05/08/2018

5 மார்க் பெற்றவருக்கு மறுமதிப்பீட்டில் 77 மதிப்பெண்கள்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய அண்ணா பல்கலை விடைத்தாள்...


அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறு கூட்டலில் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு மாணவர்களை தேர்ச்சி அடைய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மறுகூட்டலில் மட்டும் சுமார் 400 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில், 5 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவருக்கு மறு மதிப்பீட்டின்போது 77 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆதாரங்கள்தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறப்புடகிறது. 2017ம் ஆண்டு ஏப்ரல்/மே மாதத்தில் தேர்வு எழுதிய ஒரு மாணவரின் மதிப்பெண் பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியுள்ளது.

இதுபோல பல மாதிரி விடைத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...

அதிமுக குட்கா விஜயபாஸ்கர் கலாட்டா...


நேர்மையும் நாணயமும் மிக்க ஒரு யோக்கிய திருடனை கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்...


கேரளா காசர்கோடு மாவட்டத்தில் உடினூர் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் முனீரா. இவர் வீட்டுக்கு தொலைவில் ஆயிஷா என்பவர் வீடு உள்ளது.

நேற்று முன்தினம் உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்க முனீரா வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட திருடன் ஒருவன், முனீரா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணம், மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டான். அதேபோல, ஆயிஷாவின் வீட்டிலும் கதவை உடைத்து கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளான். ஆனால் ஆயிஷா வீட்டில் எவ்வளவு கொள்ளை போனது என்பது உடனடியாக தெரியவில்லை. வீடு திரும்பிய முனீரா, கதவு உடைக்கப்பட்டு, நகை, பணம் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். 2 சவரன் நகை உட்பட 32 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. பின்னர், அவரது வீட்டுக்குள் இருந்த ஒரு தூணில், "அவசர தேவைக்காக பணத்தை எடுத்திருக்கிறேன். கண்டிப்பாக திருப்பி தந்துவிடுவேன். நான் திருடன் இல்லை" என்று எழுதப்பட்டிருந்தது கண்டு முனீரா மேலும் அதிர்ந்தார்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், முனீரா வீட்டின் கொள்ளை குறித்தும், ஆயிஷா வீட்டின் கொள்ளை குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், யோக்கியமான அந்த திருடனையும் தேடி வருகின்றனர்...

நம் முன்னோர்கள் வகுத்த மருத்துவ முறையை எவன் ஒருவன் தோண்டி எடுத்து மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறானோ... அவன் சிறையில் அடைக்கப்படுகிறான்...


இனி ஒவ்வொரு உயிரும் பல லட்ச ரூபாய் செலவழித்தால் மட்டுமே  இம்மண்ணைத் தொடும்...

தமிழ் மக்களும் குதிரை வீரர்களும்...



ஜமாலுதீன்.. ஜக்கியூதீன்..  கடைசி பாகம்...

ஜமாலுதீன் ஜக்கியுதீன் என்ற இரண்டு பேரை பற்றி போன பதிவில் பார்த்தோம் அதன் மீதத்தை இப்போது பார்ப்போம்.

ஜமாலுதீன் ஒரு பகுதி தலைவராக மட்டுமில்லாமல் போர் வீரனாகவும் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அப்படியே இருக்கட்டும்.

பாண்டி நாட்டு கடற்கரையில் இருந்து எதிரேயுள்ள ஈழத்தில் தமிழர் தளபதிகள் காலிங்கராயர் சோழகங்கன் என்ற இரண்டு படை தளபதிகளை.

சிங்கள அரசன் புவனேக பாகு என்பவர் இரண்டு தளபதிகளையும் துரத்திவிட்டு ஈழத்தை தம் வசம் கொண்டு வந்தார் புவனேக பாகு. .

இந்த தகவல் மாறவர்ம பாண்டிய அரசனுக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே பாண்டிய நாட்டில் இருந்து ஈழத்தை நோக்கி ஒரு படை கிளம்பியது அந்த படைக்கு

தளபதி ஜமாலுதீன். .

இந்த படை ஈழம் சேர்வதற்கு முன் புவனேகு பாகு என்ற சிங்கள அரசன் இறந்துவிடுகிறார்.

ஈழத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது பசியும் பட்டினியும் நிலவியுள்ள நேரத்தில் ஜமாலுதீன் படைகள் ஈழத்தை கைப்பற்றியது.

ஜமாலுதீன் ஈழத்தில் உள்ள சுபகிரி கோட்டையை கைப்பற்றி அங்கு புத்தரின் பல்லை பாதுகாத்து வந்தார்கள் .

அந்த பல்லை எடுத்துக்கோண்டு போரில் கிடைத்த வெற்றி செல்வங்களுடன்

பாண்டியனின் அரசவையில் கொண்டு வந்து கொட்டினார்.

தாமரை மலர் போன்று சிரித்துக் வரவேற்றார் என்று வரலாறு கூறுகிறது.

இதோடு நாம தொடர்ந்து பார்த்து வந்த ராவுத்தர்கள் வரலாறு முடிகிறது.

இதை பதிவிட காரணம் ?
மதநல்லிணக்கம்.

இப்படி தான் ஒரு புத்தகம் உள்ளது. தமிழுக்கு தொண்டு செய்த கிருஸ்தவ பெரியார்கள் என்று..

தமிழும் இஸுலாமும் என்று
மா சோ வி எழுதிய புத்தகமும் உண்டு..

நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த புத்தகங்களை அக்கால அரசியல் நாட்டுடமையாக்கியது ..

மணவை முஸ்தபா என்ற தமிழ் அறிஞர் மருத்துவ தமிழ் அகராதி என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதுவு‌ம் குறைந்தது  2,000 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகம் தான் ஆங்கில ரோம வார்தைகளை பயன்படுத்தி வரும் மருத்து வரலாற்றில் முதல் முறையாக தமிழில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்..

ஆனால் கண்டுக்கொள்ளத்தான் ஆட்கள் இல்லை.

பெராசிட்டமால்
இஞ்சக்சன்
ஆப்பரேஷன்
தைராய்டு
கிட்னி
ஹார்ட் அட்டாக்

இப்படி எல்லாமும் ஆங்கிலம்..

மாத்திரை மருந்து உட்பட எல்லாவற்றையும் தமிழில் தொகுப்பது எவ்வளவு கடினமான வேலை.

மாத்திரை மருந்துகள் மட்டுமல்லாது உடலில் உள்ள சுரப்பிகளை யும் தமிழில் எழுதியுள்ளார். .

வாயில நுழையாத பெயரை கூறும் மருத்துவர்களையும் அதை பெருமையாக பேசும் நபர்களுக்கும் செருப்படி இந்த ஆய்வு புத்தகங்கள்..

ஆனால் அதை நடைமுறைப்படுத்த இங்கு மானமுள்ள ஆட்சி நடக்கவில்லையே..

ஆகவே நான் கூற விரும்புவது மத நல்லிணக்கம் என்ற மறுபெயருக்கு உதாரணம் நமது தமிழகம் தான்.

களப்பிரர்களுக்கு கடவுள்
கொள்கை வேறு,

நாகர்களுக்கு கடவுள் கொள்கை வேறு..

மராட்டியர்களுக்கு கடவுள் கொள்கை வேறு..

ஆனால் எல்லாவற்றையும் அள்ளி அணைத்து கொண்டது தமிழகம்.

திடீரென்று மத வெறி அரசியல் செய்யும்
பாஜக. அதன் குட்டி கலவர இயக்கங்களுக்கு இங்கு வேலை இல்லை. ...

அவர்களில் உள்ள சிலருக்கு இப்பதிவு. ..

புகைப்படம்: முதன்முறையாக தமிழில் அச்சடிக்கப்பட்ட விவிலியம்...

சிலுவை யுத்தங்கள் − 18...


இரண்டாவது_சிலுவைப்_போர் (கி.பி − 1147 − 1149) −2...

இரண்டாவது சிலுவை யுத்தத்தைத் தொடர்ந்து நூருத்தீன் ஸன்கீ:

இரண்டாவது சிலுவை யுத்தத்தில் சிலுவை வீரா்கள் அடைந்த தோல்வி,சிரியாவில் காணப்பட்ட சிலுவை அரசுகளுக்கெதிரான தாக்குதல்களைத் தொடர நூருத்தீன் ஸன்கீக்கு உந்துதலைக் கொடுத்தது.

கி.பி.1149−ஆம் ஆண்டு அன்தாக்கியா ஆட்சியாளரைத் தோற்கடித்து அவரைக் கொலை செய்தும் விட்டார். இதன் பின்னால் இவ்வாட்சியின் கீழிருந்த பல நகரங்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த நூருத்தீன், சிலுவை வீரா்கள் நிறுவிய ரஹா ஆட்சியின் கீழிருந்த எஞ்சிய பிரதேசங்களையும் கைப்பற்றினார். கி.பி.1151−இல் ரஹா ஆட்சித் தலைவரையும் சிறைப்பிடித்தார்.

கி.பி.1154−இல் அன்தாக்கியா ஆட்சிப் பிரதேசத்திற்குள் நுழைந்து மூன்றாம் பொஹீமென்ட் என்பவனையும் அவனது சிநேகிதரான திரிப்போலியின் ஆட்சியாளர் மூன்றாம் ரெமொன்ட் என்பவனையும் கைது செய்தார். இவர்கள் தண்டப்பணம் செலுத்தும் வரைக்கும் விடுவிக்கப்படவில்லை.

இது ஒரு புறமிருக்க,மறுபுறமாக டமஸ்கஸ் பிரதேசம் முஸ்லிம் ஆட்சியாளர் முஈனுத்தீன் என்பவரின் அதிகாரத்தின் கீழிருப்பதை நூருத்தீன் விரும்பவில்லை.டமஸ்கஸ் ஆட்சியாளர் பலவீனமான நிலையிலிருந்ததால், தனது அதிகாரம் நூருத்தீனிடம் பறிபோய்விடும் என்று அஞ்சி சிலுவை வீரா்களுடன் நேசத்தை ஏற்படுத்திக் கொண்டார். இது முஸ்லிம் உலகுக்கு ஆபத்து எனக் கருதியதனால்தான் நூருத்தீனின் நிலைப்பாடு அவ்வாறிருந்தது.

இக்கட்டத்தில் ஹி.548(கி.பி.1153) காலப்பகுதியில் எகிப்திய ஆட்சியாளர்களான பாதிமியரிடமிருந்து "அஸ்கலான்" நகரைக் கைப்பற்றியிருந்த பிரஞ்சுக்காரா்களோ, ஸிரியாவின் தலைநகரமான டமஸ்கஸை வெற்றிகொள்ளும் தமது திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டே இருந்தனர். என்றாலும்,டமஸ்கஸில் வாழ்ந்து வந்த நல்ல மனிதர்கள் மோசக்கார ஆட்சியாளருக்கெதிராகக் கிளா்ந்தெழுந்து நூருத்தீனுடன் தொடர்பு கொண்டு தம்மை சிலுவை வீரா்களின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தங்களது பிரதேசத்துக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நூருத்தீன், படைகளோடு டமஸ்கஸுக்குச் சென்றார்.எதிரிகளின் படை வருமுன்பே ஒரு யூதப்பெண்ணின் உதவியோடு கோட்டையினுள் நுழைந்தார்.மக்கள் அவர்களை மனமார வரவேற்றனா்.

இதன் பின் ஹி.549(கி.பி.1154) நூருத்தீன் ஸன்கீ டமஸ்கஸின் ஆட்சியாளரானார். பின்னர் நூருத்தீன் "பால்யெக்" பிரதேச ஆளுனராக இருந்த நஜ்முத்தீன் ஐயூபி என்பவரை டமஸ்கஸின் ஆளுனராக நியமித்துவிட்டு அலெப்போவுக்குச் சென்று விட்டாா்.

இக்கட்டத்தில் ஹி.555 இல் இஸ்லாமிய மத்திய அரசின் தலைவரான அப்பாஸிய கலீபா முக்தீப் என்பவர் மரணமானார்.

இவருக்குப் பின் இவரது மகன் அபுல் முழப்பர் யூஸுப் என்பவர் "அல் முஸ்தன்ஜித் பில்லாஹ்" எனும் பட்டத்தோடு அப்பாஸிய அரசின் புதிய கலீபவாகப் பதவி ஏற்றார்.

- தொடரும்.....

பாண்டிய மன்னனின் அயல்நாட்டு உறவு...


சிங்கள அரசனுக்கும் பாண்டியனுக்கும் நடந்த யுத்தம்...

குதிரைகளும் ராவுத்தர்களும் - 3...

இப்படிப்பட்ட பதிவுகளை இப்போது எழுதக்காரணம் கிருஸ்துவ ஆலயங்களை உடைப்பதும் முஸ்லீம் கிருஸ்தவர்களை வேரறுக்க வேண்டும் என வரலாற்றை மறந்து கலவரம் செய்ய நினைக்கும் இந்துத்துவா வெறியர்களுக்காகவே எழுதுகிறேன். .

நாட்டுடமையாக்கப்பட்ட நூலான கிருத்துவ பெரியார்களின் தமிழுக்கு செய்த தொண்டு என்ற நூலை வாசியுங்கள். கிருஸ்தவ மக்கள் தமிழகத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரியும். .

அதே போன்ற ஒரு ஒற்றுமை
பதிவுதான் இது. .

ராவுத்தர் இனத்தையும் குதிரைகளையும் ஏற்கனவே பார்த்தோம் அல்லவா

அதில் இன்னமும் பல விஷயங்கள் உள்ளது அவைகளை இப்போது பார்ப்போம்.

பாரசீகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட குதிரைகள் தமிழகத்தில் பாண்டிய நாட்டின் துறைமுகங்களான
பெரியப்பட்டினம் மற்றும்
தேவிபட்டினம் ஆகிய கடற்துறைகளில் கரை இறக்கப்பட்டன. இதனை கண்காணிக்க பாண்டிய மன்னன் தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்கினார் அதான் வணிகத்துறை.

இத்த வணிகத்தில் கிஸ்ராவில் இருந்து குதிரைகளை தமிழகத்திற்கு அனுப்பும் ஜமாலுதீன் (கிஸ்ரா பகுதி தலைவர்) (இவர் பற்றிய மேலு‌ம் தகவல் பதிவின் இறுதியில் வரும் ) என்பவர் மாறவர்மன் குலசேக பாண்டியனின் பெரும் மதிப்பிற்குரிய மனிதராக இருந்தார்.

இவர் தமது உறவினரான ஜக்கியுதீன் என்பவரை பாண்டிய நாட்டிற்கு குதிரைகளை எடுத்துச்செல்லும் வணிக பொருப்பாளராக ஆக்கினார்.

மூவாயிரம் மைல் தொலைவில் உள்ள குதிரைகளை லாவகமாக அதற்கு எந்த உயிரிழப்புகள் ஏற்படாமல் கொண்டு வரும் இவரை பாண்டிய மன்னன் மாறவர்மன் தமது நட்பு நாட்டு நண்பரான ஜமாலுதீனிடம் பேசிவிட்டு ஜமாலுதீனின் உறவினரான ஜக்கியுதீனை பாண்டிய நாட்டின் வணிகத்துறை அமைச்சராக ஆக்கினார்.

பொதுவாக யானைகளுடன் மல்லுகட்டிய நமக்கு அயல்நாட்டு குதிரைகள் புதியது.

அதனால் கவனிப்பார் அற்று வருடத்திற்கு நூற்றுக்கணக்கான குதிரைகள் இறந்து போய்விடும்.

இந்த பிரச்சினையை தீர்க்க ஜக்கியுதீன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து குதிரைகளின் தன்மையை ஏற்கனவே அரிந்த ஜக்கியுதீன் அவைகளை பிரித்தார் .

காத்தீப், லஹ்ஷா,பாஹ்ரைன், ஹீர்மூஸ்,
குல்கத்து , ஆகிய பிரதேச குதிரைகளின் தட்பவெப்ப நிலை உணவு போன்றவைகளை மாற்றினார்.

மற்றும்..

தமிழக தட்பவெப்ப நிலைக்கு குதிரைகளை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு உணவை மாற்றினார்.

அதன் விவரம் இது.

அதாவது பாண்டிய மன்னன் தமது குதிரைப்படைக்கு ஜக்கியுதீனை அமைச்சராக ஆக்கி அவர் குதிரைக்கு கொடுத்த உணவு.

இதில் நமக்கு ஒரு பயன் உள்ளது.

யாராவது உடல் கொழுக்க இதை செய்து பாருங்கள்.

பார்லி தானியத்தை வறுத்து தயிருடன் கலந்து குதிரைக்கு  கொடுத்தனர்
பின்னர் சூடான பசும்பாலும் கொடுத்தனர்.

நாற்பது நாட்களுக்கு கட்டிப்போட்டு இப்படி கொடுத்து குதிரைகளை கொழுக்க செய்தார் .

பின்னர் பயிற்சி.

அதாவது பயிற்சி பெற உடல் வலிமை வேண்டுமென்பதற்காக முதலில் குதிரைக்கு உணவை கொடுப்பது பின்னர் பயிற்சி கொடுப்பது.

இப்படியாக இருந்தது பாண்டிய மன்னனின் வாணிப அமைச்சகம்,

அடுத்து ஏற்கனவே நான் கூறிய ஜமாலுதீனும் பாண்டிய நாட்டிற்கு வந்து பாண்டியனுடன் நட்பு பாராட்டினார்.

நட்பின் விளைவாக ஜமாலுதீன் தமிழத்திலையே தங்கினார்.

(குழப்பிக்கொள்ள  வேண்டாம் ஜமாலுதீன் வேறு ஜக்கியுதீன் வேறு )

பின்னர் ஜமாலுதீன் பாண்டிய மன்னரால் சக்ரவர்த்தி என்று பாராட்டுபெற்றார் எதனால்?

தமிழ் அரசனுக்கும்
சிங்கள அரசனுக்கும்
நடந்தேறியது உக்கிரமான சண்டை அதில் ஜமாலுதீன் என்ன செய்தார்?

சிங்கள மக்கள் கடும் கோபம் வரும் செயலை செய்தார் ஜமாலுதீன்
அப்படி என்னதான் செய்தார்..

பேசுவோம்...

சிலுவை யுத்தங்கள் − 17...


இரண்டாவது சிலுவைப் போர்
(கி.பி − 1147 − 1149) −1...

முதல் சிலுவைப் போர்களை தகுந்த ஆதரங்களுடன் பார்த்து வந்த நாம் இப்பொழுது இரண்டாம் காலகட்டத்தில் பயணிக்கலாம்...

ஆட்சியாளர் நூருத்தீனின் தலைமையில் புத்துயிர் பெற்ற முஸ்லிம்களின் முன்னேற்றம் ஐரோப்பாவின் உணர்வலைகளைத் தட்டிவிட்டது. எடெஸ்ஸா நகரை முஸ்லிம்கள் வெற்றி கொண்டது ஐரோப்பாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திற்று.இதனால் சிஸ்த்தேசியன்(Cistercian) எனும் இயக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த
"மடபதி பேர்ணாட்" என்பவர் இஸ்லாத்திற்கெதிராகப் புதியதொரு சிலுவைப்போர் தொடங்கப்பட வேண்டும் எனப் பிரச்சாரம் செய்யலானார். அவ்வேளை புதிய பாப்பரசராகத் தேர்வு ஆரம்பிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனம் செய்தார்.

இதன் விளைவாக,ஹி.542
(கி.பி.1147)ல் அன்றைய பிரான்ஸ் மன்னன் ஏழாம் லூயியும்,ஜெர்மனிய அரசன் மூன்றாம் கொன்ராதும் பெரும் படைகளைத் திரட்டிக்கொண்டு சிரியா, பலஸ்தீன பிரதேசங்களை நோக்கிப் புறப்பட்டனர். இந்தக் கூட்டுப்படையில் சுமார் ஒன்பது இலட்சம் சிலுவை வீரா்கள் இருந்தனர்.

ஆரம்பத்தில் தனித்தனியாகப் புறப்பட்ட இக்கூட்டுப்படைக்குப் பிரான்ஸிய மன்னன் ஏழாம் லூயியே தலைமை தாங்கினான்.

முதலில் புறப்பட்டு வந்த ஜெர்மனியப் படையினர் வரும் வழியிலேயே ஸல்ஜூக்கிய வீரா்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனா்.

பெரும் தொகையான ஜெர்மனியர் அதில் கொல்லப்பட்டனர்.அதேபோல் ஒரு மாதத்தின் பின் புறப்பட்டு வந்த பிரான்ஸுப் படையினர் கத்மஸ் மலைப் பகுதியில் துருக்கியரால் தாக்கப்பட்டனர். இத்தாக்குதலிலும் பல சிலுவை வீரா்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு தாக்குதல்களுக்குப்பட்ட சிலுவைப் படையினர் ஒருவாறு ஜெரூஸலத்தை அடைந்ததும் டமஸ்கஸ் நகரைக் கைப்பற்றும் முடிவுக்கு வந்தனர்.ஹி.543(கி.பி.1148)இல் டமஸ்கஸை அடைந்த சிலுவை வீரர்கள் முற்றுகையில் இறங்கினர். சிலுவை வீரா்களின் இப்படையெடுப்பைப் பற்றி ஏற்கனவே அறிந்துகொண்ட டமஸ்கஸ் ஆட்சித் தலைவர் "முஜீருத்தீன் ஐபக்" நூருத்தீனிடமும் அவரது சகோதரர் ஸைபுத்தீனிடமும் உதவி கோரியிருந்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இவர்கள் பெரும் படையொன்றை நடத்திச் சென்றனர்.இவர்களின் படை மேற்கொண்ட அதிரடித் தாக்குதல் நடவடிக்கைகளினால் சிலுவை வீரா்களின் முற்றுகை சுக்குநூறாய் உடைந்தது.

சிலுவை வீரர்களின் டமஸ்கஸை முற்றுகையிட்டிருந்த வேளை அதனைப் பங்கு போட்டுக் கொள்வதில் அவர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் தளபதிக்கு ஏற்பட்ட நோயும் இத்தோல்விக்குக் காரணமாயின எனச் சொல்லப்படுகின்றது. இவ்வாறு இந்த இரண்டாவது படையெடுப்பு படுதோல்வியில் முடிவடைந்ததால் லூயியும், ஜெர்மனிய தளபதி கொன்ராதும் ஏமாற்றத்தோடு ஐரோப்பா திரும்பினர்.

- தொடரும்.....

தமிழா திருட்டு திராவிடத்தின் சதிகளை பார்...


தேநீர் கடையாக இருக்கட்டும்..
திரை துறையாக இருக்கட்டும்..
எந்த துறையாக இருந்தாலும்..

இனி வாழ்வதும் ஆள்வதும்  தமிழர்கள் மட்டுமே இந்த மண்ணில் என்ற நிலை செய்ய உறுதி எடுப்போம்...

அல்சர் குணமாக உபயோகித்துக் கொள்ளுங்கள்...


தமிழன் ஓவிய கலை...


ஆதி மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பியபோது அவன் வாழ்ந்த இடத்தில் சூழ்ந்திருந்த கற்பாறைகளில் கோடுகளால் வெளிப்படுத்தினான். அந்தக் கற்பாறைக் கோடுகளே ஆதி ஒவியமாக அறியப்படுகின்றன.

புள்ளியில் தொடங்கிய கோடுகள் நீண்டு, வளைந்து, நெளிந்து, பல உருவக் கோடுகளாய்ப் பரவி அவர்களது வாழ்க்கை மகிழ்வுகளையும் ஆடல்பாடல்களையும் வேட்டைக்குப் பயன்படுத்திய கருவிகளையும் ஓவியக் கோடுகளாகத் தீட்டி இருக்கிறார்கள். இக்கோடுகளே வரலாற்றைப் பதிவு செய்யும் சாட்சியங்களாக விளங்குகின்றன.

உலக நாகரிகத்தின் முதன்மையானது என்று குறிப்பிடப்படும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம் முதற்கொண்டு இன்றைய கணினிக் காலம் வரை கோடுகளே முதன்மை பெற்று வருகின்றன.

சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களாக ஏராளமான சுடுமண் சிற்பங்கள் முத்திரைகளாகப் கிடைக்கப் பெற்றுள்ளன.

கற்பனைத் திறத்திற்கு ஏற்ப உருவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். இரண்டு கொம்புகளே உடைய மனிதன், மீன், எருது, வரிக்கோடுகளையுடைய புலி, மரம், காண்டாமிருகம், எருமை, காளை, யானை, உடைந்த பானைகள், பிறப்பு பற்றிய முத்திரைகள் கிடைத்துள்ளன.

இச்சின்னங்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.

உலகத்தின் பல்வேறு இடங்களில் குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. ஏடறியா வரலாற்றுக்கு முந்தையக் காலக் கோட்டோவியங்கள் தமிழகத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன.

இக்கோடுகளில் ஆதித்தமிழர்களின் வாழ்நிலை சித்தரிக்கப்பட்டுள்ளது. குகை ஒவியங்கள் பெரும்பாலும் நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

தருமபுரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்த ஒரு வீரன் காணப்படுகின்றான். இவ்வோவியம் வெண்ணிறக் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது.

தென்னார்க்காடு மாவட்டம் கீழ்வாலை என்ற ஊரில் உள்ள இரட்டைப்பாறையில் செம்மண் வண்ணத்தினால் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் பறவையின் முக அமைப்புடைய மனிதர்கள் காணப்படுகிறார்கள். இவ்வோவியம் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணக்கிடுகிறார்கள்.

சேத்தவாரை என்ற இடத்தில் எழில்மிக்க மான் உருவ ஓவியம் காணப்படுகின்றது.

ஐயனார் மலையில் எருமை, கரடி, புலி, மீன் போன்ற உருவங்கள் செம்மண் நிற ஓவியக் கோடுகளால் வரையப்பட்டுள்ளன. உள் பகுதிகளில் வெண்மை நிறம் பூசப்பட்டுள்ளன. இவ்வோவியங்களில் ஒரே ஒரு மனித உருவம் காணப்படுகின்றது. இவை கீழ்வாலை ஓவியத்தை ஒத்திருப்பதாகக் கலையியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கோயம்புத்தூரில் வெள்ளெருக்கம்பாளையம் அருகில் உள்ள வேட்டைக்காரன் மலையில் உள்ள ஓவியங்களில் யானையும், குதிரையும், மனிதர்களும் காணப்படுகின்றன. ஆறு மனித உருவங்கள் கைகோர்த்து நடனமாடுவது போல் காணப்படுகின்றன. யானை, குதிரை ஆகிய விலங்குகளில் மனிதர்கள் அமர்ந்திருப்பது போன்ற ஓவியங்களும் காணப்படுகின்றன.

இவையொத்த ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாசினாக்குடியில் காணப்படுகின்றன. மனிதர்கள் யானையில், புலியில், மானில், மயிலில் அமர்ந்த நிலையில் உள்ளனர். இவர்கள் கடவுளர்கள் என்று நம்பப்படுகின்றனர்.

இவ்வோவியங்கள் 2300 ஆண்டு வகையைச் சேர்ந்தவகையாகும். இவை போல் ஆலம்பாடி, பதியாண்டாள், கொல்லூர், மல்லசமுத்திரம் போன்ற இடங்களிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மல்ல சமுத்திரத்தில் உள்ள ஓவியங்கள் வெள்ளை நிறக் கோடுகளால் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு விலங்கு வியக்கும் வண்ணம் காணப்படுகின்றது. மனிதனின் தலையில் அலங்கரிக்கப்பட்ட சிறப்பான தலைப்பாகை காணப்படுகின்றது. சமூக வாழ்க்கையில் தலைவன் ஏற்றுக் கொண்ட நிலையை ஏற்றுக் கொண்டது போல் தெரிகிறது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக் குகை ஓவியங்கள் பெரும்பாலும் வெண்ணிறக் கோட்டோவியங்களாகவே காணப்படுகின்றன. இவ்வோவியங்களில் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் அரசனும், இளவரசனும் வீற்றிருக்க அருகில் ஆயுதம் ஏந்திய வீரர்களும் காணப்படுகிறார்கள். இவை சமுதாய வாழ்க்கையில் அரசு உருவான காலத்தைப் எதிரொளிப்பதாக இருக்கலாம்.

திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற ஊரில் உள்ள குகையில் காணப்படும் கோடுகள் மிக மிகத் தொன்மையானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இன்னும் ஏராளமான குகைகளில் நமது முன்னோர்களின் கலைப்படைப்புகள் மறைந்திருக்கலாம். ஆய்வாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் நமது வரலாறு மேலும் விரிவடைய வாய்ப்புண்டு. இருக்கும் ஓவியங்களும் நம் மக்களால் பாதுகாக்கப்படாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஓவியக் கோடுகளை நம் கலைஞர்கள் பல்வேறு ஊடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், முத்திரைகள், உலோகத்திலும், சுடு மண்ணிலும் காணப்படுகின்றன. இவை கோட்டு வடிவங்களாகவும், புடைப்பு அச்சு முறையிலும் அமைந்ததாகவும் காணப்படுகின்றன. அரசர்களின் கொடி, அவர்கள் வணங்கிய கடவுளர்கள், அவரவர் சின்னங்கள் ஆகியவற்றையும் கோடுகளால் வரைந்திருக்கிறார்கள். செப்புத் தகடுகளில், ஓலைச் சுவடிகளில் ஓவியக் கோடுகளோடு எழுத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
வரலாற்றை, மருத்துவத்தை, புராணத்தை, இலக்கியங்களை ஓவியத்தோடு படைத்திருக்கிறார்கள். காதல் மங்கையரின் மார்பகங்களிலும், முதுகுகளிலும், செம்பஞ்சுக் குழவையால் ஓவியம் வரைந்ததைத் தொய்யில் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
பெண்கள் தங்கள் வீட்டின் முன்வாசலில் சுவரில், தெருக்களில் கோலங்கள் போட்டுள்ளனர். தம் கற்பனைகளில் மிதந்து வரும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பூக்கள் என்று தம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் ஆயிரம் ஆயிரம் கோடுகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.
திரைச்சிலைகளில் முதலில் கோடுகள் போட்டு அதன் தன்மை குலையாமல் வண்ணங்கள் தீட்டும் கலையை நம் முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள்.

"ஒருமுக எழினியும், பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
ஓவிய விதானத் துரைபெறு நித்திலத்து
மாலை தாமம் வளையுடன் நாற்றி"

என்ற சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதை வரிகளால் அறியலாம்.
தோலைப்பதப்படுத்தி அதில் ஓவியக் கோடுகளை வரைந்து உள்பகுதியில் வண்ணங்கள் குழைத்துத் தீட்டி தோல்பாவை மூலம் மக்களுக்குக் "கதை சொல்லிகளாக" வாழ்ந்து கலையை வளர்த்திருக்கிறார்கள்.

இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா
மரப்பாவை சென்று வந்தற்று

என்ற திருக்குறள் அடிகளில் மரப்பாவை பயிற்று வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். "கை புனைந்து இயற்றாக் கவின்பெறுவனப்பு" என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது. "கண்ணுள் வினைஞர்" என்று ஓவியர்களை பழம்பெரும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஓவியத்தை "ஓவம்" என்கிறார்கள். மணிமேகலையில் "ஓவியச் செந்நூல் உரைநூல் கிடைக்கையும்" என்று வருகிறது.

நடுகல் வழிபாடு என்பது ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை நீண்ட வரலாறு கொண்டதாகும்.

கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரையில் ஏராளமான நடுகற்கள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பல்லவர் காலமாகும்.
போரில் வீர மரணம் அடைந்தோரின் கற்களின் மேற்புறத்தில் செதுக்குச் சிற்பமாகவும், கோட்டுச் சிற்பமாகவும் வடித்துள்ளார்கள். வீரர்களின் பெயர் மற்றும் நிகழ்வுகளை எழுத்தில் பதிவு செய்துள்ளார்கள். பின்னாளில் இதுவே குல தெய்வ வழிபாடாகவும் மாற்றம் பெற்றுள்ளது.

தஞ்சை மாவட்டம் குடந்தை அருகே கி.பி. 884 திரும்புறம்பியப் போரில் மாண்ட போர் வீரர்களின் நினைவாகப் "பள்ளிப் படை வீடு" என்ற நடுகல் கோவில் உள்ளது. இதைக் கல்வெட்டு ஆய்வறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் பதிவு செய்துள்ளார்.

நடுகல் செதுக்குச் சிற்பங்கள் இலக்கணங்களை மீறிப் கோட்டோவியங்கள் சிறப்பாக்கப்பட்டுப் பக்க வாட்டில் உருவங்கள் அகழ் ஓவியக் கோடுகளாகவும் வெளிப்படுகின்றன. நடுகற்களே முப்பரிமாண வடிவங்களுக்கு முன்னோடி எனலாம்.

கோடுகள், ஓவியங்கள், செப்புத் தகடுகள், அச்சுகள், துணிகள், கற்கள், உடல்கள், வீட்டு வாசல்கள் என்று பல்வேறு தளங்களில் இருந்த கோடுகளும் ஓவியங்களும் பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், மராட்டியர் காலம் என்று காலங்கள் தோறும் விரிவுபடுத்தப்பட்டு வந்தன.

சோழர்கால ஓவியங்கள் கி.பி. ஆயிரத்தைச் சேர்ந்தவை. இவ்வோவியங்கள் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் கருவறை முதல் தளச் சுற்றுச் சுவரில் பாதுகாப்பாக வரையப் பட்டுள்ளன. இவற்றின் ஓவியக் கலையின் மேன்மை தெரிவதோடு அஜந்தா ஓவியத்தின் சாயலோடு இவை ஒத்துப் போகின்றன. இவை இன்னும் அழியாமல் இருப்பதற்கு FRESCO என்னும் சுவர் ஓவிய முறையில் வரையப்பட்டதும் ஒரு காரணமாகும்.

ராசராச சோழன், கருவூரார், நடன மகளிர், வீரர்கள், நடனமாடும் இசைக்கலைஞர்கள், சிவபூத கணங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. இவையெல்லாம் கவர்ச்சியான பல வண்ணங்களோடு கோடுகளால் சிறப்பான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

ஒன்பதாம் நூற்றாண்டு ஓவியங்களாகப் பாண்டியர் காலச் சித்தன்னவாசல் ஓவியங்கள் திகழ்கின்றன. பனைமலை, காஞ்சிக் கைலாசநாதர் கோவில் ஓவியங்களையும் இவற்றோடு குறிப்பிட வேண்டும்.

சித்தன்னவாசல் ஓவியங்களில் அரசர், அரசி, மீன்கள், வாத்துகள், எருமைகள், நிறைந்த தாமரைக்குளம் ஆகியவை பாண்டியர் கால ஓவியக் கலைஞர்களின் கைத் திறமைக்குச் சான்றாக உள்ளன.

காஞ்சி திருப்பருத்திக்குன்றம், திருவாரூர் கோவில், சிதம்பரம் கோவில், குடந்தை பட்டீஸ்வரம், திருமங்கலக்குடி, தஞ்சை, மதுரை, அழகர்கோவில், திருவலஞ்சுழி என எல்லாக் கோவில்களிலும் ஓவியங்கள் நிறைந்து காணப்பட்டன.

திருவலஞ்சுழி, பட்டீசுவரம், திருமங்கலக்குடி ஆகிய இடங்களிலுள்ள ஓவியங்களைச் குடமுழுக்கு என்ற பெயரால் அழித்து விட்டார்கள்.

திருவாரூர் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓவியங்கள் கேட்பாரற்று வவ்வால் எச்சத்தாலும் மழையின் ஒழுகலாலும் அழிந்து கொண்டிருக்கின்றன.

திருவிடை மருதூர்க் கோவிலில் வரைந்திருந்த ஓவியங்கள் ஏராளம். "சித்திரபிரகாரம்" என்ற சுற்றுப் பாதையில் தற்போது எல்லாம் மறைக்கப்பட்டுத் தமிழன் காண்பதற்கும் கற்பதற்கும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள்.

தமிழனுக்கு என்று இருந்த ஓவியக் கலை வரலாற்றை எழுதுவதை விட, அதைக் காப்பதற்கான முயற்சிதான் இன்று மிக இன்றியமையாத் தேவையாகும். அதைச் செய்வதற்கான வல்லமை தமிழர்களுக்கு என்று வருமோ?

வணிகப் போர் உச்சம்...


சடையவர்மன் சுந்தரபாண்டியன்...


சோழர்கள் தமிழ் வரலாற்றிலேயே பெரிய அரசை நிறுவி உலகின் முதல் கடல் கடந்த பேரரசை அமைத்து பேருரு எடுத்து நின்ற காலம் அது.

அநாபய சாளுக்கியன் என்ற வேற்றினத்தான் சோழ அரசைக் குறுக்குவழியில் கைப்பற்றிய பிறகு சோழப் பேரரசு வீழத் தொடங்கியது..

இந்த நிலையில் 13ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தமிழர்களின் பாண்டிய அரசு பேரெழுச்சி பெற்றது.

இவர்களில் முதன்மையானவன்
"சடைய(ஜடா)வர்மன் சுந்தரபாண்டியன்".

வடதமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுவிட்ட ஹொய்சளர்களை (கன்னடர்களை)
தோற்கடித்து காவிரியாற்றுப் பகுதியை மீட்டான்.

இலங்கையின் அரசனைத் தோற்கடித்தான்.

தெலுங்கு சோழன் கண்டகோபாலனை போரில் கொன்று காஞ்சியையும் நெல்லூரையும் மீட்டான்.

நெல்லூரில் அந்த வெற்றியைக் கொண்டாடினான்...

தமிழகத்தில் குடியேறும் வட நாட்டு வந்தேறிகள்...


ஆண்களும் அணிந்த தாலி...


தாலி என்பது கழுத்து நகையைக் குறிக்கும் பெயர்ச்சொல்..

இதை பழங்காலத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்தனர்.

ஒரு பெண் ஒரு ஆணை "நான் உன்னைக் கட்டிக்கொள்கிறேன்" என்று கூறுவது முரண்பாடான ஒன்று கிடையாது.

ஆணுக்கு பெண் தாலி அணிவிக்கும் வழக்கத்தையே குறிக்கிறது.

பிறகு இதுவே ஆணின் காலில் பெண் மெட்டி அணிவிக்கும் வழக்கம் வந்தது.

பிறகு அதுவும் பெண்களுக்கு போனது.

புலிப்பல் "தாலி" என்ற அணியை ஆண், பெண்இரு பாலாரும் அணிந்திருந்தனர்
என்பது பண்டைத்தமிழ் இலக்கியங்களில் இருந்து தெரிய வருகிறது .

ஆதிமனிதர் தாம் வேட்டையாடிய சில விலங்குகளின் எலும்புகள், பற்கள், நகங்கள் போன்றவற்றை அணிகலன்களாக்கி அணிந்தணர்.

குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த வேட்டுவர்கள் தமது பிள்ளைகளுக்குப் புலிப்பல் தாலி அணிவித்தது சங்க இலக்கியங்களிலிருந்தும் தெளிவாகிறது.

ஆனால், சிறுவரும், சிறுமியரும் புலிப்பல் தாலி அணிந்தமையால் மறக் குலத்தின் வழிவந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக  அணிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வழக்கமே பிற்காலத்தில் "ஐம்படைத் தாலியாக" வளர்ச்சியடைந்தது.

புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது ஆகும்.

ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும்.

சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது .

புறநானூற்றுப் பாடல் ஒன்றில் "தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்" மிக இளம் வயதிலேயே போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக,
"தாலி களைந்தன்று மிலனே"
என்று அவன் தாலியை இன்னும் களையாத சிறுவயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் களைந்துவிட்டே கால்களில் கழல் அணியும் வழக்கம் இருந்தது .

"தாலம்" என்ற சொல் புல்வகையைச் சார்ந்த பனை போன்ற தாவரங்களைக் குறிப்பது.
ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.

நோய்வராமல் தடுப்பதற்காக மந்திர ஓலைச் சுருளைக் கை,கால், கழுத்து போன்ற உறுப்புக்களில் அணிந்துகொள்வது பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.

எனவே "தாலம்" என்ற சொல்லிலிருந்து காப்பு அணிகளைக் குறிக்கும் "தாலி".என்ற பொதுச் சொல் தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாக தெரியவில்லை.

(பெரிய இடத்து இளைஞர்கள் புலிப்பல் போன்ற அமைப்பை சங்கிலியில் அணிவது காணப்படுகிறது.இதை மைனர் செயின் என்கிறார்கள்)

மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது.

ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது.

யாழ்ப்பாணத்து நகைக்கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப் பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும்.

இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு.

சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந்தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக, சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது.

பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர்.

குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் துடக்குக் கழிவுச் சடங்கின்போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது...

http://ta.m.wikipedia.org/wiki/புலிப்பல்_தாலி

உங்கள் வாழ்வியலுக்கான அனைத்தையும் கொண்டுள்ளது தமிழீழம்...


வேறெந்த வரலாற்றையும் தேடி காலத்தை வீணாக்காதீர்கள்...

வரலாற்றை அறிந்து கொள்ளாத எந்த இனமும் மீண்டு வந்ததாக வரலாறு இல்லை...

தொழிலாளித் தமிழன்...


இந்தியாவில் வேறு எந்த இனத்தையும் விட ஆங்கிலேயர்களால் அடிமைகளாக ஆடு மாடுகள் போல ஓட்டிச் செல்லப்பட்டு பல்வேறு நாடுகளில் குடிவைக்கப்பட்டது நம் தமிழினமே.

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கன்னடவருக்கு மைசூர் அரசும், மலையாளிகளுக்கு திருவாங்கூர் அரசும், தெலுங்கருக்கு ஐதராபாத்தும் இருந்தன.

ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் முற்றுமுழுதாக நெடுநாட்களுக்கு சிக்கியிருந்தது தமிழர்களே.

பஞ்சம் வந்தபோது விளைந்த கொஞ்சம் நெல்லையும் ஆங்கிலேய அரசு விழுங்கிக் கொண்டு  மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கு கடல்கடந்து அழைத்துச்சென்று காட்டில் கொண்டு விட்டது.

மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை மலையகம், மொரீசியஸ், அந்தமான், பிஜி, ரீயூனியன், மார்த்தினிக், ட்ரினிடாட் டொபகோ, சூரினாம், கயானா,  தென்னாப்பிரிக்கா என்று லட்சக்கணக்கானத் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டு காட்டைத் திருத்தி தோட்டங்களாக்கும் தொழிலாளர்களாக, வாழ்நாள் கூலிகளாக ஆக்கப்பட்டனர்.

அன்றைய மலேயா (மலேசியா,சிங்கப்பூர்) பகுதிக்குச் சென்ற தமிழர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9லட்சம்.

இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்.

தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்.

சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்.

மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000.

பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000.

ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000.

ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000.

ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000.

கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500.

அதாவது ஏறத்தாழ 20லட்சம் பேர் தாய் நிலத்தை விட்டு வெளியேறினார்கள்.

வெளியேறினார்கள் என்பது முக்கியமில்லை.. இவர்களின் வாரிசுகள் கிட்டத்தட்ட 50லட்சம் பேர் அதே அடிமட்ட தொழிலாளர்களாக இன்றைக்கும் இருக்கிறார்கள்.

இது ஆங்கிலேயர் காலத்தில் பிழைக்கப் போன தமிழ் தொழிலாளர் எண்ணிக்கை மட்டும் தான்.

1947க்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிழைக்கப்போன தமிழர் எண்ணிக்கை இன்று 80லட்சம்.

80-90கள் வரை அரேபிய நாடுகளுக்குப் பிழைக்கப்போனோர் 4லட்சம் பேருக்கு மேல்.

தற்போது படித்த இளைஞர்களும் வெளியேறுவது தொடங்கிவிட்டது.

படித்துவிட்டுஐரோப்பிய நாடுகளுக்கு உழைத்துகொடுக்கப் போன பட்டதாரிகளின் அதாவது நாகரீக அடிமைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது கூடிக் கொண்டே போகிறது.

இதையெல்லாம் தாண்டி  ஈழ அகதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 10லட்சத்துக்கும் மேல்.

இவர்கள் அத்தனை பேரும் உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.

இது போக தமிழகத்திலேயே பன்னாட்டு தொழிற்சாலைகளில் நிரந்தரமற்ற வேலைகளில் குறைந்த ஊதியத்துக்கு உழைத்துக் கொட்டுவோரையும் சேர்த்தால்
இன்றைய தமிழ் இளைஞர்களில் 95% உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்களே.

வேலைகிடைக்காதோரைக் கணக்கில் எடுத்தால்....

வேண்டாம் முடிவே இல்லாமல் நீளும்.

ஆக இன்று தமிழினமே தொழிலாளி இனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்த தமிழரையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

1949ல் 'மலேயா கணபதி' 24 வயதில் ஆங்கிலேயரால் தூக்கில் போடப்பட்டார்.

அவரது தோழர் 'மலேயா வீரசேனன்' 20 வயதிற்குள் ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1950ல் இவ்விருவரது தோழர் வாட்டக்குடி இரணியன் சிங்கப்பூரில் இருந்து தப்பி தமிழகம் வந்து இங்கே தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டார்.

இவரது தோழர்களான ஜாம்பவனோடே சிவராமனும் ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் சுட்டுக் கொல்லப்பட்டனார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த  'தில்லையாடி வள்ளியம்மை' 16வயதில் போராடி இறந்தார்.

மொரீசியசில் அஞ்சலை என்ற பெண் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தார்.

1977ல் சிவணு லட்சுமணன் சிங்கள அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுபோக தாமிரபரணி படுகொலை, கீழவெண்மணி படுகொலை, சயாம் மரண ரயில் 50,000  தமிழர் படுகொலை போன்ற வேற்றினத்தார் செய்த தொழிலாளர் படுகொலைகளும் வரலாற்றில் உள்ளன.

தமிழ்மண்ணில் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் 'முதலாளியும் தமிழன் தொழிலாளியும் தமிழன்' என்று சொல்ல தமிழ்த்தேசியவாதிகள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது.

தமிழர் நாட்டில் அத்தனை பிரச்சனைகளும் அதற்குரிய வழியில் தீர்க்கப்படும்.

தமிழருக்கு ஒரு நாடு இருந்திருந்தால் உலகத் தமிழர்களுக்கு கைகொடுத்திருக்கலாம்.

மலேயா கணபதி தூக்குக்குப் காத்திருந்த போது இந்தியாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அது வாயை திறக்கவில்லை.

ரிசானா நபீக் செய்யாத தவறுக்கு தலை சீவப்பட்டு கொல்லப்பட்டாளேநம்மால் என்ன செய்ய முடிந்தது?

மலையகத் தமிழர் வெளியேறிய போது அந்தமானில் குடிவைக்க இந்தியா அனுமதி மறுக்க, அவர்கள் நீலகிரியில் குடி வைக்கப்பட்டனர்.

பொறுப்பான ஒரு அரசு இருந்திருந்தால் இத்தனை தமிழர்கள் வெளியேறவேண்டி இருந்திருக்காது.

தாய்நிலத்தில் சரியான வாய்ப்புகள் கிடைத்து இங்கேயே வாழ வழி செய்திருக்கலாம்.

வேற்றினத்தாரின் நேரடி மற்றும் மறைமுக சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும் தமிழினம் இனியும் சகித்துக் கொண்டிருக்கக்கூடாது.

எமக்கான ஒரு படையை அமைத்து இழந்த தாய்மண்ணை மீட்டு அதில் ஒரு மக்களாட்சி அரசை அமைத்து தாய்நில வளங்களை சரியாகப் பயன்படுத்தி எந்தக் குறையுமில்லாமல் நமது சந்ததிகள் வாழச்செய்ய நம்மால் முடியும்...

வெண்மைப் புரட்சியின் மோசமான விளைவுகள்...


என்ன நடக்கிறது? மாடுகளுக்கு நாம் என்ன செய்தோமோ அதையேதான் மனிதர்களுக்கும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்களின் கர்ப்பப்பைக்குள் ஊசியைச் செலுத்தி ‘சினை’ பிடிக்கச் செய்கிறார்கள்...

நம்ப முடியாத உண்மைகள் - கொசுக்கள்...


தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலில் பலர் பலியாகி கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

படிக்காதவன முட்டாள்னு சொன்னாங்க இப்ப படிச்சும் முட்டாளா இருக்கோம் ஏன்..?


மரணம் இப்படித் தான் இருக்குமா...?


யோகி முதல் போகி வரை கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பது தான்..

போகுமிடம் என்றால் என்ன? 

மரணத்திற்கப் பின் நம் உயிர் பறவைக்கு உடல் கூட்டிலிருந்து விடுதலை கிடைத்தபின் அது அடையக் கூடிய நிலை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் போகும் இடத்தைப் பற்றிய விவரங்கள் சுலபமாகக் கிடைத்து விடும்.  அத்தகைய உயர்நிலையை அறிந்துகொள்ள செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆதாரமாக கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

செத்துப் பிழைத்தவர்கள் என்று கருதப்படும் பல நபர்களின் வாக்கு மூலங்கள் முழுமையாக நமக்குக் கிடைத்து இருக்கிறது.  இருப்பினும் பெரும்பாலான வாக்கு மூலங்களில் அந்தந்த நபர்களின் சுய கற்பனைகளும் பய உணர்ச்சியால் ஏற்பட்ட வார்த்தை தடுமாற்றங்களும் நிறைந்து இருக்கின்றன என்பதை மறப்பதற்கில்லை.  ஆனாலும் அந்த வாக்கு மூலங்களில் சில உண்மைகளும் பல ஒற்றுமைகளும் இருக்கிறது.  அவைகளைப் பற்றி சிறிது பார்ப்போம்.

கனடா நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் 1954ம் வருடம் மார்ச் மாதம் 17ம் தேதி காலை 8.30 மணிக்கு மரணம் அடைந்தார்.  அவர் மரணம் அடைந்து மூன்று மணி நேரம் கழித்து திடீரென தனது சாவுப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.  வழி தவறி அடையாளம் தெரியாத இடத்தில் அகப்பட்டு மீண்டும் தனது சொந்த இடத்தை எதேச்சையாக அடைந்த நபர் போல மிரண்டுபோய் இருந்தார். அவரிடம் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்டபோது காலையில் தன்னால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடலில் இனம் தெரியாத வலி இருந்தது.  அதனால்தான் மிகவும் வேதனையும் சோர்வும் அனுபவித்தேன்.  திடீரென்று தன்முன்னே வெள்ளை நிறத்தில் தேவதைகள் போல் மூன்று நபர்கள் வந்தனர்.  அவர்கள் தன்னை தன் உடலுக்குள் இருந்து வெளியே இழுத்தனர்.  அப்போது படுக்கையில் கிடக்கும் எனது உடலைப் பூரணமாக என்னால் பார்க்க முடிந்தது.  அதன்பின் அந்த மூன்று நபர்களும் வெளிச்சம் மிகுந்த ஒரு பாதையில் தன்னை அழைத்துச் சென்றனர்.  அவர்களுக்குள் புரியாத பாஷையில் ஏதேதோ பேசிக் கொண்டனர்.  அதில் ஒரு வார்த்தைக் கூட எனக்குப் புரியவில்லை.  சிறிது தூரம் கடந்தபின் அவர்களுக்குள் பேசி ஏதோ முடிவுக்கு வந்து என்னை மீண்டும் உடம்பிற்குள்ளேயே தள்ளிவிட்டு விட்டனர்.  அதன்  பின்னரே தான் எழுந்து உட்கார்ந்ததாகவும் கூறினார்.  அந்த மூன்று தேவதைகளின் முக அழகு இன்னும் தனது மனதில் பூரணமாக நிறைந்து இருப்பதாகக் கூறி சந்தோஷப்பட்டார்.

இதே போன்ற ஒரு சம்பவம் அபுதாபியில 1975ம் வருடம் ஜனவரி மாதம் நடந்தது.  30 வயது இளைஞர் ஒருவர் இதய நோய் கராணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவர் இறந்து விட்டதாகக் கருதி உடல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வீட்டுக்கும் அனுப்பிவிட்டனர்.  உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்த போது உறவினர்கள் பிரமிப்பு அடையும் வகையில் மரணத்திவிருந்து எழுந்தார்.  எழுந்தவர் இரண்டு நாள்  வரையில் பித்து பிடித்தவர் போல் யாரிடமும் பேசாமல் இருந்தார்.  அதன் பிறகு கூறிய விஷயங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

என் இதய வலியை நீக்கவும் இதயத் துடிப்பை சமப்படுத்தவும் டாக்டர்கள் போராடிக் கொண்டு இருந்தனர்.  என் மீது என்னென்னவோ கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.  அறை முழுவதும் மருந்துகளின் வாடை.  எனக்கு அந்கச் சூழல் பயத்தை மேலும் அதிகரித்தது.  அப்போது என் கண் முன்னே 3 நபர்கள் தோன்றினார்கள.  அவர்கள் கால்வரையில் வெள்ளை அங்கி அணிந்திருந்தார்கள் என நினைக்கிறேன்.  அவர்கள் மூன்று பேருமே வெளிச்சமாகவும் அழகாகவும் இருந்தனர். என்னை வா என்று அழைத்தனர்.

நான் அவர்களின் அழைப்பை ஏற்று எழுந்தேன்.  ஆனால் என் உடல் படுக்கையில்தான் கிடந்தது.  கருவிகள் பொருத்தப்பட்டுக் கிடந்த என் உடலைப் பார்ப்பதற்கு எனக்கு அப்போது ஏனோ வேடிக்கையாக இருந்தது.  ஆனால் அந்த மூன்று பேரும் உடனடியாக என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.  மேலும் கீழும் மணலால் சூழப்பட்ட ஒரு சுரங்கப் பாதைக்குள் என்னைக் கூட்டிச் செல்வது போல் இருந்தது.  அந்த நிலையில அந்த மணல் சுரங்கம் எனக்குப் பயத்தையும் இனம் புரியாத திகிலையும் தந்தது. அங்கு இதுவரை நான் அனுபவித்து இராத உயரிய நறுமணம வீசியது.  சுரங்கத்திலிருந்து ஒரு மணல் அறைக்குள் என்னை அழைத்துச் சென்றனர். அந்த அறையினுள் வெளிச்சமும் குளிர்ச்சியும் இருந்தது.  அந்த 3 நபர்களும் திடீரென்று என்னை அந்த அறையினுள் இருந்து வெளியே கூட்டி வந்து என் வீட்டிற்குள் இருந்த உடம்பிற்குள் என்னைத் தள்ளி விட்டனர்.  அவர்கள் தள்ளிய வேகமும் உடலுக்குள் புகும்போது நான் அனுபவித்த இனம்புரியாத கிலியும் என்னை பிரம்மையில ஆழ்த்தி விட்டது என்று அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியான வார்த்தைகளால் கூறினார்...

சுகாதாரத்துறையிடம் சில கேள்விகள்...


மூன்றாம் உலகப்போரும் தமிழின எழுச்சியும்...


ஓட்டோமான் பேரரசின் (Ottoman empire) ஆதிக்கத்தை எதிர்த்த 'செர்பிய இனவெழுச்சி' முதல் உலகப்போரைத் (WW1) தோற்றுவித்தது.

முதல் உலகப்போரில் வென்றநாடுகளின் (Allied powers) ஆதிக்கத்தை எதிர்த்த 'ஜெர்மானிய இனவெழுச்சி' இரண்டாம் உலகப்போரைத் (WW2) தோற்றுவித்தது.

இந்திய ஆதிக்கத்தை எதிர்த்த 'தமிழின  எழுச்சி' மூன்றாம் உலகப்போரைத் (WW3) தோற்று விக்கலாம்...

கற்றாழை பயன்கள்...


நாவல் பழம் (நவ்வா பழம்)...


நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்...

சத்தமே இல்லாம இவ்வளவு செய்து கொண்டு இருக்கிறார் ஐயா சகாயம்...


இதற்கு மேல் மக்கள் சிந்திப்பதும் சட்ட விரோதமாக அறிவிக்கப்படும்...


அதற்குள் இங்கு கட்டமைக்கப்பட்டு இருக்கும் அரசியலை புரிந்துக் கொண்டு, ஒன்றிணைய முயலுங்கள்..

ஏனெனில் அடுத்த தலைமுறையும் இங்கு வாழ வேண்டும்..

இந்த உலகம் அனைவருக்குமானது...

ஹைடெக் விபச்சாரம்...


சென்னை ஆர்.கே சாலையில் நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழில் நடத்திய 4 பேர் கைது; ஹோட்டல் ஊழியர்கள் 4 பேர் கைது; இரண்டு வெளிநாட்டு பெண்கள் மீட்பு.

சுற்றுலா விசாவில் பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் நடத்தியதாக போலீசார் தகவல்...

வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்.. தொப்புள் கொடியை அறுக்க விடாமல் பிடிவாதம்... வாழ்த்துக்கள்...


தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். வயது 27. இவரது மனைவி மகாலட்சுமி 21. இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று மகாலட்சுமியும் கர்ப்பமானார்.

இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது. வீட்டிலேயே குழந்தை பிறந்ததால் அக்கம் பக்கத்தினர் அனைவரும் வந்து பார்த்தனர். அப்போது கண்ணன்தான் மகாலட்சுமிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்பட்டது. இந்த செய்தி அந்த ஊர் முழுவதும் பரவி பரபரப்பானது. அதனால் அரசு மருத்துவமனை டாக்டர்களும், போலீசாரும் கண்ணன் வீட்டுக்கே வந்துவிட்டனர்.

வீட்டிலேயே சுகப்பிரசவம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே வைத்து ஏன் பிரசவம் பார்த்தீர்கள்? என போலீசார் கண்ணனிடம் கேட்டனர். அதற்கு கண்ணன், "பொதுவாக எங்கள் குடும்பத்தில் எல்லோரும் வீட்டிலேயே சுகப்பிரசவத்துடன் வீட்டிலேயே பிறந்தவர்கள். மருத்துவமனை பிரசவத்தில் சில தவறு கூட நடக்காமல், ஆனால் எங்கள் வீட்டில் பார்த்த பிரசவத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளது, என் மனைவியும் களைப்பின்றி தெளிவுடன் இருக்கிறார்" என்றார் கண்ணன்.

இதனை கேட்ட அரசு மருத்துவமனை டாக்டர்கள், சரி, குழந்தையை தூக்கி கொண்டு வந்து தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுங்கள்" என்றனர். ஆனால் அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டனர. இதனால் என்ன பேசுவதென்று தெரியாத மருத்துவர்கள், குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்க சென்றனர். அதற்கும் மறுப்பு தெரிவித்த அவர்கள், "தொப்புள் கொடி என்பது தானாகத்தான் கீழே விழ வேண்டும், நாமாக அறுத்தெறிய கூடாது. அப்போதுதான் அதிலுள்ள நச்சுகள் குழந்தையின் உடலில் கலந்து இம்மியூனிட்டி என்னும் நோய் எதிர்ப்பு சக்தியினை தரும்" என்றனர்.

எதற்குமே வளைந்து கொடுக்காமல் அசராது பதிலளித்த கண்ணன் குடும்பத்தினரை, போலீசார் எச்சரித்தனர். வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தால் எவ்வளவு ஆபத்து என்பதை உணர்த்தினர். அதனால் கண்ணன் குடும்பத்தினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கண்ணனின் தந்தையை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து கண்ணன் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வரவழைத்த டாக்டர்கள், குழந்தைக்கு மட்டும் சிகிச்சை தருகிறோம் என்றனர். ஆனால் அவர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று மொத்தமாக இழுத்து மூடி கதவை அடைத்து கொண்டனர்...

அண்ணா பல்கலைகழகத்தில் ஊழல்...


அவர்களுக்கு நாங்கள் சொல்லும் ஒரே பதில்...


சிசேரியன் பெருகும் காலம் வரும்...

அதிகாரவர்க்கம் வலுக்கட்டாயமாய் மருத்துவம் என்ற பெயரில் உன் பணத்தை சிசேரியனில் பிடுங்கும்...

இந்த கோமாளிகளின் கதறல் அப்போது உங்களுக்கு கேட்கும்...

ந, ம, சி, வ, ய: அஞ்செழுத்தில் தமிழ்...


மந்திரம் என்பது மறைமொழிகளால் மனிதர், விலங்கு, பறப்பன, ஊர்வன, தாவரங்கள், நஞ்சுப் பொருள்கள் ஆகியவற்றைத் தமக்குப் பயன்படுமாறு இயக்குவது என்பர்.

மந்திரம் எண் வடிவமாகவும் எழுத்து வடிவமாகவும் குறிப்பிடப் படுகிறது.

மந்திர எழுத்து என்பது ந, ம, சி, வ ய என்னும் ஐந்து எழுத்து. எண் என்பது அந்த எழுத்துகளுக்குரிய எண்களாக 9, 11, 4, 15, 12 எனக் குறிக்கப்படும்.

“அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன”

காட்டில் உள்ள யானைகளை அடக்குவதற்கு அங்குசம் பயன்படுவது போல், ஐந்து பஞ்சபூதங்களால் உருவான உயிர்கள் அனைத்தையும் அடக்குவதற்கு அங்குசமாக மந்திர எழுத்துகள் பயன்படுகின்றன என்பர்.

ஒலி வடிவில் அமைந்திருக்கும் மந்திரம் யாவர்க்கும் பொதுவானது. அது எல்லா உயிர்களுக்கும் விரும்பிய பயனைத் தருவது. ஒவ்வொருவரையும் சூழ்ந்திருக்கும் துன்பங்களை நீக்குவது, தனக்குரிய வலிமையைப் பெற்றுத் தருவது என்று மந்திரத்தின் சிறப்பைத் திருமந்திரம் உரைக்கிறது.

மந்திரங்கள் ஒன்றை அல்லது ஒருவரை வயப்படுத்தல், அழித்தல், மழுங்கச் செய்தல், அழைத்தல், தடுத்தல், பகைத்தல், ஏவுதல், மயக்கல், நட்பு கொள்ளச் செய்தல் என்னும் காரணங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. அட்டகர்ம சித்தி, மாந்திரீகச் சித்தி, பராபரத்தின் சித்தி, தச தீட்சை சித்தி, அணிமா, கரிமா, லகிமா, மகிமா, பிறாத்தி, பிறாகாமியம் என்னும் ஆறும் வசியம், ஈசுவரம் ஆகியவையும் சித்தியாகும் என்று கூறப்படுகிறது.

நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை இருபத்தைந்து கட்டங்களில் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு எழுத்தாக அமைப்பர். அந்த எழுத்துக்கு மாற்றாக அதற்குரிய எண்களை அமைப்பர். அந்த எண்கள் எந்தப் பக்கத்திலிருந்து கூட்டினாலும் 51 என்னும் கூட்டுத் தொகையாகவரும். மந்திர எழுத்துகளுக்குரிய எண்களைக் குறிப்பிடும் போது, ‘க’ முதல் ‘ன’ வரையுள்ள தமிழ் உயிர்மெய் எழுத்துக்களுக்கு 2லிருந்து 19 வரையான எண்களைக் குறித்து மந்திர எழுத்துக்குரிய எண்ணாகக் குறிக்கின்றனர்.

இவ்வாறு எண்ணும் எழுத்தும் கட்டங்களில் இடம்பெறுகின்றன. இந்த மந்திரங்களில் தமிழ் எண்ணும் எழுத்தும் பெறுகின்ற சிறப்பினைக் கருதியே ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தரும்’ என்று உரைக்கப் பட்டுள்ளது.

தமிழில் மந்திரங்கள் இல்லை என்னும் கருத்துக்கு மறுப்புரைப்பது போலத் திருமந்திரமும், கருவூரார் மாந்திரிக காவியமும், கொங்கணர் கடைக் காண்டம் போன்ற பல நூல்களும் அமைந்திருக்கக் காணலாம்...

நம்மளுடைய முட்டாள்தனமே அவனுக்கு மூலதனம் - மருத்துவம் வணிகம்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்-1...


ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள் பண்டைய கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரபலம்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் க்ரோசியஸ் என்ற மன்னன் அரசியலில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க ஆரக்கிள்களிடம் குறி கேட்க எண்ணினான். அதற்கு முன் அந்த ஆரக்கிள்கள்களுக்கு உண்மையில் அந்த அற்புத சக்திகள் உள்ளனவா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். உடனே அவன் ஏழு திசைகளில் ஏழு ஆரக்கிள்களிடம் தன் சேவகர்களை அனுப்பி "இன்றிலிருந்து சரியாக நூறு நாட்கள் கழித்து அவர்களிடம் கேளுங்கள் "இந்த நேரத்தில் எங்கள் அரசர் க்ரோசியஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் உடனடியாக வந்து சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.

அந்த நூறாவது நாள் வந்ததும் க்ரோசியஸ் எந்த யூகத்திலும் அந்த ஆரக்கிள்கள் தன் செயலைச் சொல்லி விடக்கூடாது என்று எண்ணி வழக்கமாகச் செய்யும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வினோதமான ஒரு காரியம் செய்தான். ஒரு ஆமையையும் ஒரு ஆட்டையும் கொன்று இரண்டையும் ஒரு பெரிய வெண்கலப் பாத்திரத்தில் போட்டு வெண்கலத் தட்டால் மூடி வேக வைத்துக் கொண்டிருந்தானாம். டெல்·பை என்ற ஆரக்கிள் "எனக்கு ஆமை வாசனை தெரிகிறது....நெருப்பில் ஒரு ஆட்டுக்குட்டியின் சதையும் பொசுங்குகிறது தெரிகிறது. அது வெண்கலப்பாத்திரத்தில் போடப்பட்டிருக்கிறது. அதன் மூடியும் வெண்கலம்" என்று கூறினாராம்.

அரசர் அந்தப்புரத்தில் இருக்கிறார், மந்திரிகளுடன் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறார் என்று யூகத்தில் சொல்வது சுலபம். அது பல நேரங்களில் பலிக்கவும் கூடும். ஆனால் க்ரோசியஸ் மன்னன் செய்து கொண்டு இருந்ததைச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அந்த ஆரக்கிளிடம் அந்த சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை இது போன்ற கதைகள் ஏராளம். ஒரு உண்மை சம்பவம் இருந்தால் ஆயிரம் கற்பனைச் சம்பவங்கள் புனைக்கப்படுகின்றன. கேட்பவைகளில் இருந்தும் படிப்பவைகளில் இருந்தும் உண்மையான சம்பவத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. எதை யார் கூறுகிறார்கள், கூறுபவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது, எந்த ஆதாரத்தில் சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து உண்மை என்று நம்பக்கூடியதை மட்டுமே நான் இந்த உளவியல் தொடரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றில் சொல்லப்பட்ட அந்த சம்பவத்தைப் பார்த்தோம். 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ·ப்ளோரிடாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அந்த நகரில் ஒரு மத்திய வயது நபர் ஒரு நாள் வீட்டை விட்டு தன்னுடைய டிரக்கில் கிளம்பிப் போனவர் பின் திரும்பி வரவேயில்லை. உடனடியாகப் போலீசில் தெரிவிக்கப்பட்டது. யாரும் கொன்றிருக்கவோ கடத்தியிருக்கவோ வாய்ப்பில்லை என்பதை போலீசார் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தனர். ஆனால் பிறகு அவரைக் கண்டு பிடிக்க முயன்ற போலீஸாரின் முயற்சி வெற்றி பெறவில்லை. தீயணைப்புப் படையினர் உதவியும் பெற்று பல இடங்களில் சுமார் 16 மாதங்கள் முயன்று தோற்ற போலீசாருக்கு ஒரு அபூர்வ சக்தி படைத்த பெண்மணியின் உதவியைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. காணாமல் போன மனிதர்கள், பொருட்கள் பற்றி அந்தப் பெண்மணி துப்பு தருவதில் வல்லவர் என்று சொல்லப்பட்டது.

நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும் முயற்சி செய்வதில் நஷ்டமில்லை என்று அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன்னிடம் ஒரு மாதத்திற்கு அப்பாயின்மென்ட் இல்லையெனவும் ஒரு மாதம் கழித்து காணாமல் போன நபரின் ஏதாவது சில உடைமைகளை எடுத்துக் கொண்டு வருமாறும் அதிகாரியிடம் சொன்னார். அந்த அதிகாரியும் அந்த நபரின் ஷ¥, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியிடம் சென்றார்.

அந்த நபரின் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிய அந்தப் பெண்மணி சில நிமிடங்களில் சில துப்புகள் தந்தார். அந்த நபரின் உடல் இன்னும் அந்த டிரக்கின் உள்ளே தான் இருக்கிறது. எங்கிருந்தோ கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதால் அந்த மனிதர் அந்த டிரக்கோடு கீழே ஏதாவது பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அந்த இடத்தின் அருகே சிவப்பு செங்கல்கள், பழைய ரெயில்வே டிராக் தென்படுகின்றன என்றும் சொன்னார். அந்த மாகாண வரைபடத்தில் ஒரு சதுரத்தை வரைந்து அந்த இடத்தில் தேடச் சொன்ன அந்தப் பெண்மணி 1,2,4,5 எண்களுக்கு சம்பந்தமுள்ள இடங்களில் பார்க்கச் சொன்னார்.

அந்த அதிகாரி சில நாட்கள் அந்தப் பெண்மணி வரைபடத்தில் வரைந்த சதுரத்திற்குள் இருக்கும் இடங்களில் எல்லாம் தேடி சலித்துப் போனார். அந்த நபரின் உடல் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்மணியை நம்பி வந்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்ட அந்த அதிகாரி திரும்பத் தயாரான போது ஓரிடத்தில் சிவப்பு செங்கல்கள் கொண்ட நிலப்பரப்பு தொலைவில் தெரிந்தது. அவருக்குள் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது. அந்த இடத்தை நோக்கி விரைந்தார். அது ஒரு கைவிடப்பட்ட குவாரி. அங்கே சென்று ஆராய்ந்த போது ஒரு பழைய ரெயில்வே டிராக்கைக் காண முடிந்தது. அந்த டிராக்கும் புல்களால் மூடப்பட்டிருந்தது. அந்த குவாரியின் உச்சியில் சென்று பார்த்த போது சுமார் எழுபதடிக்குக் கீழே ஒரு பெரிய நீர்நிலை இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த நீர் நிலை முழுவதும் சகதியும், புற்களும் மண்டியிருந்தன.

அந்தப் பகுதி ஹைவே 45க்கு அருகே இருந்தது. அங்கிருந்து 2.1 மைல் தூரத்தில் அந்த உச்சி இருந்ததைக் கணக்கிட்ட அந்த அதிகாரிக்கு எல்லாம் அந்தப் பெண்மணி சொல்வதற்கு ஒத்து வருவது போலத் தோன்றியது. உடனே கடற்படையினரின் உதவியை நாடி அவர் அந்த நீர்நிலையில் ஏதாவது டிரக் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல கடற்படையினர் வந்து தேட டிரக்குடன் அந்தக் காணாமல் போன நபரின் உடலை 25 அடி ஆழத்திலிருந்து மீட்க முடிந்தது.

உள்ளூர் மக்களும், போலீஸ் அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் பின்பு இந்நிகழ்ச்சியை ஆராய வந்த ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இது ஒன்றும் பிரமாதமான விஷயம் அல்ல என்றார். அந்தப் பகுதியே பல குவாரிகள் நிறைந்தது என்பதால் அந்த நபர் அதில் ஏதாவது ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று யூகிப்பது சிரமமல்ல என்றும் சிவப்பு செங்கல்கள், பழைய ரயில்வே டிராக் போன்றவை குருட்டாம் போக்கில் சொல்லப்பட்டு உண்மையாகிப் போன ஹேஷ்யங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஆனாலும் இது போன்ற சிரமமில்லாத யூகங்களை வைத்து போலீசாரால் 16 மாதங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதும் அந்தப் பெண்மணியின் துப்புகள் இல்லை என்றால் அந்த நீர் நிலையை எப்போதாவது தூர் வாரும் வரை அந்த நபரின் உடல் கிடைத்திருக்காது என்பதும் உண்மையல்லவா என்று கேட்டதற்கு இந்தக் கேஸில் அது உண்மை என்று முன்பு தேடிய உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்புப் படை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.

இந்த கி.மு, கி.பி நிகழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....

இயற்கையுடன் இனைந்து வாழுங்கள்...


தமிழ்த் தேசியப் போராளி ம.பொ.சிவஞானம் சென்னை மீட்ட வரலாறு...



ஆயிரம் விளக்கின் சால்வான் குப்பத்தில் எளிய குடியில் பிறந்தாலும், அயராத உழைப்பால் ஆற்றலால், ஏற்றம் பெறலாம் என்பதை உணர்த்தியவர் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். கொடிது கொடிது இளமையில் வறுமை! மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத வறுமை நிலையிலும் தன் முயற்சியில் கற்றார்.

சிற்றாள், நெசவுத் தொழிலாளி, அச்சுத் தொழிலாளி என வாழ்வியல் நிமித்தம் பல்வேறு தொழில்களைச் செய்தார். பி. வரதராஜுலு நாயுடு நடத்திய ‘தமிழ்நாடு’ நாளிதழில் அச்சுக் கோப்பாளராகப் பணியாற் றியபோது குறித்த தேதியில் சம்பளம் கொடுக்கக் கோரித் தொழிலாளர்கள் செய்த வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தியபோது அவருடைய போராட்ட குணம் வெளிப்பட்டது.

பின்னர் காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, 1927ஆம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். உப்புச் சத்தியா கிரகம், சட்ட மறுப்பு இயக்கம் போன்ற போராட்டங்களிலும் ஈடு பட்டார். கள் இறக்கு தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தாலும் சென்னைப் பெருநகர மது விலக்குக் குழுச் செயலாளராகப் பொறுப்பேற்று தீவிர மதுவிலக்குப் பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் சாதி மக்களின் பகையைத் தேடிக் கொண்டார்.

கட்சி ஊழியராகப் பணியைத் தொடங்கிய ம.பொ.சி., அச்சமின்றி சோர்வு தவிர்த்துத் தன் கடும் உழைப் பால் தலைவர்களின் நன் மதிப்பைப் பெற்று சென்னை மாவட்டக் காங் கிரஸ் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆகஸ்டுக் கிளர்ச்சி துவங்கி, ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கம் நாடு முழுவதும் ஒலிக்கத் துவங்கிய காலம். மா.பொ.சி.யும் போராட்டத்தில் ஈடுபட்டு, 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் நாள் கைதாகி, இரண்டாண்டுக் கடுங்காவல் தண் டனை பெற்று, வேலூர் சிறையில் வைக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்டு 30ஆம் நாள் மத்தியப் பிரதேசத் திலுள்ள அமராவதி சிறையில் வி.வி.கிரி, கு. காமராசர், முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி, சஞ்சீவி ரெட்டி போன்ற தலைவர்களுடன் அடைக்கப்பட்டார். கடும் நோய் வாய்ப்பட்டு 1944இல் எலும்புக் கூடாக வெளியே வந்த ம.பொ.சி., இந்தியப் பெருநாட்டின் விடுதலைக் காலம் நெருங்குவதை உணர்ந்து, அதன் அடுத்த கட்டம் நோக்கிச் சிந்தித்தார்.

சிறை வாழ்க்கையில் இலக்கியம் பயின்று, அதன்வழி தன் அரசியல் சிந்தனைகளைச் செம்மையாக வளர்த் தெடுத்தவரின் உள்ளம் இந்திய விடு தலையோடு இன உணர்வையும் இணைத்துப் பார்த்தது. சங்க இலக் கியங்களும் சிலப்பதிகாரமும் பாரதி பாடல்களும் அவர்க்குத் துணை நின்றன. புதிய தமிழகம் படைக்கும் எழுச்சியுடன் 1946ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் தமிழரசுக் கழகத்தைக் காங்கிரசுக்குள் இருந்த படியே ஒரு கலாச்சார இயக்கமாகத் தோற்றுவித்தார். 1947இல் இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங் களும் கிளர்ந்தெழுந்த கால கட்டத்தில், இந்தியாவில் இருந்த பிற மொழி வழி இனத் தலைவர்கள் தங்களுக்கென இன, மொழி வளர்ச்சிக்காகத் தனி மாநிலக் கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினர்.

ஆந்திர மக்கள் ‘விசால ஆந்திரம்’ கோரி ‘ஆந்திர மஹா சபை’ என்ற பேரியக்கத்தின் கீழ் போராடினர். கர்நாடக மக்களும் ‘சம்யுக்த கர் நாடகத்திற்காகப்’ போராடினர். பம்பாய் மாநிலத்திலிருந்க கன்னடப் பகுதிகளையும் ஹைதராபாத் சமஸ் தானத்தைச் சேர்ந்த கன்னடப் பகுதி களையும் இணைத்துப் புதிய மாநிலம் அமைக்க வேண்டும் என்பது அவர் களது கோரிக்கை. கேரள மாநிலத் தவரும் சென்னையுடன் இணைந் திருந்த கேரளப் பகுதிகளைப் பிரித்து ‘ஐக்கிய கேரளம்’ அமையப் போராடி னர். குஜராத் மாநிலத்தவரும் மகா ராஷ்டிர மாநிலத்திலிருந்து பிரிந்து ‘தனி குஜராத்’ மாநிலம் அமைய ‘மஹா குஜராத் ஜனதா பரிஷத்’ என்னும் இயக்கத்தைக் கண்டனர். மகாராஷ் டிர மக்களும் தங்கள் மாநிலம் தனியாக அமையப் போராட என்றே ‘சம்யுக்த மஹாராஷ்டிர சமிதி’ என்னும் அமைப்பை உருவாக்கினர்.

ஆனால் தமிழகத்தில் மொழி வாரித் தனியரசு கோர ஓர் இயக்க மில்லை. எல்லைப் பகுதிகளைக் காக்க வும் மீட்கவும் எந்தத் தலைவரும் முயற் சிக்கவும் இல்லை. திராவிடத் தனி நாடு கோரியவர்களும் கூட அதற் கென எந்த முயற்சிகளையும் முன் னெடுக்காத வேளையில், தமிழ் இன உணர்வாளர்களும் தேசிய வாதிகளும் பிளவுபட்டிருந்த நேரத்தில் தமிழின உணர்வும் உரிமையும் இந்திய ஒருமைப் பாடும் வேறு வேறல்ல என்பதைத் தலைவர்களுக்கும் பிரிவினைக் கோருபவர்களுக்கும் உணர்த்தும் வகையில் ‘உரிமைக்கு எல்லை வேங்கடம், உறவுக்கு எல்லை இமயம்’ என்று முழங்கித் தேசிய இன உணர்ச்சி, மொழி உணர்ச்சி என்ற இரண்டையும் வளர்த்தெடுத்தார். ம.பொ.சி.யின் இந்த முழக்கமே எல்லைப் போர், மொழியுரிமைப் போர், மாநில சுயாட்சிப் போர் என்ற எல்லா வற்றுக்குமான சூத்திரம். இதையே ‘சுயாட்சித் தமிழகம்’ படைக்கும் தேவைக்கான கொள்கையாகவும் எடுத்துரைத்தார்.

பிற மாநிலத்தில் இருந்த காங்கிர சார் மொழி வழி உணர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துப் போராடிய காலத்தில், தமிழ்நாட்டின் நிலை தலைகீழாக இருந்தது. இந்நிலையில் தான், ம.பொ.சி., தமிழரசுக் கழகத்தை முற்று முழுதாகத் தேசிய இனத்தின் இயக்கமாக நடத்தினார். மொழி வாரி மாநிலம் அமைய வேண்டும். தமி ழகத்தின் எல்லைகளைக் காக்க வேண்டும் என்பதையே கழகத்தின் கொள்கையாகக் கொண்டு இயங்கியது தமிழரசுக் கழகம்.

1948ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்க அன்றைய பாரதப் பிரதமர் நேரு, நீதிபதி தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். மீண்டும் 1954ஆம் ஆண்டில் பசல் அலி தலைமையில் குழு அமைந்தது. 1956 நவம்பர் முதல் நாள் தமிழகம் தனி மாநிலமானது. ஆனால் அப்போது ஏற்பட்ட தமிழக- ஆந்திர எல்லைச் சிக்கலைத் தீர்க்க, மத்திய சட்டத் துறை அமைச்சர் எச்.வி.படஸ்கர் தலைமை யில் குழு அமைக்கப் பட்டது.

முன்னதாக, பொட்டி ஸ்ரீராமுலு என்கின்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் உண்ணாவிரதம் இருந்து ஆந்திரப் பிரிவினையைக் கோரினார். சென்னையில் இராயப் பேட்டை நெடுஞ்சாலையில் இருந்த புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரத் தலைவரின் இல்லத்தில் தனது உண்ணாவிரதத்தை 1952ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் தொடங் கினார். ஆந்திரத் தலைவர்களான பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன் றோர் அவரை ஆதரித்தனர். சென் னையைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைய வேண்டும் என்பதே அவர்தம் கோரிக்கை. ‘மதராஸ் மனதே’ என்பதே அவர்களது முழக்கமாக இருந்தது.

பட்டினி கிடந்த ஸ்ரீராமுலுவைக் காணச் சென்ற ம.பொ.சி.யிடம், பிரகாசம், ஸ்ரீராமுலுவின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று கோர, அதற்கு ம.பொ.சி. “சென்னை நகர் மீது உரிமை கொண் டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால், தமிழரசுக் கழகம் ஆந்திரர் களுடன் பூரணமாக ஒத்துழைக்கும்” என்று பதிலுறுத்தார். பிரகாசம் விடாமல், “ஆந்திர அரசு தற்காலிக மாகவேனும் சென்னையிலிருக்க அனுமதித்தாலும் போதும், விசால ஆந்திரம் அமையும் போது எங்களுக்கு ஐதராபாத் கிடைத்து விட்டால் நாங்கள் போய் விடுவோம், இதற்கு நீங்கள் இசைந்து விட்டால் மற்ற வர்கள் எதிர்க்க மாட்டார்கள்” என்று கூறிய போதும் ம.பொ.சி. பிடிவாத மாய் “ஆந்திர அரசுக்கு தற்காலிகமாகச் சென்னையில் இடமளிக்க மற்றவர்கள் இசைந்தாலும், நான் இசைய மாட் டேன்” என்று உறுதியாகக் கூறி விட்டுத் திரும்பினார்.

1952 டிசம்பர் 15ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே உயிர் துறந்தார். அப்போது ஆந்திராவில் ஏற் பட்ட கலவரம் தொடர்ந்து மூன்று நாட்கள் நீடித்தது நிலைமை மேலும் மோச மாகுமென்ற அச்சத்தால், ஆந்திர மாநிலம் 2.10.1953 அன்று பிரிக்கப் படும் என்று நாடாளு மன்றத்தில் நேரு அவரசமாக அறிக்கை வெளியிட்டார். சென்னை நகரம் அல்லாத - தகராறுக்கு இடமில்லாத, தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு - சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும் என்றும் தலைநகர் பற்றிப் பின்னர் அறிவிக்கப் படும்’ என்றும் நேரு தம் அறிவிப்பில் விளக்கியிருந்தார்.

சித்தூர் மாவட்டத்தின் தெற்கே யுள்ள பகுதிகள் தமிழகத்தில் சேர்க்கப் பட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழரசுக் கழகம் கோரி வந்த நிலை யில் சித்தூர் ஆந்திராவில் சேர்க்கப் படுவதாக அறிவிக்கப்பட்டதும், பிரகாசம் மீண்டும் ‘சென்னையை இரு பகுதியாகப் பிரித்துக் கூவத்தை நடுவில் வைத்து வடசென்னையை ஆந்திரத் துக்கும் தென்சென்னையைத் தமிழ் நாட்டுக்குமாகப் பங்கு போட வேண் டும் அல்லது சென்னை நகரம் ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பொது நகராகச் செய்ய வேண்டும்’ என்று அறிக்கை விட்டதும் தமிழகத்தின் நிலையைக் கேள்விக்குள்ளாக்கியது.

அப்போது சென்னை மாநக ராட்சியின் ஆல்டர்மேனாக இருந்த ம.பொ.சி. தமிழரசுக் கழகத் தொண் டர்களுடனும், ‘தலையைக் கொடுத் தேனும் தலைநகரைக் காப்போம்’ என்ற முழக்கத்துடனும் பெரும் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனின் உதவி யுடனும் தமிழக முதல்வர் இராஜாஜியின் ஆதரவுடனும் திருவலலிக்கேணிக் கடற்கரையில் கட்சிச் சார்பற்ற நிலையில் அனைத்துத் தலைவர் களையும் அழைத்து ஒரு பொதுக்கூட் டத்தையும் நடத்தினர். இராஜாஜி, பெரியார், எஸ்.எஸ். கரையாளர், பக்தவசலம் போன்ற தலைவர்களுடன் ம.பொ.சியும் அக்கூட்டத்தில் பேசினார்.

அத்துடன் நில்லாமல், உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தமிழ்நாடு முழுவதுமிருந்து தந்திகள் அனுப்பவும் ஏற்பாடு செய்தார். மேலும் மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டச் செய்து ‘தலை நகரம் தமிழர்க்கே’ என்பது பற்றிய தீர்மானத்தையும் கொணர்ந்தார். நீண்ட விவாதத்திற்குப் பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது தந்தி வடி வில் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், சென்னை மாநில முதல்வர் ஆகியோருக்கு மேயரால் அனுப்பப்பட்டது. இறுதியாக 25.3.1953இல் தில்லி நாடாளு மன்றத்தில் நேரு, மத்திய அரசின் சார்பில் அதிகார பூர்வமான பிரகடன மொன்றை வெளியிடுகையில் ‘ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே இருக்கும்’ என்று அறிவித்தார்.

தலைநகர் காப்பாற்றப்பட்ட போதும் மாநிலம் பிரிப்பதில் எல்லைச் சிக்கல் நீடித்தது. திருத்தணி போராட்ட வீரர் மங்கலங்கிழாரின் அழைப்பின் பேரில் தமிழகத்தின் வடக்கெல்லைப் பகுதிக்குச் சென்ற ம.பொ.சி. சித்தூர் மாவட்டதின் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து மக்களைக் கிளர்ச் சிக்குத் தூண்டினார். தலைநகர்ப் போரில் கை கொடுத்த தலைவர்கள் கூட, வடக்கெல்லைக் கிளர்ச்சியில் ம.பொ.சிக்கு ஆதரவாக இல்லை, இராஜாஜி உள்பட.

ஆனால் ம.பொ.சி. அந்தப் பகுதிவாழ் தமிழ் மக்களின் துணை யுடன் தொடர்ந்து 15 நாட்கள் மறியல் போராட்டம் நடத்தினர். 144 தடை யுத்தரவை மீறிய குற்றத்திற்காக ஆறு வாரக் கடுங்காவல் தண்டனை பெற்றார். இதைத் தொடர்ந்து ரெயில் நிறுத்தம். சட்டப் பேரவை முன்பு ஆர்ப்பாட்டம் அமைச்சர்கள் எதிரே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்று போராட்டம் எழுச்சி பெறத் தொடங்கியது. இறுதியில் இதற்காக அமைக்கப்பெற்ற படங்கர் தலைமை யிலான குழு, திருத்தணியைத் தமிழ் நாட்டுடனும் திருப்பதியை ஆந்திரத் துடனும் இணைத்துப் பரிந்துரைத்தது. இதன் மூலமாக, வள்ளிமலை, திரு வாலங்காடு, திருத்தணி, ஓசுர், சித்தூரின் முப்பது கிராமங்கள் அகியவன தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டன. 1957இன் இறுதியில் பரிந்துரைக்கப் பட்டும் 1960 ஏப்ரல் 1இல் தான் இது சட்டரீதியாக நடைமுறைக்கு வந்தது.

இத்துடன் அன்றி, தமிழகத்தின் தெற்கெல்லையைப் பாதுகாத்ததிலும் ம.பொ.சிக்குப் பங்குண்டு. ‘தமிழ் நாடு’ என்ற பெயர் சுட்டவும் அறப் போர் நடத்தினர். பயிற்சி மொழி யாகத் தாய்மொழியாம் தமிழ் மொழியே இருக்கவேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து அதனை இலக்காக்கினார். ஆல்டர்மேனர்க இருந்தபோது ஆங்கிலேயர் வடிவ மைத்திருந்த சென்னை மாநகராட்சி யின் கொடியை மாற்றி சேர, சோழ, பாண்டியரின் சின்னமான வில், புலி, மீன் ஆகியவற்றைக் கொண்டு மாற்றியமைத்தார், மாநகராட்சியின் வரவு - செலவுக் கணக்கையும் தமிழிலே தாக்கல் செய்து முன் மாதிரி யானார். இது பற்றிக் குறிப்பிடும் தமிழரசுக் கழகத் தொண்டர்கள் ‘ரிப்பன் மாளிகையில்’ அவர் ஆற்றிய பங்கை மதித்து அம் மாளிகைக்கு, ம.பொ.சி. மாளிகை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றன.

தமிழ் எழுத்தாளர் சங்கத் தலை வராகவும் சட்ட மேலவை உறுப்பின ராகவும், சட்ட மன்ற உறுப்பினராக வும் சட்ட மேலவைத் தலைவராகவும், நூலக ஆணைக் குழுவின் தலைவராக வும் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் செனட் உறுப்பினராகவும் தமிழ் வளர்ச்சி உயர்மட்டக் குழுத் தலைவ ராகவும் பணியாற்றி அனைத்திலும் செம்மையாய் நின்றவர் அவர். மூன் றாம் வகுப்பே படித்த ஒருவர் அறிஞர் நிறைந்த மேலவைக்குத் தலைமை தாங்கி அவைத்தலைவராய் இருந்த பெருமை அவர் ஒருவரையே சாரும்.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, தமிழகத்தில் பிற மொழியினர், விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, தமிழ் இலக்கியத்தில் இனவுணர்ச்சி, ஆங்கிலம் வளர்த்த மூட நம்பிக்கைகள், எனது போராட் டம், விடுதலைப் போரில் தமிழகம் உள்ளிட்ட 150 நூல்களை எழுதி யிருக்கும் ம.பொ.சி. ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ நூலுக்காக 1966இல் சாகித்ய அகாதெமியின் பரிசினையும் பெற்றார். வாழும் போதே அவ ருடைய நுலான ‘விடுதலைப் போரில் தமிழகம்’ அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் நாட்டுடைமை யாக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. ம.பொ.சி. யின் நூற்றாண்டு விழா நடைபெற்ற 2006இல் அவரது நுல்கள் அனைத்தும் நாட்டுடமை யாக்கப்பட்டு, முதல்வர் கருணா நிதியால் இருபது லட்ச ரூபாய் அவருடைய சந்ததியினர்க்கு வழங்கப் பட்டது.

அரசியலும் இலக்கியமும் தம் இரு கண்களெனக் கொண்ட ம.பொ.சி. இலக்கியத்துகுச் செய்த பங்களிப்பும் மகத்தானதே. சிலப்பதி காரத்தை உயிர்ப்பித்துக் கொடுத்த உ.வே. சாவின் வழி நின்று சிலம்பை அனைவரிடத்திலும் கொண்டு சென்று புத்துயிரூட்டினார். கட்ட பொம் மனை, கப்பலோட்டிய தமிழனை, மருது பாண்டியனை, தமிழருக்கு நினைவூட்டி, நிலைநாட்டி வரலாறாக் கியவர் ம.பொ.சி. வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப் பாட்டை எளிமைப்படுத்தி விளக்கினார். மேலும் விரிக்கின் பெருகும் வர லாற்றை உடையவர். தமிழக வரலாற் றின் ஒரு பகுதியைத் தம் வரலாறாகவும் பெறும் பேறு பெற்றவர் தமிழால் உயர்ந்தவர்; தமிழுக்கும் வளம் சேர்த்தவர். சிந்தை - சொல் - செயல் என்ற மூன்றாலும் தமிழுக்கும் தமி ழினத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் ஆக்கம் பயந்தவர். இத்தகைய சிறப்பு கள் பெற்ற பெருமகனார்க்கும் தலை நகராம் சென்னையில் சிலை அமைக் கவும் அஞ்சல்தலை வெளியிடவும் ஆவன செய்வதாக உறுதியளித்து அன்னாரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆகஸ்டு 15, 2006இல் அஞ்சல்

தலை முதல்வரின் கரங்களாலேயே தலைமைச் செயலகத்தில் வெளியிடப் பட்டது. ஆனால் ‘சிலை’ அறிவிப்பு அளவிலேயே நின்று விட்டது.

இதே போராட்டத்தை முன் வைத்து நின்ற பொட்டி ஸ்ரீராமு லுவுக்கு ஆந்திரத்தில் உள்ள மரியாதை என்னவென்று நோக்கினால், அவர் உண்ணாவிரதம் இருந்த இராயப் பேட்டை நெடுஞசாலையில் உள்ள புலுசு சாம்பமூர்த்தியின் இல்லம் ஆந்திர அஞ்சல் நினைவிடமாகப் பாதுகாக்கப்படுகிறது. ‘அமர ஜீவி’ என்று ஆந்திர மக்களால் இன்றளவும் போற்றப்படுகிறார். 2000ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் அவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட் டுள்ளது, அவர் பெயரால் ஹைதரா பாத்தில் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக் கழகம் நிறுவப்பட்டுள்ளது. அவர் நினைவாக 2008 ஜுனில் நெல்லூர் மாவட்டத்தை ‘ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இப்போராட்டத்தில் அவருக்கு ஆதரவாக நின்ற பிரகாசம் அவர்களின் பெயராலும் ஆந்திராவில் மாவட்டம் உள்ளது. அவருக்கு பாராளு மன்றத் தில் சிலை அமைத்துள்ளனர். ‘பிர காசம் சாலை’ என்று சென்னையின் முக்கியமான பகுதியிலே ஒரு சாலை உள்ளதோடு, பொட்டி ஸ்ரீராமுலு பிரகாசம் இருவருக்கும் சென்னையின் முக்கியமான பகுதியிலே சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

ஆனால், சென்னையைத் தமி ழர்க்கு மீட்டுக் கொடுத்த ம.பொ.சி க்குச் சென்னையில் சிலை இல்லை. இந்தக் குறையைப் போக்க தமிழக முதல்வர் தாம் அறிவித்தபடி சென்னை யின் மையப் பகுதியில் ம.பொ.சி.க்கு சிலை நிறுவவேண்டும். இது தாமத மாகிக் கொண்டே போவது, ம.பொ.சி.யின் மணி விழாவில் ம.பொ.சி. பற்றி அண்ணா குறிப்பிட் டதைத்தான் தவிர்க்க முடியாமல் நினைவில் எழுப்புகிறது. “நாம் உழுது கொண்டேயிருப்போம். யாராவது அறுவடை செய்து கொண்டே போகட்டும். மிச்சம் மீதி என்றேனும் நாட்டுக்குக் கிடைக்கும். அதுவரை நாம் உழுது கொண்டே இருப்போம் என்றெண்ணி அவர் உழவராகவே வாழ்ந்து வருகிறார்.”

குறிப்பு : ம.பொ.சி.யின் நூல்கள் அனைத்தையும் மயிலாப்பூர் பூங் கொடி பதிப்பகம் மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளது. ம.பொ.சி. பற்றி மேலும் அறிய விரும்புவோர், ம.பொ.சி.யின் சிந்தகைளை கற்க விரும்புவோர், இந்தப் பதிப்பகத்தில் உள்ள நூல்களை வாங்கிப் படித்துப் பயன் பெறலாம்.

பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு,
மயிலாப்பூர், சென்னை - 600 004...

தில்லியில் ஆம் ஆத்மி அதிரடி...


திராவிடநாடு மோசடிக்கு வாய்தா கேட்ட தெலுங்கர் அண்ணாதுறை...


தமிழ்நாட்டில் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் பிறந்தது. தமிழ்த்தேசிய இனத்தின் இந்த முழக்கம் 1940ஆம் ஆண்டு நீதிக்கட்சி மாநாட்டில் தெலுங்கர்களால் 'திராவிடநாடு திராவிடருக்கே' என்று மாற்றப்பட்டது.

அப்போது தோன்றிய 'திராவிடநாடு' கோரிக்கை 1962ஆம் ஆண்டு தான் கைவிடப்பட்டது. அன்றைய நேரு அரசாங்கத்தின் பிரிவினைத் தடைச்சட்டம் வந்ததால் தி.மு.க. திராவிநாடு கோரிக்கையை கைவிட்டதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் அது உண்மையல்ல. 'திராவிடநாடு' கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்தே தான் அந்த முழக்கத்தை தமிழர்களிடம் 16 ஆண்டுகளாக தி.க,வும், 22 ஆண்டுகளாக தி.மு.க.வும் எழுப்பி வந்துள்ளன.

அண்ணாவே மக்களை ஏமாற்றிய மோசடித்தனத்தை ஒப்புக்கொண்டு தனது கட்சிக்குள் 'காலம் கனியும் போது கைவிடப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈ.வெ.கி.சம்பத்திடம் அண்ணா நடத்திய உரையாடல் "ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்" நூலில் வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு...

திராவிடநாடு சாத்தியமா? என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி.ராமன் இல்லத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தைச் சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.நடராசன், ஆசைத்தம்பி, மதியழகன், ஆகிய முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர். அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்திற்கு டிராங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அழைத்தனர். அதுவரை அண்ணாவிடம் போய் பேசுகிற பழக்கந்தான் இருந்தது. இப்போது அவரை வரச்சொல்லி கூப்பிடுகிற அளவிற்கு நிலைமை மாறியது. அண்ணாவும் அவசரமாகப் புறப்பட்டு வந்தார். சொல்லப்படுகிற விஷயம் சரியாக இருப்பதால் ஆலோசிப்பதில் தவறில்லை என்று கருணாநிதியின் ஆதரவாளர்களும் கருதினர்.

திராவிடநாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, "என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதைச் சொல்ற; உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்...! என்று சொன்னார். உடனே, சம்பத் "கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு, அதைச் சொல்லாதது மோசடியல்லவா?" என்று கேட்டார்.

அதற்கு அண்ணா "அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு"ன்னு வெறியேற்றி விட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா, தொண்டன் படுத்து விடுவான். அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்" என்றார்.

"மோசடிக்கு வாய்தா கேட்பது இன்னொரு மோசடியல்லவா? என்றார் சம்பத். அப்போது கருணாநிதி அண்ணாவை நோக்கி. "ஆமா அண்ணா, தம்பி மாறன் கூட 'ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்' என்று புத்தகத்தை எழுதிவிட்டு, 'என்ன மாமா இதெல்லாம் கிடைக்கும்னு எனக்குத் தோணலே' என்றுதான் சொன்னான் அண்ணா!" என்றார்.

சம்பத் சொன்னார். "இல்லை. உடனடியாக அதை அறிவித்து விட்டு மேடையிலே நாம் விளக்கம் சொன்னால் நமது தோழர்கள் ஒப்புக் கொள்வார்கள். இதில் சஞ்சலப்பட ஏதுமில்லை. சாத்தியமானதைச் சொல்லலாம். தமிழ்நாடு கேட்கலாம். அல்லது பிரிந்து போகிற உரிமையோடு கூட்டாட்சித் தத்துவத்தைச் சொல்லலாம். அதை நாம் இப்போதே விவாதித்து முடிவு செய்யலாம்" என்றார் சம்பத்.

அண்ணா அந்த அதிர்ச்சி வைத்தியத்தை ஒப்புக் கொள்ளவில்லை. 'கைவிட முடியாது' என்று சொல்ல வில்லை. அண்ணா சொன்னது. காலம் வரும், காலத்தை எதிர் பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும் போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரையில் இதைப்பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம்" என்றார்.

எப்படியோ அண்ணா சம்பத்தை தாஜா செய்து அனுப்பி விட்டு, மற்றவர்களைப் பார்த்து, "அவன் கூப்பிட்டானென்று நீங்கள் வந்து விடுவதா? விவஸ்தை இல்லையா?" என்று அதட்டி அனுப்பினார்.

மேற்கண்ட இந்த நூலின் பதிவை இன்று உயிரோடிருக்கும் கருணாநிதி இதுநாள் வரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உரையாடல் மற்றுமொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போல பிரிவினைச் தடைச்சட்டம் வந்தது. காலம் வரும் என்று காத்திருந்த அண்ணா அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பிரிவினையைக் கைவிட்டார் என்று தான் ஆணித்தரமாக சொல்லத் தோன்றுகிறது. ஒருவேளை பிரிவினை தடைச்சட்டம் வராமல் இருந்திருந்தாலும் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டிருப்பார் என்பதே அன்றைய வரலாறாக இருந்திருக்கும்.

ஈ.வெ.கி. சம்பத் கூறியது போல, அண்ணா கேட்ட திராவிடநாடு மட்டும் மோசடி அல்ல; 'திராவிடம்' என்ற சொல்லே மோசடி தான். இந்த மோசடிக்கு வாய்தா கேட்பதற்கு கூட இன்றைக்கு எந்த திராவிட இயக்கமும் தயாராக இல்லை. எனவே எல்லா திராவிட இயக்கங்களையும் தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை வர வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களுக்கு விடிவு பிறக்கும்....

தேன் நன்மைகள்...


கூடங்குளம் அணு உலைகள் தான் உலகத்தின் தலைசிறந்த உலைகள் என்றும், அதற்கு எதிராக போராடக்கூடிய மக்கள் தேச விரோதிகள் என்றும் நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள் என்று மிகப்பெரிய பிரச்சாரம் செய்யப்பட்டது...


கூடங்குளம் அணு உலைகளை ஆதரித்த முற்போக்கு விஞ்ஞானிகள், அறிவியல் ஆலோசகர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் அனைவருக்கும் ஒரு பந்தயம்...

கடந்த 20 ஆண்டுகளில், கூடங்குளம் அணு உலைகளைப் போல் உலகத்தில் வேறு ஏதாவது உலைகள் இவ்வளவு மோசமாக செயல்பட்டிருக்கின்றனவா என்று சொல்ல முடியுமா?

தமிழ்நாட்டில் வாழக்கூடிய மக்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், ஊடகங்கள் என அனைவருக்கும் இந்த தகவல் தெரிந்திருந்தாலும், மீண்டும் தெரிவிக்கிறோம்..

கூடங்குளம் அணு உலைகள் பழுதடைந்து பிரச்சனைகளுக்கு உள்ளாவதுபோல், கடந்த 20 ஆண்டுகளில் உலகத்தில் எந்த அணு உலைகளிலும் நடந்ததில்லை.

அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன் சொன்னதைப்போல, "கூடங்குளம் அணு உலைகள் மொத்த தென்னிந்தியாவிற்கும் ஆபத்தானவை".

(கூடுதல் தகவலாக, கடந்த 5 மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று, 10 நாட்களுக்கு முன்னர் மின்னுற்பத்தியை துவக்கிய கூடங்குளம் 2வது உலை இன்று காலை "வால்வு பழுதடைந்ததால்" நின்றது. மேலும், முதல் உலை நேற்றுமுதல் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது.)

என்ன செய்யப்போகிறோம் ?