11/07/2018

தமிழுக்கு வெற்றி...


தமிழ் நீட் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறுதான், ஆகவே தமிழில் தேர்வு எழுதிய அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் தரவேண்டும், அதனடிப்படையில்தான் மருத்துவ கல்வி சேர்க்கை நடக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது...

இது தமிழுக்கு வெற்றி; அதை சிதைத்து வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இக்கு கேவலமான தோல்வி. இதற்கான போராட்டத்தை முன்னெடுத்த தோழர் டி.கே.ரங்கராஜன்.எம்.பி.,க்கு நமது அன்பான வாழ்த்துகள்...

இயற்கையை அறியாமல் செய்வதே மதங்கள்.. சிந்தனை செய்...


தமிழகத்தில் லோக் ஆயுக்தா எனும் ஜோக் ஆயுக்தா...


தமிழக அரசு நிறைவேற்றியுள்ள ஊழல்வாதிகள் பாதுகாப்பு சட்டமான  ஜோக் ஆயுக்தா முழுக்க முழுக்க தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது...

ஊழல் செய்பவர்கள் எந்தவகையிலும் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று மிகவும் கவனமாக இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் பணத்தை கொள்ளை அடித்து தின்று கொழுத்த ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் அரசு ஊழியர்களுக்கு இந்த சட்டம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த ஜோக்ஆயுக்தா சட்டத்தை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. மக்கள் போராட்டங்கள் மற்றும் சட்ட போராட்டங்கள் மூலம் ஊழலுக்கு எதிரான வலுவான லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வர அறப்போர் இயக்கம் தொடர்ந்து வேலை செய்யும்.

Tamilnadu now have the worst LokAyuktha (also called JokeAyuktha) in this country thanks to the state's Chief Sec Girija Vainthiyanathan who is the one prepared this bill for protecting the Corrupt politicians and Bureaucrats...

பெரும் முதலாளிகள்...


கொலை திட்டத்துடன் திரிந்ததாக துப்பாக்கி முனையில் 4 ரவுடிகள் கைது: புதிதாக தயாரிக்கப்பட்ட 20 அரிவாள்கள் பறிமுதல்...


கொலை திட்டத்துடன் திரிந்த 4 ரவுடிகளை தனிப்படை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து புதிதாக தயாரிக்கப்பட்ட 20 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தண்டையார்பேட்டை மேம்பாலம் அருகே வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ரவளி பிரியாவின் சிறப்பு தனிப்படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். இதில், பிடிபட்டவர் கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் (26) என்பது தெரியவந்தது.

அவரது பைக்கில் இருந்து அரிவாள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் தனது கூட்டாளிகளுடன் கொலை திட்டத்துடன் சுற்றித் திரிந்த தாக போலீஸார் தெரிவித்தனர்.அவர் கொடுத்த தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பதுங்கி இருந்த லட்சுமணனின் கூட் டாளிகள் மேல்மலையனூர் பிரபு என்ற பிரபாகரன் (21), அதே பகுதி யைச் சேர்ந்த கோவிந்தராஜ் (27), ராஜ்குமார் (18) ஆகியோரை போலீ ஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புதி தாக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 19 அரிவாள்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் எதிர் தரப்பினரைத் தீர்த்துக் கட்டும் நோக்கத்துடன் இருந்துள்ளனர். அவர்களைக் கைது செய்து சதித் திட்டத்தை முறியடித்துள்ளோம்” என்றனர்...

பாஜக அமித்ஷாவும்.. கல்வி கொள்ளையன் பச்சமுத்து தொடர்பும்...


தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்த படுவதை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...


இதுகுறித்து அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை, மற்றும் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தடை உத்தரவு அமல் படுத்தப்படுவதை கண்காணிக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அமுதா, சந்தோஷ் பாபு, ராஜேந்திர ரத்னு ஆகியோர், தமிழகத்தின் 6 மண்டலங்களில் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது...

சிந்தனை செய்... இயற்கையை அறியாமல் வாழவே நேரம் காலம் எனும் மாயை...


காரண சரீரம்...


காரண சரீரம் என்பது அந்தராத்மாவின் கொள்கலம். மனிதனின் தன்முனைப்பு (Ego) அல்லது அஹங்காரம் இச்சரீரத்திற்குரியது.

பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனின் தனித்தன்மை உருவாகும்பொழுது மிருக உடலில் இருந்த பிரக்ஞை தனக்கென்று ஒரு காரண சரீரத்தைப் பெற்று மனிதனாகி விடுகிறது. இந்நிலையில் பரமாத்மாவின் சுடர்பொறியே காரணசரீரத்தில் புகுந்து ஜீவாத்மன் ஆகின்றது.

“காரண சரீரங்களின் மொத்தமே ஈஸ்வரன். ஜீவனின் காரண சரீரம் ஈஸ்வரனின் சரீரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது” – மாண்டுக்கியோபநிஷதம்.

கடந்த பிறப்புகளின் அனுபவங்கள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு இச்சரீரத்தில் தேங்கி நின்று நமது அடுத்த பிறப்புக்கு காரணியாக அமைகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி இச்சரீரத்தில் பிரதிபலிக்கின்றது. ஏனைய சரீரங்கள் ஒவ்வொன்றாக அழிந்த பின்னர், காணர சரீரம் மட்டும் பிறவிகள் தோறும் நிலைத்து நிற்கின்றது. ஒவ்வொரு பிறப்பிலும் ஆத்மா பெறும் அனுபவங்கள் காரண சரீரத்தை மேலும் மேலும் விருத்தி அடையச் செய்கின்றது.

காரண சரீரத்தை இந்த வேதங்கள் விஞ்ஞானமய கோஷம் என்று குறிப்பிடுகின்றன. வேறுபடுத்தி தேர்வு செய்யும் கோஷம் (Discriminating Sheath) என்று இதை அர்த்தப்படுத்தலாம். அதாவது ஏனைய சரீரங்கள் மூலமாக பெற்ற அனுபவங்களை காரண சரீரம் ஒழுங்குபடுத்தி நல்லது கெட்டது எது எனப் பிரித்தெடுத்து தன்னிடம் தக்க வைத்துக் கொள்கிறது. காரண சரீரத்தின் பெறுபேறுகளைக் கொண்டே மறுபிறப்பில் எமக்குரிய குணம் நாட்டம் திறமை எல்லாம் நிர்ணயிக்கப்படுகின்றன. இச்சரீரத்தில் பிரதிபலிக்கப்படும் காரணங்களைக் கொண்டு எமது எதிர்காலம் அமைக்கப்படுவதால் தான் இது காரண சரீரம் எனப்படுகிறது.

காரண சரீரத்திலேயே மனிதனின் கிரியாசக்தியிருக்கிறது. மனிதனின் உயர்மனசு தெய்வீகமானது. மனிதன் தனது மனதைக் குவித்து ஒருநிலைப்படுத்தி தியானித்து தனது சிந்தனையால் “படைக்கும் ஆற்றலை” (Creative Power) பெறலாம். அவ்வாற்றலின் மூலமாக அவனது உயர்சிந்தனைகள் அவனை அறியாமலேயே செயல்வடிவங்கள் பெறுகின்றன.

காரண சரீரத்தில் உதிக்கும் எண்ணங்கள் அரூபமானவை (Abstract) மனோசரீரத்தில் தோன்றும் சிந்தனைகள் ரூபமானவை (Concrete).
காரண சரீரத்தை விருத்தியடையச் செய்து சித்தபுருஷர்கள் கடந்துபோன பிறப்புக்களை ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார்கள்...

தஷ்வந்துக்கு தூக்கு உறுதி...


மூலிகை கொட்டைக்கரந்தை...


"கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு
வெட்டை தனியுமதி மேகம்போந்- திட்டச்
சொறிசிரங்கு வன்கரப்பான் றேற்றாது நாளும்
மறிமலமுந் தானிறங்கு மால்"

கொட்டைக்கரந்தை உடலை பலப்படுத்தும்; குளிர்ச்சியுண்டாக்கும்; வாதத்தைக் குணமாக்கும், மலமிளக்கும். இலை, பூக்கள், உடலை பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும். விதை, வேர், பசியைத் தூண்டும்; குடல் புழுக்களைக் கொல்லும்.

கொட்டைக்கரந்தை முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. இது பற்களுள்ள, நறுமணம் கொண்ட இலைகளை மாற்றடுக்கில் அடர்த்தியாகக் கொண்ட சிறு செடி வகைத் தாவரம். சிறு பந்து போன்ற, உருண்டையான, சிவப்பும், பச்சையும் கலந்த பூங்கொத்தினை நுனியில் கொண்டது.

இது தென்னிந்தியாவிற்கே உரிய மூலிகை. தோட்டங்களிலும், வயல் நிலங்களில் அறுவடைக்குப் பின்னர் இயல்பாக வளர்கின்றது. இதிலிருந்து மருத்துவத்திற்குப் பயனாகும் ஒருவித எண்ணெய் பெறப்படுகின்றது. நறுங்கரந்தை என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. இலை, பூ, விதை, வேர், வேர்ப்பட்டை போன்றவை மருத்துவப் பயன் கொண்டவை.

தோல்நோய்கள் குணமாக இலைத்தூள், வேளைக்கு ½ தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர வேண்டும்.

கொட்டைக்கரந்தைத் தைலம்
முடிவளர்ச்சிக்கும், முடி கருமையடையவும் கொட்டைக் கரந்தை தைலம் பயன்படும். கொட்டைக் கரந்தை இலைச்சாறு, தேங்காய் எண்ணெய், சம அளவாக எடுத்துக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்கான எண்ணெயாகப் பயன்படுத்திவர வேண்டும்.

வெள்ளைப்படுதல் குணமாக இலைகளை உலர்த்தித்தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து குடித்துவர வேண்டும். தினமும் 3 வேளைகள், 10 நாட்களுக்குக் குடிக்கலாம்.

இரத்த மூலம் சரியாக வேர்ப்பட்டையை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும்.

குடல் புழுக்கள் வெளியாக விதைகளைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து, ஒரு தேக்கரண்டி அளவு, தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும்.

மூளை, இதயம், நரம்புகள் பலமடைய
பூக்காத செடிகளை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சாப்பிட வேண்டும். 6 மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்...

மருத்துவத்தை சேவையாய் செய்யும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் ஏன் பிரபலமடைவதில்லை..? அவர்களை தேடி செல்லுங்கள்...


வருகிறது ஆபத்து..... 100 மடங்கு பெரியதாக போகும் சூரியன்...


ஐந்து பில்லியன் வருடங்களுக்குள் சூரியன் 100 மடங்கு பெரிதாகும் எனவும் இதனால் பூமியின் அழிவு நிச்சயம் நெருங்கி வருகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கைக்கு மாறாக பல வினோதங்கள் நடைபெற்று வரும் கலியுலகில் பல மாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சூரியன், ‘மஞ்சள் குள்ளன்’ என்ற தரத்தில் இருந்து தீவிரமடைந்து 100 மடங்கு பெரிதாகி ‘சிவப்பு இராட்சதன்’ என்ற நிலையை அடையவுள்ளது.

இதையடுத்து, பூமி பேரழிவை சந்திக்கும் ஆபத்து நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர். இத்தகைய நிகழ்வுகளால் சூரியன் உயிர்களை சுட்டு பொசுக்கும் அளவிற்கு வெப்பத்தை உமிழும் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சூரியனிற்கு மிக அருகில் உள்ள புதன், வெள்ளி போன்ற கிரகங்களை விழுங்கும் ஆபத்து உள்ளது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது...

சாகர்மாலாவிற்கான வேலைகள்...


தமிழ் நாட்டின் ஊர் பெயர்கள் தமிழில்...


தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது.

பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது.

வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது.

செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு.

எருமையூர் -மைசூர், (எருமை என்பது வடமொழியில் மகிசம். எனவே மகிசூர் என்று மாற்றி பின் அது மைசூர் என்றானது).

ஒத்தை கால் மண்டபம் - உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க.

ஒகேனக்கல் - உகுநீர்க்கல், புகைநற்கல்.

விருதாச்சலம் (வடமொழி) - முதுகுன்றம் (தமிழ்).

வேதாரண்யம் (வடமொழி) -திருமறைக்காடு (தமிழ்).

தி. நகர் என்பது தியாகராய நகர் ஆகும். இதை அனைவரும் அறிந்ததே, (தியாகராயர் - இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).

கே.கே நகர் என்பது கலைஞர் கருணாநிதி நகர்.

பாண்டிபசார் - சவுந்தரபாண்டியனார் அங்காடி. ( சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).

மதுரை என்பது மதிரை (மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதான் மதுரை என்று பெயரிட்டனர்).

குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.

திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்.

நீலகிரி - குன்னூர் என வழங்குவது குன்றூர்.

அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.. (ஆர் என்பது ஆத்தி மரம்).

ஏற்க்காடு - சேலம் அருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. (காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று பெயரிட்டார்கள்).

நம் தமிழர்கள் அன்று பொருள் அறிந்து தமிழ் பெயர் சூட்டினார்கள்...

ஆனால் இன்று தமிழ்மொழி தவிர மத்த எல்லா மொழியிலும் பெயர் உள்ளது...

ஓநாய்களுக்கு மத்தியில் வாழும் ஆடுகள் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?


விருது வாங்கலையோ விருது...


மைய அரசின் பல்கலைக் கழக மானியக்குழுவின்கீழ், தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என 20 நிறுவனங்களைத் தேர்வு செய்யுமாறு ஒரு குழு அமைக்கப்பட்டது. அரசு நிறுவனங்கள் 10, தனியார் நிறுவனங்கள் 10 தேர்வு செய்யுமாறு கூறப்பட்டது.

குழுவுக்குத் தலைமை வகித்தவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த கோபாலசுவாமி. எங்களால் தரமான 20 நிறுவனங்களை தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றுகூறியிருக்கிறார் ஐயா கோபாலசுவாமி.  அந்தக் குழு 6 நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்தது.

இந்திய அரசின் மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை, அந்த ஆறு நிறுவனங்களை தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் ('Institute of Eminence) என அறிவித்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுமாம்.

தேர்வு செய்யப்பட்ட ஆறு நிறுவனங்கள் எவை ?

• அரசு நிறுவனங்கள் - ஐஐடி-மும்பை, ஐஐடி-தில்லி, ஐஐஎஸ்சி-பெங்களூர் – இவை மூன்றும் நிஜமாகவே புகழ்பெற்ற, பெயர்பெற்ற நிறுவனங்கள்.

• தனியார் நிறுவனங்கள் - மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி – இவையும் புகழ் பெற்றவை.

தனியார் நிறுவனங்களில் மூன்றாவது எது தெரியுமோ?

ஜியோ இன்ஸ்டிட்யூட்.

என்னாது.... இப்படியொரு நிறுவனமா? அது எங்கே இருக்கு என்று அதிர்ச்சி அடைகிறீர்களா?

கவலை வேண்டாம்.

இந்தச் செய்தியை அறிந்த எல்லாருமே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அதிர்ச்சி அடையலாம்.

ஜியோ இன்ஸ்டிட்யூட் ரிலையன்ஸ்க்கு சொந்தமானது என்று சொல்லப்பட்டிருப்பது தவிர அது எங்கே இருக்கிறது உள்பட வேறெந்த செய்தியும் யாருக்கும் தெரியாது.

(நாட்டுக்கே பெருமை சேர்க்கும் அப்படியொரு நிறுவனத்தை அறிந்தவர்கள் அதன் வலைதள இணைப்பை கமென்ட்டில் இடலாம்.)

அப் கீ பார் – அம்பானி-அதானி சர்க்கார்

பி.கு. - பத்தர்கள் வழக்கம்போல அப்படிக்கா போய்விடவும்...

தமிழகமும் மார்ச் மாதமும்...


குழந்தைத் திருமணம் திராவிடர் எனும் தெலுங்கர் கொள்கையே...


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும், இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

இரட்டை கோபுரமும் உண்மைகளும்...


யூகலிப்டஸ் இன்னொரு சீமைக் கருவேல மரம்...


1850 ஆம் காலகட்டங்களில் யூக்கலிப்டஸ் மரம் ஆஸ்திரேலியாவில் இருந்து தருவிக்கப்பட்ட blackwood and silver warde என்ற வகையை சார்ந்தது..

எதற்காக இந்த மரம் இறக்குமதி செய்யப்பட்டதென்றால் தேயிலை தோட்டங்களில் உள்ள அதிக ஈரப்பதம் தேயிலை வளரவிடாமல் தடுத்தது...

இந்த யூக்கலிப்டஸ் மரத்திற்கு Natural Borewell இன்ற மற்றொரு பெயரும் உண்டு..

அதாவது இதன் வேர்கள் 30அடி வரை செல்லும், ஒரு நாளைக்கு ஒரு மரம் சுமார் 90 லிட்டர் நிலத்தடி  நீரை உறிஞ்சும்...

ஆகையால் தேயிலை நடவிற்காக வெள்ளைக்காரர்களால் நடப்பட்டது..

1950 களில் இது நீலகிரி மாவட்டத்தில் பரவலாக நடத்துவங்கினர் அங்குள்ள ரேயான் தொழிற்சாலைக்கு எரி விறகுகளாக பயன்படுத்துவதற்கு, தேயிலை தோட்டங்களை தாண்டி சமவெளிகள், தனியார் நிலங்கள் மற்றும் கிராமங்களில் பரவலாக நடத்துவங்கினர் விக்கிகளுக்காக பயன்படுத்த...

1980 களில் ஒரு மிகப்பெரிய வறட்சி தாக்கியது நீலகிரி மாவட்டத்தை, அன்று அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்த பொழுது இந்த யூகலிப்டஸ் மரங்களே காரணம் என்று அறியப்பட்டு அதை நட மாநில அரசு தடைவிதித்தது..

இதற்காக பெரிதும் போராடி விழிப்புணர்வை ஏற்படுத்தியது வேணுகோபால் அவர்களின் தலைமையில் உருவான நீலகிரியை காப்போம் என்ற அமைப்பினரால்...

இன்று அதே யூகலிப்டஸ் மரத்தை வனத்துறை மற்றும்TNPL நிறுவனமும் இணைந்து தமிழகம் முழுவதும் குத்தகை அடிப்படையில் விவசாய நிலங்களை பெற்றுக்கொண்டு இத்தனை ஆண்டுகளுக்கு வளர்த்து அவர்களுக்கு வாடகை வழங்கி வருகின்றனர்...

ஏற்கனவே மழை பொய்த்து கடும் வறட்சி ஏற்படும் சூழலில் இதை அரசாங்கமும் ஊக்குவிக்கிறது..

இப்பொழுது தான் சீமைக்கருவேல மரத்தின் தீமைகளை வலியுறுத்தி அதை நீக்க ஆணை பெற்றிருக்கும் வேலையில் அடுத்ததாக இன்னொரு தீமை...

இது சீமைக் கருவேல மரத்திற்கு சற்றும் சளைத்தது அல்ல..

யூகலிப்டஸ் மரம் வளரும் இடத்தில் அதை சுற்றி எந்தவொரு தாவரத்தையும் வளரவிடாது..

காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறியும் தன்மை வாய்ந்தது..

இதன் இலைகளை கால்நடைகள் உண்ணாது..

அதுபோக இதன் இலைகள் எளிதில் மக்காது.

சராசரியாக 5 ஆண்டுகளில் 35 சதவிகத நிலத்தடி நீரை உறியும் சக்தி வாய்ந்தது...

காயோ பழமோ தராது, வெட்டினால் விறகுக்காக மட்டும் ஆகும்.

தமிழ் மண்ணை மலடாக்கியே தீருவோம் என்று அரசாங்கங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றன.

மண் வளம் காப்போம்,
நிலத்தடி நீரை காப்போம்,

இந்த யூகலிப்டஸ் மரத்தை நம் மண்ணை விட்டு அகற்றுவோம்...

பாஜக மோடியும் விவசாயம் அழிப்பும்...


எண்ணங்கள்...


எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.

"ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.

எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.

எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.

நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை...

அதிமுக எடப்பாடியும் டூபாக்கூர் பேச்சும்...


கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்...


கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார்.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.

கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...

இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.

இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..

சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.

குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது...

பாஜக அமித்ஷா வின் அயோக்கியத்தனம்...


கார்ப்பரேட் வள மேம்பாட்டுத் துறையாக மாற்றப்பட்டுவிட்டதா என்ன மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை?


இல்லாவிட்டால் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் இனி ஆண்டில் இரண்டு முறை நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது ஏன்?

சமூக நீதி, சம வாய்ப்பு மற்றும் மாநில உரிமைக்கே எதிரான எந்த நுழைவுத் தேர்வுமே தேவையில்லை என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

”கல்வி” என்றால் “கற்றல்” என்று பொருள்.

கற்றலுக்கு அதாவது கற்பதற்குத் தகுதி உடையோர், தனி உரிமை படைத்தோர் இன்னார்தான் என்று யாரைச் சொல்ல முடியும்?

எல்லோருக்கும் கல்வி வேண்டும்; எனவே பாஸ் மார்க் வாங்கிய எல்லோருமே தாம் விரும்பும் உயர்கல்வியைக் கற்கத் தகுதி உடையவரே, உரிமை படைத்தவரே.

இதில் அதிக மார்க் வாங்கியிருந்தால் இடம் கிடைப்பது எளிது; குறைந்த மார்க் என்றால் இடம் அரிது; இது புரிந்துகொள்ளக்கூடியதே.

ஆனால் இதில் நுழைவுத் தேர்வைப் புகுத்தி கல்வி கற்பதற்கான வாய்ப்பையே மறுப்பது என்ன ஞாயம்?

இது ஏற்ற தாழ்வு சாதி பேதம் உள்ள சமூகம்; இந்த அவலம் கல்வி கற்கும் வாய்ப்பிலும் குறுக்கிடுவது எப்படி ஞாயமாகும்?

அதனால்தான் நுழைவுத் தேர்தவே வேண்டாம் என்கிறோம்.

ஆனால் மத்திய அரசு தமிழக மக்கள் உயர்கல்வி பயிலக் கூடாது என்று நுழைவுத் தேர்வுகளைக் கொண்டுவந்தது.

ஆனால் தமிழக அரசின் உயர்கல்வி நிலையங்கள் மார்க் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்து கல்வியில் புரட்சியே நிகழ்ந்தது.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் மருத்துவம் படிக்க “நீட்” நுழைவுத் தேர்வைத் திணித்தது மத்திய பாஜக மோடி அரசு.

இப்படி தீய உள்நோக்கத்தில் புகுத்தப்பட்ட நீட் தேர்வு தீமையானதாகவே இருக்கிறது; தகிடுதத்தங்களும் தில்லுமுல்லுகளும் நிரம்பியதாக உள்ளது.

இரண்டாண்டு நீட் தேர்வுகள் கணிசமான தமிழக மாணவர்களை மருத்துவம் படிக்கவிடாமல் செய்துவிட்டன.

இருந்தும் மனம் ஆறவில்லை மோடி அரசுக்கு; இப்போது நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் இனி ஆண்டில் இரண்டு முறை நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.

”மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நடத்தாது. நீட், ஜேஇஇ, யுஜிசி நெட், சிமேட் தேர்வுகளை தேசியத் தேர்வுகள் முகமைதான் (National Testing Agency) இனி நடத்தும். இந்த நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் கணினி முறையில் (computer-based) நடத்தப்படும். அதோடு 2019 முதல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதங்களிலும் நடைபெறும். தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

இப்படி ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத் தேர்வை நடத்துவது மற்ற தேர்வுகளுக்கும் மாணவர்களைப் படிக்கவிடாமல் செய்து எதிலும் பாஸாகாமல் அவர்களின் படிப்பையே பாழாக்குவதாகும்.

மேலும், இரண்டு முறை நீட்டுக்கு ஃபீஸ் கட்டியழ வேண்டும்; இதற்கு வசதியில்லாத மாணவர்கள் நீட் தேர்வுக்கே கும்பிடு போட நேரிடும்.

ஆக, மோடி அரசின் நோக்கம் இரண்டு வகைகளிலும் வெற்றி பெறும்; தமிழக மாணவர்களை உயர்கல்வியிலிருந்தே அப்புறப்படுத்த முடியும் மற்றும் கார்ப்பொரேட்டுகளை மேலும் வளப்படுத்த முடியும்.

கல்வித் தரம் என்பதெல்லாம் சும்மா பேச்சு; கார்ப்பொரேட்டுகள் கல்லா கட்டத்தான் நீட் மற்றும் அதன் பயிற்சி மையங்கள் என்பதுதானே நடைமுறை உண்மை.

அதனால்தான் நாம் கேட்கிறோம்; மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கார்ப்பொரேட் வள மேம்பாட்டுத் துறையாக மாற்றப்பட்டுவிட்டதா என்று.

இல்லாவிட்டால் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் இனி ஆண்டில் இரண்டு முறை ஏன் நடத்தப்பட வேண்டும்?

சமூக நீதி, சம வாய்ப்பு மற்றும் மாநில உரிமைக்கே எதிரான எந்த நுழைவுத் தேர்வுமே தேவையில்லை என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

எனவே, இனியும் தயங்காமல் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய நீட்-விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் பெறுவதுடன், கல்வியை பழையபடி மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்...

சிந்தனை செய் இயற்கையை...


இலங்கையின் வட மாகாணத்துக்கு இந்தியா வழங்கிய ஆம்புலன்ஸ்கள்: வரும் 21-ம் தேதி முதல் இயக்க முடிவு..



இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இந்தியா வழங்கிய ஆம்புலன்ஸ்கள் வரும் 21-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக இலங்கையின் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக இலங்கைக்கு அரசு பயணமாக கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்றார். அப்போது இந்தியாவில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அமல்படுத்த உறுதி அளித்தார். அதன்பேரில் இந்திய அரசு இலங்கைக்கு ரூ.147.81 கோடி நிதி உதவியில் 297 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டன. அதற்கான ஓட்டுநர், முதல் உதவி நிபுணர்கள் என அந்நாட்டு ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கியது.

இந்த ஆம்புலன்ஸ் சேவை இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் முதற்கட்டமாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இத்திட்டம் இலங்கை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை மேலும் விரிவுபடுத்த இந்திய அரசு ரூ.109 கோடி வழங்க ஒத்துக்கொண்டுள்ளது.

இதற்காக கொழும்பில் கடந்த மே 31-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய நிதி உதவியைப் பெற்று இலங் கை முழுவதும் `சுவசெரிய’ ஆம்புலன்ஸ்கள் இயக்குவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தார். இதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது...

பாஜக அமித்ஷா கலாட்டா...


போதிதருமரும் கூறப்படாத இரகசியமும்...


நமக்கு போதிதருமர் புத்த மதத்தில் இருந்தார் என்று தெரியும்.

ஆனால் புத்தமதத்தை அவர் எதிர்த்தது தெரியுமா?

ஏன் சீன தேசத்தில் பிரபலமான போதிதருமர் இங்கும் இலங்கையிலும் சொல்லப்படுகின்ற அளவுக்கு பிரபலம் ஆகவில்லை ?

புத்த மதம் அதன் ஆரம்ப காலத்தில் இருந்தது போன்று தூய வடிவில் இப்போது இல்லை.

இப்ப மட்டுமின்றி புத்தர் மரணித்த சில ஆண்டுகளில் புத்தரின் செல்வாக்கு கிடைத்த மரியாதை பலருக்கு தாமும்  புத்தர்  ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது .

அதனால் தான் வரலாற்றில் பல புத்தர் வந்தார்கள் .

மட்டுமின்றி பிற்காலத்தில் தான் புத்த மத வேதங்கள் மஹா வம்சம் முதற்கொண்டு உருவானது.

இன்றைய புத்தமதத்திற்கும் புத்தருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

புத்ததில் முக்கிய கொள்கையே சிலைவணக்கம் கூடாது .

இதனால் பிற்காலத்தில் நிறைய புத்த அறிஞர்களுக்கு கருத்துவேறுபாடு வந்தது.

பலர் கொள்கைகளை வகுத்துக் கொண்டனர்.

எந்தெந்த கொள்கை?

வரலாற்றில் எத்தனை புத்தர்கள் வந்தனர் என்றெல்லாம் என்னுடைய பழைய பதிவில் எழுதியுள்ளேன் பார்க்கலாம்.

அப்படி ஒரு தனி கொள்கை தான் #தியானமார்கம்.

புத்த மதத்தில் உள்ள ஒரு பிரிவு தியானமார்கம் .

புத்ததிற்கு நிறைய விடயங்களில் நேரடி மோதும் இந்த தியானமார்கம் பிரிவில் தான்.

போதிதருமர் இருந்துள்ளார். .

இப்போது புரிந்து இருக்கும் போதிதருமர் ஏன் இந்தியா இலங்கையில் கூறும்படி  பிரபலம் ஆகவில்லை என்று. .

கூடுதல் தகவல்..

போதிதருமர் ஒரு தமிழர். இன்னும் நிறைய தமிழர்கள் போதிதருமர் காலகட்டத்தில் புத்ததில் இருந்துள்ளனர்.

அதில் முக்கியமானவர் , தஞ்சை தருமபால ஆசாரியர்.

போதிதருமர் அளவுக்கு கூட இவரைப்பற்றி யாரும் குறிப்பிடாமல் போனது பெரும் துயரம்.

இவரைப்பற்றி பேசுவோம் விரைவில்...

வேற்றுஉலக சித்தர்கள்...


இன்றைய விண்வெளிப் பயணத்தில் முக்கியமானது பயண சாதனம் வேகமும், காலமும். மற்ற ஒன்று திரும்பிவருவது..

ஆனால் 4000 ஆண்டுக்கு முன் தமிழ் சித்தர் திருமூல நாயனார் இந்த பிரபஞ்சத்தை சுற்றிவந்தார்.

இப்பிரபஞ்சம் 1008 அண்டம் கொண்டது என்று சொல்லியதுடன், அவரின் பிரபஞ்சப் பயணத்தை பதிவு செய்துள்ளார். உலகில் பிரபஞ்சப் பயணத்தை பதிவு செய்த முதல் விண்வெளிப் பயணி திருமூலர் . அவரின் அனுபவம் இன்றைய விண்வெளிப் பயணத்திற்கு உதவலாம் . பல சித்தர்கள் விண் வெளிப்பயணம் செய்துள்ளார்கள். ஆனால் அவர்களின் பயணப்பதிவுகள் நமக்கு கிடைக்கவில்லை.

இன்று வேற்றுகிரகவாசிகள் உள்ளார்களா அல்லது இல்லையா என்று விவாதிக்கிறோம் . திருமூல நாயனாரின் விண் வெளிப் பயணத்தில் அவர் சந்தித்த வேற்றுகிரகவாசிகளை பார்ப்போம்.

சித்தர்களின் உச்ச பட்ச சித்தி
கெவுணம் பாய்தல் என்ற
பிரபஞ்சபயணம் . அதற்குத் தயாரிப்பாக சிவயோகம் செய்து, காய சித்தி செய்து, உடலை ஒளி உடலாக மாற்றவேண்டும். இதனால் காலத்தை வெல்லலாம் மற்றும் கணக்கில்லா வேகத்தில் பயணிக்க முடியும். விண்வெளிப் பயணம் செய்ய சித்தர்கள் குளிகை என்ற சாதனம் செய்தனர்.

குளிகை என்பது பாதரசத்தை மூலப்பொருளாகக் கொண்டது. திரவ பாதரசத்தை அணுமாற்றம் செய்து, திடப்பொருளாக மாற்ற வேண்டும். அதன் பின் உலோகங்கள் ரத்தினங்கள்(உபரசங்கள் 120) பாசானங்கள் ஆகியவற்றின்  அணுக்களை (சத்து)  திடரூப பாதரசத்துக்குக் கொடுத்து (சாரணை) பாதரசத்தின் நிறையை தங்கத்தின் நிறைக்குச்  சமமாக கொண்டு வரவேண்டும்.

இவ்விதம் ஒருமுறை சாரணை
செய்தால் அந்தக் குளிகைக்குச் சகம்
என்று பெயர். பதினான்குமுறை சாரணை செய்தால் “ கமலினி “என்ற குளிகை ஆகும்.17 முறை சாரணை செய்தால் “ சொரூபம் ” என்ற குளிகை. கமலினியும், சொருபமும்
விண்வெளிப் பயணத்திற்கு பயன்படுத்தினார்கள்.

அண்டம் இருந்த அடவு சொன்னார் நந்தி தாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக .
ஒண்டிஇருந்தது  ஓடி நுழை என்றார்
கண்டி கமலினி காணீர் சொரூபமே
சொருபத்தை வாய்வைத்து சூட்டிக் கமலினி
அரூபத்தை ஜோதிபோல் அண்டம் நுழைந்திட்டேன்
நிருபத்த கற்பம் நிறையான யோகியும்
தரு வோத்த ஞான சதகோடி சித்தரே
சித்தரை கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன்
ஓதிய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்
அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன்
எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே- -----
திருமூலர் கருக்கிடை வைத்தியம்  பாடல் 353, 354

நந்தி என்ற அம்மையப்பனாகிய சிவன் பிரபஞ்சத்தைப்  பற்றி விளக்கிச் சொன்னார். இப்பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்கு கொண்டது ஒன்றை ஒன்று ஒட்டி இருந்தது. கமலினி என்ற குளிகையை உடலில் அணிந்தேன் . சொரூபம் என்ற குளிகையை வாயில் அடக்கினேன்.
அண்டவெளி உள்ளே நுழைய அண்டத்தின் வேகம் எனது வேகமும் ஒத்துப் போக வேண்டும். எனவே ஓடிவந்து அண்டத்துக்குள் நுழை என்று நந்தி சொன்னார்.


நான் ஒளி உடம்புக்கு மாறினேன். வேகமாக ஓடிவந்து அண்டத்துள் நுழைந்து விட்டேன். நான் நுழைந்த அண்டத்தில் கற்பம் உண்டு. ஞானத்தில் முதிர்ந்த கோடிக் கணக்கான சித்தர்கள்( அறிவியலார்) இருந்தனர் .

சித்தர் ஒருவரைக் கண்டு, அவருக்குப்  பணிவான வணக்கம் செய்தேன். அந்த  விண்வெளி சித்தர் என்னிடம் “எத்தனை வகைச்  சித்தி செய்து உள்ளீர்கள்? “என்றார்.

நான் ,” அறுபது கோடி சித்திகள் அடைந்து உள்ளேன் “. என்றேன்
அதற்கு அவர், “ இன்னும் நீங்கள் இளமையான சித்தர். மேலும் பல சித்திகள் செய்து பாருங்கள்” என்றார். எனவே நான் அங்கிருந்து வெளியேறினேன்.

என்றே நுழைந்தேன் அயலொரு அண்டத்தில்
கண்டேன்சிததரை கடிபதுமை போல .
தண்டே கை கூப்பினேன் தடவினேன் தட்டது
அண்ட  நிராகாரத்து அடைந்த பெரியோர் -------------------------பாடல் 356
பெரியோர் தனைகண்டேன் பேராய் வலம் வந்தேன்
நரியோ மௌனம் மென்று அப்பால் நுழைந்திட்டேன்
பரிவை அதுகொண்டு பாய்ந்து முடிஏறி
விரிவாம் அடுக்கில் விரைந்து நுழைந்தேனே. ------------------- பாடல் 357

அதன்பின் வேறு ஒரு அண்டத்துள் நுழைந்திட்டேன்.  அங்கு சித்தர்களைக் கண்டேன். அவர்கள் அசையாத பொம்மை போல் இருந்தார்கள்.  அவர்களைக் கைகூப்பி வணங்கினேன். தடவிப்பார்த்தேன். அவர்கள் தட்டுப்படவில்லை.

அவர்கள் நிராகாரன் என்ற கடவுள்நிலை அடைந்த பெரியவர்கள் என்று அறிந்தேன்.அவர்களை வலம் வந்தேன் . அவர்கள் மௌன யோகத்தில் இருக்கிறார்கள் என்று வியந்தேன். அந்த அண்டத்து உச்சிக்குச் சென்றேன். அதில் இருந்து, அடுத்த அடுக்குக்குள் விரைவாய் நுழைந்திட்டேன்..
நுழைந்திடில் அண்டத்தில் நூல்பார்த்த சித்தர்கள்
அழைந்திடு நூல்சொன்னது ஆர்தான் எனகேட்டேன்
தனஞ்செய வீசண் தாய்கண்டு சொன்னது
களைந் தேழு லட்சம் கரைகண்டு பார்த்தோமே ------------------பாடல் 358

பார்த்தோம் என்றிறே பராபர சித்தரே
கார்த்தே இந்நூல்தனை கண்டு சுருக்காததேன்
சேர்த்ததே சுருக்க சிவனாலும் கூடாது
மார்த்ததே உண்டாகில் மகத்துவம் சொல்வீரே------------------------பாடல் 359

சொல்லிடும் என்றீர் சுகஞான சித்தர்கள்
மல்லிய நந்தி தான் வைத்தர்கேள் ஆயிரம்
பல்லுயிர் பார்க்க பகர்ந்தேழு லட்சமும்
க்லலுயிர் வெட்டுபோல் காட்டினார் பார்த்திடே- -----------------------பாடல் 360

நான் நுழைந்த அண்டத்தில் சித்தர்கள் நூல்களை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் “ இந்த நூல்களை எழுதியது யார்” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் “ஈசன் பார்வதியிடம் சொன்ன எழு லட்சம் பாடல்கள். இவற்றை ஆராய்ந்து
பார்த்துவிட்டோம் “ என்றனர் .

அதற்கு நான் “ இறைவனுக்கு ஒப்பான சித்தர்களே !! ஆராய்ந்து பார்த்தோம் என்றீர்கள். அதை சுருக்காதது ஏன் ? “என்றேன்.

அவர்கள் “ இவற்றை சுருக்க ஈசனாலும் ஆகாது . அப்படி யாராகிலும் சுருக்கியிருந்தால் , அந்த மகத்துவமான நூல் பற்றி சொல்லுங்கள் “ என்றனர்.
நான் ‘நந்தி என்பவர் உலகில் பலஉயிர்கள் பார்த்துப் பயன் பெற எழுலட்சம் பாடல்களைச்  சுருக்கி ஆயிரம் பாடல்களாக எழுதி உள்ளார் . இது கல்வெட்டில் எழுதியது போன்று  தெளிவானது.

-தொடரும்...