21/11/2017

மஞ்சள் மருத்துவக் குணங்கள்...


நறுமண பொருட்களுடன் கலந்து உணவில் சேர்க்கப்படும் மஞ்சளின் மகத்துவம் அதிகமானது.

மஞ்சள் ஒரு நிலத்தடி வேர் ஆகும். இதன் வேரும், இலையும் நீண்ட நெடுங்காலமாக, பாரம்பரியமாக இந்தியா- சீனா மருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மஞ்சளானது வலி நிவாரணியாகவும், கிருமிகளை அழிக்கும் கிருமி நாசினியாகவும், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வலிமையுடையதாகவும் இருக்கிறது.

ஜிஞ்சர் அல்லது ஜிஞ்சிபேரேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது மஞ்சள்.

இதன் அறிவியல் பெயர் கர்கமா லாங்கா என்பதாகும். மஞ்சளில் ஆரோக்கியம் தரும் பலன் அதிகமாக இருக்கிறது. வலி நிவாரணியான இது, நுண்ணுயிர்களை அழிக்க வல்லது.

100 கிராம் மஞ்சளில் 1.80 மில்லி கிராம் பைரிடாக்சின் உள்ளது. இது மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் அளவாகும். இந்த பைரிடாக்சின் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

புதிதாக பறிக்கப்பட்ட மஞ்சளில் வைட்டமின்-சி உள்ளது. தண்ணீரில் கரைக்கக்கூடிய வைட்டமின்-சி, சக்தி பெற்ற ஆன்டி ஆக்சிடன்ட்களையும், கிருமிகளையும் தடுக்க வல்லது.

மஞ்சளில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஷ், தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் இருக்கின்றன.

இவற்றில் உடல் மற்றும் செல் திரவங்களில் முக்கிய அங்கம் வகிப்பது பொட்டாசியம். இது இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது...

பதினேழாம் நூற்றாண்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்...


ஓர் வரலாற்று நிகழ்வு...

கி பி பதினேழாம் நூற்றாண்டில் தென் பாண்டி நாடு என்று சொல்லக்கூடிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் நடந்த சம்பவம் தான் நீங்கள் படிக்க இருக்கும் நிகழ்வு.

மேலே குறிப்பிட்ட இடத்தில் பிறந்தது ஒரு குழந்தை.

அதன் சிறு வயதில்  இலக்கிய ஆர்வமும் அறிவாற்றலையும் உணர்ந்த அந்த சிறுவனின் தந்தை, கடிகைமுத்து புலவர் என்று சொல்லக்கூடிய ஒரு தமிழ் புலவரிடம் பாடம் கற்க தமது பிள்ளையை அழைத்து சென்று படிக்கவிடுகிறார்.

கடிகைமுத்து புலவரும் அந்த சிறுவன் 16 வயது இளைஞன் ஆகும் வரை தமிழ் இலக்கியம் தமிழ் வரலாறு போன்றவைகளை படித்து மிகவும் திறமையானவ மாணவன் என்ற பெயரையும் வாங்குகிறார்.

இந்நிலையில் வட நாட்டில் இருந்து வந்த இன்னொரு புலவர் வாலை வாருதி என்ற பெயருடைய அறிஞர்.

இவர் வட மொழி பண்டிதர் என்று அழைக்கப்பட்டாலும் தமிழை கற்று தமிழ் அறிஞர்கள் மத்தியில் புலமை போட்டி பெற்று வென்று வந்தார்.

அதாவது அரசன் மந்திரிகள் பொது மக்கள் மத்தியில் இரண்டு புலவர்களுக்கும் போட்டி நடக்கும் கருத்துப்போர் என அக்காலத்தில் கூறுவார்கள்.

அப்படிப்பட்ட கருத்துப் போட்டியில் மிகவும் திறமையானவரான வாலை வாருதி என்ற புலவர் தமது ஊருக்கு வந்து தமது அரசன் முன் சொல்லுகிறார்..

இந்நாட்டில் எம்முடன் கருத்து வாதம் புரிய கடிகைமுத்து புலவரோ அல்லது அவரது மாணவர்களோ தயாரா என்று சவால் விட்டார்.

இதை கேள்வியுற்ற கடிகைமுத்து புலவர்.

அதை எதிர்கொள்ள தயார் என அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என கூறுகிறார்.

அவ்வளவுதான் கூட்டம் கூடியது தண்டோரா முழங்கியது.

அரசவையில் மாமன்னன் தலைமையிலான கருத்து யுத்தம் தயாரானது..

ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் வட மாநில பண்டிதரான வாலை வாருதி,  மந்திர தந்திரங்கள் செய்வினைகளை கற்றவர் என்றும் இந்த கலையில் பெரிதும் அனுபவம் உள்ளவர் என்றும்..

அதனால் தாம் போட்டி போடும் எதிர் புலவனை  மந்திரத்தால் துவம்சம் செய்து விடுவார் என்று ஏற்கனேவே கேள்வியுற்ற கடிகைமுத்து புலவர் போட்டிக்கு செல்ல சிறிது தயக்கம் காட்டுகிறார்.

இதே கவலையில் இருந்ததால் உடல் நலிவும் ஏற்படுகிறது.

இந்நிலையில் போட்டி ஏற்படும் நாள் வந்தது எழுந்து நிற்கவே முடியாத கடிகைமுத்து புலவரின் நிலையை உணர்ந்த  அவரது மாணவர் (மேலே பார்த்தோம் அல்லவா அவர் தான்).

எம் ஆசிரியர் உடல் நலம் சரியில்லை ஆகவே இந்த வட நாட்டு பண்டிதரை எதிர்க எம் ஆசிரியர் எம்மை போட்டியில் கலந்து கொள்ள கட்டளையிட்டுள்ளார்.

அரசன் அனுமதித்தால் இந்த வாலை வாருதி புலவருடன் நான் கருத்துயுத்தம் நடத்த தயார் என்று சபையினர் முன்பு கூறினார் கூச்சலும் குழப்பமும் மேலோங்க..

ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி உடனே ஆனையிட்டார்  (இவர் தான் எட்டையபுர மன்னர்)..

கடிகைமுத்து புலவர் செய்தால் அதில் அர்த்தம் இருக்கும் இந்த சிறுவனை வாலைவாருதி புலவரிடம் போட்டி இட ஆனையிடுகிறேன் என்றார்.

ஆம் கடிகைமுத்துவின் மானவரான இவருக்கு அப்போது வயது 16 இல் இருந்து 17 க்குள்.

சபை அமைதியானது போட்டி ஆரம்பம் ஆனது..

வாலைவாருதி அகத்தையோடு அவையோரை கேளிப்பார்வை  பார்த்து விட்டு, மளமளவென ஆரம்பித்தார் தன் பாடலை..

வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய் என முடித்தார்.

அதாவது தமது குருவான கடிகைமுத்துவை தாழ்த்தி பாடி இறுதியில் நான் யார் தெரியுமா சின்னப்பயளே என்று கேளிக்கையாக பாடினார்.

இதை கேட்டு கொண்டு இருந்த அந்த
16 வயது வாலிபர் ரத்தம் கொதிப்பேற கண்கள் சிவக்க ஆரம்பிக்கிறார்.

ஆரம்பிக்கும் முன்..

(நீங்க வாசிக்க போகும் கருத்து கவிதைக்கு அர்த்தம் இரண்டு முறை மீண்டும் மீண்டும் படியுங்கள் உங்களுக்கே புரியும்.

மிகவும் பண்டைய தமிழ் வார்த்தை அல்லவே இது.

கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் அர்த்தம் விளங்கும்).

( எழுத்தின் அழகை உணர கொஞ்சம் கோபமாக படியுங்கள் காரணம் அவ்வளவு பெரும் சபையில் கோபம் கொப்பளிக்க வீர வசனம் போன்று பேசப்பட்டது இந்த கவிதை ஆகவே கொஞ்சம் கோபமாக படியுங்கள் ).

எழுத்தானியே பேசு
ஏ எழுத்தானியே பேசு

சமரதுரக துங்க மனருஞ் சபா சென்று சரிசமா சன மீதிலே

அமரவொரு நரகொம்பு தின முஞ்சு மாசொல்லும்.

அமுதகவி ராஜ னானே

திமிலபகை வரைவென்ற பருதி யெனும் யெமதெட்ட

தீரனணி வாயில் வித் வான்
உமறு குழ றீடிலண்ட முகடும்ப டீரென்றும்

உள்ளச்சம் வையும்
பிள்ளாய் யாமே.
புலவா உள்ளச்சம்
வையும் பிள்ளாய் யாமே.

என்று கோபம் கொப்பளிக்க பாடி முடித்தார் அவையோர்கள் அனைவரும் ஆச்சரியம் பொங்க அமைதியாய் இருந்தனர்..

வாலைவாருதி எழுந்தார் மன்னிப்பு கேட்டார்.

கடிகைமுத்து புலவரை இகழ்ந்து பேசியதற்கும் மன்னிப்பு கேட்டார், சபையோர் ஆரவாரத்துடன் அந்த சிறுவனை பாராட்டினர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி என்ற குறுநில அரசன் அந்த சிறுவனை பாராட்டி பரிசுகளை கொடுத்து கவுரவித்தார்..

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
தமது ஆசானான கடிகைமுத்து புலவரிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.

பின்னாளில் ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி அரசவையில் அரசவை புலவராகவும் ஆக்கினார் அச்சிறுவனை.

யார் தெரியுமா இந்த சிறுவன் ?

சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர்...

தமிழனால் கட்டப்பட்ட வீராணம் ஏரியின் வரலாறு. உலகின் மிகபெரிய ஏரி...


திருச்சி மாவட்டம், துறையூர் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பூட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை...


திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய மாதிரி நடுநிலைப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை  208 குழந்தைகள் பயின்று வருகின்றனர் இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் தலைமை ஆசிரியர் M. சாமிகண்ணு கூறுகையில் கடந்த வெள்ளி கிழமை மாலை பள்ளி முடிந்து அனைத்து கதவுகளையும் பூட்டி சென்றுவிட்டோம் இன்று காலை பள்ளிக்கு வந்து பார்க்கும் போது கதவு பூட்டு உடைந்து காணப்பட்டது. உள்ளே உள்ள 4 பீரோகளும் திறந்து அதிலுள்ள ஆவணங்கள் கலைந்து கிடந்தன.

மேலும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுதரும் 2 லேப்டாப்கள் காணவில்லை என கூறினார். மேலும் இப்பள்ளிக்கு பாதுகாவலர் இல்லாத காரணத்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்களின் குற்றச் சாட்டாக உள்ளது இந்த திருட்டு சம்மந்தமாக துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரணை செய்து கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்...

இலுமினாட்டி களும் கார்டுகளும்...


இல்லுமினாட்டி கார்ட்கள் ஸ்டீவ் ஜாக்சன் என்பவரால் 1994அம ஆண்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தது..

பார்த்தால் சாதாரண சீட்டு விளையாட்டுகளை போல தெரிந்தாலும்  இந்த கார்ட்களில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் நம்மை வியப்பவையாக உள்ளது.

ஒன்று மட்டும் உண்மை இந்த கார்ட்கள்  அனைத்தும் மிகவும் அமானுஷ்யமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.


இந்த கார்ட்களின் வருகைக்கு பின்னர் சில வருடங்களில்  இந்த கார்டகளில் சொல்லப்பட்டது போலவே இளவரசி டயானா மர்மமான முறையில் இறந்தார்.

இதை நீங்கள் தற்செயலாக எண்ணலாம், மற்ற கார்ட்களின் குறிப்பிடப்பட்ட சம்பவங்களையும் பார்த்து இது தற்செயலா அல்லது திட்டமிடப்பட்ட வேலையா உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.


9/11 ட்வின் டவர் இடிப்பு சம்பவத்தை இக் கார்டுகளில் மிகவும் துல்லியமாக காணலாம்.


அதிகாரவர்கத்திற்கு எதிராக குரல் குடுப்பவர்களை அடக்க ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியிலும் தங்களுடைய கைப்பாவைகளை இடம்பெற செய்தது.

இந்த கார்டுகள்  வெறும் கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் பிற்காலத்தை கணித்து அச்சடிக்கப்படாத அல்லது இந்த சம்பவங்கள் அனைத்தும் தற்செயலா ?

டீப் வாட்டர் ஹாரிசன் ஸ்பீல்  மெக்ஸிகோ வில் ஏற்பட்டது ,இந்த என்னை கசிவு மெக்ஸிகோவில் 2010இல் ஏற்பட்டது.


புக்குஷிமா அணு உலை விபத்து மிகத்தெளிவாக கடல் அலைகளால் ஏற்படும் என்பதனை போல உள்ள கார்டினில்  காணலாம், அது போல நடந்தும் விட்டது.


ஒபாமா கேர் மற்றும் அவரின் சில திட்டங்கள்  அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தி தந்தது உலகம் அறிந்ததே.


சிலர் டிரம்ப் கொலை செய்யப்படுவதாக இக்கார்ட்களில்  முன்னரே குறிப்பிட பட்டுள்ளதாக கூறுகினறனர், அல்லது ட்ரும்ப் இன் படைகள் அழிவு செயல்களில் ஈடுபடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.


13 ஆம் தேதி  வெள்ளி கிழமை பாரிஸ் குண்டு வெடிப்பு நாசவேலைகள் பற்றிய கணிப்பு.


இதனை ஜிஹாதிகளால் தொடுக்கப்பட்ட தீவிரவாதம் என ஒரு சாரார் கூறினாலும் இன்னொரு  சாரார் மொசாட் அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என கூறுகின்றனர்.


இவர் தான் ஜூலியன் ஆசாங்கே விக்கிலீக்ஸ் நிறுவனர், அமெரிக்கா அரசின் அனைத்து ஊழல்களையும் மக்கள் விரோத நடவடிக்கைகளை அமெரிக்க அரசின்  கம்ப்யூட்டர் சர்வரிலிருந்து திருடி அதனை  திரட்டி உலகிற்கு காட்டியவர் இவரை பற்றி ஒரு தனிப்பதிவில் காணலாம்.

இந்த கார்டுகளை  பற்றின புரிதல்களை உங்கள் யூகத்திற்கே  விட்டு விடுகிறேன்...

தகவல் - கோகு..

ஆம்பூர் அருகே ஆட்டுக்கறி என்று சொல்லி, நாய்க்கறி விற்ற நாதாரிகள் பிடிபட்டனர்...


ஊழலில் திளைக்கும் துறையாக பத்திர பதிவுத்துறை உள்ளது- சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்...


தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறதா? அப்படியென்றால், கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் எத்தனை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்...

தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது...


அதிர்ச்சி தகவல் - திருவாரூர் ருக்மணி மருத்துவமனையில் (R.R Hospital) நடந்த ஒரு மறைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அதன் விளைவாக பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் பலி...


16.11.2017 மாலை திருவாரூர் ருக்மணி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு தவறான அறுவை சிகிச்சை (worng Operation) செய்ததால் அவர் சுமார் 5 மணி அளவில் உயிர் இழந்துள்ளார்.

ஆனால் அதனை குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் அவரது உடலினை திருவாரூர் மருத்துவக்கல்லூரி க்கு கொண்டு செல்லப்பட்டு இரவு சுமார் 12 மணி வரை உயிர் இருப்பதை போன்று சினிமாவில் காட்டப்பட்ட விஜய்காந்த் யின் ரமணா பட பாணியில் நாடகம் நடத்தப்பட்டு இரவு 12 மணிக்கு மேல் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவித்தனர். ஆனால் அந்த பெண்ணின் உயிர் மாலை 5 மணிக்கே பிரிந்ததாக தகவல் தெரிகிறது...

மாலை 5 மணிக்கே உயிர் பிரிந்ததான தடயங்கள் அந்த குடும்பத்தாரிடம் கிடைத்தவுடன் அவர்கள் ருக்மணி மருத்துவமனையின் நிர்வாகத்திடம் முறையிட்ட போது ஆமாம் மாற்று அறுவைசிகிச்சை மூலமாக தான் அந்த பெண் உயிர் இழந்தார் ஆனால் இதைப்பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் இதற்கு நஷ்டஈடாக ரூபாய் 10,00,000 தருவதாக மருத்துவமனையில் சொல்லப்படுகிறது..

அந்த பெண் உயிர் இழப்பிற்கு உண்மையான காரணம் என்னவென்று இதுவரை புரியவில்லை  இந்த ருக்மணி மருத்துவமனையின் மாற்று அறுவைசிகிச்சை கொலைக்கும்  (கொள்ளைக்கும்) திருவாரூர் மருத்துவக்கல்லூரி மற்றும் திருவாரூர் காவல்துறையினர் உதவி புரிந்துள்ளதாக கூறப்படுகிறது...

உயிரைக் காப்பாற்றும் மருத்துவமும் உதவவில்லை, நமக்கு காவலாக இருக்க உருவாக்கப்பட்ட காவல்துறையும் அந்த குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க உதவவில்லை...

எவ்வளவு தான் பணத்தை கொடுத்தாலும் அந்த பெண்ணின் குழந்தைக்கு ஒரு தாய் கிடைக்கக்குமா..
அவரது கணவருக்கு இவர் கொடுத்த பாசத்தை கொடுக்க இயலுமா... அந்த பெண்ணின் சகோதர சகோதரிக்கு அதே போன்று ஒரு சகோதரி கிடைக்க இயலுமா...?

பணம் இருந்தால் ஒரு தவறான செயலை எளிதாக மூடிமறைக்க முடிகிறது இந்த சமுதாயத்தில்...

தேசிய சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவி...


இந்தியப் பள்ளிகளுக்கு இடையேயான 63ஆவது தேசியச் சதுரங்கப் போட்டிகள் தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடைபெற்றன. 10.11.2017 முதல் 14.10.2017 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சதுரங்க வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 19 வயதிற்கு உட்பட்டோர் மாணவியர் பிரிவில் தேசியச் சதுரங்கப் போட்டியில் பங்குபெற்ற குடியாத்தம் நேஷ்னல் மேல்நிலைப்பள்ளி மாணவி ச.செந்தமிழ் யாழினி தங்கப்பதக்கம் வென்றார்...

அற்புத மூலிகை சோற்றுக் கற்றாழை...


சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும். எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை. இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.

சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது. கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

பொல்லாமே கங்க பம்பு ழுச்சூலை குஷ்டரச
மல்லார்மத் தம்பகந்த ரங் குன்ம-மெல்லாம்விட்
டேகு மரிக்கு மெரிச்சற் கிரிச்சமு
மாகு மரிக்கு மருண்டு.

நறுங் கற்றாழைக்கு வாத மேகம் , கப கோபம் , கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி ( குஷ்டம் , பால்வினை நோய்கள் ) , மூலம் , உன்மத்தம் , பகந்தரம் , வயிற்று நோய் , தினவுள்ள பித்த கிரிச்சரம் ( அரிப்பும் , பின் கடுப்பும் உள்ள மூத்திரக் கடுப்பு ) ஆகிய வியாதிகள் மருண்டு ஓடும் என்று பொருள்.

மேலும் மது மேகத்தால் ( சர்க்கரை வியாதியில் ) அவதிப்படுபவர்களுக்கு 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி சீனாக் கற்கண்டோடு கூட்டிச் சாப்பிட மதுமேகம் ஓடியே போகும்.

இந்த சோற்றுக் கற்றாழைச் சோற்றை திரிபலாதிச் சூரணத்துடன் கலந்து கட்டித் தோலாந்தரமாக தொங்கவிட்டு , அதிலிருந்து வடியும் நீர் குமரிச் செய நீர் என்றழைக்கப்படும்.அது பல மருந்துகள் தயாரிக்க முக்கிய பொருளாகும்.

மேலும் அயக்காந்தம், மண்டூரம் முதலியவற்றைச் செந்தூரமாக்குவற்கு இதைவிடச் சிறந்த மூலிகை இல்லை...

சினிமா கிரிக்கெட் தொலைக்காட்சி இதன் மூலம் தான் நம் இனம் அடிமையாகப்படுகிறது...


வரலாற்று நெடுகிலும் ஒருவரை ஒடுக்க வேண்டுமென்றால் அவரது அடையாளம் மூலமே ஒடுக்கி வந்துள்ளதை நாம் காணலாம்...


உதாரணமாக..

1. பறையர் – பறப்பயல்(இதன் விளைவாக ஆங்கிலத்தில் Pariah என்ற சொல் உருவாகி an outcast (தீண்டத்தாகதவர், ஒதுக்கப்பட்டவர், தனித்து விடப்பட்டவர்) என்ற அருத்தத்தில் பயன்படுத்துவார்கள்… இந்தச் சொல்லின் அருத்தத்தை ஆங்கிலத்தில் மாற்றுவோம்…)

2. சாணார் (நாடார்) – சாணப்பயல்

3. பள்ளர் – பள்ளப்பயல்

4. பள்ளி (வன்னியர்) – பள்ளிப்பயல்

5. கள்ளர் – கள்ளப்பயல்

6. இடையர் – எடப்பயல்

7. தமிழர் – பாண்டிப்பயல் (சேரலம்),  பறத் தமிழா (இலங்கை)

சரி… இந்த சூத்திரர் என்றால் யார்… சூத்திரர் என்ற சொல்லின் உண்மையான அருத்தம் என்ன…

சூத்திரர் என்பது வேளாளர்களின் வேறு பெயர்களுள் ஒன்று என்று பிங்கல நிகண்டு கூறுகிறது…

வேளாளர் என்பவர்கள் “தொல்குடி சூத்திரர்கள்” என்று பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (அவரும் “வேளாளர்” சமுகத்தை சார்ந்தவர் ஆவார்)…

சூத்திரர் என்பது இழிசொல்லாக இருந்திருந்தால், சேக்கிழார், தான் சார்ந்த சமூகத்தையே அப்படிக் கூறியிருக்க வேண்டிய அவசியமில்லை…

அப்போது, சூத்திரர் என்ற சொல்லின் உண்மையான அருத்தம் தான் என்ன…

சாதியொழிப்பு என்ற தமிழர் இன அடையாள அழிப்பில் அரசியலுக்காக சார்திக் கட்டமைப்பில் பிராமணியமும் திராவிடமும் சேர்ந்து வேறு என்னென்ன வரலாற்றுத் திரிபு வேலைகளைச் செய்து வைத்துள்ளார்களோ… அரிசனம் (அரி+சனம்), பஞ்சமர், சண்டாளன், தேவரடியாள் (தேவடியாள்(திரிபு)) ஆகிய சொற்கள் யாரைக் குறிக்கும்… அவற்றின் உண்மையான அருத்தம் என்ன…

பொருள் மாற்றம் அடைந்துள்ள சொற்கள்..

1. தமிழகத்தில் இருக்கும் தொல்குடி சூத்திரர்>தாழ்த்தப்பட்ட சூத்திரர்.

2. ஏற்றத்தாழ்வு இல்லாத Horizontal வருணமுறை>ஏற்றத்தாழ்வு கொண்ட Vertical வருணமுறை.

3. பறையர்>தீண்டத்தாகதவர், ஒதுக்கப்பட்டவர், தனித்து விடப்பட்டவர்.

4. பஞ்சமர்>நால்வருணத்துக்குப் புறம்பான வருணத்தார்.

5. அரிசனம்>தாழ்த்தப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர், சூத்திரர்.

6. தமிழகத்தில் இருக்கும் தேவரடியாள்>தேவதாசி...

கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ, கேரளாவிலோ திராவிடம் என்ற வார்த்தைக் கூட இல்லையே ஏன்?


தமிழ் நாட்டில் மட்டும் திராவிட முன்னேற்ற கழகங்கள், இயக்கங்கள், தலைவர்கள் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்..

தமிழ் நாட்டில் திராவிடம், திராவிடம் என்று பலர் விடாப் பிடியாக பிடித்து தொங்குவதற்குக் காரணம், திராவிடர் என்னும் போர்வையில் ஒளிந்துக் கொண்டு தெலுங்கரும், கன்னடரும், மலையாளியும் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்பதே..

அண்டை மாநிலங்களில் எல்லாம் கன்னட நடிகர்கள் சங்கம், மலையாள நடிகர்கள் சங்கம், தெலுங்கு நடிகர்கள் சங்கம் என்று தான் இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர்கள் சங்கமாம்..

தற்போது, இந்த நடிகர் சங்கத் தலைவர் பதவியை, தெலுங்கன் விஷால் ரெட்டி என்னும் நடிகன் அடைந்து விட்டான்..

எனக்கு சில கேள்விகள்...

விஷாலுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

அவர் வேண்டுமென்றால், அவர் மாநிலத்தில் சென்று நடிகர் சங்கத் தலைவராகட்டும், இல்லை மாநில முதல்வராகட்டும், எவரும் கேட்கப் போவதில்லை.

ஆனால், அடுத்தவனுக்கு பரிமாறியுள்ள உணவை பறித்து திண்ணும் (எச்சி பொறுக்கும் வேலையை) வேலையை இந்த திராவிடர் போர்வையில் இருக்கும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் எப்போது விடுவார்கள்?

எல்லா மாநிலத்திலும் அந்தந்த மண்ணின் மக்களின் ஆளுமையே இருக்கிறது. பிற மொழி மக்கள் அதிகப்படியாக வசித்தாலும், அந்த மாநில மண்ணின் மைந்தர்களில் கட்டுப் பாட்டுக்குள்ளேயே அவர்கள் இருப்பார்கள்..

உதாரணமாக, பெங்கலூருவில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்கள் கர்நாடக மண்ணின் மைந்தர்களை மீறி எதுவும் செய்து விட முடியாது..

கேரளாவை மலையாளி ஆள்கிறான்,
ஆந்திராவை தெலுங்கன் ஆள்கிறான்.
கர்நாடகாவை கன்னடன் ஆள்கிறான்.

ஆனால், தமிழ் நாட்டை மட்டுமே திராவிடன் ஆள்கிறான்...

நமது தமிழ்ச் சொந்தங்களின் அறியாமையாலும், பெருந்தன்மையாலும், இயலாமையாலும், கண்டவனை எல்லாம் தலைமை ஏற்று வீண் போனதாலும், ஏழ்மையாலும் இன்று வரை இந்த இழி நிலை தொடர்கிறது..

நன்றாக தமிழ் தமிழ் என்று வீர வசனமெல்லாம் பேசுகிறார்கள் அனைத்துத் திராவிட இயக்கத் தலைவர்களும், ஆனால், எதாவது ஒரு தமிழர் வாழ்வாதாரப் பிரச்சனை, உயிர்ப் பிரச்சனை என்றால், வாய் மூடி மௌனிக்கிறார்கள். இல்லையென்றால், தமிழ்ச் சமுதாயத்திற்கு எதிரான நிலைப் பாட்டை எடுக்கிறார்கள்..

தமிழ் நாடு தமிழருக்கே. ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு என்பதை தமிழர்கள் நிலை நாட்டினால் மட்டுமே திராவிடர் என்ற போர்வையில் தமிழரின் எச்சில் இலையிலிருந்து உணவை பறித்துச் செல்லும் திராவிடர்கள் திருந்துவார்கள்...

சமஸ்கிருதம் ஆரியர்களின் மொழியா?


சமஸ்கிருதமும், போலி ஆரிய கோட்பாடும்...

கைபர், போலன் கணவாய்களின் வழியாகப் படையெடுத்து வந்தவர்களே ‘ஆரியர்’ என்பது ஐரோப்பியர்களின் கட்டுக்கதை. நான் பலவிடங்களில் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.  இருந்தும், 4000-5000 ஆண்டுகளுக்கு முன் இந்துக்குசு மலைகளைக் கடந்து வந்த ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தை கைப்பற்றினரென நம்மவரும் கிளிப்பிள்ளைப் போல் ஒப்புவிக்கின்றனர்.

எனக்குத் தெரிந்த வரையில், கைபர், போலன் கணவாய்களின் ஊடாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லையைக் கடந்து வந்து சிந்துவெளி பகுதிகளின் மேல் போர் தொடுத்தவன் மாசிடோனியக் கிரேக்கன் அலெக்சாண்டர் மட்டுமேயாவான்.  இதற்குத் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

மேலும், சமஸ்கிருதம் உலகின் பழமையான மொழிகளில் ஒன்று என்றும் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்குள் வந்த ஆரியரின் மொழியாயிருந்தது என்பதும் பெரிய பொய். 

கி. பி. 2ஆம் நூற்றாண்டுக்குமுன் சமற்கிருதம் எனும் மொழியே இல்லையென்பதை அண்மைக்கால ஆய்வுகள் தெளிவுறக் காட்டுகின்றன. 

மேலும், சமற்கிருதம் என்றுமே மக்களால் பேசப்படாத மொழி.

எசுப்பராந்தோவைப் (Esperanto) போன்று அஃது ஒரு செயற்கை மொழி.

கி. மு. 326ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பகுதியின்மேல் அலெக்சாண்டர் நடத்திய படையெடுப்பு இத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

சிந்துவெளியிலிருந்த தமிழரசுகளை அலெக்சாண்டர் ஒழித்துக் கட்டினான். அங்குப் பேச்சு வழக்கிலிருந்த தமிழ்மொழி கட்டு குலைந்து கெட்டுத் திரிந்ததும், அலெக்சாண்டரின் படையெடுப்பால் வந்த வினை. அதன் விளைவாக, கந்தார நாட்டில் தமிழ் வரிவடிவத்தைத் தழுவிக் கரோத்தி (Karoshti) வரிவடிவம் தோன்றியது. வடஇந்தியாவைத் தமிழர்கள் இழக்க அலெக்சாண்டரின் படையெடுப்பே முற்றுமுதல் காரணம்.

அலெக்சாண்டருக்குப் பின் - அதாவது, அலெக்சாண்டர் இறந்த 323ஆம் ஆண்டுக்குப் பின் - கி. மு. 180ஆம் ஆண்டில் டெமெட்ரியசு (Demetrius)  எனும் கிரேக்கப் பாக்டீரிய (Greeco-Bacteria)  அரசன் சிந்துப் பகுதியின் மேல் படையெடுத்து இந்தியக் கிரேக்கப் பேரரசை (Indo-Greek Empire) அங்கு நிறுவினான்.  அவனது ஆட்சிப் பரப்பு இன்றையை குசராத் உள்ளிட்ட சிந்துவெளிப் பகுதி முழுமையையும் உள்ளடக்கியிருந்தது.

இந்தியக் கிரேக்க ஆட்சியின்கீழ்ச் சிந்து வெளியில் கிரேக்கருடன் இனக்கலப்பும் மொழிக்கலப்பும் ஏற்பட்டது.  சிந்து வெளியில் பேசப்பட்டுவந்த தமிழும் திரிந்து கலப்பு மொழிகள் உருவாயின.  அதே போழ்து, கீழைக் கங்ககைக் கரையிலிருந்து கங்கரிடை (மகத) நாட்டிலும் தமிழ் கெட்டுத் திரிந்தது.   ‘அரைமகதம்’, ‘சூரசேனி’ முதலான பாகத (பிராகிரத) மொழிகள், கொச்சையான பேச்சு வழக்கு மொழிகளாகத் தோன்றின. 

புத்தர்களும் அருகர் (சைனர்) களுமே அதற்குக் காரணமாயினர்.  புத்தர்கள் ‘பாழி’ எனும் செயற்கை மொழியையும் தோற்றுவித்தனர்.

சிந்து வெளிப் பகுதியிலும் கீழைக் கங்கைக் கரையிலும் தமிழரசுகள் வீழவும் தமிழ் வழக்கொழிந்து பாகத மொழிகள் தோன்றவும் முதற்பெரும் காரணம் அலெக்சாண்டரின் படையெடுப்பேயாகும். 

ஆரியக் கோட்பாடும் திராவிடக் கோட்பாடும் கைகோத்துக் கொண்டு அந்த மாபெரும் உண்மையை மூடி மறைத்தன.

கொச்சையான பாகத மொழிகளைத் திருத்தமுறச் செய்ய எண்ணி (செவ்வனே செய்யப்பட்டது எனும் பொருள்படும்) ‘சமற்கிருதம்’ எனும் செயற்கை மொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது. 

மகாயான புத்தர்களாலும் அருகர் (சைனர்) களாலும் வடுகப் பிராமணர்களாலும் அது முனைப்புடன் போற்றி புரக்கப்பட்டது; வளர்க்கப்பட்டது.

சமற்கிருதம் சேரலத்தில் (கேரளத்தில்) தோற்று விக்கப்பட்டதாக பாவாணர் ஒரு நூலில் கூறியுள்ளார்.  (எந்த நூலில் அது வருகிறது என்பது நினைவில் இல்லை.) 

வேறு சிலரோ, குமரி மாவட்டத்தில் தான் சமற்கிருதம்  தோற்றுவிக்கப்பட்டதெனக் கூறுகின்றனர்.

மேற்போந்த மெய்ம்மைகளை யெல்லாம் திறந்த மனத்துடன் அலசி ஆராய்ந்து தமிழரின் உண்மையான வரலாற்றைப் புத்தமைக்க வேண்டும்.

- ஆய்வறிஞர் குணா...

வீட்டு வைத்தியம்...


மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.

திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.

வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வைத்து மோரில் கரைத்து உப்புப் போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்; வயிற்று வலியும் இருக்காது.

குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.

நெல்லி வற்றல், சந்தனத்தூள், தனியா மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.

வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.

மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.

வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.

நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.

தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவி வந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.

வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்...

இலுமினாட்டி ராக்கிஃபெல்லர் (Rockerfeller)...


இந்த ராக்கிஃபெல்லர் தான் Standard oil company யோட உரிமையாளன். இந்த நிறுவனம் தான் அமெரிக்காவின் ஆயில் தேவையை பூர்த்தி செய்கிறது.

1886 ல் ஒரு ஆயில் நிறுவனத்தை $72000 க்கு வாங்கினான். 1872ல ஒரு அறக்கட்டளை ஆரம்பித்தான். அந்த காலத்திலேயே அமெரிக்கால மட்டும் 20000 ஆயில் நிறுவனங்களை சொந்தமா வச்சிருந்தான்.

அமெரிக்காவோட ஆயில் தேவையில 85% இவன நம்பி தான் இருந்துற்று 1880 லயே. முதல்முதல்ல 1890 ல ஸ்டீல் தொழிற்சாலை தொடங்கினான்.

சிக்காகோ பல்கலைக்கழகம், ராக்கர்ஃபெல்லர் பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம், Central education board இவற்றை எல்லாம் வச்சிருந்தான் அப்பபவே.

இன்னும் ஹாவர்டட், ஈல் போன்ற பல்கலைக்கழகம் போன்றவற்றை பிடிச்சான்.

முதல் அலோபதி மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை உருவாக்குனது இவன் தான். அது தான் Rockefeller institute for medical research.

இப்போ இதன் பெயர் Rockefeller university.  1911 ல இவன் குடும்பத்தோட கணக்குல காட்டக்குடிய சொத்து மதிப்பு 58000000 US dollars.

இவன் தான் இப்போ அரேபிய நாடுகள்ள உள்ள எண்ணெய் கிணறுகளின் உரிமையாளன். கல்வி துறையும் இவன் குடும்பத்தின் பொருப்பில் தான் உள்ளது. அவ்வளவு தான்.

இந்தியாவில் இவனுடைய நிறுவனங்கள் Smart power for rural development, Rockefeller foundation for agriculture, etc...

தமிழா சிந்தித்து எழு...


175000 தொப்புள் கொடி உறவுகளை பறி கொடுத்து, நதிநீர் உரிமைகளை இழந்து, ஆற்று மணலை, தாது மணலை கொள்ளை கொடுத்து, மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை, உடைமைகளை, உயிர்களை பறி கொடுத்து, தமிழ்நாட்டின் அரசியல் அங்கீகாரங்களை மாற்று மொழியினத்தவர்களுக்கு பறி கொடுத்து, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பிற மொழி மக்களிடம் பறிகொடுத்து, அவமானத்தின் இழிவான சாட்சியங்களாக இருக்கும் நிலை கன்னடருக்கோ, தெலுங்கருக்கோ, மலையாளிக்கோ நிகழ்ந்திருக்கிறதா?

இல்லை.. காரணம் அங்கெல்லாம் மண்ணின் மைந்தர்களே ஆளுகிறார்கள்...

ஆனால் தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்...

தன்னை ஜாதி வேறுபாடு பார்க்காத திராவிட தலைவனாக தமிழர்கள் மத்தியில் காட்டிக் கொள்ளும் தெலுங்கர் வைகோ நாயூடு வின் பின்புலத்தை தோலுறிக்கும் குறிஞ்சாங்குளம் பதிவு...


தமிழர்கள் அனைவரும் வாசித்து வைகோவை தெரிந்துக் கொள்ளுங்கள்...

குறிஞ்சாக்குளம் - ஒரு மீள்
பார்வை....

நெல்லை மாவட்டத்தின் கடைக் கோடியிலுள்ள இந்த குறிஞ்சாக்குளம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட ஒரு கிராமம்....

ஜனத்தொகை என்று பார்த்தால் நாயக்கர்களுக்கு இங்கு நாலாவது இடம்தான்.. ஆனால் அதிகாரத்தில் அவர்களே முதலிடம்...

ஏற்கெனவே இந்தப் பகுதியில் அரசியல் அதிகாரத்தில் கொடிகட்டி பறந்த கலிங்கப்பட்டி வையாபுரி நாயக்கரின் வீட்டிற்கு வந்தவர்களின் பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கே புரியும், வைகோவின் அன்றைய
அதிகாரம்.....

இந்திராகாந்தி
காமராசர்
எம்ஜிஆர்
கருணாநிதி
பக்தவச்சலம்
ஜெயலலிதா ஆகியோர்...

குருவிகுளம் யூனியன் சேர்மனாக தன் அதிகாரத்தை ஆரம்பித்த வைகோ இவ்வளவு எளிதாக உயர்ந்த அதிகாரபீடத்தை நோக்கி நகர்வார் என யாரும் எதிர் பார்க்கவில்லை.....

அருகிலுள்ள மீன்துள்ளி என்ற ஊருக்கு வைகோ வின் சகோதரி மணமுடித்துப் போனார்....

அதனால் கலிங்கப்பட்டிக்கும்.. மீன்துள்ளிக்மிடையே இந்த கூண்டு வண்டிகள் அதிகமாய் பறந்து கொண்டு இருக்கும். திரைச்சீலைகளால் மூடிதிறையிடப்பட்ட அந்த கூண்டு வண்டியை பார்ப்பதற்க்கே தமிழ்சாதிகளை சேர்ந்தவர்கள் அச்சம் கொள்வார்கள். அந்த அளவிற்கு வைகோவின் ஆதிக்கம் கொடி கட்டி பறந்த காலம்.

90விழுக்காடு பள்ளர்களை கொண்ட மீன்துள்ளி கிராமத்தில் வெறும் 6விழுக்காட்டு நாயக்கர்கள் சுதந்திரத்திற்கு பின் 40 ஆண்டுகள் அதிகாரத்தை கையில் வைத்திருந்தது தான் காலத்தின் கோலம்..

இப்படித்தான்1980களின் பிற்பகுதியில் குறிஞ்சாகுளம் காந்தாரியம்மன் கோவில் பிரச்சனையும் வைகோவின் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும். அதுவரை குறிஞ்சாகுளத்தில் உள்ளூர் பிரச்சனையாக இருந்த காந்தாரியம்மன் கோவில் பிரச்சனை இப்போது உலக பிரச்சனையாக மாற்றப்பட்டுவிட்டது.

ஏற்கனவே திமுக வின் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், அசைக்க முடியாத பெரும் பொறுப்புகளில் இருந்த வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டிற்கு சென்ற இந்த பிரச்சனை அவரின் தம்பியால் விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டது..

1991ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதத்தின் இறுதியில் காந்தாரியம்மனுக்கு ஒரு பீடத்தை கட்டி முடித்தார்கள் அங்குள்ள ஆதித்தமிழர்கள்..

கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த பீடத்தில் காந்தாரியம்மன் சிலையை தூக்கி வைத்தவர் அன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளராக. இருந்த ஜான்பாண்டியன்..

இருதரப்பும் கைகலப்பில் இறங்கியது. வழக்கம் போல் காவல்துறை வைகோவின் அரசியல் அதிகாரத்திற்கு பயந்து காந்தாரியின் சிலையை தூக்கி எறிந்தது..

1991ஆம் ஆண்டு வைகோவின் அரசியல் அதிகாரத்தால் தூக்கி எறியப்பட்ட காந்தாரி 24 ஆண்டுகளாக தனக்காக கட்டப்பட்ட பீடத்திற்கு அருகே உள்ள வானொலி பெட்டி அறையில் முடங்கி கிடக்கிறாள்..

இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வருவதற்க்காக அன்றைக்கு சங்கரன் கோவில் கோட்டாச்சியர் அலுவலகத்தில் சமதான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்றைக்கு அந்தப்பகுதியில் இருந்த அத்தனை MF டிராக்டரிகளிலும் சங்கரன் கோவிலில் வந்து குவிந்தார்கள் நாயக்கர்கள்..

அப்பாவிகளான உள்ளூர் தமிழர்கள் அன்றைக்கு திருவேங்கடத்திற்கும் சங்கரன் கோவிலுக்கும் இடையே ஓடிகொண்டிருந்த அஜீஸ் நகரப் பேருந்தில் ஏறி சங்கரன் கோவில் சென்றார்கள்..

கோட்டாச்சியர் அலுவலகத்தில் தங்களுக்கு எதிராக நின்று கொண்டிருந்த நாயக்கர்களை பார்த்ததும் கூனிக்குறுகி போய் இருக்க வேண்டும் அவர்கள்.

வைகோவின் வானுயுயர்ந்த அதிகாரத்தின் கீழ் எதுவும் செய்ய முடியாத சங்கரன் கோவில் கோட்டாச்சியர் அரிதிலும் அரிதான தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.

அதாவது தமிழர்கள் தங்கள் பட்டா நிலத்திலும் நாயக்கர்கள் தங்கள் பட்டா நிலத்திலும் நடந்து கொள்ளலாம்.....
பயன்படுத்திக்கொள்ளலாம்..

நாயக்கர்கள் எந்த காரணத்தை கொண்டும் தமிழர்களுடைய பட்டா நிலத்திற்குள் வரக்கூடாது. இது தமிழர்களுக்கும் பொருந்தும் என உத்தரவிட்டார்..

தமிழர்கள் கண்ணீர் வடித்தார்கள் குடிசைகளில் மட்டுமே தங்களுடைய வாழ்க்கையை அமைத்து கொண்ட ஆதித்தமிழர்களுக்கு அந்த கரிசல்காட்டில் சொந்தம் கொண்டாட கையலக நிலம் இல்லை....

கோட்டாச்சியர் தீர்ப்பு வழங்கிய மறுநாளில் இருந்து குறிஞ்சாகுளத்து தமிழச்சிகளுக்கு தங்களுடைய காலைக்கடனை கழிப்பதற்க்கு கூட வழியற்று போனார்கள்....

அதுவரை விவாசய வேலைகளுக்கு கூப்பிட்ட நாயக்கர்கள் இப்போது புறக்கணிக்க ஆரமபித்தார்கள்.. வாழ வழியற்ற மண்ணின் மைந்தர்கள் முறையிட ஆள் இன்றி தவித்து போனார்கள்.

இடையில் அன்றைக்கு ஒடுக்கப்பட்ட சமூக தலைவர்களாக இருந்த இளையபெருமாள், பசுபதிபாண்டின், சாத்தை பாக்கியராஜ் போன்றவர்கள் எல்லாம் குறிஞ்சாகுளத்திற்கு வந்து போனார்கள். இவர்களில் முக்கியமானவர் வை.பாலசுந்தரம்.

1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ம் தேதி.... குறிஞ்சாக்குளத்து தமிழர் தெருவைச் சேர்ந்தவர்கள் .. அருகில் உள்ள திருவேங்கடம் சங்கர். திரையரங்கத்திற்கு நடிகன் திரைப்படம் பார்ப்பதற்காக சைக்கிளில் சென்றார்கள்...

திரைப்படம் பார்த்துவிட்டு இரவு பதினோரு மணியளவில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்து இடைமறித்த இனவெறிக் கும்பல். சைக்கிளில் வந்தவர்களை சராமரியாக தாக்கி வெட்டியது....

அப்பாவிகள் நாலுபேர் துடி துடிக்க தங்கள் உயிரை நீத்தார்கள்....

ஒருவருடைய ஆண் உறுப்பை வெட்டி செத்துப்போன இன்னொருவரின் உறுப்பிலும் வைத்து வெறியாட்டம் ஆடியது காலிக்கும்பல்....

செய்தி காட்டுத்தீயாய் பரவியது.. ஆனால் எதுவும் நடக்கவில்லை....

செத்த நான்கு பேரை இரண்டு குழிகளில் போட்டு மூடினார்கள்....

கொலைவழக்கு விடுதலை ஆனது..

இந்தக்கொலைக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது அன்றைக்கு நெல்லை மாவட்ட காவல் துறைக்கு தெரியாமலில்லை..

ஆனால் வைகோவின் அசுர பலத்திற்கு முன்னால் காவல்துறை மண்டியிட்டது..

உலகத் தமிழர்களுக்காக
குரல்கொடுத்து கண்ணீர் சிந்திய வைகோ அவர்கள்.....

கூப்பிடு தூரத்தில் குறிஞ்சாக்குளத்தில் நடந்த நான்கு அப்பாவிகளின் படுகொலைக்காக இன்றுவரை ஒரு இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்....

குறிஞ்சாக்குளம் உலகம் கண்டிராத ஒரு பெருந்துயர்...

தமிழகத்தைச் சேர்ந்தவர்களே இன்னும் வாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் பின்தங்கி இருக்கிறபோது, வெளிமாநிலத்தவருக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்குவது எப்படி சரியாகும்.?


குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?


மன அழுத்தம் என்பது ஒருவரை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவானதே.

ஆனால் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கிடையேயான மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு...

முறையான அரவணைப்பு இல்லாதது, பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, சமுதாயச் சூழல் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே மன அழுத்தம் ஏற்படுகிறது.

இதனால் அவர்கள், தவறான பாதைக்கு செல்வதாக ஏற்கனவே வெளிவந்த பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த மன அழுத்தத்தை சிறந்த குழுத் திட்டத்தின் மூலம் தடுக்க முடியும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சர்வதேச நிறுவனம், கோச்ரே எனும் புத்தகப் பதிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சியை நடத்தியது. இதில் மன அழுத்தம் அதிகரிப்பதற்கான காரணம் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்தது..

இதுகுறித்து, அக்குழுவில் ஒருவரான, குழந்தைகள் மனநல மருத்துவர் சாலி மெர்ரி கூறுகையில், இந்த ஆராய்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏனென்றால், மன அழுத்த நோய் உலகெங்கிலும் பொதுவாகவே உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள், வளர்ந்த நாடுகளில் மன அழுத்தக் குறைபாடு இரண்டாவது இடத்தையும், வளரும் நாடுகளில் பிரதான இடத்தையும் பெற்றிருந்ததாக அறிவித்தனர்..

இதுகுறித்து, மனநல வியாதியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்து வரும் ஜான் ஹாகின்ஸ் பொது நலப் பள்ளியின் துணை பேராசிரியரான டாமர் மெண்டெல்சன் தெரிவிக்கையில், இந்நோயின் மூலம் இளைஞர்களின் தினசரி மகிழ்ச்சி அடியோடு அழிக்கப்படுகிறது..

மேலும், அவர்களின் பள்ளி மற்றும் சமுதாயத்துடனான உறவையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி, மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும்.

இறுதியில், தொடர்ச்சியான நோய்களில் கொண்டு சென்று நிறுத்தும். முன்கூட்டியே எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் இதனை தடுக்கலாம்.

ஆனால் இம்முறையை குழந்தை களுக்கு செயல்படுத்துவது மிகக் கடினமான ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்...

நாங்கள், பல்வேறு நாடுகளில், ஐந்து முதல் பத்தொன்பது வயதிற்குட்பட்ட மொத்தம் 14,406 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 53 ஆய்வுகளை ஒன்றிணைத்தோம். இதில், ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டவர்களிடம் எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை..

குழு சார் தடுப்பு நடவடிக்கை, மற்ற மருத்துவ முறைகளை விட அனைத்து நபர்களிடமும் எளிதில் சென்றடையக்கூடியதாக உள்ளது.

பெரும்பாலான திட்டங்கள், புலனறிவு நடத்தை சிகிச்சை சார்ந்தவையாக உள்ளன. மற்றவை, அழுத்தத்தைக் குறைத்தல், சுயதிறன் மற்றும் அதிர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஒழுங்குபடுத்தும் நுணுக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது.

மன அழுத்தம் என்பது உலகெங்கிலும் உள்ள தனி மனிதர்களிடம் உள்ள ஒரு நோயாகும்.

இந்த ஆராய்ச்சி இளைஞர்கள், பெற்றோர்கள், சுகாதார நல அலுவலர்கள், குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் நபர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

ஆனால், மன அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைக்கு அதிக செலவாகும். இதனை பல நாட்டு அரசுகளிடம் விவரித்திருக்கிறோம். அவர்கள் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்...

புல்லட் ரயிலுக்கு ஜப்பான் பிரதமருடன் பாஜக மோடி தொடக்க விழா நடத்தியது சும்மா வாயில சுட்ட வடையே.. அதற்கான எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை...


எதற்கு டென்ஷன்...


ஓரு மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் உடலில் பயணிக்கிறது.

ஒருவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான்.

750 தசைகளை அசைக்கிறான்.

70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான்.

இந்தச் செயல்களால் மனிதன் களைத்துப் போவதில்லை..

ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன..

இதில் நம் முயற்சி என்று எதுவும் இல்லை.

நாமாக முயற்சி எடுத்துச் செய்யும் சில்லறை வேலைகளால்தான் நாம் களைத்துப் போகிறோம். ஏன்?

இயற்கை, தான் செய்யும் வேலைகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதில்லை. நாம் துரும்பை நகர்த்தினால் கூட கணக்கு வைத்துக் கொள்கிறோம்.

இயற்கை, தன் செயல்களைச் சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவே கருதுகிறான்.

இயல்பாக, மனிதன் மகிழ்ச்சியாக செய்யும் எந்தச் செயலும் அவனுக்கு களைப்பையும், டென்ஷனையும் தருவதில்லை. ஆனால் அப்படிச் செய்யும் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இயற்கை தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவதில்லை. தேவையுள்ளதை மட்டுமே செய்வதால் அனைத்தையும் அலட்டிக் கொள்ளாமல் செய்து முடிக்கிறது.

ஆனால் மனிதன் செய்கின்ற பல செயல்கள் பயன் தராதவையாகவும், தேவையில்லாதவையாகவும் இருக்கின்றன.

அதனால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய அவனுக்கு நேரம் போதுமானதாக இல்லை.

இயற்கையின் வழி முறைகளைப் பின்பற்றினால், நோ டென்ஷன்...

இந்தியாவில் நீதித்துறை என்பது பணம் - பதவி உள்ளவனுக்கு மட்டுமே சாதகமாக செயல்படும்...


பார்ப்பனர் தமிழரே...


நான் தெரியாமல் தான் கேட்கிறேன் தமிழ்ப் பார்ப்பனரை ஏன் எல்லாரும் வெறுக்கிறீர்கள்?

அதென்ன எங்கு திரும்பினாலும் பார்ப்பான்
எதற்கெடுத்தாலும் பார்ப்பான்
எவனைக் கேட்டாலும் பார்ப்பான்.
அப்படி அவர்கள் என்ன செய்தார்கள் உங்களை?

சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தினானாம் பார்ப்பான், அவன் மனுதர்மம் என்று சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கு எங்கே போனது அறிவு?

(மனுதர்மம் உருவாக்கியது திராவிடன் தான் தமிழன் இல்லை)

எந்த ஊர் சாதிக்கலவரத்தில் பார்ப்பான் துணைபோனான்;
சாதியைப் பார்ப்பன் ஏற்படுத்தினான் எப்படி சொல்கிறீர்கள்?

அந்தக்காலம் முதல் இன்றுவரை மக்களுக்காகப் பாடுபட்ட எத்தனையோ பார்ப்பனர்கள் இருக்கின்றனர்; தவிர உலகத்தில் அத்தனை மூலைகளிலும் நான்கடுக்கு சாதிகள் உள்ளன;

ஆன்மீகத்துடன் இணைந்துள்ள முதல் அடுக்கு, நிலத்தை ஆக்கிரமித்து காவல் மற்றும் படைத்துறையுடன் இணைந்த இரண்டாம் அடுக்கு,
கருவிகளைக் கொண்டு தொழில்செய்யும் மூன்றாம் அடுக்கு,
உடலுழைப்பை மட்டுமே கொண்டு பிழைக்கும் நான்காம் வகுப்பு;

உலகம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறது;

அதனால் இவை சரி என்று சொல்லவில்லை இவை ஒழிக்கப்படவேண்டியவையே;
தவிர நீங்கள் வாடிகன் தேவாலயத்திலும் மக்கா மசூதியிலும் கூட பிறப்பால் உயர்ந்தவரென்று அந்த அந்த மதப் பிராமணனைக் காணமுடியும்;



இத்தகையவர்களின் ஆதிக்கபலமும் ஒழிக்கப்பட வேண்டியதே;

பிராமணன் வேறு
பார்ப்பனன் வேறு

தமிழ்ப் பார்ப்பனர் உண்மையில் மற்றபகுதி பார்ப்பனரைப் போல் ஆண்டாண்டு காலம் அடக்கியாளும் சாதியினர் கிடையாது;

1300 வருடங்கள் முன்பு வேற்றின பிராமணர்கள் பல்லவர்கள் ஆட்சியில் இடம் பிடித்தனர் இதன் பிறகு சமசுக்கிருதம் மெல்ல மெல்ல தமிழ்ப் பார்ப்பனர் மீதும் திணிக்கப்பட்டு வேற்றினப் பிராமணருக்கும் தமிழ் பார்ப்பனருக்கும் கலப்பு நடந்து பிராமணர் பார்ப்பனரோடு பார்ப்பனராய் கலந்துவிட்டனர்;

700வருடங்கள் பிறகு தெலுங்கு -கன்னட அரசான விசயநகர ஆட்சியில் மீண்டும் வேற்றினப் பார்ப்பனர் நுழைந்து இன்னும் வலுவாக தமிழர் அனைவர் மீதும் சமசுக்கிருதம் திணிக்கப்பட்டது;

அதன்பிறகு 300 ஆண்டுகள் முன்பு ஆங்கிலேயர் வந்து கிறித்துவத்தையும் ஆங்கிலத்தையும் திணித்தனர்;

இந்த மூன்று காலகட்டத்திலும் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தும் சமசுக்கிருதத்தை எதிர்த்தும் போராடியவர்களில் தமிழ்ப் பார்ப்பனர் பங்கு மறுக்க முடியாதது;

அதை போல வேற்றின ஆதிக்கத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய தமிழ்ப் பார்ப்பனரின் பங்கும் மறுக்கமுடியாதது;

ஏன் உங்கள் கண்களுக்கு நல்ல பார்ப்பனர்கள் தெரிவதேயில்லை?

தமிழுக்காகப் பாடுபட்ட பார்ப்பனர் உங்கள் கண்களுக்குத் தெரியவேயில்லையா?

ஆயிரம் ஆண்டுகள் முன்பு ராசராசனின் ஆட்சியில் பிராமண மற்றும் சமசுக்கிருத ஆதிக்கத்தை ஆராய்ந்து அலசிக் காயப்போடும் நீங்கள் 300வருடம் முன்பு வரை பிராமண மற்றும் சமசுக்கிருத பொற்காலமான விசயநகர ஆட்சியைப் பற்றி வாய்திறப்பதே இல்லையே ஏன்?

திராவிடப் பாசமா?

பார்ப்பனர் பேசும் தமிழின் மொழிநடை வேறுபட்டு இருக்கிறது என்றால் கோயம்புத்தூர் கவுண்டர்கள் தமிழும், நாகர்கோவில் மீனவர் தமிழும், சென்னை மீனவர் தமிழும், பாலக்காடு பார்ப்பனர் தமிழும் வெவ்வேறாக இருப்பதைக் கவனிக்கவில்லையா? என்றால் அவர்கள் தமிழர் இல்லையா?

ஓதும் தொழிலில் வலுக்கட்டாயமாக சமசுக்கிருதம் திணிக்கப்பட்டதால் ஓதும் பார்ப்பனர்கள் சமசுக்கிருதத்தைக் கற்கின்றனர்;

எல்லாப் பார்ப்பானும் சமசுக்கிருதம் கற்கிறான் என்று எவன் சொன்னான்?

கி.பி.700லிருந்து கி.பி.1300 வரை பிராமணருடன் இணைந்து ஆதிக்க சாதியாயிருந்த தமிழ்ப் பார்ப்பனர்,1300 களிலிருந்து 1900 வரை ஒடுக்கப்பட்டு அதன் பிறகு 1900க்கு பிறகு மீண்டும் தலைதூக்கினர்;

எப்படி என்றால் 1909ல் வந்த மிண்டோ - மார்லி சீர்திருத்தம் 1919ல் வந்த மாண்டேகு செம்சுபோர்டு சீர்திருத்தம் மூலம் ஆங்கில அரசு இந்தியருக்கு விட்டுக் கொடுத்த அரசு பதவிகளில் தமது கல்வி மூலம் இடம் பெற்று மீண்டும் ஆதிக்க சக்தியாக வளர்ந்தனர்;

இன்று அவர்கள் மீண்டும் ஒடுக்கப்பட்டு ஐம்பதாண்டுகளில் வேற்றின வந்தேறிகள் அவர்களை விரட்டி விடும் நிலை வரவிருக்கிறது;

பார்ப்பனீயத்தை ஒழிக்கிறோம் என்று வந்தேறிகளை வாழவைக்கும் திராவிடத்துக்கு இடம்கொடுத்தோம்;

இருந்தாலும் இந்தப் பார்ப்பனர்களை செருப்பாலேயே அடிக்க வேண்டும்;

எவனோ ஒருவன் வந்து 'பார்ப்பானை ஒழி' என்று மற்ற தமிழரிடம் சொல்லும் போது நாங்களும் தமிழர் தான் என்ற வகையில் தமது ஊடக பலத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யாமல் முட்டாள்த் தனமாக ஆன்மீகம், இந்துத்துவம், சமசுக்கிருதம், ஆரியம் என்று வந்தேறிகளுக்குத் தோதுவான வழியிலேயே பயணித்து மற்ற தமிழருக்கும் எதிரியாகி வேற்றினப் பார்ப்பானோடும் இணைய முடியாமல் தமது பதவி பலத்தை இறுக பிடித்தபடி தனித்து நிற்கின்றனர்;

உங்கள் ஊரில் அக்கிரகாரம் இருந்தால் உற்றுக் கவனியுங்கள்...

அதில் இப்போது பாதிகூட பார்ப்பனர் இருக்கமாட்டார்கள்;

வந்தேறிகளும், ஆதிக்க சாதியாரும் பிராமணர்களை விரட்டி விட்டு அங்கே நிறைந்துவிட்டனர்;

பார்ப்பனரும் கல்வி கற்றுக் கொண்டு வெளி நாடுகளுக்கு ஓடிப்போவதையே விரும்ப ஆரம்பித்துவிட்டனர்;

காலில் செருப்பே போடாத, வெறும் தண்ணீரில் துவைத்து பழுப்போடிய ஒற்றை வேட்டியோடும் பூணூலோடும் ஓட்டை மிதிவண்டியில் கால்வாயடிப் பிள்ளையார் கோவிலுக்குப் பூசை செய்து சில்லறையை எண்ணிக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஒரு ஏழைப் பார்ப்பானைக் கூடவா நீங்கள் பார்த்ததில்லை?

நான் தொடர்வண்டியில் பயணித்தபோது 'பார்ப்பனத் தமிழில்' பேசிக்கொண்டு வந்தார் ஒருவர்; சமசுக்கிருதத்தையும் கிருசுணனையும் புகழ்ந்துகொண்டே வந்தவர் திராவிடத்தையும் ஒருபிடி பிடித்தார்;

அவர் கிருட்ண பக்தியை வளர்க்கும் ISKCON இயக்கத்தைச் சேர்ந்தவராம்;
மதுரா என்றொரு இடம் டெல்லி அருகே உண்டு அங்கேதான் கிருட்ணன் பிறந்தாகக் கூறப்படுகிறது; அங்கே தொடர்வண்டி நிற்காவிட்டால் சங்கிலிப் பிடித்து இழுத்து விடுவாராம்; கிருட்ணன் பிறந்த இடமே இந்தியாவின் தலைநகரமாம்; ஒட்டுமொத்த இந்தியாவும் அனைவருக்கும் சொந்தமாம்; மொழிவாரியாக பிரியக்கூடாதாம்;

தமிழ்நாட்டில் தமது இயக்கத்துக்கு(?) எதிர்ப்பு இருக்கிறதாம்; அவரிடம் "நீங்கள் வீட்டிற்குள் என்னமொழி பேசுகிறீர்கள்" என்று கேட்டேன்; அவர் "தெலுங்கு" என்றார்; நான் "அதென்ன வந்து குடியேறிவர்கள் மட்டும் மதம், நாட்டுப்பற்று, மனிதநேயம் என்று மாநிலம் கடந்த விடயங்களை வலியுறுத்துகிறீர்கள்?" என்று கேட்டேன். உறைந்துபோய்விட்டார்;

வந்தேறிகள் பிராமணரிலும் ஆதிக்க சாதியிலும் தாழ்த்தப்பட்டோரிலும் கலந்து பல்லாயிரக்கணக்கான வருடங்களாக ஒரே இனமாக வாழும் மக்களை வெவ்வேறு திசையில் இழுக்கிறார்கள்;

அந்த வந்தேறிப் பிராமணன் சொன்ன ISKCON பற்றிக் கூறவா?

இது கிருட்ண பக்தியை பரப்பும் 'அமெரிக்க' நிறுவனம்; இவர்கள் வேலை என்னவென்றால் பிராமணர் போலக் குடுமிவைத்து காவியுடுத்தி நாமம் போட்டுக் கொண்டு கிருட்ணநாமம் கூட உச்சரிக்கவராத வெள்ளைக்காரர்களைக் கொண்டு, பல ஏக்கரில் சலவைக்கல் பதித்து வண்டிநிறுத்தும் இடத்துடன் கூடிய குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட ஆடம்பரமானக் கோவில்கட்டி அதில் வரும் காணிக்கையை அமெரிக்காவுக்கு வருமானமாக அனுப்புவது;

பெங்களூரில் இருக்கும் ISKCON கோவில் ஒன்று மட்டுமே colgate என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் சம்பாதித்து தந்த லாபத்தை விட மூன்று மடங்கு அமெரிக்காவுக்கு சம்பாதித்துத் தருகிறது;

பெங்களூரை விட பெரிய ISKCON கோவில் டெல்லியிலும் அதைவிடப் பெரிய கோவில் மும்பையிலும் அதைவிடப் பெரியது மதுராவிலும் உள்ளது;

எந்த விளம்பரமும் செய்யாமல் வருமானவரி விலக்குடன் இந்து, கிறித்தவ, இசுலாமிய கோயில்களைக் கட்டி காசுபார்க்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இப்போது போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன.

மதம் என்பதே மக்களிடம் இருக்கும் இறை நம்பிக்கை மூலம் சிலர் சுரண்டிக் கொழுக்கத்தான் என்றாலும் இப்போது அது உலகளாவிய வியாபாரமாகிவிட்டது;

பிராமணன் பெயரைச் சொல்லி எவன் எவனோ பிழைக்கிறான்;

அதனால்தான் கூறுகிறேன் பார்ப்பனீயத்தை ஒழியுங்கள் ஆனால் பார்ப்பனர்களை அல்ல;
அவர்களும் இம்மண்ணின் மைந்தரே;

வேற்றினத்து பிராமணரை தமிழ்ப் பார்ப்பனருடன் குழப்பாதீர்கள்;

தமிழராக நாம் இணைவதற்கு எந்தக் காரணமும் குறுக்கே வரக்கூடாது.

தமிழா விழித்தெழு...

மாமல்லபுரம் கட்டிடக் கலையை ஒரு முறையாவது சென்று ரசித்து விட்டு வாருங்கள்...


கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் எனும் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் இன எதிர்ப்பே...


பெரியார் என்பதை நம் இனத்தின் பெரியவர் என எண்ணி இனி ஏமாற வேண்டாம்...

அதற்கு பதில் இக்கட்டுரை முடியுமட்டும் எளிதில் புரிந்து கொள்ள பெரியார் என்பதை ஈ.வே.இரா.வின் பட்ட பெயராக வைத்துக் கொள்வோம்.

பார்ப்பனர் என்றால் யார் ? பிராமணர் என்றால் யார் ?

பெரியார் அதிகமாக பார்ப்பனர் என்ற சொல்லையே தமிழர்களின் எதிரியாகக் காட்டுவதும் எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் பிராமணர் என்ற பதத்தை எதிரியாகக் காட்டுவது ஏன் ? அதற்கான அரசியல் காரணம் என்ன ?

என யாரவது கேட்டால் கேட்டவர் மீது ஒட்டு மொத்த திராவிடவாதிகளும் பாய்ந்து பிராண்டுகிறார்கள்.

பார்ப்பான் எவ்வளவு கொடியவன் தெரியுமா ! அவர்கள் நச்சுப் பாம்பை பேன்றவர்கள் ! அவர்களுக்கு வக்காலத்து வாங்க முன் வருபவன் ஒரு இந்துதுவ வாதியாகத்தான் இருப்பான் என நம் தமிழர்களே நம்மை தூற்றுகிறார்கள்.

பார்ப்பான் என்ற சொல்லுக்கும் பிராமணன் என்ற சொல்லுக்கும் இடையிலான அரசியல் காரணத்தை இரண்டு வரிகளில் சொல்லிவிட்டு அதற்கான வரலாற்றுக் காரணத்தை பார்ப்போம் .

பார்ப்பான் என்றால் நிர்வாகி, மேலாளன் (மேண்மையானவன்).
 
பார்ப்பனியம் என்றால் மேலாண்மை, மேல் தட்டு தன்மை (management).

பிராமணர் என்றால் மாற்ற இயலா ஆளும் வர்க்க கோட்ப்பாட்டின் (மதவியல்) கோட்பாட்டின் சித்தாந்தி.
 
பிராமணியம் என்றால் மாற்ற இயலா ஆளும் வர்க்க கோட்ப்பாட்டின் (பாசிச அரசு) சித்தாந்தம் என்பதே.

பார்ப்பான் என்ற சொல் தமிழில் தமிழன் நாகரிகம் அறிந்த காலம் தொட்டு தொடர்ந்து வரும் ஒரு பதவிக்கான சொல் என்பதை முந்தைய வரலாற்றின் மூலம் அறிவோம்.

பிராமணன் என்ற சொல் உழைக்கும் மக்களை சுரண்டும் அதிகாரத்தை மாற்ற இயலாமல் தொடர்ந்து வழி நடத்திக் கொடுப்பவனுக்கு கொடுக்கப்பட்ட சொல்.

இரண்டும் தோற்றத்தில் மேட்டுமை தன்மை உடையது. ஆனால் இரண்டும் ஒன்றல்ல ..

பார்ப்பான் என்பது பதவி. பிராமணன் என்பது அரசியல்.

பார்ப்பான் தமிழன்.
தமிழ் மண்ணில் பிராமணன் என்பவன் தெலுங்கன், கன்னடன், மராட்டியன்.

திராவிட அரசுகள் தமிழ் மண்ணை அடிமை கொள்ள பாதை அமைத்துக் கொடுத்தவர்கள். மொத்தத்தில் பெரியார் பிறந்த அதே தேசிய இனத்தை சேர்ந்தவர்கள். பெரியார் தமிழை காட்டு மிராண்டிகளின் மொழி என்றால் சங்கராச்சாரியார் என்ற பிராமணன் தமிழை நீஷ பாஷை என்பார். இருவரும் கன்னடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பார்ப்பான் எவனும் தமிழை பழிப்பதில்லை ( சங்க இலக்கியங்களில் பிராமணர் என்று எங்குமே குறிப்பிடப் படவில்லை. ஆனால் அந்தணர், பார்ப்பார், ஐயர், என்ற சுட்டுச் சொற்களே காணப்படுகின்றன ஆக அந்தணர், பார்ப்பார், ஐயர் என்ற பொருள் கொள்ளத்தக்க சமூகம் தமிழுக்குச் சொந்த மானவையே ).

தமிழர்களை அடிமை கொள்ள திராவிடர்களின் ஆளுமையை என்றைக்குமே விட்டுக் கொடுக்காமல் தமிழர்களை தொடர்ந்து முட்டாள்களாக வைத்திருக்க வேண்டுமானால் அவர்களின் அறிவு ஜீவியான பார்ப்பனர்களை பிளவு படுத்திட வேண்டுமென  திட்டமிட்டவர் ஈ.வெ.இரா.

எனவே தமிழில் தோன்றிய பார்ப்பான் என்ற சொல்லின் மீது பிராமணர்கள் வரலாற்றில் செய்திட்ட சூழ்ச்சிகள் அனைத்தையும் போட்டு தமிழுக்கும், தமிழனுக்கும் நிரந்தர பகையாளிகள் பார்ப்பனர்கள் என நம்ப வைக்கப்பட்டது.

பார்ப்பான் தமிழன் என உணர்ந்து தமிழ் தேசிய நீரோட்டத்தில் என்றுமே கலந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்ப்பானை ஆரிய பார்ப்பான் என்று சொல்லி ஆரிய கலப்பால் உருவான தெலுங்கு, கன்னட, மராட்டிய பிராமணர்களை காப்பாற்றினார்.

கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் திராவிடக் கொள்கையை தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக் கொள்ளாதது ஈ.வெ.ராவுக்குத் தெரியும் என்றாலும் தமிழனை பிளவு படுத்திய கையோடு நாம் திராவிடர்கள் என நம்ப வைத்தார்.

பெருவாரியான தமிழர்களிடையே பேசுகையில் தமிழர்களாகிய நாம் என்பார். ஆனால் தனிப்பட்ட முறையில் பொதுவாக பேசும் போது தன்னை கன்னடன் என சொல்லிக் கொள்ள தவறியதில்லை.

ஈ.வெ.ராவின் சாதி மறுப்பு என்பது அதிக கலப்பில்லா தமிழினத்தை எப்படியாகிலும் கலப்பினமாக மாற்றி விட வேண்டுமென துடித்தார்.

இங்கே பிற இனத்தை சேர்ந்த கன்னடர், தெலுங்கர், மலையாளிகள், மராட்டியர்கள் என அனைவரும் சாதியாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

ஆகவே சாதி மறுப்பை ஊக்குவிப்பதன் மூலம் தனி தமிழ் தேசிய ஓர்மையை சீர்குலைத்து விட முடியும் என நம்பினார்.

பெரியாரின் சாதிமறுப்பு தமிழனை வரணாசிரமத்தில் இருந்து மீட்டெடுக்க அல்ல என்பதை தமிழர்களில் பலர் காணத் தவறினார்கள்.

தமிழர்களிடையே சாதி என்னும் கொடிய தீயை மூட்டி தீண்டாமை என்னும் கொடிய வழக்கங்களையெல்லாம் புகுத்தி தமிழ் மக்களை ஒருவருக்கொருவர் பகைத்துக் கொள்ளச் செய்து உதிரிகளாக்கியவர்கள் தமிழ் பார்ப்பனர்கள் அல்ல தமிழனின் வரலாற்று நெடுகிலும் பிராமண, கன்னட, வடுக, ஆட்சியாளர்களே..

பெரியாரும் திராவிடவாதிகளும் பார்ப்பான் என்று பிராமணனை சொல்லி விடுவதால் நம் மீதான சூத்திர இழிவு நீங்கிவிட்டது என கருதுவது முட்டாள் தனமானதாக தெரியவில்லையா !

சனாதனத்தை நம் பிற்ப்படுத்தப் பட்ட சாதிகள் ஏற்றுக்கொண்டது போலவே தமிழ் பார்ப்பனரும் ஏறுக்கொண்டனர்.

ஒட்டு மொத்த தமிழினத்தையும் இழி நிலைக்குத்தள்ளிய பிராமணியத்தின் மேட்டுமை தன்மையை இடித்துரைக்காமல் நம் இனத்தின் பார்ப்பனரின் உயர்வை கண்டு இடித்துக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களோடு நேரடி எதிரியாக களத்தில் நிற்ப்பவர்கள் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளே அன்றி தமிழ் பார்ப்பனர்கள் அல்ல..

பிற்ப்படுத்தப்பட்ட சாதிகள் தாழ்த்தப்பட்டவனை கட்டித்தழுவ தயாராய் இருப்பது போலவும், பார்ப்பான் மட்டுமே இழிவாய் கருதுவது போல் நினைப்பது சுத்தப் பைத்தியக் காரத்தனமில்லையா!
                                                       
தாழ்த்தப்பட்டவனோடு நேரடியாக களத்தில் எதிரியாய் இருப்பவர்கள் தமிழ் இன பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளும், வடுக, கன்னட, மலையாளிகளில் உள்ள மேட்டுக் குடிகளும் , முஸ்லீம், கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்த மேட்டுக் குடிகளும் தான் என்பதை மறுக்க இயலாது.

பிராமணனை பார்ப்பான் என சொல்லுவதால் நம்முடைய சூத்திர இழிவு நீங்கி விடும் என திராவிடவாதிகள் கட்டி விட்ட பொய்யை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் தன்னுடைய மேட்டுமைத் தன அதிகாரத் திமிரை பார்ப்பான் என்ற சொல்லின் திரைமறைவில் மறைக்கப் பார்க்கிறது என கருத வேண்டி இருக்கிறது.

பார்ப்பான் என்னும் தமிழனை தமிழினத்தின் எதிரியாக காட்டிய பெரியார் ஆதித் தமிழனை ஆதி திராவிடன் என்று அழைக்கத் தவறவில்லை.

ஆக தமிழினத்தின் அறிவு ஜீவியையும், உழைக்கும் வர்க்கத்தையும் தமிழினத்திலிருந்து பிரித்து விட்டு மீதி இருக்கும் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளோடு வடுக, கன்னட, மலையாள கூட்டத்தையும் ஒன்றிணைத்து திராவிடப் போர்வையால் போர்த்தினார் பெரியார்.

ஆதலால் தான் திராவிடம் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குத்தான் நன்மை பயப்பதாக உள்ளது. அதிலும் வடுக, கன்னட, மலையாளிகளே அதிக நன்மை அடைகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சாதிகளை பெரியார் தள்ளியே வைத்திருந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எதையும் பெரியார் செய்யவில்லை.

பல நேரங்களில் திராவிட ஆண்டைகளுக்கு ஆதரவாகவே செயல் பட்டார்.

பிற்ப்படுத்தப்பட்ட சாதிகள் தான் திராவிடத்தை அதிகம் உயர்த்திப் பிடிக்கிறார்கள் காரணம் பார்ப்பனனின் மேட்டுமையின் மீதுள்ள பொறாமை அத்துடன் தாழ்த்தப் பட்டவன் மீது இவர்களுக்கு இருக்கும் தீண்டான்மை.

இது இரண்டையும் மூடி மறைக்க பயன்படுவது திராவிடம்.

எனவே திராவிடத்தையும் பெரியாரையும் இவர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

ஆக இதில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவெனில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்பது சாதி மறுப்பு என்ற பெயரில் தமிழின எதிர்ப்பே என்பது புலனாகிறது...