22/06/2017

இந்த உலகத்தை ஆளும் அரச குடும்பத்தை பற்றி எனக்கு தெரிந்த உண்மைகள்...


பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே மறைந்து கொண்ட எஜமானர் இனம் தான்.

அந்த இரத்தகலப்பு நிகழாத தூய இனம்.

இவர்களே ஆதிகால உலகின் எஜமானர்களாக இருந்தார்கள்.

ஏனைய மனித இனங்களையெல்லாம் தமது அடிமைகளாக இவர்களே கட்டியாண்டார்கள்.

இவர்களே என்றென்றும் இந்த உலகை ஆள்வதற்குத் தகுதி பெற்றவர்கள்.

மேலும், இந்த குறிப்பிட்ட  இனத்தைச் சேர்ந்தவர்கள் மேன்மக்களாகவும், அறிவில் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்களாகவும், நம்மை விட மிகவும் உயரமானவர்களாகவும், நம்மை விட நீண்ட காலம் உயிர்வாழக் கூடியவர்களாகவும், நம்மை விடத் தொழினுட்பத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவுமே இருந்தனர்.

கடைசியாக பூமியின் மேற்பரப்பில் நிலவிய பணியுகத்திற்கு (Ice Age) முற்பட்ட காலம் வரை (கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களுக்கு முன்) இந்த எஜமானர்கள், பூமியின் வட துருவத்தை அண்டிய நிலப்பரப்புகளில் தான் வாழ்ந்து வந்தார்கள்.

அங்கிருந்து கொண்டு தான் மொத்த உலகையுமே ஆண்டார்கள்.

குறிப்பாக இன்றிருக்கும் கிரீன்லாந்து, சைபீரியா, ஸ்காண்டினேவியா (நோர்வே + ஸ்வீடன் + ஃபின்லாந்து + டென்மார்க்) ஆகிய நிலப்பரப்புகளை உள்ளடக்கியதாகவே அவர்களது சாம்ராஜ்ஜியம் வியாபித்திருந்தது.

பணியுகம் ஆரம்பித்ததும், இந்த அரச வம்சத்தவர்கள் மேலும் வடக்கு நோக்கி, அதாவது வட துருவத்தை நோக்கி இடம்பெயர்ந்தார்கள்.

இறுதியில் திடீரென்று எந்தத் தடயமும் இல்லாமல் மறைந்து விட்டார்கள்.

ஆனால் இவர்கள் அழிந்து போகவில்லை..

கிட்டத்தட்ட இதே போன்ற இன்னொரு கதை, வட துருவப் பிரதேசத்தை அண்டி வாழும் எஸ்கிமோ இனத்தவர் மத்தியில் கூட இன்று வரை பரவலாக நம்பப் படுகிறது.

எஸ்கிமோக்களின் நம்பிக்கைப் பிரகாரமும், முன்னொரு காலத்தில் உயர் குலத்தைச் சார்ந்த ஒரு மனித சமூகம் வட துருவத்தை நோக்கிப் புலம்பெயர்ந்து, இறுதியில் மறைந்து கொண்டார்கள் என்ற கூற்று பரவலாக கிராமப் புறங்களில் சொல்லப்படுகிறது.

அடுத்த பதிவு இன்னும் சிறிது நேரத்தில் இடப்படும். அதில் தமிழ்நாட்டுக்கும் இந்த இனத்திற்குமான சம்பந்தத்தை பதிகிறேன்.

தமிழ்நாட்டின் வரலாறு இதுவரை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கும்...

மாதவிடாய் நேரத்தில் பெண்களின் வாயிலிருந்து எந்த சாபத்தையும் வாங்கிவிடாதீர்கள்...அது அப்படியே பலிக்கும்...


அந்த நேரத்தில் நல்ல வார்த்தையை வாங்குங்கள்...

ஏனெனில் பெண் இயற்கையாக பலி கொடுக்கிறாள்... ஆண் அதை புரிந்து கொண்டு செயற்கையாக பலி கொடுக்கிறான்...

இதை தடுக்கதான் ஆளும்வர்க்கத்தால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு நோய்களை செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது...

பாலஸ்தீனத்தில் புலிகள்...


உங்களுக்கு பாலஸ்தீன விடுதலைத் தலைவர் திரு.யாசர் அராபத் அவர்களைத் தெரிந்திருக்கும்.

பாலஸ்தீன அரபுத் தந்தைக்கும் எகிப்து அரபித் தாய்க்கும் பிறந்தவர்.

எகிப்திலேயே வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குக்கூட போகாமல் நேராக தனது இனத்தை இனவெறி யூதர்களிடமிருந்து காக்க பாய்ந்தோடியவர்.

அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டில் ஆயுதவழியில் போராடி அதிபராக உயர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

அவருக்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?இருக்கிறது..

அவர் தலைவராக இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் (P.L.O) புலிகள் பயிற்சி எடுத்துள்ளனர்.

இதை ஏற்பாடு செய்தவர் ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பை (E.R.O.S) நிறுவிய திரு.இளையதம்பி இரத்தின சபாபதி ஆவார்.

இவர் இலண்டன் வாழ் ஈழத்தமிழர்.

பாலஸ்தீன விடுதலை அமைப்பைச் சேர்ந்த இங்கிலாந்துக்கான பாலஸ்தீனத் தொடர்பாளர் திரு.சையது அமீது அவர்களுடன் நட்பு ஏற்பட்டபோது,
அவருடன் பேசி தமது இயக்கத்திற்காக பயிற்சி தர ஏற்பாடு செய்தார்.

பிறகு 1976 மே மாதம் பெய்ரூட் சென்று பாலசுத்தீனப் போராளி திரு.அபு ஜேஹத் என்பவரை (இசுரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்டவர்) சந்தித்துப் பேசி  நேரில் பார்த்து விபரங்களை தெரிந்து கொண்டு
வவுனியாவிலும் சென்னையிலும் இயங்கிக் கொண்டிருந்த தமது இயக்கத்தினரையும், வவுனியாவில் ஈரோசுடன் கூட்டாக இயங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் குழுவையும் (அப்போது இயக்கத்திற்கு பெயர் இல்லை) லெபனானுக்கு அழைத்துச் சென்று பாலஸ்தீன விடுதலை இயத்தினரிடம் பயிற்சி பெறச் செய்தார்.

இந்தப்பயிற்சி 1976ன் பிற்பகுதியில் தொடங்கி 1977 முற்பகுதி வரை நடந்தது.

1983லும் புலிகள் மீண்டும் பாலசுத்தீனப் போராளிகளிடம் பயிற்சி பெற்றதாகவும் கூறுவர்...

இதே போல்.. தமிழ் இல்லங்கள் தோறும் தமிழ் முறைப்படி சமசுகிருதம் தவிர்த்து திருமணம் நடைபெற வேண்டும்.. வாழ்த்துகள்...


இது ஒரு ஆண்டி இந்தியன் மாடு...


பாஜக வும் டூபாக்கூர் வேலையும்...


நீங்கள் சிந்திப்பது உங்கள் சிந்தனையா?


நீங்கள் இதை யோசித்து இருக்கிறீர்களா?

அதாவது உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை உண்டு,
ஒவ்வொரு விதமான கருத்து உண்டு
உங்களுக்கு மிக பிடித்த ஒன்றுதான் யாரோ ஒருவருக்கு மிக பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. இனொருத்தர் ஒஸ்ட் உங்களது பெஸ்ட் ஆக இருக்கிறது.
ஆனால் பொதுவாக நீங்கள் சில விஷயத்தை போற்றுகிறீர்கள், சில விஷயத்தை தூற்று கிறீர்கள்.
சிலதை கொண்டாடு கிறீர்கள்
சிலதை வெறுகிறீர்கள்.
சில விஷயங்களை செய்வதில் பெருமை கொள்கிறீர்கள்,
சில விஷயங்களை செய்வதில் சிறுமை கொள்கிறீர்கள்.
உங்களுக்கென்று தனிப்பட்ட விருப்பம் தனிப்பட்ட ரசனை
அல்லவா.....

ஆனால்,

கொஞ்சம் யோசித்து பாருங்கள்..
நீங்கள்  எதை போற்ற வேண்டும் எதை கொண்டாட வேண்டும் எதை வெறுக்க வேண்டும் எதில் பெருமை கொள்ள வேண்டும் எதை சிந்திக்க வேண்டும் எதை அழகு என்று ரசிக்க வேண்டும் என்பதை எல்லாம் யாரோ நாலு பேரால் முடிவு செய்யப்பட்டதாய் இருந்தால்?

நாலு சுவற்றுக்குள் சில பெயரால் பக்கா ஸ்கெட்ச் போட்டு வரைபடம் வரைந்த மாதிரி உங்கள் ரசனைகளும் சிந்தனைகளையும் வடிவமைக்க பட்டிருந்தால்?

மிகுந்த திட்டமிட்டு நீங்கள் துளியும் உணராத... அது உங்களுக்கே உங்களுக்கு தோன்றிய எண்ணம் என்பதை போல உங்களை உணர செய்து உங்களை ஒரு 'சிந்தனை அடிமை 'யாக ஆக்கி இருந்தால்?

ச்சே ச்சே ..
அது எப்படிங்க சாத்தியமாகும்?
நாம யாரு ..நம்மள போய் 'சிந்தனை அடிமை'அது இதுன்னு ஏதோ புது வார்த்தை எல்லாம் சொல்லி கிட்டு.... என்று உங்களுக்கு தோன்றுகிறதா .
தொடர்ந்து படியுங்கள்.

ஒரு கோட் சூட் போட்ட டிப் டாப் டீசன்ட் ஆசாமி ரோட்டில் ஒரு இடத்தில காரை நிறுத்தி விட்டு ஒரு பெட்டி கடையில் சிகரெட் வாங்கி அடிக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள் .
அவரை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்?
இதில் பார்க்க என்ன இருக்கு .. நல்லா ஸ்டைலா கம்பீரமா சிகரெட் ஊதரார் அவ்ளோ தான் எனலாம்.

சரி இப்போ அதே ஆசாமி பெட்டி கடையில் ஒரு கடலை மிட்டாய் வாங்கி பகிரங்கமாய் ரோட்டில் சாப்பிட்டு கொண்டு வருகிறார் என்று வைத்து கொள்ளுவோம்.

அவரை ஒரு காமெடி பீஸ் போல ..அரை கிறுக்கன் போல பார்ப்போமா இல்லையா.. இப்போ சிந்தித்து பாருங்கள் கடலை மிட்டாய் சிகரெட்டை விட எந்த விதத்தில் தாழ்ந்தது? டாக்டர்கள் தினம் சாப்பிட சொல்லி சிபாரிசு செய்வது கடலை மிட்டாய். அதே டாக்டர் நிறுத்த சொல்லி அட்வைஸ் பண்ணுவது சிகரெட்.
அப்படி இருக்கையில் சிகரெட் அடிப்பவனை பந்தாவாகவும் கடலை மிட்டாய் சாப்பிடுபவனை தாழ்ந்தவனாக பார்க்கும் அந்த சிந்தனை இருக்கிறதே... அது உங்கள் சிந்தனை அல்ல உங்களிடம் திட்டமிட்டு பெரும் மல்டி நேஷனல் கம்பெனி பெரும் முதலாளிகளால் செலுத்த பட்ட ஒரு சிந்தனை.

முதல் முதலில் நம் நாட்டிற்கு சிகரெட் வந்த போது அதன் விற்பனை சுத்த சைபர்.
'இது என்ன ஐட்டம் பா இது  ஒரே நாற்றம் வீடெல்லாம் சாம்பல்.. இதை மனுஷன் அடிப்பானா' என்பது தான் இந்தியர்களின் சிகரெட் பற்றிய முதல் சிந்தனை.

அனால் அப்படி பட்டவர்களை சிகரெட் மோகத்திற்கு தள்ள அதன் கம்பெனி முதலாளிகள் பயன் படுத்திய வழிமுறை மிகவும் உளவியல் ரீதியானது. அது என்ன வழிமுறை தெரியுமா?

மிஸ்டர் A வை நீங்கள் பயமுறுத்த நினைக்கிறீர்கள் அவரை விட நீங்கள் உயர்ந்தவர் என காட்ட நினைக்கிறீர்கள் .  ஆனால் அந்த மிஸ்டர் A என்கிற ஆசாமி உங்களை ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை.. உங்களை பார்த்து பயபடுவதாவது  அதுக்கு வாய்ப்பே இல்லை .

ஆனால் மிஸ்டர் A என்பவருக்கு மிஸ்டர் B என்றால் மிகுந்த பயம்.

 அவரை கண்டால் மிரளுவார் என்று வைத்து கொள்ளுங்களேன் அப்படி இருக்கும் போது நீங்கள் ஒரு முறை மிஸ்டர் B யை தூக்கி போட்டு அடித்து பந்தாடி விடுகிறீர்கள் இப்போது என்னாகும் .?

தான் இவ்ளோ பெரிய ஆளாக மதித்த B யையே இவர் போட்டு அடித்து விட்டார் எனில் இவர் சாதாரண ஆள் இல்லை என்கிற எண்ணம் மிஸ்டர் A மனதில் தானாகவே பதிந்து விடும்.

கிட்ட தட்ட இதே உளவியலை தான் சிகரெட் ஓனர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் அதை எப்படி செய்தார்கள் தெரியுமா?

நாம் பெரிதாக மதிக்கும் நாம் தலைவனாக ...உயிராக கொண்டாடும் சினிமா நடிகனை காசு கொடுத்து பிடித்து முதலில் சிகரெட் அடிக்க வைத்தார்கள். சிகரெட் என்பது சாதாரணமானவர்கள் அடிப்பது அல்ல அது பெரிய பெரிய ராயல் மனிதர்கள் பயன் படுத்தும் பொருள். சிகரெட் அடிப்பது ஆண்மையின் அடையாளம் என்று விளம்பர படுத்தினார்கள்.
நம்ம நடிகனே அடிக்கிறான் என்றால் அது எப்பேர் பட்ட பொருளாய் இருக்கும் என்ற மாயை வலையில் மக்கள் விழுந்தனர்.

விளைவு...

அழுக்கு சட்டை கிழிந்த லுங்கியுடன் இருந்தாலும் சிகரெட் வாங்கி அடிக்கும் அந்த நேரத்தில் தன்னை ராயலாக உணர தொடங்கினான் குடிமகன்.
இன்று வரை அவன் புத்தியில் அந்த சிந்தனை மாறவில்லை.
எவனோ ஒருவன் 'ப்ராடக்ட் ' ஐ விற்பதற்காக தனக்குள் இந்த சிந்தனையை செலுத்தி இருப்பதை அவன் கடைசி வரை உணறுவதில்லை.

கோக் பெப்சி குடிப்பதை டீசன்ட் இன் அடையாளமாக பார்ப்பது இளநீர் என்பதை' லோக்கல் '  என்ற முத்திரையுடன் பார்ப்பது என்கிற சிந்தனை இருக்கிறதே ... அதுவும் உங்கள் சிந்தனையே இல்லை..
ஒரு பாட்டில் நிறைய கோக் தயாரிக்க ஆகும் செலவு வெறும் 20 பைசா தான் என்கிறார்கள். மீதி இருப்பது பூரா அதன் விளம்பர செலவுதான் என்கிறார்கள்.
நினைத்து பாருங்கள் ஒரு 20 பைசா பொருள் அது எந்த தரத்தில் இருக்கும் என்று.

அப்படி இருக்க இவ்வளவு தரக்குறைவான பொருளுக்கு நட்சத்திர  அந்தஸ்து வந்தது எப்படி?

சில முக பசைகள் 7 வாரங்களில் சிகப்பாக்குவது உண்மை என்றால் 7 வாரங்களில் தமிழ் நாட்டில் ஒரு கருப்பனும் இருக்க கூடாதே...
பசை தடவி நிரந்தர வெள்ளை ஆனவன் என்று ஒருத்தன் கூட நாட்டில் இல்லையே அதெப்படி?

ஆமாம் அதிருக்கட்டும் முதலில் சிகப்பு நிறம் என்பது அழகு என்றும் கருப்பு நிறத்தை அசிங்கம் என்றும் நினைக்க படும் சிந்தனை இருக்கிறதே அது நம்மிடையே எப்போ எப்படி யாரால் வந்தது?

நமது பழங்கால வரலாற்றில் எங்கேயும் நிற வேறுபாடு குறித்து கருப்பை குறைந்து மதிப்பிடும் குறிப்பு என்று எதுமே இல்லையே..

கண்னகி தொடங்கி கிருஷ்ணன் வரை கருப்பு நிறத்தை கொடுத்து மகிழ்ந்த நாம் சிகப்பை அழகு என நம்ப தொடங்கியது அழகு பசை விற்கும் அந்த முதலாளிகள் வந்த பின் தான்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் நம் நாட்டில் இருந்து எக்க சக்க உலக அழகி தேர்ந்தெடுக்க பட்டார்களே இப்போது ஒருவர் கூட தேர்ந்தெடுக்க படுவது இல்லையே அது ஏன் தெரியுமா ?
அந்த போட்டிகளை நடத்துவதே face creem ஒனர்கள் தான் உலக அழகிகளை தங்கள் ப்ராடெக்ட்க்கு விளம்பர மாடலாக குத்தகை எடுத்து இந்தியாவில் தாங்கள் கால் ஊன்று வது தான் பின்னணி நோக்கம் .இங்கே போதிய அளவு பிசினஸ் பிடித்த விட்ட பின் தனது பொருள் விற்கப்படாத வேறு நாட்டில் சென்று அங்கு உலக அழகி களை தேர்ந்தெடுக்க தொடங்கி விட்டார்கள்.

Lux என்பது நடிகைகளுக்கான சோப்பு என சொல்ல பட்ட போது அதை போட்டு குளிக்கும் பெண் தன்னை நடிகையாக பார்க்க தொடங்கினாள் சிகர்க்காயை கேவலமாக பார்க்க தொடங்கினாள்.

இந்த பெரும் முதலாளி எனும் முதலை வர்க்கம் நமக்குள் செலுத்திய எண்ணங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.
பிரிட்டிஷ் காரனிடம் நாம் விடுதலை வாங்கி விட்டதாக நம்பி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இன்னும் நாம் அவனுடைய சிந்தனைக்கு அடிமையாக தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தது உண்டா?

நமக்கு கல்வி முறையை கொடுத்த ஜான் மெக்லே அவர்களது நாடாளு மன்றத்தில் பேசிய உரை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம் " இந்தியர்களை எப்படி அடிமை படுத்துவது " என்ற கேள்விக்கு மெகளே பதில் அளிக்கையில் " இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தனது நாட்டின் கலாச்சாரத்தில் .. பண்பாட்டில் பெருமை கொண்டவனாக இருக்கிறான் . அவனை தங்களது கலாச்சாரம் தாழ்ந்தது என்று எண்ணவைக்காமல்... அவனை ஆங்கிலம் என்பது உயர்ந்த மொழி அவன் பேசுவது தாழ்ந்த மொழி ..என்ற கருத்தை அவனுக்குள் வெரூன்றாமல் இந்தியனை அடிமை படுத்துவது இயலாத காரியம்" என்றான்.

விளைவு ...

ஆங்கிலம் பேசுபவனை அறிவாளி என நம்ப தொடங்கினோம்.
தமிழ் பேசுபவன் தாழ்ந்தவனாக ..முட்டாளாக .. பார்க்கப்பட்டான். இன்னமும் ஆங்கிலம் பேசுவதை 'டீசன்ட்' என்ற முதிரையோடு பார்க்கிறது சமூகம்..
ஆங்கிலத்தில் பீட்டர் விடுபவனை இன்னுமும் பெண்கள் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கிறார்கள்.

உண்மையில் ஆங்கில மொழியில் உயர்வாக எண்ணுவதற்கு ஏதாவது இருக்கிறதா?

நீங்கள் தவறு செய்தால் சாதாரணமாக யாரிடமும் சாரி என்று சொல்லி விட முடியும்.  ஆனால் "என்னை மன்னிசிடுங்க  " என்று உங்களால் உடனடியாக சொல்லி விட முடியாது.
ஒரு  கெட்ட வார்த்தையை 'பாஸ்டர்ட்' என நாம் நாலு பேர் முன்னாடி சொல்லி விட முடியும் ஆனால் அதே பொருள் கொண்ட தமிழ் வார்த்தையை  அப்படி சொல்லி விட முடியாது..

காரணம் ஆங்கிலம் மிக மேலோட்டமானது தமிழ் மிக உயிரோட்டமானது.

'காக்கைகும் தன் குஞ்சு....'என்ற ரீதியில் எல்லாம் இல்லாமல் உங்களை ஒரு நடுநிலையாக வைத்து இந்த கையில் ஆங்கிலம் அந்த கையில் தமிழை வைத்து கொண்டு ... இரண்டையும் எடை போட்டு பார்க்க சொன்னால்...
இதில் உருவாகி உள்ள கலை இலக்கியம் அதில் உருவாகி உள்ள கலை இலக்கியம்..
இதில் உள்ள பெருமைகள் அதில் உள்ள பெருமைகள்....
இந்த மொழிகாக உயிரை விட்டவர்கள் அந்த மொழிக்காக உயிரை விட்டவர்கள்.
இந்த மொழி தோன்றி எத்தனை நாள் அந்த மொழி தோன்றி எத்தனை நாள் என்று எல்லாம் ஆய்ந்து பார்த்தால் ஆங்கிலம் தமிழுக்கு ஒப்புக்கு கூட நிகர் ஆகாது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அப்படி இருக்க ஏன் அதை நாம் அவ்வளவு கொண்டாடுகிறோம்?
நாம் கொண்டாடவில்லை ... கொண்டாட வைக்க பட்டுள்ளோம்.

அடுத்ததாக,

இந்த வண்டியில் பூட்டும் மாடு இருக்கிறதே அதை முதல் முதலில் நுகத்தடியில் தலை வைத்து கட்டுவதற்கு பழக கஷ்ட பட வேண்டும்.
அதுவே தினம் வண்டி ஓட்டும் மாட்டை கவனித்தது உண்டா... அது தளை களை கிட்டே கொண்டு போனாலே தன் தலையை தானே குனிந்து அதில் மாட்டும்..

அப்படி நம்மை 'சிந்தனை அடிமை' ஆக்கி சின்னா பின்ன படுத்திய கும்பல் ஒரு பக்கம் என்றால் நாமாகவே சென்று தலையை கொடுத்து அடிமையாகி கொண்டிருப்பது மறுபக்கம்...

எப்படி என்று சொல்கிறேன்..

இந்த பூமி பந்திலேயே மிக சிறந்த கலாச்சாரத்திற்கும் மிக சிறந்த பண்பாட்டிற்கு சொந்தகாரனான நாம் வெளிநாட்டு கலாச்சாரத்தை பெருமை என நினைத்து மாறி வருகிறோம்.
ஒரு ஹோட்டலில் எல்லோருடைய  வாய்க்குள்ளேயும் சென்று வரும் ஸ்பூனில் சாப்பிடுவதை  ,வெறும் நம் வாய்க்குள் மட்டும் சென்று வரும் நம் கையை கொண்டு சாப்பிடுவதை விட சிறந்ததாக எண்ணுகிறோம்.
தன் தோல் கருக்க வெள்ளைக்காரன் மணிக்கணக்கில் சூரிய ஒளியில் கிடக்க நாம் நம் தோல் சிவக்க ஆயிரம் பசை பூசுகிறோம்..

ஒரு நல்ல நாள் என்றால் அதில் விளக்கை அணைப்பது நமது கலாச்சாரமல்ல அது அபசகுணம். நல்ல நாளில் விளக்கை ஏற்றுவது தான் நம் பழக்கம்.

ஆனால் பிறந்த நாளில் மெழுகை ஊதி
அணைத்து நம்மை 'வெள்ளைக்கார துறை 'யாக உணர்கிறோம்.

இந்த அன்னையர் தினம் என்ற ஒன்று வருகிறதே... அடடா அன்னையை நினைத்து அன்னை செய்த நற்செயலுக்கு நன்றி சொல்லி ஆஹா எவ்ளோ சிறந்த ஒரு நாள் அது..

ஒன்று சொல்லுகிறேன்..

அன்னையர் தினம் கொண்டாடுவதை போல கேவலம் வேறு எதுவும் இல்லை.
அம்மாவை நினைக்க ஒரு நாள் இருந்துட்டு போகட்டுமே அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்.
தவறு மிக பெரிய தவறு.
தாயக்கு நன்றி சொல்லும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் இல்லை நாம் அதை விட மிக உயர்ந்த கலாச்சாரத்தை கொண்டவர்கள்.

ஒரு திருநாளில் புது துணி வாங்கி கொடுக்கும் அன்னையை பார்த்து யாரும் ரொம்ப நன்றி அம்மா என்று பாரதத்தில் சொல்லுவதில்லை .

ஆனால் இந்த தலைமுறை அதை செய்கிறது.

நமது கை இருக்கிறதே அது காலம் தோறும் நமக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது நமக்காக எவ்வளவு வேலை செய்கிறது .. எனவே நம் கை யை பார்த்து கை கு நன்றி சொல்ல சொன்னால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்.
 " இதென்ன பைத்தியக்கார தனம் அது நம்முடைய கை தானே அதுக்கு நன்றி சொல்வது முட்டாள் தனம் அல்லவா"  என்று நினைப்பீர்கள் அல்லவா... காரணம் நம் கையை நாம் நமது உடலில் இருந்து வேறாக பார்ப்பது இல்லை.

அப்படிதான் நம் தாயை நாம் நம்மிலிருந்து வேறாக பார்ப்பது இல்லை.
தான் வேறு அன்னை வேறு என்று நினைக்காத உன்னத கலாச்சாரத்தில் இருக்கும் இவன்.. வயது வந்த உடன் தாயை பிரிந்து விடும்... வருடத்திற்கு ஒரு முறை தாயை நினைவு கூறும் கீழான கலாச்சாரத்தை பார்த்து மயங்குகிறான் ...பாராட்டுகிறான் பின்பற்றுகிறான்.....

நேற்று.... நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கால போக்கில் காற்றில் விட்டு விட்டோம்...

இன்று அடுத்த அடி நமது பாரம்பரியத்தில் அடிக்க பார்க்கிறார்கள்
1000 கோடி பால் வியாபார பிசினஸ் ஐ கைப்பற்ற ஜல்லி கட்டு என்பது பசு வதை என்ற எண்ணத்தை திணிக்க பார்க்கிறார்கள்.

நம் தமிழ் மக்கள் சிசு வதை கூட செய்தது உண்டு ஆனால் பசு வதை செய்தது இல்லை.

இந்த விஷயத்தில்  கார்ப்பரேட் கெட்டவர்கள் இந்த சிந்தனை திணிப்பில் இன்று வரை வெற்றி பெற வில்லை என்பது ஆறுதல் அளிக்கும் உண்மை என்றாலும்...

நாம் ஆயிரம் விஷயத்தில் இன்னும் சிந்தனை அடிமையாக இருக்கிறோம் என்பது தான் கசப்பான உண்மை..

பாஜக மோடியும் மாட்டு வியாபார அரசியலும்...


உண்மையான கருத்து...


நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்...


அணு உலையால் ஏற்படும் ஆபத்து...


கர்நாடகாவில் ரூ 8,165 கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடி , முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு...


திராவிடலு பகுதி - 7...


திராவிடம் - இந்தச் சொல்லை நூறு வருடங்களுக்கு முன் ஒரு தமிழரிடம் கூறினால் அவர் புரியாமல் விழித்திருப்பார்.

ஆனால் இன்று அந்த சொல்தான் தமிழரை ஆண்டு வருகிறது. இந்த அதிசயம் எப்படி நடந்தது?

சரி இந்த 'திராவிடம்',என்கிற சொல் வேதங்களிலோ இலக்கியங்களிலோ காணப்படுவதில்லை. பிறகு எங்கிருந்து இந்த வார்த்தை முளைத்தது.அதற்கான விடையைத் தேடுவோம்.

திராவிடம் என்பது ஒரு தெலுங்குச் சொல்...

என்ன வியப்பாக இருக்கிறதா?

தெலுங்கு மக்கள் தமிழரைக் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்தினர்.

இதற்கான விளக்கத்தை முனைவர். எஸ்.செல்லப்பா இ.ஆ.ப அவர்கள் கொடுத்துள்ளார்.

தமிழ் உணர்வாளரான இவர் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவதில் வல்லவர்,
தெலுங்கு மக்கள் மத்தியில் பலகாலம் வாழ்ந்தவர்.

இவரது நீண்ட விளக்கமாவது,

A BRIEF NOTE ON THE WORD 'DRAVIDIAN'

A few years ago I made an in-depthstudy of certain root
words in Tamil language.
One of the words is ‘Dravidian’.
I couldnot publish that work due to myadministrative pre-occupations.

Traditionally Tamil scholars is of the viewthat this term “Dravidian”is of Sanskrit Origin.
They consider that the term Dravidian isderived from the word“Dramilam”.
If that be so, what, then, is theroot of Dramilam?
Thisled me to ponder over the root word for‘Dravidian’.
Thereafter Istarted reading a few original Telugu workssystematically and alsoconsidered the speaking language of theAndhras.

‘Aravam’, ‘Tamilamu’and ‘Dravida Basha’ are the three words usedby the Andhras to referto Tamil language.
Aravamu is used in thesense well-defined.
‘Dravida Basha’ is used only to connote toTamil language.

It was Robert Caldwell who extended thelinguistic area of ‘Dravidian’to include Malayalam, Kannadam, Telugu,Tulu, Brahmi etc.
Otherwise,the Telugus used the term Dravidam to meanonly Tamil language.
For example, Sri Krishna Devaraya, belongingto 15th Century A.D.wrote the great literary work“Amuktamalyada” in Telugu, uses the word“Dravida Kutumbi” (I:64) to refer to Tamil
families
Gurram Joshuva, another very renowned poet of 20th Centuryuses the term “Dravidia inhis famous poem “Gabbilam” to refer toTamil only.
Similarly P.Gopalreddy who did elaborate study on the Geo-physical concept of villagenames also uses the term Dravida basha torefer to Tamil.
At present, I am translating Gabbilam intoTamil language.
Joshuvauses “Dravida Bhumi” to refer to the Tamilland.

My curiosity did not stop here.
Is there anyconnection between
Dravida and Tamil?
After so much research,
I came to the conclusionthat Dravidam and Tamilam mean one andthe same.
Or Dravidam perhapsis a Telugu derivative of Tamilam and it isnot of Sanskrit origin,
assome Tamil scholars think.
Now we shall split the word Tamil into threeparts:
Tatmizh.
Incertain Telugu words ‘ta’ becomes “tra”.
1. Thadu > Thradu (rope)
2. Thova > Throva (way)

Hence the ‘ta’ in Tamil becomes “tra”, whichin turn becomes “Dra”,
which is quite common in Telugu language.

In Telugu language ‘ma’ becomes ‘va’ incertain words.
1. Mamidi > Mavidi (mango)
2. mama > mava (uncle)
3. bhumi > bhuvi (earth)

Hence the ‘mi’ in Tamil becomes ‘vi’ inTelugu.

Similarly Tamil ‘Zha’ becomes ‘da’ in Telugulanguage.
This is anaccepted linguistic rule.
Example:
1) Chozha > Choda (The Cholas)
2) Kozhi > Kodi (a hen)
3) Pazh > padu (waste, useless)
4) Keezh > Keedu  (harm)
5) Appozhudu > Appudu (then)
6)Ippozhudu > Ippudu (now)

To conclude, the term Dravidian is purely aTelugu word to refer toTamil language only.
This is in vogue even to-day amongst Teluguscholars.

As mentioned earlier, it was Robert Caldwell, who expanded the scope of the term Dravidian to includeother southern languages ina linguistic sense.
There is another soundreason for Caldwell to usethe term “Dravidian” to connote otherSouthern languages of India.

For Tamil was the only language amongSouthern languages with a long history of literature, grammar and originalityof its own.
Dr. S. Chellappa IAS .

சரி இப்போது விட்ட இடத்துக்கு வருவோம்.

ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த திராவிடக் கருத்தியலை சிறிது திருத்தங்களுடன் பரப்புரை செய்த ஆங்கிலேயர்.

அதற்கான ஆதரவு நன்கு பெருகியதும் சரியான நேரம் பார்த்து திராவிடத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

சர்.அலெக்சாண்டர் கார்டியூ இவர் 1916-ல் 'கவர்னர் நிர்வாக கவுன்சில்' உறுப்பினராக இருந்தவர்.

இவர் 1913- ல் 'இந்திய நிர்வாகக் கவுன்சில'  முன்பு சாட்சியமளித்தார்.

அதில் தமிழ்ப் பிராமண ஆதிக்கம் பற்றி விபரமாகக் கூறினார்.

அப்புள்ளிவிபரம் பின்வருமாறு..

இந்தியன் சிவில் சர்வீசுக்கென இந்தியாவிலும் இங்கிலாந்திலும் தேர்வுகள் வைக்கப்படுகின்றன.இதில் பிராமணர்களே முழுவதும் தேர்ச்சியடைந்து வருகின்றனர்.1892 முதல் 1904 வரை நடைபெற்ற தேர்வுகளில் 16 ல் 15 பிராமணர் ஆவர். இது 95% ஆகும்.

சென்னை மாகாணத்தில் உதவிப் பொறியாளர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்ட போது 20 ஆண்டுகளில் பிராமணர் 17 பேரும் பிராமணரல்லாதோர் 4 பேரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

கணக்குத் தணிக்கைத் துறைத் தேர்வுகளிலும் இதேநிலை இருந்து வருகிறது.

சென்னைமாகாண 'உதவி கலெக்டர்' பதவிக்கான 140 இடங்களில் பிராமணருக்கு 77 இடங்கள்; பிராமணரல்லாதோருக்கு 30 இடங்கள்;
ஏனைய கிறித்துவர், முகம்மதியர், ஐரோப்பியர், ஆங்கிலோ- இந்தியருக்குக் கிடைத்தன.

1913 ல் மாவட்ட நடுவர்களுக்குரிய 128 நிலையான இடங்களில் பிராமணர் 93 இடங்களுக்கும், பிராமணரல்லாதோர் 25 இடங்களுக்கும், இந்திய கிறித்துவர், ஐரோப்பியர்,ஆங்கிலோ-இந்தியர் ஆகியோர் எஞ்சிய இடங்களுக்கும் நியமிக்கப்பட்டனர்.

இத்தகவல்கள் உண்மையானவையே.

இதைப்பார்க்கும் போது பிராமணர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது தெளிவாகிறது.

இதில் கூறப்பட்டுள்ள விபரங்களில் உதவிப்பொறியாளர் மற்றும் உதவி கலெக்டர் பற்றி இருக்கிறதே தவிர தலைமைப்பொறியாளர் மற்றும் தலைமை கலெக்டர் பற்றி எதுவும் இல்லையென்பதை நொக்குக.

இவை அக்காலத்தில் இந்தியருக்கு ஒதுக்கப்படவில்லை, முழுதும் ஆங்கிலேயரே இருந்தனர்.

ஆங்கிலேயர் என்னதான் இந்தியருக்கு உரிமைகளை அளித்தாலும் அதில் குறிப்பிட்ட வகுப்பினரே ஆதிக்கம் செலுத்துவர், அதனால் ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்டு இருப்பதே அனைத்து வகுப்பினருக்கும் நல்லது என்று மறைமுகமான அறிவித்தல் இது.

தவிர பிராமண ஆதிக்கம் குறைந்திருந்த புள்ளிவிபரங்கள் மறைக்கப்பட்டன.

இதன் மூலம் பிராமணரல்லாத மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதாகக் காட்டிக்கொண்டனர்.

அதாவது கிறித்துவரும் முகம்மதியரும் தனி ஒதுக்கீடு பெற்றிருக்க பிராமணரல்லாத இந்துக்களை பிராமணர் ஒடுக்குவதாகக் காட்டி அதன்மூலம் பிராமணரல்லாத இந்துக்கள் அமைப்பை உருவாக்கி தமக்கு ஆதரவாக தமது நிழலில் வைத்துக்கொள்ளத் திட்டமிட்டனர்.

ஆம், கடைசியில் அதுதான் நடந்தது.

1916 ல் ஆங்கிலேயரின் செல்லக்குழந்தையாக முதல் திராவிடக்கட்சியான  'நீதிக்கட்சி' பிறந்தது.

இதைத் தொடங்கியவர் மலையாளியான டாக்டர்.டி.எம்.நாயர், மற்றும் தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர்.பி.டி.தியாகராச செட்டியார்.

இவர்கள் இருவருக்கும் அக்கட்சியைத் தொடங்க என்ன அவசியம் இருந்தது?

இவர்களின் பின்புலம் என்ன?

திராவிடம்  தமிழருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், பிறமதத்தினருக்கும் ஏதாவது ஒரு  நன்மையாவது செய்ததா?

- தொடரும்...

தினகரன் மாபியா கும்பல் தான் எந்த மாற்று கருத்தும் இல்ல...


ஆனால் எதுலயும் நியாயம்னு ஒன்னு இருக்கா இல்லையா..

உத்தமர் ஒ . பி எஸ் அணியை  சேர்ந்த சரவணனின் sting operation வீடியோ வெளி வந்து ஒரு வாரம் ஆகுது ஆனா இதுவரை பெருசா எந்த  ஒரு நடவடிக்கையோ.. ஏன் நம்ம  தமிழிசை அக்கா டர்ம போராளி ராஜா போன்றோர்  ஒரு கருத்து  கூட  சொல்லலையே.. ஏன்.?

பாஜக வும் ஏமாற்று வேலையும்.. தமிழக மக்களே உசார்...


பாஜக கும்பலின் பணம்பறிப்பு அயோக்கியத்தனம்...

மத்திய அரசின் வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டித் தருகிறோம் என்ற பெயரில்..

தமிழர் விரோத பாஜக கும்பலின் அலுவலகங்களுக்கு மக்களை ஏமாற்றி வரவழைத்து, விண்ணப்ப படிவத்திற்கு 250 ரூபாய் முதல் 500 ரூபாய்   கட்ட வேண்டும் எனக் கூறி வழிப்பறி கொள்ளை நடத்தி வருகிறது..

மேலும் வீடு கட்டித் தருகிறோம் என்ற பெயரில் நிரப்பப்படும் படிவம் என்ற பெயரில் பாஜக உறுப்பினர் படிவத்தை கொடுத்து.. அப்பாவி மக்களை அயோக்கியத்தனமாக ஏமாற்றி வருகிறது..

மேலும் இந்த வீடு கட்டித்தரும் திட்டத்தின்படி 2022 இல் தான் வீடு கட்டித்தரப்படும். அப்படி உங்களுக்கு வீடு வேண்டுமென்றால் வரும் 2019 தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக பல சீட்டுகள் வெல்ல வேண்டும், அப்போது தான் வடநாட்டு தலைமையிடம் பேசி உங்களுக்கு வீடு ஏற்பாடு செய்ய முடியும், ஆகவே நீங்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என மக்களின் வறுமையை பயன்படுத்தி இந்த கேடுகெட்ட வேலையை செய்து வருகிறது..

அதுமட்டுமின்றி வீடு கட்டும் திட்டத்தின்படி 2022 ஆம் ஆண்டு 5 லட்சம் தரப்படும், அதில் கண்டிப்பாக உங்கள் பெயரில் வர வேண்டும் எனில், அதில் 10 சதவீத பணமாக 50,000 ரூபாய் கொடுத்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என சில இடங்களில் 420 வேலைகளிலும் பாஜக கும்பல் ஈடுபட்டு வருகிறது..

இந்த பித்தலாட்ட வேலைக்கு.. இந்து முன்னணி,, இந்து மக்கள் கட்சி போன்ற கும்பல்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க பின்புலமாக செயல்பட்டு வருகிறது..

தமிழக மக்களே...

தமிழனின் விவசாயத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றம் சொல்லியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பவன்..

தமிழனிடம் வரிப்பணத்தை கொள்ளை அடித்து, அதே தமிழன் வறட்சியில் வாடும் போது, வளர்ச்சி நிவாரண நதியை தர முடியாது சாகுங்கள் என்பவன்..

42 நாட்கள் தமிழிக விவசாயிகள் டெல்லிக்கே சென்று, சோறு தண்ணி இல்லாமல் நிர்வாணமாக போராடியும் கண்டு கொள்ளாதவன்..

இந்தியை, சமஸ்கிருதத்தை திணித்து  மொழியை அழிக்க துடிப்பவன்..

ஓரு நாடு நன்றாக இருக்க தமிழ்நாட்டை அழிக்கலாம் என வெளிப்படையாக பேசுபவன்..

இப்படிப்பட்ட தமிழன விரோதி நமக்கு வீடுகட்டி தருவான் என அவனிடம் பணத்தை பறிகொடுப்பது அறிவுடைமை ஆகுமா?

சிந்தியுங்கள்...

நம்ப முடியாத உண்மைகள்...


கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதை எண்ணி வருத்தப்படும் தமிழர்களே...


தமிழ்நாடே அழிவு திட்டங்களால் நாளை அழியப்போகிறது, நீ அழிய போகிறாய் அதற்காக கொஞ்சம் கவலைப்படு..

காவிரி போராட்டத்தில் தோற்றோம்..
தண்ணீர் இல்லாம் பல நூறு விவசாயிகள் இறந்தார்கள்
அதற்காக கொஞ்சம் கவலைப்படு..

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடினோமே அதிலும் தோற்றுப்போனோம்.. அதை கண்டு கொள்ளாமல் எண்ணெய் அகழ்கிறார்கள், அதற்காக கொஞ்சம் கவலைப்படு..

நாம் வெற்றி பெற வேண்டிய இனத்திற்கான லட்சிய கனவுகள் பல உள்ளது அதில் இன ஒற்றுமையின்றி தோற்றுக்கொண்டிருக்கிறோம் அதை வென்றெடுக்க உறுதியெடு...

ஆமா அமைப்பு சரியில்லை... அதை மாற்ற தான் ரசினியை எதிர்கிறோம்...


இலுமினாட்டி அமெரிக்காவே உலக பயங்கிரவாதி நாடு...


கூடங்குளத்தில் 5,6 வது அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில்...


அணு உலைப் போராட்டத்தின் மீதும், தோழர் உதயகுமார் மீதும் அவதூறு பரப்பும் வேலையினை இந்திய பாஜக அரசும், இந்துத்துவ கும்பலும் துவங்கியுள்ளன.

Republic Tv எனும் பாஜக-வின் பாராளுமன்ற உறுப்பினரான ராஜீவ் சந்திரசேகர் முதலீட்டில் நடத்துகிற ஊடகத்தின் மூலமாக இந்த வேலையினை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
கூடங்குளத்தில் 5வது மற்றும் 6 வது அணு உலைகளுக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு மட்டும் 50,000 கோடி (இது கட்டுமானத்தின் போது இன்னும் அதிகரிக்கலாம்). ஒவ்வொரு திட்டத்தின் போதும் அதன் மதிப்பில் 30 முதல் 40 சதவீதம் அதிகாரவர்க்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் சென்று சேர்கிறது. அதாவது 15,000 கோடி ரூபாய் ஆளும் வர்க்கத்தினருக்கு கையூட்டாக சென்று சேர்கிறது. ரஷ்ய கம்பெனிகளிடம் இருந்து பெறும் இத்தனை பெரிய லாபத்தினை ஆளும்வர்க்கம் மக்கள் நலனுக்காக விட்டுக் கொடுக்குமா என்ன?
அந்த கையூட்டிற்காகத் தான், இந்தியாவில் அணு உலைகளுக்கு எதிராகவும், அழிவுத் திட்டங்களுக்கு எதிராகவும் நிகழும் எளிய மக்களின் போராட்டத்தினை வெளிநாட்டுத் தூண்டுதலில் நடக்கும் போராட்டம் என்றும், கிறித்துவ மதம் சார்ந்த போராட்டம் என்றும் கொச்சைப் படுத்தி, அந்த போராட்டங்களின் மீதான மக்களின் பார்வையை திசை திருப்பும் வேலையினில் அர்னாப் கோசாமி என்ற மூன்றாம் தர ஊடகவியலாளரை வைத்து இறங்கியிருக்கிறது பாஜக அரசு.

உதயகுமாரிடம் spy camera வைத்து பதிவு செய்யப்பட்டதாக Republic TV வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில் எந்த அடிப்படையும் இல்லை. பணம் அனுப்புவதென்றால் வெளிப்படையாக கட்சியின் கணக்கிற்கு அனுப்பலாம். அதற்கு ரசீதினை தருகிறோம். வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதில்லை. அப்படி உங்கள் நண்பர் அனுப்ப விரும்பினால், இந்தியாவிலிருக்கும் அவரின் உறவினர் அல்லது நண்பர் மூலமாக அளிக்கலாம் என்று குறிப்பிடுகிறார். இந்த காணொளியினை ஒரு ஆதாரம் என்று சொல்லிக் கொண்டு, உதயகுமார் என்ற தனிப்பட்ட மனிதரை முன்னிறுத்தி மொத்த அணு உலை எதிர்ப்பு போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்த கும்பல். உதயகுமாரை முன்வைத்தும் கூட ஊழலின் ஆதாரமாக எதையும் முன்னிறுத்த முடியாததால், வெட்டி ஒட்டும் படத்தொகுப்பு வேலையினை sting operation என்ற பெயரில் செய்திருக்கிறார்கள்.
அந்த வீடியோவைச் சுற்றி, எச்.ராஜா பாணியில் Anti National கூச்சல்களை நிரப்பி ஒரு Super Exclusive நாடகத்தினை பாஜகவினர் உருவாக்கி உள்ளனர்.
கூடங்குளம் அணு உலைப் போராட்டம் என்பது தமிழ்நாட்டின் அனைத்து ஜனநாயக இயக்கங்களின் ஆதரவுடன் நடந்த மக்கள் போராட்டம். அது எளிய மக்கள் தங்கள் தினசரி வருமானங்களை இழந்தும், சுழற்சி முறைகளில் வேலை செய்தும், பெண்கள் போராட்டப் பந்தலில் அமர்ந்து பீடி சுற்றும் தொழிலை மேற்கொண்டும் நடைபெற்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகரப் போராட்டம். உழைக்கும் மக்களின் உறுதியினாலேயே ஒரு ஆண்டைக் கடந்து இந்த போராட்டம் நடைபெற்றது.

வெறுமனே உணர்ச்சிகரமான போராட்டமாக இல்லாமல், அணு உலைகளின் பாதிப்பு குறித்த அறிவியல் பூர்வமான விவாதத்தினை இந்தியா முழுக்க உருவாக்கியது. இந்தியாவின் அனைத்து செயல்பாட்டாளர்களும் இடிந்தகரை மண்ணை மிதித்து சென்றிருக்கிறார்கள்.

அணு உலை எதிர்ப்பு ஏதோ இந்தியாவில் மட்டும் நடைபெறுவதைப் போலவும், அதைச் செய்பவர்கள் தேச விரோதிகள் என்றும் பாஜக கும்பல் பரப்பி வருகிறது. அணு உலை எதிர்ப்புப் போராட்டம் என்பது உலகின் அனைத்து நாடுகளிலும் நடைபெறும் போராட்டம். பல நாடுகள் அணு உலைகளின் ஆபத்தினை உணர்ந்து அணு உலைகள் அமைக்கும் திட்டத்தினை கைவிட்டிருக்கின்றன. அணு உலை எதிர்ப்புப் போராட்டம் என்பது சுற்றுச் சூழல் காக்கும் போராட்டம், மனித இனத்தினை காக்கும் போராட்டம். அப்படிப்பட்ட இந்த போராட்டத்தினை இந்திய அதிகாரவர்க்கமும், பாஜகவும், காங்கிரசும் கொச்சைப்படுத்துவதன் நோக்கத்தினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தென் தமிழ்நாட்டினை அணு உலைப் பூங்காவாக மாற்றுவது, இந்தியா முழுவதிலும் பல்வேறு எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அணு உலைகளை நிறுவுவது போன்ற மிகப் பெரிய அழிவுத் திட்டத்தினை இந்திய அரசு வைத்திருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ரசியா என பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று அணு உலை ஒப்பந்தங்களைப் போட்டு இந்திய மக்களை அடகு வைக்கும் வேலையினை மோடி செய்து வருகிறார். அணு வர்த்தகம் என்பது பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடி லாபத்தினை அள்ளித் தரும் வர்த்தகம். மக்கள் நலன் என்ற பெயரிலோ, சுற்றுச் சூழல் என்ற பெயரிலோ இந்த வர்த்தகத்திற்கு அடி விழுவதை பார்ப்பனியமும், கார்ப்பரேட்டுகளும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

கூடங்குளம் அணு உலைப் போராட்டம் இந்தியா முழுதும் உள்ள தேசிய இன மக்களுக்கு அணு உலைகளின் ஆபத்துகளை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளதால் அந்த போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது பாஜக கும்பல். இந்தியா முழுதும் வரப் போகும் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தினையும், மீத்தேன் எதிர்ப்பு, கனிம வள சுரண்டல் எதிர்ப்பு போராட்டங்களையும் வெளிநாட்டுக் கைக்கூலிகளின் போராட்டம் என முத்திரை குத்துவதற்கான வேலையினைத் தான் உதயகுமார் மற்றும் கூடங்குளம் போராட்டத்தின் மீதான இந்த அவதூறுகள் வழியாக துவக்கியுள்ளனர்.

போராடுகின்றவர்களை தனிமைப்படுத்தி, எளிய மக்களின் போராட்டங்களை அவதூறுக்கு உள்ளாக்கி, மக்களை உளவியல் ஊனத்திற்கு உட்படுத்தும் அயோக்கிய முயற்சியே இது.

இந்தியாவின் கனிம வளங்களை சுரண்டி பழங்குடி மக்களை ஒடுக்கும் வேதாந்தா என்ற வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து பாஜக தொடர்ச்சியாக பணம் வாங்கியிருக்கிறது. அது குறித்துப் பேசுவதற்கு Republic Tvயோ, அர்னாப் கோசாமியோ தயாராக இருக்கின்றனரா?

மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பணம் கொடுத்தவர்கள் யார் என்று இந்த அயோக்கிய ஊடகங்கள் விவாதம் நிகழ்த்தியிருக்கிறதா?

Republic TV யின் முதலீட்டாளரான ராஜீவ் சந்திரசேகர் 9 வெளிநாடுகளில் தனது நிறுவனத்தை நடத்தி வருகிறார். Republic TV யின் முதலீட்டில் போடப்பட்ட பணம் எந்த நாட்டிலிருந்து வந்த பணம்?

மோடி ரஷ்யா சென்று 5 மற்றும் 6 வது அணு உலைகள் ஒப்பந்தம் போட்டு வந்த நிலையில் இன்னொரு போராட்டம் அங்கு துவங்கி விடக் கூடாது என்பதற்காக ரஷ்ய கம்பெனியிடம் பணம் வாங்கி இந்த சூழ்ச்சியினை அர்னாப் கோசாமியின் வாயிலாக நிகழ்த்தியிருக்கிறது பாஜக கும்பல்.
தொடர்ச்சியாக மக்கள் உரிமைகளுக்காக போராடி வரும் செயல்பாட்டாளர்களை மூர்க்கத்தனமாக முடக்கும் வேலையில் பாஜகவின் பார்ப்பனிய கும்பல் ஈடுபட்டுள்ளது. பின்வாசல் வழியாக நுழைந்து தமிழ்நாடு அரசை தனது பினாமியாக மாற்றும் அளவிற்கு பாஜகவின் அயோக்கியத்தனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு செயல்பாட்டாளர்கள் தேசிய பாதுகாப்பு சட்டம், தேச விரோத சட்டம் போட்டு கைது செய்து கொண்டிருக்கிறது. உண்மையைப் பேசும் ஊடகங்களையும் முடக்கி அவர்களை செயல்படவிடாமல் அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்தான் மக்கள் இயக்கங்களாகிய நாம் பார்ப்பனிய பாஜக கும்பலின் இந்த அயோக்கியத்தனங்களுக்கு எதிராக ஒற்றைப் புள்ளியில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது.

போராட்டங்களை தனிநபர்களையோ, ஊடகங்களின் செய்திகளையோ முன்வைத்து ஆராயாமல், போராட்டத்தின் மைய அரசியல் முழக்கங்களையும், கோரிக்கைகளையும் வைத்து ஆராய்வோம்.

அணு உலைகளை எதிர்த்திடுவோம்!
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் போடப்பட்ட அணு உலை மற்றும் அணு ஆயுத ஒப்பந்தங்களை திரும்பப் பெறு!

அயோக்கியத்தனமாக இழப்பீடு மசோதாவினைக் கைவிடு..
அணு ஆயுதப் பெருக்கலை எதிர்த்திடுவோம்...