07/01/2019

மிளகின் மருத்துவ பயன்கள்...

                 
மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது..

மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.

வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது.

மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.

உணவு சரியான முறையில் செரிக்கப்பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது.

இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால் தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.

இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும் போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டு விடுவார்கள்.

வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்...

கார்ப்பரேட் கைகூலி பாஜக அடிமை அதிமுக வின் சதி....


மராட்டிய ரஜினி யும் ஏமாற்று வேலையும்...


ரஜினி (சிவாஜிராவ்) ஒரு மராட்டியன் என்று உண்மையை சொன்னால் இனவெறியன் என்று சொல்லிகிட்டு திரிகின்ற முட்டாள்களே...

இதோ சிவாஜிராவ்வின் மகளே சொல்கிறாள், தான் ஒரு மராட்டி என்று..

சூடு சொரணை ஏதாவது இருந்தால் சிந்தியுங்கடா...

கன்னட ஈ.வெ. ராமசாமி கலாட்டா...


கம்யூனிசம் என்றால் என்ன.?


இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.

கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.

ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.

உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே  நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.

அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.

இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.

அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.

இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றை வரியில் முடித்தனர்.

பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.

அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.

ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.

நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.

இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்...தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.

ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...

தோல் நோய் குணமாக...


அழிந்து வரும் கொடுக்காப்புளி மரங்கள்...


கொடுக்காப்புளி என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரத் தளபாடங்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சிலரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் கொக்கைத்தடிகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கைத்தடிகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு கொக்கைத்தடிகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்...

பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து வாழை இலை தேவை அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி... விவசாயத்தின் முதல் வெற்றி...


ஒரே மாதத்தில் 6.5 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்த வோடஃபோன் ஐடியா...


கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 6.5 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத கணக்கின்படி இந்தியாவில் மொத்தம் 1.02 பில்லியன் மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதில் 421.08 மில்லியன் வாடிக்கையாளர்களோடு வோடஃபோன் ஐடியா நிறுவனம் முதலிடத்திலும், 314.76 மில்லியன் வாடிக்கையாளர்களோடு ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், 262.75 மில்லியன் பயனாளர்களோடு ஜியோ மூன்றாவது இடத்திலும் இருக்கிறது...

பாஜக நிர்மலா சீதாராமன் கலாட்டா...


உடலுக்கு தேவை நடை பயிற்சி...


நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடைபயிற்சி தான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது நடைபயிற்சி போங்க என்பதாக தான் இருக்கும்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்க வேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ நடக்க ஆரம்பித்து நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம்.

இது ஆண்களுக்கு 92 முதல் 102 பாத அடியாகவும் பெண்களுக்கு 91 முதல் 115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால் தான் ஆண்களுக்கு இணையாக நடக்க முடியும். நடைப்பயிற்சியின் போது வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.

மூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.

சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி காலுறைகள் (shocks), செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும்...

திருட்டு திராவிட மதிமாறன் கலாட்டா...


மகளுக்கு அமெரிக்காவில் படிப்பு கோவையில் சொகுசு பங்களா எங்கிருந்து வருகிறது பணம் பியூஸ் மனுஷ் க்கு.?


சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் காடுகளை பாதுகாக்கும் சமூக ஆர்வலர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இல்லாவிட்டாலும் அவரது செயல்பாடுகள் தமிழக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லவரவேற்பை பெற்றது காடு வளர்ப்பில் அவர்காட்டிய அக்கறையே இதற்கு காரணம்.

வழி மாறிய பயணம்...

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷிற்கு இருந்த நற்பெயர் என்று அவர் போத்திஸ் நிறுவனத்திடம் இருந்து 7 லட்சம் மதிப்புள்ள செக்’கை வாங்கினாரோ அன்றே சுக்கு நூறாக போய்விட்டது, அன்று முதல் அவரை பற்றிய பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

எப்படி வருகிறது பணம்..

தற்போது பியூஸ் மனுஷ் உடன் பணியாற்றிய அவரது நெருங்கிய உறவினர்கள் டேவிட் ஹெலோம் மற்றும் அந்தரி மனுஷ் சொல்லிய தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கின்றன பியூஸ் மனுஷ் குடும்பம் அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும், அதற்கு முன்னோட்டமாக தனது மகளை மாதம் 10 லட்சரூபாய் செலவில் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் கூறினர்.

சொகுசு பங்களா...

அவர்கள் கூறிய மற்றொரு தகவல் பல தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது அதற்கு காரணம் மனுஷ் வாங்கிய சொகுசு பங்களா சுமார் 10 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை தனது மாமியார் பெயரில் வாங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தற்போது பியூஸ் மனுஷ் என்ன தொழில் செய்கிறார், அவருக்கு எங்கிருந்து குடும்பத்தை வசதியாக நடத்துவதற்கு பணம் வருகிறது, ஏன் தனது சொந்த மாநில மக்களுக்கு உதவாமல் தமிழ் நாட்டில் இருக்க என்ன காரணம் போன்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுந்த வண்ணம் உள்ளன...

கேரளாவில் பாஜக & ஆர்.எஸ்.எஸ் சை கதற விட்ட காவல்துறை...


தொட்டாற்சிணுங்கி இய‌ற்கை வைத்தியம்...


தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல... உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.

தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள்.

சர்க்கரைக்கு சர்க்கரைக்கு சரியான தீர்வு...

தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். இதேபோல், தொட்டாற்சிணுங்கி இலைகளையும் இடித்துச் சூரணமாக்கி இரண்டையும் சம அளவுக்கு கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை ஒரு கரண்டி அளவு எடுத்துத் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால், சர்க்கரை நோயில் இருந்து மீள முடியும். இதே சூரணக் கலவையைத் தினமும் மூன்று வேளை ஒரு கரண்டி அளவு எடுத்து, காய்ச்சியப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களும் குணமாகும்.

சிறுநீர் சிக்கல் தீர...

சுத்தம் செய்த தொட்டாற்சிணுங்கி வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வேரை மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய இந்த நீரை கால் அவுன்சு(ஸ்) அல்லது அரை அவுன்சு வரை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நீர் அடைப்பு, கல் அடைப்பு ஆகியவை குணப்படும்.

தளர்ச்சி நீங்க... மலர்ச்சி ஓங்க...

தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து, மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். நீர் ஒரு பங்கு ஆகும் வரையிலும் நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் கசாயமாக்க வேண்டும்.

சூடு தணிந்த பின் கசாயத்தை வடிகட்டி, அரை அவுன்சு வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், தளர்ச்சி நீங்கி உடல் தேறுவதோடு சுக்கில (விந்தணு) இழப்பும் நீங்கும். இதனால்தான் தொட்டாற்சிணுங்கி வேர் 'காமவர்த்தினி’ என்றும் அழைக்கப்படுகிறது...

எங்கே ஓடுகிறான் மனிதன்.. எல்லை அவனுக்கு தெரியாது...


தெரிந்தால் அவன் ஓடவும் மாட்டான் ஒளியவும் மாட்டான்..

ஓடுங்கள் ஓடுங்கள் வட்டத்தில் உள்ளயே ஓடுங்கள்...

கவனியுங்கள்... ஓடுவது நிற்கும்..
நடப்பது தொடங்கும்..
நடந்தால்.. நடிப்பது குறையும்..
நடிப்பது குறைந்தால் நீ நீயாக இருப்பாய்...

சிவப்பு அரிசி ரகசியங்கள்...


சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுச்(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. யப்பான், கொரியா, பிலிப்பைன்சு(ஸ்), இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.  இந்தியாவில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம்.

இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு ஆட்சி செலுத்துபவர் (Governor) இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்.

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்.

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், எரியம் (Phosphorus) போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன.

தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் லோவாஸ்டேடின் (Lovastatin)  என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர்.

இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் (Asthma) மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு.

ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

இரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராச்(ஜ்)யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை.

தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர்.

'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது...

அரசுகள் அம்பலம் - isis அமெரிக்காவால் வளர்க்கப்பட்டதின் நோக்கம்...


இரண்டு பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த கிருஸ்துவ மதபோதகர் உள்ளிட்ட 16 பேர்...


கடலூர் மாவட்டம் திட்டகுடியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியையும், 8 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கிருஸ்துவ மதபோதகர் உள்ளிட்ட 19 பேர் கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் , கிருஸ்துவ மதபோதகர் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது

13 வயது மாணவி பெற்றோரை  இழந்தவள் என்பதால் தன் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். அவள் திட்டக்குடியில் படிக்கும் பள்ளி அருகே உள்ள இட்லி கடையில் பலகாரம் சாப்பிட போவது வழக்கம்.

அப்படி ஒருநாள் செல்லும் பொழுது அந்த கடை உரிமையாளர் செந்தில்குமாரின் மனைவி தனலட்சமி ( வயது 40 )

தனது கள்ள காதலன் ஆனந்தராஜ் (வயது 24 ) உடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை இந்த மாணவி பார்த்துவிட அவளையும் மிரட்டி அனந்த ராஜ் உடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார்.

அதன் பிறகு ஆனந்தராஜ் அந்த மாணவியை மிரட்டி பல முறை உல்லாசம் அனுபவித்ததோடு தனது நண்பர்கள் மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருடனும் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார்.

அதன் பிறகு தனலட்சுமி அந்த மாணவியை மிரட்டி அவளது தோழியான 14 வயது மாணவியையும் வீட்டுக்கு வர வைத்து அனந்த ராஜ்கு விருந்தாக்கியுள்ளார்.

பின்னர் இரு மாணவிகளையும் கிருஸ்துவ மதபோதர் அருள்தாஸ்  என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார் அவர் இந்த இரண்டு மாணவிகளையும் அனுபவித்து விட்டு தன் சக நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார்.

இப்படி தனலட்சுமி, அருள்ராஜ் மற்றும் மத்த ப்ரோக்கர்கள் சேர்ந்து அந்த மாணவிகளை சேலம், விழுப்புரம், கடலுரில் உள்ள பல லாட்ஜ்களுக்கும், வாடகை வீடுகளுக்கும் அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கடைசியாக ஒரு நாள் அந்த மாணவிகள் இரவில் அவர்களிடம் இருந்து தப்பித்து காவல் நிலையம் சென்று அவர்களுக்கு நேர்ந்த கொடுமையை கூறினர்.

இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினர் 10 பெண்கள் உள்பட 19 பேரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிகு மாற்றபட்டது, இந்த வழக்கில் தீர்ப்பளித்த கடலூர் நீதிமன்றம் கிருஸ்துவ மத போதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது, அவர்களுக்கான தண்டனை விவரம் அடுத்த வாரம் அறிவிக்கபடும் என்றும் நீதிபதிகள் கூறினர்...

மரங்கள் அழியும் போது வெறும் மரங்கள் மட்டுமே அழிவதில்லை...


அதனை சார்ந்து  வாழும் அங்கிருக்கும் அத்தனை தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவை எல்லாமே ஒட்டுமொத்தமாக அழிந்து விடுகின்றன. இதனால் ஏற்படும் நஷ்டம் சொல்லிமாளாது...

சாலை விரிவுபடுத்துகிறோம், தொழிற்சாலை கட்டுகிறோம் என்று எத்தனையோ மரங்கள் அழிக்கப்படுகின்றன இங்கு, அனைத்தும் மனிதனின் சுயநலத்திற்க்காகவே.

மரத்தை அழிக்க நினைக்கும் நாம் மரம் நடுவதற்க்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

அரசாங்கமும் அழிக்கவே நினைக்கிறது...

பாஜக தமிழிசை கலாட்டா...


தமிழ் நாட்டில் திராவிடர்கள் சாதனை...


தமிழ் நாட்டில் முன்னர் மருத்துவமனை கால்லுரிகள் அரசு நடத்திக்கொண்டு இருந்தது.. சாராய கடைகள் தனியார் நடத்தி கொண்டு இருந்தர்கள்..

திராவிடர்கள் ஆட்சிக்கு வந்ததும்... மருத்துவமனை கால்லுரிகள் தனியார் நடத்துகின்றார்கள்.. சாராய கடை அரசு நடத்துகின்றது..

சாராய கடையை நடத்தினவர்கள் இன்று கால்லுரி மருத்துவமனை
நடத்துகின்றார்கள்..

திராவிடர்கள் ஏன் இந்த திட்டம் கொண்டு வந்தார்கள் தமிழா சிந்தித்து பார்..

எந்த திட்டம் அரசு நடத்தினால்.. தமிழர்களை குடிக்கு அடிமைப்படுத்தி தமிழன் இன உணர்வு மொழி உணர்வு சிதைக்க முடியும்..

தமிழா திராவிடர்கள் தமிழனை திட்டம் போட்டு சிதைத்து கொண்டு இருகின்றார்கள்..

விழித்தெழு தமிழினமே...

பிரபஞ்ச சக்தி...


உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி ஆகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்..

விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்..

அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்..

நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும்,
ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்..

உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்து விடும்...

உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை பட வேண்டாம்.

உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.

பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்..

நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள்..

உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்...

உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...

நாட்டு மருத்துவம்...


இங்கே நடக்கும் விளையாட்டை புன்னகையுடன் சிரித்துவிட்டே இடத்தை கடந்து செல்கிறேன்...


ஓவ்வொரு விளையாட்டும் ஓவ்வொரு கோணங்களில் நடக்கிறது.

ஆனால் விளையாடும் மனிதர்கள் நடிக்கிறார்கள்.

நடிப்பு மட்டுமே மிகபெரிய விளையாட்டு.

ஓரே தன்மையில் விளையாட்டை ரசித்தே செல்கிறேன்.

விளையாட்டு குழந்தை போலவே...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


தாய்லாந்தில் உள்ள பேங்காக் சர்வதேச விமான நிலையத்திற்கு வடக்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலாங் லுங் மாவட்டத்தில், ஒரு பெரிய புத்த கோவிலான வாத் ஃபிரம் தம்மகாயா அமைந்துள்ளது.

இது பொதுவான பௌத்த ஆலயத்தை போலல்லாமல் ஒரு பறக்கும் தட்டு போன்ற வடிவத்தை ஒத்திருப்பதை போல காட்சியளிக்கிறது. இது வத்திக்கன் நகரத்தை விட எட்டு மடங்கு பெரியது, கம்போடியாவின் பழமையான அங்கோர் வாட் கோவிலை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அளவுக்கு உள்ளது, இது உலகின் மிகப்பெரிய நவீன மதக் கோவில் கலைப்படைப்பாகும்.!

இந்த கட்டிடத்தின் மையத்தில் ஒரு பெரிய குவிமாடம் உள்ளது, புத்தரின்  300,000 வெண்கல சிலைகள், தங்க பூசப்பட்ட  மூடப்பட்ட உள்ளது. மேலும் கோவிலுக்குள்ளேயே 70000 மேலும் கோவில்கள் உள்ளன.

சரி இந்த நவீன பௌத்த ஆலயத்தை பறக்கும் தட்டு வடிவில் கட்டியெழுப்ப, அவர்கள் கூறும் காரணம் இதுதான்:
தாமரை சூத்ரா. 13 வது நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய தாய்லாந்து பௌத்த துறவிகளின் புனித நூல். தாமரை சூத்ரா இதனை "புத்தரின் இறுதிப் போதனை" என்று நம்புகிறார்கள், மேலும் "சூத்திரத்தின் சாரம்" ".அதில் வரும் விளக்கம் அத்தியாயம் 23:

பௌத்த அண்டவியல் எப்போதும் மில்லியன் கணக்கான பிற உலகங்களின் இருப்பை ஏற்றுக்கொண்டது. அதாவது பல நூற்றாண்டுக்கு முன்னர், விண்ணிலிருந்து பல இசைக்கருவிகளின் இரைச்சலுடன் கூடிய வெள்ளை தாமரை - போன்ற ஒரு விண்கலம், வானத்தைச் சுற்றியபின் பூமிக்கு வருகிறது.

அதில் காட்காவாஸ்வா (கௌதமர்) என்ற பெயரில் ஒரு விசித்திரமான கடவுள் வருகை தருகிறார். அவர் எப்படி இருந்தார்? அவரது முகம் நீல தாமரை போலவும், அவரது உடல் தங்க நிறமாக இருந்தது ... மேலும் கண்கள், ஒரு புத்துணர்ச்சியைக் காட்டிக் கொண்டது. மனிதர்கள் அவர் மற்றொரு உலகில் இருந்து வரும் ஒரு முனிவர் என்று பதிலளித்தனர். மேலும் அந்த காட்காவாஸ்ர். பல்வேறு வடிவங்களைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கிறார், மேலும் பல தோற்றங்களை எடுத்துக் கொள்ளுகிறார்.

பிறகு சிலகாலம் அவர் நமது கிரகத்தின் மீது ஆழ்ந்த தியானம், வாழ்வியல் நெறிமுறை ஆகியவற்றை பிரசங்கிக்கிறார். ஒருசமயம் அவர் தனது உலகை விவரிக்கும் போது, அந்த சஹா உலக நாடு, சீரற்ற மற்றும் ஒழுங்கற்ற மண், கற்கள், மலைகளால், நிரப்பப்பட்டது என கூறி. இறுதியாக விடைக்கொடுத்து விட்டு புறப்படுகிறார்: அவர் மீண்டும் வெள்ளை தாமரையினை அடைந்தார், பல இசைக் கருவிகளின் இரைச்சலோடு தனது வாகனத்தில் அவர் தனது சொந்த உலகிற்கு திரும்பினார்.

இது தாய்லாந்து மக்களின் தாமரை சூத்ரா என்ற நூலில் வரும் புத்தர் கதை. எனவே அவர்கள், தங்கள் விண்வெளி கடவுளின் வாகனத்தின் வடிவிலே ஆலயத்தை அமைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை...