08/03/2018

சென்னையில் போலீஸ் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...


சென்னை அயனாவரம் கே-2 போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றியவர் சதீஷ்(28). இவர் நேற்று வழக்கம் போல், இரவு பணிக்கு சென்றார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் தன்னை தானே, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரிடமிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் தனது சாவுக்கு யாரும் காரணமல்ல என்று கூறியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உயரதிகாரிகள் விரைந்தனர். காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரித்து வருகின்றனர்.

காவலர் சதீஷ் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.