16/02/2019

கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப் பேரரசு...


கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்...

இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன..

பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு...

ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து அரசு நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ பேரரசிற்கு மட்டும் தான் இருக்கிறது.

கனம்...

இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை "கனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, "கனாதிபதி" என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

கன்னி...

தமிழில் "கன்னி" என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, "பொறி" என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, "கன்னி" என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், "கலபதி" என்று அழைக்கப்படுவார்.

ஜதளம் அல்லது தளம்...

கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை "தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், "ஜலதலதிபதி" என்னும் நபர் ஆவார்.

மண்டலம்...

கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, "கனம்" பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று "மண்டலம்" குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது "கனம்" என்று கூறப்படுகிறது.

அணி...

பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை "அணி" என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று "கனம்" குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், "அணிபதி" என்று அழைக்கப்படுவர்.

அதிபதி...

இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் "அதிபதி". இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.

கைப்பற்றிய பகுதிகள்...

இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, யா(ஜா)வா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

"நாவாய்" பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது...

நாடாளுமன்றம் தேர்தல் கூட்டணி....



அதிமுக - 24
பாஜக.   - 8
பாமக.    - 4
தேமுதிக - 4

என்று செய்தி வருகிறது...

ஒன்றுமே இல்லாத பாஜக விற்கு 8 தொகுதி...

தமிழகத்தில் பாமக முன்பை விட பல மடங்கு வளர்ந்துள்ளது... இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது...

இந்த சமயத்தில் மீண்டும் தமிழகமே எதிர்க்கும் பாஜக - அதிமுக கூட்டணியில் இனைந்து அனைவரின் நம்பிக்கையை இழக்க வேண்டுமா.?

அதுவும் 4 தொகுதிக்கு...

ஒன்றுமே இல்லாத நோட்டாவிற்கு போட்டியான பாஜக விற்கு 8 தொகுதி...

மக்கள் பிரச்சனைக்கு தலையீடாத தேமுதிக விற்கு 4 தொகுதி...

ஆனால் தமிழகத்தில் இளைஞர்களின் நம்பக்கையான அன்புமணி இராமதாஸ் அவர்களின் மூலம் பாமக மிக பலமாக வளர்ந்துள்ளது...

பாமக இருக்கும் கூட்டணியே வெல்லும் என்று உறுதியாகிவிட்ட நிலையில்... 4 தொகுதிக்கு தமிழகம் எதிர்க்கும் கட்சிகளிடம் கூட்டணி வைத்து நம்பிக்கையை இழக்க வேண்டுமா.?

பாமக கூட்டணிக்கு வந்து வெல்ல வேண்டும்.. அதே சமயம் பாமக வளர கூடாது என்பதற்காகவே... வளர்ச்சியை தடுப்பதற்காகவே இந்த 4 தொகுதி கொடுக்கிறது அதிமுக...

பாமக தனித்தோ அல்லது பாமக தலைமையில் கூட்டணியை உருவாக்கியோ தேர்தலை சந்தித்தால் நல்லது... அதுவே வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக விற்கு பலம்...

இல்லை என்றால் சட்டமன்றத் தேர்தல் மிகச் சிக்கலாக மாறி விடும் என்பது என் கணிப்பு...

பொறுத்திருந்து பார்ப்போம்... பாமக தலைமை என்ன முடிவு செய்யப் போகிறது என்று...

வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 இலட்சம்- முதல்வர் அறிவிப்பு...


காஷ்மீர் தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் ஆகியோர் வீரமரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் உடனடியாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், இந்த தாக்குதலுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்...

பல ஊழல்வாதிகளின் வழக்கறிஞர் பாஜக அருண் ஜெட்லி லட்சணம் இது தான்...


தேசத்துரோக பாஜக கட்சி நிர்வாகிகள் பாக்கிஸ்தானுக்கு துப்பு கொடுத்தது...


நல்லா கவணிங்க 35 வருடங்களுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இது...

35 வருடங்களுக்கு முன்னர் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியை விட 10 மடங்கு குறைவு காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் பரிணாமத்தின் விளைவாக கடந்த 35 ஆண்டுகளில் நம்தேசம் பெரிய தீவிரவாத தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற பட்டுள்ளது.

ஆனால் தொழில்நுட்பம் பெரியளவில் வளர்ந்து நிற்கும் இன்றைய நாளில் எப்படி இப்பேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டது?

இரண்டு நாட்களில் 350 கிலோ மதிப்புள்ள வெடிப்பொருட்கள் ஒரு காரில் நுழைந்துள்ளது.

எப்படி இந்த வெடிப்பொருட்கள் இவ்வளவு எளிதாக நுழைந்திருக்க இயலும்?

காஸ்மீரில் குடியரசுதலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாதங்கள் கூட முடிவுறாத நிலையில் மாநில கட்சிகளில் ஏற்படாத இந்த நிர்வாக அலட்சியம் இந்த ஆட்சியில் எப்படி நிகழ்ந்தது?

தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ஒன்றும் காட்டுப்பகுதி அல்ல மக்கள் நடமாடும் பகுதி இந்த பகுதியினுள் தீவிரவாதிகள் நுழைய முடிகிறது எனில் அதற்கான வாய்ப்புகள் எப்படி சாத்தியம்?

பிப்.6 உளவுத்துறை தகவல் அளித்தும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யாதது ஏன்?

உ.பியின் பாஜக நிர்வாகி ஒருவன் தீவிரவாதிகளுக்கு தேசத்தை காட்டிக் கொடுக்கும் ஒரு ஈனச்செயலை செய்து கைது செய்யப்பட்ட இரண்டே தினங்களில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

எல்லையில் சிறு சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டாலும் கூட அவர்கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள்.

ஆனால் இங்கே ஒரு முக்கியமான பகுதியுள்ளே மிக எதார்த்தமாக திட்டமிடுதலோடு ஒரு தாக்குதல் எப்படி சாத்தியமானது?

மத்தியரசுக்கு இதனுடைய எதிர்கால பாதிப்புகள் எச்சரிக்கையூட்டப்பட்டும் ஆக்கப்பூர்வமான எவ்வித நடவடிக்கையையும் இந்த மானங்கெட்ட அரசு அன்றே எடுத்திடாமல் அலட்சியம் செய்துள்ளது.

உண்மையாகவே இறந்த இராணுவ வீரர்கள் மீது மதிப்பு இருந்தால் இதற்குள்ளே செய்யப்பட்டு இருக்கும் அரசியலே சற்று சிந்தித்து பாருங்கள்.

"கோ" திரைப்படத்தின் சில காட்சிகளோடு இதனை தொடர்புபடுத்தி பாருங்கள்.

அரசியல்வாதிகளின் அற்ப அரசியலுக்காக 45 அப்பாவி இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தான் நிதர்சனம்.

கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் செய்வதையும் சொல்வதையும் மட்டுமே நம்பாமல் மேற்கூரிய சம்பவங்களோடு தேர்தலையும் இணைத்து சற்று சிந்தித்து பார்த்து முடிவெடுங்கள்...

காஷ்மீரில் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 42 பேர் உயிரிழப்பு...


பறிபோன செங்கோட்டை காடு...


மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.

அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்க வேண்டும்.

ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.

அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக் கொண்டது.

(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க, தமிழகத்தில் கால்பங்குகூட காடு இல்லை).

பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள்  பறிபோனது ஆகும்.

1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.

அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.

மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும் போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.

இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.

இதை நாம் இழந்தோம்.

வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது...

தாமரை மொட்டு மலர்ந்தவுடன் இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டது (ராஜபக்சே கட்சி கொடி) தற்போது..?


அம்பானி மகனின் திருமண பத்திரிகையின் விலை எவ்வளவு தெரியுமா.. என்ன ஸ்பெஷல் இருக்கிறது...


முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரசல் மேத்தாவின் ஷ்லோகா மேத்தாவின் திருமணம் மார்ச் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்லோகா ஆகாஷ் அம்பானியின் சிறுவயது தோழி ஆவார்.

இவர்களின் திருமணத்திற்கான அழைப்பிதழ் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இளஞ் சிவப்பு நிற பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. பெட்டகத்தின் மேற்புறத்தில்  சூரிய ஒளியில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்க, மயில்கள் நடனமாட, பசுக்கள் நடுவே ராதையும், கிருஷ்ணனும் இருக்கிறார்கள்.

அதனை திறந்த உடன் மேல் பகுதியில் வெள்ளி பிரேமில் ராதா-கிருஷ்ணன் படம் வைக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிறத்தில் அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்த உடன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு அழைப்பு என பக்ககங்கள் விரிகின்றன. ஒரு அழைப்பிதழின் மதிப்பு ரூ 1.5 லட்சம் ஆகும்.

அடுத்ததாக ரதத்தில் இருக்கும் வெண்ணிற விநாயகரின் உருவம் உள்ளது. இறுதியாக முகேஷ் அம்பானி-நீத்தா அம்பானி தம்பதியின் அழைப்பும் உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்...

Benefits & Uses Of Almonds / பாதாம் பருப்பின் உபயோகங்கள் & நன்மைகள்...


https://youtu.be/6APDmaL-vqU

Subscribe the channel for more tips...

மனோசக்தி...


கண்ணுக்குத் தெரியாத மனோசக்தி ஒன்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது என்பதை அறியாமல் அதைத் தூங்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் தான் அதைத் தட்டி எழுப்ப வேண்டும்.

நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும், அதைவிட்டு நாம் எப்போதும் பொல்லாததையே நினைத்தால் அதுவே நடக்கும்.

நாம் பிறந்ததிலிருந்தே மனோசக்தி நம்மிடம் இருக்கிறது. யாரிடமிருந்தும் நாம் மனோசக்தியை வாங்க வேண்டியதில்லை. பயிற்சியின் மூலம் நாம் அதை அதிகப்படுத்த முடியும்.

முனிவர்கள் மட்டும் தான் மனோசக்திப் பெற்றவர்களா?

இல்லை தனிமனிதன் ஒவ்வொருவரும் மனோசக்தியைப் பயன்படுத்த முடியும்.

இரண்டு மனம் வேண்டுமென்று நாம் கேட்க வேண்டியதே இல்லை. இரண்டு மனங்களுடன் தான் நாம் பிறந்திருக்கிறோம்.

நாம் பயிற்சித்தப்படி நடக்கும் வெளிமனம், நாம் பயிற்சிக்காத உள்மனம். அதைப் பயிற்சித்து உபயோகிக்க ஆரம்பித்தால் உலகம் நம் கையில்.

படைப்பின்படி எல்லா மனித உள்மனங்களும் பிறப்பிலிருந்து இணைக்கப் பட்டிருக்கின்றன. அதைத் தூண்டுவதோ துண்டிப்பதோ நம் கையில் இருக்கிறது.

பயிற்சியினால் தவிர நம் வெளிமனத்தால் அதை உணர முடியாது.

நாம் உறங்கும் போது நம் வெளிமனமும் உறங்குகிறது, ஆனால் நம் உள்மனம் மட்டும் மற்ற உள்மனங்களுடன் தொடர்புக் கொண்டு தான் உள்ளது.

நம் உள்மனம் நாம் பயிற்சிக் கொடுத்தப்படி நல்லதும் செய்யும், கெடுதலும் செய்யும்.

இயற்கையாகவே மனோசக்தியைப் பயன்படுத்துவோரும் நல்லத் தரமானப் பயிற்சினால் மனோசக்தியைப் பயன்படுத்துவோரும் நல்லதையே நினைத்து ஏன் நல்லதையே செய்யக் கூடாது?

கேடுதல்கள் செய்பவர்கள் தற்சமயம் நலமாக வாழ்வது போல் தோன்றினாலும் இறுதியில் படுகுழியில் தள்ளப்படுவதை நாம் பார்க்கப் போகிறோம்.

வாழ்க மனோசக்தி...

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் நாய்க்கு தாலி கட்டினார் தர்ம ரக்க்ஷன சபாவின் மாநில தலைவர் செல்வம்...


தெருநாயை கடத்திவந்து கட்டாயப்படுத்தி செல்வத்திற்கு கட்டி வைத்த தர்ம ரக்க்ஷன சபாவை சேர்ந்த மேலும் 4 பேருடன் செல்வத்தை கைது செய்துள்ளது காவல் துறை.

மணமகன் செல்வம் தாலி கட்டியது ஆண் நாய்க்கு என்பது குறிப்பிடத்தக்கது...

வெண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...


‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை சாப்பிட்டால் விவரமாகி விடுவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் உயர்தரமான எரியம் (phosphorus), தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாசைகளில் ஒன்றான சுவாகிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `பெண்களின் விரல் (Ladies finger)’ என்று அழைக்கின்றனர்.

பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து நறுக்கப்பட்ட காய்கள், பழங்கள் முதலானவை கொண்டு பச்சையாக உண்ணும் ஒரு வகை உணவு (Salad) சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை காகிதம் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி கோப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘விருந்துகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது. காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்... ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.

சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை காகிதம் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.

வெண்டையின் விசேச குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

வெண்டைக்காயை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது ஈரம் இல்லாமல், கழுவாமல் நெகிழி (Plastic) பையில் போட்டு காய்கறி வைக்கும் தட்டில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் உயிர்ச்சத்து சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். வெப்பமான இருமலைக் குணமாக்கும். வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய சேதம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம்...

சந்தோஷத்திற்கான 7 ரகசியங்கள்...


இன்றைய நவீன மயமான உலகிற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு வாழ்வதற்கு கற்றுக்கொண்ட மனிதன் அந்த வாழ்க்கையை எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதற்கு மட்டும் விடை தேடிக்கொண்டிருக்கிறான்.

இந்த உலகமானது ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாக வாழ்வதற்கு படைக்கப்பட்டதே தவிர கவலைப்படுவதற்காக படைக்கப்படவில்லை.

ஆனால் ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்களது அன்றாட நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன் வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.

எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருங்கள். அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.

ஒரே மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.

நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.

நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.

நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.

மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.

உள்ளத்தை பக்குவப்படுத்திக் கொண்டு பொறாமைகளை அறவே ஒழித்தெறிந்து, இருப்பதையும், கிடைத்ததையும் வைத்து ஆசைகளை கைவிட்டு வாழ்ந்து கொண்டே போனால் இளமையுடனும், அமைதியுடன் சந்தோசமாய் வாழ முடியும்...

இந்திய திராவிட அரசுகளின் இலவசமும் ஏமாற்று வேலைகளும்...


இடைகால பட்ஜெட் அறிவிப்பில் குறு விவசாயிகளுக்கு 6000ரூ இலவசமாக வழங்குவதற்கு 75000 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது...

இதை ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயத்திற்கு தேவைபடும் திட்டத்திற்காக பயன்படுத்தாமல் எதற்கு இலவசமாக குடுக்க திட்டமிடுகிறது..?

தமிழக பட்ஜெட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000ரூ தருவதாக தமிழக அரசு கூறியுள்ளது இதை மக்களின் நலனுக்கான திட்டத்திற்காக  பயன்படுத்தாமல் தொடர்ந்து இலவசத்தை மட்டுமே கொடுத்து ஏழை மக்களை ஏன் ஏமாற்றுகிறது..?

இலவசத்தை கொடுத்து எதோ ஒரு வழியில் நம்மிடம் வரியாக பிடுங்க போகும் இந்த பணத்தை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்...

பாஜக மோடியின் நண்பன் அம்பாணி நிறுவனம் ஜியோவுக்காக மூடுவிழா காணவிருக்கிறது பி.எஸ்.என்.எல்.. பாஜக மோடி அரசின் சாதனை தொடர்கிறது...


ரஃபேல் விமான ஒப்பந்தத்திலிருந்து பொதுத்துறை நிறுவனமாக ஹெச் ஏ எல்லை அனில் அம்பானிக்காக கழட்டி விட்ட மோடி அரசு, அண்ணன் முகேஷ் அம்பானிக்காக பிஎஸ்என்எல்-ஐ கழட்டி விடுகிறது..

கார்ப்பரேட்டுகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, பல பொதுத்துறை நிறுவனங்களை அழித்தொழிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதலில் மூடுவிழா காணவிருக்கும் நிறுவனமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் உள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சன்சார் நிகாம் லிமிடெட், இந்தியாவில் அதிக அளவிலான நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.  2017-18 -ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்நிறுவனம் ரூ. 31,287 கோடி நட்டத்தை அடைந்திருப்பதாக தொலைத்தொடர்பு செயலர் அருணா சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் நிதி நிலவரம், வருமான இழப்புகள், ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு வர்த்தகம் எப்படி இருந்தது, விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் பணியாளர்களை பணியைவிட்டு அனுப்புவது உள்ளிட்ட விவரங்களை பி.எஸ்.என்.எல். தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா, தொலைத் தொடர்பு செயலரிடம் தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானியின் ஜியோ வருகைக்குப் பின், இந்த இழப்பு இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாக பி.எஸ்.என்.எல். தலைவர் அறிக்கை அளித்துள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடுவது குறித்த திறனாய்வை செய்யும்படி அவரிடம் செயலர் வலியுறுத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சொல்கிறது.

பெரும் நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தனியாரின் தலையீட்டை தடுக்காமல், பணியாளர்களின் சம்பளம்தான் பிரச்சினை எனவும் பணி ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 58-ஆக குறைக்க வேண்டும் எனவும் இதனால் ரூ. 3000 கோடி நட்டம் தவிர்க்கப்படும் எனவும் ஆலோசனைகள் பி.எஸ்.என். எல். அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.  இதன் மூலம் 50% சதவீத பணியாளர்கள் அதாவது 33,846 பேர் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

தொலைத்தொடர்பு பணிகளை விட்டுவிட்டு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் ரூ. 15,000 கோடி வருமானம் ஈட்டலாம் எனவும் யோசனை சொல்லப்பட்டிருக்கிறது பி.எஸ்.என்.எல். தரப்பிலிருந்து.

மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என். எல். மூடுவிழா காணும் செய்தி கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நாட்டின் 98.8% சதவிகித இடங்களில் ‘சிறப்பாக’ செயல்படுவதாகவும் செய்தி வெளியாகிறது!

ரஃபேல் விமான ஒப்பந்தத்திலிருந்து பொதுத்துறை நிறுவனமாக ஹெச் ஏ எல்லை அனில் அம்பானிக்காக கழட்டி விட்ட மோடி அரசு, அண்ணன் முகேஷ் அம்பானிக்காக பிஎஸ்என்எல்-ஐ கழட்டி விடுகிறது.

பிரதமர் மோடியின் விருப்பத்துக்குரிய முகேஷ் அம்பானி, மேற்கு வங்க பெண் சிங்கம் மம்தாவுடன் கை குலுக்கிறார். (மேற்கு வங்க தொலைதொடர்பு நெட்வொர்க்கில் அதிக முதலீடுகளை செய்துள்ளது ரிலையன்ஸ்) தமிழகத்தின் ஆட்சியில் பிடிக்கலாம் என கருதப்படும் திமுக தலைவர் ஸ்டாலினை திருமணத்துக்கு அழைக்கிறார். ஆக மொத்தத்தில் அதிகாரத்தை அண்டி பிழைப்பதில் முகேஷ் அம்பானி ஒரு ‘கார்ப்பரேட் மான்ஸ்டர்’.  அரசு நிறுவனத்தை அழித்து, அம்பானிகளை வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு என்ன பெயர் வைப்பது?

பக்கவாதம் சரி செய்வது எப்படி.?


https://youtu.be/Ccxge32yVsE

Subscribe the channel for more tips...

மக்கள் அரசியல் பேசுவதையும், புரட்சியில் இறங்குவதும் ஊடகங்களுக்கு என்றைக்கும் பிடிக்காது...


அவர்கள் உங்களை கேள்வி கேட்காத அடிமையாகவே வைத்திருக்க விரும்புவார்கள்...

பண்டைத்தமிழர் வரலாறு யாருக்கும் எதிரானதல்ல.. ஆனால், தமிழர் வரலாற்றை திட்டமிட்டே இதுவரை உள்ள அரசுகள் மறைத்து வருகின்றன...


தமிழ்நாட்டில் தமிழனின் பெருமையை உணரச்செய்யும் உண்மையான அரசு அமைக்கப்பட வேண்டும்.

பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை...

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்...

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற காரணம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.

17. நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக் கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள் செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின் வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)

(பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 200102ல் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது.

ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டது. அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இது நிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்..

வேற்றுக்கிரகவாசி உண்மைகள் : Code Name Homoserine...


அனில் அம்பானிக்கு ஆதராவக உச்ச நீதிமன்ற ஆணையை மாற்றிய அதிகாரிகள் டிஸ்மிஸ்...


தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற உத்தரவை திருத்தியதாக நீதிமன்ற அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைபேசி நிறுவனம் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி வழங்கவில்லை என புகார் எழுந்தது. இது குறித்து, எரிக்சன் நிறுவனம் சார்பில் அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு கடந்த ஜன.,7ம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ”நேரில் ஆஜராக உத்தரவு என்ற வாசகத்தை திருத்தி நேரில் ஆஜராக விலக்கு” என வெளியிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்ற அதிகாரி மானவ் சர்மாவும், துணை பதிவாளர் தபன் சக்ரவர்த்தியும் இதற்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து இருவரையும் பணிநீக்கம் செய்து நேற்று நள்ளிரவு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்...

பழனிபாபா வாசிக்கப்பட வேண்டிய வரலாறு...


அம்மான் பச்சரிசி பற்றி தெரிந்துக் கொள்ளலாமா ?

                               
காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டு உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.

இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Tamil - Amman Pacharisi

English - Snake weed

Sanskrit - Dugdhika

Telugu - Reddine narolu

Malayalam - Nela paalai

Botanical name - Euphorbia hirta

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- அகத்தியர் குணபாடம்..

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.

மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க...

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க...

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

மலச்சிக்கலைப் போக்க...

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற...

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு...

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அதிகமாக கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

மரு நீங்க...

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

தாது பலப்பட...

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்...

பொதுமக்கள் கை குலுக்குவதால் கிருமிகள் தொற்றுவிடும் என்று டெட்டாலில் கை கழுவும் திமுக ஸ்டாலின்...


குமரிக்கண்டம் நம் வரலாறு...


நம் வரலாற்றை தெரிந்து கொள்ள 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்குச் செல்லுவோம்...

குமரிக்கண்டம்...

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்..

இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.

இங்கு தான் நாம் இன்று பேசிக் கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது..

ஆம் இது தான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம்.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம்..

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது..

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது..

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது..

தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440 இல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து," பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது. இதில் அனைத்துமே அழிந்து விட்டது.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் "தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்" அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்..

இந்திய அரசு வெளிக் கொண்டு வராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம், இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்...

திராவிடம் மற்றும் அதன் ஓசி சோறுகளை கதற விடும் பாமக...


ஈர்ப்பு விதி இரகசியம்...


ஈர்ப்பு என்ற விதி இல்லாமல் இந்த பிரபஞ்சமே இயங்காது...

அதே போல உயிருள்ள, உயிரற்ற, எந்த நிலையாயினும் அங்கே ஈர்ப்பு என்ற தன்மை இருந்து கொண்டே இருக்கின்றது.

ஈர்ப்பு என்பது ஒருவித விசை அந்த ஈர்ப்பு இல்லையேல் இயக்கம் இல்லை, ஜனனம் இல்லை, செயல் இல்லை, அசைவற்ற தன்மை ஆகி போய்விடும்.

படைத்தலுக்கு காரணமான சூட்சமத்தில் இந்த ஈர்ப்பு விசை ஒரு முக்கிய செயலாற்றி வருகிறது.

ஈர்ப்பு என்றால் புவிஈர்ப்பு மட்டுமே நமக்கு தோன்றும், சற்று தீவிரமாக சிந்தித்தால் ஈர்ப்பு பல பரிணாமங்களில் செயலாற்றி வருகிறது.

நகர்வற்ற ஒரு மரம் அதன் மலர், காய், பழம், இலை, இது போன்ற வடிவத்தால், அழகால் நம்மை பிரபஞ்சம் ஈர்க்க வைக்கின்றது.

ஒரு ஆண் ஒரு பெண் மேல் அவளது உடை, அழகு, குணம், போன்றவற்றால் ஈர்க்க படுகிறான்.

இந்த ஈர்ப்பு என்பது இடம், பொருள், இவற்றிற்கு தகுந்தால் போல் நம் உணர்வுகளை ஈர்க்கின்றன.

அவை காமம், காதல், ரசித்தல்,
ருசித்தல், அடைதல், போன்ற பல்வேறு ஈர்ப்பு தன்மையை நமக்கு ஏற்படுத்த செய்கிறது.

இத்தகைய தானாகவே உருவாகும் ஈர்ப்பை ஏன் உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் அதை உருவாக்கி பயன்படுத்த முயலகூடாது என்பதே எனது கேள்வி.

அதற்கு சாத்தியமா என்றால் ஆம்.. என்றே என்னுடைய பதில் இருக்கும்...