08/05/2018

உன் தாய் நாடான தமிழ் நாட்டில், தமிழா உன் உரிமை எங்கே ?


கேரளா அரசு பணியாளர் தேர்வாணையம் (Kerala puplic service commision) நடத்திய தேர்வில் அங்கு வாழும் மாற்று இனத்தவர்கள் தேர்வு எழுத கேரளா அரசால் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மலையாளி மொழியை திறம்பட கற்றறிந்து , பல தலை முறையாக கேரளாவில் வாழ்ந்து வரும் தமிழருக்கு, கேரளா அரசு ஊழியராகும் தகுதி இல்லை என கேரளா அரசு கூறியுள்ளது .

பல தலை முறையாக இங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்கள் மலையாளிகள் அல்ல என்று கூறி கேரளா அரசு மாற்று இன மக்களுக்கான உரிமையை மறுத்துள்ளது.

நடுவண் அரசு தொடர் வண்டி தேர்வு எழுத, 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்ற ஆண்டு ஆந்திராவிற்கு சென்றனர். ஹைதராபாத்தில் நடந்த தேர்வு மையத்தில் தெலுங்கர்களால் தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

காரணம், ஆந்திராவில் உள்ள நடுவண் அரசு வேலை வாய்ப்பு தெலுங்கர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் மாற்று இனத்தவருக்கு கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஆந்திர அரசு காவல் துறை ஆதரவுடன் தமிழர்கள் கடுமையாக தாக்கப் பட்டனர்.

இன்று வரை குற்றவாளிகளின் மீது சிறு வழக்கு பதிவு செய்ய ஆந்திர அரசு மறுத்து விட்டது.

கர்நாடகாவிலும், தமிழருக்கு அரசு வேலை வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கூறி வழக்காடு மன்றம் வரை சென்று கர்நாடக அரசு வாதிட்டது. கன்னடத்தவருக்கே முன்னுரிமை கன்னடதவருக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு என்பதில் கன்னட அரசு இன்று வரை உறுதியாக உள்ளது. செயல்படுத்தி வருகிறது.

தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் அரசு வேலையை பெறலாம் என்ற முறையை இங்குள்ள திராவிட அரசுகளால் நடை முறை படுத்தப்பட்டு வருகிறது.

பத்து ஆண்டுக்கும் முன்பு குடியேறிய வட இந்தியர்கள் கூட, தமிழக அரசு ஊழியராக பணி ஆற்றுகின்றனர்.

அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில், வளம் மிகுந்த பதவிகளில் 70 விழுக்காடு மாற்று இனத்தவரே பணி புரிகின்றனர்.

இவர்கள் பெரும் பாலும் தமிழர்களுக்கு எதிராக தன் இன மக்களுக்கு ஆதரவாகவே இன்று வரை செயல் பட்டு வருகின்றனர்.

குறிப்பாக காவல் துறைகளில் பணி புரியும் திராவிடர்களால் தமிழர் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன.

50 ஆண்டு கால திராவிட ஆட்சியில், தமிழர் என்ற போர்வையில் இங்குள்ள திராவிடர்களால் அரசு வேலையை பறித்து விட்டனர்.

மலையாளிகளும், தெலுங்கர்களும், கன்னடர்களும், வட இந்தியர்களும் அரசு துறையில் ஊடுருவியதால் இன்று தமிழர் நாட்டின் அசைக்க முடியாத ஆற்றலாக வளர்ந்து விட்டனர்.

தமிழ் நாட்டை ஆளும் அரசு மற்றும் அதிகாரிகள் வர்கதினரே மாற்று இனத்தவர்தான்.

அரசு துறையில் ஒருவர் பதவியேற்றால் அவர்களை 40 ஆண்டு வரை தமிழர் நாட்டின் தலை விதியை எழுதும் வல்லாதிக்கர்கலாக மாறுகின்றனர்.

இந்த நிலை ஒழிக்க பட வேண்டும் .
நமது அண்டை மாநிலங்களில் (கேரளா ஆந்திரா கர்நாடகா ) அந்த மாநில மண்ணின் மைந்தர்களை தவிர வேறு யாரும் அரசு பதவியை பெற முடியாது என்று அந்தந்த மாநில அரசுகளே சட்டம் இயற்றி செயல் படுத்தி வருகிறது.

தமிழ் நாட்டை ஆளக் கூடியவர்கள், தமிழர் அல்லாதவர்களாக, திராவிடர்களாக இருப்பதால், அவர்கள் தங்கள் திராவிட மக்களுக்கும், மாற்று இன மக்களுக்கும் ஆதரவாக செயல் பட்டு வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால், இவர்களை தொடர்ச்சியாக ஆள விட்டால் இங்குள்ள திராவிட மாற்று இன மக்களிடம் கையேந்தி பிச்சை கேட்கும் நிலைக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவார்கள்.

தமிழக தமிழர்களையும், தமிழீழ தமிழர்களையும் காக்க, தமிழர் நாட்டையும், தமிழீழத்தையும் மீட்க, தமிழர் நாட்டை தமிழர்களே ஆள வைக்க திராவிடத்தை வீழ்த்த வேண்டும் .

திராவிட கொள்கையை வீழ்த்துவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

யார் ஆள வேண்டும் என்பதை விட தமிழர் அல்லாதோர் ஆள கூடாது என்பதில் உறுதியாக இருந்து செயல் படுவோம்.

திராவிடம் என்ற ஆலமரத்தை அடியோடு வீழ்த்த நான்கு இன மக்களுக்கான பெரியாரின் திராவிட கொள்கையை வேரறுப்போம்..

திராவிட போர்வையில் இருக்கும் ஆரிய கும்பலை கருவருப்போம்...

தனிமனித தகவல் திருட்டு...






தகவல் வியாபாரம்.. முகபுத்தகம்.. டெக்னாலஜி.. டிஜிட்டல் இந்தியா...

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..


லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்.

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்...

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்...


1960ல் ஆஸ்த்திரேலியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மண்வாசனைக்கான (Earthy Smell) காரணத்தை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய சேக்கிழார் (Botany science)...


நன்கு மழை பெய்வதற்கு முன் நம்மால் மண்வாசனையை நன்றாக உணர முடியும். அந்த வாசனை மண்ணில் வந்துக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது தவறு.

மரங்களில் பூக்கும் பூக்கள் வெளியிடும் நறுமன எண்ணையின் கலவைதான் அந்த வாசனை. இதை என்ன அழகாக சேக்கிழார் உவமையுடன் கூறுகிரார்.

நனைமருவும் சினை பொதுளி
நறுவிரைசூழ் செறிதளிரில்
நினகரமண் டலம் வருடும்
செழுந்தருவின் குலம்பெருகிக்
கனம் மருவி அசைந்தலையக்
களிவண்டு புடைசூழப்
புனல் மழையோ மது மழையோ
பொழிவு ஒழியா பூஞ்சோலை.

பெரிய புராணம்; திருநாளைப் போவார் நாயணார் புராணம்: 1048.

பொருள்: மலரும் அரும்புகளின் நறுமனம் சூரிய மண்டலத்தை வருட, செழுமையான மரங்கள் வானுயர்ந்து மேகங்களை தழுவ, தேன் உண்ணும் வண்டுகள் யாவும் ரீங்காரமிட பெய்யும் மழை தேன் மழையோ, மது மழையோ என்று சுவைத்திட பூஞ்சோலைகள் எங்கும் பூத்துக் குலுங்குகிறது.

அறிவியல்: சில மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில்தான் மழை வளம் அதிகம் இருக்கும். அது எத்தகைய மரங்கள்? எனில் அதிக நறுமனத்தை தரும் பூக்களுடைய மரங்கள் இருக்கும் இடம். அதாவது புங்கை, சந்தனம், ஆலம், போன்றவை. இவ்வகையான மரங்கள் ஒரு வகையான நருமன எண்ணெயை (petrichor) வெளிவிடும். அந்த எண்ணெய் மழை பெய்யும் முன் வரும் நீர்த்தன்மையுள்ள காற்றில் கலந்து மண் வாசனையாக வெளிப்படுகிறது. இந்த வாசனையானது காற்றில் பயனிப்பதால் நெடு தூரத்திற்க்கு பயணிக்க வல்லது.

ஆதலால் மழை வளத்தை பெறுகும் இவ்வகையான மரங்களை வீதிகள் தோறும் வளர்ப்போம். மழை வளத்தை பெறுவோம்....

ஏர் இந்தியா விற்பனைக்கு...


இன்னமும் சொல்லமுடியாத ஏக்கங்கள் மனதிற்குள் உண்டு...


நெறுப்பாய் எறியும் கண்கள் அதை தணிக்க நானாக முன்வர வேண்டும்...

உனக்காகவும் எனக்காகவும் எவனும் வரமாட்டான்...

யோசி சிந்தனையை மெருகேற்று... அதை நல்வினையாற்று...

தற்சார்பு வாழ்வியலுக்கு திரும்பு... முடியவில்லை என்றால் சொந்த தொழிலுக்கு முன்னேற்பாடு செய்...

போராடு போராடமல் வாழ்வுதனை சூது கவ்வும்... யோசி...

என் தங்கையை பாத்தீங்களா... தமிழக மக்களின் உதவியை நாடும் கேரள இளம்பெண்...


கேரளாவில் 20 வயது கல்லூரி பெண் மாயமாகியுள்ளார். அவர் காணாமல் போய் 46 நாட்கள் ஆகியும் கேரளா போலீசார் இன்னும் அவரை கண்டு பிடிக்கவில்லை. இதனையடுத்து தன் தங்கையை யாராவது பார்த்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும் என கேரள இளம்பெண் தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜேஸ்னா. இவர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி புஞ்சவாயல் பகுதியில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்கு செல்வதாக வீட்டை விட்டு கிளம்பியிருக்கிறார். அத்தை வீட்டுக்கும் ஜேஸ்னா வீட்டுக்கும் சுமார் 20 கி.மீ தூரம் இருக்கும். 3 பேருந்துகள் மாறித் தான் செல்ல வேண்டும். ஜேஸ்னா, அத்தை வீட்டிற்கு வழக்கமாக செல்வதுதான். அதுபோலத் தான் மார்ச் 22ம் தேதியும் சென்றிருக்கிறார். ஆனால் அவர் அத்தை வீட்டை அடையவில்லை. இதுகுறித்து ஜேஸ்னாவின் குடும்பத்தார் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 46 நாட்களாகியும் ஜேஸ்னா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையே ஜேஸ்னா சுய விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். அதேசமயம் ஜேஸ்னாவின் குடும்பத்தினர் கூறும்போது, “ ஜேஸ்னாவிற்கு பெரிய அளவில் எந்த நண்பர்களும் இல்லை. வீட்டிலும் பிரச்னை இல்லை. அப்படியிருக்க அவர் ஏன் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் ” என தெரிவிக்கின்றனர். ஜேஸ்னாவை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகப்படுகின்றனர்.

 கடந்த மாதம் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கேரளாவில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஜேஸ்னாவின் பெற்றோருக்கு தங்கள் மகள் கடத்தப்பட்டுள்ளாரா..? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இதனிடையே ஜேஸ்னா விவகாரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை கண்டுபிடிக்க வேண்டும் என சமூக வலைத்தளவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கேரளா போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் தன் தங்கையை யாராவது பார்த்தால் தயவு செய்து தெரிவிக்கவும் என ஜேஸ்னாவின் சகோதரி தமிழக மக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்...

அதிமுக ஊழல் குற்றவாளிக்கு நினைவு மண்டபம்...


நீதி கேட்டு போராடினால் சிறை தண்டனையா?


அதிமுக அரசு பதவி விலகக் கோரி இன்று காலை  மெரினா ஜெயலலிதா சமாதி முன்பாக போராட்டம் நடத்தினோம்.

நந்தினியையும் என்னையும போலீசார் கைது செய்துள்ளனர். என்னை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

நந்தினியை எங்கு வைத்துள்ளனர் என்று தெரியவில்லை..

-நந்தினியின் அப்பா ஆனந்தன்...

எண்ண ஓட்டங்களை தீர்மானியுங்கள்... உங்களுக்கான கருத்தியலை விதைக்க துவங்குங்கள்... உங்களது எதிர்காலத்தை அது விருட்சமாக்கும்... ஆனால் அது நல்ல எண்ணங்களாக அமையட்டும்...


சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா?


பண்டைய காலம் முதல் மத வழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது. சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட (Boswellia serrata) எனப்படும் தாவர குடும்பத்தை சேர்ந்த ஃபிரங்கின் சென்ஸ் (Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும்.

இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது.

இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும் ஃபிரங்கின் சென்ஸ் (Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது.

மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன .

நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்.

சாம்பிராணி மருத்துவ பயன்கள்..

ஃபிரங்கின் சென்ஸ் (Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது.

இது இருமல், காமாலை, நாள்பட்ட புண்கள், சொறி, சிரங்கு , படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள் இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது.

சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது...

பாஜக எனும் பாலியல் ஜல்சா கட்சி சொல்லுது...


திராவிடம் அல்லது தென்னிந்தியம் - கால்டுவெல்...


திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை.

அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்.

அவர் எழுதிய நூல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இல்லை,
திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம் என்பதே.

திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்...

கர்நாடகாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து நாசா விஞ்ஞானிகளுடன் பாஜக எடியூரப்பா கலந்துரையாடிய போது...


உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்?


யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது.

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்.

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு.  நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.

ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய். இயற்கையை நேசி. 
வலிகள் மறையும்.

பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்...

நம் நாளைய தலைமுறை நம்மை கேள்வி கேட்கிறது என்ன செய்ய போகிறோம்...


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...


தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .

இதன் விளக்கம் : இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.

மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்...

நம்ப முடியாத உண்மைகள்...


கிருஷ்ணசாமியின் மரணம்: பாஜகவிற்கு எதிராக போராட்டம்.. திருவாரூரில் மோடியின் உருவ பொம்மை எரிப்பு...


 கேரளாவில் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் இறப்பிற்கு மத்திய அரசும், மோடியும்தான் காரணம் என்று தமிழகம் முழுக்க போராட்டம் நடந்து வருகிறது.

திருவாரூரில் சில இடங்களில் மோடியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்...

அடிமைக்கு எதுக்குடா பதவி...


தமிழினத்தை அழிக்க குறி வைக்கும் கார்பரேட் இலுமினாட்டிகள், அதை வழிநடத்தும் ஆரிய/திராவிட அரசியல்கள்...


அடுத்தடுத்த அழிவு திட்டங்கள், அடுத்த தலைமுறை உணவு, நீர் பாதுகாப்பு கேள்விகுறி?

இளைஞர்களை தொடர்ந்து விழித்தெழ விடாமல் பார்த்துகொள்ளும்.. பொழுதுபோக்கு அம்சங்கள்...

காப்பாற்ற துடிக்கும் மீம் கிரியேட்டர்கள்...

நீங்கள் எந்த பக்கம்?

எரிக்கின் தவறும் மரணமும்...


எரிக் தனது வாழ்வின் உச்சத்தில் இருந்தார் .அதிகாரமிகுந்த நண்பர்களின் நட்ப்புணர்வுடன் செல்வாக்கு மிகுந்தவராக , 1933 இல் ஹிட்லர் நாஜிக்களின் தலைவரான போது நாஜி நண்பர்களோடு தனது வலிமை உயர்வதை அறிந்திருந்தார்.

இந்த நம்பிக்கை எரிக்கினை தவறு செய்ய தூண்டியது, வினாச காலம் விபரீத புத்தி என்பதற்கு ஏற்ப எரிக் தவறான முன்னவரிப்புகள் கொடுத்தார்.

தனது மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் எரிக் தன்னால் ஒரு கட்டிடம் அதுவும் சிறப்பு மிகுந்த கட்டிடம் தீப்பற்றி கொள்வதாகவும், கொழுந்து விட்டு எரியும் தீ ஜுவாளைகளையும் எங்கும் புகை மண்டலமாகவும், அதே சமயம் அதன் சாம்பலில் இருந்து அந்த கட்டிடம், புதிய ஒளியுடனும் நம்பிக்கையுடனும் பீனிக்ஸ் பறவை போல எழுவதை காணுவதாகவும் எரிக் கூறுகிறார்.

இந்த கணிப்பு சரியாக 1933 மாதம் 27 தேதி நடேந்தேருகிறது, ஜெர்மானிய பாராளுமன்ற கட்டிடமாகிய ரிச்ஸ்டாக் நெருப்புக்கு இரையாகிறது. நாஜிக்கள் இதற்க்கு காரணமாக கம்யுனிஸ்ட் மேல் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் வெகுண்டெழுந்த மக்கள் ஹிட்லருக்கு வானளாவிய அதிகாரத்தை தரும் சட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்க ஒப்பு கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அந்த கட்டிடத்திற்கு தீ வைத்தது நாஜி படையினரே.

எரிக்கிர்க்கு இந்த உண்மை தெரியும், இவர்கள் என்பதற்கு மேலாகவும் பல உண்மைகளை எரிக் அறிந்து இருந்தார். இருப்பினும் அவற்றை வெளியிடவில்லை. தனது செயல்களுக்கு பலன் விரைவில் வரும் என்பதை எரிக் அறியவில்லை.

மார்ச் 24 தேதி ஒரு உணவகத்தில் இருந்து வெளிப்படும் எரிக், இரண்டு அடையாளம் தெரியாத மனிதர்களால் அழைத்து செல்ல படுகிறார். பிறகு அவரின் சடலம் மட்டுமே எறிந்த நிலையில் கண்டெடுக்க படுகின்றது.

எரிக் மரணம் குறித்து பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானது, எரிக்கிர்க்கு பெரும்பாலானான ரகசியங்கள் அறிந்து இருந்தார்.

மேலும் எரிக்கின் கொலைக்கு பின் ஜெர்மனியில் இது போன்ற வானவியல் கோள்கள் முன்னரிவித்தளுக்கு தடை செய்யப்பட்டது.

அசாத்திய திறன்களை கொண்ட எரிக் கூட நடப்பின் காரணமாக தனது உயிரை இழந்ததும் அவரின் உயர்வும் தாழ்வும் வரலாற்றில் ஒரு பாடமாகவே இருக்கும்...

மக்களின் மன வேதனை...


அத்திரம்பாக்கம்...


தமிழ் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட தொல் - பழங்கற்கால கற்கோடரிகள் 15,00,000 – (1.51 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை..

கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி..

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்னும் புவித் தரைத்தோற்ற வியலாளர் பல்லாவரம் அருகே தரையில் கிடந்த ஒரு கல்லாலான கருவியைக் கண்டெடுத்தார். இது பின்னர் வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது. இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

சென்னை பல்லாபுரத்தைத் தொடர்ந்து (பல்லாவரம்) பூண்டிக்கருகில் அத்திரம் பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை) ஆற்றுப் படுகைகளிலும், குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், 2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என (1893-1912 கி.பி.) சர் ராபர்ட் புருசு பூஃட் (Father of Indian Pre-history) அறிவித்தார்.

மைக்கேல் வுட் என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய நாட்டின் வரலாற்றாய்வர் தனது “இந்தியாவின் கதை” (“ The Story Of India ”) (http://www.pbs.org/thestoryofindia) எனும் வலைத்தளத்தில் 70,000 – 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான் என்று பதிவு செய்தார். பிற வரலாற்றாசிரியர்களும் அவ்வாறே குறிக்கின்றனர். இது தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது.

சென்னையில் இருந்து சுமார் 60 கி.மி தொலைவில் உள்ள திருவள்ளூரில் இருக்கும் இந்த அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளை. ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு குறையாத தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது.

மேலும் இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் Early Pleistocene presence of Acheulian hominins in South India என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார்.

இந்த விடயத்தை அறிந்ததும் இந்த ஆய்வுகள் குறித்த மேலும் பல தகவல்களைப் பெற அங்கு விரைந்தோம். ஆனால் அங்கு விசாரித்ததில் இப்படி ஒரு ஆய்வு நடக்கிறது என்பது அந்த கிராம மக்கள் பலருக்குமே தெரியாதது வருத்தமளித்தது.

மேலும் இரு சக்கர வாகனம் கூட பயனிக்க முடியாத அந்த காட்டிலும் நடந்து சென்று விடயம் தெரிந்த ஓரிருவரிடம் வழி கேட்டுச் சென்றும் அந்த இடத்தை அடைய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

அதன் பிறகு இந்த ஆய்வுகளை எடுத்து நடத்தும் நிறுவனத்திடம் விசாரித்த போது. இந்த ஆய்வுகள் நடத்துவது நிறுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆனது என்றார்.

ஆவலுடன் நாங்கள் ஏன் என்று கேட்ட போது மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று அவர் கூறியது அதிர்ச்சி அளித்தது! இன்னும் எத்தனை இரகசியங்கள் இப்படி இருளில் மூழ்கியதோ?

ஆங்கில மொழியாக்கம்...

One hundred and fifty years ago, on May 30, 1863, young geologist Robert Bruce Foote bent down and picked up a stone tool on the Parade Ground at Pallavaram cantonment, near Chennai. It turned out to be an epochal discovery. Foote's discovery revolutionised the study of India's pre-history.

Shanti Pappu, specialist in Tamil Nadu's pre-history who conducted excavations at Attirampakkam and did insightful research on Foote's life and many-sided work, said: “There is no scholar of Foote's vision and perseverance in discovering India's pre-history and uniting different fields of science such as archaeology, geology, anthropology, museology etc.. into a comprehensive whole to turn the light on our past.” She called Foote “one of the most outstanding figures in India's archaeology.”

“I worked at Attirampakkam and it was a wonderful work that he did there 150 years ago. It was a humbling experience to work there.” Foote discovered a paleolithic artefact at “Pallavaram” on May 30, 1863. He and geologist W.King found more hand-axes, cleavers and scrapers from a dry stream-bed at “Atrampakkum” in September 1863. These phenomenal discoveries pushed back the antiquity of humankind in the Indian subcontinent and placed India in the world map of pre-history. While the stone tools found at Pallavaram were more than five lakh years old, Dr. Pappu estimated that those discovered at Attirampakkam were about 1.5 million years old.

When the western people repeatedly underestimate the civilization of India to be 2000 - 4000 years back this extraordinary excavation rewrites the history of mankind. Spread our antiquity!

http://www.amudamtamil.com/index.php?q1=284

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/attirampakkam.htm

http://www.youtube.com/watch?v=rQ1sEifntIA

http://sandeeppaul.com/SharmaHeritage/index.php/about-attirampakkam

http://www.archeolog-home.com/pages/content/attirampakkam-inde-million-year-old-tools-found-india-s-prehistory-pushed-back.html

http://www.ancientdigger.com/2011/03/excavations-at-attirampakkam-in-india.html

http://www.antiquity.ac.uk/projgall/pappu297/

http://popular-archaeology.com/issue/april-2011/article/early-humans-occupied-south-asia-over-a-million-years-ago

http://www.pasthorizonspr.com/index.php/archives/03/2011/stone-tools-reveal-indias-1-5-million-year-old-prehistory

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/stone-tools-that-revolutionised-study-of-indias-prehistory/article3516451.ece

http://www.thehindu.com/news/national/a-discovery-that-changed-the-antiquity-of-humankind-who-lived-in-indian-subcontinent/article4753744.ece

மராட்டிய ரஜினி கலாட்டா...


சித்தராவது எப்படி ? - 25...


முன் நின்று சாதித்தல், உடன் இருந்து சாதித்தல்..

இதுவரை முன் நின்று சாதிக்கும் முயற்சியில் அனைத்து மதங்களும் முயன்று முயன்று தோற்றுப் போய் விட்டன.. இதுவரை எந்த பலனையும் அப்படி ஒன்றும் பெரிதாக எதையும் பெறமுடியவில்லை..

முன் நின்று சாதிக்கும் முயற்சியில் தோற்றுப்போய் சோர்ந்து விழுந்து விட்டு பின் தன்னை அறியாமல் தானே உடன் இருக்கும் முறைக்கு மாறியதால் பெருத்த பலனை அடைந்தார்கள்..

மதங்கள் எல்லாம் உச்சத்திற்கு ஒரு மிக பெரிய தோல்வி நிலைக்கு அழைத்து சென்று, அங்கு மனதை ஒடுக்கி பின் மனம் தாண்டிய நிலைக்கு அழைத்து செல்லப் படுவதால், அங்கு எண்ணியது கிடைத்தாலும், கிடைத்ததை செயல் படுத்த மனம் வலுவற்ற நிலையில், கிடைத்ததை பயன் படுத்த முடியாமல் போகிறது... இதுவும் மிக பெரிய தோல்வியே ஆகும்.. கை எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை தான்..

ஆனால் உடன் இருந்து சாதிக்கும் ஒரு அற்புத வித்தையை மனிதன் கற்றுக் கொள்ளவும் இல்லை.. அவனுக்கு கற்றுக் கொடுக்கப் படுவதும் இல்லை..

ஒவ்வொரு மனிதனும் தோல்வியின் உச்சத்திலே மட்டுமே அடையும் அந்த வித்தையை அவன் மனித குலத்திற்கு சொல்லி கொடுக்க நினைத்தாலும், அது மற்றவர்களை துளியும் கவருவதில்லை.. அவன் மிக மோசமான நிலையை ஏற்கனவே அடைந்த காரணத்தால் அவன் தோல்வி நிலையை மையப் படுத்தப் படுவதால் கவர்ச்சியை விரும்பும் மனிதர்கள் அவனுடைய சொல்லை மதிப்பதில்லை..

அது சரி அது என்ன முன் நின்று சாதித்தல் உடன் இருந்து சாதித்தல் ?

இறைவன் முன் நின்று போராடி அழுது புலம்பி கெஞ்சி கொஞ்சி கதறி முறையிட்டு தனக்கு வேண்டியதை சாதிக்கும் பக்தனை போல உலகத்தவர் ஒரு பக்கம்..

இறைநிலை என்னவென்று அறிந்து அந்த நிலையோடு உடன் பட்டு இசைந்து வாழ்ந்து, அந்த இசையால் இறை ஆற்றலை தன்னுள் உள்வாங்கி கொண்டு வல்லவன் ஆகும் மற்றொரு முறை..

இந்த உடன் இருத்தலில் அந்த இறை ஆற்றலோடு இசையும் நிலைக்கு இருப்பதால் எந்த வித பயிற்சியும் இல்லாமல் இசைதல் என்ற உன்னத நிலை மூலம் இறை ஆற்றலையெல்லாம் பெற்று இறைநிலைக்கு நிகராக தன்னை ஆக்கி கொள்வதாகும்.. சும்மா இருக்கும் சுகம் என்பது இதுவே ஆகும்..

அப்படி சும்மா இருத்தலின் மூலம் இறை நிலைக்கு இசைந்து வாழ சூழ்நிலை ஏற்படுகிறது.. சும்மா இருத்தலின் மூலம் இசைந்து இருக்க தெரிந்து இருக்க வேண்டும்.. அப்படி இசைந்து இருக்க தெரியவில்லை என்றால் பல ஆண்டுகள் சும்மா இருந்தாலும் பலன் ஒன்றும் இல்லை..

இப்படி சும்மா இருப்பதின் மூலம் மட்டுமே இசைந்து இருக்க முடியும் என்பதும் மிக தவறான கருத்து.. நெருப்பில் நடக்கும் போதும் கூட இசைந்து இருக்க முடியும்.. இதை நாம் மறக்கக் கூடாது...

செயல் பாட்டிலும் சும்மா இருக்கும் நிலையும் சாத்தியப் படும்.. இது ஒன்று தான் நம்மவர்களுக்கு புரியாததாக உள்ளது.. அதை பின்பு பார்த்துக் கொள்ளலாம்...

இப்படி இசைந்து இருக்கும் நிலையை பெருக்குவது எது என்றால் சுவாச ஒழுங்கு மட்டுமே..

எந்த வேலை செய்தாலும் சுவாச ஒழுங்கில் இருக்கும் போது சும்மா இருக்கும் சூழ்நிலை போன்ற அமைதியும், இசைந்து இருக்கும் உன்னத நிலையும் கிடைக்கிறது...

சரி அப்படி இசைந்து இருக்க, இசைப்பது ஒன்று இருந்தால் தானே அதற்கு நாம் இசைந்து இருக்க முடியும்.. வேறு எந்த பயிற்சியிலும் இசைக்கும் ஒன்றை காணவே முடியாது.. அந்த இசைக்கும் ஒன்று உருவானால் அதை வலுவுள்ள மனம் உடனே நீக்கி விடும்.. அதற்கு முன் சுவாச ஒழுங்கில் நம்மை இசைக்க வைப்பது எது..

எது ஒன்று சுவாசத்தை இசைக்க வைக்கிறதோ அதற்கு தானே நாம் சுவாச ஒழுங்கில் இசைகின்றோம்..

சுவாச ஒழுங்கில் நாம் இசைவது சுவாசத்தை இயக்கும் இறை சக்தியின் அம்சமான உயிர் சக்தி அல்லவா ?

இதை யாராலும் நீக்க முடியாது..

நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது சுவாச ஒழுங்குடன் இருப்பது இறை ஆற்றலுக்கு இயங்கி, இசைந்து, உடன் இருத்தலுக்கு இணையானது...

அதனால் முன் நின்று சாதிக்கும் வழக்கமான மிக கடினமான முறையை விட்டு விலகி உடன் இருந்து பயன் அடையும் ஒரு உன்னத ஆன்ம லாபம் தரும் நிலைக்கு வருகிறோம்..

முன் நின்று சாதிக்கும் நிலையில் பல கோடி சமயவாதிகள் ஏதோ கடவுள் தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடும் ஒரு மாயை தோற்றத்தில், கடவுளை விட்டு விலகியே இருக்கிறார்கள்..

ஆனால் உடன் இருக்கும் நிலையில் ஒரு சித்தன் கடவுளை பற்றி அதிகம் பேசாமல் கடவுளை மறந்தவன் போல் இருந்தாலும், கடவுளோடு உடன் இருக்கும் உன்னத நிலையில் இருக்கிறான்.. கடவுளுடன் இணைந்து இருக்கும் போது, கடவுளை விட்டு விலகி முன் நிற்கும் அவல நிலையை சித்தர் போன்ற மகான்கள் போவதில்லை...

சத்தியமான உண்மை இதுதான்.. கடவுள் யாரையும் காப்பாற்றுவதில்லை.. துளியும் காப்பாற்றுவதில்லை..

ஆனால் வல்லமை வாய்ந்த இசைக்கப் படும் இறை ஆற்றலுக்கு இசைந்து வாழும் உயிர்களே பல் வேறு உயிர் தோற்றங்களை பெற்று வாழ முடிகிறது.. இசைந்து வாழ்வதில் குறை ஏற்படும் பொழுது மரணத்தை தழுவுகிறது... இறை ஆற்றலுக்கு இசைவதாலே மட்டுமே அனைத்தும் நடக்கிறது..

இந்த உண்மையால் மட்டுமே உண்மையான ஆன்மீகம் வெளிப்படும்..

ஆகவே சுவாச ஒழுங்கினை இறுகப் பற்றி விரைவில் சித்தராக முனைவோமாக...

அம்பத்தூர் மதுக்கடையை அடித்து நொறுக்கிய மக்கள்... தரமான சம்பவம் மக்களே...


கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனின் கட்டிடக் கலையைப் பறைசாற்றும் கோவிலின் பெருமை...


உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர். இதனால் இந்த கட்டிடம் சாயத் தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம்உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது..

(AUG 8TH 1173 -1372) தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக் கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது.

இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது. வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை..

சிலநேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக் காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம்...

பாஜக மோடியும் அண்ணிய இந்தி மொழி திணிப்பும்...


அவர்கள் நம்மை அழிப்பதற்கு பாரபட்சமே பார்க்க மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம்...


இப்போதாவது ஒருமித்த கருத்துக்களில் ஒன்றிணைய முயலுங்கள்..

அந்த கருத்து இந்திய என்ற அடிமையையும், உலக வல்லாதிக்கத்தையும் எதிர்ப்பதாக இருக்க வேண்டும்..

கட்சி வேண்டாம், தலைவன் வேண்டாம்..

ஒருமித்த கருத்துக்கள் போதும்...

பாஜக வின் தேச பக்தாள் கலாட்டா...


சிங்கம்புணரியில் ஏர்விடும் விழா...


சிங்கம்புணரி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிறப்பில் பெய்யும் புது மழையை கணக்கிட்டு ஏர்விடும் விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டிற்கு கடந்த புதன்கிழமை நல்ல மழை பெய்தது. இதையடுத்து நேற்று காலை பத்து சிங்கம்புணரி கோவில் காட்டில் பொன் ஏர்விடும் விழா நடைபெற்றது.

இதற்காக கோவில் நிலத்தில் கோவில் நிர்வாகம் மற்றும் கிராமத்தினர் சார்பாக  சிறப்பு வழிபாடு செய்து கோவில் மாடுகளை ஏரில் பூட்டி உழுதனர்.

இதை தொடர்ந்து மற்ற பொதுமக்களும் தங்கள் வயல் காடுகளில் ஏர் உழுதனர். இவ்வாறு செய்வதால் இப்பகுதியில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒரு சில கிராமங்களில் சித்திரை முதல் நாளே ஏர்உழும் நிகழ்ச்சி நடைபெறும்...

வாடி வா... நோட்டா காத்திட்டு இருக்கு...