10/07/2018

கூட்டத்தால் கோவையை திணறடித்த தினகரன்...


கோவை கொடிசியா மைதானத்தில் அம்மா மக்கள் முன்னேற கழகத்தின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  இதில் அக்கழகத்தின் துணை பொதுச்செயலாளரும ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவருக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், இந்த ஆட்சிக்கு முட்டை ரூபத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மக்களுக்காகத்தான் திட்டம் இருக்க வேண்டும் என்ற அவர், திட்டத்திற்காக மக்கள் இருக்கக் கூடாது என தெரிவித்தார். மேலும் மக்கள் எதிர்க்கும் திட்டம் எதுவாக இருந்தாலும் அதனை அரசு செயல்படுத்தக் கூடாது என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்...

ஈரானுக்கு ஆதரவாக சீனா ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு...


ரோஸ்வெல் சம்பவம். அமெரிக்க அரசு மறைத்த உண்மைகள் வெளியுலகிற்கு?


ஐசன்ஹோவர் (Dwight Eisenhower).

டேவிட் அடேர் (David Adair).

ஏரியா 51...

மனதின் கட்டுப்பாட்டால் இயங்கும்_ பறக்கும்தட்டு எஞ்சினை சிம்பையாட்டிக்...

வேற்றுகிரகவாசிகள் என்று சொல்லும்போது அனைவருக்கும் முன்னால் வந்து நிற்கும் ஒரே பெயர் 'ரோஸ்வெல்'. இன்று கூட ரோஸ்வெல் நகரத்துக்கு நீங்கள் சென்றால், அந்த நகரம் எங்கும் பறக்கும் தட்டுகளையும், வேற்றுகிரகவாசிகளையும் காணலாம். பொம்மைகளாகவும், விளம்பரங்களாகவும் ஒவ்வொரு கடைகளிலும், வீடுகளிலும், பெரும் சந்தைகளிலும் அங்குள்ள மக்கள் வைத்திருப்பார்கள். அந்த நகரமே தன்னை ஒரு வேற்றுகிரகவாசிகள் நகரமாக மாற்றிக் கொண்டுள்ளது. வேற்றுகிரகவாசிகளுக்கென காட்சிச்சாலைகளும் அங்கே அமைக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு, குறிப்பாக ரோஸ்வெல்லுக்கு வந்ததை அந்த நகர மக்கள் நம்புகிறார்கள்.

ரோஸ்வெல் சம்பவங்களை நாம் எடுத்துக் கொண்டால், ஒரு இடத்தில் முக்கால் மைல் பரப்பளவுக்கு இனந்தெரியாத ஏதோ ஒன்று வெடித்துச் சிதறியிருந்தது. இன்னுமொரு இடத்தில் வெடிக்காத முழுமையான பறக்கும் தட்டு ஒன்றும், நான்கு வேற்றுகிரகவாசி்களும் இருந்தன. அவற்றில் மூன்று இறந்து போயிருந்தன. நான்காவது மிகவும் அடிபட்டிருந்தும், உயிர் இருந்ததாகத் தெரிந்தது. மூன்றாவது இடத்தில் வேற்றுகிரகவாசிகள் கொண்டு வரப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த மூன்று சம்பவங்களிலும் சம்மந்தப்பட்டவர்கள் வேறு வேறு நபர்கள். ஒருவரை ஒருவர் சந்திக்காதவர்கள். இவர்கள் அனைவரும் எப்படி ஒரே விதமான பொய்யைச் சொல்ல முடியும்? மூன்று சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்க இராணுவப் போலீசாரினால் ஒரே மாதிரி மிரட்டப்பட்டுமிருக்கின்றனர்.

அமெரிக்க அரசு சொல்வது போல முதல் சம்பவத்தில் வெடித்தது வானிலையை ஆராயும் பலூன்தான் என்றால், அதன் பகுதிகளை அகற்ற அரசு ஏன் அவ்வளவு தீவிரம் காட்ட வேண்டும்?சாதாரண பலூன்தானே! வெடித்த பலூனின் சிறிய துண்டுகள் கூட அந்த இடத்தில் இருக்காமல் ஏன் அகற்றப்பட வேண்டும்? இரண்டாவது சம்பவத்தில் அந்த இன்ஜினியர் கண்டது வேற்று கிரகவாசிகள் இல்லை, டம்மிப் பொம்மைகள்தான் என்றால், ஒரு பொம்மையைக் கூட சரியாகக் கணிப்பிட முடியாத அளவுக்கு ஒரு பொறியியலாளர் இருக்க முடியுமா? 1947ம் ஆண்டு அவ்வளவு தத்ரூபமாக பொம்மைகள் தயாரிக்கப்பட்டனவா? என்ற கேள்விகள் மேலும் மேலும் சந்தேகங்களையே வலுக்கப்பண்ணுகின்றன.  

அமெரிக்க அரசு சொல்லும் விசயங்களை மக்கள் யாரும் நம்பவில்லை. ஆனால், இவற்றை ஆராய்ந்தவர்கள் வேற்றுகிரகவாசிகள் வந்ததாகவும், பறக்கும் தட்டுகள் விழுந்து வெடித்ததாகவும் முழுமையாக நம்புகின்றனர். அத்துடன் ரோஸ்வெல் சம்பவத்தில் இரண்டு பறக்கும் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும் நம்புகிறார்கள். அந்த இரண்டு பறக்கும் தட்டுகளும், எதிரிகளாகவோ அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவையாகவோ இருக்கலாம். எதிரிகளாக இருந்து, இரண்டும் சண்டையிட்ட போது, வெடித்தும், கீழே விழுந்தும் விபத்துகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வேற்று கிரகவாசிகளை அமெரிக்க அரசு பாதுகாப்பாக இன்றும் 'ஏரியா 51' (Aria 51) என்னுமிடத்தில் வைத்திருக்கிறது என்றும், அதில் உயிருடன் ஒரு வேற்றுகிரகவாசி இப்போதும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட பறக்கும்தட்டையும் 'ஏரியா 51' க்குக் கொண்டு சென்று, அதைப் பல விதங்களில் பரிசோதனைகளும் செய்திருக்கிறார்கள் என்றும், பல புதிய நவீன தொழில்நுட்பங்களை அதன் மூலம்தான் அமெரிக்கா பெற்றது என்றும் சொல்கிறார்கள்.


மிகக் குறுகிய காலத்தில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அறிவைப் பெற்றதும், அணுசக்தி பற்றிய அறிவைப் பெற்றதும் இதன் மூலம்தான் என்கிறார்கள். இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் இருக்கிறது என்று நாம் குழம்பிப் போகிறோம். இந்த நிலையில் நமக்குக் கிடைக்கும் வேறு ஒரு தகவல் நம்மை ஒட்டுமொத்தமாகப் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்ததாக அந்தத் தகவல் இருப்பதால் மேலதிக உறுத்தலும் அதில் ஏற்படுகிறது.

1953ம் ஆண்டிலிருந்து 1963ம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஐசன்ஹோவர் (Dwight Eisenhower). இவர் இரண்டாம் உலகப் போரின்போது, உயர் இராணுவத் தளபதியாக விளங்கியவர். ஐந்து நட்சத்திரங்கள் பெற்ற ஜெனரல் பட்டம் பெற்றவரும் கூட. இந்தத் தகுதிகளால் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியை அடைந்தவர் இவர். இவர் வேற்றுகிரகவாசி்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று சொல்லப்படுவதுதான் இன்று மாபெரும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியான ஐசன்ஹோவர் மூன்று முறை வேற்றுகிரகவாசிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது, அமெரிக்க அரச அதிகாரிகள் மூலமாகவே வெளிவந்திருக்கிறது. இதை நம்புவதா விடுவதா என்பதை உங்கள் பொறுப்பில் விட்டுவிடுகிறேன். ஆனால் உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த சூடான செய்திகளில் இதுவும் ஒன்றாக இருப்பது என்னவோ நிஜம். நமக்குத்தான் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றனவே. அதில் இவை பற்றி அறிய ஏது நேரம்? இங்கு இவற்றை நான் சொல்வது, இவையெல்லாம் உண்மை, பொய் என்பதைத் தாண்டி, இப்படியும் உலகத்தில் செய்திகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

அமெரிக்க ஜனாதிபதியான ஐசன்ஹோவர் வேற்றுகிரகவாசிகளுடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியபோது, தானும் அங்கு இருந்ததாகச் சொல்கிறார் கேர்க்ளின் மானுவேல்
(Kirklin Manuel). ஐசன்ஹோவர் 1955ம் ஆண்டு பெப்ரவரி மாதம்11ம் தேதி, நியூ மெக்ஸிகோவில் இருக்கும் ஹொலோமான் விமானப் படைத்தளத்தில் (AFB Holloman)
வேற்றுகிரகவாசி்களைச் சந்தித்தார் என்கிறார் கேர்க்ளின். அதே விமானப் படைத்தளத்தில் உயர் பதவியில் இருந்தவர்தான் இந்த கேர்க்ளின். அது மட்டுமில்லாமல், அப்போலோ மிசனின் பயிற்சியாளராகவும் இருந்தவர் இவர். இவ்வளவு உயர் பதவியில் இருப்பவர் இப்படிப்பட்ட பொய்யைச் சொல்வாரா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அதே நியூ மெக்ஸிகோவில்தான் பறக்கும் தட்டு விழுந்த சம்பவங்கள் நடந்த இடங்களும் இருக்கின்றன. அடிப்படையில் ஐசன்ஹோவர் மிகவும் துணிச்சலானவர். அவர் ஜனாதிபதியாக இருந்தும் வேற்றுகிரகவாசி்களைச் சந்திக்க அவரது துணிச்சலும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. வேற்றுகிரகவாசிகள் ஐசன்ஹோவருடன் 'டெலிபதி' (Telepathy) முறையில் பேசியதாகவும் தகவல்கள் சொல்கின்றன. யாருமே நம்ப முடியாத கதைதான் இது. ஆனால் அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களும், அந்தச் சம்பவங்களை வெளியில் கொண்டு வந்த நபர்களும் இவையெல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற முடிவுக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன.

பறக்கும் தட்டு விழுந்ததைக் கூட நம்பலாம். ஆனால் வேற்றுகிரகவாசிகளை உயிருடன் சந்தித்துப் பேசியதை எப்படி நம்ப முடியும்? ஆனால் அதையும் இன்னுமொரு சம்பவம் உடைத்தெறிந்தது. ஒன்றைப் பொய் என்று சொல்லலாம். இரண்டைப் பொய்யென்று சொல்லலாம்,
மூன்றைப் பொய்யென்று சொல்லலாம். கேள்விப்படும் அனைத்தையும் எப்படிப் பொய்யென்று சொல்ல முடியும்? அடுத்த சம்பவம் இவையெல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் நேரடியாகக் கொடுத்த பேட்டிகளுடன், சாட்சியத்துடன் அது வெளிவந்திருக்கிறது.

எந்த இடத்தில் வேற்றுகிரகவாசி்களையும், பறக்கும் தட்டையும் வைத்து, அமெரிக்க அரசு இரகசியமாக ஆராய்ச்சி செய்கிறது என்று உலகம் முழுவதும் சந்தேகப்படுகிறதோ, அந்த இடத்திலிருந்தே இந்தச் சாட்சி வெளிவந்திருக்கிறது. இந்தச் சாட்சி சொல்வதை நீங்கள் நம்பினால்,  வேற்றுகிரகவாசி்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் நீங்கள் நம்புவீர்கள். இல்லை இதுவும் பொய்தான் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், இனி எத்தனை உண்மைகள் வெளிவந்தாலும் உங்களால் நம்ப முடியாது.

டேவிட் அடேர் (David Adair)
சர்வதேச ரீதியாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் முதல்தர விற்பன்னர். உலகில் வாழும் புத்திஜீவி எனப்படும் ஜீனியஸ்களில் இவரும் ஒருவர். தனது பதினோராவது வயதில் முதல் ராக்கெட்டை இவர் தயாரித்தார். 17வது வயதில் ராக்கெட் தயாரிப்பில் அமெரிக்க விமானப்படையின் பரிசுகளை வென்றார். அவர் மிகவும் நூதனமான, புதுமையான ஒரு ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பரிசோதனைக்குக் கொண்டுவந்தார். Electro Magnetig Fusion மூலமாகத் தொழிற்படும் ராக்கெட் எஞ்சினைத் தயாரித்தார். அவர் தயாரித்த ராக்கெட்டுக்கு நிதியுதவி அளித்தவர் அமெரிக்க காங்கிரஸில் இருந்த ஒரு பிரபலமானவர்.

அந்தப் பிரபலத்தின் மூலம் இந்த ராக்கெட்டைப் பரீட்சித்துப் பார்க்க, 'ஏரியா 51' இல் அனுமதி வாங்கிக் கொண்டார்.அவர் தயாரித்த ராக்கெட் சில செக்கன்களுக்குள் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் எடுக்கக் கூடியது. இவரின் இந்தத் திறமையைப் பார்த்து வியந்த 'ஏரியா 51' இன் அதிகாரிகள் சிலர், சில முடிவுகளை எடுத்தனர். 
'ஏரியா 51' இன் அதிகாரிகள் எடுத்த முடிவின்படி, 1971ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி, ஜெனரல் கர்டிஸ் லெமே(Gen. Curtis Lemay) என்பவரால் 'ஏரியா 51' க்கு அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த இடத்தில் 'ஏரியா 51'பற்றி நான் சிறிது சொல்ல வேண்டும். அமெரிக்காவின் நிவாடா (Nevada) பகுதியில் அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட இரகசியத் தளம் ஒன்றுதான் 'ஏரியா 51' (Aria 51).

தன்னுள்ளே ஒரு பாலைவனம் போல ஒரு பகுதியையும், மிகப்பெரிய ஏரியையும் கொண்டது 'ஏரியா 51'. இது எவ்வளவு கிலோமீட்டர் பரப்பளவுள்ளது என்பதே தெரியாத அளவுக்கு மிகப் பெரியது. இந்த 'ஏரியா 51' இல்தான் அமெரிக்காவின் இராணுவ, விமான,விண்வெளிப் பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்படுகின்றன. 'ஏரியா 51' இன் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற மிகக் கடுமையான வாக்கியங்களுடன் எல்லைப் பகுதி வேலிகள் காணப்படுகின்றன. அங்கே என்ன நடக்கின்றன என்பது யாருக்குமே தெரியாத இரகசியம். அங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் மிகக் கடுமையான சட்டதிட்டங்களுடன் வழி நடத்தப்படுகிறார்கள்.


இங்கு வேற்றுகிரகவாசி்கள் உயிருடன், காவலில் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், பறக்கும் தட்டுகள் இருக்கின்றன என்றும் பரவலான வதந்திகள் இருக்கின்றன.'ஏரியா 51' க்கு ஜெனரல் கர்ட்டிஸ் லெமே என்பவரால் அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சென்றதும் அந்தக் கட்டடத்தின் பிரமாண்டத்தைக் கண்டு பிரமித்துப் போனார் அடேர். பல விமானங்களை ஒன்றாக நிறுத்தி வைத்திருக்கும் அளவுக்கு அது பிரமாண்டமாக இருந்தது. அந்தக் கட்டடத்தின் நிலத்தடிச் சுரங்கத்தினுள் அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். பல நூறு மீட்டர் கீழே சென்றதும் அங்கும் பிரமாண்டமான கட்டட அமைப்புக் காணப்பட்டது.

நிலத்துக்குக் கீழே இவ்வளவு பெரிய கட்டடம் இருக்கும் என்பதை அவரால் கற்பனை பண்னவே முடியவில்லை. இவர்களை அழைத்துச் சென்றவர் கட்டடத்தின் பூட்டப்பட்ட வாசலில் இருந்த ஏதோ ஒன்றில் கையை வைத்தார். அது உடனே தற்சமயம் இருக்கும் ஸ்கானர் போல அவரது கைகளை ஒளியினால் வருடியது.கண்ணிலும் காமெரா வெளிச்சம் போல மின்னியது. உடன் கதவு திறந்து கொண்டது. அதாவது கைகளில் உள்ள கைரேகைகளை ஸ்கான் செய்து, பின்னர் கண்களைப் படம்பிடித்து, அந்த நபரைக் கண்டுகொள்ளும் தொழில்நுட்பத்தால், கதவுகள் திறந்தன.

இது நடக்கும் காலம் 1971ம் ஆண்டு. அந்தக் காலத்தில் லாப்டாப்புகள் இல்லை. மோடம்கள் இல்லை, ஃபாக்ஸ் இயந்திரம் இல்லை, செல்ஃபோன்கள் இல்லை. வீடியோ காசட் ரிக்கார்டர்கள் இல்லை, ஸ்கானர்கள் இல்லை, அதிகம் ஏன் கையடக்கமான கால்குலேட்டர்களே இல்லை. இவையெல்லாம் பல ஆண்டுகளுக்கு அப்பால்தான் வெளிவந்தன. அப்படி இருக்கையில் கைகளை ஆராயும் ஸ்கானரும், கண்களின் ரெட்டினாவைக் கண்டறியும் ஸ்கானருமான தொழில்நுட்பம் 1971ம் ஆண்டு எப்படி 'ஏரியா 51' இல் சாத்தியமாயிற்று? இதை யார் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்? வாசிப்பதை நிறுத்திவிட்டு சற்றுக் காலத்தால் பின்னோக்கிச் சென்று சிந்தித்துப் பாருங்கள்.

இன்று சொல்லும்போது சாத்தியம் போல இருக்கும் இவை, நாற்பது வருடங்களுக்கு முன்னர் எப்படிச் சாத்தியம்? கதவுகளைத் திறந்து உள்ளே சென்ற அடேர், அங்கே இருந்த வித்தியாசமான சூழ்நிலையை அவதானித்தார்.

மிகப்பெரிய ஹாலின் நடுவே மேடை போன்ற ஒன்றில், ஒரு பாடசாலை பஸ் அளவுக்குப் பெரிய, பச்சை நிறமான ஏதோ ஒன்று இருக்கக் கண்டார். அது என்ன என்றே முதலில் அடேர் புரிந்து கொள்ளவில்லை. பின்னர் சமாளித்துக் கொண்ட அவர், அது 'ஏரியா 51' இல் பணிபுரிபவர்களால் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் சம்பந்தமான ஒன்று என்ற முடிவுக்கு வந்தார். 'அதன் அருகே செல்லலாமா?' என்று அவர் கேட்டதற்கு, 'போகலாம்' என அவர்கள் அனுமதியளித்தனர். அதன் அருகே சென்று அதைப் பார்த்ததும் மிகவும் வித்தியாசமான மனநிலை தோன்றுவது போன்ற உணர்வு அவருக்குத் தோன்றியது. 'அதைத் தொட்டுப் பார்க்கலாமா?' என்று மீண்டும் அவர்களிடம் கேட்டார். அதற்கும் அவர்கள் அவருக்கு அனுமதி அளித்தனர்.

சொல்லப் போனால், இவரை அவர்கள் அழைத்தது கூட அதற்குத்தான்.
அடேர் மெதுவாக அதன் மேல் தனது கையை வைத்தார். அப்போதுதான் அந்த அதிசயத்தை அடேர் கண்டார்.அந்தப் பிரமாண்டமான பொருளில், இவர் கைவைத்த இடத்தில் நீலமும் வெள்ளையுமாக வெளிச்சங்கள் வளையங்களாக, அவர் கைகளில் இருந்து அலை அலையாகத் தோன்றியது. ஆடிப் போனார் அடேர். அத்துடன் அந்தப் பொருள் இதுவரை தான் எங்கும் தொட்டறியாத ஒரு உலோகத்தால் உருவானது என்றும் புரிந்து கொண்டார். ஏற்கனவே ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததால், பல உலோகங்களின் பரிச்சயம் அவருக்கு இருந்தது.

ஆனால் இது மிகவும் கடினமானதும், அதே நேரம் மிகவும் மிருதுவானதுமாகத் தோன்றியது.

உடனடியாகக் கையை எடுத்த அடேர், அந்தப் பொருளின் உள்ளே எட்டிப் பார்க்க விரும்பினார். அந்தப் பொருளின் ஒரு பக்கத்தில், மோதி வெடித்தது போலப் பெரிய ஓட்டையொன்று காணப்பட்டது. அதன் மூலம் தனது கையை வைத்து எட்டிப் பார்த்தார். அதனுள்ளே, வண்ண வண்ணமான திரவங்கள் நிரம்பிய ஃபைபர் குழாய்கள் போன்ற மிக நுண்ணிய குழாய்கள் ஒளிர்ந்தபடி லட்சக்கணக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து,நடுப்பகுதியைப் போய் அடைந்தன. கிட்டத்தட்ட ஒரு மனிதனின் மூளையில் நரம்புகள் மின்னைக் கடத்துவது போல அவை தொழில்பட்டன. அடேர் உடனே கையை எடுத்துவிட்டார். உடனடியாக அவருக்கு அது என்னவென்று புரிந்து போயிற்று.

அவர் அங்கிருந்தவர்களிடம், "இது நிச்சயமாகப் பூமிக்குச் சொந்தமான பொருளல்ல. இது
வேற்றுக்கிரகவாசிகளின் ராக்கெட்டின் எஞ்சினாக இருக்க வேண்டும். இது பூமியின் தொழில்நுட்பமே இல்லை" என்றார். இதைக் கேட்டதும் அவர்கள் முகம் கறுக்கத் தொடங்கியது. அதனால் சில வாக்குவாதங்கள் அடேருக்கும் அவர்களுக்கும் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் ஏற்பட்ட நேரத்தில் அந்தப் பொருளின் மீது தற்செயலாகக் கையை வைத்தார் அடேர். ஆனால் இப்போது சிவப்பும் ஆரஞ்சும் கலந்த ஒளி வளையங்கள் கைகள் பட்ட இடத்தில் தோன்றின. ஆனால், இதற்கு முன்னர் இதே இடத்தில் நீலமும் வெள்ளையுமாக ஒளி வளையங்கள் இருந்தன. அந்த விவாதங்களில் தன்னை விடுவித்துக் கொண்டு சிறிது நேரத்தில் மீண்டும் கை வைத்தபோது, பழையபடி நீலமும் வெள்ளையுமாக ஒளி வளையங்கள் தோன்றின.

அதாவது தான் அமைதியாக இருக்கும் மனநிலையில் அது நீலமும் வெள்ளையும் கலந்த ஒளி வளையங்களாகவும், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், சிவப்பும் ஆரஞ்சும் கலந்த ஒளி வளையங்களாகவும் தன்னை மாற்றுகின்றது என அடேர் கண்டுகொண்டார். மனிதனின் மனநிலையை அறியும் தொழில்நுட்பம் அதில் உள்ளதைப் புரிந்துகொண்டார். 

அந்தப் பிரமாண்டமான பொருள் ஒரு பறக்கும் தட்டின் எஞ்சின் என்றும் அந்த எஞ்சின் அதை ஓட்டுபவரின் எண்ணங்களின் முடிவுகளுக்கும், வேகத்துக்கும் ஏற்ப இயங்கும் எனவும், அந்தப் பறக்கும் தட்டு பூமியில் மோதியதால் இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றும் அடேர் புரிந்து கொண்டார். மனதின் கட்டுப்பாட்டால் இயங்கும் எஞ்சினை 'சிம்பையாட்டிக்' (Symbiotic) எஞ்சின் என்று சொல்வார்கள். இது பற்றிய ஆராய்ச்சிகள் மனிதர்களிடையே இப்போது இருக்கிறது.

பறக்கும் தட்டில் அமர்ந்து செல்பவர்களின் எண்ணங்களுடன் இந்த சிம்பையாட்டிக் எஞ்சின் தொடர்புபட்டு, அவர்கள் நினைப்பது போலப் பறக்க ஆரம்பிக்கும். இதற்கு எந்த ஒலியும் இருக்காது. தனக்கு நடந்தவற்றையெல்லாம், தனது கடமைக் காலம் முடிவடைந்ததும் வெளியுலகத்துக்குக் கொண்டு வந்தார் அடேர். பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டிகளாகச் சொன்னார். இவர் சொன்னதை இதுவரை அரசு ரீதியாக யாரும் மறுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். 

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், இவற்றை நம்புவதா? விடுவதா என்பதே பெரும் சர்ச்சையாக மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் இவையெல்லாம் உண்மையாக இருக்க முடியாது, பொய்தான் என்று சொல்வதற்கும் நம்மிடம் ஒரு காரணம் உண்டு. இந்த வேற்றுகிரகவாசிகள் ஏன் அமெரிக்காவில் மட்டும் வரவேண்டும்? ஏன் அவை மற்ற நாடுகளுக்கு வரவில்லை? அமெரிக்கர்கள் எப்போதும் விளம்பரப் பிரியர்கள். அந்த விளம்பரங்களினால் ஏற்படும் பிரபலத்துக்காகப் பொய் சொல்பவர்கள்.அதனால்தான் இவர்கள் எல்லாரும் இந்த வேற்றுகிரகவாசி, பறக்கும் தட்டுகள் விசயத்தில் பொய் சொல்கிறார்கள் என்ற காரணம் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவோ மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் தான்.

வேற்றுகிரகவாசிகள் ஏன் அமெரிக்காவைச் சுற்றியே வருகின்றன? மற்ற நாடுகளுக்கு அவை ஏன் வரவில்லை என்பது ஒரு சரியான கேள்வியாகவே படுகிறது. ஆனால் உண்மையாகவே வேற்றுகிரகவாசிகள் அமெரிக்காவுக்கு மட்டும்தான் வந்து போனவையா என்று நாம் ஆராய்ந்த போது, நாம் நினைத்தே பார்க்க முடியாத சம்பவங்கள் அமெரிக்கா தவிர்ந்த மற்ற நாடுகளிலும் நடந்துதான் இருக்கின்றன. இந்தச் செய்திகள் நாம் மேலே சொன்ன காரணத்தை அடித்து நொறுக்குகின்றன. சொல்லப் போனால், ரோஸ்வெல்லை விட அதிக நம்பிக்கையும், உண்மைத் தன்மையும் வாய்ந்த பறக்கும் தட்டுச் சம்பவம் ஐரோப்பாவில் நடந்திருக்கிறது. ஆம்! அந்தச் சம்பவம் ஜெர்மன் நாட்டையும், பெல்ஜியம் நாட்டையும் பிரிக்கும் எல்லையில் உள்ள, பெல்ஜியம் நாட்டுக்குச் சொந்தமான ஒரு ஊரில் நடந்தது. அந்தச் சம்பவம் என்னவென்றுதானே கேட்கிறீர்கள்?

இப்படிப்பட்ட குருவும் இருக்கிறார்கள்.. மாணவர்களின் சேவகரான ஆசிரியர்..


கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தின் பிரஹ்மவர் தாலுக்காவில் உள்ளது பாரலி கிராமம். இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அருகில் உள்ள பகுதியில் இருந்து பள்ளிக்கு வர மூன்று கிலோமீட்டர் தூரம் காடுகளை கடந்து வரவேண்டியுள்ளது. இதனால், மாணவர்கள் பள்ளியில் இருந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டது. ஆனால், இத்தகைய அவலத்தை தனி ஆளாக இருந்து தடுத்தவர் ஆசிரியர் ராஜாராம். அறிவியல் மற்றும் கணித ஆசிரியரான ராஜாராமிடம் நியூஸ் மினிட் பேட்டி எடுத்து அவர் மேற்கொண்ட பணிகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கு மாணவர்கள் வரமுடியாதது குறித்து ஆசிரியர் ராஜாராம் கூறுகையில், “சிறுவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வருவதற்கு பாதுகாப்பான சாலைகள் இல்லை. காடுகள் வழியாக சேரும் சகதியாகத்தான் பாதைகள் உள்ளன. சாலை வசதியில்லாததால் பெரும்பாலும் பெண் பிள்ளைகள் இடையில் நின்றுவிடுகிறார்கள். வீட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் என்பதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்” என்றார்.

மாணவர்களின் நிலையை கண்டு கவலை அடைந்த ராஜாராம், ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார். பெங்களூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் முன்னாள் மாணவர் விஜய் ஹெக்டேவை சென்று பார்த்துள்ளார். இருவரும் சேர்ந்து அடுத்த என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்து புதிய முடிவை எடுத்துள்ளனர்.
               
இதுகுறித்து ராஜாராம் கூறுகையில், ““பள்ளிக்கு வரும் மாணவர்கள் தொடர்ச்சியாக நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. பள்ளியையே மூடிவிடும் அபாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஒருநாள் எத்தனை மாணவர்கள் இடையில் நின்றுவிட்டார்கள் என்று கணக்கிட்டேன். எனக்கு மிகவும் கவலை உண்டானது. ஒவ்வொரு வாரமும் 5 முதல் 6 மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. என்னுடைய முன்னாள் மாணவர் விஜய் ஹெக்டே என்பவரை அழைத்தேன். அவரிடம் இடையில் நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டுவர பஸ் ஒன்று வாங்க வேண்டும் என்று கூறினேன்.” என்றார்.

விஜய் ஹெக்டே, மற்றொரு முன்னாள் மாணவர் கணேஷ் ஷெட்டி மற்றும் ஆசிரியர் ராஜாராம் மூவரும் சேர்ந்து பணம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருவழியாக பணம் சேர்ந்த பின்னர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பஸ் ஒன்றினை வாங்கியுள்ளனர். பஸ் வாங்கிவிட்ட நிலையில், அதற்கு டிரைவர் நியமிக்க வேண்டும். டிரைவரை வேலைக்கு அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ7 ஆயிரம் சம்பளம் கொடுக்க வேண்டும். அவ்வளவு தொகையை ஆசிரியர் ராஜாராமால் கொடுக்க முடியவில்லை. அதனால், பஸ்ஸை தானே இயக்கலாம் என்று ராஜாராம் முடிவெடுத்துள்ளார். இந்த முடிவை எடுத்த பிறகு ராஜாராமிற்கு பல்வேறு பணிகள் வருகிறது. பஸ் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும், அதற்கு உரிமம் பெறவேண்டும். இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார்.
               
பின்னர், ஓட்டுவதற்கு உரிமம் பெற்ற பின்னர், பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவர்களை அழைத்து வரும் பணியை தொடங்கினார். அவர் பேருந்தில் மாணவர்களை அழைத்து வர தொடங்கிய பின்னர், பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 50-இல் இருந்து 90 ஆக உயர்ந்தது. காலையில் சீக்கிரமாகவே மாணவர்களை அழைக்க பஸ்ஸை எடுத்துக் கொண்டு ராஜாராம் கிளம்பிவிடுவார். காலை 9.20 மணிக்குள் 4 முறை பிக் அப் செய்துவிடுவார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “பள்ளி காலை 9.30 மணிக்கு தொடங்கும். குறித்த நேரத்திற்குள் அனைத்து மாணவர்களும் வருவதை உறுதி செய்துவிடுவேன். நான் உட்பட மூன்று ஆசிரியர்கள் பள்ளியில் இருக்கிறோம். தலைமை ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். மூன்று ஆசிரியர்களில் ஒருவர் பள்ளிக்கு சீக்கிரமாகவே வந்துவிடுவார். முதல் முறை மாணவர்கள் அழைத்து வரும் போது அவர் பள்ளியில் இருப்பார். பள்ளியில் மாணவர்களை விட்டுவிட்டு அடுத்தடுத்த பிக் அப்பிற்காக சென்றுவிடுவேன். அதேபோல், மாலையில் அனைத்து மாணவர்களையும் நான் அவர்களது வீடுகளில் விட்டுவிட்டு வரும் வரை ஆசிரியர்கள் காத்திருப்பார்கள். மாணவர்களை எல்லோரையும் விட்டுவிட்டு நான் பஸ்ஸை நிறுத்திவிட்டு செல்வேன்” என்றார்.
       
பேருந்திற்கு இன்சூரன்ஸ் செய்ய தனது சொந்த பணத்தை செலவிட்ட ஆசிரியர் ராஜாராம், வண்டிக்கு டீசலும் போடுகிறார். தற்போது, பள்ளிக்கு வரும் பாதையில் சாலை அமைக்க அவர் விரும்புகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பள்ளியைச் சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல், பாதையும் அமைக்க விரும்புகிறேன். மாணவர்கள் அதில் விளையாட முடியும். பிரச்னை என்னவென்றால் என்னிடம் பணம் இல்லை. உதவிகேட்டு பள்ளியின் முன்னாள் மாணவர்களை தேடிச் செல்கிறேன். இருப்பினும், இந்தப் பிரச்னைகளை விரைவில் கடந்துவிடுவோம். விளையாட்டு மற்றும் மற்ற நடவடிக்கைகள் மூலம் பள்ளிக்கு மாணவர்கள் வருவதை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

ராஜாராம் போன்ற ஆசிரியர்கள் கிடைப்பது அவரிடம் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறுகிறார்கள்...

தற்சார்பு நம் வாழ்வியலின் அடித்தளம்... தற்சார்பு பொருளாதரம் நம் அடிமைத்தனத்தை உடைத்தெரியும் அடித்தளம்...


மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க - சித்தமருத்துவம்...


பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் கதைப்போம்.

பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விஷங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் . எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விஷமனாலும். அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும்.

நாய்க்கடி...

நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விஷம் நீங்கும்.

சீத மண்டலி...

சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்.

குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விஷம் முறியும்.

வண்டுகடி...

ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விஷம் நீங்கும்.

செய்யான் விஷம்...

தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் நீங்கும்.

எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விஷம் முறியும்.

பூரான்...

இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும் .
குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும்.

சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம். அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம். விஷம் முறியும் .

விரியன் பாம்பு கடித்தால்...

இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும் . கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விஷம் நீங்கும்.

நல்ல பாம்பு கடித்தால்...

நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விஷம் வெளியேறும்.

தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விஷம் நீங்கும்.

வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விஷம் முறியும் .

தேள் கடித்தால்...

தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் முறியும்.

நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விஷம் முறியும்.

எலிக்கடிகள்...

அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம் முறியும்.

அவுரி மூலிகை பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விஷம் முறியும்.

மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள் ).

சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.

சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.

பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம்..

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்...

இந்தியப் பெருங்கடல்...


கென்யாவில் யாருமே வசிக்க முடியாத மர்மமான இடம்...


யாருமே வசிக்க முடியாத ஒரு மர்மமான இடம் பூமியில் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதே இல்லையாம்.

கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடலுக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவில் பிரமாண்டமாய் தேங்கியிருக்கும் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான குட்டிக் குட்டித் தீவுகள் இருக்கின்றன. அந்தத் தீவுகளில் ஒன்றுதான் ‘என்வைன்டினெட்’ என்றழைக்கப்படும் கொஞ்சூண்டு நிலப்பகுதி. துர்கனா ஏரியைச் சுற்றி வாழும் பழங்குடியின மக்களின் மொழியில் ‘என்வைன்டினெட்’ என்றால், ‘திரும்பி வராது’ என்று அர்த்தமாம். தீவுக்கு இப்படிப் பெயர் வந்ததற்குப் பின்னணியில் இருக்கும் கதைதான் சுவாரஸ்யமும், மர்மமும் நிறைந்தது.

1900-களில் என்வைன்டினெட் தீவில் ஏராளமான மனிதர்கள் வாழ்ந்தார்கள். மீன் பிடிப்பது அவர்களுடைய தொழில். பெரும்பாலும் தீவை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்றாலும், வியாபாரத்துக்காக அவ்வப்போது பக்கத்துத் தீவுகளுக்குச் சென்று வருவார்களாம். என்வைன்டினெட் தீவில் மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே ஆதாரம், அவர்கள் பக்கத்துத் தீவுகளுக்கு அடிக்கும் விசிட்தான்!

இந்த நிலையில், திடீரென சில நாட்கள் அந்தத் தீவில் இருந்து, வியாபாரத்துக்காகப் பக்கத்துத் தீவுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த சில நாட்களில் மனிதர்களின் வருகை முற்றிலும் நிற்கவே, பக்கத்து தீவைச் சேர்ந்த சிலர் அந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். தீவுக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை. பிறகு, பாதுகாப்புடன் பயணித்த இன்னொரு பழங்குடியினர் குழுவும் திரும்பி வரவில்லை! இது போதாதா? ‘தீவுக்குச் செல்பவர்கள் காற்றில் கரைந்து விடுகிறார்கள்’, ‘வேற்றுக்கிரகவாசிகள் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்’, ‘திடீரென வரும் ஒளி வளையம் மக்களைக் கொன்று விடுகிறது’ என ஏகப்பட்ட கதைகள் தீவை ஆக்கிரமித்தன. அன்று முதல் மர்மத் தீவாகவே மாறிவிட்ட என்வைன்டினெட்டுக்குள் யாரும் நுழைவதில்லை.

1934-ல் அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் என்பவர், தன்னுடைய குழுவினரோடு துர்கனா ஏரியை ஆராந்துகொண்டிருந்தபோது அவருடைய காதில் ‘என்வைன்டினெட்’ தீவின் கதைகள் கிசுகிசுக்கப்படுகிறன.

ஆர்வமான விவியன் ‘இந்தத் தீவுக்கு என்னதான் ஆச்சு?’ என்பதை ஆராய உடன் வந்திருந்த மார்டின், டைசன் என்ற இரு இளம் ஆராய்ச்சியாளர்களை அந்தத் தீவுக்கு அனுப்பிவைத்தார். மர்மத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்று ‘என்வைன்டினெட்’ தீவுக்குக் கிளம்பிய இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் விவியனுடன் வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள்.

பிறகு, ஹெலிகாப்டர் உதவியோடு தீவுகளை வட்டமடித்த அவர்களுக்கு என்வைன்டினெட் தீவில் என்ன தெரிந்தது? பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. மீன், முதலை போன்ற சில உயிரினங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. மொத்தத்தில், அங்கே மனிதர்களும் இல்லை, மனிதர்கள் இருந்த தடயமும் இல்லை. என்வைன்டினெட் தீவுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இங்குள்ள மக்கள் அழிந்து போனதற்கு வேறு ஏதேனும் இயற்கைச் சூழல்கள் காரணமாக இருக்குமா, தீவுக்குச் செல்லும் மனிதர்கள் ஏன் திரும்புவதில்லை எனப் பல கேள்விகளோடு, இன்றுவரை எட்ட நின்றே ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்...

இன்றைய ஆட்சியின் சாதனை.. நாளை சோமாலியா தமிழ் நாடு... இராமநாதபுரம் மாவட்ட அவல நிலை...


திராவிடத்தின் பரிணாம வளர்ச்சி....


பேட்டா காசு வாங்க செயின் ஜார்ஜ் கோட்டை முன் நின்றால் அது திராவிடம்...

பேட்டா காசு வாங்க கோபாலபுர வாசல் முன் நின்றால் அது திராவிடம் 2.0...

2022ஆம் ஆண்டு வானில் பெரு வெளிச்சத்துடன் தெரியவுள்ள சூப்பர் நோவா வெடிப்பு...


2022 ஆம் ஆண்டு பூமியில் வசிக்கும் நமது கண்களுக்குத் தெரியும் விதத்தில் வானில் பெரு வெளிச்சத்துடன் சூப்பர்நோவா வெடிப்பு தெரியவுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக பைனரி நட்சத்திரப் பொறிமுறை (Binary star system) என்ற ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளே இந்த சூப்பர் நோவா வெடிப்பை மும்மொழிந்துள்ளனர்.

இவர்களது கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் மனித குல வரலாற்றில் முதன் முறையாக ஒரு சூப்பர்நோவா பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மேலும் இந்த சூப்பர் நோவா 1 வருடமாவது நீடிக்கும் என்றும் இரவு வானில் மிக வெளிச்சமான புதிய நட்சத்திரமாக அது தோன்றும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

அது சரி, சூப்பர் நோவா என்றால் என்ன என்று ஒரு கேள்வி வானியலில் பரிச்சயம் இல்லாதவர்களுக்குத் தோன்றும் அல்லவா?

அவர்களுக்கான விளக்கம் இதோ...

மிகப்பெரிய இரு நட்சத்திரங்கள் தமது ஆயுள் காலம் முடியும் தறுவாயில் ஒன்றுடன் இன்னொன்று மோதிக் கொள்ளும் போது ஏற்படும் பெரு வெடிப்பும் அதனால் ஏற்படும் மிகச் செறிவான வெளிச்சமுமே சூப்பர் நோவா (Super Nova) எனப்படுகின்றது.

இது போன்ற வெடிப்புக்கள் நமது பூமியில் இருந்து மில்லியன் ஒளிவருடங்கள் தூரத்தில் ஏற்படுகையில் நம்மால் பார்க்க முடியும் எனினும் இவை எப்போது ஏற்படும் எனக் கணிப்பது தான் கடினமானது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதாவது சூப்பர் நோவாவைக் கணிப்பது மில்லியனில் ஒரு பங்கே சாத்தியம் என அவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மனிதகுல வரலாற்றில் முதன் முறையாகக் கணிக்கப் பட்டுள்ள இந்த சூப்பர் நோவா, 2022 ஆம் ஆண்டு பூகோளத்தின் வடக்கே தென்படும் அன்னம் போன்ற வடிவம் கொண்ட நட்சத்திரத் தொகுதியான Cygnus  இடையே புதிய நட்சத்திரமாகத் தோன்றும் எனப்படுகின்றது.

சூப்பர் நோவாக்கள் அடையாளம் காணப்படத் தொடங்கியதன் பின்னர் தான் வானியலில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக நமது பிரபஞ்சம் அதிகரிக்கும் வேகத்தில் விரிவடைகின்றது என்பதற்கு ஓர் அவதானமாகவும் சூப்பர் நோவா விளங்கியதாகக் கூறப்படுகின்றது.

இதைவிட சூப்பர் நோவாக்கள் மூலம் தான் பிரபஞ்சத்தில் புதுப் புது மூலகங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பரவுவதாகவும் இதனால் உயிர்ப் பல்வகைமை கூட ஏற்படுவதாகவும் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது...

மருதுபாண்டியர் பயன்படுத்திய ராக்கெட் தொழில்நுட்பம்...

வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி சும்மா உதவவில்லை.

வேலுநாச்சியாரிடம் ராக்கெட் தொழில்நுட்பத்தை வாங்கிக்கொண்டு தான் படை உதவி செய்தான்.

வளரி தொழில்நுட்பத்தையும் வாங்கியதாகத் தெரிகிறது.

மீ  மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலில் இது பற்றி உள்ளது..

திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில்   தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர் இலான் காபெரியல் உதவியுடன் ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன..

வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில் சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது..

மருதுபாண்டியருடனான திருப்பத்தூர் போரில் ஆங்கிலேயர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,

அதில் கர்னல் இன்னிங்ஸ் உயிர்தப்பியதாகவும் குறிப்பு உள்ளது.

military consulations 285 (18-6-1801) pp. 4559-61
military consulations 286 (4-8-1801) pp. 5348-49

நூல்: மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர்: எஸ்.எம்.கமால்...

அதிமுக செல்லூர் ராஜூ கலாட்டா...


நெல்லிக் காயின் மருத்துவ குணங்கள்...


நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.

நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.

நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.

நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.

நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்...

நம்ப முடியாத உண்மைகள்...


அறப்போர் இயக்கம் வெளியீடு....


லோக் ஆயுக்தா சட்டத்தை பொறுத்த வரை Selection Process மற்றும் Selection Panel ரொம்ப முக்கியம்...

உதாரணத்துக்கு அதிமுக அரசு எப்படி இதை வடிவமைப்பார்கள் என்றால் லோக் ஆயுக்தா ஆணையருக்கு IAS தகுதி இருந்தால் போதும் என்றும் அந்த ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சபாநாயகர் இடம்பெறுவார்கள் என்றும் சொல்லிவிடுவார்கள். எவ்வளவு வலுவான சட்டமாக இருந்தாலும் இந்த இரண்டு அம்சங்கள் அந்த சட்டத்தை பயனற்ற சட்டமாக மாற்றிவிடும்.

அதனால் தான் லோக் ஆயுக்தா ஆணையராக இருப்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ இருக்க வேண்டும் என்று கேட்பது அவசியம். இதற்காக தான் மக்கள் கருத்தை கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். நீதிபதிகள் எல்லாரும் நேர்மையானவர்களா என்ற கேள்வி வரும். அதற்காக தான் இவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மன்றத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகளும் இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். மேலும் இந்த தேர்வுக்குழு சந்திப்பு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் தான் நடைபெற வேண்டும் என்றும் கூறுகிறோம்.

சரி இதெல்லாம் யாருக்கு சொல்கிறோம். அரசுக்கு தானே. ஆனால் மக்கள் கருத்தை கேட்கவே அரசு தயாராக இல்லாத போது இதை எப்படி சொல்வது? அதனால் தான் இந்த சட்டத்தை சட்டசபையில் சமர்ப்பிக்க இருக்கும் அமைச்சர் ஜெய்குமாருக்கும் இதை தயாரிக்கும் பணியை செய்ய வேண்டிய தலைமை செயலாளருக்கும் அனுப்புகிறோம்...

நாதாரி... கேப்மாரி... சண்டாளா....


நன்றி...


உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தனக்கு முன்னால் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களுக்கு ஒரு நாளில் நூறு முறை மேல் நன்றியுணர்வை வெளிபடுத்துவார்.

இயேசு கிறிஸ்து தான் செய்யும் ஒவ்வொரு அற்புதத்திற்கு முன்னரும் நன்றி சொல்லி தொடங்கினார்...

உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் தன் அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி கூறும்போது பல அறிவியல் அறிஞர்களின் தோளில் ஏறி சாதித்தாக குறிப்பிட்டார். ஒரு நாளில் குறைந்தது நூறு முறையாவது நன்றியுணர்வை வெளிபடுத்தினார்.

எண்ணற்ற மகான்களும், அறிவியல் அறிஞர்களும், வாழ்வில் சாதித்தவர்களும் தங்கள் வாழ்வில் ஒரு நாளில் நூறு முறைக்கு மேல் நன்றியுணர்வை வெளிப்படுத்தியு
ள்ளார்கள்..

நீங்கள் ஒரு நாளில் குறைந்தது நூறு முறையாவது நன்றியுணர்வை மற்றும் அன்பை வெளிப்படுத்தி உணரும்போது உங்கள் நாள் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக மாறுகிறது....

நீங்கள் செல்லுமிடமெல்லாம் மாயஜாலம் நிகழ்கிறது.... நீங்கள் சாலையில் பார்க்கும் வார்த்தைகள் அனைத்தும் உங்களை மகிழ்விக்கிறது.

உங்களை சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலும் , சூழ்நிலையும் உங்களை எப்போதும் சந்தோஷமான சூழ்நிலையிலே வைத்திருக்கும்...

அதிமுகவின் சத்துணவு ஊழல்...


இறப்பு வீட்டிலும் செல்பி எடுத்து மகிழும் நடிகரும் பாஜக எம்பியுமான சுரேஸ்கோபி...


சிலதினங்களுக்கு முன்பு எர்ணாகுளம் மகாராஜா கேம்பாஸ்சில் வைத்து கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரால் குத்தி கொல்லப்பட்ட  மாணவரும் இந்திய மாணவர் அமைப்பின்  உறுப்பினருமான  அபிமன்யூவின்  சொந்த இடமான இடுக்கி மாவட்டம் வட்டவடாவில் உள்ள அவரது வீட்டில் ஆறுதல் கூறசென்ற போது செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் சுரேஷ் கோபி. 

இந்த செயலால்  கேரளா முழவதும் சமூக வலைதளங்கள் மூலமாக கடும் எதிப்புகள் எழுந்துள்ளது சுரேஷ் கோபிக்கு...

வழித்துக்கொள் தமிழினமே...


தமிழீழம்.. கருத்தியல்.. பாடம்...


இந்த இதழின் விடுதலை புலிகளின் குரல் என்ற தலைப்பில் மேதகு.தலைவர் பேசியதை படித்து பாருங்கள்..

அதன்பிறகு உங்கள் மனநிலையை இங்கு கூறுங்கள்...

தமிழீழம்...


பயனில்லாத விவாதங்கள்: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் - பாமக அறிக்கை...


தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த 22 நாட்களில் பயனுள்ள வகையில் ஏதேனும் விவாதம் நடைபெற்றதா? என்று சிந்தித்துப் பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு காலத்தில் பயனுள்ள, பரபரப்பான ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடைபெறும் மன்றமாக திகழ்ந்த தமிழக சட்டப்பேரவை இப்போது கூடிக் கலையும் மன்றமாக மாறியிருப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டை ஆட்சி செய்வதற்கும், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்துவதற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதியும், பெரும்பான்மையும் உள்ளதா? என்பது மில்லியன் டாலர் வினா. அதற்கான விடையை ஆளுனரிடமிருந்தும், உயர்நீதிமன்றத்திடமிருந்தும் பெறுவதில் ஏற்பட்ட கால தாமதம் தான்  பினாமி ஆட்சி எனும் ஓட்டைக்கப்பலைக் கவிழாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எனினும், இதுகுறித்த விவாதத்தை ஒதுக்கி வைத்து விட்டு, பேரவைக் கூட்டத் தொடர் எவ்வாறு நடத்தப்படுகிறது? என்பதைப் பார்த்தால், பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் வெட்கப்படும் அளவில் தான் உள்ளது.

மே மாதம் 29&ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறும் இக்கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் பேரவை நிகழ்ச்சிகளை புறக்கணித்து, மாதிரி சட்டப்பேரவையை நடத்துவதாக அறிவித்தனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அவர்கள் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் அவைக்கு வந்தனர். அதன் பின்னர் இன்று வரை முத்திரை பதிக்கும் வகையிலான ஒரு விவாதத்தைக் கூட திமுக முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சித்  துணைத்தலைவரும், துணை முதலமைச்சரும் யாருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என்று பல்வேறு தருணங்களில் விவாதித்து, ஒரு கட்டத்தில் தாம் நடிக்கச் சென்றிருந்தால் ஜெயலலிதாவுக்கு இணையாக நடித்திருப்பேன் என்று எதிர்க்கட்சித் துணைத்தலைவர் புளங்காகிதம் அடைவதில் வந்து முடிந்தது.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான உயர்த்தப்பட்ட ஊதியத்தை வாங்க மாட்டோம் என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைத் தலைவரிடம் எழுதிக் கொடுத்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரோ, தங்களின் ஊதியத்தை விட செலவு அதிகமாகி விட்டதால், அதற்கான தொகையை அரசு கொடுக்க வேண்டும் என்று கோருகிறார். மக்களின் பிரச்சினையை பேச வேண்டிய மன்றத்தை தங்களின் சொந்தப் பிரச்சினையாக மாற்றியது தான் இவர்களின் சாதனை.

ஆளுங்கட்சியின் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது.  ஆளுங்கட்சியினர் துணைக் கேள்வி கேட்பதாக இருந்தால் கூட ஜெயலலிதா, எடப்பாடி, பன்னீர்செல்வம் வரை மூவரையும் போற்றும் புராணங்களை பாடிவிட்டுத் தான் தொடங்குகிறார்கள். இதனால் அவை நேரம் வீணாவதைப் பற்றிக் கவலைப்படாத பேரவைத் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரு நிமிடம் கூடுதலாக பேச அனுமதி மறுக்கிறார். சாதாரண விஷயங்களைக் கூட 110 விதியின் கீழ் அறிவிக்கும் மோசமான கலாச்சாரத்துக்கு  ஜெயலலிதாவுடன் முடிவுரை எழுதப்படும் என்று நம்பப்பட்ட நிலையில், எடப்பாடியும் அதேக் கலாச்சாரத்தை தொடருகிறார். ஜெயலலிதா முதமைச்சராக இருந்த போது, எடப்பாடி வகித்த துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அந்த அறிவிப்புகளை ஜெயலலிதா தான் வெளியிட்டார். முதலமைச்சரான நாளில் இருந்தே தம்மை ஜெயலலிதா ஆக கருதிக் கொள்ளும் பழனிச்சாமி, இப்போது ஜெயலலிதா போலவே மற்ற அமைச்சர்களின் துறைகள் சார்ந்த அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் தாமே வெளியிடுகிறார். பேரவைக்கென தனியான நாகரிகம் உள்ள நிலையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத முதலமைச்சரும், மற்ற உறுப்பினர்களும் பொதுக்கூட்ட மேடைகளில் பேசுவதைப் போன்றே முகம் சுளிக்கவைக்கும் மொழிகளில் மிகவும் கொச்சையாக பேசுகின்றனர்.

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தையும்  முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது மக்களின் உரிமை ஆகும். பேரவையில் நடப்பதை அவர்கள் பார்த்து தெரிந்து கொண்டால் தான், தாங்கள் சரியான நபர்களைத் தான் தேர்ந்தெடுத்துள்ளோமா? என்பது குறித்து தன்னாய்வு செய்து கொள்வதற்கும், அடுத்து வரும் தேர்தலில் சரியான நபர்களை தேர்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும். இதற்கு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்பட வேண்டியது அவசியமாகும். அதை செய்ய அரசு  மறுப்பது கண்டிக்கத்தக்கது.

அவை நிகழ்ச்சிகள் அனைத்தும் இப்போதும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், ஆளுங்கட்சிக்கு சாதகமான பகுதிகள் மட்டுமே ஊடகங்களுக்கு அனுப்பி ஒளிபரப்பச் செய்யப்படுகின்றன. இதனால் ஆளுங்கட்சியினரின் தவறுகள் வெளியில் வராமல் மறைக்கப்படுகின்றன. அவை நிகழ்ச்சிகளை நேரலை செய்வதில் அரசுக்கு தயக்கம் ஏன்? என்பது தெரியவில்லை. அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கப்பட்ட போது, அதன்வழியாக தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 7 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நாட்டில் பல மாநிலங்களில் அவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படுகின்றன. இன்னும் பல மாநிலங்களில் அவை நிகழ்ச்சிகள் முழுமையாக பதிவு செய்து ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றன. சில மாநிலங்களில் ஊடகங்களே ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தான் சட்டப்பேரவை ஜனநாயகம் குரல்வளை நெறிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறது.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படும் போது உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்பது ஒருபுறமிருக்க, உறுப்பினர்களும் மிகவும் பொறுப்புடன் செயல்படுவர். எனவே, அடுத்தக் கூட்டத்தொடரிலிருந்தாவது சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து அறிவதற்கு வசதியாக அவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

நீட் கொள்ளை....


பேசியபடி வாகனம் ஓட்டினால் மொபைல் பறிப்பு...


உத்தரகண்ட் மாநிலத்தில், பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவோரிடம் இருந்து, மொபைல் போன்களை, 24 மணி நேரத்துக்கு பறிமுதல் செய்யும்படி, போக்குவரத்து துறைக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த மாதம், மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களின் போன்களை பறிக்கவும், டிரைவிங் லைசென்சை ரத்து செய்யவும், அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யும் வரை, விதிகளை மீறுவோரிடம், 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கலாம் எனவும் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. கடந்த வாரம், பவுரி கார்வால் மாவட்டம், துாமகோட்டில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 48 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, நேற்று முன் தினம், உயர் நீதிமன்ற நீதிபதி, ராஜிவ் சர்மா பிறப்பித்த உத்தரவு: சாலை பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து, போக்குவரத்து துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பேசியபடி, வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து, மொபைல் போனை, 24 மணி நேரத்துக்கு பறிமுதல் செய்து, உரிய ரசீது வழங்க வேண்டும்.மேலும், போதையில் வாகனம் ஓட்டுவோர், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், வாகன பர்மிட் ஆகியவற்றை, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 73 அமலாக்க குழுக்களை, போக்குவரத்து துறை செயலர் நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது...

இலுமினாட்டி யும் பாஜக மோடியும்...