22/11/2017

அணு...


அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ... அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே..

சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக் கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல்..

ஒரணுவை ஆயிரங் கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள்.

பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள்.

அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்..

சித்தர்கள் :

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் , மக்களை நல்வழி படுத்தும் சான்றோர்கள்.

நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள்.

அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம்.

தீராத நோய்களுககெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு.

கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர்.

இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்..

இதையும் இன்று சித்தா என்று ஆங்கில தழுவலில் கூறும் மூடர்களை என்ன வென்று சொல்வது ..

வானியல் அறிஞர்கள் :

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் அனைவரும் தமிழ் மொழியில் பயின்றவர்களே.

சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும்.

தமிழர்கள் என்றோ கண்டு பிடித்ததை , ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்...

தீரன் - நாயகன் ஐஜி ஜாங்கிட் பவரியா கொள்ளையர்களைப் பிடித்தது எப்படி?



2005ல் தமிழ்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த பவரியா கொள்ளைக் கும்பலை தமிழக காவல்துறையினர் பல மாத முயற்சிக்குப் பிறகு கைதுசெய்தனர்.

சமீபத்தில் வெளியான தீரன் திரைப்படத்தின் கதை இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. மிகவும் அஞ்சப்பட்ட இந்த பவரியா கொள்ளையர்களை காவல்துறை கைதுசெய்தது எப்படி?

2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனக்குளம். உள்ளடங்கி அமைந்திருந்தது அ.தி.மு.கவின் கும்மிடிப்பூண்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சருமான சுதர்சனத்தின் வீடு. தமிழகத்தை அச்சத்துக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம்.

அதிகாலை 2.30 மணியளவில் அந்த கொள்ளைக் கும்பல் உள்ளே நுழைந்தது. சுதர்சனம் முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். மகன் விஜயகுமாரும் மருமகளும் தரைத் தளத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த அந்தக் கும்பல், கதவைத் திறந்த மற்றொரு மகனான சதீஷைத் தாக்கியது.

சத்தம் கேட்டு மாடியிருந்து இறங்கிவந்த சுதர்சனத்தை அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன் நாட்டுத் துப்பாக்கியால் சுட, அந்த இடத்திலேயே இறந்தார் அவர்.

வீட்டிலிருந்த ஐம்பது பவுன் நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறி இருளில் மறைந்தார்கள் அந்த ஆறு பேரும். இந்தக் கொள்ளச் சம்பவம் தமிழகத்தையே பீதிக்குள்ளாக்கியது.

இதற்கு முன்பாகவும் தமிழத்தின் வடக்கு, மேற்கு மாவட்டங்கள் பலவற்றிலும் குறிப்பாக அவினாசி, வாலஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 23 இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தன. பலர் உயிரிழந்திருந்தார்கள்.

1995ல் வேலூர் மாவட்டம் வாலஜாபாதில் டாக்டர் மோகன் குமார் என்பவர் வீட்டைத் தாக்கி கொள்ளை நடைபெற்றிருந்தது. இதில் மோகன் குமார் கொல்லப்பட்டார். அவரது மனைவியும் இரு குழந்தைகளும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். 10 ஆண்டு இடைவெளியில் நடந்த இதுபோன்ற 24 கொள்ளைச் சம்பவங்களில் மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 63 பேர் காயமடைந்தனர். சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தனர்.

2005ஆம் ஆண்டு சம்பவத்திற்குப் பிறகு அப்போதைய டிஜிபி ஏ.எக்ஸ். அலெக்ஸாண்டர், இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தார். எஸ்.ஆர். ஜாங்கிட் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தப் படையில் 4 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 8 ஆய்வாளர்கள், 12 துணை ஆய்வாளர்கள், 4 கைரேகை நிபுணர்கள், 50க்கும் மேற்பட்ட பிற காவலர்கள் இடம்பெற்றனர்.

கொள்ளை நடந்த இடத்தை ஆராய்ந்ததில் துப்பாக்கியின் காலி ரவை ஒன்று, செருப்பு ஒரு ஜோடி ஆகியவை கிடைத்தன. இவையே ஆரம்பகட்ட துப்புகள். இதை வைத்துக்கொண்டு துப்பு துலக்கும் பணியைத் துவங்கியது காவல்துறை.

முதல்கட்டமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி என தமிழகத்தில் இதற்கு முன்பாக இதேபோல நடத்தப்பட்ட தாக்குதல் - கொலை - கொள்ளைச் சம்பவங்கள் ஆராயப்பட்டன. அவை அனைத்திலும் ஒரு ஒற்றுமை தென்பட்டது. கொள்ளை நடந்த வீடுகள் எல்லாமே தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக அமைந்திருந்தன. எல்லாமே பணக்கார, தனி வீடுகள். இந்த சம்பவங்கள் எல்லாவற்றிலும் தேவையின்றி கொடூரமாக வன்முறை பிரயோகிக்கப்பட்டிருந்தது. .315 அளவுள்ள ரவையைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருந்தது. 5-7 பேர் கொண்ட கும்பலே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டிருந்தது.
தாக்குதல் நடத்த இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. பாலியல் வன்முறை எதுவும் நடத்தப்படவில்லை. எல்லா சம்பவங்களுமே இரவில்தான் நடந்திருந்தன.


"1995ல் முதன்முதலாக இதுபோன்ற ஒரு தாக்குதல் தமிழ்நாட்டில் நடந்தது. அதற்குப் பிறகு 1996ல் ஒரு சம்பவம் இப்படி நடந்தது. அதற்குப் பிறகு 2000வது ஆண்டுவரை இம்மாதிரி கொள்ளை சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. அது ஏன் என யோசித்தோம். மேலும், அந்தக் குழுவினர் பயன்படுத்திய மொழி, அவர்கள் அணிந்திருந்த காலனி, உடைகள் ஆகியவற்றை வைத்துப் பார்த்தபோது, அவர்கள் வட இந்தியர்கள் என்பது தெரிந்தது" என நினைவு கூர்கிறார் தற்போது டிஜிபியாக உள்ள எஸ்.ஆர். ஜாங்கிட்.

இதற்குப் பிறகு மற்ற மாநிலங்களில் இதுபோல நடந்திருந்த குற்றங்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்ததது காவல்துறை. தமிழகத்தில் மட்டும் சுதர்சனத்தின் கொலையோடு சேர்த்து 24 சம்பவங்கள் இதுபோல நடந்திருந்தன. கர்நாடகத்தில் 1 சம்பவமும் ஆந்திராவில் 6 சம்பவங்களும் நடந்திருந்தன.

2005ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி கன்னௌஜில் கைதுசெய்யப்பட்டார்
முக்கியக் குற்றவாளியான ஓம் பிரகாஷ் பவரியா என்ற ஓமா பவரியா
எப்படி பிடிபட்டனர்?

வட இந்தியாவிலிருந்து வரும் கும்பலே இந்தக் கொள்ளைகளில் ஈடுபடுகிறது என்பது தெரியவந்ததும் அம்மாதிரி கொள்ளைச் சம்பவங்களையே தொழிலாக வைத்திருக்கும் இனக்குழுக்களைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. முடிவில் பவரியா, பார்தீஸ், சான்சீஸ், கஞ்சார், முஸ்லிம்களின் கஞ்சா பனியன் குழுக்கள் (வங்கதேசம்), சபேரா என ஆறு குழுக்களில் ஒன்றுதான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது தெரியவந்தது.

இவற்றில் சான்சீஸ், கஞ்சார், சபேரா ஆகிய குழுக்கள் வட இந்தியாவில் மட்டுமே இயங்கிவந்தன. மீதமிருக்கும் மூன்று குழுக்களில் கச்சாக்கள், ரயில் பாதைகளுக்கு அருகில் மட்டுமே கொள்ளைகளில் ஈடுபட்டனர். பார்தீ குழுக்களும் மிக மோசமான வன்முறையில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தாலும் அவர்கள் கொள்ளைச் சம்பவங்கள் எல்லாவற்றிலுமே பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். எஞ்சியிருந்தது பவரியா குழு மட்டும்தான்.

ஆக, பவரியா குழுவைச் சேர்ந்தவர்கள் தான் இந்தக் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என காவல்துறை நம்பியது. பவரியாக்கள் இயங்கிவரும் சஹரன்பூரில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இதே பாணியில் கொல்லப்பட்டிருந்ததும் காவல்துறையின் நம்பிக்கைக்கு வலுச்சேர்த்தது.

இந்த குழுவினர் ஹரியானாவின் பல்வல் மாவட்டத்திலும் ராஜஸ்தானின் பரத்பூரிலும் இயங்கி வந்தனர். பவரியா கொள்ளையர்களைப் பிடிக்க அந்த காலகட்டத்தில்  வடக்கு மண்டல ஐ.ஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

1996லிருந்து 2000வது ஆண்டுவரை இந்தக் குழுவினர் எந்தக் குற்றச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்பதால், அவர்கள் ஏதாவது ஒரு சிறையில் இருந்திருக்கக்கூடும் என யூகித்து, சிறைகளில் உள்ள கைரேகைகளை ஆராய முடிவுசெய்தது காவல்துறை.
"நான்கு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் ஒரு கைரேகை நிபுணர் இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். அவர்கள் ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் சென்று 95ஆம் வருடத்தில் இருந்து சிறைக்குச் சென்ற பவரியா குழுக்களைச் சேர்ந்தவர்களின் கைரேகையைப் பரிசோதித்தார்கள். சில கைரேகைகளை வைத்துக்கொண்டு, பெரிய பெரிய லெட்ஜர்களில் அதேபோன்ற ரேகையைத் தேடுவதைப் பார்த்து வட இந்திய அதிகாரிகள் ஆச்சரியமடைந்தார்கள்" என்கிறார் ஜாங்கிட்.

2005 பிப்ரவரி 1ஆம் தேதி. ஆக்ரா சிறையில் இருந்த ஒருவரது கைரேகை, தமிழகத்தில் கிடைத்த கைரேகையுடன் ஒத்துப்போனது. அவரது பெயர் அஷோக் என்ற லட்சுமணன். 96ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடனடியாக அவருடன் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தரம்சிங் பவரியா என்பவர் கைதுசெய்யப்பட்டார். இவர்தான் இந்த கொள்ளைக் கும்பலின் சூத்ரதாரி.

ஆனால், கொள்ளை நடக்கும் இடங்களுக்கு வரமாட்டார். வழக்கு விவகாரங்களைப் பார்த்துகொள்பவரும் இவர்தான். இதற்குப் பிறகு லட்சுமணன் 26.02.2005ல் கைதுசெய்யப்பட்டார்.
விரைவிலேயே இந்தக் கொள்ளைக் கும்பல் பற்றிய முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டன. ஓமா என்ற ஓம் பிரகாஷ் பவரியாதான் இந்தக் கும்பலை கொள்ளைகளில் வழிநடத்துபவர். இவருக்கு இரு மனைவிகள். இரண்டாவது மனைவி, உள்ளூர் காவல்துறை அதிகாரியின் மகள். ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட ஏழு லாரிகள் அவரிடம் இருந்தன. கொள்ளையடித்த பணத்தில் தன் சகோதரி சாந்து பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் சொத்துகளை வாங்கிக் குவித்திருந்தார்.

இந்த ஓமாவை 2005 செப்டம்பர் 8ஆம் தேதியன்று உத்தரப்பிரதேசத்தின் கன்னௌஜ் மாவட்டத்தில் குருராஜ் கஞ் என்ற கிராமத்தில் வைத்து கைது செய்தது காவல்துறை. இந்தியா முழுவதும் 100 குற்றச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்தார் ஓமா.

இதற்கிடையில், உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுரா பவரியா, விஜய் பவரியா ஆகிய இருவரையும் சுட்டுக்கொன்றது. சுரா பவரியா ஓமாவின் தம்பி. 25க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்களில் அவர் தேடப்பட்டுவந்தார். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சுதர்ஸனம், சேலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நகர் மன்றத் தலைவர் தாளமுத்து நடராஜன், திருவேற்காட்டில் தி.மு.கவைச் சேர்ந்த கஜேந்திரன், அவரது வீட்டுக் காவலாளி ஆகியோரைக் கொலைசெய்த வழக்குகள் அவர் மீது இருந்தன.

வட இந்தியாவிலிருந்து தமிழகத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கு சரக்குகளை ஏற்றிவருவது, திரும்பிச் செல்லும்போது சாலைகளின் ஓரமாக உள்ள வீடுகளில் கொள்ளை அடிப்பதுதான் இந்தக் கும்பலின் வழக்கமாக இருந்தது. அவர்களது லாரிகளில், ஆயுதங்களை மறைத்து வைக்கவும் கொள்ளை அடித்த பொருட்களை வைக்கவும் ரகசிய அறைகளும் இருந்தன.

ஒன்றின் பின் ஒன்றாக 13 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். நான்கு லாரிகள் கைப்பற்றப்பட்டன. ராணிப்பேட்டையில் சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு வழக்கு நடைபெற்றது. வாலஜா கொள்ளைச் சம்பவத்தில் 2006 ஏப்ரல் 6ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் ஓமா என்ற ஓம் பிரகாஷ் பவரியாவுக்கும் லட்சுமணனுக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவர்களது கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

இந்த தண்டனைகளை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால், அதற்குள் சிறையிலேயே ஓமா பவரியா இறந்துபோனான்.

செய்தி -  BBC...

தொல்காப்பியமும் திருக்குறளும்...


5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது..

தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது.

ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.

பன்னெடுங் காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது..

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.

தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.

இது போன்ற சொற் செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?

எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா?

தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

திருட்டு திராவிடம்...


தமிழனை சாதியை வைத்து அடையாளம் சொல்வதும்...

திராவிடனை தமிழன் என சொல்வதும் இத்தனை ஆண்டுகளாக நடைபெற்ற சதிச்செயல்..

இப்படி ஏமாற்றி பிழைப்பதின் பெயர் தான் பகுத்தறிவு...

பித்தப்பை கற்களை நாமாகவே இயற்கை முறையில் அகற்ற எளிய வழி...



புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம்..

மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது..

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும்..

பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்..

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.

எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்..

இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும்..

இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்..

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்..

மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்...

குழந்தை திருமணம் செல்லாது ஆனால் குழந்தை இராணுவ வீரன் செல்லும்?


17 வயது ஆண் மகன் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணம்.

அதை செல்லாது என்று சொன்ன உலக நாடுகள்..

முதலாம் உலக போரில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் 17 வயதிற்குட்பட்ட சிறுவர்களையே போரில் கலந்து கொள்ள வைத்தது..

இது என்ன நியாயம் ?

பிரிட்டன் அரசு 25 இலட்சம்.. 18 வயதிற்கும் குறைவான சிறுவர்களை தமது நாட்டிற்க்காக பயன்படுத்தி கொண்டது...

அது மட்டுமின்றி இன்றைய உருகுவே, சீனா, ஜெர்மன், ரஷ்யா, மற்றும் அமேரிக்கா முதற்கொண்டு சிறுவர்களை [அவர்கள் பார்வையில்] போரில் பங்கு பெற வைத்தது...

இதில் இந்த 17 வயதிற்கும் குறைவான ஆண்கள் [சிறுவர்கள்] பல எதிரி நாட்டு பெண்களின் கற்பை சூறையாடியும் உள்ளார்கள் என்கிறது ஒரு ஆய்வு..

அதே போன்று வயது மிகுந்த தம் சக இராணுவ அதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு [ஓரின சேர்க்கைக்கு] ஆளாக்கப்பட்டுள்ளார்கள் இந்த சிறுவர்கள் என்றும் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது...

அது மட்டுமில்லாமல் இன்றைய ரஷ்யா குடும்பங்கள் இல்லாமல் அனாதையாக வீதியில் திரியும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை தமது இராணுவ பயிற்சி பள்ளியில் சேர்த்து இராணுவ தளவாடங்களை பயன்படுத்த கற்றுக் கொடுக்கிறது....

இப்பொழுதும் கூட இந்த சட்டத்தை அமல்படுத்தி வருகிறது ரஷ்யா..

இந்த பதிவு பல கேள்விகளுக்கு பதில்
சொல்லும் சிந்தித்தால்...

இலுமினாட்டி - ரோத்சைல்ட் (Rothschild)...

             
ரோத்சைல்ட் (Rothschild) ஒரு யூதன். ஜெர்மனியை சார்ந்தவன். இவனே உலகின் அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறார்கள்...

இவன் குடும்பம் தொடக்கத்தில் பொற்கொல்லர் வேலை செய்தனர்.

இவன் தன் வீட்டில் ஓர் தங்க வங்கி (gold bank) ஆரம்பித்தான்.

ஊரில் உள்ள செல்வர்கள் வெளியூர் போகும் போது நகையை இவனிடம் கொடுத்து ரசீது வாங்கி சென்றனர்.

இவ்வாறு சென்று கொண்டிருந்த போது இவன் கொடுக்கும் ரசீது சீட்டை தற்போது உள்ளது போல மதிப்பு உடையதாக மக்கள் எண்ணிணர்.

இது பின்னாளில் பணமாக மாறியது.

இதுவே முதல் வங்கி.

இதை சிறிது சிறிதாக பக்கத்து ஊர்களுக்கும் பரப்பினான்.

தன்னிடம் இருக்கும் தங்கத்திற்கு இத்துணை முறை ரசீது வழங்களாம் என்ற முறையை கொண்டு வந்தான்.

தங்கம் இல்லாதவனுக்கும் ரசீது வழங்கி வட்டி வாங்கினான்.

இவ்வாறே தற்போதைய வங்கி முறை உருவானது..

இவன் தன் வீட்டு முன்பு ஒரு மேசை போட்டு இவற்றை செய்து கொண்டிருந்தான்.

மேசை என்பதன் லத்தீன் மொழி பெயர்ப்பு பாங்கா (Banka). இதிலிருந்து வந்ததே பாங்கு (Bank)..

இவன் அமெரிக்காவில் சார்ச் கார்டு (Charge card) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினான்.

இதவே தற்போது உள்ள கிரிடிட் கார்ட்களுக்கு (Credit card) முன்னோடி.

நெப்போலியன் போர் செய்த போதும், இரண்டாம் உலகப் போரின் போதும் இரு தரப்பிற்கும் கடன் உதவி செய்தது இவனே.

இருதரப்புக்கும் பண உதவி செய்துட்டு நம்ம அடிச்சிக்கிறத உட்கார்ந்து ரசித்து வட்டியும் வாங்குறான்னா எப்படிபட்ட மொல்லமாரினு பாருங்க..

இவன் உலகில் உள்ள அனைத்து வங்கிகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ (பங்குச்சந்தை பங்குகள்)  கட்டுப்படுத்துகிறான்.

அமெரிக்க டாலரினை மட்டும் அல்ல அனைத்து நாடுகளின் பணத்தையும் இவனது குடும்ப வாரிசுகளே அச்சிடுகின்றன.

உலகிலேயே அதிக செல்வம் படைத்தவர்கள் இவர்களே..

நாம் எவ்வளவு முட்டாள்கள் என்பதை நிறுவும் தகவல் என்ன என்றால் இந்திய கிழக்கிந்திய கம்பேனியின் உரிமையாளன் வேறு யாரும் அல்ல இவன் தான்..

தற்போதும் இவனுடைய நிறுவனங்கள் இவன் பெயரிலையே இந்தியாவில் இயங்கி வருகின்றன.

நாம் அடிமையா யார் சொன்னா?

அப்படினு பல பேர் சொல்லிட்டு திரிகிறாங்க. இப்ப சொல்லுங்க நாம யாரு?

இன்னும் இருக்கு இவனை பற்றி பிறகு பார்க்கலாம்...

கண்களை ஏன் சிமிட்டுகிறோம்...



கண்களை சிமிட்டுதல் என்பது கண் இமைகள் மூடித் திறக்கும் ஒரு வேகமான செயல்பாடாகும்.

இச்செய்கை சுமார் 400  மில்லி செகண்டில் (milliseconds) நடைபெறுகிறது.

இவ்வேகம் சூழ்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற காரணிகளால் மாறுபடும்..

கண் விழிகளில் படிந்திருக்கும் தூசு, துகள்களையும் அகற்றவும், விழிகளின் ஈரத்தன்மை உலராமல் பாதுகாக்கவும் நாம் கண்களை சிமிட்டுகிறோம்..

சராசரியாக ஒரு நாளைக்கு நாம்  15,000 தடவை கண் சிமிட்டுகிறோம் அதாவது ஒரு நிமிடத்து சுமார் பத்து முறை..

ஆண்களை விட பெண்கள் அதிகம் கண் சிமிட்டுகிறார்கள்..

விலங்குகளும் கண் சிமிட்டுகின்றன. மீனுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண் இமைகள் கிடையாது எனவே அவற்றிற்கு கண் சிமிட்டும் வேலை இல்லை...

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை முடக்க கட்டம் கட்டுகிறார்கள்...


உலகை கட்டி ஆண்ட தமிழன்...


கடற்வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள் மொழித் தேவன் அறிமுகப் படுத்தியதே...

உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குடவோலை முறையை அறிமுகப் படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே..

வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம் மக்களை அடிமை படுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம் மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே..

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை, வரலாற்றையும் இலக்கியங்களையும் எடுத்துகாட்டாக முன் வைத்து நம் மக்கள் உணரும் வகையில் செய்வதன் மூலமே...

திராவிட கருத்துக்களில் சிக்கி தன் இனத்தை தானே அவமானப் படுத்தி பேசும் வழமையை அகற்ற முடியும்...

இலுமினாட்டி களும் இந்தியாவின் விடுதலையும்...


இலுமினாட்டிகள் என்ற இந்த விழிப்புணர்வு மிக்க குழுவினர் தமிழர்கள் மீது தனிப்பட்ட பகை கொண்டவர்கள்..

பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழும் பழிதீர்ப்பு இது..

தற்பொழுது இந்தியாவிற்கு வருவோம்.

இந்தியா முழுவதும் தமிழர் வாழ்ந்த பகுதியே என்பது நாம் அறிந்ததே. 

இந்தியா என்பது சுதந்திரத்தினால்  உருவான ஓர் நாடு.

நாடு என்பதை விட ஓர் நிறுவனம் எனலாம்.

சுதந்திரத்துக்கு முன் இது பல நாடுகளாக இருந்து.

அரசாட்சி இருந்தாலும் மக்கள் பொதுவாக மகிழ்ச்சியோடே வாழ்ந்தனர்.

கடந்த சில நூற்றாண்டுகளில் சில மேற்கத்திய அரசுகள் பல நாடுகளை தங்கள் காலணி ஆதிக்க நாடுகளாக மாற்றின.

நமது நிலமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரிட்டிசிடம் முழுமையாக மாட்டிக் கொண்டது.

பின் நம் விடுதலை மாவீர்கள் போராடி நமக்கு விடுதலை பெற்று தந்தனர்.

ஆனால் உண்மை என்ன என்றால் அந்த இந்திய கிழக்கிந்திய கம்பேனி ஓர் அரசு
நிறுவனம் அல்ல. அது ஓர் தனியார் நிறுவனம்..

இதன் உரிமையாளர் ரோத்சைல்ட் Rothschild.  இவன் இலுமினாட்டியில் முதன்மையானவன்..

சுதந்திர போராட்டம்...

இந்தியாவை வெற்றிகரமாக ஆட்சி செய்து கொண்டிருந்தது நிறுவனம்.

அப்பொழுது சில உண்மையான தேசிய விடுதலை வீரர்களான நேதாஜி போன்றோர்,  இது எங்கள் நாடு நீ வெளியேறு என முழங்கினர்.

ஆயித போராட்டங்களால் நிறுவனத்தின் சொத்துக்கள் அழிந்தன..

ஒத்துழையாமை இயக்கம் நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது..

இந்திய தேசிய இராணுவமும் நாடு கடந்த இந்தியாவின் முதல் இராணுவ பிரதமரான நேதாஜியும் ஜப்பானின் உதவியோடு இந்தியாவை மீட்க பயணமானார்..

முதலில் அந்தமான், கூட்டு இராணுவத்தினரால் கிழக்கு இந்திய கம்பேனியிடம் இருந்து மீட்கப்பட்டது அந்தமான், ஓர் இராணவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும்.

18 நாடுகளை அப்பகுதியை பிடிப்பதன் மூலம் ஆட்சி செய்ய முடியும்.

மேலும் அங்கு உள்ள ஒரு சிறிய தீவு இலுமினாட்டிகளுக்கு மிக முக்கியமானது ஆகும்.

அங்கே தான் அவர்கள் தங்கள் இறையை வழிபடுகிறார்கள்..

அணுகுண்டு இந்தியாவுக்காக
இப்பொழுது அவர்கள் ஜப்பானுக்கு மிரட்டல் விடுத்தார்கள்.

இந்தியாவையும் அந்தமானையும் சுபாஸையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு திரும்பி போ இதுவே மிரட்டல். 

ஜப்பான் அடிபணிய மறுத்தது. 

இரண்டு அணு குண்டுகள் ஜப்பானை தாக்கின.

ஜப்பான் அவர்கள் சொன்னதை செய்து விட்டு நாடு திரும்பியது..

சுதந்திரம் என்ற மாயை...

சுதந்திர போராட்டங்களால் நட்டம் அடைந்த கிழக்கு இந்திய நிறுவனம் ஒரு திட்டம் தீட்டியது.

ராக்ஃபெல்லரால் Rockefeller  உருவாகக்கப்பட்ட உளவியல் ஆய்வு மையம் ஒரு நல்ல யோசனை வழங்கியது அது தான் சுதந்திரம்..

மறைமுகமாக நாட்டை ஆட்சி செய்வது..

அதன்படி தீவிர விடுதலை போராட்ட வீரர்கள் கொலை செய்யப்பட்ட பின் பிள்ளை பூச்சிகளை வைத்து சுத்திரம் வழங்கி ஆட்சி அமைக்கப்பட்டது..

இந்தியாவை போன்ற பிற நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.

தற்போது...

இந்தியா சுதந்திரம் பெற்று விட்டதாக நம்பி மக்கள் மாயையில் வாழ்கின்றர். 

இலுமினாட்டிகள் தங்கள் 13 துறைகளை கொண்டு நாட்டை தற்பொழுதும் ஆட்சி செய்கின்றனர்...

சூரியன் பற்றி தெரிந்து கொள்வோமா?


பால்வெளி மண்டலத்தில் 10000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன..

சூரியனும் ஒரு நட்சத்திரம் தான், நடுத்தர அளவுடைய நட்சத்திரம்..

என்ன ஒரே வித்தியாசம், அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. ஆனாலும் அதன் நிறம் வெள்ளைதான்.

மஞ்சள் குள்ள நட்சத்திரம் என்று இது வகைப்படுத்தப்பட்டுள்ளது..

சூரியனுக்குள் ஹைட்ரஜன் (73%), ஹீலியம் (25%) வாயுக்கள் எரிந்து கொண்டிருக்கின்றன.

சூரியனுக்குள் ஏற்படும் அணு பிணைவுக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் (ஒவ்வொரு விநாடியும் 400 கோடி டன்) பயன்படுகிறது.

இந்த வேதிவினையின்போது ஹீலியம் வாயு உருவாகிறது.

இந்த வேதி வினையின் காரணமாகத் தான் அளவு கடந்த வெப்பம் வெளியாகிறது..

சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள்.

சூரியனில் இருக்கும் ஹைட்ரஜனில் பாதி எரிந்துவிட்டது.

இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு சூரியன் இதேபோல எரிந்து கொண்டிருக்கும்..

சூரிய ஒளி சூரியனிலிருந்து புறப்பட்டுப் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றன.

சூரியனில் இருந்து தான் பூமி அனைத்து சக்திகளையும் பெறுகிறது..

பூமியில் இருந்து ஒரு சாதாரண விமானத்தில், அதன் வழக்கமான வேகத்தில் சென்றால் (மணிக்கு 645 கி.மீ. வேகம்) சூரியனை அடைய 20 ஆண்டுகள் ஆகும்..

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வருவது சூரியக் கிரகணம்.

ஒரு முழு சூரிய கிரகணம் ஏழரை நிமிடங்களுக்கு நீடிக்கும்..

சூரியனின் சில பகுதிகள் கறுப்பாகத் தோற்றமளிக்கும். அவை சூரியப் புள்ளிகள். அப்பகுதிகளில் வெப்பம் குறைவாக இருப்பதால் அப்படி இருக்கிறது..

சூரியனைப் பற்றி ஆராய்வதற்காக நாசாவின் ‘ஸ்கைலாப்’ என்ற முதல் விண்கலம் விண்வெளி வீரர்களுடன் 1974 பிப்ரவரியில் சென்றது.

பூமி முட்டை வடிவில் சூரியனைச் சுற்றி வருவதால், இரண் டுக்கும் இடையிலான தொலைவு 14.7 கோடி கி.மீ. முதல் 15.2 கோடி கி.மீ. என மாறிமாறி இருக்கும்.

பூமியைப் போல 28 மடங்கு அதிகமான புவியீர்ப்பு விசையைக் கொண்டது சூரியன்.

அதன் காரணமாகத் தான் ஹைட்ரஜன் பிணைவின் போது அது வெடிக்காமல் இருக்கிறது. இல்லையென்றால், ஒட்டு மொத்த சூரியக் குடும்பமே வெடித்துச் சிதறிவிடும்..

வரலாற்றில் இதுவரை மனிதன் பயன்படுத்தியுள்ள மொத்த எரிசக்தியின் அளவு, சூரியன் வெறும் 30 நாள் பயன்படுத்திய அளவ ுதான்..

பெருவெடிப்பின் ஒரு கட்டத்தில் சுழலும் பெரும் வாயு மேகம் மூலம் சூரியனும், அதன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றக் கோள்கள், நிலவுகள், நூற்றுக் கணக்கான சிறுகோள்கள், எரி நட்சத்திரங்கள், விண்கற்கள் உருவாகின.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் பெரும் வாயு மேகத்தில் 99.8 சதவீதத்தைச் சூரியன் மட்டுமே உருவாக எடுத்துக் கொண்டது. எஞ்சிய 0.2 சதவீதத்தில்தான் மற்ற அனைத்தும் உருவாகியிருக்கின்றன..

பண்டைய நாகரிகங்களில் பலவும் சூரியனை மையமாகக் கொண்டு இயங்கின.

எகிப்தியர்கள் ரா என்றும், மெக்சிகோவின் அஸ்டெக் நாகரிகத்தினர் டோனாடியு என்றும், கிரேக்கர்கள் ஹீலியோஸ் என்றும், இன்கா நாகரிகத்தினர் இன்ட்டி என்றும் சூரியனை அழைத்தனர்.

ஸ்டோன்ஹெஞ்ச் போன்ற வட்டமாக அமைக்கப்பட்ட கற்கள், சூரியனை வழிபடும் வகையில் அமைக்கப்பட்டவையே.

இயற்கையில் உள்ள கச்சிதமான வட்ட வடிவத்துக்குச் சிறந்த உதாரணம்
சூரியன்..

சூரியன் தன் அச்சில் 25.38 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது..

பூமியைவிட, சூரியன் 10 லட்சம் மடங்கு பெரியது. பூமியைப் போல 110 மடங்கு அதிக விட்டத்தைக் கொண்டிருக்கிறது சூரியன்.

சூரியனின் மேற்புற சராசரி வெப்பநிலை 10,000 டிகிரி ஃபாரன்ஹீட். சூரியனின் மையப் பகுதி மிக மிக வெப்பமானது. அதன் வெப்பநிலை 27 லட்சம் டிகிரி ஃபாரன்ஹீட்.

சூரியனை பூமி சுற்றி வருவதாக 16-ம் நூற்றாண்டில் நிகோலஸ் கோபர்நிகஸ் கூறினார்.

புவியீர்ப்பு விசைக் கொள்கையையும், அதன் காரணமாகச் சூரியனை மற்றக் கோள்கள் சுற்றி வருவதையும் ஐசக் நியூட்டன் நிரூபித்த பிறகே சூரியக் குடும்பம் என்ற கருதுகோள் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது...

அரபு நாட்டில் தாய்மொழி...



சவுதி அரேபியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெற இந்திய இலங்கை தமிழர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தாய்மொழியாம் தமிழ் மொழியில்...

வாய்கிழிய கிரேக்க வரலாறு பேசுவார் வைகோ நாயூடு...


ஆனால் தன் வாழ்நாளில் தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்ற கருத்தை ஒரு முறை கூட சிந்திக்காதவர் தான் வைகோ...

ஏனென்றால் தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொன்னால் வைகோ போன்ற தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் ஏமாற்று அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்ற பயம்...

பாஜக பொன். ராதா கலாட்டா...


தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்...


தமிழனின் மாந்த நேயப் பண்பை, அவன் பண்பாட்டை, வீரத்தை, ஆயிரம் ஆண்டு கழித்து உலகை உணரச் செய்தவன் எம் தலைவன் பிரபாகரன்...

தமிழ் மொழியை கட்டி காத்து அம் மொழியின் வழியே இனத்தின் ஒற்றுமையை கட்டியமைத்து வீர சமர் புரிந்தவன்...

ஆங்கிலம் அறவே அற்ற தமிழ் பாட திட்டங்களை உருவாக்கி தமிழ் தேசத்தை கட்டி எழுப்பியவன்...

உலகில் தமிழ் மொழியின், இனத்தின் பெருமையை நிலை நாட்டியவன்...

இலக்கியங்களில் படித்த புறநானூற்று வீரத்தை நிகழ்த்தி காட்டியவன்...

இத்தகைய பெருமை மிக்கவர்கள் எல்லாம் தமிழ் மொழியில் பயின்றவர்களே...

எங்களை பொருத்தவரை இவள் உலக அழகி இல்லை கார்பரேட் பொருள் சரிவை ஈடுகட்ட தேர்ந்தெடுக்கபட்டவள்...


மக்கள் முட்டை வாங்குவதை சில காலம் நிறுத்தி வைக்க வேண்டும், முட்டையில் நீண்ட நாளாக நடைபெறும் வியாபார சதி...


முட்டை விலை ரூ.7-ஐ நெருங்கி விட்டது. விரைவில் அது பத்து ரூபாயை எட்டி விடலாம். காரணம் வியாபாரிகளின் தந்திரம், செயற்கைத் தட்டுப்பாடு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி.

இந்த முட்டையை நம்மால் வீடுகளில் உற்பத்தி செய்ய முடியாது. அவர்களிடம் மட்டும்தான் வாங்க வேண்டும். இது நீண்ட நாளாக நடைபெறும் அறிவியல் சதி.

இதை வென்றாக வேண்டும் என்றால், ம்க்கள் முட்டை வாங்குவதை சில காலம் நிறுத்தி வைக்க வேண்டும். முட்டை ஓர் அத்தியாவசியப் பொருள் அல்ல. சில நாள் முட்டை சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் உயிர் போய் விடாது. ஆனால் வியாபாரிகளின் உயிர் போய்விடும்.

முட்டையைப் பலகாலம் சேமித்து வைக்க முடியாது. செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி சில நாளிலேயே பல கோடிகள் லாபம் பார்க்கும் வியாபாரிகள், அத்தனை கோடிகளையும் இழந்து வீதிக்கு வந்து விடுவார்கள்.

வேறு வழியில்லாமல் முட்டை விலை தானாக இரண்டு ரூபாய்க்கு வந்து விடும். மக்கள் நினைத்தால் இது சாத்தியமாகும். சிங்கப்பூராக இருந்தால் இதை உடனே செய்வார்கள். நம் நாட்டிலும் இது செய்ய முடியும் என நிரூபிப்போம். நுகர்வோரின் பலத்தை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு...

பாஜக அதிமுக வின் கூட்டு பொய் அம்பலம் ஆனது...


தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்...



கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை அருள் மொழித் தேவன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர்.

கோயிலின் கடைகால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.

சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை (விமானத்தை) எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும்.

பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர்.

கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.

ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை..

அருள் மொழித் தேவன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் - இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு...


கரூர் மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு...


கருர் நகராட்சி 35-வது வார்டில் பல வருடங்களாக உள்ள தெரு விளக்குகளை மின்வாரிய அதிகாரிகள் மின் மீட்டர் இல்லை என்று சொல்லி துண்டித்து விட்டார்கள். இதனால், இப்பகுதி இருளடைந்து காணப்படுகிறது.

பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் வெளியே சென்றால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்...

திருட்டு திராவிட ஆரியன் கமல்...


கரூர் மாவட்டம் ப.உடையாப்பட்டியில் பிறந்தவர் தமிழ் ஆசிரியர் வீரப்பன்...


1965-ல் நடைப்பெற்ற இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் போது தனது உடலை தீக்கு இரையாக்கி ஹிந்தி. ஒழிக. தமிழ் வாழ்க. என  கரும்பலகையில் எழுதி அவர் பணியாற்றிய பள்ளி அருகே 11.02.1965-ம்.. ஆண்டு கடவூரை அடுத்த அய்யம்பாளையத்தில் வீரமரணம் அடைந்தார்.

இவரது உடல் மணப்பாறை மாமுண்டி ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.


கடந்த 2015 ம் ஆண்டு இவ்வாசிரியருக்கு வெண்கலசிலை உருவாக்கி ஊர் பகுதியில் நிறுவ முயன்று விழா ஒன்றை 30.01.2016 அன்று ஏற்பாடு செய்தனர்.

இதற்கு அரசு தடைவிதித்ததால் வீடு ஒன்றில் சாக்கில் கட்டியவாறு சிலை வைக்கப்பட்டு படத்திறப்பு மட்டுமே நடந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு அனுமதி அளிக்காதல் இன்றும் அதே நிலையே.!நிலவுகிறது.

மேலும் தற்போது பெய்த மழையினால் சிலை வைப்பதற்கு பல லட்சம் செலவில்  உருவாக்கப்பட்ட மணிமண்டபத்தில் செடிகள் வளர்ந்துவிட்டுன.


எனவே  எதிர்வரும் தலைமுறையினர் மொழியுணர்வை  ஊட்டும் வழிகாட்டியாகவும் விளங்க.

மொழிப்போர் தியாகிகள் தினத்திற்கு இரு மாதங்களே.!உள்ள நிலையில் இந்த பழுதுகளை நீக்கி சரிசெய்வதற்கு ஏதுவாக

இந்த ஆண்டாவது மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்பது ஊர் பொதுமக்கள் & தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோளாக தெரிவிக்கின்றனர்.

னவே அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊடகங்கள் மறைத்த உண்மை...

அதிர வைக்கும் வீடியோ ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள மேகா ஊழல் ஆதாரங்கள் பார்ட் 1 - வீடியோ...


நாம் கட்டும் வரிப்பணமெல்லாம் யாரு யாருக்கு எப்படி சென்றுள்ளது என்பதை ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது, ஆதாரம் கேட்டவர்கள் இதை பாருங்கள் என்ற கருத்தில் கமல் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்...