15/08/2017

தமிழ் படிக்காமலேயே தமிழ் நாட்டில் பட்டம் பெறவும் முடியும்..


தமிழ் பேசாமலேயே தமிழ் படத்தில் நடிக்கவும் முடியும்..

தமிழ் தெரியாமலேயே தமிழ் நாட்டில் தொழில் நடத்தவும் முடியும்..

தமிழ் அறியாமலேயே தமிழ்ச் சங்கத்துக்கு தலைமை ஏற்கவும் முடியும்..

தமிழைச் சரியாக உச்சரிக்காமலேயே தமிழ் வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் அறிவிப்பாளராக இருக்கவும் முடியும்..

தமிழ் எழுதாமலேயே தமிழக அரசின் பணியில் இருக்கவும் முடியும்..

இவ்வளவு ஏன்..

தமிழனுக்கு பிறக்காமலேயே தன்னை தமிழினக் காவலன் என்று சொல்லி தமிழ் நாட்டின் முதலமைச்சாரக இருக்கவும் முடியும்..

தமிழ் நாட்டில் தான் இப்படித் தமிழில்லாமல் முடியும்..

காரணம்..

தமிழர்களில் பலருக்கு பற்றில்லாமல் போய் விட்டது..

மொழியின் மீதும்.. வழி நடத்துதல் மீதும்...

பனை...


பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும்.

பதநீர் மகிமை..

பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.

சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்ச முடியாது.

இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.

பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.

பயன் தரும் பாகங்கள் . . .

நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள். . .

பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.

வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.

புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

பனையோலை வேய்த இருப்பிடம் ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப் பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.

அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.

தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது...

வாருங்கள் தேசியக் கொடியை கிழிப்போம் - பாவலர் அறிவுமதி...


1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம்.

அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்தி விட்டனர்.

அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை.

விடிந்ததும் விழித்துப் பார்த்தோம்.

போர்வை இருந்தது கோவணத்தைக் காணவில்லை.

தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம் விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம்.

வாருங்கள் தேசியக்கொடியை கிழிப்போம்.

அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக்கொள்வோம்.

மேற்கண்ட இந்தப்பாடல் பாவலர் அறிவுமதி அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும். இந்தப் பாடல் எழுதப்பட்டதற்குப் பின்னால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொல்லாடல் எழுப்பப்பட்டது. அதன் பெயர் தமிழ்த்தேசியம்.

இன்றைக்கு தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்து வரும் தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கு ஒரு மாநாடொன்று காரணமாக அமைந்தது. அந்த மாநாட்டில் தான் தமிழ்த்தேசிய உரிமை முழக்கம் ஓங்கி ஒலித்தது. 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் நாள் பெரியார் திடலில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டின் பெயர் தமிழ்த் தேசிய தன்னுரிமை மாநாடு .

தோழர் பெ.மணியரசன், பேரா.சுப.வீரபாண்டியன் ஆகியோர் முன்னின்று இந்த மாநாட்டைக் கூட்டினர். இந்த மாநாட்டில் சுப.வீரபாண்டியன், கவிஞர் இன்குலாப், கவிஞர் தணிகைச்செல்வன், பாவலர் அறிவுமதி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், பழ.நெடுமாறன் (உரை வாசிக்கப்பட்டது) பேரா.தீரன், சாலய் இளந்திரையன், சேலம் அருள்மொழி, ஈழ வேந்தன், இயக்குநர் வி.சி.குகநாதன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள்.

இந்த மாநாட்டில் முதன்மையானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது பின்வருமாறு:  "தமிழர்கள் ஒரு தனித்தேசிய இனத்தவர். பிற தேசிய இனங்களுடன் சேர்ந்து வாழ்வதா பிரிந்து போவதா என்று முடிவெடுக்கும் உரிமை ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை. இந்த உரிமைக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with rights to secede) என்று பெயர்.

தமிழ்த் தேசிய இனத்திற்கு உடனடியாக இவ்வுரிமை வேண்டும். இந்தியா ஒரு தேசம் அன்று. இந்தியாவில் பல தேசிய இனங்கள் பல தேசங்கள் இருக்கின்றன. இந்த எல்லாத் தேசிய தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை வேண்டும்.

தேசம் என்று குறிப்பிடப்பட வேண்டியவற்றை மாநிலம் என்று கூறுவது தவறு.

குடியுரிமை வழங்கும் அதிகாரம் தமிழகத்திற்கு வேண்டும். தமிழ்நாட்டைத் தமிழ்த்தேசக் குடியரசு என்று அழைக்க வேண்டும். சோவியத் ஒன்றியத்தில் இருப்பது போல் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை கொண்ட தேசங்களின் ஒன்றியமாக இந்தியாவை மாற்ற வேண்டும்."

இந்த மாநாட்டின் தீர்மானத்தை  எதிரொலிக்கும் வகையில் பாவலர் அறிவுமதி இந்திய  தேசியக் கொடி கவிதையை வாசித்த போது அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர். அவரோடு சேர்ந்து ஈரோடு தமிழன்பன் அவர்களும் "அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்" என்று கோபக்கனல் வீசப் பாடினார்.

அன்றைக்கு மாநாட்டை கொச்சைப்படுத்தும் நோக்கில் பார்ப்பன 'துக்ளக்' ஏடு செயல்பட்டது. மாநாட்டில் பேசிய பலரது பேச்சுகளையும், கவிதைகளையும் தொகுத்து வெளியிட்டதோடு பிரிவினை கோரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு  கருணாநிதி அரசை கேட்டுக்கொண்டது.

துக்ளக் சோவின் ஆள்காட்டித்தனத்திற்கு கருணாநிதி அரசு உடனடியாக அடிபணிந்தது. பெ.மணியரசன் அவர்கள் பிரிவினைத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பாவலர் அறிவுமதி மீது இந்திய அரசுக் கொடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தூதர்சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்  ஈரோடு தமிழன் அப்பணியிருந்து நீக்கப்பட்டார்.

வழக்கு விசாரணைக்காக  தோழர் பெ.மணியரசனும், அறிவுமதியும் எழும்பூர் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கினர். எட்டாண்டுகள் கழிந்த பின்னர் வழக்கிலிருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்த்தேசிய தன்னுரிமை மாநாடு நடத்தப்பட்டப்போது தமிழ்த்தேசிய கருத்தியலுக்கு ஆதரவாக திராவிட இயக்கச் சார்பாளர்கள் சுப.வீரபாண்டியன், பாவலர் அறிவுமதி உள்ளிட்ட பலர் துணை நின்றனர்.

ஆனால் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் அண்டைய தேசிய இனங்களின் தமிழர் விரோதப் போக்கு ஆகியவற்றுக்கு திராவிட க் கருத்தியல் உடன்பட்டு  நிற்பதால் அவற்றை பகைத்துக் கொள்ள சுப.வீ., பாவலர் அறிவுமதி போன்றவர்களால் இயல வில்லை. குறிப்பாக சுப.வீ. அவர்கள் தமிழ்த்தேசியத்தை எதிர்க்கும் படைவரிசையில் முதல் நபராக விளங்குகிறார்.

இந்தியத்தை நம்பி ஏமாளியானது போதும், திராவிடத்தை நம்பி அனாதையானது போதும் என்ற நிலைக்கு தமிழக இளைஞர்கள் தற்போது வந்து விட்டனர்.  தமிழ்த்தேசிய விடுதலை இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் தமிழர்நலன் காக்கும் கொள்கையென்பதை அவர்களுக்கு புரிய வைப்போம்.

தமிழ்நாட்டை அடிமைமுறி நாடாக  இந்திய அரசு வைத்திருப்பதன் அடையாளம் தான் இந்திய விடுதலை நாள் கொண்டாட்டாமாகும். தமிழர்கள் இந்திய விடுதலை நாளைக் கொண்டாடுவது  தங்களுக்குத் தாங்களே விலங்குபூட்டிக் கொள்ளுவதற்கு ஒப்பாகும்.

இந்திய விடுதலைத் திருநாளைப் புறக்கணிப்போம்.

தமிழ்த் தேசிய விடுதலைக்குப் போராடுவோம்...

தேசியக் கொடி யுத்தத்தில் இந்தியா - பாகிஸ்தான்...


இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவரும் வேளையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தேசிய கொடி யுத்தம் எல்லையில் தொடங்கியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் என்றாலே எதிலும் போட்டிதான் என்ற நிலை காலங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. தற்போது இவ்விரு நாடுகளுக்கு இடையிலான போட்டி என்பது யார் உயரமான தேசியக் கொடியை ஏற்றுவது என்பதில் உள்ளது. இதனைத் தொடங்கிவைத்தது இந்தியா தான் என்றாலும் போட்டியாக மாற்றியுள்ள பெருமை பாகிஸ்தானையே சேரும்.

கடந்த மார்ச் மாதம் பஞ்சாபின் அமிர்தசரஸில் இந்திய- பாகிஸ்தான் எல்லையான அட்டரி பகுதியில் 360 அடி உயரமுள்ள இந்திய கொடி ஏற்றப்பட்டது. இந்தக் கொடிக்கம்பத்தின் அகலம் 24 மீட்டர். எடை 55 டன் ஆகும். ரூ.3.5 கோடி செலவில் பஞ்சாப் அரசின் அமிர்தசரஸ் மேம்பாட்டு டிரஸ்ட் அமைத்த இந்தக் கொடிக்கம்பத்தில் பாஜக அமைச்சரான அனில் ஜோஷி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்துகூட இந்தக் கொடியைப் பார்க்க முடியும் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.

எனினும் காற்றின் வேகம் காரணமாக இத்திட்டம் தோல்வி அடைந்தது. ஐந்து முறை தேசியக் கொடி மாற்றப்பட்டது. கடந்த ஜூலை மாதத்தில் வீசிய கடும் காற்றில் தேசியக் கொடி கிழிந்தே போனது. இதையடுத்து இதற்குத் தீர்வு காணும்வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரதினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று அங்கு மீண்டும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

பாகிஸ்தானின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வாகா எல்லை அருகே நேற்று நள்ளிரவில் 400 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் தங்கள் நாட்டுத் தேசியக் கொடியை பாகிஸ்தான் ஏற்றியுள்ளது. அந்நாட்டு ராணுவத் தளபதி கமர் ஜவேத் பாஜ்வா இதனை ஏற்றிவைத்தார். இந்தத் தேசியக்கொடியின் அகலம் 120 அடி, உயரம் 80 அடி. தெற்கு ஆசியாவிலேயே உயரமான கொடி இதுதான் என்று கூறப்படுகிறது. உலக அளவில் 8ஆவது உயரமான கொடி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது...

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவந்த தமிழக விவசாயிகள் வெளியேற்றம்...


குயின்ஸ்லேண்ட் குழந்தை - 1946...


இந்தப்படம் 1946ல் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டு நகரத்தின் ஒரு கல்லறைத்தோட்டத்தில் எடுக்கப்பட்டது.

தனது டீன் ஏஜ் மகளின் கல்லறையில் அஞ்சலி செலுத்திவிட்டு ஒரு தாயால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

புகைப்படம் எடுக்கும்போது அங்கே அந்த தாயை தவிர வேறு யாருமேயில்லை.

ஆனால் அதைப்பிரிண்ட்டு போட்டதும் அதில் தெரிந்த ஒரு குழந்தையின் உருவம் இன்னமும் புரியாத புதிராகவே நீடிக்கிறது.

இந்த ஃபோட்டாவில் டபுள் எக்ஸ்ஃபோசர் பிரச்சினைகள் எதுவுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டாகிவிட்டது...

மாதந்தோறும் 200 விபத்துகள் குரைக்க வழிகேட்டால் தனியார்க்கு தாரைவார்க்க துடிக்கிறது, நட்ட கணக்கு காட்டி உழைக்கும் மக்கள் உழைப்பை சுரண்டி, வயிற்றில் அடிக்கும் போக்குவரத்து கழகம்...


சுரண்டல் அரசு கட்டமைப்பை துக்கி எரியாது தீர்வு இல்லை தோழர்களே.. மாதந்தோறும் 200 விபத்துகள்..

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆண்டுதோறும் 20 சதவீத பேருந்துகளை நீக்கி புதிய பேருந்துகளை சேர்க்க வேண்டும். ஆனால், கடந்த 2001-ல் இருந்து மிக சொற்பமான பழைய பேருந்துகள் மட்டுமே நீக்கப்படுகின்றன. புதிய பேருந்துகளை வாங்காமல் காலம் தாழ்த்துவதால், பேருந்துகள் சேதமடைகின்றன. மழைகாலத்தில் பேருந்துகளின் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே கொட்டுகிறது. காலாவதிப் பேருந்துகள் இயக்கப்படுவதாலும், உதிரி பாகங்கள் முறையாக மாற்றப்படாததாலும், அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாதந்தோறும் சராசரியாக 50 விபத்துகள் நடக்கும். தற்போது இது 200 ஆக அதிகரித்துதுள்ளது. குறிப்பாக, கடந்த 7 மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளால் சுமார் 1,300 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தைக் குறைக்க வழி.. சாலை விபத்துகளைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் கீதகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது...

சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்து ஓட்டுவது சவாலானது, கடினமானது. ஓட்டுநர்களுக்கு கூடுதல் பணி இருக்கக் கூடாது. பேருந்துகளை இயக்க அவர்களுக்குப் போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அப்போதுதான் அவர்களது மனநிலை நன்றாக இருக்கும். மேலும், காலாவதி பேருந்துகளை இயக்கவே கூடாது.

ஓட்டுநர்கள் கண் சிமிட்டினாலேயே அலாரம் அடிக்கும் தொழில்நுட்ப வசதியை செயல்படுத்தலாம். ஓட்டுநர்களின் பணிச்சுமையைக் குறைக்க, மாற்று ஓட்டுநர்களை பணியில் அமர்த்தலாம். இதற்கான ஆய்வுகள் கோரக்பூர் ஐஐடியில் நடந்து வருகிறது என்றார்...

அதாவது காங்கிரஸ் காட்டியும் கொடுக்குது.. கூட்டியும் கொடுக்குது...


நீட் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் - வழக்கறிஞர் நளினி சிதம்பரம்...

நீட் விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை - ப . சிதம்பரம்...


இந்தியா வின் சுதந்திரமும்.. பாஜக ஆர்.எஸ்.எஸ் சின் தேசப் பத்தியும்...


எங்கே சுதந்திரம்?


இந்த
தேசத்திற்கு
சுதந்திர தினம் ஒரு கேடா

சுடுகாட்டு மேலே
தேசிய கொடி ஏற்றுங்கள்
ஒப்பாரியே தேசிய கீதம்
என பாடுங்கள்

மாடுகளை
அழைத்து மிட்டாய் கொடுங்கள்
கன்றுகளை வைத்து
கலை நிகழ்ச்சி
நடத்துங்கள்

பசுமையான
பாரதத்தை எதிர்ப்பார்த்தோம் -ஆனால்
பசுக்கான பாரதமாகவே மாறி வருகிறது
வலிமையான
பாரதத்தை எதிர்ப்பார்தோம் -ஆனால்
வஞ்சகம் நிறைந்த
பாரதகமாகவே மாறு வருகிறது

ஆனாலும்
நாளை தேசியக்கொடி ஏற்றப்படும்
சன கன மன கதி பாடப்படும்
சனங்களின் ஒப்பாரி மழுங்கடிக்கப்படும்
பாரத மாதாவுக்கு ஜே
என்னும் குரலில்
பச்சிளம் குழந்தைகளின்
மரணம் புதைக்கப்படும்

வழக்கம் போல்
வழக்கு நீதி மன்றம் போகும்
வழக்கம் போல்
குற்றவாளிகள் நிரபராதி ஆவார்கள்
மீண்டும்
ஒரு படுகொலை நடக்கும்
ஆனாலும்
தேசியக்கொடியும், தேசியக் கீதமும்
ஒளித்துக் கொண்டே இருக்கும்
சுதந்திரமாக..

புரட்சி கவிஞன்
செ.அ நிலா பிரியன்...

Hஎடப்பாடி யை கதி கலங்க வைத்து.. மேலூரில் தொடங்கியது டிடிவி தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டம்...




கோரக்பூரில் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனை கல்லூரிக்கு வந்த ஆதிநாத்திற்கு கருப்பு கொடி காட்டியவர்களுக்கு கிடைத்த அரசு மரியாதை...


இலவே விழுந்தாலும் பாஜக காரனை எதிர்தால் அடி விழும்...

கோரக்பூரில் இறந்த 70 குழந்தைகளின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது?


ஆக்ஸிஜன் குறைபாட்டால் குழந்தைகள் இறக்கவில்லை, மூளை வீக்கத்தால் குழந்தைகள் இறந்து விட்டார்கள் என பொய் சொல்லும் இவர்களின் மூளை வீக்கத்திற்கு யார் சிகிச்சை அளிப்பது?

மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணும் படி ஒரு திட்டத்தை கூட கொண்டுவராத இவர்கள் செய்த மூன்றே சாதனைகள்:

1) கேஸ் மானியத்தையும், ரேஷன் கார்டையும் ஒழித்தது.

2) மாட்டிறைச்சியை தடை செய்தது, மாட்டு மூத்திரத்தை குடிக்க சொன்னது.

3) பிட்டு படம் ஓடும் தியேட்டரில் கூட, தேசிய கீதம் ஒளிபரப்ப சொல்லி தேச பக்தியை வளர்த்தது.

மக்கள் செத்தால் பரவாயில்லை, மாடு இறந்தால் மனம் தாங்காது... எதிர்த்து பேசினால், தேச துரோகம்... வீதியில் இறங்கி போராடினால், குண்டர் சட்டம்.

இருக்கிற வரிகளெல்லாம் போதாதென்று நாட்டை சுத்தம் செய்யவும் ‘ஸ்வச் பாரத்’ என்கிற பெயரில் மக்களிடமே வரி வசூல் செய்யப்படும், ஆனால் கடைசி வரை ஒரு பஸ் ஸ்டாண்ட் கக்கூஸை கூட சுத்தம் செய்ய வக்கில்லாமல் 3 வருடம் கழித்து அந்த ‘ஸ்வச் பாரத்’ திட்டமே சத்தமில்லாமல் ஒழிக்கப்படும்.

நான் கட்டிய வரிப் பணமெல்லாம் என்னாச்சு என கேட்டால், நான் சமூக விரோதி.

நாட்டு மக்களின் எந்த பிரச்சினைகளுக்கும் வழி காணாமல், அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் வாரம் ஒரு ஃபாரின் டூர் போவதும் ‘இந்தியாவை உலகிலேயே சிறந்த நாடாக்குவேன்’ என தொடர்ந்து பேச்சில் மட்டும் கோட்டை கட்டுவதும் யாருக்கு என்ன பலனளிக்க போகிறது?

500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்த பொழுது வங்கி வாசலிலும் ஏடி்‌எம் வாசலிலும் நாள் முழுக்க வரிசையில் நின்று நாடு முழுக்க இறந்த 165 பேரின் சாவுக்கும், வட மாநிலங்கள் முழுக்க தூண்டிவிடப்படும் மதவாத வன்முறை, சாதிய வன்முறை, மாட்டை காக்க செய்யும் வன்முறையிலான மரணங்கள், இன்று கோரக்பூரில் இறந்த 70 குழந்தைகளின் மரணங்கள் – இதுக்கெல்லாம் எவன்தான்டா பொறுப்பு?  

இது எதுவுமே நடக்காததைப் போல, நாளை மறுநாள் சுதந்திர திருநாளன்று சிரித்துக் கொண்டே வாழ்த்து தெரிவிப்பார் நம் ஒப்பிலா பாரத பிரதமர்...

சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை கால்பந்து விளையாட சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்...


இரண்டு மாணவர்களும் குருநானக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருபவர்கள்  என்பதும், பிடி வாத்தியாருடன் கால்பந்து பயிற்சிக்கு கடற்கரைக்கு வந்து, பயிற்சி முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் கடலில் குளிக்க முயன்ற போது நீரில் மூழ்கி பலியாகியுள்ளதும் தெரியவந்துள்ளது...

கோரக்பூரில் 63 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் - பாஜக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பாக செயல்படுகிறார் - உச்சநிதிமன்றம்...


ஒரே பிரசவத்தில் பிறந்த பதினோறு குழந்தைகளை பெற்ற தாய்க்கும் வாழ்த்துக்கள் உண்டா ?


இது என்ன என்று பார்க்கிறீர்களா?


இதுதான் நமது ஊரில் மழைக்காலங்களில் களையாக வளர்ந்து காய்க்கும் சொடக்குதக்காளி என்று கூறுவார்கள்.

இதன் விலை 100 கிராம்  இந்திய ரூபாயில் 150.

நமக்குத்தான் எதில் என்ன சத்து இருக்கிறது எதற்க்கு சாப்பிடுகிறோம் என்று தெரியாம தானே சாப்பிடுகிறோம்.

வெள்ளைக்காரனுக்குத்தான் எதை சாப்பிடுவது எப்படி சந்தை படுத்துவது எதை எப்போது உற்பத்தி செய்வது என்று தெரிந்து இருக்கிறது.

நமது அரசாங்க விவசாய ஆராய்ச்சி துறை அந்த அளவிற்க்கு இருக்கிறது...

இவனுகளுக்கு கவர்மெண்ட் ஜீப் எதுக்கு?


ஓமன் நாட்டு தொலைபேசி கட்டண அட்டையில் நம் தமிழ் மொழி.. இந்தியாவை தவிர வேறு எல்லா நாட்டிலும் நம் தமிழ் மொழி மதிக்கப்படுகிறது...


கடல் கடந்த பேரரசு...


முதன்முதலாக கடல்கடந்த பேரரசை நிறுவியவர்கள் ஸ்பானியர்கள் (spanish empire) என்கிறது மேற்கத்திய வரலாறு.

ஆனால், முதன்முதலாகக் கடல் கடந்து தொலைதூரம் வரை தமது ஆதிக்கத்தை நிறுவியவர்கள் சோழர்களே ஆவர்.

இராசேந்திர சோழன் ஆட்சிக்குள் பல மன்னர்கள் இருந்தார்கள், ஆனால் அவன் வெளியிட்ட தங்க நாணயத்தில் மூவேந்தர் சின்னங்களான மீன், வில், புலி ஆகிய மூன்று மட்டுமே உள்ளன.

தமிழ் நாட்டாண்மை (தமிழ்த் தேசியம்) என்றைக்கோ தோன்றிவிட்டது. நமக்குத்தான் அது புரிவதில்லை...

அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மோடி பாஜக அரசு...


இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்ள வளாகத்தில் 50 அல்லது 100 படுக்கை வசதிக்கொண்ட கட்டிடத்தை தனியாருக்கு 30 வருடங்களுக்கு கொடுக்க வழிவகை செய்யும் ஒரு ஓப்பந்தத்தை அனைத்து மாநில அரசுக்கும் மத்திய நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பியிருக்கிறது. இதன் மூலம் இந்திய ஒன்றியத்தில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையே இல்லாமல் செய்யும் வேலையை மோடி அரசு செய்ய துணிந்திருக்கிறது.

இந்த ஓப்பந்ததில் உள்ள அயோக்கியத் தனங்கள்:

1.மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடத்தில் தனியாருக்கு 50 அல்லது 100 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடத்தை அந்தெந்த மாநில அரசு கொடுக்க வேண்டும். அதாவது 50படுக்கை வசதிக் கொண்ட மருத்துவமனையை தனியார் கட்ட முன் வந்தால் அதற்கு அரசு மருத்துவமனை வாளாகத்திலுள்ள இடத்தில் 30,000சதுர அடி இடமும், 100படுக்கைவசதிகொண்ட மருத்துவமனையென்றால் 60,000சதுர அடி இடமும் மாநில அரசு கொடுக்க வேண்டும். மேலும் மருத்துவமனை கட்டத்தேவையான பணத்தின் ஒரு பகுதியையும் மாநில அரசே தனியாருக்கு ஒதுக்க வேண்டும்.

2.மாவட்ட மருத்துவமனைகளிலுள்ள இரத்த வங்கி சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், பிசியோதெரபி சேவைகள், மருத்துவ கழிவுகள் அகற்றும் முறை, பார்க்கிங் வசதி, மின்சாரம், பிணவறை, நோயாளிகள் பணம் செலுத்தும் கவுண்டர் மற்றும் செயூரிட்டி போன்ற அனைத்தையும் தனியாரும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

3.அரசு காப்பிடு திட்ட பயணாளிகளுக்கு இங்கு மருத்துவம் பார்க்கப்படும். ஆனால் படுக்கைக்கு (BED) பணம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

4.மாநில காப்பீட்டு மற்றும் சுகாதார திட்டங்களின் மூலம் பயன்பெறும் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படமாட்டாது. அப்படியே அவர்கள் வந்தாலும் முழுக்கட்டணமும் செலுத்தித்தான் பயன்பெறமுடியும்.

அதாவது அரசு மருத்துவமனை இடத்தையும் பெற்றுக்கொண்டு மருத்துவமனை கட்ட நிதியையும் அரசிடமே பெற்றுக்கொண்டு அரசு மருத்துவமனையிலுள்ள அனைத்து வசதிகளையும் வாட்ச்மேன் முதற்கொண்டு பெற்றுக்கொண்டு அரசு உதவிபெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டார்களாம். பின் எதற்கு இந்த புதிய அயோக்கிய ஒப்பந்தமென்றால். அரசு மருத்துவமனை என்ற ஒன்றையே இல்லாமல் செய்ய வேண்டுமென்பது தான் இதன் பின்னுள்ள மோசமான மோடி அரசின் அயோக்கிய அரசியல். ஏற்கனவே 2012இல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது புஜ் அரசு மருத்துவமனையை (Bhuj’s government hospital) அதானி குழுமத்தின் மருத்துவ கல்லூரிக்காக 99வருடத்திற்கு குத்தகைக்கு விட்டவர்தான் இப்போது நாட்டிலுள்ள ஓட்டுமொத்த மாவட்ட மருத்துவமனைகளையும் தனியாருக்கு கொடுக்க முன்வருகிறார்.

ஏற்கனவே ’நீட்’ எனும் அயோக்கிய சட்டத்தினால் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்ட மோடி அரசு. இப்போது இந்த புதிய ஒப்பந்தத்தால் அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுக்க வேலை செய்கிறது.
இந்த அயோக்கிய ஓப்பந்தத்திற்கு இரண்டு வார காலத்திற்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நிதி அயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்திருக்கிறார். இந்த அயோக்கிய ஓப்பந்தத்தை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும். அதுபோலவே எல்லா மாநிலங்களும் இதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கவேண்டும். இல்லையென்றால் இதனால் வரக்கூடிய விளைவுகள் இந்திய சமூகத்தில் மிக மோசமானதாக இருக்கும்.

தகவல்கள்:

https://scroll.in/pulse/844272/niti-aayog-and-health-ministry-prepare-model-contract-for-privatising-urban-health-care

https://www.newslaundry.com/shorts/health-ministry-niti-aayog-to-privatise-healthcare

http://indianexpress.com/article/opinion/columns/niti-aayog-a-strange-hybrid-public-hospitals-government-4791233/

சாமான்யன் யாராவது வந்தா அவன்கிட்ட வேலை வாங்குறது காசு புடுங்குறது மரியாதை இல்லாம அலைக்கழிப்பது இதெல்லாம் இன்றைய காவல்துறையின் வழக்கமாகிவிட்டது... இதே காசு இருப்பவன் வந்தா மரியாதை என்ன உபசரிப்பு என்ன நடவடிக்கையில் வேகம் என்ன.... காவல்துறை பேரை களவாணித்துறைன்னு மாத்திக்கலாம்... சகல தகுதியும் இருக்கு...


பாஜக ஆட்சியில் இருக்கும் உபியில் 63 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் இறப்பு...


ஆக்சிஜனுக்கு 67லட்சம் கொடுக்காத யோகி அரசு தான்...

பசு பராமரிப்புக்கு 40 கோடி கொடுத்துள்ளது...

இப்போ சொல்லுங்க இது திட்டமிட்ட கொலை தானே?

திமுக ஸ்டாலினும் நமக்கு நாமே டூபாக்கூர் நாடகமும்...


இந்தியா சுதந்திரம் அடைஞ்ச்சி 70 வருடம் ஆச்சி...

கருணாநிதி வயசு 95 அப்போ அவரோட 20 வயசுலயா முரசொலி ஆரம்பம்மாச்சா..

இல்ல சுதந்திர த்துக்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்டதா முரசொலி?

தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...

கருணைக்கிழங்கை கொண்டு பைல்ஸ் மற்றும் உடல் எடையை குறைப்பது எப்படி?


கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை.

கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படவும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்த கருணைக்கிழங்கின் பலன்களை இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.

பெண்களை வாட்டி எடுக்கும் வெள்ளைப்படுதலை தடுக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் வலி காணாமல் போய்விடும்.

மூல நோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக் கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்தி வந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்சனைகள் சரியாகி விடும்.

கருணைக்கிழங்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் வன சூரணாதி என்ற பெயரில் லேகியமாக விற்கப்படுகிறது...

இதுதான் மருத்துவர் கபீல் கான் செய்த தவறா? பயங்கரவாத பாஜக யோகியே...


மருத்துவமனை 69 லட்சத்துக்கு மேல் கடன் பாக்கி வைத்திருந்ததால் தனியார் ஆக்சிஜன் சப்ளை நிறுவனம் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் தர மறுத்துவிட்டது. எல்லா வகையிலும் முயன்று பயன் கிடைக்காததால் தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிவருமாறு தன்னுடைய மருத்துவமனை ஊழியரிடம் கொடுத்து உள்ளார் மருத்துவர் காஃபீல் கான்.

இதற்காக செய்யப்பட்ட அனைத்து செலவுகளையும் ஏற்று முன்நின்று கடைசி நேரத்தில் போராடி கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார்.

மருத்துவமனையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த திரிபாதி பேசுகையில், “மற்ற டாக்டர்கள் நம்பிக்கையை இழந்த போது கான் மட்டும் போராடி தனியார் மருத்துவமனைகளில் இருந்து சிலிண்டர்களை வாங்கிவந்தார். அவர் பல்வேறு குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார், அவர் எப்போதும் எல்லோருடைய மனதிலும் நிற்பார்,” என கண்ணீர் மல்க கூறினார்...

இவர் இஸ்லாமியர் என்பதாலும்.. பாஜக யோகி அரசின் செயல்படாத மானங்கெட்ட அரசின் உண்மைகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தாலும்.. இன்று இந்த மருத்துவரை பணி நீக்கம் செய்துள்ளான் பாஜக பயங்கரவாதி யோகி...

இமாச்சல் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு...


இது வரை 45 பேர் பலி.. மண்ணில் புதைந்த பலரின் சடலங்கள் மீட்பு.. மீட்பு பணிகள் தீவிரம்...

அன்புச் சுவர், நெல்லை கலெக்டரின் முயற்சி, குவியும் ஆடைகள்...


பெரும்பாலும் பழைய ஆடைகள் வந்து போடப்படுவதால் பலர் எடுத்துச் செல்ல தயங்குவதாகவும்,  எனவே பழைய துணிகளை கொட்டும் இடமாக..

இந்த நல்ல முயற்சியை மாற்றி விட வேண்டாம் என சமூக ஆர்வலர்களிடம் கோரிக்கைகள் எழுந்துள்ளது....

ஆரியமும் திராவிடமும் ஒன்றே...


வடுக ஆரியம் தமிழின வரலாற்றை திரித்து புரட்டு கதைகளை அவிழ்த்து நாசமாக்கியது...

பின்னால் வந்த திராவிடம் தன்னோட முன்னோர்கள் விட்டுச்சென்ற பணியை செவ்வனே செய்துக்கொண்டு இருக்கிறது...

ஐயப்பன் மலையாளி, ஐயப்பன் யாருக்கு பிறந்தான் என்று வியாக்கினம் பேசுதுங்க,

சரி ஐயப்பன் மலையாளியாக இருந்தால் அவனுடைய ஆபரணங்களை வழிப்பாட்டிர்க்காக, தென்காசி எதற்கு கொண்டு வருகிறார்கள்?

இன்று வரை அச்சன் கோயில் இருந்து ஐயப்பனுடைய ஆபரணங்களை தென்காசி கொண்டு வருகின்றனர்...

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என பகுத்து ஆராயாமல், சில பகுத்தச்சா பன்னாடைகள் முற்றிலும் புறக்கணித்து எள்ளி நகையாடுகின்றனர்...

உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி...


தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை  பன்னிரண்டு  கோடியாகும்...

அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியொரு நாடுகளும் உள்ளன..

அதை விட இரண்டு மடங்கு எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை.

ஐக்கிய நாடுகள் மன்றத்திலும் தமிழ் நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை.

இது பற்றி சிந்தித்துப் பார் தமிழா..

பிறகு புரியும் ஏன் தனித் தமிழ்நாடு கேட்கிறோம் என்று...