11/11/2018

கச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் - பாமக அறிக்கை...


உலக சந்தையில் கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் 60.13 டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

நடப்பாண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இது 22.87% வீழ்ச்சி ஆகும். கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தான் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அவற்றின் விலைகளும் கடந்த அக்டோபர் மாதம் 3&ஆம் தேதி இருந்ததை விட 22.87% குறைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.19.34 குறைந்து ரூ.67.84 ஆக இருக்க வேண்டும். அதே போல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.18.20 குறைந்து ரூ.61.37-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால்,  சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 80.90, டீசல் ரூ.76.72 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது 22.87% குறைய வேண்டிய பெட்ரோல், டீசல் விலைகள் முறையே 7.20%, 3.66% என்ற அளவில் தான் குறைந்துள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாத விலை நிர்ணயமாகும்.

உலக சந்தையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 60 டாலராக இருந்தது. கச்சா எண்ணெயின் இப்போதைய விலையும், கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி விலையும் ஒன்றாகும். கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.65 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60.79 ஆகவும் இருந்தது. அப்படியானால், இப்போதும் அதேவிலையில் தான் பெட்ரோலும், டீசலும் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், இன்றைய சந்தை விலை முறையே ரூ. 80.90, டீசல் ரூ.76.72 உள்ளது. ஆக எந்த வகையில் பார்த்தாலும் இயல்பாக விற்பனை செய்ய வேண்டிய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 13.04 ரூபாயும், டீசல் விலை 15.93 ரூபாயும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இது மிகப்பெரிய கொள்ளையல்லவா?

பெட்ரோல் மீது ஏற்கனவே 118% வரி விதிக்கப்படுகிறது. அதற்குப் பிறகும் பெட்ரோல் விலையில் 13.04 ரூபாயும், டீசல் விலையில் 15.93 ரூபாயும் மறைமுகமாக உயர்த்தி விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? இந்தத் தொகை நுகர்வோருக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை. நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என்றால் அந்தத் தொகை வரியாக மத்திய, மாநில அரசுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால், அப்படியும் அரசுகளுக்கு செல்லவில்லை. மாறாக, இவை எண்ணெய் நிறுவனங்களின் கருவூலத்தில் எந்தக் கணக்கிலும் இல்லாமல் சேருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன. வழக்கமாக பெட்ரோல் விலையும், டீசல் விலையும் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன? என்பது குறித்த விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடும். ஆனால், அக்டோபர் 29-ஆம் தேதிக்குப் பிறகு இந்த விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடவில்லை. அந்த விவரங்களை வெளியிட்டால் உண்மை நிலை அம்பலமாகிவிடும் என்பதால் தான் அவற்றை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடாமல் ரகசியமாக வைத்து பாதுகாத்து வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன்களை மக்களுக்கு வழங்காததால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதைப் போலவே ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கூடுதலாக லாபம் கிடைக்கிறது. இதனால் தனியார் எண்ணெய் நிறுவனங்கள்  ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் கோடியை சட்டவிரோத லாபமாக குவித்து வருகின்றன. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகத் தான் பெட்ரோல், டீசல் விலையை  குறைக்காமல் எண்ணெய் நிறுவனங்களின் கணக்கில் அரசு சேர்த்து வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

2014-16 காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போது அதன் பயன்களை மக்களுக்கு வழங்காமல் கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசு பறித்துக் கொண்டது. இப்போது கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்த்திருக்கிறது மத்திய அரசு. இதை விட பெரிய சுரண்டல் இருக்க முடியாது.

மத்திய அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக  உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்...

டெங்கு மரணத்தை மறைக்கவே அதிமுக வின் சர்கார் பிரச்சனை...


நைட்டி அணிந்தால் பெண்களுக்கு அபராதம்.. ஆந்திராவில் ஒரு விசித்திர கிராமம்...


ஆந்திராவின் தொகலப்பள்ளி கிராமத்தில் 9 பேர் கொண்ட ஊர் பெரியவர்கள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 9 மாதங்களாக பின்பற்றப்படும் இந்த நடைமுறை தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுவரை இந்த விதியை மீறிய 1,800 பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2000 அபராதமும், அவ்வாறு அணியும் பெண்களை கண்டுபிடித்து தகவல் அளித்தால் ரூ.1000 பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டாயமாக நைட்டி அணியக் கூடாது. இந்த உத்தரவை தொடர்ந்து மீறுவோர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்படுவார்கள் என்ற உத்தரவும் உள்ளது. அந்த நடைமுறை குறித்து அரசு அதிகாரிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்கக் கூடாது என்ற ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த கிராமத்தில் ஆய்விற்காக வருவாய் துறை அதிகாரிகள் சென்ற போது தான் இப்படி ஒரு கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊர் கூட்டம் போட்டு இந்த கட்டுப்பாடு முடிவு செய்யப்பட்டதாகவும், கடைபிடிக்காவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவதாக கூறப்படுவது உண்மையில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...


குடல் புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்...


சாதாரணமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்...

கள்ள வோட்டுக்கு இனி ஆப்பு...


ரஷ்யா அதிரடி... உலகமே அழிந்து விட்டாலும், அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் நூல்களில் தமிழ் நூல்...


தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷ்ய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள்.

முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்பு மொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

உலகில் ஆறு மொழிகள் தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமற்கிருதம்.

இந்த ஆறு மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

அதுமட்டும் அல்லாது அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்க அறையில் வைத்து திருக்குறளை பாதுகாத்து வருகிறது...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


கொரியாவின் மகாராணி செம்பவளம் ஒரு தமிழ் இளவரசி அதிசய வைக்கும் ஆய்வு முடிவுகள்...


மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு.... இடைசொறுவல் செய்த வட ஆதிக்க சக்தியும்... இன்று அம்பலம்..

Orissa Balasubramani..

கொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி அதிசயவைக்கும் ஆய்வு முடிவுகள்..

சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் இந்திய கொரிய பண்பாடு பரிமாற்ற கருத்தரங்கம் ஒன்று 06.10.2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

கொரிய தூதரகமும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் பேசிய கொரிய நாட்டின் வரலாற்று ஆய்வாளர் ஒருவர் பேசி முடித்தபின் தமிழ் வாழ்க என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

காரணம், கொரிய மொழியில் ஐநூறு தமிழ் சொற்கள் உள்ளதை ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பித்தவர் அவர்.

அவர் மட்டுமல்ல கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த 11 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களும் அடுக்கடுக்கான தகவல்களை அளித்து வியப்பில் ஆழ்த்தினார்கள்.

சரி...எதற்காக இந்த கருத்தரங்கை கொரிய அரசாங்கமே தூதரகம் மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதிகமில்லை ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று வந்தால் சுலபமாக புரியும்.

இந்தியாவின் இளவரசி ஒருவர் கொரிய நாட்டின் மன்னரான சுரோ என்பவரை திருமணம் செய்தார்.

இதற்காக 20 பேர் கொண்ட ஒரு குழுவோடு கடல் வழியாக அந்த இளவரசி அயுத்தா என்ற கிழக்கு இந்திய பகுதியில் இருந்து தென்கொரியா சென்றார்.

செல்லும்போது ஏழு மிதக்கும் கற்கள் தம்முடன் எடுத்து சென்றார் என்பது வரலாறு.

அந்த கற்களை இன்னமும் கொரியாவில் வைத்து பாதுகாத்து, வணங்கி வருகிறார்கள் கொரிய மக்கள்.

இந்த வரலாற்று தகவல்களை ஆய்வு செய்த இந்திய ஆய்வாளர்கள் வழக்கம்போல தமிழ்நாட்டில் இதெல்லாம் நடந்திருக்காது என்று எண்ணினார்களோ என்னவோ..

அந்த இளவரசி அயோத்யா இளவரசி என்று சொல்லி வைக்க, கொரிய அரசும் பய பக்தியோடு அயோத்யாவில் இந்திய இளவரசியும், கொரிய ராணியுமான அவருக்கு நினைவிடம் கட்டிவிட்டார்கள்.

2005 ம் ஆண்டில் பார்த்த சாரதி என்கிற இந்தியாவுக்கான முன்னாள் கொரிய தூதர் எழுதிய இது தொடர்பான நாவல் ஒன்றில் அந்த இளவரசி மாமல்லையில் இருந்து சென்றதாக குறிப்பிட்ட பிறகு கொரிய அரசாங்கத்திற்கே இந்திய மருமகளை பற்றி ஆய்வு செய்யும் உந்துதல் ஏற்பட்டிருக்கிறது.

2005 இல் இருந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் நாராயணன் கண்ணன் அவர்கள் கொரிய தரவுகள் தமிழ் சார்ந்தது என்று சிந்தனையில் செயல் பட 2010 இல் இருந்து அவர் சார்ந்த மின் தமிழ் மடலாடும் குழுவின் முனைவர் நாகராஜன் மற்றும் கடல் சார் ஆய்வாளார் ஒரிசா பாலு என்கிற ஆய்வாளர்களும் இதில் களமிறங்கிய பிறகு தமிழ்நாட்டுக்கும் கொரியாவுக்குமான தமிழ் உறவு தெளிவாக புலப்பட தொடங்கியுள்ளது கண்டு கொரிய மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.

இதில் அயுத்தா என்கிற இடத்தின் பெயர் ஆய் என்று கண்டுபிடித்தவர் ஒரிஸ்ஸா பாலு.

கடல் ஆய்வின் தனித்திறன் வாய்ந்த ஒரிசா பாலு ஆய் துறை என்பது கன்னியாகுமரி ,தூத்துக்குடி ராமநாதபுரத்தின் இருந்த துறைமுக நகரங்களில் ஒன்று என்று நிரூபித்து உள்ளார்.

காரணம், 20 பேர் கொண்ட ஒரு குழுவோடு 60 நாட்களில் கொரிய செல்வதற்கான வாய்ப்புகள் ஆய் துறையில் இருந்துதான் சாத்தியம் என்று நிரூபித்தார்.

ஆமை வழித்தடங்களை பின்பற்றி உலகின் அத்தனை நாடுகளுக்கும் கடல் வழியாக சென்று திரும்பி வந்த "திரை மீளர்கள்" (கடலுக்குள் சென்று மீண்டு வருபவர்கள்) தமிழர்கள்தான் என்பதை நிரூபணம் செய்தவர் ஒரிசா பாலு.

மேலும் தமிழ்நாட்டின் இளவரசி கொண்டு சென்ற மிதக்கும் கற்கள் தமிழ்நாட்டின் குறிப்பாக ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதியில் மட்டுமே கிடைப்பவை என்பது அவரது வாதத்திற்கு வலு சேர்க்கிறது.

இது ஆய்வு குறித்த பின்னணி தகவல்கள் அவ்வளவே..

ஆய்வாளர்கள் கூறிய ஒப்புவமைகள்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயங்கள்.

கிபி 48 ம் ஆண்டு தமிழ்நாட்டு மன்னர் ஒருவர் கொரிய இளவரசருக்கு தனது மகளை பெண் கொடுத்து இருக்கிறார் என்றால் அதற்க்கு முன்னர் இருந்தே இரு நாடுகளுக்கும் நல் உறவு இருந்திருக்க வேண்டும்.

கடல் கடந்த நாட்டின் இளவரசர் ஒருவருக்கு தனது மகளை மனம் முடிக்க வைக்கும் நம்பிக்கை தமிழ்நாட்டின் மன்னருக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றால் தமிழர்களின் கடல் கடந்த உலகளாவிய உறவுகள் எப்படி இருந்திருக்க வேண்டும் ? என்கிற கேள்வியை வலுவாய் கேட்கிறார் ஒரிசா பாலு.

வெறுமனே கற்கள் மட்டுமல்ல, நாம் ஏற்கனவே முன்னர் பார்த்த கொரிய ஆய்வாளர் சொன்னது போல ஐநூறு தமிழ் சொற்கள் அல்ல 4 ஆயிரம் தமிழ் வார்த்தைகள் கொரிய மொழியில் உள்ளது என்றும் அடித்து சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அணிந்திருந்த அணிகலன்கள், நகைகள் அதே வடிவத்தில் கொரியாவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. உடைகள் ஒத்துபோகின்றன. உணவு முறைகள் ஒத்து போகின்றன. தமிழ் நாட்டின் சுண்டக்கஞ்சி அங்கே மக்கோழி ரைஸ் பீர் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஊறுகாய் அங்கே கிம்சி என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் அமுக்கரான் கிழங்கு அங்கே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் விசேட நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது வழக்கம். அதே வழக்கம் கொரியாவிலும் உள்ளது.

அங்கே மாமரம் இல்லை என்பதால் மிளகாய் செடி இலைகளை தோரணமாக கட்டுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய இசைக் கலையான தப்பாட்டத்திற்கும் கொரியாவின் டிரம் கலைக்கும் 12 விதங்களில் 8 விதங்கள் ஒரே மாதிரி உள்ளன. 4 மட்டும் கொஞ்சம் வேறுபடுகின்றன.

தமிழர்களின் தற்காப்பு கலையான களரியின் பல அம்சங்கள் கொரிய தற்காப்பு கலையோடு ஒத்து போகின்றன என்பது உட்பட பல அம்சங்களை புகைப்பட ஆதாரங்களோடும், வீடியோ ஆதாரங்களோடும் முன்வைத்தார்கள் அறிவுசார் ஆய்வாளர்கள்.

இதைவிட அறிவியல் பூர்வமான ஒரு ஆய்வு அனைவரையும் அசர வைத்து. அதாவது இரும்பு பயன்பாட்டில், அவற்றை உருக்குவதிலும், பயன்படுத்துவதிலும் கொரியாவில் பின்பற்றப்படும் முறை தென்னிந்தியாவில் இருந்து கற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து தான் கற்று கொடுக்க பட்டிருகிறது என்று ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டது சிறப்பு, அதை நிரூபிக்க ஒரிசா பாலு பல் வேறு தரவுகளை கொடுத்தார் .

வீட்டின் கட்டமைப்பு, வேளாண்மை செய்யும் முறைகள், சமையலறை உட்பட பல அம்சங்களில் இரு நாடுகளுக்கும் வேறுபாடே கண்டு பிடிக்க இயலாத அளவுக்கே உள்ளன.

பவளங்கள் உட்பட பல கற்கள் தமிழ்நாட்டு பாரம்பரியத்தோடு ஒத்துபோகின்றன.

இதைவிட வியப்பான தகவல் அந்த ராணியின் வம்சா வழியில் அதாவது ரத்த உறவுகளில் வந்தவர்களில் சுமார் என்பது லட்சம் பேர் கொரியாவில் தற்போதும் வசித்து வருகிறார்கள்.

தமிழ் மொழியில் இருந்துதான் கொரிய மொழி உருவாகியிருக்க வேண்டும் என்றும் கணிக்கிறார்கள் முனைவர் நாராயணன் கண்ணன் போன்ற ஆய்வாளர்கள்.

தமது நாட்டின் முன்னாள் மகராணி, மருமகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை அறிந்து தமிழ்நாட்டை புனிதமான நாடாக பார்க்க தொடங்கி இருக்கிறார்கள் கொரியர்கள்.

இதற்கான முயற்சியில் கொரிய தமிழக தூதுவர் கிம் அவர்கள் மிகவும் மும்முரமாக உள்ளார்கள்.

சரி... இவ்வளவு சொன்னார்களே அந்த இளவரசி பெயர் என்னவென்று சொல்லவே இல்லையா என்ற கேள்வி எழலாம். ஏன் சொல்லவில்லை. அவர் பெயர் செம்பவளம் என்று முனைவர் நாராயணன் கண்ணன் சொல்கிறார்.

இந்த கருத்தரங்கிற்காக சுமார் 16 கட்டுரைகளை உலக தமிழ் ஆய்வு நிறுவனம் நூலாக வெளி இட இருக்கிறது.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை உலக தமிழ் ஆய்வு நிறுவன முனைவர் சிதம்பரம் அவர்களும் கொரியா தூதர செயலாளர் திருமதி சுதா அவர்களும் திறன் பட செய்தார்கள்.

- சிந்தியா லிங்கசாமி, சமூக, வரலாற்று ஆய்வாளர்...

பாஜக அடிமை அதிமுக வின் திசை திருப்பல்கள்...


கூட்டு குடும்பத்தை பிரித்தால் தானே தனித்தனி அப்பாட்மெண்ட்ஸ் பிளாட்ஸ் விற்க முடியும்...


கள்ளக் காதல் குற்றமில்ல...
ஓரினச் சேர்க்கை குற்றமில்லை...

பிறகு எது குற்றம் என்கிறீர்களா..?

இவை அனைத்தும் தவறு என்று சொல்லி.. எதிர்த்தால்.. அது தான் குற்றம்...

யுகங்கள் பல கடந்த அருந்தமிழ் மருத்துவம் 500...


இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, முற்றுப்பெற்ற சித்தர்கள் ஒருதடவை சொன்னாற் சொன்னதுதான். இந்தப் பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்..

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது..

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா...

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே...

ஊடக உளவியல் போர்...


உனக்கான அரசியல் அனைத்தையும், உன்னிடம் இருந்து நீயே விலக்கி வைக்க வேண்டுமென்பது தான் அதிகார வர்க்கத்தின் அரசியல்..

இப்போதும் அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது..

நீங்களாக இங்கு எதையும் பேசவில்லை, அவர்கள் நினைத்ததே, நீங்கள் இங்கு சமூக வலைத்தளங்களில் அறிவுத்தனமாக வாந்தி எடுக்குறீர்கள், அவ்வளவே..

அனைத்து விடயங்களுக்கும் கருத்து கூறிவிட்டு நம்மை திசை மாற்றுகிறார்கள் என நாமே சொல்வது எவ்வளவு முட்டாள் தனம்.

இதுதான் நிதர்சனம்...

சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா?


பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட (Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும் ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன.

நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்.

சாம்பிராணி மருத்துவ பயன்கள்..

ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை, டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள் இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது.

சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது...

நம் தமிழ்நாட்டு காவல்துறை என்றால் சும்மாவா?


ராஜலெட்சுமி கொலைக்கு நீதி கேட்டு அனைத்து ஜனநாயக சக்திகளின் சார்பில் இன்று (09/11/2018) நடைபெறவிருந்த போராட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் துறை சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அனுமதி மறுப்பு.

ஆனால், அதே நேரம் மாவட்டம் முழுவதும் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள சர்க்கார் பட பிளக்ஸை கிழிக்கவும், தியேட்டரில் படத்தை ஓட விடாமல் தடுக்கவும் மட்டும் காவல் துறை முழு அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்கியுள்ளதாம்...

உரோம விருட்சம்...


உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலை போல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.

அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும்.

இதைக் கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.

அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம் போட்டு பத்திரம் செய்யவும்.

இதை வாயில் போட்டுக் கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும்.

இதை இடையில் கட்டிக் கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது.

இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது.

சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால் தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.

மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும்.

தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...

பாஜக அடிமை அதிமுக ஊழல்வாதிகளே பதில் சொல்லுங்கள்...


தமிழருக்கு ஏன் இந்த இழிநிலை?


தமிழகத்தில் தொடக்க கல்வி முதல் உயர்நிலை கல்விவரை தமிழ் மொழியை பயிலாமல் ஒருவன் அடுத்தடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்..

தமிழ் மொழி தெரியாமலே தமிழக அரசின் வேலையில் அமர முடியும்.

மற்ற அண்டை மாநிலங்களில் அவர்களின் தாய் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு வேலையில் அமர முடியம்..

மற்ற மாநிலங்களில் மைய அரசின் வேலைகளில் அந்த மண்ணின் மைந்தர்களுக்கே 90% முன்னுரிமை அளிக்கப்படுகிறது..

ஆனால் தமிழகத்தில் தமிழர்களுக்கு 10% வேலை கூட ஒதுக்கப்படுவதில்லை.

தமிழ் மக்களின் தமிழுணர்வு மழுக்கப்பட்டு, தமிழ்வழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டு, எங்கும் எதிலும் தமிழில்லா நிலையே தெடர்கிறது..

தமிழ்நாடு என்ற பெயருக்கே பொருளில்லாமல் செய்துவிட்டனர் இந்த திராவிட கட்சியினர்...

வணிக அரசியலும் நீதிமன்றமும்...


சர்தார் படேல் சிலைக்கு யார் நிதி கொடுத்தது?


இதில் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, பாபா ராம்தேவ் உள்ளிட்ட எவருடைய நிறுவனங்களும் நிதி கொடுக்கவில்லை.

அதிகமான நிறுவனங்கள் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்தான்.

ஒரு பக்கம் இந்தியர்கள் பெட்ரோல் விலையை குறைக்கச் சொல்லி கதறிக் கொண்டிருக்கும் போது.....

இப்படித்தான் அரசின்  பொதுத்துறை நிறுவனங்கள்  நினைத்தபோதெல்லாம் பணத்தை கரைக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

பாஜக மோடி அடிமை அதிமுக மற்றும் எச்ச ஊடகங்களை வைத்து திசை திருப்பல்கள்...


தமிழக நிலப்பரப்பு.. கேட்டதும் பெற்றதும்...


மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது நமக்கு நியாயமாக சேர வேண்டிய எல்லைப் பகுதிகளை நாம் இழந்துள்ளோம்.

ம.பொ.சி அவர்கள் தமிழ் மாநிலத்திற்காகக் கேட்ட நிலப்பரப்பானது அவர் நடத்திவந்த "தமிழ் முரசு" ஏட்டின் (1950 மே மாதம்) பதிப்பில் வரைபடமாக முகப்பில் இடம்பெற்றிருந்தது.

அதை தற்போதைய தமிழ்நாடு வரைபடத்துடன் ஒப்பிட்டால் நாம் இழந்த பகுதிகள் தெளிவாகும்.

ம.பொ.சி கேட்ட நிலப்பரப்பையும் தற்போதைய தமிழகத்தையும் ஒரு பழைய மதராஸ் மாகாண வரைபடத்தில் குறித்துள்ளேன்.

இழந்த பகுதிகளில் அன்றைய
செங்கல்பட்டு மாவட்ட சத்தியவேடு தாலுகா,
சித்தூர் மாவட்ட தென்பாதி,
கோலார் மாவட்ட தென்பாதி ,
கொள்ளேகால் வட்ட தென்பாதி,
பாலக்காட்டு வட்டத்தின் சித்தூர் தாலுகா,
தேவிகுளம் மற்றும் பீர்மேடு மாவட்டம்,
கொல்லம் மாவட்ட கிழக்குப் பாதி,
திருவனந்தபுரம் மாவட்டம் தென்பாதி
ஆகியன அடங்கும்.

அதாவது ம.பொ.சி எல்லை மாவட்டங்களில் பாதியை விட்டுக் கொடுத்து பாதியைக் கோரியுள்ளார் (தேவிகுளம்- பீர்மேடு தவிர).

தற்போது படத்தில் காட்டப்பட்டுள்ள இழந்த பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடந்து தமிழர் பெரும்பான்மை சற்று குறைந்து விட்டாலும் இப்போதும் தமிழரே பாதிக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

தற்போது பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சரி,இப்பகுதிகளை மீட்பது நமது கடமையாகும்...

சூரியனும் உணவும்...


பூமிக்கும் பூமிசார்ந்த உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது சூரியனே. சூரிய ஆற்றல் நமக்கு கிடைக்கவில்லை எனில் நம்மால் உயிர்வாழ முடியாது.

இதனை ஆய்ந்தறிந்த நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் எனும் ஆசனத்தை அறிமுகப்படுத்தினர். இதுவரை நம் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் முன்னோர்கள் சூரிய சக்தியை கிரகிக்கும் முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

பல யோக நூல்களில் இதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஆனால் நாம் அதை மூடநம்பிக்கைகளின் பட்டியலில் ஒன்றாக வைத்திருந்தோம். இவற்றை ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது NASA.

கடந்த ஒரு வருடமாக Hina Manek என்பவரை வைத்து ஆய்வு செய்ததில் திடுக்கிடும் பல தகவல்களை கண்டு NASA வே ஆட்டம் கண்டது. எல்லோராலும் புலன்கடந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற உண்மையே அது.

அதற்கு Sun Gazing அல்லது Sun Eating என்ற பயிற்சியை ஒன்பது மாதம்  தொடர்ந்து செய்ய வேண்டும்...

ஒன்பது மாத பயிற்சி முடிந்தபின் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சுதந்திர பறவை.

If your mind accepts, Your body adapts..

இலுமினாட்டி கார்பரேட் வியாபாரம்...


Corporates Buisness Techniques.. 1st உலக அழகி.. அப்புறம் விளம்பர நடிகை...

முருங்கைப் பூ மருத்துவம்...


முருங்கையை உணவிற்கு பயன்படுத்தும் போது பலரும் முருங்கைப் பூவை ஒதுக்குவதுண்டு. ஆனால் அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கை நமக்களித்த ஓர் வர பிரசாதம் ‘முருங்கைப் பூ’ என்றே கூறலாம். இதன் மகிமைகளை கீழே காண்போம்.

முருங்கைப் பூவை உணவில் சேர்த்து கொள்வதால் சளி தொந்தரவு நீங்கும்.

மேலும் முருங்கைப் பூ தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும் தன்மை இந்த பூவுக்கு உண்டு.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தமுள்ளவர்கள் முருங்கைப் பூவை உணவில் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள பித்த நீர் குறையும்.

நரம்பை வலிமைப்படுத்தும் தன்மை முருங்கைப்பூவிற்கு உண்டு. தொடர்ந்து முருங்கை பூவை உண்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலும் குணமடையும்.

உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ பயன்படுத்தப்படும். முருங்கைப்பூவை கஷாயமாக்கி சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

பெண்களின் உதிரப்போக்கு பிரச்சனைக்கு முருங்கைப்பூவை நன்றாக அரைத்து சாப்பிட்டால் உடனடியாக அப்பிரச்சினை அகலும்.

உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல், கண்ணீர் நீர் வடிதல் போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு முருங்கைப்பூ ஓர் நல்ல மருந்து.

முருங்கையில் உள்ள பூ, காய், வேர், கீரை, பிசின் என அனைத்திலுமே மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே இயற்கை நமக்களித்த இத்தகைய உன்னதமான முருங்கையை நம் எளிதாக வீட்டிலே வளர்த்து பயனடையலாம்...

ரஜினி நடித்துள்ள 2.0 படத்தையும் இணையத்தில் வெளியிடுவோம் - தமிழ் ராக்கர்ஸ்...


முன்னேற்றத்தின் மூலமந்திரம்...


நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை என்று சிலர் புலம்புகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்...

உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.

நீங்கள் வேறு ஒருவரை சார்ந்து சென்று முன்னேற நினைத்தாலும் வீண் தான்..

ஏனெனில் அவர்களை விட மேலே நீங்கள் முன்னேறி விடுவீர்கள் என்ற பொறாமையில் உங்களுக்கு உதவி செய்வதை போல் நடிப்பார்களே தவிர.. உண்மையில் உதவி  செய்ய மாட்டார்கள்...

எப்போதும் அவர்களுக்கு கீழ்.. அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே எண்ணுவார்கள்...

தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா?

இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?

கற்றுத் தரமாட்டார்கள்… நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள்.

நீங்களாகவே உங்களுக்கான பாதையை உருவாக்கி செல்லுங்கள்...

இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்...

சந்திரபாபு நாயுடுவை ஏன் ஊடகங்கள் இவ்வளவு பிரபலப்படுத்துகின்றன?


நீங்க வேணும்னா பாருங்க...இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆள் தான் தென்னிந்தியாவின் பெரும் தலைவராக காட்டப்படுவார்.

ஆம், கலைஞர்,அம்மா மரணம், கேரள கம்யூனிசத்தின் இறுதி ஆட்சி, டம்மி குமாரசாமி ஆட்சி - இது தான் இன்றைய தென்னிந்தியா.

இந்நிலையில் அமராவதியை ஆளும் சாத்தனின் கைப்பாவை போல நடந்து கொள்ளும் சந்திரபாபு நாயுடுவை வைத்துத் தான் சாதவாகனப் பேரரசு மீண்டெழ முயற்சி செய்கிறது.

சிம்சன்ஸ் கார்டூனில் தென்னிந்தியா தனியாக உடைவது போல ஒரு காட்சியும் வரும்.

அவ்வாறு நடந்தால் அந்த புதிய நாட்டுக்கு அமராவதி தான் தலைநகரமாகும். வலுவான மாநிலத் தலைமைகள் இல்லாததால் சந்திரபாபு நாயுடு தான் ஒரே தலைவர் என மக்களை நம்ப வைத்துவிட்டு ஆட்சியல் உட்கார வைக்கப்படுவார்.

இதற்கு வெள்ளோட்டமாகத்தான் சந்திரபாபு அதைச் செய்தார் இதைச் சைய்தார் என ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன.

சரி இதில் தமிழர்களின் நிலை என்ன??

அவ்வளவு சீக்கிரம் பிற மாநிலத்தவரை தமிழன் நம்பமாட்டான். அவன் தலையில் மீண்டும் மிளகாய் அரைப்பதக்கு கமலகாசன் போன்ற நவீன திராவிடவாதிகள் களமிறக்கப்படுவார்கள்.

இதற்கு நடுவே விடுதலை இறையில் என்ற கிருத்துவ பாவடை கோஷ்டி வேறு தமிழகத்தை தனியாக பிரிக்க முயற்சி செய்து வருகிறது.

வடயிந்திய பனியாக்களோடும் கைகோர்க்க முடியாது, சாதவாகன நாட்டுக்கு அடிமையாகவும் முடியாது, சிலுவை கும்பலின் பேச்சைக் கேட்டுக்கொண்டு  சூடானைப்போல அடித்துக் கொண்டு சாகவும் முடியாது.

தமிழர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளோம்.

இயற்கை அன்னையே துணை...

சூயஸ் கால்வாய் வெட்டப்படாத காலம் அது, கி.பி ஆறாம் நூற்றாண்டு...


தமிழக வணிகர்களான நகரத்தார்கள், அதாவது சாத்தன்கள்  இந்நாட்டில் உற்பத்தியான பொருட்களை அரேபிய தீபகற்பம் மற்றும் தென் எகிப்து  வரைதான் கடலில் எடுத்துச் செல்வார்கள்.

அங்கிருந்து மத்திய ஆசியாவுக்கும் பாலைவன நாடுகளுக்கும் ஒட்டகங்கள் மற்றும் குதிரைகளில் தான்  சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும்.

ஐரோப்பாவுக்குச் செல்ல மெடிட்டரேனியன் கடலில் செல்ல வேண்டும் என்பதால் தென் எகிப்திலிருந்து  சரக்குகளை எடுத்துச் சென்று வட எகிப்தின் துறைமுக நகரான அலக்சான்டிரியா வரை  ஒட்டகங்களில் சேர்ப்பார்கள்.

அங்கிருந்து சரக்குகள் வேறொரு கப்பலுக்கு ஏற்றப்படும். அலக்சான்டிரியாவில் இருந்து கிரேக்க மற்றும் ரோமன் நாடுகளுக்கு நம்ம ஊர் உற்பத்திகளான பட்டு, சந்தணம், முத்து, யானைத் தந்தம், குறு மிளகு போன்றவை செல்லும்.

நகரத்தார்களுக்கு  கப்பல் - கப்பல் சரக்கை மாற்றிவிடுவதற்கும் , பாலைவன நாடுகளில் கொண்டு சரக்கை விற்கவும் சில  அரபிகளும், யூதர்களும்  இடைத்தரகர்களாக நியமிக்கப்பட்டார்கள்.( employees under sathan)

இந்த வணிகம் காலம் காலமாக நடந்து வந்தது.

 மெக்கா,டமாஸ்கஸ்,எருசலம் போன்ற நகரங்கள் புகழ் பெற்ற வணிகப் பேட்டைகள் ஆவை.

நகரத்தார்களின் வங்கி சம்மந்தமான தொழிலையும் வட்டிக்கு விடுவதையும் யூதர்கள்  ( எருசலம் முதல் ஐரோப்பா வரை)   பார்த்துக் கொண்டார்கள்.

அரபு பாலைவனத்தில் சரக்குகளை எடுத்துச் செல்லும் பொறுப்பை அரபிகள் பார்த்துக் கொண்டனர். குறிப்பாக குரேஷி என்ற அரபுக்குடி சாத்தன்களிடம் வேலை பார்த்தனர்.

முகமது பின் அப்துல்லா (நபி) என்ற சிறுவன் தனது இளம் வயதில் அனாதையாதால் வணிகரான தனது சித்தப்பா அபு தாலிபிடம் வளர்கிறார்.

அபு தாலிப் என்பவர் மெக்கா முதல் சிரியா வரை சென்று வணிகம் செய்பவர் ஆவார்.இவரிடம் இருந்து தான் நபி வணிகத்தைக் கற்றுக் கொண்டார்.இசுலாமுக்கு முன்பு எந்த மதத்தைக் கடைப்பிடித்தார் என்பது தெரியவில்லை.

ஆனால்   தமிழகத்து சாத்தன்களுக்கு எதிராக அரபிகளைத் திரட்டி , ஏற்கனவே அரபு பாலைவனங்களில் வழக்கத்தில் இருந்த அபிரகாமிய மத வழக்கங்களையும் சேர்த்து இசுலாம் என்ற மதத்தைத் தோற்றுவித்தவர் இவரே.

வட்டிக்கு விட்டுத்தான் சாத்தன்கள் வயிறு வளர்க்கிறார்கள் என்று உணர்ந்தவர் இசுலாமில் வட்டியைத் தடை செய்தார். வட்டிக்கு விடும் இடைத்தரகர்களான யூதர்களை எதிரி என்றார்.

சாத்தன்களுக்கு எதிராக ஒரு புதிய வழிபாட்டு யுக்தியையும் இசுலாம் என்ற மார்கத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்.    இதனை செயல்படுத்த  அக்காலத் தமிழகத்தில் இருந்து ஒருவரின் உதவி கிடைத்தது என்ற ஐயமும் எனக்கு உள்ளது.

இசுலாம் என்ன செய்தது?

அரேபியா முதல் எகிப்து வரை இருந்த வணிகப் பாதையை தன் வசப்படுத்தியது.

சாத்தன்களுக்கு பின்னடவையை ஏற்படுத்தியது.

மெக்காவில் சாத்தனைக் கல்லால் அடிக்கும் சடங்கும் உருவாக்கப்பட்டது.

இசுலாமிய ஆண்களின் வெள்ளை உடை, தலைப்பாகை ,மெக்காவில் மொட்டை அடிப்பது என அனைத்தும் அக்கால சமண வணிகர்களின் வழக்கம் தான்.( சுன்னத் செய்யும் வழக்கம் ஏற்கனவே அந்நிலப் பகுதியில் வழக்கத்தில் இருந்தது தான்)

எகிப்து நாடும் அதன் வணிகமும் அரபிகளிடம் சென்றதாலும், ஐரோப்பியாவிற்கு இனிமேல் ஆப்பிரிக்காவைச் சுற்றி கடலில் செல்ல முடியாது என்பதாலும்  சாத்தன்களின் கவனம் தென் கிழக்காசியா பக்கம் திரும்பியது.

தமிழகத்தில் இதே காலகட்டத்தில் சைவத்தை வளர்த்தார் காரைக்கால் அம்மையார் என்ற செட்டியார் மதர்.

சைவத்துக்கு முன் பௌத்தர்களாக இருந்த கடல் சாத்தன்கள், பிற்காலத்தில் பர்மா,இலங்கை,கடாரம்,சிங்கப்பூர் என எங்கு சென்றாலும் சைவ அடையாளத்தோடு சென்றனர். சென்ற இடமெல்லாம் முருகள் கோவில் கட்டி வட்டிக்கு விட்டு வயிறு வளர்த்தனர்.

சரி இப்ப மேட்டருக்கு வருவோம்.

ஆப்பிரிக்காவை சுற்றி கடல் வழியாக ஐரோப்பியர்கள் வந்த நோக்கம்?

வேறு எதற்கு?? சாத்தன்களைத் தேடிக் கருவருக்க தமிழகம் வரை வந்துவிட்ட முஸ்லீம்களை இந்தியாவை விட்டு விரட்டத்தான்!! வரவைத்தவன் நகரத்தான்.

மீண்டும் கடல் வணிகத்தை வலுப்படுத்த சூயஸ் கால்வாயை வெட்டினர் ஆங்கிலேயர். வெட்ட காசு கொடுத்தவர் ஒரு கானாடுகாத்தான் செட்டியார்.

அடுத்து என்ன நடந்தது என உங்களுக்குத் தெரியாதா?

அரபிகளை அடக்க தங்களது பழைய விசுவாசிகளாக யூதர்களை மீண்டும் எருசலத்தில் குடியமர்த்தினர் செட்டிகள்.

முஸ்லீம் vs செட்டி சண்டை இன்று வரை தொடர்ந்து வருகிறது. இனியும் தொடரும்.

இயற்கையன்னையே துணை...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பாபா வங்கா முன்னாள் ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு எரிமலை மலைத் தொடரின் அடிவாரத்தில். மாக்கடோனியாவில் உள்ள Strumica வில் உள்ள Vangelia Pandeva Dimitrova கிராமத்தில் பிறந்தார். 12 வயதில் ஒரு புயலில் அவரது பார்வை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தனது முதல் ஞானப்பார்வையை பெற்றார்.

பாபா வங்கா கூறிய தீர்க்கதரிசனங்கள்:

2025: ஐரோப்பாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட பூஜ்ஜியத்தை எட்டும்.

2028: வேற்றுகிரக உயிரினங்கள்.
புதிய ஆதாரங்களை கண்டுபிடிப்பதில் நம்பிக்கையுடன், மனிதகுலம் வீனஸ் நோக்கி பறக்கிறது.

2033: உலக வெப்பமயமாதல் மூலம் துருவ பனி மூடிகள் உருகுவதால் உலக நீர் நிலைகள் உயரும்.

2043: ஒரு இஸ்லாமிய கலிபாவில் ஐரோப்பாவின் மாற்றம் முடிவடைந்தது. ரோம் தலைநகர் பெயரிடப்பட்டது. உலகப் பொருளாதாரம் முஸ்லிம் ஆட்சியின் கீழ் வளர்கிறது.

2066: ரோம் திரும்பப் பெறும் முயற்சியில் முதன்முறையாக அமெரிக்கா ஒரு புதிய காலநிலை மாற்றம் ஆயுதத்தை பயன்படுத்தும் மற்றும் கிறிஸ்தவத்தை மீண்டும் கொண்டுவருகிறது.

2076: கம்யூனிசம் ஐரோப்பாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் திரும்பும்.

2100: மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை சூரியனால் "குளிர் பிரதேசங்கள் சூடாக மாறும்.

2130: வேற்றுகிரகவாசிகளின் உதவியுடன், மனித நாகரீகங்கள் நீருக்கடியில் வாழ்கின்றன.

2170: முக்கிய உலக வறட்சி.

2187: இரண்டு பெரிய எரிமலை வெடிப்புகள் வெற்றிகரமாக நிறுத்தப்படும்.

2201: சூரியனின் வெப்பமண்டல மாற்றத்தால் வெப்பநிலை குறைகிறது.

2262: கிரகங்கள் மெதுவாக மாறும். செவ்வாய் ஒரு வால்மீன் மூலம் அச்சுறுத்தப்படும்.

2354: செயற்கை சூரியனின் விபத்து மேலும் வறட்சியை ஏற்படுத்தும்.

2480: இரண்டு செயற்கை சூரியன்கள் இருண்ட நிலையில் பூமியை விட்டுச்செல்லும்.

3005: செவ்வாய் கிரகத்தில் ஒரு போர். கிரகத்தின் பாதையை மாற்றும்.

3010: ஒரு வால்மீன் சந்திரனை தாக்கும். சந்திரன் பூமியைப் பாறை மற்றும் சாம்பலால் வட்டமடிக்கும்.

3797: இந்த நேரத்தில், பூமியில் உள்ள அனைத்தும் இறக்கும். எனினும், மனித நாகரீகம் ஒரு புதிய நட்சத்திர அமைப்புக்கு செல்ல, போதுமானதாக இருக்கும்...