26/02/2019

பாமக அன்புமணி ராமதாஸ் கேட்ட 6 கேள்வி நேரலையில் அவமான பட்ட அந்த கட்சி செய்தியாளர்...


மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தாங்கள் ஏன் கூட்டணி வைத்தோம் என்ற விளக்கத்தையும் அதற்கான காரணிகளையும் எடுத்து சொல்லிவந்தார்.

தமிழக மக்களின் நலன் குறித்தே கூட்டணி அமைத்ததாவும் எங்கள் கொள்கைகளில் எள்ளளவும் மாற்றம் இல்லை என்று விளக்கி விட்டு செய்தியாளர்களை கேள்விகள் கேட்க அறிவுறுத்தினார்.

அப்போது செய்தியாளர்களில் ஒருவர் நான் உங்கள் போட்டி ஊடகம் சன் நியூஸ் என்றும் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்று மிகவும் வீம்பாக பேசினார்.

கூட்டணி வைக்கவில்லை என்று சொன்ன நீங்கள் கூட்டணி வைக்கிறீர்களே இது உங்கள் கொள்கைக்கு ஏற்புடையதா என்றும் நீங்கள் கூட்டணி வைத்தது தமிழர் நலனுக்கா இல்லை உங்கள் நலனுக்காக என்பதுபோல் கேட்டார்.

இதற்கு சற்று கோபம் அடைந்த அன்புமணி நிதானமாக தனது பதிலை எடுத்து சொன்னார் அதில்...

1) திமுக என்ற கட்சியே முதலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஆரம்பித்ததுதான் தற்போது இவர்கள் எந்த அடிப்படையில் கூட்டு சேருகிறார்கள்?

2 ) கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியும் எதிர் எதிராக அடித்துக்கொண்டு நிற்கிறார்கள் இவர்கள் திமுக கூட்டணியில் ஒன்றாக இருப்பது எப்படி சாத்தியம் என்று கேட்டார்

3) கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருமாவளவன் திமுக குறித்து ஊழல் கட்சியென்றும் இனி திமுக அதிமுக இரண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொன்னார் இப்போது என்ன ஆனது

4) எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் தற்போதைய தலைவர் ஸ்டாலின் இலங்கை தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியினர் உடன் இனி கூட்டணி இல்லை என்று 2013 இல் சொன்னார் இப்போது எந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியிடம் துண்டை போட்டு காத்திருக்கிறார்.

5 ) இந்திரா காந்தி அம்மையார் தமிழகம் வந்த போது அவர்கள் மீது கல்லெறிந்து ரத்தம் வருகையில் மாதவிடாயா என்று கொச்சை படுத்திய திமுகவிடம் எப்படி காங்கிரஸ் கூட்டு சேர்ந்தது.

6 ) வைகோ பேசிய பேச்சிற்கு இன்று ஸ்டாலின் கூட்டணியில் சேர்க்கலாமா எதன் அடிப்படையில் இப்படி ஒரு கூட்டணி அமைந்தது?

இதற்கு விளக்கம் தாருங்கள் என்று கேட்க வாயடைத்து போய்விட்டார் அந்த கேள்வியை கேட்ட செய்தியாளர் மேலும் உங்களது நோக்கம் எங்களது கூட்டணிகுள் குழப்பம் விளைவித்து எப்படியாவது மீன் பிடிக்கலாம் என்று தானே இப்படி ஒரு கேள்வியை கேட்கிறீர்கள் என்னிடம் கேட்கும் இதே கேள்வியை நீங்கள் நான் சொன்ன அனைவரிடமும் ஒரு நாள் கேளுங்கள்.

ஸ்டாலினை பார்த்து உங்களது கூட்டணியில் உள்ள வைகோ மிக கேவலமாக தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்ச்சித்தாரே எப்படி இணைந்தீர்கள் என்று தமிழகத்தை சேர்ந்த ஒரு ஊடகமாவது கேள்வி கேளுங்கள் என்று வெளுத்து வாங்கி விட்டார் மொத்தத்தில் அன்புமணியின் இன்றைய பேச்சு திமுகவிற்கும் அதன் பினாமி ஊடகங்களுக்கும் கொடுத்த சவுக்கடியாகத்தான் பார்க்கப்படுகிறது...

20 நாடாளுமன்ற தொகுதி , 12 சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டி - கிருஷ்னசாமி...


விசிக & மதிமுக வை நினைத்தால் தான் சிரிப்பு சிரிப்பா வருது...

எப்பவுமே அடுத்தவன் காலில் விழுந்து 1 சீட்.. 2 சீட்டுக்காக அடிமை வேலை செய்கிறது...

தெலுங்கர் வைகோ நாயுடுவின் திட்டம்...


தெலுங்கர்கள் கூட்டணிக்கு வந்துடு... தமிழர்கள் கூட்டணி வென்று விட்டால்..

பிறகு நாம் தமிழர்களை ஏமாற்றி பொழக்க முடியாது... என்று எடுத்துறைக்க...

தேமுதிக தெலுங்கர் விஜயகாந்தை... மதிமுக தெலுங்கர் சந்தித்து... திமுக தெலுங்கர் ஸ்டாலினுடன் கூட்டணிக்கு அழைக்க உள்ளார்...

அஇஅதிமுகவுடன் ஏன் கூட்டணி வைத்தோம்?: சென்னை தி.நகரில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி விளக்கம்...


கட்சியின் அடிமட்ட தொண்டன் முதல் நிர்வாகி வரையில் கலந்து பேசி எடுத்த முடிவு...

தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்கப்படும் என்ற கோரிக்கையை ஏற்றதால் இந்த கூட்டணி..

விவசாயி, கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்ததால் கூட்டணி...

7 பேரை உடனடியாக விடுதலை  செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு..

தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு..

தமிழகத்தில் புதிய நீர்பாசன திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்..

மணல் குவாரிகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு..

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரிக்கை ஏற்பு..

7 வது ஊதிய உயர்வு அமல்படுத்துதல்..

உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் தேர்தலில் வெற்றி பெறவும் இந்த கூட்டணி முடிவை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எடுத்துள்ளார் என அன்புமணி ராமதாஸ் விளக்கம்...

அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு எனக்கூறிய திமுகவினர் எத்தனை பேர் இதற்க்கு சுடுகாட்டிற்கு சென்றனர்? - அன்புமணி கேள்வி...


திமுக : தம்பி உங்க கேள்வி என்ன செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு...

பாமக : அடிச்ச மாதிரி இல்ல டா செருப்பால தான் அடிச்சேன்...

ஆசிரியரிடம் கூறி விடுவேன் என மிரட்டி பலாத்காரம்.. சின்மயி வெளியிட்ட அடுத்த உண்மை...


பாடகி சின்மயி பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் அவரது கணவரும் குடும்பமும் பக்க பலமாக இருந்து வருகின்றனர்.

இதனால் அவர் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை மட்டுமல்லால் வெளியில் நடப்பதையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், வாலிபர் ஒருவர், அவருடைய பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த நண்பன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை கூறி ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது என கூறியுள்ளார்.

அந்த வாலிபர் குறித்து சின்மயி கூறுகையில், விளையாட்டாக ஆசிரியரை கிண்டல் செய்தவரை மிரட்டி தனக்காக பயன்படுத்தியுள்ளார் அவரது நண்பர். மற்ற விஷயத்திற்காக தொடங்கி கடைசியில் பாலியல் ரீதியில் வந்து முடிந்துள்ளது அந்த மிரட்டல். ஒருநாள் அந்த வாலிபரை அவரது நண்பர் தனது வீட்டிற்கு அழைத்து கற்பழித்துள்ளார்.

இதனை அந்த நபர் தனது தந்தையிடம் கூற அவர் அந்த நண்பனை ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார்...

மக்கள் நலன் கூட்டணி கலாட்டா...


உங்கள் பிள்ளைகளின் இன்றைய நிலைமை...


நீங்கள் அவர்களை பெற்றதால், வாழ்நாள் முழுவதும் அவர்கள் உங்கள் பேச்சை கேட்க வேண்டுமென்பது உங்களின் கருத்து என்றால், இந்த சமூகத்தில் உங்களை தாய்-தந்தை என்ற அங்கீகாரம் கொடுத்தவர்கள் அந்த குழந்தைகள் மட்டுமே..

ஆனால் அந்த குழந்தைகள உங்களிடம் எப்போதும் அவர்கள் சொல்படி இருக்க வேண்டுமென்று எப்போதும் கூறியதில்லை..

இங்கு எல்லாருக்கும் ஒரு அழகான வாழ்க்கை உண்டு.. அது நல்லதோ..? கெட்டதோ..? காலம் முடிவு செய்யும்..

நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்...

கார்ப்பரேட்வாதிகளின் தேர்தல் நாடகம் தொடங்கியது..


தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மீகம்...


இயல், இசை, நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது தமிழ் மொழி. பண்டைய காலத்தில் மூன்று துறைகளுடன் ஆன்மிகமும் கலந்து தமிழ் மொழி வளர்க்கப்பட்டது. இலக்கியம், நாடகம் மூலமாக தமிழ் மொழி வளர்க்கப்பட்டாலும், பெரிய அளவில் ஆன்மிகம் தான், தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.

குறிப்பாக அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், ஆகிய சைவ சமயத்தின் மூலமாக தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது.

அதே போல் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய வைணவ சமயத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது.

இவ்வாறு ஆன்மீகமும் தமிழ் மொழியும் பிரிக்க முடியாதவகையில் பின்னிப்பிணைந்திருக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் என்றும் இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆன்மிகத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள்:

பதினென் சித்தர்கள்...

அகத்தியர்,போகர், கோரக்கர், மச்சமுனி, சட்டைமுனி, திருமூலர், நந்தி, கொங்கணர், ராமதேவர், பதஞ்சலி, குதம்பை முனிவர், கரூவூரார், தன்வந்திரி, வாசமுனி, இடைக்காடர், கமலமுனி, சுந்தரானந்தர், பாம்பாட்டி சித்தர்.

மன்னர்கள்...

சேரன் செங்குட்டுவன், கரிகால் சோழன், ராஜசோழன், உக்கிர பாண்டின், அதிவீரராம பாண்டியன்.

புலவர்கள்...

நக்கீரர், அவ்வையார், காரைக்கால் அம்மையார், பாணபத்திரர், சீத்தலை சாத்தனார், கம்பர், பாரதியார், திரிகூட ராசப்பக்கவிராயர், இரட்டைப்புலவர்களான இளஞ்சூரியர், முதுசூரியர், இளங்கோவடிகள், திரு.வி.க.,

ஆன்மிக வாதிகள்...

பாம்பன் சுவாமிகள், முத்துக்குமார சுவாமிகள், குமரகுருபரர், சங்கரதாஸ் சுவாமிகள், வள்ளலார், கிருபானந்த வாரியார். இன்னும் நிறைய ஆன்மிக பெரியோர்கள் உள்ளனர்...

எந்த ராசிகாரர்களுக்கு என்ன நோய் தாக்கும்.. தவறாமல் பாருங்க...


https://youtu.be/hUK22EXL8TU

Subscribe the channel for more news...

யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன்...


வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்...

யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள்..

இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு..

(1) கயந்தலை - பிறந்த உடனான யானையின் பெயர்
(2) போதகம் - எழுந்து நிற்க தொடங்கும் பருவம்
(3) துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம்
(4) களபம் - உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்
(5) கயமுனி - மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்

பொதுவான பெண் யானையின் பெயர்கள்...

பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி.

நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்...

(1) கரிய நிறம்: யானை/ஏனை
(2) வெள்ளை நிறம்: வேழம்

யானையின் மற்ற காரண பெயர்கள்...

(1) உம்பல் - உயர்ந்தது
(2) கறையடி - உரல் போன்ற பாதத்தை உடையது
(3) பெருமா - பெரிய விலங்கு
(4) வாரணம் - சங்கு போன்ற தலையை உடையது
(5) புழைக்கை / பூட்கை / தும்பி - துளையுள்ள கையை உடையது
(6) ஓங்கல் - மலை போன்றது
(7) பொங்கடி - பெரிய பாதத்தை உடையது
(8) நால்வாய் - தொங்குகின்ற வாயை உடையது
(9) குஞ்சரம் / உவா - திரண்டது
(10) கள்வன் - கரியது
(11) புகர்முகம் - முகத்தில் புள்ளியுள்ளது
(12) கைம்மலை - மலையை போன்ற கையை உடையது
(13) வழுவை - உருண்டு திரண்டது
(14) யூதநாதன் - யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்
(15) மதோற்கடம் - மதகயத்தின் பெயர்
(16) கடகம் - யானைத்திரளின் / கூட்டத்தின் பெயர்

யானையின் ஏனைய பெயர்கள்...

(1) களிறு
(2) மாதங்கம்
(3) கைம்மா
(4) உம்பர்
(5) அஞ்சனாவதி
(6) அரசுவா
(7) அல்லியன்
(8) அறுபடை
(9) ஆம்பல்
(10) ஆனை
(11) இபம்
(12) இரதி
(13) குஞ்சரம்
(14) இருள்
(15) தும்பு
(16) வல்விலங்கு
(17) தூங்கல்
(18) தோல்
(19) எறும்பி
(20) ஒருத்தல்
(21) நாக
(22) கும்பி
(23) கரேணு
(24) கொம்பன்
(25) கயம்
(26) சிந்துரம்
(27) வயமா
(28) தந்தி
(29) மதாவளம்
(30) தந்தாவளம்
(31) மந்தமா
(32) மருண்மா
(33) மதகயம்
(34) போதகம்...

தேர்தல் வந்தால் போதும்.. பாஜக மோடி பொய், பித்தலாட்டம், நடிப்பில் நம்பர் 1 ஆக மாறிடுவார்...


மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை தடுக்க இயந்திரம் உருவாக்கிய கேரள அரசு...

தேர்தல் போது மட்டும் ஏற்கனவே சுத்தப்படுத்தப்பட்ட கால்களை சுத்தம் செய்வது போல் நாடகமாடும் நமது நடிகர் திலகம்...

உண்மையான தமிழ் சமூகம் யார்.? - ஐயா ஒரிசா பாலு....


https://youtu.be/2AqkdaleG5s

Subscribe the channel for more news...

கருப்பை நரம்புகளுக்கும் கால் விரலில் மெட்டி....


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது..

கால் விரலில் மெட்டி அணிவதால் , கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. மேலும், வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.

ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து... உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது..

மேலும் , பெண்கள் கர்ப்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்போது , இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும். ஆனால், இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது..

ஆதலால் தான் வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து.. நோவைக் குறைக்கிறது..

ஆக , கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்...

சம்ஸ்கிருதத்துக்குச் "சரிநிகரான" மொழி அல்ல, தமிழ்...


ஆள் மயக்குவதற்கு உளற நினைத்தால்..
தமிழுக்குச் சரிநிகரான மொழி சம்ஸ்கிருதம், எ. மாற்றி உளறு...

ஒரு நாளும், ஒரு போதும்..
செத்தமொழிக்குச் "சரிநிகர்" ஆகாது வாழும்மொழி...

லைப்பாய் சோப் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.. ஆனால் இந்தியாவில்...?


பாமக - அதிமுக கூட்டணி பற்றி...


அதிமுகவை முழுதாக கைப்பற்றி ஆட்டைய போடலாம் என கனவுக் கண்டுக் கொண்டிருந்த  டிடி.வீரபாகு தினகரனுக்கு, அதிமுக உடன் பாமக அமைத்த கூட்டணி அந்த கனவில் முற்றிலுமாக மண்ணள்ளி போட்டு கலைத்துவிட்டது...

சீட் ஒதுக்கீடு மற்றும் மோடியை முதன்மைப்படுத்தாமல் அதிமுக-பாமக கூட்டணி என்று அழுத்தமாக கூறுவதும், பாஜகவோடு அதிகம் உறவாடாமல் பாமகவுடன் நட்பை மாறி மாறி பகிர்ந்துக் கொள்வதும், பாஜகவின் ஆதிக்கத்தின் கீழ் அடங்காமல் பாமகவின் பலத்தோடு மெல்ல மெல்ல சுயமாக செயல்படுவதற்கான அதிமுகவின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளே!

பாமகவை விட அதிகம் சீட் கேட்டது மட்டுமல்லாமல் பாமக கேட்ட அதே சீட்டையும் கேட்ட தேமுதிகவை அப்படி ஒரு கூட்டணியே தேவையில்லை என ஓரமாக காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதற்கும் பாமகவே கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க வேண்டுமென்ற அதிமுகவின் எண்ணமே காரணம்.

பாமகவுடன் ஏற்பட்ட மோதலில் ஐஜேகே கட்சி தலைவர் பச்சமுத்து தனது டிவியில் பாமக பற்றிய செய்திகளை புறக்கணித்தும், பாமக விரோத செய்திகளை பரப்பியும் பாமக விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் காரணமாக ஒரே கூட்டணிக்குள் இது முரண்பாடு ஏற்படுத்தும் என்பதால் அவருக்கான தொகுதியும் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படாமல் அந்த கட்சியை கூட்டணியிலிருந்து கழட்டிவிட அதிமுக தயாராக உள்ளது. இதன் எதிரொளியாக தான் நேற்று அதிமுக திமுக இரண்டு கட்சிகளையுமே அப்புறபடுத்த வேண்டுமென பச்சமுத்து பேசியது.

அதிமுக முற்றிலுமாக பாமக விருப்பத்திற்கே தனது கூட்டணியை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

இது அனைத்திற்கும் காரணம். வட மாவட்டங்களில் பாமக தயவோடு பல தொகுதிகளில் வெற்றிக் கொடி ஏற்ற முடியும் என்ற உறுதியான நினைப்பும், 21 தொகுதிக்கான இடை தேர்தலில் பாமக துனையோடு வெற்றி பெற்று ஆட்சியை தொடர முடியும் என்ற நம்பிக்கையுமே.

பாமக அதிமுகவுடன் கூட்டணி போனது அதிமுக துனையோடு வெற்றிபெற என்பதற்காக அல்ல. ஏனெனில் பாமக திமுக பக்கமாக போயிருந்தால் இதே தொகுதிகளும் அரசின் மீதான அதிர்ப்தியால் எளிதான வெற்றியும் பெற முடியும் என்பது பாமகவிற்கு தெரிந்த ஒன்றே.

ஆனாலும் அதிமுகவுடன் கூட்டணிக்கு போயுள்ளது என்றால்? அது அதிமுகவிற்கு அழுத்தம் கொடுத்து சில நல்ல விஷயங்களை சாதித்து காட்டி அதன் மூலமாக மக்களிடம் ஏற்படும் அவப்பெயரை காணாமல் போக செய்யவே ஆகும்.

இதுவரை கூட்டணி அமைத்த எந்த கட்சியும் கூட்டணிக்கான நிபந்தனைகள் இதுஇதுவென வகைபடுத்தி அதை கோரிக்கையாக வைக்காத போது பாமக அந்த கோரிக்கையை வைத்துள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் புதிதான ஒன்று. இது வெற்று நிபந்தனையாக போகாது. ஏனெனில் இரு கட்சிகளின் கூட்டணி அறிவிப்பின் போதே வாசிக்கப்பட்ட நிபந்தனைகள் இவை. முன்னரே இதற்கு அதிமுக ஒப்புக் கொண்டதால் தான் அதிமுகவை வைத்துக் கொண்டே பாமக இந்த நிபந்தனைகளை மக்கள் முன்பாக பிரகடனம் செய்தது.

கூட்டணி இல்லாமல் எதையும் இந்த மக்களை நம்பி சாதிக்க முடியாது என்பதை கடந்த தேர்தல் மூலமாக பாமக முழுதாக உணர்ந்துக் கொண்டது. இனி இதை செய்வோம் அதை செய்வோம் என சொல்லி ஓட்டு கேட்காமல் இதைஇதை செய்தோம் என சொல்லி ஓட்டுக் கேட்க தயாராகி உள்ளது.

தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் நாலு நல்ல விஷயம் நடக்குமென்றால் எந்த கட்சியோடும் கூட்டணிக்கு போய் சாதிக்கலாம். என்பதே பாமகவின் தற்போதைய நிலைபாடாக உள்ளது.

விரைவில் ஒவ்வொரு கோரிக்கையாக நிறைவேறும் போது இப்போது புழுதி வாரி இறைக்கும் மாற்றுக் கட்சியை சேர்ந்தோர்களே இந்த கூட்டணியை கொண்டாடி மகிழ்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நிழல் பட்ஜெட், கண்டன அறிக்கைகள், அரசுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் என எழுத்தின் மூலமாக நிழல் அரசாங்கம் செய்துக் கொண்டிருந்த பாமக இனி மறைமுகமாக அரசை வழிநடத்தி சாதிக்க போகிறது.

ஆக, இனி பாமகவின் வழிகாட்டுதலிலும், பாதுகாப்பிலும் தான் அதிமுக ஆட்சி செய்ய போகிறது...

தமிழர்களிடம் மறைக்கப்படும் குமரிகண்டம் வரலாறு...


https://youtu.be/3n0kAG-OlYA

Subscribe the channel for more news...

மனித தோல் பற்றிய தகவல்கள்...


பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்பன்னர் என அழைக்கலாம் உடலின் மேற்புறம் முழுவதும் போர்வையாக அமைந்துள்ளது. இவ்வமைப்பு உடலின் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடலில் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது.

உடலின் வெப்பத்தைப் பாதுகாக்கிறது. உடலுக்கு வைட்டமின் D தயாரித்தளிக்கிறது. தொடு உணர்ச்சி, வலியறிதலில், வெப்பமறிதலில் போன்ற உணர்வுகளை உடலுக்கு உணர்த்துகிறது. இவ்விதம் பலதரப்பட்ட பணிகளைச் செய்வதால் தோலை 'பலதொழில் விற்பன்னர் எனலாம்.

மேல்தோலானது கை(ஹை)ப்போடெர்மிசு(ஸ்) (கீடெர்மிஸ்) எனும் செல்š பரப்பின் மீது அமைந்துள்ளது. கை(ஹை)ப்போடெர்மிசு(ஸ்), தோலை அடியில் உள்ள எலும்பு, தசைகளுடன் இணைக்கும். மேலும் தோலின் நரம்புகளையும் இரத்தக் குழல்களையும் பெற்றிருக்கும்.

தோலில் டெர்மிசு(ஸ்) , எபிடெர்மிசு(ஸ்) (மேடெர்மிஸ்) என இருமுக்கிய திசுக்கள் உண்டு. டெர்மிசு இணைப்புத் திசுவிலிருந்து தோன்றும். இத்திசுவே தோலுக்கான அடிப்படை வலுவைத்தரும். இப்பகுதியில் நரம்பு முடிவுகள் , ரோமங்களின் அடிப்பகுதிகள், மென்மைத் தசைகள் மற்றும் சுரப்பிகள் உள்ளன

டெர்மிசு பகுதி இரண்டு அடுக்கு கொண்டது. அவை மேற்புற பாப்பில்லரி அடுக்கு கீழ்ப்புற ரெட்டிகுலார் அடுக்கு ஆகும். ரெட்டிகுலார் அடுக்கு டெர்மிசின் முக்கிய பகுதியாகும். இப்பகுதி அடர்த்தியான தன்மையுடன் கீழ்டெர்மிசுடன் தொடர்பு கொண்டிருக்கும்

தோலானது தடித்தோ அல்லது மென்ம்மையனதகவோ இருக்கலாம். தடித்த தோலில் மேற்குறிப்பிட்ட ஐந்து அடுக்குகளும் உண்டு. உடல்பரப்பு மென்மையான தோல் கொண்டது. தொடர்ந்து உராய்வு உள்ள இடங்களில் தோலில்த் தடிப்பு ஏற்ப்படும் . இதில் கார்னியம் அடுக்கு, பல அடுக்கு செல்களை கொண்டிருக்கும்.

நிறமிகள் தோலின் நிறத்தை உண்டாக்குகின்றன. கார்னியம் அடுக்கின் அடர்த்தி, அடியில் உள்ள இரத்த ஓட்டம் போன்றவைகளும் நிறமளிக்கலாம். நிறமானது மெலனின் நிறமிகளால் தோன்றும் . இந்நிறமி தோல், ரோமம், கண்கள் போன்ற பகுதிகளுக்கு நிறமளிக்கும். சூரியன், உதா கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும்...

பாஜக வுடன் கூட்டணி வைத்ததால்.. ஜெயலலிதா ஆன்மா பழி வாங்குதோ...


எதற்கெடுத்தாலும் ஜெயலலிதா ஆன்மானு சொன்னாங்க... இப்போ இதற்கும் அதையே சொல்லுங்கடா...

கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க...


இயற்கையாய் படைக்கப்பட்ட அனைத்தும் நமக்கு அளிக்கப்பட்ட வரம் என்றே சொல்ல வேண்டும். இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் மிக்கது. கோடை காலம் வந்துவிட்டாலே நமக்கு நியாபகம் வருவது நுங்கு தான்.

கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், எரியம் (phosphorus), உயிர்ச்சத்து பி வளாகம் (Vitamin B Complex), தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குளிர்ச்சி நிறைந்த நுங்கு...

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நுங்கை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும்.

ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு செரிமான நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே செரிமானம் ஆகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

பதநீரும் நுங்கும்...

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான்.

எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்...

வேற்றுக்கிரக வாசிகளுடன் தொடர்பில் இருந்த தமிழர்கள்...


https://youtu.be/3TEXb1eGk8w

Subscribe the channel for more tips...

பிரம்மிக்க வைக்கும் கூர்நுனிக் கோபுரம் அதிசயங்கள்...


உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய கூர்நுனிக் கோபுரம் (Great Pyramid) (pyro என்றால் நெருப்பு, amid என்றால் மையம்) என அழைக்கப்படும், சியாப் கூர்நுனிக் கோபுரம், எகிப்து நாட்டில் கெய்ரோ நகரத்திற்கு மேற்கே 15 கி.மீ தூரத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 69 லட்சம் தொன் எடையும், (2 லிருந்து 15 தொன் எடை உள்ள 23 லட்சம் கற்களால்), 481 அடி உயரமும்,5 லட்சம் பேர்களால் சுமார் 50

ஆண்டு காலம், 500 மைல்களுக்கு அப்பால் உள்ள அசு(ஸ்)வான் மலையிலிருந்து கொண்டு வந்து நிர்மானித்திருக்கும் முறை அவர்களது கட்டிடக்கலை, பொறியியல் விஞ்ஞான அறிவு, கணிதப் புலமை, ஆத்ம தத்துவஞானம், ஆன்மிகச்சிந்தனை, மனித நேயம், தெய்வீக சக்தி, ஆழ்ந்த வானவியல் ஆகியவை, நமது 21ம் நூற்றாண்டு மனித குலத்தின் அறிவுக்கு சவால் விடும்வகையில் அமைந்துள்ளதோடு பிரம்மிப்பையும் ஊட்டுகின்றன.

உள்ளே உள்ள அரசரின் அறை, இந்த பாலைவனத்தின் நடுவிலும் ஆண்டு முழுவதும் கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் மாறாத (68*F) வெப்ப நிலையில் எந்தவித கருவியின் உதவியும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதும், வைக்கப்பட்டுள்ள 23 லட்சம் கற்களில் கற்களுக்கிடையே உள்ள நெருக்கம் காகிதப்படிமனே துல்லியமாக உள்ளதும், உள்ளே உள்ள தெய்வீக சக்தியின் ஆற்றலும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.

இவை எல்லாத்தையும் விட ஆச்சரியத்தை அளிப்பவை இந்த கூர்நுனிக் கோபுரம் ஒரு பக்க அடிப்பாக நீளம் (760 அடி) 231.6 மீட்டர். இதன் அடிப்பாக சுற்றளவை( 4 * 2331.6 மீ), இதன் செங்குத்து உயரத்தின் இருமடங்கால் வகுத்தால் வருவது 3.142857 ( அதாவது p என்ற இந்த மதிப்பை 5000 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து கூர்நுனிக் கோபுரம் நிர்மானித்தவர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர்).

இந்த கூர்நுனிக் கோபுரம் செங்குத்து உயரத்தை 100 கோடியால் பெருக்க வரும் எண் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.

இந்த பெரிய கூர்நுனிக் கோபுரம் மையத்தில் ஒரு நேர்கோடு வரைந்தால் அது பூமியில் உள் 5 கண்டங்களையும், கடல்களையும் இரு சம்பாதிகளாகப் பிரிக்கிறது. இதன் பொருள் இந்த பெரிய கூர்நுனிக் கோபுரம் பூமியின் கவர்ச்சி மையத்தில் கட்டப்பட்டுள்ளதே.

அரை வினாடி நேரத்தில் பூமி கடக்கும் தூரத்தின் 1000 த்தில் ஒரு பாகத்தை இந்த கூர்நுனிக் கோபுரம் ஒரு பக்க அடிப்பாக நீளமாக அமைத்துள்ளனர். இதற்கு பூமியின் சுழற்சி, வேகம், அளவு ஆகியவற்றை முன்னரே நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இந்த கூர்நுனிக் கோபுரம் முக்கோணப் பரப்பு அந்த முக்கோணத்தின் உயரத்தின் வர்க்கத்துக்குச் சரி சமமாக அமைந்துள்ளது...

பாமக வைத்துள்ள கூட்டணி கோரிக்கைகள் நடக்க தொடங்கி விட்டது...


பழைய சோற்றில் இருக்கு சத்து...


எரிவாயு அடுப்பும், சமையல் பாத்திரம் (cooker) சோறும் வந்தபின்னர் பழைய சோறு சாப்பிடுவதே நமக்க மறந்துவிட்டது. குழந்தைகளுக்க பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக கருதும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர். ஆனால் பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சென்று அங்க குடியேறிய நம்மவர்கள் சிலர். தங்களின் இளமைக்காலத்தில் சாப்பிட்ட உணவுகள் கண்டறிந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம். அப்போது அவர்களில் ஒரு சிலருக்கு பழைய சாதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும் எண்ணம் வந்துள்ளது.

அதன் விளைவாக ஒரு குழுவாக அமைத்து ஆசாய்ச்சியில் இறங்கினர். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் அவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது முதல் நாள் சோற்றில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் பி6, பி12 வைட்டமின்கள் ஏராளமாக இருந்துள்ளது.

உடலுக்கு குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் பாக்டீரியாக்கள் (Trillions Of Bacteria) (கவனியுங்கள் மில்லியன் அல்ல ட்ரில்லியன்) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.

அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன எந்தக்காய்ச்சலும் நம்மை அணுகாது. காலை சிற்றுண்டியாக பழைய சாதத்தை சாப்பிடுவதால் உடல் இலகுவாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் (bacteria) அதில் உருவாகின்றன.

மறுநாள் இதை சாப்பிடும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இதிலிருந்து நார்ச்சத்து,மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு கொழுப்பு சத்து குறைந்துள்ளது. உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால் எந்த நோயும் அருகில் கூட வராது. இப்போதைய நிலையில் புழுங்கல் அரிசி(Raw rice)என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசி சாதத்தை ஒரு மண் சட்டியில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விட்டு மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சோர்த்து, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் போதும். ஆராய்ச்சியில் சொன்ன பலன்களை அனுபவிக்க முடியும்...

இத்தனை ஆண்டுகளாக ஈரான் நாட்டை.. அமெரிக்கா தாக்குகின்றதே ஏன்.?


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி...


இன்சுலின் செடி.

1) மூலிகையின் பெயர் - இன்சுலின் செடி.

2) தாவரப்பெயர் - காஸ்டஸ் பிக்டஸ் (Kastas piktas )

3) தமிழ் பெயர் - கோசுட்(ஷ்)டம் (Kostam)

சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லி

4) PLANT FAMILY: Costaceae

5) BOTANICAL NAME: Costus இக்நேஉசு(ஸ்)

6) பயன் தரும் பாகம் -: இலை.

7) வளரியல்பு

இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோசுட்(ஸ்)டா ரிகா (Costa Rica) நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர்.

கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நாற்றங்கால்(nursery) உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம்.

இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும்.

ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும்.

8 )  மருத்துவப் பயன்கள்...

சர்க்கரை நோயாளிகளுக்கு காசு(ஸ்)டசு(ஸ்) பிக்டசு(ஸ்) என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது.

காசுடசு பிக்டசு  என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.

இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை.

இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும்.

ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காசுடசு பிக்டசு அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study...

தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. ANTI_Diabetic herb.

பல்லாண்டு பயிரான காசுடசு பிக்டசு தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்...

அனைத்துமே நம்மை அடிமைப்படுத்த உருவாக்கப்பட்டவையே...


ரஷ்யாவில் அமானுஷ்யம்...


ஹெலனா ப்ளவாட்ஸ்கி ரஷ்யாவின் 'அமானுஷ்ய' இராணுவ பிரிவின் தலைவர்...

ஜோசப் ஸ்டாலின் நம்பிக்கையான இராணுவ  அதிகாரிகளில் மிக முக்கியமானவர், பனிபோர் காலங்களில் ரஷ்யாவின் இராணுவ பலத்தை அதிகரிக்க அகழ்வாராய்ச்சி, புதைபொருள் தேடல் மூலம் ஆதிகால அமானுஷ்ய சக்திகள் மூலமாக தங்கள் இராணுவத்திற்க்கு ஆற்றலை பெறமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டு. அதில் மும்முரமாக செயல்பட்டார் என கூறப்படுகிறது.

இண்டியானா ஜோன்ஸ் படத்தின் கடைசி பாகமான,
கிங்டம் ஆஃப் கிரிஸ்டல் ஸ்கல், 2008ஆம் ஆண்டில் வெளியான படத்தில் வரும் ஹெலனா ப்ளவாட்ஸ்கி கதாபாத்திரம் இவரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதே...

இவர் பிரம்மஞானம் (Theosophy) எனும் ஒரு புதிய கோட்பாட்டையே! தோற்றுவித்தவர்.

இதன் கோட்பாடுகள்
இறைஞானம்;
பரஞானம்;
தெய்விக ஒளி;
சித்துநிலைகள்; சமய சமரசம் அமைந்த ஒரு புத்துலகச் சமயநெறி ஆகும். தனிச்சிறப்புப் பெற்றவர்களிடம் காணப்படுவதாகக் கருதப்படும் தெய்வீக ஆற்றலுடன் கூடிய சக்தியை பெருவதே இவரின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இந்த கோட்பாடுகளிலும் பல விமர்னங்கள் உண்டு.

பிரம்மஞான சபை ( The Theosophical Society) என்பது ஃப்ரீமேசனரி போலவே  ஒரு அமைப்பு என்பதும், பிரம்மஞானம் (Theosophy) என்ற இந்த சபை;  இரகசிய ஆராய்ச்சி, ஆவிகளோடு பேசுதல், மாந்திரிகம், வேற்றுகிரக உயிர்களின் ஆற்றலை பெறுதல் அல்லது அவர்களை வசப்படுத்துதல். என பலவற்றை தன்னகத்தே கொண்டதாகவும், இந்த ஞானத்தை தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றின் மூலம் குறிபிட்ட சில பலன்களை அடைந்ததாகவும் கூறப்படுகிறது..

ஆனாலும் உண்மையில்  பிரம்மஞானம் (Theosophy) என்பது மனிதகுல வாழ்வுக்கு மேன்மையை அளிப்பதும், சிறப்பைத் தருவதும் ஆகும். ஐந்து ஞானந்திரியங்கள் எனும் தொடு உணர்வு, சுவையுணர்வு, மனஉணர்வு, ஒளி உணர்வு கருவிகளான தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவைகளுக்கும் - தொழில் செய்கருவிகளான கை, கால், வாய், பிறப்புறுப்பு ஆகியவற்றை  கட்டுப்படுத்தப்பட்ட  வாழ்வாகும்.

ஆறாவது அறிவை மன ஆற்றலோடு இணைத்துக் கொண்டு, ஐந்து உணர்கருவிகளையும், ஐந்து தொழில் கருவிகளையும் விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் ஆக்க வழிகளில் பயன்படுத்தி வாழும் வாழ்க்கை முறையாகும்...

மிளகு ரசம் செய்வது எப்படி..?


https://youtu.be/osj88_zEHhM

Subscribe the channel for more tips...

என்னுடைய தியான முறைகள் ஆபத்தானவை தான்...


பார்க்கப் போனால் ஆபத்தில்லாத தியான முறைகளே இல்லை.

ஆபத்தில்லை என்றால் அவை தியான முறைகளே அல்ல.

அவை வெறும் வித்தைகள் தான்.

ஆமாம் ஆபத்தானவை தான். எனவே நுழையும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்துவிடு.

மாணவர்களாக என்னுடைய தியான முறைக்குள் நுழைந்து விடாதே. ஆபத்தாகிப் போகும்.

சீடனாக நுழைந்து பார்.

தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வறட்டு ஆர்வத்தோடு நுழைந்து விடாதே. அந்த ஆர்வம் எப்போதும் உன்னை ஆபத்திற்குத் தான் இட்டுப் போகும்.

உண்மையாகவே நீ தயார் என்றால் பேதலிப்பை எதிர்கொள்ள தயார் என்றால் நீ வரலாம்.

இல்லையேல் அப்படியே இருந்துவிடு..

ஆனால் நான் சொல்வதைச் சரியாகக் கவனிக்காவிட்டால் தான் தோற்றுப் போவாய். என்னை கவனித்து கேட்டால் தோற்றுப் போவது என்ற கேள்விக்கே இடமில்லை.

நான் சொல்வது எதுவும் பேச்சளவிலானது அல்ல. நான் சொல்வதெல்லாம் நான் செய்து பார்த்து விட்டவை.

அவற்றைக் கடந்து வந்திருக்கிறேன். எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்.

எது நடக்கும் எதில் தவறுகள் நடந்து போய் விடும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

இந்தப் பிரதேசத்தின் ஒவ்வோர் அங்குலமும் எனக்குத் தெரிந்தது தான். எனவே ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் நீ சரியாகக் கவனிக்கவில்லை என்று தான் பொருள்.

நான் சொல்வதைக் கவனித்தால், என்னை நம்பினால் எதுவும் தவறாகிப் போகாது. அப்படித்தான் நம்பிக்கை, ஆழ்ந்த நம்பிக்கையும் சரணாகதியும் தேவை என்பது...