14/04/2019

பள்ளி மாணவி பலாத்காரம்...


திருநெல்வேலி : நெல்லை அருகே 9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கிறிஸ்தவ மதபோதகர் டேவிட் 50, கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள கன்கார்டியா மேல்நிலை பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற மாணவிகள், அருகில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி விடுதியில் தங்கியுள்ளனர்.

அங்குள்ள 14 வயது 9ம் வகுப்பு மாணவியை, பள்ளியின் 7ம் வகுப்பு ஆசிரியர் டேவிட் தினமும் தவறாக தொட்டு பழகினார். இதுகுறித்து மாணவி, வகுப்பு ஆசிரியை, தலைமையாசிரியரிடம் புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் மாணவியை அடிக்கடி சத்துணவு கூடத்திற்கு அழைத்துச்சென்று, டேவிட் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சக மாணவிகளிடம் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்தார்.

மாணவிகளின் பெற்றோர் மூலம் இத்தகவல் நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தேவானந்திற்கு தெரியவந்தது. நேற்று தேவானந்தம் பள்ளிக்கு சென்று மாணவியிடம் நடத்திய விசாரணையில் உண்மை தெரியவந்தது.

அவரின் புகாரின் பேரில் வள்ளியூர் மகளிர் போலீசார், டேவிட்டை கைது செய்தனர்.

டேவிட், கீக்குளம் கிறிஸ்தவ ஆலயத்தில் மதபோதகராகவும் உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் கூறுகையில், இச்சம்பவம் விடுதியின் ஏரியா மானேஜராக இருக்கும் ஜெயதாஸ் என்பவருக்கும் தெரியும்.

அவரும் டேவிட்டும் ஒரே சர்ச்சில் மதபோதகர்களாக இருப்பதாலும், ஜெயதாசின் மனைவி எலிசபெத், அதே பள்ளியில் ஆசிரியையாக இருப்பதாலும் இந்த சம்பவத்தை மூடி மறைத்துள்ளனர். ஆசிரியை, தலைமையாசிரியர், விடுதி மேலாளர், அவரது மனைவி மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்...

எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை விதைத்து இன்பமான வாழ்க்கை வாழ வீடியோ பாருங்க...




Subscribe The Channel For More News...

நான் vs ஆன்மா...


1. ஆணவம் தனக்கு மட்டும் சேவை செய்ய முயலும்...
ஆன்மா மற்றவர்களுக்கும் சேவை செய்ய முயலும்...

2.ஆணவம் எப்பொழுதும் வெளிப்புறமாக அங்கீகரிக்க முயலும்...
ஆன்மா எப்பொழுதும் உள் நம்பகத்தன்மையையாய் இருக்க முயலும்...

3.ஆணவம் வாழ்க்கையை போட்டி மனப்பான்மையோடு பார்க்கும்..
ஆன்மா பரிசாய் கொடுத்த வாழ்க்கையாய் பார்க்கும்....

4.ஆணவம் தன்னை மட்டும் பாதுக்காக முயலும்..
ஆன்மா மற்றவரையும் பாதுக்காக முயலும்...

5.ஆணவம் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்கும்..
ஆன்மா உள்தொற்றத்தை பார்க்கும்...

6.ஆணவம் பற்றாக்குறையை உணரும்..
ஆன்மா மிகுதியை உணரும்...

7.ஆணவம் அழியும்..
ஆன்மா அழியாது...

8. ஆணவம் காமத்தை ஈர்க்கும்...
ஆன்மா அன்பை ஈர்க்கும்...

9. ஆணவம் ஞானத்தை தேடும்...
ஆன்மா ஞானமாகவே இருக்கும்...

10.ஆணவம் பரிசை மட்டும் அனுபவிக்கும்...
ஆன்மா வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும்...

11.ஆணவம் பல வலிகளுக்கு காரணமகா இருக்கும்...
ஆன்மா மனக்காயங்களை ஆற சிகிச்சை முறைக்கு காரணமாக இருக்கும்...

12.ஆணவம் இறைவனை நிராகரிக்கும்...
ஆன்மா இறைவனை அரவணைக்கும்...

13.ஆணவம் பூர்த்தி செய்ய முயலும்...
ஆன்மா அழியாமல் முழுமையாய் இருக்கும்..

14. ஆணவம் என்பது நான்...
ஆன்மா என்பது நாம்...

நடிகர் ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்...


பெரியார் என்கிற கன்னட ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் உண்மை முகம்...


தமிழ் நாடு தமிழருக்கே - 1938...

திராவிடநாடு திராவிடருக்கே - 1939...

விடுதலையில்..

எவ்வளவு தெளிவாக தமிழனை ஏமாத்தி இருக்கிறான் ...

இன்று வரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தமிழ்நாடு தமிழருக்கே என்று சொன்னார்  சொன்னார் என்று திருட்டு திராவிட வியாதிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...

சரி அதையும் ஆராய்ச்சி செய்து பார்த்தால் ஆண்டை கவனிக்கும் போது தான் பின்னாளில் இவரின் துரோகம் தெரியுது...

சிறுமிகள் ஆபாசம் வீடியோ - விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பும் மக்கள் புரட்சி...


https://youtu.be/8D0KDciKWjg

Subscribe The Channel For More News...

இலக்கிய இலக்கணம் (இசை)...


யானை, நாய், பூனை, கிளி, காக்கை, மயில் முதலிய உருவ பேதங்களைச் சிறு குழந்தைகளும் பகுத்து அறிகின்றனர். பின்பு அக்குழந்தைகள் எல்லோரும் பேசுவதிலிருந்தும் அவற்றின் வெவ்வேறு பெயர்களைத் தாமே அறிந்து கொள்கின்றனர். நாளடைவில் அவர்கள் செய்கை, குணம், உருவம் முதலியவற்றை எடுத்துக்கூறவும் முயலுகின்றார்கள்.

இவைபோல இசையுலகாவிய சங்கீத உலகத்தில் நிறப்பண்களின் (இராகங்களின்) விகற்பங்கள், பாட்டின் விகற்பங்கள், இசைக்கருவிகளின் ஒலிவிகற்பங்கள், அவற்றின் உருவம், அவற்றின் உருவம், அவற்றைத் திரும்பச் சொல்லும் திறமை முதலிய இவை, இயற்கையில் பல தடவை கேட்பதனால் அடைய பெறுகின்றன. இந்த அறிவு இலக்கிய அறிவு எனப்பெறும்.

யானைக்கும் பூனைக்கும் என்ன பேதம், ஆட்டிற்கும் மாட்டிற்கும் என்ன பேதம், குதிரைக்கும் கழுதைக்கும் என்ன பேதம், குரங்கிற்கும் மனிதனுக்கும் என்ன பேதம் என்பவற்றை நேரில் பார்த்துக் கவனித்து அறிந்தபடி அவற்றின் வேற்றுமையான அடையாளங்களை ஒருவன் எடுத்து விவரமாய் கூறுவதே இலக்கணப் பாடமாகும்.

இலக்கியமென்பது ஒன்றை மேற்பரப்பாய்ப் (ஸ்தூலமாய்) பார்த்து அறிவதைக் குறிக்கும் போது, இலக்கணமென்பது அதன் வெவ்வேறு பாகங்களின் அங்க அடையாளங்களை எடுத்துக் கூறுவதை குறிப்பதாகும்...

பாஜக - அதிமுக கலாட்டா...


வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தை ஆதரித்து தேனி பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேச்சு...

கிஸ் மிஸ் பழம் எனும் உலர் திராட்சை பற்றிய தகவல்...


கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் கு ணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

இதில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சியபின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடகாத்திரமாக வளரும்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டுக் காய்ச்சி 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் நிவாரணம் பெறலாம்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்...

வேலூர், தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்படுமா..?


https://youtu.be/PPubvy8nfn0

Subscribe The Channel For More News...

அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்...


உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்து விட்டால், வாய்வாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும்.

இதோ அதனை சரி செய்வதற்கான டிப்ஸ்...

அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடித்தால் ஏப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.

சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

தினமும் ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

இதில் ஏதாவது ஒற்றை தினமும் பின்பற்றி வந்தால் ஏப்பம் வரும் போது மற்றவர் எதிர் அசிங்கப்படாமல் தப்பிக்கலாம்...

பாஜக அமித்ஷாவின் மதவெறி பேச்சு... இந்துக்கள் அல்லாதோரை நாட்டை விட்டு விரட்டுவோம் என்று அதிரடி...


https://youtu.be/pe2bzJbQk9o

Subscribe The Channel For More news...

சூடான குடிநீர்...


நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

அப்படியென்றால் இது உங்களுக்குத் தான் உங்களுக்காக...

உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்...

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்
உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கி விடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.

இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு...

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும்.

தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாரடைப்பு வரும் போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.

60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும் போது அவர்களால் எழுந்து கொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்து விடுவர்.

தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.

ஆகவே எப்பொழுதும் கவனமாகவும்
எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்...

நம்புங்கள்... நம்மை ஆளும் அரசாங்கம் நமக்கானது என்று...


திருவாரூர் அருகே வயிற்றில் குழந்தையை சுமந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்...


திருவாரூர் அருகே 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 18 வயதான இளைஞர் ஒருவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த இடையர் நத்தம் என்ர பகுதியை சேர்ந்த பிரவீன் குமார், எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த 10 வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்தான். காதலை பயன்படுத்தி, அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை பேசி உல்லாசம் அனுபவித்துள்ளான். ஆனால், அந்த மாணவி கர்ப்பமாகிவிட்டார்.

கர்ப்பம், என தெரிந்தவுடன் அந்த மாணவியை ஒதுக்க துவங்கினான். இதனால், இது குறித்த அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவிக்க, மாணவியின் பெற்றோர் தனது மகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன் குமார் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் பிரவீன் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்...

சொதப்பிய திமுக சறுக்கிய கனிமொழி, போஸ்டர் அடித்து பங்கப்படுத்திய பொதுமக்கள்...


https://youtu.be/nEBfKKI0Z-E

Subscribe The Channel For More News...

ஜாலியன் வாலாபாக் படுகொலை நூறாவது நினைவு தினம் இன்று...


நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. எனவே விடுதலை வேட்கையை அகற்றவும், மக்களின் கருத்துரிமையைப் பறிக்கவும் (1919) ரௌலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இக்கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசு ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பியது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கூட்டத்தை நோக்கிச் சுட உத்தரவிட்டார் ஜெனரல் டயர். பத்து நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 1650 தடவைகள் சுடப்பட்டன. இச்சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது...

சத்தியம் செய்த வன்னியர்கள், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்.. கலக்கத்தில் ஸ்டாலின்...


https://youtu.be/6ZuhalUFL7Q

Subscribe The Channel For More News...

தமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்...


தமிழகத்தில் எந்த மாவட்டத்தில், எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்...

1. சிம்மக்கல் - கறி தோசை, கோலா உருண்டை.
2. நடுக்கடை - இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா.
3. சிதம்பரம் -கொத்சு.
4. புத்தூர் -அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்.
5. திருவானைக்கா - ஒரு ஜோடி நெய் தோசை.
6. கும்பகோணம் - பூரி-பாஸந்தி.
7. ஸ்ரீரங்கம் - இட்லி பொட்டலம்.
8. மன்னார்குடி - அல்வா.
9. கூத்தாநல்லூர் - தம்ரூட்.
10. நீடாமங்கலம் - பால்திரட்டு.
11. திருவையாறு - அசோகா.
12. கும்பகோணம் - டிகிரி காபி.
13. விருதுநகர் - பொரிச்ச பரோட்டா.
14. கோவில்பட்டி - கடலை மிட்டாய்.
15. ஆம்பூர் - தம் பிரியாணி.
16. நாகர்கோவில் - அடை அவியல்.
17. சாத்தூர் - சீவல்.
18. திருநெல்வேலி - இருட்டுக் கடை அல்வா.
19. ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா.
20. செங்கோட்டை - பார்டர் கடை. பரோட்டா, நாட்டுக் கோழி வறுவல்.
21. மணப்பாறை - அரிசி முறுக்கு.
22. கீழக்கரை - ரொதல் அல்வா.
23. திண்டுக்கல் - தலப்பாக் கட்டி பிரியாணி.
24. பண்ருட்டி - முந்திரி சாம்பார்.
25. மதுரை - ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்.
26. சாயல்குடி - கருப்பட்டி காபி.
27. பரமக்குடி - சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா.
28. பழனி - சித்தநாதன் பஞ்சாமிர்தம்.
29. கமுதி - மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி.
30. ‪புதுக்கோட்டை - முட்டை மாஸ்‬.
31. தூத்துக்குடி - மக்ரூன்.
32. சௌக்கார் பேட்டை - மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி.
33. கன்னியாகுமரி - தேங்காய் சாதம், மீன் குழம்பு.
34. ராமநாதபுரம் - கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்.

35. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும் தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பாயிருக்கும்.

அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில...

1. குழிப்பணியாரம்.
2. வாழைப்பழ தோசை.
3. எண்ணெய் கத்தரிக்காய்.
4. பால் பணியாரம்.
5. பூண்டு வெங்காய குழம்பு.
6. ரவா பணியாரம்.
7. பால் கொழுக்கட்டை.
8. சேமியா கேசரி.
9. மோர் குழம்பு.
10. நாட்டுகோழி மிளகு வறுவல்.
11. இறால் தொக்கு.
12. நாட்டுக் கோழி ரசம்.
13. நண்டு மசாலா.
14. வெண்டைக்காய் புளிக்கறி.
15. பருப்பு சூப்.
16. ரிப்பன் பக்கோடா.
17. பருப்பு உருண்டை குழம்பு.
18. குருமா குழம்பு.
19. தேன்குழல்.
20. கருப்பட்டி பணியாரம்.
21. சீயம்.
22. மாவுருண்டை.

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்..

கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?

இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமே தான்னுங்கிறது நிதர்சமான உண்மை...

மீண்டும் டிவியை அடித்து நொறுக்கிய கமல்.. இவ்வளவு ஆத்திரம் ஏன் தெரியுமா.?


https://youtu.be/LL6TCKpl19U

Subscribe The Channel For More News...

வந்தேறி திருட்டு திராவிடத்தை விழுத்துவோம்...


ஒரு இனத்தின் அடையாளத்தை தன் அடையாளமாக மாற்றுவது எவ்வளவு பெரிய கேவலம்...

திராவிடத்தின் வரையறை தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழர் என்றால் அந்த மாநிலங்கள் ஏன்.. திராவிடத்தை ஏற்கவில்லை..? என கேள்விகளுக்கு இதுவரை யாரும் பதிலளிக்க வில்லை..

காரணம் அந்தந்த மாநிலங்கள் அவர்களுடைய மண் மற்றும் மொழி சார்ந்த அரசியலை ஏற்றுக் கொண்டன.. ஆனால் தமிழ்..?

திமுக ஸ்டாலின் மருமகன் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் ரகசிய சந்திப்பு...


https://youtu.be/NfBaVnq-WY8

Subscribe The Channel For More News...

வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?


நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல...

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்...

மேலும் படியுங்கள்...

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை.

காரணம் பசு வறட்டியில் உள்ளது.

நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம்.

அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர்.

இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும்.

ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே.

இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது.

சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர்.

ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...

இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது...

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை...

அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்...

இதுவே பழக்கமா போயிடுச்சி... நடிகை குஷ்பு சொல்வதைப் பாருங்க...


https://youtu.be/9Fu3_BXGeMc

Subscribe The Channel For More News...

அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் போலீசாரால் கைது...


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுரை, ரெட்டியார்சத்திரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர் வழிப்பறி நடந்தது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தர்மா மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார், திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதித்யா கார்த்தி (வயது 19), விஜயபாண்டி (20), அசோக்குமார் (19), சூர்யாகுமார் (17) என்று தெரியவந்தது. இவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் தம்மணம்பட்டி பிரிவில் கன்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்து கொண்டிருந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சம்மந்தன் (25) என்பவரை அரிவாளால் வெட்டி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.

இதேபோல் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்மணம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை வழிமறித்து செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுமட்டுமின்றி மாவட்டத்தின் பிற இடங்களிலும் சிலரை அடித்து செல்போன், பணம் பறித்துள்ளனர். இது தொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 12 செல்போன்கள், 2 அரிவாள்கள், ஒரு கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்...