11/07/2017

நாம் அனைவரும் தமிழரா? திராவிடரா? இது பிரிவினைக்காக அல்ல, பிரிந்துகிடக்கிற தமிழர்கள் ஒன்றுசேர்வதற்கு...


இந்த மண்ணில் (பூமியில்) பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ உரிமை உண்டு. உரிமை பறிக்கப்படும் போது, நசுக்கப்படும் போது அதை எதிர்த்து கேட்பது நியாயம் தான்.

அப்படி பண்ணெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் யார் என்றும், நம் வரலாறு எப்படிப்பட்டது என்றும் தெரியாமல் வாழ்வதுதான் காரணம், இப்படி வரலாறு தெரியாமலேயே தமிழன் தலைமுறை அழிந்துவிடும் அல்லது அழிக்கப்பட்டுவிடும்.

பயத்திலேயே, நம்மிடம் தாழ்வு எண்ணம் குடிகொண்டுவிடும். இப்படியே நாம் மற்றவர்களின் கூலிகளாக, வேலைக்காரர்களாக மாற்றப்பட்டு விடுவோம்.

நம்மை திராவிடம் என்ற ஆட்டுமந்தைக்குள் அடைத்து ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். ஆட்டுமந்தையில் மாட்டிய சிங்கம் எப்படி தன் நிலை உணர்ந்து மீண்டதோ.. அதைபோல் நம்மை போர்த்தியுள்ள திராவிட முகமூடியை கிழித்தெறிந்து நாம் அனைவரும்  தமிழன் என்ற அடையாளத்தை உண்ர்வோம். இது காலத்தின் கட்டாயம்.

தமிழ் அனைத்திற்கும் தாய் மொழி, கலப்பில்லாத தனி மொழி. மற்ற திராவிட மொழிகள் கலப்புடையவை, அவை திராவிட மொழியாக இருக்கட்டும்.

இப்படிப்பட்ட திராவிடர்கள் தன்னை திராவிடர்கள் என்றோ, திராவிடக் கட்சிகளையோ தங்கள் மாநிலத்தில் அனுமதிப்பதே இல்லை. எனவே திராவிடக் கொள்கை தமிழகத்தில் மட்டும் ஏன்?

இதை நாம் சிந்திக்க வேண்டும்...

தமிழ்நாட்டில் தமிழருக்கு நன்மை செய்யும் ஆட்சி நடக்கிறதா? இல்லை.

சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் என பல தலைமுறையாக முகம்மதியர்கள், ஆர்காடு நவாப்புகள், ஆங்கிலேயர்கள், தெலுங்கர், கன்னடர், மராத்தியார், கேரளர் என பலரும் ஆட்சி செய்தனர், இன்றும் செய்கின்றனர். இதை தொடர விடலாமா?

80 விழுக்காடு உள்ள மக்களில் ஆளுமைக்கு பஞ்சமா, அறிவுக்கு பஞ்சமா. நிலை போனால் நாம் நம் வரலாற்றை, நூல்களை இழந்தது போல, லட்டசக்கனக்கான மக்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டது போல இங்கும் தமிழினம் அழிக்கப்பட்டுவிடும் அல்லது நிச்சயமாய் முடக்கப்படும்.

தமிழன் என்ற நம்முடைய அடையாளத்தை மறந்துவிட்டால், நாளைய நம் தலைமுறை பதிவு செய்யப்பட்ட கணிப்பொறி போன்று இயங்கும். சிந்தனை அறிவில்லாத, மொழி அறிவு இல்லாத கணிப்பொறி பொம்மை போல்தான் இருப்பார்கள். வருங்காலத்தில் அரசியல்வாதிகள் நம்மை சுலபமாக விசை கொடுத்து இயக்குவார்கள்.

இதற்கு சில இலவசங்களை அள்ளி வீசுவார்கள். வலையில் சிக்கிய மீன் போல மாட்டி தவிக்க வேண்டியதுதான் நம் நிலமை.

தமிழர்களே!, ஏனென்று கேட்க நாதியில்லாத இளைய சமுதாயமாக தமிழினம் உருவாவதை விரும்புகிறீர்களா, சிந்தியுங்கள்..

நாமெல்லோரும் தமிழர்கள். இனி நமக்கு தேவையில்லை திராவிடன் என்ற முகமூடி..

நம்முடைய உண்மையான தமிழன் என்ற முகம்தான் இந்த உலகிற்கு நம்மை அடையாளம் காட்டும்.

எப்படி இலங்கை தமிழன், பூர்வீகத்தை இழந்து அகதி ஆனானோ அதேபோல், தமிழ்நாட்டிலேயே நீ ஏண்டா இன்னும் தமிழ் பேசுகிறாய் என்று இங்குள்ள தமிழனை இங்கு வந்த வந்தேறிகள் கேட்கவும் செய்வார்கள். வந்தேறி தமிழன் என்று தமிழனுக்கே முத்திரைகுத்தினாலும் கேட்க ஆளில்லை.

நம் அண்டை மாநிலத்தாரை சகோதரர்களாகவே பார்க்கிறோம். அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள். நமக்கு கிடைக்க வேண்டியதை தடுக்கிறார்கள். நம்மை ஒடுக்க முயலுகிறார்கள். நாம் மட்டும் திராவிடம் பேசி நம்மை சுற்றி உள்ளவர்களிடம் பாரம்பரிய சொத்துக்களையும் வரலாற்றையும் இழந்து தவிக்கிறோம்.

காரணம் நம்மை பிற இனத்தார் ஆண்டுவருதுதான், இவர்களால் நமக்கு எந்த நன்மையும் ஏற்றபடாது, நடந்த கொடுமைகளுக்கு தீர்வும் ஏற்படாது?

இன்றைக்கு ஆள்பவர்கள் நமக்காக நீலிக் கண்ணீர் வடிப்பார்கள் போலி உண்ணாவிரதம் அறிவிப்புகள் விடுவார்கள், ஆனால் எந்தவித உருப்படியான தீர்வும் இவர்களிடமிருந்து நமக்கு கிடைக்காது.

காரணம் இவர்கள் வந்தேறிகள். சுரண்டியது போதாது என்று இன்றும் நம் இரத்த்தை உறிஞ்சும் அட்டைகளே இவர்கள்.

இன்றைக்கு நடக்கும் சம்பவங்களே இதை நமக்கு உணர்த்துகிறது.

தமிழன் என்றால் அனைவருக்கும் தலைவணங்குவான் (இளிச்சவாயன்) என்ற முத்திரை வேறு.

இதற்கு நம்மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட திராவிடன் என்ற முகமூடியே இவர்களுக்கு சாதகம்.

இந்த முகமூடியை கிழித்து நாம் தமிழன் என்ற அடையாளத்தை காட்டுவோம்.

உண்மை முகம் இருக்க போலி எதற்கு...

ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்...


ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் After the death என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.

அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.

அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.

மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.

சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். ”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.

இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.

அனுபவமே உண்மையான ஆசான்...

எங்கெல்லாம் தமிழன் இருக்கிறானோ.. அங்கெல்லாம் அவன் அடிக்கப்படுகிறான்.. அழிக்கப்படுகிறான்...


நம்மைக் காக்க வேண்டியவனே கை கட்டியும் நம் நிலையைக் கண்டு கை தட்டியும் சிரிக்கிறான்..

இப்படி இருக்க எங்கே போவோம் ?
யாரைக் கேட்போம் ?

எம்மினமோ இதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டு வருகிறது..

தன்னுடைய அடையாளத்தை மறந்தும் மறைத்தும் வாழ்கிறது..

நான் தமிழன் என சொல்லிக் கொள்ளவே வெட்கபப்டும், வெட்கம் கெட்ட ஜென்மங்களே இப்போது நாங்கள் சொல்கிறோம் நீங்கள் தமிழர்கள் இல்லை...

ஏன் இனத்தை மறக்கும் மறைக்கும் நீங்கள் மனிதர்களே இல்லை...

ஆதித்தமிழர்களும்... கடற்ப் பருவக் காற்றும்..


தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத் தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டிய மன்னனின் தூதன்,

தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹ’யான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர்.

டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு,குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிர மாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.

பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத்தர வில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி'' நடைபெற்ற கப்பல் போக்குவரத்துத் தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹ’ப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்த தென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர்.

ஆனால் புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.


வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத் தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர் களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!'' என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.

இப்பொழுது ஒரு கேள்வி எழும். கரிகால் வளவனின் காலம் என்ன?

கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ’ன் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?

கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ் இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2ம் நூற்றாண்டு). மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது. (முக்கியச் சொற்களின் பொருள்: - வளி - காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)

கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னர் காலத்தில் இந்த வழக்கம் பெரிதும் அதிகரித்த தென்று முன்னர் கண்டோம்.அவன் இயேசு கிறிஸ்துவுக்குச் சம காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன். ஆகவே கிரேக்கர்களுக்கு முன்னரே பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல் விட்டது தமிழன் தான் என்று அடித்துக் கூறலாம்.

பழந்தமிழ் இலக்கியத்தில் மேலும் பல இடங்களில் இதே போன்ற குறிப்புகள் வருகின்றனயவனர்கள் பற்றிய பலகுறிப்புகளும் உள்ளன.

''கப்பல்'' என்ற தமிழ்ச் சொல் கூட உலகெங்கிலும் வெவ்வேறு வகையில உருமாறி வழங்குகிறது கப்பல் - skip - ship

ஜெர்மானிய மொழியில் ''ஸ்கிப்''என்றும் ஆங்கிலத்தில் ''ஷ’ப்'' என்றும் உருமாறி விட்டது தமிழ்ச் சொல் கப்பல்!

''கட்டமரான்'' (catamaran) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்ஸ’கோவில் பயன்படுத்துகின்றனர். மெக்ஸ’கோவில் மாயா, இன்கா, அஸ்டெக் போன்ற பழம் பெரும் நாகரீகச் சின்னங்களை இன்றும் காணலாம்.

''நாவாய்'' (படகு, கப்பல்) என்ற சொல்லும் தமிழ் அல்லது வட மொழியில் இருந்து உலகம் முழுதும் சென்றது.

நாவாய் - NavY - Navy


இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், ''எல்லாளன்'' என்ற சோழ மன்னனின் அறநெறி ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இது ''ஏழாரன்'' (ஏழு மன்னர்களை வென்று ஏழு ஆரம் அல்லது ஏழு மணி முடிகளை அணிந்தவன்) என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். சிலர் இந்தச் சோழ மன்னனைக் கரிகாலனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏனெனில் இருவரின் காலமும் ஏறத்தாழ ஒன்று தான்.

எல்லாள மன்னனின் கதை மனுநீதிச் சோழன் கதை போலவே உள்ளது. ஒரு பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தேரின் சக்கரத்தில் வைத்துக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகியவை கூறுகின்றன. ஆனால் இருவரும் ஒருவரா என்று அறிய மேலும் ஆராய வேண்டும். சோழ மன்னர்கள் இலங்கை, மற்றும் ஜாவா, சுமத்ரா (தற்கால இந்தோனேஷ’யா) வரை கடலில் சென்று வென்றனர்.

கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன. இவைகளில் மிகவும் பழமையான இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ''ஸ்ரீமாறன்'' என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் அங்கு சென்ற பாண்டிய மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இவன் கடலில் செல்லும் போது உயிர் நீத்தவன் என்பதை அவனுடைய பெயரே கூறிவிடும்.

தமிழர்களின் கடலாட்சிக்கு ஏராளமான சான்றுகள் இருப்பினும் முதலில் பருவக் காற்றைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியது தமிழனே என்பதற்கு இந்தச் சான்றுகளே போதும் அல்லவா?

மரணத் தூதுவன் – அமானுஷ்யப் பூனை...


மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’
அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது.

அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு ’ஆஸ்கர் பூனை’ என்றால் ஒருவித அச்சம்.
ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.


இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர்.

ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, “ ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிறது” என்கிறார்.

”சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும். எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை...

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன்...


தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக

ட்ரோபோஸ்பியர் (troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர் (stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர் (thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)

என அவை அமைந்துள்ளன..

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.

இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய ஆகாயமும். (புறநா - 20)
என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும். (புறநா - 30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம். (புறநா - 365) என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை"  (நத்திங்னஸ்) என்னும் பகுதி.

புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது. இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது.

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

"நிலமிசை வாழ்வர் அலமரல் தீர
தெறுகதிர் வெம்மை கனலி தாங்கி
காலுண வாக சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள." (புறநா - 43)
என்னும் பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்" என்பதாகும்.

மேலும், முருகக் கடவுளின் ஒரு கை,

"விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது" என்று திருமுருகாற்றுப்படை (107) யிலும்,

"சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின் இணையடி தொழுதோம்" என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவுவாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும்.

முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று.

கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ள வேண்டும்...

திராவிடத்தை வேறருக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள்...


திராவிடம் செய்யும் தீமைகளை மறப்பது தமிழினின் இயல்பு..

திராவிடம் வேண்டாம் என்று நினைவு படுத்துவது எனது கடமை..

1. அண்டை மாநிலத்தில் இதுவரை தமிழன் முதல்வர் பதவியல் இருத்து இருகிறானா? அப்படி இல்லாத போது வீட்டில் தெலுங்கு / கன்னடம் / மலையாளம்  பேசும் இவர்கள் எப்படி தமிழர்களின் இன உணர்வை புரிந்து கொள்ள முடியும்...

2. திராவிட கட்சிகளால் ஏன் இன்னும் ஒடுக்கப்பட்ட இன மக்கள்  முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை.. ஆனால், திராவிடம் இல்லாத மண்ணில் தான்... ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் தலைவராக அமைச்சராக முடிந்தது. திராவிடம் இல்லாத மண்ணில் தான்.... ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள மாயாவதி முதல்வர் ஆக முடிந்தது.

3. திராவிடம் என்றால் தெலுங்கன், கன்னடன், மலையாளி சேர்ந்த ஒன்று என்று சொல்லும் உனனால் ஏன் இன்னும் காவிரி தண்ணீரை வாங்கி தர முடியவில்லை.

முல்லை பெரியாறு அணையில் இதுவரை நமக்கு தண்ணீர் வரவில்லை... தமிழன் மீது இன வெறியை தூண்டி தமிழனுக்கு தண்ணீர் தர மறுத்த தெலுங்கர்கள்.. ஏன் ஏன் ஏன்.?

4. திராவிடம் பேசும் நீ தீண்டாமை பேசும் நீ ஏன் இன்னும் தமிழகத்தின் கிராமங்களில் ஜாதியின் பெயரால் இருக்கும் இரட்டைக் குவளை முறையை மாற்ற முடியவில்லை. ஏன் ஏன் ஏன் ..?

5. திராவிடம் பேசும் நீ இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க நீ என்ன முயற்சி செய்தாய்...

6. திராவிடம் பேசும் நீ ஏன் இலங்கையில் நடைபெற்ற போரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் மௌனம் காத்து இருந்தாய் ஏன்...

ஏன் ஆட்சில் இருந்து வெளிய வர வேண்டியது தானே ஏன் உன்னால் முடியவில்லை.. அப்படி செய்தால் கனி மொழி மற்றும் ராசா உடன் சேர்த்து ஸ்பெட்ராம் முறைகேடு செய்ய முடியாது என்றோ ?

7. திராவிடம் பேசும் நீ ஏன்டா.. குடும்ப அரசியல் பண்ணி தமிழர்களை படுகொலை செய்கிராய்...

8. திராவிடம் பேசும் நீ.. ஆரியத்துக்கு எதிராய் தான் திராவிடம் வந்தது என்றால் பார்பனியர் எப்படி திராவிட கட்சில் வந்தார்கள்.

9. திராவிடம் பேசும் நீ... சாராயம் கொடுத்து தமிழர்களை ஏன் அடிமையை போல வைத்து இருக்கிறாய்... சாராயத்தை நிறுத்த வேண்டியது தானே...

10. பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது. ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன. இதுதான் திராவிடம் செய்த கோலமா ?

11. தமிழர்களின் விளை நிலத்தை தெலுங்கு / மலையாளி/ கன்னட / வட இந்தியர் வாங்கி கொளுமையை இறுக்க வழி வகுக்கும் தெலுங்கு / மலையாளி/ கன்னட அரசியல் வியாதிகளே...

12. திராவிடம் பேசும் நீ... தமிழர்களை கடன் வாங்கி கடன்காரனாக ஆக்கும் முத்தூட் / மனபுரம் / மர்வடி நிறுவனத்திற்கு மற்றக... தமிழகத்தில் வங்கி மூலம் கடன் கொடுத்து தமிழர் நலம் காக்க மறந்தது எப்படி...

என்னை திராவிடனாய் இரு என்று சொல்ல நீ யாராட பொறம்போக்கு..

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்..

தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை..

ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது.

திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி...

விழுவது எல்லாம் அழுவதற்கு இல்லை ..
விழுவது எல்லாம் எழுவதற்கு...

தமிழ் மணி...


தமிழ் மணி என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி.

இது மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்திவந்தனர்.

இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் ஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.

இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது...

அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை...


படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள்...

ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை : உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான்.

குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர்.

உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது.

அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை.

முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

தொலைக்காட்சி பார்த்தவர் : முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே.

பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர்.

இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார்.

ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது.

அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால்.

சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் .

திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு.

அணுவுருவில் நதிகள் : அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு.

மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல்.

நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்...

பாஜக பொன்னார் மத்திய அமைச்சராக இருந்தாலும் RSS மேடையில் பிரமணர்களுக்கு நெருக்கமாக இருக்க அனுமதியில்லை...


மார்க்கெட் போன சிரிப்பு நடிகரும், பிராமணருமான விசுவுக்கு கிடைத்த மரியாதை கூட பொன்னாருக்கு இல்லை..

தானும் அசிங்கப்பட்டு, தான் சார்ந்த சாதியையும் அசிங்கப்படுத்தும் எச்சை தான் இந்த திருட்டு அரசியல் வியாபாரி பொன்னார்...

சீனா எச்சரிக்கை: காஷ்மீருக்குள் எங்கள் ராணுவம் நுழையும்...


பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டால் இந்தியா, பாகிஸ்தான் தவிர்த்து மூன்றாவது நாட்டின் ராணுவம் காஷ்மீருக்குள் நுழையும் என்று சீனாவின் மேற்கு இயல்பான பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையத்தின் இயக்குநர் லாங் ஷிங்சன் கூறியுள்ளார்.

சீனாவின் பத்திரிக்கைகள் இந்தியாவை விமர்சித்து கேலி செய்து எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அதுவும் குறிப்பாக சீனாவின் பிரபல குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை இந்தியாவின் செயல்பாடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து அவ்வப்போது கட்டுரை வெளியிட்டு வருகிறது.

தற்போது சிக்கிம் பகுதி எல்லையில் இந்தியா சீனா இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். சீன அரசு இந்திய ராணுவத்தை பின்வாங்குமாறு தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய வீரர்கள் தற்போது எல்லைப் பகுதியில் கூடாரம் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் மேற்கு இயல்பான பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையத்தின் இயக்குநர் லாங் ஷிங்சன் கூறியதாவது...

பூடான் பகுதியை பாதுகாக்க இந்தியா கேட்டுக்கொண்டால் அப்பகுதி பொதுவான பகுதியாக இருக்கும். எந்த தொல்லையும் இருக்காது. இந்தியா தனது ராணுவத்தை பின்வாங்க வேண்டும். பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டால் இந்தியா, பாகிஸ்தான் தவிர்த்து காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழையும் என கூறியுள்ளார்.

இதன்மூலம் சீனா இந்தியாவுடன் போரில் ஈடுப்படாது என்பது தெளிவாக தெரிகிறது. பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனா காஷ்மீருக்குள் நுழைந்தால் அமெரிக்கா பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழையும். ஆகையால் சீனா பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீருக்குள் நுழைய வாய்ப்பு இல்லை. இருந்தும் அவர்கள் எல்லைப் பகுதியை கைப்பற்ற இந்தியாவை அவர்களால் முடிந்த வழிகளில் மிரட்டி வருகின்றனர்.

சிக்கிம், பூடான் மற்றும் நேபாளம் ஆகியவை இணையக்கூடிய எல்லைப்பகுதியை இந்தியா விட்டுக்கொடுத்தால் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல வாய்ப்புகள் உள்ளது. இந்த அச்சத்தினாலே இந்தியா விட்டுக்கொடுக்காமல் பிடியில் உள்ளது...

சென்னை எழும்புர் ஓஎன்ஜிசி அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்...


கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் இன்று சென்னை எழும்புரில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்...

நம்ப முடியாத உண்மைகள்...


200 அடி ஆழத்தில் 4 கிணறுகள்.. ஓபிஎஸைக் கண்டித்து பெரியகுளம் அருகே கடையடைப்பு...


பெரியகுளம் அருகே ஓபிஎஸ் கிணறை முற்றுகையிட்ட கிராம மக்கள்- போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு...

எண்ணூரில் பயன்படுத்தப்பட்ட வாளி கதிராமங்களம் நெடுவாசல் திருவள்ளூர் மட்டும் அல்ல...


நாளை நீ ஆனந்தமாய் உன் குடும்பத்துடன் வாழ கட்டிவைத்திருக்கும் வீடு பிள்ளைகளுக்காக வாங்கிவைத்திருக்கும் நிலம் வசிக்கும் நகரம் எது வேண்டுமானாலும் இதே போல அழியலாம்
அப்போதும் அதே வாளி தான்...

அழிவு திட்டங்களை எதிர்ப்போம்..

மீத்தேன் திட்டத்தை தடை செய்யும் வரை போராடுவோம்...

பாஜக எச்ச ராஜா சர்மா எங்க காணோம்...


ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆனதாக தகவல்...


ஜிஎஸ்டி வரியால் திருப்பதி கோவிலில் தங்கும் அறைக் கட்டணம் கடும் உயர்வு...


ரூ 1500 என இருந்த கட்டணம் 1700 ஆகவும்
ரூ 2000 என இருந்த கட்டணம் 2200 ஆகவும்
ரூ 2500 என இருந்த கட்டணம் 3000 ஆகவும்
ரூ 6000 என இருந்த கட்டணம் 7100 ஆகவும்

உயர்த்தப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தங்கும் அறைகளுக்கு 12% ல் இருந்து 18% சதவிகித GST வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்...

யூகலிப்டஸ் இன்னொரு சீமைக் கருவேல மரம்...


1850 ஆம் காலகட்டங்களில் யூக்கலிப்டஸ் மரம் ஆஸ்திரேலியாவில் இருந்து தருவிக்கப்பட்ட blackwood and silver warde என்ற வகையை சார்ந்தது..

எதற்காக இந்த மரம் இறக்குமதி செய்யப்பட்டதென்றால் தேயிலை தோட்டங்களில் உள்ள அதிக ஈரப்பதம் தேயிலை வளரவிடாமல் தடுத்தது...

இந்த யூக்கலிப்டஸ் மரத்திற்கு Natural Borewell இன்ற மற்றொரு பெயரும் உண்டு..

அதாவது இதன் வேர்கள் 30அடி வரை செல்லும், ஒரு நாளைக்கு ஒரு மரம் சுமார் 90 லிட்டர் நிலத்தடி  நீரை உறிஞ்சும்...

ஆகையால் தேயிலை நடவிற்காக வெள்ளைக்காரர்களால் நடப்பட்டது..

1950 களில் இது நீலகிரி மாவட்டத்தில் பரவலாக நடத்துவங்கினர் அங்குள்ள ரேயான் தொழிற்சாலைக்கு எரி விறகுகளாக பயன்படுத்துவதற்கு, தேயிலை தோட்டங்களை தாண்டி சமவெளிகள், தனியார் நிலங்கள் மற்றும் கிராமங்களில் பரவலாக நடத்துவங்கினர் விக்கிகளுக்காக பயன்படுத்த...

1980 களில் ஒரு மிகப்பெரிய வறட்சி தாக்கியது நீலகிரி மாவட்டத்தை, அன்று அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்த பொழுது இந்த யூகலிப்டஸ் மரங்களே காரணம் என்று அறியப்பட்டு அதை நட மாநில அரசு தடைவிதித்தது..

இதற்காக பெரிதும் போராடி விழிப்புணர்வை ஏற்படுத்தியது வேணுகோபால் அவர்களின் தலைமையில் உருவான நீலகிரியை காப்போம் என்ற அமைப்பினரால்...

இன்று அதே யூகலிப்டஸ் மரத்தை வனத்துறை மற்றும்TNPL நிறுவனமும் இணைந்து தமிழகம் முழுவதும் குத்தகை அடிப்படையில் விவசாய நிலங்களை பெற்றுக்கொண்டு இத்தனை ஆண்டுகளுக்கு வளர்த்து அவர்களுக்கு வாடகை வழங்கி வருகின்றனர்...

ஏற்கனவே மழை பொய்த்து கடும் வறட்சி ஏற்படும் சூழலில் இதை அரசாங்கமும் ஊக்குவிக்கிறது..

இப்பொழுது தான் சீமைக்கருவேல மரத்தின் தீமைகளை வலியுறுத்தி அதை நீக்க ஆணை பெற்றிருக்கும் வேலையில் அடுத்ததாக இன்னொரு தீமை...

இது சீமைக் கருவேல மரத்திற்கு சற்றும் சளைத்தது அல்ல..

யூகலிப்டஸ் மரம் வளரும் இடத்தில் அதை சுற்றி எந்தவொரு தாவரத்தையும் வளரவிடாது..

காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறியும் தன்மை வாய்ந்தது..

இதன் இலைகளை கால்நடைகள் உண்ணாது..

அதுபோக இதன் இலைகள் எளிதில் மக்காது.

சராசரியாக 5 ஆண்டுகளில் 35 சதவிகத நிலத்தடி நீரை உறியும் சக்தி வாய்ந்தது...

காயோ பழமோ தராது, வெட்டினால் விறகுக்காக மட்டும் ஆகும்.

தமிழ் மண்ணை மலடாக்கியே தீருவோம் என்று அரசாங்கங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றன.

மண் வளம் காப்போம்,
நிலத்தடி நீரை காப்போம்,

இந்த யூகலிப்டஸ் மரத்தை நம் மண்ணை விட்டு அகற்றுவோம்...

குழந்தைத் திருமணம் திராவிடர் எனும் தெலுங்கர் கொள்கையே...


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும், இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

தமிழ்ப் பாட்டாளி வர்க்கம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் தேசியப் புரட்சியை நடத்தும் விழிப்புணர்ச்சியும் ஆற்றலும் அற்றிருந்தால், அதற்கு சோஷலிசப் புரட்சியை நடத்தும் ஆற்றல் மட்டும் எப்படி வந்துவிடும்?


தனது தாயகத்தை அடையாளம் காண முடியாமலும், அதன் மீதுள்ள அடிமை நுகத்தடியை நொறுக்க முடியாமலும் பலவீனமாய் உள்ள பாட்டாளி வர்க்கம் சோஷலிப் புரட்சி நடத்திடுமா?

இந்த வினா, இந்தியாவில் அடிமை நிலையில் வைக்கப்பட்டுள்ள எல்லாத் தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.

ஏகாதிபத்தியத்திடமிருந்து காலனி நாடுகள் விடுதலை பெறத்தான் தன்னுரிமையை (சுயநிர்ணய உரிமையை) பயன்படுத்த வேண்டுமே தவிர, இந்தியா போன்ற விடுதலை அடைந்த நாடுகளில் தன்னுரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று சில கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுவது சரியா?

இந்தக் கருத்து சரியல்ல.

ஒரு தேசிய இனம் தனக்கான தேச அரசை நிறுவிக் கொள்வது அதற்குள்ள அடிப்படை உரிமையும் கடமையும் ஆகும்.

ஒரு மக்கள் சமுதாயம் ஒரு தேசிய இனமாக இருக்கும் காலம் வரை அது தனக்கான சுதந்திர அரசை அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகப் பெற்றுள்ளது.

ஏகாதிபத்தியத்திடமிருந்து மட்டுமல்ல ஒடுக்குகின்ற ஒரு பெருந்தேசிய இனத்திடமிருந்தும் விடுதலை பெற வேண்டும்.

தனது அரசியல், பொருளியல், பண்பியல் உரிமைகளையும் மொழியையும் ஒடுக்குகின்ற எந்த அரசிடமிருந்தும் ஒரு தேசிய இனம் விடுதலை பெறுவதற்கான தன்னுரிமை அதனிடம் எப்போதும் உள்ளது.

அது மட்டுமல்ல, 'ஏகாதிபத்தியம்", 'காலனி" என்ற வரையறுப்புகளில் ஏற்பட்டுள்ள இக்கால வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

லெனின் காலத்தில் இருந்த ஏகாதிபத்தியங்களும் காலனிகளும் அதே வடிவத்தில் இன்றில்லை.

இந்தியா காலனியாக இருந்தது மட்டுமே காரல் மார்க்சுக்குத் தெரியும். இந்தியாவில் வளர்ச்சியடைந்த பல தேசிய இனங்கள் இருப்பது அவருக்குத் தெரியாது என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு கூறினார்.

காலனியாக இருந்த இந்தியாவில் இருந்த தேசிய இனங்கள் பற்றி லெனின் எதுவும் சொல்லவில்லை.

ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடைந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பான்மை தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்குகின்றன.

இதற்கு வசதியாக வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஜனநாயகப்படி தான் ஆட்சி நடக்கிறது என்று பெருந்தேசிய இன ஒடுக்குமுறையாளர்கள் கூறுக்கொள்கின்றனர்.

தமிழர்களும் இந்திக்காரர்களும் இன்னபிற இனத்தாரும் ஒரே அரசின் கீழ் யாரால் பிடித்து வைக்கப்பட்டார்கள்?

தமிழர்களையும் சிங்களர்களையும் ஒரே அரசின் கீழ் கட்டிப் போட்டவர்கள் யார்?

தனித்தனி அரசு நடத்திக் கொண்டிருந்த வெவ்வேறு தேசிய இனங்களை ஒரே ஆட்சியின் கீழ் பிடித்துவைத்தவர்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமைப்பாளர்கள் தாம்.

ஏகாதிபத்தியம் போனபின், பற்பல தேசங்கள், தங்கள் ஒப்புதலின்றி ஒரே ஆட்சியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் என்ன?

மெய்யான சம உரிமை நிலவி, தேசிய இனங்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தி, அவை தம் சொந்த விருப்பத்தின் பேரில் சேர்ந்திருந்தால் தவறில்லை.

காலனிய நிலையிலிருந்து விடுதலை பெற்ற பின், பெருந்தேசிய இனம் தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொண்டு, தனது பெரும்பான்மையின் காரணமாகத் தேர்தல்களில் கூடுதல் இடங்களைப் பிடித்துக் கொண்டு சிறுபான்மைகளை அடக்கிவைக்கிறது. அடையாளம் தெரியாமல் வைக்கிறது.

அதுமட்டுமல்ல இந்தியர், இலங்கையர் என்ற தனது முகமூடியைத் தமிழர்களுக்கு மாட்டிவிட்டது. இது புதுவகைக் காலனியம் ஆகும். புதுவகை ஏகாதிபத்தியம் ஆகும்.

முன்னது அயல் ஏகாதிபத்தியம்( Foreign Imperialism) பின்னது அண்டை ஏகாதிபத்தியம்((Neighbour Imperialism )) முன்னது பீரங்கிகளை வைத்துக் காலனி பிடித்தது. பின்னது வாக்குச்சீட்டுகளை வைத்து காலனியம் நடத்துகிறது.

அயல் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அப்போது இந்தியாவிற்கு நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்தது. அண்டை இந்திய ஏகாதிபத்தியம் இப்போது மார்வாடி குசராத்தி சேட்டுகள் மூலம் நிதி மூலதனத்தைத் தமிழ்நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது.

இன்று அயல் ஏகாதிபத்தியங்களும், அண்டை ஏகாதிபத்தியமும், கூட்டு சேர்ந்தே இருக்கின்றன.

ஏகாதிபத்தியமும், இந்திய தேசியமும் தவிர்க்க முடியாத கூட்டாளிகள், ஏனெனில் இந்த இருவகை ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நலனும் ஒருங்கிணைந்தவைதாம்.

அயல் ஏகாதிபத்தியத்திய ஆட்சியில் இந்தியக் காலனிக்கு ஒரே எஜமானன். அண்டை ஏகாதிபத்திய ஆட்சியில் தமிழ்நாட்டுக் காலனிக்கு பல எஜமானர்கள்.

ஒரு எஜமானன் இந்திய அரசு மற்ற எஜமானர்கள் அமெரிக்கா உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்கள்.

ஏகாதிபத்தியக் காலனிகளுக்கு தான் தன்னுரிமை பொருந்தும் எனில், அண்டை ஏகாதிபத்தியக் காலனியாக அடிமைப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கும் அது பொருந்தும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் முன்வைக்க வேண்டியது தமிழ்த் தேசத் தன்னுரிமையே. தனி தமிழ் நாடே...

இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்றும், ஏற்றத் தாழ்வான வளர்ச்சி தான் இருக்கிறதென்றும், அதனால் இந்திய அரசின் கொள்கையை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் சிலர் கூறுகிறார்கள்.?


இக்கருத்து இந்தியாவில் தேசிய இன ஒடுக்கு முறைகளே இல்லை என்று மறுக்கிறது.

ஒரு சமூகத்தில் செயல்படும் அனைத்து முரண்பாடுகளையும் கவனிக்காமல், தாம் வரித்துக் கொண்ட சில முரண்பாடுகளை மட்டும் பார்க்கும் அரைகுறைப் பார்வை இது.

இப்படிபட்ட அரைகுறைப் பார்வையை வர்க்கச் சுருக்கவாதம் ; ( Class reductionism ) என்று மார்க்சியம் சாடுகிறது.

மேலும் இது போன்ற பார்வை வறட்டுப் பொருளாதார வாதம் என்றும் விமர்சிக்கிறது.

பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் இங்கெல்லாம் நடந்த, நடக்கின்ற போராட்டங்கள் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரானவையே.

இந்தி தேசிய இனம் இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனமாக உள்ளது.

மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தங்கள் சுரண்டல் நலனுக்காக இந்தி தேசிய இனத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

இந்தியப் பெருமுதலாளிகளும், பார்ப்பனிய சக்திகளும் தங்களை இந்தி தேசிய இனத்தோடு இணக்கப்படுத்திக் கொண்டுள்ளன...