21/09/2021

சித்தர்களின் மருத்துவ ஞானம்...

 


பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்...

karpuram  சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை..

மற்றொன்று வீரம், பூரம், லிங்கம், தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை..

மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை..

மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை..

நாம் ஒரு முறையை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்..

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்,

புதினா உப்பு

ஓம உப்பு

கட்டி கற்பூரம்

இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்..

சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்..

இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்..

இப்பொழுது தைலம் தயார்.இது மிகவும் வீரியமான தைலம்..

உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்க வேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்..

இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது..

பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம், ஈறுகளில் சீழ் வடிதல், வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது. இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்..

இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.

சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப் பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்..

சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்..

இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது . எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்..

கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்...

கொரோனா தடுப்பூசி ஆபத்து...

 


கணவன் Vs மனைவி கலாட்டா...

 


மனைவி : என்னங்க என்னை பொண்ணு பார்க்க வரும்போது நான் என்ன கலர்  புடவை கட்டி இருந்தேன் தெரியுமா..?

கணவன் : இல்லையேமா..

மனைவி : ம்ம்ம் தெரியும் என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை..

கணவன் : அது இல்லடா செல்லம். தண்டவாளத்தில் தலை வைக்க போறவன், வர்ற ரயில் சேரன் எக்ஸ்பிரஸ்ஸா, பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸா ன்னு பாத்துட்டா  இருப்பான்..

மனைவி : 😡😡😡

🤣🤣🤣🤣🤣

பிரம்மத்தை நோக்கி - 5...

இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் சமநிலையுறவே தவிக்கிறது. அதுவே பிரபஞ்ச பொது இயல்பாகவும் இருக்கிறது. இச்சமநிலையை அடைவதே ஒவ்வொரு பொருளின் முடிவான நோக்கு.

ஏனெனில் இந்த பயணம் அங்கிருந்தே துவங்கியது. ஒவ்வொரு பொருளும் தனது மூல இருப்பை நோக்கி இன்பமாகவும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் கலைந்து செல்கிறது.

பொருள் நிலை என்பது எல்லைக்கு உட்பட்ட தனித்தன்மை வாய்ந்தது. சமநிலை என்பது எல்லையில்லா தன்மையுடையது. ஒவ்வொரு பொருளுக்கும் தன் மூல இருப்பை நோக்கி நகர்ந்து செல்வதே ஆனந்தமானது.

எனவே தான் நாம் உருவாக்கி வைத்த கோயில்கள் கட்டிடங்கள் பொருட்கள் எல்லாம் படிப்படியாக சிதைந்து தனது மூல இருப்பை நோக்கி ஆனந்தமாக நகர்கின்றன.

நம் உடலில் உள்ள பலகோடி உயிரிகளுமே தனித்தனி பொருள் தான். உயிரற்ற பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில்..

உயிரற்ற பொருள் இயற்பியல் வேதியியல் வினைகளின் விதிப்படி நடந்துகொள்கின்றன. தமக்கென்று எந்த இச்சையும் இல்லாது கிடக்கின்றன. இவை எந்த தடையுமின்றி தன் மூலநிலைக்கு இயல்பாக நகர்ந்து சென்று விடும்.

ஆனால் ஒரு உயிருள்ள பொருள் அப்படி இயல்பாக மூலத்தை அடைய முடியாமல் தடுப்பது அதன் அறிவுதான். ஆம் அறிவு அதனை மூலத்தை நோக்கி அழைத்து செல்வதாக தவறாக நினைத்து கொண்டு அடுத்த பரிணாமத்திற்கு இட்டு சென்றுவிடுகிறது.

நம் உடலில் உள்ள பலகோடி உயிரிகளுக்கும் சுதந்திரம் கொடுங்கள். அவைகள் தத்தம் ஆனந்தமயமான மூலத்தை அடையட்டும். உங்கள் அறிவால் அவற்றை கொடுமைப்படுத்தாதீர். அறிவு ஜடப்பொருளுக்குள் புகுந்த நோக்கமே அவைகளை பிரம்மத்தை அடைய வைக்கவே.

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

தமிழர் விரோதி விசிக வன்னியரசு இனி திமுக தலித் அணி தலைவர்...

 


அன்றைக்கு நீங்களெல்லாம் பொதுத்தொகுதிக்கு ஆசைப்படலாமானு கலைஞர் கேட்டதுக்கே அவ்ளோ வருத்தப்பட்டார் வன்னியரசு,

இன்றைக்கு அவரே "தலித்" அணி தலைவர்...

திமுக வின் நுட்பமான சாதி வெறி அரசியல்.

திராவிட வரலாறு 😁

 


தமிழின வெறியன் தான்...


நேற்று கலப்படத்தில் உருவான மொழிக்காரனே அந்த மொழி வெறியோடு இருக்கும் போது...

50,000 ஆண்டுக்கு முன் உலகில் தோன்றிய முதல் மொழி என் தாய் தமிழ் மொழியை கொண்ட நான்...

தமிழின வெறியன் தான்...

உச்ச நீதிமன்றம் என்ற பாஜக பினாமி...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...


நிஜத்தில் தத்தளித்து..

கனவுகளில்
கரையொதுங்குகின்றன..

என் கற்பனைக் காதல்..

உன்னை பார்த்ததும்
பூத்தது எனக்குள்
பூக்கள் அல்ல..

உன் புன்னகையின்
பிம்பங்கள்..

வேண்டும் நீ..

இல்லையேல் வாழும்
உன் நினைவுகளுடன்
என் உயிர்...

காய்ச்சல், மூட்டுவலியை போக்கும் மந்தாரை...

 


சாலையோரங்களில் காணப்படும் மூலிகை மந்தாரை. இது, இல்லத்தில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.

வெள்ளை மந்தாரை, செம்மந்தாரை, நீலமந்தாரை உள்ளிட்ட வகைகளை கொண்டது.

மந்தாரையின் இலைகள், பூக்கள், மரப்பட்டை ஆகியவை மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட மந்தாரை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூச்சிகளை அழிக்க கூடியது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மாதவிலக்கு, வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. பற்களுக்கு பலம் கொடுக்க கூடியது.

மந்தாரை இலைகளை பயன்படுத்தி அஜீரண கோளாறு, காய்ச்சல், மூட்டுவலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மந்தாரை இலை, இஞ்சி, பனங்கற்கண்டு.

செய்முறை: மந்தாரை இலையை அரைத்து 10 முதல் 20 மில்லி அளவுக்கு சாறு எடுக்கவும். இதனுடன் இஞ்சி துண்டு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி குடித்துவர அல்சர் வராமல் காக்கும். புண்களை ஆற்றுவதுடன் செரிமானத்தை தூண்டுகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளித்தள்ளும் அற்புத மருந்தாக விளங்குகிறது. காய்ச்சல், மூட்டு வலி குணமாகும். மருத்துவ குணங்களை உடைய மந்தாரை இலை பசியின்மையை போக்கும் தன்மை கொண்டது.

மந்தாரை பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும் தேனீர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மந்தாரை பூக்கள், பனங்கற்கண்டு.

மந்தாரை பூக்கள் 4 எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிக்கட்டி குடித்துவர மாதவிலக்கு கட்டுக்குள் வரும். கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும். மூட்டுவலியை போக்கும்.

மந்தாரை பூக்களை பயன்படுத்தி கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் தைலம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மந்தாரை பூக்கள், விளக்கெண்ணெய்.

ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் லேசாக நசுக்கி வைத்திருக்கும் மந்தாரை பூ இதழ்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.

இதை ஆறவைத்து கண்களை சுற்றி இரவு தூங்கப்போகும் முன்பு பூசிவர கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும். கண்கள் குளிர்ச்சி அடையும்.

மந்தாரை பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. தோல்நோய்களை சரிசெய்யும் தன்மை உடையது. வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. ரத்த கசிவை குணப்படுத்தும்...

மக்கள் பணத்தை கொடுக்க இவன் யார்?

 


கன்னட பலிஜா நாயுடுவாகிய தெலுங்கர் ஈவெரா நாயக்கருக்கு திமுக வோ, திகவோ தங்கள் சொத்தை செலவு செய்து சிலையோ சுடுகாடோ கட்டவேண்டியதுதானே...

தமிழக அரசே பதில் சொல்...



அரசு ஏன் கிராம சபையை நடத்துவதில்லை..  வரும் அக் 2 கிராமசபை கூட்டம் நடத்தப்படுமா...

வரி கொள்ளை கூட்டம் பாஜக மோடி அரசு...

 


பிரம்மத்தை நோக்கி - 4...

 


இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருள்களையும் போல நீங்களும் ஒரு பொருள் தான். ஆம் இந்த பிரபஞ்சத்தினுடைய பொருள்.

உங்களில் வாழ வேண்டும் என்ற விருப்பமே மனமாக விருத்தியாகி செயல்படுகிறது. இந்த மனம் உருவான வரலாறு, தன் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எது? தன் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பது எது? என்பதை பற்றிய தகவல் தொகுப்பே மனம்.

மனம் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. உங்களின் மனதில் எழும் எல்லா சிந்தனைகளும் நினைவுகளும் உங்களின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது.

வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத போது உங்கள் மனம் செயல்பட மறுப்பதை நீங்கள் உணர்வீர்கள். வாழும் ஆசை இருக்கும் வரை மனதின் ஓட்டத்தை நிறுத்துவது கடினம்.

நாம் வாழும் ஆசையே மனமாக செயல்படுகிறது. நான் யார்? நான் என்பது இந்த உடலை உயிரை பாதுகாக்கும் ஒரு தன்முனைப்பு இயக்கம்.

மனிதர்களுக்கு மரங்களுக்கு புழு பூச்சுகளுக்கு என எல்லாவற்றிற்கும் இந்த தன்முனைப்பு இயக்கம் உள்ளது. சரி இந்த உடல் உயிர் சுமார் பத்து வருடங்களுக்கு தாங்கும் என வைத்து கொள்வோம்.

அதுவரைக்கும் உண்டான பாதுகாப்பிற்கு தேவையான பொருளாதார நிலை, குடும்ப நிலை, சமூக நிலை எல்லாம் சரி செய்தாகிவிட்டது, பாதுகாப்பு சூழல் நிறைவாகிவிட்டது.

இனி இவன் இங்கு வந்த நோக்கத்தை கவனிக்க வேண்டும். இவன் இங்கு வந்தது இவன் விரும்பி அல்ல. இங்கு இவனாக வந்தது பிரபஞ்ச சக்தியே. இந்த இயற்கையோ நிறைவை நோக்கியே செயல்படுகிறது.

சரி நான் அடுத்து செய்ய வேண்டியது என்ன? முன்று நிலைகளான பிரபஞ்ச நிலை நமது மனநிலை நமது மனநிலையை தண்டிய பூரண நிலை.

இவற்றில் நாம் தியானத்தில் அடைவது நிறைவான பூரண நிலை. இவற்றை எல்லாம் கடந்து நாம் பூரண சமநிலையில் லயிப்போம்.

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

பங்காளிகள் சண்டை.. தமிழர்களுக்கு சம்பந்தமில்லை...

 


காவல் துறை கலாட்டா...