19/11/2017

இதற்குப் பெயர் பைபிலா அல்லது காம சூத்திரமா...

இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல... சிந்திக்க மட்டுமே...


இதற்குப் பெயர் பைபிலா அல்லது காம சூத்திரமா...

அடங்காத‌ காம வேசிகள். யாரிடமும் இதை படித்து காட்டமுடியுமா..?

ஆபாச வர்ணனைகள் நிறைந்த இந்நிகழ்வு கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளில் இருப்பது தான் இந்நிகழ்வுக்கு மதிப்பளிக்கிறது.


ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்க வேண்டும்.

அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி.

இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்பட வேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட...


பைபிள்: எசேக்கியேல். அதிகாரம் 23. ஸ்லோக‌ங்கள் 1 – 49.
BIBLE: EZEKIEL .CHAPTER 23. VERSES. 1 -49 .

ஆதாரம் : http://www.bibleintamil.com/ecu-tamil/startingot.html


தளத்திற்கு சென்று பழய‌ ஏற்பாடு  எசேக்கியேல் தேர்ந்தெடுத்து  அதிகாரம் 23  க்கு ஸ்க்ரோல் செய்து ஸ்லோகங்கள் 1 – 49 வரை படிக்கவும்..

IE explore ல் நன்றாக தெரிகிறது. Firefoxல் font problem ஏற்படுகிறது..

புனித பைபிளில் வரும் இந்த வசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா?


சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே..

விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்?

இதனால் என்ன பயன்?

வர்மக்கலை...


ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்கக் கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நம் தமிழ்ச் சித்தர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..?

இந்த வர்மக்கலை ஒரு கடல். இதைப் பற்றி எழுத ஒரு பக்கம் போதாது. அதனால் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரும், ஞானபண்டிதரான முருப்பெருமானின் முதற் சீடருமான, கும்பமுனி, குருமுனி என அழைக்கப்படுவரும், 1008 அண்டங்களையும் அருளாட்சி செய்பவரும், அகத்தியம் என்ற தமிழ்நூலைப் படைத்தவருமான சித்தபெருமான் அகத்தியர்.

இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ). தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே. என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்குச் சாட்சி.

சித்தபெருமான் அகத்தியர் கற்பித்த சில வர்மக்கலைகளில் "அகஸ்தியர் வர்ம திறவுகோல்", "அகஸ்தியர் வர்ம கண்டி", "அகஸ்தியர் ஊசி முறை வர்மம் ", "அகஸ்தியர் வசி வர்மம்", "வர்ம ஒடிவு முறிவு", "அகஸ்தியர் வர்மக் கண்ணாடி", "வர்ம வரிசை", "அகஸ்தியர் மெய் தீண்டாக்கலை" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "ஜடாவர்மன் பாண்டியன்" என்ற மன்னன் தான் இதில் வல்லவனாகத் திகழ்ந்தான். பின்னர் பாண்டிய இனம் அழியத் தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்குப் பின்னர் வந்த சோழர்கள் இதனைக் கற்றனர்.

பின்னர் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி புத்தமதத்தைப் பரப்பச் சீனா சென்ற போது இந்தக் கலையும் அங்கு பரவியது. “Tenjiku Naranokaku" என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India" என்ற பொருளைத் தருகின்றது. "ஹு ஷிஹ் " என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது "இந்தியா ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார். 1793ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது தாங்கள் இந்தக் கலை மூலமாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தமிழக இளைஞர்கள் வர்மக்கலை பயில்வதைத் தடை செய்தனர்.

அன்று ஆரம்பமான அழிவு, இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது. இந்தக் கலையை அனைவருக்கும் கற்றுத்தர மாட்டார்கள். இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார். வர்மக்கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறையைக் கையாள வேண்டும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.

இதை எந்த வயதினரும் கற்கலாம். ஆனால் யார் மட்டுமே கற்க முடியும்? "கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே" என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது.

வர்மக் கலைகளின் முக்கியமான வகைகள் " "தொடு வர்மம்", "படு வர்மம்", "தட்டு வர்மம்", "நோக்கு வர்மம்" என வகைப் படுத்தப்பட்டுள்ளது. தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார். இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும். இந்தப் பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும். படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பாதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும். தட்டு வர்மம் யாருக்கும் கற்றுத் தரப்படமாட்டாது. இது மிகவும் மோசமான பிரிவு. ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும். நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது. யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும். உதாரணத்திற்க்குச் சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம். அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம்.

ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரைத் தாக்கும் வல்லமை கொண்டது இந்தக் கலை. ஆனால், இது யாருக்கும் இலகுவாகக் கற்றுத்தர படமாட்டாது. ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் மட்டுமே இதைக் கற்கலாம்.

தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை...

நாதக சீமான் கலாட்டா...



தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு. வே. பிரபாகரனுக்கு பயிற்சி கொடுத்து போராட சொன்னது நான் என்று மட்டும் தான் இன்னும் சீமான் சொல்லவில்லை...

நான் படித்த உளவியலில் இருந்து ஊக்குவித்தல் (Motivation) பற்றி தெரிந்துக் கொள்வோம்...


ஊக்குவித்தல் (Motivation) என்ற சொல் இலத்தின் மொழிச் சொல்லான mover or motum எனும் சொல்லில் இருந்து உருவானது.

இச்சொல்லிற்குச் ‘செயல்படு’ அல்லது ‘செயல்பாட்டிற்கு உட்படுத்து’ என்று பொருள்.

எந்த ‘ஒரு செயல்’ ஒருவரை உடலியல் மற்றும் உளவியல் செயல்பாட்டிற்கு உட்படுத்தி, அதன் மூலம் ஒருவருடைய தேவையையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்கின்றதோ, அச்செயலே ‘ஊக்குவித்தல்’ எனப்படுகிறது..
.
மாஸ்லோ என்ற உளவியல் அறிஞர் ஊக்குவித்தல் என்பது ‘ஒரு தொடர் செயல்’, ‘முடிவுறாதது’, ‘மாறுபடக் கூடியது’ மற்றும் ‘கடினமானது’ என்று கூறுகிறார்..

மேலும் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உரிய குணம் என்றும் குறிப்பிடுகிறார்.

ஊக்கம் என்பது ஒரு மாணவனின் ‘உள்ளத் திட்பம்’. அது அவனுடைய குறிக்கோளை அடைய அகத்தூண்டுதல் காரணியாகச் செயல்படுகின்றது. ஒரு மாணவன் தனது வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை அடைய கற்றல் மிக அவசியமானது...

இந்தியா என்ற ஒன்றை உலக பணக்காரர்கள் கூறுவது...


இந்தியா மிகப்பெரிய சந்தை அந்த சந்தையில் நாம் எந்த பொருளை வேண்டுமானாலும் விற்கலாம்...

இலுமினாட்டி களின் 13 துறைகள்...


இலுமினாட்டிகள் உலகை 13 துறைகளாக பிரித்து ஆட்சி புரிகின்றனர். அவை...

1. நுகர்வு பொருட்கள் (Consumer products)
2. ஆற்றல் துறை (Power sector)
3. மருத்துவ துறை (Medical)
4. போக்குவரத்து துறை (Transport)
5. ஆயுதம் (Weapons)
6. ஊடகம் (Media)
7. நிதி (Finance)
8. அரசியல் (Politics)
9. உணவு மற்றும் குடிநீர் (Food & beverage)
10. சமயம் (Religion)
11. கல்வி (Education)
12. உள்கட்டமைப்பு (Infrastructure)
13. தொடர்பாடல் (Communication)

இவற்றை பற்றி ஒவ்வொன்றாக அவர்கள் கட்டுப்படுத்தும் நிறுவனங்களோடு சேர்த்து விரிவாக பின்பு பார்ப்போம்...

தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்...


குறள் : 1026

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்..

பொருள் :

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்...

போயஸ் கார்டன் வீட்டில் ஐடி அதிகாரில் திடீர் ரைடு , பெண்கள் தொண்டர்கள் போயஸ்கார்டனில் குவிந்தனர்.. மத்திய அரசிற்கு எதிராக கோஷம்...


2009 வரை திராவிடம் என்றால் என்ன என்ற கேள்வியே எழவில்லையே ஏன் ?


அந்த திராவிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, தமிழரல்லாதவர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் இந்த தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக உயர்ப் பொறுப்புக்களிலும் திட்டமிட்டு நிரப்பி வைக்கப் பட்டுள்ளார்கள் என்பதே எங்களுக்கு 2009க்கு பின்  தான் தெரிய வருகிறது.

இதுவரை இந்த தெலுங்கு கன்னட மழையால் வந்தேறிகளின் ஆட்சியில் தலைமை செயலராக ஒரு தமிழர் கூட இருந்ததில்லை என்பதே இவர்கள் எப்படி தமிழின அழிப்பை மேற்கொண்டுள்ளனர் என்பதையும், தமிழின விரோதப் போக்கை காட்டுகின்றது..

தமிழர் உரிமை, உடைமை, உயிர் சார்ந்த போராட்டங்களுக்கு உதட்டளவில் மட்டுமே குரல் கொடுக்கும் இந்த தமிழரல்லாத திராவிடர்களாலேயே, போராட்டங்களின் வீரியம் குறைகிறது, போராட்டங்களில் இலக்கு திசை மாறிச் செல்கிறது.

தமிழகமே சாராயத்தை எதிர்த்து போராடியது; தெலுங்கர் வைகோபால்சாமி நாயூடு உள்ளே நுழைந்து குட்டையை குழப்பி போராட்டத்தி திசை திருப்பினார்.

இதைத் தான் இந்த தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் இத்தனை வருடங்களாக செய்து கொண்டு வருகின்றனர்.

கேரளா மலையாளிகளின் ஆளுமையின் கீழிருக்கும்..

ஆந்திராவும், தெலுங்கானாவும் தெலுங்கர்களின் ஆதிக்கத்தின் கீழிருக்கும்..

கர்நாடகா, கன்னடரின் ஆதிக்கத்தின் கீழிருக்கும்..

ஆனால், தமிழ் நாடு மட்டும் திராவிடருக்குப் பொதுவானது என்றால், எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை நடந்திருக்கிறது என்பதை தமிழச் சொந்தங்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது...

6 மணி நேரத்தில் 508 கி.மீ கடந்த ஆம்புலன்ஸ் - கேரளாவில் ஒரு நாள்...


கேரளாவில், பிறந்து 31 நாள் ஆன குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக, கண்ணூரிலிருந்து திருவனந்தபுரம் வரை 508 கிலோ மீட்டரை 6 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்துள்ளார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தமீம்.

கேரள மாநிலம் கண்ணூர் மருத்துவக் கல்லூரியில், ஃபாத்திமா லைபா என்ற குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு, இருதயத்தில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அடுத்த நாள், திருவனந்தபுரத்தில் இருக்கும் சித்திரைத் திருநாள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

நம்பிக்கையுடன், புதன்கிழமை இரவு 8.23 -க்கு இரண்டு போலீஸ் வாகனத்துடன் புறப்பட்டது ஆம்புலன்ஸ் . ஆம்புலன்ஸை ஓட்டுநர் தமீம் என்பவர் ஓட்டினார். குழந்தையைக் காப்பாற்ற அந்த ஓட்டுநர் மட்டுமல்ல, காவல்துறை, பொதுமக்கள், சமூக ஊடக நண்பர்கள் என அனைவரும் உதவிசெய்துள்ளனர். ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை எளிதில் கடக்க, காவல்துறை ஏற்பாடுசெய்திருந்தது.

சமூக ஊடகத்திலும் ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மக்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டு இருந்தனர். வாகனத்தில் இருக்கும் ஜி.பி.எஸ் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரும் பாதையைப் பொதுமக்களும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினர். அதன்மூலம், மக்கள் அந்த வழியில் செல்வதைத் தவிர்த்தனர். சாதாரண நேரத்தில் இந்த தூரத்தை கடக்க 10 மணி நேரத்துக்கும் மேல் ஆகும். ஆனால், காவல்துறை மற்றும் பொதுமக்களின் உதவியால் 6 மணி நேரம் 45 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் திருவனந்தபுரத்தை அடைந்துள்ளது.

உடனடியாக சித்திரைத் திருநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அந்தக் குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருந்தாலும், அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஒரு சமூகமே குழந்தையைக் காப்பாற்ற போராடியுள்ளதே.

தமிழில், 'சென்னையில் ஒரு நாள்' திரைப்படம் இதே போன்ற கதையம்சம் கொண்டது. இது, மலையாளத்தில் வெளியான 'ட்ராஃபிக்' என்ற படத்தின் ரீமேக்தான். இந்தப் படமும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...

கம்ப்யூட்டரைத் தாண்டி...


பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே உலகம் முழுவதும் அறிவியலின் வளர்ச்சி எல்லா துறைகளையும் புரட்டி போட்டு விட்டது.

மனிதன் தன்னால் செய்ய முடிந்ததை வேகமாகவும், செய்ய முடியாததை செய்யவும் தன் நுண் அறிவால் கருவிகளை உற்பத்தி செய்து ஒரு நாளை எந்த அளவு நீட்டிக்க முடியுமோ அந்தளவு நீட்டித்தான்.

ஆனாலும் சற்று ஆழமாக யோசித்தால் இத்தனை வளர்ச்சி அடைந்த இந்த கால வாழ்க்கை ஏதோ மின்சார ரயில் போல வேகமாகவும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கை நிதானமாக அனுபவிக்கும்மாட்டு வண்டி பயணமாகவும் இருந்து இருக்கிறது.

ஒரு நாள் முழுவதையும் செலவிட்டு நாடகம் பார்த்தார்கள்,
வாரக் கணக்காக விழாக்கள் கொண்டாடினார்கள்,
நடந்தே காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் போய் வந்தார்கள்.
இருந்தும் நிம்மதியாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

அதிக நிம்மதியை நோக்கி பயணிக்கிறோம் என்ற நினைப்பில் நாம் படைத்த கருவிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இப்போது நம் நேரத்தை குறுக்கி விட்டதோ என்றும் நினைக்க முடியாது.

ஏனெனில் முன்பு ஒரு மணி நேரத்தில் துவைக்க முடிந்த துணிகளை இப்போது ஐந்து நிமிடத்தில் மெஷின் முடிக்கின்றது.

அப்படி என்றால் நாம் சேமிக்கும் அந்த நேரமெல்லாம் என்ன தான் ஆகிறது?

மனிதனின் சராசரி வாழ்நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை ஓரளவிற்கு புள்ளி விவரங்கள் மீது ஆர்வம இருக்கும் எவருக்கும் தெரிந்திருக்கும்.

நாம் மிகவும் கஷ்டப்பட்டு சேமிக்கும் இந்த நேரமெல்லாம் கடைசியில் நம் வாழ்நாளில் இருந்து கழிக்கப் படுகிறதோ? என்ற எண்ணம் இப்போது உங்களுக்கும் வரலாம்.

சரி அப்படி என்ன தான் நான் சொல்ல வருகிறேன் என்று எவரேனும் அறிய விரும்பினால் அது ஒன்றும் இல்லை தான்.

இப்போது நாம் வாழும் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை,
குழந்தைகள் பட்டாம்பூச்சி பிடிப்பதில்லை,
பாட்டி கதைகள் கேட்பதில்லை,
மாட்டு வண்டி சவாரி போவதில்லை,
கூட்டாஞ் சோறு ஆக்குவதில்லை,
இன்னும் எவ்வளவோ மகிழ்விக்கும் தருணங்களை அவர்கள் காண்பதே இல்லை என்று நினைக்கும் அதே நேரத்தில்,

அக்காலத்தில் கம்ப்யூட்டர் கண்டதில்லை,
இணையம் பார்த்ததில்லை, செஸ் ஆடியதில்லை,
டியூசன் போனதில்லை என்று நீட்டினால் அது வெறும் சப்பைக்கட்டாக மட்டுமே முடியும்.

இளம் வயதிலேயே கண் பார்வை மங்கி, வாயில் நுழையாத வியாதிகளை வாங்கிக் கொண்டு விஞ்ஞானம் தந்த விபரீதங்களை ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த கம்ப்யூட்டருக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை உணர்ந்து கொண்டாலே பாதிக்கும் மேல் நேரமிருக்கும் நம் இளம் தலைமுறையினருக்கு...

இலக்கியத்தில் தமிழர்நாடு...


கேள்வி: இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா?

தமிழ் :

தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது. முக்கியமானவை மட்டும் தருகிறேன்.

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
- புறநானூறு 58.

அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
- புறநானூறு 50.

தமிழ் வையைத் தண்ணம் புனல்
- பரிபாடல் 6.

தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார், கொள்ளார் - பரிபாடல் 9.

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் - பரிபாடல் 4.

தமிழர் :

தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து - புறநானூறு 19. (இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்).

மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் - புறநானூறு 35 (தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்).

தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள் - பரிபாடல் 8 (தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்).

அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை - சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை.

தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காண - முத்தொள்ளாயிரம் 24.

தமிழர்நாடு :

தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது,

தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த
- அகநானூறு 31

இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது,

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
- தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்

தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.

தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம் - பரிபாடல் 9

தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்
- புறநானூறு 51 (தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்க மாட்டானாம். தனக்குத் தான் அது சொந்தம் என்பானாம்)

கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக் - பதிற்றுப்பத்து 63 (செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து).

தமிழகப்படுத்த இமிழிசை முரசின்
- அகநானூறு 227 (தமிழகம் எனும் சொல்).

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த. - சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை).

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு  - சிலப்பதிகாரம், வேனில் காதை (வரம்பு அதாவது எல்லை).

தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
- சிலப்பதிகாரம், நாடுகாண் காதை.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
- சிலப்பதிகாரம், காட்சிக் காதை.

குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்

- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை.

தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை - மணிமேகலை (தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி).

யார் தமிழன்? ஏது தமிழ்? எங்கே தமிழர்நாடு? போன்ற வந்தேறித்தனமான கேள்விகளுக்கு இதற்கு மேலும் பதிலளிக்க முடியாது...

அதிமுக எடப்பாடி பழனிசாமி அரசின் ஒவ்வொரு அணுவிலும் ஊழல் உள்ளது - கேள்வி நேரம் நிகழ்ச்சியில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் குற்றச்சாட்டு...


இறந்த மூதாட்டியின் தலையணைக்கு அடியிலிருந்த பழைய ரூ 500 ரூ 1000 நோட்டுகள்...


பழைய ரூ.500 நோட்டுகள் செல்லாது என்பதை அறியாமல் இறுதி சடங்கிற்காக மூதாட்டி ரூ.35 ஆயிரம் சேமித்து வைத்த பணத்தை மாற்ற முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

இதை அறியாமல் தனது இறுதி சடங்கிற்காக பழைய 500 ரூபாய் நோட்டுகளை தலையணைக்கு அடியில் வைத்திருந்த மூதாட்டி இறந்து விட்டார். அந்த பணத்தை மாற்ற முடியாமல் உறவினர்கள் தவிக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யம் பெருமாள். இவரது மனைவி லட்சுமி (வயது 74). சில ஆண்டுகளுக்கு முன்பு அய்யம்பெருமாள் இறந்து விட்டார்.

அதன் பிறகு லட்சுமி, தனது தம்பியான முத்துசாமியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த லட்சுமி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து முத்துசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் லட்சுமியை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இறந்த லட்சுமி பயன்படுத்திய பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக எடுத்தனர்.

அப்போது அவரது தலையணைக்கு அடியில் கடந்த ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகள் இருந்தது. அதை எடுத்து எண்ணிப் பார்த்தபோது, அதில் ரூ.35 ஆயிரம் இருந்தது. இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்...

ருமாட்டிக் காய்ச்சல் (Rheumatic Fever) காய்ச்சல் குணமாக...


காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற பழமொழி காய்ச்சலின் கொடுமையை மிக எளிதாய் உணர்த்துகின்றது.

காய்ச்சல் வந்தாலே உடலை சோர்வாக்கி ஆளை படுத்த படுக்கை ஆக்கி விடும்.

உண்மையில் காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல அது ஒரு போர்களத்தின் உஷ்ணம்.

நமது உடலில் உள்ள நல்ல நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெளியில் இருந்து வரும் கெட்ட கிருமிகளுக்கும் நடக்கும் போராட்டத்தின் விளைவே காய்ச்சல் ஆகும்.

இந்த போராட்டத்தின் தன்மையை பொறுத்து உடலின் வெப்பம் அதிகரிக்கும். மிகப் பெரிய பெரிய போராட்டமாய் இருந்தால் உடலின் வெப்பம் 100 டிகிரிக்கு மேல் கொதிக்கும். காய்ச்சல் ஏற்படும் நாட்கள் மற்றும் அதன் தன்மையை பொறுத்து காய்ச்சலின் வீரியத்தை கண்டறியலாம்.

இந்த காலகட்டத்தில் தினம் தினம் ஒரு புது பெயரில் காய்ச்சல் வருகின்றது. அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். இந்த கால உணவு முறைகளில் ஏற்பட்ட அபரிமிதமான மாற்றம் தினம் ஒரு புது நோய்க்கு வழிகோலுகின்றது. முந்தைய காலங்களில் உணவே மருந்தாய் நம் முன்னோர்கள் உண்டு வந்தனர். இந்த காலத்தில் உணவை விஷமாய் உண்டு வருகிறோம். அதன் காரணமாகவே நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகிறது. அதனால் மிக எளிதில் காய்ச்சல் தொற்றிக் கொள்கிறது.

தீவிர காய்ச்சலை மிக சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் அளவுக்கு சென்று விடும். இயற்கை மருந்தை எடுத்துக் கொண்டாலும் அல்லது இரசாயன மருந்தை எடுத்துக் கொண்டாலும் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரிடம் சென்று விட வேண்டும். மருத்துவரிடம் காய்ச்சலுக்கு முந்தைய நாளின் அறிகுறியில் இருந்து நீங்கள் எடுத்துக் கொண்ட மருந்துகள் வரை அனைத்தையும் தெளிவாய் சொல்லி மருத்துவம் பார்க்க வேண்டும்.

பொதுவாகவே குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் நோய் எதிப்பு சக்தி குறைவாகவே காணப்படும். அதனால் இவர்களுக்கு காய்ச்சல் அடித்தால் சாதரணமாக விட்டு விடக் கூடாது. குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இயற்கை நோய் எதிர்ப்பு உணவுகளை தினம் கொடுத்து அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் வலிப்பும் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும். அது ஃபெப்ரைல் ஃபிட்ஸ் ஆக இருக்கக்கூடும். மிக கவனத்துடன் பார்க்க வேண்டிய காய்ச்சல் இது.

குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் மூட்டு வலியும் சேர்ந்து வரலாம். இந்த காய்ச்சல் ருமாட்டிக் காய்ச்சலாக (Rheumatic Fever) இருக்கக்கூடும். இந்த ருமாட்டிக் காய்ச்சல் வந்தால் ஒரு நாலைந்து நாட்கள் ஆளை படுக்க வைத்து விடும். பின்பு குணமாகிவிடும். ஆனால் ருமாட்டிக் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்காமல் சாதாரணக் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்து விட்டு விட்டால் அது பிற்காலத்தில் அதாவது ஒரு பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு பிறகு இதய நோயில் கொண்டு போய் விட்டு விடும். இதய வால்வில் அடைப்பு என இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். இதை போன்று காய்ச்சலுடன் மூட்டு வலியும் சேர்ந்து வந்தால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ருமாட்டிக் காய்ச்சலுக்கான பரிசோதனையும் பார்க்கப்படுகின்றது. மற்ற நாடுகளில் இதற்கான விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை.

அடிக்கடி காய்ச்சல் களைப்பு வந்தால் அது காசநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். காய்ச்சல் என்று இல்லை எந்த நோயும் அடிக்கடி வந்தால் அது சம்பந்தமாய் முழு பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம்.

பெரும்பாலனோர்க்கு லேசான காய்ச்சல் அடித்தால் தாமாகவே உடனே ஒரு பாரசிட்டமால் போட்டுக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. குழந்தைகளுக்கும் இதைப் போன்றே உடனே பாரசிட்டமால் கொடுக்கிறார்கள். நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை நாமாகவே கெடுத்துக் கொள்ளும் தவறான அணுகுமுறை இது. இதை தவிர்த்து விட்டு உடம்புக்குள் இயற்கை மருந்துகள் கொடுத்து, உடம்புக்கு வெளியில் சுத்தமான துணியை நல்ல நீரில் நனைத்து பிழிந்து அக்குள்களில் வைத்துக் கொள்ளலாம். அந்த துணியை நீளமாக மடித்து நெற்றியில் பற்றுப் போடலாம். மேலே கூறியது போல் அதிக காய்ச்சல் அடித்தாலோ, நடுக்கம் வந்தாலோ, உளறல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

காய்ச்சலுக்கு நம் வீட்டிலேயே உள்ள பொருட்களைக் கொண்டு இயற்கை மருந்துகள் செய்து கொடுக்கலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.

காய்ச்சல் குணமாக மிளகு மருந்து...

காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம். இந்த மிளகு கஷாய நீரை ஆற வைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் குடித்தால் காய்ச்சல் குணமாகும். ஒவ்வொரு முறை குடிக்கும் முன் லேசாக சுட வைத்து இளஞ்சூட்டில் குடித்தல் நல்லது. இந்த மருத்துவத்தை மொத்தமாக செய்து வைத்துக் குடிக்காமல் தினம் தினம் புதிதாக தயார் செய்து குடித்து வந்தால் நலம். இரண்டே நாட்களில் காய்ச்சல் குணமாகும். மிளகின் காரம் அதிகம் இருந்தால் அதில் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

காய்ச்சல் குணமாக சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை மருந்து...

காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் கறிவேப்பிலை ஒரு கையளவு சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். அரைத்த கலவை மை போன்று இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் மருந்தை ஒரு சிறிய நெல்லிக்கனி அளவு எடுத்து காலையும் மாலையும் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் குணமாக வல்லாரை, மிளகு, துளசி மருந்து...

வல்லாரை இலை, துளசி இலை மற்றும் மிளகு ஆகியவற்றை ஒரு கைப்பிடி வீதம் எடுத்துக் கொண்டு நன்கு அரைக்க வேண்டும். மை போல் அரைத்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின் காய்ச்சல் உள்ளவர்களுக்கு வேளைக்கு ஒரு உருண்டை வீதம் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்தச் செய்தால் காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் குணமாக துளசி, இஞ்சி மருந்து...

காய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் குணமாக பார்லி அரிசி, பால் மருந்து.

காய்ச்சல் குணமாக பார்லி அரிசி வாங்கி சாதம் வைப்பது போல் தண்ணீருக்கு பதில் பாலில் வேக வைத்து கொடுக்கலாம். காய்ச்சல் அடிக்கும் போது நாவில் ருசி அவ்வளவாக இருக்காது. சாப்பாடும் சாப்பிட தோன்றாது. அந்த மாதிரி சமயங்களில் இந்த பார்லி பால் சாதம் கை கொடுக்கும்...

புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக் கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.

அதை எப்படி வளர்த்துக் கொள்வது?

எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.

Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.

ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?

நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.

அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்த பிறகு அந்த நேரத்தில் பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகி விடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்து விட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.

ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?

நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம்...

அதிமுக அரசின் ஊழலின் உச்சக்கட்டம்...


நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில், 4 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி...

பாஜக மோடி அலை கருத்துகணிப்பு... நியூஸ் 7 தொலைக்காட்சியின் டூபாக்கூர் வேலை...


சீனி, அரிசி, வெங்காயம், பெட்ரோல் என்று அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி இருப்பது பாஜக ஆட்சியில் தான் என்பதை மக்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.

மாட்டை வைத்து நாட்டை நாசப்படுத்தி மதநல்லிணக்கத்தை முன்பை விடவும் அதிகமாக நாசப்படுத்தியவர்கள் இந்த பாஜக-வினர் தான் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.

காஷ்மீரிய பொது மக்கள் மீது பெல்லட் ரக தோட்டாக்கள் வீசி அவர்களை நிர்க்கதியாய் ஆக்கி உலகளவில் அசிங்கப்பட்டதும் இதே பாஜக அரசு தான் என்பது இந்த உலகமே அறிந்துள்ளது.

நிலவரம் இப்படியிருக்க நியூஸ் 7 தொலைக்காட்சி ஏன் பாஜக அரசின் கைப்பாவையாக மாறி இருக்கிறது என்பதில் தான் இப்பொழுது மக்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது...

பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை சுங்கவரித்துறை இணையதளத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள்...


ஆசியாவின் பணக்கார குடும்பங்கள் பட்டியல்: 44.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பாஜக மோடியின் நண்பர் அம்பானி குடும்பம் முதல் இடம்...


ஆசியாவின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில், அம்பானி குடும்பம் முதல் இடத்தில் உள்ளது.

ஆசியாவின் 50 மிகப்பெரிய பணக்கார குடும்பங்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் 44.8 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி குடும்பம் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது...

அரிசிக் கஞ்சியின் மகத்துவம்...


சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம் குறையும்.

பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் நல்லது.

இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர் போன்றவற்றிற்கு நல்லது.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி கழுவிய நீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்ற எலு‌ம்பு பலம் பெறும்...

பாஜக மோடியின் சாதனை.. சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்.. எதில் தெரியுமா?


சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கக்கூடிய கந்தக-டை-ஆக்ஸைடை அதிகளவில் காற்றில் கலக்கச் செய்வதில் உலக அளவில் இந்தியா முதலிடம்....

மீன் சாப்பிடுவதால் இதய நோய்யை தவிர்க்கலாம்...


மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு கூறுகிறது.

வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது. வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேகவைக்கும் தட்டில் (ஓவன்) பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது.

கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என பேராசிரியர் டொனால்டு தெரிவித்தார்...

கடன் பெற்று தருவதாக 30 லட்சம் மோசடி , தன்னை பவர் ஸ்டார் எனக் கூறிக் கொள்ளும் நடிகருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு...


ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 15...


உண்மைகள் உறங்குவதில்லை என்ற வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று இடம் பெற உள்ள தீர்க்க தரிசனம் 15-ம் தீர்க்க தரிசனம் ஆகும். இந்த 15-ம் தீர்க்க தரிசனம் பல முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாகும்.

இன்று இந்த 15-ம் தீர்க்க தரிசனத்தில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் தீர்க்க தரிசனம் என்னவெனில் தமிழகத்தில் மழையின் தீவிரமும், பல நோய்களின் தாக்கமும் மக்கள் மீது பலத்த சேதங்களை உருவாக்க உள்ளதாகவும், இவை 2017  ஆகஸ்டு 15 முதல் ஏப்ரல் 2018 வரை இதன் தீவிரம், பகுதி பகுதியாக நிகழும் என்று 15-ம் தீர்க்க தரிசனம் மிக, மிக முக்கியமான ஒரு குறிப்பை இங்கே சுட்டிக்காட்டுகின்றது.

கல்கத்தா நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்றும், கடல், மழை சீற்றங்களால் அங்கு மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று 15-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


உலக வரலாற்றில் ஒரு புதிய செய்தியை தற்போது ‘ NASA ’ என்கிற அமைப்பு தனது அறிக்கையின் வாயிலாக மக்கள் குலத்திற்கு தெரிவிக்க இருப்பதாகவும், இது மக்கள் எதிர்பார்க்காத ஒரு புதிய செய்தியாக இருக்கும் என்றும், உலக மக்கள் வியப்பிலும், ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்து போவார்கள் என 15-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


காஞ்சி மாநகரில் அன்னை காமாட்சியின் அதிசய நிகழ்வு ஒன்று வரும் மாதத்தில் நடக்க உள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக அமைய உள்ளதாக 15-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

ஜப்பான் நாட்டில் பூமி அதிர்வானது 7.8 ரிக்டர் அளவில் தற்போது ஏற்பட இருப்பதாகவும், அது பலத்த சேதங்களை ஏற்படுத்திட இருப்பதாகவும், சுனாமி என்ற பேரலையும் உருவாகி பலத்த சேதத்தை ஏற்படுத்தப் போகிறது என்று 15-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


கோவலன் பிறந்த ஊரில் வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஒன்று தற்போது மக்கள் சமூகம் கண்டறியும் என்றும், இதன் வாயிலாக தமிழகத்தின் சிறப்பையும், அதன் வளர்ச்சிப் பற்றிய செய்திக்குறிப்பை கண்டு வரலாற்று ஆய்வாளர்கள் வியந்து போவார்கள் என்று 15-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


கலியுகம் முடிந்து சத்தியயுகம் வருகின்ற சமயத்தில் இப்பூமியில் “ஸ்ரீகல்கியின்“ அவதாரம் நிகழும் என்று பல்வேறு இறைக்குறிப்புகள் தெரிவித்தாலும், அந்த “மகா அவதாரம் ஸ்ரீகல்கி“ அவதரிக்கும் மாநிலம் “தமிழகம்“ என்பதை மக்கள் சமூகம் அறிய உள்ளதாகவும், அதே சமயத்தில் “ஸ்ரீகல்கி“ மானுட உருவில் தற்போது உலாவி வருவதாகவும், அந்த மானுட உருவத்தில் இருக்கும்  ஸ்ரீகல்கியின் ஆத்மா தக்க நேரத்தில் உலகம் முழுவதும் காட்சி தர இருப்பதாகவும், அதனை வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 7ம் நாளாக இருக்கப் போவதாக 15-ம் தீர்க்க தரிசனம் ஒரு மிக முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


ஆயில்யம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண்களுக்கு வரும் மாதம் முதல் பல அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும் மாதமாக இருக்கும் என்றும், இந்த நட்சத்திரம் கொண்ட ஆண், பெண்கள் இனி மக்கள் மத்தியில் உயர்வாக என்னும் படியான பல நிகழ்வுகள் நடக்க இருப்பதாகவும், இது ஜோதிட வரலாற்றில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்றும், இதற்கு காரணம் வரும் சூரியக் கிரகணமே காரணமாக அமைய உள்ளதாக 15-ம் தீர்க்க தரிசனம் மிக, மிக முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது. அந்த நட்சத்திரக்காரர்களின் தற்போதைய வயது 40-ஐ தாண்டி இருக்க வேண்டும் என்பது விதியாகும்.


மிக, மிக முக்கியமான நிகழ்வு ஒன்று மயிலாடுதுறையில் வரும் வாரம் ஒன்றில் மிக, மிக சிறப்பாக நடைபெற இருப்பதாகவும், அது சித்தர் ஒருவரின் பிரவேசமாக இருக்கும் என்றும், அது ஒரு ஆன்மீக குடிலாக இருக்கும் என்றும், அதில் உள்ளவர்கள் ஒளியை வணங்கி, வானத்திற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தினராக இருப்பார்கள் என்றும், மச்சத்தை அடைமொழியாக கொண்ட ஒரு சித்தரே அங்கு பிரவேசிப்பார் என்றும், அவரின் வழிகாட்டுதல் 60 நாட்கள் அந்த குடிலில் நடக்கும் என்றும், அப்பொழுது அங்கு வாழும் முதியவர் ஒருவர் மரணம் எய்துவார் என்றும், இச்சம்பவத்திற்கு பிறகு அக்குடிலில் உள்ளவர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியை தேடி வருவார்கள் என்று 15-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

வேளாங்கண்ணியில் மிகப்பெரிய ஒரு சோகச் சம்பவம் நடைபெற இருப்பதாகவும் வரும் மாதமொன்றில் நடக்க இருப்பதாகவும், அதனால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என உண்மைகள் உறங்குவதில்லை என்ற பகுதியில் இன்று இடம் பெறுகின்ற 15-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் நாம் தற்போது வெளியிட்டு வருகின்ற தீர்க்க தரிசனத்தின் தொடர்ச்சி இன்னும் சில வாரங்கள் மட்டுமே வெளியிடப்படும் என்றும், அதன்பின் சில மாதங்கள் கழித்தே நமது தீர்க்க தரிசனங்கள் மீண்டும் வெளிவரும் என்று 15-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

இனி வானம் சிவந்து காணப்படும் என்றும், இது பல மாதங்கள் நீடிக்கும் என்றும், இது வருகின்ற ஒரு பேராபத்தின் அறிகுறியாக மக்கள் கருத வேண்டும் என்று 15-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.


சேலம் இனி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், இறைவனின் மகா திருவிளையாடல் ஒன்று தற்போது நடைபெற இருப்பதாகவும், அதனைக் காண உலக மக்கள் சேலத்திற்கு படையெடுப்பார்கள் என 15-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது. இதனை காண அதுவரை நாம் உறங்காமல் காத்திருப்போம் என 15-ம் தீர்க்க தரிசனம் இங்கு சுட்டிக் காட்டுகின்றது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...