08/03/2018

மரபணு மாற்றப்பட்ட விதகளை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என நோட்டிஸ் கொடுத்த அய்யா கண்ணுவை கண்ணத்தில் அறைந்து செருப்பால் அடிக்க பாய்ந்த பாஜக பெண் நிர்வாகி , திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பரபரப்பு...


மரபணு மாற்றப்பட்ட விதகளை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்பதற்காக அய்யா கண்ணு அவர்கள் ஒரு தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார். திருச்செந்தூர் கோவிலுக்கு பிரார்த்தனைக்கு சென்ற அவர் இது தொடாபான நோட்டிசுகளை விநியோம் செய்த போது பாஜக வின் மகளீர் அணி நிர்வாகி இவன் ஒரு ஃபிராடு இவன் கொடுக்கும் நோட்டிசை வாங்காதீர்கள் எனக் கூறினார். இதில் வாக்கு வாதம் ஏற்பட்டு அய்யா கண்ணுவை அந்த பெண் கண்ணத்தில் அறைந்தார். மேலும் செருப்பை கழட்டி அடிக்க பாய்ந்தார்.

மரபண மாற்றப்பட்ட விதைகளை பிரதமர் மோடி இறக்குமதி செய்ய கூடாது இதற்காக கடவுளிடம் பிரார்த்திகின்றோம் என்ற அடிப்படையில் நோட்டிஸ் அமைந்ததால் பிரதமரை எப்படி விமர்சிக்கலாம் எனக் கூறி அந்த பாஜக பெண் நோட்டிஸ் விநியோகத்தை தடுத்துள்ளார். இதில் சண்டை ஏற்பட்டுள்ளது.

பின்னர் இரு தரப்புரம் ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்தனர். கோவில் வளாகம் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளை பேசி இரு தரப்பும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இறுதியில் அங்கிருந்த பெரியர்கள் சண்டையை நிறுத்தினர்.

பாஜக பெண் அய்யா கண்ணுவை அறைந்ததால் அந்த இடம் பரபரப்பானது...

இதுவரை காவல்துறை அந்த பாஜக பெண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்பதும் தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே என்பதும் தமிழர் மரபு...


அப்படி இருக்க தன் வாழ்நாள் முழுவதும் தமிழை, தமிழரை, தமிழர் பண்பாட்டை பழித்தவனுக்கு ஏன் தமிழர் நாடெங்கும் சிலை?

தமிழும் திராவிட இயக்கங்களும்...


தமிழ், தமிழ்நாட்டுக்கான பரம்பரை மொழி! தமிழ்நாட்டில் தமிழரையும், தெலுங்கரையும், கன்னடத்தாரையும், மலையாளிகளையும் சேர்த்து திராவிடர் என்று வழங்குகின்றனர்.

என்றாலும் மொழியளவில் தாங்கள் தமிழரல்லர் என்ற நிலை மனதில்! எனவே, தமிழரல்லாதார் தலைக்கு வரும்போது பெரும்பான்மை தமிழர் ஒன்றுபட விடாமல் பார்ப்பதும் பிறமொழி பேசுவோரை பக்கத்தில் அதிகமாய் வைப்பதும் பெரும்பாலும் நடந்து வருகிறது.

ஆகையால் தமிழர்களே...

திராவிடம் தமிழர்களின் பகை என்று பறைச்சாற்றுவோம்..

தமிழ்த் தேசியம் மலர சபதம் எடுப்போம்..

ஆசிரியர். ஆதவன் சேதுவராயன்... தமிழ்நாடா தெலுங்கு தேஸமா (பக்கம் 68-69)...

பொறாமை...


பொறாமை என்பது என்ன?

அது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தலேயாகும்.

நம்மை அடுத்தவர்களுடன் ஒப்பிடத்தான் நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம்.

ஒப்பிடுவது ஒரு முட்டாள் தனமான செயல். ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஒப்பிட முடியாதவர்கள்.

நீ எப்போதும் நீதான். உன்னைப்போல யாரும் இல்லை. நீயும் யாரையும் போல இருக்கத் தேவையில்லை.

கடவுள் எப்போதும் அசல்களையே உருவாக்குகிறார். நகல்களை அல்ல.

பக்கத்து வீட்டைப் பார்த்தால் மிகப் பெரிய விஷயங்கள் நடப்பது போல நமக்குத் தெரியும். புல்  பச்சையாகத் தெரியும். நமது வீட்டு ரோஜாவை விட அடுத்த வீட்டு ரோஜா அழகாகத்  தெரியும். உன்னைத் தவிர மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றும். இதே கதைதான் மற்றவர்களுக்கும்.

அவர்களும் தங்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அவர்களுக்கு உன் வீட்டுப் புல்  பச்சையாய்த் தெரியும். அவர்கள் நீ நல்ல மனைவியை அடைந்ததாக நினைக்கலாம். நீயோ அவளைப் பார்த்து சலித்துப் போயிருப்பாய்.

ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்பட்டு நரகத்தை உருவாக்கி விடுகிறோம். கீழ்த்தரமானவர்கள் ஆகி  விடுகிறோம். எல்லோரும் துன்பப்பட்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எல்லோரும் எல்லாவற்றையும் இழந்தால் நல்லது என்று நினைக்கிறோம். எல்லோரும் வெற்றி பெற்றால் நமக்கு கசக்கிறது.

நீ உனது உள்  பக்கத்தை அறிவாய். ஆனால் அடுத்தவர்களின் வெளிப் பக்கத்தை மட்டுமே அறிவாய். அதுதான் பொறாமையை உருவாக்குகிறது.

யாரும் உன்னுடைய உட்புறத்தில் எப்படிப்பட்டவன் என்பதை அறிவதில்லை. நீ உனது உட்புறத்தில் வெறுமையை, மதிப்பில்லாத தன்மையை உணர்கிறாய்.

அதே போல் தான் மற்றவர்களும்.

வெளியில் பார்த்தால் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். ஆனால் அவர்களது சிரிப்பு போலியாக இருக்கும்.

ஆனால் அது போலியானது என்று உன்னால் எப்படி கண்டு கொள்ள முடியும். ஒரு வேளை , அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி இருக்கலாம்.

ஆனால் நீ வெளியில் மட்டும் சிரிப்பது போலியானது என்பதை நிச்சயமாக உணர்வாய்.

ஏனெனில் உனது உள்ளத்தில் நீ மகிழ்ச்சியுடன் இல்லை. எல்லோரும் வெளித்தோற்றத்தை அழகாக, பகட்டாக ஆனால் எமாற்றுபவையாகக் கொண்டுள்ளனர்...

அவர்களை நிராகரிக்க தயாராகி கொள்ளுங்கள்...


உங்கள் அரசியலை வாழ்வியலாக ஏற்றுக்கொள்வீர்கள் என்றால்...

பனை மரத்தின் வேர்களுக்கடியில் புதைந்து கிடக்கும் தமிழர்களின் மறைக்கப்பட்ட சரித்திரம்...


சமீபத்தில் இணையத்தில் “மோசசு சோனி” (Moses Jony) என்பவர் பனைமரம் தமிழர்களின் அடையாளம் என்று பதிந்து இருந்தார். அது என்னுள் உறங்கி கொண்டிருந்த அதை பற்றி கடந்த காலங்களில் நான் படித்து தெரிந்து கொண்ட விடயங்களை ஆழ்ந்த மையலில் இருந்து தட்டி எழுப்பி விட்டது. அந்த அன்பருக்கு எனது நன்றிகள்.

பனை மரத்திற்கும் தமிழர்களின் நாகரீகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு தமிழ் தேசியம் பேசுகிற போலியான பல அன்னகாவடிகளுக்கு தெரியாத விடயம். பனைமரத்தையும் அதை ஒட்டிய வரலாற்று உண்மைகளையும் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

பனை மரம் என்பது ஒரு மரம் என்ற அளவில் நின்றுவிடாது பண்டைய தமிழர்களின் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவு சார்ந்த கூறுகளை தனது முதுகில் தூக்கி சுமந்த ஓடம். பனையேறும் தொழில் ஏதோ கள், பதனி இறக்குவது மட்டும் என்றல்லாமல் அதையும் தாண்டி அந்த தொழிலுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது.

பனையேறும் தொழில் என்பது தமிழர்களின் இலக்கியத்தோடு தொடர்பு உடையது. எப்படி என்று மண்டை குழம்ப வேண்டாம்.

பனை மரத்தில் இருந்து தான் அன்றைய காலத்தில் எழுத்தோலைகள் தயாரிக்கப்பட்டன. சங்ககாலத்தில் பனை ஓலையை தயார் செய்வது என்பது தற்காலத்தில் அச்சகத்தை, புத்தக பதிப்பகத்தை நடத்துவதற்கு சமம். ஒரு அச்சகத்தை நடத்துபவர் குறைந்த பட்ச கல்வி அறிவு உள்ளவராகவாவது இருக்க வேண்டும். அதே போன்று பனை மரத்தோடு தொடர்புடையவர்களும் சங்ககால அறிஞர்களோடு தொடர்புடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி எனில் பனையேறுதல் ஏன் இழிவான தொழிலாக கருதப்பட வேண்டும் என்று கேள்விகள் எழும்புவது இயற்கையே...

பார்ப்பனியம் தமிழ்நாட்டில் நுழைந்த போது பெரும்பான்மையான தமிழர்கள் புத்த சமண மதத்தை சேர்ந்தவர்களாகவும் கல்வியில் சிறந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

பார்ப்பனியம் ஒரு சமூகத்தை அழித்தொழிப்பதற்கு செய்யும் வேலையே, அவர்கள் எந்த சமூகத்தை அடிமைபடுத்துகிறார்களோ அந்த சமூகத்தின் கல்வி அறிவை நிர்மூலப்படுத்துவதே.

அப்படி தான் பார்ப்பனியத்தின் சதியில் வீழ்ந்த பண்டைய தமிழகத்தில் கல்வியில் தேர்ந்த அறிஞர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களும் கல்வி பயிலுவது தடை செய்யப்பட்டு அவர்கள் இழிமக்களாக ஒடுக்கப்பட்டனர். அவர்கள் சார்ந்த தொழில்கள் இழிவானதாக பரப்புரை செய்யப்பட்டது. தமிழர்களுடைய இலக்கியங்கள் அவற்றை சுமந்து கொண்டலைந்த பனையோலைகளோடு கொழுத்தப்பட்டது. அப்படி பட்ட சூரையாடலுக்கு தப்பி பிழைத்தவை தான் தற்போது நாம் கொண்டாடும் சங்க கால தமிழ் இலக்கியங்கள்.

அது மட்டுமா பண்டைய தமிழர்களின் தொழில் நுட்பங்கள் சிதைக்கப்பட்டன. பார்ப்பனியம் அதற்கு தேவைப்பட்ட தமிழர்களின் அறிவுச்செல்வங்களை திருடி அவர்களது பெயரில் காப்புரிமை செய்து கொண்டது. செத்துப்போன மனித உடல்களை பதப்படுத்தும் பண்டைய எகிப்தியரின் தொழில்நுட்பங்களை உலகத்தின் கவனத்தை கவர்ந்தது என்றால், உயிருள்ள தமிழ் இலக்கியங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுமந்த பனையோலைகளை பதப்படுத்தும் தொழில்நுட்பமும் அவற்றை கையாண்ட சான்றோர்களின் நேர்த்தியும் உலகை ஆச்சரியப்படுத்திருக்க வேண்டும் தானே. அது ஏன் நடக்கவில்லை ?

எகிப்தியர்களின் தொழில் நுடபத்தை பற்றிய குறிப்புகளை அறிவதற்கு தடயங்கள் இருந்தது. ஆனால் பண்டைய தமிழர்களின் அறிவு சார் தொழில் நுட்பங்கள் பார்ப்பனியத்தால் தடயமே இல்லாமல் அழிக்கப்பட்டதும் அந்த தடயங்களை பற்றிய தேடல்களின் முயற்சி பார்ப்பனிய சக்திகளால் அவ்வப்போது முடக்கப்பட்டு வருவதன் விளைவு தான் அது.

தமிழகத்தில் கடந்த காலங்களில் மிகவும் அதிகமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பின்னணியை பார்த்தால் அவர்கள் கலை, இலக்கிய, தொழில்நுட்ப அறிவு சார்ந்த குடியினராக தான் இருப்பர்.

ஒரு எடுத்துகாட்டிற்கு முன்பு சாணார் என்றழைக்கப்பட்ட நாடார்களையும், பறையர்களின் உயர்ந்த வகுப்பினராக கருதி கொள்ளும் வள்ளுவ குடிகளையும் எடுத்து கொள்ளலாம். பல பேர் சாணார் என்ற வார்த்தையை இழிவான ஒன்றாக கருதலாம். நான் அவ்வாறு கருதவில்லை. அது “சமணர்” என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்பது என்னுடைய யூகம்.

தமிழகத்தில் புத்த சமண மதங்கள் கோலேச்சின என்பதை நாம் இந்த இடத்தில் நினைவில் கொண்டாக வேண்டும். தென் தமிழகத்தில் சாணார் என்றழைக்கப்பட்ட மக்களும் சமணர்களாக இருந்திருக்க வேண்டும்.

இந்த சாணார் என்றழைக்கப்பட்ட குடிகள் தான் பனை மரத்தோடு தொடர்புடைய தொழில்நுட்பங்களில் தேர்ந்தவர்கள்.

அதே போல் பதப்படுத்தப்பட்ட பனையோலைகளில் சாகாவரம் பெற்ற தன்னுடைய இரண்டடி ஆயுதத்தை செதுக்கிய வள்ளுவரும் சமண மரபை சேர்ந்தவர் என்று கூறப்படுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வள்ளுவர் போன்ற தமிழ் ஞானிகளோடு சாணார்கள் என்று தற்போது விழிக்கப்படும் சக சமணர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்த பட்சத்தில் அவர்களும் கல்வி அறிவில் தேர்ந்தவர்களாக தான் இருந்திருப்பர். ஒரு வேளை வள்ளுவரின் குறள்களில் பல அந்த சமணர்களின் பாதிப்பில் எழுந்தவையாக கூட இருக்கலாம்.

பண்டைய இலக்கியங்களில் சமணர்கள் வியாபாரத்தில் கைதேர்ந்தவர்கள் என்றே குறுப்பிடப்பட்டு இருக்கிறது. வியாபார தொழிலில் சிறந்து விளங்குபவர்களான “செயின்கள்” என்று வழங்கப்படும் இன்றைய வடஇந்திய சமணர்களோடு பொருத்தி பார்க்கும் போது அந்த பண்டைய தமிழ் சமூகத்தை சேர்ந்த சமணர்களின் மரபணுக்கள் தான் இன்றைய நாடார்களின் ரத்தத்தில் இருக்கிறதோ என்னவோ. ம்ம்ம்ம் சாதிகளே இல்லாது இருந்த தமிழர்களின் அடையாளத்தை சிதைத்து அவற்றை இழிவான சாதிய பெயர்களாக கற்பித்த பார்ப்பனியத்தின் வீச்சை பார்க்கும் போது அது எந்த அளவிற்கு தமிழர்களின் பண்பாட்டை சூறையாடி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இடைப்பட்ட காலங்களில் தமிழர்களிடையே புகுத்தப்பட்ட போகி பண்டிகையின் பெயரில் பார்ப்பனிய சக்திகள் அவர்களின் சதியில் சிக்கி அறியாமையில் மூழ்கி கொண்டிருந்த தமிழர்களிடம் “பழையன கழித்தல் புதியன புகுதல்” என்று கூறி பார்ப்பனிய வெறியர்களிடம் சிக்காமல் எஞ்சி இருந்த கலை இலக்கிய அறிவியல் கருவூலங்களை தீயால் எரிக்கவும் ஆற்றில் விடவும் தூண்டினர்.

இப்படி தான் தனிநபர்களிடம் இருந்த அறிவு செல்வங்களும் சூறையாடப்பட்டன. நம்மாளுங்க பல பேருக்கு போகி பண்டிகையின் பின்னணி தெரியமால் இவனுங்களும் வீட்டில் இருக்கிற பழைய பொருட்களை எல்லாம் எரித்து கொண்டாடுவானுங்க. தான் சார்ந்த சமூகத்தின் கலாச்சார பண்பாட்டு அழிவுகளை கொண்டாடும் இனம் உலகத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது தமிழினமாக தான் இருக்கும்

தண்ணீருக்கடியில் எப்படி காற்றை மறைத்து வைக்க முடியாதோ அதே போன்று தான் பார்ப்பனியத்தால் அவர்களால் கீழ் நிலைக்கு தள்ளப்பட்ட மக்களை ரொம்ப காலத்திற்கு அவ்வாறு வைத்திருக்க முடியவில்லை. தமிழ் சமூகத்தில் அவ்வபோது கிளர்ந்தெழுந்த சமூக விடுதலை இயக்கங்களின் தோன்றல்களும், கிருத்துவ மத போதகர்களின் வருகையும் நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தின் அறிவு தேடல்களுக்கு வழி திறந்து விட்டது. தங்களுடைய மரபணுக்களில் அறிவு சார்ந்த காரணிகளை சுமந்து கொண்டிருந்ததால் தான் என்னவோ கல்வி கற்க உரிமை கிடைத்தவுடன் குறுகிய காலத்திலேயே பார்ப்பனிய வெறியர்களோடு கல்வியில் சரிக்கு சமமாக போட்டி போடக்கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற்று விட்டன அந்த சமூகங்கள்.

இவ்வளவற்றிற்கும் இடையில் இத்தனை நூற்றாண்டுகள் கல்வி கற்க தடை செய்யப்பட்ட சமூகங்கள் ஒரு நூற்றாண்டிற்குள் கல்வி அறிவில் தங்களை பெரிய அளவில் வளர்த்து கொள்ள முடிந்ததென்றால், ஒருவேளை பண்டைய தமிழ் மூததையர்கள் பார்ப்பனியத்திடம் அடிமையாகாமல் இருந்து கல்வி கற்கும் உரிமையை இழக்காமல் இருந்து இருந்தால் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவியல் அறிவில் எத்தைகைய முன்னேற்றத்தை தற்போதைய தமிழ்ச்சமூகம் அடைந்து இருக்கும் என்று எண்ணி பார்த்தால் யாரோ சுத்தியால் மண்டையில் போட்டது போன்று வலிக்கிறது...

ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் ஓராயிரம் மருத்துவர்கள் உள்ளனர்...


அணையைத் தகர்த்து காவிரியை மீட்டவன்...


மைசூர் மன்னன் முதலாம் நரசிம்மன் (1141- 1173) காவிரியைத் தடுத்த போது இரண்டாம் இராசராச சோழன் (1145- 1163) அணையை உடைத்து காவிரியை விடுவித்தான்.

இதுவே இன்றைக்கு தமிழ் அரசாங்கமும் படையும் நாம் உருவாக்கி இருந்தோமானால்...

காவிரியை கன்னடவன் விதிமீறி அணைகட்டித் தடுத்திருப்பானா?

அல்லது மலையாளி செண்பகவல்லி அணையை உடைத்திருப்பானா?

அல்லது பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவேன் என்று தெலுங்கன் அறிக்கைவிடுவானா?

பாஜகவிற்கு தமிழகத்தில் எப்பவுமே போட்டி நோட்டா கூட மட்டும் தான் டா...


திராவிடம் என்பதே தீது - மொழி ஞாயிறு பாவாணர்...


தமிழே தூய்மையான தேன்மொழி என்றும் ஆரியங்கலந்த கொடுந்தமிழே திராவிட மொழிகளாய்..

தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவாய் - திரிந்ததென்று அறியவும்...

வடமொழிக் கலந்து ஆரிய மயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது, திராவிடரும் மீண்டும்
தமிழராக மாட்டார்.

அரை ஆரியமும், முக்கால் ஆரியமுமான திராவிடத்தோடு தமிழை இணைத்தால்
அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போல் தமிழும் கெடும், தமிழனும் கெடுவான்.

ஆதலால், தமிழ் - தமிழன்- தமிழ்நாடு என்ற சொற்களன்றி,
திராவிடம் - திராவிடன் - திராவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

தமிழ் வேறு திராவிடம்வேறு
என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக.

திராவிடம் என்பதே தீது
- மொழி ஞாயிறு பாவாணர்...

தேசிய இனங்களுக்கு எப்போதுமே பிரிந்து போக உரிமை உண்டு.. என்ற உழைக்கும் மக்களின் அடையாளமான லெனினில் சிலை எந்த கார்பரேட் கைக்கூலியான வல்லாதிக்கத்தால் உடைக்கப்பட்டதோ அந்த இந்துத்வ வல்லாதிக்கத்தின் அடையாளமே உடைக்கப்பட்டுள்ளது...


தமிழக அரசாங்கம் யாருக்கு..?


விமான நிலையங்களை வைத்து அரசுக்கு லாபம்..

விமானங்களை வைத்து தனியார் நிறுவனங்களுக்கு லாபம்..

ஆனால் விவசாயிகளுக்கு?

மராட்டிய ரஜினி யின் ஆன்மீக அரசியல் = மதவாத அரசியல்...


இன்றைய உலகச் சூழ்நிலையில் வல்லரசுகளின் இராணுவத் தலையீடு பெருகி வருகிறது. சிறிய தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா? வல்லரசிய எதிர்ப்பிற்கு பெரிய இந்திய நாடு வாய்பபானதில்லையா?


பெரிய இந்தியா வல்லரசுகளின் கூட்டாளியாகி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாசல் கதவையும் பிடுங்கி எறிந்துவிட்டு வரவேற்புக் கொடுக்கிறது.

ஒரே இடத்தில் - தில்லியில் - மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு இந்தியா முழுவதையும் சூறையாடும் பொன்னான வாய்ப்பு இப்பொழுது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு உள்ளது.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு, கொள்கை வழிப்பட்ட தமிழ்த் தேசியமே சிறந்த வடிவம்.

சின்னஞ்சிறு கியூபா, வடகொரியா, வியட்நாம் போன்ற நாடுகள் அமெரிக்காவை முறியடித்து கம்பீரமாக உலக அரங்கில் நிற்கின்றன. அவற்றை விட பெரியது தமிழ்த் தேசம்.

தமிழ்த் தேசிய சனநாயகப் பொருளியல் கொள்கை வல்லரசிய எதிர்ப்புக்  கொண்டது. தமிழ்த் தேசம் எந்த ஏகாதிபத்தியத்தையும் முறியடிக்கும் ஆற்றல்  பெற்றுள்ளது. இறுதியாக வெல்வது இலட்சிய வழிப்பட்ட மக்கள் சக்தியே.. ஆயுதங்கள் அல்ல..

இந்திய தேசியத்தை ஆதரிப்பது என்பது தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்தியங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதாகும்...

பர்வீன் டிராவல்ஸ்க்கு வாழ்த்துக்கள்...


உலகிலேயே ஒரு மொழிக்கு கடவுள், முனிவர், மூதாட்டி, மலை மற்றும் தாத்தா உண்டு என்றால் அது தமிழுக்கு மட்டுமே...


தமிழின் சகோதர மொழியான சமஸ்கிருதத்திற்கும் கூட கடவுள் கிடையாது.

தமிழுக்கு பிறந்த மலையாளம், கன்னடம், தெலுங்கிற்கும் கடவுள் கிடையாது.

பாலி, மான்டிரின், ஹிந்தி, இங்கிலிஷ்க்கும் இதே கதி தான்.

அவர்கள் மொழியில் கடவுளைப் பற்றி பேச முடியும் அவ்வளவே..

எந்த மொழியும் கடவுள் இல்லையென்று சொல்லவில்லை, அந்த மொழிக்கு தலைவனாக ஒரு கடவுள் இல்லை என்பது தான். தமிழின் சிறப்புகளில் இதுவும் ஒன்று...

தமிழின் கடவுள்: முருகப்பெருமான்...
தமிழ் முனிவர்: அகத்தியர்...
தமிழ் மூதாட்டி: ஒளவையார்...
தமிழ் மலை: பொதிகை மலை...
தமிழ் தாத்தா: உ.வே.சாமிநாதய்யர்...

தமிழ் எங்கள் பேச்சு..
தமிழ் எங்கள் மூச்சு..
வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...

திருச்சி சம்பவம் , காவல்துறை யால் பலியான 3 மாத கர்ப்பிணி பெண் உஷா...


மாதுளையின் மகத்துவம்...


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்..

உலக மகளிர் தின வாழ்த்துக்கள்...


தற்போது இதை நோக்கியே மக்களை அழைத்து செல்லும் சினிமா, ஊடகங்களில் காட்டப்படும் செய்திகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் நிகழ்ச்சிகள்...


தவறை மீண்டும் மீண்டும் சரி என குட்டையைக் குழப்பினால் உங்கள் சிந்தனை மாறுபடும் கருத்தியல் விதைப்பு...

திமுக vs பெரியாரிஸ்ட் கலாட்டா...


திருச்சியில் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவரை போலீஸ் துரத்தி உதைத்ததில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு...


அந்த ஆய்வாளரை கைது செய்ய சொல்லி.. காவல்துறை எதிர்த்து போராட்டம் செய்த பொது மக்களை.. அடித்து விரட்டியது காவல் துறை எனும் மக்கள் விரோத துறை...

பாஜக எச் ராஜாவின் போஸ்ட் ஐ ரிபோர்ட் செய்ததால் ஃபேஸ்புக் தான் அதை நீக்கியது , பாஜக இளைஞர் அணி துணை தலைவர் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை.. சொன்ன துணை தலைவரின் அக்கோண்டே நீக்கப்பட்டது...


பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் சுர்யா என்பவர் முதலில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஹெச் ராஜா பாணியில் பெரியார் சிலை உடைக்கப்படும் எனவும் பதிவிட்டுள்ளார். ஊடகங்களில் ஹெச் ராஜா நான் அழித்து விட்டேன் எனக் கூறியிருக்க பாஜக கட்சியை சேர்ந்த ஒருவர் ஹெச் ராஜா அழிக்கவில்லை ஃபேஸ்புக் தான் அழித்துள்ளது எனக் கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

சர்ச்கைகள் உச்ச கட்டத்தை அடைந்து அதை தாங்க முடியாமல் நீண்ட நாள் வைத்திருந்த தனது கணக்கை அழித்து விட்டு புது கணக்கு துவங்கி முதல் பதிவாக தமிழிசை ஹெச ராஜாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் துணைத் தலைவர் சுர்யா...

உலக அரசியலை புரிந்துக்கொள் தமிழா...


திமுக தெலுங்கர் ஸ்டாலினே...


தமிழர்களை அடித்து கொலை செய்த போது வராத கோபம்...

உன் இனத்தான் கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமி சிலையை உடைத்ததும் வருகிறதே...

இதற்கு பெயர் என்ன.?

சாதி வெறியா.? அல்லது இன வெறியா.?

இந்து கோவில்களை தகர்ப்போம் என்று சொல்லுறீயே...

தமிழர் பாரம்பரிய கோவிலாக தேடி தகர்ப்பது தானே... உன் திட்டம்...

தமிழக மக்களின் முதல் எதிரியே.. காவல் துறை எனும் மக்கள் விரோத துறையே...


கண்ணகி சிலை அகற்றமும்.. பெரியார் சிலை உடைப்பும்...


தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு பரபரப்பாக பேசப்பட்டும், கண்டிக்கப்பட்டும் வருகிறது. இந்த நேரத்தில் ஒரு கடந்த கால நிகழ்வை சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

தமிழர் பண்பாட்டு அடையாளமாம் சென்னை மெரினாவில் நிறுவப்பட்ட கண்ணகி சிலையை 6.1. 2001 அன்று அன்றைய அ.தி.மு.க.அரசு அகற்றியது . இவ்லை, கடத்தி கொண்டு போய் ஒளித்து வைத்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம்  போக்குவரத்துக்கு  இடையூறாக கண்ணகி சிலை இருக்கிறது என்பதாம்.1968ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டில் நிறுவப்பட்டது தான் கண்ணகி சிலை. சிலை நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்து விட்டது. அதுநாள்வரைக்கும் எவரும் போக்குவரத்துக்கு இடையூறு என்று எவரும் கூறவில்லை. ஆனால் திட்டமிட்டு சிலையை அகற்றினார்கள்.

சிலை அகற்றியதற்கு பின்னால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ஜெயா தொலைக்காட்சியில் ஆஸ்தான சோதிடராக இருக்கும் காழியூர் நாராயணன் என்பவர் பகிரங்கமாகவே உண்மையை போட்டுடைத்தார். என்னவென்றால், தலை விரி கோலத்தில் நிற்கும் கண்ணகி சிலை இருக்கும் வரை செயலலிதா ஆட்சிக்கு தீங்கு விளைவிக்கும். இதை அகற்றுவது ஒன்றே பரிகாரம் என்றார்.

அப்போது, அ.திமு.க.அரசின் மூடநம்பிக்கையை கண்டித்தும், கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவக் கோரியும் தி.மு.க. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ் தமிழர் இயக்கம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் முதலிய பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. மேலும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமையில் தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி, கண்ணகி மாதிரி சிலையை செய்து அதே இடத்தில் நிறுவ முயன்ற போது அ.தி.மு.க.வின் குண்டாந்தடி அரசு தமிழுணர்வாளர்களை தாக்கியதோடு, கண்ணகி சிலையைப் பிடுங்கி கையை முறித்துப் போட்டனர்.

அப்போது அ.தி.மு.க. அரசுக்கு கையாளாக வேலை பார்த்து வந்தார் மானமிகு வீரமணி. தமிழர்களிடம் மூடநம்பிக்கை ஒழிப்பு பாடம் போதிக்கும் மானமிகு வீரமணி இதே பாடத்தை செயலலிதாவுக்கு நடத்த முன்வரவில்லை.

இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு  பெரியார் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் கண்ணகி மீதான "வன்மத்தை" பழி தீர்த்துக் கொண்டார். போக்குவரத்துக்கு இடையூறு என்பதால்தான் கண்ணகி சிலை அகற்றப்பட்டது, இதில் ஒன்றும் தவறில்லை என்று வாதிட்டார்.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்று சொன்ன சிலப்பதிகார காப்பியத்தை தேவடியாள் காப்பியம் என்று கொச்சைப் படுத்தியவர் பெரியார். அதன்வழியில் வீரமணியும்  கண்ணகி சிலை அகற்றப்பட்டதில் அகம் மகிழ்ந்தார். பார்ப்பனீய கொடுந்தேளாக விளங்கும் துக்ளக் சோவும் சிலை அகற்றலை ஆதரித்தார். ஆரியத்தை எதிர்க்கும் வீரமணியும்,  திராவிடத்தை எதிர்க்கும் சோராமசாமியும் கண்ணகி எதிர்ப்பில் ஒன்று கலந்தனர்.

தற்போது பெரியார் சிலைக்கு எச்.இராஜாவால் ஆபத்து என்றதும், மானமிகு வீரமணி பெரியார் சிலையை உடைத்துப் பார்,  பாரதீய சனதாக் கட்சியினர் நடமாட  முடியாது என்கிறார்.

வீரமணியை பொறுத்தவரை கண்ணகி சிலையில் வழிந்தால் அது தக்காளி என்பார். பெரியார் சிலையில் வழிந்தால் இரத்தம் என்பார்.

எந்த சிலை உடைப்புகளும் எமக்கு உடன்பாடானது அல்ல. அது பிள்ளையார் சிலை உடைப்பாகட்டும், அது பெரியார் சிலை உடைப்பாகட்டும்.

கருத்தை கருத்தால் வெல்ல முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் சிலைகளைத் தேடிப் போக மாட்டான். மக்களிடம்தான் போவான்.

எவர் கோட்பாடும் அவரவர்க்கு உயர்ந்தவையாகத் தோன்றாலாம். அக் கோட்பாட்டை மக்களிடம் கொண்டு செல்வதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது.

நாம் கண்ணகி சிலை நிகழ்வை நினைவூட்டுவதற்குக் காரணம் கண்ணகி மீது மாற்று கருத்து இருந்தாலும், அச்சிலைக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன்,  கண்டிப்பதற்கான துணிவைக் கைக் கொள்ள வேண்டுமே தவிர,  வன்மத்தை அல்ல என்பதை வீரமணி போன்றவர்கள் இனியாவது உணர வேண்டும்...

- கதிர் நிலவன்

தமிழா விழித்துக்கொள்...


எச் ராஜா சர்மா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது - பாஜக தலைவர் அமித் ஷா திட்டவட்டம்...


இது குறித்து கட்சி விசாரித்த போது நான் போடவில்லை என அவர் விளக்கம் அளித்து விட்டதாக அமித் ஷா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்...

குறிப்பு : காவிரி மேலாண்மை, நீட், சாகர்மாலா போன்ற திட்டத்தை திசை திருப்ப கலவரத்தை செய்ய சொன்ன அவர்களே எப்படி அவர்கள் ஆட்கள் மேல் நடவடிக்கை எடுப்பார்கள்...

முன்னாள் ஆண்டவர்கள் சரியில்லை அதை சரி செய்யத்தான் நான் வந்து இருக்கிறேன் - மராட்டியன் ரஜினி...


கருணாநிதி என் ஜி ஆர் ஜெயலலிதான் சிறந்த தலைவர்கள் - மராட்டியன் ரஜினி...

ரஜினி மாதிரி ஒரு அரைவேக்காடை உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது... இவன் ஆண்டு கிழிக்க போறானாம்...

பணம் உண்மையிலேயே அதிர்ஷ்டம் படைத்தது. ஏனெனில் அதனிடம் யாரும் சாதியோ, மதமோ பார்ப்பதில்லை, அதன் மீது யாரும் கலவரத்தை செய்வதில்லை..


நீங்கள் வாழ்க்கையில் யாருக்காவது நன்றியுள்ளவனாக இருக்க விரும்பினால், மனிதனுக்காக இருங்கள்..

ஏனெனில் கடவுள் உதவாத சூழ்நிலையில் கூட மனிதன் வருவான்...

தமிழ்த் தேசியம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரோ, அமைப்போ, பிரிவினைவாதியோ, இனவெறியரோ வலிந்து முன்னிறுத்தும் கருத்து இல்லை...


அது வரலாற்று வழிப்பட்டுப் புறநிலை மெய்ம்மையிலிருந்து விளைந்த சமூக அறிவியல் கருத்தாகும்.

வட வேங்கடம் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறிக்கிறார் தொல்காப்பியர்...

வங்கிகளை நம்பாதே...


சென்னையில் போலீஸ் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...


சென்னை அயனாவரம் கே-2 போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றியவர் சதீஷ்(28). இவர் நேற்று வழக்கம் போல், இரவு பணிக்கு சென்றார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் தன்னை தானே, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரிடமிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் தனது சாவுக்கு யாரும் காரணமல்ல என்று கூறியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உயரதிகாரிகள் விரைந்தனர். காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரித்து வருகின்றனர்.

காவலர் சதீஷ் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது...

உங்கள் அரசியலை உங்களின் வாழ்வியலாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால்...


இறுதிவரை இதுபோன்று பல கேள்விகளுக்கு பதில் தெரியாமலே உங்கள் வாழ்க்கையை யாரோ சிலரின் லாபத்திற்காக வாழ்ந்துக் கொண்டு இருப்பீர்கள்..

அது ஒரு போதும் உங்களின் வாழ்க்கையாக இருக்காது...

ஈரோடு சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி நகராட்சியை கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டன...


வீட்டு வரி மற்றும் குப்பை வரிகள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வரிகளை நகராட்சி குறைக்க வலியுறுத்தி 3000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன...

தலைக்கவசம்: ஒரு விழிப்புணர்வு பதிவு...


சட்டமும், நீதிமன்றங்களும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு தான் பல சட்டங்களும், அவ்வப்போது அதில் திருத்தங்களையும் கொண்டு வருகின்றன. அப்படி இயற்றப் படும் சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே வரவேற்பினைப் பெறும் என்பது உண்மை.

 அப்படி ஒரு நடைமுறை சிக்கல்களைக் கொண்ட ஒரு பிரச்சினைதான் இரு ஆண்டுகளுக்கு முன்பு வந்த தலைக்கவசம் குறித்த ஒரு உயர் நீதிமன்றத் தீர்ப்பும் அதனைத் தொடர்ந்த இத்தனை குளறுப்படிகளும்..

போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காவலர்கள் அதே சட்டத்தில் அதற்கு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றவும் வேண்டாமா? தான் சரியாக இருந்து கொண்டு தானே அடுத்தவர் குறைகளை களைய முடியும்.?

போக்குவரத்து காவலர்கள் (white shirt uniform) மட்டுமே சார்பு ஆய்வாளர் தகுதியில் உள்ள அதிகாரி spot fine  விதிக்க முடியும். சட்டம் ஒழுங்கு காவலர்களில் (காக்கி சீருடை) ஆய்வாளர் தகுதிக்கு குறைந்த அதிகாரி எவரும் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இல்லை.

ஆனால் நடப்பது என்ன? ஒரு ஏட்டையா இரண்டு இளைஞர் காவல் சிறுவர்களை வைத்துக் கொண்டு, அல்லது ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர், அல்லது சார்பாய்வாளர் தனது விருப்பத்திற்கு ஏற்றார் போல அபராதம் தீட்டுகிறார்கள். சராசரி பொது மக்கள் இதனை கேள்வி கேட்க முடியுமா? கேட்டால் அவர்கள் எந்தெந்த வகையில் பொய் வழக்கில் அலைக்கழிக்கப் படுகிறார்கள் என்பது அனுபவ பட்டவர்களுக்கு தான் தெரியும்.

தலைக்கவசம் பிடிக்கச் செல்லும் காவலர்களுக்கு அன்றை அன்றைக்கு target இருக்கிறதாம். காவல்துறையா அல்லது மார்க்கெட்டிங் குரூப்பா?

 பெரும்பாலான இளைய தலைமுறையினர் விழிப்புணர்வோடு தற்போது தலைக்கவசம் அணியத் தொடங்கிவிட்டனர். ஆனால் காவல்துறை துரத்தித் துரத்தி அபராதம் விதிப்பது யார் என பார்த்தால் நகர் புறங்களுக்கு அன்றாடம் கூலி வேலைக்கு வந்து செல்லும் கிராம மக்களை தான். (மாநகரங்கள் விதி விலக்கு)

குடிபோதையிலும், தலைக்கவசம் அணியமலும் வாகனம் ஓட்டியதற்காக இதுவரை எத்தனை காவல் துறையினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?

இதன் பொருள், அவர்கள் அம்புட்டு நல்லவர்கள் என்பதா?

சரியான கட்டமைப்பு, தரம் கொண்ட சாலைகள் மற்றும் தந்து பாதுகாப்பு குறித்த சுய புரிதல் இல்லாதவரை கட்டாய தலைக்கவசம் நிச்சயம் சாத்தியமில்லாத ஒன்று.

வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் சுய உணர்தல் வரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒன்றே மாற்றத்திற்கான வழி.

சட்டத்தில் May, Shall எனும் இரு வார்த்தைகள் மிகவும் இன்றியமையாதவை. அந்த வகையில் போக்குவரத்து விதிகளில் உள்ள தலைக்கவசம் என்பது கட்டாயப்படுத்தலாக (shall) இல்லாமல், அறிவுறுத்தும் விதமாக (may) மட்டும் இருந்தால் நலம்.

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் விசாரணையில்லாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? அதையெல்லாம் விட்டுட்டு.....

என்னங்க சார் உங்க சட்டம்?

மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள் தான்...


மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் மாங்கோ என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக் கீசியர்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக் கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள்.

பைத்தியம் பிடிக்காத குறைதான். அதனால் தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக் கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக் கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை.

உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே!

இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத் தான் தெரியும் என்பது அதிசய செய்தி!

ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம். கோடையின் உச்சத்தில் மாம்பழத்தின் காலம் ஆரம்பிக்கும்.

கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்! நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன.

பந்து போல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன.

சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த செவ்விளநீர் நிறத்தில் கண்ணைக் கவரும். சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் பச்சை நிறங்களில் ஒரு சாதாரண விளாம்பழத்தின் அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய அளவு வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.

இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியது தான் என்று சொல்லலாம்.

அசாம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும் தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர்.

மாம்பழம் யோகத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் யோக தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

மண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர். கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன.

எல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே பழங்களின் அரசன் தான்...

முகமூடிக்குள் ஒளிந்துக் கொள்வதால் என்ன பயன் என்று கேட்கிறார்கள்...


தமிழ்த் தேசியப் புரட்சி எவ்வாறு நடக்கும்?


மாபெரும் மக்கள் எழுச்சியாகவே தமிழ்த் தேசியப் புரட்சி நடக்கும்.

போர்க்குணம் மிக்க அமைப்பு அப்புரட்சிக்குத் தலைமை தாங்கும்.

கொரில்லாக் குழு வடிவமாகவோ அல்லது நாடாளுமன்ற சட்டமன்றப் பாதையாகவோ தமிழ்த் தேசியப் புரட்சிப்பாதை இருக்காது.

முடிவாக, தமிழ்த் தேசியம் எது ?

எமது தேசம் தமிழ்த்தேசம்.
எமது தேசிய இனம் தமிழினம்.
எமது தேசிய மொழி தமிழ்.
எமது இலக்கு தமிழ்த்தேசக் குடியரசு அமைத்தல்.

இவையே தமிழ்த் தேசியம்...

பாஜக எனும் போட்டோஷாப் கட்சிக்காரங்களை போட்டோஷாப் செய்தே கலாய்க்கிறானுங்க...


இன்னும் எத்தனை பிறப்பு இருப்பினும், எனக்கு தமிழனாகவே பிறக்க ஆசை. நம் உயிரான தமிழ் மொழியின் சிறப்பு பற்றி ஒரு சில வார்த்தைகள்...


உலகத்திலேயே இறைவனுக்கு தமிழ் மொழியில் உள்ள சொல் போல் எதிலும் இல்லை...

கடவுள் - எல்லாம் கடந்தும், உள்ளே இருப்பவர்.

எவ்வளவு பெரிய தத்துவத்தை இச்சொல் அடக்கியிருக்கிறது.

தமிழில் "ழ" என்ற அருமையான எழுத்து இருக்கிறது.

"ழ " வரும் சொல் எல்லாமே இனிமை. பழம், யாழ், குழல், குழந்தை, மழலை, வாழை...

இப்படி பல..

அடுத்து, மாதா-பிதா-குரு-தெய்வம் என்று சொல்வார்கள். அதனை பாருங்கள்.

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்.

தமிழின் முதல் உயிரெழுத்து "அ". அந்த எழுத்திலேயே ஆரம்பமாகியுள்ளன முதல் தெய்வங்கள் அம்மா, அப்பா.

இவர்களுக்கு அடுத்து குரு. அதாவது "அ" விற்க்கு அடுத்த எழுத்து "ஆ". ஆசிரியர் - தமிழின் இரண்டாம் எழுத்தில் ஆரம்பம்.

இவர்களுக்குப்பின் தெய்வம். அ,ஆ விற்கு பிறகு மூன்றாவது உயிரெழுத்து "இ" - இறைவன்.

அடுத்து, நமக்கு இன்றியமையாத தேவைகள் மூன்று. உணவு, உடை, உறையுள்.

இங்கும் முதல் தேவை உணவு. தமிழின் முதல் எழுத்து - "அ" - அன்னம்.

அடுத்து மானம் காக்க உடை. தமிழின் இரண்டாம் எழுத்து - "ஆ" - ஆடை.

மூன்றாவதாக வசிக்க உறையுள். தமிழின் மூன்றாம் எழுத்து - "இ" - இருப்பிடம்.

இப்படி பலபல பெரிய செய்திகளை தனக்குள் அடக்கிய மொழி தெய்வீகத் தமிழ்.

ஆகவே "தேன்மதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்வோம்".

ஒரு உபரிச்செய்தி...

தமிழில் ஒன்று முதல் 899 வரை உள்ள அனைத்து சொற்களுமே "உ" கரத்தில் தான் முடியும்.

உதாரணம்...

ஒன்று - கடைசி எழுத்து "று" - ற் + உ.
இரண்டு - கடைசி எழுத்து - "டு" - ட் + உ
எண்ணூற்றி தொன்னுற்று ஒன்பது - கடைசி எழுத்து - "து" - த் +உ...

பாஜக எனும் மக்கள் விரோத கட்சியை மறந்தும் ஆதரிக்காதீர்கள்...


தமிழ்ச் சமூகம் உலகமயம் மற்றும் இந்தியம் ஆகிய ஏகாதிபத்திய ஒடுக்கு முறைகளுக்கு ஆட்பட்டிருக்கிறது...


இந்த ஒடுக்குமுறைகளிலிருந்து மீள்வதற்குத்...

தமிழ்த் தேசிய விடுதலை ஒன்றே வழியாகவும்.. தீர்வாகவும் உள்ளது...

மராட்டிய ரஜினி கிழட்டு பய.. அடுத்த நோட்டாவுக்கு போட்டிக்கு வந்துட்டான்...


பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்...


திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி, அதிரடிக்குப் பெயர் போனவர். திருவண்ணாமலைப் பேருந்து நிலையம் அருகே அனுமதியில்லாமல் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளைக்கூட அகற்ற உத்தரவிட்டவர்.

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பாதையில் உள்ள கழிவறைகளில், சிறுநீர் கழிக்க பக்தர்களிடம் 10 ரூபாய் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது. கடந்த பௌர்ணமி  தினத்தில் கலெக்டரும் பக்தர்களுடன் பக்தராகக் கிரிவலம் சென்றார். பொது கழிவறைக்குப் பக்தர்போலவே சென்றார். வந்திருப்பது கலெக்டர் என்று அங்கே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. கலெக்டரிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.

அதேபோல, கிரிவலப் பாதையில் உள்ள 4 கழிவறைகளுக்கும் கலெக்டர் சென்றார். தலா 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இத்தனைக்கும் பௌர்ணமி மற்றும் தீபத் திருவிழாக் காலங்களில் கட்டணமே வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி பக்தர்களிடம் கழிவறை குத்தகை எடுத்தவர்கள் வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.

கிரிவலம் முடிந்து வந்த கலெக்டர், கழிவறை குத்தகைதாரர்களின் வசூல் வேட்டையைத் தடுக்காத ஊராட்சி செயலர்கள் முருகன், ராஜ்குமார், அண்ணாமலை முருகன், சுப்பிரமணி ஆகிய 4 பேரை அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்தார். பக்தர்களிடம் கழிவறை வசூலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கலெக்டரின் அதிரடியைத் தொடர்ந்து இருவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

வசூல் வேட்டை நடத்தியவர்களுக்கு கலெக்டர் அளித்த அதிர்ச்சி வைத்தியம் திருவண்ணாமலை மக்கள், பக்தர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது...

தண்ணீர் இரகசியம் : விளம்பரத்தை பார்த்து ஏமாந்து போய் விட்டீர்களே...


கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்.. தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது...


இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது.

இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவு தான் இது.

இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப் பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம்.

கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே.

ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு பெண் தனது கணவனை எந்தெந்த வகைகளில் எல்லாம் அனுசரித்துப் போக வேண்டும் என்று அப் பெண்ணுக்கு அறிவுரை கூறுவதாக இந்தப் பழமொழியின் பொருள் உள்ளது.

இதனால் இல்லறத்தில் இருந்து ஆணும் பெண்ணும் பிரிந்து செல்லாமல் ஒன்றாக வாழும் ஒரு நன்மை உண்டெனினும் தீமைகளே அதிகமாக விளைகின்றன.

இல்லறத்தில் ஆணின் கையே எப்போதும் ஓங்கி இருக்கவும் பெண்ணின் கை எப்போதும் தாழ்ந்து இருக்கவுமாக ஒரு தவறான சமுதாய வழிநடத்தலுக்கு இக் கருத்து வழிவகுத்து விட்டது. இதனால் பாதிப்படைந்த குடும்பங்கள் மிகப் பல. இவ்வளவு கீழான பொருளில் ஒரு பழமொழி ஏன் நடைமுறையில் இருக்க வேண்டும்?. இது தவறான வழிநடத்தலுக்கு வழிவகுக்கும் என்று அறிந்தும் இதை இப்பொருளில் உலவ விட்டது யாருடைய குற்றம்?. விடைதெரியாத கேள்விகள் இவை.

ஒரு காட்டை எரித்துச் சாம்பலாக்குவதற்கு ஒரு சின்னத் தீப்பொறி போதுமானதைப் போல ஒரே ஒரு எழுத்துப் பிழை போதுமே ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைப்பதற்கு. அவ்வாறே இந்தப் பழமொழியில் ஒரே ஒரு எழுத்து தவறாக எழுதப்பட்டதன் விளைவு இதில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருட்களைக் கொள்ளச் செய்து பழமொழியின் நோக்கத்தையே சிதைத்து விட்டது. உண்மையில் இந்தப் பழமொழியினைக் கூறியவர் ஒரு சித்தராகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சித்தர்கள் மட்டுமே எந்தப் பொருளையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாக உணர்த்துவர். நாம் ஒரு பொருளைக் குறிக்க ஒரு சொல்லைப் பயன்படுத்தினால் அவர்கள் அதே சொல்லை வேறு பொருளைக் குறிக்க பயன்படுத்துவர். இந்தப் பொருள் வேறுபாடுகளைக் காணும் முன்னர் ஒரு சிறுகதையினைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட பாறாங்கல்லின் மேல் அமர்ந்து இளைப்பாறிய பின் மலம் கழித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இவ்வாறு நாள்தோறும் தன்னை அசிங்கப் படுத்துவதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல் ஒருநாள் பொறுமை இழந்து கொக்கிடம் கேட்டது "ஏன் நாள்தோறும் என்மேல் வந்து அமர்ந்து என்னை அசிங்கப் படுத்துகிறாய்?. நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்?. சிவனே என்று நான் ஒரு ஓரமாகத் தானே இருக்கிறேன். நீ வேண்டும் என்றே என்னைத் தேடிவந்து என் மேல் அமர்ந்து இளைப்பாறுவதுடன் அசிங்கம் வேறு செய்துவிட்டுப் போகிறாயே? இது ஏன்? உனக்கு இவ்வாறு நடந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?"

அதற்கு கொக்கு இறுமாப்புடன் பதில் சொன்னது "நீ இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் கிடக்கிறாய். உன்னால் ஒரு பயனும் இல்லை. நான் அங்கிங்கென தன்னிச்சையாய் பறந்து திரிபவன். உன்னை விட உயர்ந்தவன் என்பதால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்."

அதைக் கேட்ட கல் கடகட என்று சிரித்தது. பின்னர் சொன்னது "அட முட்டாள் கொக்கே! நான் இயக்கமே இல்லாமல் கிடந்தாலும் இறைவனின் திருமேனி ஆகும் தகுதி பெற்றவன். எப்போதுமே பறந்து கொண்டிருந்தாலும் உனக்கு அந்தத் தகுதி இல்லை. நீ எத்துணை முறை என்னை மாசுபடுத்தினாலும் மழை நீரால் கழுவப்பட்டு மீண்டும் பொலிவுடன் நிற்பவன் நான். அகத்திலும் புறத்திலும் எப்போதும் அழுக்குகளைச் சுமந்து கொண்டு திரிபவன் நீ. இறைவனைப் போல நான் இயக்கமற்று இருக்க இயங்கித் திரிவதால் நீ ஒரு ஆன்மா ஆகிறாய். இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் தான் நீ ஓர் ஆன்மா. இயக்கம் நின்று விட்டால் எனது நிலையே உனக்கும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் என்னை ஏளனம் செய்யமாட்டாய்."

கல் சொன்ன பதிலைக் கேட்டு மெய்உணர்வு பெற்ற கொக்கு கல்லை வணங்கி விட்டு சென்றது.

இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?. கல் இயங்காத தன்மை உடையது ஆனாலும் அத்தகைய பண்புடையதே நம் இறைவன் ஆகிய தலைவன். பறவை இயங்கிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது ஆனாலும் அத்தகைய பண்புடையதே ஆன்மா ஆகும். இதுவே இப்பழமொழியின் கருத்து ஆகும். இந்த ஆன்மா அடிக்கடி இறைவனிடத்தில் தங்கி இளைப்பாறி விட்டுச் செல்வதுடன் என்றும் இறைவனுக்குக் கட்டுப்பட்டது என்னும் உயரிய ஆன்மீகக் கருத்தை உணர்த்துவதே இப்பழமொழியின் நோக்கம் ஆகும். இனி சரியான பழமொழி இது தான்.

"கல் ஆனாலும் கணவன்; புள் ஆனாலும் புருசன்."

(கணவன் = இறைவன்; தலைவன்; புள் = பறவை; புருசன் = ஆன்மா)...

இறுதி வரை வேடிக்கை மட்டுமே பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த பதிவை சாதாரணமாக கடந்து செல்லுங்கள்...


உங்களின் அரசியலை நீங்கள் முன்னெடுக்காத வரை உங்களை பிரிப்பது அவர்களுக்கு எளிமையான வேலையாக இருக்கும்...

சாப்பிடுவது குறித்து தமிழில் எத்தனை நுட்பமான வார்த்தைகள்?


(1) அருந்துதல்: மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து).

(2) உண்ணல்: பசி தீர உட்கொள்ளுதல்.

(3) உறிஞ்சல்: வாய்க் குவித்து நீரியல் பண்டங்களை இழுத்தல்.

(4) குடித்தல்: சிறிது சிறிதாக பசி நீங்க
உட்கொள்ளுதல் (கஞ்சி).

(5) தின்னல்: சுவைக்காக ஓரளவு தின்னுதல் (முறுக்கு).

(6) துய்த்தல்: சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்.

(7) பருகல்: நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்.

(8) விழுங்கல்: பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி  தொண்டை வழி உட்கொள்ளல் (மாத்திரை)...

கன்னடன் கமல் கலாட்டா...


ஆண்டவர் உபதேசம் ஊருக்கு தான்...

2400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் தயாரித்த (கருப்பு & சிவப்பு நிற ) மட்கலன்கள்...


அழகிய வண்ணமும் நேர்த்தியான தயாரிப்பும் கொண்டது .

590 'C வெப்பநிலையில் சுடப்பட்டது இந்த மட்கலன். மேலே கருப்பும் கீழ் பகுதியில் சிவப்பு நிறம் வருவதற்கு அவர்கள் சுடும் போது கொடுக்கப்பட்ட வெப்பநிலை மாற்றமே காரணம்...

தமிழரின் தொழில்நுட்பம் என்றுமே தன்னிகர் இல்லாதது தான்...