29/06/2017

யார் இந்த நாடார் சமுதாயம்...? ஏன் அவர்களுக்கு ஒரு தனி முக்கியத்துவம்..?


இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பதியப்படவில்லை...

வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும்...


சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று
வேம்பு சிறப்பிக்கப்படுகிறது...

இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள்
அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக்
கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள்
கண்டறியப்பட்டுள்ளன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக்
கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie
போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப
எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும்
வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக்
கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப
எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.

எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர்.

சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று
விடுவதையும் கண்டுள்ளனர்.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின்
வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம்
பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக
சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது.

காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும்மேற்பட்ட
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

வேறு பெயர்கள்...

அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.
மருத்துவப் பண்புகள்

இலை:

1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.

2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.

3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.

4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூ.. பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

காய் + பழம்.. தோல் நோய் தீரும்.

விதை...

1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.

2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.
நெய்

1)துஷ்ட புண்கள் தீரும்.

2)ஆராத இரணங்கள் தீரும்.
வேப்பம் பட்டை

1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.

2)கஷாயம் குட்டம் தீரும்.
அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

பிசின்...

1)மேக நோயைப் போக்கும்.

குறிப்புகள்...

பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில்
சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல்
பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.
வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில்
கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து
வளரும்.

வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை
உடையதாகும். விந்து கட்டும்
வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப்
பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம்.

என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல்
உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது...

திமுக கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக பதவியை ராஜினாமா செய்தாரா..?


திமுக கருணாநிதி பதவி தேவை இல்லை என்று ராஜினாமா செய்யும் அவ்வளவுக்கு நல்லவரா என்று யோசிக்கும் புதியதலைமுறை அரசியல் நோக்காளர்களுக்கு...

1969 ஆம் ஆண்டு அண்ணாதுரை இறந்த பின் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார்.. ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் வந்துவிட்டதால் 1971 யில் மீண்டும் தேர்தல் வந்தது. கருணாநிதி சைதாபேட்டையிலும் எம்ஜியார் பரங்கிமலையிலும் வெற்றிபெற்றனர்.

இதற்கு முன்னர் 1967 யில் திமுக முதல் முறை ஆட்சி அமைத்த பொழுதே அமைச்சருக்கு இணையான பதவியில் இருந்த எம்ஜியார் 1971 தேர்தலில் வெற்றியில் தன பங்கும் இருக்கிறது என்ற எண்ணத்தில் அதற்கும் சற்றே பெரிய பதவியை எதிர்பார்த்து அமைச்சர் பதவி கேட்கிறார்.

கருணாநிதிக்கு எப்பொழுதும் இருக்கும் வஞ்சக எண்ணத்தில் அதை தர மறுக்க, எம்ஜியார் அதிர்ப்தியில் தி.மு.கவின் பொருளாளராக இருந்தமையால் கணக்கு வழக்கு கேட்க 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தி.மு.கவிலிருந்து தற்காலிகமாக நீக்கினார் கருணாநிதி. அடுத்த நாலு நாட்களில் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

அடுத்த மூன்று நாளில் அக்டோபர் 17 அன்று அண்ணா திமுகவை ஆரம்பித்தார் எம்ஜியார்.

மதியழகன் தான் அப்போதைய சபாநாயகர். கடந்த (1969 - 1971 ) ஆட்சியில் பதவியை துஷ்ப்ரயோகம் செய்ததாக கருணாநிதி மதியழகனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருந்தார், அதில் அதிர்ப்தியாய் இருந்த மதியழகன் எம்ஜியார் பக்கம் சாய்ந்தார்.

சபாநாயகரை கைக்குள் வைத்து கொண்டு எம்ஜியார் விளையாடியதை கருணாநிதி அவரை நீக்கி கூச்சல் குழப்பம் செய்து அடித்துடைத்தார்.

எம்ஜியார் இனி சட்டசபைக்கே வரமாட்டேன் என்று சபதம் செய்து வெளியேறினார்.

கருணாநிதியை எதிலாவது தோற்க்கடிக்க வேண்டும் என்று இருந்த எம்ஜியாருக்கு வகையாக வந்து சிக்கியது 1973 திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தல். எம்ஜியார் கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து திண்டுக்கலில் மாயதேவரை ஒருலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்தார். திமுக மூன்றாம் இடம் தான் பெற முடிந்தது.

அடுத்து வந்த பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்தது (சில நாட்களில் அந்த ஆட்சியை இந்திரா காந்தி கவிழ்த்தார்). தொடர்ந்து எம்ஜியார் சட்டபைக்கு செல்வதை புறக்கணித்து திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்து வந்தார்.

திமுக ஊழல் கட்சியாக முழுவதுமாக உருவெடுத்தது இந்தகாலகட்டத்தில் தான்.

எமர்ஜன்சி காரணமாக 1971 க்கு பிறகு 1977 யில் தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பாண்டிச்சேரியில் துரோகம் செய்த இந்திரா காங்கிரசின் உறவை முறித்துக்கொண்டு தனியாக நின்று எம்ஜியார் 130 இடங்கள் பெற்று அமோக வெற்றி முதல்வரானார்.

1979 ஆண்டு காங்கிரசிற்கு எதிராக கட்சிகளை திரட்டும் முயற்சியின் முகமாக திமுகவையும் அதிமுகவையும் இணைக்க ஜனதா கட்சியின் பிஜுபட்நாயக் தலைமையில் முயற்சி நடந்தது. முதல் நாள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு விட்டு அன்று இரவே டெல்லி சென்று எம்ஜியாரை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எந்த கட்சிக்கு எதிராக திமுக தொடங்கப்பட்டதோ, எந்த கட்சி எம்ஜர்ஜன்சி சமயத்தில் திமுகவை ஒடுக்கியதோ அந்த கட்சியோடு கூட்டணி அமைத்தார் கருணாநிதி.

அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளே ஆனநிலையில் கருணாநிதி தூண்டுதலில் இந்திரா காந்தியால் ஆட்சி கலைக்கப்படடது.

அதன் பின் மே 28 1980 அன்று நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று முழங்கி காங்கிரசோடு கைகோர்த்து நின்றார் கருணாநிதி.

கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து நின்றார் எம்ஜியார்.மக்களிடம் இருந்த அபரீதமான செல்வாக்கால் 38.75 சதவீத வாக்கு பெற்று மீண்டும் எம்ஜியார் முதல்வரானார்.

கடந்த தேர்தலை விட 11 தொகுதி குறைவாக பெற்றது கருணாநிதிக்கு விழுந்த பெரிய அடி, அத்தோடு காங்கிரசும் கருணாநிதியை கழட்டி விட்டது.

அத்தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி காங்கிரசும் எம்ஜியார் பக்கம் சாய்ந்த நிலையில் எம்ஜியாரை எதிர்த்து அரசியல் செய்ய வேற வழி இல்லாமல் தமிழீழ பிரச்சினையை கையில் எடுத்து 1983 ஆகஸ்ட் 10-ல் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து அன்பழகனை கூட்டிக்கொண்டு ராஜினாமா செய்தார்.

ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சிறிது காலத்தில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.

இந்த பதவியை ராஜினமா செய்வது போல செய்துவிட்டு அந்த பதவியில் சென்று அமர்ந்து கொண்டார் கருணாநிதி. இது தான் அவரின் "ஈழ தியாகம்"..

இதை தான் இன்றைய திமுகவினர் தங்கள் தலைவரின் இணையற்ற தியாகம் என்று சொல்லி வருகின்றனர்.

இதில் ஒன்னொரு விசயமும் இருக்கிறது. கருணாநிதி ராஜினாமா நாடகம் என்று தெரிந்ததால் தான் என்னவோ மக்கள் அதன் பின் 1984 டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் திமுகவை அசிங்கமாக தோற்கடித்தனர்.

கருணாநிதி தேர்தலில் நிற்காமல் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்த பொழுதும் கடந்த தேர்தலை விட 13 தொகுதிகள் குறைவாக பெற்றது திமுக..

தயவு செய்து இனியும் கருணாநிதி ஈழதமிழர்களுக்காக பதவியை தூக்கி எறிந்தார் என்று உடன்பிறப்புகள் சொன்னால் அவர்கள் மீது கையில் கிடப்பதை தூக்கி எறியுங்கள்.. அது காலில் கிடப்பதாக இருந்தாலும் சரி...

பிராமணர்கள் (ஆரியர்கள்) மாட்டுக்கறி உண்டதற்கான சான்றுகள் இதோ...


பாஜக வாஜ்பாய் ஒரு தேசத் துரோகி...


வைகோ நாயூடு வின் உண்மை முகம் இது தான்... மலரும் நினைவுகள்...


வீரப்பனார் எனும் எல்லைக் காவல் தெய்வம்...


சுள்ளி பொறுக்க காட்டிற்குள் சென்று வழி தெரியாமல் போய்விட்ட பெண்களை பார்த்தால்...

நீ ஏம்மா இங்க எல்லாம் வர? பொலிசுகாரனுங்க கண்ணுல பட்டுட போற...

ஏதாவது ஆடு வளத்து பொழச்சிக்கோ
என்று கையில் இருக்கும் காசை கொடுத்து காட்டு எல்லை வரை வந்து விட்டு விட்டு போவாராம் வீரப்பன்..

வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...

1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவுகூற வேண்டும்.

2.வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்குநஷ்டஈடு தரவேண்டும்.

3. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்..

4. பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.

5.தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.

6.தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...

துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் மட்டுமே தமிழர்களை வீழ்த்தினீர்கள் என்று வரலாறு காட்டுகிறது திருட்டு திராவிடர்களே...

மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் ஒப்புதல் அளித்தது உண்மைதான்.. அதன் பாதிப்புகள் தெரியாமல் ஒப்புதல் அளித்துவிட்டோம் - திமுக ஸ்டாலின் திருவாரூரில்...


இன்னன்ன மந்திரி பதவிகளை குடும்பத்தினருக்குத் தந்தாள் தான் அமைச்சரவையில் சேருவோம் என்று இங்கிருந்து சக்கர நாற்காலியை டெல்லி வரை உறுதிச் சென்று அடம் பிடித்து அலசி ஆராய்ந்து வாங்கத் தெரியும் ...

பேரனின் நிறுவனமாக இருந்தாலும், கறாராக பேசி பங்கு பிரித்து காசை வாங்கிக் கொள்ளத் தெரியும் ...

75 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவர் என்று ஊர் ஊராகச் சென்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டும், செய்கின்ற போக்கிரித் தனத்திற்கு எல்லாம் ராசதந்திரம் என்று பெயர் சூட்டி தற்பெருமை ஜம்பமடித்துக் கொள்ளத் தெரியும்...

ஆனால் அப்பாவி மக்களின் நிலத்திற்கு, நீர் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மட்டும் தெரிந்துக் கொள்ளாமல் ஒப்புதல் கொடுத்தார்களாம் ....

இந்த அசிங்கங்கள் ஒழிந்தால் தான் தமிழக அரசியலுக்கே விடிவுகாலம்...

ஆரியமும் திராவிடமும் ஒன்று இதை அறியாதவர்கள் வாழ்கையே மன்னு....


அன்பென்று கொட்டு முரசே — மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் ’ (பாரதி)..

வெளிநாட்டு ‘அறிஞர்களும், உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன்.

ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்த பின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

திராவிடர்கள் பிராமணர்களே.. பிராமணர்கள் திராவிடர்களே..

திராவிடர்கள் யார்?
தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன..

ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு” என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?

சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்..

நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே..

கிரிக்கெட் ஆடும் திராவிடன்..

கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராகுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது?

ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர்.

கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிராமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.

இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.

உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்..

இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்துள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்.. அது சரியல்ல.

உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை, அவர் தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.

திராவிடாசாரியா..

அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்..

பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.

(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன் கர்நாடக என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது).

அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ..

திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.

திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.

திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்.

திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.

நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.

தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை — திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.

தென் இந்தியாவில் இருந்து வடக்கே போன எல்லோரையும் ”மதறாசி” ( மெட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்!!இதுபோலத்தான் திராவிடன் என்பதும்.

தமிழ் நாடு — திராவிடநாடு அல்ல..

இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை..

இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை.

இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை.

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது..

(தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்..

தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.இதே போல தெற்கிலிருந்து சென்ற பிராமணர்களுக்கு திராவிட் — என்று பெயர்.

திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை. பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை. திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிக்கும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லவே இவ்வளவும் எழுதினேன்...

கன்னட ஈ.வே. ராமசாமியின் தமிழ் மண் துரோகம்...



கன்னட ஈ.வே. ராமசாமியின் தமிழினத் துரோகம்...



கன்னட ஈ.வே. ராமசாமியின் தமிழ்த் துரோகம்...



யார் பெரியார்.?



கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரை பெரியார் என்றழைப்பது பொருந்துமா.?








திமுக சொம்பு சுப.வீ யும் சாதி ஒழிப்பும்...


சாத்தான் வேதம் ஓதுகிறது...

சுபவீ என அன்போடு அழைக்கப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் செட்டியார், தன்னை ஜெயலலிதா சிறைக்கு அனுப்பிய காழ்ப்பிலும், வெளியே எடுக்க கருணாநிதி உதவிய செஞ்சோற்றுக் கடனுக்காகவும், கருணாநிதிக்கு ஜால்ரா போட ஆரம்பித்தார்...

அப்போதைய ஜால்ரா சத்தம் எதுவரை போனது என்றால், தலைவர் பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, அவரை சிகிச்சை பெற விடாமல் இந்திய அரசும், கருணாநிதியும் திருப்பி அனுப்பினார்கள்... அப்போது, புலம் பெயர் தமிழர்கள் சிலர் இவரிடம் தொலைபேசியில் கருணாநிதியின் மூலம் பார்வதி அம்மாவுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டபோது, இப்போது தான் என்னை கண் தெரிகிறதா எனக் காட்டமாகக் கேட்டாராம்..

இதே புலம்பெயர் தமிழர்கள், உன்னை ஈழ ஆதரவாளன் என்று நம்பி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் அழைக்கவில்லையா? அவர்கள் வீட்டுச் சோற்றை நீ தின்றதில்லையா? அப்போது இனித்ததா? இப்போது மட்டும் கசக்கிறதா சுபவீ?


தனிப்பட்ட பிரச்சனைகளையும் இன நலனுக்கான பிரச்சனைகளையும் பிரித்தறிந்து பார்க்கத் தெரியாத சுயநலமி சுபவீ. இனநலன் குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் ஒயாமல் ஓதிக்கொண்டிருக்கிறது.

வேட்டியோடு என்ன விரோதம்?

நந்தன் வழி இதழில் இவர் ஆசிரியராக இருந்த போது. தான் ஏன் வேட்டி கட்டுவதில்லை? ஏன் மீசை வைத்துக் கொள்கிறேன்? என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.

அதாவது, வேட்டி கட்டிக் கொள்வதும், மீசை மழித்து இருப்பதும், இவர் சாதியான நாட்டுக்கோட்டை செட்டியாருக்கான அடையாளங்களாம்.

அதனால் சாதி ஒழிப்பு போராளியான இவர் அடங்க மறுத்து. மீசை வைத்துக் கொண்டும். பேண்ட் போட்டுக்கொண்டும் இவர் சாதி ஒழிப்பை காட்டுவாராம்.
சுபவீயின் சாதி ஒழிப்பு வீரம் மீசை மயிரோடு நின்று விட்டது.

ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தன் பெண்ணை கொடுத்தோ, பெண் எடுத்தோ காட்ட முடியாத சாதி ஒழிப்பு போராளி சுபவீ..

அடுத்தவன் வீட்டுப் பெண்களை மட்டும் கொடுக்கச்சொல்லும் புரோக்கர் வேலைகளை இனி விட்டுவிட வேண்டும்...

அண்ணாமலை பல்கலை கழகத்தில் 1995 ஆகஸ்ட் 26, 27 இல் நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்று பேரவையின் இரண்டாவது கருத்தரங்கில் புலவர் திரு. செ. ராசு கொங்கு அவர்களால் படிக்கப்பட்ட கட்டுரை இது...



அமெரிக்காவில் சீக்கியர்களால் பாஜக மோடிக்கு கடும் எதிர்ப்பு...


ஆனால் இந்திய திருட்டு ஊடகங்களோ.. எப்போதும் போல் உண்மைகளை மறைத்து பொய்யான செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது...

தமிழினத்தின் சாபம்... இனமானம் இல்லாத இந்த ஈன பிறவிகள் தான்...


இந்த அடையாளத்திற்கு பின்னால் அரச குடும்பத்தின் ஆயுதம் உள்ளது...


இதை பயண்படுத்த தெரிந்தவன் தான் உலகை ஆளுகிறான்..

ஆனால் இது வெறும் 1% தான் இதை போல இன்னும் 99% இருக்கிறது...

ஆனால் தற்கால பார்பனர்களும் ஒரு சில தமிழ்குடிகளும் இதை என்ன என்று தெரியாமல் நெற்றியில் வரைகிறார்கள்...

பொக்ரான் அணுகுண்டுச் சோதனையும், சித்தர்களின் கண்டு பிடிப்பும்...


பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்ட போது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது.

அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன.

எந்த ஒரு செயற்கைக்கோளாலும் (satellite) முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா?

அணுகுண்டைச் சுற்றி வெங்காயச் சருகுகளால் மூடப்பட்டிருந்ததே.

வெங்காயச் சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழைய முடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் மகரிசி...

பாஜக ஆளும் மும்பையில் கொடூரம்...


விசாரணை என்ற பெயரில் பெண்ணின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டு ஜெயிலர் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் அந்த பெண் மரணம் அடைந்துவிட்டார்.

மேலும் தகவல்....

Hindustan Times has a copy of the FIR and the statement of the witness, which detail the inhuman behaviour of the jailors, six of whom have been booked for murder. The death triggered a violent protest by other prisoners and some 200 of them, including former media bigwig Indrani Mukerjea, who is in jail for the murder of her daughter Sheena Bora, have been booked for rioting.

Manjula was called to the jail officer Manisha Pokharkar’s private room. The witness told police officers investigating the murder that she heard Manjula scream in pain. Manjula came back to the barrack in a while and was visibly in pain.According to the documents, the trouble started at 9am on June 23, when Manjula, who was made warden of her barracks because of her good behaviour, found that the rations fell short by two eggs and five pieces of pav (bread).

The witness said that soon a group of jailors came to the barracks and assaulted Manjula once again.

The witness said Manjula was stripped by women constables she identified as Bindu Naikade, Waseema Shaikh, Shital Shegaonkar, Surekha Gulve and Aarti Shingne.The witness said Bindu and Surekha then held Manjula’s legs apart and Waseema inserted the lathi into her private parts.

Manjula was left bleeding in the barrack, and no help was offered by the jail authorities, the witness said. It was only after Manjula fell unconscious in the bathroom that she was taken to the resident doctor at the jail who immediately asked for her to be transferred to JJ Hospital. Manjula died at the hospital.The post-mortem examination report from JJ hospital stated that Manjura had about 11 to 13 contusions all over her body. The dean of JJ hospital, TP Lahane, said the woman’s lungs were damaged.Manjula was serving life imprisonment for murdering her sister-in-law Vidya Shetye. Her mother Godavari Shetye too had been convicted but had died.

On January 4, 1996, Manjula poured kerosene over Vidya, while Godavari pushed Vidya towards a burning stove. This caused 100 per cent burns to Vidya who died on January 8, 1996. Vidya’s dying declaration had seen a sessions court convict Manjula and Godavari, which was later upheld by the Bombay High Court on October 8, 2009.The police started an investigation and based on the witness’ statement ,an FIR accusing the five constables and the jail officer of murder was filed at Nagpada police station.Since her conviction, Manjula was lodged at Yerwada jail, and was moved to Byculla prison about three months back.

Manjula’s elder brother Sharad Shetye a Kalyan resident had told HT, “She was taken to the hospital on Friday around 7.30 pm and we were informed only at 7 am on Saturday when two constables from Manpada police station came to inform us. I want to know why it took them beyond one hour to inform me about my sister’s death...

பாஜக மோடியும் இந்தியா விற்பனையும்...


கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆள நினைக்கின்றனர்..

நீங்கள் ஒத்துக் கொள்ளகிறீர்களா?

இல்லை வழக்கம் போல சிரித்து விட்டு செல்லப் போகிறீர்களா.?

துர் நாற்றம் வீசி சாக்கடையாக மாறிய கிணற்றை தூர் வாரிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், தண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்த கிணற்றை பயன்படுத்த துவங்கியுள்ள கிராம மக்கள்...


பெரம்பலூர் ஆலத்தூர் அணைப்பாடி கிராமத்தில் நீர் ஆதாரமாக இருந்த கிணறு சாக்கடையாக மாறி துர் நாற்றம் வீசத் துவங்கி மக்கள் பயன்படுத்த முடியாத வண்ணம் வரட்சியால் மாறியிருந்தது.

இதை புதிய பயணம் என்ற தன்னார்வ இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஒன்று கூடி சாக்கடையை அகற்றி 6 அடி ஆளத்திற்கு தூர் வாரியுள்ளனர்.

இதை தொடர்ந்து தற்போது அந்த கிணற்றில் நீர் ஊற்று உருவாகி மக்கள் பயன்படுத்தும் வண்ணம் அந்த கிணறு மாறியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள்...

வட மொழி செய்த வினைகள...


வந்தாரை வாழவைக்கும் தமிழகமல்லவா?

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வட மொழியாளர்கள் இங்கு புகுந்துவிட்டனர். தமிழ்நாட்டில் தாராளமாகத் தம்மொழிச் சொற்களைப் பரப்பினர். எளிய, இனிய தமிழ்ச் சொல் பேசும் தமிழர், கடினமான உச்சரிக்க முடியாத வடமொழிச் சொற்களையும் கூறி மகிழ்ந்தனர்.

"மனம்" என்பது தமிழ்ச்சொல்; வடமொழியில் "ஹ்ருதய" எனக்கூறப்படும். வடமொழியை உச்சரிப்பது மிகக் கடினமானதாகும். அதற்கு முயற்சி அதிகம் தேவை. வாய், உதட்டளவில் தமிழை உச்சரிக்கும் நாம் வடசொல்லை உச்சரித்தால் அடிவயிற்றிலிருந்து முயலல் வேண்டும்.

தொல்காப்பியர் நாட்டில் மக்கள் வழங்கும் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தார். அவர் சொற்களை "இயற்சொலல்", "திரிசொல்", "திசைச்சொல்" எனப் பிரித்தார்.
வழங்கிய சொற்கள் பல இம்மூன்று பகுப்பில் அடங்கவில்லை. "வடசொல்" என்று நான்காவதாக ஒன்றை வகுத்தார்.

வடசொற்களைத் தமிழில் எவ்வாறு உச்சரிக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார், "வடமொழிச் சொற்களை வடமொழி எழுத்துக்களைக் கொண்டே ஒலிக்காதீர்கள்; வடமொழி எழுத்துக்களை நீக்கி இணையான தமிழ் எழுத்துக்களில் உச்சரியுங்கள்" என்கிறார் தொல்காப்பியர்.

"ஹ்ருதய" என்பதை "இதயம்" என்று கூறுங்கள். "பங்கஜம்" என்பதைப் "பங்கயம்" என்று கூறுங்கள் என்கிறார் தொல்காப்பியர்.

"வடசொற் கிளவி வடஎழுத்து ஒரிரு
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே"
என்பது தொல்காப்பிய நூற்பா, அவருக்குப் பின்வந்த நன்னூலார், இரண்டு வடமொழிச் சொற்களை இணைத்து எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணம் வகுத்தார்.

"இராமன் + அயனம் = இராமாயணம்" என்பன போன்ற "வடமொழிப்புணர்ச்சி" விதி கூறுகிறார் நன்னூலார் பவணந்தி முனிவர்! இலக்கியத்திலும் அம்மொழி புகுந்துவிட்டதே காரணம்.

தொல்காப்பியத்தில் பிற்காலத்தில் உரையாசிரியர்கள் பாடம் நடத்தினர். உரையாசிரியருடைய மாணவர்கள் கேட்டனர்; "ஐயா, திசைச்சொல் என்றால் எல்லாத் திசைகளிலும் இருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்கள் என்று கூறுனீர்கள். வடக்கும் ஒரு திசைதானே அப்படியானால் வடசொல் திசைச் சொல்லுக்குள் தானே அடக்க வேண்டும். வடசொல் எனத் தனியாகக் கூறியது தவறல்லவா?" என்பது மாணவன் வினா.

தொல்காப்பியர் "வடசொல்" என வகுத்துவிட்டனர். உரையாசிரியர் அதைத் தவறென்று எவ்வாறு கூறமுடியும். மாணாக்கனுக்கு உரையாசிரியர் வலிந்து பின்வருமாறு கூறுகிறார்.

அவரால் மாணாக்கன் கேட்டது தவறென்று கூற முடியவில்லை. அவருக்கும் அது தவறென்று தெரியும்!

"மாணாக்கனே! நீ சொல்வது முற்றிலும் சரி. வடசொற்களைத் திசைச்சொல்லில்தான் அடக்கியிருக்க வேண்டும். ஆனால் நமக்கெல்லாம் ஆசிரியராகிய தொல்காப்பியர் "வடசொல்" என்று தனியாக வகுத்தது ஏன் தெரியுமா?

1. வடக்கு ஒரு புண்ணிய திசை
2. வடமொழி தேவ பாசை
3. வடமொழி எல்லாத் தேசத்துக்கும் பொது
ஆகையால் வடசொல்லைத் திசைக் சொல்லில் அடக்காது "வடசொல்" எனத் தனியாக நம் ஆசிரியர் தெல்காப்பியர் வகுத்தார் என்று மாணாக்கனுக்கு ஆசிரியர் கூறினார். அதைத் தவறு என்று கூற ஆசிரியருக்குத் துணிவு இல்லை. இம்மூன்று பொய்யையும் வடவர் பரப்பியிருந்தனர்.

அங்கிங்கெனாதபடி எங்கும் வடமொழி ஆதிக்கம் புகுந்தது. "மன்னன் எவ்வழி; குடிமகள் அவ்வழி" என்பதறிந்து அரண்மனையை வடமொழி ஆழிப்பேரலை தாக்கியது. மன்னர்கள் அதற்கு ஆட்பட்டனர். மன்னர்களைத் தம்வசப்படுத்தப் பல குறுக்கு வழிகளையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

சோழரிடம் சென்று வடமொழியாளர் கதையளக்கத் தொடங்கினர், "சோழனே உனக்குத் தெரியுமா? உன் வம்சமே சூரியனிடமிருந்து தோன்றியது. உலககெலாம் ஒரு சூரியன்; உலகுக்கு நீயே ஒரு தனி மன்னன். சூரியன் மகன் மனு; அவன் நீ ஆட்சி செய்யத்தான் "மனு நீதியை" எழுதியுள்ளான். மனு உன் முன்னோர். இட்சுவாகு, புரஞ்சயன், காகுத்தன் என்று பல மாவீரர்கன் உன் வழியினர் உனக்குத் தெரியாதா? உன் புலிக்கொடியில் இருப்பது புலி அல்ல; தேவேந்திரன் என்றனர்.

நம் அரசர்கட்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. "ஆம்" என்று தலையாட்டி "ஆகா" என்று போற்றிப் புகழ்ந்தனர்.

அக்கரையிலிருந்து வந்த பச்சைப் பாம்பை பாம்பென உணராமல் "பசுமை" என்று கண்டு மகிழ்ந்தனர். தம் இலக்கியங்களிலும், மெய்க்கீர்த்திகளிலும் அப்புனை கதையை எழுதினர்.

அரசன் ஆதரவோடு வடமொழியாளர்கள் தங்கள் வரிசையைக் காட்டினர். பல புனைகதை புனைந்தனர்.


தஞ்சைக்குப் பக்கத்தில் "வெண்ணாறு" காவிரியின் பாசன ஆறு. "விண்ணை" என்ற சோழ அரசியல் தலைவன் உருவாக்கியதால் அது "விண்ணன் ஆறு" "விண்ணாறு" என்று கூறப்பட்டது.
தமிழன் வெட்டிய ஆற்றுக்கு ஒரு கதை கட்டினர் வடமொழியாளர்கள்.

ஒருமுறை தென்திசை வந்த காமதேனு பாலாய்ச் சொரிந்தது. அந்தப்பால் தேங்கி, தயிராகி, வெண்ணை உண்டாகி அந்த வெண்ணைய் ஆறாய்ப் பெருகிறது. அதனால் அது "வெண்ணையாறு" ஆயிற்று. வெண்ணை வெண்ணையாக ஓடுவதால் இது "சுவேதநதி" ஆயிற்று. இதோ புராணத்தில் பாருங்கள்: என்று சில சுலோகங்களைக் கூறினர்.

ஆற்றின் வரலாற்றை மறந்த மக்கள் புராணப் பொய்யை நம்பினர்.
புறநானுறு பாடப்பட்ட காலத்திலேயே,
"நின் முன்னோர் எல்லாம்
பார்ப்போர் நோவன செய்யலர்"
"பார்ப்பார்க்கு அல்லது பண்பு அறிகிலையே"
என்று அரசரை வடவர் புகழ்ந்து பெற வேண்டியதைப் பெற்றனர்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று எண்ணிய தமிழரை,
"வேற்றுமை தெரிந்த நாற்பால்" என நம்ப வைத்தனர்.

பார்ப்பனரே முதல் வருணம். மேலான சாதி என்று பரப்பப்ட்டது. மற்ற அனைவரையும் "பிராமணர்க்கும் கீழ்ப்பட்ட மக்கள்" என்று கரந்தைக் கல்வெட்டுக் கூறுகிறது. அந்தணர் என்பதும் தாங்கள்தான் என்றனர். "அந்தணர் முதல் அரிப்பன் கடையாக" என்பதும் ஒரு கல்வெட்டுத் தொடர்.

தாராளமாக - ஏராளமாக நிலங்கள்
பார்ப்பனர்கட்கு வழங்கப்பட்டன. அங்கு வசதியான வீடு கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தப்பட்டனர். தஞ்சையில் இருந்த சர்வசிவ பண்டித சைவாச்சாரியார் தாம் ஏராளமாகப் பெற்றது தவிர தன் சிடர்கட்கும், சிடருடைய சிடர்கட்கும் தஞ்சாவூரிலிருந்து ஆர்யதேசம், மத்ய தேசம், கௌடதேசம் ஆகிய நாட்டில் உள்ளார்க்கும் வருடம்தோறும் 2000 கல நெல் அனுப்பி வைத்தார். வடமொழிப் பார்ப்பனர்கள் தம்மை "சைவ புரந்தரச் சச்சரவர்த்தி" என்று அழைத்துக் கொண்டு அரசனுக்கு நிகர் என்றனர்.

"அகரப் பிரமதேயம், சதுர்வேதமங்கல்யம், பட்டவிருத்தி, சுரோத்திரியம், அத்யயனவிருத்தி, மாஸியம், சர்வமானியம், ஏகபோகம், கணபோகம்" என்று பல்வேறு பெயரிட்டுப் பல்லாயிரக்கணக்கான வேலி நிலங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நில உடைமையாளர்களாக இருந்த வேளாளர்களின் நிலங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டு பார்ப்பனர்கட்குக் கொடுக்கப்பட்டன. சில இடங்களில் அதை எதிர்த்து வேளாளர்கள் கிளர்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

நிலங்கள் பிராமணர்கட்கு
"தானாதி வினிமய கிரய விக்கிரயங்களுக்கு யோக்கியமாய்
புத்திர பவுத்திர பாரம்பரியமாய் சந்திர சூரியர் உள்ளவரை
அட்டபோகத்துடன் ஆண்டு அனுபவித்துக் கொள்ள" அளிக்கப்பட்டன.

அரசர்களுக்கு, வழிகாட்டவே "மனு" நீதி நூல் எழுதப்பட்டது என்று கூறக்கேட்ட மன்னர்கள் தாங்கள் "மனு ஆறு பெருக" "மனு நெறி தழைக்க" அரசாள்வதாகத் தங்கள் மெய்க்கீர்த்திகளில் கூறிக்கொண்டனர். ஆனால் ஒருசில இடங்களில் தமிழ்க் குறுநில மன்னர்கள் மிகச்சிலர் தங்கள் ஆவணங்களில் "வள்ளுவர் உரைத்த முப்பால் மொழியின்படி" அரசாண்டதாகக் கூறிக் கொள்கின்றனர். இது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.

அரசர்கள் ஆதரவு பெற்ற பார்ப்பனர் நடத்திய வடமொழிக் கல்லூரிகள் பற்றிப் பல ஆவணங்கள் கிடைத்துள்ளதே தவிர தமிழ்க்கல்வி பற்றி அரசு ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்ப் புலவர் பெருமக்களே தமிழைக் கற்பித்தனர் காத்தனர்.

தமிழ் அமைப்பைப் பார்த்துத் திருத்திச் செய்யப்பட்டதே வடமொழி.

"சமஸ்கிருதம்" என்பதற்கும் அதுதான் பொருள். சிலர் "வடு + அல்" மொழி எனப்பிரித்துக் குற்றமில்லாத மொழி வடமொழி என்று கூறுவது மிகப்பெரும் பிழையாகும். மொழியியல் படியும் அது தவறு.

தமிழ் ஊர்ப்பெயர்கட்கெல்லாம் இதுதான் மூலம் என்று மொழிபெயர்ந்து வடமொழிச் சொற்களைப் புகுத்தினர். "நட்டூர் - மத்யபுரி" ஆயிற்று; "கருவூர் -கெர்ப்பபுரம்" ஆயிற்று; "பேரூர் -ஆதிபுரி" எனப்பட்டது. ஊர்ப் பெயர்கட்குப் புராணக் கதைகளையும் படைத்தனர். தஞ்சாவூருக்கும் "தஞ்சன்" என்ற அரக்கனுக்கும் தொடர்புபடுத்தினர். சிராப்பள்ளியை (சமணப்பள்ளி) "திரிசிரா" மூன்று தலையுடைய அரக்கனோடு தொடர்புபடுத்தினர். இராசராச சோழன் கட்டிய பெருவுடையார் - பெரியநாயகி கோயிலை "பிரகதீசுவரர்" "பிரகந்நாயகி" என்று அழைத்தனர் அழைக்குமாறு கூறினர்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி இரண்டு ஆறுகள் கூடும் இடம். அங்குள்ள இறைவன் பெயர் "நண்ணாவுடையார்" அம்மன் பெயர் "பண்ணாரி மொழியம்மை" என எல்லாக் கல்வெட்டு, செப்பேடு, ஆவணம் அனைத்திலும் இப்பெயரே காணப்படுகிறது. ஆனால் "சங்கமேசுவரர்" "வேதநாயகி" என்ற பெயரை "மார்க்கசகாயர்" என மாற்றியதுபோல் ஏராளமான பெயர்களை மொழி பெயர்த்தனர் அல்லது மாற்றினர்.

தமிழகக் கட்டடக் கலையின் நுட்பங்களைப் பழந்தமிழர் கட்டிய பல கோயில்களில் காணுகின்றோம். வடநாட்டுக் கட்டடக் கலை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. ஆனால் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை நூல்கள் வடமொழியிலேயே உள்ளன. தமிழில் உள்ளவைகளை வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டு தமிழ்நூல்களை அழித்து விட்டதை அல்லவா இது காட்டுகிறது.

"தமிழ் ஓலைச் சுவடிகளை ஆடிப்பெருக்கன்று ஆற்றிலும், கார்த்திகை தீபத்தன்ற நெருப்பிலும் இடுவது புண்ணியம்" என்ற செய்தியைப் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சுவடிகள் அழிவதற்குக் காரணமாக இருந்தவர்கள் வடமொழியாளர்கள்.

வடமொழியாக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களின் வடிவம் அருவருப்பையும் ஏற்படுத்திகின்றன. ஈரோடு என்பது இரண்டு ஓடைகளால் ஏற்பட்ட பெயர். ஈரோடை-ஈரோடு ஆயிற்று. ஆனால் அதை "ஈரஓடு" என்று பிரித்து தலையில் கங்கையாறு இருப்பதால் ஈரமான தலை ஓட்டையுடைய சிவபெருமான் இருக்கும் ஊர் என்று கூறி "ஆர்த்தரகபாலபுரிசுவரர்" ஆக்கி ஈரோடு என்பதையும் "ஆர்த்தரகபாலபுரி" ஆக்கிவிட்டனர்.

அம்மன் பெயர் "வாரணி அம்மை" (வார்=கச்சு); இப்பெயரைப் பூசையின்போது "குஜமஸ்த குசும ஸ்தானாம்பிகை" என்று கூறுகின்றனர். இதன் பொருள் "தர்ப்பைப் புல்லால் இறுக்கிக் கட்டப்பட்ட தனங்களை உடைய பார்வதி" என்பதாகும்.

வடமொழி ஆதிக்கத்தால் செம்மேனியுடைய சிவன், "ருத்திரன்" ஆனார்; தமிழ் முருகன் "சுப்பிரமணியர்" ஆனார்; மால், திருமால், விஷ்ணு எனப்பட்டார். வழக்கில் இல்லாத "இந்து" என்ற பொதுச் சொல்லையும் உருவாக்கினர். "வேதநெறி தழைத்தோங்க" தமிழ் கோயிலை விட்டு அகன்றது.

பூவால் செய்யப்பட்ட வழிபாடே "பூசை" ஆயிற்று என்பது அறிஞர் துணிவு. ஏராளமான சொற்களை வடமொழியில் பெயர்த்து அதுவே மூலச்சொல் என்றனர்.

மொழி, இலக்கிய வரலாற்று ஆய்வுகளைத் தொடங்கியவர்கள் மேனாட்டினரே என்பதில் ஐயமில்லை. தமிழர்கள் உயர்கல்வி கற்க இயலாதிருந்ததால் கற்ற பார்ப்பனர் மேனாட்டினரை அண்டியிருந்ததால் அவர்கள் ஆய்வும் வடமொழிக்கே வாய்ப்பாக இருந்தது. இன்றும்கூட தமிழகப் பெரும் ஆய்வாளர்கள் வடமொழியாளர் வகுத்த பாதையிலேயே நடைபோடுகின்றனர்.

"செட்டு" என்பது வணிகத்தைக் குறிக்கும் சொல். பல இலக்கியங்களில் பயின்று வருகிறது. செட்டு செய்பவன் செட்டியார்; ஆனால் தமிழ் ஆய்வாளர் பலர் "சிரேஷ்டி" என்ற சொல்லே செட்டியார் ஆயிற்று என்று எழுதுகின்றனர். சிரேஷ்டி மூத்தவனே தவிர செட்டியார் அல்ல.

"கோடு" என்ற சொல் அடிப்படையாகப் பிறந்தது "கோட்டை" என்பது. கோஷ்டம்தான கோட்டை ஆயிற்று என்கிறார் இந்தியப் புகழ்பெற்ற ஒரு வரலாற்று ஆசிரியர்; அவர் தமிழர்; சிவபெருமான் சிரித்து (நகல்புரிந்து) முப்புரத்தை எரித்ததால் "நக்கன்" எனப்பட்டார். சிவன் அடியார்க்கும் அப்பெயர் உண்டு. ஆனால் "நக்ணன்" என்ற சொல்லே நக்கன் ஆயிற்று என்பார் ஒரு தமிழ்ப் பேராசிரியர். வடமொழிக்கு அடிமையான தமிழ்ப் பேராசிரியர்கள், வரலாற்றாசிரியர் இன்னும் உள்ளனர்.

பார்ப்பனர் தொடர்பு இருந்தால்தான் ஒருவன் அறிஞன் ஆக முடியும் என்பதால் தானே "ஆதி" என்ற தாழ்த்ப்பட்ட பெண்ணுக்கும் "பகவான்" என்று பார்ப்பனனுக்கும் பிறந்தவர்கள் திருவள்ளுவர் என்ற பொய்க் கதை உருவானது. இந்தப் பொய்யை மெய்யென்று நம்பிய ஒரு பேரறிஞர் தம் கவிதைகளில் திருவள்ளுவரை "ஆதிபகவன் மைந்தன்" என்று மேடையில் பாடினார். தவறென்று தெரிந்த அக்கவிதை அச்சாகும்போது அந்தத் தொடரை நீக்கிவிட்டார்.

வடமொழி ஆழிப்பேரலை ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறாமல் உள்ளன. அண்மையில் ஒரு பெரும் கவிஞர் "அங்கொன்றும் இங்கொன்றுமாக" சிறு வடமொழித் தாக்கம் இருப்பதாக எழுதியுள்ளார் அங்கிங்கெனாதபடி எங்கும் காணப்படுகிறது. அதன் தாக்கம் "மறையாமல் நின்று பல வடிவங்களில் காட்சியளிப்பது கொடுமையிலும் கொடுமை".

அதன் தாக்கம் சிதம்பரம் சிற்றம்பலம் சன்னதியில், திருமுக்கூடல் குடமுழுக்கு விழாவில், கரூர் பசுபதிவரர் கோயிலில் இருப்பதை இன்றும் காண்கிறோம். இனிமேலாவது பேரலையைத் தடுத்து நிறுத்துவது தலையாய கடமையாக இருக்க வேண்டும்...

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரும் பெண்ணியப் புரட்சியும்...


72 வயதில், 26 வயது பெண்ணை திருமணம் செய்து, இது ஒரு மாபெரும் பெண்ணியப் புரட்சி, நான் உலக மகா புரட்சியாளன் என்று கூறிய கேவலம் உலகில் எங்கும் நடந்திருக்கவில்லை.

பெரியார் என்ற தமிழின அழிப்பின் ஆணிவேரான வடுக வந்தேறியின் படத்தில் குசுபூவை மனைவியாக போட்டதின் நோக்கம் மணியம்மையை வயதான பெண்மணியாக காட்டவே தான்.

வெங்காய ராமசாமியின் இறப்பிற்கு பின்னர் மனிதகுல துரோகி கருணாநிதி, அண்ணா, மற்றும் பிற திராவிட (தெலுங்கர், கன்னடர், மலையாளி) வந்தேறிகளால் துன்புறுத்தப்பட்டு தவறாக நடத்தப்பட்டார்.

இந்த பொழப்புக்கு சும்மா பொதீட்டு இருந்திருக்கலாம்.

அந்த திருட்டு திராவிட கள்ள சிரிப்புதான் செம அழகு...

நெஞ்சை நெகிழ்த்தும் புகைப்படங்கள்...


உகண்டா வறுமையை வெளிக் கொணரும் புகைப்படம் (1980); மைக் வால்ஸ் என்பவருக்கு இப்புகைப் படத்தை எடுத்ததற்காக விருது வழங்கப்பட்டது.

எனினும் அவர் இவ்விருதை வாங்க மறுத்துவிட்டார் ஏனெனில் இப்புகைப்படத்தில் இருப்பவர் இந்நேரம் உயிரோடு இருப்பாரோ இல்லையோ என்ற ஐயம் அவர் மனதை உறுத்தியதால்...

நெஞ்சை நெகிழ்த்தும் புகைப்படங்கள்...


ஹிரோசிமா நாகசாஹி மீதான அணுகுண்டுத் தாக்குதல் ஹிரோசிமா ஆவணி 6 ஆம் திகதி (80,000 உயிரிழப்புக்கள்) நாகசாஹி ஆவணி 9 ஆம் திகதி (15 மில்லியன் உயிரிழப்புக்கள்)..

நெஞ்சை நெகிழ்த்தும் புகைப்படங்கள்...


நாசிப்படைகளின் சிறைக்கூடம் (1937)...

நெஞ்சை நெகிழ்த்தும் புகைப்படங்கள்...


இந்தியாவில் போபால் விசவாயு தாக்கத்தினால் உயிரிழந்தவர்கள் (1984)...

மக்களின் முட்டாள்தனம் தான் இவர்களின் முதலீடு. காடுகளை இழந்த கோவை...


வேற்று கிரகவாசிகளின் பரிணாம வடிவங்கள் பூமியில் இறங்கியதாக அமெரிக்க உளவுத்துறை தனது இணையதளத்தில் ஆவணங்களை வெளியிட்டு உள்ளது...


அறிவியல் புனைகதைகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் சினிமாக்களை உண்மை என கூறுவதாக இருக்கலாம் அல்லது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கத்தால் வெளியிடப்படும் ஒரு ஆவணமாக கூட இருக்கலாம்.

இந்த அறிகை மற்றும் ஆவணங்களின் படி நமது பூமிக்கு எண்ணற்ற வேற்று கிரக உயிரினங்கள் விஜயம் செய்கின்றன. மற்ற கிரகங்களில் இருந்து மட்டுமல்ல இதில் சில வகை பரிணாம வளர்ச்சியுடனும் இருந்து உள்ளன. இதில் சில நுட்பமான விமானங்கள் மூலம் வந்து உள்ளன என கூறுகிறது.

அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களில் சில...

1) பறக்கும் தட்டுக்கள் குழுவாக எடுத்து வருகிறது. மற்றவர்கள் தொலை கட்டுபாட்டின் கீழ் உள்ளனர் (under remote control).

2) அவர்களின் குறிக்கோள் அமைதியானதாக உள்ளது.வந்தவர்கள் விமானத்தை நிலை நிறுத்த ஆழ்ந்து சிந்திக்கின்றனர்.

3) வந்தவர்கள் மனிதர்களைப் போல் உள்ளனர். ஆனால் மிகப்பெரிய வடிவில் உள்ளனர்.

4) அவர்கள் பூமியில் உள்ள மனிதர்களை தவிர்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்களது சொந்த உலகத்தில் இருந்து வந்து உள்ளனர்.

5) அவர்கள் பூமியை பயன்படுத்தி கொள்ள இங்கு வரவில்லை. ஆனால் அவர்கள் எந்த கிரகத்தில் இருந்து வந்து உள்ளார்கள் என்பது அறியகூடிய வகையில் இல்லை.

6) அவர்கள் வந்த பறக்கும் தட்டுகள் கதிரியக்க ஆற்றல் அல்லது ஒருவகை கதிர் வீச்சை பெற்றிருக்கின்றன. எந்தவிதமான தக்குதலிலும் எளிதில் உடையகூடியது போன்று அது உள்ளது. அவர்கள் தங்கள் விருப்பபடி உள் நுழைவதற்கு மற்றும் சுவடே இல்லாமல் சாதாரணமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுவர்.

7)அவர்களை ரேடியோ மூலமாகவோ ராடார் மூலமாகவோ அவர்கள் இயந்திரத்தை அடைய முடிய வில்லை.
பிற சேர்க்கைகள்: அவர்களது வாகனம் ஓவல் வடிவில் உள்ளது. ஒரு வெப்பத்தை தாங்கி கொள்ளும் உலோக குழல் வடிவத்தில் உள்ளது. இன்னும் முன் பகுதி கூண்டு கட்டுப்பாடுகள் அறியப்படவில்லை. நடுவில் பரிசோதனைகூடம் உள்ளது. பின்புறம் போர் தளவாடங்களை கொண்டு உள்ளது. அவை அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் இயந்திரத்தை, கொண்டுள்ளது.

வேற்றுகிரகவாசிகள் கடந்த 50 ,60 ஆண்டுகள் வருகை தருகிறார்கள் என்றால் அவர்களால் 100 முதல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல் வருகை தந்திருக்க முடியும்.

மனிதர்கள் முன்னேற்றம் அடைந்ததாலும் நவீன கருவிகளாலும் இன்று தெரிந்து கொள்ளும் சாத்தியம் ஏற்பட்டு உள்ளது...

இலுமினாட்டி பிக்பாஸ் அரசியல் உஷார்...


நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சிய பத்தி முழுசா தெரிந்திருக்க வாய்ப்பில்ல...

ஹிந்தில பல வருஷமா ஓடிட்டு இருக்குர நிகழ்ச்சி இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு..

100 நாள்னு சொன்னாலும் அதோட சூட்டிங்க மிஞ்சி போனா பத்தே நாள்ல முடிச்சிடுவாங்க,

அத அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர கணக்குல பிரிச்சு 100 நாளைக்கு ஒளிபரப்புவாங்க..

என்னன்ன நடக்கனும் பேசனும்னு எல்லாமே முன்னடியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் சூட்டிங் தொடங்குமே..

ஒவ்வொருத்தரா மக்கள் ஓட்டு போட்டு வெளியேத்திட்டு இருப்பாங்க, ஆனா உண்மையிலேயே யாரு வெளியேரனும்னு முடிவு பண்ணிதான் அதுக்கு ஏத்த மாதிரி காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்..

நிறைய சண்டைகள், மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கி காதல், கள்ளகாதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும்..

மக்கள் அதை கண்டு கொதித்தெழுந்து தவறு செய்தவனுக்கு எதிராக ஓட்டு அளித்து வெளியேற்றும்படி நடைபெறும்..

சிலர் தாங்கலாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேருவது போல் வைத்து TRP ஏற்றுவார்கள்..

இளைஞர்களை கவர வீட்டினுள் கவர்ச்சியான அரைகுறை ஆடைகளையே அணிந்து வருவார்கள் நடிகைகள்..

ஊரெங்கிலும் இதில் நடைபெறும் சம்பவங்களையே பேசுமாறு வைப்பார்கள்..

இறுதியில் அவர்கள் முடிவு செய்தபடியே ஒருவரை மக்களே தேர்ந்தெடுத்தது போல் பரிசு வழங்கி அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கி விடும்..

இது எல்லாம் தானாக நடப்பதாக நம்பி இதுவரை அக்கம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என பார்த்து வந்த மக்கள், இனி இந்த வீட்டில் என்ன நடக்கிறது என பார்க்க ஆரம்பித்து விடுவார்கள், அடுத்த சீசனுக்காக ஏங்கவும் செய்வார்கள்..

அடுத்தவர் வீட்டில் நடப்பதை மிகுந்த அக்கறை கொண்டு எட்டி பார்க்கும் நம் மன ஓட்டமே இந்த நிகழ்ச்சியின் உயிர் நாடி..

அதை வைத்தே கலாச்சாரத்தை அழித்து காசு பார்க்கும் ஒரு கும்பல்..

அதை கிண்டல் செய்கிறேன் என மீம்ஸ் போட்டு மக்களிடையே இன்னும் அதிகமாக பகிர வைக்கும் சில இளைஞர்கள்..

முடிந்தால் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டு மக்களுக்கு புரிய வையுங்கள்..

இந்த முறையாவது மீடியா TRP பசிக்கு பலி ஆகாமல் சாமர்த்தியமாக விழித்து கொண்டு மக்கள் பிரச்சனையில் தலையிடு தமிழா...

இலுமினாட்டி கன்னட ஜக்கி நீ மூடிட்டு போடா...


தமிழினத்தை திசைத் திருப்பவே கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சி...


தமிழகத்தை எப்படியாவது கலவர பூமியாக மாற்ற வேண்டும் என நரிகளாக திரியும் பாஜக கலவர கபோதிகளின் நெஞ்சில் இடி விழுந்து போன தினம் நேற்று...


இப்போது எவன் வேட்டிக்குள் தலையை விட்டு திறிகிறான் இந்த கலவர எச்ச கபோதிகள் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் கூறவும்....

ஊடகங்களின் கழுத்தில் காவிகளின் கத்தி...


சமீப காலங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக பிரமுகர்கள் தவறாமல் இடம்பெறுவதை கவனித்திருப்பீர்கள்..

விட்டால் நம் கழுத்தை கடித்து துப்பிவிடுவதுபோல் அவர்கள் தொலைக்காட்சிகளில் குரைத்துக்கொண்டிருப்பார்கள்.

தமிழ் நாட்டில் செல்லாகாசாக இருக்கும் பாஜகவினருக்கு ஏன் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.. என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருந்தால் நீங்கள் ஊடகப்போரை கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

பாஜகவினருக்கு.. அல்லது காவி அமைப்பினருக்கு ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுப்பதற்குப்பின் பல அரசியல் காரணங்கள் உண்டு.

அதில் ஒன்று ஊடக முதலாளிகளின் வர்த்தக ரீதியிலான டெல்லி அதிகார மையத்துடனான தொடர்பு.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்திற்குப்பின் தமிழக அரசை நடத்துவது டெல்லி தான் என்பது மற்றொன்று.

கழுதை ஏதோ ஒன்று இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இந்த ஒன்று மற்றொன்றுகள் எல்லாம் வந்து நிற்கும் புள்ளி, தமிழகத்தில் பாஜக ஒரு பிரமாண்ட சக்தியாக தமிழகர்களின் உளவியலுக்குள் புகுத்தப்பட வேண்டும் என்பதுதான்.

தொலைக்காட்சியில் விவாத நிகழ்வில் பணிபுரியும் நண்பர்களிடம் பேசினால் இந்த மாற்றத்தை அழகாக விளக்குகிறார்கள்.

முன்னாடியெல்லாம் எங்களை கூப்பிடுங்க என்று போன் போட்டு கெஞ்சுவார்கள். ஆனால் இப்போது நாங்கள் யாரை கூப்பிட வேண்டும்.. யாரை கூப்பிடக்கூடாது என்பதை உத்தரவிடும் அளவுக்கு அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்கிறார்கள் அந்த நண்பர்கள்.

மக்கள் பிரச்னைக்காக ரோட்டில் இறங்கி போராடுவது எல்லாம் வேலைக்காகாது என்பதும், ஊடகம்.. ஊடகம் தான் வலிமையானது என்பதும் டவுசர்களுக்கு நன்கு தெரியும்.

அந்த ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பின்னர் அந்த ஊடகங்களின் வழியாக தங்கள் அரசியலை திணிக்க வேண்டும்.

இந்த செயல்திட்டத்திற்கு இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாம் அடிமையாகிவிட்டன.

தமிழர் அரசியலை பேசிய ஆதித்தனாரின் தந்தி சமீபத்தில் எடுத்த இந்தி வாந்தி ஒன்று போதும் அதற்கான உதாரணத்திற்கு.

தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஊடகங்களை எடுப்பது மட்டுமல்ல.. அதில் தங்களுக்கு எதிரான அரசியல் கொண்டவர்களை அப்புறப்படுத்தும் பணியிலும் இந்த கும்பல் இறங்கியிருக்கின்றன.

இப்போது நியூஸ் 7 தொலைக்காட்சியில் நாராயணன்- மதிமாறன் விவாதத்தையொட்டி நெல்சன் மீது டவுசர் கும்பல் கட்டம் கட்ட தொடங்கியிருக்கின்றன. நெல்சன் என்ற பெயர்தான் அவர்களுக்கு பிரச்னை.

நெல்சனுக்கு பதில் ஸ்ரீராம் என்று இருந்திருந்தால் நம்ம ஆள் ஒருத்தன் முற்போக்கா இருக்கான் என்று கண்டுக்காமல் விட்டுவிடுவார்கள்.

இது தொடர்பாக ஒரு கண்டன கூட்டத்திற்கு இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சி செய்தார்களாம்.. உடனே ஸ்டாலினிடம் நாடக நடிகர் எஸ்வீ சேகர் போன் போட்டு பேசினாராம். உடனே அவரும் தன் கட்சி ஆளை அந்த கூட்டத்துக்கு அனுப்பவில்லை என்று சொல்லிவிட்டாராம். நாடக நடிகர் சொன்னதை இதுவரை ஸ்டாலின் மறுக்கவில்லை என்பது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

இந்த இடத்தில் நீங்கள் பார்ப்பன எதிர்ப்பு பேசி அதிகாரத்தைக் கைப்பற்றிய திருட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் யோக்கியதையை புரிந்து கொள்ளலாம்.

இதில் ஸ்டாலினுக்கு முட்டுக்கொடுக்க சுப வீரபாண்டியன் பாய்ந்து வந்து ஒரு மடல் எழுதியிருக்கிறார்.

ஒரு நாடக நடிகர் போன் போட்டு சொன்னதும் முடிவை மாற்றிக் கொள்ளும் அளவுக்குதான் திராவிடத்தின் செயல்தலைவரின் யோக்கியதை இருக்கிறது என்பதைப்பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்..

அறிவாலயத்தின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டான சுப.வீயிடம் அதை எதிர்பார்க்க முடியாதுதான்.

போகட்டும் இந்த காமெடிகளை எல்லாம் கடந்து.. தமிழ் நாட்டின் ஊடகங்களின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கின்றன காவிகளின் கத்தி என்பது மட்டும் உண்மை.

ஒவ்வொரு செய்திக்குப்பின்னும் ஒரு அரசியல் இருக்கிறது.. எனவே தமிழர்கள் கவனமாக இருங்கள்..

பதிவு - கார்ட்டூனிஸ்ட் பாலா...

தமிழகத்து தர்கா வழிபாடு...


பள்ளிவாசல் வேறு தர்கா வேறு...

பள்ளிவாசலில் சமயகுரு 5 வேளை பாங்கு கூறி அழைப்பார்.பிறகு கூட்டு வழிபாடு நடைபெறும்.இங்கே பிற சமயத்தினரும் இசுலாமியப் பெண்களும் பள்ளிவாசல் செல்வதில்லை.

இந்த குறையை நிவர்த்தி செய்வதே 'தர்கா' வழிபாடு.

தர்கா என்பது இறையடியார் ஒருவர் உடல் அடக்கமான இடத்தைச் சுற்றி எழுப்பப்படும் கோவில்.

(திறந்தவெளிக் கல்லறைகளும் உள்ளன)..

பள்ளிவாசலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட பச்சை நிறத்தில் வெள்ளைநிறப் பிறை நிலாவும், விண்மீனும் கொண்ட கொடி ஏற்றப்பட்டிருக்கும்.

இங்கே அந்த இறையடியாரை யாரும் வணங்குவதில்லை.அந்த இறையடியாருக்காக ஆண்டவனிடம் வேண்டுகிறார்கள்.

இங்கே பல்வேறு சமயத்தவரும் இசுலாமியரும் வந்துபோகிறார்கள்.
நேரக்கட்டுப்பாடு இல்லை.
வழிபாட்டு விதிகள் இல்லை.

அதாவது தமது ஊரில் ஒரு பெரிய மனிதர் மறைந்தபிறகு (அவர் இசுலாமியராய் இருந்தாலும்) அவ்வூர் மக்கள் (பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்) அவரது நினைவைப் போற்றும் நாட்டார் வழிபாட்டு முறையே தர்கா வழிபாடு.

'சீறாப் புராணம்' எழுதிய உமறுப்புலவரின் திறந்தவெளி தர்காவை சுற்றி (பிள்ளைப்பேறு நேர்த்திக் கடனுக்காகக்) கட்டிடம் எழுப்பியவர் 'பிச்சையாக் கோனார்' என்பவராவார்.

இறையடியார்கள் இறைவனடி சேர்ந்த நாளில் 'சந்தனக்கூடு' விழா நடக்கிறது.
பத்து நாட்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட மூங்கில் கம்பில் பச்சைநிறத்தில் பிறை மற்றும் விண்மீன் கூடிய துணி கட்டி ஊர்வலமாக எடுத்துச்சென்று தர்காவின் வாசலில் கட்டுவார்கள்.

(இது தமிழர்கள் அனைவரும்  திருக்கோவில்களில் விழா எடுக்கும் முன்பு கொடியேற்றும் வழக்கம்தான்.
தமிழக கத்தோலிக்க தேவாலயங்களிலும் இத்தகைய கொடியேற்றம் உண்டு).

பிறகு பத்துநாட்கள் கல்லறையைச் சுற்றி அமர்ந்து தமிழிலும் அரபியிலும் இறையடியாரின் புகழைப் பாடுவார்கள்.
பத்தாம் நாளில் சந்தனத்தைக் குழைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் சந்தனக்கூடை சுமந்து ஊர்வலமாக எடுத்துச்செல்வர்.
இதற்கு பரம்பரை பரம்பரையாக மாடும் வண்டியும் தருவோர் பல்வேறு சமயத்தையும் சேர்ந்தவர்களாக இருப்பர்.

இவ்வூர்வலத்தில் சிலம்பாட்டம் கழியாட்டம் போன்ற தமிழ் கலைகளும் இடம்பெறும்.

பிறகு சுமந்துவந்த குடத்திலிருந்து சந்தனத்தை கல்லறை மீது பூசுவர்.

பிறகு சிறிதளவு சந்தனத்தை வீடுகளுக்கு எடுத்துச்செல்வர்.

பிறகு கந்தூரி விருந்து நடைபெறும்.
இதற்கான செலவு அவ்வூர் மக்கள் அனைவரிடமும் பெறப்பட்ட வரியிலிருந்து கிடைக்கிறது.

(நன்கொடை அதிகம் கிடைக்கும் சில பெரிய தர்காக்கள் விதிவிலக்கு).

இரவு அவ்வூரார் அனைவரும் மதவேறுபாடின்றி அமர்ந்து இறைச்சி விருந்து உண்பார்கள்.

தமிழகத்தில் மிக பழமையான தர்கா இராமேஸ்வரத்திலுள்ள 'ஆபில் காபில்' தர்கா.

இவர்கள் ஆதாமின் மகன்கள் ஆவர்.

(ஆபெல், கெய்ன் என்று பைபிள் கூறுகிறது).

மிகவும் புகழ்பெற்ற தர்கா 'நாகூர் தர்கா' ஆகும்.

இவரை 'முகைதீன் ஆண்டவர்' என்று எல்லாமதத்தினரும் அழைக்கின்றனர்.

இதுபோல குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பீர்முகமது தர்கா,

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு அருகிலுள்ள ஏர்வாடி செய்யது இப்ராகிம் தர்கா,

திருச்சியிலுள்ள நத்தார்வலி தர்கா,

ஆகியன குறிப்பிடத்தகுந்த தர்காக்கள்.

இது தவிர வட்டார ரீதியாக புகழ்பெற்ற பல தர்காக்கள் உள்ளன.

"நாகூர் தர்கா"விற்கு 'அச்சுதப்பநாயக்கர்' எனும் தெலுங்கு மன்னர் முப்பது வேலி நிலம் வழங்கியுள்ளார்.

இதே தர்காவிற்கு தஞ்சை மராட்டிய மன்னர் 'துக்கோசி' 131 அடி கோபுரம் கட்டித்தந்து இளங்கடமனூர் எனும் ஊரையும் நன்கொடை அளித்துள்ளார்.

இன்று தஞ்சை மராட்டிய மன்னர் கந்தூரி அன்று குடும்பம் சந்தனமும் பட்டுசால்வையும் அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நாகூர் தர்காவின் கல்லறை மீது போர்த்தப்படும் போர்வை சென்னையைச் சேர்ந்த 'பழனியாண்டிப் பிள்ளை' என்பவரது பரம்பரையினர் அனுப்பிவைக்கின்றனர்.

கோரிப்பாளையம் தர்கா விற்கு கூன்பாண்டியன் (சுந்தரபாண்டியன்) எனும் பாண்டிய மன்னன் 15000 பொன் வழங்கியுள்ளான்.

இதில் ஏற்பட்ட ஒரு பூசலை தீர்த்து பொறிக்கப்பட்ட நாயக்கர்கால கல்வெட்டுச் சான்று உள்ளது.

அருப்புக்கோட்டை பள்ளிவாசல் கட்ட நிலம் கொடுத்தவர்கள் (தெலுங்கு) நாயக்க மக்கள்.

ஏர்வாடி தர்கா விற்கு 'முத்துக்குமார் விஜயரகுநாத சேதுபதி' எனும் சேதுபதி மன்னர் விளைநிலங்களையும் சில வரிகளைகளையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

இதே மன்னர் 1745ல் புதுக்குளம் ஊரை 'ஆபில் காபில் தர்கா'வுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இத்தர்காவில் 19 வலிமார்கள் சமாதிகள் உள்ளன.

இங்கே பல்வேறு சாதியார் பரம்பரை பரம்பரையாக சில பங்களிப்புகளைச் செய்துவருகின்றனர்.

இங்கே சந்தனக்கூடு குடம் கொண்டுசெல்லும் மரக்கூட்டினை வழங்குவோர் ஆசாரிகள்.

கூடுகட்ட கயிறு, நார் போன்றவை நாடார்கள் பொறுப்பு.

கூடு அலங்கரிப்பு பறையர் மற்றும் கோனார் பொறுப்பு.

நெய்பந்தத்துணி வண்ணார்கள் பொறுப்பு.

சந்தக்கூடு விழாவில் அனைத்து மதத்திலிருந்தும் 2லட்சம் பேர் கூடுவர்.

திருநெல்வேலி-மதுரை சாலையில் "காட்டுப் பள்ளிவாசல்" என்ற தர்கா உள்ளது.

'இப்ராகிம் ராவுத்தர்' என்பவரும் அவரது நண்பர் 'முத்துக்கோனார்' என்பவரும் இங்கே அடக்கமான இறையடியார்களுக்கு சிறிய அளவில் வழிபாட்டைத் தொடங்கினர்.இன்று கூரையில்லாத கட்டிடம் தர்காவாக இயங்குகிறது.

மதுரையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் திருப்பத்தூர் அருகேயும் ஒரு "காட்டுப் பள்ளிவாசல்" இருக்கிறது.
ஏழு பார்ப்பனப் பெண்களையும் இரண்டு பிராமணக் குழந்தைகளையும் காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த 'சையது பக்ருதீன்' அடக்கமான தர்கா இது.

இராமநாதபுரம் மன்னர் 'கிழவன் சேதுபதி' (1674-1710) இத்தர்காவுக்ககு கொடைகள் வழங்கியுள்ளார்.

இங்கே நடக்கும் சந்தனக்கூடு விழாவில் கள்ளர் சாதியினர் பெருமளவு கலந்துகொள்கின்றனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு பார்ப்பன பெண்ணுக்கும் அவரை கள்வர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த "பக்கிரி சாய்பு"வுக்கும் தர்கா உள்ளது.

தூத்துக்குடி வைப்பாறு சிற்றூரில் "ஒலியுல்லா தர்கா"வின் கந்தூரி விழாவில் தெலுங்கு கம்பளத்து நாயக்கர்கள் பெரிய பங்களிப்புகளைச் செய்கின்றனர்.

ஊத்துமலை தேவர்குளம் அருகே "கான்சாமாடன்" எனும் தர்காவை மறவர் மக்கள் வணங்குகின்றனர்.

ஊத்துமலை ஜமீன்தார்கள் முன்னின்று சந்தனக்கூடு ஊர்வலத்தை நடத்துகின்றனர்.

ஊர்மக்கள் பசுமாடு ஈன்றபிறகு கறக்கும் முதல் பாலை இச்சமாதியில் ஊற்றுகின்றனர்.

நாகூருக்குத் தெற்கேயுள்ள "முத்துப்பேட்டைத் தர்கா" 'கருப்பையாக் கோனார்' என்பவர் கட்டியதாகக் கூறுகிறார்கள்.

திருப்பத்தூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள "அகோரி கானுமியா ஒளி" தர்காவிற்கு மருதுபாண்டியர் மானியம் வழங்கியுள்ளனர்.

கி.பி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மீனாட்சி சுந்தரம் ஐயர் தமிழிலும் இசையிலும் நல்ல புலமை பெற்றவர்.

அவர் இசுலாத்தைத் தழுவி 'மீனா நூர்தின்' என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

இவரது தர்கா மதுரை தெற்கு வெளிவீதியில் உள்ளது.

நாகப்பட்டிணத்திற்கும் வேளாங்கண்ணிக்கும் இடையில் "பாப்பாக்கோயில் தர்கா" உள்ளது.

இரண்டு இறையடியார்களுடன் இசுலாத்தைத் தழுவிய பார்ப்பனப் பெண் (ஹபீஸ் அம்மா) ஒருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்-பெங்களூர் சாலையில் தொப்பூர் என்ற இடத்தில் "ஹாவாலிக் தர்கா" உள்ளது.

இங்கேயும் இசுலாமைத் தழுவிய பார்ப்பனப் பெண் அடக்கமாகியுள்ளார்.
இங்கே அசைவ விருந்து கிடையாது.
இங்கே அன்னதானம் நடக்கும்போது முதலில் இசுலாமியரல்லாத சிலருக்கு வழங்கிவிட்டு பிறகே அனைவருக்கும் அன்னதானம் தொடங்குகிறது.

தஞ்சை நகரின் கிழக்கே மாரியம்மன் கோவில் பழைய தெருவில் "பாப்பாத்தியம்மன் தர்கா" உள்ளது.
இவரும் பார்ப்பனராயிருந்து இசுலாமைத் தழுவியவரே.

கி.பி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ நாயன்மார் சேரமான் பெருமாள் (சேர மன்னர்).

'பொன்வண்ணத்தந்தாதி', 'திருவாரூர் மும்மணிக்கோவை', 'திருக்கயிலாய ஞான உலா' போன்ற சைவ இலக்கியங்களைப் படைத்துள்ளார்.
இவர் சுந்தரரின் நண்பர்.

கேரளமான்மியம் என்ற வடமொழி நூலும் கேரளோற்பத்தி என்ற மலையாள நூலும் இவர் மெக்கா சென்று நபிகள் நாயகம் முன்னிலையில் இசுலாமைத் தழுவியதாகக் கூறுகின்றன.
'சிராஜிதின்' என்று பெயர் மாற்றிக் கொண்டாராம்.

திரும்பும் வழியில் மரணமடைந்ததாகவும் இவரது உடல் தூத்துக்குடி குலசேகரப் பட்டிணம் அருகே கரை ஒதுங்கியதாம்.
அங்கேயே கடற்கரையில் இவருக்கு தர்கா உள்ளது.

இங்கே கல்லறை அறையில் ஒரு சன்னல் சிதம்பரனாதர் கோவிலின் நுழைவாயிலுக்கு நேராக அமைக்கப்பட்டுள்ளது.

அதன் வழியாகப் பார்த்தால் கோவிலின் கருவறையைக் காணமுடியும்.

திருநெல்வேலி நான்குநேரி அருகே விஜயநாராணம் என்ற ஊர் உள்ளது. அங்கே செய்யது முகம்மது மலுக்கு மேத்தப்பிள்ளை என்பவர் வசித்து வந்தார்.

இவரது நண்பர் மாடசாமித் தேவர்.
மாடசாமித் தேவரின் தங்கைக்கும் மேத்தப்பிள்ளைக்கும் தவறான உறவிருப்பதாக மேத்தப்பிள்ளையின் வேலைக்காரன் சொல்ல
மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளையையும் தனது தங்கையையும் கொன்றுவிட்டார்.

வேலைக்காரன் சொன்னது பொய் என்று தெரிந்த பிறகு மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளைக்கு தர்கா எழுப்பினார்.

தன் தங்கைக்கு நடுகல் நட்டார்.

இன்றுவரை அவரது வம்சாவளியினர் அந்த தர்காவுக்காக அனைத்து உதவிகளையும் செய்கின்றனர்.

தன் குழந்தைகளுக்கு மேத்தப்பாண்டியன், மேத்தா என்று பெயர் வைக்கின்றனர்.

அதோடு நடுகல் வைத்த இடத்தை 'கன்னியம்மன்' தெய்வமாகவும் வழிபடுகின்றனர் மாடசாமி வம்சத்தார்.

மேத்தப்பிள்ளை அப்பா தர்கா என்ற பெயருடைய இந்த தர்காவில் ஆடி 16 அன்று சாதிமத பேதமில்லாமல் ஆயிர்காணக்கில் மக்கள் கூடுகின்றனர்.

இங்கே வாழும் மறவர் மக்கள் தங்கள் வீடுகளில் மக்களைத் தங்கவைத்து விருந்தோம்புகின்றனர்.

240 ஆண்டுகளாக இது நடந்துவந்தாலும் இதுவரை காவல்துறை வந்து நடத்தித்தந்தது கிடையாது.

இதுபோல இன்னும் பலப்பல தர்காக்கள் உள்ளன.

அனைத்திலும் பல சமயத்தாரும் பங்கேற்கின்றனர்.

நன்றி: தர்காக்களும் இந்து-இசுலாமிய ஒற்றுமையும் - ஆ.சிவசுப்பிரமணியன்..

இசுலாமிய தீவிரவாதிகள் தர்கா வழிபாட்டை எதிர்ப்பதற்குக் காரணம் மத நல்லிணக்கனம் ஏற்பட்டால் தம் பிழைப்பை நடத்தமுடியாது என்பதால்தான்.

இதிலே ஒருபடி மேலே போய் குரானுக்குப் போட்டியாக தவ்கீத்து சமாஅத்து என்ற கூட்டம் திருக்குறளை வேறு வம்புக்கிழுக்கிறது.

இசுலாம் பரவியுள்ள அனைத்து இடங்களிலும் அந்த அந்த இனத்தின் பழமையான பழக்க வழக்கங்கள் இசுலாமிய வழிபாட்டிற்குள் கலந்துள்ளதைக் காணமுடியும்.இது இயல்பான ஒன்றே.

மக்களுக்காகதான் மதம்.
மதத்திற்காக மக்கள் அல்லர்.

இறைமறுப்பாளனான என் தனிப்பட்ட கருத்து,

தர்கா வழிபாடு செய்யப்படும் இறையடியார்கள் யாருமே அத்தனை பெரிய ஈகி (தியாகி)கள் கிடையாது.

இந்த வழிபாடும் அதனுடன் இணைந்த சடங்குகளும் மூடநம்பிக்கைகளேயன்றி வேறில்லை...

இலுமினாட்டி - பிரிஸ்மாவிற்கு பின்னால் யார் ?


பிரிஸ்மா எனும் வாசகம் ஸ்பானிய வார்த்தை ஆகும் இது 'ஒளியை கண்டுகொண்டேன்' என பொருள்படுகிறது. அத்தோடு இது பிரிஸ்ம் எனும் மூல சொல்லிலிருந்து புறப்படும் சொல்லாகும்.

பிரிஸ்ம் என்றால் 6 முகங்களை கொண்ட படிக முக்கோண அச்சு என்பதை பறை சாற்றுகின்றது . இஸ்ரேலிய கொடியில் 6 முக்கோண முகங்கள் உள்ளது என்பதை கவனத்தில் தற்போது கொள்வோம்.

இஸ்ரேலிய தொழிநுட்ப வல்லுனர்களால் இஸ்ரேலிய கொடியை பிரதிபலிக்கும் ஒரு புகைப்பட தொழிலநுட்ப திட்டம் ஆகும் .

பிரிஸ்மா என்ற பெயர் புதிய பெயர் அல்ல. யூதர்கள் தங்களது கடவுளை புகழ்வதற்காக பயன்படுத்தும் வார்த்தை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இது கூச்ச சுபாவம் கொண்ட பெண்கள் ஆண்கள் என இருபாலரும் தங்கள் உருவங்களை மாற்றி ஆபாசமற்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்ற ஏதுவான திட்டத்தை கொண்டதாகும்.

ஆடைக்கு கட்டுப்பாடு மற்றும் சுதந்திர பெண்களுக்கு வரப்பிரசாதமாக ஈர்க்கும் வகையில் புகைப்பட தொழில் நுட்பத்தை அமைத்துள்ளனர்.

இச்செயலி மூலம் தன்னை உருமாற்றி முற்றிலும் காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

யூதர்களான இலுமினாட்டியர்களின் சதி இது அதன் யதார்த்தமான விளைவு என்றாலும்.இதுவரை அனேகமான முஸ்லிம்களுக்கு பாலஸ்தீன நாட்டின் கொடி எப்படி இருக்கும் என்பது தெரியாது.

இவ் புகைப்பட தொழில் நுட்பத்தின் மூலம் இஸ்ரவேல் கொடியின் ( ♢ ) முக்கோண வடிவமான யூத இனத்தை பிரதிபலிக்கும் சின்னத்தை நாளடைவில் மக்கள் இனம்கண்டு கொள்வர்.

அத்தோடு பிரிஸ்மா தொழில் நுட்பத்தில் உங்கள் புகைப்படத்தில் உள்ள நிறங்கள் ஓர் அரியத்தினூடாக அனுப்பப்பட்டால் எவ்வாறு நிறமாற்றத்தை தரும்.

அரியம் யூதர்களின் பார்வையயில் கடவுளின் இயல்பை கொண்டஓர் உபகரணம் மற்றும் பிரமிட்டுக்களின் வரப்பிரசாதம்.

கடவுளின் அன்பளிப்பாக அரியம் பயன்படுவதும் யூதக் குறியீட்டில் பிரமிடும் அரியமும் முக்கிய இடத்தை வகிப்பதை பார்க்க முடிகிறது.

பலஸ்தீனம் ஒரு மாயை இஸ்ரவேல் மட்டுமே உண்மை என ஒப்புக்கொள்ளும் நிலைக்கு நாளைய தலைமுறையை வாதிட வைக்கும் தொழில் நுட்ப மற்றும் மனோவியல் தந்திரம் இது.

இந்த தொழில் நுட்பத்தில் மேம்படுத்தப்படும் ஒவ்வொரு புகைப்படத்தின் மூலையிலும் குறிப்பிட்ட நபர் அறுகோண நட்சத்திர ஒளியை ஒப்புக்கொண்டார் என்பதாக அந்த புகைப்பட நுட்பம்.

தானாகவே செயல்படுகின்றது .
யூதர்களின் கடவுளுக்கு (தஜ்ஜால்) ஒப்பாக உங்கள் முகம் மாற்றப்பட்டு அக் கடவுளை வரவேற்பதறகாக இந்த புகைப்பட தொழில்நட்பம அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தஜ்ஜாலின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் யூதாஸ் தங்களுக்கென தனி ராஜ்ஜியத்தை உருவாக்க துடிக்கின்றனர்.

இலுமினாட்டிகளின் சதிகளும் மக்களை ஒவ்வொன்றாக கவருகின்றது...