக்கு செய்தி வருகின்றது. என்ன விந்தையப்பா... விளையாடுபவர்களும் பார்ப்பன‌ர்கள்... விளையாடுபவர்களைத் தேர்வு செய்பவர்களும் பார்ப்பன‌ர்கள்...

ஆனால் இவர்கள் யாரும் சாதியினைப் பார்ப்பதில்லை. சாதியினைப் பார்க்காமலேயே இந்தளவு ஒரு ஒற்றுமை நிச்சயம் ஆச்சர்யம் தான்...இல்லையா!

௪) இது வரை பிசிசிஐ யின் சார்பாக கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் இரண்டே இரண்டு பேர் தான் தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து வந்தவர்கள் என்றே நமக்குத் தகவலும் கிடைக்கின்றது. அதாவது இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்களில் இருந்து இது வரை இரண்டே இரண்டு பேர் தான் பிசிசிஐ-யால் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் பெயர் நம்மில் எவருக்கும் தெரியாது (பல்வாங்கர் பாலு (Palwankar Baloo) - இவர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விளையாடியவர்), மற்றொருவர் வினோத் காம்ப்ளி. இவர்கள் இருவரையும் தவிர தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட்டினை சர்வதேச அளவில் விளையாட வேறு எவரும் தேர்வாகவில்லை என்பதும் ஒருத் தகவல்.

அதாவது மக்கள் தொகையில் நான்கு விழுக்காடே இருக்கும் பார்ப்பனர்கள் மத்தியில் இருந்து வரிசையாக கிரிக்கெட் வீரர்கள் வந்துக் கொண்டே இருக்கும் பொழுது சமுகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களின் இருந்து மிக மிக குறைந்த அளவிலேயே மக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்றனர். ஆச்சர்யமான விடயம் தான் அல்லவா....!

"கொஞ்சம் பொறுங்கள்...இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கின்றது... பார்ப்பனர்கள் திறமைசாலிகள்... ஆகவே வாய்ப்பினைப் பெறுகின்றனர்...

திறமையில்லாதவர்களுக்கு வாய்ப்பினை தந்து ஒன்றுக்கும் ஆகாத அணியினை உருவாக்கச் சொல்லுகின்றீர்களா" என்ற கருத்து உங்களின் மனதில் இப்பொழுது எழுந்தால்(சிலரின் மனதில் நிச்சயமாக இந்த எண்ணம் எழும்) அவர்களுக்காக...

"ஐயா வணக்கங்கள்... பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்றே வைத்துக் கொண்டோம் என்றால்... அவர்கள் அனைத்துத் துறையிலும் அல்லவா திறமையாக விளங்க வேண்டும்... அனைத்து அணியிலும் அவர்களே சிறந்து விளங்க வேண்டும்... கபடி, ஹாக்கி, கால்பந்து... மற்றும் இன்ன பிற விளையாட்டுகளில் பார்ப்பனர்கள் செய்த சாதனைகள் யாது என்று கூறுவீர்களா?

அந்த விளையாட்டு அணிகளில் பார்ப்பனர்கள் இருக்கின்றார்களா என்பதே சந்தேகம். பார்ப்பனர்கள் மட்டுமே திறமையானவர்கள் என்றால் அனைத்து விளையாட்டிலும் அவர்கள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் திறமைகள் அற்றவர்கள் என்றால் மற்ற விளையாட்டிலும் அவர்கள் திறமையற்றவர்கலாகவே இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் நிலைமை வேறாக அல்லவா இருக்கின்றது.

கபடி, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அல்லவா விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பார்ப்பனர்களின் ஆதிக்கம் அங்கே இல்லையே.

எனவே கிரிக்கெட் விளையாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமே திறமையாக இருக்கின்றனர் என்று நீங்கள் கருதுவது எங்கனம் பொருந்தும்.... வாய்ப்புகளைத் தந்தால் அந்த விளையாட்டிலும் மற்ற மக்கள் சாதனைகள் படைப்பார்கள் என்ற கூற்றினை மறுக்க உங்களால் எங்கனம் முடியும்?".

ஆனால் மற்ற விளையாட்டுக்களை விட கிரிக்கெட்-ஐ பார்ப்பனர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை...

கிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 2...


௨) அப்படி என்றால் பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமா?

ஆம். பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமே.

அதனை அந்த நிறுவனமே கூறியும் இருக்கின்றது. சமீப காலமாக இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் பிசிசிஐ தனது பண பலத்தையும் மற்ற அரசியல் செல்வாக்கினையும் வைத்துக் கொண்டு அரசுக்கு பிடி கொடுக்காமல் ஆடிக் கொண்டி இருக்கின்றது. அதாவது அரசின் சலுகைகளை அந்த தனியார் நிறுவனம் பெற்றுக் கொள்ளுமாம் ஆனால் அரசின் கீழ் அது வராதாம். இதுவே பிசிசிஐ இன் நிலை.

http://www.deccanherald.com/content/130248/bcci-takes-government-says-its.html

http://articles.timesofindia.indiatimes.com/2012-04-27/lucknow/31439613_1_bcci-arjuna-award-sports-federation

௩) அப்படி என்றால் பிசிசிஐ இன் சார்பாக விளையாடும் வீரர்கள் இந்திய விளையாட்டு வீரர்கள் இல்லையா?

நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றீர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனம் உங்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கும். நீங்கள் இன்ன பணியினைச் செய்ய வேண்டும் அதற்கேற்றார்ப் போல் அந்நிறுவனம் சம்பளம் வழங்கும். அந்நிலையில் நீங்கள் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகின்றீர்களே தவிர்த்து அரசாங்க ஊழியர்களாக கருதப்படமாட்டீர்.

அதனைப் போன்றே தான் பிசிசிஐ இன் கிரிக்கெட் வீரர்களும். அவர்களுக்கு பிசிசிஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருக்கின்றது. அவர்கள் பிசிசிஐயிடம் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு அதற்காக விளையாடுகின்றனர். அவர்களைத் தேர்வு செய்வதும் அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சம்பளம் போன்றவற்றை முடிவு செய்வதும் முழுக்க முழுக்க பிசிசிஐ நிர்வாகத்தின் கையிலேயே இருக்கின்றது. இந்திய அரசு அந்த விடயங்களில் தலையிட முடியாது. பிசிசிஐ அதன் விருப்பத்திற்கேற்ப அணியினைத் தேர்வு செய்துக் கொள்ளும்...விளையாடும்... பணம் பார்க்கும்... அரசாங்கம் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்!!! இந்நிலையில் அந்த வீரர்கள் பிசிசிஐயின் வீரர்கள் ஆகின்றனரே தவிர்த்து இந்திய வீரர்கள் ஆக மாட்டார்கள். நிற்க..

இப்பொழுது இரு கேள்விகள் எழலாம்...!

ஒன்று - அட என்னங்க, அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே?

ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர். இந்நிலையில் நன்றாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டையும் அரசின் வசம் தந்து விட்டு அதையும் நாசமாக்கச் சொல்லுகின்றீர்களா?

ஒரு விளையாட்டாவது நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

அரசாங்கம் தேர்வு செய்தால் தான் அவன் இந்திய வீரனாக ஆகின்றானோ... அப்படி என்றால் அரசாங்கம் திறமை இல்லாதவர்களை எல்லாம் சேர்த்து ஒரு அணியை உருவாக்கும்... அதனை இந்திய அணி என்று ஏற்றுக் கொள்வீர்... ஆனால் திறமையான வீரர்களை கொண்டு ஒருவன் தனியாக அணியினை அமைத்தால் அதனை இந்திய அணி என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்? அப்படித் தானே...!

பதில்: அரசாங்கம் என்பது மக்கள் தேர்ந்தெடுத்த/ மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பினை மக்கள் கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் தனியார் நிறுவனங்கள் என்பன அவ்வாறு இல்லை. அவர்களை மக்கள் கேள்விக் கேட்க முடியாது.

இன்றைய நிலையில் பிசிசிஐ முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்டு ஒரு அணியினை அமைத்தாலும் அதனை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் திறமையின் அடிப்படையில் அணியினைத் தேர்வு செய்யலாம், மொழியின் அடிப்படையில் தேர்வு செய்யலாம், சாதியின் அடிப்படையிலும் தேர்வு செய்யலாம்...அது அவர்களின் விருப்பம். அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

அந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் அதன் விருப்பதிற்கேற்ப தேர்வு செய்யும் ஒரு அணியினை இந்திய நாட்டின் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அணியாக நாம் கருத முடியாது. ஏனெனில் அந்த அமைப்பினை குறித்து நாம் கேள்விகளோ அல்லது அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கங்களோ நாம் எழுப்பவும் கோரவும் முடியாது. எனவே மக்களின் பங்கு சிறிதும் இல்லாத தனியார் அமைப்புகள் தேர்வு செய்யும் அணியினை நாம் எக்காரணம் கொண்டும் மக்கள் அனைவரையும் குறிக்கும் இந்திய நாட்டு அணியாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமை இல்லாதவர்களை அரசாங்கம் தேர்ந்து எடுத்தால் அதனை சுட்டிக் காட்டி கேள்விகளை கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால் அதே உரிமை தனியார்களிடத்து செல்லுபடியாகாது.

இரண்டு - பிசிசிஐ இன் அணி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அதனை ஏன் ஊடகங்கள் இந்திய அணி என்று கூறுகின்றன... இந்திய அரசும் ஏன் அதனை மெளனமாக வேடிக்கைக் கண்டுக் கொண்டு இருக்கின்றது?
இந்த கேள்விக்கும் சரி முதல் கேள்வியில் நான் பதில் கூறாது விட்ட பகுதியான 'அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே?

ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர்' என்பதற்கும் ஒரே விடை.

அரசியல்!

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், பார்ப்பன‌ அரசியல்!

ஆம். பார்ப்பன‌ அரசியலே மற்ற விளையாட்டுத் துறைகள் இந்திய நாட்டில் வளராது இருப்பதற்கும், கிரிக்கெட் இவ்வளவு பெரிய விளையாட்டாக வளர்ந்து நிற்பதற்கும் காரணம் ஆகும்.

"ஆரம்பிச்சிடீங்களா...இதுக்கும் பார்ப்பன‌ன் தானா பழி போடுவதற்கு கிடைத்தான்" என்று நண்பர்கள் சிலர் இந்நேரம் பேச ஆரம்பித்து இருப்பர். இந்நிலையில் நாம் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்தோம் என்றால் நம்மை 'இவன் பார்ப்பன‌ர்களை குறை சொல்வதையே குறியாக வைத்து இருக்கின்றான்... சாதிகளை யாரும் பார்க்காத இக்காலத்திலும் சாதியினைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்' என்று பழியினை நம் மீது திருப்பி விடுவர். எனவே நாம் குற்றச்சாட்டுகளோடு சில ஆதாரங்களையும் வைக்க வேண்டி இருக்கின்றது. அதற்கும் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது...

கிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 1...


நீண்ட நாட்களுக்கு முன்னர் இணையத்தில் உலாவிக் கொண்டு இருந்த பொழுது ஒரு குறிப்பிட்ட செய்தியினைத் தாங்கிக் கொண்டு இருந்த ஒரு படத்தினைக் காண நேர்ந்தது. அந்தச் செய்தியின் அடிப்படைக் கரு இது தான்..

"அனைத்து அரசுத் துறைகளிலும் திறமைகள் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுக்காது சாதியின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு சலுகைகளும் வழங்குகின்றனர்.

பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள் என்று வேலைகளை சாதிகளின் அடிப்படையில் வழங்குகின்றனர்.

இத்தகைய நடைமுறையை கிரிக்கெட் விளையாட்டிலும் அரசு நடைமுறைப்படுத்தலாமே...

இந்திய அணியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இத்தனை இடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை இடங்கள் என்று இடங்களை வழங்கி அவர்களுக்கு ஏற்ப கிரிக்கெட் ஆட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றலாமே. தாழ்த்தப்பட்டவர் ஒரு ஓட்டம் எடுத்தால் அதற்கு நான்கு ஓட்டங்கள் வழங்கலாம்... பிற்படுத்தப்பட்டோர் ஒரு ஓட்டம் எடுத்தால்  இரு ஓட்டங்கள் வழங்கலாம்...இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியின் சட்டங்களையும் மாற்றலாமே...

திறமைக்குத் தான் இந்நாட்டிலே மதிப்பு கிடையாதே" என்பதே அக்கருத்தின் சாரம்.
http://www.hoaxorfact.com/Politics/wipro-chairman-mr-azim-prem-jis-comment-on-reservation.html
இட ஒதுக்கீட்டை தாக்குவதாக அமைந்து இருக்கும் இக்கருத்தினை விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி கூறியதாகவே இணையத்தில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது மெய்யா என்பது எனக்குத் தெரியவில்லை...மெய்யாக இருப்பீனும் அக்கருத்தினை கூறியவரைப் பற்றி காணவோ அல்லது விமர்சனம் செய்யவோ நமக்கு எந்த ஒரு தேவையும் இல்லை. நமது இலக்கு அவர்கள் கூறியதாக கூறப்படும் கருத்தே ஆகும்.

இட ஒதுக்கீட்டை கிரிக்கெட் விளையாட்டிலும் கொண்டு வர வேண்டியது தானே என்று நக்கலாக கூறப்பட்டு இருக்கும் கருத்தினைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது... கூடவே கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியும் தான்.

இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள மக்கள் பலருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட் மட்டுமே. கிரிக்கெட் விளையாட்டுக்கு அத்தகைய வரவேற்பு...விளம்பரம்...மோகம் மக்களின் மத்தியில் இருக்கின்றது. இத்தகைய சூழலில் கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியோ அல்லது அந்த விளையாட்டு வீரர்களை பற்றியோ நாம் மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் கூற ஆரம்பித்தால் இந்திய மக்களால் 'தேச விரோதி..தேச பக்தி இல்லாத அற்பப் பதர்..' என்றும் இன்னபிற வாழ்த்துரைகளிளாலும் சிறப்பிக்கப்படுவது நிச்சயம்.

ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாது நாம் சில விடயங்களைக் கூறியாக வேண்டிய நிலை நமக்கு இருக்கத் தான் செய்கின்றது. சரி இப்பொழுது நம்முடைய கருத்துக்களைக் காணலாம்...

இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயமாக இட ஒதுக்கீட்டினை அரசு கொண்டு வந்தாக வேண்டும் என்பதே நமது முதன்மையான கருத்து. வில்லங்கமான கருத்தாகப் படுகின்றது தானே. ஆனால் இந்தக் கருத்தினை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது. ஏனென்றால் எனது இந்தக் கருத்தில் சில பிரச்சனைகள் இருக்கின்றன.

முதல் பிரச்சனை :

இந்திய கிரிக்கெட் அணி என்ற ஒரு அணி உண்மையிலேயே நம் நாட்டில் கிடையாது. பிசிசிஐ (BCCI) என்ற தனியார் நிறுவனத்தின் அணி தான் இன்று இந்திய அணி என்ற பெயரில் விளையாடிக் கொண்டு இருக்கின்றது. மற்றபடி இந்திய அரசுக்கும் அந்த அணிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.
இரண்டாவது பிரச்சனை,
அரசு நிறுவனங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டினை அரசு அமல்படுத்த முடியும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வரும் சட்டத்தினை அரசாங்கம் இன்னும் இயற்றவில்லை. ஆகையினால் பிசிசிஐ தேர்ந்து எடுக்கும் கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டினை இந்திய அரசால் கொண்டு வர முடியாது. நிற்க.

இப்பொழுது சில... இல்லை இல்லை பல கேள்விகளும் மாற்றுக் கருத்துக்களும் உங்களின் மனதில் நிச்சயம் தோன்றி இருக்கும். அவற்றிக்கு நான் விடையினைக் கூற வேண்டும் என்றால் நாம் சில விடயங்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

௧) இந்திய அணி என்றால் என்ன?

இந்திய தேசத்து அணி என்றால் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியான விளையாட்டுத் துறையின் கீழ் அவை வர வேண்டும். அரசாங்கமே விளையாட்டு வீரர்களையும் அணிகளையும் தேர்வு செய்யும். அவர்களுக்கு உரிய ஊதியங்கள் மற்றும் இன்ன பிற சலுகைகள் ஆகிய அனைத்தையும் அரசே கவனித்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய அரசாங்கக் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள்... அவற்றின் அனைத்து செயல்பாடுகளும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்... அத்தகைய கல்லூரிகளையே நாம் அரசுக் கல்லூரிகள் என்று ஏற்றுக் கொள்வோம். மாறாக தனியார் கல்லூரிகளை நாம் அரசாங்க கல்லூரிகள் என்று அழைக்க முடியாது. அவ்வாறே இந்திய விளையாட்டு அணிகளிலும் எந்த விளையாட்டுகளில் அனைத்து பொறுப்புகளும் அரசின் வசம் இருக்கின்றனவோ அந்த விளையாட்டு அணிகளே இந்திய அணிகள் ஆகும். மாறாக எந்த ஒரு தனியார் நிறுவனமோ தனது அணியினை இந்திய அணியாக கூறுவது இயலாது... அது சரியான ஒன்றாகவும் இருக்காது...

மறைக்கப்படும் மறுக்கப்படும் தன் உயிரை இழந்த நிகழ்கால தமிழ் தேசிய லட்சிய போராளி சுபா முத்துக்குமார்...


தமிழ்த்தேசிய மீட்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு ஆயுத வழியில் தமிழ்நாடு விடுதலை பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தவர்..

அந்த முடிவுக்கு வருவதற்கு ஆயுத வழியில் போராடி உயிர்நீத்த தமிழ்நாடு விடுதலை படையின் தோழர். தமிழரசனையே முன்னோடியாக கொண்டவர்..

1. ஆயுத பயிற்சிக்காக ஈழம் சென்றார். அங்கு தேசிய தலைவர் வழிகாட்டலின்படி சிங்கள படைக்கு எதிராக புலிகளின் பல்வேறு வெற்றிகரமான பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்றார்.

2. தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு (சைபர் விங்) தேர்வு செய்யப்பட்டார்.

3. தமிழீழத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றியும் பயிற்சியும் பெற்று தமிழ்நாடு திரும்பினார்.

4. தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்த்தேசிய மீட்சிப்படை தலைமை ஏற்று வழி நடத்தினார். அத்துடன் புலிகளுக்கு தேவையான பொருட்களையும் இங்க்கிருந்து அனுப்பி வந்தார்..

5. சென்னை சிறையிலிருந்து தப்பித்த போராளிகள் ரோமியோ மற்றும் அவர்களது தோழர்களை பத்திரமாக தமிழ் ஈழம் அனுப்பி வைத்தார்.

6. வேலூர் கோட்டை சிறையிலிருந்து சுரங்கம் அமைத்து நாளு பெண் போராளிகள் உட்பட 43 விடுதலை புலி போராளிகளை பொறுப்பேற்று ஈழத்துக்கு அனுப்பி வைத்தார்

7. புதுக்கோட்டை மனமேல் குடியில் ஈழத்துக்கு பொருட்கள் அனுப்ப காத்திருந்த போது தமிழ் நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்டு. தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படார்...

8. இரண்டாரை ஆண்டுக்கு பிறகு பினையில் விடுதலை ஆனார்.. விடுதலை ஆன வுடன் சந்தன காட்டில் வீரப்பனாருடன் சேர்ந்து போராட்டக் களம் அமைத்தார்.. வெள்ளி திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் தலைமையேற்று தாக்கதல் நடத்தி ஆயுதங்களை எடுத்துச் சென்றார்.. கண்ணட நடிகர் ராஜகுமாரை பினையாக கொண்டு வருவதற்கு களம் அமைத்து கொடுத்தார்...

9.ராஜகுமாரை விடுவிக்க தமிழரின் தாக பிரச்சனையான காவிரி நீர் பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு... அதிரடி படையால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு வாழ்வாதாற தீர்வு போன்ற கோரிக்கைகளோடு சுபா முத்துக்குமாரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வீரப்பனார் முன் வைத்தார்.

10. 2 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பனாருக்கு பொருட்கள் கொண்டு சென்றதாக கொளத்தூர் மணி அவர்களுடன் கைது செய்யப்பட்டார். பிறகு கண்ணட சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்.. 1992 கர்னாடகத்தில் நடந்த காவிரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வெடிகுண்டு தயாரித்ததாக கைது செய்யப்பட்டு பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டார்.

11. நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு பினையில் வெளியில் வந்தார் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் அரசியலில் களம் புகுந்தார்.. மதுரையில் அறுத்தெரிவோம் முள்வேலி முகாமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். நாம் தமிழர் கட்சி மீண்டும் உருவாகி தமிழ்தேசியளர்களை ஒருங்க்கினைத்து வலுமை மிக்க இயக்கமாக மாற்றி இரண்டு ஆண்டு வலம் வந்தார்..
தமிழகம் முழுவதும் வலிமைப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் தமிழின துரோகிகளால் 15.02.2011 அன்று இரவு 9 மணி அளவில் புதுக்கோட்டை நகரத்தில் படுகொலை செய்யப்பட்டார்...!

கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தமிழ் வெறுப்பு...


தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்...

தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின்  தாய்ப் பால் பைத்தியம் என்ற நூலிலிருந்து...

ஏன்டா நாயே நீ உன் தாய் மொழியை மறைத்து தமிழன் வேஷம் போட்டு தமிழனை ஏமாற்ற முடியாது...


ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா எதிர்த்த GST, NEET, உணவு பாதுகாப்பு சட்டம், உதய மின் திட்டம் போன்ற எல்லாவற்றிற்கும் ஒப்புதல் கொடுத்தது இந்த ஓபிஎஸ் யோக்கியன் தான் மக்களே...


ஜல்லிக்கட்டுக்காக போராடிய மக்கள் மீது தடியடி நடத்தி உலகமே காரி துப்ப வச்சுட்டு.. இப்போது வந்து யோக்கியன் மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கான் டயர் நக்கி பய...

குட்கா குறித்து என் மீது தவறான கருத்துக்கள் காழ்ப்புணர்ச்சியால் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை...


ஆதாரமற்ற குற்றச்சாட்டு என் மீது வேண்டுமென்றே வைக்கப்படுகின்றது எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்...