07/01/2019

இரண்டு பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த கிருஸ்துவ மதபோதகர் உள்ளிட்ட 16 பேர்...


கடலூர் மாவட்டம் திட்டகுடியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியையும், 8 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கிருஸ்துவ மதபோதகர் உள்ளிட்ட 19 பேர் கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் , கிருஸ்துவ மதபோதகர் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது

13 வயது மாணவி பெற்றோரை  இழந்தவள் என்பதால் தன் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். அவள் திட்டக்குடியில் படிக்கும் பள்ளி அருகே உள்ள இட்லி கடையில் பலகாரம் சாப்பிட போவது வழக்கம்.

அப்படி ஒருநாள் செல்லும் பொழுது அந்த கடை உரிமையாளர் செந்தில்குமாரின் மனைவி தனலட்சமி ( வயது 40 )

தனது கள்ள காதலன் ஆனந்தராஜ் (வயது 24 ) உடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை இந்த மாணவி பார்த்துவிட அவளையும் மிரட்டி அனந்த ராஜ் உடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார்.

அதன் பிறகு ஆனந்தராஜ் அந்த மாணவியை மிரட்டி பல முறை உல்லாசம் அனுபவித்ததோடு தனது நண்பர்கள் மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருடனும் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார்.

அதன் பிறகு தனலட்சுமி அந்த மாணவியை மிரட்டி அவளது தோழியான 14 வயது மாணவியையும் வீட்டுக்கு வர வைத்து அனந்த ராஜ்கு விருந்தாக்கியுள்ளார்.

பின்னர் இரு மாணவிகளையும் கிருஸ்துவ மதபோதர் அருள்தாஸ்  என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார் அவர் இந்த இரண்டு மாணவிகளையும் அனுபவித்து விட்டு தன் சக நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார்.

இப்படி தனலட்சுமி, அருள்ராஜ் மற்றும் மத்த ப்ரோக்கர்கள் சேர்ந்து அந்த மாணவிகளை சேலம், விழுப்புரம், கடலுரில் உள்ள பல லாட்ஜ்களுக்கும், வாடகை வீடுகளுக்கும் அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கடைசியாக ஒரு நாள் அந்த மாணவிகள் இரவில் அவர்களிடம் இருந்து தப்பித்து காவல் நிலையம் சென்று அவர்களுக்கு நேர்ந்த கொடுமையை கூறினர்.

இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினர் 10 பெண்கள் உள்பட 19 பேரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிகு மாற்றபட்டது, இந்த வழக்கில் தீர்ப்பளித்த கடலூர் நீதிமன்றம் கிருஸ்துவ மத போதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது, அவர்களுக்கான தண்டனை விவரம் அடுத்த வாரம் அறிவிக்கபடும் என்றும் நீதிபதிகள் கூறினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.